Showing posts with label பெண்ணியில் புழுத்தலும். Show all posts
Showing posts with label பெண்ணியில் புழுத்தலும். Show all posts

Saturday, February 27, 2016

இஸ்லாமியத் தகவமைப்பு : மாற்று மதத்தவர்கள்மீதான நிந்தனையும் -கொலையும்!

'07.07.2005 துன்பியல் நிகழ்வு [On the morning of Thursday, 7 July 2005, four Islamist extremists separately detonated three bombs in quick succession aboard London Underground trains across the city and, later, a fourth on a double-decker bus in Tavistock Square. ] நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால் திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும் இஸ்லாமமியத் தத்துவார்த்தம், இனவாதம், வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை,மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'


இங்கிலாந்து தேசத்து மாபெரும் இமாம் (Chief Imam ,Dr. Khalifa Ezzat) இங்ஙனம் உரைத்தார்,கடந்த 07.07.2005 ஆம் ஆண்டு , இலண்டன் குண்டு வெடிப்புக்குப் பின்னரான உரையாடல் ஒன்றில்.



அதாவது பிரச்சினைகளின் ஒரு துரும்பைக்கூட தொடுவதற்கான முயற்சி அடியோடு அழிக்கப்படுதலும் அதிலிருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை மற்றவர்களின் முதுகில் கீறி விடுதலுக்கான அறிவுஜீவி ஒருவரின் கருத்தாக இந்த இமாமின் கூற்றை மேற்குலக இடதுசாரி வட்டாரம்கூட நோக்குகின்ற பாதகமான சூழலின் விருத்தி[ https://en.wikipedia.org/wiki/List_… ] எங்ஙனம் நிகழ்ததென்று எனக்கு நீண்ட நாளாக ஒரே கேள்வியாக எழுவதும் பின் 'ம்' கொட்டுவதாகவுமே காலம் போனதுதாம் மிச்சம்.


இஸ்லாத்தின் பெயரின் வாயிலான 'தாக்குதல்கள்' சமீபத்துப் பாரிசுத் தாக்குதல் [ The Bataclan concert hall following fatal shootings in Paris, Nov. 13, 2015. ]முதல் நியூயோர்க், ட்ஜேர்பா,பாலி,மாட்றிட்,மற்றும் நெதர்லாந்துத் திரைப்பட இயக்குனர் திரு.தேயோ வன் கோக்(Theo van Gogh)- இவையனைத்தும் கண்கெட்ட பயங்கரவாதமாகவும்,பொது மக்களைப்பற்றிக் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காத நாளாந்தக் காட்டுமிராட்டித்தனமான'இஸ்லாமியப் பயங்கர வாதம்'என்பதை நாம் மறுக்கவோ -மறக்கவோ கூடாது!


இத்தகைய "தற்கொலைத் தாக்குதல்" மிகக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதமெனக் கூறுகின்ற மேற்குலக அரசியலைப் பிரதிபலிப்பதுபோன்றே ஜேர்மனிய/நெதர்லாந்து இடதுசாரி வட்டமும் பிரதிபலிக்கிறத! இதுமேலும் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப்போல் அதி தீவிரவாதக்-மதவாத இசுலாத்தின் குறுங்குழுவாதப் பயங்கரவாதமானது தமிழ்நாட்டை வேட்டைக்காடகக் காணுந் தருணமொன்று தவ்ஹீத்ஜமாஅத் அமைப்புகள்போன்று , இந்தியாவில் இன்னொரு மோடித் தாண்டவத்தின் ஊற்றுக்கண்ணைத் திறக்கப் போகிறது.



நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட 'சுதந்திரத்துக்குள்'வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.


தாக்குதல்களுக்காக 'உந்துதல் கருத்தியல்' தளத்திலிருந்து 'அநுதாப' உணர்வுத் தாகமாக மாற்றப்பட்டே இத்தகைய மாபெரும் கொலைச் செயல்கள் நடந்தேறுவதாகக் கருத்தாடப்படும் தளம் பூர்ச்சுவா அமைப்புகளிடமிருந்து நடைபெறுவதாகா.மாறாக மேற்குலக முற்போக்கு சக்திகளிடமிருந்து இந்த விமர்சனம் எழுகிறது.பல்தேசியக் கம்பனிகளின் பாரிய சுரண்டலின்பால் கவனத்தைக் குவித்து அதுசார்ந்த முறைமைகளோடு தொடர்புடைய இத்தகைய 'இஸ்லாமியத் தீவிரவாதப் பழிக்குப் பழி'கவனமாக ஆய்ந்துணரவேண்டிய தளத்தைவிட்டு தடம் புரள்வதுபோல் படுகிறது.


இத்தகைய'இஸ்லாமியப் பயங்கரவாதம்'எனும் மேற்குலகக் கூற்றை நாம் 'இஸ்லாமிப் பழிக்குபழி' நடவடிக்கையென அழைப்பதையே விரும்புகிறோம்.
இந்தச் செயலூக்கத்தை ஜேர்மனியப் புத்திஜீவிகள் ' இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல இலட்சக்கணகான டொச் மக்களின் கருத்தியல் மனதைக் கடந்த காலத் தலைமையால் துஷ்ப்பியோகம் செய்ததை மறுபடி ஞாபகப்படுத்துவதாகவும்-இது தலைமைத்துவத்தால் (கிட்லர்) துஷ்ப்பிரோயகம் செய்யப்பட்டது-,இது குறித்து ஜேர்மனியர்கள் இஸ்லாமியர்களின் பழிக்குப்பழி நடவடிக்கைகளுக்கு அநுதாபிகளாக இருப்பதே தவறு என்கிறார்கள்'ஏனெனில் ஜேர்மனியையும் மேற்குலகத்தையும் இன்று வரை பாலாத்தகாரப்படுத்தி வைத்திருப்பதாக இஸ்லாமியப் பழிக்குப்பழி நடவடிக்கையைக் காணுகின்றனர்.



1989 இல் ஈரானிய அதிபர் அயுத்துல்லா கொமேனியால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு- அவரது'சாத்தானின் வேதம்'எனும் நூலின் கருத்துகளால் ஆத்திரமுற்று (மேற்படி ஆசாமியால்)- மரணத்தண்டனை மொழியப்பட்டு ருஷ்டியைக் கொல்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தத் தளத்தைமேலும் விரிவுப்படுத்துவதைப் பார்க்கிலும் அந்த நிலைக்குள் ஊடுருவியுள்ள அடிப்படை வாதமானது தனது வியாபகமான அதிகாரத்தை உலகு பூராகவும் நிறுவியுள்ளதை இனம் காண்பதுதாம் சாலப் பொருத்தமானது இன்றைய நமது சூழலில்.


கொய்மேனியின் அதிகாரத்துவ மொழிவுக்குப் பின்பாக மேற்குலக இடதுசாரிகளால் ருஷ்டிக்குத் தோள் கொடுத்த தோழமை- மேற்குலக இடதுசாரிகள் நிச்சியமாக இந்த இஸ்லாத்தின்'"Fatwa"வை இங்ஙனம் பார்க்கலாம்:'இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பான பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கொய்மேனி நடந்த பாதையானது 'ஸ்சறியா'(Sharia) குறித்துரைக்கும் கொள்கைகளோடு தொடர்புடையது.


இது இஸ்லாம் குறித்துரைக்கும் சட்டதிட்டங்களையும் உலகத்துக்குப் பொதுமைப்படுத்துகிறது.அதாவது ருஷ்டியைக் கொல்பவன் கொலைக்காகத் தயார்ப் படுத்தப்பட்ட கைக்கூலியல்ல.மாறாக ஒவ்வொரு இஸ்லாமியப் பற்றுள்ள இஸ்லாமைச் சேர்ந்தவரும் ருஷ்டியைக் கொல்ல உரித்துடையவர்.இங்ஙனம் கொல்ல நாட்டமுற வேண்டியது அல்லாவுக்கு விருப்புடையதாகக் கருத்தியல் விதைக்கப்பட்டது.'இந்தக் குடிசார் மனது நெதர்லாந்தின் திரைப்படக் கலைஞர் திரு.வன் கோக்கைக்(Theo van Gogh) கொன்று தனது "Fatwa" வை வெளிப்படுத்தியது!


இஸ்லாமானது கருத்தியல் தளத்திலும் அரசியல் திட்டமிடலிலும் ஒரு திடமான பிரேரணைகளை முன் மொழிகிறது.இது நாசிகளின் பாசிச இனவாதக் கொலைகள்,கருத்துக்களிலுமிருந்து மிகத் தெளிவாக வேறுபடுகிறது.இஸ்லாத்தின் இந்தக் கருத்தியலானது ஒரு குறிப்பிட்ட இனவாதாக் கொள்கையை நிராகரித்துவிட்டு,முழு மனிதர்களையும் தனது கருத்தியல் தளத்தில் கவனிக்கிறது.இதுதாம் தமது கடவுளாரான 'அல்லாவுக்கு'எதிராகச் செயற்படுபவர் எவராயினும் இஸ்லாத்தை தழுவிய எந்தப் பொது மனிதராலும் கொல்வதற்கு உருத்தாக்கி விடுகிறது.


இங்ஙனம் கொல்கின்றவர்-இஸ்லாமுக்காகத் தனது ஆயுளை அற்பணிக்கும்போது 'சொர்கத்துக்கு'நேரடியாகப் போகின்றார். எனவேதாம் ,"உத்தம நபிகளது உன்னத வாழ்கையில் கல்லெறிந்தாயானால் உனக்கு(தமிழச்சிக்கு ) எதிராகக் குண்டுகள் பாயும் " என்று தமிழ்நாட்டுத் தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பு அறைகூவலிட்டு எச்சரிக்கிறது!



இது உலகியல் வாழ்வில் அநுபவிக்கும் நரக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறையாகவும் குறித்துரைக்கப்பட்டு இஸ்லாமிய மனிதரை உருவாக்கிவிடுகிறது.இஸ்லாமானது உடோபிசம் இல்லை.அது குறித்துரைக்கும் கருத்துக்கள்,நடவடிக்கைகள் யாவும் மனிதனைக் கடைந்தேற்றும் செயல் முறையாக அன்றாடம் வாழக் கற்றுக் கொடுத்துள்ளது.எனவே, இது கற்பனாவாதாக் கருத்து நிலையிலிருந்து வேறுபடுகிறது.


இது ஈரானிலுள்ள மாசாத் எனும் நகரில் கடந்த ஜுலாய் 2005 இல் இரண்டு பதின்ம வயதுப் பாலகர்களுக்கு 'வெளியரங்கில்'மரணத்தண்டனை வழங்கியது.கழுத்தில் சுருக்குப்போட்டு மக்களின் பார்வைக்கு முன்னால் கழுமரத்தில் தொங்கவிட்டது.


அவர்களுக்கான மரணத் தண்டனை எதனால் வழங்கப்பட்டது?இச் சிறார்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்கான தண்டனைதாம் இஃது!
ஐரோப்பாவில் தடைகளுக்குள்ளாகும் இஸ்லாமியத் தீவிரவாதம்,பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணயப் போரையே மிகவும் பலயீனப்படுத்திவிட்டது.இந்த நிலையில் எந்தத் தீவிரவாதத்துக்கும்,தேசியவாத முன்னெடுப்புகளுக்கும் மேற்குலக'வெகுஜன மட்டம்'எதிராகவுள்ளது. 'பயங்கரவாதச் செயல்களைச் சர்வசாதரணமாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்களால்,குடிசார் மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் சூழல் உருவாகிறது.


உயிர்த்திருத்தல் என்பது நிசத்தில் சாத்தியமற்றவொன்றாகப் போயுள்ளததை இது வலியுறுத்துகிறது...' இங்ஙனமே ஐரோப்பிய வெகுஜனங்கள் கருதும்போது யூத ஒடுக்கு முறைக்கு முகங்கொடுக்க முடியாத பாலஸ்தீனத்தின் நியாயமான போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டமாகக் காட்டுவதில் இசுலாமிய டிப்படைவாதம் மேற்குலகுக்கு உதவுகிறது - இசுரேலுக்கு உவப்பானதாக் காரியமாற்றுகிறது.


நெதர்லாந்தில் புகலிடம் கோரிய மொரக்கோ நாட்டு இஸ்லாமியனுக்கு என்ன நடந்ததோ அதே நிலையில்தாம் தமிழ்நாட்டுத் தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பினுள்ளும் பலருள்ளர்கள்.தேயோ வன் கோக் இஸ்லாத்தைப்பற்றி பொய்யுரைக்கவில்லை.கடந்த பல வருடங்களாகப் பெண்ணிய வாதிகள் கூறிவந்தவற்றையே தனது "Submission"திரைக்கதையூடாக முன் வைத்தவர்.பெண்ணியவாதியான அன்யா மொய்லன்பெற்;(Anja Meulenbelt)இதுவரை காலமாக இஸ்லாத்தின் கருத்தியலையும்,அது குறித்துரைக்கும் பெண் தன்மையையும் விமர்சித்தளவுக்குக்கூட தேயோ வன் கோக்கின் திரைப்படம் முன் வைக்காது போயினும்'விசூவல் மீடியாவின்'வலு அந்த மொரோக்கோ நாட்டினனைச் சொர்க்கத்தின் கனவுக்குள் மூழ்கடித்துள்ளது.



நமது தேசங்களது எம்.எஸ்.சையது இப்ராஹீம்களது [ https://www.facebook.com/MEDIATNTJ/… ] நிலையும் இஃதே.மாற்றுக் கருத்தாளர்கள் ,இசுலாத்தை ; ஷரியச் சட்டத்தை விமர்சிப்பவர்கள் சனநாயகச் செயற்பாட்டாளர்கள் - மனிதர்கள் , இவர்கள் 'பொதுத் தளத்தில் கருத்தாடும் நிலைக்குச் செல்லும் மாற்றுக் கருத்தாளர்கள்.இவர்களை இசுலாமிய அடிப்படைவாதம் உயிரோடு வாழ அநுமதிப்பதில்லை.


இங்கே, தமிழ் நாட்டிலுள்ள இசுலாமியக் குழுக்களுக்குள் தேயோ வன் கோக்'கு நடந்த அதே பயங்கர வாதம் மக்கள் மயப்படுத்தப்பட்டு பல வருடங்களாச்சு! இதுவுமொரு மூலக் காரணம் ,குசாரத்து மோடியின் (இன்றைய பாரதப் பிரதமர் அவர்)படுகொலை அரசியலுக்கானதென்பதை நாம் பரவலாகச் சொல்லவில்லை!


மீளவும் அந்தப் பிரித்தானிய இமாமின் வார்த்தையை நினைத்துப் பார்க்கிறேன்,

'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால் திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும் இஸ்லாமமியத் தத்துவார்த்தம், இனவாதம், வேலையில்லாத்திண்டாட்டம், ஏழ்மை,மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது, அவர்களின் ஆத்திரமானது அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,அது விருப்பையும் ஏற்படுத்துகிறது'


தமிழ் நாட்டு இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளது இன்றைய நிலையை மேற்சொன்ன அவரது கூற்றிலிருந்து நிதானமாக விளங்கிக்கொள்ள முடிகிறது.


ப.வி.ஶ்ரீரங்கன்.

Wednesday, December 21, 2011

தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை!

தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை!

"சுகந்தி ஆறுமுகமும்,பெண்ணியல் புழுத்தலும்" -சில குறிப்புகள்.


ன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம். இங்கு, அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைத்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில்(தமிழீழப் போராட்டத்துள் புலிவழிப் புரிந்துகொண்ட தமிழர்களது சுயநிர்ணயம்) இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது. இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய புலி-சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.

இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரையான எல்லைகள் நீண்டுபோவதற்கான அரசியல்வரை, இவர்களது பணி(புலிகளும்-புலிகளது அழிவுக்குப் பின்னான பினாமிப் புலிகள்-நா(கா)டு கடந்த தமிழீழ அரசு) தொடர்ந்தே இருந்தது.இப்போதும், அதையே இன்னொரு வழியில் பின்பற்றுகிறார்கள்?

தாலித் தானத்துக்கும்,புலிகளது போராட்டத்துக்குமான ஒற்றுமை என்ன?

கடந்த சில தினங்கட்குமுன் பெண்ணொருத்தி மீளத் தாலிக் கொடியைத் "தமிழீழ விடுதலை"குறித்த போராட்டத்துக்கு-விடுதலைக்குத் தானமாக இட்டபோது அதை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் பெற்றுக்கொண்டு,"தாயகத்தில் எமது தாய்மார்களினதும் சகோதிரிகளினதும் கழுத்துக்களில் தொங்கும் தாலிகள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு தாலிக்கொடி இறங்கியது. ஈழத் தமிழர் தேசம் தனக்கெனச் சுதந்திரமான இறைமையுடைய தமிழீழத் தனியரசினை அமைத்துஇ தமிழீழத் திருநாட்டின் தேசியக் கொடி உலக அரங்கில் பட்டொளி வீசப் பறக்க வேண்டும் என்பதற்காக – இந்த அமர்வில் நமது தேசத்தின் தாய் ஒருவர் தனது கழுத்திலிருந்த தனது தாலிக்கொடியினை தானே இறக்கி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வை நாம் இந்த அரங்கில் கண்டோம்.”[ http://inioru.com/?p=25144 ] என்கின்றாராம்.

இங்கு,இந்தத் தாலி அறுப்புச் சம்பந்தமாக நான்: "புலிகள், இப்படி எத்தனை "தமிழிச்சிகளது" தாலியை அறுத்தாங்களோ,அதே பாணியில் தொடர்ந்து தாலியைத் தட்டிப்பறிக்கும் அதே குணம் தொடர்ந்தே வருகிறது.அப்படி என்னதாம் தாலிக்கும்,புலிகளுக்கும் தொடர்பு?;தாலியறுப்பார்! :-( "என்று வாசுதேவனின் நிலைத் தகவற்தொடர்பில் தாலி வழங்கும் நிழற்படத்துக்குக் கருத்திட்டேன்.


அந்தோ,பெண்ணிய சிங்கம் சுகந்தி ஆறுமுகத்துக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கப் பெண்ணியப் புயலாக மெல்லக் கொக்கரிக்கும்போது:
"எனது பெண்ணியல் புரிதலின்படி தாலியை அழித்தல் அல்லது அதை பொதுவெளியில் கழட்டுதல் என்பது ஒரு புரட்சிகர செயல்பாடு. தனது தாலியை கழட்டுவதற்க்குமுன் பெண் பல்வேறு கருத்தியல் உளவியல் மோதல்களுக்கு உள்ளாகிறாள். அதற்கு அபார துணிவு வேண்டும். அவர் அதை ஒரு பொதுப்பணிக்கு கொடுக்கிறார். சிறீ ரங்கன் உமது எழுத்துக்களில் இயங்கில் வேறுமை எப்பவும் தெக்கிநிற்கும். வெறும் வசைபாடும் அரசியலில் இருந்து வெளியேற முயற்சியுங்கள். புகலிடத்தாரிடம் புலிகள்பற்றி இன்னும் ஒரு நேர்மையான விமர்சனம் எழவில்லை. திட்டித்தீர்தலைத்தவிர.."
இப்படியெழுதி விடுகின்றார்.

ஆக,இது:"பொதுப்பணிக்குத் தாலி கழற்றப்படுகிறது.அது அபாரமான துணிபானது-தியாகமானது,புரட்சிகரமானது,பெண்விடுதலைக்கானது-பெண்ணடிமைத்தனத்தைப் போக்க வல்லது"இந்தப் பொதுப் புத்தியைத் தகவமைக்கும் புலிகளது பிரச்சாரத்தின் வலிமையை நாம் சில மாதிரிக்கான தெரிவுகளின்வழி உடைத்தோமானால்,நமது சமுதாயத்தில் பல இலட்சம் சுகந்தி ஆறுமுகங்களை உருவாக்கும் புலிகளது கருத்தியற் கட்டுமானத்தைப் புரிந்துகொள்ள முடியும்.ஏலவே,புலிகள்"உயிராயுதம்"தயாரித்த கதையும் இப்படியே...

இப்போது,இந்தத் தனித்துவமான பெண்ணியப் பனுவலூடாகக் கடத்தப்படும் தாலியின்-கொடியின் தானத்துக்கூடாகக் கட்டப்படும் குறியீடென்ன?

இதுவரை,சுவிசிட்ஸர்லாந்திலிருந்து ,உலகம் பூராகவும் தொடர்ந்த இந்தத் "தாலித் தானத்தின்" வழி, புலிகள் முன்னெடுக்கும் பிராச்சாரம் என்ன?

அதற்கும், சுகந்தி ஆறுமுகம் வகுப்பெடுக்கும்"பெண்ணிய த்துக்கும்" என்ன தொடர்பு என்பதை நாம் சற்று ஆழ்ந்து(கவனிக்க ஆழ்ந்து என்பதை) நோக்குவோம்.

தாலி,தமிழர்களது பண்பாட்டில் அது பெறுமதியான வாழ்வியற் குறியீடாகவும்,பெண்மீதான ஒருவித உளவியற் தாக்குதலாகவும்,அதன் சாரத்துள் சுமத்தப்படும் சமூகப் பெறுமானம்"சுமங்கலி"ச் சுமையெனும் பண்பாட்டுப் படுதாராகவும் நிலைப்படுத்தப்பட்ட பின்,அதன் சமூகவுளவியற் பெறுமானமானது "வாழ்வு" என்பதாகும்.அதன் அறுப்பில்"வாழ்வு" அற்றதன் தளத்தில்"வாழ்விழந்த"நிலைக் களன் மிக விரைவாகச் சுமத்தப்பட்டு,குறியீட்டுத் தாக்குதலில் பெண் சிதைக்கப்பட்டு மூலையுள் இருத்தப்படுகிறாள்,அல்லது "தமிழ் வாழ்வு"(சைவப் பழம்) விழுமியத்திலிருந்து விலக்கப்படுகிறாள்.

புலிகளது பிரச்சாரயுக்தியுள் "தாலித்தானம்" தான் சொல்வதிலிருந்து வேறொன்றையுங் குறித்துரைக்கிறது.இந்த ஆற்றலானது,தாலியின் குறிப்பான் பங்குக்குக் குங்குமம் பிறிது மொழியாகும்போது,அங்கே-"குங்குமம்" ஒரு நிலையில்வாழ்வாகவும்- சிகப்பு நிறம் மட்டுமாகப் பிறத்தியாருக்கும்-தமிழ் மொழிக்கு அந்நியமானவொரு மாற்று மொழியாளுக்கு-குறிப்பாக ஜேர்மனியர்களுக்கு!

அது ஒரு நிறம் மட்டுமே.அதை மொழிப்படுத்தும்போது,அதற்கு அவ்வளவு பெறுமானமான அர்த்தச்செரிவை எம்மால் ஏற்படுத்த முடியாது.ஆனால்,அது ஒரு குறியீடாகவும்,குறிப்பானகவும்,நமது சமுதாயத்துள் இயங்கும்போது,அகவயக் குறைவான மதிப்பீட்டைத் தள்ளி வைத்து வாழ்வொன்று நிலவுகிறது.அது பிற்போக்கானதாக இருந்துங்கூட.இதுதாம் தாலிக்கான மகிமை!

எனவே,தாலி குறியீடாகிக் குறிப்பானாகவும் விரிந்து ஒரு கட்டத்துள் சொன்மை என்பதாக அது விரிகிறதா? "தாயொருத்தி தாலிக்கொடியைத் தானமாக வழங்கினாள்" எனும் சொல்லின்வழி தரும் அர்த்தமும்,குறிப்பால் தரும் அர்த்தமும் ஒன்றல்ல!


"தாலி-குங்குமம்"என்பவை ஒரு தரப்பில் குறியீடாகிக் குறிப்பானாகவும்-சொன்மை ஆகவும் விரிவதில்தாம் புலிகளது"தாலிக் கொடை"விளம்பரம் உச்சம் பெறுகிறது.இதுதாம் எனது"தாலி அறுப்பு"எனும் கருத்துக்கான மூலச் சொன்மை! எனவே,பெயரிடல் அவ்வளவு இலகுவான பொருட்தரவல்ல பிரயோகமல்ல என்பதான புரிதலுள்,உட்புகுத்தப்பட்ட"வடிவம்"அவசியமானவொரு சமூக உளவியலைச் சொல்வதிலிருந்து பின்வாங்கிச் செல்லும் சுகந்தி ஆறுமுகத்துக்குப் "பெண் விடுதலைப் புரட்சியாக" இவை புரிகிறது.அதாவது,புலிக்குத் தானமாக வழங்கும் தாலி புரட்சி-பெண்விடுதலையாகிறது!ஐயோ,அரமே!

சொல் வேறு,சொன்மை வேறென்று உரைக்க, "உ-மக்கு" விற்றின்கன்ஸ்ரைனை அழைத்துவந்து வகுப்பெடுக்க முடியாது.

"தாலி x பொருண்மை-வாழ்வு x சொன்மை" இரண்டுக்கும் அர்த்தங்காண் அறிவு விலக்கிப் பெண் விடுதலைச் சிந்தனையை எவருக்குரைத்து என்ன பயன்? பெண்ணியமெனப் பெயரிட்டுவிடுவதில் அவசரப்படும் அறிவுக்கு, இந்தச் சிந்தனையை ஒரு சூத்திரமாக மாற்றிவிடுவதில் "பெண்விடுதலை-புரட்சி" அறைகூவலாகி விடுகிறது. இதுவே,"இயக்கவியற் வேறுமை"குறித்து வகுப்பெடுக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்னமே நாம் "தாலியறுத்து" இல்வாழ்வில் இணைந்து"குடும்பம்"நடாத்தும் இதுநாள்வரை, எமக்குப் பெண்ணின் உளவியல் மோதலை வகுப்பெடுக்கும் சுகந்தி ஆறுமுகத்துக்குப் புலிகளது போராட்டச் செல் நெறியோ அல்லது அவர்களது உளவியற் தாக்குதலோ புரிந்த மாதிரித்தாம்.

நான்,இத்தகைய தனிப்பெரும் பெண்ணியப் புரட்டுக்கு அப்பாலே புலிகளது தாக்குதலைக் குறித்துக் கவனப்படுத்தவே ஆர்வமாக இருக்கிறேன்.

தாலிக்கும்,புலிகளுக்கும்,தானத்துக்கும்-தியாகத்துக்கும் என்ன விளக்கங் காணமுடியும் புலிவழிக் கருத்தியலுக்குள்?

"தற்கொடை"
"தாலிக்கொடை"
"உயிற்கொடை"
"உயிராயுதம்"

"உளக்கொடை" இப்படிப் புலிகளது மொழிக்குள் நிலவுகின்ற கருத்தியற் கருவூலமானது ஒவ்வொரு கட்டத்துள்ளும் மிக வேகமான சமூகவுளவியலாக ஆக்கமுற வைக்கப்பட்டுள்ளது.வாழ்நிலையே சமூகவுணர்வைத் தீர்மானிப்பதென்பதும்-வாழும் நிலையைக்கடந்து,புற நிலையின் தன்மையே (நிலையே) சிந்தனையைத் தூண்டுவதென்ற உண்மையில், இத்தகைய கருவூலங்களை சமுதாயத்துள் பெரும்பகுதி மக்கள் வாழும் வாழ்நிலைகளாக மாற்றப் புலிகள் செய்து வரும் மிகக் கேவலமான பிரச்சாரங்களே இன்றுவரை மிகப்பெரும் துன்பத்தைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு அள்ளி வழங்கியது.

இதன்,தாக்கமானது ஒரு கட்டத்துள் தேசத்துக்காக"நீ சாவது"அவசியமானது-அர்த்தம் பொதிந்ததெனச் சொல்லப்பட்டதுவரை,சமூகத்துள் மிகவும் பெறுமானமிக்க வாழ்வை-தாலியைத் தியாகஞ் செய்யும் தாயைவிட,"உன்னிடம் இருக்கும் செல்வம் பெரிதில்லை-அதைப் புலிகளாகிய எமக்குத் தந்துவிடு!"எனச் சொல்லும் இந்த உளவியலை வகுப்பெடுக்க எனக்கு ஒரு சுகந்தி ஆறுமுகம் தேவையா?

தாலிக்கொடி வழங்கும் வர்ணப் போட்டோக்கள்-வீடியோக் காட்சியுருவாக்கத்துள்,இத்தகைய பிரச்சார உத்திகள் ஏலவே மலிந்திருந்தவை.கடந்த இரு சகாப்தத்துள் இது நீண்டவொரு பட்டியலைத் தரவல்லது.இதன் வாயிலாகவொரு கீழ்த்தரமான பிரச்சாரத்தை முன்வைத்த புலிகள்,எத்தனையோ தாய்மார்களது கழுத்துள் கை வைக்காமலே தாலிக்கொடிகளை அபகரித்தது மட்டுமல்ல,நிலத்தில் அத்தகைய தாய்மார்களது கணவர்களையுங் களப் பலியாக்கியது வரலாறுதாம்.இதன் தொடராகக் கட்டியமைக்க முனையும் உளவியலானது, தொடர்ந்து மக்களை மொட்டையடிக்கவும்,உணர்ச்சிவயமாகத் "தமிழீழ விடுதலைக்கு" பொருட்கொடை வழங்கும் ஒருவித மனத்தையே அவர்கள் உருவாக்க முனைகிறார்கள்.அந்த மனத்தைத் தொடர்ந்து தகவமைக்கும் இந்தத் "தாலி-கொடி" , சமூகத்துள் அதி வேகமான குறியீடாகி "அனைத்துக்கும் ஈடாகாதவொரு பொதுமைப்பட்ட சொன்மையாக" மாறும் இந்தப் பிரச்சார உத்தி கீழ்த்தரமான காயடிப்பு அரசியலாகும்.

"மனிதர்கள் மொழியினது கைதிகள்"என்பது ரொலான் பார்த்தின் கூற்றுக்களில் அதிகம் முக்கியமானது.உயிர் வாழ்வின்முக்கியமான பரிணாமம் இந்தக் குறிப்புணர்த்தும் உணர்வினது அனுங்கலான மொழியாகும். எனவே,மொழியென்பது என்ன-வாழ்வென்பது என்னவென மிக இலகுவாகப் புரிந்துபோக முடியாத நெருக்கடியுள்தாம் புலிகளது இந்தப் பிரச்சார உத்தி கையாலாகதவொரு இனத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

ஒன்றைக் காட்சிப்படுத்தும்போதே, இன்னொன்றைக் காட்சிப்படுத்தாது விடப்படுகிறது.குறியீடாகச் சொல்லும்போது, இன்னொன்றைக் குறித்துச் சொல்லாமல் விடப்பட்டு, உண்மை மறைக்கப்படுகிறது.

"தாலி" என்ற பொருண்மை தன்னளவில் ஒரு குறியீடாகவும்-குறிப்பானாகவும் இருக்கும் அதே சமயம் அது வாழ்வெனும் தருணத்துள் ஒரு சொன்மையாக விரிகிறது. இங்கே,பொருண்மையும்,சொன்மையும் மெலிதானவொரு நூலிழையால் பிரிக்கப்படுகிறதே இந்தத் தளத்துள்தாம் புலிகளது "தாலி-கொடித் தானம்" மையங்கொண்டு, மக்களை மொட்டையடிப்பதற்கானவொரு உறுதியான பிராச்சர உத்தியை மறைத்து மக்களுக்கான விடுதலை-தேசவிடுதலை எனப் பரப்புரை செய்து மிகவும் இலகுவாக ஊரார் தாலியை அறுத்துக்கொள்கிறது.இது கிடைக்காத சந்தர்ப்பத்துள் துப்பாக்கிக் காட்டித் தாலியறுக்கும் இன்னொரு கூட்டமோ,அறுத்த தாலிகளுடன் பாரீசில் ஒதுங்கும் இடம்,தமிழ் மளிகைக் கடையாகவும்,தமிழ்அச்சுக் கூடமாகவும் இப்போது இருக்கும்போது,தாலி அறுப்புக்கான இந்த நிகழ்வுகள் அனைத்தும் "பெண் விடுதலைக்கான" முன் நிபந்தனைகள்தாம்.

இதையொட்டிச் சுகந்தி ஆறுமுகங்கள் இயங்கியல்"வேறுமை" வகுப்பெடுக்கட்டும்.நல்லதுதானே?-யாரு, "வேண்டாம்" என்றோம்?


ப.வி.ஸ்ரீரங்கன்,
ஜேர்மனி
21.12.2011

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...