Saturday, January 06, 2007

என்ன சொல்கிறீர் கொழுவி?

கொழுவி,என்னைப்பற்றிய உங்கள் கோஷ்டிகளின் எந்தப் பதிவுக்கும் நான் பதிலளிப்பதில்லை என்ற முடிவோடிருக்கிறேன்.

எனினும், உம்மைப் பேடியென்றெழுதியது பற்றியும்,நீர் என்னைக் குறித்து- புலிகளின் கள நிலைவரம் பற்றிய பார்வையையும் வைத்தெழுதியது பற்றி, நான் சில வற்றைச் சொல்வது அவசியம்.

முதலில் பேடியென்று உம்மை கடிந்தது ஏன்?

நீர் சுட்டியது போன்ற என்னைக் குறித்த உமது எதிர் எழுத்துக்கல்ல!

அதை நான் உண்மையில் எதிர்க்கவில்லை.

அதில் நீர் குறித்த எதையும் தவறாக எடுக்கவில்லை.நீர் போடும் பதிவுகளை முதலில் வாசித்து உமது சகோதரத்துவக் கண்ணோட்டத்தை விரும்புவது வழமை.


ஆனால் உம்மைக் கடிந்தது எதனால்?


நீரே கிண்டலாக எழுதிய பின்னூட்டுக்காகவே!

//At Sun Dec 24, 11:33:00 AM 2006, கொழுவி said...
ஏற்கனவே புலிகளின் பாசிசத்துக்கு Google துணை போகுது எண்டு பெடியன்கள் எழுதியிருந்தவங்கள். ஒரு வேளை புலிகள் தான் Google காரரிடம் சொல்லி உங்கடை பதிவோடை விளையாடுறாங்களோ தெரியாது.. வடிவா விசாரிக்கவும்.//



கூகிள் கணக்கிற்கு நான் மாறிய பின்,பதிவினில் பல தவறுகள் நேர்ந்தன.

அது குறித்தெழுதியதைப் பெடியன்களின் பதிவினில் வந்த நையாண்டியைக் காரணம் காட்டிப் புலிகள் அழித்ததாகக் கிண்டல் செய்தீர்.இதனால் எனக்கு உம்மையும் திட்ட மனம்கூடியது.எனவே திட்டினேன்!


அடுத்துப் புலிகள் என்னைத் தேடுவது குறித்து...
நீர் நெடுகக் கிண்டல் போடுகிறீர்.

அது குறித்து உமக்கு என்ன தெரியும்?
அல்லது எவரிடம் விசாரித்தீர்?

உமக்கு ஏதாவது தெரியுமா?

கடந்த மேதினத்தில் எனக்கும் புலிப்பொறுப்பாளர் சங்கருக்குமிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தின் பின்பு,அவர்களால் பதியப்பட்ட "எட்டப்பா"டொட்.கொம் எனது புகைப்படத்தைப் போட்டு,என்னைத் துரோகியாக்கியது ஊரறிந்தது.

அதன் பின்பு,வூப்பெற்றாலில் இருக்கும் ஸ்ரீரங்கனை கிவுல்ஸ்பேர்க்கிலிருக்கும் தமிழர்கள் இன்ரநெற் கபேயில் நகல் எடுத்து வைக்கப்பட்ட எனது படத்தோடான எட்டப்பர்(ஓபர்கவுசன் புலிப் பொறுப்பாளிரின் பதிவு)இணையத்தின் எழுத்தோடு,என்னிடமே வந்து,"அண்ணே உங்களையும் இப்படிப் போட்டுள்ளான் உண்மையா"வென வினவியவர்கள் பலர்.

அவர்களுள் என்னோடு வேலை செய்த கிவுள்ஸ்பேர்க் பொய்யாமணியும் ஒருவர்.

அதைவிட கிவுள்ஸ்பேர்க் பொறுப்பாளர் சங்கர் என்னைத் தேடியதும்,என் சகலனிடம்-அவர் தொழில் புரியும் தொழிற்சாலையில் தனது பரிவாரங்களுடாக எச்சரிக்கை-தண்டனையென்று வாக்கு வாதப்பட்டதும் உண்மை.அதைவிட இந்தச் சங்கர் இன்றோ மக்களிடம் பெற்ற நிதியினை மோசடி செய்து, தலை மறைவாகிய இன்றைய கதையும் எமக்குத் தெரியும்.அது போலவே எட்டப்பர்.கொம் நெருடலாக மாறி, இன்னும் சொறியிற வேலையும் தெரியும்.இது குறித்து வடிவாக உமது இயக்கத் தொடர்பூடாக் விசாரித்து, எழுதும்.

இல்லையேல் என்னிடம் வரவும்.

நாம் உங்கள் புலிப் பொறுப்பாளர்களோடு சந்தித்து உண்மையைக் கதைப்போம்-அறிவோம்.இதைவிட்டு, திரைக் கதை எழுதியதென்று இட்டுக் கட்டாதேயும்.இதைத் தெளிவுறுத் தெரிவேண்டுமாக இருந்தால் நீர் என்னோடு தொடர்பு கொண்டு,ஜேர்மனிக்கு வாரும்,புலிகளைச் சந்திப்போம்.இதைவிட்டுக் கேவலப்படுத்த முனைவது அறிவுடையதாகத் தெரியவில்லை!

இந்த விஷயமாக நான் எவருடனும் ஓபகவுசன் புலிப் பொறுப்பாளர் குறித்தும்,அவருடன் நான்பட்ட வாக்குவாதம் குறித்தும்-அந்தச் சங்கரை வைத்தே விவாதிகத் தயாராக இருக்கிறேன்.நான் மெளனமாக இருப்பது இந்தப் புலிப் பிரச்சனையை மறப்பதற்கே!உமக்கு அது அவலாக இருந்தால் வாரும், பல உண்மைகளை அவர்களுடாகவே கதைத்துத் தெரிந்து கொள்வோம்.இதைவிட்டு,சுவிசிலிருந்து கொண்டு,கை நீட்டும் வேலையைச் செய்தீர் நண்ப!
அடுத்து, என்ன சொல்கிறீர்?


"சிறிரங்கன் அகரன் போன்ற பதிவர்களுக்கிடையிலும் இராயகரன் போன்ற பதிவர்களுக்கிடையில் என்னளவில் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இராயகரனின் எழுத்துக்களில் நேர்மை இருக்கும். வாசிக்கும் போது அதனை புரிந்து கொள்ள முடியும்.


ஆனால் மற்றவர்கள் தாம் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கும் வரை காத்திருந்து நடந்ததும் அது பற்றி காரசாரமாக எழுதுகிறவர்களாகத் தான் தோன்றுகிறார்கள். இதோ கிழக்கில் புலிகளுக்கு, அல்லது ஒட்டு மொத்தமாகவே புலிகளுக்கு இராணுவத் தோல்வி ஏற்பட்டு விடும் என்பதனை முன் கூட்டியே இவர்கள் தீர்மானித்த பிறகு மிகுந்த மன உற்சாகத்துடன் எழுதித் தள்ள காத்திருக்கும் இவர்கள் இது போலவே இன்னும் நிறைய விடயங்களில் ஒன்று படுகிறார்கள்."


இங்கே மடத்தனமாகத் தனி நபரான என்னைப் புலிகளுக்கு மீண்டும் கை நீட்டும் காரியத்தில் ஈடுபடுகிறீர்.

கிழக்கில் புலிகளுக்குத் தோல்வி வந்தால்,அதையொட்டி மகிழ்வது இலங்கையரசுக்குக் காவடி தூக்கும் புலிகளுக்கு(கருணா குழு)மற்றும் இயக்கங்களுக்கு உகந்ததாக இருக்கலாம்.எனக்கல்ல.என்னையும் இதில் இணைக்கும் உமது நரித்தனமான நயவஞ்சக எழுத்தை இத்துடன் நிறுத்தும்.இது மற்றவனுக்குப் பொட்டிட முனையும் கைங்காரியம்!

எனது எழுத்துகளுக்கும் அகரனுக்கும் இணைப்பிட முனைந்த உமக்கு எழுத்துகளின் பரிணாமம் புரியாதிருப்பதுதாம் காரணமா அல்லது தீர்த்துக் கட்டுவது நோக்கா?

இன்னும் கொஞ்சம்:பிரபாகரனோ அல்லது பாலசிங்கமோ தனிப்பட்டவர்களாக இருக்கும்போது நமக்கு விமர்சிக்க அவசியம் இருக்காது.அவர்கள் இருவரும் தமிழர்களின் இதுநாள் வரையான அனைத்து அழிவுகளுக்கும் பொறுப்பான அரசியலில் தலைவர்களாக இருப்பதால் அதை நாம் விமர்சிப்போம்.மக்களைக் கொல்பவர்களை மோடன் எண்டுதாம் கூறுகிறோம்.ஆனால், அவர்களை அழித்துக் கொன்றிடவேண்டுமென்று கூறவில்லை!அவர்களோ மக்களைக் கொல்வதில் தேச நலன் என்றும்,துரோகியென்றும் கதைவிட்டு வருவது நமக்குப் புரிந்ததுதாம்.

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...