Wednesday, August 30, 2006

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!(3)

இனவாதமும்,இணைவின்மையும்:

தினமும்,பொழுதும் அகதிகள் பெருக்கமும்,பட்டுணியும்,மரணவோலமும்,நோயும் நொடியும் மனித வரலாற்றில் ஒரு செயலூக்கமிக்க நிகழ்வாக மாறி வருகிறது.இது ஒருபுறத்தே இங்ஙனம் நிகழும்போது,மறுபுறமோ இந்த நிகழ்வால் அரசியல் இலாபமடையும் ஐரோப்பிய ஓட்டுக்கட்சிகள்,வலதுசாரிய-இனவாதக் கட்சிகள் யாவும் இந்த அகதிகளை மனித சமநிலையிலிருந்து துண்டித்து விடுவதிலும்,துரத்தியடிப்பதிலும் மும்மரமாகச் செயற்படும்போது, அதைவைத்து மக்களின் மனங்களைத் தம் பக்கம் இழுத்துக் கட்சிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையில் இந்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் செற்படுகின்றன.இதனால் சாதரண மக்களிடமிருந்து நாளாந்தம் அந்நியப்படும் நாம் சமூகக் கூட்டு மனப்பான்மையை இழந்தும்,இந்தத் தேசத்தின் ப+ர்வீகக் குடிகளோடு கலந்தும்,இணைந்தும் வாழமுடிவதில்லை.


இது மனிதப் பண்பாட்டிற்கு மிகவும் முரணானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் தமது வலுவுக்குள் உட்பட்ட செயலூக்கத்தை கண்டிப்பாக இந்த ஐரோப்பிய உற்பத்திச் சக்திகளுக்கு வழங்கியாகவேண்டும்.இத்தகைய செயலூக்கத்தை மிகுதியாக வழங்கிவரும் அகதிகளின் அதீத உழைப்பானது மூன்றாந்தரமாக மறைக்கப்பட்டு,அவர்கள் ப+ர்வீகக் குடிகளின் வரிப்பணத்தை தின்று ஏப்பம் விடுபவர்களாக இந்த உடகங்கள், அரசியல் வாதிகள் கருத்துக்களைத் தமது மக்களிடம் பரப்புகிறார்கள்.இங்கே சமூகக் கூட்டுணர்வின்றிக்கிடக்கும் ஒரு பகுதி மக்களை தம்மால் தாங்கிக் கொள்ளப்படுவதாகச் சொல்லுப்படும் பொய்,புரட்டை இந்தப் ப+ர்வீகக் குடிகள் நம்பி விடுவதாலும் சமுதாயத்தில் ஒரு கொதி நிலையைத் தூண்டிவிடும் அரசியல் அமுக்கத்தை ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தோற்றுவித்துத் தமது பொருளாதார முரண்பாட்டைத் திசை திருப்பித் தம் ஆட்சியை நீடிக்கிறார்கள்.


இத்தகைய நீடிப்பில் ஆட்சியாளர்கள் தவிர்க்கமுடியாது அகதிகளுக்கான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் ஒரு அட்டவணைக்குள் திணிப்பதுபோன்று(...Durch Kategorisierugen...z.B."die Auslaender","die Schein Asylanten"...usw.)" வெளிநாட்டார்கள்"பொய் அகதிகள்"என்று அட்டவணையிடுதல் கருத்தியலாக வளர்தெடுக்கப்பட்டு,மக்கள் சமூகத்தில் அதுவே அந்நிய எதிர்ப்புச் சமூக உளவியலாக ஊன்றப்படுகிறது.இது மனிதாபிமானத்தையும்,ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தையும் மிகவும் பலவீனப்படுத்தி,மக்களிடம் ஒருவித சாத்வீக இனவாதமாகவும்;("passiver"Rassismus)வளர்த்து விடுகிறார்கள்.இத்தகைய சாத்வீக இனவாதமானது அடிப்படையில் செயலூக்க இனவாதிகளுக்கு("aktiver"Rassismus) பெரும் உந்துதலையும்,பொருட்பலத்தையும் மற்றும் தார்மீக வலுவை,ஆட்படையையும் கூட்டிவருகிறது.ஏலவே காலனித்துவப் பார்வையுடைய ஐரோப்பிய மனோபாவமானது மிக விரைவாக இனவாதத் தீயில் விழுந்தவிடுகிறது.


இதன்பலாபலனே ஆயிரம் தடவைகள் அகதிகளுக்கான சட்ட மாற்றங்களையும்,புதிய சட்ட வகுப்புக்களையும் அரசியல் ரீதியாகச் செய்யும் நிலைக்கு இந்த மக்களின் ஒப்புதல் மிக இலகுவாகக் கிடைக்கிறது.


இன்றிருக்கும் ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரத்தின் நிலையானது மிகவும் கொடிய மனித விரோதச் சட்டங்களை இயற்றுவதிலும்,தமது மூலதனத்தைப் பெருக்குவதற்கும்-அதைக்காப்பதற்குமாக வெறிகொண்டலைகிறது.இதற்கு முரண்பாடாக ஐரோப்பியத் தொழிலாளர்களினதும்,அகதிகளினதும் ஒன்றிணைவு இவர்களுக்குக் குறுக்கே கோடுகிழிக்க முனைவதால் இந்தச் சாத்வீக இனவாதம் மேன் மேலும் வளர்தெடுக்கப்படுகிறது.இது தொழிலாளர்களின் முரண்பாட்டையொடுக்கும் ஐரோப்பாவின் புதிய குடிசார் சட்டவுருவாக்கத்துக்கு முதற்கல்லை எடுத்துப்போட்டபோது மக்களால் எந்த எதிர்ப்பும் வராது காத்திருக்கிறது.இந்தப் "பொது ஐரோப்பியச் சட்டம்;"(Europaeischen Verfassung und Grundgesetz)ஐரோப்பிய மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் மட்டுப்படுத்தி அவர்களை வெறும் நுகர்வோர் ஆக்கும் சட்டம் என்பதையுணர்ந்த ஓட்டுக்கட்சிகள்,அதை மறைப்பதற்காக இந்தச் சாத்வீக இனவாதத்தை பரப்பி வந்தார்கள்-வருகிறார்கள்.


உதாரணமாக இன்றைய நோர்த்தன் வெஸற்;பாலின் மாநிலத்து(Nordrhein-Westfalen)முதல்வர் திரு.யுர்கன் றுட்கார் கடந்த 2001 மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு சாத்வீக இனவாதக் கோசத்தை முன்வைத்துப் பிரசாரம் செய்தார்."."Kinder statt Inder"(இந்தியர்களுக்குப் பதில் குழந்தைகள்)எனும் தேர்தல் கோசம் பட்டி தொட்டியெல்லாம் ஒட்டப்பட்டன.இது ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் இந்தியக் கணினி மென்பொருள் வல்லுனர்களை எதிர்த்து முன்வைக்கப்பட்ட கோசமாகும்.இந்தியர்களுக்குப்பதிலாக "நமது குழந்தைகளை-அதுவும் நீல விழிகளும் பொன்னிறத் தலைமுடியும் கொண்ட வெள்ளைக் குழந்தைகளை இப்போதே படிக்க வைத்துத் தயார்படுத்து" என்பதே அதன் பொருளாக இருந்தது.இதன் பின்பு ஜேர்மனிய நாசியக் கட்சிகள் யாவும் இத்தகைய வெளிநாட்டார்-அகதிகள் எதிர்ப்பை மிகவும் வலுவாகச் சட்டப+ர்வமாக முன்னெடுத்தார்கள்.


ஏலவே பற்பல படுகொலைகளைச் செய்திருந்த இனவாதிகளுக்கு இத்தகைய ஓட்டுக்கட்சிகளின் அடவாடித்தனம் மிகவும் பயனுள்ள செயலாகத் தெம்ப+ட்டியது.(நாங்கள் தமிழ்பேசும் மக்கள்.இலங்கையின் இனவாத அரசியலிலும்,அதன் இனவாதக் கருத்தியலிலும் அநுபவம் பெற்றவர்கள்.எமக்குள்ளும் மாற்று இனங்கள் குறித்த இந்த சாத்வீக இனவாத்தின் ஆதிக்கம்-அநுபவம் இருப்பதை உணரவேண்டும்.இதுவேதாம் செயலூக்க இனவாதிகளை யுத்தத்தில் உருண்டு பிரண்டு கிடக்கத் தூண்டுவதையும் நாம் மறக்கப்படாது.)இவர்கள் அகதிகளுக்கு-வெளிநாட்டார்களுக்கெதிரான தாக்குதல்களைத் தொடுத்துத் தினமும் மனிதர்களைக் காயப்படுத்தியும்,கொன்றும்,அகதிகளின் வதிவிடங்களைத் தீ மூட்டியும் அகம் மகிழ்கின்றார்கள்.


கடந்த 26.05.1993 ஆம் ஆண்டு அகதிகளுக்கான சட்டம்(Art.16 des Grundrecht auf Asyl)ஆர்ட்டிக்கல் 16 ஐ மாற்றிய மூன்றே நாளில் 29.05.1993 ஆம் ஆண்டு ஜேர்மனியின் இரும்பு நகரான சோலிங்கனில்(29.Mai 1993 wurden in Solingen fuenf tuerkische Frauen ermordet.) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து துருக்கியப் பெண்மணிகள் நித்திரைப்பாயில் அவர்களின் வீடெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.அடுத்த சில மாதங்களில் இன்னும் இரண்டு குழந்தைகள் மோல்ன்(;(Moelln)எனும் கிராமத்தில் தீ மூட்டிக் கொல்லப்பட்டார்கள்.இத்துடன் இத்தகைய அகதிகள்-வெளிநாட்டார்கள் வெறுப்புத் தணியவில்லை.அது தொடர்ந்து, நாளும் பொழுதும் பெரும் தீயாய் பரவி அகதிகளை அடித்துக் கொல்கிறது-மரணப்படுக்கையில் கிடத்துகிறது.கிழக்கு ஜேர்மனியில் நாளொன்றுக்கு இருவராவது நாசிகளால்-சாமானிய ஜேர்மனியர்களால் உடற் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.


மிகச்சமீபத்தில்,16.04.2006 அன்று கிழக்கு ஜேர்மன் சக்ஷன் மாநிலத்தின் தலைநகரமான பொட்ஸ்டாமில்(;(Potsdam)இஒரு நைஜீரிய அகதிப் பொறியியலாளர் அடித்துக் கோமாவில் கிடத்தப்பட்டார்.இத்தாக்குதல் குறித்து நாடு தழுவியவரையில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பேர்ளினிலிருந்து தினமும் அகதிகள் தாக்கப்படுவதை"முதலாம் தேதியிலிருந்து முப்பத்யோராம் தேதிவரையும்" ஆவணமாகத் தொகுத்தது "Konkret"எனும் இடதுசாரியச் சஞ்சிகை.இவற்றுக்கு ஜேர்மனியப் பொலிசாரே உடந்தையாக இருப்பதையும் அது அம்பலப்படுத்தியது.இங்ஙனம் நிர்வாகத்துறையிலும்,அமைப்பு நெறியாண்மைக்குள்ளும் இடையாக இந்த"சாத்வீக இனவாதக் கட்டமைப்பு வேரோடியுள்ளது((Besondere Aufmerksamkeit werden wir auf rassistische Strukturen innerhalb des Verwaltung-und Organisationapparates...z.B. wie Sri Lanka/Tamil Eelam.).



இவையெல்லாம் இந்தப் பொருளாதாரத்தின் மறுபக்கச் செயற்பாடாக விரிகிறது.அகதிகள்மீதான ஐரோப்பிய இனவெறியாளர்களின் தாக்குதலைப்பட்டியல் போடுவதற்கு ஒரு ஆயுள் போதாது.தினமும் ஒருவராவது ஒரு நகரத்தில் உடல்ரீதியாகத் தாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது,ஜேர்மனியில்.

இந்த நிலையில் யுத்தங்களால் மக்கள் புலம் பெயர்ந்து அகதியாகும் கீழ்வரும் அறிக்கையைப் பார்த்தால் உலகம்ப+ராக மக்கள் அகதியாகி மடிந்துவிடுவார்களோவென அஞ்சவேண்டியுள்ளது.உலகத்தில் நடைபெறும் அனைத்து நாசகார யுத்தங்களும்,உயிர் கொல்லி ஆயுதத் தளபாடங்களும், நிதி மூலதனமும்,பாரிய தொழிற்சாலைகளும் மனிதர்களை அகதியாக்கி வரும் இந்த அட்டவணை மிகவும் அச்சமூட்டுகிறது.


"2003 ஐக்கியநாட்டுச் சனத்தெகை பற்றி அறிக்கை ஒன்றில் ,உலகத்தில் 17.5 கோடிகள் மக்கள் தத்தமது நாட்டுக்கு வெளியில் வாழ்வதாகக் கூறியுள்ளது. 10 பேர்களுக்கு ஒருவர் சொந்த நாட்டடை விட்டு வெளியேறுகின்றார். முன்னேறிய நாட்டை நோக்கிப் பன்தங்கிய நாட்டைச் சேர்ந்த 23 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் புலம் பெயர்கின்றனர். 1975க்குப் பின் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து வெளியேறியவர்களின் புலம் பெயர்வு இரண்டு மடங்காகியுள்ளது.


இந்த புலம் பெயர்வு வட அமெரிக்காவி;ல் 5 கோடியும், ஐரோப்பாவில் 4.1 கோடியும், ருஷ்சியாவில் 5 கோடியமாகும். முன்னேறிய நாடுகளில் ஒவ்வொரு 70 பேருக்கு ஒருவர் வெளிநாட்டவராகியுள்ளனர். 1995-2000 இடையிலான 5 வருடத்தில் 1.2 கோடி பேர்கள் முன்னேறிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தம் 23 இலட்சத்தால் அதிகரிக்கும் வெளி நாட்டவாகளில் 18 சதவீதம் பிறப்பினால் உருவாகின்றது. மொத்தில் வட அமெரிக்கா 14 இலட்சமும,; ஐரோப்பாவில் 8 இலட்சமுமாக அதிகாரிக்கின்றது. மொத்தில் 9 வீதம் பேர்கள் அகதி அந்தஸ்தைப் பெறுகின்றனர்.

வருடந்தம் 2000 முதல் 2050 வரையான காலத்தில் வெளிநாட்டவரின் புலம் பெயர்வு சராசரியாக:
அமெரிக்காவை நோக்கி 11 லட்சம்
ஜேர்மனி 2.11 லட்சம்
கனடா 1.73
இங்கிலாந்து 1.36
அவுஸ்ரேலியா 0.83

வருடாந்தம் அகதிகளின் புலம் பெயர்வு இலட்சத்தில்:

சீனா 3.03
மெக்சிக்கோ 2.67
இந்தியா 2.22
பிலிப்பைன்ஸ் 1.84
இந்தோநேசியா 1.8- (புள்ளி விபரக்குறிப்புக்கு நன்றி:தமிழரங்கம்)"

மேற்காணும் இந்தப்பட்டியல் சொந்த நாடுகளில் அகதிகளானவர்களின் பட்டியலை இணைக்கவில்லை.இன்றைய நிலவரப்படி வெளிநாடுகளிலும்,சொந்த நாடுகளிலுமாக "உலக மக்கள் தொகையில் 50வீதமானவர்கள"; அகதிகளாக வாழ்கிறார்கள்-வதைபடுகிறார்கள்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.08.2006

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...