Monday, August 14, 2006

இலங்கை: ஈழமும் இனவழிப்பும்!

இலங்கை: ஈழமும் இனவழிப்பும்!


"சர்வதேச வீடமைப்பு
டும் டும் டும்...கண்டிய
நடனம்
சகலருக்கும் வீடமைப்பு
டும் டும் டும்...தேசிய
நாடகம்

கட்டு கட்டு...பிரமா
கட்டு
கட்டுவனில்...கட்டுவனில்
பிரம்மா ராட்சதர்
இடி இடி இடி

தனதனதனன தனதனதனன
தனதனதனன தனதனனா
வசந்தன் ஆடி மகிழ்ந்த
ப+மியில்

டாங்கு டாங்கு டகு
டகு டகு டகு டகு
வீடும் சுடலையும்
ஒண்டாய்ப் போச்சு...
மயான காண்டம்...மயான
காண்டம்...


"பதி எழு
அறியா
பழங்குடி"வாழ்க்கை
பரதேசிகளால்
போச்சு...போச்சு...
தர்மம்
பேசி
பேசிப் பேசி
தமிழன் ப+மியில் குண்டு

சர்வேதசப் பயங்கர
வாதம்
சர்வதேச
வீடழிப்பு!

-என்.சண்முகலிங்கன்.(1986)


சொந்த மக்கள்மீது விமானத் தாக்குதலைத் தொடுப்பதற்கான அரசியல் விய+கம் கிளர்ந்தெழும்போது அதைச் சிங்கள அரசு செவ்வனவே செய்து முடித்துப் பல குழந்தைகளைக் கொன்று குவிக்கிறது.அப்பாவிச் சிறார்கள் போரின் கொடுமையால் அநாதைகளாகி,பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொல்லும் வன்கொடுமை அரசாகச் சிங்கள அரசு உலகத்துக்குத் தன்னை இனம் காட்டுகிறது.இந்த அரசின் இச் செயற்பாட்டை இந்தவுலகத்துப் பம்மாத்து ஐனநாயகம் தற்செயலாக-கவனமற்றதன் விளைவெனக் காரணம் கூறிச் செய்தி சொல்கிறது.இத்தகைய நிலைமைகளில் இந்தப் பொன்னான செய்தி நிறுவனங்கள் தமது எஜமானர்களின் அடிவருடிகளைக் காப்பதில் முன்நிலையில் நிற்பது மட்டுமல்லக் கூடவே தம் அற்புதமான மனிதநேய(?!)பண்பாட்டையுங் காப்பதில் முன்நிலையில் நிற்கிறார்கள்.


இந்த மனிதநேயமானது பெயரளிவில் தமது எஜமானர்களின் வரும்படியைத் தக்கவைக்கும் மூல மந்திரமென்பதாலும், இந்தகைய ஊடகங்கள் முன்மொழிவுகள் பலவற்றைக் கருதியே முந்தியடித்துச் செய்திகளாக்கித் தருகின்றன.இன்று நிகழ்ந்த சிங்களவரசின் படுகொலைத் தாக்குதலானது மழலைகளைக் கொன்று குவித்துள்ளது.இந்த மழலைகளைக் கொல்லும் வான் தாக்குதலானது மிகவும் திட்டமிட்ட இனவழிப்புத் தாக்குதலாகும்.இதற்குப் பின்னால் ஒரு சூழ்ச்சிமிக்க இராணுவத் தந்திரோபாயம் இருக்கிறது.என்றபோதும் சொந்த மக்கள்மீது விமானத் தாக்குதலில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.இத்தகைய தாக்குதலிலீடுபடும்போதெல்லாம் இந்த அரசு ஒன்றைத் திடமாகத் தெரிவித்துக்கொள்கிறது.அதாவது தமிழர் பகுதியானது தனது சொந்த ஆளுமைக்குள் இல்லாதது என்பதும்,அது இன்னொரு தேசமென்பதையுங் அது தௌ;ளத் தெளிவாக உரைக்கிறது,கூடவே இலங்கைக்குச் சார்ப்பான ஐ.நா. தீர்வை நாடிக் கொள்கிறது!


தனது சொந்த மக்களை இத்தகைய தாக்குதல்களின்வாயிலாக இன்னொரு தேசத்தின் குடிகளாக்கிவிட்டிருக்கும் இலங்கை அரசானது பின் அத்தகைய மக்களின்பால் தனது அரச ஆதிகத்தை நிலைபெறவைக்க முனைதல் வெறும் இராணுவ வாத முனைப்புத்தாம்.இங்கே இரண்டு தேசங்களின் இருப்பென்பது இத்தகைய தாக்குதலின் இயங்கு திசையில் மிகவும் உறுதிப்பட்டுக்கொண்டே செல்கிறது.ஆனால் இது திட்டமிட்ட இலங்கை அரசின் பொறியரசியலின் விய+கமாகும்.

பாலஸ்தீனம் எப்படி உண்மையானதோ அவ்வண்ணமே ஈழமும் உண்மையான தேசமாகிவருகிறது.தற்போதைய இந்த உள்ளகத் தேச வடிவமானதை உறுதிப்படுத்தும் வான்வழித் தாக்குதல்கள் ஒற்றைத் தேசியத் தன்மையை உடைத்து பல்தேசியத்தையும் பல தேசக் கட்டமைப்பையும் இங்கே நிலைபெறச் செய்கிறது.இது எந்தவொரு சட்டவாக்கத்துக்குள்ளும் நிலைபெறாதிருப்பினும் ஒரு தேசத்து மக்களை அவர்களின் இன அடையாளத்தை மையப்படுத்தி, இனச் சுத்திகரிப்புச் செய்யும் தறுவாயில் அந்தத் தேசம் அவர்களை இன்னொரு தேசத்துக்கு அத்திவாரமிடத் தூண்டுகிறார்கள்.இத்தகைய தூண்டலில் ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பை நிலைப்படுத்துவதற்கும் உயிர் வாழ்வதற்குமாக ஒரு தேசத்துக்குள் பிரிவினையைக் கோருவது தவிர்க்க முடியாததாகிறது.

இந்த நிலைமையில் ஈழம் என்பது மீளவும் தனக்குள் இருக்கும் இன்னொரு தேசிய இனத்தை ஒடுக்க முனையும்போது அங்கேயும் அவர்களுக்கானவொரு நியாயம் இன்னொரு தேசத்தின் அபிலாசையாக மாற்றமுறுகிறது.அது முஸ்லிம் தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது.

இரண்டு அரசஜந்திரங்களுக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து கொழும்பில் தமிழர்களுக்கெதிரான முஸ்லீம் இளைஞர்களின் எதிர்ப்பாக வெடித்ததை நாம் கடந்த கிழமை பார்த்தோம்.இதுவொரு முன்னோட்டம் மட்டுமே.

இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக அதன் இனமுரண்பாட்டைக் கணித்திருக்கும் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் உதாசீனப்படுத்தப்படுகிறது.இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தும் இந்த ஆளும் வர்க்கமானது இலங்கையின் இறைமையை எப்போதோ அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி இந்தியாபோன்ற அமெரிக்க அடிமை நாட்டின் அவலமாக விரிகிறது.

தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆளும் வர்கத்தை உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையைத் தொடர்கிறது.

இந் நிலையில் தமிழினத்தின் முஸ்லீம் விரோத அடக்குமுறையானது அந்தச் சமூகத்தை தேசிய இனவுருவாக்கத்துக்கும் ஒழுங்கமைந்த ஒருமைப்பாட்டுக்கும்,சிதறிக்கிடக்கும் இஸ்லாமியவுணர்வுகளை முஸ்லீம் தேசியவுணர்வுக்குள் வீழ்த்தி அவர்களை இன்னொரு வலுவான தேசிய இனச் செறிவுக்குள் உந்தித் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறது.முஸ்லீம் மக்களின் பொருளாதார முன்னெடுப்பும் அவர்களின் வாழ்வாதாரங்களும் அவர்களை இலங்கையில் இன்னொரு தேசியவலுவுள்ள-மாநில அபிலாசைமிக்க இனமாக, அதற்கு உரித்துடையவர்களாக்கும்போது, மலையக மக்களும் தமது அதீதமான உழைப்பாலும் வாழும் பகுதிகளாலும் இன்னொரு தேசிய இனமாக இருப்பதும் முஸ்லீம் மக்களுக்குப் பலமானதே.மலையக மக்களின் தயவோடு முஸ்லீம் இனமானது தனது தேசியக் கனவை வெல்லும் தரணங்கள் இனிவரும் காலங்களின் நம் முன் விரியும்.

இந்த அரசியல் வெளிக்குள் இலங்கை அரசானது எவ்வளவுதாம் விமானத் தாக்குதலைச் செய்தாலும் அதன் தரித்திரம்(இனமுரண்பாடு) சிங்கள ஆளும் வர்க்கத்தின் அந்நியச் சார்பால் அகற்றப்பட வாய்ப்பில்லை.இது தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை மட்டுமில்லை மற்றைய இரு தேசிய இனங்களின் முரண்பாட்டையும் ஒன்றுடனொன்று மோதவிட்டுக் குளிர்காயமுனையும் பல தரணங்கள் வந்து தொலையும்.அப்போது இன்னும் பல நூறு மனிதர்கள் உயிரிழந்து நாடு திவாலாகும்.யுத்த நெருக்கடிக்குள் மூழ்கும் இலங்கையில் ஐ.நா.துருப்புகள் இந்திய,சீன,ஐரோப்பிய,ஆபிரிக்க முகங்கள் தாங்கி உலாவப்போகிறது.லெபனானுக்குப் பிறகு இலங்கையே அடுத்த பட்டியலில் இருக்கும்.இதற்கிசைவாகப் படுகொலைகளை இலங்கை ஆளும் வர்க்கங்கள் செய்யத் தூண்டப்படும்.இத்தகைய தூண்டலில் அநாதைகள் இல்லப்படுகொலைகள் எல்லாம் நடக்க அதை உலகம் இன்னும் ஊக்கப்படுத்திக்கொண்டே மனித நேயம்பேசி தனது வலுக்கரத்தை இலங்கை நோக்கி அசைக்கும்.அழிவதென்னவோ அப்பாவிகள்தாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்

14.08.06

3 comments:

Anonymous said...

Sri Lankan bombs kill 43 school girls in Mullativu, says LTTE

Mon, 2006-08-14 23:32

Colombo, 14 August,

(Asiantribune.com): Pro-LTTE websites claimed that Sri Lankan Kfir jets bombing Mullativu had hit a children’s home killing 43 girls and 60 other girls were injured.

But Air Force spokesman Group Capt. Ajantha Silva said the government has proof the facility was a rebel base.

LTTE officials in Kilinochchi however said: "Girls from various schools in the Mullaitivu district were staying overnight at the compound, attending a course in first-aid."

The LTTE Peace Secretariat denounced the Sri Lankan airstrike as "a horrible act of terror." 33 bodies have been taken to Puthukudiyiruppu hospital.

UN’s child agency, UNICEF, and international truce monitors have visited the scene of the carnage, said the Tamil website.

- Asian Tribune -

» login or register to post comments | printer friendly version

First it was an orphanage.
Submitted by CHANDIMAN on Tue, 2006-08-15 03:06.

First it was an orphanage. Then after the pictures of crying parents emerged, as orphans could not have parents, it was more than 100 school girls staying overnight for a first aid training. These Tamil parents in North and East are more conventional type than the ones in South and would not allow their daughters to stay overnight away from home, unless they were taken by force or it was a part of some sort of religious gathering. Not even a camp run by UNICEF will be allowed to keep their children, especially girls, overnight. No one, no NGO, no religious Organization had come forward to say that they were running a camp.
We all are sympathizing the death of the children and the agony of the parents, no doubt about it.
But who are to be blamed?
How long does it really take

Submitted by sandman on Tue, 2006-08-15 02:57.

How long does it really take to teach a person "First aid" ?
Generally it is accomplished within a day, with 12 - 15 year olds.

When you say it takes a residential course for young girls staying overnight to learn 'first aid', that some how makes one wonder as to the real purpose behind it. Such places generally are operated with hidden purposes and usually are dens of unlawful activity such as brothels etc.

In this case too, the explanation of "First Aid residential course" just doesn't cut it. The coming days will bring forth better information.


As pro-LTTE media says, if
Submitted by KaruM on Tue, 2006-08-15 01:53.

As pro-LTTE media says, if this was an orphanage with 17 - 20 year old (that is what SLMM said), interesting 17 - 20 year olds in orphanages without looking for jobs or going to higher education, what a luxury in poor war-torn areas.

Some how, Velu liked to hang in these places for the simple task of hand picked future Suicide bombers.

So, I am wondering if GOSL knew in advance that Velu was hanging in these places.

As this news report ,even LTTE and pro-LTTE media do not agree with respect to who this people were. LTTE says they were school girls from nearby schools. media says an orphanage.


Ever since when the Tigers
Submitted by sinaha on Tue, 2006-08-15 00:58.


Ever since when the Tigers ran schools for girls? The only ones they have are for suicide bombers. SLAF use satellite and drones to identify their targets. Clearly this was a Tiger training camp. Now desperate for any relief this is the latest LTTE canard, just like their Air Force bombing Palaly.


Firstly it is sad if they
Submitted by tenne on Tue, 2006-08-15 00:13.


Firstly it is sad if they are human beings. The unfortunte part it the the tamil terrorists are using young children as child soldires. My deduction is that these girls(I have my serious reservations of they being school girls) are being used by the tamil terrorists as killers under the guise of being nurses. if they were attanding a training program by the tamil terrorists they become terrorists too. Killing is sad but there is always collateral damage when fighting terrorists killers. Unfortunate but accaptable. This is no time to have sentiments and start crying. There were nobody to cry for the other innocent killed by the babarins including the 7 murdered today on a public road.
Let us not get sintimental and but get on with the job of defeating the terrorists.

You can never win a terrorist war with a bleeding heart. Be cold as an ice berg in fact I would go beyond and freez the heart to abosolute zero. ie - 273C



I watched children photos
Submitted by simpleman on Tue, 2006-08-15 00:11.


I watched children photos published by the Tamilnet. I was shocked to see it. It will clearly prove that the magnitude of LTTE ruthlesness. What I understood is that these little innocent children have been forcibly taken away by the LTTE. After that they have been given military training. My dear sisters, you were born in this beautiful land to spend your life, but it has taken away by the LTTE barbarians.

Anonymous said...

நெஞ்சு கொதிக்கும் முல்லைப் படுகொலைகள்
முல்லைத்தீவிலே 61 முல்லைப் பூக்களை கருக்கியிருக்கிறான்
சிங்களக் காடையன்!

கேள்வி கேட்க நாதியில்லை உலகில்!

ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில முணுமுணுப்புகள் - அவ்வளவே!

இன்று முல்லைத்தீவில் தமிழ் மகளிரை, பள்ளிச் செல்வங்களை,
16 குண்டுகளை வானில் இருந்து எறிந்து கொன்றிருக்கிறது சிங்களம்.

தமிழ்ப் பெருங்குடிகளுக்கு இன்னும் உரைக்கவேயில்லை!
தங்கள் வீரத்தைக் கவட்டிக்குள் பாதியையும், தோட்டங்களில் பாதியையும்
புதைத்துக் கொண்டு பம்மாத்து செய்கிறார்கள்.




இந்தப் பிள்ளைகள் என்ன தீங்கு செய்தன?

இந்த முல்லைப் பூக்களின் படுகொலையினை மனசாட்சியுள்ள
ஒவ்வொரு வலைப்பதிவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.

61 முல்லைகளின் படுகொலைக்குக் காரணமான
ஒட்டு மொத்த சிங்களத்தையும் கண்டிக்கிறேன்.

இவர்கள் நாசமாய்ப் போகும் நாள் என்ன நாளோ?

நயனன் :-(


this is nothing but cruelty.

what indians and people in tamilnadu are going to do???....

pathetic...



# posted by Thamilan : Monday, August 14, 2006 10:39:14 AM
தூங்கிக் கொண்டிருப்பதாக பாவனை செய்யும் தமிழர்களே எழுவீர், உங்கள் பொய்மைகளை உடைத்து உங்கள் தலைவர்களின் சுய நல இருப்புக்களை உடைத்து வெகுண்டு எழுவீர்.

கருகிய தமிழ்ச் செல்வங்கள் உங்கள் மனங்களை உலுக்க வில்லயா? இனியும் உங்கள் மவுனம் தேவையா? சிந்திபீர்கள் செயற்படுவீர்கள்,தெருவில் இறங்குங்கள் உங்கள் நன்பர்களுடன், எழுப்புங்கள் உங்கள் ஆட்சியாளர்களை.உலுக்குங்கள் கோட்டையை.

தனித்து இருந்து இணயத்தில் புலம்பியதும் ,கவலை தெருவித்ததும் போதும் , இன்றே செயற்படுங்கள்.
# posted by Narathar : Monday, August 14, 2006 12:11:00 PM
தற்போது 100 பிள்ளைகள் பலியானதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
# posted by Anonymous : Monday, August 14, 2006 1:53:48 PM
நன்றி நயனன், ஈழத்தமிழ்ச் சகோதரனின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும்
அருமையான கவிதை, உங்களைப் போன்ற ஒரு சிலரால் தான் ஈழத்தமிழர்கள்
இன்றும் தமிழ்நாட்டை அன்புடன் அண்ணாந்து பார்க்கிறார்கள்.

அன்புடன்
ஆரூரன்
www.unarvukal.com
# posted by Aaruran : Monday, August 14, 2006 3:26:17 PM
This is nothing new Nayanam, when SL Navy killed 150 Tamil Nadu fishermen, the Tamil Nadu Tamils and Leaders couldn't do anything. You think they would dare to condemn this? They just don't care. The TN Tamils have been undermined in their own soil, as a result, there is no respect for mother Tamil or Tamil bretherns. This is the reality due to anti-Tamil inhabitant and anti-Tamil supporting act of India (Indian Central Government.
# posted by Liberated Tamil : Monday, August 14, 2006 3:27:40 PM
தட்டிக் கேட்பதோடு, தமிழகம் கட்டணம் செய்து, இந்திய அரசையும் செய்யுமாறும் கோர வேண்டும். மேலும் தமிழர் உயிரை மலிவாகக் கருதும் 'இந்து' போன்ற பார்பன ஏடுகளுக்கு எச்சரிக்கையாக தீர்மானங்கள் அமைய வேண்டும். நான் என் அலுவத்திலே காட்டியவுடன் இங்கு அமெரிக்கர்கள் வேதனை அடைகின்றனர். இது "genocide" வேறொன்றும் இல்லை. முல்லைத்தீவில் உள்ள செஞ்சோலையகம் பல ஆண்டுகளாக அனாதைக் குழந்தைகளின் காப்பகமாக இருந்து வருகின்றது. இதை கண்ட கண்காணிப்புக் குழுவின் தலவரும் முன்னார் சுவீடம் இராணவ அதிகாரியுமான உல்ப் ஹென்றிக்சன் பேட்டியில் "இது முழுக்க முழுக்க மனிதநேயத் தளம். இராணுவத்தளம் அல்ல!" என்றார்.

செம்மொழிக்காக பீத்தும் பிரமன்கள் தமிழர் உயிர், உடைமை என்றால் ஏன் ஒளிகின்றனர்.

Anonymous said...

நெஞ்சு கொதிக்கும் முல்லைப் படுகொலைகள்
முல்லைத்தீவிலே 61 முல்லைப் பூக்களை கருக்கியிருக்கிறான்
சிங்களக் காடையன்!

கேள்வி கேட்க நாதியில்லை உலகில்!

ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில முணுமுணுப்புகள் - அவ்வளவே!

இந்த முல்லைப் பூக்களின் படுகொலையினை மனசாட்சியுள்ள
ஒவ்வொரு வலைப்பதிவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.

61 முல்லைகளின் படுகொலைக்குக் காரணமான
ஒட்டு மொத்த சிங்களத்தையும் கண்டிக்கிறேன்.

இவர்கள் நாசமாய்ப் போகும் நாள் என்ன நாளோ?

நயனன் :-(


# posted by nayanan @ 8/14/2006 09:05:00 AM
Comments:
Nenju porukkavillai. this is nothing but cruelty.

what indians and people in tamilnadu are going to do???....

pathetic...

- a tamizhan
# posted by Anonymous : Monday, August 14, 2006 10:14:16 AM
you have raison.completely very told i had thing. thanks
# posted by Anonymous : Monday, August 14, 2006 10:30:33 AM
you have raison.completely very told that i had think.thanks for the message.
# posted by Anonymous : Monday, August 14, 2006 10:33:29 AM
அவர்களுக்கு நமீதா இடுப்பையும் திரிசா மடிப்பையும் பாடவே நேரமில்லை நம்மை எப்படி பாடப்போகிறார்கள். கருணாநிதி பேரனின் அரசியல் முக்கியம் எனக் கருதி இதில் நடுனிலை வகிப்பார்
# posted by Thamilan : Monday, August 14, 2006 10:39:14 AM
தூங்கிக் கொண்டிருப்பதாக பாவனை செய்யும் தமிழர்களே எழுவீர், உங்கள் பொய்மைகளை உடைத்து உங்கள் தலைவர்களின் சுய நல இருப்புக்களை உடைத்து வெகுண்டு எழுவீர்.

கருகிய தமிழ்ச் செல்வங்கள் உங்கள் மனங்களை உலுக்க வில்லயா? இனியும் உங்கள் மவுனம் தேவையா? சிந்திபீர்கள் செயற்படுவீர்கள்,தெருவில் இறங்குங்கள் உங்கள் நன்பர்களுடன், எழுப்புங்கள் உங்கள் ஆட்சியாளர்களை.உலுக்குங்கள் கோட்டையை.

தனித்து இருந்து இணயத்தில் புலம்பியதும் ,கவலை தெருவித்ததும் போதும் , இன்றே செயற்படுங்கள்.
# posted by Narathar : Monday, August 14, 2006 12:11:00 PM
தற்போது 100 பிள்ளைகள் பலியானதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
# posted by Anonymous : Monday, August 14, 2006 1:53:48 PM
நன்றி நயனன், ஈழத்தமிழ்ச் சகோதரனின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும்
அருமையான கவிதை, உங்களைப் போன்ற ஒரு சிலரால் தான் ஈழத்தமிழர்கள்
இன்றும் தமிழ்நாட்டை அன்புடன் அண்ணாந்து பார்க்கிறார்கள்.

அன்புடன்
ஆரூரன்
www.unarvukal.com
# posted by Aaruran : Monday, August 14, 2006 3:26:17 PM
This is nothing new Nayanam, when SL Navy killed 150 Tamil Nadu fishermen, the Tamil Nadu Tamils and Leaders couldn't do anything. You think they would dare to condemn this? They just don't care. The TN Tamils have been undermined in their own soil, as a result, there is no respect for mother Tamil or Tamil bretherns. This is the reality due to anti-Tamil inhabitant and anti-Tamil supporting act of India (Indian Central Government.
# posted by Liberated Tamil : Monday, August 14, 2006 3:27:40 PM
தட்டிக் கேட்பதோடு, தமிழகம் கட்டணம் செய்து, இந்திய அரசையும் செய்யுமாறும் கோர வேண்டும். மேலும் தமிழர் உயிரை மலிவாகக் கருதும் 'இந்து' போன்ற பார்பன ஏடுகளுக்கு எச்சரிக்கையாக தீர்மானங்கள் அமைய வேண்டும். நான் என் அலுவத்திலே காட்டியவுடன் இங்கு அமெரிக்கர்கள் வேதனை அடைகின்றனர். இது "genocide" வேறொன்றும் இல்லை. முல்லைத்தீவில் உள்ள செஞ்சோலையகம் பல ஆண்டுகளாக அனாதைக் குழந்தைகளின் காப்பகமாக இருந்து வருகின்றது. இதை கண்ட கண்காணிப்புக் குழுவின் தலவரும் முன்னார் சுவீடம் இராணவ அதிகாரியுமான உல்ப் ஹென்றிக்சன் பேட்டியில் "இது முழுக்க முழுக்க மனிதநேயத் தளம். இராணுவத்தளம் அல்ல!" என்றார்.

செம்மொழிக்காக பீத்தும் பிரமன்கள் தமிழர் உயிர், உடைமை என்றால் ஏன் ஒளிகின்றனர்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...