Showing posts with label உண்மையாகச் சோபாசக்தி?. Show all posts
Showing posts with label உண்மையாகச் சோபாசக்தி?. Show all posts

Saturday, January 16, 2016

தைப்பொங்கலை "ஆதிக்கச்சாதி -மதத்தின்" பெயரால் குறுக்கும்...

விழிப்போடு இருப்போம்!
தைப்பொங்கலை "ஆதிக்கச்சாதி -மதத்தின்" பெயரால் குறுக்கும் அரசியல் வியூகம்!-சிறு குறிப்பு.
இன்று,தமிழ்பேசும் மக்களது அரசியல் வாழ்வு மட்டுமல்ல உலகம் பூராகவும் வாழும் -விடுதலைபெறத் துடிக்கும் -இனங்களைப் பிளந்தொடுக்குவதில் நிலவுகின்ற அரசுரித்துடைய இனங்கள் பல்வேறு வியூகங்களினது "தெரிவை"க்கொண்டு, வழிகளைக் கண்டடைகின்றனர்.

முக்கியமாக,கொலனித்துவக் காலத்துள் இலங்கையில் சைவக் கோவில்கள் தகர்க்கப்பட்டுக் கொண்டாட்டங்களைத் தடைசெய்தனர் ,கொலனித்துவ வாதிகள்.இதற்குள், இயங்கும் அரசியல் மக்களது அடையாளங்களை அழித்து, அவர்களது பண்பாட்டை இல்லாதாக்குவது.இதுவொரு இனத்தைத் தொடர்ந்து அடிமைப்படுத்தித் தமது ஆளுமைக்குள் கொணரும் ஆதிக்கத்தின் இருப்புக்கான தெரிவு.

இதையுரைத்துப்பார்க்க பல்வேறு ஆய்வுகள் தேவையில்லை! வெள்ளையர்கள் குடியேறிய அமெரிக்க - அவுஸ்ரேலியக் கண்டங்களில் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள்மீது நடாத்தப்பட்ட கொடுமைகள் போதுமானது.தற்போது , ஈராக் ;இலிபியா ;சிரியா ;அவ்கானிஸ்த்தான் போன்ற தேசங்களில் நடந்த அடையாள அழிப்புகள் ;அதையதை வைத்தே ஒரு பகுதி மக்கள்மீது இன்னொரு பகுதியை எதிரியாக்குவது, பின்பு, இந்த அடையாளமானது "உங்களை ஒடுக்கும் " கருவியாகியதெனப் பிரச்சாரஞ் செய்து ,கருத்தியல் மட்டத்தில் அதையொரு அரசியல் ஆயுதமாக்குவதில் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் இதன் முன்னோடிகள்.



கடந்த இருபதாண்டுகளாகபப் புலம் பெயர் மாற்றுக் குழுக்களுக்குள் நுழைந்த இந்த வியூகமானது கணிசமாக இலங்கைத் தமிழினத்தின்மீது ஏவப்பட்டும் ;பரிசீலிக்கப்பட்டும் பல பிளவுகளை த் திட்டமிட்டுருவாக்கினர் ஆதிக்க இனங்கள்.

அந்த ஆதிக்கச் சக்திகள் தொடர்ந்து ஈழமக்களது அரசியல் வாழ்வுக்குள் அமுக்கக் குழுக்களைத் தகவமைத்தனர்.அத்தகைய அமுக்கக் குழுக்களது இருப்புக்கு ,இத்தகைய அடையாள எதிர்ப்புக் கூறுகள் அவசியமாவிருக்கிறது.
பொங்கல் என்ற அடையாளத்தை ஒரு ஆதிக்கச் சாதிக் குரியதாக்குவது பின்பு ,அதையொரு ஒடுக்குமுறைக் கருவியாக அரசியல் மயப்படுத்துவது.இதைக் கொண்டு ஒரு ஆதிக்கத் தகர்ப்புப் போராட்டமாக மக்களைப் பிளப்பது என்று , பல்வேறுபட்ட வியூகங்கள் இதற்குள் உண்டு.

தமிழர்கள் பொதுவாகக் கொண்டாடும் ஒரு நிகழ்வானது கூட்டு மனோ பாவத்தை உருவாக்கும்.கூட்டு மனநிலை மக்களை ஒரு கருத்தின்பால் அணிகொள்ளச் செய்யும்.எனவே ,அத்தகைய பொது நிகழ்வு இருக்கப்படாது. அதைவைத்து , ஒவ்வொரு பிரதேசத்தையும் ;சாதிகளையும் எதிர் நிலைக்குத் தள்ளும்போது அங்கு முரண்பாடுகள் பிளவைக் கோரும்.கலகத்தை உண்டு பண்ணும். இப்போது பாருங்கள்: வடக்கையும் ,கிழக்கையும் பிளப்பதற்கு "யாழ்ப்பாண மேலாதிக்கம் "என்ற அரசியற் கருத்தாக்கம் எப்படியொரு பகுதி மக்களைப் பிளந்ததென்று.

அன்று, சைவவேளாள ஆறுமுக நாவலரை வைத்துக் கொலனித்துவம் மக்களைப் பிளந்தபோது, அதன் எதிர்நிலை அதற்கெதிராகக் கத்தோலிக்கத்தின்வழி தகவமைக்கப்பட்டது.

இப்போது, தைப்பொங்கலை மேல்சாதியின் கொண்டாட்டமாக்குவது;சைவத்தின் கொண்டாட்டமாக்கிக் குறுக்குவது.பின்பு, மக்களைப் பிளப்பது.ஒரு பகுதி மக்களுக்கு அதை எதிராக ஆயுதமாக்குவது ;பொங்கல் மேலாதிகத்தினரது பண்பாட்டு ஒடுக்குமுறையென வகுப்பெடுத்து, மக்களை அணிதிரள விடாது குழப்பும்போது மட்டும்தாம் இந்த அமுக்கக் குழுக்கள் உயிர் வாழ முடியும்.அதுவொரு பெரும் அரசியல் வியூகம்.

இதைத் தகவமைப்பவர்கள் தமிழ்பேசும் மக்களது ஒருமைப்பாட்டைக் குலைத்து ஒடுக்க முனையும் ஆதிகச் சக்திகளே.அவர்களுக்குடந்தையாகப் புலத்தில் பல குழுக்கள் இருப்பதை நாம் அறிய வேண்டும்.தலித்துவக் கோரிக்கை முதல் யாழ்ப்பாண மேலாதிக்கவரை நகர்த்தப்பட்ட அரசியலது நகர்வு தற்போது பண்பாட்டு அடையாளங்கள்மீது தாவுகிறது.

இது ஆப்பத்தான தருணங்களை நமக்குள் கொட்டப் போகிறது.மதரீதியான பிளவைக் கூர்மைப்படுத்திப் பிளக்கும் வியூகம் இதுள் உண்டு.இதைக் கூர்மைப்படுத்துபவர்கள் மிக ஆபத்தான பேர்வழிகள் ; அந்நியச் சக்திகளது அடியாட் கூட்டம்!

ப.வி.ஶ்ரீரங்கன்

==========================================
 
P/S : 
தைப் பொங்கல் 'தமிழர்களின் விழா' என்பது சரிதானா என யோசிக்கிறேன். இந்தப் பண்டிகையை, இந்து மதத்தினர் தவிர தமிழ் பேசும் ஏனைய மதத்தவர்களாகிய கிறித்துவர்களோ இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லையே.

நிலம், தெருவில் நடப்பதற்கான உரிமை, கோயில்களில் நுழைவுரிமை, மேலாடை அணியும் உரிமை இல்லாதிருந்த ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வரலாற்றுரீதியாகவே இந்தப் பண்டிகைக்கு வெளியேதானே இருந்திருக்க முடியும் எனில் அது வெறும் சாதி இந்துக்களின் பண்டிகையாக மட்டும்தானே இருந்திருக்கிறது.

இதைத் தமிழர்களின் மாதமான தை முதல் நாளில் கொண்டாடுகிறோம் என்பதே சுத்த ஏமாற்றல்லவா. இந்த மாதக் கணிப்பு இந்துக் காலக் கணிப்பேயொழிய தமிழர்களின் தனித்துவமான காலக் கணிப்பில்லையே. சூரியன் பன்னிரு இராசிகளிற்குள் பிரவேசிக்கும் நாட்களை வைத்துத்தான் இந்தக் காலக் கணிப்பு நிகழ்கிறது. சூரியன் மகர இராசிக்குள் நுழையும் முதல் நாளே தை மாதத்தின் முதல் நாள் எனப்படுகிறது. மலையாள மாதங்களில் இந்த மாதத்திற்கு 'மகரம்' என்றே பெயர். இந்த நாளில்தான் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்பது இந்து காலக்கணிப்பு வழக்கமாகிறதேயொழிய தமிழர் வாழ்வியலிற்கும் இந்த நாளிற்கும் என்ன தொடர்பிருக்கிறது?

தைப் பொங்கல் என்றொரு விழா பண்டைய தமிழர்களின் மரபில் இருந்ததாகவும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் விவசாயத்திற்கு மழை அருளும் இந்திரனைச் சிறப்பிக்க 'இந்திர விழா' நடத்தப்பட்டதாகச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சொல்கின்றன.
அவ்வாறெனில் இந்திர விழாவின் எச்சம்தானா பொங்கல் விழா? நிலமானிய காலத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனக் கடவுளை முன்னிறுத்திய விழாவை இன்றைக்கும் செல்லுபடியாகக்கூடிய தமிழர்களின் விழாவாகப் பிரகடனப்படுத்துவது வரலாற்றுரீதியாகச் சரியா?

மதப் பண்டிகைகள் இப்போது சிறப்பு வணிக நுகர்வுக்கானவையாகவும் குடும்பத்துடனும் சுற்றத்துடனுமான கேளிக்கையாகவும் மாறியிருப்பதையிட்டு எனக்கொன்றும் புகாரில்லை. ஆனால் ஓர் இந்துப் பண்டிகையை ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகையாகத் திணிக்க முற்படும் செயலை தகுந்த விளக்கம் கிடைக்கும்வரை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

 https://www.facebook.com/shoba.sakthi.1/posts/10208294233254986?pnref=story

Thursday, February 17, 2011

அன்பன் சோபாசக்தி

ஷோபா சக்தி: பாலியில் நிந்தனைச் சொல்லைலையே அநுமதியான்-செயலை அல்ல!



"உஙகளுடைய பின்னூட்டத்தை மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ பெயரின் பின்னூட்டுகளை நான் மட்டுறுத்தியுள்ளேன். வெறும் வசைகளை நான் பின்னூட்டமாகக் கருதுவதில்லை. சற்று முன்கூட எனது 15 வருடகால நண்...பர் சிறீரங்கன் அண்ணன் பாலியல் நிந்தனைச் சொல் ஒன்றுடன் எனது முகப் புத்தகத்தில் ஒரு பின்னூட்டமிட்டார். பின்னூட்டத்தை மட்டுமல்ல அவரையும் முகப்புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டேன். அவர் தனது ஆணாதிக்க வசைகளை எழுதுவதற்கு எனது முகப்புத்தகம் இடம் கொடுக்காது. அதுவே உங்களுக்கும்"
-சோபாசக்தி


மேலேயுள்ள பின்னூட்டை அன்பன் சோபாசக்தி எழுதியுள்ளான்.ரொம்பவும்"நேர்மையான"ஜனநாயகவாதி அவர்,"பாலியல் நிந்தனைச் சொல்லை-ஆணாதிக்க வசைவுகளை" அவர் ஒருபோதும் தனது முகப் புத்தகத்தில் அனுமதிக்கமாட்டாராம்!



ஏனெனில்,



அவை பெண்ணொடுக்குமுறையின் வடிவங்கள்,பண்டுதொட்டுப் பெண்ணைப் பாலியற் சுரண்டலுக்கும்,அவமதிப்பும்,அடக்குதலுக்கும் உட்படுத்தும் இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தின் சொற்கள்-கருத்தியற் பலாத்தகாரம் அவை!வார்த்தைகளுக்குள் கண்டுண்டிருக்கும் இத்தகைய சமூகவொடுக்குமுறை உளவியலானது ஆ(ணி)ணாதி(தா)க்கத்தின் அதிகாரபூர்வமான ஒடுக்குமுறையின் எதேச்சதிகாரமானதும்,அரூபமானதுமான விலங்கு, இந்தப் பாலியல் நிந்தனைச் சொல்.



நிச்சியமாக?



உண்மையாகச் சோபாசக்தி?



அடடா,இந்த ஸ்ரீரங்கனுக்குப் பழையதொடர் இன்னும் விட்டுத்தொலைக்கவில்லைதாம்.சுட்டிக் காட்டிய என் தோழனே,துரும்பைவிட்டு நாசியிற் தும்முவதைப் பார்த்திருப்பாய்தானே? அந்தத் தும்மலுக்குள் எத்தனை மில்லியன்கள் கிருமிகள் வெளிறேம் தெரியுமோ?அப்படித்தான் உங்கள் கிருமித்தனமான செயற்களும் வெளியேறுகிறது.



பாலியல் நிந்தனைச்சொல்லுக்கும்-செயலுக்கும் என்ன வித்தியாசம்?



கூறுங்கள் கண்ணா!



முகப்புத்தகத்திலேயே பாலியல் நிந்தனைச் சொல்லை அநுமதிக்காத நீங்கள்பாலியல் நிந்தனையை-செயலை மற்ற மனிதர்கள்மீது ஏவும்போது, அதை அவர்கள் அனுமதித்தும்-அவதிப்பட்டும் இருக்கும்போது,அதைப் பொதுவெளியில் புகட்டிய செம்மலே சோர்ந்தா போகும் உன் நட்பு(ஆண்குறியெனக் கற்பனை பண்ணப்படாது)?



உடல்சார் உறவென்பது எதுவரை உறவாகவும்-உபத்திரமாகவும்,பாலியற்பலாத்தகாரமாகவும் இருக்கும் என்பதை தத்துவங்கள் ஏதும் எனக்குத் தெரியவில்லை-உரைக்கவில்லையோ?அப்படியான தத்துவங்களை அருமைத்"தோழர்"உமா சானிகாவிடமாவது கேட்டுப் புரியலாந்தாம்...


மூன்றாவது சந்திப்பில் படுகைக்குத் தயாராகும்,பெண்விடுதலைப் புரிதலானது மிக நேர்த்தியானதெனக்கொள்வதில் அவரவர் சுதந்திரமென்பதும்,பாலியற்றேவைக்காகப் படம்போடும் பிழைப்பில் மனம்சார் உறவும்,உடல்சார்வுறவும்(கவனிக்க: இங்கே, ஓழுக்கு என பாலியல் நிந்தனையைப் பயன்படுத்தவில்லை-உடல்சார் உறவு-அதுவே சரியானது!) இணைக்கப்படும் புள்ளிதாம் பாலியற் சுரண்டல் என்று சொல்லேன்!அப்படிச் சொன்னால், அது பெண்ணியத்தையும்,ஆணியத்தையும் எதிரெதிர் நிலையில் நிறுத்துவதைவிட்டு நட்பாக்கி மீளவும் ஒடுக்குமுறைக்குள் பெண்களைத் தள்ளிவிடும்.எனவே,பார்க்கும்-பழகும் பெண்களோடும்-ஆண்களோடும் நான் படுக்க(ச்சீ உடல்சார்வுறவுக்கு)த் தந்திரமாக-உள்நோக்கும் அகவிருப்பை அது கொச்சைப்படுத்திவிடும்.



ஓழ்த்தல் பாலியல் நிந்தனைச் சொல்!-சரி,ஏனெனில்,நான் ஊரிலேயே கூட்டுக் கலவியின் நாயகன்(இந்த நான்-நான் மட்டுமே!)ஆதலால், மிகவிரைவாகப் புரிந்துபோச்சு-"சொல் நிந்தனை-செயல் தோழமை"-அடஅட...)



குடும்பம்-கல்யாணம் ஒடுக்குமுறை நிறுவனம்!-இதுவுஞ்சரி.



ஆனால்,காணும்-பழகும் அனைவரையும் எனது கலவிவிருப்பு மனதுக்குக் கட்டிலுக்குக் கூப்பிடுவது-போவது மனிதநிலைக் கடன்.காலைக்கடன்கள்போல் இதுவும் ஒன்றுதாம்.இது குறித்துப் பேசுவது தப்பு-செயல் முடிந்து,நான்"உடல்சார்"உறவுகொண்டேன் என்பது நிந்தனையல்ல-நேர்மையான நிகழ்வூக்கப் பெறுமானம்.ஏனெனில்,இது சம்பந்தப்பட்ட இருவரதும் "தனிப்பட்ட" சுதந்திரமல்லவா?



இங்கே,புனைவுக்கும்,அ-புனைவுக்கும் என்ன வித்தியாசமோ,அதுவே,பாலியல் நிந்தனைச் சொல்லுக்கும்-பாலியலுறவுச் செயலுக்கும்"உள்ள வித்தியாசம்.எனது பாலியல் பலாத்தகாரமெல்லாம் பாவாடை(பயில்)போட்டு மூடியபோது,சொல் மட்டுமே நிந்தனையாகவும்,செயல் வெறும் துய்ப்பாகவும்-அன்புப் பரிமாற்றமாகவம்,உடல்சார் அதியுன்னத தேவையாகவும், மாறிவிடுகிறது!



எனது பாலியற்றேவைக்காக நான் அணுகும் போக்கில்-தூண்டிலில் மாட்டியவர்களுக்கு மேற் சொன்னவையை விரிவாகப் பகுக்கத் தெரியும்-நிலவும் சமூகக் கட்டுள் ஏற்பது"ஒழுக்க"ப் பிறழ்வு-" பாலியற் சேட்டையை-சுரண்டலை"இருவரது சுதந்திரமெனக் கொண்டு மென்மைச் சுட்டலுடன் ஒழுகுவது(ஓழ்ப்பதல்ல) சமூகத்தில் அடையாள நெருக்கடியிலிருந்து விடுதலைபெறும் தற்காலிக நிவாரணி எனச் சொல்லேன்.அப்படிச் சொல்லும் உரிமை எனக்கில்லை-பெண்ணியம்சார்ந்து இயங்குபவர்கள்(முப்பாலரும்)தாம் அதைப் புலத்தில் வைத்துப் புரிய வைக்க வேண்டும்.



ப.வி.ஸ்ரீரங்கன்

17.02.2011

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...