இதயம் முளைக்கும்?
கபாலம் சிதறக்
குருதி நிலம் நோக்கும்
துடிப்பு மெல்ல விலகி
நெடில் மூக்கைத் துளைக்க
கடுமுழைப்பில் களைத்த மூளை புழுதியுளுறையும்
ஒரு விரலசைவில்
ஒழிந்த மனிதக் கனவு
உண்மையின் முகத்தில்
துளிர்த்துக் கொள்ளும்
உறுவுகளின்
மௌனித்திருக்கும்
மனம்
ஒரு
நொடியினில் துயில் கலைத்து
குருதி நெடில் கலைவதற்குள் மலர்களின் புன்னகையில்
இதயத்தை உரசிக்கொள்ளும்
வார்த்தையின்றி
எரிந்து கொண்ட மெழுகுவர்த்தியோ
கணப்பொழுதில் கரைந்தவுணர்வில் கரையொதுங்கும்
தீட்டுப்பட்ட
மனிதவுடல் தீக்காக
வெளுத்துக் கிடக்கிறது
மீள் நோக்கா வீரவணக்கமோ
மீட்டுவதற்கு முந்திக் கொண்ட
உணர்வுக் கிடங்கில் உருக்குலைந்தது
புகழ் பாடிய வலைப் பூக்களைப்போல்
ஒளியைவிட
மரணங்கள் விலகிக்கொள்ள
அள்ளியெடுத்த வாய்க்கரிசி எதற்கென்றறியா
காலமும்,
சில துளிக் கண்ணீருமாய் உறவுக்கோலமும்
சாய்ந்த மெய்யருகே
சென்று திரும்பும்!
வினைமுற்றிய
விருப்புறுதி
மீளவும்
முண்டு கொடுப்பதற்கான உடல்களை
துணிவு
தீரர்
வீரர்
அறிஞர்
விற்பனர்
சொற்பனர் என்று தேடிக்கொள்ளும்!
ஏனென்ற கேள்வியறியா
கனவுக் குடங்களுக்கு
எழுதிவைத்து இடித்துரைத்தால்
இதயம் முளைக்கும்?
02.05.2005
ப:வி.ஸ்ரீரங்கன்
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...
-
மீண்டும்,மீண்டும் நிருபணமாகிய வர்க்க நலன்! மேதின ஊர்வலம்...நமக்குத் தெரிந்த அரசியல்தாம் இது,எனவே ஏமாற்றமில்லை.ஆனால் நமது மக்கள்? பாவப்பட்ட ம...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
No comments:
Post a Comment