Thursday, December 29, 2011

அதிகாரம்: ...பூப்காவின் பாத்திரம்(2)

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்(2)

சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல்.

(அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!)


(2)

பொனபாட்டிசம்

தமிழ்ச் சூழலில் மிக அவசியமான ஆய்வுத் தன்மையுடன் கூடிய கட்டுரைகள் வரவேண்டுமென எனக்குள் எண்ணுவதுண்டு.இந்த வகைப்பட்ட கட்டுரைகள் அதிகமாக வருவதற்கான ஆய்வுத்தகமை சமகால நிகழ்வோட்டத்துடன்,அதுசார்ந்த மிகுந்த புரிதலுடன் சம்பந்தப்பட்டது.இந் நிலையுள்,சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது!

அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர்வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?அல்லது,மிகேல் பூவ்காவினது பரந்துபட்ட புரிதலுள் புலிகளது இயக்கவாத-அந்நிய அடியாட்படைச் சேவையை ஒடுக்கப்படும் இனத்தின் எதிர்ப்புப் போராட்டமாகவும்-அதுசார்ந்தெழுகிற அதிகாரமாகவும் பார்க்க முடியுமா?

எவன்(ள்),எந்தெந்தத் திசையில் அதிகாரம் குறித்த பரந்துபட்ட புரிதலுள்புலிக்கான தளத்தை மீளத் தகவமைத்துப் புலிகளது எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனரென்பதை மிக இலகுவாகப் புரிந்துவிட முடியாது.

இலங்கை அரசினது புதிய தெரிவுகளாக முன்னெடுக்கப்படும் இராணுவக்கெடுபிடிகளது நகர்வுக்கு வலுச் சேர்ப்பதில் ஆதாயமடையமுனையும் புலத்துப் புலிப்பினாமிகள், மக்களது அவலங்களை வைத்துப் பிழைக்கமுனையும் அரசியலானது மீளவும், "தமிழீழவிடுதலை"யின் பெயரால் இனி நம்மை முட்டாளாக்குமானால் அதை அனுமதித்த குற்றத்திற்காக நாம் மக்களைக் குறித்துப் பேசுவதே வீணாகவேண்டும்!

இந்தப் புரிதலிருந்துதாம் அதிகாரம் குறித்த தேடுதலை வைத்துப் புலிகளது பாசிசச் சேட்டையை,சகோதரப்படுகொலைகளை நியாயப்படுத்தும் நம்மை, நாம் கேள்விக்குட் படுத்தியாகவேண்டும். சிங்கள அரசு தமிழினப்படுகொலையை மிக மும்மரமாக நடத்தியபோது,நாம் ஒருங்கிணைந்து பொதுவெதிரியைத் தாக்கி வெற்றிகொள்வதைத்தடுத்து, நமது சகோதரர்களையே நாம் பொதுவெதிரியைவிட மிகமோசமாகத் தாக்கி அழிப்பதென்பது,பேரினவாதத்துக்கெதிரான எதிர்ப்புப் போராட்டமாகாது.அங்கு பூவ்கா குறித்துரைத்த உயிரதிகாரமானது உயிர்வாழுவதற்கான தனது சகோதரர்களது பௌதிக இருப்பை நிராகரித்துவிட்டு, பொதுமைப்பட்ட அரசியல் வாதத்தைத் தகவமைக்க முடியாது-பேரினவாதத்திடம் ஒடுக்குமுறைக்கெதிரான நியாயமான போராட்டத்தைச் செய்யும் அறத்தையும் உலகுக்கு ஒப்ப முடியாது.எங்கு ஒடுக்குமுறை நிலவுகிறதோ,அதற்கு எதிரான போராட்டம் நிலவியே தீரும்.இரண்டினது தளமும் அதிகாரத்திலிருந்து எழுகின்றபோதும்,ஒடுக்கும் அதிகாரம் பலதரப்பட்ட நிறுவனங்களாலும்,பொருளாதார மேலாதிக்கத்தாலும் தொடர்ந்து தன்னைத் தக்கவைக்கிறது.மற்றதோ,நிலைப்புக்கான உயிர்ப்போராட்டத்துள் முழுவதுமாக ஒடுக்கப்படும் உடல்களை-மக்களை நம்பி எழுகிறது.அதுவே,ஒருகட்டத்தில் அந்த நம்பிக்கைக்கு எதிராகத் திரும்பும்போது,ஒடுக்கும் அதிகாரம் ஏதோவொரு வகையில் எதிர் அதிகாரத்தின்-போராட்டத்தின் ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டிருப்பதையே புலிகளதும்,மாற்று இயக்கங்களதும் இதுவரையான மக்கள் விரோத ஆயுத அராஜகம் புலப்படுத்தியது.அந்த ஒடுக்கும் அதிகாரம் ரோ வடிவிலும்,சி.ஐ.ஏ வடிவிலும் மட்டுமல்ல எம்.ஜீ.ஆர்-கருணாநிதி,பிரமதாச,ரணில் வடிவிலும் நம்மிடம் புலப்பட்டுக்கொண்டது.இந்தப் பெயர்கள் வெறும் குறியீடு மட்டுமே.

அல்லது, பூவ்கா கூறியமாதிரி"ஒடுக்குமுயைக்கு எதிரான போராட்டம் எங்கிருக்கிறதோ அங்கு அதிகாரம் வெளிப்படுகிறது"என்று இதற்குச் சமாதானஞ் செய்யமுடியாது!இது முற்றிலும் தவறான புரிதல்.எனவே,நாம் ஆதிகாரம் குறித்து மேலும் புரிதல்களை வளர்த்தாகவேண்டும்.

இந்தத் தவறான புரிதல்கள், தவறானவை என்பதைத்ச் சொல்வதல்ல எனது இந்தத் தொடரின் நோக்கம்.இது,பரந்துபட்ட தளத்தில் எமது எதிர்ப்பு அரசியலது எதிர்காலம் குறித்து நோக்க முனைகிறது.சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து தமிழ்பேசும் மக்களையும்,ஏனைய சிறுபான்மை இனங்களையும் ஒடுக்கும் சட்டரீதியான அடியாளாகச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கும், இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் செயற்படுகிறது.

இலங்கையின் அரைத் தேசியப் பொருளாதாரமானது,அதன் வர்க்கக் குணாம்சத்துக்கொப்ப இலங்கைச் சிறுபான்மை இனங்களையும்,தனக்குள் செரித்துவிட முனைகிறது.இது,இலங்கைக்கானவொரு மொழி,ஒரு மதம்,அதுசார்ந்த பண்பாட்டுருவாக்கத்தைக் கணித்துச் சிறுபான்மை இனங்களை முற்றிலுமாகச் செரிக்கும் பொருளாதார-அரசியல் நகர்வு மிக வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்டபோது, புலித்தலைமையைக் காட்டிக்கொடுத்த புலிப்பினாமிகளோ அதற்குப் புதிய விளக்கங்கொடுத்து மக்களுக்கான "அபிவிருத்தி-பாதிக்கப்பட்ட மக்களுக்கான கஞ்சி" என சிங்கள மேலாதிக்கத்தைப் பட்டுக்குஞ்சங்கட்டி வரவேற்று, அரச ஆதிக்கத்தை வலுவாகத் தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய பூமியில் மறுநிலைப்படுத்தும்போது,அதை எதன் பெயரால் புலிவிசுவாசிகள் புரிந்துகொள்கிறார்கள்?தனியே துரோகி சொல்லியா? இந்தத் துரோகியோடு அரசியல் ரீதியான எதிர்ப்பு அரசியலது நியாயம் சரியாகி விடுகிறதா?அடுத்த கட்டம் என்ன?

எனவே,இந்தத் திசையில், விவாதவுரை பகுப்பாய்வு(Diskursanalyse) அவசியமாகிறது-அதிகாரங் குறித்த விவாத ஆய்வுப் பண்பு தமிழுக்கு இதுவரை செறிவான முறையில் எட்டவில்லை.ஆராய்ச்சி முறையியல்(Methodologie) முற்றிலும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியப்பட்டிருக்கிறதென்பதால் அதிகாரங்குறித்த புரிதலை ஒருவர்மீது சுமத்தி "நீ பூவ்காவை படித்துவிட்டுப் புலிகளது அதிகாரங்குறித்துப் பேசு" என ஓங்கி உரைக்கிறது.இந்த மொழிக்குள்: "மற்றவர்களுக்கு ஆங்கிலமோ அன்றி வேறு அந்நிய மொழியோ தெரியாதென்றும்,புலம்பெயர் இடதுசாரிகள் தமிழகத்து "விரல்சூப்பி"ப் பேராசிரியர்கள் தமிழ்படுத்தியதைமட்டும் வாசித்துவிட்டு,அதிகாரங்குறித்துப் பேசுவதாகவும் புரிந்துகொள்ளச் சொல்கிறது". இது,அடுத்த மோதாவித்தனத்தின் அண்ணன்(சிறு-மெலினப் பட்ட குரல்களை ஒட்ட மட்டந்தட்டும் பார்ப்பன உளவியல்என்று சொல்ல வருகிறேன்). நாம்,இதிலிருந்து சிலவற்றை பகுப்பாய்வு நிலையைகொண்டு பூவ்கா முதல் காபர்மாஸ்வரை அதிகாரம் குறித்து நோக்குவோம்.முதலில் சில வரையறுப்புகள் அவசியமாகிறது.

பகுப்பாய்வு சார்ந்து:

மேற்குலகப் பல்கலைக்கழகத்துள் பூவ்காவின் நிலை என்ன என்பதிலிருந்து,

1 : பேராசிரியர் மார்டின் நொன்கோவ் (Martin Nonhoff,Professsor für Politikwissenschaft an der Universitaet Bremen குறித்தியங்கும்"பகுப்பாய்வின் கேள்விகள்,அதிகாரம்,மேலாதிக்கம்"ஆய்வுமுறையியல் மற்றும் கோட்பாடுகள்சார்ந்து நான்,வரையறுத்த ஒரு புள்ளியல்(இதை இத்தொடரின் இறுதில் விசாலமாகச் சொல்வேன்) கீழ்வரும் தொகுப்பு நிரையை வழங்கி மேற் செல்வேன்:

2: மிகேல் பூவ்கா (Michel Foucault,1926-1984),உலகளவில் அறியப்பட்ட முக்கியமான நவகாலச் சிந்தனையாளர்,பிரான்சின் சிந்தனைப் பாரம்பரியத்தின் அமைப்பியல்(Strukturalismus) அறிஞர்.அவரது பிரதானத் தெரிவானது"பன்முகக் கருத்துவினைப்பாட்டு உரையாடல்"(Diskurs)அதுசார்ந்த பரிசீலித்தலாகும்.பூவ்கா எதையும் பரிசீலிப்பதையே தனது இறுதி முடிவாக எடுத்துக்கொண்டவர். எந்தவொரு தனது சிந்தனைப் போக்கையும்-கருத்தையும் முடிந்த முடிவாகச் சொல்லாமற்றவிற்றபோது,தான்கண்டடைந்தவுண்மைகள் ஒரு வடிவத்துக்குட்பட்ட தத்துவமென எப்போதும் சொல்வதை நிராகரித்துவிட்டுத் தன்னைப் பரிசீலிப்பாளன்-பரிசோதனையாளன் எனக் கூறிக்கொண்டார் (Ich bin ein Experimentator und kein Theoretiker.-Michel Foucault Gespraech mit Ducio Trombadori,Die Hauptwerke-seite:1585/86).அவரது சிந்தனைக்குட்பட்ட புரிதலுள்அதிமுக்கியமாக எடுத்தாளப்பட்ட வார்த்தை Als Dispositiv/disposition முடிவு, ஒழுங்கு அல்லது ஆணை ,இதை விளங்க முற்படுவதில்தாம் சிக்கலே எழுகிறது.இந்தச் சிக்கலை அவரே பல இடங்களில் கைவிரித்துவிட்டார்.இதுவொரு தடை. Tabu... எனது வாசிப்பு உட்பட்ட,
"Die Ordnund der Dinge" 1966
"Archaeologie des Wissen"1973
"Ueberwachen und Strafen"1974
"Sexualitaet und Wahrheit" 1977 bis 1986
"Der Wille zum Wissen "1977
"Foucaults Philosophie der Kritik-Die Hauptwerke
Analytik der Macht" 1970 bis 1983(Analytik der Macht. Frankfurt am Main, 2005 )

Gouvernementalitaet என்பது "அரசு-எண்ணங்கள்"அனைத்து நிறுவனமயப்பட்ட நிறுவனங்களையும் அரசு-தனிமனித நிலை ளிலுமாகப் பன்முகப்பட்ட புரிதலோடு நகர்வது.எனினும் அது, முழுமையற்றது.அதை 1977-78 இல் Collège de France இல் அவரது வகுப்புச் சகாக்களான Daniel Defert, François Ewald, Jacques Donzelot, Giovanna Procacci, Pasquale Pasquino ஆகியோரது துணையோடு முன்நிலை வாசிப்பை/விரிவுரையைச் (Die Vorlesung)செய்துகொண்டபோதும் அதைத் தொடர்ந்து விருத்திக்கிட்டபடி மேலும் விருத்தி செய்யும் தருணத்தில் அவரது மரணம்(1984)அதைத் தடைப்படுத்திவிட்டிருக்கிறது.

3: அடுத்து,அரச ஆதிக்கம்,அர ஜந்திரம் குறித்தான புரிதலில் அதி முக்கியமானவொருவரும்,உரையாடலுக்கான பொதுவெளியைக் குறித்து அழுத்தமாகப் பேசுபவரமான யுர்கன் காபர்மாஸ்.

Juergen Habermas 1929, ஜேர்மனியில் பிறந்தவர்.1956 ஆம் ஆண்டிலிருந்து வருகைதரு பேராசிரியராக தியோடர் வே.ஆடர்னோ கல்லூரில் (Theodor W.Adorno am Institut fuer Sozialforschung in Frankfurt ) கடமையாற்றியவர்.அவரது இன்றைய அனைத்துச் சிந்தனையும் ஒழுங்கமைந்த முதலாளித்துவச் செழுமைப்பட்ட ஒழுங்கை வேண்டுவது.அதிகாரத்துள் நிலைப்படுத்தப்பட்ட நிறுவனங்களைக் குறித்துத் தொடர்ந்து விமர்சிப்பதால் அவரை அரசு குறித்துப் புரிவதில் அதிகமாகத் தொடர்ந்திருக்கிறேன். என்றபோதும்,"நோய்வாய்ப் பட்ட முதலாளியக் குழந்தையின் வைத்தியன் காபர்மாஸ்"என்று கூறிய ஜேர்மனிய இடதுசாரியத் தோழன் இதிலும் என்னை எச்சரிக்கின்றான்.

அவரது முக்கிய நூல்கள்:
" Theorie des Kommunikativen Handelns" in 2 Baenden 1981
"Moralbewusstsein und Kommunikatives Handelns" 1983
"Erlaeuterungen zur Diskursethik"1991
"Faktizitaet und Geltung" 1992

4: Chantal Mouffe 1943, பேராசிரியர் கன்ரால் மூவ்பே வகுப்பெடுக்கும் அரசியல் விஞ்ஞானப் புரிதலில்அவர் தனது நண்பர் லூக்லாவோடு(Ernesto Laclau: wurde 1935 in Buenos Aires geboren und war zuletzt an der University of Essex im Bereich Politische Theorie tätig. Er sieht sich selbst als Vertreter des Postmarximus.) இணைந்தெழுதிய "Hegemonie und radikale Demokratie zur Dekonstruktion des Marxismus" -1985.தொடர்ந்து பேசத் தக்க வெளிகளை அதிகாரத்தின்மீதான புதியவகைத் தேடல்களை பூவ்கா செல்லாத வெளிகளில் வைத்துரையாடுகிறார்(Chantal Mouffe: wurde 1943 in Belgien geboren, ist heute als Professorin für Politische Theorie an der University of Westminster in London tätig. Gemeinsam mit Laclau publiziert sie 1985 „Hegemonie und radikale Demokratie. Zur Dekonstruktion des Marxismus“).

நவ காலச் சிந்தனைமுறைமைகளுக்கப்பால் எடுத்தாளப்படவேண்டிய முக்கியமானவொரு சிந்தனையாராக நான் இனங்காண்பவர் ஜேஆன் ஜாக்கோப்-றுவ்சேவ் (Jean-Jacques Rousseau),1712 இல் இருந்து 1778 வரை வாழ்ந்திருக்கிறார்.ஜெனிவா,இத்தாலி,பிரான்ஸ் என வாழ்ந்த மனிதரது சிந்தனை அன்றைய காலத்து சமூகவியற் போக்குகளை மிகச் சிறந்த புரிதலில் உரைப்பது.அவரது பிரதான தத்துவார்த்தப் போக்கானது "இயற்கையிடம் மீளச் செல்லல்"என்பதாகும். மனிதர்களுக்குக்கீழ் சமமற்ற நிலைகளைக் குறித்தும், மனிதர்களுக் கிடையிலான சமூக வளர்ச்சிப் போக்குகள், இயற்கைக்கும் மனிதர்களுக்குமானவொரு சீரழிவின் நிலையைக்கண்டு சிந்திக்க முனைந்திருக்கிறார்.அவரது முக்கிய-பிரதான நூல்களும் எனது புரிதலுக்குட்பட்டதன் தெரிவில் கீழ்வருவன:

"„Emile oder über die Erziehung“ 176
„Der Gesellschaftsvertrag“ 1726
„Abhandlungen über die Wissenschaften und Künste“ 1750
„Abhandlung über Ursprung und Grundlagen der Ungleichheit unter den Menschen“ 1753

இந்த மொழிவின்வழி,வளர்ச்சியடைந்த ஐரோப்பியச் சமுதாயங்களின் அதிகாரங்குறித்த-அரசு குறித்த அறிவின் நிலவரம்பற்றிய தேடலை நமது சூழலுக்கொப்ப புரிந்துகொள்வதன் அடிப்படைகளை மேற் சொன்ன தெரிவினது தருக்கத்திலிருந்து மேலும் வளர்க்கலாம். சர்வதிகாரப்போக்குடைய பெரும் உரையங்களின் நடுவே,இந்த எழுத்தாக்கத்தின்வழி "ஈழவிடுதலை"ப் போராட்டத்தின் சக்திகளையும்,அதைத் தலைமேற் ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களது உள-உய்வுத் தூண்டலையுங் குறித்து பேசவதுதாம் அதிகாரத்தின் திசைவழிகளை-புரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை எமக்குள் மெல்லச் செரிக்க முடியும்.பொருளாதாரஞ் சார்ந்தியங்கும் வாழ்நிலை சமூகவுணர்வைத் தகவமைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அந்தவுணர் விலிருந்து சிந்தனைப்போக்கு ஒரு அறிகுவியத்திலிருந்து இன்னொரு தளத்திலான அறிகுவியத்துக்கு மாறிக்கொண்டே இருக்கிறதெனக் கொண்டால் இந்த நிகழ்வூக்கத்துக்குள் நிலவுவது அதிகார நிலைப்பட்ட வடிவ மாற்றங்கள்தாம்.பண்புரீதியாகவும்,வடிவரீதியாகவும் இவை மாறும் கட்டங்களைக் குறித்து நோக்குவதில் அதிகாரத்தால் ஒதுக்கப்பட்ட-பட்டுள்ள-விளிம்பு நிலையிலுள்ளவொரு சமுதாயமாக மாற்றப்பட்டுள்ள தமிழ்பேசும் சமுதாயத்தின் தலைவிதியைக் குறித்த கருத்து வினைப்பாடானது தனக்குரிய வீரியத்தையும்,தேம்பலையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கிக்கொண்டிருப்பதால் இதைப் புரிகிற வெளியையாவது நாம் புரிந்துகொண்டால், அடுத்த கட்டம் புலப்படும்.கருத்து வினைப்பாடு என்ற பூவ்காவின் பரிசீலனைப் புள்ளியில் காபமாஸ் கருத்துவினைப்பாட்டைப் புரிந்துகொள்ளல் எனும் தளத்தில் கொஞ்சம் அகலிக்க விரும்பும் தளத்தில்"விருப்பத்துக்குரிய விவாதச் சூழலை" உருவாக்க விரும்புவதுதாம் எனது புள்ளி.


தொடரும்...

முதற் பகுதியை இங்கே வாசிக்கவும்...

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.12.11

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...