Saturday, May 16, 2009

பிரபாகரன் இல்லாப் பிரமை.

"பயங்கரவாதத்தைத் தொடக்கி வைத்தவர்கள்,இப்போது அதை
முடித்துவைத்ததாகச் சொல்வதிலும்("with the total commitment of the armed forces",
the Tamil rebels in an unprecedented humanitarian operation finally defeated
militarily ")பயங்கரவாதத்தைக் கைக்கொண்டு, மக்களை அழித்தபடியே இன்னொரு
பயங்கரவாத்தைச் சட்டபூர்வமாக இயக்குகிறார்கள்.அதைப் பெரும்பாலும் பாதுகாப்பு என்ற
போர்வையில் வைத்திருக்கும் ஆளும்வர்க்கம், இன்னொரு இனத்துக்குள் ஆதிக்கஞ் செய்ய
முனைந்த ஆளும்வர்க்கத்தையும் அதன் ஆயுதச் சர்வதிகாரத்தையும் அழித்துவிடப்
பல்லாயிரம் அப்பாவி மக்களை வேட்டையாடுவதை எதன் பெயராலும் நியாயப்படுத்த முடியாது."


இக் கட்டுரையூடாக நான் "புலிகளது இறுதிவரையான போரடிச் சாதல் குறித்தோ அல்லது பிரபாகரன்-புலிகள் இல்லாத இலங்கையில் புரட்சி செய்வது குறித்தோ" பேசமுனையவில்லை.ஆனால், அந்நிய நலன்களுக்கான இலங்கையைத் தகவமைக்கும் மகிந்தாவின் அரசியல் இலக்கை,அவர் அடைந்துவிட்டதில் பணயக் கைதிகளாக்கப்பட்ட இலங்கை மக்கள்தம் அவலத்தைப் பேசுவதில் எனது தன் முனைப்பைக் கச்சைக்குள் திணிக்க முனைகிறேன்.-அவ்வளவுதாம்!மேலே தொடர விரும்புகின்றவர்கள் தொடர்க.



மகிந்தா இராஜபக்ஷ ஜோர்தானிலிருந்து புலிகளது இறுதிமுடிவுகுறித்துக் இங்ஙனம் உரைக்கிறார்:"My return will be back to a country free of terrorism"இந்தப் பார்வையினூடாகத் தமது இராணுவவெற்றியை உலகுக்கு நியாயப்படுத்தும் இலங்கை அதிபர்,இதுவரையான தனது இராணுவவாத அரசியலையும் முற்று முழுதாகத் துறந்துவிடவேண்டிய இன்னொரு வினையையும் இத்துடன் உரைப்பதாகவே உலகங் கருத்தாற் காணவேண்டிய நிலையில்,இதுவரை புலித்தலைவர் பிரபாகரனோடு பயணித்த போராளிகளின் நிலைகளையும்,அவர்களது தலைவரது நிலையையும் குறித்தெதுவும் உரைக்கவில்லை.It is unclear whether the government troops, rebel chief Prabhakaran Velluppilai have arrested or killed. He had, according to the military in the combat zone be halted.இதை,நான் மிகவும் அவதானத்தோடேதாம் கூறுகிறேன்.பிரபாகரனது தலைக்கு இந்தியா விலைகூறிக்கொண்டிருக்கும்போது,அவரது தலைவிதியை அவரே தீர்மானித்தாரா அல்லது அடுத்தவரிடம் கையளித்தாராவென்பது தமிழ்பேசும் மக்களுக்கு இதுவரை தெரியாது.

இவருக்காகப் பல பத்தாhயிரம் இளைஞர்களைப் பலிகொடுத்த தமிழ்பேசும் மக்கள் இறுதியில் பிரபாகரனின் உயிருக்காகச் சில தினங்களுக்குள்ளேயே பல்லாயிரம் தமது உயிர்களைக் கவசமாக்கி அழிந்தார்கள்.இது,தமிழர்களது உரிமையின்வழி நியாயப்படுத்தப்பட்ட கொலைகள்.மக்களது அழிவில் இலங்கை அதிபர் "பயங்கரவாதத்தை வென்றதாகவும்,புலிகள் சரணடையாது போராடித் தியாகிகளாவதும்" இதன் அர்த்தமாக விரிகிறது.

இங்கே,எவரும் வெற்றிகள் குறித்துப் பரப்புரை எழுதும் இந்தத் தருணத்தில் நாம் இலங்கையில் தமிழ்பேசும் மக்களது சமூகசீவியத்தைக் குலைத்த அரசியல்,பொருளாதாரப் போக்கில் புலிகளையும்,இலங்கை அரசையும் குறித்துத் தீர்ப்பெழுதுவதல்ல இன்றைய பணி.எமது மக்களது வாழ்வைத் தமிழீழத்தின் பெயரால் கருவறுக்க உடந்தையாகவிருந்த அனைவரையும் குறித்துக் கேள்வியொன்றை எழுப்புகிறோம்.அதாவது,"இன்றுவரை கொல்லப்பட்ட மக்களுக்கு எந்த அரசியல் பொறுப்பு?"இந்தச் சாமானியக் கேள்வியைமட்டுமே கேட்கின்றோம்.இதுதாம் இன்றைய அடிப்படையான அரசியலைப் புரிவதற்கான மாற்று.இக் கேள்விக்குப் பதிலாக இனவாத அரசியலில் உரைத்துப் பார்க்கும் தமிழ் அரசியல் நடாத்தைகள் மிக விருத்தியாகப் பேசப்பட்டாகவேண்டும்.




"I am happy to observe that the need to combat terrorism comprises an important element of the G11 White Paper. We must work closely with the G8 to have co-ordinated and concerted global action in combating terrorism in all its manifestations. Enactment of appropriate legislation and intelligence sharing must comprise the core of this exercise. "-Mahindha.உலகத்தின் முன் இலங்கை அதிபர் மகிந்தா நடாத்தும் அரசியல் மிகத் தெளிவான பொருளாதாரப் போக்குகளை நமக்கு உரைக்கிறது.இதன் தொடராகத் தான் நடாத்திய போரினது இலக்கைத் தான் அடைந்துவிட்டாதாக ஜோர்தானிலிருந்து அறைகூவிலிட்டுச்சொல்லித் தமது எஜமானர்களைக் குதுகாலத்தில் ஆழ்த்துகிறார்.அவர்,பல்தேசியக் கம்பனிகளின் தேவைக்காக இலங்கையைத் தயார்ப்படுத்திய நிலையில்,தொழில்வள நாடுகளோடு பயங்கரவாதத்துக்குமட்டுமல்ல அவர்களது பொருளாதார இலக்குகளோடும் இணைவதாகவே ஊர்ஜிதப்படுத்திக் குறிப்பெழுதுகிறார்.

வருங்கால இலங்கையில் அந்நிய மூலதனம் தங்குதடையின்றிப் பாய்வதற்காகப் பணயக் கைதிகளாக்கப்பட்ட இலங்கை மக்கள் அனைவரும் மகிந்தாவின் முன் பெருமைகொள்ள எதுவுமில்லை.அவர் புலிகளை வென்றதான இன்றைய அரசியலுக்கு வாரீசுமட்டுமல்ல மாறாக மாறிவரும் இலங்கை அரசியலுக்கும் அவரே வாரீசாகிறார்.இந்த இலங்கை நிச்சியம் அந்நியத் தேசங்களது வேட்டைக்காடவே இருக்கும்.இது,உலக ஏகாதிபத்தியங்களின்வழியில் "இனச் சேர்க்கை-ஒன்றித்தல்"என்றவரையறையுள் இலங்கையிலுள்ள மக்களினங்கள் யாவையும் ஒரு தேசியவினவுருவாக்கத்துள் இட்டு நிரப்பும் காரியத்தை பூகோளமயமாகும் பொருளாதாரப் போக்குள்; அசைவியக்கங்கொள்ளும் இலங்கையை உருவாக்கும்.

மக்களினங்களின் அடையாளங்கள் இலங்கைத் தேசியத்துள் மெல்ல உள்வாங்கப்பட்ட இலங்கையை, அடுத்த நூற்றாண்டு நோக்கி நகர்த்தும் அரசியலைப் புறந்தள்ளமுடியாதபடி இலங்கை ஆளும்வர்க்கம் தமது பொருளாதார இலக்குகளை இலங்கையின் தேசிய எல்லைக்குள் நிறுவமுடியாதிருக்கும் இன்றைய இலங்கைப் பொருளாதாரப் போக்குகள், மிக வன்மையாக இலங்கையினது சுய பொருளாதார இலக்குகளை மட்டுமல்ல அந்தத் தேசத்தினது மக்கனிங்களையே வர்த்தகச் சமுதாயத்துக்கேற்றபடி தகவமைக்கும் நிலைக்குள் உந்தித்தள்ளப்பட்டுள்ளது.இது,இலங்கையில் உருவாக்கி வைத்துள்ள அரசியலில் முதலில் பலியாக்கிய இனம் தமிழினமாகும்.இந்த இனத்தின் அழிவுக்கு வழிவகுத்த அரசியலை முன்னெடுத்தவர்களே தமிழர்கள்தாம்.இந்த இலக்கில் வீழ்த்தப்பட்ட தமிழினம் உலகெங்கும் அகதியாகக் குடியேறித் தனது தலைமுறையையே அந்நியத் தேசத்துக்கு அடிமையாக்கிய நிலையில், இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் மிக யதார்த்தமாகப் பெரும்பான்மை மக்களது உறுப்புச் சமுதாயமாக மாற்றப்பட்டு காலவோட்டத்தில் தனது காலடித் தடத்தை அழியவிடும்.இது,இன்றைய பொருளாதாரப் போக்குகளுக்கிசைவான இலங்கையின் தேவையுள் ஒன்று.


மகிந்தா இதைக் கெட்டித்தனமான மொழியினூடாக உலகத்துக்கு உணர்த்துகிறார்.


அவரது காலத்து அரசியல்-பொருளாதாரப் போக்கில் அவர் செய்யவேண்டிய அரசியலின் இந்த இலக்கு வேறானவொரு தடத்தை இனிமேல் உருவாக்காது.இது,தமிழுக்கு மட்டுமல்ல அனைத்துக்கும் சங்கு ஊதும்.தமிழகத்தை இந்த இலக்கில் பார்ப்பவர்களுக்கு அது உருவாக்கும் இளைய தலைமுறையைத் தமிழாக இனங்காணவா முடியும்?-இலங்கைமட்டும் இதலிருந்து தப்ப முடியுமா?


இந்த நிலையில்,இலங்கை அரச அதிபர்மீது போர்க்குற்றுஞ் சுமத்தும் எந்தத் தார்மீகவுரிமையையும் எவரும் கொள்ளமுடியாதவொரு அரசியலை இலங்கைக்குக் கற்பித்த உலகப்பொருளாதார நிறுவனங்கள், மிகந்தாவினது அரசியல் நடாத்தையை"இலங்கையர்கள்"என்ற பொதுமைக்குள் கட்டிக் காத்துவிட்டது.இது,இலங்கையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான முதல் அரசியல்-இராணுவ முன்னெடுப்பை மக்களது அழிவில் கட்டியமைக்க ஒப்புதல்கொடுத்த ஆசியாவினது வர்த்தக நடாத்தைக்கு உந்துதலாக இருப்பவர்கள் மகிந்தாவை எந்தச் சட்டத்துமுன்னும் கொணரமுடியாத முட்டுக்களை ஐ.நா.சபையிலிருந்து தொடங்கியுள்ளனர்.இதன் விருத்தியான இன்னொரு அரசியல், ஆசியா-ஐரோப்பா எனும் பொருளாதார வியூகங்களுக்கமைய இலங்கைமீது ஆதிக்கஞ் செய்ய முனையுந் தருணங்களில் இருஷ்சியாவும்,சீனாவும் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையைக் காத்து வருவதாகவே இருக்கும்.

பிரபாகரன் இல்லாதவொரு இலங்கையில் பயங்கரவாதம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் பட்டுணியும் பாராமுகமும் அனைத்து மக்களினங்களுக்குள்ளும் நிலவும்.இது,இலங்கையைமட்டுமல்ல அதை வேட்டையாடும் கம்பனிகளையும் நிச்சியம் பதம் பார்க்கும்.பல் தேசிய மக்களினங்களை ஒன்றித்த தேசத்துக்குள் முடக்கிய பொருளாதாரம், அதன் ஒன்றித்த எதிர்ப்புக்கூறுகளையும் மறுமுனையில் வளர்த்தபடிதாம்"புலிப் பயங்கரவாதத்தையும்"அடக்கியுள்ளது.அங்கே, செத்தவர்களது கணக்கு வெறும் எழுபதாயிரம் என்று உலகஞ் சொல்லும்.புலிகளது வால்களுக்கோ அதுள்"துரோகிகள்-தியாகிகள்-மாவீரர்கள்-நாட்டுப்பற்றாளர்கள்"என்று பற்பல பிரிவுகளுடாகச் சாகடிக்கப்பட்டவர்களுக்குக் குறிப்பெழுதுதல் பிரபாகரனோடு முடிந்துவிடாது.


ஆனால்,நாம் இவர்கள் எல்லோரிடமும் இப்போது கேட்கும் கேள்வி இதுதாம்:


"இன்றுவரை இலங்கைத் தேசத்துள்ளும்,வெளியிலும் கொல்லப்பட்ட மக்களுக்கு எந்த அரசியல் பொறுப்பு?"


I will return to a land that, of the barbaric acts of the LTTE is totally free.



ப.வி.ஸ்ரீரங்கன்
16.05.09

2 comments:

Anonymous said...

ஆகா தேசியம்!!!!
வன்னியில் மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்பு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் அரசியல் போக்கினை அறிந்து கொள்ள வேண்டிய நிலை முன்னோக்கியுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசியல் போக்கில் மாற்றம் கொண்டிருப்பதை அவதானிக்க வேண்டும். இறுதி முயற்சி என்றும்> இறுதிக்காலம் என்றும் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. இவ்வேளையில் மக்கள் போராட்டம் நடத்த வில்லை எனக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மக்கள் போராட்டம் என்பதற்கு புதுவிலக்கணம் கொடுக்க உண்ணாவிர தியாகிகள் இப்போ பவனி வந்துள்ளனர். இன்றைக்கு இவர்கள் மக்களை குற்றம்சாட்டுவதற்கு முன்னர் தமிழ் மக்களின் வரலாற்றை நன்கு அறிந்து நாம் எவ்வாறான பாதையைக் கடந்து வந்துள்ளோம் என்று எண்ணிப் பார்த்தே நாம் எதையும் பேசமுடியும். அதேவேளை நாம் மக்களை குற்றம் கூற எவ்வகையிலும் அதிகாரம் அற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆயுதப்போராட்டம் தேவையற்றது அல்லது தம்மால் இயலாமை
மக்களை பலிகொள்வதன் மூலம் அனுதாபத்தைப் பெறல் அல்லது தீர்வைப் பெறல் எவ்விதத்திலும் மேற்கின் தலையீடை ஏற்றுக் கொள்ளல்
புலம்பெயர் தேசங்கள் போராட்டக் களமாக உருவாக்கல்
தேசியம் என்ற பழைய பஞ்சாங்கத்தை மறுபடியும் உயிர்ப்பித்தல்

இவற்றில் ஏதாவது ஒரு நிலைக்குக் கூட மக்களையும் போராளிகளையும் பலியிட வேண்டிய நிலை என்பது விடுதலைப்புலிகளுக்கு உண்டு. எதிர்காலத்தில் காட்டிக்கொடுப்பிற்கு நியாயம் கற்பித்தலும்> தம்மை துரோகி என்று சுட்டுவிரலைக் காட்டும் மக்கள் போராளிகளை இல்லாது ஆக்குவதும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அவசியமாகின்றது.
மறுபுறத்தில் ஏகாதிபத்தியங்கள் தமது சுரண்டலுக்கு சுதந்திரமான உழைப்பாளிகள் இருக்க வேண்டும் என்பதற்கான ஜனநாயக வடிவம் கொண்டு செயற்படுகின்றன. தமது பொருளாதார நலனைப் பேணிக் கொள்வதற்கு வசதியாக தனது ஜனநாயக் குரலை வெளிப்படுத்திக் கொள்ளும். அதனை நாம் எல்லோரும் நமக்கான குரல் என்று பூரிப்போம். இவைகள் எல்லாம் பலதேசிய கொம்பனிகளின் நலன் என்பதை நாம் அறியப் போவதில்லை. ஆனால் நான் வலிமை அற்றவர்கள் எமக்கு இவ்வாறு ஒபாமா குரல் கொடுக்கின்றார் தமிழ்நாட்டு பாசிச ஜெயா குரல் கொடுக்கின்றார் நாம் அதனை ஏற்றுக் கொள்வோம் என்பதே பாமர தேசபக்தர்களின் நிலை.

மீளவும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல தற்பொழுது தமிழ் தேசியம் தொடங்கிய இடத்தில் வந்து நிற்கின்றது. தமிழீழம்> சுயநிர்ணய உரிமை என்று ஜெயா கூட பேசும் நிலைக்கு இன்று வந்துள்ளது. தமிழ் மக்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறை நாட்டில் இருக்கின்ற போதும்> இன்று வன்னியின் சிறுபரப்பின் மீது குண்டு போட்டு இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறிலங்கா பாசீச அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட வேண்டும். பாசீச ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் இன்னும் பல பத்து வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் அபாயமும் இருக்கின்றது. பாசீசக் குடும்பத்தின் ஆதிக்கத்தை வீழ்த்தும் அரசியல் நகர்வுகளும் முக்கிய அம்சமாகும். இவற்றை எதிர்கொள்வதற்கு இனத்துவ அடையாளத்தை முதன்மைப்படுத்திய அரசியல் போராட்டத்துடன் சுருக்கிக் கொள்ள முடியாது.
உடனடி யுத்த நிறுத்தம்> நிவாரணம்> பேச்சுவார்த்தை
பாசீச எதிர்ப்பு
ஏகாதிபத்திய எதிர்ப்பு
தேச இனங்களுக்கிடையோன ஜனநாயக உரிமை
புதிய சமூகத்தைப் படைப்பது.
இந்த இலக்கில் இருந்துதான் எமது போராட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும். ஆனால் இன்று புலம் தான் புதிய போராட்டக் களமாக கற்பிக்கப்படுகின்றது. புலத்தில் உள்ளவர்களின் போராட்ட வலுவை தலைவர் நம்புவதாக மறைமுகமாக கற்பிக்கப்படுகின்றது. இறுதிக் காலகட்டத்தில் பேதம் மறந்து எல்லோரும் இக்கட்டான காலத்தில் போராட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகின்றது. போராட்ட களத்தின் நிலைகூட மாறியிருக்கின்றது என்பதை நாம் கவனிக்க வேண்டும்-
ஆனால் மக்களின் அவல நிலையைப் போக்கின்ற வகையில் தான் போராட்டப்பாதையை நாம் முன்வைக்க வேண்டும். நாம் கடந்து வந்த பாதையில் எவ்வகையான தவறு என்பதை அறிந்து கொள்ள வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது எவ்வகை மக்கள் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பதை மீளாய்வு செய்ய வேண்டும். நாம் அந்தப்பாதையில் இருந்துதான் கடந்து வந்துள்ளோம். இதன்மீது கட்டமைக்கப்பட்ட போராட்ட பாதைதான் இன்று இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது.
"இலங்கைத் தீவின் வடக்குஇ கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய தமிழர் தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும்; ஒரு தேசிய இனமாக எமது அரசியல் இலக்கை நாமே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை ஈழத் தமிழர்களுக்கு உண்டு என்பதையும்இ அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என்பதையும் 33 வருடங்களுக்கு முன்னரே தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்தனர்.
இந்தப் பிரகடனம் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈழத்தமிழர்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று மக்கள் ஆணையாக நிறுவப்பட்டது."
தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை என்பது அவர்களின் ஜனநாயக உரிமையே. இந்த ஜனநாயக உரிமையை பெற்றுக் கொள்வற்காக புறப்பட்ட தேசியப் போராட்டமானது சீரழிந்து இன்று மேற்கு தேசங்களின் லொபி நடவடிக்கை மூலம் உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அவல நிலைக்கு வந்து விட்டது. விடுதலைக்காகப் புறப்பட்ட இயக்கத்தை உருவாக்கி சீரழித்து> கைக்கூலியாக்கிய பின்னர் கொண்றெழிக்கும் நிதிமூலதனத்தின் நலன் பின்னால் இயங்கும் அரசுகள். இன்று புலியின் பெயரால் மக்களை கொல்கின்றது. இன்று கொல்லப்படும் மக்களை பாதுகாக்க சர்வதேச சதிகளை அம்பலப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
போராடும் போராளிகளும்> போராடும் மக்களுக்கும் எதிரியை தெளிவாக வரையறைசெய்யாது தமது இயக்கத்தை நடத்தியவர்கள். இன்று சர்வதேச சதியினால் கொல்லப்படுகின்ற வேளையில் எதிரிகளை அம்பலப்படுத்தாது. யார் காலில் விழுந்தாவது தமது சந்தையைப் பெறமுடியும் என்ற கபடஅரசியல் வேலைகளை புலம்பெயர் அதிகாரவர்க்கம் செய்து கொண்டிருக்கின்து.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்துபவர்கள் மலையக> தமிழ்பேசும் முஸ்லீம்களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி ஏன் பேசத் தயங்குகின்றனர். அது சரி சிறிலங்கா பாசீச அரசால் ஒடுக்கப்படும் சிங்கள மக்களைப் பற்றிய கருத்துக்களும் இவர்களிடம் இல்லை (முதன்மைப் பிரச்சனை இது இல்லாவிடினும்)

சாதியப் பிரச்சனை> தேசிய இனப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு பகுதியினருக்கும் ஜனநாயக உரிமையை வழங்க வேண்டும். இவர்களுக்கான முதலாளித்துவ ஜனநாயக உரிமையை வழங்காது விடின் பிரச்சனைக்கான தீர்வினை பெறமுடியாது. இவர்களுக்கான ஜனநாயகத்தை வழங்குவதும்> அவற்றில் அமைந்து சமூக உறவுகளை வளர்த்தெடுப்பதன் மூலம் பழைய உற்பத்தி சமூக உறவுகள் சிதைவடைவதும் அவசியமாகின்றது. இதன் அடிப்படையிலான திட்டங்கள்> செயற்பாடுகள் தேவையானதாகும்.
இதன் மூலமே இனங்களுக்கிடையிலான> சமூக உறுப்புக்களுக்கிடையாலான கசப்புணர்வை தீர்த்துக் கொள்வதன் மூலம் பொருளாதார சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இன்று மக்களுக்காக போராடப்புறப்பட்ட போராளிகளை அழித்தொழிப்பதன் மூலம் அடிமை கொள்பவர்கள் நம்பும்படியாக தனது வீரமிக்க போராளிகளை பலிகொடுத்து தமது விசுவாசத்தைக் காட்டுவதன் மூலம் கிடைப்பதே லாபம் என்ற நோக்கில் அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இதில் தேசியத்தலைவர் பாதுகாப்பாக இருப்பார் மற்றுவர்கள் இல்லாது ஒழிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கின்றது.

“நாற்காலி ஆசைக்காக வெளிநாட்டவரின் தயவை எதிர்நோக்கிய காலம் முடிந்து விட்டது. தேசத்தின் கவுரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராகுமாறு நாட்டுப் பற்று கொண்டவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தங்கள் உயிரை அர்ப்பணித்திருக்கும் பத்தாயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தின் மீது நின்று கொண்டுஇ “அந்நியக் கடவுளர்களின்” முன் நாம் தலைவணங்க மாட்டோம்.” தோழர் பிரசாண்டா
"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் யோசனைகளுக்கு அமைவாக செயற்பட விடுதலைப் புலிகள் இணக்கம்: செ.பத்மநாதன்"
இவற்றில் எது தேசியவாதக் கருத்து இருக்கின்றது?
NATHAN

Anonymous said...

புலிகளின் அரசியல் தோற்கப்பட்டுள்ளது!

இன்று விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதாகவும்> தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் பிரச்சாரப்படுத்தும் இனவாதிகளும்> அவர்களின் எடுபிடிகளும் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைத்து விட்டதாக மகிழ்கின்றனர்.
இன்று விடுதலைப்புலிகள் தமது பிழையான அரசியல் பாதை மூலம் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை தோற்கடித்தார்கள். இதற்கு சிங்கள அரச அந்தச் சவப்பெட்டிக்கு ஆணியடித்துள்ளது.

புலிகள் தன்னை வளர்த்த வர்க்கத்திற்கு விசுவாசமாக இருந்து போராடிச் செத்திருக்கின்றார்கள். இவர்களின் இழப்பிற்கு தலைவணங்கும் வேளையில் தமிழ் மக்களிடையே இருக்கின்ற பிரதான எதிர்ப்புரட்சிகர சக்திகளை இனம் காணவேண்டிய தேவை மிக அவசியமாகின்றது.

புலி எதிர்ப்பாளர்கள்
புலிகளிடையே இருந்து தோன்றியுள்ள புதிய ஆதிக்க வர்க்கம்

இந்தப் பகுதியினரை எதிர்க்கொள்ள வேண்டிய தேவை மிக அவசியமாகின்றது. இத்துடன் இளம் புலிப்போராளிகளை நாம் உண்மை வர்க்க எதிரிகளை இனம் காண உதவவேண்டிய வரலாற்றுக் கடமையும் இருக்கின்றது.

ஆதிக்க வர்க்கத்தின் பாவையாக செயற்பட்டு சிதைத்த புலிகளைப் போல புலி எதிர்ப்பாளர்கள்>
புலிகளிடையே இருந்து தோன்றியுள்ள புதிய ஆதிக்க வர்க்கம் இவர்களை ஆழ வேர் ஊன்ற விட்டபின்னர்தான் மக்கள் மத்தியில் இருந்து அம்பலப்படுத்துவோமானால் இன்றும் ஒரு 30 ஆண்டுகள் மறுபடியும் பின்னோக்கித் தான் செல்லோம்.

"நேசத்திற்குரிய இளம்புலியேஇ
தேசபக்ததேஇ
மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.


உன்னை காவு கொள்ளும் உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.


உன்னை காவுகொள்பவர்கள் வேறுயாரும் அல்ல.



உன்அப்பன் பாட்டனை விட வசதிபடைத்தவர்கள் வளர்ந்து வந்த சமூதாயத்தில் தமக்கென சரியான இடம் கிடைக்கவில்லை என தம் நலன் கருதி இனஒற்றுமை பேசிய கயவர்கள் தான் உனது உள்ளுர் எதிரிகள்-
வெளியில் இருந்து வரவில்லை.


இவர்கள் எம்மில் இருந்து உருவாகியவர்கள். தமக்கான சந்தைப் போட்டியில் இருந்து உருவாகியவர்கள். இவர்களில் ஒடுக்குபவன் ஆரிய பெருமை பேசஇ எம்மவர்கள் ஆண்ட பரம்பரை பற்றிக் பேசினார்கள்.


நேசத்திற்குரிய இளம்புலியேஇ தேசபக்ததேஇ மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.


சிறிலங்கா அரசு இன்று கொல்கின்றது.


அவர்களுக்கு இந்திய பிராந்திய வல்லரசுஇ மேற்கு ஏகாதிபத்தியங்களும் அனுசரனை வழங்குகின்றது.


இதனை உன்தலைமை உன்னை உணரவிடவில்லை.


உன்தலைமை தனது குழுங்குழுவாத அரசியலின் மூலம் உனது எண்ணத்தைஇ சிந்தனை மழுங்கடித்தனர்.


தமக்கு கிடைத்து பணத்தின் மூலம் ஒரு பொருளாதார வளம் பொருந்திய அமைப்பாக உருவாகியிருக்கின்றார்கள்.


நீங்கள் சில பத்து பேர் கொண்ட ஒரு தலைமைக்கு நீங்கள் விசுவாசமாக இருக்கின்றீர்கள்.


நேசத்திற்குரிய இளம்புலியேஇ தேசபக்ததேஇ மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.


உனது உண்மை எதிரியை இனம்கண்டு கொள் இன்று உன்னைக் கொல்லும் உனது தலைமைஇ

சிறிலங்கா அரசுஇ பிராந்திய வல்லரசுஇ மேற்கு ஏகாதிபத்தியங்களே.


உன்னை காப்பாற்ற புலம்பெயர் மக்கள் எவ்வாறுதான் போராடினாலும் எவ்வித மனவுறுத்தலின்றி பத்திரிகை அறிக்கை விடும் ஒடுக்குபவன்.


உன்னிடம் எண்ணை இல்லைஇ
பெரும் வளம் இல்லைஇ
பெரும் சந்தை இல்லை.

இவைகள் இருந்திருந்தால் மேற்கு ஜனநாயகம் உன்னை காப்பாற்றியிருக்கும்.


நேசத்திற்குரிய இளம்புலியேஇ தேசபக்ததேஇ மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.


உழைக்கும் மக்களை நம்புஇ அவர்களின் உதவியுடன் உன் போராட்டத்தை தொடரு.



மக்களை விடுதலை செய்யப் போராடுஇ நீ புதிய தளத்தை உருவாக்கு
நேசத்திற்குரிய இளம்புலியேஇ தேசபக்ததேஇ மாவீரனே உனது உண்மை எதிரியை இனம் கண்டு கொள்.

இதுதான் நாம் புலிப்போராளிகளுக்கு கொடுக்கும் செய்தியாகும்.

இந்தியவல்லாதிக்கம் உட்பட அனைத்து ஆதிக்க சக்திகளும் உனது அழிவிற்கு துணை நின்றிருக்கின்றனர். உனக்கு ஆதரவாக நீ எதிர்பார்த்திருந்த ஜ.நா மன்றம்> ஐரோப்பிய ஒன்றியம்> அமெரிக்க தேசம் கைகொடுக்க வில்லை. கைகொடுக்கும் எண்ணியது அரசியல் அறிவீனமே.
இன்று மக்களின் பிணங்களின் மேல் வெற்றிக் கொடி ஏற்றும் புலியெதிர்ப்பாளர்கள்> இனவெறி அரசும் மக்களின் உரிமைகளை வழங்கப்போவதில்லை. உன்னிடம் இருக்கம் சக்தியை ஒன்றிணைப்பதும் தொடர்ந்தும் எமது மக்களின் விடிவிற்காக போராடுவதற்கு கடந்த வந்த பாதையை சுயவிமர்சனம் செய்வதும்> நேசசக்திகளை இணைத்துக் கொள்வதிலுமே தமிழ் மக்களின் வெற்றி தங்கியுள்ளது.
Nathan

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...