Skip to main content

Posts

Showing posts from December, 2005

அவசியம் அறிந்து கொள்வோம்.

இதையும் அவசியம் அறிந்து கொள்வோம். உலகம் மிகக் கொடூரமான முறைமைகளில் மனித வதையைச் செய்வதில் குறியாக நிற்கிறது.அது பற்பல வடிவங்களில் சாத்தியப்படுத்தப் படுகிறது. ஒரு புறம் மக்களின் அன்றாட வாழ்வைப்பறிக்கும் தொழில் கழகங்களின் புதிய இடத்தெரிவுகள்,அணைகள்-கட்டுமானங்கள் மறுபுறம் தொழிற்சாலைக் கழிவுகள்,சம்பளமற்ற மிகைவேலை-வேலையைவிட்டுத் துரத்துதல்,அரசுகளின் சமூக மானிய வெட்டு!என்ன செய்வது?கட்டுண்டு வாழ்வதா அல்லது போராடிச் சாவதா? போராடுவதற்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது.ஜேர்மனிய வைத்தியர்களிள் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 14.12.2005 அன்று கடைசி சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ளது.மாக்டபேர்க் கூட்டு எனும் அமைப்புக்கு இது தோல்வியில் முடியவில்லை மாறாக மனிதவுரிமைக்குக் கிடைத்த பாரிய தோல்வி.இது ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறது.உலகம் பூராகவும் தொழிலாளர் நலன்கள் இந்த நிலையிலேயே பறிக்கப்படுகிறது. நர்மதா அணைக்கட்டுக்காகப் போராடும் பழங்குடி மக்களும், மேத்தா பட்கரும் அருந்ததி ரோயும் ஒரு புறமாக மறுபுறமோ பல் தேசியக் கம்பனிகளின் பகாசூரக் கூட்டங்களை சேட்டில் என்ன கோங் கோங் என்ன அ...

அன்னையின் மடி தேடி...

அன்னையின் மடி தேடி... அந்நியர்களின் விருப்பாய் அழிவு வந்தது ஈழமென்று! குரும்பட்டி பொறுக்கிய சிறார்களின் செல்லக் கால்கள் எங்கள் தெருவெங்கும் ஒடிந்து கிடக்கின்றன. அந்தப் பாலகர்களின் சிரசுகள் அறுத்துத் தேசியத் தலைக்கு மாலைகளாக்கப்பட்டன கிளிதட்டு விளையாடிய குஞ்சுத் தம்பி, தங்கை சிரசுகள் இழந்து நம் 'கவிகளால்' மாவீரர்களானார்கள்! எம் முன்னோர் தோணிவிட்ட வளம் நிறைந்த எங்கள் கடலை வழித்து நக்கும் அந்நியன் எங்கள் மிருகங்களுக்கு எலும்புகளிட்டுக்கொண்டே இன்னுமெமது சிறார்களின் குருதியையும் குடிப்பதற்கு மாவீரர் பாட்டோடு தீராத கொலை வேட்கையுடன் அலைகிறான். இந்த நிலையில் என் தேசக் குஞ்சுகளுக்கு சில வற்றைச் சொல்வேன்: மற்றவர்களின் விருப்புக்காய் மடிந்தது போதும்,மௌனித்த உங்கள் ஆசைககளுக்கு வயதாகிப் போகவில்லை! அதோ, வானத்தின் மூலையில் ஒளிருமிந்த நிலாவைப்போல் துள்ளி விளையாடத்தக்க உங்கள் மனதைக் கெடுக்கும் கூலிக் கவிகைகளைக் கடைந்தேற்றுங்கள். 'நானிறந்தால் ரோஜாவால் மாலையிடுங்கள்' என்னுடலுக்கென்ற உங்கள் அற்ப ஆசையில் வாழ்வின் உண்மையையும் வாழ்வதற்கான உங்கள் நீண்ட ஆசையையும் நான் தரிசிக்கிறேன். ஏழைத் தாய் ...

ஈர விழிகளும்,இதய வலியும்...

ஈர விழிகளும் இதய வலியும்... உ லக மக்களிடம் நாளந்தம் ஒரு நிகழ்வு நன்மையானதாகவோ அன்றித் தீமையாகவோ வந்து தொலைகிறது.இலங்கைத் தமிழிரின் வாழ்வில் இவை வேறொரு வடிவில்'சாவு,கொலை'- தீமைகளாகவே வருகின்றது!எம் வாழ்வில் மகிழ்வோடு பண்டிகைகள் வருவதில்லை.குருதி கொட்டி உயிரிழந்த உடல்களைச் சுமந்து வரும் பண்டிகைகளும்,வாழ்வும் எம்மை வருத்துகிறது.போதுமடசாமி! போர்,இயற்கை அழிவு,ஆயுத்தால் மனிதவொடுக்குமுறை,அரச பயங்கரவாதம்-அட்டூழியம்!சர்வதிகாரச் சிங்கள அரசும்,ஆயுதக் குழுக்களும் பேயாட்சி செய்ய-இம்மென்றால் கொலையென்று காட்டாட்சி செய்ய, மக்களோ இருவேறு அரசஜந்திரங்களுக்கு முகங் கொடுத்து வாழும் துயரச் சூழலில்தாம் ஓ...அந்தத் துயரக் கொடுமை சுனாமிப் பேரலையாக எங்கள் குஞ்சுகளை,அவர்கள் உறவுகளை அள்ளிச் சென்றது. அள்ளியுண்ட வாயும்,உணவளைந்த பிஞ்சுக்கரங்களும்,அம்மாவின் மடியில் தொட்டில் கட்டிய குழவியும்,முற்றத்தில் தவழ்ந்த சின்னக்கால்களும் அள்ளுப்பட்ட பேரலை அவலம் ஆருக்குத்தாம் நோகவில்லை? பல இரவுகள் அமைதியிழந்த உளத்தோடு நகர்ந்துள்ளன.அற்புதமான எங்கள் மழலைகள்- பிஞ்சுகளை இறால்களைப்போல் அள்ளிக் கொட்டிய அவலத்தை எப்படித்தாம் மறப்...