Friday, January 19, 2007

சிறு உரையாடல்

குழந்தைகளின் உலகம் மிகப் பெரியது.அந்தவுலகத்தை நாம் அநுபவித்து வளர்ந்தபின் மறந்து விடுகிறோம்.அற்புதமான அந்த உலகத்தை அப்பா,அம்மா என்ற உரிமையில் தகர்த்தும் விடுகிறோம்.குழந்தைகளை நமக்குச் சமமான மனிதர்களாக நம்மால் புரிந்து கொள்ளப்படுவது மிகக் குறைவாகும்.இந்தப் பருவத்தில் எத்தனை வண்ணமயமான எண்ணங்கள் ப+த்துக் குலுங்கும்!


காகத்தையும்,குயிலையும் கண்டு பாட்டுக்கற்கும் குழந்தை,மலர்களையும் பச்சைப் புற்களையும் கண்டு துள்ளிக் குதிக்கும் மழலை.நம்மை அண்டி நமக்குள் வாழும் அது நம்முடமையல்ல.அதுகள் முற்றிலும் வேறானவர்கள்.அவர்களை உரித்துக் கொண்டாடி, உருமாற்றாமல் நம்மில் எத்தனை பெற்றோர்கள் அவர்களைச் சிறப்புற நடாத்துகிறோம்?

படி,படி என்ற ஒரே கழுத்தறுப்பில், அவர்கள் தமது குழந்தைத் தனத்தையே இழந்து வருகிறார்கள்.

இந்தவுலகத்தின் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கின் தேவைக்கேற்பக் குழந்தைகளை இப்போதே வாட்டியெடுக்கும் கல்விக் கூடங்கள்,அந்தக் குழந்தைகளின் பிஞ்சுக் கனவுகளை அழித்தே விடுகின்றன.

அந்தக் குஞ்சுகளின் அற்புதமான உணர்வுகளை இந்த ஆக்கம் பேசுகிறது.தந்தையும் மகளும் சக தோழர்களாக உரையாடுவது நம் தமிழ்ச் சூழலுக்கு அந்நியமானது.


நத்தார் பண்டிகைக்காகச் சோடிக்கப்பட்ட அறையினுள் சிறு உரையாடல்


ஏர்ணஸ் கைமேறான்;(Ernst HEIMERAN)

(இரண்டாவது கொண்டாட்ட தினம்(நத்தாருக்கு அடுத்த நாள்.ஜேர்மனியில் நத்தார் பண்டிகை இருதினங்கள் விடுப்புவிட்டுக் கொண்டாடப்படுவது).நேலயின் வியாபாரக் கடையுள் காணுமிடமெல்லாம் அன்பைக் குறிக்கும் "பிஸ்கட்கழுத்தணி" தொங்கியபடி (கழுத்தில் தொங்கப்போட்டுக்கொள்ளும்) இருக்கிறது.)

நேல: (உரத்துப் பாடுகிறாள்)

ஓ... நீ மகிழ்ச்சிகரமான,ஓ...நீ ஆசீர்வதிக்கத்தக்க,"கினாப்பன் பிறிங்கென்ட்"(இளம் பையனைக் கூட்டிவரும்) நத்தார் தினமே,(பாட்டு இடை நிறுத்தப்பட்டு):என்ன சிரித்துக் கொண்டு பார்க்கிறாய்?,இது சிரிக்கத் தக்க பாட்டில்லை.இதுவொரு புனிதமான நத்தார்ப்பாட்டு!"

தந்தை: நீ மட்டும் தொடர்ந்து பாடேன் பார்ப்போம்.அது ரொம்ப இரம்மியமானது,அழகானது.

நேல: இல்லை.நீ என்னைப் பார்த்துச் சிரிதாய் அப்பா.

தந்தை: நான் உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை.அதற்காக மட்டும் நான் சிரித்தேன்.நீ பாடிய பாட்டுக்காச் சிரித்தேன்."கினாப்பன் பிறிங்கென்ட"நத்தார் தினமே என்பதற்காகச் சிரித்தேன்.அதன் பெயரைச் சரியாகச் சொன்னால் "கினாடன் பிறிங்கென்ட(மகிழ்ச்சியைக் காவி வரும் நத்தார் தினமே."கினாப்பன் பிறிங்கென்ட"-இளம் பையனைக் கூட்டிவரும் நத்தார் தினமெனும் அர்த்தமாகிறது.).

நேல: நான் "கினாப்பன் பிறிங்கென்ட" வார்த்தையை அழகாக உணர்கிறேன்.அப்பா நீ எனக்கு ஏதாவது கொண்டு வந்தியா?

தந்தை: நான் வெளியில் எங்கேயும் போகவில்லை.தனியே ஒரு மணி நேரம் காட்டுக்குள் உலாவிவிட்டு வந்தேன்.

நேல:நீ அங்கொன்றும் எனக்காகக் காணவில்லை,ஒன்றுமில்லை?(தண்டனை தரும் பார்வையோடு) மனிதர்கள் தேடும் போதெல்லாம் ஏதாவது கண்டெடுப்பார்கள்.இது நெடுக,நான் இப்படி ஏதாவது நெடுகக் கண்டெடுப்பேன்-வீட்டுக்குள்ளும் தாம்.எனக்கு விருப்பமிருந்தால் மறைந்திருப்பனவற்றைப் பார்ப்பேன்,அவ்விடத்தில் எதையாவது காண்பேன்.அது சரி,இன்றைக்கு மத்தியானம் என்ன சாப்பாடென்றாவது உனக்குத் தெரியுமா?

தந்தை:இல்லை.ஆனால்,வெளிப்படையாகச் சொன்னால் கொஞ்சம் நல்ல சாப்பாடு.ஏனென்றால் நீ இதே மகிழ்ச்சியோடு இருக்கவேண்டுமென்று.


நேல:சிங்கன்!(பண்டியிறைச்சியில் செய்த உணவு.)இதனால்தாம் நானும் சிரித்தபடி பார்த்தேன்.இதுவும் விளையாட்டுக்குத்தாம்.வீணை வாசிப்பால் எனது கைகள் நிறைய விற்றமீன்களைக் கொண்டிருக்கின்றன,முதலில் கட்டாயம் நான் கைகளைக் கழுவி விடவேண்டும்.

தந்தை: வீணை வாசிக்கின்றாய்? இது எப்போதிருந்து நீ வாசிக்கின்றாய்?

நேல: சற்று முன்தாம்."குழந்தைகளே வாருங்கள்"எனும் பாட்டிலிருந்து ஆரம்ப இராகத்தை எடுத்தேன்.என்னால் இதை மிக இலகுவாகச் செய்யக் கூடியதாக இருந்தது.பின்பு,தேன் பூசிய பாணோடு(ரொட்டி)மல்லக்கட்ட அது வீணைமீது விழுந்து... கைகளிலெல்லாம் அப்பி விட்டது.இப்போது அது ஒட்டிக்கொள்கிறது.

தந்தை:நீ சரியானவொரு செல்லம்(செல்லப் பண்டிக் குட்டி).கிறிஸ்ரியானி(தாய்) தேவாலயத்திலிருந்து வீட்டுக்கு வந்து, வீணையில் பயிற்சியெடுக்க முனைந்தால் அவளுக்கும் ஒட்டும்படியாக உன்னால் நேரிடப்போகிறது.


நேல: இப்போது எத்தனை மணி? எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது,அதைத் துடைத்துக் கழுவி விடுவதற்கு.நாங்கள் இருவருமே அதைச் செய்வோம்.அப்பா,நீ செத்த பின்பு உனது மணிக்கூட்டை எனக்கு முதிசமாகத் தருவாயா?

தந்தை:சிலவேளை செய்வேன்.அது சரி நான் மிக விரைவாகி(விரைவாக இறுந்து போதல்) விட வேண்டுமா?

நேல: ஐயோ அப்பா!இல்லை.எனக்கு நீதான் வேணும்.நீ வாழ வேண்டும்,நான் சாகும் வரை நீ வாழ வேண்டும்.அம்மாவும் அப்படியே.அத்தோடு எல்லோரும்,எல்லோரும்,எல்லோரும் வாழ வேண்டும்!(உணாச்சிப் பெருக்கோடு சக்தி பெருகத்தக்க இறுகிய கட்டியணைப்பு).



பிற்குறிப்பு:
ஏர்ன்ஸ் கைமேறான்(Ernst HEIMERAN) பிறப்பு 1902,இறப்பு 1955.வால் முன்ஸ்னர் எனும் ஜேர்மனியச் சிற்று}ரில்(அன்று) பிறந்து வளர்ந்த இவர் பதிப்பக நிறுவனரும் எழுத்தாளருமாவார்.குழந்தைகளின் அகவுலகை மிக இலாவகமாகப் படம் பிடிப்பதில் மிக ஆர்வமாக எழுதியிருக்கிறார்.இதற்கு இச் சிறு உரையாடலே சாட்சி.இது Sonntagsgespraeche mit Nele எனும் அவரது தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டு, என்னால் தமிழாக்கம் செய்ப்பட்டது.-
ப.வி.ஸ்ரீரங்கன்.

-------------------------------------------------------------------------
மூலம்:

Gespraech im Weihnachtszimmer




Von ERNST HEIMERAN




Zweiter Feiertag. Ueberall tritt man auf Liebesperlen aus Neles Kaufladen.


Nele: (laut singend)

O du froehliche, o du selige knaben bringende Weihnachtszeit (abbrechend):Warum schaust du denn so laecherbar? Das ist kein Lachlied , das ist einWeihnachtslied!



Vater:
Sing nur weiter. Es war sehr schoen.

Nele:

Nein, du hast mich ausgelacht, Dati.

Vater:

Ich hab dich nicht ausgelacht, ich hab nur darueber gelacht, daß du gesungen hast k n a b e n bringende Weihnachtszeit. Es heißt naemlich gnadenbringende.


Nele: Ich finde knabenbringende schoener. Hast du mir etwas mitgebracht, Dati?


Vater:

Ich war doch gar nicht fort, ich war doch nur eine Stunde im Waldspazieren.


Nele:


Und da hast du gar nichts fuer mich gfunden, gar nichts? (Strafend):Wenn man sucht, findet man immer etwas, Dati, immer! Ich immer!Auch daheim, wenn ich Lust habe. Da schau ich in alle Verstecke, findich schon was. - Weißt du, was es heute mittag zu essen gibt?
Vater:
Nein.Aber offenbar etwas sehr Gutes,weil du dich so freust.
Nele:
Schinken!Drum hab ich so gelaechelt geschaut.Und spielgetti. Ich muss mir aber erst die Haende waschen.Sie sind noch voller Vitamine vom Klavierspilen.
Vater:

Vom Klavierspielen? Und seit wann spielst du denn Klavier?


Nele:


Seit vorhin. Den ersten Ton von "Ihr Kinderlein kommet" Kann ich schoen.Aber dann ist mir das Honigbrot auf die Tasten gefallen,und jetzt klebt's so.

Du bist schon ein rechtes Ferkel. Wenn jetzt die Christiane von der Kirche heimkommt und ueben will, dann wird sie dir eine kleben.


Nele:


Wieviel Uhr ist es denn:? Da haben wir noch genuegend Zeit mir dem Putzen Dati, wir zwei. Erb ich deine Uhr, wenn du einmal tot bist?


Vater:

Vielleicht. Soll ich mich beeillen?

Nele:


Nein, ich moecht, daß du lebst, bis ich tot bin. Und die Mami auch. Und alle, alle, alle! (Stürmische, vitaminreiche Umarmung)




Titel: Sonntagsgespräche mit Nele / Ernst Heimeran. Hrsg. von Margrit HeimeranVerfasser: Heimeran, Ernst Ausgabe: Ungekürzte Ausg. Verleger: München : Dt. Taschenbuch-Verl. Erscheinungsjahr: 1991 Umfang/Format: 124 S. ; 19 cm Gesamttitel: dtv ; 25055 : dtv-Grossdruck Anmerkungen: Lizenz des Hanser-Verl., München, Wien ISBN: 3-423-25055-6 (falsche ISBN)Einband/Preis: kart. : DM 9.80 Sachgruppe: 59 Belletristik




1 comment:

சோமி said...

நல்ல பதிவு,
சின்ன வயதில் அடவு வைக்கப் படும் ந்மது மூளைகளை தூசு தட்டுவதற்குக் கூட நாம் எடுப்பதில்லை. அப்படியெடுகிறவர்கள் கேள்வி கேட்கத்தொடங்குகிறார்கள். சின்ன வயதில் இருந்தே நாம் யாரோ ஒருவரின் தாளத்துக்கு நடனமாடும் பொம்மைகளாக இருகிறோம்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...