Saturday, March 31, 2012

உரையாடல்களுக்கிடையிலான பொது உரையாடல் வெளியினைத் திறப்பதே எமது நோக்கமாகும்

"புதிய இணைய மாத சஞ்சிகைக்கு எழுதுமாறு உங்கள் அனைவரையும் கேட்கிறோம்! ஆரோக்கியமான கருத்துபரிமாற்றத்திற்கும் கருத்தியல் வாதம்,உரையாடல் வெளிக்குமான புதிய கதவினை திறப்போம்! "
-by Mahroof Fauzer


பௌசர்,உங்களிடம் சில விளக்கங்களைக் கேட்பது அவசியமெனக் கருதுகிறேன்.

1: "தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்" என்கிறீர்கள்.இந்தச் செயற்பாடுகள் எதை நோக்கியது?ஏனெனில்,இன்று மொழி,மதம்,பண்பாடு சார்ந்த ஒடுக்குமுறைகள்-பௌதிக இருத்தலை மறுக்கும் ஒடுக்குமுறைகள்அனைத்தையுஞ் செய்தபடி அதற்கும் மேலாக மனிதர்கள் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படுபவர்களாகவும்,ஒடுக்குபவர்களாகவுமிருக்கிறார்கள்.இதுள் நீங்கள் எந்த வகைமாதிரியை உணர்கிறீர்கள்?

2: செயற்பாட்டகம் என்பதன் பொதுப்படையான புரிதலென்ன?செயற்பாடு வினையுறும் திசைவழியின் செல் நெறி என்ன-எதைச் சார்ந்து செயற்பாடு விரிகிறது?

3:"தமிழ் மொழிச் சமூகங்கள்" என்பதன் விளக்கமென்ன?சமூகம் என்றால் என்ன-சமுதாயம் என்றால் என்ன?இதுள் மொழிகள்-மதங்கள்,பண்பாடு,பால் வேறுபாடுகள் கடந்து இயங்க முனையும் மனிதர்களின் இடம் என்ன?

4:"ஜனநாயக அடிப்படை"என்கிறீர்கள் நீங்கள் குறித்தியங்கும் ஜனநாயகம் குறித்த புரிதல் என்ன?


5:துருவமயப்பட்டு நிற்கும் சிந்தனைக்கு மாற்றாகச் செயற்படுதல் "மாற்று-கருத்து நிலைகள்"இல்லையா?;இயங்கு தளத்துக்கு நகர்த்தலென்பதன் அர்த்தம் என்ன?-"இயங்குதல்-தளம்"இருண்டுக்குமான இயங்கிற்றொடர்பில்இயங்குதல் எந்த வடிவத்தின் மறுப்பை மறுத்து உருமாறதலைக் கொணர?அது,எதன் பொருட்டிலான தளத்தை மையப்படுத்துக்கிறது அல்லது கருதுகோளாக்கிறது,அன்றியும் நோக்கை உணர்த்துகிறது?

6: ஒவ்வொரு மாதமும் எடுக்கப்படும் " பேசுபொருள்"எத்தகைய நோக்கத்தைச் சார்ந்தியங்குகிறது அதன் அடிப்படையான அரசியல் என்ன?(நாம் அரசியல்-இயக்கம்சாராதவர்கள் என்று சொல்லிவிடாதீர்கள்).

7: ஒருவர் ஒற்ற நிலைக் கருத்துடையவரென எந்த அளவுகோல் அடைப்படையில் வரையறை செய்கிறீர்கள்?அந்த ஒற்றை நிலைக்கெதிரான பன்முகத் தன்மையைக் கோருவது"மாற்றாக"-கருத்தாக இருக்க முடியாதா?

8: ||நாம் ஒரு அரசியல் இயக்கமோஃகட்சியோ இல்லை.ஒரு அரசியல்கொள்கையைஃநிலைப்பாட்டினை முன்னிறுத்தி அவற்றினை நியாயம் காணசெய்வதற்கும் அவற்றினை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்கும் ஏனைய கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குவதும் எமது நோக்கமன்று.|| ஒரு அரசியல் இயக்கம்-கட்சி குறித்த உங்கள் கணிப்பீடுகள் என்ன?அரசியற்கொள்கை-நிலைப்பாடுகள்,அவற்றைத் தவிர்கக்கும் நீங்கள்-நியாயம் செய்ய மறுக்கும் நீங்கள்,எந்தக் கருத்தையும் கேள்விக்குட்படுத்தாத நீங்கள், "துருவமயப்பட்டு நிற்கும் சிந்தனைக்கு"மாற்றாக இயங்குவதாக இருப்பின் அது,துருவமயப்பட்ட கருத்துக்களைக் கேள்வி கேட்பதாகதா?அப்போது எங்ஙனம் மேற்காணும் உங்கள்கொள்கையை உருவகப் படுத்துவதில் முனைப்படைகிறீர்கள்?

9:||நாங்கள் மாற்று செயற்பாட்டாளர்களுமல்ல. மாற்று உரையாடல்களை நடத்துவது தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் நோக்கமும் இல்லை. அனைத்து மாற்று உரையாடல்களுக்கிடையிலான பொது உரையாடல் வெளியினைத் திறப்பதே எமது நோக்கமாகும்.||(!;?)மாற்று உரையாடலை நடாத்துவது உங்கள் நோக்கமல்ல.மாற்றுச் செயற்பாட்டளருமல்ல.ஆனால், அதற்காக நீங்களொரு பொதுவெளியைத் திறக்கிறீர்கள்.அந்த வெளியை மீளவும்,மாற்று உரையாடல்களுக்காகவே-அதற்கானவொரு இடையில் நின்று ஒரு பொதுவெளியை(யூர்கன்காமர்மார்ஸ் சொன்னமாதிரி?) திறப்பதில் உங்கள் நோக்கம் இருக்கிறது.அப்படியாயின்"பொது உரையாடல்"என்பது என்ன?அது,ஒன்றிற்குச் சார்பானதா அல்லது அதற்கு மாற்றானதா?அல்லது நிலவுகின்ற அமைப்பைக் கடந்த"இயங்கு தளம்"ஒன்றைக் கணித்த பொதுவெளிச் செயலூக்கமா?

10:||நமது சமூகச் சூழலானது மிகமோசமான துருவநிலைப்பாட்டாலும்இபகை முரண்களாலும் ஒதுக்கங்களாலும் ஒருவரையொருவர் எதிர்நிலைக்கு தள்ளிஇஉரையாடல்களுக்கான சாத்தியங்களையும் நியாயப்பாடுகளை அலசி ஆராய்வதற்கான பொது வெளியையும் இல்லாதொளித்தே நிற்கிறது.இதன் விளைவுகளை பாடமாகவும் அனுபவமாகவும் கொண்டு புதியதோர் பண்பாட்டு தளத்தில் நகர வேண்டிய அவசியத்தின் தேவைப்பாட்டினை ஏற்றல் என்கிற அடிப்படையில்தான் நாம் இந்த பணியில் இணைந்து பணியாற்றுகிறோம்.திட்டமிடுகிறோம்இசெயற்படுகிறோம்.||புதியதொரு பண்பாடு குறித்துக் கணிக்கிறீர்கள்.அது,நிலவும் அமைப்பைக்கடந்து புதிதாக முன்னேறமுடியாது.புதிதாகக் கோடு கீறுதல் பண்பாட்டத்தளத்தில் இயலாது.அநுபவங்களைக்கடந்த இன்னொரு புதிய அநுபவ வெளி-வாழ்வு நிலை நிலைப்பதாயின் அது ஏலவே இருந்தவைகளிலிருந்து மாற்றைக் கோருவது.எனவே,"மாற்றுக் கருத்து-எண்ணம்"பண்பாட்டுருவாக்கத்துள் உருவாகிறது. அப்படியாயின் எதை மறுத்து"மாற்றுக் கருத்தாளர்கள் நாம் இல்லை"என்கிறீர்கள்? அப்படி இல்லாதிருக்கும் பட்சத்தில் நிலவும் அமைப்பில் உங்கட்கு என்ன முரண் நிலவ முடியும்?-பிறகெதற்கு இயங்கு தளம்,புதியதோர் பண்பாட்டத்தளத்துக்கு நகர்தல்?

உங்கள் கொள்கைப் பிரகடனமும்"இயங்கு தளமும்"தமிழ் மொழிச் சமூகங்களும் குறித்து விரிவாகச் சொல்லுங்கோ.இக்கேள்விகளை நாம் கேட்டு நமது நேரத்தை வீணாக்காதிருப்பதற்கு.

ப.வி.ஸ்ரீரங்கன்
31.03.2012

Tuesday, March 13, 2012

பொய்யுரைப்பதே புலிகள் என்றாச்சு!

முள்ளி வாய்க்கால் நாடகத்துக்குப் பின்னும்,நாம் தமிழ்த் தேசிய விடுதலைப்போரைப் புலிகளது குழுவாத-அந்நியச் சக்திகளுக்கான எதிர்புரட்சிப் போரால் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறோம்.

முள்ளி வாய்க்காலில் சரணடைந்து மாண்டுபோன பாசிசப்புலிகளது தலைமையின் தவறுகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகிறது.நாம்,புலிகளால் இரண்டு இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அரசியல்-அழிவு யுத்தத்தைப் பற்றிய சரியான புரிதலைச் செய்யாதிருக்கப் புலிகளது அழிவைத் தியாகமாக்கும் மிகக்கெடுதியான திரிபுவாதத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.


இன்று,வன்னிக்குள் தினமும் பட்டுணியால் செத்து மடிபவர்களுக்கு புலிகளது சரணடைவுச் சாவுத் துரோகக் கைக்கூலிப்படை போராட்ட வரலாறு என்ன தீர்வைக் கொடுத்துள்ளது?மக்களது தியாகத்தை இலங்கைப் பாசிச அரசுக்கேற்பத் தகவமைத்து, இலங்கை ஆளும் வர்க்கத்தின் காலில் போட்டுவிட்டு, ஒரு தலைமுறையைச் சீரழித்துச் சென்றுள்ளது தமிழ்ப் பாசிச அரசியல் வரலாறு!

மக்கள் சாவதற்கு விருப்பமின்றி இருக்கும்போது அவர்களைத் தேசத்தினதும்,தியாகத்தினதும் பெயரால் கட்டாயப்படுத்தி அழிவு யுத்தத்தில் பலிகொடுத்த புலி-இலங்கை அரச பயங்கர வாதத்துக்கும் என்ன வேறுபாட்டைக்காணமுடியும்?,இதுவரையான புலிகளது மிச்சசொச்சங்களது அரசியலானது சந்தி சிரிக்கும் வியாபாரத்தனமானது!

மகிந்தாவுக்குக் கூஜாத் தூக்கும் எஞ்சிய புலிகளோ, இலங்கையில் அரச பாசிசம் நிலைத்திருக்க வழி செய்யும்போது,புலம் பெயர் தேசங்களிலோ புலிப்பினாமிகள் மீள மக்களை மொட்டையடிக்கும் அரசியலோடு உண்டியல் குலுக்கிப் பணத்தைச் சுருட்டுவதில் கவனமாகக் காரியஞ் செய்யும்போது,நாடுகடந்த அரசாங்கம் மேற்குலக லொபியாகச் செயற்படுகிறது.மிக வியாபாரத்தனமாகச் செயற்படும் ஒரு கோமாளிக்கூட்டம் அந்த நாடுகடந்த அரசாங்கத்துக்கு எம்.பி. களாகவும்,அமைச்சர்களாகவும் இருக்கிறது!

இப்போது,இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி.கள்,மந்திரிகள் பாலியல் வல்லுறவுக்காகப் பெண்களைத் தயார்ப்படுத்துகிறார்கள்?

அப்படியானவொரு சூழலுள்மாட்டுபட்டு, பாதிக்கப்பட்ட டாக்டர் மீனா கந்தசாமி,தனது ஆதங்கத்தை எழுத்தாகவும் முன்வைத்துள்ளார்.ஒரு கல்வியாளருக்கே இப்படியென்றால் பாமர மக்களது நிலை என்னவாகும்?

இத்தகையவொரு சூழலைச் சந்திக்க முனையும் புலம் பெயர் தமிழ்ச் சிறார்களது நிலை என்னவாகும்?அவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் இந்தக் கூட்டத்தை நம்பிப் பேரணிகள்-போராட்டமெனச் சிறார்கள் இவர்களது பின்னே செல்வது பாதுகாப்பானதா?

இந்த நிலையில் பினாமிப்புலிக்குக் காவடி தூக்குபவர்களே,புலிகள் இதுவரை தம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள்? சொல்லுங்கள்!எஞ்சிய மக்களையும் பொருள் ரீதியாகவும்-பாலியல் ரீதியாகவும் சுரண்டுவதைத் தவிர வேறென்ன மக்களுக்காகச் செய்கின்றனர்?

மக்களிடம் சேர்த்த பலகோடிகள் டொலரை யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களுக்காகச் செலவிட்டார்களா?அல்லது அவர்களது ஒரு நேரக் கஞ்சிக்கு உப்பிட்டார்களா?

எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதை முன்னின்று நடாத்தும் புலிகளது சிந்தாந்தத் தலைமை மேலும்பொய்யுரைப்பதில் காலங்கடத்துகிறது!

இது கடந்த காலத்தில் புலிகளது இராணுவக்கட்டமைப்பை "தேசிய விடுதலை இராணுவமாகவும்"தமிழீழத்தின் படையணியாகவும் கருத்துக்கட்டியது.இப்போது இப்பிழையான போராட்ட நெறியைத் தியாகமாக்க முனையும் ஒவ்வொரு பொழுதும் தமிழ் மக்களது சுயநிர்ணயப் போராட்டப் புறவயச் சூழலுக்குப் புலியைத் தியாகத்தின் குறியீடாக்குவதால் நாசஞ் செய்கிறோம்.

இது,ஆபத்தானது!

போலித்தனமாகத் தேசியவிடுதலை பேசுகின்ற புலிகளது கைக்கூலிகள் தமது தலைமையின் சரணடைவு அவலச் சாவைத் தமிழ் மக்களது விடுதலையின்பெயரால் தியாமெனச் சொல்வது மனித நடாத்தைக்குப் புறம்பானது.

இங்கே,தலைவர்கள்உயிரோடும்,தளபதிகள் போராடித்தாம் செத்தார்கள் என்று கூறுவதனூடாக இதுவரை, புலிகளால் காயடிக்கப்பட்ட அனைத்துக் கொலைகளுக்கும் தேசத்தினதும்,விடுதலையினதும் பெயரால் நியாயங் கற்பிப்பதும்,தியாகத்துக்காக-விடுதலைக்காக அவர்கள் செத்தார்களெனச் சொல்லிப் பாசிச வரலாற்றை நியாயப்படுத்துவதில் மிக நாசுக்காக இந்த மக்கள்விரோதிகள் சித்தாந்த எல்லைக்குள் ஒளிந்தபடி மிக நேர்த்தியாகச் செஞ்சோற்றுக் கடனை ஆற்றுகிறார்கள்.

ஒளிபரப்பப்படவுள்ள சனல் 4 தொலைக் காட்சியின் விவரணப் படக் காட்சிகள் "தற்போது" போலியானவை எனவும் புலிகளது ஒரு அணி பிரச்சாரஞ் செய்யத் தொடங்கிவிட்டது.இலங்கை பற்றிய குற்றத்துக்கு அதையே சாட்சியாக எடுத்தவர்கள்,பின் தமது தலைமையினது சரணடைவுத் துரோக அரசியலைக் குறித்து அச்சங்கொண்டபடி இப்போது சனல் 4 ஒளிபரப்பும் விவரணம் போலியானதெனவும் சொல்ல முற்படுகிறார்கள்.இவர்களே தமிழ் மக்களது தலைமையாம்-தமிழரின் தலைவிதிதாம் இது!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.03.2012

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...