Thursday, December 29, 2011

அதிகாரம்: ...பூப்காவின் பாத்திரம்(2)

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்(2)

சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல்.

(அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!)


(2)

பொனபாட்டிசம்

தமிழ்ச் சூழலில் மிக அவசியமான ஆய்வுத் தன்மையுடன் கூடிய கட்டுரைகள் வரவேண்டுமென எனக்குள் எண்ணுவதுண்டு.இந்த வகைப்பட்ட கட்டுரைகள் அதிகமாக வருவதற்கான ஆய்வுத்தகமை சமகால நிகழ்வோட்டத்துடன்,அதுசார்ந்த மிகுந்த புரிதலுடன் சம்பந்தப்பட்டது.இந் நிலையுள்,சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது!

அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர்வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?அல்லது,மிகேல் பூவ்காவினது பரந்துபட்ட புரிதலுள் புலிகளது இயக்கவாத-அந்நிய அடியாட்படைச் சேவையை ஒடுக்கப்படும் இனத்தின் எதிர்ப்புப் போராட்டமாகவும்-அதுசார்ந்தெழுகிற அதிகாரமாகவும் பார்க்க முடியுமா?

எவன்(ள்),எந்தெந்தத் திசையில் அதிகாரம் குறித்த பரந்துபட்ட புரிதலுள்புலிக்கான தளத்தை மீளத் தகவமைத்துப் புலிகளது எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனரென்பதை மிக இலகுவாகப் புரிந்துவிட முடியாது.

இலங்கை அரசினது புதிய தெரிவுகளாக முன்னெடுக்கப்படும் இராணுவக்கெடுபிடிகளது நகர்வுக்கு வலுச் சேர்ப்பதில் ஆதாயமடையமுனையும் புலத்துப் புலிப்பினாமிகள், மக்களது அவலங்களை வைத்துப் பிழைக்கமுனையும் அரசியலானது மீளவும், "தமிழீழவிடுதலை"யின் பெயரால் இனி நம்மை முட்டாளாக்குமானால் அதை அனுமதித்த குற்றத்திற்காக நாம் மக்களைக் குறித்துப் பேசுவதே வீணாகவேண்டும்!

இந்தப் புரிதலிருந்துதாம் அதிகாரம் குறித்த தேடுதலை வைத்துப் புலிகளது பாசிசச் சேட்டையை,சகோதரப்படுகொலைகளை நியாயப்படுத்தும் நம்மை, நாம் கேள்விக்குட் படுத்தியாகவேண்டும். சிங்கள அரசு தமிழினப்படுகொலையை மிக மும்மரமாக நடத்தியபோது,நாம் ஒருங்கிணைந்து பொதுவெதிரியைத் தாக்கி வெற்றிகொள்வதைத்தடுத்து, நமது சகோதரர்களையே நாம் பொதுவெதிரியைவிட மிகமோசமாகத் தாக்கி அழிப்பதென்பது,பேரினவாதத்துக்கெதிரான எதிர்ப்புப் போராட்டமாகாது.அங்கு பூவ்கா குறித்துரைத்த உயிரதிகாரமானது உயிர்வாழுவதற்கான தனது சகோதரர்களது பௌதிக இருப்பை நிராகரித்துவிட்டு, பொதுமைப்பட்ட அரசியல் வாதத்தைத் தகவமைக்க முடியாது-பேரினவாதத்திடம் ஒடுக்குமுறைக்கெதிரான நியாயமான போராட்டத்தைச் செய்யும் அறத்தையும் உலகுக்கு ஒப்ப முடியாது.எங்கு ஒடுக்குமுறை நிலவுகிறதோ,அதற்கு எதிரான போராட்டம் நிலவியே தீரும்.இரண்டினது தளமும் அதிகாரத்திலிருந்து எழுகின்றபோதும்,ஒடுக்கும் அதிகாரம் பலதரப்பட்ட நிறுவனங்களாலும்,பொருளாதார மேலாதிக்கத்தாலும் தொடர்ந்து தன்னைத் தக்கவைக்கிறது.மற்றதோ,நிலைப்புக்கான உயிர்ப்போராட்டத்துள் முழுவதுமாக ஒடுக்கப்படும் உடல்களை-மக்களை நம்பி எழுகிறது.அதுவே,ஒருகட்டத்தில் அந்த நம்பிக்கைக்கு எதிராகத் திரும்பும்போது,ஒடுக்கும் அதிகாரம் ஏதோவொரு வகையில் எதிர் அதிகாரத்தின்-போராட்டத்தின் ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டிருப்பதையே புலிகளதும்,மாற்று இயக்கங்களதும் இதுவரையான மக்கள் விரோத ஆயுத அராஜகம் புலப்படுத்தியது.அந்த ஒடுக்கும் அதிகாரம் ரோ வடிவிலும்,சி.ஐ.ஏ வடிவிலும் மட்டுமல்ல எம்.ஜீ.ஆர்-கருணாநிதி,பிரமதாச,ரணில் வடிவிலும் நம்மிடம் புலப்பட்டுக்கொண்டது.இந்தப் பெயர்கள் வெறும் குறியீடு மட்டுமே.

அல்லது, பூவ்கா கூறியமாதிரி"ஒடுக்குமுயைக்கு எதிரான போராட்டம் எங்கிருக்கிறதோ அங்கு அதிகாரம் வெளிப்படுகிறது"என்று இதற்குச் சமாதானஞ் செய்யமுடியாது!இது முற்றிலும் தவறான புரிதல்.எனவே,நாம் ஆதிகாரம் குறித்து மேலும் புரிதல்களை வளர்த்தாகவேண்டும்.

இந்தத் தவறான புரிதல்கள், தவறானவை என்பதைத்ச் சொல்வதல்ல எனது இந்தத் தொடரின் நோக்கம்.இது,பரந்துபட்ட தளத்தில் எமது எதிர்ப்பு அரசியலது எதிர்காலம் குறித்து நோக்க முனைகிறது.சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து தமிழ்பேசும் மக்களையும்,ஏனைய சிறுபான்மை இனங்களையும் ஒடுக்கும் சட்டரீதியான அடியாளாகச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கும், இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் செயற்படுகிறது.

இலங்கையின் அரைத் தேசியப் பொருளாதாரமானது,அதன் வர்க்கக் குணாம்சத்துக்கொப்ப இலங்கைச் சிறுபான்மை இனங்களையும்,தனக்குள் செரித்துவிட முனைகிறது.இது,இலங்கைக்கானவொரு மொழி,ஒரு மதம்,அதுசார்ந்த பண்பாட்டுருவாக்கத்தைக் கணித்துச் சிறுபான்மை இனங்களை முற்றிலுமாகச் செரிக்கும் பொருளாதார-அரசியல் நகர்வு மிக வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்டபோது, புலித்தலைமையைக் காட்டிக்கொடுத்த புலிப்பினாமிகளோ அதற்குப் புதிய விளக்கங்கொடுத்து மக்களுக்கான "அபிவிருத்தி-பாதிக்கப்பட்ட மக்களுக்கான கஞ்சி" என சிங்கள மேலாதிக்கத்தைப் பட்டுக்குஞ்சங்கட்டி வரவேற்று, அரச ஆதிக்கத்தை வலுவாகத் தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய பூமியில் மறுநிலைப்படுத்தும்போது,அதை எதன் பெயரால் புலிவிசுவாசிகள் புரிந்துகொள்கிறார்கள்?தனியே துரோகி சொல்லியா? இந்தத் துரோகியோடு அரசியல் ரீதியான எதிர்ப்பு அரசியலது நியாயம் சரியாகி விடுகிறதா?அடுத்த கட்டம் என்ன?

எனவே,இந்தத் திசையில், விவாதவுரை பகுப்பாய்வு(Diskursanalyse) அவசியமாகிறது-அதிகாரங் குறித்த விவாத ஆய்வுப் பண்பு தமிழுக்கு இதுவரை செறிவான முறையில் எட்டவில்லை.ஆராய்ச்சி முறையியல்(Methodologie) முற்றிலும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியப்பட்டிருக்கிறதென்பதால் அதிகாரங்குறித்த புரிதலை ஒருவர்மீது சுமத்தி "நீ பூவ்காவை படித்துவிட்டுப் புலிகளது அதிகாரங்குறித்துப் பேசு" என ஓங்கி உரைக்கிறது.இந்த மொழிக்குள்: "மற்றவர்களுக்கு ஆங்கிலமோ அன்றி வேறு அந்நிய மொழியோ தெரியாதென்றும்,புலம்பெயர் இடதுசாரிகள் தமிழகத்து "விரல்சூப்பி"ப் பேராசிரியர்கள் தமிழ்படுத்தியதைமட்டும் வாசித்துவிட்டு,அதிகாரங்குறித்துப் பேசுவதாகவும் புரிந்துகொள்ளச் சொல்கிறது". இது,அடுத்த மோதாவித்தனத்தின் அண்ணன்(சிறு-மெலினப் பட்ட குரல்களை ஒட்ட மட்டந்தட்டும் பார்ப்பன உளவியல்என்று சொல்ல வருகிறேன்). நாம்,இதிலிருந்து சிலவற்றை பகுப்பாய்வு நிலையைகொண்டு பூவ்கா முதல் காபர்மாஸ்வரை அதிகாரம் குறித்து நோக்குவோம்.முதலில் சில வரையறுப்புகள் அவசியமாகிறது.

பகுப்பாய்வு சார்ந்து:

மேற்குலகப் பல்கலைக்கழகத்துள் பூவ்காவின் நிலை என்ன என்பதிலிருந்து,

1 : பேராசிரியர் மார்டின் நொன்கோவ் (Martin Nonhoff,Professsor für Politikwissenschaft an der Universitaet Bremen குறித்தியங்கும்"பகுப்பாய்வின் கேள்விகள்,அதிகாரம்,மேலாதிக்கம்"ஆய்வுமுறையியல் மற்றும் கோட்பாடுகள்சார்ந்து நான்,வரையறுத்த ஒரு புள்ளியல்(இதை இத்தொடரின் இறுதில் விசாலமாகச் சொல்வேன்) கீழ்வரும் தொகுப்பு நிரையை வழங்கி மேற் செல்வேன்:

2: மிகேல் பூவ்கா (Michel Foucault,1926-1984),உலகளவில் அறியப்பட்ட முக்கியமான நவகாலச் சிந்தனையாளர்,பிரான்சின் சிந்தனைப் பாரம்பரியத்தின் அமைப்பியல்(Strukturalismus) அறிஞர்.அவரது பிரதானத் தெரிவானது"பன்முகக் கருத்துவினைப்பாட்டு உரையாடல்"(Diskurs)அதுசார்ந்த பரிசீலித்தலாகும்.பூவ்கா எதையும் பரிசீலிப்பதையே தனது இறுதி முடிவாக எடுத்துக்கொண்டவர். எந்தவொரு தனது சிந்தனைப் போக்கையும்-கருத்தையும் முடிந்த முடிவாகச் சொல்லாமற்றவிற்றபோது,தான்கண்டடைந்தவுண்மைகள் ஒரு வடிவத்துக்குட்பட்ட தத்துவமென எப்போதும் சொல்வதை நிராகரித்துவிட்டுத் தன்னைப் பரிசீலிப்பாளன்-பரிசோதனையாளன் எனக் கூறிக்கொண்டார் (Ich bin ein Experimentator und kein Theoretiker.-Michel Foucault Gespraech mit Ducio Trombadori,Die Hauptwerke-seite:1585/86).அவரது சிந்தனைக்குட்பட்ட புரிதலுள்அதிமுக்கியமாக எடுத்தாளப்பட்ட வார்த்தை Als Dispositiv/disposition முடிவு, ஒழுங்கு அல்லது ஆணை ,இதை விளங்க முற்படுவதில்தாம் சிக்கலே எழுகிறது.இந்தச் சிக்கலை அவரே பல இடங்களில் கைவிரித்துவிட்டார்.இதுவொரு தடை. Tabu... எனது வாசிப்பு உட்பட்ட,
"Die Ordnund der Dinge" 1966
"Archaeologie des Wissen"1973
"Ueberwachen und Strafen"1974
"Sexualitaet und Wahrheit" 1977 bis 1986
"Der Wille zum Wissen "1977
"Foucaults Philosophie der Kritik-Die Hauptwerke
Analytik der Macht" 1970 bis 1983(Analytik der Macht. Frankfurt am Main, 2005 )

Gouvernementalitaet என்பது "அரசு-எண்ணங்கள்"அனைத்து நிறுவனமயப்பட்ட நிறுவனங்களையும் அரசு-தனிமனித நிலை ளிலுமாகப் பன்முகப்பட்ட புரிதலோடு நகர்வது.எனினும் அது, முழுமையற்றது.அதை 1977-78 இல் Collège de France இல் அவரது வகுப்புச் சகாக்களான Daniel Defert, François Ewald, Jacques Donzelot, Giovanna Procacci, Pasquale Pasquino ஆகியோரது துணையோடு முன்நிலை வாசிப்பை/விரிவுரையைச் (Die Vorlesung)செய்துகொண்டபோதும் அதைத் தொடர்ந்து விருத்திக்கிட்டபடி மேலும் விருத்தி செய்யும் தருணத்தில் அவரது மரணம்(1984)அதைத் தடைப்படுத்திவிட்டிருக்கிறது.

3: அடுத்து,அரச ஆதிக்கம்,அர ஜந்திரம் குறித்தான புரிதலில் அதி முக்கியமானவொருவரும்,உரையாடலுக்கான பொதுவெளியைக் குறித்து அழுத்தமாகப் பேசுபவரமான யுர்கன் காபர்மாஸ்.

Juergen Habermas 1929, ஜேர்மனியில் பிறந்தவர்.1956 ஆம் ஆண்டிலிருந்து வருகைதரு பேராசிரியராக தியோடர் வே.ஆடர்னோ கல்லூரில் (Theodor W.Adorno am Institut fuer Sozialforschung in Frankfurt ) கடமையாற்றியவர்.அவரது இன்றைய அனைத்துச் சிந்தனையும் ஒழுங்கமைந்த முதலாளித்துவச் செழுமைப்பட்ட ஒழுங்கை வேண்டுவது.அதிகாரத்துள் நிலைப்படுத்தப்பட்ட நிறுவனங்களைக் குறித்துத் தொடர்ந்து விமர்சிப்பதால் அவரை அரசு குறித்துப் புரிவதில் அதிகமாகத் தொடர்ந்திருக்கிறேன். என்றபோதும்,"நோய்வாய்ப் பட்ட முதலாளியக் குழந்தையின் வைத்தியன் காபர்மாஸ்"என்று கூறிய ஜேர்மனிய இடதுசாரியத் தோழன் இதிலும் என்னை எச்சரிக்கின்றான்.

அவரது முக்கிய நூல்கள்:
" Theorie des Kommunikativen Handelns" in 2 Baenden 1981
"Moralbewusstsein und Kommunikatives Handelns" 1983
"Erlaeuterungen zur Diskursethik"1991
"Faktizitaet und Geltung" 1992

4: Chantal Mouffe 1943, பேராசிரியர் கன்ரால் மூவ்பே வகுப்பெடுக்கும் அரசியல் விஞ்ஞானப் புரிதலில்அவர் தனது நண்பர் லூக்லாவோடு(Ernesto Laclau: wurde 1935 in Buenos Aires geboren und war zuletzt an der University of Essex im Bereich Politische Theorie tätig. Er sieht sich selbst als Vertreter des Postmarximus.) இணைந்தெழுதிய "Hegemonie und radikale Demokratie zur Dekonstruktion des Marxismus" -1985.தொடர்ந்து பேசத் தக்க வெளிகளை அதிகாரத்தின்மீதான புதியவகைத் தேடல்களை பூவ்கா செல்லாத வெளிகளில் வைத்துரையாடுகிறார்(Chantal Mouffe: wurde 1943 in Belgien geboren, ist heute als Professorin für Politische Theorie an der University of Westminster in London tätig. Gemeinsam mit Laclau publiziert sie 1985 „Hegemonie und radikale Demokratie. Zur Dekonstruktion des Marxismus“).

நவ காலச் சிந்தனைமுறைமைகளுக்கப்பால் எடுத்தாளப்படவேண்டிய முக்கியமானவொரு சிந்தனையாராக நான் இனங்காண்பவர் ஜேஆன் ஜாக்கோப்-றுவ்சேவ் (Jean-Jacques Rousseau),1712 இல் இருந்து 1778 வரை வாழ்ந்திருக்கிறார்.ஜெனிவா,இத்தாலி,பிரான்ஸ் என வாழ்ந்த மனிதரது சிந்தனை அன்றைய காலத்து சமூகவியற் போக்குகளை மிகச் சிறந்த புரிதலில் உரைப்பது.அவரது பிரதான தத்துவார்த்தப் போக்கானது "இயற்கையிடம் மீளச் செல்லல்"என்பதாகும். மனிதர்களுக்குக்கீழ் சமமற்ற நிலைகளைக் குறித்தும், மனிதர்களுக் கிடையிலான சமூக வளர்ச்சிப் போக்குகள், இயற்கைக்கும் மனிதர்களுக்குமானவொரு சீரழிவின் நிலையைக்கண்டு சிந்திக்க முனைந்திருக்கிறார்.அவரது முக்கிய-பிரதான நூல்களும் எனது புரிதலுக்குட்பட்டதன் தெரிவில் கீழ்வருவன:

"„Emile oder über die Erziehung“ 176
„Der Gesellschaftsvertrag“ 1726
„Abhandlungen über die Wissenschaften und Künste“ 1750
„Abhandlung über Ursprung und Grundlagen der Ungleichheit unter den Menschen“ 1753

இந்த மொழிவின்வழி,வளர்ச்சியடைந்த ஐரோப்பியச் சமுதாயங்களின் அதிகாரங்குறித்த-அரசு குறித்த அறிவின் நிலவரம்பற்றிய தேடலை நமது சூழலுக்கொப்ப புரிந்துகொள்வதன் அடிப்படைகளை மேற் சொன்ன தெரிவினது தருக்கத்திலிருந்து மேலும் வளர்க்கலாம். சர்வதிகாரப்போக்குடைய பெரும் உரையங்களின் நடுவே,இந்த எழுத்தாக்கத்தின்வழி "ஈழவிடுதலை"ப் போராட்டத்தின் சக்திகளையும்,அதைத் தலைமேற் ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களது உள-உய்வுத் தூண்டலையுங் குறித்து பேசவதுதாம் அதிகாரத்தின் திசைவழிகளை-புரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை எமக்குள் மெல்லச் செரிக்க முடியும்.பொருளாதாரஞ் சார்ந்தியங்கும் வாழ்நிலை சமூகவுணர்வைத் தகவமைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அந்தவுணர் விலிருந்து சிந்தனைப்போக்கு ஒரு அறிகுவியத்திலிருந்து இன்னொரு தளத்திலான அறிகுவியத்துக்கு மாறிக்கொண்டே இருக்கிறதெனக் கொண்டால் இந்த நிகழ்வூக்கத்துக்குள் நிலவுவது அதிகார நிலைப்பட்ட வடிவ மாற்றங்கள்தாம்.பண்புரீதியாகவும்,வடிவரீதியாகவும் இவை மாறும் கட்டங்களைக் குறித்து நோக்குவதில் அதிகாரத்தால் ஒதுக்கப்பட்ட-பட்டுள்ள-விளிம்பு நிலையிலுள்ளவொரு சமுதாயமாக மாற்றப்பட்டுள்ள தமிழ்பேசும் சமுதாயத்தின் தலைவிதியைக் குறித்த கருத்து வினைப்பாடானது தனக்குரிய வீரியத்தையும்,தேம்பலையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கிக்கொண்டிருப்பதால் இதைப் புரிகிற வெளியையாவது நாம் புரிந்துகொண்டால், அடுத்த கட்டம் புலப்படும்.கருத்து வினைப்பாடு என்ற பூவ்காவின் பரிசீலனைப் புள்ளியில் காபமாஸ் கருத்துவினைப்பாட்டைப் புரிந்துகொள்ளல் எனும் தளத்தில் கொஞ்சம் அகலிக்க விரும்பும் தளத்தில்"விருப்பத்துக்குரிய விவாதச் சூழலை" உருவாக்க விரும்புவதுதாம் எனது புள்ளி.


தொடரும்...

முதற் பகுதியை இங்கே வாசிக்கவும்...

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.12.11

Monday, December 26, 2011

அதிகாரம்: ...பூப்காவின் பாத்திரம்

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்!

சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல்.

(அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!)

(1)

லங்கைச் சிறுபான்மை இனங்கள் ஒரு சிக்கலான காலக்கட்டத்துக்குள் புதிய ஆண்டில் நுழையப்போகிறார்கள்.இலங்கை அரச ஆதிக்கத்தின்-அதிகாரத்தின் பதில் விளைவுகளாகப் பின்னப்பட்ட புலியழிப்புப் போராட்டத்துக்குப் பின் இலங்கையின் பொது அரசியற் சூழலானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மாற்றுக் கருத்தியல்-வெகுஜனக் கணிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது.இலங்கை அரச ஆதிக்கத்தைப் புரிந்துகொள்வதென்பதும்,அரச வன் முறை-வன்முறைசார ஜந்திரங்களின்வழி பின்னப்பட்டிருக்கும் அதிகாரமென்பது பெரும் பான்மை மக்களையும்,அவர்களது சுதந்திரத்தையும் "விடுதலை-சுதந்திரம்-இறைமை-தாயகம்" எனும் மந்திரச் சொற்களால் எங்ஙனம் பறித்துவிட்டிருக்கின்றவென்பதும் பெரும் வியப்படையத் தக்க குறிப்புகளாகும்.இதுள் தமிழீழ விடுதலைக்காகப் போராடியதாகச் சொல்லப்பட்ட புலிகளது பாத்திரத்தில் அவர்களுக்குட்பட்ட அரஜந்திரத்துள் நிலவிய அதிகாரமென்பது குறித்தும்,அதன் மறுவிழைவாக முழு இலங்கையின் உழைக்கும் மக்களும் இலங்கை அரசினது ஆதிக்கத்துக்கும்-ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கும் அடி பணிந்து போவதென்பது நடை முறைச் சாத்தியமாகுமா?


இன்றைய இந்தத்(புலிகளது தேசியவிடுதலைப்போராட்ட தோல்விக்குப்பின்) தருணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும்தமிழ்மக்களது அரசியல் சக்திகளால் நிகழவில்லை. இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும், இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது.எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.எனவே,ஒடுக்கப்படும்-நசுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை மக்களினங்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும். இந்தத் தருணத்தில்தாம் அதிகாரம் குறித்துப் பரவலாகப் பேசுவதற்கு நண்பர்கள் முனைகிறார்கள். அவர்களும் அதிகாரங் குறித்துப் பேசுவதில் பூப்காவை-நீட்சேயை முன் தள்ளி ஒற்றை வார்த்தை உதிர்ப்பதில் இடதுசாரியப் போராட்டத் திசையமைவுகளையே நொருக்குவதாகக் காட்சிப்படுத்தியும் விடுகிறார்கள்.மார்க்சை-லெனினைச் சொல்லி இக் கட்டுரைத் தொடரை நான் நகர்த்தப் போவதில்லை!

அதிகாரம் குறித்தும்,நிலவும் இலங்கை அரச இனவொடுக்கு முறையும்,அதுசார்ந்த இலங்கை அரச ஆதிக்கத்தின்வழி அதிகாரத்தை நிலைப்படுத்தும் சிங்கள-தமிழ் அதிகார வர்க்கங்களின் சட்டரீதியான அதிகாரத்துவ மையங்களை நோக்கி,எதிர் போராட்டங்கள் தனக்கான அதிகாரத்துக்குட்பட்ட வகைகளில் எழுவேண்டிய தருணங்களைப் புரிந்துகொள்வதற்கும் நாம் கடக்கவேண்டிய தூரம் அறிவுப் பாதையின்வழி நீண்ட தூரமாகும்.


புலிவழியான போராட்டச் செல்நெறியானது மக்களது செழுமையான பலத்தைப் பொருட்படுத்தாதென்பதை முதன்மைப்படுத்திச் சொல்வதிலும்,ஒருவகையான அந்நிய "கூறுபோடும்" தந்திரத்தையுரைப்பதாகப் புரிந்துகொள்ளச் சொல்லித் தொடரலாம்.


"Macht,Herrschaft, Gewalt."-அதிகாரம்,ஆதிக்கம்,வன்முறை போன்றவைகளின் வரலாற்று ரீதியான கண்ணோடத்தைக் குறித்தான புரிதல்களை அவசியப்படுத்துகிறேன்.இதற்காக மக்ஸ் வேபர் எழுதிய உலக தழுவிய கண்ணோட்த்துள் அதிகாரத்துவ வடிவங்கள்: சட்டரீதியான அதிகாரத்துவ அலகுகளும் (Herrschaftsformen in universeller historischer Perspektive –
Max Weber: Typen der legitimen Herrschaft) பரவலாகப் புரியப்பட்ட பின்னணியோடு நான்வொல்வ்காங் சோவ்ஸ்கியின் அதிகாரம் என்பது சமூக வடிவங்களாக என்பதை புதிய வகையான தேடதலின் வகைப்பட்ட கருத்தாடலுக்கும் (Macht als soziale Figuration – Wolfgang Sofsky u. Rainer Paris: Figurationen sozialer Macht ) எடுத்தாள்வதில் இலங்கையின் இனவொடுக்குமுறைத் தகவமைப்புகளை விளங்கிக்கொள்வதற்காக நவலிபரல்களது அதீதமான அதிகாரவேட்கையின் சூட்சுமத்தை விளங்கிக்கொள்வதற்கு மிக்கேல் பூவ்கா குறிரைத்த:

„Die Macht ist nicht etwas, was man erwirbt, wegnimmt, teilt, was man bewahrt oder verliert; die Macht ist etwas, was sich von un-zähligen Punkten aus und im Spiel ungleicher und beweglicher Beziehungen vollzieht.“-Michel Foucault[Überwachen und Strafen]

//Capillary power, governmentality, bio - politics குறித்து மேற்கத்திய சூழலை முன்வைத்து ஃபூக்கோ விளக்கியவற்றை விளங்கிக் கொள்ள முற்பட்டு, அதன்பாற்பட்டு புலிகளின் “வன்முறை” குறித்து பேச முன் வந்தால் வரவேற்கலாம்!மேற்கத்திய சூழலில் ஃபூக்கோவும் இன்ன பிறரும் முன்வைத்த ஆய்வுகளை தெற்காசியச் சூழலின் தனித்துவங்களைக் கணக்கில் கொண்டு புரிந்துகொள்ளப் பிரயத்தனப்பட Bernard Cohn ஐயும் Nichols Dirks ஐயும் வாசித்திருக்க வேண்டும், அறிவு வாளிகள் போல பாவனை செய்யும் ...//
by Valar Mathi

அதிகாரமென்பது கையகப்படுத்தி,பகிர்ந்துகொள்வதற்கான அலகு போன்றிருக்க வாய்ப்பில்லை,மனிதர்கள் காத்துக்கொள்வதற்கும்,இழப்பதற்கும்.அதிகாரமானது சமனற்ற விளையாட்டில் எண்ணிக்கைக்குட்படாத பல புள்ளிகளைக் கொண்டிருப்பதையொத்த தன்மைக்குட்பட்டிருக்கிறது. இது, சாதகமானதாகவும்,பாதகமானதாகவுமே இருபக்கங்கங்கட்கு உட்பட்டிருப்பதாகக் கருதும் பூப்கா வரலாற்று ரீதியாக உருவாகிய அதிகாரமென்பதை ஒரு ஸ்த்துலாமான புள்ளியில் நிறுவுவதை மறுத்துரைக்கும் சந்தர்பங்களை விளங்கிக்கொள்வதற்காக நாம்அவரது அனைத்துப் பிரதான எழுத்துப் பதிப்புகளையும் உள்வாங்கிக்கொண்டு தொடருவதும் தவிர்க்கமுடியாத ஒரு பளுத்தாம்.நவலிபரல்களின் முக்கிய மேட்டிமைக் கூட்டணியுள் -மௌன் பிலெரின் செசைட்டியுள் [Mont Pelerin Society ]அதிகாரத்துக்கான அதீத முனைப்புகள் திரண்டிருந்தபோது,கார்ல் போப்பரோடு[Karl Popper] கூடித் திரிந்த ஜேர்மனிய சந்தைப் பொருளாதாரச் சிந்தனையாளன் லூவிட்க் ஏர்ஹார்ட்டும் [Ludwig Erhard ],பிறீட்டிறிக் ஹாய்க்ட்டும்[Friedrich August von Hayek ] பூப்காவை மதித்தேம்பியழைத்திருந்தபோது அவரது அதிகாரம் குறித்த சிந்தனைதாம் அதன் அர்த்த புஷ்டியான வாய்ப்பை நல்கியது.வரலாற்றுக்கட்டமான புரிதலைச் செழுமைப்படுத்துவதிலிருந்து அதை அரூப நிலைக்குத் தள்ளியதிலிருந்து அதிகாரம் என்பது பல தளத்திலிருந்து:

Historische und gesellschaftliche Prozesse folgen für Michel Foucault keiner inneren Entwicklungslogik und ihnen liegt daher auch keine sinnhafte Ordnung zugrunde. Sie sind vielmehr das Ergebnis von andauernden Machtkämpfen. Für Foucault ist Geschichte "Machtverhältnis, nicht Sinnverhältnis" (M. Foucault: Dispositive der Macht, Berlin 1978, S. 29).

வரலாற்று ரீதியான சமூப் படிமுறைவளர்ச்சியானதன் விளைவுகள் பூப்காவைப் பொறுத்தவரை உள் தர்க்கத்துக்கு உகந்ததல்ல.அதேவழியில் அடிப்படையான அர்த்தத்துக்கு உட்பட்டதுமல்ல என்றாகிறது.இவைகள் அதிகம் பேசுவதானால்,தொடர்ந்து நிலவும் அதிகாரத்துக்கான போராட்டத்துள் சில வெளிப்பாடுகள் மட்டுமே.இந்தப் புள்ளியில் தாம் நாம் புலிகளது அதிகாரத்தைப் புரிந்துகொள்ள முனையவேண்டுமெனச் சொல்லப்படுகிறதுபோல் தெரிகிறது.இதை நாம் புரிந்துகொள்வதும்,தொடரும் அதிகாரத்திசையமைவுகளை மிகக் கறாராக வரையறை செய்வதில்இலங்கை அரச ஆதிக்கத்தின் வழி நசுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனங்களது வாழ்வாதாரவுரிமையைப் பின் தள்ளுவதிலிருந்து அவர்களது சுயநிர்ணயத்துக்கான அதுசார்ந்த உரிமைக் குரல்களை ஓரங்கட்டியொதுக்குவதில் புலிகளது எதிரதிகாரத்தின் வினை பயன் என்னவென்பதைக் குறித்துப் பார்ப்பதில் அவசியமான தேடுதல்கள் உருவாக வேண்டுமெனவும் கோருகிறேன்.

//ஃபூக்கோ கொடுத்த தெளிவுகளில் அடிப்படையான ஒன்று, அதிகாரம் என்பது “அரசு” என்பதாக இடதுசாரிகள் கற்பனை செய்துகொண்டிருக்கிற அரசு எந்திரம் என்று சொல்லப்படுவதின் ஒன்றில் மட்டுமே குவிந்திருப்பன்று என்பதுவும்!
இந்த அடிப்படைப் புரிதல்கள் கூட இல்லாத மாற்றுக் கருத்து ...... இனவெறி அரசுக்கு எதிராகச் செயல்பட்ட ஒரு இயக்க்கத்தை “அதுவும் அதிகார மையச் செயல்பாடுதான்” என்று விமர்சிப்பதில் அடிப்படைக் கோளாறு இருக்கிறது!முதல் கோளாறு, அதிகாரம் என்பது “பிற்போக்கானது - அதனால் எதிர்க்கப்பட வேண்டியது” என்ற மடப்புரிதல்.//
by Valar Mathi


எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு,அது விவேகமாக நிர்மாணிக்கப்படவேண்டும்.இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும்.எமது வரலாற்றுத் தாயகத்தை நாம்(இங்கே, பாசிசப் புலிவழிப் போராட்டத்தைக் கற்பனை செய்யவேண்டாம்) இழந்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக் கப்படவேண்டும். இங்கே, புலிகளின் தவறுகளைக்கொண்டே நம்மை நெருங்கிவரும் இந்திய வலுக்கரம் முறியடிக்கப்படவேண்டும்.இதற்கு நமது மக்களின் பூரணமான பங்களிப்பு அவசியமாகிறது.மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே! மக்கள் சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது. எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை,அந்நிய மேற்குலக ஏகாதிபத்தியங்களின் புவிகோள நலனை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.

இதன்தொடர் புரிதலில்தாம் இந்த அதிகாரம் குறித்த புரிதலை மிக நுணுக்கமாக விளங்கும் ஜேர்மனியச் சிந்தனைக்குள்ளிருந்து புரிந்துகொண்டதன்வழி நம்மைப் புரிந்துகொண்டு அடுத்த கட்டதைத் தொடர்ந்து முன் தள்ளுவதில் இக்கட்டுரைத் தொடர் சாதகமாகச் சில புரிதலை வழங்க முடியமெனக் கருதுகிறேன்.


தொடரும்...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.12.11

Wednesday, December 21, 2011

தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை!

தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை!

"சுகந்தி ஆறுமுகமும்,பெண்ணியல் புழுத்தலும்" -சில குறிப்புகள்.


ன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம். இங்கு, அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைத்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில்(தமிழீழப் போராட்டத்துள் புலிவழிப் புரிந்துகொண்ட தமிழர்களது சுயநிர்ணயம்) இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது. இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய புலி-சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.

இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரையான எல்லைகள் நீண்டுபோவதற்கான அரசியல்வரை, இவர்களது பணி(புலிகளும்-புலிகளது அழிவுக்குப் பின்னான பினாமிப் புலிகள்-நா(கா)டு கடந்த தமிழீழ அரசு) தொடர்ந்தே இருந்தது.இப்போதும், அதையே இன்னொரு வழியில் பின்பற்றுகிறார்கள்?

தாலித் தானத்துக்கும்,புலிகளது போராட்டத்துக்குமான ஒற்றுமை என்ன?

கடந்த சில தினங்கட்குமுன் பெண்ணொருத்தி மீளத் தாலிக் கொடியைத் "தமிழீழ விடுதலை"குறித்த போராட்டத்துக்கு-விடுதலைக்குத் தானமாக இட்டபோது அதை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் பெற்றுக்கொண்டு,"தாயகத்தில் எமது தாய்மார்களினதும் சகோதிரிகளினதும் கழுத்துக்களில் தொங்கும் தாலிகள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு தாலிக்கொடி இறங்கியது. ஈழத் தமிழர் தேசம் தனக்கெனச் சுதந்திரமான இறைமையுடைய தமிழீழத் தனியரசினை அமைத்துஇ தமிழீழத் திருநாட்டின் தேசியக் கொடி உலக அரங்கில் பட்டொளி வீசப் பறக்க வேண்டும் என்பதற்காக – இந்த அமர்வில் நமது தேசத்தின் தாய் ஒருவர் தனது கழுத்திலிருந்த தனது தாலிக்கொடியினை தானே இறக்கி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வை நாம் இந்த அரங்கில் கண்டோம்.”[ http://inioru.com/?p=25144 ] என்கின்றாராம்.

இங்கு,இந்தத் தாலி அறுப்புச் சம்பந்தமாக நான்: "புலிகள், இப்படி எத்தனை "தமிழிச்சிகளது" தாலியை அறுத்தாங்களோ,அதே பாணியில் தொடர்ந்து தாலியைத் தட்டிப்பறிக்கும் அதே குணம் தொடர்ந்தே வருகிறது.அப்படி என்னதாம் தாலிக்கும்,புலிகளுக்கும் தொடர்பு?;தாலியறுப்பார்! :-( "என்று வாசுதேவனின் நிலைத் தகவற்தொடர்பில் தாலி வழங்கும் நிழற்படத்துக்குக் கருத்திட்டேன்.


அந்தோ,பெண்ணிய சிங்கம் சுகந்தி ஆறுமுகத்துக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கப் பெண்ணியப் புயலாக மெல்லக் கொக்கரிக்கும்போது:
"எனது பெண்ணியல் புரிதலின்படி தாலியை அழித்தல் அல்லது அதை பொதுவெளியில் கழட்டுதல் என்பது ஒரு புரட்சிகர செயல்பாடு. தனது தாலியை கழட்டுவதற்க்குமுன் பெண் பல்வேறு கருத்தியல் உளவியல் மோதல்களுக்கு உள்ளாகிறாள். அதற்கு அபார துணிவு வேண்டும். அவர் அதை ஒரு பொதுப்பணிக்கு கொடுக்கிறார். சிறீ ரங்கன் உமது எழுத்துக்களில் இயங்கில் வேறுமை எப்பவும் தெக்கிநிற்கும். வெறும் வசைபாடும் அரசியலில் இருந்து வெளியேற முயற்சியுங்கள். புகலிடத்தாரிடம் புலிகள்பற்றி இன்னும் ஒரு நேர்மையான விமர்சனம் எழவில்லை. திட்டித்தீர்தலைத்தவிர.."
இப்படியெழுதி விடுகின்றார்.

ஆக,இது:"பொதுப்பணிக்குத் தாலி கழற்றப்படுகிறது.அது அபாரமான துணிபானது-தியாகமானது,புரட்சிகரமானது,பெண்விடுதலைக்கானது-பெண்ணடிமைத்தனத்தைப் போக்க வல்லது"இந்தப் பொதுப் புத்தியைத் தகவமைக்கும் புலிகளது பிரச்சாரத்தின் வலிமையை நாம் சில மாதிரிக்கான தெரிவுகளின்வழி உடைத்தோமானால்,நமது சமுதாயத்தில் பல இலட்சம் சுகந்தி ஆறுமுகங்களை உருவாக்கும் புலிகளது கருத்தியற் கட்டுமானத்தைப் புரிந்துகொள்ள முடியும்.ஏலவே,புலிகள்"உயிராயுதம்"தயாரித்த கதையும் இப்படியே...

இப்போது,இந்தத் தனித்துவமான பெண்ணியப் பனுவலூடாகக் கடத்தப்படும் தாலியின்-கொடியின் தானத்துக்கூடாகக் கட்டப்படும் குறியீடென்ன?

இதுவரை,சுவிசிட்ஸர்லாந்திலிருந்து ,உலகம் பூராகவும் தொடர்ந்த இந்தத் "தாலித் தானத்தின்" வழி, புலிகள் முன்னெடுக்கும் பிராச்சாரம் என்ன?

அதற்கும், சுகந்தி ஆறுமுகம் வகுப்பெடுக்கும்"பெண்ணிய த்துக்கும்" என்ன தொடர்பு என்பதை நாம் சற்று ஆழ்ந்து(கவனிக்க ஆழ்ந்து என்பதை) நோக்குவோம்.

தாலி,தமிழர்களது பண்பாட்டில் அது பெறுமதியான வாழ்வியற் குறியீடாகவும்,பெண்மீதான ஒருவித உளவியற் தாக்குதலாகவும்,அதன் சாரத்துள் சுமத்தப்படும் சமூகப் பெறுமானம்"சுமங்கலி"ச் சுமையெனும் பண்பாட்டுப் படுதாராகவும் நிலைப்படுத்தப்பட்ட பின்,அதன் சமூகவுளவியற் பெறுமானமானது "வாழ்வு" என்பதாகும்.அதன் அறுப்பில்"வாழ்வு" அற்றதன் தளத்தில்"வாழ்விழந்த"நிலைக் களன் மிக விரைவாகச் சுமத்தப்பட்டு,குறியீட்டுத் தாக்குதலில் பெண் சிதைக்கப்பட்டு மூலையுள் இருத்தப்படுகிறாள்,அல்லது "தமிழ் வாழ்வு"(சைவப் பழம்) விழுமியத்திலிருந்து விலக்கப்படுகிறாள்.

புலிகளது பிரச்சாரயுக்தியுள் "தாலித்தானம்" தான் சொல்வதிலிருந்து வேறொன்றையுங் குறித்துரைக்கிறது.இந்த ஆற்றலானது,தாலியின் குறிப்பான் பங்குக்குக் குங்குமம் பிறிது மொழியாகும்போது,அங்கே-"குங்குமம்" ஒரு நிலையில்வாழ்வாகவும்- சிகப்பு நிறம் மட்டுமாகப் பிறத்தியாருக்கும்-தமிழ் மொழிக்கு அந்நியமானவொரு மாற்று மொழியாளுக்கு-குறிப்பாக ஜேர்மனியர்களுக்கு!

அது ஒரு நிறம் மட்டுமே.அதை மொழிப்படுத்தும்போது,அதற்கு அவ்வளவு பெறுமானமான அர்த்தச்செரிவை எம்மால் ஏற்படுத்த முடியாது.ஆனால்,அது ஒரு குறியீடாகவும்,குறிப்பானகவும்,நமது சமுதாயத்துள் இயங்கும்போது,அகவயக் குறைவான மதிப்பீட்டைத் தள்ளி வைத்து வாழ்வொன்று நிலவுகிறது.அது பிற்போக்கானதாக இருந்துங்கூட.இதுதாம் தாலிக்கான மகிமை!

எனவே,தாலி குறியீடாகிக் குறிப்பானாகவும் விரிந்து ஒரு கட்டத்துள் சொன்மை என்பதாக அது விரிகிறதா? "தாயொருத்தி தாலிக்கொடியைத் தானமாக வழங்கினாள்" எனும் சொல்லின்வழி தரும் அர்த்தமும்,குறிப்பால் தரும் அர்த்தமும் ஒன்றல்ல!


"தாலி-குங்குமம்"என்பவை ஒரு தரப்பில் குறியீடாகிக் குறிப்பானாகவும்-சொன்மை ஆகவும் விரிவதில்தாம் புலிகளது"தாலிக் கொடை"விளம்பரம் உச்சம் பெறுகிறது.இதுதாம் எனது"தாலி அறுப்பு"எனும் கருத்துக்கான மூலச் சொன்மை! எனவே,பெயரிடல் அவ்வளவு இலகுவான பொருட்தரவல்ல பிரயோகமல்ல என்பதான புரிதலுள்,உட்புகுத்தப்பட்ட"வடிவம்"அவசியமானவொரு சமூக உளவியலைச் சொல்வதிலிருந்து பின்வாங்கிச் செல்லும் சுகந்தி ஆறுமுகத்துக்குப் "பெண் விடுதலைப் புரட்சியாக" இவை புரிகிறது.அதாவது,புலிக்குத் தானமாக வழங்கும் தாலி புரட்சி-பெண்விடுதலையாகிறது!ஐயோ,அரமே!

சொல் வேறு,சொன்மை வேறென்று உரைக்க, "உ-மக்கு" விற்றின்கன்ஸ்ரைனை அழைத்துவந்து வகுப்பெடுக்க முடியாது.

"தாலி x பொருண்மை-வாழ்வு x சொன்மை" இரண்டுக்கும் அர்த்தங்காண் அறிவு விலக்கிப் பெண் விடுதலைச் சிந்தனையை எவருக்குரைத்து என்ன பயன்? பெண்ணியமெனப் பெயரிட்டுவிடுவதில் அவசரப்படும் அறிவுக்கு, இந்தச் சிந்தனையை ஒரு சூத்திரமாக மாற்றிவிடுவதில் "பெண்விடுதலை-புரட்சி" அறைகூவலாகி விடுகிறது. இதுவே,"இயக்கவியற் வேறுமை"குறித்து வகுப்பெடுக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்னமே நாம் "தாலியறுத்து" இல்வாழ்வில் இணைந்து"குடும்பம்"நடாத்தும் இதுநாள்வரை, எமக்குப் பெண்ணின் உளவியல் மோதலை வகுப்பெடுக்கும் சுகந்தி ஆறுமுகத்துக்குப் புலிகளது போராட்டச் செல் நெறியோ அல்லது அவர்களது உளவியற் தாக்குதலோ புரிந்த மாதிரித்தாம்.

நான்,இத்தகைய தனிப்பெரும் பெண்ணியப் புரட்டுக்கு அப்பாலே புலிகளது தாக்குதலைக் குறித்துக் கவனப்படுத்தவே ஆர்வமாக இருக்கிறேன்.

தாலிக்கும்,புலிகளுக்கும்,தானத்துக்கும்-தியாகத்துக்கும் என்ன விளக்கங் காணமுடியும் புலிவழிக் கருத்தியலுக்குள்?

"தற்கொடை"
"தாலிக்கொடை"
"உயிற்கொடை"
"உயிராயுதம்"

"உளக்கொடை" இப்படிப் புலிகளது மொழிக்குள் நிலவுகின்ற கருத்தியற் கருவூலமானது ஒவ்வொரு கட்டத்துள்ளும் மிக வேகமான சமூகவுளவியலாக ஆக்கமுற வைக்கப்பட்டுள்ளது.வாழ்நிலையே சமூகவுணர்வைத் தீர்மானிப்பதென்பதும்-வாழும் நிலையைக்கடந்து,புற நிலையின் தன்மையே (நிலையே) சிந்தனையைத் தூண்டுவதென்ற உண்மையில், இத்தகைய கருவூலங்களை சமுதாயத்துள் பெரும்பகுதி மக்கள் வாழும் வாழ்நிலைகளாக மாற்றப் புலிகள் செய்து வரும் மிகக் கேவலமான பிரச்சாரங்களே இன்றுவரை மிகப்பெரும் துன்பத்தைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு அள்ளி வழங்கியது.

இதன்,தாக்கமானது ஒரு கட்டத்துள் தேசத்துக்காக"நீ சாவது"அவசியமானது-அர்த்தம் பொதிந்ததெனச் சொல்லப்பட்டதுவரை,சமூகத்துள் மிகவும் பெறுமானமிக்க வாழ்வை-தாலியைத் தியாகஞ் செய்யும் தாயைவிட,"உன்னிடம் இருக்கும் செல்வம் பெரிதில்லை-அதைப் புலிகளாகிய எமக்குத் தந்துவிடு!"எனச் சொல்லும் இந்த உளவியலை வகுப்பெடுக்க எனக்கு ஒரு சுகந்தி ஆறுமுகம் தேவையா?

தாலிக்கொடி வழங்கும் வர்ணப் போட்டோக்கள்-வீடியோக் காட்சியுருவாக்கத்துள்,இத்தகைய பிரச்சார உத்திகள் ஏலவே மலிந்திருந்தவை.கடந்த இரு சகாப்தத்துள் இது நீண்டவொரு பட்டியலைத் தரவல்லது.இதன் வாயிலாகவொரு கீழ்த்தரமான பிரச்சாரத்தை முன்வைத்த புலிகள்,எத்தனையோ தாய்மார்களது கழுத்துள் கை வைக்காமலே தாலிக்கொடிகளை அபகரித்தது மட்டுமல்ல,நிலத்தில் அத்தகைய தாய்மார்களது கணவர்களையுங் களப் பலியாக்கியது வரலாறுதாம்.இதன் தொடராகக் கட்டியமைக்க முனையும் உளவியலானது, தொடர்ந்து மக்களை மொட்டையடிக்கவும்,உணர்ச்சிவயமாகத் "தமிழீழ விடுதலைக்கு" பொருட்கொடை வழங்கும் ஒருவித மனத்தையே அவர்கள் உருவாக்க முனைகிறார்கள்.அந்த மனத்தைத் தொடர்ந்து தகவமைக்கும் இந்தத் "தாலி-கொடி" , சமூகத்துள் அதி வேகமான குறியீடாகி "அனைத்துக்கும் ஈடாகாதவொரு பொதுமைப்பட்ட சொன்மையாக" மாறும் இந்தப் பிரச்சார உத்தி கீழ்த்தரமான காயடிப்பு அரசியலாகும்.

"மனிதர்கள் மொழியினது கைதிகள்"என்பது ரொலான் பார்த்தின் கூற்றுக்களில் அதிகம் முக்கியமானது.உயிர் வாழ்வின்முக்கியமான பரிணாமம் இந்தக் குறிப்புணர்த்தும் உணர்வினது அனுங்கலான மொழியாகும். எனவே,மொழியென்பது என்ன-வாழ்வென்பது என்னவென மிக இலகுவாகப் புரிந்துபோக முடியாத நெருக்கடியுள்தாம் புலிகளது இந்தப் பிரச்சார உத்தி கையாலாகதவொரு இனத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

ஒன்றைக் காட்சிப்படுத்தும்போதே, இன்னொன்றைக் காட்சிப்படுத்தாது விடப்படுகிறது.குறியீடாகச் சொல்லும்போது, இன்னொன்றைக் குறித்துச் சொல்லாமல் விடப்பட்டு, உண்மை மறைக்கப்படுகிறது.

"தாலி" என்ற பொருண்மை தன்னளவில் ஒரு குறியீடாகவும்-குறிப்பானாகவும் இருக்கும் அதே சமயம் அது வாழ்வெனும் தருணத்துள் ஒரு சொன்மையாக விரிகிறது. இங்கே,பொருண்மையும்,சொன்மையும் மெலிதானவொரு நூலிழையால் பிரிக்கப்படுகிறதே இந்தத் தளத்துள்தாம் புலிகளது "தாலி-கொடித் தானம்" மையங்கொண்டு, மக்களை மொட்டையடிப்பதற்கானவொரு உறுதியான பிராச்சர உத்தியை மறைத்து மக்களுக்கான விடுதலை-தேசவிடுதலை எனப் பரப்புரை செய்து மிகவும் இலகுவாக ஊரார் தாலியை அறுத்துக்கொள்கிறது.இது கிடைக்காத சந்தர்ப்பத்துள் துப்பாக்கிக் காட்டித் தாலியறுக்கும் இன்னொரு கூட்டமோ,அறுத்த தாலிகளுடன் பாரீசில் ஒதுங்கும் இடம்,தமிழ் மளிகைக் கடையாகவும்,தமிழ்அச்சுக் கூடமாகவும் இப்போது இருக்கும்போது,தாலி அறுப்புக்கான இந்த நிகழ்வுகள் அனைத்தும் "பெண் விடுதலைக்கான" முன் நிபந்தனைகள்தாம்.

இதையொட்டிச் சுகந்தி ஆறுமுகங்கள் இயங்கியல்"வேறுமை" வகுப்பெடுக்கட்டும்.நல்லதுதானே?-யாரு, "வேண்டாம்" என்றோம்?


ப.வி.ஸ்ரீரங்கன்,
ஜேர்மனி
21.12.2011

Monday, December 05, 2011

பிச்சை வேண்டாம்...

பிச்சை வேண்டாம்,நாயைப்பிடி:புலிகளது போராட்டஞ் சரியானது!

" மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாகத்தாமிருந்திருக்கிறது.இதைப் புரியாதிருக்கும் ஒரு காலத்தை இனிமேலும் தக்கவைப்பதற்கு எல்லாத் தரப்பும் அதி சிரத்தையெடுத்தபடி "தேசிய உரிமை"பேசுகின்றன."


னவொதுக்குதலுக்கும்-ஒடுக்குமுறைக்குள்ளாகுமொரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் எதிர்ப்புப்போராட்டமென்பது, அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருதே முன்னெடுக்கப்பட வேண்டும். சுயநிர்ணய-விடுதலைப் போராட்டமென்பதைத் தவறான வகையில் "தமிழீழ விடுதலை"என்ற கோசத்துக்குள் உட்படுத்தித் தமிழர்களது சுயநிர்ணயவுரிமையையே அழித்த அந்நியத் தேசங்கள் புலிகளது வரவினூடாகச் சாதித்த இந்த த் திட்டமிடப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கெதிரான வரலாற்றுப் பழியானது நமது மக்களையும் இளைய தலைமுறையையும் மீளவும் ஏமாற்றிவிடும் சூழலொன்றைத் திட்டமிட்டுவுருவாக்குகிறது.இன்றைய ஆளும் வர்க்க-அதிகார நிறுவனங்களது கருத்தியல் தளத்தை உருவாக்கும் ஊடகங்களை மெல்லக் கவனிப்பவர்களுக்கு இந்தவுண்மை எப்போதும் முகத்தில் ஓங்கி அடித்தே தீரும்! முள்ளி வாய்க்காலுக்குப் பின்பு புலிகளது விசுவாசிகளில் பலர் போதகர்களானார்கள்.அவர்களுக்குத் தலைமைகொண்ட கே.பி. மக்களுக்குச் சாப்பாடு போதுமெனவும்"அபிவிருத்தி"யே சுயநிர்ணயமென்றும் வகுப்பெடுக்கும்போது,அவரது தலைமைக்குட்பட்ட கருத்துக் குட்டிகள் சொல்வதென்னவாக இருக்கும்?

இதில் நிலாந்தன் விதிவிலக்காக முடியுமா,அல்லது தமிழ்ச் செல்வன் துணைவி விதிவிலக்காக முடியுமா?ஏன் முக நூல் வட்டத்துத் தேசிய ஆர்வலர்கள் விதிவிலக்காக முடியுமா?இந்த விதிவிலக்கு மக்களுக்கான அரசியலைப் பேசுவதென்பதில் மையங்கொள்கிறது!

சில வியூகங்களும், அந்நிய லொபிகளும்:

1: புலிகளது தவறுகளை,போராட்டச் செல்நெறியின் பாரிய ஊசலாட்டத்தைச் சரியானதெனவும்,மக்களை வன்னியில் கட்டாயமாக மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதும்,பலம் பொருந்திய இலங்கைப் பாசிச இராணுவத்துக்கு எதிராகப் போராடும்படி முன் நிறுத்திப் பலிகொடுத்ததும்,முகம்கொடுக்க முடியாது பின் வாங்கியவர்களைப் புலிகள் தண்டித்துச் சுட்டுக்கொன்றதும்,விடுதலைப்போராட்டத்தில்-தேசத்தைக் காக்கச் சரியானதென விவாதிக்கும் கருத்தை உருவாக்கல்.பிரபாகரனைத் தொடர்ந்து உயிர்வாழுவதாகவும்,அவர் ஒரு மகத்தான மனிதரெனவும்,தேசிய விடுதலையைத்தப்புத் தவறுமற்று முன்னெடுத்தவராகவும்,தமிழ்த் தேசியத்தின் குறியீடாகி வைத்துக்கொள்வதும்,

2:அக்கருத்துக்கு நியாயமாக,பாசிசக் கிட்டலரை எதிர்த்துப் போராடிய இருஷ்சியச் செம்படைகளை ஒப்பீடு செய்து,புலிகளது தவறுகளையும்,மக்கள் விரோதத்தையும் நியாப்படுத்துதல்.புலிகள் சரியான பாதைகளின்வழியேதாம் போராடியதாகக் கருத்துக்கட்டி, மீள ,மீள நம்மை ஏமாற்றுதல்,தவறான பாதையின்வழியே நமக்குப் போராடக் கற்றுக்கொடுத்து இறுதியில் தோற்கடிக்கத்தக்க சூழலை உருவாக்கிக்கொள்ளல்.


மேற்கூறிய வியூகத்துக்கிணைவாக,பல்கலைக்கழக மாணவர்களை,உசுப்பேத்தித் தமிழ்பேசும் மக்களை மேலும் ஒட்ட மொட்டையடிக்கும் அந்நியச் சக்திகளது வியூகமானது நிரந்தரமாகத் தமிழ்பேசும் மக்களை உணர்ச்சி அரசியலுக்குள் கட்டிப்போடுவதில் மிக விவேகமாக முன்னேறுகிறது.இது முள்ளி வாய்காற் படுகொலைகளுக்குப் பின் மிகச் சாதுரியமாகக் கருத்தியலை முன்வைத்து நகர்கிறது.இதன் பின்னே யார் இருக்கிறார்கள்,இதைத் உந்தித் தள்ளும் பொருளாதார ஆர்வமென்ன?சிந்திக்க வேண்டும்!

இதைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களை நாம் உருவாக்க வேண்டும்.

புலிகளது தவறுகளைச் சரியானதென நிறுவிக்கொள்வதால் என்ன நிகழும்?

இந்தக் கேள்விக்குப் பெரிதாகச் சிந்திக்க தேவையில்லை.தவறுகளைத் திருத்திக்கொள்ளாதவரை நமது தேர்வுகள் தப்பாகவே இருக்கும்.சதா படிக்காமல் ரோட்டுச் சுத்திவிட்டுத் தேர்வில் தோற்ற மாணவர்களை"இல்லை நீ செய்தது சரி"உனக்கு எதிராகப் பரிசோதகர் மார்க்ஸ் போட்டுவிட்டான் என்ற கதையாகவே புலிகளது தவறுகளைச் சொல்லிக்கொடுக்கும் இன்றைய தலைமுறைக்கு, உலகப் போராட்டங்கள், விடுதலை-புரட்சியின் புறநிலைமைகள் குறித்து எந்தவிதப் புரிதலும் அவசியமில்லாதபடி "ஒரு பொறி"க்காக மக்கள் காத்திருப் பதாகவும்"திடீர்ப் புரட்சி"ரெடி எனும்படி உலகம் புரிந்து போகிறது. இதுதாம் ஆபத்தானது!

புலிகளது தவறுகளைக் கண்டுகொள்ளாதிருக்கவும்,அவர்களது தியாகங்களை மகத்துவப் படுத்தலூடாகவும்,போராட்டத் தவறுகள் மறைக்கப்படுகின்றன.இந்த வரலாற்றுத் தவறுகளை நியாயப்படுத்துவதனூடாக மீளவும் புலிவழிப் போராட்டச் செல்நெறியும் மக்களைப் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தி இயக்கவாத மாயைக்குள் கட்டிப்போடுவதால் புலிகள் அழிந்த இந்த வெற்றிடத்தில் உருவாகப்போகும் புரட்சிகர அணிதிரட்சிக்கெதிராக மக்களைத் திசை திருப்புவதும்,தொடர்ந்தும் உணர்ச்சி வழிப்பட்ட தேசியப் பெருமிதத்தைப் புலிக்களுக்கூடாகக்கட்டி, அவர்களை அதன்வழி சிந்திக்க வைப்பதுமே அந்நியச் சக்திகளுக்கு அவசியமாகவிருக்கிறது.குறிப்பாக இந்திய ரோ இங்ஙனமே செய்யத் தூண்டுகிறது.

இதனால்,அந்நியச் சக்திகள் அடையும் பலன், பல வடிவங்களிலானது.அவர்கள் இருவிதமான தந்திரத்தில் இளைய தலைமுறையைத் தகவமைத்து வருகிறார்கள்.அவை கீழ்வரும்படி அமைகிறதென அண்மைய முகநூல்-இணைய ஊடகக்கருத்தாடற் போக்குகள் நிரூபிக்கின்றன.

முதலாவது வகை:

1: புலி அற்ற தமிழ் அரசியற்பரப்பில் ஜனநாயக நீரோட்டம் அரும்புவதை(பல்தரக்கருத்தாடல்,வெளிப்படையான பொதுத் தள அரசியல்,குடிசார் அமைப்புகளது முகிழ்ப்பு,மக்கள் பல் முனைக் கருத்தாக்கங்களால் உந்தப்படல்,உளரீதியாகச் சமூகவுணர்வை புறநிலையில் இருந்து பெற்று அதையே மீளத் தகவமைத்தல் போன்றவை)தடுத்தல்,

2:போராட்டவுணர்வுமிக்க தலைமுறைகளது சிந்தையில் புலிகளது கருத்தியலை மீளத் தகவமைத்துத் தேசத்தைக் கட்டும் அபிலாசையை சுயமாகத் தீர்மானிக்கும் உணர்வை அடியோடழித்தல்,

3:நண்பர்கள் யார்-எதிரிகள் யார் என்ற கேள்விக்கு விடை தெரியாதிருப்பதும்,தேசிய விடுதலையை ஏகாதிபத்தியத் தயவில் வென்றெடுக்கும் லொபி அரசியலைத் திட்டமிட்டு விதைப்பதற்காகவேனும் புலிகளது தோல்விகளைத் தப்பான போராட்டச் செல்நெறியைச் சரியானதெனக் கட்டியமைத்துக் கருத்தாட வைத்தல்,இதன்வழியாக இளைஞர்களை மீளவும் புரட்சிகரமான உணர்விலிருந்து அந்நியப்படுத்தித் தலைமை வழிபாடுடையவொரு தலைமுறையாக்கிக் கொள்ளல்(இது பெரும்பாலும் ஓட்டுரகச் சிந்தனையின் மறுவடிவமான இயக்கவாதக் கட்டுமானமே),இதற்குத்தோதாக அந்நியச் சக்திகள் இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல்.இதைத் தேசிய விடுதலை,தமிழ்பேசும் மக்களுக்கான நியாயம் கிடைப்பதற்கான வழிமுறையென வகுப்பெடுத்துக்கொள்ளல்,இதன்வழி அந்நியச் சேவைக்குத் தகுந்த அடியாட் படைகளை மீளத் தகவமைத்துக் கொள்ளல்,

4:பலதரப்பட்ட தளத்திலிருந்து புலிக்கு ஆதரவான சக்திகளைத் தொடர்ந்து உருவாக்குதல்,இது பல்கலைக்கழக மாணவர்களிலிருந்து பாட்டாளிவர்க்கம்வரை திட்டமிடப்பட்ட சுழற்சி ரீதியான கருத்தியல் உருவாக்க நிகழ்ச்சி நிரலைத் தயார்ப்படுத்திக்கொள்ளல்,வர்க்க உணர்வு பெறும் சமூக வேலைத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்காதிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதும்,புரட்சிகரமானவொரு கட்சியின் உருவாக்கத்தைத் தொடர்ந்து சிதறிடிப்பதற்கான புலிவழித் தேசியத்தைப் பரப்புதல்-புலிகளைத் தியாகிகளாக்கி மக்களிடம் ஒருவித மாயையைக் கட்டியமைத்து,உரிமைகளை மழுங்கடித்தல்,

இதன்வழியாக ஒரு தேசிய இனத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியான உணர்வைச் சிதைத்து, அவர்களை வெறும் இனக் குழுவாக்கும் வன்மையான போக்கை,மென்மையான முறையில் நிறுவிக்கொள்ளல்.

இரண்டாவது வகை:

இந்த இரண்டாவது வகையானது எப்பவுமே,புலிகளை விமர்சித்தபடி,போராட்டம் என்பது இனிமேல் சரிவாரதென்ற தோரணையில் "பிச்சை வேண்டாம் நாயைப்பிடி",என்ற கோசங்களுக்கமையக் கருத்தியலைப் பின்னிக்கொள்ளும்.

இன்று நிலாந்தன் போன்றவர்களது கருத்தானது இங்ஙனமே கட்டியமைக்கப்பட்டுவருவதில் அந்நியச் சக்திகளது இராண்டாவது வகையான அணுகுமுறை இங்கு மையங்கொள்கிறது.இதுதாம் சாணாக்கிய தந்திரமாகும்.இதை உரைத்துப்பார்ப்போமா?

1:புலிகளது முன்னால் உறுப்பினர்கள்,விசுவாசிகள்,அவர்களது அரசியல்-பிரச்சாரகப் பரிவுகளிலிருந்து தெரிந்தெடுத்த நபர்களைவைத்து இத்தகைய போக்குக்குச் சார்பான கருத்தியலை உருவாக்குதல்,

2: மாற்றுக் குழுக்களுக்குள் இருந்து மலினப்பட்ட சக்திகளை(வருவாய்க்கேற்ப இயங்கிக்கொள்ள முனையும் போலி-பினாமிக் குழுக்கள்.முன்னாள் இயக்கங்களிலிருந்து புலிக்குப் பினாமியாக இயங்கிய என்.எல்.எப்.ரீ யின் பிளவுக்குழுக்கள்வரை) திடீர் புரட்சி,கட்சிகளெனக் கட்டவைத்தலும்,ஆட்களைக் காட்டிக் கொடுத்துப் புரட்சிகரச் சக்திகளை அழித்தலும்,

3: புலிகளது மேல் நிலைக் கைகாட்டிகளை வைத்து, இலங்கை அரசினூடாக மக்களை அண்மித்தல். போராட்டமானது பிழையானது,மக்களை அழித்த அந்தத் திசைவழி தேவையற்றதெனக் கருத்துக்கட்டி, மக்களைத் தொடர்ந்து பலவீனப்படுத்தி அடிமையாக்குவது.அதிகாரங்களுக்குப் பணிந்து போகவைக்கும் வியூகத்தை இதன் போக்கில் தகமைத்து, மக்களை வெறும் நுகர்வடிமைக் கூட்டமாக்கிக்கொள்ளல்.

இதை,இங்ஙனம் புரிந்துகொள்ளவேண்டும்:அதாவது,

1: புலிகளது போராட்டஞ்சரியானதெனக் கட்டியமைப்பதால்,நேர்த்தியான புரட்சிகரமான மக்களது பாத்திரத்தை இல்லாதாக்கல்,சரியான செல்நெறியை மழுங்கடித்தல்,மீளவும் போராடும் மக்களை புலிவழி செலுத்தித் தோற்கடித்தல்,

2: புலிகளது போராட்டம்,மக்களைக் கொன்று குவித்ததன் விளைவாக,எதுவுமே சரிவரவில்லை,போராட்டம்-விடுதலை என்பது அழிவு அரசியலானது,எனவே,புரட்சி-விடுதலை என்பதெல்லாம் மக்கள் விரோதமானதெனக் கட்டியமைக்கும் கருத்தியலை உருவாக்கி, அதேயே பெரும்பகுதி மக்களது சமூக உளவியலாக்கிக்கொண்டு அவர்களது சமுதாய ஆவேசத்தைத் தணித்தல்,அனைத்துத் தவறுகளையும் பிரபாகரனது தலையில் பொறித்துத் தேசியவிடுதலையென்பது இனிமேல் சரிவராது,அது தவறானதென உருவாக்கிக்கொள்ளல்,

இந்த இருவகையான அணுகுமுறையில் மக்களில் பெரும்பாலரைத் தொடர்ந்து இரண்டு இலாடனில் பிணைக்க முடியும்.

ஒன்று: புலிவழிப் போராட்டத்தைச் செய்ய வைத்துக்கொள்வதன் முலமாக(போராட்டவுணர்வுமிக்க இளைஞர்களை,தேசியவிடுதலையை உணர்வு பூர்வமாக அணுகும் பெரும்பகுதிப் புலம்பெயர் இளைஞர்களை) இனவொடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை மழுங்கடித்தல் அல்லது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லல்.இதன்வழியாக முற்போக்கு அரசியலை நீர்த்துப்போக வைத்தலும்,இளைஞர்களைப் புரட்சிகரமாக அணிதிரளுஞ் சந்தர்ப்பத்திலிருந்து தடுத்துக்கொள்னலும் நிகழ்ந்துவிடுகிறது.இதற்காகத் தொடர்ந்து புலிகளை நியாயப்படுத்தல்.

இரண்டு: புலிகளது போராட்டத்தால் மக்களது கெடுதியான பக்ககங்களைக் காட்டிக்கொள்வதும்,அதன்வழியாக நிலத்தில் இருப்பவர்களது போராட்டவுணர்வை,இலங்கைப் பாசிச அரசின் இனவொதுக்கலை மெல்ல உணர்வுரீதியாக உள்வாங்காதிருக்கும் சந்தர்ப்பத்தைப் புலிகளது கொடுமையின்வழி உணர்த்தித் தடுத்தல்,அழிவு அரசியலது பக்கங்களைப் பேசுவதும்,அதனூடாக மக்களுக்குப் போதித்தல்"பிச்சை வேண்டாம் நாயைப்பிடி"எனும் முதுவாக்கினூடாகப் போராடுவது தவறு என்ற கருத்தியலைத் தொடர்ந்து வளர்த்தெடுத்தல்,போராட்டம் தவறானவர்களால்,தவறான ஆர்வங்களுக்காகத் தவறாக நடாத்தப்பட்டுத் தோல்வியில் முடித்து வைக்கப்பட்டதை, விமர்சனரீதியாக உள்வாங்கிச் சரியான தெரிவுகளை கண்டடைவதற்குக் குறுக்கே இந்தப் போக்கைக் கட்டியமைத்தலே இதன் உட்பரிணாமம்.

இவ்விரு போக்கையும் இனம் காண்பது அவசியம்.இதிலிருந்து புலிகளது தவறான போராட்டத்தை விளங்கிக்கொண்டு சரியான தெரிவுகளினூடாக இலங்கைப் பாசிச அரசுக்கெதிரான,தென்னாசியப் பிராந்திய மற்றும் உலக வல்லாதிக்க ஏகாதிபத்தியங் களுக் கெதிரான ஸ்தானத்தில் மக்கள் புரட்சிகரமாக இயங்குவது எங்ஙனம் சாத்தியமாகும்,இதைச் சாத்தியப்படுத்தும் புரட்சிகரமான புரட்சியின் நிலவரங்கள் என்ன? மக்கள்யாரோடு தோள்சேர்ந்து இவற்றைச் சாதிக்கமுடியும்?

புரட்சிகரமானவொரு அரசியலை எப்படித் தகவமைப்பது? இது பாரியகேள்வியாகும்.மிக இலகுவாக விடை கிடைக்கவில்லை!இந்தச் சூழலை இனம் காண்கின்றோம்.ஆனால்,தடுக்க முடியவில்லை!ஏனெனில், எவர்-எந்த முகாமுக்குள் இருக்கிறாரென்பது இன்னுமே வெட்ட வெளிச்சமாவில்லை!


இந்த நிலையில் என்ன செய்வது?

தமிழ்த் தேசத்தின் நேர் எதிர் மறையான முரண்களாக இருப்பவை பதவிக்கான வேட்கையுடைய தமிழ்க் கைக்கூலிக் குழுக்களின் இன்றைய செயற்பாடாகும்!நமது தேசத்தின்-மக்களின் அபிலாசைகளை வேட்டையாடும் நிலைக்குப் போய்விட்ட கூலிக்குழுக்கள் ஒருபுறமும்,மறுபுறம் ஜனநாயக வேடம் தரித்த குள்ள நரிப் புலிக் கூட்டம்(கே.பி.உருத்திரகுமார்,கருணா-பிள்ளையான்,நெடியவன் மசிர்மட்டை...)வகையறாக்கள் ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டும் வார்த்தை ஜாலக் கதைகளுடன் ஒருபுறமும், அன்னிய சக்திகளைப் பலப்படுத்துவதில்...

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அது அரங்கேற்றி வருகிறது.பேராசை,பதவி வெறி பிடித்த தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள்.இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது.ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.

நமது உரிமையென்பது வெறும் அரசியல் கோசமல்ல.

எங்கள் பாரம்பரிய நிலப்பரம்பல் குறுகுகிறது.நாம் நமது தாயத்தை மெல்ல இழந்து போகிறோம்.நமது உரிமைகள் வெற்று வார்த்தையாகவும்,ஒரு குழுவின் வேண்டாத கோரிக்கையுமாகச் சீரழிந்து போகிறது.இது திட்டமிட்ட சிங்கள அரசியலின் சதிக்கு மிக அண்மையில் இருக்கிறது.எனவே, சிங்களப் பாசிசம் தன் வெற்றியைக் கொண்டாடுவதும்,அதைப் புலிப்பினாமிகள் ஜனநாயகத்தின் பேரால் வாழ்த்தி வரவேற்பதும்கெடுதியான அரசியலின் வெளிப்பாடாகமட்டும் பார்ப்பதற்கில்லை.மாறாக, எஜமான் இந்தியாவின் வற்புறுத்தலாகவும் இருக்கிறது.இது அகண்ட இந்தியாவைத் தக்கவைக்கும் வியூகத்தோடு முடிச்சிடுவது.

மிக நேர்த்தியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் நமது மக்கள் தமது உரிமைகளை வெறும் சலுகைகளுக்காக விட்டுவிடுவதற்கான சமூக உளவியலை ஏற்படுத்தும் நரித்தனமான அரசியலை மேற்முசொன்ன இருவகையான போக்குகள் செய்துவரும்போது இந்தக் "கேடுகெட்ட புலம்பெயர் புலித் தமிழர்கள்"எந்த அரசியல் வியூகமுமற்றச் செத்துக்கிடக்கிறார்கள்!

இன்றைக்குச் சிங்களப் பாசிஸ்ட்டுக்கள் செய்துவரும் அரசியல் கபடத்தனம் எமது வருங்காலத்தையே இல்லாதாக்கும் பெரும் பலம் பொருந்திய விய+கத்தைக் கொண்டிருக்கிறது.இலங்கையில் பல் தேசிய இனம் இருப்பதே கிடையாதென்கிறது சிங்களம்.இலங்கையர்கள் எனும் அரசியல் கருத்தாக்கத்தின் மறுவடிவம் சிங்களம் என்பதன் நீட்சியாகும்!நாம் தமிழ் பேசுபவர்கள்.நமது தேசம் பாரம்பரியமாக நமது மக்களின் வாழ்வோடும்,வரலாற்றோடும் தொடர்புடைய தமிழ் மண்ணே.அது வெகு இலகுவாகச் சிங்களமாகிவிட முடியாது.

நமது மக்களை வெறும் பேயர்களாக்கும் அரசியலை மேற்கு கூறிய இரண்டு தரப்புமே செய்துவரும்போது நாம் மௌனித்திருக்க முடியாது!

இந்தத் தருணம் பொல்லாத தருணமாகும்.தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இது அரசியல் வியூகமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.இது ஏற்புடையதல்ல.இதைத்தாம் இதுவரை புலிகளைக்கொண்டு அந்நியச் சக்திகள் செய்து முடித்துக்கொண்டன.தொடர்ந்தும், அவை மாற்று வியூகங்களை நான் மேலே குறிப்பிட்ட வகைகளில் தகவமைத்து வருகின்றன.

நம்மிடம் வர்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இருக்கிறார்கள்.

எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.


எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.இதற்குள்தாம் புலிகள் செய்த போராட்டம் சரியானது-தவறற்ற நேரானதெனவும்,பிச்சைவேண்டாம் நாயைப்பிடி,பங்கர்வேண்டாம் படும் கொலைகள் வேண்டாம்,யுத்தம்வேண்டாம் ஒரு சிறுபிடி சாதமே விடுதலை என வகுப்பெடுக்கும் அந்நிய வியூகங்கள்.இதை இனம் கண்டு எதிர்க்காமல் நமது மக்களது உண்மையான விடுதலைக்கான பாதை திறந்துகொள்ளது!

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி,

06.12.11

Saturday, November 19, 2011

விக்கிப்பீடியாவில் பிரபாகரனது வாழ்க்கைக் குறிப்பை...

பெயரிலிக்கும் எனக்குமான உரையாடலாக...

// அதேநேரத்திலே இரு விடயங்களை நான் தெளிவாக நீங்கள் சொல்லவேண்டுமெனக் கேட்கிறேன்; இயக்கங்கள் எதுவானாலும் உண்மையாக உயிர்களையும் நிகழ்காலவாழ்க்கையையும் இழந்த எத்தனையோ இளைஞர் (இளைஞன் + இளைஞி), மத்தியவயதினர், சார்பான முதியவர்கள் இருந்தார்கள்; இருக்கின்றார்கள்; அதனாலே புலிப்பினாமி புளொட்பினாமி என்று திட்டும்போது, உயிரைக் கொடுத்தவரையும் தேரைக்கொளுத்துகிறவரையும் வகை பிரித்துக் கொஞ்சம் வரையறை செய்வதுதான் நியாயமாகுமா? இல்லையா? இரண்டாவது, /எனது குறிப்புகள்.

வரலாற்றில் ,"கட்டிப்போட்ட " சிந்தனைக்குட்பட்டு வளர்ந்த இன்றைய இளைஞர்கள்-இளைஞிகள் இந்தச் சிக்கலைப் புரிந்து மேலெழுவேண்டிய தேவைக்கானவொரு புள்ளியை நான் அண்மிக்க விரும்புகிறேன்./ என்கின்றீர்கள். இதிலே கருத்தார்ந்த தத்துவப்படுத்தலுக்கப்பால், நடைமுறைக்கு என்ன பயன்? ஆற்றுவெள்ளத்திலே ஓடம் கவிழ்கையிலே நீந்தத்தெரியாவிட்டால், பண்டிதரே, அர்த்தசாஸ்திரமும் ஆவிக்குதவாது; தண்டியலங்காரமும் தலைகாக்காது. பின், யாருக்காக, இந்த நோட்டுகளை நாம் வரைந்துகொண்டேபோகிறோம்! "யாருக்காக! இது யாருக்காக! இந்த நோட்டுகள் மார்க்சிய நோட்டுகள்! எம்மிஞளைஞர்க்காய் எழுதிய நோட்டுகள்" என்ற சின்னக்கோட்டுக்குள்ளேயே அவை பயன் அற்றுப்போமே! :-( // -இரமணிதரன் கந்தையா
http://www.facebook.com/jbharane/posts/2590248437521?cmntid=2599466427965

ன்றிருந்து இன்றுவரையும் இந்தச் சிக்கலைத் தெளிவோடுதானே பேசுகிறேன்!போலித்தனமாக எமது சிறார்களது உயித்தியாகத்தையும்,சிங்கள இனவொடுக்குமுறைக்கெரான அவர்களது வீரஞ் செறிந்த எதிர்ப்புப் போராட்டத்தையும் தேசியவிடுதலை"என்ற ஒற்ற்றைப் பரிணாமத்துள் அடக்கி அதைக் காசாக்கும் புலிகளது மேல் நிலை அரசியற்றலைமையைத்தானே இதுவரை விமர்சிக்கின்றேன்.

புலிகளது அடிமட்டப் போராளிகளைத் தேசபக்தர்கள் என்ற எனது பிடிவாதமான கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது.இன்றுவரை, இந்த இளைஞர்கூட்டம்(புலம்பெயர்ந்த)இந்த மேல்நிலைப் புலிப்பினாமிகளையும், அந்த தேச பக்தர்களது தியாகத்தையும் இருவேறலகாகப் பார்க்கவேயில்லை!

நமது போராட்டம் தோல்விற் சென்றபோதும், அதை திசைதிருப்பிச் செல்நெறியில் மாற்றத்தைக் கோரியபோதெல்லாம் அதை எதிர்த்துத்"துரோகி"சொல்லி அடிமட்டப் புலித் தேசபக்த இளைஞர்களைக் களப் பலி கொடுப்பதுவரை இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்களைக் கட்டிப்போட்ட கயவர்கள்தாம் மீளவும், நமது போராட்டத்தை(இனவாதச் சிங்கள அரசினது நிறுவனப்பட்ட தமிழ்பேசும் இனத்துக்கெதிரான ஒடுக்குமுறையை)த் தொடரப் போவதாகவும்,புலம்பெயர்ந்த இளைஞர்கள் தம்மை அவற்றோடு இணைத்துத் தார்மீக ஆதரவைத் தரவேண்டுமெனக் காசு பறிப்பதில் இந்த இளைஞர்களைக் கட்டிப்போடுவதில் யாருடைய நலன்கள் காக்கப்படுகிறது?

இந்நிலையுள்,ஆளும் இலங்கை அரசசினது ஆளும் வர்க்கத்துக்கிசைவாக மீளவும் தகவமைக்கப்படும் இந்தச் சதி வலையை அறுத்து நாம் சரியான பாதையோடுதாம் கருத்தியலைப் பரப்பவுதிலிருந்து புதிய நடைமுறைகளை நோக்கிய சாத்தியத்தை எதிர்பார்க்க முடியும்.

அந்தச் சாத்தியமானது நிலத்தில் நிலைகொண்டுள்ள சிங்களவொடுக்குமுறை வன்ஜந்திரத்துக்கெதிராகத் திடமாக மக்கள் எதிர்த்தெழுவதில் புதிய நம்பிக்கைகொண்டிருக்கிறதென்பதால்,அதை நிலைப்படுத்தித் தகவமைப்பதில் நமது இளைஞர்களது புதிய பரிமாணமே அவசியமானது.

இந்தப் புலத்துப் புலிப் பினாமிகள்பின்னால் கொடி பிடிப்பதைவிட நாம் வாழும் தேசத்து முற்போக்குச் சக்திகளை அண்மிப்பதும்,நமது தேசத்தின் இன்றைய நிலையில் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கான புதிய திசைவழிகளைக் கண்டடையவும்,அதைத் தொடர்ந்து வெகுஜனமட்டுத்துக்கு நகர்த்துவதிலும் இந்த இளைஞர்கள் செயற்பட முடியாதிருப்பது எதனால்?

தொடர்ந்தும் ஏகாதிபத்தியத் திசைவழியில் நமது விடுதலைகுறித்துக் கனவுகொள்வதில் நாம் இவர்களால் பழிவாங்கப்படும் சுயாதீனத் தேசத்து மக்களது சமீபகால அவலத்தையும்,பாலஸ்தீன-குர்தீஸ் மற்றும் நேபாள மக்களதும் விடுதலைiயும் அவமதிக்கின்றோம்.

நாம் தோழமைகொள்ளும் நட்புத் தேசியவினங்களையெல்லாம் தட்டிக்கழித்துவிட்டுத் "தேசங்கடந்த தமிழீழ அரசு"-பிரதமருக்குப் பின்னால் வழிப்பாட்டுத் தனமானகக் கும்பிடு போடுவதில் எந்த மார்க்சியத்தைகொண்டு நாம் நோட்டுக்களைச் சொருகுவது?

என்னைப் பொறுத்தவரையும், நான் மார்க்சியத்தை ஒரு வாய்பாட்டுரீதியாகவொப்பிப்பவன் அல்ல!அதன் சமீபத்திய புதிய பரிணாமங்களைக்கூடச் சேர்த்தே நகர்த்தவதில் இந்த இளைஞர்களை நிராகரிக்வேண்டியவர்களை நிராகரித்துவிட்டு, மக்களது எதிர்ப்புப் போராட்டங்களை அரசியற்படுத்தும் சர்வதேச உரையாடல்களையும் செயற்பாட்டையுமே கோரச் சொல்கிறேன்.


பிரபாகரனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய விடுதலைக்கு எதிரானவர் என்று எங்கும் சொல்லவில்லை!அவர்,விதேசிய வாதச் சக்திகளைப் பின் தொடர்ந்ததையும்,அவரது நம்பிக்கையையும் தான் அவரது பெயர் கொண்டு உரையாடுகிறேன்!

அவரது போதாமையால் முழுமொத்த மக்களது தியாகமும் அவரது முடிவோடு அழிக்கப்பட்டத்தன் குறியீட்டையே அவரைச் சொல்லி இனங்காட்டுகிறேன்.

இங்கே,எந்த இயக்கவாத மாயையும் நான் விரும்பி ஏற்கவும் இல்லை,அல்லது, தம்மைத்தாம் மார்க்சியர்கள் எனப் பசப்பும் இரயாகரன் கூட்டத்தைப்போல் மார்க்சியமே தெரியாமல் கிளிப் பேச்சையும் பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை!

புதிய திசைவழியும்-செல்நெறியும்நாடி(அவசியத்தின்பொருட்டு),இந்தப் புலம்பெயர் முன்னேறிய-பின்னேறிய(இயக்கவாத மாயைக்குட்பட்டவர்கள்) இளைஞர்கூட்டம் ஒரு தெரிவுக்கு வந்தாகவேண்டும்.அஃது,இன்றிருக்கும் புதிய உலகவொழுங்கில் அதற்கெதிரான எதிர்ப்புப் போராட்டங்களைச் சளையாது செய்யும் போராட்டத்தோடு, தம்மையும் இனங்கண்டாக வேண்டுமென்பதே எனது அவா!

இதைவிட்டுத் " தலைவர் வருவார்!என்றோ அவர் விடுதலைக்கான போரை மீளத் தகவமைத்துத் தமிழ் தேசத்தை விடுவிப்பார்" என்பதில், நமது ஆற்றல்களைச் சிதைக்கும் கருத்தாடலைத் தொடர்ந்து அநுமதிக்க முடியாதாதன் காலத் தேவையிலேதாம் பிரபாகரனது மரணத்தை மறைப்பது தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்யும் துரோகமெனச் சொல்கிறேன்.

வரலாற்றுவெள்ளத்தில்,நீங்கள் உரைத்தபடி, பிரபாகரனது அனைத்து தவறுகளோடும் அவர், தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள அரசின் இனப்படுகொலைக்கெதிரான தனது சக்திக்குட்பட்ட வகையிற் போராடிய ஒரு குறியீடென்றுஞ் சொன்னேன்.

விக்கிப்பீடியாவில் பிரபாகரனது வாழ்க்கைக் குறிப்பைச் சரி செய்து"பிரபாகரன் தமிழ்த் தேசியவிடுதலையின் குறியீடு" என்றும்,தமிழ்மக்கள்மீது சிங்கள இனவொடுக்குமுறை நிகழும்வரை அவர் தமிழ்மக்களது விடுதலையின்மீட்பர் என்றும் நானே திருத்தி எழுதினேன்.

இதுவரையானது அனைத்து இயக்கவாத அமைப்புகளுக்குட்பட்ட சிந்தனைத் தடங்களும், இருக்கும் மக்களது அரசயில் வாழ்வை அந்நியர்களுக்கு ஏலமிடும் அரசியற் போக்கிலிருந்து விடுபட வேண்டிய வகையிற்றாம் ஒரு உரையாடலது தேவையை இப்படியாகவும் உரையாடுவதென நானும் பல இடங்களில் செய்து, கல்லடிபட்டும் தொடர்வது செயற்போக்கில் வந்தடையும் நடைமுறைக்கு இறங்கும் ஒரு முன் நிபந்தனையெனக் காண்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2011

Sunday, November 06, 2011

வர்க்கங்களைக் கடந்து, உலக மக்கள்...

ஊடக வலுவும்,மக்கள் தோல்வியும்.

ற்போதைய இலிபிய யுத்தத்தில் அந்நியச் சக்திகள் யாவும் அறம் பற்றியும்,மக்களால் தோர்ந்தெடுத்த ஜனநாயகம் குறித்தும் தர்மம் பேசியபடி, உடனடி சமாதானம்-ஒப்பந்தமென அரசியல் அரங்கைக்கூட்டிப் பேசுவதன் தொடர் நிகழ்வில் அரங்கேறும் பூகோள வியூகம் என்பது தத்தமது தேசங்களுக்கான மூலவளங்களைக் கொண்டிருக்கும் தேசங்களையும், அதன் ஆட்சியையும் தமக்குச் சார்பானதாக மாற்றவும் அதன் வாயிலாக மூலவளத்தைத் தங்குதடையின்றி பெறுவதற்குமான அரசியல் நாடகத்தில், அப்பாவி மக்களை அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் யுத்தத்தைத் தொடக்கிக் குருதியாறைத் திறந்தபின்பு உணவுப் பொட்டலத்துடன் தமது நோக்கங்களைப் பெறுவதற்காக இயங்கும் தேசங்களையும் நாம் இலகுவாகப் பார்க்கின்றோம்.இவற்றையெல்லாம் மக்களுக்கான ஜனநாயகப்படுத்தலெனப் பெரும் ஊடகங்கள் தினமும் சொல்கின்றன.

என்றபோதும், அமெரிக்க அரசியலானது மிகவும் இக்கட்டானவொரு சூழலுக்குள் வந்துவிட்டது.இதன் ஆதிக்கம் தொடர்ந்து நிலவுவதற் கானவொரு உலக அரசியல் பதட்டம் மிக அவசியமானது. இதன் தொடர் நிகழ்வார்ந்த வியூகத்தில் அமெரிக்க அரசானது புதிய,புதிய யுத்தக் களங்களைத் திறக்கிறது.இந்த யுத்தக் களங்களை நியாப்படுத்தும் துறைசார் கல்வியாளர்களும்,பெரும் ஊடக நிறுவனங்களும் அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளது லொபிகளாக மாற்றப்பட்டுக் கல்வி துறையே பெரும் ஊழற்கூடமாக மாற்றப்பட்டுள்ளது.

தொடரும் அரபுலக மற்றும் ஆபிரிக்கக் கண்ட யுத்த முகாம் அனைத்தும் மூன்றாவது உலக யுத்த வடிவமாகும்.வடிவத்தில் புதிய வகை உலக யுத்தமாகும்.இவ் யுத்தமானது கடந்த முதலாவது,இரண்டாவது யுத்த வடிவதைத் தகர்த்து இன்றைய நிதி மூலதனத்துக்குத் தலைமைதாங்கும் பெரு வங்கிகளது தலைவர்களது புதிய வடிவமாகும்.இதைப் பழைய பாணியில் புரிந்து கொள்ளவே முடியாது.

இங்கே புதிய வகை யுத்தக் கூட்டணியானது நேட்டோ தலைமையில் இயங்கும்போது அது உலகு தழுவிய யுத்தக் கூட்டணியை மேற்குலகத்துக்கு வழங்கியுள்ளபோது,சுயாதீனமான சிறிய தேசிய அரசுகள் இத்தகைய கூட்டணியால் நிர்மூலமாக்கப்பட்டுக் கொள்ளை யிடப்படுகிறது.இந்த யுத்தங்களுக்குப் பின்னால் மேற்கு மூலதனத்தின் இன்றைய சரிவுகளைத் திட்டமிட்டுச் சரி செய்வதற்கான உலகக் கொள்ளையில் அடுத்துப் பலியாகப்போகும் ஈரான் தேசத்தை அம்போவெனக் கைவிடப்போகும் சீன-இருஷ்சிய வியூகம் ,மேலும் வலுவான பொருளாதார ஒப்பந்தகங்களை மேற்கிடமிருந்தும், அமெரிக்காவிடம் இருந்தும் எதிர்பார்க்கும்போது,இருவேறு துருவமாக இருந்த மூலதன வர்க்கமானது கூட்டாகக் கொள்ளையிடும் குவிப்புறுதியீனூடாகச் சிறிய தேசங்களைப் பலியிட்டுத் தமது நலன்களை அடைவதாகவே நான் கணித்துக் கொள்கிறேன்.


இன்றைய பொருட் குவிப்பின் தொடர்ச்சியில் ,உலகத்துள் நிலவும் எரிபொருள் இருப்பைத் தமதாக்கும் முழுமுயற்சியில் அமெரிக்க வல்லாதிக்கும் முனையும் ஒவ்வொரு நகர்விலும் ஐரோப்பாவினதும், குறிப்பாக ஜேர்மனியினதும் ஒத்துழைப்பு அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கிசைவாகவே இருந்துவருகிறது. இதன் தொடர்ச்சியான உலகப் பங்கீட்டு அரசியல்-போர் வியூகங்களுக்கு மேற்கு ஐரோப்பிய எரிபொருள் தேவையும் மிக அவசியமான அமெரிக்க சார்பு அரசியலை மிகக் கண்ணியமானவொரு மக்கள் நல அரசியலாக ஐரோப்பாவுக்குள்ளும் அதன் மக்கள் கூட்டத்துள்ளும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் திணித்து வருகின்றன.இவை, மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் குழிதோண்டிப்புதைக்கின்றது.ஒரு புறம் வளர்ச்சியடையும் தேசங்களை யுத்த்தால் கொள்ளையிட்டுச் சிதைப்பதும்,அதேபோன்றல்லாது தமது தேசத்து மக்களை நிதி மூலதனதிரட்சியின் வழியாக எழும் சட்டங்களால் கட்டுப்படுத்தி, அனைத்து வகைகளிலும் மூலதனத்துக்கீழ் அடிமையாக்குவதாகும்.அதன் தொடர்ச்சியே கிரேக்க அரசுக்கு உதவி-ஐரோப்பியக் கூட்டமைப்புக்கும், யுரோ நாணயத்துக்கும் அமைக்கப்பட்ட நிதிக்காப்பு[Euro-Stabilitätspakt ] குடையாகும்.

உலகத்தில் சமாதானம்,அமைதி,ஜனநாயகம் மற்றும் ஸ்திரமான அரசியல் நிலவும்போது அமெரிக்கப் பூகோள வியூகமும் அதன் வாயிலான அதன் கேந்தர அரசியல் ஆதிக்கமும் இல்லாது போகும் என்பது உலகறிந்த அரசியல் அறிவாகும்.

இன்று, இடம் பெறும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் [அரபுத் தேசங்களிலும்,ஆபிரிக்காவிலும் ] மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் அடாவடித்தனமான ஆட்சி மாற்றங்கள், நாடு பிடித்தல்கள் யாவும் உலகத்தில் அதீதமாகத் தேவைப்படும் மூலப்பொருள்களுக்கான அரசியலாக விரிகிறது.இதன் தொடர்ச்சியாக நாம் பல் வகையான யுத்தங்களைப் பார்த்துவிட்டோம்.

அமெரிக்க இராணுவவாதம் மேலும் விரிவடைய-விரிவடைய அதன் ஆதிக்கம் தொடர்ந்து அந்தத் தேசத்தை கடன் நிலைக்குள் தள்ளும். இது, உலகத்தை இன்னும் வேட்டைக்குட்படுத்தும் அரசியலையே அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு வழங்கும்.எண்ணைவளத் தேசங்களைக் கொள்ளையடிப்பதால் வரும் உபரியைக்கொண்டு தனது இராணுவத்துக்குத் தீனீபோடும் அமெரிக்க அரசானது, உலகத்தைத் தனது ஆதிகத்துக்குள் இருத்தும் குறைந்த காலவகாசத்தையாவது இந்த இலியக் கொள்ளையால் அதன் ஆளும் வர்க்கத்துக்கும் வழங்கிவிடுகிறது.

இனிவரும் காலங்களில் அமெரிகத்தலைமையில் இஸ்ரேலிய அரசின்வழி நடை பெறப்போகும் ஈரான்மீது நடாத்தப்படும் யுத்தமானது,பிறிதொரு தடைவையில் அணுயுத்தமாகச் சீனாவை அண்டும்போது, இந்த உலகத்தின் இறுதிக்கட்டம் நெருங்கி விடுவதற்கான புள்ளிகளே தென்படுகின்றன.

இதைத் தடுக்கும் எந்த அரசியல் ஆற்றலும் பொருளாதாரக் கூட்டு ஒத்துழைப்பால் வல்லரசென இருக்கும் மாற்று முகாம்(சீனா-இருஷ்சியா)போன்ற தேசங்களுக்கு இல்லாதாகப்பட்டு, கடந்த இலிபிய யுத்தத்தில் இது உறுதிப்பட்டுள்ளது.


இத்தகைய புள்ளியை உள்வாங்குவதே கஷ்டமாக இருக்கும்போது இந்தப் பலாத்தகார யுத்தக் கூட்டணிக்கு எதிராக உலக மக்கள் அணி திரள்வதைத் தவிர வேறெந்தத் தேச அரசும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாதென்பதற்கு இலிபியாவே ஒரு சாட்சியாக இருக்கிறது.


ஆனால்,உலக மக்களைக் கட்டிப் போடும் மாபெரும் ஊடக வலுவைக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் மூலதனக் கும்பலிடம் தோல்வியுற்றது உலக மக்களைத் தவிர வேறெந்தத் தேசமும் இல்லை!

மக்களே தோல்வியில் நிற்கிறார்கள்.அவர்களை மீட்பதென்பது இன்றைய நவீன ஊடக வலுவை எவர்கள் கைப்பற்றுகிறார்களோ, அவ் வர்க்கமே இறுதியில் வென்றவர்கள் ஆவர்.

வர்க்கங்களைக் கடந்து, உலக மக்கள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.உலகப் பெரும் மூலதனமானது ஒரு சில பெருவங்கித் தலைவர்களது கட்டுப்பாட்டில் ஒரு சிறிய சேவைத் துறையைக்கொண்டு இயக்கப்படுகிறது.இங்கே, வர்க்கப் போராட்டம் என்பது மீள் பார்வைக்குட்படுத்தப்பட்டு,மூலதனத்தாற் பலாத்தகாரப்படுத்தப்படும் தேசிய மூலதனமுடையவர்களும் [ இன்று கிரேக்கத்தில் பழிவாங்கப்பட்ட உடமை வர்க்கத்தைக் கவனிக்க ] பழிவாங்கப்பட்ட உழைப்பாளருடம் கை கோற்பதைத்தவிர வேறு வழியில்லை. வங்கிகளைச் சோவியற்றாக்க வேண்டும்.இல்லையேல் அவை முழுமொத்த மக்களையும் வேட்டையாடிவிடும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.11.2011

Thursday, November 03, 2011

தலித்து மக்களுக்குத் தூக்குக் கயிறு!

யாழ் மையவாதக் குறுந்தேசியம்: வென்றிருந்தால்அஃது, தலித்து மக்களுக்குத் தூக்குக் கயிறு!

புலிகளது கால் நூற்றாண்டுப் பாசிசச் சேட்டைகளுக்குப் பின்பான இன்றைய இலங்கை அரசியலில், பற்பல சக்திகளின்,வர்க்கங்களின் நலன்கள் முட்டிமோதுகின்றன.இங்கே பிராந்தியத் தரகு முதலாளித்துவ நலன்கள் ஒவ்வொரு வழிகளில் தத்தமது நலனின் பொருட்டுப் புதிய புதிய கூட்டைப் பெறுகின்றன.அவை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமான முறைகளில் பயன் படுத்தித் தமது நலனைப் பெற்றுக்கொண்டு மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதாகக்கொள்ள முடியுமா?


புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது.இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கச் சரணாகதியும்,புலம் பெயர் புலிப் பாசிஸ்டுக்களது வெட்டுக்கொத்தும்-கொலையும்இதைப் பலமாக உறுதிப்படுத்துகிறது.


இன்றைய இளந் தலைமுறையினர்,பாசிசப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை-ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலித் தேசியவாதமும் தமிழரின் சுயநிர்ணய வுரிமையைக் களைந்தெறிவதற்கான வொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக் கொண்டுள்ளது.இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்கருத்தாளர்களை(புலி இசத்துக்கு மாற்றான கருத்து),தலித்துவ மக்களை-இஸ்லாமிய மக்களை "தமிழ்த் தேசியத்துக்கு" எதிரிகளாகச் சுட்ட முனைவது,சதியுடைய மொழிவாகும்.


இன்றிந்தச் சதியானது புலிகளது அனைத்துவகைக் கறைபடிந்த காட்டுமிராண்டித் தனங்களையும் "தமிழ் தேசியத்தின்-விடுதலையின்" பெயரால் கழுவிப் புனிதச் செயலாக்கி விடுகிறது.

தமிழ்பேசும் தரப்பினருக்கு வெளிப்படையான அரசியலை பொதுவெளியில் வைத்து உரையாடுவதன் பண்புக்கு இலக்கணப்படுத்தல் புரிந்தபாடாக இல்லை!காலதாமதமானாலும்,உண்மைகளை வரலாற்று வெளிச்சத்தில் வைத்துக் கற்றுக்கொள்ளும் மனம் உருவாகாதவரை,தமிழ் பேசும் மக்களது பரந்த பொதுவயப்பட்ட கூட்டுணர்வை ஒரு தெரிவான இலக்கு நோக்கிச் செலுத்த முடியுமா? மக்களாண்மை என்பதை இன்றைய ஜனநாயகமெனச் சுருக்கி வாசிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.மேற்கு வழிப்பட்ட கிரேக்க "டெமோக்கரட்டி" [Demokratie ]ஒரு குழுவது திறன்சார் அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் ஒரு பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை அவர்களுக்காக்குவதில் இந்த "Demos"(மக்கள்) kratía (அதிகாரம்) வெளிப்படுத்தியது.அதுவே,இன்னொரு வாசிப்பில் Aristoteleskratie [...]ஆகவும் இப்போது புரிவதில் மேற்கைக் தள்ளி இருக்கிறது.நமக்குப் புலிவழியான தீவிர தமிழ்த் தேசியத்தின்பாலான அகவிருப்பு அதிகமாகிக்கொண்டிருக்கின்றதில் உலகக் கண்ணோட்டத்தைச் சில அதிகார முனைகளில் வைத்து ஒருவரைச் சார்ந்து"நலன்"களை அடைதல் என்ற "அதி புத்திசாலித்தனம்" பெருக்கெடுக்கிறது.


மக்கள் வலுவுற்றிருந்தபோது அனைத்து இயக்கங்களும் வலுப்பெற்றுத் தமது படைவலுவைத் தேடிக்கொள்ளும் மனித ஒத்துழைப்பு நிலவியது.அவ்வண்ணமே அவைகள் ஓரளவு உறுதியுடைய அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தன!இன்று, மக்கள் பற்பல அரச ஜந்திரங்களுக்குள்,அதன் ஆதிக்கத்துக்குள் பிளவுண்டு கிடக்கின்றார்கள்.இத்தகைய பிளவுகளும் சர்ச்சைகளும் பல்வகைக் கட்சிகளுக்குள்ளும்,அவைகளது அமைப்பாண்மைக்குள்ளும், அதன் அகப் புறச்சூழலிலும் இன்று வலுவுற்றிருக்கிறது.இது ஒருவகைப் புலி இயக்கக் கண்ணியம் பேசி,மக்களை முட்டாளாக்கியபின், தமிழ் மக்களின்(கவனிக்க: மக்களது இழப்புகள்) இது வரையான இழப்புகளைத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி வருகிறதும்,கூடவே தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அழித்தொழிப்பதற்கான இலங்கையரசின் நகர்வுகளைச் சட்டவாதத்துக்குள் காப்பதற்கும் முனைகிறது.நாடுகடந்த தமிழீழ அரசு என்ற மாய மான் இந்தப் புள்ளியின் தொடக்கக்கமென்பது பலருக்குப் புரிந்தும் இருக்கலாம்.

வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகமென்ற கோட்பாட்டை எப்போதோ நிராகரித்த விட்ட கிழக்கு மாகாண மக்களது அரசியல் இலக்கு, தமிழ் மக்களைப் பிரதேசவாரியகப் பிரித்தெடுத்துவிட்டது.இந்தப் பிரிப்புக்குப் பின்பான தலித்து மக்களது வரலாற்று நியாய வாதமானது இன்னும் அதிகமாக யாழ் மையவாதத்துக்குச் சாவு மணியடிப்பதில் ஓரளவு வெற்றி பெறுமானால் புலிகளது கருத்தியலானது வரலாற்றில் அழிந்து காணாமற் போகும்.இத்தகையவொரு சூழலை எதிர்பார்த்திருப்பதல்ல மக்கள்-குடிசார் அமைப்புகளது இலக்கு.பரந்துபட்ட மக்களுக்கு எதிரான மையவாதச் சிந்தனைகளது நிறுவனத் தகர்வுக்குக் கட்டியம்கூறிய புலி அழிப்பானது,பெருமளவில் தமிழ்பேசும் தாழ்த்தப்பட்ட மக்களது வெற்றி என்பதிலும் பார்க்க,அவர்களது கழுத்துக்கு வரவேண்டிய தூக்குக் கயிறு, இற்றுப்போய் அறுந்தழிந்ததெனக் கருதிக்கொள்ளலாம்.

இதைப் புரிந்துகொள்வதாயின்,தமிழ்ச் சமுதாயத்தின் பொதுவான அரசியலுக்கு அப்பாற்பட்டுக்கிடக்கும் சங்கதிகளை மனமுவந்து பார்த்தாகவேண்டும்.

இறுதியாகச் சொல்வதானால்,தமிழ்ச் சமுதாயத்தினது பாரிய பிளவுகள் சாதியாகவும்,பிரதேச ரீதியாகவும்,பெண்ணொடுக்குமுறை மற்றும் இனவாதமாகவும் நிலவுகிறது.அதைப் பெரும்பாலும் சரிவரப் பயன்படுத்தும் இலங்கையின் இராஜதந்திரமானது புலிகளின் படையணியைப் பலியெடுத்து இதை வலுவாகச் சாதித்துள்ளது.இந்த வெற்றியானது புலிகளின் இயக்க நலனை பாரிய முறையில் சிதைத்து அவர்களை வரலாற்றிலிருந்து தொடைத்தெறிந்திருப்பினும் இந்தச் செயலூக்கத்தின் பின்னே நிலவும் வரலாற்றுணர்வானது கடந்த சிங்களப் பொற்காலக் கனவுகளின்வழி இயக்கமுறும் இன்றைய அரசியல் இலக்குக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறதென்பதையும் சுட்டிக் காட்டலாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.11.2011

Saturday, October 29, 2011

அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம்

மக்களைக் காத்தல்: ஜனநாயகம்.

இதுவரைகாலமாக...


உலகம், "சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்;" (dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!

கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன."உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen werden,das Friedliche Zusammenleben der Voelker zu stoeren,insbesondere die Fuehrung eine Angriffskrieges vorzubereiten,sind verfassungswidrig.Sie sind unter Strafe zu stellen.-Artikel 26 vom grundgesetz der B.R.D.)ஆனால் இத்தகைய முதலாளித்துவ நாடுகள் மக்களை மடையர்களாக்கும் சட்டங்களை இன்னும் மக்களுக்கான நலனோடு சம்பத்தப்பட்டதாகக் காட்டிக்கொள்ளும்போதே தமது வர்க்க நலனைக் காக்கப் போருக்கு மக்களை அணிதிரட்டும் சட்டத்தையும் அதற்கு நேரெதிராகக் கொண்டிருக்கும்போது ,இது மிகக் கேவலமான பித்தலாட்டமாகிறது.

"Arikel 87a feststellt,dass der Bund Streitkraefte ausschliesslich zur VERTEIDIGUNG aufstellt.Und dass dies auch eine Wehrpflichtarmee sein kann,dafuer gibt der Artikel 12 a gruenes Licht:>>Maenner koennen vom vollendeten achtzehnten Lebensjahr an zum Dienst in den Steitkraeften...verpflichtet werden." என்னவொரு இழிமையான சட்டம்!இத்தகைய சட்டங்கள் சொல்வதென்ன?"ஜேர்மனிய அரச அடிப்படைச் சட்டம் 87அ பிரிவு கூறுகிறது:யுத்தப்படைகளானவை தேசப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.இது சட்டப் பிரிவு 12அ வினது கூற்றுக்கு பச்சைக் கொடியைக் காட்டி,பதினெட்டு வயதடைந்த இளைஞர்களை கட்டாய இராணுவத்துக்கு ஆட் திரட்டுவதைக் கடமையாக்கிறது. இங்ஙனம் மேலும் கீழும் முரண்பாட்டோடு சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் நாடுகள் தமது நலன்களை மக்களின் நலன்களாக்கிப் படம் காட்டும் இன்றைய தருணத்தில் ஒடுக்கப்படும் இனம் தனது தலைவிதியைத் தாமே நிர்ணியிப்பதைப் பயங்கரவாதமென்கின்றன.தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வன்மம் நிறைந்த பரப்புரைகளால் தமது மனிதவிரோத முகங்களை மறைக்க முனையும் இத்தகைய முதலாளித்துவ நாடுகள்தாம் எமது மக்களைத் தமது கால்களில் கட்டிப் போடுவதற்காகச் சமாதான நாடகம் ஆடுவதும்,முடியாதுபோனால் தமது படைகளை அனுப்பி எம்மைக் கொன்று குவித்து வருகிறார்கள்.

இன்றைய இலிபியா யுத்தம் வரையான மக்களைக் காத்தல்-சர்வதிகாரத்தை ஒழித்தல் என்பதிலிருந்து பண்டுதொட்டுப் புரியும் அரசியல் அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் எதுவுமில்லையென்றாகிறது.இதைக் கார்ல் போப்பரது உரையாடல்கள் பலதில்,அவரது தாய் மொழியில் நான் புரிந்துகொண்டவை.




சில விதிமுனைப் பயன்களில் மிக நெருக்கமானது பிரிடிறிக் காய்க்கினது[Friedrich A.Hayaek : Der Weg zur Knechtschaft ] எழுத்துவழியான நவலிபிரலது தாரளமயக் கோட்பாடு.(Sir Karl Raimund Popper) துணைக்கழைத்து மார்க்சியம் என்பது "பெரும்பாலும் நேர்கோட்டுத்தன்மையும் ஒருவித கருத்துமுதல்வாதமும் நிறைந்திருபதாகச் சொல்கிறார்".

கார்ல் போப்பர்,திறந்த சமுதாயத்தின்(After the Open Society) பிரதிநிதி,அது கத்தோலிக்க அறக்கட்டளைகளால் கௌரவ"டாக்டர்"பட்டங்கள் பல பெற்றவராச்சே!ஆக,கார்ல் போப்பர் சொன்னால் அது நிச்சியம் கடவுள்(Das offene Universum) சொன்னதாகவே இருக்கும்.
மார்க்சியம் குறித்த மதிப்பீடுகளுக்குச் சுவர் எழுப்பியெவரும் வைக்காதவரை அது கல்லடிபட்டுக்கொண்டுதாம் இருக்கும்.அதுதான் சிறப்பென்பதால் - கார்ல் போப்பரின் தாய்மொழி வாயால் -நம்மவரும் கேட்பதற்கானவொரு ,போப்பரது ஏகாதிபத்தியச் சார்பு மொழியாடலைத் தரமுடியும்:"Popper bezeichnet Marx als bedeutenden Ökonomen und Soziologen" (-Die offene Gesellschaft und ihre Feinde :211)இப்படிச் சொன்னவர்கள் ஆயிரம் கோடிப்பேர்கள்.

இப்போது கார்ல் போப்பர் சொன்னதால கார்ல் மார்க்ஸ் அதி முக்கியமான சமூகப் பொருளியலாளனாக நாங்க எடுக்கத்தாம் வேணுமென்றில்லை.அவர் சொன்னதற்கு அப்பால் சேறடிப்பதற்கான தோற்று வாய் நம்ம கார்ல் போப்பருக்கு எப்படி உருவாகுதென்பதற்குச் சுவாரிசியமான நிகழ்வொன்று வந்து தொலைகிறது.வீனில் காவல் துறைகஇகும் கம்யுனீஸ்டுக்களுக்குமான கெடுபிடியில் ஒன்பது காவல் துறை நாய்கள் செத்தவுடன்(;(wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker)புட்டுக்கொண்டு வந்த அவரது திறந்த சமுதாயத்தின் தெள்ளிய மனது கேகலின் கருத்தியல் மனதைப் பின்பற்றிய கார்ல்மார்க்சிடமும் இத்தகைய போக்கு நிலவுவதாகச் சொன்ன கையோடு நம்ம எமக்கும் அரிக்கத் தொடங்கிவிடுகிறது.


இவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு அருமையான வாக்கியத்தை கார்ல் இறாய்முண்ட் போப்பரே சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்:"Wers nicht einfach und klar sagen kann, soll schweigen und weiterarbeiten bis erst klar sagen kann“
"எவருக்கு, இலகுவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லும் தெளிவில்லையோ அவர் மௌனித்தபடி தொடர்ந்து கற்றுத் தெளிவாக உரைக்கும் வரை மௌனித்திருப்பது உத்தமம்" என்பது நாம் ஏற்பதுதாம்.

இஃதின்று, முக நூல் வரைவாளர்களுக்குச் சாலப் பொருந்தும். குறிப்பாகத் தேசியவிடுதலைப் பொழிப்பாளர்களுக்கு.-பெரிதும் பொருந்தும்-ஏனெனில், கார்ல் போப்பரே அவிட்டுவிட்ட தத்தவங்களுக்குக் கருத்துமுதல் வாதம்தாம் காரணமாகிக் கிடக்கிறது.அவரது முன்று உலகத்திலும் முழுமுதலாய் விரிவது :

Welt 1, das ist die physikalische Welt
Welt 2, die Welt der individuellen Wahrnehmung und des Bewusstseins
Welt 3, die Welt der geistigen und kulturellen Gehalte, die vom Einzelbewusstsein unabhängig existieren können (z. B. die Inhalte von Büchern, Theorien oder Ideen)

இந்த மூன்று உலகத்திலும் முடிவாக விரிவது கருத்தியலால் உந்தப்பட்ட முடிவுகள்தாம்.

இந்தப் பொருளுலகத்துள் பௌதிக அடையாளங்கள் முட்டிக்கொள்ளும் எல்லாக் காரணத்தினதும் முடிவுகளும் கார்ல் போப்பர் குறிப்பிடுவதுபோன்று, உண்மைக்கு அருகினில் என்ற சங்கதியுள்தாம் கண்ணிகளைப் புதைத்து வைத்திருக்கிறது.

இந்தக் கதையில் மார்க்சியத்தைக் கருத்துமுதல்வாதம் என்பதின் தொடர் பரிணாமங்கள் நாம் அறிவதில் அவசியமொன்றுண்டு.

அது எப்பவும்போலவல்ல.

இப்போதைய தேவையின் தொடர் நிகழ்வுகள் ;


உணர்வினது தனித்துவமான உண்மை எதுவென்று நாமும் புரிந்துகொள்வதற்கு நீண்டவொரு சமாந்திரப் பாதையொன்று விஞ்ஞானத்தில் கொட்டிக்கிடப்பதால் குறுக்குப் பாதை எதற்கு?

உலக உயிரினதும் பண்பாட்டினதும் நிகரத்தாண்டவம் தனித்துவமான உணர்வை உற்பத்தியாக்குவதன் பருமம் இன்றைய இந்த உலகத்தின்-குறிப்பாக மேற்குலக இன்னுங் கொஞ்சம் தாண்டி நம்ம அமெரிக்க மாமாக்கள் சொல்வதுபோல்(Hier möchte ich noch eine weitere Aussage Poppers hinzufügen, die lautet: `Es kann keine vollkommene Gesellschaft geben.´உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயம் கிடையவே கிடையாது.

(Vgl. das `Nachwort´ zu Popper/Lorenz: Zukunft (Anm. 29), S. 138. ... Und er fügt hinzu, S. 140: `Wenn du eine vollkommene Gesellschaft anstrebst, so wirst du sicher gegen die Demokratie sein.உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயத்தை நோக்கி நீ பாடுபட்டால்-போராடினால் நிச்சியமாக ஜனநாயத்துக்கு எதிராகக் காரியமாற்றுகிறாய்´)"

"நாங்கள் திறந்த தனித்துவமான சமுதாயம்"அதைத் துலைப்பதற்கே காரியமாற்றும் இஸ்லாமியப் பயங்கரவாதம்...கயிறுவிடும் தளம் கார்ல் போப்பரின் தேட்டம்தாம் .இதுவே,இன்றைய இலிபியா யுத்தம் வரையான "மக்களைக் காத்தல்-சர்வதிகாரத்தை " ஒழித்தல் என்பதிலிருந்து பண்டுதொட்டுப் புரியும் அரசியல் அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் எதுவுமில்லையென்றாகிறது.

By ப.வி.ஸ்ரீரங்கன்

Sunday, October 23, 2011

"தமிழீழ விடுதலை"ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு.

"தமிழீழ விடுதலை"ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு.

ரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கி,வியாபித்து வருகிறது.

இந்த வியாபித்த விருட்ஷத்தின் முகிழ்ப்பானது புலிகளது விதேசியவாதப் போராட்டத்திலிருந்தே தோன்றிக்கொண்டதல்ல. மாறாக,காலனித்துவக்க காலக்கட்டதிலே கட்டியெழுப்பப்பட்ட பிரித்தாளும் தந்திரமும்,அதன்பின்பு,தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு, அரசியற் போக்குமே காரணமாகிறது.பண்டா செல்வா ஒப்பந்தத் தோல்வியிலிருந்து தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு,ஏகாதிபத்திய நிகழ்சி நிரல் அரசியலை இளைஞர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான, ஜே.ஆர்.ஜெயவர்த்தினா வின் ஆர்ப்பாட்டம்- கண்டி நோக்கிய பாத ஜாத்திரையும்,தமிழ்ப் பகுதியில் அமிர்த லிங்கத்தின்தலைமையில் சிங்களச் ஸ்ரீ எழுத்து அழிப்பு,சிங்கள எழுத்துப்பலகைகள் அகற்றும் போராட்டத்துக்கும் அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ.யின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது.

இந்த வரலாற்றில், புலிகள் வந்தடைந்த ஆயுதப்போராட்டமானது இறுதியில் இந்த நலன்களை வரலாற்றிலிருந்து புரிந்துகொண்ட ஒரு அரசால் பிளவடைந்த ஏகாதிபத்திய முகாங்களது பக்கச் சார்பிலிருந்து முடித்து வைக்கப்பட்டது.இந்த முகாங்களது பூடகமான முகாங்கள் மகிந்தாவை ஆதரித்தபோது அங்கே,இலங்கை முழுமொத்த மக்களது நலன்களைத்தாம் அவை தமக்குள் உட்கொண்டனவேயொழிய , தமிழ்பேசும் மக்களை மட்டும் மொட்டையடிக்கவில்லையென்பதை எவருணருவார்?


இங்ஙனம் புரிய மறுக்கும் புரிதலேதாம்,கியூப நாட்டுக் காஸ்ரோவையும், கடாபியையும் தமிழர்களது எதிரியாக இனம் காணுகிறது. இந்தப் பிளவடைந்த ஏகாதிபத்திய முகாங்களது பிரிவின் ஒரு தரப்புக்குத் தலைமைதாங்கும்சீனாவும்,ருஷ்யாவும் இலங்கை இராணுவத்தளபதிக்குக் கேடயம் வழங்கியதும்,புலிகளை அழிக்க உதவியதும்,புலிகள் இன்றைய அரேபிய அமெரிக்க அடியாட்படையாகச் செயற்படும் தருணங்களை ஏலவே இனங்கண்டதன் விளைவே!

அதாவது,புலிகள்,விடுதலை அமைப்பு அல்ல.அதுவொரு அந்நிய ஏகாதிபத்தியங்களது கைக்கூலி அடியாட்படையாகவே தென்னாசியப்பிராந்தியத்தில் வளர்ந்தது.அது,இந்தியப் பிராந்திய ஏகாதிபத்தியத்தின் தயவிலிருந்து விடுபட்ட தருணமானது மேற்குலகச் சார்புகொண்ட யாழ்பாணியத்தின் கருத்தோட்டத் திசையூக்கத்தின் வெற்றியாகவே புரிந்துகொள்ளத் தக்கது.இந்த வெற்றியைத் தோற்கடித்தபோது,புலிகள் வரலாற்றிலிருந்து தொடைத்தெறியப்பட்டனர் என்பதையும் வரலாற்று வெளிச்சத்தில் வைத்து ஆய்ந்துணரவேண்டும்.

இன்றைய இலங்கையில்,புலிகளது இராணுவ வாதம் தோல்வியில் முடித்துவைக்கப்பட்டபின்,மகிந்தாவால் பரப்பப்படும் ஒரே இனமக்கள்- ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து ஜனநாயகக் குறுக்கல் நிகழ்த்தப் படுகின்றன.எனினும்,இலங்கையில் வெளிப்படையான அரசியலைக் கோருவதற்கும்,அதை நிலைப்படுத்தவும் எதிர்க்கட்சிகள்,சுயாதீனச் சமூகக் கட்டமைப்புகள் இப்போதும் வலுவாக இருக்கின்றன.இது,புலிகளது அரச கட்டமைப்பிலோ அல்லது அவர்களது அமைப்பு மட்டத்திலேயோ இருந்திருக்கவில்லை!தம்மைத் தவிர வேறு அமைப்புகளோ,மக்கள் மன்றங்களோ இருக்க அவர்கள் அனுமதித்ததே கிடையாது.இதனூடாகத் தம்மைத்தாமே"ஏகத் தலைமை"என்றும் அழைத்து இதை உறுதிப்படுத்தினார்கள். சகோதரப்படுகொலையூடாக,மாற்று இயக்ககங்களை அவர்கள் அழித்தபோது,இந்தியாவின் நலன்களுக்கிசைவான பக்கத்தில்நின்று, தமிழ்பேசும் மக்களது விடுதலையைக் காட்டிக்கொடுத்தனர். அநுராதபுரத்தில் சிங்களக்கிராமத்தை; தாக்கி,பலவுயிர்களைக் கொன்று குவித்ததும்,முஸ்லீம் மக்களைக் கருவறுத்ததும்,இதன் தொடர்ச்சிகளாகும்.புலிகள் இந்தமட்டத்தில் ஒரு அடியாட்படைக் குரிய அனைத்துக் குணாம்சங்களையும் கொண்டிருந்தார்கள்.


வெளிப்படையான அரசியலைப் புலிகள் மறுத்ததன்விளைவே புலித் தலைவன் பிரபாகரனது சரணடைவும்,சாவும் இதுவரை மறைக்கப்படுகிறது.அது மட்டுமின்றி, எவரிடம்,எத்தனை கோடி மக்கள் சொத்துக்கள் முடங்கின,இறுதி வன்னி யுத்தக்கட்டத்தில் என்ன-எப்படி நிகழ்ந்தனவென்பதெல்லாம் இதுவரை எவருக்குமே தெரியாது.புலிப்பினாமிகள் அனைத்துத் தடயங்களையும் அழித்துவிட்டு,மக்கள் சொத்தைத் தமதாக்கித் தலைமறைவாகி விட்டனர்.இத்தோடு ஒப்பீட்டுரீதியாகப் பார்க்கும்போது இலங்கையின் அரச வடிவத்தின்மீதான விசாரணைகள் வெளிப்படையாக மேலெழும் தருணங்கள் அதிகமானவை.ஆனால்,புலிகளது வரலாறு,அவர்களது உறவுகள்,தவறுகள்,விடுதலையைக் கருவறுத்த சர்வதேசத் தொடர்புகள்,செல்வம் குறித்தெல்லாம் எப்போதும் எந்தத் தடயமும் கிடைக்காது.இது,பாசிசத் தகவமைப்பின்றி வேறென்ன?-மாபியாக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் இதிலிருந்து வேறுபாடுண்டா?

ஜனநாயகக் குறுக்கலது பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும்.புலிகள் ஏலவே ஜனநாயக விழுமியங்களை நசுக்கியபடித் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கிக் காயடித்த வரலாற்றிலிருந்து அவற்றைக் கற்றுணர்ந்த இலங்கை அரசானது புலிப் பாணியிலேயே இலங்கை மக்களை ஒடுக்கும்சட்டவாக்கத்தை, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அதிகாரத்தின்வழி கண்டடைகிறது.

சமூக வளர்ச்சியானது எப்பவும் முரண்பாடுகளாலேயேதான் தீர்மானிக்கப்படுகிறது.இத்தகைய முரண்பாடுகள் மனிதர்களின் உழைப்பினாலும் அதன் பங்கீட்டினாலுமே ஆரம்பமாகிறது.இந்தியத் துணைக்கண்ட மக்களினங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலனித்துவத்தின் அதீத பாச்சலே காரணமாகிறது.இதனால் சமுதாயம் படிமுறையான வளர்ச்சியை இழந்து,திடீர்ப்பாச்சலுக்குள் வீழ்ந்தபோது பழைய எச்சங்கள்"அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ-உள்ளகக்காலனிதுவ(சாதிய ஒடுக்குமுறை) அமைப்பாகத் தோன்றி புதிய இரகப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கிறது.

இனங்களுக்கிடையில் இனவாதக் குரோதத்தை வளர்த்தெடுத்து அதன்மூலம் தொழிலாள வர்க்கத்தைக்கூறுபோடும் திசையில், தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே தப்பானது.எனினும்,இன்றைய மகிந்தா குடும்பத்து ஆட்சியின் பரிணாமமானது இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவைவிட அதிகாரத்தில் இருத்திவைக்கப்பட்ட அந்த வர்க்கத்தின் ஆட்சி-கட்சி,கட்சித் தலைமையின் அதீத சுயநலப் போக்குகளுக்கும் இசைந்தபோவதான நலன்களை வெளிப்படுத்துகிறது.இதனால்,இலங்கையின் ஆளும்வர்க்கத்துக்கு நிகராக அதிகாரத்திலுள்ள தலைவனின் நலன்களும் மேலெளும்போது இரட்டிப்பான ஒடுக்குமுறைச் சூழலொன்று வன்முறை ஜந்திரத்துக்குள் எந்த விழுமியத்தையும் கோரிக்கொள்ள முடியாது.

தேசங்கடந்த நிதிமூலதனமானது, இன்னும் ஒருபடி மேலே போய் இலங்கை-இந்தியா போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளைத் தரகு முதலாளியமாகச் சீரழித்தபின் இந்த நாடுகளின் முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு-எச்சங்களாகக் காக்கப்படுகிறது.இத்தகைய எச்சமே இன்னும் இனங்களுக்கிடையிலான போட்டிகளையும்,தப்பெண்ணங்களையும் உருவாக்கி அதை வலுவான முறையில் ஆயுதமாகக் கைலெடுக்க முனைகிறது.என்றபோதும்,இலங்கை அரச வடிவத்துள் நிலைமைகளுக்கொப்ப மாற்றங்கள் நிகழ்ந்து வெளிப்படையான அரசியலைக் கோரக்கூடிய சூழல்கள் நெருங்கி வரமுடியும்.

ஆனால்,அந்த வெளிப்படையான ஜனநாயகக் கோரிக்கையை இன்றைய புலம் பெயர் மக்கள் மத்தியில் செயல்படும் புலிப் பினாமிகளிடம் கோர முடியாது.அவர்கள் வெளிப்படையான பிரபாகரனது மரணத்தையே மறைக்கும்போது,திரை மறைவில் நிகழ்த அரசியல் சதுரங்கத்தை-உறவை,அடியாட் தனத்தையெல்லாம் விபரிப்பார்களா?ஒரு பயங்கரவாத இயக்கத்திடம் இத்தகைய பண்புகளை இனம் காணமுடியாதென்பதற்குப் புலிகள் அமைப்பே உதாரணமாக இருக்கிறது.புலிகள்ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதனாற்றாம், இலங்கை அரச வடிவம்,அதன் ஜனநாயகப் பண்புகளிலிருந்து எதையுமே செரிக்காத சர்வதிகாரத்தன்மையை இலங்கைக்கே பாடமாகக் கற்பித்தவர்கள்.இதன் தாக்கத்திலிருந்து இலங்கைக் கட்சியாதிக்கம் விடுதலை பெறுவதற்கு நீண்ட காலமெடுக் குமாயினும்,அஃது, எப்படியும் மாறிய தீரவேண்டிய பொருளாதார நகர்வுகள் இலங்கையில் முகிழ்ப்பதானது இலங்கை மக்களது குடிசார் அமைப்புகளது மீள் வரவுக்கு ஏதுவாகவே இருக்கிறது.

இந்தவகையில்,புலிகள் அமைப்பு என்பது தமிழ்பேசும் மக்களது தொங்குசதை பிண்டங்களே.அதை அறுத்து எறியும் சத்திரச் சிகிச்சை செய்யவேண்டியது புலம் பெயர்ந்து வாழும் நமது மக்களது கடமைதாம். அதுபோன்றே,தமிழ் பேசும் மக்களது அரசியல் வாழ்வு,உரிமைகள் குறித்து இனியாவது வெளிப்படையான அரசியலோடு தமிழ்க் கட்சிகள் இலங்கை அரச ஆதிக்கத்துக்கு முகங்கொடுத்தாக வேண்டும்.இதிலிருந்துதாம் புலிகளது பயங்கரவாதச் சேட்டைகளையும்,பண மோசடிகளையும்,கொலையையும்,கொள்ளைகளையும் தடுக்க முடியும்.அவர்கள் பேசும் போலித் "தமிழர் தாயகம்" எனும் வியாபார விளம்பரத்தையும் அம்பலப்படுத்த முடியும்.

தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயவுரிமையின் உண்மையான இலக்கை எட்டுவதற்குப் புலிகளது திரைமறைவு அரசியலே இதுவரை தடையாக இருக்கிறது.இதை உணரும்போது,புலிகளை அழித்த வரலாறானது புலிகளோடு அழிக்கப்பட்ட மக்களுக்காகவேதாம் இலங்கைமீது பழி சுமத்த முடியுமே தவிர,புலித் தலைமைக்காக அல்ல.ஏனெனில்,புலிகள் பயங்கரவாத அமைப்பென்பது இன்றைய வரலாறக நிற்பதே நிசமான அரசியலது வெளிப்படை.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.10.2011

Thursday, October 20, 2011

கடாபி : சர்வதிகாரி !

கடாபி : சர்வதிகாரி

லிபியாவின் நீண்டகால ஜனாதிபதி மௌமார் அல் கடாபியின் [Muammar Al-Ghaddafi]உயிர் பறிக்கப்பட்டுள்ளது.இதை நோட்டோ இலிபியாவின் இடைக்காலத் தேசியக்"கவுன்சில்"தலைவர் முகமட் இட்சிபிரில் [Mahmud Dschibril]வியாழன், 19.10.2011 இல் தெரிவித்திருக்கிறார்.

மேற்குலக ஊடகங்கள் ஆர்ப்பரிக்கின்றன.அவை,தமது இலக்கும்-பொய்மையும் நன்றாகக் கடைவிரித்து வியாபாரமாவதை (உலகந்தோறும்) பார்த்து மகிழ்கின்றன.

நேட்டோவின் ஒட்டுக் குழுவின் [Rebellen]கையில் உயிருடன் பிடிபட்டுப்போன இலிபியாவின் தலைவர் நேட்டோத் தலைமையின் கட்டளைக்கிணங்கப் படுகொலை செய்பட்டிருக்கிறார்.

இலிபிய வரலாற்றைக் கற்பவர்களுக்கு அத்தேசத்தின் வரலாறு எங்ஙனம் அந்நியப் படையெடுப்புகள் மூலம் சிதறடிக்கப்பட்டதென்பது புரிந்திருக்கும்.கி.மு.700 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இலிபியத் தேசம்-தேசமெனும் கருத்துவடிவம் உருவாகுவதற்கு முன்பே,மூன்று நகரங்களை இணைத்துத் தேசமெனும் வடிவத்துக்கு வளர்ந்துகொண்டது. சபரத்தா,ஓயா,லிபிட்டிஸ் மக்னா [ Sabratha, Oea, Leptis Magna ] போன்ற பெரு நகரங்கள் தமக்குள் இணைந்து ரிப்போலிற் [Tripolitanien (Drei-Städte-Land) ]அரச பரபாலனத்துக்கு இசைந்தவை.இத்தகைய காலத்திருந்து இன்றைய இலிபியாவரையும் இந்த மண் அந்நியப் படையெடுப்பு-காலனித்துவத்துக்கு உட்பட்டிருக்கிறது.கார்த்தாக்கோ[Karthagos](இன்றைய இருனிசியா)அரச ஆதிக்கத்துக்கு (கி.மு.6 ஆம் நூற்றாண்டு) உட்பட்டபோது, அதன் தலைவிதியை ரோம இராச்சியம் விழுங்குவது நிர்ணயமானது.கி.பி.395 வரையில் ரோமிய இராச்சியத்துக்குள் வீழ்ந்துவிட்ட வட ஆபிரிக்க வலையமானது தனது முழு ஆளுமையையும் இன்றுவரை மீளப் பெறமுடியாமலே போய்விட்டது.


நவ காலத்தில் தேசங்கள் உருவாகி,சுயாதீனமுடையவைகளெனப் பீத்திக்கொண்ட"தேசிய அரசு"வடிவமானது மாற்று இனங்களை ஒட்ட மொட்டையடித்தபோது அவை காலனித்துவம் என அழைக்கப்பட்டது.1934 ஆம் ஆண்டில் இந்த இலிபியா இத்தாலிய இலிபியாவென இத்தாலிய ஏகாதிபத்தியத்தால் அழைக்கப்பட்டது. இப்போது இஃது "நேட்டோ இலிபியாவாக" மாறிவிட்டதை நான் உணர்கிறேன்.

மன்னன் செனுசி ஐடிறிஸ்[ Senussi, Idris I.] கீழ்-1951 வாக்கில், பேருக்குச் சுதந்திர இலிபியாவாக பிரகடனப்படுத்தப்பட்ட இந்த இலிபியா 1959 இல் எண்ணை வளக் கண்டுபிடிப்புகளால் மேற்குலகத்தின் பிடிக்குள் முழுமையாகவே கொணரப் பல கெடுபிடிக்குள் வீழ்ந்தது. என்றபோதும், 1.செப்டெம்பர் 1969 ஆம் ஆண்டு இலிபியா, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவேண்டிய "புரட்சியின்" விளைவு, மன்னன் ஐடிறிஸ்,அவன் மனைவி பாத்திமாவையும் [Fatima ]கூட்டிக்கொண்டு கைரோவோக்கு[ Kairo] புகலிடம் புகவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.அதை செய்த "புரட்சிகர தளபதி" மௌமார் அல் கடாபி என்பது இன்று என் சிந்தையில் நிழலாக விரிகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு,இராணுவ-எண்ணை விற்பனை உறவுகளென [ vom 1975 schloss Libyen ein Abkommen über wirtschaftlich-technische und militärische Zusammenarbeit mit der UdSSR]இருஸ்சியாவோடு கூட்டுறவு வளர்ந்த 1975 ஆம் வருடக் காலப்பகுதியில் இருஸ்சியா இலிபியாவின் சுயாதீனத்துக்கு ஓரளவு உடந்தையாகவே இருந்திருக்கிறது.

இன்றைய இருஸ்சியாவானது சோசலிசத்தகர்வுக்குப் பின்பான முதலாளியத் தேசிமாகியபின் பலவகைகளில் இலிபியாவைக் கைவிட்டது.அதன் காரணங்கள் பல.குறிப்பாக,இருஸ்சியாவானது மேற்குலகத் தேசங்களுக்குத் தனது சொந்த எண்ணை-எரிவாயு வியாபாரத்தில் அதிக இலாபமும்,முழுக்கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதால் கடாபியைக் கைவிடவேண்டுமென்று ஜேர்மனியும் வற்புறுத்தியது.இதற்காக ஜேர்மனிய அரசு, இருஸ்சியாவுக்குக் கொடுத்த வெகுமதி "நோர்த் ஸ்றீம்"எரிவாயுக் குழாய்[ Nord-Stream-Pipeline] ஒப்பந்தம்.

இந்தக் குழாய்த் திட்டமானது, எரிவாயுவுக்காக ஜேர்மனிய மக்கள் இருஸ்சியாவில் தங்கி இருப்பதைச் சாத்தியமாக்கி விட்டது.

கஸ்பியின்வலய எண்ணை வளமானது இருஸ்யாவிடமே இருக்கிறது.இதைக் கைப்பற்றும் மகா சதுரங்க ஆட்டத்தை அமெரிக்கா ஜோர்சியா மூலம் ஒக்டோபர் 2008 இல்செய்து பார்த்து(ஜோர்ச்சிய-இருஸ்சிய யுத்தம்) மூக்கு உடைந்துபோனதைத் தற்காலிகமாகத் தேற்றிக்கொள்ளவே இலியாவைப் பலியெடுக்க, ஜேர்மனிய அரசுமூலம் இருஸ்சியாவைக் கட்டிப் போட்டிருக்கிறது.

இலிபியாவின் கூட்டணி-நட்பு நாடுகளாகவும்,எண்ணை வள உற்பதி-ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்த சீன,இருஸ்சிய அரசுகள் தமது சங்காய் ஒப்பந்தக் கூட்டணியையே [Shanghai Cooperation Organisation] ஒரு வியாபாரக் கூட்டணியாக மாற்றிக்கொண்டுள்ளது.

கடாபியை நோட்டோ அணி படுகொலை செய்துவிட்டதானது,கடந்த நாற்பது ஆண்டுகால மேற்குலகத்தின் வட ஆபிரிக்கா மீதான ஆதிக்க ஊசாலாட்டத்துக்குக் கிடைத்த பலமான வெற்றிதாம்.



கடாபியை நரபலி செய்ததன்மூலம், இனி ஸ்த்திரமான ஆதிக்கத்தை வட ஆபிரிக்காவில் மேற்குலகஞ் செலுத்த முடியும்.கடாபி இல்லாத இலிபியாவானது கி.மு.700 ஆண்டளவில் ஏகிப்திய சாம்பிராஜ்யத்தினது வல்லாதிகத்துக்கு உட்பட்ட மண்ணைப்போன்றே இருக்கும்.

1977 மட்டில் கடாபியால் உருவாக்கப்பட்ட சோசலிச அரேபிய மக்கள் குடியரசு இன்று சர்வதிகாரத்துக்குள் கிடந்த இலிபியாவாக மேற்குலகங்களால் சொல்லப்படினும்,இலிபியாவானது கடாபியால் சிறந்தே இருந்தது.

தேசத்தின் சொத்தாக எண்ணை வளம்,6 இல் இருந்து 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி ,தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சம்பளத்துக்குக் குறைவாகச் சம்பளம் கொடுப்பது தடுக்கும் சட்டம் கொணரப்பட்டதும்,இலிபியாவிலிருந்து வட-தென் சூடான்வரை சென்ற நீர் பாசனத் திட்டத்துக்கெல்லாம் [ Great-Man-Made-River-Projekt ]படுகொலை செய்யப்பட்ட கடாபியே ஸ்த்தாபகர்.

மேற்குலகஞ் சொல்லும் "சர்வதிகாரி" என்பது, மேற்குலகத்துக்கும்,தமிழ்ச் சூழலில் புலிப் பயங்கரவாதிகளுக்குமே பொருந்தும்.

மக்களது உரிமை,சுதந்திரம்,ஆதிக்கச் சக்திகளிடமிருந்து எங்ஙனஞ் சிதைக்கப்பட முடியுமென்பதற்கு இன்னும் எத்தனை தேசங்கள் சூறையாடபபட்டு வராலாற்றில் உதாரணமானாலும் புலிவால்களுக்கு இந்த சூத்திரம் புரியவே புரியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.10.2011

Tuesday, October 18, 2011

நடுகல்: பிரபாகரன்!

தலைவர் வே.பிரபாகரன் கார்த்திகை இருபத்தியேழு 2011, பிரசன்னமாவதிலிருந்து புதிய திருப்பம் !


புலிகளது தலைவர் வே.பிரபாகரனை இந்த [27.11.2011] மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் தரிசிக்கமுடியும்!


" சுழன்றடிக்கும் சூறாவளியாக,
குமுறும் எரிமலையாக,
ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக
ஓயாது வீசும் இந்த மாவீரர் தினக் கொண்டாட்டம் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் கைகளில் விடுதலைப் புயல் வீசியபடி மையம்கொண்டு நிற்கிறது. "


இங்கே, தலைவர் வே.பிரபாகரன் கார்த்திகை இருபத்தியேழு 2011, பிரசன்னமாவதிலிருந்து புதிய திருப்பமும் உருப்பெறுகிறது...

னித சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.


தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்வதே சிறப்பானதென்பது ஹாபர்மாசினது முடிவு.துளியளவும் எனக்கு முரணில்லாத வெளியைத் திறந்து வைத்து நானே பரிபாலிக்கும் அந்த வெளியின் தெரிவில் நான் தொலைந்துபோகும் கணத்தில் அழிக்கப்படும் புள்ளி எங்கே என்பதே எனது பிரச்சனை!

இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாக உணர்வதில் இந்தப் புள்ளிக்கு என்ன வேலை?

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

இந்த வெளிகளை மரணப்பொறிவைத்து உறிஞ்சும் கருந்துளைகள் உறவுகளெனும் உருவங்கொண்டிருப்பதால் பதில்வினைமறுக்கும் எதிரீற்புவகைப்பட்ட புறப்பொருள் தொடர்பாடற்பாடுடைய நிறங்களது ஈற்பின் நடுவே நான் சஞ்சலம் அடைகிறேன்.எனக்குள் வெளிப்படும் "இன்மை"என்னைக் கொல்வதற்கு முன் பிறந்ததென்பதில் எனக்கான இருப்பு நீண்ட தூரம் துரத்தியடிக்கப்படும்போது எனது அடையாளம் மறுப்புக்குள்ளாக்கப்படுமென நம்பும் எனது பித்தாலாட்டுத்துள் இது முரண்நகை ஆகிறது.

இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகிரப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் பார்க்கின்றேன்.

என்னைப் புறந்தள்ளிச் செல்லும் காலத்தில் நான் வாழ்ந்தேன் இல்லை!காலத்தைத் தொலைத்துவிட்டு வாழும் ஏதோவொரு தடத்திலிருந்து எனது ஈனக் குரல் உறவுகளை நோக்கி பாசக்குரலெறிவதென்பது முடியாதிருப்பினும் முடிந்தவொரு புள்ளியை மீள அழித்துக் கீறமுனைவதில் எனது இருப்புக்கு நானே கட்டியம் கூறுகிறேன்.

துரத்தியடிக்கப்படும் எனது சுயம் எங்கோவொரு தொலைவில் மூச்சிறைக்கத் தனக்கான அடையாளத்தை அழித்துக்கொண்டிருக்க...

அபத்தப் பரிசோதனையுள் எவரது மூலத்தை எவர் தேடுவதென்பதில் அரிய புள்ளி என்பது புனைவுகளது எச்சமாக இருப்பதையும்,கற்பனையுள் நிலைத்திருக்கும் வடிவ மனித முனைப்புத் தனக்கான அடையாளமாக மற்றவர்களது அல்லது தனது எதிரீற்புப் புறவிருப்பின்பால் தற்கொலையை-பலியை ஊக்குவிக்கிறது.

இது என்ன புள்ளி?; மாவீரர் பட்டியலுள் இருந்து இருந்து வெளிவருவதாக...

வெளிகளை விரியவிடலாம்.வெளிகள் வெளிகளாக இருப்பதால்.இருப்பை அழித்துவிடு.அவை புனைவை வலியுறுத்துவதால்.எந்தத் தன்னிலைகளையும் அவை மறுக்கும் என்பது எனது இருப்பின் நடுவே நான் அனுபவமாக்கிய அடையாளம்.

என்னைக் கொல்,உன்னைக்கொல்.எதற்கும் நடுகல் வைப்பதில் உன்னை முன் தெரிவாக்கும்போது நீ உனக்கான சவக்குழியை நீயாகவே தோண்டுவதில் உனது சுயத்தை எனக்குச் சொல்கிறாய்.

நீயே ஒரு கட்டத்தில் எனது உடன் பிறந்தவன் என்பதும் எவ்வளவு கொடுமை!

நான் அழித்த புள்ளியுள் மறுதலையாகத் தோன்றும் இன்னொரு புள்ளியை அழிப்பதில் எனக்கு எந்தவிருப்பும் இல்லை.ஏனெனில், அதுவே இன்னொருதரம் தன்னை அழித்து மீளக் காத்திருக்கு.

புள்ளி : பிரபாகரன் மாவீரர் பட்டியலுள் இருந்து வெளிவருவதாக.

ப.வி.ஸ்ரீரங்கன்

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...