Showing posts with label பல்கேரியப் பயணம். Show all posts
Showing posts with label பல்கேரியப் பயணம். Show all posts

Friday, July 27, 2007

பல்கேரியப் பயணம்:2

பல்கேரியப் பயணம்:2


அது மிகவும் தெளிவான கடல்.பாசிகள் நிரம்பிக் கிடக்கக் கண்டோம்.பிறகென்ன தெளிவான கடல்?ஐரோப்பியர்கள் கருங்கடலுக்குச் சொல்லும் விளக்கம் தெளிந்த நீரென்பதாக இருக்கிறது.அந்தக் கடற்கரையொன்று பல்கேரியாவின் பெரு நகர் வார்னா நோக்கி விரிகிறது.அந்தக் கடற்கரையை நான் எனது மண்ணான வேலணை வெள்ளைக் கடற்கரையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.வெள்ளைக் கடற்கரையில் எவ்வளவோ நாட்கள் நேரம் போவதே தெரியாது எனது நண்பன் சிவகுமாரோடு உரையாடி இருக்கிறேன்.அந்தக் கடலில் குளித்துப் பள்ளிவாசற் கிணற்றில் அள்ளிய நன்னீரில் உப்புக் கசிவைப் போக்கி,வீடுமீளும் வழியில் கள்ளருந்திப் புகைத்து மகிழ்ந்திருக்கிறோம்.வீசியடிக்கும் காற்றுத் தென்னங் கீற்றில் கிழிபடும்.இங்கோ நாம் விரத்துக் கடற்கரையில் ஊன்றிய குடைகளை பிய்த்தெறிந்தது.


நீண்ட நேரமாக இரு இளைஞர்கள் எங்களைக் கவனித்தபடி தங்கள் அழகிய-கவர்சியுடைய காதலிகளுடன் கொஞ்சி மகிழ்வதும் பின்பு நம்மைப் பார்ப்பதுமாக இருந்தார்கள்.நான் அவர்களைத்தாண்டிக் கடலில் இறங்க முனையும்போது என்னிடம் பேசிக்கொண்டான் அதிலொரு இளைஞன்.


"நீங்கள் எங்கிருந்து இங்கு வந்துள்ளீர்கள்?"-அவன்.


"நான் இலங்கையைச் சேர்ந்தவன்,ஜேர்மனியிலிருந்து வந்துள்ளோம";.-இது நான்.


"இலங்கையில் அழகான கடற்கரைகள் உண்டென்பது எனக்குத் தெரியும்.எனினும்,எங்கள் கடற்கரைகள் எப்படியுள்ளது?"-அவன்.


எனக்குச் சிரிப்பு வந்தது,சிரித்தேன்.பின்பு சொன்னேன்:"கடற்கரைகள் எப்பவும் அழகுதாம்.அது இலங்கையென்ன பல்கேரியவென்ன எங்குமே இயற்கை விரிந்து மேவுகிறது.ஆனால், மனிதர்கள்தாம் அவற்றைக் கெடுக்கிறார்கள்."


"பல்கேரியாவுக்கோ அல்லது எந்தத் தேசத்துக்கோ இப்போது வித்தியாசம் இருப்பதில்லை.எல்லாமே உலகமய வர்த்தகத்துக்குப்பின் ஒன்றாகிவிட்டது.நான் பிரச்சனைகளைச் சொல்கிறேன்."என்று நறுக்காய் அவன் சொன்னான்.எனக்கு அவனிடம் கதைக்க இன்னும் இருப்பதாகவே பட்டது.

"நீ என்ன தொழில் புரிகிறாய்?" -நான்

"இங்கு கோட்டல் முகாமைத்துவம் படித்தபடி ஊர் சுற்றுகிறேன்!"என்றான் அவன்.

நல்லது.இந்தத் தேச மக்களையும் அவர்களின் இன்றைய வாழ்வையும் சொல்லேன் என்றேன்.

சிரித்தபடி சொன்னான்:பல்கேரியாவில் எழுபது இலட்சம் பல்கேரியர்களும்,வெளியுலகங்களில் ஒரு கோடி பல்கேரியர்களும் வாழ்கிறோம். படித்தவர்கள் பலர் வெளிநாட்டில். நாசாவில்மட்டும் 97 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள்.அந்தத் 97 வீதத்தில் கணிசமானவர்கள் பல்கேரியர்கள்.

எனக்குப் பல்கேரியர்களின் இன்றைய நிலைமைகள் ஓரளவு புரிந்திருந்தது.நான் அவன் பெருமிதத்தைப் பொடியாக்க விரும்பவில்லை.மேலும் தொடராது கடலில் இறங்க முனையும்போது அவன் விடுவதாக இல்லை.

பல்கேரியாவுக்கு வரும் உல்லாசப் பயணிகளில் அதிகமானோர் ஜேர்மனியர்கள்.

எத்தனையாண்டுகள் சென்றாலும் கடந்த காலத்தின் சாதகமானதும்,பாதகமானதுமான எல்லா நினைவுகளையும் அந்த இளைஞன் பகிர்ந்துகொண்டான்.எப்பவும்போலவே மௌனத்தை மட்டும் பதிலாக்க நான் விரும்பவில்லை.அவனோடு நட்புரீதியாக உணர்வுகளைப் பகிர்வது சாத்தியமாச்சு.இன்றைய பல்கேரியாவை அவன் மோசமான பல்கேரியாவாகவே பார்க்கிறான்.அதிகாரத்துவம் மாபியாத்தனத்துள் நிலைபெற்று,அரசாக மாறியுள்ளதாகவும்.அதிகாரத்திலிருப்பவர்கள் நடாத்தி முடிக்கும் அனைத்தும் பொய்யும் புரட்டுமிக்கதாகவும் இருப்பதென்றும், அன்று அரசவுடமைகளை நிர்வாகித்தவர்கள் இன்று அந்தவுடமைகளுக்குச் சொந்தக்காரர்களானபின் பல்கேரியாவில் பொருட்கள் குவிந்துகிடப்பதாகவும்,அதை நுகர்வதற்கான பணம் கண்ணில்படுவதில்லை என்றும் அலுத்துக்கொண்டான்.


வெய்யில் நம்மைச் சுட்டெரித்தது.

கடலலை வீசியடித்தது.எனக்குச் சிறிய சுனாமியாக அவைகள்பட்டன.குழந்தைகள் அலையோடு அள்ளுண்டு விளையாடினார்கள்.நான் நீருள் காலை விடுவதும் எடுப்பதுமாக நின்றேன்.கடற்கரை மனிதர்களால் நிறைந்திருக்கக் கடலலைகள் கவிதையாய் தெறித்தொதுங்கின.அமைதியாய் நீருள் அமிழ்ந்தபோது ஊர் ஞாபகங்கள் வழமைபோலவே வந்தன.மறுகணம் அடிக்கின்ற காற்றைப்போலவே அவை பறந்துஞ் சென்றபோது அங்குமிங்குமாக நீந்தினேன்.குழந்தைகள் நீந்துவதில் என்னைவிட வீரர்கள்.ஆழத்துக்குச் சென்றார்கள்.நானோ கால் எட்டும்வரை நீந்துவேன்.பின்பு எழுந்து நிற்பேன்.

அந்தக் கோட்டல் கடலின் மிக நெருக்கமான கரையோடு கட்டிமுடிக்கப்பட்டது.உல்லாசப் பயணிகளால் நிறைந்திருந்த கோட்டலில் குழந்தைகளுக்காவே பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தன.குழந்தைகள் அவற்றை மகிழ்வோடு அநுபவித்தார்கள்.கடற்கரை நிரம்பக் கோட்டல்களே முளைத்திருந்தன.மிகச் சிறபானதான கோட்டல்கள் உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்காவே கட்டப்பட்டதாகப்பட்டது.இத்தகைய பெரும்பாலான வலயங்கள் பல்கேரியாவின் உண்மை முகத்தை முக்காடிட்டு மறைப்பதாகவே உணர்ந்தேன்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
27.07.2007

Thursday, July 19, 2007

பல்கேரியப் பயணம்.

பல்கேரியப் பயணம்.


"மழை கொட்டிக்கொண்டிருக்கு,மின்னல் வெகுவாக இடியோடு மல்லுக்கட்டியபடி."எனக்கு
மழையென்றால் அதியசயத்தக்க இன்பம்,என் மனதெங்கும் கரை புரண்டோடும்.இதை நான்
எப்போதுமே உணாந்தபடி."என்ற கனவோடு சின்னராசா மழையைப் பார்த்துக்
கொண்டிருந்தான்.இவன் எந்தப் பொழுதில்,எந்த மாதிரியிருப்பானென்று எவருக்கும்
தெரியாது.மிகக் கொடுமையாளனாகவும் மிக நல்லவனாகவும் இருந்திருக்கச் சாத்தியங்கள்
கூடியபோது அப்படியே இருந்திருக்கிறான்.



வெளியில்
மெளனித்துக் கிடக்கும் காலத்தில் எப்போதும் அதிர்வுகளைச் செய்தபடி சிந்து
இருக்கிறாள்.அவளுக்கு இது முழுமுதற் பொழுதாகவும்-முயற்சியாகவும்
இருக்கலாம்.காலத்தில் வாழும் சிலருள் அவளும் ஒருத்தியாக இருப்பதாகச் சொன்னால்
மேலும் பொழுதுகள் கடந்துவிடும்."நான் திசை தெரியாதிருக்கும் கடல் வழி நடப்பதில்
அதிகம் நாட்டமுடையவள்" என்று அடிக்கடி சொல்வதில் சிந்து பகா சூரி.அவளுக்கு
அவசியமில்லாதவற்றுள் அதிகப்படியான வார்த்தைகளைக் கொட்டியபடி அதை அவசியமாக்குவது
அவளுக்கு அதிகமான இன்பத்தைக் கொடுத்தபடியிருக்க அறுப்பான் சின்னவனுக்கு
எப்பவுமே
அகதியத்திலிருந்து அறுந்து தொலைவதில் கற்பனைகள்
அதிகம்."
மக்களுக்குச் சேவை செய்பவர்கள்.

இந்தப் பொழுதில் ஒரு தேசம் நோக்கிச் செல்வதற்குப் பயணிப்பதே ஆவலாக இருந்தது.அகதியத்தைத் தொலைப்பதற்கு மாற்றாகவே இந்தப் பயணிப்புகள் மனதுள் விரிவது வழமை.

எப்பொழுதும்போலவே இந்தப் பயணமும் பெரும் தொகைப் பணத்தைத் தின்றபோதும் இந்த நாட்டைப்பற்றிய பிரத்தியேக எதிர்பார்ப்பு அதைப் பெரிதுபடுத்தவில்லை!


குழந்தைகளின் பள்ளி விடுமுறையானது எனக்குமான விடுதலையாக விரிந்துவிடும்.இது காலத்தால் தீர்மானிக்கப்பட்டதல்ல.வர்த்தக வசதிகளால் தீ¡மானிக்கப்பட்ட சூத்திரம்.


இவ்வாண்டு ஐரோப்பாவின் வாசல் நோக்கிப் பிரயாணித்தல் நோக்கமாகவிருந்தது.

மக்கள் வாழ்விடங்கள் வகை மாதிரிக்கு


உலகுக்கு:பல்கேரியா-அந்தத் தேச மக்களிடம்:புல்காறியா.


தேசத்தின் மூன்றாவது பெரிய நகரமான வார்னா(ஏயசயெ) விமான நிலையத்தை அடைந்தபோது தேசத்தின் வளங்கள் எத்தகையது என்பதை அறிவதில் நாட்டமாகியது.


முன்பு சோசலிசத் தேசமென்று அறியப்பட்ட தேசம்.


இது பெரும்பாலும் அதிகார வர்க்க அரசமுதலாளியத்துக்கு அன்று புனையப்பட்ட "இடு" பெயர்!எனினும், இந்தத் தேசத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தோல்வியின் இரகசியம் தெரிகிறது.பெரும்பாலும் பல்கேரியா ஒரு இனத்துக்கான தேசமல்ல.அங்கே பல்கேரிய இனம் 83,9 வீதமும், துருக்கிய ஒஸ்மானிய இராச்சியத்தின் வழிவந்த துருக்கிய இனம் 9,4 வீதமும் இந்தியத் தலையிலிருந்து இடம் பெயர்ந்து எங்களைப்போல் அலையும் மக்களான சிந்தி ரோமா 4 வீதமும்,2 வீத ருஷ்சிய மற்றும் ஆர்மேனிய இனக் குழுக்களும் வாழ்கிறார்கள்.என்றபோதும் பல்கேரிய இனத்தின் அதிவேகமான இனத்துவ வெளிப்பாடுகளே ஆதிக்கஞ் செய்கின்றன.சிறுபான்மை இனக் குழுக்கள் தேசத்தின் விளிம்பில் வாழும் நிலையைக் காணத்தக்கதாக இருக்கிறது.


1878 வரை துருக்கியச் சாம்பிராச்சியத்தின் பிடிகள் நிலவிய பல்கேரியா இது.இந்தத் தேசத்தில் இறங்கிய தரணத்தில் முன்னாள் சோசலிசக் கனவுகளும் அந்த மக்களின் மனங்களையும், இன்றைய ஏகாதிபத்தியங்களின் பல்தேசியப் பகாசூர வர்த்தக முன்னெடுப்புகளையும் அறிவதில் நாட்டம் கொண்டேன்.தெருவெங்கும் குவிக்கப்பட்டிருக்கும் பொருட்களும்,கையேந்தும் மக்களும்,கண்ணீர் மல்கச் சொல்லும் கதைகளுமாகப் பல்கேரியா இன்று "வளங்கொண்ட"நாடாகிறது!


வர்த்தகச் சாம்பிராச்சியத்தைக் கைப்பற்றியவர்கள் யார்?


உல்லாசத் துறையைக் கைப்பற்றியவர்கள் யார்?


நாட்டை ஆள்பவர்கள் யார்?


மக்கள் குவிக்கப்பட்டிருக்கும் பொருட்களைக் கொள் முதல் செய்யும்-வாங்கும்-நுகர்திறன் கொண்டிருக்கிறார்களா?


இவை கேள்விகள்.


கண்ணில் எதிர்பட்ட எல்லோரிடமும் கேள்விகளைக் கேட்டேன்.


"நீ எந்தத் தேசத்தில் இருந்து இங்கே வந்தாய்?-இந்தியனா?"என்ற கேள்விகளோடு இந்தியர்கள் படித்தவர்கள் என்ற பதிலும் வந்தது.கேட்கப் பெருமையாய் இருந்தது.


ஒரு தேசம் சிதைவுகளுக்குள்.இன்றைய அதிகாரமிக்கவர்கள் எல்லோருமே அன்றைய அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே.அவர்களின் இன்றைய இருப்பு மாபியாத்தனத்தின் வெளிப்படையான ஒடுக்குமுறையோடு சாத்தியமாகிறதாகச் சொன்னார்கள்.


"இன்றோ அங்காடி எங்கும் பொருட்கள் குவிந்திருக்கிறது.ஆனால்,வேலையில்லை.பணமும் இல்லை.அன்றோ வேலையிருந்தது,பணமும் இருந்தது.ஆனால் அங்காடிகள் வெறுமையாக இருந்தன.பொருட்களை வேண்டக் கியூ வரிசையாக மக்கள் தவித்தார்கள்."இந்தப் பதில் என்னை மீளவும் சுட்டது.

இது குறித்துச் சிந்திப்பதில் கஷ்டமெதுவுமில்லை.

பதிலும் மிக எளிமையானது.


தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
19.07.2007


போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...