Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Tuesday, August 16, 2011

"கம்யூனிசப் பொறுக்கிகள்"

புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியினது அஜந்தாவை இனியொரு தளம் மீளப் பிரசுரித்தது.அதுள், எனது கருத்துக்களைக் கூறியதிலிருந்து பிடுங்கி எனும் வாசகரது கருத்துக்கள் மேலும் மனித சமூகத்தைக் குறித்த பால்யப் பாடத்தைப் புகட்டுவதான தோரணையில் எழும்போது,அதையிட்டுச் சிலவற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் கூறியாக வேண்டும்.நாம்,மனிதர்கள் கடந்த பாதைகளை நிலவுகின்ற வாழ் நிலைகளிலிருந்து புரியாது வேடிக்கைத் தனமாகப் புரிவது ஒருவகை அபத்தம்.

தமிழுக்கு மேலும் வலிமை சேர்க்கும் இராகுல சாங்கிருத்தியானின்"வால்காவிலிருந்து கங்கைவரை"கூட இன்றைய வாசகர்களுக்குத் துணையில்லாது போய்விட்டபோது,நமது வாசிப்பு-கற்கையின் நிலைமை புரிகிறது. இது குறித்துச் சில குறிப்புகளை எழுவதென்பது கருத்து முதல்வாத்தின்மீதான பொருள்முதல்வாதப் பாச்சிலென்பதில்லை! " சமூக வாழ்வே சமூகவுணர்வைத் தீர்மானிப்பதென்ற உண்மையை" உரைத்துப் பாருங்களேன் என்ற அறை கூவலாக...


"பிரச்சனையின் உண்மையான தீர்விலிருந்து தானும் விலகி,மற்றவர்களையும் வேறு திசையில் இட்டுச் செல்வதன் மூலமாகக் கருத்துமுதல்வாதம்,இச் சுரண்டல் அமைப்புத் தொடர்ந்து நிலைபெற உதவுகிறது"


பிடுங்கி,கருத்தாடவதுதெனும் தோரணையில் நீங்கள் கட்டும் அனைத்துக் கருத்தும் "விடுதலைபெற வேண்டிய வர்க்கத்துக்குத் தேவ தூதனை அழைக்கும் மதத் தூய்மை வாதிகளைத் தேடுவது " போலத்தாம் இதுவும்.

ஏதோ கம்யூனிஸ்டென்பவர்கள் வானத்திலிருந்து பிறந்தவர்கள் போலவும்,அவர்கள் இந்த முதலாளிச் சமூகத்தின் கெடுதியான பகுதிகளை உள்வாங்காதவர்களெனும் போக்கில் உரையாட முடியாது.

நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.

சூதும் வாதும்,தவறும்-தப்பும்,எமக்குள்ளே முகிழ்த்திருப்பினும் அவையே இந்தச் சமூகத்தின் வாழ்நிலையாக இருக்கும்போது இதற்கு வெளியில் எந்த உணர்வும் நிலைக்க-முகிழ்க்க முடியாது.


சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றுவதென்பது 5000 ஆண்டுகால இதுவரையான சமூகத்தைப் புரட்டிப் போடுவதென்ற முறையில் அதுள் பலவிதப் போக்குகள் நிலவும்.எதிரி வர்க்கமானது சும்மா கையைக் கட்டி வேடிக்கை பார்க்கும் வர்க்கமெனக் கருதிக்கொண்டும்,அதுள் இடதுசாரிகள் தமது சூதுவாதுகளால் சமூகத்துக்கு நன்மை செய்வதென்ற தோரணையில் தமது நலன்களைப் பார்ப்பதாகவும் அழுவதில் வரலாற்றுப் பொருள்முதல்வாத அறிவைக் காணவில்லை!

தினமும் பொழுதும் எதிரி வர்க்கமானது உழைக்கும் மனிதர்களைப் பல கோணத்தில் வேட்டையாடும்போது,இதுள் எத்தனையோ இடதுசாரிக் கொம்பர்கள் காணாமற்போயுள்ளனர்.எனினும் ஒடுக்கு முறைக்குள்ளாகும் வர்கத்தின் விடுதலையை அந்த வர்க்கஞ் சாதிப்பதற்கான அனைத்து முகிழ்ப்பையும் ஆளும் வர்க்கஞ் சிதைத்தே வருகிறது.

இராகுல சாங்கிருத்தியாயனின் "வால்காவிலிருந்து கங்கை வரை"படித்துப் புரிந்துகொண்ட நீங்கள் இப்படி உரையாடுவது வியப்பாக இருக்கிறது.

ஆரம்பக் கதையான நிஷாவிலிருந்து திவாச் சமூகம் உருவாகுவதற்குள்ளேயே தாய் நிஷா தனது மகள் லேக்காவை வால்க்கா நதியில் கொல்லும் வரலாற்றைப் புரியாதுபோனதாற்றாம் நீங்கள் எல்லோரும் பெரிய"தூய்மை"வாதிகளாக்கப் புரட்டு விடுகிறீர்கள்.முதலாவதாக மனித சமூகத்தை அதன் வில்லங்கமான அனைத்துப் பக்கங்களுடனும் கற்றுவிட்டுக் கருத்தாடலாம். இதைவிட்டு முட்டுச் சந்தி விமர்சனத்தைக் குறித்து அதற்குப் பதிலெழுதுவதை நான் விரும்பவே இல்லை.

இந்த அறிக்கைமீது சரியான விவாதங்களை வரலாற்றுப் பொருள்முதல்வாதப் புரிவுடன் வைக்க முடியாத வாசகர்களையிட்டு நான் மனம் வருந்தவே இல்லை.

இவர்களிடமிருந்து கற்பதும்,கற்றதை மீள மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதெனும் சிறிய புரிதலுடன்தாம் இங்கே எழுதுகிறோம்.

இன்றைய சமூதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தின் மேற் கட்டுமானுத்துக்கு அன்றைய பிரவாஹானின் பிர்மவாதம்(இன்றைய மரூவு: பிரமம்-உபநிஷதத்தின் மூலம்) அதிக மாகக் கேள்வி கேட்டால் தலை வெடிக்குமென கார்க்கிப் பெண்ணுக்கு மட்டும் சொல்லவில்லை.அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலப் புலிகள்வரை(நம்ம புலியைக் கருது வேண்டாம்) இதே கதைத்தாம்.

இங்கே,போகத்துக்கும்-சூதுக்கும்,சதிக்கும் அனைத்துமே உட்பட்டுக் கிடக்கிறது.இதைவிட்டு-அகற்றிப் புரட்சிகரமாக அணி திரள்வதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

என்றபோதும், சரியானதைத் தேடவும்-கதைக்கவும்,அதன்வழியில் தொழிலாள வர்க்கம் தன்னைப் புனரமைக்கவும் காலம்தாம் தீர்மானிக்கும்.அதுவரையும் புரட்சிகரக் கட்சியை நோக்கி முகிழ்ப்புகள் எல்லோர் வடிவிலும் எழும்.அதைச் சேறடிப்பதில் பிடுங்கி,இடுக்கி-மடக்கி வடிவிலும் உருவாகும்.இதையெல்லாம் சொல்வதென்பது கம்யூனிஸ்டுக்கள் "புனையப்பட்ட பூடகம்"இல்லை என்பதற்கே!
மீளவும் ஒருக்கால்,"வால்க்காவிலிருந்து கங்கைவரை"யையும் படியுங்கோ.இதைவிட வேறு மருந்து உங்கட்குத் தேவையில்லை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
16.08.2011

Sunday, January 09, 2011

இனியொருவில், புலம்பெயர் நிலைவரம்

எம்மை, அகதி என்றே பிரகடனப்படுத்துவது
மானுட விடுதலைக்கு ஆனது!


னியொருவில், புலம்பெயர் நிலைவரம் குறித்த உரையாடலது பகுதி உரை.தொடராக, இது குறித்த கருத்தாடலும்-ஆய்வுகளும் அவசியமிருக்கு.அதைச் சாத்தியப்படுத்தும் புரிதல், அவசியமானதும் அடுத்த கட்டத் தேவையுமென்பது எனது எண்ணம்.அதன்வழி உரையாடலை இங்கு பகிர்கிறேன்.

புலம் பெயரும் மக்கள் கூட்டம்: துண்டிக்கப்பட்ட மக்கள் குழாமே-அவர்களுக்கு நிறம்,மொழி,இனம் இல்லை-அவர்கள் தம்மை அகதி என்றே பிரகடனப்படுத்துவது மானுட விடுதலைக்கு ஆனது!

சரி,விரிவாக விவாதிக்க வேண்டியவொரு தேவைக்கு சிரஞ்சீவி உந்தித் தள்ளுகிறார்.இந்தக் கட்டுரையின்வழி நாவலன் பேச முற்பட்டதை அவர் (நாவலன்)பின்னூட்டில் விளக்கியுள்ளார்(.) .

சரிஞ்சீவி,தமிழ்"சிவப்பு" பெண்கள்-ஆண்கள்,"கருப்பு"ஆண்-பெண்களை கேலி பேசுவதை என் விமர்சனம் எப்படிப் பேசியுள்ளதென்பதை இன்னொரு முறை வாசித்துப் புரியவும்.அடுத்து,தமிழ்பேசும் புலம் பெயர் மக்களை மட்டுமான வட்டத்துள் பேசப்படாததும்-பேசப்பட்டதுமான எனது உரையாடாலானது ஒரு சமூகத்தின் இருப்பை நோக்கி-உருவாக்கத்தின் ஆரம்ப நிலைமைகளைப் பேசுவது.அதுள் ,புலம்பெயர் மக்களுக்கு எங்கிருந்து-எப்படி ஒடுக்குமுறைகள் வருகின்றனவென்பது அவசியமான தேடுதலாக எனக்குப்படுகிறது.அதன்வழி ,மேலோட்டமாக எவர் எழுதும்போதும் அதைக் குறித்து எதிர்வினையாற்றுவதென்பது பதினெட்டாம் நேற்றாண்டினது மொழியாகவிருந்தாலென்ன, 21 ஆம் நூற்றாண்டினதாகவிருந்தாலென்ன?

இமானுவல் காண்டையும்,மார்க்சையும் எத்தனையாம் நூற்றாண்டு மொழிகொண்டு வாசிக்கிறோம் ?

பெரிய விடுகதையெல்லாம்"பின்நவீனத்துவம்"என்ற வார்த்தையை வைத்து விளையாடாதீர்கள்!

இது குறித்து வாங்கோ விரிவாக விவாதிப்போம்.நான் இத்தகையவுரையாடல்களை மிகவும் மனத்தோடு பேச முற்படுபவன்.இந்தவுரையாடலையே பேஷ் புக்கில் அதிகம் இணைக்கிறேன்.இப்போதைக்கு மிக்கேல் பூப்காவின் ஒரு பதிலை உங்களுக்குச் சுட்டுவேன்.

"Ich bin kein theoretiker.Als Throretiker bezeichne ich Jemanden,der ein allgemeines System errichtet,sei es ein deduktives oder ein analytisches,und es immer in der gleichen Weise auf unterschiedliche Bereiche anwendet.Das ist nicht mein Fall.Ich bin ein Experimentator in dem sinne,daß ich schreibe,um mich selbst zu verändern und nicht mehr dasselbe zu denken wie zuvor.-Gespräche mit Ducio Trombadori-Die Hauptwerke von Michel Foucault,Seite:1585-86.

"நான் ஒரு சிந்தாந்தவாதி அல்ல.சிந்தாந்தவாதியாக என்னை நான் காட்டிக்கொள்வேனானால் எங்கேயாவது,அது வித்தியாசமான நிலைகளுக்குள்-பகுதிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒருமாதிரியான விளக்கங்களும்-கழித்தல்களையுமே பயன்படுத்திக்கொள்வதில் முடியும்.அது எனக்குரிய செயலல்ல! உங்களுக்கு என்னைக் குறித்துச் சொன்னால்,நான் ஒரு பரிசோதகன்.நான் சித்தாந்தவாதியல்ல.எனது நோக்கத்துள் நான் எழுதுவது என்னைத் தொடர்ந்து மாற்றுவதற்கும்,மற்றும் முன்னையே சிந்தித்ததை நெடுகவும்,மீளவுஞ் சிந்திதித்து வருவதை மறுப்பதே."

இப்படிச் சொல்லும் பூப்காக மனிதன் ஒரு அநுபவ மிருகமென(Der Mensch ist ein Erfahrungstier) இடூசியோ டொறோம்பாடோறியோடு(Ducio Trombadori) நீண்ட உரையாடலையும் செய்திருக்கிறார்.இப்படிப் பின் நவீனத்துவம் பரிசோதித்து வரும் பகுதிகளை மனித அநுபவத்தை-நடாத்தையை,அதன் அடையாள நெருக்கடியைத் தட்டிக்கழிக்க நாம் பயன்படுத்தும் தற்குறித்தனத்துக்குத் தெரிந்த வார்த்தை ஒன்று மட்டுமே.அது,"பின் நவீனத்துவம்"இந்த வார்த்தைக்கு வெளியில் விரிவாக உரைக்க முடியாத "புத்திசாலிகள் "நம்மில் பலர் இருக்கிறார்கள்.அதுள் நீங்களும் ஒன்றா சிரஞ்சீவீ?

அப்படியில்லையென்றால் வாருங்கள் பூப்கா,தெரிதா,லெக்கான்,சசூர்,ரொலாந் பார்த்,சார்த்தார்,அந்திரே ஜீத் குறித்தும் காம்யுவின் கொள்ளை நோய் (Die Pest)குறித்த அல்ஜீரிய மானுடரது முகமிழந்த வாழ்நிலை பற்றி, சமூக அசைவாக்கவும் குறித்துப் பகிர்வோம்.அதுள் நமது மக்களது புலம் பெயர் வாழ்வது வலி என்னவெனப் புரிந்தும் போகும்!

பின் நவீனத்துவம் ஏதோவொரு பெரிய தத்துவமெனப் பீலாக்காட்டும் கயமைக்கு முன் அவரது[Michel Foucault ] கூற்றுப் புட்டுவைப்பதும்-எனது புரிதல் இந்தத் தமிழ் பின்நவீனத்துவப் பீலாவைக் கண்டு புன்னகைத்தலும் சதா நிகழ்வது சிரஞ்சீவீ!

உங்களுக்கு மனிதசமூகத்தின் இடப்பெயர்வு அவ்வளவு கேலித்தனமாக இருக்கு?புலம் பெயர்ந்து உலகம் பூராகவும் வாழ்பவர்கள் எத்தகைய ஒடுக்கு முறைகளை நேர்முகமாகவும்-மறைமுகமாகவுஞ் சந்திக்கின்றார்கள் என்பதைக் குறித்து மேட்டுக் குடித் தனமாக எள்ளி நகையாடுவதாகவிருக்கிறது?

புலம் பெயர்ந்து"அகதி"யாக வாழ்ந்து மடிவதன்வலி உங்களுக்குப் புரியமுடியாதபோது எனது எழுத்தின்மீதான கேலியாக வாக்கியங்கள் வருகிறது.அதைவிட மோசமான கேள்வி"யாரர் ஐயா உங்களை இங்கு வரச் சொன்னது-தமிழ்நாட்டுக்குப் போயிருக்கலாமே?" சிரஞ்சீவி இந்தக் கேள்வி எமக்குப் புதிதில்லை.

இக் கேள்வியை 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணி மேயர் கைம் [Mayer Heim_Nürnberg]எனது அகதி விண்ணப்பக் [ Asylverfahren]கோட்டு விசாரணையின் முடிவில் ,மொழிப் பெயர்ப்பாளரான வேந்தனார் இளங்கோவைப் பார்த்துக் கேட்டார்.அதற்கு அந்தப் பொறியிலாள மேதை அளித்த பதில் சிரிஞ்சீவீயிகளது அதே "மோட்டு"தனமானது.



"ஒரு நாயின் முன் சோற்றையும்,இறைச்சியையும் வையுங்கள் அவற்றில் எதை நாய் நாடும்-இறைச்சியைத்தானே?"என்றான் அந்த இளங்கோ.பின்பு அவருக்கு அவுஸ்ரேலியா இறைச்சியாகத் தெரிய அங்குபோய் "டாக்டர்"பட்டம் பெற்றுத் தமிழ்ச் சங்கம் அமைத்து அரை வயதில் இறந்தே போனார்.இது,ஒரு எடுத்துக்காட்டு.

புலம் பெயர் மனிதர்களை நாயின் முன் ஒப்பிட்டு. ஐரோப்போ இறைச்சி,தமிழ்நாடு சோறு.

தமிழ் மக்கள் ஐரோப்பா வரக் கூடாதென்பதற்கு நீங்கள் கூறும் காரணமென்ன?தமிழ்மக்கள் யுத்தாத்தால் பாதிப்படையாத பொருளாதார அகதிகள் என்பதா?இதன்வழி அவர்களுக்கு-தமிழ்பேசும் மக்களுக்கு பிரச்சனையே இலங்கையில் இல்லையென்பதா?

ஐரோப்பியனும்-அமெரிக்கனும் எங்களது மண்ணில் நேரடியாகவும்-மறைமுகமாகவும் வந்து யுத்தப் பிரபுகளை ஊக்குவித்து யுத்தஞ் செய்வான்,ஆனால் ,நாம் அவர்களது மண்ணுக்கு இடம் பெயரக்கூடாது.அவ்வகான் அகதி பாகிஸ்த்தானுக்குள்தாம் நுழையவேண்டும் மேற்கு ஐரோப்பாவுக்குள் இல்லை-,ஈராக்கியர்கள் சிரியாவுக்குள் அல்லது ஈரானுக்குள் நுழையவேண்டும்.அப்படியா சிரஞ்சீவி?

நாயோடு நம்மை ஒப்பிட்ட இளங்கோ,உங்களது திமிருக்கு நிகரானவர்தாம்.தமிழ்நாட்டில் எத்தனை இயக்கம்,எத்தனை அட்டகாசம் செய்ததென்பதும்,ஈழ அகதிகளை ரோவினது குரங்குகள் எப்படிக் கண்காணித்துத் திறந்தவெளிச் சிறையில் அடைத்தார்கள் என்பதும் எவருக்கும் புரியாததல்ல.மாற்று இயக்கத்தவன்,அவனது-அவளது குடும்பத்தவர்கள் கணிசமாகத் தமிழ்நாடு செல்ல முடியாது.அங்கே, இருமுனைத் தாக்குதல் தயாராகவிருந்தது.அடுத்துத் தனது சொந்த மக்களையே அகதியாக வைத்திருக்கும் தமிழகத்துக்குப் புதிதாக இன்னொரு அகதி குழுமம் செல்லுமென எதிர்பார்ப்பது அகங்காரம்.

மக்கள் சமூகத்தில் யுத்தம் என்பதைவிடக் கொடிய யுத்தமானது திட்டமிட்டு ஒரு இனத்தின்மீது வறுமையை ஏவிவிடுவது.இதை எவர்கள் செய்கின்றார்களோ 'அங்கே, சென்று அவர்களது முற்றத்தில் பறிக்கப்பட்ட எமது வாழ்வைக் கேட்பதே நியாயமானது.அந்த வகையிற்றாம் இன்றைக்கு ஆபிரிக்காவிலிருந்து கடல்வழிப் பாதைமூலம் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க மக்கள் ஐரோப்பாவுக்கு வரும் வழியில் கடலில் மூழ்கிச் சாகிறார்கள்.

ஆபிரிக்க மக்களிடம் என்ன இல்லை?அவர்களை ஒட்டச் சுரண்டுபவன் எவன்?

ஏன் நாமெல்லாம் பட்டுணி கிடந்தா காலந் தள்ளினோம்.நமது மக்களிடம் என்ன இல்லாமல் இருந்தது.எம்மை மொட்டையடித்தவனுக்கு வக்கலாத்து வாங்கும் கேள்விகளை இலண்டனிலிருந்து கொடிபிடிப்பவன்கூடக் கேட்பான்.அவனுக்கு ஐரோப்பியக் கொலனித்துவத்தின் கொடுமை இன்றுவரை நம்மைச் சிதைப்பது புரியாது!அதிலொரு மேதைதாம் இந்தச் சிரஞ்சீவியெனச் சொல்லேன்.ஏனெனில் ,நாம் எல்லோருமே வீணர்கள்-வினைமறுப்பாளர்கள்!எமக்கு ஆழமாகச் சிந்திக்கும் திறன் அறவே கிடையாது.

ஐரோப்பாவில் அகதியாக வாழ்பவன் தன்மீது நடாத்தப்படும்,உயிரியில்ரீதியான ஒடுக்குமுறையையும், சட்டரீதியான ஒடுக்குமுறையையும் சேர்த்து தனது அடையாளத்தின்மீதான ஒடுக்குமுறையைப் பரம்பரைவரை சந்திக்கிறது சிலருக்குப் புரிவதே இல்லை. அகவொடுக்குமுறையானது அள்ளிப்போடும் சில்லறைகளால் மறைக்க முடியாது. அதுவரையும் ,இந்த ஏகாதிபத்தியப் பேய்களால் பாதிப்படைய உலகக் குடிமக்கள் எங்கும் இடம் பெயர்வார்கள்-எப்படியும் வாழ்வார்கள்!அதை தட்டிக் கேட்கும் உரிமை எந்தப் பேய்க்கும் கிடையாது!கொங்கோவைப் பிளந்து பத்தாண்டுக்குள் கோடி மக்களை இரகசியமாய்க் கொல்பவனுக்குச் சொல்-அவ்வகானை வேட்டையாடும் அமெரிக்கனுக்குச் சொல்-அல்லது ஆசியாவை வேட்டையாடும் இந்தியனுக்கும்-சீனனுக்கும்போய் வகுப்பெடு உனது பித்தலாட்டத்தை!

அன்பு நாவலன்,தூர தேசிய உரையாடலானது மிக மோசமான இனவாதம் நிறைந்த அல்லது,அதை மறைக்க முனைந்த உரையாடலாகும்.அதை நினா(நைனா ஆங்கில உச்சரிப்பு) கிலிக் சில்லர் [ Nina Glick Schiller ]மூலம் தத்துவ நிலைக்குட்படுத்தியவர்களில் ஜேர்மனிய அரசுக்குப்(Visiting Research Associate, Max Planck Institute, Social Anthropology, Germany ) பெரிய இடமுண்டு.மக்ஸ் பிலாங் பல்கலைக் கழகமானது[ Max Planck Institute ]பேர்ளினில் அவருக்கு ,மானுடவியற்றுறையை வழங்கியது அவரது புலமைசார் புரிதலில் இல்லை.அவர் மேற்கொண்ட குடியேற்ற வாசிகளது வாழ்வு-சாவு,விருப்புகள் குறித்து(Global Migration Project, Center for International and Area Studies, ) அச்சொட்டான இரகசியங்கள் பற்றியது.ஆபிரிக்காவில் அவர் செய்த ஆய்வுகள் ஆபிரிக்க மக்களைத் துரத்தி அவர்களது கனிவளங்களைத் தொடர்ந்து கையகப்படுத்தும் வியூகத்தோடு சம்பந்தப்பட்டது.

அதற்காகவே 21 நூற்றாண்டின் காட்சிச்சலையென(African Culture and the Zoo in the 21st Century ) அவுஸ்பேர்க்கில் [ Augsburg ]நிறுவி ஆபிரிக்கர்களை ஒட்ட மொட்டையடிக்கும் செயல்களில் (The “African Village” in the Augsburg Zoo and Its Wider Implications )அவர் மும்மரமாக இருக்கிறார்.அவ்கானில் அமெரிக்கா படையெடுப்பதற்கு முன் அமெரிக்க மானுடவியலாளர்கள் மூலம் அவ்கான் மக்களது வாழ்வையும்-சாவையும் ஆய்ந்து (http://www.linksnet.de/de/artikel/25589 )பார்த்தது.

எனவே,நினா சொல்வதும்-நிறுவுவதும் அடிப்படையில் கயமைத்தனமானதும்,ஐரோப்பிய இனவாதத்தை குடியேற்ற வாதிகளது வாழ்வுப்போராட்டத்தில் ,மேலெழும் அடையாள அலகுகளை முன் நிறுத்தித் தமது சுரண்டலை-கொள்ளையை-இனவாத அரசியல் நகர்வை மறைத்தல்-நியாயப்படுத்தலாகும்.

இப்போதைக்கு இவ்வளவுந்தாம் நான் சொல்வேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.01.2011

Friday, September 21, 2007

மாலன்களும்,ஊடகச் சுதந்திரமும் சுண்ணாம்புத் தடவல்களும்!

மந்தை இராமின் நிந்தை மாலன்களும்,ஊடகச் சுதந்திரமும் சுண்ணாம்புத் தடவல்களும்!


எந்தவொரு தனிமனிதராலும் சமூகச் சீர்கேடுகளைத் துடைத்தெறிய முடியாது.சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய தேவையானது வர்க்க விழிப்புணர்வைத் தூண்டுதலும் அதன் தேவையை வலியுறுத்துவதுமே. இங்கே, மல்லுக்கட்ட வருபவர்கள் தாம் சார்ந்திருக்கும் வர்க்கஞ்சார்ந்த எண்ணங்களுக்கப்பால் சிந்தனையில்லை என்ற மனோபாவத்தோடு,மற்றவர்களுக்கு முத்திரை குத்தும் சூரத்தனத்தை நல்லது-கெட்டதென்ற கற்பிதங்களால் நெம்பி அளந்து தீர்ப்பிடுதல் மிகத் தீங்கென்றால் மறுத்திட முடியுமோ?

தேசங்கள்-இனங்களுக்கிடையிலான போராட்டங்கள்,விடுதலைகள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்குள்ளே மறைந்திருக்கும் வர்க்க நலன்களின் மோதலே இன்றைய மாலன்கள்-பார்பனர்களின் கூட்டோடு,ஈழ ஆதரவு-எதிர்ப்புக் கருத்தாடல்கள் பரப்புரையாக நம்மை நோக்கித் தள்ளப்படுகிறது.இது, வர்க்க அரசியல்.இங்கே, மனிதர்கள் வர்க்கவுணர்வைக்கடந்து சிந்திப்பது கிடையாது.


ஆனால்,அதைக் குறுக்கித் தனிநபர் விருப்பாகக் காட்டுவதற்கு இந்திய ஆளும் வர்க்கம் முயற்சிக்கிறது.உடனே:"நீ பெரிதா,நான் பெரிதா?"என்ற தாள இலயம் வலைப் பதிவுகளினூடே..."வசவு,வம்பு,தும்பு" என்பதற்கு அப்பால் வரலாறு தொட்டு ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் மீதான அரசியற்பார்வை என்னவென்பதும்,அந்த மனிதர்களின் அழிவுக்குக் காரணிகளான கண்ணிகள் என்னவென்பதும் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது முக்கியமாகும்.இத்தகைய பார்வையை இந்திய நலனுக்குட்பட்டோ அன்றி உலக நலன்களுக்கிசைவாகவோ-இயக்க,கட்சி நலன்களுக்கிசைவாகவோ எவரும் பார்க்க முடியாது.முற்றுமுழுதும் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கான உந்துதலோடு, அவர்களின் நோக்கு நிலையிலிருந்தே இத்தகைய விமர்சனங்கள் எழுந்தாகவேண்டும்.ஆனால்,இங்கு கருத்தாடும்-கருத்துக்கட்டும் பத்திரிகையாளர்கள் தத்தமது எஜமான விசுவாசத்திற்கான பங்களிப்புக்காக எடுத்தாளப்படும் கருத்துக்கள்,அவை கொண்டிருக்கும் அரசியல் சார்பு நிலை மற்றும் பொருளியல் நலன்களுக்கான காரணிகளைப் பின் தள்ளிவிட்டு,"ஐயோ இவர் வாயிலிருந்து இப்படி வரலாமா?இவர் செய்வது நியாயமா?"என்பதெல்லாம் வெறும் சிறுபிள்ளை விளையாட்டுத்தனமானதாகும்.ஒவ்வொருவருக்கும் மிகத் தெளிவான வர்க்கக் காரணிகள்,உடன்பாடுகள்-உணர்வுகள் உண்டு.இவற்றைக் கடந்து முற்றுமுழுதாக மனிதாபாபிமான வேடம் பூணுவது முடியாத காரியம்.இங்கே, மாலனோ அல்லது புலிகளோ மக்களின் உண்மையான நலன்களோடு உறவுடையவர்கள் அல்ல.புலிகள்மீதான எதிர்ப்புக் கருத்தாடல்கள் எந்தெந்த வர்க்கத்துக்குச் சேவை செய்வதற்கான முன்முயற்சி என்பதைப் பார்த்தோமானால் புலிகள் எவரது நலன்களோடு இதுவரை போராடுகிறார்கள் என்பதை மிக இலகுவாகப் புரிய முடியும்.அங்ஙனம் புரிகிறதரணத்தில் இந்தியப் பார்ப்பனிய-பனியா ஊடகங்கள் எதற்காகப் புலிகளை ஆதரித்தும்-எதிர்த்தும் எழுதுவதென்பதும்,இதுள் மாலன்கள்-சோ இராமசாமிக்கள்,இராம்கள் மற்றும் சுப்பிரமணிய சாமிக்கள் பேசும்,விவாதிக்கும் கருத்துகளின் வேர்கள் எதுவரை ஓடுகின்றதென்பதும் அந்த வேர்கள் எந்த மரத்தைக் காப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் புரிந்து போகும்.

நம்(ஈழத் தமிழர்களின்)பாழாய்ப்போன அரசியலில் புலிகளின் பாத்திரம் மிகச் சிக்கலான இலக்குள் அமைந்ததாகும்.மிகத்திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட இந்த இயக்கம் அதன் உள்ளார்ந்த நலனுக்கும் அப்பால் வெளிப்புறச் சக்திகளின் நலன்களுக்கான தேவைகளோடு இலங்கையில் தோன்றுகிறது.இது, ஒடுக்கப்படும் மக்களின் உரிமையைத் தனது போராட்டத்துக்குள் உள்வாங்குவதற்காகச் செய்த படுகொலைகளும்,செய்யும் கொலைகளும் மிகப்பெரிய பாசிசத் தன்மையிலான ஒடுக்குமுறையோடு சம்பந்தப்பட்டது.எனினும், இந்த இயக்கத்துள் உள்வாங்கப்பட்ட ஒடுக்கப்படும் மக்களின் மிக நேர்த்தியான போராட்டப் பங்களிப்பானது இதுவரை அந்த இயக்கத்தின் தலைமையால் உதாசீனப்படுத்தப்பட்டே வருகிறது.இத்தகைய உதாசீனப்படுத்தல்களைத் தத்தமது வர்க்க நலனுக்காக-சாதியத் தேவைகளுக்காக இந்தியத் துணைக்கண்டத்துள் நிலவும் அரசியல் முன்னெடுப்புகள் பாவித்து வருவதில் பற்பல விமர்சனங்கள்-விவாதங்கள் தொடர்கிறது.இதன் தொடர்ச்சியாகத் தொடரும் இந்து மற்றும் இந்தியா ருடே போன்ற பெரும் பார்ப்பனிய ஊடகங்களும் இராம்,சோ,மாலன் போன்றவர்களின் இந்தியத் தேசத்து எதிர்பார்ப்புகளோடு அந்த அரசியலில் இவர்களுக்கிடப்பட்ட பாத்திரத்தைச் சிரத்தையோடு செய்துவரும் இந்தத் தரத்தில் இவர்களை வெறும் மனிதாபிமானிகளாகவும், இவர்களுக்கும் ஒடுக்குமுறைசார்ந்த அரசியலுக்கும் சம்பந்தமில்லாதமாதிரித் தொடரும் இவர்களுக்கெதிரான விவாதங்கள் தொக்கி வைத்திருக்கும்-நிலைநாட்ட முனையும் கருத்துக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழமக்களுக்கு எதிரானது.புலிகளின் இயக்க நலனையும் தாண்டித் தமிழ்பேசும் மக்களின் நலனை தூக்கிப்பிடிக்க முனையும் ஒருவருக்கு புலிகள் குறித்தான மாலன்கள் கம்பனியின் பிரச்சாரயுக்தி மிகத் தெளிவாகப் புலப்படும்.இதைவிடுத்து மாலனைத் தனிநபராகவுணர்ந்து அவரைக் கருத்தியல் ரீதியாக வென்றெடுக்க முனையலாமென எவராவது கருதினால் அதைப்போன்ற வேறொரு முட்டாள்த்தனம் உலகில் இருப்பதற்கில்லை.

"ஆண்டைகளின் முற்றத்தில் நின்று எங்களுக்கு உயிர்ப் பிச்சைகொடு" என்று அடிமைகள் மன்றாடுவதுபோன்று நாமும் காரியமாற்றமுனைதல் வெறும் பம்மாத்துத்தனமானது.இந்தப் பம்மாத்து அரசியலுக்குக் குஞ்சம் கட்டுவதுபோன்று "வாரீசு அரசியல்- பிரபாகரன்,மகன் சார்ல்ஸ் பயிற்சி எடுத்துப் போராட்டத்தில் இணைவதென்ற "கருத்துகளுக்கும், மக்களுடைய நிர்க்கதியான சமூகச் சூழலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது!புலிகளின் போராட்டத்தோடு தமிழ்பேசுபவரின் நலன்கள் மிகவும் நரித்தனமாகப் பிணைக்கப்பட்டு பின்பு அதையே புலிகளின் பாசிச நடவடிக்கைகளை முன்தள்ளி இந்த நியாயமான சுயநிர்ணயப் போராட்டத்தை ஒடுக்கும் இந்திய சாணாக்கியத்தின் எடுபிடிகளான மாலன் கம்பனிகளைக் கண்ணை மூடிப் பால் குடிப்பது போன்று விமர்சிப்பது படு கேவலமானது.இவர்கள் குறித்த சரியான மதிப்பீட்டைச் சொல்வதற்குப் புலிகள் குறித்த இவர்களின் மதிப்பீடுகளோ அன்றி எதிர்கருத்துக்களோ அவசியமில்லை.இவர்கள் ஈழமக்களின் உரிமைகள் குறித்து எத்தகைய அரசியலோடு இருக்கிறார்களோ அதையும் தாண்டி இவர்களது வர்க்க நிலையிலிருந்தே இவர்களை அணுகியாக வேண்டும்.இதைத் தவிர்த்தபடி மாலன் பெரும் பத்திரிகையாளர்-புளோரிடாவிலோ எலிபிடித்தவர்,இவருக்குத் தெரியாதாவென்பதெல்லாம் மீளவும் இந்தப் பாத்திரத்தின் வர்க்க நிலையையும் இது இயங்கும் அரசியலையும் ஓரங்கட்டிவிட்டுத் தனிநபர் கருத்தாக்கிவிடும் பாரிய அபாயம் நிலவுகிறது.இதை செய்வதற்கு எந்தப் பெரிய படிப்பும் தேவையாக இருக்காது.இங்கே, நாம் செய்ய முனைவதும் இந்தியாவென்பதன் அரசியல் என்ன தொடர்ச்சியை நமக்குள் வற்புறுத்துகிறது என்பதையும்,இதற்கும் புலிகளுக்குமிடையிலான முரண்பாடுகள் எங்ஙனம் கையாளப்படுகிறது என்பதும், அது இந்தியாவுக்குள்ளேயே மக்களை ஒடுக்கும் நிலையில் இத்தகைய பத்திரிகைகளின் எலும்புத் துண்டு அரசியல் என்னவென்பதும் முக்கியம் பெறுகிறது.இதைவிட்டுப் புலிகளின் வாரீசு அரசியலோ அல்லது தலைவரின் தன்மானமோ முக்கியமல்ல.புலிகள் என்பவர்களின் கைகளில் இருக்கும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான சுயநிர்ணயப் போராட்டத்தைப் புலிக்களால் முன்னெடுக்க வைத்து அதையே புலிகளின் இருப்போடு சம்பந்தப்படுத்தி அந்த இயக்கத்தைப் பாசிச இயக்கமாக வளர்த்துத் தமிழரின் உரிமையைப் பயங்கரவாதமாக்கிய இலங்கை-இந்தியச் சதியின் தொடர்ச்சிகளை நாம் விபராமாகப் புரிவதே மிகச் சரியான அரசியல்.இதைப் புரியும்போது மாலனின்,இந்து இராமின் பாத்திரங்கள் மிக நேர்த்தியாகப் புரியத்தக்கதாக இருக்கும்.


இதற்கான நல்ல உதாரணம்:கடந்த இருபதாண்டாகப் போராடிய கருணாவின் பாத்திரம் பதிலளிக்கும்.இந்த மனிதரின் பாத்திரமானது தேசிய அலையுள் மூடியிருந்தபோது"கருணா அம்மான்"என்ற செல்ல மொழியோடு பெரும் போராட்டத் தளபதியாகவும்,மக்களின் வீரத் தலைவனாகவும் இருந்தது.இதையே புலிகள் பல தடவைகள் புகழ்ந்து எழுதித் தள்ளியவர்கள்.ஆனால்,அவனது பாத்திரம் அந்நிய நலன்களால் உருவாக்கப்பட்டதென்பதை வெளிச்சமிட்டுக்காட்டிய யதார்த்தத்துள் அவன் கொடியவனாகவும்,மக்கள் விரோதியாகவும்,கைக் கூலியாகவும் இன்று நம்மாலேயே ஏசப்படும்போது,இந்த மாற்றம் எங்ஙனம் நிகழ்ந்ததோ அதே மாற்றம் மற்றைய புலித் தலைமைக்குள் உருவாகும்போது இதே வாய்கள் புலம்பும் நாள் வெகு தூரத்திலிருக்க முடியாது!ஏனெனில், புலிகளின் பாத்திரமானது எப்பவுமே மக்களின் நியாயமான கோரிக்கைகளோடு உரித்துடையதல்ல.அது, அந்நியச் சக்திகளின் காலடியில் நமது உரிமைகளைத் தேடுகிற போராட்டத்தைச் செய்தபடி இருப்புக்கான அனைத்து காரியத்திலும(கொலை-அடக்குமுறை,உட்கட்சி ஜனநாயகமின்மை,ஏகத் தலைமை,வாரீசுக்கவலை-தலைமை இத்யாதி) ஈடுபடும்போது கருணா மட்டுமல்ல இன்னும் எத்தனையோ போராளிகள்-தளபதிகள் கழன்று போகும் சந்தர்ப்பம் வரும்-வருகிறது.இதையேதாம் மாலன் வகையாறாக்கள் மலினப்பட்ட வார்த்தைகளால்,பார்வைகளால் சொல்லும்போது நமக்குள் நிகழும் இரசயானமாற்றமோ நம்மைக் குதிக்க வைக்கிறது.ஆனால்,இது புலிகளுக்கு மிக வருத்தத்தையோ அல்லது காழ்ப்புணர்வையோ கொடுப்பதற்கில்லை.ஏனெனில், புலிகளின் உறவுகள் இவற்றைமீறி வேறுவகைப் புரிதலோடு அரசியல் செய்வது.புலிகள் இந்திய அரசியலில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஏலம் விடும் தகுதிக்காகச் செயற்படுபவர்கள்.அவர்களின் போராட்டச் செல் நெறியில் வாரீசு அரசியல் என்பதல்ல நமக்கு முக்கியம்.மாறாக, இவர்கள் நமது மக்களின் அளப்பெரிய உயிர்களை எங்ஙனம் நமது மக்களின் உரிமைக்காகப் பலி கொடுக்கிறர்கள் என்பதே முக்கியமாகும்.இதிலிருந்து மாலனையும்,இந்து இராமையும் விமர்ச்சிக்கும் தகுதியை நாம் பெறுவதற்கேற்ற சமூகப் பார்வையை உருவாக்கிட முடியும்.இந்த இலக்கில் இன்றைய இந்தியாவின் சமீபத்துச் செயற்பாடுகளைப் பார்க்குமிடத்தில் மாலன்கள்-இராம்களின் பாத்திரம் நேரடியாக நமது விழிகளுக்குமுன் விரிந்து பாரிய தெளிவைத் தரும்.அப்போது, மாலனையோ அல்லது எந்த மண்ணாங்கட்டியையோ நாம் பொருட்படுத்தி"ஐயா நீங்கள் இப்படிச் செய்யலாமா?"எனும் சகோதரப் பாசம் சிதறி,வர்க்க அரசியலில் அந்த மனிதரின் வர்க்க நிலையும்,அவரது நலனும்-அரசியலும் புரியும்.


ஈழத்தின் அரசியல் நகர்விலும்,அம் மக்களின் அரசியல் எதிர்காலத்திலும் மிகவும் பிற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருக்கும் தமிழக-இந்தி இந்தியத் தவப் புதல்வர்கள்-புதல்விகள் எடுத்து வைப்பது புலிப்பயங்கரவாதம் என்பதையே!புலிகள் குறித்து நாம் பற்பல பதிவுகளிட்டாலும் இப்போதைய சூழ்நிலையானது புலிகளின் கைகளில் மிக நேர்த்தியாகக் கையளிக்கப்பட்ட தமிழ் மக்களின் சுய நிர்ணயத்துக்கு-விடுதலைக்கான போராட்டத்துள் உள்ள நியாயத்தைப் புலிகளின் மலினப்பட்ட அரசியல் வியூகத்தால்-வர்க்க நலத்தால் எவருஞ் சிதைத்தெறிந்து நம்மை நடாற்றில் தள்ளுவது மிகக் கொடியதாகும்.இத்தகையவொரு போருக்குத் தயாராகும் இந்திய இலக்குக்கு உடந்தையாக தமிழகத்துப் பார்ப்பனர்கள் தம்மைப் பெரும் பான்மையாக்க முனையும் வியூகத்தோடு காய் நகர்த்துவதற்குத் தயாராகிறார்கள்.இங்கே, இந்தியப் பிராந்திய நலனோடு தமிழகத்து"ஆதரவுத் தளம்" உடைபடுவதற்கான நோக்கம் வெகுவாகியிருப்பதையும் நாம் காணலாம்.இந்த வியூகத்துக்குத் தலைமை தாங்கும் இந்து இராம் முதல் சோ இராமசாமி வரை நம்மைக் கருவறுத்த வரலாறைத் தொடர்ந்து நகர்த்தி வரும் செயலில் இப்போது மாலன் தலைமையில் மடக்கப் போடுகிறாகள் பதிவுகள்-மொழி பெயர்ப்புகள்.

தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பெளத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு(மாலன் கம்பனிக்கு) இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கட்சிகளும்,ஊடகங்களும்-மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டுவதற்குப் பெயர் ஊடகச் சுதந்திரமாம்.மாலன் தடுமாறும் பற்பல இடங்களில் புலிகளின் பாசிச அரசியற் கொலைகள் முன் தள்ளப்படுகிறது.இங்கே, புலிகள் என்பதன் அரசியலில் ஈழத் தமிழ் மக்களின் உரிமையும் சேர்ந்து ஒதுக்கப்படுகிறது.இதை விளங்கிக் கொள்வதற்கு இந்திய அரசியலில் பிற தேசிய இனங்கள் எங்ஙனம் ஒடுக்கி ஒதுக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும்போது இவர்களின் குரல்களில் ஒடுக்குமுறைக் காவியங்கள் உலா வருவது கண்டுகொள்ளத் தக்கதாகவிருக்கும்.


1): குஜராத்தில் 3000 இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

2):காஷ்மீரில் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிராக அவர்களைத்தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,


3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்

4):விவசாயிகளின் மீளமுடியாத சமூகப் பிரச்சனைகளுக்காகப் போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகளை சுட்டுத்தள்ளும்போது "நக்லைஸ்ட்டுக்கள்-பயங்கரவாதிகள்"என்றும்,


செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும் ஒருவர்(மாலன் கம்பனி) அதைச் சார்ந்து எது உண்மை எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப்படுதல் அவரது உலகத்தில் மட்டுமே சாத்தியம்! அதை அவர் நம்பும் தளமும் முற்றுமுழுதாக அவரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இங்குதாம் அவரது வர்க்கதளம் மிக இலகுவாக அவரை ஒடுக்குபவர்களின் பக்கம் தள்ளிவிடுகிறது.அப்போ அவரது புலிப் புலம்பல் ஏன் வருகிறதென்றால் அங்கேதாம் தமிழ் மக்களின் உரிமையைப் பூண்டோடு அழிக்கும் பாரததேசத்துச் சாணாக்கியம் தலைகாட்டுகிறது.இதை மேலே பார்த்தோம்.

இத்தகைய பத்திரிகையாளர்களின் படிமத்துள் கூத்தாடும்"உண்மையான தமிழன்"-"உண்மையான இந்தியன்" "இந்தியா எனது தேசம்,அது குறித்தெவர் அவதூறு வைக்கும்போது சும்மா இருக்க முடியுமா?" கருத்தாக்கங்கள்? ஒடுக்குமுறைசார்ந்த இந்தியத் தேசிய வெறியின் குறுகியவடிவிலான ஆதிக்க வெறியே.


"..................." வெட்கித் தலைகுனிவதில் உணர்வு முந்திக்கொண்டாலும் இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப் படத்தாம் முடியுமா அல்லது மாற்றுச் செயற்பாடுகளுண்டா? ஆம,; உண்டு! ஆனால், அது மானுடநேசிப்பால் மட்டுமேதாம் முடியும்.அதன்வழி ஏன்-எதற்கு- எப்படி என்ற கல்வியினாற்றாம் முடியும்.24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக்,த இந்து மற்றும் இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரால் இது சாத்தியப் படாது! ஈழத்தில் இயக்கவாத மாயைக்குள்ளிருக்கும் ஒருவர் தாம் சார்ந்த இயகத்துக்கு வக்காலத்து வேண்டுவதுபோற்றாம் இதுவும் ஒரு உளவியல் மயக்கம்-வெறி.இந்தக் கேடுகெட்ட மயக்கத்தையேற்படுத்தும் பாரிய பரப்புரைக் கட்டுமானமும் அதிகார வர்க்கத்திடம் மட்டுமேயுண்டு. இதிலிருந்து விடுபடுதல் அவ்வளவு இலகுவாக இருக்காது! எனவே, இந்த உண்மையான இந்தியர்களும்,தமிழர்களும் நம் மத்தியில் மலினமாகக் காணப்படுவர்.இவர்கள் எப்போது மானுடராவாரென்றால் தத்தமது வீடுகளில் குண்டுகள் வந்து கொலைகளைச் செயயும்போதா?இல்லை.மாறாக மாற்றுக் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதாலும்,விவாதிப்பதாலும் மட்டுமே முடியும்.எனவே, இன்னும் மேலே செல்வோம்.

இன்றைய சந்தைப் பொருளாதாரம் மக்களை இனங்களுக்கூடாக-மதங்களுக்கூடாக-மொழிக்கூடாகக் கோடு கிழிப்பதைத் திவிர்க்க முனைகிறது,கூடவே ஒரே மொழி,மத,பண்பாட்டை வலியுறுத்தித் தனது இருப்பை உறுதிசெய்யமுனையும் பல் தேசியச் சந்தைப் பொருளாதார மூலதனச் சுற்றோட்டம் பற்பல வர்ணக் கனவுகளை இளைஞ(ஞி)ர்களிடம் கொட்டி வரும் சூழலில இந்தியத் துணைக்கண்டம் போன்ற குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக் கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிகளும்,கிட்லர் பாணியிலான இனவாத அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.இது, மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இங்குதாம் நிலம் சா¡ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது, மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காக்கிறது.இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உளதேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.

எனறுமில்லாதவாறு இனவாதிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டில் ஏறுவது மேற்குலகில்கூட தொடர்கதையாக இருக்கிறுது.இந்தியாவில் ஆர்.ஏஸ்.எஸ்'க்குப் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த கிடைக்கும் வெற்றி தோல்விகள் இத்தகைய ஊசாலாட்ட ஊஞ்சற் உளவியலே தீர்மானிக்கிறது. இதன் அப்பட்டமான நோயே "உண்மையான இந்தியன்", தமிழன் போக்குகள்.என்றபோதும,; பெரந்தேசிய-ஆளுமையுள்ள இனமாகவிருக்கும் மக்களுக்குள் நிலவும் குட்டி-தரகு முதலாளிய முரண்பாடுகள் தத்தம் நாடுகளுக்குள் நிலவுகின்ற பொருளியற்போக்குக்கேற்றவாறு யுத்தங்கள் மூலம் சில தீர்வுகளுக்கு வருவதை தேசத்தின் நலனின் பெயர் மூலம் சிறிதாக்கின்றனர்.

இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிந்துருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.இங்குதாம் தமிழ்நாட்டு மக்களைச் இந்தியத் தேசியத்தால் சிறையிட்டு வைத்திருக்குஞ் சூழல் ஈழத்தையும் அங்ஙனம் ஆக்குவதில் நீட்சியாகிப் பார்பன-பனியா அரசியலாக விரிகிறது.இதற்கு ஒத்தூதும் இராமும்,மாலனும் இன்னும் எத்தனையோ நாய்களும் நடிக்கின்ற மனிநேயம் பொய்யானது-புரட்டானது.இவர்கள் புலிகளிடம் எதிர்பார்ப்பதைக் கறக்கும் அரசியலில் கைதேர்ந்த கபோதிகள்,சாரி பத்திரிகையாளர்கள்-ஊடகவியலாளர்கள்!

இந்த நிலையில் இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" ஆகிறது!இத்தகைய தேசத்தின் மதிப்பீடுகள் அதையண்டிய தேசங்களையும் காவுகொள்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.இதனாற்றான் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளைக் காலில்போட்டு மிதிக்கும் ஒரு கும்பல் அரசியலாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியலில் விரோதத்தை வளர்க்கும் வன் போக்கைப் பார்ப்பனர்களில் பலர்கள் மனமுவந்து செய்கிறார்கள்.இதற்க்கான காரணம்"தமிழ்"எனும் மொழியின் இன்றைய எழிச்சிகளும்-வீழ்சிகளும் காரணமாகிறது. இத்தகைய மொழியின்மீது காலாகாலமாகக் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அதை"உயிரற்ற மொழி"என்றும் கேலியிடத் தயங்குவதில்லை.


தமிழரின் போராட்டமானது அடிப்படையில் இனவொடுக்குமுறைக்கெதிரானது.இது பொருளாதார,சமூகப்பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாகும்.இப்போராட்டமானது பற்பல வழிகளிலும்,தந்திரத்தாலும் ஏற்றங்களையும்,இறக்கங்களையும் சந்தித்துள்ளது.ஒரு ஒழுங்கமைந்த -நேரிய போராட்டச் செல்நெறியை வகுத்துக் கொள்ளமுடியாத நமது பலவீனமானது, திட்டமிட்ட வெளிப்புறச் சக்திகளால் உள்தள்ளப்பட்ட சீரழிவாகும்.நமது அடிப்படை அரசியல் நிபுணத்துவம் இந்திய அறிவார்ந்த வியூகத்துக்கு முன்னால் பலவீனமானது.இது சமூகமட்டத்தின் வளர்ச்சியோடு பாரியவுறவுடையதென்பதால் அதில் எந்த வெட்கமுமில்லை.எனினும், நாம் நமது நண்பர்கள் வெளியுலகக் கனவான்களாக இருப்பதாக நம்புவதுதாம் நமது பின்னடைவாக வரமுடியும்.நமது மக்களைத் தாண்டிய எந்தவொரு உலக நட்பும் நமக்கு உதவாது.நமது மக்களே நமது பலம்.உலக முற்போக்குச் சக்திகளே நமது தோழமை.

கடந்த காலச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்து அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள்,ஈழத்து அரசியலில் பெரும் புயல்களையே ஏற்படுத்தி வருகிறார்கள்.காலாகாலத்தில் தமிழ் இயக்கங்களைப் பிளந்தபடி நம்மைப் பலவீனமாக்கும்போது,நமது அரசியலானது வெறுஞ் சில்லறைக்குச் சோரம்போவதாக இருக்கிறது.வரதாரஜப் பெருமாள் முதல் இன்றைய ஆனந்தசங்கரி-புலிகளின் தளபதி கருணா போன்ற சுயநலப் பெரிச்சாளிகளே இன்றைய நல்ல உதாரணமாகும்.


மக்களைக் கூறுபோட்டுக் கொன்று குவிக்கும் கபடம் நிறைந்த உலக நலன்கள் நம்மையின்னும் பயங்கரவாதிகளாக்கி நமது சுயநிர்ணய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் ஒவ்வொரு நகர்வும் புலிப் பாசிசத்தின் கொடுமையைச் சொல்லி ஒப்பேற்றப்படுகிறது.புலிகளின் நிலையோ அவர்களுக்கே புரியாதவொரு இருண்ட நிலையில் தம்மைச் சொல்லியே எதிரி அரசியலில் வெற்றியடையுந் தரணங்களில் இவ்வளவு மெளனிகளாகக் கிடப்பதற்கிருக்கும் எல்லை-அரசியல் என்ன?அது புரியத் தக்க அரசியலாக இருக்கும்போது இந்த வாரீசு-தலைமைப் போட்டிக் கதைகளும் முற்று முழுதாக முடிந்து போகும்.மாலனின் பத்திரிகாத் தர்மமும் நமக்கு புரிந்துவிடும்.அதுவரையும்... போட்டுத் தாக்குவதும் பிடரியில் தட்டுவதும் சும்மா,சும்மாத்தாம் கண்ணுகளா!சொறியுங்கோ அரித்தால்!!

ப.வி.ஸ்ரீரங்கன்.

21.09.2007

Friday, September 14, 2007

ராஜ்விந்தர் சிங்கை(Rajvinder Singh) முன்வைதுச் சில கருத்துக்கள்.

ராஜ்விந்தர் சிங்கை(Rajvinder Singh) முன்வைதுச் சில கருத்துக்கள்.


என் பையன்கள் கல்வி கற்கும் உயர்பாடசாலைக்கு நூற்றாண்டு விழா.இந்த விழாவுக்காகத் தொடர்ந்து ஒரு கிழமைக்குப் பல்வகை நிகழ்வுகள் நடந்து வருகின்றது.இந்தப் பாடசாலையின் கடந்த 12.09.2007 க்கான நிகழ்வுகளிலொன்றிற்கு பஞ்சாப்காரர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.அவர் தொடர்ந்து பல கல்விக்கூடங்களுக்குச் சென்று இலக்கியப்பட்டறை நடாத்தி வருபவர்.கடந்த கால் நூற்றாண்டாக ஜேர்மனியில் தஞ்சம் கோரி வாழ்ந்துவருகிறார்.இவருடைய நிகழ்வு குறித்த அறிவிப்பில் ஒரு புத்துணர்ச்சியோடு நான் அவ் விழாவுக்குச் சென்றிருந்தேன்.

ஒரு படைப்பாளி.அதுவும் ஜேர்மனிய மொழியில் பெரும் புலமைபெற்று-ஜேர்மனியப் பல்கலைக்கழகத்தில் இலக்கிய விஞ்ஞானம் பயின்றவொரு இந்தியர் என்ன சொல்கிறார் என்பதில் ஆர்வம் அதிகமாகி இருந்தபோது அங்கு செல்வதென்றே முடிவெடுத்திருந்தேன்.இந்த ராஜ்விந்தர் சிங் மிகவும் பிரபல்யமானவர்.ஜேர்மனிய அரசியல் வாதிகள்-அமைச்சர்கள்வரை பிரபலமானவர்.இவர் ஜேர்மனிய மொழியில் எழுதுவதால் அவரை ஜேர்மனிய வெளிநாட்டமைச்சரே உதாரணம் காட்டி, நடந்து முடிந்த உலகப் புத்தகக் கண்காட்சியைத் பிராங்பேர்ட்டில் திறந்து வைத்திருந்தார்.

உலகத்தில் ஒரு சிலருக்குக் கிடைக்கும் இந்தப் பிரபல்யத்துள் இவரும் அடங்கியுள்ளார். ஜேர்மனியப் பல்கலைக்கழகங்கள்-உயர்பாடசாலைகளென அறியப்பட்ட படைப்பாளியாகவும்-கல்வியாளராகவும் அவர் இருக்கிறாரென நான் அறிந்தபோது, அவரது உரையையும்-அவரது நூல்களின் முன்வாசிப்பையும் காண்பது அவசியமாகவே இருந்தது.


எத்தனையோ படைப்பாளிகளை அவர்களது மனித நோக்குக்காக நாம் மதிக்கிறோம்.அவர்கள் தாம் வாழும் உலகத்தில் கால்பதித்துச் சிறந்தபடைப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு அதிகமாகப் பிடித்தவர்கள் டோல்ஸ்ராய்;(Tolstoi: Anna Karenina)அனா கறினினா,டோஸ்ரோஜேவிஸ்க்கி(Dostojewskij: Der Idiot) (முட்டாள்,மற்றும்அலெக்ஸ்சாண்டர் புஷ்கின்¦;(Alexander S.Puschkin:Erzaelungen)கதைகள்.இத்தகைய படைப்பாளிகளுக்கு நிகராக எழுதிவந்தவர் அல்பேர்ட் காம்யு(Albert Camus:Die Pest,Der Mythos des Sisyphos,Der Fremde...)அவரது அன்னியன் படைப்பைத்தவிர மற்றெல்லவற்றையும் குப்பைகள் என்று ஒதுக்கியவன் நான்.இதன் காரணத்தை மிக இலகுவாக அறியத்தரமுடியும்.காம்யுவின் எந்தப்பாத்திரமும் பூமியிற் கால்பதிப்பது கிடையாது.தனது வேரை மறந்து தன்னையொரு பிரஞ்சியக்காரனாகச் சிந்தித்து இருந்த காம்யு அல்ஜீரியாவைச் சுரண்டும் பிரான்ஸ்சுக்குக் குடைபிடித்தவர்.இப்போது இந்த ராஜ்விந்தர் சிங் என்ன சொல்கிறார்,யாருடைய வாழ்வைப் படைப்பாக்கிறர்ர் என்பதில் மிகவும் கவனமிருக்கிறது.அந்த நிகழ்வில் தனக்கேயுரிய மென்மையான பேச்சோடு உரையாடியவர் தனது படைப்புகளிலிருந்து சில கவிதைகளை வாசித்துக் கரகோசத்தைப் பெற்றார்.

பெரும்பாலும் மக்களின் உற்சாகப்படுத்தும் செய்கைகள் படைப்பாளிகளை உசுப்பி விடுவதுண்டு.அவர் தனது ஜேர்மனிய வாழ்வைச் சொல்லி தனக்கு நாசிகளால் அச்சுறுத்தல் நிகழ்வதாகவும்,பற்பல சந்தர்ப்பங்களில் தொலைபேசியழைப்பூடாகத் தன்னை இனவாதரீதியாகத் திட்டித் தீர்த்துக்கட்டுவதாக நாசிகள் அச்சுறுத்துவதாகவும் சொல்லிக்கொண்டார் .தான் இரவு பன்னிரண்டு மணிக்கே எழுதுவதால் இது தனக்கு கரைச்சலாக இருப்பதாகவும்,மற்றும்படி அச்சம் இல்லையென்றும் சொன்னார்.நாசிகள் குறித்த கவிதையை வாசித்துவிட்டு"நாசிகள் வெளிநாட்டவரைப் பார்த்து வெளிநாட்டவரே வெளியேறுங்கள் என்கிறார்கள்,இடதுசாரிகளோ நாசிகளே வெளியேறுங்கள் என்கிறார்கள்.எங்கு நோக்கிச் செல்வது? இரண்டுதரப்பின் வாக்கியமும் ஒன்றே"என்று தனது இடதுசாரிய வெறுப்பை நாசிகளோடு முடிச்சிட்டார்.

தனது தனிமனித அவாக்களையும்,தான் சார்ந்த மனிதர்களின் தனிமையையும்-தவிப்பையும் படைப்பாக்கிய ராஜ்விந்தர் சிங் உலகப் பயங்கரவாதம்,நாசிகள் குறித்தும் கருத்துச் சொன்னார்.அமெரிக்காவுக்கு ஜரோப்பாவில் குடைபிடிக்கும் ஜேர்மனிய எண்ணத்தோடு அவரது எண்ணம் கூடிக் குலாவியது.

ஆராடா இவன்?இந்தியாவிலிருந்து அரசியல் தஞ்சங்கோரியிருக்கும் ஒரு அகதிக்கா இவ்வளவு ஒடுக்குமுறையுணர்வு?நீ பஞ்சாப்பில் அரசியல் செய்து இந்திய அரசால் கைதாகி அவஸ்த்தைப்பட்டவன்போல் கதைக்கவில்லையே ராஜ்விந்தர் சிங்?உன்னைப் பாடசாலைகளுக்குள் அழைப்பதும் பின்பு இந்தியப் பண்பாட்டுக்கு விளக்கமளிக்கக் கோருவதும் சும்மாவா?இந்தியத் தேசத்தின் வளங்களைக் குறித்த மதிப்பீடுகளை உன்னைவைத்து இவர்கள் மதிப்பிடுவது தெரிந்தே இருக்கிறது உங்களுக்கும்.

ஆக,இடதுசாரிகளுக்கு எதிராகத் திரிப்பதும்,நாசியத்தை மனிதருக்கு இடைஞ்சலாக இருப்பதென்று கூறுவதோடு உங்கள் பணி முடிவதில்லை.எனது சிந்தனைகளை இங்ஙனம் நான் தோற்றுவித்தபோது அந்தப் பாடசாலையுள் குழுமியிருந்த பெரும் படிப்பாளிகள் அவர்களது குழந்தைகள்,பன்னாட்டு நிறுவனங்களின் இயக்குநகர்களுக்கு மத்தியில் அவரது கல்வியையும்,பிரமிப்பையும் எனக்கு உடைப்பதில் கவனமிருந்தது.

இத்தகைய உணர்வுக்கு அடிகோலியதே அவர்தாம்.நாசியின் கூற்றும் இடதுசாரியக் கூற்றும் ஒன்றாக இருப்பது எதனால்?

இந்தியாவில் சகமனிதர்களைச் சாதி சாதியாகப் பிரித்து அடக்கும் மனோபாவமானது மிக வக்கிரமாகச் செயற்படும்.அது தடிப்பெடுத்த பார்ப்பன நாய்கள்போல எப்போதும் சாதியத்தை-தீண்டாமையை நியாயப்படுத்தும்.இத்தகையவொரு மனோபாவத்தோடு இந்தியாவின் உயர்சாதிய மனிதனாக ராஜ்விந்தர் சிங் உலகத்தைப் பார்பதும், அத்தோடு இடதுசாரியத்தை ஊனப்படுத்துவதற்கு இன்னொரு உந்துதலாக உருவப்படுத்தும் கூற்றுக்கும் இந்த மதிப்பீடுகளே வழி செய்கிறது.

அந்த நிகழ்வில் வருகை தந்த விருந்தினரோடு அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கே அனுமதி.எனினும், ராஜ்விந்தரின் அறிவுப் புலத்தைச் சீண்டுவதற்கு நான் முயற்சித்தேன்.பாடசாலை அதிபரிடம் ராஜ்விந்தர் சிங்கை நோக்கிச் சில கேள்விகளுண்டு, அதை வெளிப்படுத்துவதற்கான அனுமதி தரமுடியுமாவெனக் கேட்டபோது- அந்த அதிபர் யோசித்தபோதே அது கிடைப்பதற்கு வழியில்லையென நான் உணர்ந்தேன்.அதைப் பொருட்படுத்திய ராஜ்விந்தர் சிங்கே சுயமாகச் சொன்னார்"உங்கள் கேள்விகளைச் சொல்லுங்கள்"என.நான் அவருக்கு நன்றி கூறி எனது கேள்வியைக் கருத்தைச் சொன்னேன்.

மனிதருக்கு மலர்ந்திருந்த முகம் வாடியது.

தன்னைச் சமாளித்தே பதில் கூறுவதற்கு முனைந்தார்."நான் அது குறித்து முன்பு எழுதியருக்கிறேன்.எனக்கு மனிதர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பதும்,இறுதியில் எங்கு போவார்கள் என்பதும் தெரியும்."என்று சொன்னார்.அவர் பற்பல கல்விக் கூடங்களில் இலக்கியப்பட்டறை நடாத்தியவர்.எல்லோரிடமும் இந்தியா குறித்துப் பொய்யளந்துள்ளார் என்பதை அந்தப்பாடசாலை அதிபரோடு நான் அன்று உரையாடியபோது அறிந்தேன்.இந்தியாவில் சாதியமைப்பென்பது தற்போது நிலவவில்லையென்றும்,அது சட்டப்படி குற்றுமென்றும் தங்களுக்குச் சொன்னாரென்றும் கூறிய அவர் தொடர்ந்து, ராஜ்விந்தர் சிங் கூறியதை நீங்கள் உடைத்தெறிந்தீர்கள் என்றார்.மற்றும்படி, நீங்கள் கூறிய "நாசியே வெளியேறு"என்பதற்கான உங்கள் கருத்து அவருக்கும் தெரியுமென்றார்.நான் அந்த அதிபரோடு சில நிமிடங்கள் உரையாடியபோது தான் இந்தியாவில் பல இடங்களுக்குப் போனதாகவும்,அந்த ஏற்ற தாழ்வுகளை உணர்ந்ததாகவும்,மாளிகைகள் போனற கோட்டல்களின் அடிவாரத்துள் மனிதர்கள் குடிசைகளோடு வாழ்வதாகவும் இது இந்தியாவின் சாபக்கேடு என்றும் சொன்னார்.

ராஜ்விந்தர் சிங்கிடம் நான் கேட்ட கேள்வி:

"ஐயா உங்கள் கவிதைகளில் உலகின் பெரும் அவலங்கள்,நாசிகளின் மனிதவிரோதம்,உலகப் பயங்கரவாதமெல்லாம் பேசப் படுகிறது.தனிமனித அவலம்-தனிமை,ஈய்வு-இரக்கம் என்று பல பேசப்படுகிறது.ஆனால், இந்தியாவில் 239 மில்லியன்கள் மக்கள் தீண்டத்தகாதவர்களாக்கப்பட்டு பாரிய மனித ஒடுக்குமுறை நிகழ்கிறதே,அது உங்கள் கவிதை மனதுக்குள் வரவில்லையே?மற்றும் இடதுசாரிகள் நாசிகளை வெளியேறுங்கள் என்பது,ஜேர்மனியைவிட்டு வெளியேறென்பது அல்ல.அதற்கும் ஜேர்மனியை விட்டுத் துரத்தியடிக்கும் நாசிய வாதமான வெளி நாட்டாரே வெளியேறுங்கள் என்பதும் ஒன்றுபடுத்தக் தக்கதல்ல.இடதுசாரிகளின் கூற்றோ நாசிய எண்ணத்தைவிட்டுக் குழந்தைகளே தூர நில்லுங்கள்,உங்கள் மனத்தை நாசிய எண்ணங்களிலிருந்து வெளியே எடுங்கள் என்பதாகவே சொல்லப்படுவதாகச் சொன்னேன்.

எனது கருத்துக்களால் அந்த மனிதரின் மனது வாடியபோதும்,எனக்குள் தீண்டாமையின் வலியே அவருக்குப் புரியவில்லை என்று உணரப்பட்டது.தன் வீட்டுக்குள் மனிதர்களை வேட்டையாடும் ராஜ்விந்தர் சிங்கோ இடதுசாரிகளையும்,நாசிகளை ஒருமைப் படுத்தும்போது"உலகம் இப்படித்தாம்"என்று புரியக் கூடியதாக இருந்தது.
அவரது பற்பல மாயைகளை நான் அன்று உடைத்தேன்.பற்பல அறிஞர்களோடு உரையாடியபோது அவர்களால் உணரப்பட்ட இந்தியா மனிதவிரோதப் பாசிச இந்தியாவாகவும்,"உலகத்திலேயே ஜனநாயகத்தில் உயர்ந்த இந்தியா" என்ற பொய்மை அம்பலப்பட்டதும் தெரிய வந்தது.

ப.வி.ஸ்ரீரங்கன்
14.09.2007
+++++ +++++ ++++++ +++++

Rajvinder Singh – geboren 1956 in Kapurthala (Punjab, Indien) – war 2006/07 der erste Stadtschreiber Triers. Eingeladen hatte ihn die neu gegründete Initiative „Stadtschreiber e.V.". Nachdem Singh seit Anfang Juli als Döblin-Stipendiat in Wewelsfleth (Günter-Grass-Haus) residiert, fragte 16vor nach, was Trier für Spuren und Eindrücke hinterlassen hat. Singh hat in zahlreichen Streifzügen Stadt, Kultur und Leute unter die Lupe genommen und gibt nun eine wohlwollende wie auch kritische Wachstumsprognose ab.



16vor: Worin besteht die Idee des Stadtschreiber-Projekts?

Singh: Das Stadtschreiber-Projekt bietet zum einen der literarisch interessierten Öffentlichkeit einer Stadt die Möglichkeit, einen Autor etwas näher kennen zu lernen. Zum anderen bietet es einem Schriftsteller die Möglichkeit, für ein halbes Jahr von finanziellen Sorgen einigermaßen befreit arbeiten zu können. Zu meinen Tätigkeiten als Stadtschreiber gehörte es, nicht nur den Alltag in Trier zu beobachten und literarisch zu thematisieren, sondern auch zu bemerken, wie sich die Stadt und ihre Bewohner entwickeln.


16vor: Sie stehen mit Ihrer Arbeit für den „Dialog der Kulturen". Können Sie auf einen bereichernden Austausch mit einer Trierer Kulturszene zurückblicken?


Singh: Ich hatte einige schöne Begegnungen hier. Die Veranstaltung „Sonntagsgespräch" im Stadttheater gab mir die Gelegenheit, mit den Herren Weber und Oppermann vom Theater und Herrn Doetsch von der Katholischen Akademie sowie mit Prof. Eckert ins Gespräch zu kommen. Ich hätte auch gern mit anderen Künstlern Dialog gehabt, was etwas zu kurz kam. Meine „Sprechstunde" im Haus Franziskus gab mir die Möglichkeit, mich mit verschiedenen Menschen zu unterhalten. Ich war auch vom "Igeler Literaturklub" eingeladen worden. Auch Schulen und andere öffentliche Kontakte, Veranstaltungen waren hilfreich, die Seele Triers etwas näher zu betrachten. Aber mit einer organisierten Trierer Kulturszene, sofern es eine gibt, kam ich leider nicht ins Gespräch…


16vor: Ja, man kennt sich, aber „organisiert"-verzweigt ist die Szene tatsächlich wenig. Hat Trier trotzdem auch als moderne Stadt kulturelles Entwicklungspotenzial?


Singh: Trier war schon immer einer der wenigen Städte Deutschlands, welche eine so faszinierende Symbiose von Vergangenheit und Gegenwart vorweisen konnten. Hier nahmen die Geschichte und der Alltag so mühelos „fremde" Einflüsse, zum Beispiel aus dem Luxemburgischen und Französischen, in sich auf und hielten sie bis dato wach wie Figuren in einem Mosaik. Dadurch genießen die Menschen hier die Möglichkeit, sich Europa-orientiert zu gestalten. In der Stadtgestaltung zeigt der Petrisberg eine schöne moderne Seite Triers; aber Trier hat alles, auch seine Ghettos. Leider ist Trier West sehr vernachlässigt. Auch das ist Trier.


16vor: Wie progressiv schätzen Sie die Trierer ein?


Singh: Ich habe viele Bewegungen in Trier entdeckt. So wurde ich zum Beispiel von einer Gruppe Frauenrechtlerinnen eingeladen, den Trierer Soroptimistinnen. Ich habe in meiner Stadtschreiberzeit den Bürgermeisterwechsel mitverfolgt und war positiv erstaunt, mit welcher Energie die Stadtbewohner jenseits der Parteipolitik den Bedarf nach Frische äußerten – mit Hoffnung auf die Lösung heftiger, anstehender Probleme. Das macht Trier zu einer modernen, wachen Stadt. Wie ich auf dem „Weltbürgerfrühstück" gesehen habe, sind auch in Trier Menschen in der „antikapitalistischen" Bewegung „attac" aktiv, und das nicht nur, weil hier irgendwann mal Karl Marx geboren wurde. Ich hätte mir dort allerdings mehr Studenten gewünscht. Ich habe zum Teil doch auch sehr konservative Studenten in Trier wahrgenommen.


16vor: Wie sieht so eine konservative Haltung aus?


Singh: Ich habe in Uni-Cafés oder in den Bussen gelauscht und gehört, was ihnen im Alltag wichtig ist, wie sie durch das Leben gehen. Ich meine, nur weil eine Stadt eine Universitätsstadt ist, ist sie eben nicht direkt progressiv.


16vor: Hatten Sie den Eindruck, man begegnet Ihnen auch mit einer Scheu als einem „Exoten in Trier"?


Singh: Ja, die Menschen sollen mich ruhig auch als Ausländer wahrnehmen. Die Trierer sind Touristen gewohnt. Sie sehen mich zunächst als Ausländer, dann erfahren sie, dass ich Autor bin, dass ich mich der deutschen Sprache bemächtige, dass ich (Anm. d. Red.: neben indischen Sprachen und Englisch) auf Deutsch schreibe.


16vor: Wie kamen Sie mit dem Trierer Dialekt zurecht?


Singh: Ich konnte bereits holländisch und etwas plattdütsch, das half tatsächlich, auch das Moselfränkische zu verstehen. Wenn die Leute aber richtig schnell redeten, entdeckte ich meine Grenzen. Mir gefallen Dialekte, sie drücken Individualität aus. Sie sind geprägt von der Umgebung und den Menschen. Man kann sie interpretieren: Welche Wörter benutzen Menschen an bestimmten Orten? Ich habe mal geschrieben: „Synonyme gibt es nicht." So wie keine zwei Menschen sich genau gleichen, so ist es auch mit den Wörtern. Es gibt immer Nuancen, die sich in den Wörtern und Dialekten ausdrücken.



16vor: Zum Schulbeginn werden Sie uns noch einmal für das Schulprojekt „Baumpatenschaft" in Trier besuchen. Neben dem Wort scheint Ihnen die Natur ‚heilig’ zu sein…


Singh: Heilig ist, woran wir glauben. Heilig soll in erster Linie aber sein, was unentbehrlich ist für den Lebenserhalt der Menschheit. Der Baum ist unentbehrlich für unser Überleben. Ich habe daher einige Gedichte als ermahnendes Plädoyer für den Erhalt des Baumes geschrieben. Sie sollen in Stein gemeißelt zusammen mit der Baumpflanzung in Schulen und öffentlichen Parks aufgestellt werden.


16vor:Was bedarf in Trier außer der Natur noch der Pflege? Sehen Sie eine blühende Zukunft für eine Trierer Stadtschreibertradition? So gar keine Mängel?


Singh: Die Projekt-Initiatoren haben einen guten Grundstein gelegt. Herr Dr. Steinmetz, Frau Zey-Wortmann (Katholische Akademie), Herr Thalau und Frau Geisler vom Stadtschreiber-Verein haben sich sehr engagiert. Doch die Partnerschaft mit der Stadt muss jetzt einfach wachsen. Enttäuscht war ich aber vor allem über das Desinteresse von Seiten der Stadt. Kulturamt und Kulturdezernent haben mich nicht einmal eingeladen, was in Rheinsberg und Remscheid ganz anders gelaufen ist. Die Stadt müsste überhaupt erstmal eine arbeitsgerechte Wohnung zur Verfügung stellen, die für mich noch der Verein gemietet hatte. Hier muss ein besserer Austausch wachsen.

Letztendlich hat etwas statt-gefunden, aber es hat nicht wirklich Stadt-gefunden.


Singh ist freiberuflicher Autor. Er war (1986-1991) 2. Vorsitzender der Neuen Gesellschaft für Literatur (NGL) e.V. Berlin, ist seit 1993 Mitglied der „Initiative: Courage gegen Fremdenhass", seit Januar 1996 des Deutschen P.E.N. und engagiert sich im Writers-in-Prison-Committee. Trier ist nach Rheinsberg und Remscheid die dritte Stadt, die Rajvinder Singh als Stadtschreiber zu Gast hatte. Spätestens jetzt liest er neben den zahlreichen indischen, pakistanischen, amerikanischen und deutschen Internetzeitungen morgens nun auch 16vor.


Sunday, July 29, 2007

இரமணிதரனும்,மாலனும்...

இரமணிதரனும்,மாலனும்...



-சில கவனக் குறிப்புகள்.


//என் முன்னைய
இடுகை ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, "யார், எதை, எப்போது, எங்கே செய்தார்" என்பதற்கான
சரியான தரவுக்கோவை முறையான வரலாறாகத் தொகுக்கப்பட்டுப் பதிவாகுவதுகூட அவசியமில்லை.
ஆனால், தவறான, திரிந்த, உறுதியற்ற, மழுங்கிய முன்வைப்புகள் வரலாற்றுத்தரவுகளாகத்
தரப்படும்போது, "யார், எதை, எங்கே, எப்போது, எங்கே செய்யவில்லை" என்பதற்கான
எதிர்த்தரவுக்கோவை முறையாக முன்வைக்கப்பட்டேயாகவேண்டும்.//-/பெயரிலி.


கருத்துகட்குட்பட்ட எல்லைகளிலிருந்து ஒரு வகைப்பட்ட மையத்தைத் தேடுவதும் பின்பு அதன் சாத்தியத்தைக் குறித்து எந்தவகைத் "தெரிவும்" ஒரு எல்லையைத்தாண்டிச் செல்வதும்,அங்ஙனம் செல்லும் வழியில் எவரோ,எப்போதோ வீசியெறிந்தவைக்காக விழிகசக்கிச் சிந்தித்து வருவதும், அந்தச் செயலில் மாண்டு-மூழ்காது போவதும் அவசியம்.இந்த அவசியத்தில் ஆர்த்தெழும்போதும் அங்கே அந்தவுலகம் மிகப் பெரிதாக இருக்கிறது.இன்றையவுலகத்தில் வரலாற்றைத் திருடுவது பின்பு அதைத் தமதாக்குவதும் பண்டுதொட்டு மானுடம் ஆற்றும் செயற்பாடுதாம்.அங்ஙனமின்றி இந்தவுலகத்தில் உண்மையான வரலாறாக எந்த வரலாறுமில்லை.அன்றைக்குஞ்சரி இல்லை இன்றைய அதிபுரட்சிகரமான தகவற்றொழில் நுட்ப வலுவிலுங்சரி உண்மைகளை உரக்கச் சொல்வது சாத்தியமில்லை.இது மனித செயற்பாட்டின் அனைத்துத் தடங்களையுங்வுட்கொண்டே சொல்லப்படுகிறது.ஆக பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயத்தின்மீதான வரலாற்றுத் திருட்டுத்தனங்கள் அவர்களை வரலாறற்ற அல்லது வரலாறு தெரியாதவர்களாக்கிய செம்மையான அந்நியத் தலையீடு அந்தச் சமதாயத்தின் இருப்பையே அழித்து விட்டதென்பதை எல்லோரும் உணரக்கடவது.இந்தவகையில் தங்கள் "தெரிவு"அவசியமென்பதை மறுபதற்கில்லை.என்றபோதும் இரமணி இந்த வட்டம் பெரிதென்பதை நீங்கள் உணர்திருப்பீர்கள்.இதுள் பாரபட்சமற்று மனித செயற்பாட்டின் அனைத்துத் தளங்களையும் ஒருவர் கடந்தேகவேண்டும்.இது தொழில் நுட்பத்துக்குள்ளோ அன்றிக் கணினியியல் கருவூலங்களுக்குள்ளோ குறுகிவிட முடியாதல்லவா?அப்போ இது ஒரு சிறு பகுதிதாம்.அந்தத் "தெரிவின்"பாரிய பக்கம் இன்னும் இருள் சூழ்ந்தே கிடக்கிறது.அங்கே மக்கள்தம் உண்மையான வரலாற்றைப் பேராடும் பல்கலைக்கழகங்கள்கூட விஞ்ஞான பூர்வமாய் கற்கை நெறியாக்குவதுமில்லை.அப்படிச் செயற்படுத்தும் வரலாற்றுக் கற்கையும் அதுசார்ந்த தேடுதல்களும் ஆளும் அதிகாரத்தின் எல்லைகளையும் அவற்றைத் தக்கவைக்கும் முனைப்புகளுக்கிசைவானவையாக இருக்கும,; இந்தச் சூழலில் உங்களின் மேற்காட்டிய இந்தக் கூற்று எந்தத் காரணத்துக்கும் பொருந்துமென்றே கருதுகிறேன்.



//மேலே கூறிய காரணத்தினைவிடவும் எனக்கு - ஈழத்தமிழனென்ற அளவிலே- முக்கியமாகும்
இன்னொரு காரணமுண்டு. ஒரு சமூகம் தன் வரலாற்றினை இயன்றவரை தொடர்ச்சியாகவும்
கோவையாகவும் (அது மிகத்திருத்தமாகக்கூட அமைய வேண்டியதில்லை) பதிந்துகொள்வதன் தேவையை
ஈழத்தமிழரின் இன்றைய (வரலாற்று)நிலை உணர்த்தியிருக்கின்றது.//

இங்கேதாம் இரமணி ஒரு உண்மை மிகக் காட்டமாக உணர்வில் உறைகிறது.ஈழத் தமிழர்களின் வரலாறென்பது அவர்களது தொடர்ச்சியான குடிப்பரம்பலாலும்,மானுட வர்க்கப் போராட்டங்களாலும் மிக யதார்த்தமாகப் பதியப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,ஈழத் தமிழர்கள் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயமென்றழைக்கும் தகுதியைத் தமது இழி நிலைகளால் இழந்தர்ர்கள்.இது ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதிக்குள் இயல்பானதாக இருக்கவில்லை.ஒத்த மக்கள்தம்மை ஒருவகையொடுக்குமுறைக்குள் வற்புறுத்தி வெற்றி கொண்டது பொருள் சார்ந்த நலன்களை அவர்களோடு பங்கீடு செய்யாதிருப்பதற்காகவென்பதை நாம் வெறும் பொருளாதார நலன்களுக்குள்மட்டும் குறுக்கிவிடமுடியாது.அங்கே பண்பாட்டுத் தளத்தில் பாரிய பார்ப்பன நெருக்குதல் மனிதப் பண்பையே சாகடித்திருக்கிறது.அரியரெத்தினத்தை அரியம் என்பதும்,கந்தசாமியை கந்தன் என்ற பதிவுகளும்-கந்தன் தோட்டஞ் செய்தான் என்று பாடத்தில் எழுவாய் பயனிலை கற்பிக்கப்பட்டதும் நீங்கள் அறிந்தது.வரலாற்றைச் செம்மையாகக் குறித்துவிட முடியாது.ஆனால,; அங்ஙனம் முனையும்போது மிகத் தெளிவாகச் சில வரையறைகளையும் நாம் செய்து கொள்வது அவசியமாகிவிடும்.ஏனெனில், மனிதர்கள் வர்க்கமாக பொருள்களைக் கவர்ந்து தமது வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் தரணத்தில் ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது வர்க்கத் தளத்திலிருந்து மற்றையத் தளத்திற்குக் கல் வீசுவது இதுவரை நாம் காணும் தொடர்ச்சிதாம்.ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்பாணச் சமூக அமைப்பின் அரசியல் தன்மை இயல்பு,வர்க்கப் பிளவுகள்,முதலியவற்றை ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ய முனைதல் இதுவரை சாத்தியமாகி வருகிறது.இது மிக ஆபத்தானது.இந்த முயற்சி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது இன்றைய மெய்ப்பாடு.ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வோரையும்,அவர்கள் மத்தில் அரசியல் வேலைகளைச் செய்பவர்களையும் உண்மையை அறியுமாறு இன்றுவரை தூண்டும் ஒரு அரசியல் சமூக விஞ்ஞானத் தூண்டலில் நீங்கள் வைத்திருக்கும் கால் மிக நீண்ட வெளிகளைக் கொண்டிருக்கிறது.தம்பி வெற்றி இணையத்தில் எடுத்துவைக்கும் சிறுபிள்ளைத் தனமான விளக்கங்களைப்போன்று நீங்கள் நிச்சியம் செய்யமாட்டீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு.எனினும்,இயன்றவரை வரலாற்றுத் தரவுகளை எந்த வர்க்கத்தையும் திருப்பத்திப்படுத்தாது காலத்தைச் சார்ந்து-காலத்தில் எழுதுவது மிகப் பொருத்தமானது.தமிழ்ச் சமுதாயம் தன்னைத்தான் ஆளுவதற்குத் தகுதியற்றதென்ற தந்திரோபாயத்தோடு இதுவரை வரலாறுற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு,தனக்குள்ளேயே அது உள்ளியல்புக் காலனித்துவப் பண்புகளை கொண்டிருக்கிறது.இதற்கு எங்கள் வித்துவான்களும்,நாவல்லவர்களும்,பேராசிரியப் பெருந்தகைகளும் காரணம் மட்டுமல்ல.நிலுவுகின்ற பொருளாதார அமைப்புக்கேற்ற நலன்களும்தாம்.அரசியல் அதிகாரம் என்பது ஒரு அவசியமான தேவையாகும்.அதன் தொடர்ச்சியுள்தாம் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவதும்,கூடியவரை-சாத்தியமானவரை விஞ்ஞான பூர்வமாகப் பதிவதும் நேரிடும்.ஆனால், அந்த அதிகாரத்தை மக்கள் தொகுதியிலுள்ள எந்த வர்க்கம் கைப்பற்றுகிறதென்ற போக்கில்தாம் அது உண்மையாகத் திரிவின்றியுள்ளதாவென்று தீர்மானிக்க முடியும்.நமது சாபக்கேடு நாம் அதிகாரத்தை வெறும் மொழிசார்ந்த மதிப்பீடுகளால் போட்டுக் குழப்பி எமது மக்களை இணைக்க விரும்புகிறோம்.அங்கே தமிழ் மக்களைச் சாகடித்து,அவர்கள்தம் வரலாற்றையே தாம் விரும்பும்போக்கில் சிதைத்தவர்கள் நமது வீரதீரத் தலைமைகளும் அவர்கள் வழி சிந்தித்த புத்திசீவிகளும்தாம்.இதைச் சுட்டுவது இந்தத் தரணத்தில் எமக்கு நன்மையே பயக்கும்.


//இதன் அவவிளைவே, பரணவிதாரண போன்றோரின் கைகளிலே இலங்கையின் 'தொல்பொருளியலாய்வும்
அகழ்வும்' சென்றதும், அதன்பின்னான 'கண்டுபிடிப்புகள்' சிங்களக்குடியேற்றங்கள் முதல்
இன்னோரன்ன மொழிசார் இனவமைப்பு ஒடுக்குமுறைகளுக்கு, தமிழ்பேசும் சமூகங்கள் ஈழத்திலே
உள்ளாகவும் காலாயிருந்திருக்கிறன; காலாயிருக்கின்றன. தமிழ்ப்பௌத்தர்கள்
இருந்திருக்கலாமென்ற வாதத்தைக்கூட முன்வைத்து, சிங்களப்பேரினவாதத்தின்
வரலாற்றாக்கத்தை மறுத்துப்பேசமுடியாத நிலையிலே கந்தரோடை, வல்லிபுரம், நயினாதீவு,
திரியாய் ஆகிய இடங்கள் 'பௌத்தர்கள்=சிங்களவர்கள்' என்ற சமன்பாட்டினாலே
எழுதிவைக்கப்படுகின்றன. இங்கேதான் ஈழத்தமிழர்கள் சந்த்யானாவின் 'தமது கடந்த
காலத்தினை நினைவுகூரமுடியாதவர்கள் எதிர்காலத்திலே அதை வாழ்ந்தாக வேண்டிய
கட்டாயத்துக்குள்ளாக்கப்படுவார்கள்' என்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றோம்.
இந்நிலையிலேதான் வரலாற்றினைப் பதிவுசெய்தலென்பது வாழ்தலின் இருத்தலின் தொடர்ச்சியாக
ஒரு சமூகத்துக்கு ஓர் அவசியமான அத்திவாரக்கூறாகின்றது. இன்னமும், வரலாற்றின்
தேவைதான் - கடந்த காலத்திலிருந்து எமது இன்றைய நிலையைச் சரிபார்த்துக்கொள்தலும்
போகும் பாதைக்குக் கடந்தகாலத்தின் தவறுகளைத் தவிர்த்தலுமே -
கற்றுக்கொள்ளவைக்கின்றது; இதன் அடிப்படையிலேயே பொதுவரலாறு ஒரு பாடமாக பாடசாலைகளிலே
கற்பிக்கப்படுவதும், இராணுவ,போர்வரலாறு இராணுவக்கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுவதும்
அமைகிறன. வரலாற்றின் பதிவின்றி உடோல்ஸ்டோயின் பாதையிலே மோஹன்தாஸ் காந்தியும் அதன்
தொடர்ச்சியாக மார்டின் உலூதர் கிங்கும் அடியொற்றி நடக்க
முயன்றிருக்கமாட்டார்கள்.//

இங்கே இன்னொரு அவசியமான கேள்வி எழுகிறது.பாடசாலைகளில் மாணவர்கள் கற்கும் வரலாற்றுக் கல்வி உண்மையில் வர்க்கஞ் சாராத முழுமொத்த மக்களின் வாழ்வியற் தொடர்ச்சிகளைப் பதிந்துள்ளதா?அதிகாரத்தை நிலைப்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த எடுத்த-எடுக்கும் முயற்சி யாருக்கு எதிரானது?யாரை ஒடுக்கிய இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றுப்படமாகவுள்ளது?போர் வரலாறு என்றும் முழுமொத்த மக்களையும் சார்ந்த வரலாறாக இருப்பதில்லை.அது தொடர் வருத்தல்களை ஒரு இனத்துக்குள்ளேயே வற்புறுத்தி அந்த இனத்துள் கணிசமானவர்களையொடுக்கி வருவது.வரலாற்றில் இயங்கும் சக்திகளைச் சரியான வர்க்கப்பார்வையின்றி மதிப்பீடு செய்வது கும்பல்ல கோவிந்தாப்போடுவதாக இருக்கும்.இதுதாம் சொல்கிறது நமது தேசயவாதம் "தற்காப்புத் தேசியவாதம்"என்று.இப்படியும்,இதற்கு மேலும் அது கடைவிரிக்கும்.ஆனால்சிங்களப் பேரனவாதத்தையும் அதன் வரலாற்றுப் புரட்டுக்களையும் மறுத்துப் பேசும் தகுதியைத் தமிழ் அறிவாளிகள் இழந்ததென்பது சிங்கள அதிகாரத்தால் அல்ல.அது திட்டமிட்ட தமிழ்வரலாற்றுக் குருடாகளால் முன்னெடுக்கப்பட்டதும்,அதைப் பிழைப்புக்காக அரசியலாக்கிய அந்தப் பெருங்குடிப் பிறப்புக்களாலுமே.பொதுவாகத் தமிழ்ப் பெளத்தர்கள் இலங்கையின் வடபுலத்துள் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள் அநுராதபுரம்வரைத் தமது தொடர்ச்சியான குடிப்பரம்பலைக் கொண்டிருந்ததும் உண்மையான வரலாறகவே இருக்கிறது.இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு குறித்த ஆழமான ஆய்வொன்றைப் கலாநிதி சி.க.சிற்றம்பலம் செய்தும் உள்ளார்.பூனா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்டத்துக்கான ஆய்வு இது.இதில் எமது வரலாற்றை அவர் விஞ்ஞான பூர்வமாக நிறுவுவதில் பல சான்றுகளை முன்வைத்துள்ளார்கள்.சிங்களச் சமுதாயம் இப் பெருங்கற்காலப்பண்பாட்டின் முகிழ்பபென்பதும்,அது தென்னிந்தியாவில் எங்ஙனம் தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளும் என்று தோற்றுவித்ததோ அவ்வண்ணமே தமிழ்,சிங்களம் என்று இலங்கையில் தோற்றுவித்துள்ளதென்பது பரவலாக ஏற்புடையது.ஆரிய வம்சம் எனும் புரட்டுச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு அவசியமாகலாம்.இது புத்தமத மறுமலர்ச்சியைத் தூக்கி நிறுத்திய சமூகக் காரணி மிகக் கூர்மையாக விளங்கத் தக்கது.அது காலனித்துவத்துக்குப் பின்பான இலங்கையில் கிறித்துவத்தின் வாய்ப்புக்களையும்.வசதிகளையும் தட்டிப்பறிப்பதற்கும் கூடவே அந்த மத்தால் பயனுற்ற படித்தவர்களை ஓரங்கட்டுவதற்காவும் இருந்ததை நாம் அறிய முடியும்.இது ஒருகட்டத்தில் முழுமொத்தச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராகக் கிளம்பியதை இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியோடு ஒப்பிட்டறிவதே சாலச் சிறந்தது.கந்தோரடை பற்றிய அகழ்வராச்சியில் அன்றீடுபட்ட(1967 என்றே நினைக்கிறேன்) பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்து அரும்பொருளக ஆய்வாளர்கள் யாழ்ப்பாணத்தில் பெருங்கற்காலப்பண்பாடு நிலவியதை முதன்முதலில் விஞ்ஞானபூர்வமாக வெளிப்படுத்தினார்கள்.விமலா பேக்கிலி மற்றும் பென்னற் புறொன்சன் போன்றோர்களின் ஆய்வுகள்-வெளிப்படுத்தல்கள் யாவும் இதை உறுதிப்படுத்துபவை.ஆனால் அந்த அகழ்வாராச்சியின் முடிவுகள்-அறிக்கைகளை இதுவரை நாம் கண்ணிலும் காணவில்லை.ஏன்-எவரால் முடக்கப்பட்டதென்பதை நம் தமிழ் வரலாற்றாய்வாளர்களால் இதுவரை குறித்துச் சொல்லப்படவில்லை.இங்கேதாம் நம் வரலாற்றாளர்களின் தவறுகளும்,மதிப்பீடுகளும் சிங்கள பெளத்த பொய்மையையும்,பெளத்த மதத்தைப் பற்றிய தளம்பலிலிருந்து விட்டு வேறொரு தொலைவுக்கு உயர்த்தியது.இது தமிழரென்பவர்கள் சைவத்தை மதமாகக்கொண்டவரென்பதும்,பெளத்தம் சிங்களருக்கே உரித்ததுமாகக் கற்பனையில் மூழ்கடித்தது.அங்கே வலுவுறும் தரணம் சிங்களவருக்கானது.கடந்தகாலத்துத் தவறுகளைத் தவிர்த்துக்கொள்வதற்கான முன் நிபந்தனை எனஇன?அந்தத் தவறுகளைப் பகிரங்கமாக விமர்சனத்துக்குள்ளாக்குவது.அதை நாம் சரியாகச் செய்வதாக இருந்தால் இன்றைய போராட்டத்தவறுகளும் பகிரங்கமான விமர்சனத்துள் மையங் கொண்டிருக்கவேண்டும்.ஒரு சமுதாயம் தனக்குள் ஒடுக்குமுறையை ஏவிவிட்டுத் தன் சொந்தத்தையே குட்டிச் சுவராக்கும்போது அந்நியப் புறச்சக்தி எம்மை ஒடுக்குவது வியப்புக்குரியதல்ல.

//அடுத்தது, உளம்சார், சிந்தைசார்தளத்திலே நிகழும் விடுதலையென்பது; இதற்குப் பௌதீக,
புவியமை எல்லையில்லை. இவ்விடுதலையென்பது புவிகட்டுப்படுத்தும் வரையறைகளுள்ளே
அவற்றினை முறித்துத் தனித்துவம் காண்பதற்காக நிகழ்வதல்ல. கருத்துத்தளத்திலே
தன்மீதான அடக்குமுறைகளிலிருந்து தம்மை உடைத்துக்கொண்டு, விட்டுவிலகிச்
சிட்டுக்குருவியாகப் பறக்கும் நோக்கிலே பிறப்பது; தமிழர் என்ற கருத்துநிலையிலே
ஈழத்தமிழர், மற்றும் அவர்கள்போன்ற நிலையிலுள்ள ஏனைய உட்கூற்றுத்தமிழர்களின்
தம்மடையாளங்களை, 'தமிழினை மேம்படுத்தியவர்கள் நாம்' என்ற கருத்துநிலை
மேலாதிக்கத்தாக்குதலின்மூலம், கருத்துநிலை அரசியல்மூலம் இதுவரைநாள் நிலைநிறுத்தி
நிற்கின்றவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு காணும் சுதந்திரம்
இவ்வகைப்படும்.//


தமிழருக்கு வழிகாட்டிகளாவதும்,அவர்கள் கூறுகின்ற தமிழர்கள் என்பவர்கள் யாரென்பதும் தங்கள் கூற்றுள் பொதிந்துணரப்படத்தக்கதாக இருப்பினும்,தென்னாசியச் சமுதாயங்கள் சார்ந்தெழுந்த கருத்து நிலைகள் வெறும் கருத்துக்களால் நிலை நிறுத்தப்படவில்லை.அவை குறிப்பிட்ட அதிகாரத்தின் மைய ஆளுமையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனைத் தளத்தைக் கொண்டிருப்பதற்காகக் கட்டபட்ட ஒரு பெரும் நிறுவனமான இந்துத்துவப் பார்ப்பன நிறுவனத்தின் நீட்சியாகும்.இங்கே மாலன் என்பவர் குறித்துரைத்தவை அவரையொத்த பலரின் கருத்துக்களாக இருப்பதாக அவரது கூற்றே தெளிவுப்படுத்தும்போது,அந்தத் தனிமனிதர் இந்த நிறுவனத்தின் உறுப்பினராகிறார்.அவரே நேரே வந்து ஒப்புதல் அளித்தும்விடுகிறார்.ஆக மொத்தத்தில் மாலன் வெறும் குறியீடாக இருக்கலாம்.ஆனால், தங்கள் கருத்துத் தளம் விரியும் இன்னொரு பரப்பு ப் பார்ப்பனியத்தின் உட்கூறுகளையும் அதன் ஆதிக்கக் கருத்தியல் தளத்தையும் நோக்கியதாக இருப்பதே சாலச் சிறந்தது.இத்தகைய தரணத்தில்மட்டுமே உளம்சார்,சிந்தைசார் விடுதலைக்கான வாசற்கதவு திறக்கப்படுகிறது.அதை நோக்கிய வழிகள் யாவும் ஆளும்வர்க்கத்துப் பெரும் ஊடககங்களாலும் காவி பூசிய கல்வியாலும் தடைப்படுத்தப்பட்டிருப்பதைச் சொல்லும் அறிவு நாணயம் அவசிப்படுந்தறுவாயில் விமர்சனம் செல்லும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்தச் சுதந்திரத்தை வலியுறுத்தும் நீங்கள் முதலில் அந்தச் சுதந்திரத்தின் எதிரிகளைத் திறம்பட இனம்காணத்தக்கபடி மக்கள் முன் நிறுத்தவேண்டும்.இத்தகையவொரு முன்னெடுப்பைக் கருத்தியற் தளத்தில் ஆழமாகச் செய்வது அவசியமானதாகும்.ஆதிக்க வாதிகளிடமிருந்து விடுவித்துக் கொள்வதுற்கு அந்த ஆதிகத்துக்கு மாற்றானதை முன்வைத்துப் போராடுவது அவசியமாகும்.பார்ப்பனியத்தின் ஆதிகத்துக்கு என்ன மாற்றீடு முன்மாதிரியாக இருக்கும?;.நமது பண்பாட்டைச் சிறைப்படுத்திய பார்ப்பனியத்துக்கு நாம் தொடர்ந்து படியளப்பதும் அதையே நமது பண்பாடாக உணர்ந்து, எமது உடல்களை அதற்காகத் தாரைவார்ப்பதும் இன்றைய சர்வசாதரண வாழ்வியலாக நமக்குள் முகிழ்க்கும்போது அதை நிலைப்படுத்தும் தரணங்கள் மிகுதியாகக் கொட்டிக்கிடக்கிறது எமது சிந்தையுள்.அதை விலக்கும் மாற்று என்ன?இத்தகைய வியூகமற்றுச் செய்யப்படும் விவாதம் எத்துணை தூரம் மேற்சொன்ன சிந்தை-உளசார் விடுதலையைச் சாத்தியமாக்கும்?


//மேற்கின் குடியேற்றவாதிகளை எமது சொந்தநாடுகளிலிருந்து வெளியேற்றுவதென்பது
உறைவிடம்சார் சுதந்திரப்படுத்துதலென்று கொண்டால், அவர்களின் கருத்தாக்கங்களும்
வரலாற்றுப்படுத்துதலுமே முற்றுமுழுதாகச் சரியென்ற கருத்துநிலையிலிருந்து எம்மை
விடுவிடுத்துக்கொள்வதிலான சுதந்திரம் கருத்துநிலைச்சுதந்திரமாகும். இதே
கண்ணோட்டத்திலேயே ஈழத்தமிழரின் சிந்தை மீதான மேலாதிக்கவாதிகளின்
சிறைப்படுத்துதலிலிருந்து விடுதலை பெறும் நிலையையும் நான் காண்கின்றேன். இவ்விரு
உறைவிடம்சார் விடுதலைப்போராட்டத்தினை ஈழக்களத்திலும், கருத்துநிலைசார்
விடுதலைப்போராட்டத்தினை பல்வேறு தகவலூடகக்களங்களிலும் சமகாலத்திலேயே
நிகழ்த்தவேண்டிய அவநிலைக்கு நாம் உள்ளாகியிருக்கின்றோம்.//


மிகச் சரியான வரையறுப்பு.நல்லது!இந்தக் குடியேற்ற வாதிகளை வெளியேற்றிவிடுவது மிக இலகுவானது.ஆனால், அவர்களது கருத்தாகங்களும் வரலாற்றுப்படுத்தப்பட்ட விஞ்ஞான விளக்கங்களையும் அவ்வளவு இலகுவாக விட்டொழிக்க முடியுமா?இன்றைய மேலாண்மைச் சிந்தனையானது வெறும் கருத்துகளால்மட்டும் ஆனதில்லை.அது அவர்களது பொருட்களிலும்,மருத்துவ மற்றும் விஞ்ஞானத்திலும் மெருக்கேற்றப்பட்டு நம்மைத் தாக்குபவை.இன்றைய வர்த்தகக் கலாச்சாரமென்பதை எங்ஙனம் மதிப்பிடுகிறீர்கள் பெயரிலி?இதன் போசாக்கென்பது மூன்றாம் உலகத்தை ஏப்பமிடுவதிலும்,நுகர்வடிமையாக்குவதிலுங் மையங் கொள்கிறதென்பது உண்மையா? அப்படியாயின் இதற்கெதிரான போராட்டம் எல்லையைத் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடுமா அல்லது எமது வரலாற்றைப் புரட்சிகரமான முறையில் உந்தித் தள்ளி மாற்றை வைத்துப் போராடுவதில் நிசமாகுமா?இலங்கையை உதாரணமாக எடுத்தால் நமது சிந்தனையை நாம் நமது நோக்கிலிருந்து இதுவரை முன்னெடுத்தபோதெல்லாம் எமக்கு எதிரான ஆதிக்கக் கருத்துக்கள் மெல்லத் தாக்குகின்ற வரலாறு வெறுமனவே நம்மை வந்தடையவில்லை.அவை நமக்குள் இருக்கும் வளங்களாலேயே முன்னெடுக்கப்படுவதை நாம் எதிர்கொள்ளும் இன்றைய யதார்த்தத்தில்- அதை மேன்மேலும் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கம், அந்த மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்கும் தரணத்தில் எங்கே செல்லும்?அதை அப்பட்டமாக விடுதலைக்கான முன்னகர்வென்றழைக்க முடியுமா?

//இப்போராட்டங்களிலே எம் சுயத்தினையும் தேவைகளையும் அடையாளம் காணவேண்டும்; எம்
காலம் சார்ந்த இருப்பின் தொடர்ச்சியினையும் பங்களிப்பினையும் நிறுவவேண்டும்;
நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது புவிநிலை, கருத்துநிலைசார் விடுதலைகளை,
ஈழத்தமிழரென்று கொண்டிருக்க நாம் ஆரம்பித்துச் செய்யவேண்டியது இதுதான்:
"ஈழத்தமிழரின் சிங்களம் அண்டிய புவிசார் வரலாற்றோடு, கருத்துநிலைசார் அகிலத்தமிழர்
என்ற பெருங்கூட்டத்தினுள்ளேயும் எம் தொடர்ச்சியான இருப்பும் பங்களிப்பும் குறித்த
வரலாற்றினையும் ஆவணப்படுத்தவேண்டும்." எதிர்கால வரலாறு எம்மை விடுதலை
செய்யவேண்டுமானால், எம் கடந்த கால வரலாற்றினை நாம் விடுதலை செய்தாகவேண்டும்;
தங்கிநிற்கும் மோழைத்தனமும் இரண்டாம்நிலைச்சமூகமென்ற தாழ்வுணர்வும் நீங்கும்படியாக,
மற்றவர்களுக்கீடான எமது சாதனைகள், பங்களிப்புகள் பதியப்பட்டாக
வேண்டும்.//


பெயரிலி,இங்கே இன்னொரு மனவிருப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.தமிழர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனமான பாசப்பொழிவு புலப்படும் சிந்தனை இதுள் தூக்கலாக இருக்கிறது.அங்ஙனம் நீங்கள் கூறாதபோகினும் இதுள்மையமிடும் உணர்வு அத்தகையவொரு உணர்வினைத் தூண்டமுடியும்.எவ்வளவுதாம் நாம் முயன்றாலும் தமிழ்பேசும் உலகம் ஒரு தேசிய இனமாக இருப்பதற்கான ஒழுங்கமைக்கு குறைவானது.தமிழ் பேசுபவர்களை பல் தேசிய இனங்களாக இலங்கைக்குள்ளேயே நம்மால் பார்க்கமுடியும்.எனவே, அகிலவுலகத்துத் தமிழரெனும் பெருங்கூட்டத்துள் எமது தொடர்ச்சியை நிலைப்படுத்துவது அவ்வளவு இலகுவல்ல.அதுவும் அவசியமற்றது.ஏனெனில், நம்மைத் தொழிலால் ஒன்றுபடுத்திவிடமுடியும்.மொழியால் கூறிடப்படும் மானுடம்,தன் தொழிலால்-படைப்பால் ஒன்றுபடும்போது அங்கே ஒருமித்த மக்கள்பலம் தன்னையொடுக்கும் பெரு நகர்வை மிக இலகுவாக-வெளிப்படையாகப் புரிகிறது.இங்கே ஒடுக்கப்படும் அந்தக் கூட்டம் ஒடுக்குபவர்கள் தத்தம் இனங்களுக்குள்ளேயும்,வெளியேயும் கரங்களை இணைப்பதைப் புரிந்திட வாய்ப்புண்டாகிறது.இதுவன்றி நமது மானுடத் தொடர்ச்சியைக் குறுக்கி இனம்சார்ந்த-மொழிசார்ந்த அலகுகளுக்குள் இனம்காணும்போது, நிகழ்வது வெறும் உணர்வு நிலைப் புள்ளியில் தங்கும் பெருமிதம்தாம்.அங்கே செயற்கரிய வியூகம் அடிபட்டுப்போகிறது.எதிரியும் நமது இனம் எனும் பச்சோதாபம் எம்மை விடுவிக்கப் பங்கஞ் செய்து படிமத்துள் தள்ளும் நம்மை.கோழைத்தனமும்,இரண்டாம் நிலைச் சமூகம் எனும் உணர்வு நிலை எங்ஞனம் தொடர்ச்சியை வற்புறுத்தி இதுவரை நம்மைத் தொடர்கிறது.தனிநபர் வழிபாடு,ஏன்-எதற்கு என்ற கேள்வி ஞானமின்றிய கட்சி-இயக்க விசுவாசம்,நக்கிப் பிழைப்பதே சாலச் சிறந்ததாக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சினிமாத்தனமான கருத்தாடல்,தனிமனிதவாதம்.இவைகளெல்லாம் ஓட்டுமொத்தமாகவுள்ள ஒரு சமூகம் அதிலிருந்து விடுபடும் பண்பாட்டுப் புரட்சிக்கு எவர் தடைக்கல்லாக இருக்கிறார்கள்.அகவிடுதலையென்பது புறவிடுதலையோடுமட்டுமே சாத்தியமாகும்போது,அகத்தைப் புறத்திலிருந்து பிரித்தெடுதுப்பார்த்தல் அகவயக் குறைபாடுதாமே?எல்லைகளை விடுவித்துப் புவிநிலைசார் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.எங்கே தேசியத்தன்மைகள் அழிகப்பட்டனவோ அங்கே அந்த அலுகுகள் மீளக் காக்கப்பட்டு,அது சார்ந்த பொருளாதாரச் சுதந்திரமின்றி புவிசார் விடுதலை கனவிலும் சாத்தியமில்லை.இது எல்லா வகைப்பட்ட விடுதலைக்கும் புறநிலையாக இருக்குமொரு முன் நிபந்தனை.அதை மறுதலித்தபடி நாம் சொல்லும்-செய்யும் விவாதம் உட்புறுத்துள் ஊனத்தைக்கொண்டபடி கருத்து நிலையில் தோல்விக்கான காரணங்களை வேறொரு பொருளில் பேச முற்படும்.

//இப்படியாக, எதிர்கால இருத்தலை, சமூகத்திலே எமக்கான பங்கை நிச்சயப்படுத்தும்
நோக்குடனேயே, நாம் இங்கே தமிழரின் வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழிணையவரலாற்றினையும்
காணவேண்டும். மகாவம்சமும் பரணவிதாரணவும் அடித்துப்போட்டுப் போட்டு நிலையற்று
அலையும் ஈழத்தமிழரின் கடந்த புவிசார்வாழ்வுக்கு ஈடான ஓர்
இரண்டாம்நிலை(இணைய)த்தமிழ்வாழ்வினையே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' என்ற சொல்லாடல்,
இச்'சுதேசமித்திரன் பாரம்பரிய'த்தை, அதைச் சார்ந்திருக்கின்றவர்களின் கதைகளுக்கு
அப்பாலான எத்தமிழருக்கும் வழங்கும். மாலன் + லேனா தமிழ்வாணன் போன்றோரின் "வெறும்
ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் என்பதைக் கொடுத்தவர்கள் நாம்" என்ற சொற்றொடர் வெறுமனே
எஸ். பொன்னுத்துரை என்னும் ஒருவரின் நாவடக்கமுடியாத எதேச்சைப்பேச்சுக்கான
எதிர்வினையென மட்டுமே கருதிவிட்டுப்போகமுடியாது. அக்கூற்றின் அடியிலேயிருக்கும்
குமுதம்+கல்கண்டு ஆசிரியர்களின் நுண்ணரசியல், எம் சிந்தைத்தளத்தினை, அவர்கள் தருவதே
வரலாறு என்ற கருத்துநிலைத்தளத்திலே அடக்கி ஒடுக்கும் தன்மையிலேயே எள்ளலாக
வெளியிட்டுக் கக்குகின்றது.// "


...புவிசார் வாழ்வுக்கு ஈடான இரண்டாம் நிலை(இணைய)தமிழ்வாழ்வினையே சுதேசமித்திரன் பாரம்பாரியம் என்ற சொல்லாடல்..."பண்டுதொட்டு தமிழக வர்த்தகச் சஞ்சிகைகள் உலகு தழுவிய சந்தைக்காகத் தமிழ்பேசும் உலகத்தை மொட்டையடிப்பது வெறும் பொருட்தளத்தில் மட்டுமல்ல.அது அதைத் தக்க வைப்பதற்காகவே உள்ளேயும் வெளியேயும் பற்பல சிறப்பான மேலாதிக்க மனோபாவதைக் கருத்துக்களாகக் கொட்டுகிறது.இது வெறுமனவே ஒரு இனத்தின்மீதான காழ்புணர்வொடு சம்பந்தப்பட்டதல்ல.அதிகாரத்தைச் சந்தையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனா முயற்சியென்ற வகையில் பெயரிலியின் இக் கூற்றோடு உடன்படமுடியும்.அது மட்டுமன்றி ஒருகமைந்த செயற்கையான இந்தியாவில் தாம் கொண்டிருக்கும் ஆதிகத்தைத் திறம்படத் தக்கவைப்பதும்,ஒட்டச் சுரண்டுவதற்கும் இத்தகைய கருதாண்மை அவசியமாவும் இருக்கிறது.இது தமிழகத்தின் விடுதலையை மொட்டையடிப்பதற்காக ஈழத்தமிழ் மக்களின் சுய விடுதலையைக் கொச்சைப்படுத்தும்.இங்கே சோ இரமாசாமிபோன்ற காரியவாதப் பார்ப்பனர்கள் இதுள் முக்கிய பங்காற்றுவார்கள்.இவற்றுள் பற்பல அடுக்குகளாகப் பார்ப்பனக் கருத்தாண்மை நம்மைப் பலவீனப்படுத்திப் பண்பாட்டு ஒடுக்குமுறையையும்,உளவியற் தாக்குதலையுஞ் செய்கிறது.அந்தத் தளத்தின் உறுப்புக்களாக இருப்பவை இன்றைய ஊடகங்களே.


//சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பிய தமிழகம்போலவேதான்,
வீரகேசரிக்கு வந்த வரா உம், இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு வந்த இசை கற்பித்த
மஹாராஜபுரம் சந்தானமும் பின்னாளிலே தமிழகத்திலே பெயர் பெறும்வரை வாழ இலங்கையும்
வழிசெய்ததென்பதை 'சுதேசமித்திரன் பாரம்பரியக்காரர்கள்' மறை/றந்துவிடுகின்றார்கள்.
(ஒரு வலைப்பதிவு நண்பர், தாம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கர்நாடக இசைச்செல்வி
ஒருவரிடம் ஈழத்தின் பிரபலமான சில இசைக்கலைஞர்களின் பெயர்களைச் சுட்டிப்பேசியபோது,
"யார் அவர்கள்?" அச்செல்வி கேட்டதாகச் சொன்னார்) தமிழக ஆதீனங்களுக்கு
ஆறுமுகத்தம்பிரான்களையும் ஈழம் தந்திருக்கின்றது (திருவண்ணாமலை ஆதீனம்)2;
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துக்கு விபுலாநந்தரைத் தந்திருக்கின்றது;
கனகசுந்தரம்பிள்ளை, தமிழ் அகராதி கண்ட கதிரவேற்பிள்ளை ஆகியோரைத் தந்திருக்கின்றது; வி. கல்யாணசுந்தரம்
சொல்வதுபோல "சுவாமிநாதையர் கூரைபோட உதவிய தமிழ்ப்பதிப்புலகுக்கு, அடிக்கல்லிட்ட
ஆறுமுகத்தையும் சுவர்கட்டியெழுப்பிய தாமோதரம்பிள்ளையும்"
தந்திருக்கின்றது.
தமிழாராய்ச்சி மகாநாட்டினைத் தொடங்க, உழைக்க தனிநாயகத்தினைத் தந்திருக்கின்றது.
(அதன் தொடர்ச்சியான தமிழாராய்ச்சி மகாநாட்டிலே சிதம்பரத்திலே ஆறுமுகநாவலரின் சிலை
எழுப்பப்படும் என்று அன்றைய தமிழக அரசுத்தலைமைச்செயலர் சொல்லியும் அது
தவறிப்போயிருக்கின்றது.2 தொடர்ச்சியாக, ஜெயலலிதா முதல்வராகவிருந்தபோது,
ஈழத்திலிருந்து தமிழாராய்ச்சி மகாநாட்டுக்குப் போன தமிழறிஞர்களைச் சிறைவைத்த
சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றது. இஃதெல்லாம் எப்பாரம்பரியத்தின் வழிப்பட்டது?
சுஜாதா ரங்கராஜன்கூட "சிங்களத்தீவுக்கோர் பாலமமைப்போம்" எழுதினார். அந்நேரத்திலே
மாலன் என்ன செய்தார்? கற்கண்டு இலெட்சுமணன் என்ன செய்தார்?)
தமிழிலக்கியவிமர்சனத்துறையிலே மார்க்ஸிய அணுகுமுறைக்கு கைலாசபதியையும்
சிவத்தம்பியையும் காலத்தே முந்தியதாக ஈழம் தந்திருக்கின்றது; தலித் எழுத்து
முன்னோடியாக, 'பஞ்சமர்' டானியலைத் தந்திருக்கின்றது; கவிப்படிமத்துக்கும் ஒரு
பிரேமிளை, அவரைத் தமிழகத்தவரென்றே மயங்கிக்கொள்ளுமளவுக்குத்
தந்திருக்கின்றது.//


·பெரும்பாலும் பெயரிலி குறிப்பிடாத இன்னொருவிடயம் இங்கே உண்டு.ஆளும் வர்க்கக் கருத்தியல் தளத்தில் நிற்கும் அவர்களிடம் இவற்றைக் கோரிக்கையாகவோ அல்லது மறந்துவிடுகிறார்களென்றோ கூறுவதற்கில்லை.ஒவ்வொரு வர்க்கமும் தன் தன் வர்க்க நலனுக்குச் சாதிய நலனுக்கொப்பவே காரியமாற்றும்.இது அனைத்து மக்கள் கூட்டத்திடமும் நிலவும் விஷயம்.இதை இப்படியும் பார்க்கலாம்.ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற சுயகெளரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம் ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப் பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக விரியவேண்டியுள்ளது.அதாவது, ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த நிறமும் இல்லை.அவர்கள் சாரம்சத்தில் பொதுவானவொரு வர்க்கக் கூட்டைக் கொண்டிருக்கிறார்கள்.இன்று ஆறுமுகத்தைப்பற்றிக் கூறுகையில் அவர் ஆசான்,நாவலர் என்று ஒளிவட்டம் உண்டு.ஆனால், அவரது மறுபக்கமோ அப்பட்டமான சாதி வெறியன் என்பதாக விரியும்.ஊருக்கு ஊர் எழுந்த "சைவப்பிரகாச வித்தியாலயம்"எனும் ஆரம்பப்படசாலைகளுக்கூடாக நாம் காணும் சமூக யதார்த்தம் என்ன?இது தாழ்த்தப்பட்டவர்கள் அரச கலவன்பாடசாலையுள் உள்வாங்கப்பட்டதற்கு எதிர்க்கும் முகமாக எழுந்ததா இல்லையா? இந்த ஆறுமுகத்திடம் இருந்த ஆதிக்க-மேலாதிக்க மனம் எந்தக் கருத்தால் வடிவமைக்கப்பட்டது?தமிழரசுக் கட்சியும்,இராசலிங்கம் போன்ற தாழ்த்தப்பட்ட அரசியல் வாதிகளின் நிலையும் புரிந்துகொள்ளத்தக்கதே.ஏன் இன்றைய உண்மையானவொரு சமூக யதார்த்தம் பேராசிரியர் சிவத்தம்பியின் திறமைக்கு என்ன தகுதியை வழங்கியதென்பதைப் புரிவதில் தெளிவுறும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் முதல்வர் பதவிக்கு அவரைவிட அறிவிலும் வயதிலும் கீழ்மைப்பட்டவர்கள் வந்தபோதும் இவருக்கு மறுப்பு எந்தவடிப்படையில் நிகழ்ந்தன?அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்குத்தானே?



//இப்படியாகவே, கருத்துநிலையிலே தமது சொந்த(த் தமிழ்)ச் சமூகத்துள்ளேயே
இரண்டாம்நிலைக்குடிமக்களாக உணராதிருக்கும் சுதந்திரம்வேண்டியே எவ்வரலாற்றினையும் -
தமிழர் நிகழ்நிலை வரலாற்றையோ, மெய்நிகர் இணைய வரலாற்றினையோ - நாம் திருப்பியும்
திருந்தவும் சரியான தரவுகளைத் தாங்கி எழுத வேண்டிய அவசியமேற்படுகின்றது. எம்
மொழி,குடி, பண்பு வரலாற்றை நாம் மாலன் போன்றவர்களின் கைகளிலிருந்து விடுதலை
செய்யவேண்டியதாகின்றது. வாய்ஸ் ஆப் விங்க்ஸ் போன்ற நண்பர்களுக்கு (மீள)
வரலாற்றினையெழுதலின் தேவையின்மையும் அதன் முக்கியம் உணர்வதற்கு முடியாததாக வெறும்
உணர்வின் அடிப்படைப்பட்ட வெற்றுக்கூச்சலாகவும் படலாம். ஆனால், எனக்கு அப்படியாகத்
தோன்றவில்லை. இணையத்தமிழ்வரலாற்றைப் பேசுவது மாலனுடன் வாதத்தினை வெல்வதற்குமப்பால்,
தனக்கென்றே ஒரு வரலாற்றுத்தேவையமைந்தாயுள்ளது//



இங்கே எவர் எவரிடமிருந்து வரலாற்றை விடுவிப்பது?வரலாற்றைப் படைப்பவர்கள் எவர்கள்?எந்த வரலாற்றை விடுவிப்பது?மாலனின் கைகளில் வழமையாக இருப்பது ஊடகப் பலமும்,அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்தின் கருத்துநிலை ஆதிக்கப்பலமும்தாம்.இதைக் கடந்து மாலன் வரலாற்றைத் தடுத்திடவோ அல்லது திசை திருப்பிடவோ முடியாது.வரலாறு தன் ஓட்டத்தோடு நம்மை அழைத்துச் செல்கிறது.எம் மொழி,குடி,பண்பு வரலாற்றை நாம் மாலனிடமிருந்தல்ல விடுவிப்பது மாறாக நிலவுகின்ற இன்றைய சமுதாய அமைப்பிடமிருந்தே விடுவிக்க வேண்டும்.மாலன் சேவகன்.ஒரு மாலன் போனால் பற்பல மாலன்கள் பின்தொடர வாய்ப்புகள் அதிகம்.இந்த அமைப்பைத் தூக்கி நிறுத்தும் கருத்தியல் தளத்தை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மிகப் பெரும் பலம் பொருந்திய தளத்தை நமக்குள் பண்பாட்டு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும்,சமூகவுளவியற்றளத்திலும் மிக ஆழமாகவூன்றியுள்ளன.இவற்றைக் கடந்து நாம் வரலாற்றை விடுவிப்பது என்பதைவிட அதைப்படைப்பவர்களாக ஒருமைப்பட வேண்டும்.ஏனெனில,; வரலாற்றைப்படைப்பவர்கள் உழைக்கின்ற மக்கள் கூட்டம்தாம்.வரலாறென்பதைத் தனிநபர் திருத்தலாக்கிவிட முடியாது.அங்ஙனஞ் செய்யப்பட்ட சிங்கள வரலாற்றுப் புனைவுகளின் இன்றைய இழி நிலையை நாம் ஆளும் வர்க்கத்தின் குருதி தோய்ந்து பற்களினு}டாகப் பல்லிளிப்பதைக் காணமுடியும்.எனவே, புனைவுகள்,புரட்டல்களைப் பண்டுதொட்டுச் செய்த வரலாற்றுக் காரணங்கள்,தேவைகள் இன்றும் நிலவுவதை இனம் காண்பதே சாலச் சிறந்தது.அதையொட்டியே பாரிய அறிவுத் தேடலையும்,குறிப்புகளையும் சமூகப் பொறுப்போடு செய்யவேண்டும்.அங்ஙனம் செய்யாத நிலையை எய்வதற்காக மாலன்கள் குறுக்கே நின்று கல்லெறிவதைக் குறித்து விவாதிக்க முடியுமேயொழிய அவரிடமிருந்து வரலாற்றை விடுவிப்பதென்பது மிகை மதிப்பீடு.


//எமது கருத்துகள் இந்திய இராணுவத்தின் இலங்கைக்கான வருகையின் பின்னால், ஒரு போதும்
இச்சஞ்சிகைகளிலே, ஊடகங்களிலே தெரியப்படுத்தப்பட்டதில்லை. கிட்டத்தட்ட ஈராக்குக்கு
படையினரோடு சென்ற அமெரிக்கப்பத்திரிகையாளர்கள்போலவே தமிழ்நாட்டின்
பத்திரிகையாளர்கள் செயற்பட்டுக்கொண்டார்கள். இராம், மாலன், சோ போன்ற இதழாசிரியர்கள்
இன்னமும் ஒரு படி மேலே சென்று இந்த அரசியலிலே தமக்கான ஒரு நிலைப்பாட்டினைக்கூட
எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு அப்படி எடுக்க இருக்கும் உரிமையை எவ்வகையிலும்
நான் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர்களாகவிருக்கும் ஊடகங்கள், சஞ்சிகைகள்,
செய்திநிறுவனங்களிலே பணம் விட்டு வாங்கிக் காணும் எல்லா வாசகர்களுக்கும்
பேதமின்றிக் கருத்தினைச் சொல்லும் சந்தர்ப்பத்தினையும் செய்திகளைச் சரியான
தரவுகளோடு எவருக்குச் சாதகம்-பாதகம் என்றில்லாமலே தந்திருக்கவேண்டும். ஆனால்,
ஒருபோதும் செய்யவில்லை. எங்கள் குரலைக் கேட்கவிடவில்லை.//



இதுதாம் இன்றைய மிகப் பெரிய அப்பாவித்தனம்.யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?முடிந்தால் சோபா சக்தியைத் தமது தேவைக்காகப் பயன்படுத்த முனைவார்கள்.அங்கே, நமது குரல் பதிவிடப்படுவதல்ல நோக்கம்.தமது நோக்குக்கு உரம் சேர்ப்பது.அந்த வகையில், இவர்களிடம் போய் நம் குரலைக் கேட்கவில்லையென்பது அப்பாவித்தனமா இல்லைப் புத்திஜீவிதத் தொந்தரவா?என்றைக்குமே ஆதிக்கத்தை நிலைப்படுத்துபவர்களின் ஊடகங்களும்,அவர்களின் பரபலங்களும் தம்மிலும் கீழானவர்களுக்கு எந்த வகை உதவிகளைச் செய்துள்ளார்கள்.தொடர்ந்தும் எங்கள் கால்களில் விழுந்தொழும்வுவதற்கான தளங்களையும்,வலைகளையும் உதவி-மனிதாபிமானம் என்ற முகமூடிக்குள் ஒழிந்தாற்றும் கபடம் அறியத் தக்கதுதாமே?இதிலிருந்து இவர்களைப் பிரித்துப் பார்க்க முடியுமா?இத்தகைய ஒடுக்குமுறையாளர்களிடம் எந்தச்"சாதகம்-பாதகம்"என்ற அளவுகோல் முன்னிலைப்படும்?அதென்ன அவர்களுக்கிருக்கும் உரிமை?தமது எஜமானர்களுக்கு வாலாட்டும் உரிமையா?அந்த உரிமைக்குள் இருக்கும் நரித்தனம் இன்னொரு இனத்தின் விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்குமானால் அதைக் குறித்து என்ன வகைமாதிரியான அணுகு முறையை நாம் செய்யவேண்டும்.ஐயோ,அவர்கள் எங்கள் குரலைப் பதிவிடவில்லையே என்ற ஆதங்கமா?பெயரிலி இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.அதை இங்கே மிகவும் கவனமாகச் சுட்டுகிறேன்!


//இத்தனைக்குப் பிறகு, இப்படியான அவலச்சூழலிலே அவம்சுமக்கும் தன் ஊடகவியலாளர்
முகத்தினை இன்னமும் இணையத்திலே(யும்) காவி வந்து "விடுதலைப்புலிகளையா இந்துவையா
உலகம் நம்பும்?" என்று மாலன் வெட்கமின்றி எம்மிடம் கேட்கும்போது, இத்தனை ஆண்டுகளாக
குமுதத்துக்கும் இந்தியா ருடேக்கும் நான் விட்டழித்த காசின் பெயரினாலே,
தமிழகச்சஞ்சிகைகளில் இழந்த நம்பிக்கையின் பேரால், ஒரு வாசகனாக, ஏமாற்றப்பட்ட
வாடிக்கையாளனாக, அவரிடம், அவரது பத்திரிகாதர்மம் மேலே, இங்கே -அவர்
தப்பித்துப்போகமுடியாத,என் குரலும் அமுக்கமுடியாது கேட்கும் இணையத்திலே- கேள்வி
கேட்காமல், வேறெங்கே, வேறு யாரிடம், வேறெப்போது, வேறெதைப்பற்றி நான் கேட்பது? இதைக்
காழ்ப்புணர்விலே கேட்கின்றேன் என்று அவர் கருதினால், "இத்தனை நாள் உங்கள்
உற்பத்திகளைத் தரம், குணம், மணம் பற்றியேதும் கேட்காமல் வாங்கிக்கொண்டேயிருந்த
எங்களின் அவலங்கள் பற்றி ஒரு சொல் உங்கள் சஞ்சிகைகளிலே, செய்திகளிலே உங்கள்
நாட்டுக்கோ, இராணுவத்துக்கோ மாற்றானதாக விடாத உங்களின் உணர்விலே எம்மைப் பற்றிக்
காழ்ப்பிருந்திருக்கவில்லையா? ஓர் இரண்டாம்நிலைத்தமிழர்களென்ற கீழ்நோக்கிய
பார்வையிருக்கவில்லையா? " என்று நான் எதிர்க்கேள்வி கேட்கலாமா? //



பெயரிலி இது எங்களது தவறேயன்றி அவர்களது தவறில்லை.நாம் நம்மை அறிவதில் நாட்டமின்றிப் பொத்தாம் பொதுவான கருத்து நிலைகளால் சூழப்பட்டபோது இங்ஙனம் காரியமாற்றினோம்.குமுதம்,ஆனந்தவிகடன் எம்மைக் கவருவதற்கான அவர்களது தந்திரத்தால்மட்டுமே ஏமாற்றப்பட்டோம்.அவர்கள் ஒருபோதும் தம்மை நம்பும்படி நமக்குக் குரலிடவில்லை.அவர்களது நலனையும்,அவர்களது வர்க்கத் தளத்தையும்"தமிழர்கள்"எனும் பொதுக் கூப்பீடால் ஒதுக்கிவிட்டுப் பார்த்தோம்.ஒவ்வொரு அரசியல் முன்னெடுப்பிலும்-போராட்டப் பாதையிலும் முதலில் புரியப்பட வேண்டிய அரசியலறிவானது நாம் யார்?எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இங்கே வர்க்க ஒடுக்குமுறை எந்தத் தளத்தில்,எப்படி நிகழ்வதென்பதே!இதைக்கடந்த எந்த உறுவுகளும் மானுட சமூகத்துள் நிலவ முடியாதென்பதற்கு இதுவொரு உதாரணம்.




//இப்போது, சொல்லுங்கள், மாலன், உங்களைப் போன்ற ஒரு தமிழ்ப்பத்திரிகையாளரிடம்,
வாய்ப்பாகிப்போன எனது-உங்களது என இருபக்கக்குரல்களும் கேட்கக்கூடிய இணையத்திலே,
கேட்காமல், வேறு யாரிடம் நான் இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே என் ஈழம்-இந்தியா பற்றிய
கேள்விகளையும் உங்களின் பத்திரிகாதர்மங்களின் இரட்டை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
நிலைப்பாடுகளைப் பற்றியும் கேட்பதாம்?//


இங்கே கேள்விமட்டுமல்ல பெயரிலியின் சமூகப் பார்வையே முக்கியமாகும்.அவரது வர்க்க அறிவுப்பரப்பும், அதை அவர் எந்த வர்க்கஞ்சார்ந்து சிந்திக்கிறாரென்ற நோக்குமே இனி முக்கியம் பெறும்.இது நாள் வரை இப்படிச் சிந்தித்துவிட்டோம்.இனியும் இப்படியல்ல.அவர்களைத் தோலுரித்து ஆதிகத்தை-அதிகாரத்தை உடைப்பதற்கான அறிவை எழுத்து மூலம் வைப்பதே சாலப் பொருத்தம்.அப்படிச் செய்யும் ஆற்றலும்,அறிவும்,அநுபவமும் உங்களுக்கு உண்டு.அந்தப் பலங்களினு}டே நீங்கள் எழுதும்போது மாலனிடமிருந்தென்ன மற்றெல்லோரிடமிருந்தும் நாம்,நம்மை விடுவிக்க முடியும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
29.07.2007

Thursday, May 17, 2007

தேனிக்கும்பல் மற்றும் ரீ.பீ.சீ.வானொலி...

தேனிக்கும்பல் மற்றும்
ரீ.பீ.சீ.வானொலிக் கயவர்களின்
மக்கள் விரோதப்போக்கு.

இன்று நம்மீது கவிந்திருக்கும் அரசியற் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் சேவகத்தால் பயன் பெற முனையும் ஊடகங்களும் நம்மக்களை இன்னும் அரசியல் அநாதைகளாக்கும் முயற்சிகளைப் புலிப்பாணியிலேயே முன்னெடுப்பதால் நாம் இத்தகைய மக்கள் விரோத ஊடகங்களைத் தினமும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம்.

மக்களின் அடிப்படை வாழ்வு பாதாளத்தில் வீழ்ந்து, உயிர்வாழும் எந்த ஆதாரமுமின்றி மக்கள் படும் துயரமானது வெறும் வார்த்தைகாளால் வர்ணிக்க முடியாதவை.இத்தகைய கொடும் வாழ் சூழலில் மக்கள் கிடந்துழல, அவர்களுக்குத் தனிநாடு-சுதந்திரம்-விடுதலை,அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதாகப் புலிகளும்-புலிகளால் பாதிக்கப்படும் மக்களையும் அவர்களின் அடிப்படை ஜநாயக உரிமைகளைப் பாசிச இலங்கை-இந்திய அரசுகளோடு இணைந்து,அவர்களின் தயவோடு மக்களை விடுதலை செய்வதாகவும்,மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதாகவும் பூச் சுத்தும் இந்தப் பொய்யான கயமைவாதிகளும்(தேனீ,ரீ.பீ.சீ.,ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா குழு,ஈ.என்.டி.எல்.எப்.,புளட்,ஈ.பீ.ஆர்.எல்.எப்,ரெலோ போன்ற அராஜகக் கும்பல்கள்) இலங்கை மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களோடு மட்டும் விளையாடவில்லை.மாறாகத் தேசத்தின் இறைமையுடனும் அந்தத் தேசத்துள் உயிர்வாழும் உழைக்கும் மக்களின் அனைத்துவகை உரிமைகளுடனும் தமது அரசியல் இலாபங்களைக் கூட்டிக் கழித்து வருகிறார்கள்.இவர்கள் கூறும் கருத்துச் சுதந்திரமென்பது தமது இலக்கை அடைய முனையும் கருத்துக்களைச் சொல்லக் கூடிய ஒரு ஊடகச் சுதந்திரத்தையே.
இத்தகைய சுதந்திரத்தைப் புலிகள் தமது இயக்க நலனின் மதிப்பீடுகளால் சிதைக்கும்போது, அதை நிறுத்தித் தமது இயக்கங்களின் நலனை முதன்மைப் படுத்தும் பிரச்சாரங்களை மட்டும் முன்னெடுப்பவர்கள் தம் இலக்கை அடைவதற்காகவே பாதிக்கப்படும் மக்களின் உரிமைகளைக் கைகளில் எடுத்து வேசம் கட்டுவதென்பது இன்றைய பொழுதில் உலகம் அறிந்த விடையமாகும்.
இதை உறுதிப்படுத்தும் இன்னொரு நிலையைக் கீழ் வரும் வாசகர் விமர்சனம் உறிதிப்படுத்தும்.

வாசகர் ஒருவர் எமக்கு அனுப்பிவைத்த தனது கருத்துக்களை நாம் உங்கள் பார்வைக்கு முன் வைக்கின்றோம்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
17.05.2007





சாரணியன் எழுதிய பார்வையற்ற குழந்தையிடம் துப்பாக்கியா? என்ற விமர்சனத்திற்கு சில குறிப்பு எழுத வேண்டும் என்ற நிலையில் சில குறிப்பை எழுத முனைகின்றேன்.


ஒவ்வொரு வர்க்கத்திற்குப் பின்னாலும் ஒவ்வொரு வர்க்க நலன் இருப்பதாக ஏற்றுக் கொள்ளும் நீங்கள் வர்க் நலனை ஐக்கியப்படுத்தவே அல்லது வர்க்க நலனை முதன்மைப்படுத்தும் நிலைப்பாட்டையோ உங்களின் விமர்சனத்தில் காணமுடிகின்றதா என வினா எழுப்ப வேண்டியிருக்கின்றது


நீங்கள் குறிப்பிடும் மூன்று பிரிவினர்களாக


1. புலிகள்

2. புலியை எதிர்ப்பவர்களின் அணி

3. தமிழ் அரங்கம் சிறிரங்கன் ஆகியோரின்தளங்களே பிரதானமானவையாக இருக்கின்றன.


இந்தத் தளத்தில் குறிப்பாக புலிகளின் அல்லது அவர்களின் எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி இங்கு கருத்துக் கூறுவது அவசியம் அற்றது ஆனால் மார்க்சீய புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பொறுக்கியெடுத்து வைத்திருப்பவர்கள் எளிமையாக மக்களுக்குச் சேரக் கூடிய வகையில் சேர்க்க முடியாதவர்கள்,மக்களையோ,தனிநபர்களையோ அணிதிரட்ட முடியாதவர்கள் என கூறியுள்ளீர்கள்.


இந்த நிலையை என்பது உலகில் உள்ள பொதுவான நிலைகள் தான் ஊடகத்தில் இருப்பவர்கள் இருக்கின்ற வர்க்கச் சமூகத்தின் படைப்புக்கள் அதற்கேதான் சேவகம் செய்ய வளர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில் இருந்து அதவாது எழுத்து வடிவத்தில் உள்ள குறைபாட்டைத் முதன்மைப்படுத்தும் நீங்கள். ((method) அணுகுமுறை பற்றிய பிரச்சனையை முதன்மைப் படுத்தி அவர்களின் தத்துவார்த்த பிரச்சனை பற்றிய நிலைப்பாட்டிற்கு தகுந்த பதிலை கொடுக்காது அவர்களை உங்கள் எழுத்தாற்றல் மற்றும் உங்களிடம் உள்ள ஊடக பலத்தின் மூலம் நீங்களும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்துகின்றீர்கள்.


தத்துவார்த்த நிலையில் இருந்து உங்களால் அவர்களின் நியாயத்தை புரிந்து கொண்டு அவர்களை மக்களின் (புலிகளுக்கு எதிராக மாத்திரம் அல்ல) "ஒருங்கிணைப்பதில்,ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய முக்கிய காலகட்ட"மென கருதும் நீங்கள் புலிகளுக்கு எதிரி என்பதற்காக புலிகளின் படைகளில் மூளைச்சலவை செய்து பலிக்கடாக்கலாக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளை கொல்வதற்கு துணைபோகும் குழுக்களான EPRLF, EPDP, TULF, PLOT, ENDLF, TMVP போன்றவற்றின் ஒடுக்குமுறையை இனபேதமற்று மேற்கொள்ளும் ஆழும் வர்க்க அரசாங்கத்திற்கும் அரசை பாதுகாக்கும் அரச இயந்திரத்திற்கு (இராணுவம், நாடாளுமன்றம்) போன்றவற்றில் அங்கம் வகித்துக் கொண்டு செயற்படும் செயற்பாட்டிற்கு துணை போகும் படி கேட்கின்றீர்கள்.


மார்க்சீயம் என்பது அரசு என்றும் போதே அடக்குமுறையத்திரம் என்றுதான் போதிக்கின்றது. ஆக அரச யத்திரத்தில் அங்கம் வகிக்கும் எவரும் உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ள தகுதியற்றவர்கள் இது JVP போன்ற கட்சிக்கும் பொருந்தும்.


இங்கு அணுகுமுறை சம்பத்தப் பட்ட பிரச்சனை என்பது வேறு தத்துவார்த்த நிலைப்பாடு என்பது வேறு. இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதில் எவ்வித கருத்து பேதமும் இல்லை. கருத்தை கருத்தால் வென்றெடுக்க அல்லது அதனை எதிர்க் கொள்ள தாங்கள் கூறுகின்ற எந்த தளமும் இடம் கொடுக்கவில்லை.

மார்க்சீய நிலையில் அரச யத்திரத்தை ஆதரிப்பவர்கள்; மாற்று ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு விரோதமான கருத்துக் கொண்டவர்களை தமது இணையத்தில் போடாதிருப்பதற்கு நியாயம் கூற முடியும். ஆனால் கருத்தை கருத்தால் சந்ததிக்க வேண்டும் எனக் கருதும் நீங்கள் உங்கள் இணைத்தில் சிறிரங்கனின் அல்லது தமிழ் அரங்கத்தின் இணைப்பபை உங்களிடம் தளங்களில் இணைப்புக்களை இட உங்கள் சிந்தனை இடம் கொடுக்க வில்லை. ஆக நீங்கள் எதிர்ப்பது http://www.srisagajan.blogspot.com/, http://www.tamilcircle.net/ அல்லது அவர்களின் தத்துவார்த்த நிலைப்பாட்டையா? ஆக தத்துவ நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் உங்களிடம் உள்ளது பகை முரண்பாடு அல்ல மாறாக நேர முரண்பாடுதான் இருக்கும். ஆனால் தேனி, ரிபிசி போன்றவை முன்வைப்பவை தம்மை மீண்டுமொருமுறை இன்னுமொரு எசமானர்களுக்கு அடிமையாக இருப்பதற்கு சேவகம் செய்பனவாக இருக்கின்றது.

P/S:பொருத்தமில்லாத பகுதிதான் ஆனாலும் இந்த விமர்சனம் மற்றவர்களும் பார்க்கப்பட வேண்டும். இதனால் இதில் பதிவிடுகின்றேன். இதனை தேனிக்கும் அனுப்பி வைத்துள்ளேன் இதனை அவர்கள் பதிவிடமாட்டார்கள் எனினும் இருநாட்கள் சென்ற பின்னர் இதனை பதிவில் இடுங்கள்.

Monday, January 15, 2007

மலையகப் பரிசுக் கதைகள்


மலையகப் பரிசுக் கதைகள்.


"மலையகச் சிறுகதைத் தொகுப்புள்"வாழ்வு"-ஒரு தேடல்"


மலையகச் சிறுகதைத் தொகுப்பை விரித்து அணிந்துரைகளைக் கண்ணுற்றவேளை, திரு.தெளிவத்தை ஜோசெப்பின் விளக்கங்களோடு,திரு.விக்கிரமசிங்காவின் கூற்றுக்களையும் துணைக்கழைத்து-

"மலையக வாழ்வுக்குள் என்னைத் தொலைக்கிறேன்".

முதலில் "விரக்தி" சிறுகதையை என் வசமாக்கிறேன்...சமீபகாலமாகப் புலம் பெயர்ந்து வாழும் எனக்குள் வெறுமையும்,வெறுப்பும்,விரக்தியும் நெஞ்சுள் நிறைந்து உணர்வுகளைக் கேலிக்குள்ளாக்க நான் விரக்தி சிறுகதையை என்னுள் செலுத்தினேன்.

ஒரு தடவை...

இரு தடவைகள்...

மூன்று...நான்கு...

தடவைகள் பலவாகின.எனினும் அடுத்த சிறுகதைகளுக்குள் கவனதைச் செலுத்த முடியவில்லை.விரக்திக்குள்ளேயே வாழ முற்படுவது மிக இயல்பாகிறது!

முயன்று,முயன்று தோற்றேன்!

விரக்திக்குள் மீண்டும்,மீண்டும்...

"தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?"


தாய் ஒரு வார்த்தை,ஒரு வாழ்வு.பெற்றவள்,
பிறந்து வளர்ந்த மண்:தாய்!


இவளை விட்டு...நெடுந்தூரம் வந்தாச்சு.ஓடோடி வந்து,வந்த பாதைகளின் பின்னே மூச்சிறைக்கத் தடங்களை உற்று நோக்கிறேன்,அவைகள் அழிந்து,மறைந்து விட்டன.இவ்வளவு விரைவில் இது சாத்தியமாகுமா?,கேள்வியோடு தலை குனிவு-தவிப்பு!


வந்தமர்ந்த இடத்தின் தற்காலிக நிறைவுகள்,என்னைப் பெருமளவு மாற்றித்தான் விட்டன.இப்போதும் தாய் ஒரு வாழ்வு!


"மருமகளின் அன்பளிப்புகளால் உடல் பூரித்தது.தான் சமைத்தவற்றை மூத்த மகனும்,பேரனும் உண்டதால் பெற்ற வயிறு குளு குளுத்தது.இரு (இ)லயத்தார்களும் வந்து முறைவைத்துக் கதைத்துச் சென்றதால் மனம் பெருமிதப்பட்டது.நள்ளிரவு நெருங்குமுன் முச்சந்தி மண் களவெடுத்து வந்து திட்டி சுற்றிப் போட்டதால் கலக்கமும் அறுந்தது."


அம்மா:பெற்றவள்.


மனதில் உணர்வுகள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுக்கக் காட்சித் திரைகளாய் சம்பவங்கள் நேரெதிரே தோன்றுகிறது!


அம்மா கல்லைக் கொடுத்தாலும்,புல்லைக் கொடுத்தாலும் அவைகண்டு மகிழ்பவள்.


என் அம்மா,உங்கள் அம்மாக்கள்,அசூமத்தின் அம்மா,இப்படிப் பல அம்மாக்கள்.அம்மா ஒரு பொதுவுணர்வு,எல்லா அம்மாக்களும் ஒரு அம்மாவேதாம்!


அம்மாவின் சந்தோசம்,எங்கள் சந்தோசம்:தேசத்தின் சந்தோசம்!அசூமத்துக்கு ஒன்பதாண்டுகளுக்குப்பின்"அம்மா"வைப் பார்க்க முடிந்தது.இன்றெமக்குப் பல பத்தாண்டுகள் சென்றாலும் அம்மாவைப் பார்க்க முடியுமா?-அந்தப் பாக்கியம் கிடைக்குமா?-எல்லாம் "அவன்" செயல்!,இன்ஷா அல்லா!!


இக் கேள்விகளும்,என் தாயாரின் நிழலுருவமும் சதா என் விழிகள்முன்...


தொடர்ந்து தொடர்ந்து முயன்றேன்,அடுத்த சிறுகதைகளை வாசித்து விடுவோமென,எட்டித்தாவ முயன்றால் அசூமத்தும்,அவரது மோட்டார் சயிக்கிளும்,மகனும் கண்ணெதிரே வருகிறார்கள்.


உணர்ச்சி பொங்குகிறது,ஏற்றமாகிறது.ஒரு கொதி நிலையில் மனம் கொதிக்கிறது,ஒரு தவிப்பு.மீண்டும் மீண்டும் எதையோ இழந்த தவிப்பு.உள்ளத்தை இழந்து,கடந்த கால வாழ்வின் மிச்சசொச்ச உணர்வுகளைச் சுமந்து,நினைவு முச்சிறைக்க ஓடோடி வந்து தொலைக்கிறது.


பனங்கூடல்.


கங்கு மட்டைகள்,பனையடியில் கிடக்கும் மூரிகள்,சூப்பிய பனங்கொட்டைகள்,ஆடுகள்,மாடுகள்... அம்மா அடுப்படிக்குள் உட்கார்ந்து அடுப்பூதுவதுபோன்றும்,தம்பிமார்களின் கைகளைப் பிடித்தபடி நான் ஒற்றையடிப் பாதையில்...


தென்னை வளவு.


பெய்தோய்ந்த மழையால் ஈரலிப்பான நிலம்.தென்னங்கீற்றுகளிலிருந்து உருளும் மழைத் துளிகள் குண்டு,குண்டாய் உடலில் பட்டுத்தெறிக்க-நாங்கள் தென்னையுதிர்த்த பாளைகளை,ஓலைகளை,செத்தல் தேங்காய்களை பொறுக்கியெடுக்கிறோம்.அம்மாவிடம் ஒப்படைக்கிறோம்.அப்போதும் அம்மா அடுப்படியில்...


இந்த அம்மா என் அம்மா,உங்கள் அம்மா,அசூமத்தின் அம்மா.அம்மாவின் மகிழ்ச்சி முக்கியம்.அம்மா:தாய்=தேசம்?


ஈரலிப்பான உணர்வு நெஞ்சிலே மேவ நான் மீண்டும் விரக்திக்குள் வாழ்கிறேன்.இப்போது ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த நான்-நாம் தேசம் தொலைத்தவர்களாகிறோம்.


ஆம்!


அம்மாவைத் தொலைத்தவர்கள் நாம்!


இப்போது அசூமத்தின் வலி,எங்கள் வலியாகிறது.


"தினசரி என் சேப்புகளை(சேட்டுப் பை)மேய்தே மாமிக்கென்று சில புடவை அநாமதேயங்களை வாங்கி வைத்துக்கொண்டு,"போய்யிட்டு வாங்களேனப்பா"என்று புடுங்கி எடுத்தாள்."


அதிகமான பெண்கள்,குடும்பப் பெண்கள் இன்றும் சுய பொருளாதாரத்தில் சார்ந்து வாழவில்லை.அவர்கள் தகப்பனினதோ,புருஷனினதோ,சகோதரனினதோ வருமானத்தில் தங்கியுள்ளனர்.இலங்கைபோன்ற நாடுகளின் சமூக வாழ்வின் உண்மை உருவத்தை நன்றாகவே அசூமத் கேலி செய்கின்றார்.எனினும்,மாமிமார்களைக் கடித்துத் தொலையும் மருமகள் பிள்ளைகள் மத்தியில் மனைவியை அன்பின் குறியீடாக்கி,திட்டுவதும் துன்புறுத்துவதும் இருதரப்புக்குமுரிய செயலாய் இருப்பதையுணர்ந்து,அவற்றைப் போக்கவும் முனைகிறார்.இங்கே அன்பைத் தவிர எந்த விண்ணாணங்களும் இருப்பதில்லை.



உழைத்துண்ணும் மனிதர்கள் கட்டுப்பட்டித்தனமான நடுத்தர வர்கக்கத்தின் தன் முனைப்புச் சார்ந்த அதீத தனி நபர் வாத மனிதர்களாக இருப்பதில்லை.அவர்களின் அன்பும்,அறிவும் "தன்னையும் தான் வாழும் சுற்றத்தையும்" பிணைத்தபடியேதாம் உலகை எதிர்கொள்ள வைக்கிறது.இதுதாம் வாழ்வு.இதன் நிசம் போலியான அசத்தல்களுக்கும் அன்பளிப்புகளுக்கும் அப்பால் "எள்ளாய் இருப்பினும் ஏழாய்ப் பிரித்துண்ணும்" உண்மை மானுடப் பண்பாய் விரியும்.அசூமத்தின் மாந்தர்கள் அன்பையே பொழியும் உண்மை மானுடர்கள்.இவர்கள் கூடியுழைத்துண்ணும் பொதுப் பண்போடு வளர்ந்தவர்கள்.பொன்னான மனிதர்களாக நம்மை நெருங்குகிறார்கள்.நாவலாசிரியர் ஜெயகாந்தன்,இயக்குனர் மகேந்திரன் போன்றோரின் கதை மாந்தர்களிடமிருக்கும் "மானுட அழகு" இந்த அசூமத்தின் மாந்தர்களிடம் மிளிர்வதைக் காணும்போது, மகத்துவம் என்பதெல்லாம் மனித வாழ்வின் அனுபவத்துக்கு அப்பால் இல்லையென்பதை உணர்வதும் அந்த அநுபவத்தை அர்ப்பணிப்போடு பெறுவதே வாழ்வின் சுகானுபவம் என்பதை இத்தகைய கதை மாந்தர்கள் மூலமாகச் சொல்லும் அசூமத் கதை சொல்லிகளுள் மிகச் சிறப்பாகத் தோற்றம் பெற்றுவிட்ட நல்ல கதாசிரியர் என்பதை விரக்தி சிறுகதையூடாக நிரூபிக்கிறார்.


இங்கு அசூமத்தின் தாயாரின் மருமகள் மாமிக்காக அன்பையும்,ஆதரவையும் பிடவை மூட்டையாய் கட்டிப் புருஷன் பிள்ளையோடு அனுப்புகிறாள்.இவள் தாய்.தாய்குத் தாய்மை பொழியும் தாலாட்டு இப்படித்தாம் இருக்கிறது நிசத்தில்.


அன்பு.


இந்த ஈரமே இதுவரை இந்த உலகத்தை இயக்கி,மாபெரும் மாற்றங்களைச் செய்தவண்ணமுள்ளது!இது தன்னையும் தன் சுகத்தையும் மறுத்து தன் விழிகளுக்குமுன் தன்னொத்த மானுடர் படும் வேதனைக்காகக் குரல் எறியும்.அது எத்தனை இழப்புகள் நேரிடினும் மனித அவலத்தைப் போக்கப் போராடும்.அந்த உணர்வே அன்பென்ற மகத்தான மனித அழகிலிருந்து தோன்றுகிறது.இது நாடு,மொழி,இனம் என்று மானுட அவலத்துக்குக் கற்பிதங்களைச் சொல்லிக்கொண்டு கண்டும் காணாததாக இருக்காது.எங்கு அநீதி கண்டாலும்,அது தாயே ஆனாலும் தட்டிக் கேட்கும்.இதுவே அன்பின் அர்த்தம்.இதுதாம் ஒரு மார்க்சையும்,லெனினையும்,செகோராவையும் மனிதர்களுக்காகச் சாகத் தூண்டியது.இதுதாம் இறுதிவரையும் ஏங்கல்சுக்கும் மார்க்சுக்கும் இடையிலான அற்புத நட்பாக இருந்தது.


தாயை நேசித்தால் தேசத்தை நேசிப்பது கடினமில்லை.தேசத்தை நேசித்தால் உலகை நேசிப்பதில் போய் முடியும்.இங்கே தாய் என்பவளே மக்களாகவும் மனிதர்களாகவும் நமக்கு உறவுறுகிறார்கள்.தாய் ஒரு குறியீடு, உலகின் அனைத்து உறவுகளுக்கும்.இந்தத் தாயேதாம் தேசத்தை எனக்கு அறிமுகமாக்கிறாள் அவளைவிடவா எனக்கு என் சுய விருப்புகள்,தேவைகள் பெருதாகும்?இல்லை,இல்லவே இல்லை!நான் முதலில் தாய்க்குப் பிள்ளை.உலகத்து உறவுகளுக்கு உறவு சொல்லும் அற்புத அழகு எனக்காக அன்னை தந்தது.


இது உயிரையும் உடலையும்கூட அன்பளிக்கும்!ஈழத்தவர்களான எமக்கிது தெளிவான வரலாறு. வாழ்வின் யதார்த்தத்தில் காணும் வரலாற்று நிகழ்வுப் போக்கில் நாமதையுணர்வது கடினமன்று.



கூட்டுக் குடும்பங்களைச் சிதைத்த பொருளாதாரவுறுகள் மானுடப் பண்பையே மாற்றிமைத்து,மனிதர்களை ஒற்றை மானுடர்களாக்கி சமூகத்திலிருந்து பிரித்தெடுத்து, உற்பத்தி ஜந்திரத்தினொரு உறுப்பாக்கிய இன்றைய காலத்தில், மனித வாழ்வை மீண்டும் மனிதத் தன்மையோடு மாற்றியமைக்க நமக்கு படைப்பிலக்கியமுமொரு ஆயுதமே.எனவேதாம் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிறோம்.இன்றைய உலகில் மனிதர்கள் மிதமான தனிநபர் வெறிக்குள் கட்டுண்டு கிடப்பதற்கும் இதுவே(இன்றைய சமூக நிலைமை) காரணமாகிறது. தன்னையே குறியீடாக்கி உலகத்தைத் தரிசிப்பதற்குமான தன்முனைப்பு எந்தவொரு படைப்பாற்றலையும் மனிதரிடம் பொதுமையாக வளர்க்கவில்லை.அது(படைப்பாற்றல்) சோதனைக்கூடத்து முதிசமாகக் கிடப்பதற்கும் அதுள் ஓரிரு மனிதர்களே தம்மை முன்னிறுத்துவதற்கும் இந்த அமைப்பே உறுதுணையாகிறது.உலகத்தின் அனைத்து நிகழ்வுக்கும் பண்டுதொட்டுப் பெறப்பட்ட நம் முன்னோரது உழைப்போடு கூடி வரும் மனித உறவின் மகத்தான அழகுதாம் காரணமே தவிர, தனிநபர் செயற்பாடோ அல்லது சுப்பர் மூளையோ காரணமில்லை!இதுதாம் அசூமத்தின் கதைகளுடே நாம் காண முனையும் அன்பாய் கதையெங்கணும் விரிந்து கிடக்கிறது.



மனிதவுறவுகள் குலைந்து சிதறும் இன்றைய சமூகத் தளத்தில்,ஒரு அரும்பாய் அன்பைத் தக்க வைக்கிறாள் இந்த மருமகள்.


இது தேவை.


இதன் அரும்பு அகல வேர்களைப் பரப்பி விருட்சமாகணும்.


"மகனும்,பேரனும் கொழும்பிலிருந்து வந்துசேர்ந்த மோட்டாரும் தன் காம்பறா வாசலில் நிற்பதையிட்டு மகிழாத தொழிலாளத் தாய் யாராவதுண்டா?"


அசூமத்துக்கு இந்தக் கவலை வேண்டாம்.


அம்மாவானவள் எப்போதுமே தன் தொப்புள் கொடியுடன் தொடர்புடையவள்.தொப்புள் கொடியை அறுத்துக் குழந்தையைப் பிரித்தெடத்தாலும்,இவள் உள்மனம் தொப்புள் கொடியாய் விரிந்துகொண்டே இருக்கும்.



இவளுக்குக் குழந்தையை மட்டுமல்ல குழந்தையின் பொருட்களையும்,அதன் சிறப்புகளையும் காக்கத் தெரியும்.அதையொட்டி மகிழ்வுறத் தெரியும்.இதுதாம் தாய்மை?


சாதரணச் சயிக்கிள் வண்டியைக் கண்டே மகிழ்வுறும் தொழிலாளத் தாயானவள் மோட்டார் வண்டியைக் கண்டு மகிழ்வதுமட்டுமல்ல அதைச் சாக்கினாலோ பாயினாலோ மூடிப் பாதுகாத்து,இது பிள்ளையின் வண்டியென ஓங்கிக் குரலெடுத்து உரக்கக் கத்திப் பூரிப்பாள்.ஏனெனில் துன்பத்தில் துவளும் தொழிலாளித்தாய் தன்னுடன் துன்பம் முடிவுற்று தன் குஞ்சரங்கள் இன்புற்று வாழ வேண்டுமென்ற பெரு விருப்போடு கனவு கண்டு, உழைப்பவள்.அவள் இதை உணர்வு பூர்வமாக விரும்புகிறவள்.இவளே ஒரு கட்டத்தில் எதிர்காலச் சந்ததிக்காக தன் கருவையே அதா;மத்துக்கெதிராய் ஆயுதமாக்குபவள்.இவள் ஓடும் வரலாற்று வெள்ளத்தில் உயிரூற்றாய் பெருகுபவள்.இப்போது இவள் தாய்:தேசம்!


எண்பதுகளுக்குமுன் இச்சிறுகதைத் தொகுப்பை வாசிக்க நேர்திருந்தால் நிச்சியம் இந்த் யாழ்ப்பாணத்துத் தமிழனால் இத் தொகுப்புக்குள் தன் வாழ்வைக் கண்டிருக்க முடியாது.தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாததுபோல் தூரத்தில் நின்று-வாசித்திருப்பான்.


இப்போது வாழ்வும்-சாவும் சுமப்பவனாய்,உலகெங்கணும் தெருவோரச் சருகாய் அலையும் இவனால்-இவளால் இக் கதைகளைத் தன்னுள்ளே நிகழும் வாழ்வாய்க் காணமுடியும்.அதற்கெதிராய்ப் போராடத் தெரியும்.உயிரைப் பணயம் வைக்கத் தெரியும்.


இதுவொரு ஆச்சரியப்படத் தக்க விந்தையே!யாழ்ப்பாண மண்ணின்(சமூகத்தின்)கட்டுக்கோப்பில் இப்படி உருப்பெறுவது ஒரு மகத்தான மாற்றமே.


நூற்றி ஐம்பதாண்டுகளுக்கு மேலாக உழைத்து,உருக்குலைந்த மலையக மக்களின் சோகச் சுவட்டை-இன்றைய புலம் பெயர்ந்த தமிழர்களால் புரிந்துகொள்ள முடிகிறது!இது நமது வாழ்வென்று ஓங்கிக் குரலெடுத்து அழுகிறோம்.தாயைத் தொலைத்த வாழ்வு-தேசத்தை இழந்து தூர நின்றுறவுகளோடு தோள் சேரத் துடிக்கும் இந்த வாழ்வில்- நம்மை ஜந்திரம் தின்று துப்பும் இன்னொரு பொழுதில்- அனைத்தையும் தொலைத்து அழியும் நமது வாழ்வே மலைய மக்களின் வாழ்வாயும் விரிகிறது.இங்கே பொருள் வயப்பட்ட சம நிலைதாண்டிச் சோகம் தரும் வலி,உறவுகளைத் தொலைத்துச் சுற்றத்தையிழந்து தவிக்கும் வலியையே நாம் குறிப்பிடுகிறோம்.


துடிக்கின்றோம்.தொண்டைக்குள்ளிருந்து ஏதோவொரு பொருள் கேருகிறது,விழிகள் அப்பப்ப பனித்துக் கொள்கிறது-அல் அசூமத்தின் விரக்த்திக்குள் வாழும்போது.


"சத்தியக் கடதாசிக்காரர்களை நொந்துகொள்வது புத்தியில்லை.அவர்களுடைய வாழ்க்கைப் பாதையைவிட இந்த மண் பாதை அவர்களுக்கு மேலானதாக இருக்கலாம்."


மனித வாழ்வின் சோகச் சுவட்டை இத்தனை நாளும் இலக்கியங்கள் தூரத்தில் நின்று துரத்திப்பிடிக்க முனையும் படைப்புகளை நாம் இதுவரை அநுபவித்திருக்கிறோம்.இதிகாசம்,புராணம் இத்தகைய இடர்களை நமக்குத் தந்தவை.ஆனால,; இன்றைய இத்தகைய சிற்றிலக்கியங்கள் நமது வாழ்வின் வலி சொல்லி,நமது வாழ்வை அதன் குருதியோடும் சதையோடும் சொல்லும் பண்பைக் கொண்டிருக்கிறது.துன்பத்தை அனுபவித்து அதைச் சொல்வது அனைத்தையும்விட மேலானது.இன்றைய படைப்பாளிகளை இத்தகைய வாழ்வின் நெருக்கடியேதாம் உற்பத்தியாக்கி நமக்கு தருகிறது.இந்தப் படைப்பாளிகளின் உற்பத்தியானது சமூகத்தில் நிலவும் கொடுமைகளுக்கெதிரான நியாயத்தின் ஜனனமாகவும்,நியாயத்தை நிறுவுவதற்கான போர்க் குரலாகவும் எடுக்கப்பட வேண்டும்.பெயருக்கு இலக்கியம் படைக்கும் சூழல் போய்,வாழ்வின் அனைத்து அடக்கு முறைகளையும் மீறும் எதிர்ப்புக் குரல்களே இவை.இவைகளுக்கு எந்த இடமோ,எந்த மொழியோ கிடையாது.இவை எங்கெங்கு அநீதியுண்டோ அங்கே பிறப்பெடுக்கின்றன.எங்கே மனிதத் துயர் நிலவுகிறதோ அங்கே இவை எதிர்ப்புக் குரலாக நமது வாழ்வோடு இரத்தமும் சதையுமாக ஒட்டி வருகின்றன.


இங்கே அல் அசூமத்தோ விரக்தி சிறுகதையூடாக மலையக மக்களின் அவதியுறும் வாழ்வு நெருக்கடிக்குள் தன்னை முழுமையாகப் புதைத்து,அந்தத் துயரை அநுபவித்து-அதன் தாக்கத்தால் அமிழ்ந்துபோனபோது,குரல்வளைவரையும் நெருக்கடிகளின் வீரியம் வலுக்கரத்தைக் கொணர்ந்தவேளை, அதை எதிர்ப்பதற்காகவும், தன்னை-தான் சார்ந்த மனிதரை-உழைப்பாள வர்க்கத்தை விடுவிப்பதற்கான ஒரு சிறு பொறியாய் மேலெழுப்புகிறார்.அப்பொறியை ஊதிப் பெருக்கி பெரும்ஜுவாலையாக்கிவிட்டு அதற்குள் தன்னைமட்டுமல்ல எல்லோரையும்-சமுதாயத்தில் மனித விரோதிகளாக வாழும் சந்தர்ப்பத்தைத் தூண்டும் அனைத்து ஆதிக்கவாதிகளையும் சேர்த்துக் கட்டியிழுத்துவந்து திணித்துப் பொசுக்கிறார்.இது ஒருவகையில் சமுதாய ஆவேசமாக எழுந்து மனித விடுதலைக்கானவொரு பக்குவப் பண்பைப் பெறும் முன் முயற்சியாக மனம் கொள்ளத் தக்கது.


ஒருவகையில் இதுவொரு வேள்வி!இவ்வேள்வியில் எரிந்து,கருகிச் சாம்பலாகி இறுதியில் எஞ்சும் கரித்துண்டமாய் உணர்வு கேலி செய்கிறது.


"ஆக,யாதும் ஊரே யாவரும் கேளிர்...இடுகாடு சொல்கிறது,புல் முளைக்கும் வரை ஆறடிதாம் என்று.ஆனால் தோட்டக்காட்டுச் செக்றோல் சொல்கிறது,ஒரு மில்லி மீட்டர்கூட இல்லை-போடா!,என்று."


அல் அசூமத்தின் இந்தக் கேலியானது மிக நியாயமானது.இன்றைய நமது வாழ்வின் நிலையில் இத்தகைய கேலிகளை சமுதாயத்தின் ஆதிக்கச் சக்திகளை இனம் காட்டத்தக்கவொரு எளிய வடிவமாக நாம் காணலாம்.இத்தகைய எளிமையான நையாண்டிகளால் மனித துயரத்தின் தொடக்கப் புள்ளி எங்கே வேரிடுகிறது,அது எங்ஙனம் கிளை பரப்புகிறதென்பதையும் நாம் சொல்வதற்கான ஒரு முறமையாக இவற்றைப் படைப்புகளுக்குள் சொல்வது எந்த வகையிலும் மனித வாழ்வின் நேர்த்தியை நோக்கியே.இதைக் கையாளுவதில் அசூமத் சிறந்திருக்கிறார்.


சொந்தமாய் உறவுறும் மண்ணை எவரும்,எவருக்காவும்-எந்த ஆதிகச் சக்திக்காவும்,அதன் வலுவான அடக்குமுறை வன்கொடும் ஜந்திரத்தின் யுத்தத்துக்காவும் விட்டுவிட முடியாது.தான் பிறந்து வளர்ந்த மண்ணை தாய்க்கு நிகரா மதிப்பதும்,உறவு கொள்வதும் மனித வாசிகளின் நியாயமான ஜீவாதாரவுரிமையே!பிறந்த முற்றத்தை எவரும் விட்டுக் கொடுக்க முடியாது,சட்டங்கள்போட்டுப் பறிக்கலாம்,திட்டங்கள் போட்டுத் துரத்தலாம்.ஆனால் உளப்பூர்வமான உரிமையை- அந்தவுரிமையால் எழும் பிணைப்பைப் பாசத்தை யாராலும் பறிக்கவோ -அழிக்கவோ முடியாது!


"கடுங்கந்தை!எட்டு வருஷங்களாக என்னை வளர்த்த பூமி...!உள்ளே ஓர் ஓலை தோன்றி மறைந்தது."


அல் அசூமத்தின் இந்த வார்த்தையும்,உணர்வும் "என்னை"உறுதி செய்கிறது.யாழ்ப்பாணம்... எனது பிறந்த மண்.இதைவிட்டு வெகு தூரம் வந்தபின்பே இதன்மீதான எனது.எமது வாழ்வனுபவமும் அது தந்த வாழ்வுறுதியும்-வனப்பும் அன்னையின் மடிபோன்று இதமாக இருக்கிறது.அந்த் தீவு மண் இன்று தின்னக் கொடுத்து வைக்காது மக்களால் பாவப்பட்ட பூமியாகச் சபிக்கப்படுகிறது!வஞ்சிக்கப்பட்ட மண்ணாய்போன நமது மண்ணில் மழைகூட இறங்குதில்லை.என் தாயின் உடலெங்கும் உயிர் கொல்லி ஜந்துக்கள் சுதந்திரமாக ஊருகிறது.தடி கொண்டு அடித்துவிரட்ட முடியாத தற்குறியாக்கப்பட்ட எனது நிலையை நான் யாரிடம் நோக?இப்போதே அகதிய வாழ்வின் ஐரோப்பியச் சுகமும் என்னை விழுங்கியிருப்பினும்,இந்தத் தேசத்தின் ஜந்திரமென்னைத் தினம் தேசம் நோக்கி உந்தித் தள்ளியபடியே என்-எமது வாழ்வைத் தின்று ஏப்பமிடுகிறது!


நாளை ஒருவேளை அவள் ஜீவகாருண்யம் மெருக்கேறி புதிய காற்றைச் சுவாசிக்கலாம்.


இந்தச் சூழலில்தாம் விரக்தி மிகச் சாதரணமாக நம்முள் ஒரு காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.அந்தத் தாக்கம் தரும் அதிர்வு மிகச் சாதரணமன்று.அந்த அதிர்வின் அதியுச்சமான விசை ஒரு சுனாமியாக மனத்தில் அலைகளை எழுப்பினாலும்,இன்றைய நமது போராட்டச் சூழல் நமக்கேன் வம்பை என்று குடும்பத்துக்குள் முடக்கி விடுகிறது.ஆத்திரமுடைய அவசரக்காரருக்கு ஆத்தைகூடத் துரோகியாகிப்போன சூழலில் எல்லாம் நடக்கும்.


விரக்தி சிறுகதையல்ல.அது நமது வாழ்வு.அதை வாசிக்க,வாசிக்க ஒரு பெரும் பொறி நெஞ்சில் மோதிக் கிளம்புகிறது.நான் கேட்க விரும்பாத வார்த்தை நாடற்றவர்கள் என்பதே!


"நாடற்றவர்கள்?"



இவ் வார்த்தை எல்லாத் தார்மீகக் கோட்பாடுகளையும்(முதலாளிகளின்)கேள்விக்குள்ளாக்கி"குருட்டார்த்தம்"பேசும் அரச சட்டங்கள்,தேசம்-தேசிய இனம்-மனிதர்களுக்கெல்லாம் சாட்டைகொண்டு முதுகினில் சொடுக்கிறது.இதுதாம் அசூமத்தின் கடைசி ஆயுதமாக இருக்கிறது.


இங்கே அல் அசூமத் உயர்ந்து நிற்கிறார்.


வார்த்தைக்கு வார்த்தை உணர்ச்சிகளை தத்துவமாய்ச் சொருகி வைத்து-விரக்தியை-வாழ்வாக்கி நமது விழிகள் முன்"நீ வாழும் வாழ்வு இதுதாம்"எனப் பறையடிச்சுச் சொல்கிறார்.இதுதாம் அவரது படைப்பின் மிகப் பெரும் அழகியல் வலு.


விரக்தியின் கரு ஒரு சிறு பயணக் குறிப்பே,அதை எவ்வளவு சிறப்பாக-வாழ்வாய் மலர்விக்கிறார்!இது உண்மை வாழ்வு.இதன் இயல்பான சோக வடுவாய்-வரலாறாய் விரியும் இலங்கை அரசின் கொடூரம்-உழைப்பவரையொடுக்கும் வக்கிரம் மலையகத் தமிழரின் வாழும் உரிமையை எங்ஙனம் பாதிக்கின்றதென்பதை சிறு பொறியாய்ச் சொல்லி பெரும் தீயாய் நமது உணர்வைத் தனது படைப்பால் வளர்த்துச் செல்கிறார்,அல் அசூமத்.




"இங்கேதாம் உதைக்கிறது.பழைய மாணவர்களாகப் பெருமைப்பட்ட எங்களுக்கு விதியில்லை.காலாகாலத்தில் போய்ச் சேர்ந்துவிட்ட கந்தசாமியாரின் இலட்சியத்தையும்,எங்களின் உரிமையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள் மண்ணாசைக்காரர்கள்."-விரக்தி.


ஆம்!


அல் அசூமத் வரலாற்றை நன்றாகவே புரிந்துள்ளார்.



"...மண்ணாசைக்காரர்கள்."


ரொம்பவும் நிதானமானதொரு வார்த்தைக்கூடாக ஒரு பெரும் வரலாற்றுத் துரோகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழ்பேசும் மக்களின் வோட்டுரிமைக்கு வேட்டுவைத்து "கப்பலில்" ஏற்றியவர்களும்-ஏற்றுபவர்களும் இந்த மண்ணாசைக்காரர்கள்தாம்.


இவ்வகை மண்ணாசைக்காரர்கள் பல தளங்களில் அகலத் தங்கள் வேர்களைப் பரப்பியுள்ளார்கள்.பலர் சூட்சுமமாக நமக்குள்ளேயும்,வெளியேயும் இருக்கிறார்கள்.
இவர்கள் என்றுமே நமக்கு ஆபத்தானர்வர்கள்.மனிதவுரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் சதிகாரக்கூட்டம்.


இப்போது கோவிந்தராஜனிடம் போகிறேன்.


"கப்பல் எப்பங்க...?"


நன்றாகவே கேட்கிறார்?


வீரையாவை மலையக விடுதலையின் விதையாய் மண்ணாசைக்காரர்களால் அபகரிக்கப்பட்ட தங்கள் சொந்த மண்ணில் ஊன்றுகிறர்ர்.


அது முளைவிடுகிறது.


மண்ணாசைக்காரர்கள் சுடு நீரை அதன்மேல் வாரிக் கொட்டுகிறார்கள்.


முளை வாடுகிறது!


பட்டுப்போகவில்லை.மீண்டும் துளிர்க்கிறது.மண்ணாசைக்காரர்கள் முன் தன் கிளைகளைப் பரப்புகிறது.


"எதுக்குக் கத்தியைத் தீட்டினோம் என்பது உங்களுக்குத் தெரியும்.இனி எதற்காகத் தீட்டுவோம் என்பதும் உங்கள்போன்ற தலைவர்மாருக்குத் தெரிந்தால் சரி."


காலவோட்டத்தில் இவ் "விதை"துளிர்த்துக் கிளைபரப்பி, மரமாய் விழுதெறிதலை மண்ணாசைக்காரர்களால் சகிக்கமுடியவில்லை.


சதி செய்கிறர்ர்கள்.


தங்கள்"பலங்கொண்ட"மூளைகளைக் கசக்கித் துளிர்த்துக் கிளைபரப்பிய மரத்தைச் சாய்க்க வழி வகுக்கிறர்ர்கள்-வழிகண்டாச்சு!


இனியென்ன?


கோடாரியுடன் வருகிறார்கள்.


கே.கோவிந்தராஜிடம் இப்போது வாழ்வின் மெய்ப்பாடு உண்மைகளை ஊடறுத்துச் சொல்கிறது.


சிதறிப்போயுள்ளோம்.சின்னாபின்னப்பட்டுத் தனிமைப்பட்டுள்ளோம்.


பி.வடிவேல் சொல்வதுபோல."தொடர்ச்சியில்லாது ஆங்காங்கே தொட்டம் தொட்டமாகப் பரந்து கிடக்கும் தோட்டங்கள்,தொடர்பில்லாது அறுபட்டுக்கிடக்கும் உறவுகள்.தீர்வேயின்றி நீக்கமற நிறைந்து கிடக்கும் பிரச்சனைகள்,ஓயாத உழைப்பு,இவற்றின் கூட்டுக் கலப்புத்தாம் நாங்கள்."(ஈழப் போரின் பலம் உடைபடுவது இங்ஙனம்தாம்.வடக்கை,கிழக்கைப் பிரித்து,மக்களை அகதியாக்கி,வெளி நாடுகளுக்கு இடம் பெயர வைத்து,மாவட்டங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு,பொருளாதாரத் தடையால் மக்கள் உணர்வுகளைச் சிதறடித்து...யுத்தத்தால் கொன்று குவித்து-வான்வழித் தாக்குதல்களால் தமிழரை அச்சப்படுத்தி,போராட்டத்தையும்,சுய நிர்ணயவுரிமையையும் நீர்த்துப் போக வைத்து...)



கோவிந்தராஜனும் நிசவுலகுக்கு வருகிறார்.


முடிவு?


"கப்பல் எப்பங்க...?(இதைத்தாம் நமது விடுதலைப் போராட்டத்திலும் போராட்டச் சக்திகள்-அரசுகள் செய்து-"சமஷ்டி எப்ப கிடைக்கும்...?")


அப்பவும் எங்களுக்கொரு நப்பாசை.


"சாடின் அடைப்பின் நெரிசலில் விழி பிதுங்கி நின்றாலும்,மிதிபலகையில் கால் வைத்தவரை இறங்கித் திரும்பிப்போ என்று, மறுக்காமல் உள்ளே அடைபட்டிருப்போரை திட்டி,ஏசி இடம் எடுத்து வந்தவரையும் உள்வாங்கி அணைத்துக் கொள்ளும் மினி பஸ்சின் தாராள மனசு,நம்மனைவருக்கும் இருந்துவிட்டால் உலகில் எத்தனையோ பிரச்சனைகளுக்கே இடம் இல்லாமல் போய்விடுமே!"


இதை யாரு சொல்கிறார்கள்?


நம்மைப்போல் போரின் கொடுமையால் அகதியாகி ஒண்ட வந்து,வேண்டா விருந்தாளியாக மேற்குலகில் வதைபடுவதற்காக, இடம் பெயர்ந்த மக்களில்லை!கடந்த நூற்றி ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இலங்கை வந்து,அந்தத் தேசத்தின் முதுகெலம்பான தேயிலை வருமானத்துக்குத் தமது குருதியை கொட்டிப் பசளையிட்ட மனிதர்கள் சொல்கிறார்கள்.காலாகாலமாகத் தமது உழைப்பால் இலங்கைச் செழிப்பாக்கும் மலையகத்தின் மைந்தர்கள் சொல்கிறார்கள்.பாழாய்ப்போன சிங்கள தேசம் எவரைத்தாம் வாழவிட்டது?தன் இனத்தையே கருவறுக்கும் சிங்கள-அந்நிய ஆளும் வர்க்கமா தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும்?இத்தகைய உழைத்து ஓடாய்ப்போன மக்களுக்கே தண்ணிகாட்டும் சிங்களச் சியோனிஸ்டுக்களா இலங்கையின் உழைப்பாள வர்க்கத்துக்குக் கருணைகாட்டும்?


அது காட்டவே காட்டாது.


மண்ணாசைக்காரர்கள் விடுவதாகவில்லை.



சட்டம் ஒழுங்கு,கோடு கச்சேரி என்று பயங்காட்டுகிறார்கள்.வடிவேலு நியாயம் கேட்கிறார்.


"தலைக்கொரு கூரை முக்கியமுங்க!"


அதெல்லாம் உங்களுக்கில்லை.சட்டம்,ஒழுங்கின் பதில் இப்படி...


மலையகத் தமிழர்களின் வாழ்வோடு பின்னப்பட்டுள்ள இச் சிற்றுலக்கியத் தொகுப்பு இங்கேதாம் சிறந்தும் இருக்கு.இயல்பாய் வாழ்வைக் கண்முன் கொணர்ந்து,தான் வாழும் வாழ்வையும் அதன் அடித்தளத்திலிருக்கும் வேதனைகளையும் இத் தொகுப்புச் சிறப்பாக எடுத்தியம்புகிறது.இதில் அல் அசூமத்துகஇகுப் பிறகுதான் மற்றைய படைப்பாளில் சிறந்திருக்கிறார்களென்றில்லை!


ஒவ்வொருவரும் தத்தம் ஆளுமையுடன் இக்கதைகளுக்குள் தம் வாழ்வைத் தொலைக்கிறார்கள்,தேடுகிறார்கள்,வாழ்கிறார்கள்.


"இனி எங்கே...?"


சிவலிங்கம் தேடியலைகிறார்.


"எந்தப் பண்ணையர்களுக்கும்,ஜெமிந்தார்களுக்கும் கூலி விவசாயிகளாக பண்ணையடிமைகளாக உழியம் செய்ய முடியாமல் பயந்து ஓடீவந்தார்களோ...அதே பண்ணையடிமைகளாக மீண்டும் தள்ளப்பட்டுவிட்டார்கள்."




ஆண்டாண்டு உழைத்து வளமாக்கிய மண்ணைவிட்டுத் துரத்தியடிக்கும்"மண்ணாசைகாரர்கள்"தம் கொடூரத்தைச் சிறப்பாகச் சொல்லும் சிவலிங்கம்,பென்சர் கிழவர் பெருமாள் ஊடாக, மண்ணின் மைந்தர்களின் உரிமைத் தாகத்தை நாம் அனுபவிக்க வைக்கிறார்.



"காணி நிலம்,வீடு என்று சொந்தமே இல்லாமல் தோட்டமெனும் அறைக்குள்ளே வியாபாரஸ்தானங்களுக்கும்,நிலச் சொந்தக்காரர்களுக்கும் கூலிகளாகவே வாழ்வதற்கு நிற்பந்திக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் வாழ்வுபெறும் காலத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்."(இனி எங்கே...?-சிவலிங்கம்)



ஆம்! இன்று உலகத்தின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும்-அவர்கள் உழைக்கும் மக்களாக இருக்கும் பட்சத்தில்-இவர்களின் நிலை இ·தே!மேற்குலகுக்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நிலையும்,மலையக மக்களின் வாழ்வு நிலையும் அடிப்படைப் பிரச்சனையில் சம அளவு ஒன்றுபட்டாலும்,மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் புலம் பெயர் தமிழரின் வாழ்கைத் தரத்தோடு ஒப்பீட்டு ரீதியில் மிகவும் பின்தங்கியது என்பதை நாம் உணர்கிறோம்.


உலகத்தில் எங்குமில்லாத கொடுமை மலையகத்தில் தலைவிரித்தாட,இந்த மண்ணாசைக்காரர்கள் காரணமாக இருக்கிறார்கள்.


"உழைப்பவனுக்கே இந்தவுலகம் சொந்தமெனும்போது,உழைத்துண்ணும் இந்த மக்களின் உண்மை வரலாறு இலங்கையில் பொய்ப்பித்துப் போகுமா?"என்று சிவலிங்கம் கேட்பதன் நியாயம் புரிகிறது!


ஜானகியைத் தேடும் மல்லிகை சி.குமாரை நெருங்குகிறேன்.


மரபுகளுக்கும்,சம்பிரதாயங்களுக்கும் இரையாகிப் போகும் பெண்களின் சுவட்டில் ஜானகியை உருட்டிப் புரட்டாமல்,"தாத்தா நான் கணவனையிழந்ததால வெதவக் கோலத்தில நிக்கேல்ல,நேசித்தவனை அடைய முடியாமப் போயிரிச்சேன்னுதான் நெனைச்சி வெதவையா நிக்கிறேன்..."


ஜானகியை உணர முடிகிறது!


எனினும்,இந்த மரபுகளுக்குள்ளும்,இந்து மதக் கருத்தியல்களுக்குள்ளும் கட்டுண்டு வாழ்ந்தனுபவப்பட்ட என் மிச்சசொச்ச கற்பிதங்களுக்குச் சற்றுக் கூச்சம் ஏற்படுகிறது.



தாலி கட்டியவனைவிடவா? என்று என்"வளர்ப்பு"ச் சமூக ஒழுங்கு கேள்வி கேட்டாலும்-தனிநபர் உரிமை,சுதந்திரம் என்ற மகத்தான மனிதநேயச் சிந்தனை என் சுயத்தை வெருட்டி,கற்பிதக் கருத்தின் உணர்வு நிலையின் உச்சியில் ஓங்கி உதைக்க,ஜானகியை-அவள் உணர்வுகளை என் சுயத்தைக் கடந்து, அவள் நிலைக்குள் என்னை அழைத்துச் செல்கிறது.அவளைப் புரிந்து கொள்ள முனைகிறேன்.அவளாக மாறுவதற்கு முனையும் ஒவ்வொரு தடவையும் துக்கம் தொண்டையை அடைக்கிறது.நானே ஜானகியாகத் தொலைத்த காதலுக்காகக் கண்ணீர் மல்கிக் காலத்தைக் கடைந்தேற்றுவதும் ஒரு கடுமையான தியானம்தாம்!
இந்தக் கண்ணீருக்குள் குவிந்திருக்கும் எதிர்ப்புக் குரல் கலகத்தின் உச்சிக்குச் செல்கிறது.நமது மரபுகளுக்காகவும்,சமூக ஒழுங்குகளுக்காகவும் மனிதவுணர்வுகளைப் பலியிட முடியுமா?



இல்லை!


இன்றைய சின்னதிரை நாடகங்கள் கற்பிதப்படுத்தும் பெண்மைக்கு அப்பால் உலகம் விரிகிறது.ஆனால், சினிமாவும்,சின்னத்திரை நாடகங்களும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கான பெண்மையைப்படைக்க முனையும் இன்றைய சூழலில், இந்த ஜானாகி பாரதிகண்ட புதுமைப் பெண்ணைவிட நம் தேசத்து நங்கைகளின் அக்கினிக் கரங்களோடு உறவாடத்தக்க பண்புகளோடு நம்மோடு உறவாடுகிறாள்.இவள்தாம் இந்த நூற்றாண்டின் பெண் மொழியாக நிமிர்ந்து, எம் ஈனத்தனத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகையோடு நம்மை எதிர் கொள்கிறாள்.இதுவே சமூக மாற்றத்தின் அவசியத்துக்கான எதிர்வைக் கூறுகிறது.



வார்த்தைகளுக்கு-சடங்குகளுக்குச் சம்பிரதாயங்களுக்குக் கொடுக்கும் முக்கியமானது ஒவ்வொரு பொழுதும் மானுட வளர்ச்சிக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதுதாம்.இங்கே மகத்தான மாற்றங்களைக் கோரி நிற்கும் இந்தப் புரட்சிகரமான மனிதவுணர்வு எந்தப் பொழுதிலும் அடக்கியொடுக்கப்பட்டே வருகிறது.அது பெண்களைப் பூசையறைச் சாமியாக்கி ஆண் மனத் தேவைகளைப் பூர்த்திப்படுத்தும் வெகுளித்தனமான ஆணியச் சமுதாயத்தின் அரிப்புக்கு உடந்தையாகவே பண்டு தொட்டுத் தொடர்கிறது.இதை நாம் பெண்களின் மீது சுமத்தப்பட்ட"அச்சம்,நாணம்,மடம்,பயிர்ப்பு"என்று ரீல்விட்டுக் காரியவாதிகளாகப் பெண்மையைச் சுரண்டிக்கொண்டிருக்கிறோம்.



இதை மிக நேர்த்தியாகப் படம் பிடித்தமாதிரி மல்லிகை சி.குமார் அழகான காதல் ஓவியத்தை நம் முன் வரைந்து காட்டுகிறர்ர்.



இங்கே சக்திவேல் நம்முன் மிக உயர்ந்து நிற்கிறார்!தான் நேசித்தவளுக்கே-அவள் விதவையாக இருந்தும்-தாலிக்கொடி,பொட்டிடும் அவர்,சிறப்பாய் உருப்பெறும் சமூகமாற்றத்திற்கான வெகுஜனக் கருத்தியல்-பண்பாட்டு முகிழ்ப்பின் அரும்பில் ஒருவர்."தாலியும்,பொட்டும்" விதவைக்குக் கிடையாதென்றுரைக்கும் இந்த ஆணாதிகச் சமூக அமைப்பில் இவை பெண்ணையொடுக்கும் வடிவங்களாகவே இருக்கிறது.மனதைச் சித்திரைவதை செய்யும் பண்பாட்டு ஒடுக்குமுறையானது பாரிய உளவியல் யுத்தமாகத் தொடர்கிறது.எனினும், இத்தகைய ஒடுக்குமுறை ஆயுதத்தையே கையில் எடுத்து, விதவைக் கோலத்துக்கு விடைகொடுப்பதற்காக அதையே ஒரு குறியீடாக்கி அதை அணிவிக்கிறார்.எனினும் பழையபடி அந்த ஆயுதம் அவளைக் கட்டிப்போடும் கண்ணியாக மாறும் அபாயத்தையும் மல்லிகை சி.குமார் புரிந்திருப்பாரென்றே நம்புவோம்.


சந்தனம் கண்களைக் குளமாக்கி விடுகிறாள்.-அவள் சாகமாட்டாள்!


உழைப்பால் உயர்வுறாத அவள்,இறுதிவரையும் சுகமாய்,நிம்மதியாய்த் தூங்க முடியவில்லை.அவள் நோய்,இந்தச் சமூகத்தின் நோய்!


மனிதவுரிமைகள் எதுவுமேயில்லாது உழைப்பவர்களைக் கிள்ளுக்கீரையாய் வைத்திருக்கும் இலங்கை அரசின் நோய்-அதிகார வர்க்கத்தின் உள நோய் இது.


இது இலகுவில் தீராத நோய்!


இந்த நோய் சந்தனத்தை மட்டுமல்ல இச் சமூகத்தையே பிடித்தாட்டுகிறது.


இங்கு சதாசிவம் சந்தனத்தை மனசாட்சியுடையோரின் முன் நிறுத்தியுள்ளார்.


இங்கேதாம் அசூமத்தின் அம்மா,என் அம்மா,உங்கள் அம்மாக்கள் எல்லோரும் மரணப்படுக்கையில்...


"பொறுத்தது போதும்...!"


இனியுமா? முடியாது!


அம்மாவாய்,நோயாளியாய்,வேலைக்காரியாய்,விதவையாய்,

காமுகர்களால் குதறப்படும் பதுமையாய் எங்கள் அம்மாக்கள்...


இனியும் பொறுக்க முடியாது!


இராஜதுரை கோபக்கத்தியுடன் புறப்படுகிறார்.அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்.


"இது வெறும் முணுமுணுப்பா?இல்லவேயில்லை!ஒரு சமூகம் முழுவதும் தனக்குள் எரிமலைபோல் அடக்கி வைத்துள்ள அவல வாழ்வின் ஒரு சிறு துளியே!இது பீறிட்டு வெளிக் கிளம்பாதவரை பாதுகாப்புத்தாம்!"(பொறுத்து போதும்...!-பெ.இராஜதுரை)


எச்சரிக்கை!


இது எல்லோரதும் எச்சரிக்கை.


இனியும் ஒரு சமூகம் தன் அறியாமைக்கும்-அடங்கிப் போகும் மனோபாவத்திற்கும் பலியாகுமென்று காரியமாற்றுபவர்கள் கொஞ்சம் நில்லுங்கள்.நிதானியுங்கள்!!-ஒரு ஈழமல்ல,மலையகமும் அதன் தொடர்ச்சியேதாம்.தமிழ் பேசுவோர் இனியும் பொறுக்கத் தயாரில்லை.குட்டக்குட்டக் குனிந்த காலம் மலையேறிவிட்டது.இது இன்னொரு தொடக்கத்தின் முன்னுரை.



மூட நம்பிக்கைக்கும், அறியாமை இருளுக்கும் ஒரு இராமாயி இல்லை,பல இராமாயிக்கள் பலியாகிவிட்டார்கள்தாம்.



இனியும் அது நடக்கப்படாது.



"விடியல் எப்போது?"



ஈழம் பதில் கூறுவதுபோல் மலையகமும் கூறியே தீரும்!அப்போது கேள்விகள் நீறாய் நீர்த்துப்போகும்.



அதுவரையும்,சமூகத்தின் மொத்த இருள்சூழ்ந்த நிலைமைகளுக்காக சுகந்தி,பரமேஸ்வரன்,மெய்யன் நடராஜன்,பாலச்சந்திரன்,நளாயினி சுப்பையா,பா.ரஞ்சினி,த.மயில் வாகனம்,செல்வி.இ.இம்மானுவேல் போன்ற சகல எழுத்தாளர்களும் சிலுவை சுமக்கட்டும்.சுமக்கிறார்கள்.இவர்களில் நளாயினி சுப்பையா,செல்வி.இ.இம்மானுவேல்,த.மயில்வாகனம்,மெய்யன் நடராஜன் போன்றோர்கள் ரொம்ப நிதானமாகவே சிலுவை சுமக்கிறார்கள்!



இவர்களின் நிதானம் போன்றே மற்றவர்களும் தம்மைத் தோற்றுவிக்க வேண்டும்.-இது காலப்போக்கில் நிகழவே செய்யும்!



ஏனெனில், இவர்கள் கதைகளுள் ஜீவனாய் வாழ்கிறார்கள்.தங்கள் வாழ்வை அதற்குள் தொலைக்கிறார்கள்,தேடுகிறார்கள்.இப்படித் தம் வாழ்வை கதைகளுக்குள் காணும் இவர்கள்,மிக நிதானமாகத் தோற்றம் பெறுவார்கள்.



இவர்களோடு நாமும் சிலுவை சுமக்க முனைகிறோம்?


ஈழத்திற்காக,
மலையகத்திற்காக!


புலம் பெயர் வாழ்வும் இதையே எமக்கு உணர்த்தியுள்ளது.



"மலையகப் பரிசுக் கதைகள்"தொகுப்பு இறுதியாகச் சிலவற்றைச் சொல்ல வைக்கிறது:



"இது-இருள் சூழ்ந்த மலையக மக்களின் வாழ்வின் அவலங்களை ஆயிரம் வோல்டேஜ் மின்னொளியில் வெளிச்சமிட்டுக் காட்டாது போனாலும்,ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னையுருக்கி வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டேயிருக்கும்".



இந்த என் நம்பிக்கை வீண்போகாது.


ப.வி.ஸ்ரீரங்கன்.


(1996 இல் இக் கட்டுரை தினகரன் மற்றும் ஈழமுரசில் பிரசுரமானது.இப்போது போராட்டச் சூழ்நிலைக்கொப்ப சில இடைச் செருகலோடு மீள் பதிவாகிறது.)

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...