Saturday, October 29, 2011

அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம்

மக்களைக் காத்தல்: ஜனநாயகம்.

இதுவரைகாலமாக...


உலகம், "சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்;" (dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!

கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன."உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen werden,das Friedliche Zusammenleben der Voelker zu stoeren,insbesondere die Fuehrung eine Angriffskrieges vorzubereiten,sind verfassungswidrig.Sie sind unter Strafe zu stellen.-Artikel 26 vom grundgesetz der B.R.D.)ஆனால் இத்தகைய முதலாளித்துவ நாடுகள் மக்களை மடையர்களாக்கும் சட்டங்களை இன்னும் மக்களுக்கான நலனோடு சம்பத்தப்பட்டதாகக் காட்டிக்கொள்ளும்போதே தமது வர்க்க நலனைக் காக்கப் போருக்கு மக்களை அணிதிரட்டும் சட்டத்தையும் அதற்கு நேரெதிராகக் கொண்டிருக்கும்போது ,இது மிகக் கேவலமான பித்தலாட்டமாகிறது.

"Arikel 87a feststellt,dass der Bund Streitkraefte ausschliesslich zur VERTEIDIGUNG aufstellt.Und dass dies auch eine Wehrpflichtarmee sein kann,dafuer gibt der Artikel 12 a gruenes Licht:>>Maenner koennen vom vollendeten achtzehnten Lebensjahr an zum Dienst in den Steitkraeften...verpflichtet werden." என்னவொரு இழிமையான சட்டம்!இத்தகைய சட்டங்கள் சொல்வதென்ன?"ஜேர்மனிய அரச அடிப்படைச் சட்டம் 87அ பிரிவு கூறுகிறது:யுத்தப்படைகளானவை தேசப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.இது சட்டப் பிரிவு 12அ வினது கூற்றுக்கு பச்சைக் கொடியைக் காட்டி,பதினெட்டு வயதடைந்த இளைஞர்களை கட்டாய இராணுவத்துக்கு ஆட் திரட்டுவதைக் கடமையாக்கிறது. இங்ஙனம் மேலும் கீழும் முரண்பாட்டோடு சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் நாடுகள் தமது நலன்களை மக்களின் நலன்களாக்கிப் படம் காட்டும் இன்றைய தருணத்தில் ஒடுக்கப்படும் இனம் தனது தலைவிதியைத் தாமே நிர்ணியிப்பதைப் பயங்கரவாதமென்கின்றன.தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வன்மம் நிறைந்த பரப்புரைகளால் தமது மனிதவிரோத முகங்களை மறைக்க முனையும் இத்தகைய முதலாளித்துவ நாடுகள்தாம் எமது மக்களைத் தமது கால்களில் கட்டிப் போடுவதற்காகச் சமாதான நாடகம் ஆடுவதும்,முடியாதுபோனால் தமது படைகளை அனுப்பி எம்மைக் கொன்று குவித்து வருகிறார்கள்.

இன்றைய இலிபியா யுத்தம் வரையான மக்களைக் காத்தல்-சர்வதிகாரத்தை ஒழித்தல் என்பதிலிருந்து பண்டுதொட்டுப் புரியும் அரசியல் அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் எதுவுமில்லையென்றாகிறது.இதைக் கார்ல் போப்பரது உரையாடல்கள் பலதில்,அவரது தாய் மொழியில் நான் புரிந்துகொண்டவை.




சில விதிமுனைப் பயன்களில் மிக நெருக்கமானது பிரிடிறிக் காய்க்கினது[Friedrich A.Hayaek : Der Weg zur Knechtschaft ] எழுத்துவழியான நவலிபிரலது தாரளமயக் கோட்பாடு.(Sir Karl Raimund Popper) துணைக்கழைத்து மார்க்சியம் என்பது "பெரும்பாலும் நேர்கோட்டுத்தன்மையும் ஒருவித கருத்துமுதல்வாதமும் நிறைந்திருபதாகச் சொல்கிறார்".

கார்ல் போப்பர்,திறந்த சமுதாயத்தின்(After the Open Society) பிரதிநிதி,அது கத்தோலிக்க அறக்கட்டளைகளால் கௌரவ"டாக்டர்"பட்டங்கள் பல பெற்றவராச்சே!ஆக,கார்ல் போப்பர் சொன்னால் அது நிச்சியம் கடவுள்(Das offene Universum) சொன்னதாகவே இருக்கும்.
மார்க்சியம் குறித்த மதிப்பீடுகளுக்குச் சுவர் எழுப்பியெவரும் வைக்காதவரை அது கல்லடிபட்டுக்கொண்டுதாம் இருக்கும்.அதுதான் சிறப்பென்பதால் - கார்ல் போப்பரின் தாய்மொழி வாயால் -நம்மவரும் கேட்பதற்கானவொரு ,போப்பரது ஏகாதிபத்தியச் சார்பு மொழியாடலைத் தரமுடியும்:"Popper bezeichnet Marx als bedeutenden Ökonomen und Soziologen" (-Die offene Gesellschaft und ihre Feinde :211)இப்படிச் சொன்னவர்கள் ஆயிரம் கோடிப்பேர்கள்.

இப்போது கார்ல் போப்பர் சொன்னதால கார்ல் மார்க்ஸ் அதி முக்கியமான சமூகப் பொருளியலாளனாக நாங்க எடுக்கத்தாம் வேணுமென்றில்லை.அவர் சொன்னதற்கு அப்பால் சேறடிப்பதற்கான தோற்று வாய் நம்ம கார்ல் போப்பருக்கு எப்படி உருவாகுதென்பதற்குச் சுவாரிசியமான நிகழ்வொன்று வந்து தொலைகிறது.வீனில் காவல் துறைகஇகும் கம்யுனீஸ்டுக்களுக்குமான கெடுபிடியில் ஒன்பது காவல் துறை நாய்கள் செத்தவுடன்(;(wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker)புட்டுக்கொண்டு வந்த அவரது திறந்த சமுதாயத்தின் தெள்ளிய மனது கேகலின் கருத்தியல் மனதைப் பின்பற்றிய கார்ல்மார்க்சிடமும் இத்தகைய போக்கு நிலவுவதாகச் சொன்ன கையோடு நம்ம எமக்கும் அரிக்கத் தொடங்கிவிடுகிறது.


இவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு அருமையான வாக்கியத்தை கார்ல் இறாய்முண்ட் போப்பரே சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்:"Wers nicht einfach und klar sagen kann, soll schweigen und weiterarbeiten bis erst klar sagen kann“
"எவருக்கு, இலகுவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லும் தெளிவில்லையோ அவர் மௌனித்தபடி தொடர்ந்து கற்றுத் தெளிவாக உரைக்கும் வரை மௌனித்திருப்பது உத்தமம்" என்பது நாம் ஏற்பதுதாம்.

இஃதின்று, முக நூல் வரைவாளர்களுக்குச் சாலப் பொருந்தும். குறிப்பாகத் தேசியவிடுதலைப் பொழிப்பாளர்களுக்கு.-பெரிதும் பொருந்தும்-ஏனெனில், கார்ல் போப்பரே அவிட்டுவிட்ட தத்தவங்களுக்குக் கருத்துமுதல் வாதம்தாம் காரணமாகிக் கிடக்கிறது.அவரது முன்று உலகத்திலும் முழுமுதலாய் விரிவது :

Welt 1, das ist die physikalische Welt
Welt 2, die Welt der individuellen Wahrnehmung und des Bewusstseins
Welt 3, die Welt der geistigen und kulturellen Gehalte, die vom Einzelbewusstsein unabhängig existieren können (z. B. die Inhalte von Büchern, Theorien oder Ideen)

இந்த மூன்று உலகத்திலும் முடிவாக விரிவது கருத்தியலால் உந்தப்பட்ட முடிவுகள்தாம்.

இந்தப் பொருளுலகத்துள் பௌதிக அடையாளங்கள் முட்டிக்கொள்ளும் எல்லாக் காரணத்தினதும் முடிவுகளும் கார்ல் போப்பர் குறிப்பிடுவதுபோன்று, உண்மைக்கு அருகினில் என்ற சங்கதியுள்தாம் கண்ணிகளைப் புதைத்து வைத்திருக்கிறது.

இந்தக் கதையில் மார்க்சியத்தைக் கருத்துமுதல்வாதம் என்பதின் தொடர் பரிணாமங்கள் நாம் அறிவதில் அவசியமொன்றுண்டு.

அது எப்பவும்போலவல்ல.

இப்போதைய தேவையின் தொடர் நிகழ்வுகள் ;


உணர்வினது தனித்துவமான உண்மை எதுவென்று நாமும் புரிந்துகொள்வதற்கு நீண்டவொரு சமாந்திரப் பாதையொன்று விஞ்ஞானத்தில் கொட்டிக்கிடப்பதால் குறுக்குப் பாதை எதற்கு?

உலக உயிரினதும் பண்பாட்டினதும் நிகரத்தாண்டவம் தனித்துவமான உணர்வை உற்பத்தியாக்குவதன் பருமம் இன்றைய இந்த உலகத்தின்-குறிப்பாக மேற்குலக இன்னுங் கொஞ்சம் தாண்டி நம்ம அமெரிக்க மாமாக்கள் சொல்வதுபோல்(Hier möchte ich noch eine weitere Aussage Poppers hinzufügen, die lautet: `Es kann keine vollkommene Gesellschaft geben.´உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயம் கிடையவே கிடையாது.

(Vgl. das `Nachwort´ zu Popper/Lorenz: Zukunft (Anm. 29), S. 138. ... Und er fügt hinzu, S. 140: `Wenn du eine vollkommene Gesellschaft anstrebst, so wirst du sicher gegen die Demokratie sein.உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயத்தை நோக்கி நீ பாடுபட்டால்-போராடினால் நிச்சியமாக ஜனநாயத்துக்கு எதிராகக் காரியமாற்றுகிறாய்´)"

"நாங்கள் திறந்த தனித்துவமான சமுதாயம்"அதைத் துலைப்பதற்கே காரியமாற்றும் இஸ்லாமியப் பயங்கரவாதம்...கயிறுவிடும் தளம் கார்ல் போப்பரின் தேட்டம்தாம் .இதுவே,இன்றைய இலிபியா யுத்தம் வரையான "மக்களைக் காத்தல்-சர்வதிகாரத்தை " ஒழித்தல் என்பதிலிருந்து பண்டுதொட்டுப் புரியும் அரசியல் அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் எதுவுமில்லையென்றாகிறது.

By ப.வி.ஸ்ரீரங்கன்

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...