Monday, May 16, 2005

தமிழ் ஊடகயுத்தமும்,தமிழர் உரிமையும்!

தமிழ் ஊடகயுத்தமும்,தமிழர் உரிமையும்!


எதைப்பற்றிப் பேசாதுபோனாலும் பரவாயில்லை.ஆனால் ஈழத்தமிழரின் உயிர்வாழ்வுக்காக-அவர்களது வாழ்வுரிமைக்காக,நாம் கருத்தாடாது மௌனித்திருப்பது கேவலமானது!

எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சுனாமிவேறு தன்பங்குக்கு அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தைத் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் தமிழ் அரசியல் கிரிமனல்கள் 'பொதுக் கட்டமைப்பு' என்றும்,அதைத் தத்தமது தேவைக்கேற்றவாறு அரசியல் விடையமாகக் குறுக்கி அரசியல் செய்வது,'எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம்'என்பதுபோல் இருக்கிறது. அப்பாவி மக்கள் அழிவுயுத்தால் தமது வாழ்விருப்பிடங்களையிழந்து,உயிரையிழந்து-உடமைகளையிழந்து,அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும்போது-அவர்களுக்கெந்த உதிவிகளையும் செய்யமுடியாத போக்கிரி இயக்கங்கள், 'சுனாமி உதவித்தொகையை' பங்கீடுசெய்து தமது பணப்பெட்டிக்குள் திணிக்கப்படும்பாடோ பெரும் ஊடகவன்முறையாக விரிந்துள்ளது.

தரங்கெட்ட இயக்கங்களே! தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச பொருளாதாரவலுவையும் உங்கள் தேவைக்கேற்றவாறு காசாக்கிய கயமையை மறைத்து,இப்போது பொதுக்கட்டமைப்பில் பன்முகத்துவ கட்சிகளின் பங்கை வலியுறுத்தும் நீங்கள், மக்களின் உயிர்வாழ்வின் அதிமுக்கியமான வாழ்விடங்களைச் சிங்களஆதிக்க ஜந்திரம் அதியுச்சப்பாதுகாப்பு வலையமாக்கி, இராணுவச் சூனியப் பிரதேசமாக்கிவைத்துள்ள அவலத்தைப்பற்றி பேசாது- சுனாமி உதவித் தொகைகளைப் பற்றிக் கருத்தாடுவது நியாயமா?சுனாமிக்கோரத்துக்கு மக்களது உயிர்கள் மோசமாகப் பலியாகியது.இந்த மக்களின் உடல்களைக் கும்பல் கும்பலாகப் புதைத்த கையோடு, அவர்களது நியாயமான வாழ்வியிற்றேவைகளோடு அரசியல் நடாத்தி இலாபமிடமுனையும் தமிழியக்கிரிமினகள், இப்போது நம்மைக் கேவலமாக கருத்தியல் வன்முறையால் சிதைக்கிறார்கள்!

எதற்காக?

இந்த ஊடக வன்முறை இவ்வளவுமோசமாக விரிவுறுவதன் நோக்கமென்ன?

ஐரோப்பாவிலின்று பற்பல புதிய வானொலிச்சேவைகளும்,புதிய தொலைக்காட்சிச்சேவைகளும் புலம்பெயர்ந்த தமிழ்பேசும் மக்கள் மத்தியில் தோற்றப்பட்டு மக்களைக் குழப்பியெடுக்கும் காரியத்தில் தமிழர் நலனை மறுக்கும் சக்திகள் முயல்வது நமது சாபக்கேடா?பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும்,புலிகள் ஒருபுறமாகவும் 'பொதுக்கட்டமைப்புக்கு' உரிமைகூறி பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல்,மிகக் கேவலமானதாகும். இந்தப் பிழைப்புவாதக் கிரிமினற் கும்பல்கள் இப்போது மக்களிடம் கொள்ளையிட்ட பணத்திலும்-அன்நிய நாடுகள் கொடுத்த பணத்திலும் புதிய புதிய வானொலிச்சேவைகளைத் துவக்கி மக்களின் உரிமைகளுக்கு வேட்டு வைக்கும் காரிமானது மன்னிக்கமுடியாதது!இது, நமது மக்களை அன்நியச் சக்தியிடம் பேரம்பேசி விற்றுப் பிழைப்பு நடத்தும் அரசியலாகும்.காரணமேயின்றி ஒருவரும் வானொலி வானொளிச் சேவைகளை ஆரம்பிக்கவில்லை.எல்லாமே தமிழரின் உரிமைகளை ஏகாதிபத்தியங்களிடம் விற்றுத் தமது நலன்களையடைவதற்கே முனைவதுதாம், இந்த ஊடகவன்முறையின் நோக்கம்.

மக்களே! பல்லாயிரம் உயிர்களைத் தியாகஞ் செய்தவர்கள் நாம்.

நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அன்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி.இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தனோ அல்ல ஆனந்த சங்கரியோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அன்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் ஜனநாயம்,சுதந்திரம்,சுயநிர்ணயவுரிமையென்பதெல்லாம் வெறும் பூச்சுற்றலாகும்.

ரீ.ரீஎன், ஐ.பி.சி, ஐ.ரி.ஆர், தீபம், வெக்டோன், புலிகளையும்-ரி.பி.சி, இதயவீணை வானொலிகள் டக்ளஸ் தேவாநந்தனையும் அவரது அடிவருடிகளையும் நியாயப் படுத்தும் ஊடகங்களாக 'நமக்குள்' கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.மக்களாகிய நாம், அகதிவாழ்வைத் தொலைத்து,நமது தாயகத்தில் அமைதியான அரசியல் வாழ்வை முன்னெடுக்க முடியாத சூழலையிந்தக் கேடுகெட்ட வன்முறையாளர்கள் தோற்றிவைத்துக்கொண்டே, தமது அரசியலை நமக்குள் திணிப்பது விபச்சாரத்தனமானதாகும்.

நமது வேதனைகள் இவர்களுக்குப் பணம் ,பதவி தரும் பெரும் அரசியல் வியூகமாக மாறுகிறது.நம்மிடம் அறவிடப்பட்ட-சேகரிக்கப்பட்ட பணமே அவர்களது பிரச்சார ஊடகங்களைத் தூக்கிநிறுத்தும் பொருளாதார அடிப்படையாக மாறுகிறது.இவர்களது அரசியலில் நாம் மந்தைகளாக மாறுவதும்,அவர்களை'மாட்சிமைதாங்கிய' மனிதர்களாக மதித்துக் காவடியெடுப்பதையும் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது.இத்தகைய பரப்புரைகளை நாம் ஜனநாயகத்தின் குரெலென்று கூறிக்கொள்வோமென்றால், நம்மை நாமே புதைகுழிக்குள் புதைப்பதாகும்.எந்தவொரு அமைப்பும் நமது மக்களின் சுய அமைப்பாண்மையை விரும்பவில்லை.இவர்களெமை ஆணிவேறு அக்குவேறாகப் பிரித்தெடுத்து, தத்தமது நலனுக்காய்ப் பயன்படுத்தத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்தத் தரணத்தில் தமிழ்பேசும் மக்களின் நலன் என்பதெல்லாம் தத்தமது அரசியல் இருப்பையும்,பதவிகளையும் நோக்கிய வாதங்களாகும்.

சிங்கள பௌத்த சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு உடந்தையாகவும்,அன்நிய மூலதனத்துக்கும் அதன் எஜமானர்களுக்கும் கூஜாத் தூக்கிகளாக மாறிய அனைத்து இயக்கங்களும், ஒருபோதும் நமது மக்களுக்கு விடுதலைக்குரிய போராட்ட வடிவங்களைத் தரப்போவதில்லை.இவர்கள் தமது நலனுக்கேற்றவாறு நம்மைப் பயன்படுத்தும் வியூகத்தோடு ஊடகவன்முறையிலீடுபடுவதை, நாம் இனம் கண்டு,நமது பரிபூரணமான விடுதலைநோக்கிய 'புதியஜனநாயகப் புரட்சிக்கு'பங்களிக்க நமது கருத்தியல் நிலையை வளர்த்தெடுப்போம்.இதற்காக நமது அகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு,இந்தப் பயங்கரவாதப் புனைவுகளை வேரறுப்போம்!

காலத்துக்கு முந்தியபோராட்ட வடிவங்கள் நம்மைக் காவுகொள்வதாகும்.

நமது வாழ்வு இனியும் அழிந்து போகாதிருக்கவும்,நமது சமூக உயிர்வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகாதிருக்கவும், நாம் யுத்தங்களையும்,ஏமாற்று அரசியலையும் மறுப்போம்.

அடிப்படை மனிதவுரிமைகளுக்காகவும்,ஜனநாயகத்துக்காகவும் மக்களாகிய நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்தி, நேர்மையானவர்களை அரசியலரங்குக்குக் கொண்டுவருவோம்.இவர்களுடாய் குறைந்த பட்ச அடிப்படையுரிமைகளையாவது பெறுவதற்குப் போராடி,அதன் வாயிலாக அடுத்தகட்டத்தைத் தாண்டமுனைவோம்.இந்த தேவைகளை வலியுறுத்தும் புலிகளோ அல்ல மற்றெந்த இயக்கங்களோ ஜனநாயகபூர்வமாக இதுவரை காரியமாற்றத் தவறுவது எதனால்?

பழைய பெரிச்சாளிகள், மானுடவிரோதிகள்-யுத்த தாசர்கள்,அரசியல் கிரிமினல்கள்,இன்னபிற பிழைப்புவாதிகள்-கொலைகாரர்களால் பரப்புரையாக்கப்படும் அரசியல் கருத்துரைகள், எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இந்தக் கொலைக்காரர்கள் ஜனநாயகம்,பன்முக அமைப்புகள்,மனிதவுரிமைகள் என்ற மிக,மிக அழகான முகமூடிகளோடு நம்மையணுகிறார்கள்,இது நம்மையின்னும் ஏமாற்றிக்கொள்வதற்கே!நாடறிந்த நயவஞ்சகர்கள் நல்ல மனிதர்களாம்,வரலாறு தந்த மணிமகுடங்களாம்.இப்படிப்போகும் ஊடகப்பரப்புரைகள் நமக்கு விடுதலையல்ல மரணத்தையே தந்துவிடும்.டக்ளஸ் தேவாநந்தன் என்பவன் தமிழரின் சாபக்கேடன அரசியலின் சகுனி.

இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.புணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.டக்ளஸ் தேவாநந்தா என்ற பயங்கரவாதியும்,புலிகளும் இப்போது நடாத்தும் அரசியலில் நமது மக்களின் நலன்கள்தாம் பலியாகிவிட்டது!இந்தியவோடுசேர்ந்து இலங்கையும்,இந்த மக்களின் (தமிழ்பேசும் மக்கள்) உரிமைகளைச் சிதைத்து, எம்மை நிரந்தரமாக அடிமைக்கூட்டமாக்கி விடுவதில் அதன் வெற்றி,இந்தக் கேடுகெட்ட அரசியலால் உறுதியாகிவருகிறது.

நாமோ அகதிகளாகி,அடிமைகளாகிச் செத்துக்கொண்டிருக்கிறோம்.இந்தக் கிரிமினல்களோ பணத்துக்காக-பதவிக்காக நம்மைக் கருவறுத்தபடி...

'....................'


ப.வி.ஸ்ரீரங்கன்
16.05.05

33 comments:

Anonymous said...

,d;W fk;fs; tpopg;gila Kbahky; nra;tjw;F Kjypy; cilA+whf ,Ug;gJ Clfk;. jkJ %iyia tpw;f jahuh ,Ug;gtHfs; tpiy Nghfpd;wdH.

vk;kplk; vs;s mwpit vt;thW gad;gLj;J vd;gJ gw;wpa njpspT ,Uf;fpd;wJ. mjd;wF ,yFthfd ,Uf;fpd;w r%f mikg;gpy; VjhtJ xU jpiria njupT nra;J ehk; jg;gpg; gpiog;gJ. mg;gb fUj;Jf; $wpdhy; JNuhfp vd KFj;jpiu Fj;jg;gLfpd;wJ.
,d;iwa nghUShjhu mikg;G jdpj;Jthjpfshf cUthf;fp mtHfsis jdpj;jdp jPTfshf cyht tpLtjpy; ntw;wp ngw;wpUf;fpd;wHJ.
cUthf;fg;gLfpd;w %iy rhypfs; ,r;jr; r%fj;jpd; tpis nghUShf ,Ug;gjjhy; ,tHfshy; Kuz;gl;Lr; rpe;jpf;f Kbatpy;iy.

,tHfs; $Wk; epahak; GypnajpHg;G my;yJ Gyp MjuT epahak; vd;W ,uz;ilg; gw;wpa ghHitjhd; NkNyhq;fpapUf;fpd;wJ.
,tw;iwj; jtpHj;jp ciof;Fk; kf;fSf;F vd;nwhU epwahag;ghL ,Uf;fpd;wJ> mtHfspd; Njitfs;> vd;gJ gw;wpa njspT ,tHfSf;F ,Ug;gjpy;iy.
,iwik> Njrpak; vd;gJ gw;wpa tpsf;fq;fs; Gypfs; my;yJ GypnajpHg;G epiyapy; ,Ue;Jjhd; ghHf;fg;gLfpd;wJ.
,;thW ,Uf;ifapy; gpiog;G th j murpaYf;F ,ilapyu; Gjpa [dehafg; Gul;rp gw;wp fijg;gjw;F %iyia tpwpWg; gpiof;Fk; ClftpayhsHfsplk; vjid vjpHghHf;f KbAk;.

,d;W Gjpa [dehafg;Gul;rpia typWj;jty;y khwhd kfpdj tpOkpaq;fis ntspf;nfhzu xU gj;jpupif mtrpakhfpd;wJ. gj;jpupifNa kf;fis nrd;wilaf; $baJ. ,t;wpw;fhd mtrpak; Kd;dg;nghOJk; ,y;yhj tifapy;

Anonymous said...

,d;W kf;fs; tpopg;gila Kbahky; nra;tjw;F Kjypy; cilA+whf ,Ug;gJ Clfk;. jkJ %isia tpw;f jahuhf ,Ug;gtHfs; tpiy Nghfpd;wdH.

vk;kplk; vs;s mwpit vt;thW gad;gLj;J vd;gJ gw;wpa njpspT ,Uf;fpd;wJ. mjd;F ,yFthf ,Uf;fpd;w r%f mikg;gpy; VjhtJ xU jpiria njupT nra;J ehk; jg;gpg; gpiog;gJ. mg;gb fUj;Jf; $wpdhy; JNuhfp vd KFj;jpiu Fj;jg;gLfpd;wJ.
,d;iwa nghUshjhu mikg;G jdpj;Jthjpfshf cUthf;fp mtHfis jdpj;jdp jPTfshf cyht tpLtjpy; ntw;wp ngw;wpUf;fpd;wJ.
cUthf;fg;gLfpd;w %is rhypfs; ,e;jr; r%fj;jpd; tpis nghUshf ,Ug;gjhy; ,tHfshy; Kuz;gl;Lr; rpe;jpf;f Kbatpy;iy.

,tHfs; $Wk; epahak; GypnajpHg;G my;yJ Gyp MjuT epahak; vd;W ,uz;ilg; gw;wpa ghHitjhd; NkNyhq;fpapUf;fpd;wJ.
,tw;iwj; jtpHj;jp ciof;Fk; kf;fSf;F vd;nwhU epahag;ghL ,Uf;fpd;wJ> mtHfspd; Njitfs;> vd;gJ gw;wpa njspT ,tHfSf;F ,Ug;gjpy;iy.
,iwik> Njrpak; vd;gJ gw;wpa tpsf;fq;fs; Gypfs; my;yJ GypnajpHg;G epiyapy; ,Ue;Jjhd; ghHf;fg;gLfpd;wJ.
,t;thW ,Uf;ifapy; gpiog;G thj murpaYf;F ,ilapy;; Gjpa [dehafg; Gul;rp gw;wp fijg;gjw;F %isia tpw;Wg; gpiof;Fk; ClftpayhsHfsplk; vjid vjpHghHf;f KbAk;.

,d;W Gjpa [dehafg;Gul;rpia typWj;jty;y khwhd kdpj tpOkpaq;fis ntspf;nfhzu xU gj;jpupif mtrpakhfpd;wJ. gj;jpupifNa kf;fis nrd;wilaf; $baJ. ,t;wpw;fhd mtrpak; Kd;dg;nghOJk; ,y;yhj tifapy; ,d;W mtrpakhfpd;wJ.

Anonymous said...

இன்று மக்கள் விழிப்படைய முடியாமல் செய்வதற்கு முதலில் இடையூறாக இருப்பது ஊடகம். தமது மூளையை விற்கத் தயாரா இருப்பவர்கள் விலை போகின்றனர்.

எம்மிடம் உள்ள அறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய nதிளிவு இருக்கின்றது. அதற்கு இலகுவாக இருக்கின்ற சமூக அமைப்பில் ஏதாவது ஒரு திசையைத் தெரிவு செய்து நாம் தப்பிப் பிழைப்பது. அப்படி கருத்துக் கூறினால் துரோகி என முகுத்திரை குத்தப்படுகின்றது.
இன்றைய பொருளாதார அமைப்பு தனித்துவவாதிகளை உருவாக்கி அவர்களைத் தனித்தனி தீவுகளாக உலாவ விடுவதில் வெற்றி பெற்றிருக்கின்றது.
உருவாக்கப்படுகின்ற மூளை சாலிகள் இந்;தச் சமூகத்தின் விளை பொருளாக இருப்பததால் இவர்களால் முரண்பட்டுச் சிந்திக்க முடியவில்லை.

இவர்கள் கூறும் நியாயம் புலியெதிர்ப்பு அல்லது புலி ஆதரவு நியாயம் என்று இரண்டைப் பற்றிய பார்வைதான் மேலோங்கியிருக்கின்றது.
இவற்றைத் தவிர்த்தி உழைக்கும் மக்களுக்கு என்றொரு நியாயப்பாடு இருக்கின்றது, அவர்களின் தேவைகள், என்பது பற்றிய தெளிவு இவர்களுக்கு இருப்பதில்லை.
இறைமை, தேசியம் என்பது பற்றிய விளக்கங்கள் புலிகள் அல்லது புலியெதிர்ப்பு நிலையில் இருந்துதான் பார்க்கப்படுகின்றது.
இவ்;வாறு இருக்கையில் பிழைப்பு வாத அரசியலுக்கு இடையில்; புதிய ஜனநாயகப் புரட்சி பற்றி கதைப்பதற்கு மூளையை விறிறுப் பிழைக்கும் ஊடகவியலாளர்களிடம் எதனை எதிர்பார்க்க முடியும்.

இன்று புதிய ஜனநாயகப்புரட்சியை வலிறுத்தவல்ல மாறான மனித விழுமியங்களை வெளிக்கொணர ஒரு பத்திரிகை அவசியமாகின்றது. பத்திரிகையே மக்களை சென்றடையக் கூடியது. இவ்றிற்கான அவசியம் முன்னப்பொழுதும் இல்லாத வகையில் உள்ளது.

Sri Rangan said...

உண்மைதாம்.எனினும் இதைச் சாதிக்கவல்ல பொருட்பலம் நம்மிடமில்லையே!மக்களிடம் கையேந்திக் கொள்ள ஆயுததாரிகள்தாம் முன்னணியில் நிற்கிறார்கள்.இவர்களே மிகப் பெரும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் பினாமிகள்.நமது மக்களைச் சுரண்டும் இவர்களை மக்கள் இப்போது இனம் காண்கின்றனர்.மிக விரைவில் புறநிலை மாற்றங்கள் புதியதேவைகளை நமக்குமுன் தந்துவிடப்போகிறது.இதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அப்படியேதாம் நமது தலைவிதி தீர்மானிக்கப் படும்.

Anonymous said...

Gw epiyia khw;wpaikg;gJ kf;fNs> Mdhy; ,Uf;fpd;w jdpj;jPTfis xd;wpizg;gJ rpukk; jhd;. mjy; kjthjpfs; ntw;wpngw;wpUf;fpd;uhHfs; Mdhy; Kw;Nghf;Fr; rf;jpfis jdj;jPthf ,Ug;gJ jdpj;jd;ikNa. tho;f
Gw epiy ajhHj;jk; cUthfp mLj;j epiyf;Fr; nrd;whYk; ciof;Fk; tHf;fj;jpd; Njit vd;gJ mtHfspd; gpd;Gyk; nfhz;ltHfsh vd;gij tpl mjid Vw;Wf; nfhs;gtHfs; Kaw;rp vLf;fhJ tpbd; mLj;j epiyf;Fr; re;jHg;gk; ,y;iy.

Anonymous said...

புற நிலையை மாற்றியமைப்பது மக்களே, ஆனால் இருக்கின்ற தனித்தீவுகளை ஒன்றிணைப்பது சிரமம் தான். அதனால் மதவாதிகள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் ஆனால் முற்போக்குச் சக்திகளை தனித்தீவாக இருப்பது தனித்தன்மையே. வாழ்கைப்
புற நிலை யதார்த்தம் உருவாகி அடுத்த நிலைக்குச் சென்றாலும், உழைக்கும் வர்க்கத்தின் தேவை என்பது அவர்களின் பின்புலம் கொண்டவர்களா என்பதை விட அதனை ஏற்றுக் கொள்பவர்கள் முயற்சி எடுக்காது விடின் அடுத்த நிலைக்குச் சந்தர்ப்பம் இல்லை.

Anonymous said...

vq;Nf Iah ntF cw;rhfk tpthjpf;Fk; jq;fs; ,izaj;js ez;gHfs;? Fwpg;ghf gy tplaq;fis tpthjpf;f KbahJ jiykiwthfpd;wdH. Vd; ,e;j mtyk;? vkf;F cz;lhd mwpTg;grp vd;gJ cz;ikjhdh?
Rjd;

Anonymous said...

எங்கே ஐயா வெகு உற்சாகமாக விவாதிக்கும் தங்கள் இணையத்தள நண்பர்கள்? குறிப்பாக பல விடயங்களை விவாதிக்க முடியாது தலைமறைவாகின்றனர். ஏன் இந்த அவலம்? எமக்கு உண்டான அறிவுப்பசி என்பது உண்மைதானா?
சுதன்

Sri Rangan said...

வாசகர்கள் தம்மளவில் தெளிவாக இருக்கிறார்கள்,இவற்றையெல்லாம் விவாதித்து விதண்டா வாதஞ் செய்ய விரும்பவில்லை.மாறாக நம்மைப் பற்றியொரு தீர்மானகரமான ' பைத்தியகாரக் கூட்டம்'எனும் தீர்ப்போடு ஒதுங்கிவிடுகிறார்கள்.இதுபோகட்டும் சுதன்,நீங்கள் இதயவீணை வானொலி கேட்கிறீர்களோ? நாய்ச் சண்டை நல்லாத்தான் தமிழருக்கு விடிவு கொண்டரப்போகுது!தேசிய வாதத்தின் பரிதாப மரணத்தைப் பார்த்தீர்களா!! இப்போது பாகப் பிரிவினைக்கான நாய்ச் சண்டையில் யாரு சாகப்போகிறார்களோ தெரியாது.இந்த நிலையில் செமைத் தூக்கமாக இருக்கும் நல்ல மனிதர்கள் என்னத்தைப் பெரிதாகச் செய்யமுடியும்? பழைய பாணிக் கூட்டணிப் பிரச்சாரம்போல்'மதிமுகராசாவே மதி கலங்கி நிக்காதே' என்பதுபோல்'மானங்கெட்ட இயக்கமே உன் மதிகெட்ட மதியுரைஞர் எங்கே' என்று இதயவீணை நக்கலடிக்க,நாமோ மக்களின் உயிர்-உடமை,வாழ்விடங்களை எண்ணிக் கொள்கிறோம்.பாவங்கள் நமது மக்கள்!

Anonymous said...

,jatPiz tPdHfs; tPiz ,jidg; Nfl;gij tpl Rk;kh ,Ug;gJ Nky;
Rjd;

Anonymous said...

இதயவீணை வீணர்கள் வீணை, இதனைப் கேட்பதை விட சும்மா இருப்பது மேல்.
சுதன்

Sri Rangan said...

உண்மைதாம்!எனினும் இதைக்கேட்கும்போது இந்தத் திருடர்களின் வாயிலாகப் பல திருட்டுக்கள்(மற்றைய இயக்கங்களின் வண்டவாளங்களும்)வெளிவருகின்றன.
சுதன்,உங்கள் கவனத்துக்குச் சிலவற்றைச் சொல்கிறேன் கேளுங்கள்!இப்போது சிங்களவரசு கூறும் 'இராணுவப் பாதுகாப்பு வலயம்' என்பதும்,அதைத்தளர்த்தி மக்களை மீளக் குடியமர்த்த முடியாதென்பதெல்லாம்,இராணுவமும் ஈ.பி.டி.பி.கும்பலும் சேர்ந்து இந்தப் பக்கங்களில்-பொதுவாகத் தீவுப்பகுதியில் முழுகட்டுப்பாட்டையும் வைத்து,மக்களைக் கொண்டே அவர்களது விவசாயநிலங்களில் மிளகாய்,புகையிலைத்தோட்டங்களுக்கு மத்தியில் கஞ்சாச்செடி பயிரிட்டு,சாகுபடி செய்கிறார்கள்.இதன்மூலம் திடீரெனச் சில தோட்டக்காரரும் பற்பல வாகனங்கள்,வீடு,மதில் என்று எங்கோ உயர்ந்துபோகிறார்கள்.சரவணை சின்னமடுவடியில் கார்க்கார அப்புவின் மகன் விவாகரன்(எனது உறவுக்காரன்.பெயர்கள்,இடம்,எல்லாம் உண்மையே.); இப்படிப் பெரியபுள்ளியாகியுள்ளான்.இவன் ஈ.பி.டி.பி'யின் வால்பிடி.கஞ்சாவைப் பயிருட்டு மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகள்,ஜனநாயகமாம்,கத்தரிக்காயாம்... கள்ள மூதேவிகள்.

Anonymous said...

,J vy;yh gpuNJrq;fspYk; eilngWk; vdf; $w KbahJ fhuzk; mt;thW nra;jhy; epr;rak; ntspapy; te;jpUF;f re;jHg;gk; cs;sJ. ,it ehd; nrd;W te;Js;sNsd;
NkYk; GypfSf;F KO ,lj;jpYk; csthspfs; cz;L ,it ntspapy; te;jpUf;FK; mt;thW KO ,lq;fspYk; elg;gjw;F re;jHg;gk; ,y;iy.

Anonymous said...

இது எல்லா பிரதேசங்களிலும் நடைபெறும் எனக் கூற முடியாது. காரணம் அவ்வாறு செய்தால் நிச்சியம் வெளியில் வந்திருகும் சந்தர்ப்பம் உள்ளது. இவை நான் சென்று வந்துள்ளளேன,;
மேலும் புலிகளுக்கு முழு இடத்திலும் உளவாளிகள் உண்டு. இவை வெளியில் வந்திருக்கும.; அவ்வாறு முழு இடங்களிலும் நடப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை.

Anonymous said...

ahH me;j KftHfs; Njrpaj;ij Nghw;Wk; ehk; mtHifis fOfpy; Vw;WNthk;

Anonymous said...

யார் அந்த முகவர்கள் தேசியத்தை போற்றும் நாம் அவர்கைளை கழுகில் ஏற்றுவோம்

Anonymous said...

ck;Kila cwtpdH Ntz;lhjtuhd nrhe;jf; fhuuh? jfty; GypfSf;F nrd;wpUf;Fk; ckJ Njit g}Hj;j;jpahfptpLk;. CH NgH $wpa |NghJ yq;fhuhzp thrpj;j epahgfk; te;jJ. mjpy; jhd; CHNgH nrhy;yp egiu mwpaKw;gLtJ rpwg;ghf ntspg;gLj;jg;gl;bUf;fpd;wJ.
Rjd;

Anonymous said...

உம்முடைய உறவினர் வேண்டாதவரான சொந்தக் காரரா? தகவல் புலிகளுக்கு சென்றிருக்கும் உமது தேவை ப}ர்த்த்தியாகிவிடும். ஊர் பேர் கூறிய |போது லங்காராணி வாசித்த நியாபகம் வந்தது. அதில் தான் ஊர்பேர் சொல்லி நபரை அறியமுற்படுவது சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
சுதன்

Sri Rangan said...

இதில் ஊர்காராரோ-உறவினரோ,அல்ல நானோ முக்கியமல்ல.மனிதவுயிர்கள்தாம் முக்கியம்!கஞ்சா எவ்வளவு மக்களைக் கொல்லுகிறது தெரியுமா?எவரொருவர் போதைப்பொருள் உற்பத்தி செய்கிறாரோ அவர் சமூககத்துக்கு எதிரானவர்.அதில் எந்தச் சமரசமும் கிடையாது.தமிழரின் விடுதலைபேசிய இயக்கங்கள் வெளிநாடுகளில் போதைவஸ்த்துக்கடத்திய மாதிரித்தாம் இதுவும்.எல்லாம் மக்களுக்கெதிரானது.தீவுப்பகுதி கஞ்சா பயிரிடும் பெரும் பகுதியாக இருக்கிறது.அதில் அந்த உறவுக்காரனும் ஒருத்தன்.அவ்வளவுதாம்.

Anonymous said...

ePq;fs $Wk; cw;gj;jpf;fhjd Mjuhuk; vk;kplk; ,y;iy. ,it jLf;fg;gl Ntz;baNj. mNjNtis Mjhug;gLj;j Kbahjh epiyapy; fw;gid uPjpahf fUj;Jf; $wNth jHg;Gr; nrhy;yNth KbahJ.
Gypfspd; csthspfs; rfykl;lj;jpYk; c;shHfs; mtHfSf;Fj; njupahjh tplak; jq;fSF;F njupe;jpUf;fpd;wJ. ey;yJ mNjBtis ePq;fs $Wk; FW;wr; rhl;L rhjhuz tplak; my;y.
njupahjtw;wpw;F fUj;Jf; $w KbahJ> mNJNtis mt;thW elf;fr; re;jHg;gk; ,y;iy vdTk; $w KbahJ. xU Nfs;tp vOFpd;wJ Vd; ,d;Dk; Gypfs; ,Jgw;wp ntspNA fUj;Jf; $w tply;iy. rpW tplaq;fSf;F NghuhLk; Gypfs; ngUk; tplaj;ijgl; gw;pw Vd; fijf;f tpy;iy? ,J xU epahakhd Nfs;tpjhNd.
ed;wp
Rjd;

Anonymous said...

நீங்கள கூறும் உற்பத்திக்காதன ஆதராரம் எம்மிடம் இல்லை. இவை தடுக்கப்பட வேண்டியதே. அதேவேளை ஆதாரப்படுத்த முடியாதா நிலையில் கற்பனை ரீதியாக கருத்துக் கூறவோ தீர்ப்புச் சொல்லவோ முடியாது.
புலிகளின் உளவாளிகள் சகலமட்டத்திலும் உள்ளார்கள.; அவர்களுக்குத் தெரியாதா விடயம் தங்களுகு;கு தெரிந்திருக்கின்றது. நல்லது, அதேவேளை நீங்கள கூறும் குறு;றச் சாட்டு சாதாரண விடயம் அல்ல.
தெரியாதவற்றிற்கு கருத்துக் கூற முடியாது, அNதுவேளை அவ்வாறு நடக்கச் சந்தர்ப்பம் இல்லை எனவும் கூற முடியாது. ஒரு கேள்வி எழுகின்றது, ஏன் இன்னும் புலிகள் இதுபற்றி வெளியே கருத்துக் கூற விடல்லை. சிறு விடயங்களுக்குப் போராடும் புலிகள் பெரும் விடயத்தைப் பற்றி ஏன் கதைக்க வில்லை? இது ஒரு நியாயமான கேள்விதானே.
நன்றி
சுதன்

Sri Rangan said...

உண்மைதான் சுதன்.புலிகள் எப்பவுமே இம்மாதிரி விஷயங்களில் அவசரப்படுவதில்லை.மிக நிதானமாகவே அணுகுபவர்கள்.இந்த அணுகுமுறை முற்றுமுழுதானா ஆளுமைக்குள் அந்தப்பிரேதேசத்தைக் கொண்டுவரும் போராட்டத்துடன் சம்பந்தப் பட்டது.தீவுப்பகுதியானது கடற்படையுடன்,ஈ.பி.டி.பி.யும் இணைந்து கட்டுப்படுத்தும் அதியுயர் இராணுவக் கட்டுப்பாட்டுவலயம்.இந்த விதக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அந்தப் பகுதி மக்களே கொத்தடிமையாக வாழும்போது புலிகள் மிகக் கவனமாகவே செயற்படுவார்கள்.புலிகளின் இராணுவ நகர்வைக் கற்பனை செய்தால்,அவர்களின் நிதானம் புரியும்.அடுத்து நாம் கற்பனையில் சொல்லவில்லை.நேரில் கண்ட என் சகோதரன்,அம்மா, சாட்சிபகர்கின்றார்கள்.;.சரவணையில் வாழமுடியாது இடம்பெயர்ந்து வன்னிக்கு எனது குடும்பத்தவர்கள் இடம்பெயரும்போது அவர்கள் சொன்ன முதற்காரணம்:'தீவுப்பகுதியை கஞ்சாப் பகுதியாக்கிட்டான் கடற்படை'என்பதே!இதையொரு கருத்தாடலுக்காகச் சொல்லவில்லை.இதயவீணை ரேடியோவின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தச் சொன்னேன்.அவர்கள் தீவுப்பகுதியைச் சூறையாடிக் கோடீஸ்வரரானவர்கள்.இப்போது நிரந்தரமான பாதுகாப்போடு கஞ்சா பயிரிடப்படுகிறது.அவ்வளவுதாம்.

Anonymous said...

http://doanddo.blogspot.com/2005/05/blog-post_111665708961048047.html

ஹி ஹி ஹி

கொழுவி said...

தரகு முதலாளித்துவமும் மனைவியும்.


அப்பப்பா என்ன வெயில்? இதோ, இதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைப்பீராக.

என்னப்பா? சந்தைக்கெண்டு போய் எங்க சுத்திப்போட்டு வாறியள்?

நாம் எவ்விடமும் சுத்தவில்லை. நேரே சந்தைக்கு மட்டுமே போய் வருகிறோம். மனிதர்கள் நாங்கள் படும் வேதனை உங்களுக்கெங்கே தெரியப் போகிறது? சந்தைக்குச் செல்வதிலுள்ள இடர்பாடுகளும், குட்டி முதலாளிகளுடன் பேரம்பேசிப் பொருட்கள் வாங்க நாங்கள் படும்பாடுகளும் சொல்லுந்தரமன்றென்று என நாம் அடிக்கடி இயம்புவது உங்கள் செவிட்டுக்காதுகளுக்கு ஒருபோதும் விளங்காதென்பது எமக்குத்தெரியாததல்லவென்பது நன்றாகத் தெரிந்தும் வேண்டுமென்றே சீண்டவும் கோபமேற்றவும் இயம்பப்படும் வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் பொருளென்னவென்பது தெரியாமல் வினவுவதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் வஞ்சகப்புத்திகளிற்றாம் நாம் தெளிவுறுகிறோமென்பதைச் சொல்….

போதுமப்பா. நான் என்ன கேக்க நீங்கள் என்ன சொல்லிறியள்?

நீங்கள் கேட்பதன் பொருளை முற்றிலுமாகப்புரிந்துதாம் நாம் பதிலிறுக்கிறோம்.

நிப்பாட்டுமப்பா.. என்ன நாம் தாம் தூம் எண்டு குதிக்கிறியள்.
அதுசரி நீங்கள் தனியத்தானே சந்தைக்குப் போனனியள்? இல்லாட்டி வேற ஆரோடயும்…?

ஆம். நாம் தனியேதாம் போய் வந்தோம். ஒரு மனிதனின் துன்பத்தைப் புரியாமல் அவன்மீது சந்தேகப்பட்டு துரோகிப்பட்டம் கட்டப்பார்க்கும் உம்போன்றவர்களினாற்றாம் நாம் பேச்சுச் சுதந்திரத்தையே இழந்துள்ளோமென்பதோடல்லாமல் தரகுமுதலாளிகளையும் குட்டி பூர்சுவா வர்க்கத்தையும் எதிர்க்கத்திராணியற்று…

போதும். போதும்… அதுசரி, என்ன காய்கறியெல்லாம் இப்பிடி வாடிக்கிடக்கு?

இதுதாம் தொழிலாள வர்க்கத்தின் சாபக்கேடு. உழைக்கும் தொழிலாளிகளின்மேற்சவாரி செய்யும் தரகுமுதலாளிகளின் இயந்திரமான அடக்குமுறைகளினாற் கட்டுண்டுபோன வாழ்க்கையை வாழும் இருப்பிழந்த-உளமிழந்த-நிம்மதியிழந்த நிலையாகிப்போன வாழ்க்கையின் கொடிய பக்கங்களில் வாழ்ந்துவரும் தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை முடக்கும் தரகுமுதலாளிகளின் பினாமிகளான குட்டிப்பூர்சுவாக்களனினையெதிர்த்துச் செய்ய வேண்டிய போராட்டத்தின் ஓர் அங்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைக்கொள்ளப்போகும் இவ்வர்க்கம் தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலையின் வெளிப்பாடே இந்தச் சோகங்கள்.

எனக்கொண்டும் விளங்கேலயப்பா. சந்தையில ஏதும் பிரச்சினையே?

பிரச்சினைகள் எங்குதானில்லை? மனித இனம் தோன்றினதிலிருந்தே தொடங்கிவிட்ட உற்பத்திகளின்மீதான சொந்தம் கொண்டாடும் சண்டைகளின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திகளின் மீதான வன்முறையின் தொடர்ச்சியே தாம் இத்தகைய பிரச்சினைகள் என்று நாம் சொல்லும்போது, இப்பிரச்சனையின் வேர்களையும் அறிந்தாற்றான் நிவர்த்திகளும் செய்யமுடியுமென்பதைத் தெளிவாகப்புரிந்துகொண்டு புதிய ஜனநாயகப்புரட்சிக்குப் புத்தொளிபாய்ச்சி அப்போராட்டத்தை தரகுமுதலாளிகளை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய தேவையையும் எம் தோழர்களுக்கு நாம்தாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொருள்முதல்வாதக்கொள்கைளைச் சரியாகப்புரியாமற்றான் இன்று தரகுமுதலாளிகளுக்கெதிரான போராட்டத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட முடியாமற்றுன்பப்படுகிறோம். மூலதனமுடக்கலென்பதுத் திட்டமிட்டு பாட்டாளிகள்மேற் செலுத்தப்படும் வன்முறையென்பது தெரிந்தும் எம் தோழர்கள் காக்கும் மௌனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதென்றாலும் இது பாசிசத்தின் விளைவானவொன்றென்பது தெரிந்தாலும் மானுடத்துக்கெதிரானவொருவுத்தியென்பதுப் புரிந்தாலும் தொழிற்றுறைக்கும் மானுடத்துக்குமெதிரான நிலையென்பதறிந்தாலும் பொருளாதாரப்பொறிமுறையின் மீதான அடக்குமுறைக்கெதிரானதென்பதுணர்ந்தாலும் கனிவளச்சரண்டலையும் இத்தோடிணைத்துப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதாலும் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவையுண்டு.

நீங்கள் கதைச்சு முடியிறதுக்குள்ள நான் கறி வைச்சு முடிச்சிடுவன்.
நாம், தாம் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிறியள். ஆரப்பா உங்களோட சேந்த மற்றாக்கள்?

நாமென்பது நயமுள்ள வார்த்தை. அது இப்போது என்னையே குறிக்கும். நானென்பதை எப்போதொழிக்கிறோமோ அப்போதே மானுட விடுதலை பிறக்குமென…

ஆராவது சொல்லியிருப்பினம். எனக்கெதுக்கு அதெல்லாம். நீங்கள் ஏதாவது தமிழ்ப்பேச்சாளராய் இருந்திருக்கலாம். சொல்லிப்போட்டன், இனி என்னோட இப்பிடி நாம் தாம் தூம் எண்டு குதிச்சுக்கொண்டு நிண்டியளெண்டா இனி சாப்பாடு கிடைக்காது.

அம். இதுதாம் தரகுமுதலாளிகளினதும் பூர்சுவாக்களினதும் பொறிமுறை. உழைக்கும் மக்களுக்கு உணவை மறுத்து அவர்களை அடிப்பணிய வைத்து அவர்களின் சிந்தனையை முடக்கும் பொறிமுறை, மனித விழுமியங்களைப் பொசுக்கும் பாசிசம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம். இதைத் தீர்த்துக்கட்டத்தான் அறிவுஜீவிகள் எல்லாரும் சேர்ந்து உளமொப்பிய புதிய ஜனநாயகப்புரட்சி தொடங்கு.. க்கே…க்கே…க்கே...

என்னப்பா விக்குதோ? இந்தாங்கோ. சோடாவக்குடியுங்கோ.

இல்லை. இது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட க்கே.... திட்டமிட்ட சந்தைப்படுத்தற்பொறி க்கே.. பொறிமுறைப்பண்டம். ஏழைகளின் க்கே.. மேலேவப்படும் அராஜகம்.. க்கே.. பச்சைத்தண்ணியிருந்தாத் க்கே.. தாருங்கள்.

Sri Rangan said...

வணக்கம்,மண்டு!

எம்மைக் கேலிபேசுவதால் நீர் பரிபூரண மகிழ்வடைந்தால்-இன்னுமதிகமாகப் பேசும்.

அதனாலாவது உமது மண்டையிலுள்ள அனைத்து நரம்புகளும் தொழிற்பட்டு,உமது மூளை இயங்கினாலும் இயங்கும்!

இப்போதைய நிலைமை மந்திகைக்கு அல்லது அங்கொடைக்குச் செல்லவேண்டிய நிலைதாம்.
இதிலிருந்து மீள்வதற்கு நீரின்னும் மகிழ்வுறவேண்டும்!

இன்னுமின்னும் முயன்றுபாரும்.நாம் யாரையும் கொல்லப்போவதில்லை!

எவரெதைவேண்டுமானாலும் பேசலாம்.

அது அவரவர் பார்வை.

நாம் கொல்வதெல்லாம் நமது சுயநலத்தைத்தாம்.

உங்களைப்போன்று மக்களிடம் கப்பம் அபகரித்துக்கொண்டு சுகபோகம் அனுபவிப்பவர்களல்ல கொம்யூனிஸ்டுக்கள்

.அல்லது துப்பாக்கி முனையில் வரி-நிதி அறவிடும் பொறுக்கிகளும் அல்ல நாம்.
இதுவெல்லாவற்றுக்குமேலாகத் தமிழீழமென்று மக்களை ஏமாற்றிக் கொன்று குவித்துக்கொண்டு,
தத்தமது பொண்டிலைப் பிள்ளைகளை மக்கள் பணத்தில் உல்லாச வாழ்வில் விடுபவர்களுமில்லை நாம்.
இவையெல்லாம் போலிகளுக்கும்-பாஷிஸ்டுக்களுக்குமே கைவந்த கலை.

இதில் உமக்கும் அநுபவம் இருக்கும்.

Anonymous said...

vOj;J tbtk; nfhLg;gtHfs; ,e;jr; r%fj;jpd; ,Ug;ig ghJfhf;f Kw;gLfpd;wdH mNj Ntis fpz;ly; mb;gjpy; jkJ Gyikiaf; fhl;Lfpd;wdH. ,jd; %yk; RajpUg;jp milrpd;wdH. VjhtJ Kiwapy; RajpUg;jp miltJk; tho;f;ifjhNd. ,jpy; me;j ez;gH mt;thW ,Uf;fpd;whH.
mtupd; vOj;Jf;fs;

Anonymous said...

எழுத்து வடிவம் கொடுப்பவர்கள் இந்தச் சமூகத்தின் இருப்பை பாதுகாக்க முற்படுகின்றனர் அதே வேளை கிண்டல் அடிப்பதில் தமது புலமையைக் காட்டுகின்றனர். இதன் மூலம் சுயதிருப்தி அடைசின்றனர். ஏதாவது முறையில் சுயதிருப்தி அடைவதும் வாழ்க்கைதானே. இதில் அந்த நண்பர் அவ்வாறு இருக்கின்றார்.
அவரின் எழுத்துக்கள்

Anonymous said...

ரி.பி.சி வானொலி கலையகம் உடைக்கப்பட்டு உபகரணங்கள் திருட்டு
21.04.05 அன்றிரவு லண்டனில் உள்ள ரி.பி.சி வானொலியின் கலையகம் உடைக்கப் பட்டு வானொலி ஒலிபரப்பு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. 2003ம் ஆண்டு இக்கலையகம் புலிப்பினாமிகளால் இக்கலையகம் உடைக்கப்பட்டு உபகரணங்கள் திருடப்பட்டதன் பின் நடைபெற்றுள்ள மற்றுமொரு திருட்டுச் சம்பவம் இதுவாகும். விடுதலைப்புலிகளுக்கெதிரான மாற்றுக்கருத்துக்கான தளத்தில் ரி.பி.சி வானொலி; மிகப்பெரிய பங்கினை வகித்து வந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக இவ்வனொலியில் இடம்பெற்று வந்த அரசியல் விவாதங்கள், ஆய்வுகள் மிக முக்கியமாக புலம்பெயர்நாடுகளில் உள்ள மக்களிடையே பாரிய தாக்கத்தை உருவாக்கி வந்தன. இந்நிகழ்ச்சிகள் மேலும் விரிவுபடுத்தப்படுவதாக நேற்றைய முன்தினம் வானொலியின் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டதும் இன்றுமுதல் (ஞாயிற்றுக்ககிழமை) அது ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ரி.பி.சி வானொலியின் பணிப்பாளருக்கு புலிப்பினாமிகளால் கொலைப்பயமுறுத்தல் விடப்பட்டதும் இது தொடர்பாக லண்டனில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு இது குறித்து அறிவிப்பு சில நாட்களுக்கு முன் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதனை தேனீ, விழிப்பு, நெருப்பு இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன.
ரி.பி.சி வானொலியை எப்படியாவது நிறுத்தி விடவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்தவர்களால் இத்திருட்டுச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இத் திருட்டுச்சம்பவம் குறித்து லண்டன் பொலிசார் புலன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வானொலி இன்னும் சில நாட்களில் செயற்படத்தொடங்கும் என வானொலி நிர்வாகத்தினர் தேனீக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
வானொலிக்கான சேவைகள் இத்தகைய நெருக்கடிகளைத் தாங்கி மீண்டும் வெளிவரும் என்பதில் நிர்வாகத்தினர் உறுதியாக உள்ளனர். புலம்பெயர்நாடுகளில் உள்ள மாற்றுக்கருத்துக்கான தளத்தில் ரி.பி.சி வானொலி துணிச்சலாக தனது கருத்துக்களை முன்வைத்து வந்திருக்கிறது. இதுபோன்ற நெருக்கடிகளை நிர்வாகம் எதிர்பார்த்திருந்த போதிலும் வானொலியின் பொருளாதார நிலமை கவலைக்கிடமாகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது இடம்பெற்றுள்ள திருட்டினால் மேலும் கலையகம் பொருளாதார அளவில் பாதிப்புற்றிருக்கிறது.
புலம்பெயர்நாடுகளில் வாழும் மாற்றுக்கருத்துக் கொண்ட அனைவரும் இவ்வானொலிக்கு உதவி செய்வதன் மூலம் இத்தகைய நெருக்கடிகளில் இருந்து வானொலியை பாதுகாக்க முடியும்.
இதற்கான விபரங்களை எமது அடுத்த பதிப்பில் வெளியிட உள்ளோம்.
தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பணிப்பாளருக்கு தொடர்ச்சியான மிரட்டலை யடுத்து லண்டன் தலைமைபொலிசாருக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதம்.



The Chief Supriendentant of police,
Harrow police station
Harrow
3rd May 2005
Dear Sir,
Continuing death threats to TBC program director
We have already lodged several complaints about the death threats I gad received in the past.
I received a telephone call on 2nd May 2005 at 12:49 P.M and the person identified himself as Suresh from Crawley. He threatened me saying that we should cease our broadcast like Vectone television service. Otherwise they will soon kill me. I found the number by dialing 1471. Caller’s telephone number is 0794 750 5756.
Same person from the same telephone number called me on the same day at 1:35 P.M. This time he identified himself as Rajan from Alperton. He said that they have been looking for me yesterday and could not find me and soon they would find me and kill me.
Third time he called again and said that unless we stop our broadcasting they would kill me. He called me at 1:40 P.M., 2:03P.M. And 2:10 P.M on on 2nd May 2005
Same voice also called our program director around 11:30 P.M. that night and said they have decided to kill me and asked me whether our program director want to be hacked to death or want to be shot dead. He has three young children and such threatening calls cause immense suffering and anxiety to the family.
He claims to speak on behalf of the LTTE a banned terrorist organization in Britain. We do not have any means to confirm his identity but we suspect that he is speaking for the LTTE.
Recently a British resident Mr. Jeyathevan was detained and tortured in LTTE held area in Sri Lanka and our radio was instrumental in exposing this criminal act. LTTE had to release Jeyathevan after we exposed it. Since Jeyathevan`s release he gave an informative interview about the way he was abducted, tortured and how some of his assets were forcefully transferred to a nominee of the LTTE. Numbers of nuisance calls have increased since this broadcast.
We are seriously concerned about the safety and security of our staff and we think their life is in danger. These calls are very vicious in nature and cause immense anxiety to all our staff. When our staff come to the local police station, it takes long time to lodge the complaint and subsequently nothing much is being done. Since we get these threatening calls too often we would like you to take this matter seriously and take meaningful steps to apprehend the criminals behind this.
We also need you to increase the surveillance of our studio at 245 D Rayners Lane, and give us a contact person for our staff to contact in the event of any threats.
Yours Sincerely
V.Ramraj
Programme Director
TBC
Copies to:
(a) The Commissioner of Metroplitn Police,
(b) Scotland Yard.
(c) The Amnesty International
(d) Reporters Sans Frointier
(e) Article 19
(f) The Secretary of State for the Home Department

Anonymous said...

eilngw;w rk;gtk; fz;bf;fg;gl Ntz;aNj Mdhy; Mjuhk; ,y;yhJ Fwpwr; rhl;il Kd;itg;gJ Kiway;y. ,J jpl;lkpl;L nra;ag;gl;bUf;Fkhdhy; kpf tUe;jfj;jf;fNj.

Anonymous said...

நடைபெற்ற சம்பவம் கண்டிக்கப்பட வேண்யதே ஆனால் ஆதராம் இல்லாது குற்றச் சாட்டை முன்வைப்பது முறையல்ல. இது திட்டமிட்டு செய்யப்பட்டிருக்குமானால் மிக வருந்தகத்தக்கதே.

Sri Rangan said...

இதென்னப்பா கொடுமை!நான் எழுதியதற்கு விமர்சனமின்றி,ஏதேதோ விமர்சிக்கப்படுகிறது? யாருடையவேலை இந்தச் செய்தியை எமது பதிவிலிட்டது? இதற்கு நானோ அல்லது நீங்களோ செய்வதற்கு ஒன்றுமில்லை!ஆதாரமின்றிப் புலிகள்மீது பழிபோடுவது நியாயமாகுமா? எனக்குப் புரியவில்லை.இதைக் கண்டிக்கிறோம்.ஆனால் மாற்றுக் கருத்தைக் குழிதோண்டிப் புதைக்க இத:தகைய விஷமிகள் முனைவது கவலையளிக்கிறது.நல்லகாலம் உயிர்ப் படுகொலையொன்றும் நிகழவில்லை.அதையெண்ணி மனதைத் தேற்றலாம்.

Anonymous said...

Mty; kpFjpahy; nra;fpd;wdH NghYkk;
Rjd;

Anonymous said...

ஆவல் மிகுதியால் செய்கின்றனர் போலும்
சுதன்

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...