Sunday, July 31, 2011

நாம் மார்க்சியத்துள் கலந்து போகின்றோம்

முன் _சிறு குறிப்பு:

ன்றைய சூழலில் தமிழ்பேசும் மக்களாகிய நாம்,நமது அரசியற் தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.நமது ஓட்டுக்கட்சி அரசியலை நாம் அடியோடு விட்டுத்தொலைத்தலும் முடியாதுபோன அவலச் சூழலில்,புரட்சிகரமான கட்சியின் அவசியம் இன்னும் வலிமையான வெற்றிடமாகவே இருக்கிறது.

எங்களுக்குள் நீடிக்கும் வெளிப்படையற்ற அரசியல்-தோழமையற்ற போட்டி வெற்றுக் கூச்சலும்,வேடிக்கை மார்க்சியச்சவடால்களும் தோழமைகளை நொருக்கி வர்க்க உணர்வற்ற ஜடங்களாக நம்மை மாற்றியுள்ளது.இந்த நாமே இன்றைய இலங்கைப் பாசிச அரசுக்கும்,அந்நியச் சக்திகளுக்கும் ஏதோவொரு வகையில் கூஜாத் தூக்குவதில் போட்டியிடுகிறோம்.

எங்கள் தலைமையில் மக்களைக் குறித்தும் கனவுகாணும் நாம்,முதலில் புரிந்துகொள்ளவும் பாடங்கற்கவும் வரலாற்றுப் புரிதல்களும்,மக்களுமே மிச்சமாக இருக்கிறது-இருக்கிறார்கள்.இதுள் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு தளமும் நமது தலைவிதியை நாமே திறம்பட நிர்ணயிக்க முடியுமாயின் இந்த மொழிபெயர்ப்பில் எனது உழைப்பும் ஏதோவொரு அர்த்தங்குறித்து...
கீழ்வரும் பேட்டியின் டொச்சு மூலத்தை வாசிக்கத் தெரிந்தவர்கள் இங்கே சென்று வாசிக்கலாம்: http://www.jungewelt.de/2011/07-16/001.php

தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்.
01.08.2011


வார விவாதம்

16.07.2011 Junge Welt -வார மஞ்சரி.

"நாம் மார்க்சியத்துள் கலந்து போகின்றோம்."

Li Junru வோடான பேட்டி இஃது.


சீனக் கம்யூனிசக் கட்சினது செயலூக்கம் மற்றும் ஆளுங்கட்சியாக இருக்கும் தறுவாயில் எழுங் கஷ்டங்கள் குறித்தும்.இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இப்போது 90வது அகவையில்காலடி எடுத்து வைக்கும் தறுவாயில் இது உலகிலேயே அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியுமாகும்.மார்க்சியத் தத்துவார்த்தக் கோட்பாட்டு நூலிற்கு முன் மார்சியர்களது செய்வினைப் பயன்.

பேட்டி காண்பவர்: செபஸ்டியன் கார்ல்லென்ஸ்[Sebastian Carlens]

தமிழில்:ப.வி.ஸ்ரீரங்கன்.

[இலீ யூன்று (Li Junru பி. 1947) சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (PKKCV) என்ற நிலை குழு நீண்டகால உறுப்பினராக உள்ளார். அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி,கட்சி வரலாற்றியல் ஆராய்ச்சி மையத் துணை இயக்குனராகவும்,சீனக் கட்யூனிசக் கட்சியின் உயர் நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் அவர் இருக்கிறார். ]


[Li Junru]

90 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 1921 ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி அரசாங்கத்தைக் கொண்டியக்குகிறது.அனைத்து ஆட்சி அதிகாரத்துக்கும் அதுவே பொறுப்பானது.ஒரு விவசாய நாடாகவிருந்த சீனத் தேசம்,தொழிற்றுறை வளர்ச்சியூடாக இன்று உலகின் மிக பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக, அடிப்படையில் மாறிவிட்டது. இந்த வளர்ச்சிக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்களிப்பு என்ன?

சீன கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு மூன்று குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளது.

1: சீனாவின் ஒரு பகுதி காலனித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக இருந்தது.கூடவே,சீனத் தேசமானது ஏகாதிபத்திய வாதிகளது அடக்குமுறைக்கும்,அவமானப்படுத்துலுக்கும் உட்பட்டு நலிந்தது.சீனக் கம்யூனிசக்கட்சியானது சீனத்தை விடுவித்து அதை விடுதலையுடைய நாட்டாக்கி மக்கள் சீனத்தை உருவாகியது அல்லது நிறுவியதென்று சொல்ல முடியும்.

2: சீனக் கம்யூனிசக் கட்சியின் வாயிலாகச் சீன மக்கள் தாமும் உலகத்து மக்கள்கூட்டத்துக்கு நிகரானவர்களென நிரூபித்து உயர்ந்துள்ளனர்.மேலும், சீனா ஒரு வகையில் ஒரு பொருளாதார மற்றும் கலாச்சாரத்துள் பின்தங்கிய நாடக இருந்தது. ஒரு அமைதியான சோசலிச மறுசீரமைப்பு மூலம், சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் ஒரு சோசலிச அமைப்பு நிறுவப்பட்டது.

3: கம்யூனிஸ்ட் கட்சி அதன் சீர்திருத்தம் மற்றும் திறந்த அரசியல் செய்ல்பாட்டை- கொள்கையூடாக ஒரு வலிமையான, ஜனநாயக, நாகரீக மற்றும் இசைவிணக்கமான சோசலிச நாட்டை அமைப்பதற்கு முனைகிறது,சீனாவென்பது ஒரு ஏழை நாடாகவும்,பலவீனமான தேசியவினத்தையும் கொண்டிருக்கும் சூழலில் இதை நோக்கிக் கொம்யூனிசக் கட்சி அதற்கு மாற்றானவொரு வலிமையானதும்,ஜனநாயக பூர்வமானதுமான குடிசார் சமுதாயத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறதென்பதை உலகம் புரிந்தாகவேண்டும்.இந்தச் செயற்பாடானது முழுச் சீன மக்களுக்குமானதும் கூடவே ஒவ்வொரு சீனனுக்குமானதும் என்பதை விளங்கியாகட்டும்.சீனக்கொம்யூனிசக்கட்சியானது ஆளுங் கட்சியாக இருந்தபடி தனது நீண்ட வரலாற்றில் மேம்பட்ட பண்பாடு, மேம்பட்ட உற்பத்தி சக்திகள் மற்றும் பெரும்பான்மையான மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரே ஒரு கட்சி, இந்த நோக்கையெல்லாம் நாம் நீண்ட காலத்தில் நிறுவ முடியுமென நம்புகிறோம்-உறுதியாக இருக்கிறோம். சீனக் கொம்யூனிசக் காட்சியாகிய அது "பிரதிநிதிகள்" என்ற உண்மையில் சரியாக மூன்று முறை கோட்பாடு உள்ளது. இந்த கட்சி எப்போதும் முற்போக்கானதாக இருக்கவேண்டும். இருக்கவேண்டுமென்பது கட்சியை பலமடங்கு வேகத்தோடு முற்போக்கான சிந்தனையோடு வைத்திருக்க வேண்டும். மற்றும் கட்சி எப்போதும் மக்களின் வளர்ந்து வரும் தேவைகளை சந்திக்க வேண்டும்.அதை நிவர்த்தி செய்தாவேண்டும்.



சீன மக்கள் குடியரசானது, 1989 இல் சரிந்து விழுந்த சோவியவிற் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய வீழ்ச்சி குறித்து விவாதிக்கும்போது,இது வரையான ஸ்த்திரமான அரசியல் கட்டமைப்பைக் எங்கிருந்து மக்கள் சீனம் பெற்றது?

ஐரோப்பியச் சோசலிச முகாங்களது வீழ்ச்சியின் பின்னணிக்கு முன்பே சீனக் கொழ்யூனிசக் கட்சியானது மிகச் சரியான சோசலிச வளர்ச்சிக் கட்டுத்துடன் சீனாவில்உயர்ந்து உருப்பெற்றிருந்தது.ஏனெனில்,நாம் மட்டுமேதாம் ஒரு சரியான பாதையைக் கொண்டிருந்தோம்:சோசலிசமானது சீனாவினது சிறப்புக் கூறுகளையும் அதன் வலயத்துக்கேற்ற தேவைகளையும் கவனித்துக் கருத்திற்கொண்டிருக்காது செயற்பாட்டில் சாத்தியமாக்கிப் பயணித்தது.

1989 இல் ஐரோப்பிய முகாங்களது வீழ்ச்சியின் பலாபலன்களிலிருந்து எமக்குமுன் இரண்டு தெரிவுகள் மேலெழுந்தது:

ஒன்று:எமது மறுசீரமைப்புத் திட்டங்களும் சோவியற் வீழ்ச்சியைப் போலவே வீழ்ந்து நொருங்கிவிடப்போகிறதென்று பலர் அச்சப்படுத்தினார்கள்-எச்சரித்தார்கள்.அந்தோ அஃது பூர்ச்சுவா நிலையைக் குறித்துரைத்தது.எனவே,சீனாவானது மரபுசார்ந்த சீனவினது சோசலிசப் பாதைக்கு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.இந்த இரண்டாவது தெரிவினூடாக-யோசனையூடாக கிழக்கு ஐரோப்பிய-சோவியற் சோசலிச முகாங்களது உடைவை வரலாற்றுத் திருப்பு முனைவழியாக ஆழ்ந்து ஆய்வு செய்வதாக இருக்க வேண்டுமென்பது காலக் கட்டளை.அதன்வழி சீனாவானது முதலாளித்துவ லிபரல் முறையை உட்புகுத்த வேண்டிய தேவை உணரப்பட்டது.சீனக் கொம்யூனிசக் கட்சியானது இந்தத் கேள்விகளை மிகத் தீவராமாக ஆய்வுக்குட்படுத்தியது.அதன் வழி இத்தகைய இறுதி முடிவு எட்டப்பட்டது:

மீளப் பழைய பாதைக்குத் திரும்புவது முட்டுச்சந்தி.

முதலாளித்தவத் தாரளவாதம்-லிபரல்,மற்றும் முதலாளித்துவம்கூடவொரு முட்டுச் சந்தியே.எனவே,சீனாவானது கண்டிப்பாகத் தனக்கானவொரு சொந்தப் பாதையை வகுத்தாகவேண்டும்.இந்த வகைச் சோசலிசப் பாதையானது சீனாவினது சிறப்பியல்வுகளை மூன்று முக்கிய வகைகளில் கண்டடைந்து:

1)முக்கியமான மத்திய வேலைத் திட்டமானது பொருளாதார வளர்ச்சியை-அபிவிருத்தியை ஊக்குவித்தல்.

2)சீனாவானது சோசலிச வளர்சிப்படிகளை சீனக் கொம்யூனிசக்கட்சியின்கீழ் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.

3)மறுசீரப்மைப்புப் பொருளாதாரத்தைக்கொண்டு சீனாவைத் திறந்த தேசமாக்குவது.இந்தப் பரிசோதனை-செயற்றிறன் இன்றெமக்கு ஊட்டும் பாடாமானது: இந்தப்பாதையே சரியானதென்பதையும்,இதனூடாக மீளச் சீனமக்கள் எழுந்து பயணிப்பதையும் சாத்தியாமாக்கியுள்ளதென்பதையும் பாடமாகச் சொல்கிறது.

XVIII. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம்( காங்கிரஸ் )2012 இல்திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு ,ஒரு புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. கட்சியின் பொது செயலாளர், ஜனாதிபதி ஹு ஜின்டாவோ மற்றும் பிரதமர் வென் ஜியாபாவோ, பிரதம மந்திரி மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர், வேட்பாளர்களாகப் போட்டியிட முடியாது. ஒரு புதிய தலைமுறை மக்கள் சீனத்தைப் பொறுபேற்க இருக்கிறது.இந்தத் தலைமுறை மாற்றம் சீனாவில் அரசியல்-பொருளாதார கொள்கை மாற்றத்தைச் சாத்தியமாக்கிவிடுவதில் போய்முடியுமா?

பதினெட்டாவது கட்சிக் காங்கிரஸ் மகாநாடானது சீனக் கொம்யுனிசக் கட்சியின் வழி புதிய தலைமுறையை சீன அரசியல் மேடைக்கு அரங்கேற்றப்போகிறது.திறந்த சீனாவைச் சிருஸ்டித்தவர்களது என்ணங்களுக்கேற்றவொரு புதிய தலைமுறையினர் அவர்களர் வார்ப்பிலேயே கட்சியின்வழி தலைமையைத் தோந்தெடுப்பார்கள் என நினைக்கிறேன்.இவர்கள் தடால்புடாலாகவொரு கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்களென நான் சிந்தகவில்லை.இவர்கள் தத்துவார்த்த அடிப்படைகளையும்,கட்சியின் சட்டவொழுங்குகளையும் கடைப்பிடிக் வேண்டும்.இதன்னூடாகவேதாம் இன்றைக்கு, எதிர்காலத்துக்கான நடைமுறைகளும்,யதார்த்த பூர்வமான வேலைத்திட்டப் பொருத்தங்களும்கூடிய சோசலிசத்துக்கான பாதையைத் சீனவுக்கான சிறப்பியல்வுகளுடன் எடுத்தாள முடியும்.சீனக் கொம்யூனிசக் கட்சியானது பொருளாதாரச் சீரமைப்பையும் திறந்த சீனக் கொள்கையையும் கடைப்பிடித்து வைத்திருக்க வேண்டும்.அதன்வழியின் முலமே கட்சியினது உறுப்பினர்களதும்,சீன மக்களதும் பங்களிப்பு-ஒத்துழைப்புக் கிடைக்கும்.எவரொருவர் இதைக் கடைப்பிடிக்கத் தவறுகிறாரோ அவருக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைப்பதிற்கில்லை!இத்தகையவர்களைக் கட்சியின் தலைமையாகவும் தேர்ந்தெடுப்பதில்லை.

21 வது நூற்றாண்டின் இரண்டாவது தசாப்பத்துள் எந்தப் பணிகளைப் புதிதாகத் தேர்வு செய்து, தலைமை முன்னெடுக்க வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?

அவர்களது பணியுங்கூடக் கட்சியினது முழுமொத்த முக்கிய பணிகளே.நாங்கள் 2020 க்குள்ளான சில நோக்கு நிலைகளை சம்பிரதாய முறையிற்றெரிருந்து முன்கணித்துள்ளோம்: இந்தக் காலத்துக்குள்சீன மக்கள் சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களது நல்வாழ்வைச் சிறப்புற வைக்கும் ஆயத்தத்தைத் தொடக்குவது.இதுவே,புதிய தலைமைக்கான மிகப்பாரிய கடமை.இந்த வேலைத் திட்டத்தை முன்னகர்த்தி முடிக்கும்போது நமது நீண்ட தூர இலக்கை 2050 க்குள் அடைந்துவிடுவதுதென்பது சீனாவினது நவீனப்படுத்தல்கள் முற்றுப் பெறுவதென்பது அர்த்தமாகும்(2050 க்குள்).இத்தோடு,புதிய தலைமையானது நமது கட்சிகள் இருக்கும் முரண்பாடுகளை-பிரிதிவாதங்களைத் தீர்ப்பதும் இன்றைய காலத்தின்...

சீனக் கம்யூனீசக் கட்சிக்குக்முன் என்ன முரண்பாடுகள் அண்மித்து நிலவுகறது?

உதாரணமாக, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி இடையேயுள்ள ஏற்றதாழ்வுகள், பல்வேறு பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் , நகரம் ஆகியவற்றுக்குள் நிலவும் சமச் சீரற்ற பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மற்றும் நாட்டில் உள்ள வேறுபாடுகள், நாம் சமூக அமைதியை உருவாக்க வேண்டும்.



சீன அரசாங்கம் 62 ஆண்டுகளில், சீன கம்யூனிஸ்ட் கட்சி வழியாக பஞ்சத்தை மக்களிடமிருந்து கூடியளவு அகற்றியிருக்கிறது.அனைத்துச் சீனமக்களுக்குமான சுபிட்சம் அதிகரித்தது. அதே நேரத்தில் ஒரு இடைவெளி, நகரம் மற்றும் நாட்டின் கிழக்கு கடற்கரை ,மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்குள் நிலவுகிறது.மக்களது வாழ்க்கை தரம் இடையே, ஏழை மற்றும் பணக்காரர் இடையே நீறுபூர்த்த நெருப்பாக முரண்பாடுகளை உருவாக்கி சமூகப்பதட்டத்துள் சீனம்நிலவுகறிது.சீனக் கொம்யூனிசக் கட்சி இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளும்-என்ன நடவடிக்கைகள் அவற்றை போக்கிக்கொள்ள எடுக்கப்படும்?

முதலாவதாகப் புரிந்துகொள்ள வேண்டும்:இந்தப் பாரிய முரண்பாடுகளைச் சீனக் கொம்யூனிசக்கட்சி ஏற்பதியதோ-கொணர்ந்ததோ இல்லை என்பதே.அத்தோடு இவைகளெல்லாம் சீனாவினது வரலாற்றோடு இணைந்தே வந்தவை.கிழக்குக்கும்,மேற்குக்குமான பாரிய இடைவெளி,மற்றும்செல்வந்தர்களுக்கும்,ஏழைகளுக்குமான வித்தியாசங்கள்,நகரத்துக்கும் கிராமத்துக்குமான வித்தியாசங்கள் அனைத்தும் சீன வரலாற்றின் விளைவே.இரண்டாவதாக: சீனக் கொம்யூனிசக் கட்சியினது கடந்த 30 ஆண்டுகால மறுசீரமைப்பு மற்றும் திறந்த அரசியல் வேலைத் திட்டமானது இந்த முரண்பாட்டை ஓரளவு தீர்ப்பதில்ஒரு திட அடிப்படைய உருவாக்கி வெற்றியடைந்துள்ளது.மூன்றாவதாக: கட்சியானது இந்த முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வகைகளில் அனைத்து அளவு முறைகளையும் பிரயோகிக்கிறது.கூடியவரை இம்முரண்பாடுகளை ஓரங்கட்டிவிடவேண்டும்.நாங்கள் யதார்த்தவாதிகள்.இந்த முரண்பாடுகளை.ஏற்றத் தாழ்வுகளைக் குறுகிய காலத்துள் அகற்றிவிடமுடியாது,இஃது,நீண்டகாலப் பொறிமுறையைக்கொண்டது.இதை நாமும் அறிந்தே உள்ளோம்.இப்போது நாம் சாதகமான காலக் கட்டத்துள் இருக்கிறோம்.இதைச் சீனமக்களும் பார்த்தே வருகிறார்கள்,அதாவது, சீனக் கொம்யூனிசக் கட்சியானது இந்த ஏற்ற தாழ்வுகளை-வித்தியாசங்களைக் குறைத்து,நிவர்த்தி செய்வதில் முனைப்புடன் இருப்பதாக.அத்தோடு மக்கள் நம்புகிறார்கள் சீனக்கொம்யூனிசக் கட்சியால் இதைச் சாதிக்க முடியுமென.

பல மேற்கத்திய ஊடகங்களில் பல ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி இறுதியில் "வெடிக்கும்" என்று ஊகிக்கப்பட்டு எழுதப்படுகிறது.குறிப்பாகக் கட்டுமானத்துறையில் இந்த வகை வளர்ச்சியானது ஒரு அபரிதமான "சவுக்கார நுரைக் குமிழி" உற்பத்தையைப் போன்றதே என்பது அவர்களது கணிப்பு.இஃது,எப்போதாவது வெடித்தே தீருமென்று கூறுகிறார்களே. குறிப்பாக சொத்து துறையில் "குமிழி" உற்பத்தி, என சந்தேகிக்கப்படுகிறது ...

சீனாவினது பொருளாதாரம் குறித்து மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து பல கெட்ட கனவுகளைக் காணுகிறார்கள். அத்தகையவொரு வீழ்ச்சியைச் சிதைவை எண்ணி எழுதுகிறார்கள்.சீனப் பொருளாதாரம் பொறிந்து சிதைவதில் அவர்கள் விருப்பங்கள் எழுத்துகளாக மாறுகிறது.ஆனால்,அவர்களது இதுநாள் வரையான கணிப்புகள்-திட்ட முலாங்கள் யாவும் தோல்வி கண்டுவருகிறது.காரணம்,சீனப் பொருதார வடிவங்குறித்த அவர்களது ஆய்வுகள் யாவும் சரியான முறையில் ஆய்வைச் செய்யவில்லை.அத்தோடு சீனக் கொம்யூனிசக் கட்சிக்கு ஒரு பலமான காரணி உண்டு:அதாவது கட்சியானது மனிதவரலாற்றிலிருந்து அனைத்து நன்மையான அநுபவங்களை தனக்குள் செரிக்கிறது.அத்துடன்,உலக நிலவரங்களையும் உள்வாங்கி ஆராய்கிறது.இன்னொரு பக்கம் எந்தப் பிரச்சனையையும் மிகத் தீவிரமான வெறியோடு சவாலாக ஏற்று ஆய்ந்து அறிவதில் விழிப்பாகச் செயற்படுகிறது.இவைகளே எங்களது அரசாங்கத்தின் இலாயக்கு.இவைகளை மேற்குலக ஊடகங்கள் புரிந்துகொள்ளவேயில்லை.உலகப் பொருளாதார நெருக்கடியை ஓரங்கட்ட நம்மிடம் பாரிய பொருளாதாரப் ஊக்கப் பொதி உண்டு.

... மொத்தவிட்டமாக இருக்கும் € 1.2 டிரில்லியன் யூரோக்கள் தானே? .

ஏற்றுக்கொள்கிறேன்.நாம் இந்த நெருக்கடியை நன்றாக் தீர்ப்பதில் வெற்றிகண்டோம்.முதன் முதலாகச் சீனாவே உலகத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் உள்ளது.

எதனால்,எப்படி முடிந்தது?

இந்த நெருக்கடியை ஓரங்கட்டித் தீர்ப்பதில் மட்டும் நாம் கவனத்தைக்கொண்டிருக்கவில்லை.இதன் நெருக்கடி குறித்த சரியான புரிதலை"ஏன்-எதற்கு"என்பதையொட்டிப் புரிந்து சீனாவினது பொருளாதார நகர்வில் மாற்றங்களைச் செய்வதும் நமது விருப்பாக இருந்தது.எங்களது பொருளாதாரக்கட்டமைபின்வழி நாம் அதிக உயர் சேவையைப் பெற விரும்புகிறோம்.இதன் வழியாக எதிர்காலத்தில் வரும் பொருளாதார நெருக்கடியை மிகச் சுலபமாக எதிர்கொண்டு நிவர்த்தி செய்ய முடியுமெனப் புரிகிறோம்.உதாரணமாக:பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம்,உற்பத்திச்சாலை பொறிமுறைமாற்றம் மற்றும்வர்தகப் பொறி முறை மாற்றங்களைக் கவனப்படுத்துகிறோம். இவைகளின் மேம்பாட்டை நாம் இன்னும் எட்டிவிடவில்லை.இதுவே எமுக்குமுன் பாரிய கடமையாக இன்று உள்ளது.


பொருளாதாரத்தின் வெடிப்புக்கேற்ற சுடு நிலையினது தீவிரமான அபாயம், அதீத பணவீக்கத்தை ஏற்படுத்தும் ,உண்மை எந்தளவில் உள்ளது?

இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. உற்பத்தி முறையில் மாற்றம் ஒப்பிடுகையில் பணவீக்கம் பிரச்சனை. ஆனால் அது ஒரு துணை வினைதாம்,நமது விருப்பமெல்லாம் பொருளாதாரப் பொறிமுறையில் மாற்றத்தை செய்வது,கூடவே,நிச்சயமாக, நாம் மேலும் பணவீக்க பிரச்சினைக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.பணவீக்க அபாயம் குறித்த அடிப்படை ஆய்வுகள் நம்மிடம் இருக்கிறது.நாங்கள் அதன் காரணங்கள்,வகை நிகழ்வுகள் குறித்த ஆய்வுக்குள் கண்டடைந்தது,இந்தப் பணவீக்கமானது பழைமையான பிரச்சனையிலிருந்து வேறப்பட்டதே அல்லது வேறானதே என்பதே.முன்னைய பிரச்சனையானது எமது ஊக்கமின்மை,அறிவிலித்தனம் அல்லது அறுவடை வீழ்ச்சியிலிருந்து எழுந்தன,அல்லது வேறு பொருளாதாரக் காரணிகளால் ஏற்பட்டது.அத்தோடு இதுவே பணவீக்கமாகப் புரியப்பட்டது.இம்முறையோ பணவீக்கத்தின் காரணமானதுக்குள் அதிகமான பணப்புழக்கமே காரணமாக இருக்கிறது.அத்தோடு இன்னுஞ்சில காரணங்களில், எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பணவியல் கொள்கை. ஆனால், நமது சொந்த அரசியற் கொள்கைகளும் பணவீக்கத்தின் மிகபெரும் காரணமாக இருக்கிறது.எங்களது கணிப்பின்படி இந்தப் அதிதீவரப் பணவீக்கத்தை க் கட்டுப்படுத்த முடியும்.அத்தோடு நாம் அதைக் கட்டுப்படுத்திப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.அது, பாதிப்பை ஏற்படுத்துவதற்குள்ளும் தனிமனிதர்களைப் பாதிப்பதற்குள்ளும் இப்பிரச்சனைக் குறைத்துக்கொள்ள முடியும்.நாங்கள் பல அளவுகோலை இந்தப் பணவீக்கத்துக்கு எதிராக முன் தள்ளியுள்ளோம். எடுத்துக்காட்டாக:ஊதியத்தைக் கூட்டுவது,அதன் பலாபலனை மக்களுக்குள் இனம் கணாத்தக்கதாக இருந்தது.


மீளவும்,இன்னொரு முறை பொருளாதார நெருக்கடி குறித்த கேள்விக்கே செல்வோம்:ஐரோப்பியக்கூட்டமைப்பானது அதன் உறுப்பு நாடுகளது கடன் பளுவையிட்டு அதீத அச்சத்துக்குள் இருக்கிறது.திவாலுகும் அரசுகள் வரிசையில்ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள்பல திவாலகுமென கூறப்படுகிறது.மக்கள் சீனமோ இத்தகைய தேசங்களுக்கு உதவுவதாகவும்,அரச கடன் பத்திரங்களை வேண்டுவதுமாகக் கூறிக்கொண்டிருக்கிறது.கடன் செலுத்த முடியாதளவுக்கான தீவிரக் கடன் பளுவைச் சுமக்க முடியாத தேசங்களது வரிசையில் கிரேக்கம்,சிலவேளை போர்த்துக்கல்சாத்தியமானவரை அயர்லாந்து எனத் தொடர்கிறது.இதுகுறித்து மக்கள் சீனம் எத்தகைய சிந்தனையோடு-சிபாரிசோடு உள்ளது?இந்த நாடுகள் குறுகிய காலவெளிக்குள் மீளவும் தமது சொந்தக் காலில் நிற்கும் பொருளாதாரப் பலத்தை பெறுவார்களென எப்போதாவது கணித்திருக்கிறதா, இல்லையா...

சீனா மிக பெரிய அந்நிய செலாவணியைக் கொண்டிருக்கிறது, நாம் இன்னும் இதுகுறித்து எப்படிச் சமாளிப்து என்பதே பாரிய கேள்வி.முன்னர், நாம் முக்கியமாக அமெரிக்க கடன் பத்திரங்களை வாங்கிக்கொண்டோம்.அதுவே பாரிய இடர் சிக்கலுக்குரியதாக இருக்கிறது. ஆனால் , இப்போது நாம் ஆபத்தை குறைக்க விரும்பினோம் எனவே மற்ற நாடுகளின் அரசாங்க பத்திரங்களை வாங்க வேண்டும் என விரும்புகிறோம். சீனா பொருளாதார உலகமயமாக்கல் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலை ஆதரிக்கிறது.இதன் மூலமாக அனைத்து நாடுகளும் இதைப் பயன்படுத்தி நன்மை அடையுமென நம்புகிறோம் நாம்.இதைவிட்ட அதீத பாதுகாப்பு வாதமானது அனைத்தையும் பாதிப்புக்குள் தள்ளிவிடுகிறது.ஐரோப்பியக் கூ ட்டமைப்பு நாடுகளது அரச கடன் பத்திரங்களை வேண்டுவதனூடாக நாம் சுதந்திர வர்தகத்துள் எமது பாத்திரத்தை ஆற்ற முனைகிறோம்.அத்தோடு நாம் விரும்புவதெல்லாம் நியாமான போட்டியை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கிடையிலும் சாத்தியமாக்க விரும்புகிறோம். அதே போல் ஒரு "வெற்றி, வெற்றி" சூழ்நிலையை உருவாக்க நாம் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்குள் ஒரு சாத்தியமான சூழலை உருவாக்க முனைகிறோம்.

ஆபிரிக்க மீதான சீனாவினது அதீத ஈடுபாடு மேற்குலகோடு முட்டிமோதுகிறது.இது ஜேர்மனியோடும் என்றாகிறது.இது குறித்து மேற்கில் அதிகமாக விசனத்துக்குள்ளாகிய நாடுகள் கடுமையாக விமர்சிக்கின்றன.ஆபிரிக்க நாடுகளில் சில சீனாவோடான தமது பொருளாதாரவுறவை மிக நெருக்கமாகப் பேணிவருகின்றன. இவைகள்மீது மேற்குலக அரசுகள் சில அழுத்தங்களை பிரயோக்கிறது:சூடான் பிளவுபடப்போகும் நிலை,லிபியாவோ தினமும் குண்டுத்தாக்குதலுக்குள் உட்பட்டுள்ளது.இந்நிலையில் அங்கு சர்வதேசப் பலப் பரீட்சையில்-உறவுகளில் ஒரு மாற்றம் புலப்படுகிறதே.இது சீனாவினது வெளியுறவுக்கொள்கையில் ஏதாவது அர்த்தங்கொள்ளத்தக்கதா?

சீனாவானது ஆபிரிக்கத் தேசங்களது வளர்ச்சியில் அதிக ஆர்வமுள்ளவொரு நாடு.ஆபிரிகத் தேசமானது காலனித்துவ வாதிகளாலும்,ஏகாதிபத்தியவாதிகளாலும் பாதிப்படைந்து இருப்பது வரலாறு.சீனமக்களுக்கும் இந்த அநுபவ வரலாறு உண்டு.இந்த அடக்குமுறையின் தாக்கமானது ஏகாதிபத்தியத்தின் வினையே.

ஆப்பிரிக்கா மக்கள், எங்கள் ஆப்பிரிக்க நண்பர்கள் .அவர்களுக்கு எங்கள் உதவி வேண்டும், நாமும் அவர்களுக்கான உதவிகளைச் செய்கிறோம்.எங்கெங்கு உதவிகள் அவசியமாகத் தேவைப்படுகிறதோ அங்கே எங்கள் உதவிகள் உண்டு.இதுவே,சமவுரிமை உதவி.இஃது இருபக்கத்துக்கும் உட்டபட்ட நட்புரீதியான உறவு.அத்தோடு இந்த வகையிலான உதவிகள் இரண்டு தரப்புக்குமே சாதகமான விளைபயனைத் தரும்.நாங்கள் விரைவில் ஆப்பிரிக்க மக்களதுவறுமை மற்றும் பின்தங்கிய நிலையை அகற்ற விரும்புகிறோம்.இந்தக் கேள்விகளது திசையில் நமக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை.நாம் எந்தவிதக் காலனித்துவத் தூண்டுதல்களையும் கொண்டிருக்கவில்லை.இதுகுறித்து ஆபிரிக்க மக்களே சீனாவைக் குறித்து நன்றாக அறிந்துள்ளார்கள்.மேற்குலக அரசியல்வாதிகளே நெடுகப் புலம்புகின்றனர்,சீனாவானது உள்நோக்கத்தோடு ஆபிரிக்காமீது ஈடுபாடுகாட்டுவதாக.இதுவொரு அவதூறத்தை தவிர வேறென்ன.அத்தொடு இத்தகைய கேள்விகளைத் தொடரும் நாம் அவர்களது உள்விவகாரங்களோடு பிணைவதில்லை.ஆபிரிக்த் தேசத்தவர்களது உள்நாட்டு அரசியலில் நமது உறவுகள் எந்தத் தாக்கத்தையும் செய்வதில்லை,அவர்களுக்கு எமது உதவிகள் கிடைப்பினுங்கூட.இத்தகைய தேசங்களில் பிரச்சனைகள் இருந்தால் அவர்களே அதைத் தீர்த்துவிடுவார்கள் என்றே நாம் கருதுகிறோம்.கூடவே,அந்தந்தத் தேசத்து மக்கள் இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றலுடையவர்களென்றே நாம் கருதுகிறோம்.அவர்களுக்கு அந்த ஆற்றலுண்டு,மாற்றார் அவசியமில்லை.இதுவே,எங்களுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்குமிடையிலான பாரிய வித்தியாசம்.

சீனக் கம்யுனிசக் கட்சியின் அதியுயர் கல்வி நிறுவனமான மத்திய குழு உயர் கல்லூரியின் துணைவேந்தராக இருந்தீர்கள்.அதவாது,இது சீனக் கொம்யூனிசக் கட்சியின்அதியுயர் கல்வி-அறிவுத்துறையானது. எனவே,சீனாவில்இன்று, மார்க்சிசம் எந்தப் பாத்திரத்தில் வினையாற்றுகிறது என்பதை விளக்க முடியுமா?

சீனக் கொம்யூனிசக் கட்சியினது உலகக் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் அடிப்படைத் தத்துவார்த்தக் கருவியாக மார்சிசம் இருக்கிறது.எங்களது சிந்தனைப்போக்கில் இந்த மார்க்சிசமானது சீனச் சூழலுக்கேற்ற, அந்த மண்ணினது விசேசத் தன்மைகளுக்கேற்ப,அதைப் புரிந்துகொண்ட மார்க்சிசமே:மார்க்சிசம்,லெனியம்,மாவோயிசம் மற்றும் டெங்கினது சிந்தனைகள் இணைந்த "மூவகைப் பிரதிநித்துவம்"என்பதோடு, அறிவியல் ரீதியான அபிவிருத்தித்திட்டமாக மார்சிசம் பங்காற்றுகிறது.மார்க்சியத்தை நாம் மறுக்க முடியாத-மாற்ற முடியாத தத்துவமாகக் கற்கவில்லை.மாறாக,மார்க்சியத்தைச் சீனாவினது யதார்த்த நிலைமைக்கொப்ப இணைக்க விரும்புகிறோம்.அதையே செயற்படுத்துகிறோம்.

ஒரு மார்க்சிச வாதியாக,சீனாவினது குணாதிசயங்கள் கொண்ட சோசலிசப் பண்ணபக்கொண்டு, உலக சோசலிச அபிவிருத்தியில் ஏற்படும் முரண்பாடுகளைத்தீர்க்க எந்தப் பதிலைத் தரமுடியும்?

நாங்கள் மார்க்சிசத்தை எங்களுக்குள் கலப்புற வைக்கின்றோம். கட்சிச் செயற்பாட்டாளர்களும்,உறுப்பினர்களும் மார்க்சியத்திலிருந்து இரண்டு அளவுகோல்களைக் கற்கின்றனர்.முதலாவதாக, நாங்கள் மார்க்சினது முக்கியமான கட்டுரைகளைத் தேர்கிறோம்,இவற்றின்வழியாக சீனாவினது வளர்ச்சியைக் கற்கிறோம்.மார்க்சினது ஆய்வுகள்-கட்டுரைகள் யாவும் கட்சி உறப்பினருக்குக் கட்டாயமான பாடமாகும்.இவற்றை அவர்கள் தொடர்ந்து வாசிக்க- கற்றுக்கொள்ளவேண்டும். இரண்டாவது, நாம் மதிப்பிடுவது,மார்க்சியத்தினது முக்கியமான வரலாற்று அநுபவங்களிலிருந்து பிரச்சனைகளைத் தீர்ப்பது அணுகுவது.மார்க்சிய முறை வழியில் சீன யதார்த்த நிலைக்கொப்ப பிரச்சனைகளைத் தீர்ப்பது நமது விருப்பமாகும்:

மக்கள் சீனாமானது,மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் மொத்தத் தொகுப்பையும்[MEGA]மொழி பெயர்த்து முடித்த கையோடு பாரிய நூற் தொகுதிகளாகச் சீன மொழியில் வெளியிட்டது.இப்போதும் அவ்வண்ணம் மேலும் மார்க்சியப் பகுப்பாய்வு நூல்களைத் தெரிந்தெடுத்து,மதிப்பீடுசெய்து, பதிப்பிலிட்டு வெளியிடுவீர்களா?

கடந்த ஆண்டு நாம் இரண்டு முக்கியமான திட்டங்களை நிறைவு செய்து வெளியிட்டோம்.முலாவதாக,மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்சினது 10 தொகுதிகளான மேகா பதிப்பு.மற்றும்,5 தொகுதிகளடங்கிய லெனினது தேர்வு நூல்கள்.நாம் இந்த 15 தொகுதிகளது உள்ளடக்கங்களை மதிப்பீடுசெய்து அவற்றைத் தொகை நூலாக்கி இணைக்கிறோம். இந்தத் தொகை நூற்றொகுதியே எங்களது கட்சிச் செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினகளுக்கான கட்டாயப் பாட நூற்கள்.

http://www.jungewelt.de/2011/07-16/001.php

டொச் மொழியிலிருந்து தமிழில்:

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.08.2011

Thursday, June 30, 2011

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்

நிலையெடுக்கும் அரச ஆதிக்கமும் அதன்வழி அரங்கேறும் இனவொதுக்கற் குடிப் பரம்பலும்.

-சில கருத்துக்கள்


வரலாற்றில் புலிப்போராட்டம்:

புரட்சி,விடுதலை,சோசலிசம்-சுயநிர்ணயப்போராட்டம் குறித்துப் புலிகள் போட்ட முடிச்சுகள் யாவும் படுபிழையானதென்பதை எப்பவோ விமர்சித்து முடித்தாகிவிட்டது.மீண்டும், இந்தப் புலிகளின் கடைக்கோடிப் போராட்டச் செல்நெறி குறித்துப் புலம்பத் தேவையில்லை!ஆனால்,மக்களின் அழிவைக்கொண்டு தமது இருப்பின்வழி மீளவும் புரட்சிகரமான அணித் திரட்சிகளைப் ப(பி)ணப்புலிகள் இல்லாதாக்கும் அரசியலுக்குப் பலர் முண்டுகொடுப்பது சுத்தக் கபடத்தனமானது.

இதற்காகவேனும் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் குறித்துப் பக்கச் சார்பு(புலி-இலங்கை)இன்றி மக்களின் நலனிலிருந்து கருத்துக்களை முன்வைத்தாகவேண்டும்(இனியொருவில் அத்தகைய கருத்தாடலுக்கான வெளியைக் கோருவதிலிருந்து புதியதிசைகள் நோக்கிய பாதையை மெல்ல உருவாக்கிக்கொள்ள முடியும்).

புலிகள், இதுவரை செய்த போராட்டம் தமிழ் மக்களை அந்நியச் சக்திகளிடம் அடைவு வைக்கும் சூழ்ச்சிமிக்க போராட்டமாகும்.இது, தமது அரசியல்-போராட்ட நெறிமுறைகள்தாம் "மக்களின் விடுதலைக்குச் சரியான தெரிவு" என்று "மாற்றுக் கருத்துக்கு" மரணத்தண்டனையோடு மக்கள் விரோத அரசியலைச் செய்து, இலங்கையில் தமிழ்பேசும் மக்களைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு-சோற்றுக்குப் பலியாக்கியது புலி அமைப்பு!

இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்த முள்ளிவாய்க்கால்வரையிலான புலிப்போராட்ட இரகசியப் பேரங்கள்-சரணடைவுகள்,வரலாற்றில் புலிகள் குறித்த மர்மத்தை மட்டும் விட்டுச் சென்றுள்ளது.இந்த மர்மத்தின் மறு விளைவு தமிழ்பேசும் மக்களை இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்துகு அடிமையாக்கியது மட்டுமல்ல சிங்கள மக்களின் சாதாரணக் குணாம்சத்திலும் தமிழ்பேசும் மக்கள் குறித்து ,ஏளனமான பார்வையைத் தோற்றுவித்திருக்கிறது.



தமிழ்பேசும் அடிமைகள்?:

அடிமைகளைக் கைக்கொள்ளும் நிலைகளில், சிங்கள இராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விவகாரங்களும் நமது மக்களைக் காலவோட்டத்தில் மனத் தாழ்ச்சிக்கும் அடிமைத்தனத்துக்குமான சூழலுக்குள் தள்ளிவிடப்போகிறது.இதிலிருந்து மனவூக்கத்தைச் செய்யும் திறவுகோல் புலம்பெயர் தமிழ்பேசும் மக்களது கைகளிலேயே தங்கியிருந்தும் அப்படியானவொரு செயற்பாட்டை-முன்னெடுப்புகளை இந்த மக்கள் செய்வதற்கேற்ற ஒழுங்கமைந்த தலைமைக்குள் ஒருமைப்பட முடியவில்லை.புலிக்கு மாற்றானவொரு புரட்சிகரக் கட்சி எந்தவகையிலும் உருவாகிவிட இயலாதளவுக்குச் சிக்கலானவொரு சூழல் தளத்திலும்,புலத்திலும் நிலவுகிறது.

புலியினது (வி)தேசிய விடுதலைப் போராட்டம்இன்றோ இருந்த இடம் தெரியாது பூண்டோடு அழிக்கப்பட்டு வருடம் இரண்டாகிறது!எனினும்,தமிழ்பேசும் மக்களது விடுதலைகுறித்த இயக்கப்பாடு,ஒருகிணைவு,மக்களை ஸ்தாபனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் ஒரு ஒழுங்கமைந்த புரட்சிகரக் கட்சியால் இலங்கையில் மேற்கொள்ள முடியாதிருக்கிறது. பேருக்கு மார்க்சிய-லெனியக் கட்சிகள்-புதியஜனநாகக் கட்சிகளென"அப்பன் கொல்லைக்குள் இல்லை"என்றபாட்டில் தளத்திலும்-புலத்திலும் முன்னணிகள் முளைக்கின்றன. இந்தச் சூழலிற்றாம் புதியதிசைகளை நோக்கிய கருத்தாடல்களும்-செயற்பாடுகளும் அவசியமாகி நம்முன் சூழல் எழுகிறது.இதை,எங்ஙனம் எதிர்கொண்டு காரியமாற்றுவது?

மேலுஞ்சரிந்து வீழ்ந்துள்ள தமிழ்பேசும் மக்களது ஆண்மை,அவர்களது எதிர்கால வாழ்வுக்கு நெருப்பை அள்ளித் தலையிற்போட்டபாடாய் புலிகளது மர்ம அரசியலது தொடர் நடவடிக்கைகள்"நாடுகடந்து அரசாங்கம்"அந்தக் குழு இந்தக் குழுவென மீளத் தகவமைக்கும் அதே மர்ம அரசியலை என்னவென்பது? இந்த அரசியலை வரலாற்றில் தொடைத்தெறிந்து புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பது நம்மால் முடியாததா?



அதே புலிவழியான அராஜக அரசியல்:

சகிக்க முடியாது வஞ்சனை அரசியல் இது.கண்மண் தெரியாத கற்றுக்குட்டிகளால் கடுகளவுகூட நாணயமற்ற கொலைகள் நடந்தேறியது.இதையும் விடுதலை எனும்பெயரால் நடாத்தியவொரு பாசிச இயக்கம் இன்று தமிழ்பேசும் முழு மக்களையும் அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள நிலையில் முளையரும்பும் அனைத்துப் புரட்சிகர முன்னெடுப்பையும்"புலி-புலி"எனக் கை காட்டும் அரசியலை முன்னெடுக்கும் போலிப் புரட்சிகர சக்திகள்மீது நாம் கோபங்கொள்வதோடு நமது முயற்சியும் சரியாகி விடுமா?

புலிகளின்போராட்டத்தைப் பெரிதாக்கி ஊத வைத்த சக்திகள் அதைப் பூண்டோடு அழிக்கும் அரசலையும் கொண்டியங்கியதையும் நாம் இன்று புரிந்துணரும்போதுகூட,இன்றைய மர்மப் பணப்புலிகளது (நாடு கடந்த அரசாங்கம்,நெடியவன்-கே.பீ.குழு வென இன்னபிற...)தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளின் அரசியல் சூதாட்டத்தை ஜெயலலிதாவடிவில் அரவணைக்கின்றன.

அழிவது மக்கள் என்பதையும்பாராது,இந்திய மத்திய அரசும் அதன் எஜமான இந்திய ஆளும் வர்க்கமும் இலங்கை இராணுவத்தை ஏவித் தனது அறுவடைச் செய்ய முனையும் இந்தச் சூழலிற்கூட புலிகள் குறித்த சீரிய பகிரங்க விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை!

"தலைவர் வருவார்,வரலாறு விடுதலை செய்யுமென"ப் போலி வாதங்களுக்குள் மக்களை கட்டிப்போடும் இந்தப் போக்குகள் ஜெயலலிதாமீது நம்பிக்கையைக்கொள்ளும்படியும் நமது மக்களை முட்டாளாக்குகிறது.

மிகவும் கண்டிக்கத்தக்கது இது.இதை அம்பலப்படுத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்தைத் தனிமைபடுத்தி, நமது மக்களின் விடுதலைக்கு வழிசமைக்கத் தெரியாதவொரு தமிழ்க் கட்சிகளது மூடத்தலைமைகளை நம்பிக் காவடி தூக்கும் தமிழ்பேசும் மக்களின் தலைவிதி அழிவில் முடியப்போகிறது.

தேசியத் தலைவரை இதுவரை நம்பச் சொன்ன பணப்புலிப் பினாமிகள் இப்போது தமிழ் நாட்டுச் சினமாக்கூட்டத்தையும் அந்த மாநிலத்தின் ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது தயவைiயும் நம்பும்படி மக்களைப் பேயர்களாக்குகிறார்கள்.





அழிவு அரசியலை நியாயப்படுத்தும் போக்கு:

சொந்த மக்களின் பலத்தை நம்பாத புலிகள்,தமது எஜமானர்களின் அரசியல் சதுரங்கத்துக்குத் தம்மைப் பலியாக்கியதை எத்தனை பக்கங்களில் நியாயப்படுத்தினார்கள் -படுத்துகிறார்கள்?அதை நியாயப்படுத்த எத்தனை சேரன்கள்-உருத்திருகுமார்கள் இன்னும் நமுக்குள் முளைத்துக்கொள்வார்கள்?

கேடுகெட்ட இந்த இயக்கவாதத் தனிநபர்வாத மாயை நமது வாழ்வைக் குட்டிச் சுவாராக்கியதை மறுத்து இனியும் தம்மால் நமக்கு விடுதலை சாத்தியமெனக் கதைவிடுவது உலகத்தின் முன் பெரும் சமூக விரோதமாகும்.

போராட்டத்தை முட்டுச் சந்தியில் நிறுத்திவிட்டுச் சரணடைந்த புலிகளால் எழிச்சியடைந்த சிங்களக்கூலிப்படையோ இப்போது சிங்களத் தேசியப்படையாக மாறிவிட்டது.இதையெல்லாம் செய்வதில் புலிகளின் இயக்கம் காரணமாகப் போகிறதென்ற அன்றைய விவாதங்களை எள்ளி நகையாடிய மேட்டுக்குடி ஈழஅரசியல் "துரோகி" சொல்லி பலரைப் போட்டது.தெருவில்-லைட்கம்பத்தில் பொட்டு வைத்துத் தமது அரசியலை நியாயப்படுத்தியது.

இன்றோ பெருங் கூச்சலிட்டுத் தமிழ் பேசும் மக்களைக் காக்கத் தமிழகத்தை உருகி அழைக்கிறது-அல்லது அவர்களிடம் ஏதோவொரு எதிர்பார்பைச் செய்யும்படி மக்களைத் தூண்டுகிறது.இங்கே, ஜெயலலிதா அம்மையார் தமிழ் பேசும் மக்களது விடுதலைத் தேவதையாக ஒளிவட்டம் கட்டப்படுகிறது.இன்னும் சிறிது காலத்தில் ஜெயலலிதா தேசியத் தலைவியாகவும் போற்றப்படலாம்.இந்த விவஸ்த்தையற்ற கருத்து வெளிக்குள் நாம் மீளவுஞ் சரிந்துவிடுவோமா அல்லது உண்மையான விடுதலைக்கு பங்களிக்கப் போகிறோமா?பெரும் படையணிகளோடு ஈழ மண்ணைக் காப்பதாகக் கயிறு திரித்த ப(பி)ணப்புலிகள் மக்களைக் கொல்வதற்குத் தளபதிகளைத் தயார்படுத்தியளவுக்குச் சிங்கள மேலாதிக்தை-அரச ஆதிக்கத்தை உடைத்துப் போராட்டத்தை முன்னெடுக்கத் தக்கபடி மக்களை அணிதிரட்டிப் பெரும் படையணியாகக் கட்சியை- இயக்கத்தைக் கட்டமுடியாது, தேசியத் தலைவரைச் சுற்றி ஒளிவட்டம் அமைத்தார்கள்.இப்போது, அதே பாணியில் ஜெய லலிதாவையும் நோக்கி மக்களைத் தள்ளித் தமது பிழைப்பை மேலும் மெருக்கேற்றுவதற்கும்,இருப்பை வலுப்படுத்தவும் ஒரு ஆயுதமாகப் பார்க்கும் பணப் புலிகளுக்கு விடுதலை-தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமை குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது.இதை நிர்மலன்போன்ற புலிப் பினாமிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.


புலிகளது தவறுகள்,சிங்களமயப்படும் எதிர்காலம்:

புலிகள் இயக்கம் தனது வர்க்கத் தளத்துக்கு-குணாம்சத்துக்கேற்ப எப்போதும் தவறிழைத்தவர்களல்ல!தமது வர்க்கத்து இசைவாகவும்-நியாயமாகவே தமிழ்பேசும் மக்களது விடுதலையைக் காய் அடித்தார்கள்-காட்டிக் கொடுத்தார்கள்.அவர்கள் தவறிழைத்தது பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது நலனின்மீதே.அத்தகைய இலக்கில் புலிகள் செய்தது பாரிய வரலாற்றுப் பழி!

இந்தப் புரிதலோடு முரண்பட்டவர்கள்,புலிகளது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று கூறுமிடத்து, அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது, உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது.இது, வன்னியில் (இப்போது) நிசமாகி வருகிறது.வன்னி நிலப் பரப்பெங்கும் புதிய குடியேற்றத் திட்டங்கள் மெல்லச் சிங்கள அரசால் ஏற்படுத்தப்படுகிறது.இதையெல்லாம் நியாயப்படுத்த கே.பி.போன்ற பணப் புலிகள் புலத்திலும் உண்டு-தளத்திலும் உண்டு!

தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த "தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென"ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.



தமிழ்பேசும் மக்கள்பண்டுதொட்டு வாழ்ந்த நிலப்பிரதேசங்களை இழப்பதற்குரிய முன்னெடுப்போடு செய்யப்படும் இந்த இராணுவவாத முன்னெடுப்பு, முதலில்தமிழ் பேசும் மக்களுக்கான பாரம்பரிய நிலப்பரப்பின் அடையாளங்களை மெல்லத் தடயமின்றி அழித்து(புத்த விகாரை ஒரு சிறிய உதாரணம்), அவர்களைப் புதிய புதிய இடங்களுக்கு இடம்மாற்றிச் சாவின் விளிம்பில் தள்ளுவதற்கான மிகப் பெரிய அரசியல் வியூகத்தைச் செய்வதற்குப் பணப் புலிகளது மர்மமும்,நமது கட்சி அரசியல்வாதிகளது சுய இலாபங்களும் முக்கிய வகிபாகத்தை இந்த முள்ளி வாய்க்காற் தோல்வியின் பின் சாத்தியமாக்கிறது.மக்களை எதை நோக்கியும் சிந்திக்க விடாது,தனியே உணவுக்காகக் கையேந்தும் பிரதேசிகளாக்கியபடி ஓட்டுக் கட்சிகள் மெல்ல முன்னெடுக்கும் இந்த நரித்தனமான அரசியலை அம்பலப்படுத்தி, மக்களை விளிப்புணர்வுகொள்ள வைக்கும் எந்த முயற்சிக்கும் தடையாக,சிங்கள இராணுவத்தின் கண்காணிப்பும்,ஓட்டுக் கட்சிகளது ஏமாற்று அரசியலும் ஒரே தளத்தில் இருவேறு வியூகமாக விரிகிறது!இதுவே,இன்றைய நவலிபரல் கொள்கையின் இன்னொரு முகமாகும்!இதைப் புரிவதற்கு நோமிக் கிளைன் எழுதிய[The Shock Doctrine-By Naomi Klein ] எனும் நூலில்சில பக்கங்களைப் புரட்டினாலே போதும்!

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்:

புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு "மாற்றுக் கருத்து மந்தைகள்"(தேசம் ஜெயபாலன்,தேனி ஜெமினி-கங்காதரன்,கீரன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்,சுகன்,தேவதாசன்,சோபாசக்தி,நிர்மலா-இராகவன்,சுசீந்திரன் இன்னபிற...) கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.


யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதியைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரச சார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு"ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்"எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன மந்தைகள்வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் சில கீரன்களை-கொன்ஸ்சன்ஸ்ரையன்களை, நம்முன் உலாவிடுகிறது.இது ஆபத்தானது-அனைத்தைக்காட்டிலும்!


புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.


பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக்காயாக்கியபடி புரட்சி முன்நகர்வதல்ல.


சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் "போராட்டம் புரட்சியை நிபந்தனையாக்கியபடி" இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிப்படையைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.


நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும் சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் கீரன்போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க முடியுமா?


முள்ளி வாய்க்காலில் அழிந்துபோன புலிகளோடு புலிச் சித்தாந்தமென்பது தமிழ் மேட்டுக்குடியினது சித்தாந்தமேயென்பதும் மிக இலகுவாகப் புரிந்து போச்சுதா? இதிலிருந்து மீள்வதற்குத் தயக்கமென்ன?புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஆற்றலை இளைய தலைமுறையினருக்குக்கற்றுக்கொடுப்பதென்பது காலத்தின் கடமையாக இருக்கும்போது அதை இத்தகைய லொபிக் குழுக்களோடிணைந்து உரையாடுவதால் சாதிக்க முடியுமா? சஞ்சீவ் ராஜ் போன்றோர் இது குறித்து பதில் கூறவேண்டும்.


இலங்கைப் பாசிச இனவொடுக்குமுறை அரசியலால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்!இதை மறுத்து மகிந்தாவுக்குக் கூஜாத் தூக்குவது மக்களுக்கு எதிரானது.


இன்றுவரை,நமது சமூக சீவியம் உடைந்து,நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.இந்தக் கொடிய இலங்கை-இந்திய அரசுகளால் எமது வாழ்வாதாரங்களை இழந்த நாமே,அதைப் பெற்றுத் தருவது-காப்பது இத்தகைய அரசுகள்தாமென வாதாடும்போது நாம் யார்? கீரன்-கொன்சன்ஸ்ரையன்,தலித்துவ மேம்பாட்டு முன்னணி,இராகவன்-நிர்மலா,எனத் தொடரும் இந்த நீண்ட லொபிக் குழுக்களால் நிகழப்போகும் அபாயம் புலிப்பாசிசத்தைவிடப் பன்மடங்கானதென்பதே எனது கணிப்பு!புலிகள் நேரடியாகவே மக்களது எதிரிகளென மக்களுக்குத் தெரிந்தளவுக்கு இந்த மர்ம மனிதர்களை இலகுவாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை!இனவாத ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்பேசும் மக்கள் அன்று போராடியபோது-புரட்சிகரமாக அணிதிரண்டபோது,பாசிசப் புலிகள் மூலமாக அனைத்தையுஞ் சிதறடித்த அந்நிய-இந்திய நலனானது இப்போது அதே பாணியில் இத்தகைய லொபிக் குழுக்களை வைத்து மீளவுருவாகும் புரட்சிகரமான அணித்திரட்சியை-உணர்வை உடைப்பதில் கவனமாக இருக்கிறது.இவர்களே அனைத்து வழி முறைகளையும் கைப்பற்றி அதைச் சிதைப்பதில் திறம்பட இயங்குகிறார்கள்.


தேசிய விடுதலையை நேசிக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள் இனிமேல் கவனப்பட வேண்டிய முக்கிய போக்கானது இது :


" முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.அது,நமது அடிமை விலங்குங்கூட என்பதே!"


எனவே,நாம் புரட்சிகரமான அணுகுமுறையைத் தொடர்ந்து உள்வாங்குவதும் அதன் வழி அணித் திரட்சியடைவதும், இலங்கையில் சிறுபான்மை இனங்களின் விடுதலையை-செல் நெறியை திறம்படச் சாத்தியமாக்குவதற்கும், இத்தகைய லொபிக் குழுக்களை ஓட விரட்டவும், புரட்சிகரமாக இயங்குவதே அவசியமான காலக் கடமை.இனவாத ஒடுக்குமுறைக்குள் தமது அடையாளங்களைத் தொலைக்கும் ஒரு தேசிய இனத்துக்கு இதைவிட வேறு வழியிருக்கா?



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.06.2011

Sunday, June 26, 2011

புலிக்கொடி : தமிழர்களது தேசியக்கொடி?

புலிக்கொடி : தமிழர்களது தேசியக்கொடி?


" எனக்குத் தேசிய அடையாளங்களது புனித விம்பம் என்பது,நிலவுகின்ற ஆளும்வர்க்க அரசியில் ஆதிக்கத்தினது கருவி என்பதும்,ஒடுக்கு முறைக்குள்ளாகும் ஒரு தேசிய இனத்தின் கோரிக்கைக்குள் கனவாகிக் கிடக்கும் தேசிய விம்பங்கள் அவர்களது இருப்பைக் காக்கும் அலகுகள் என்ற புரிதலும் இருவேற சூழலில் உண்டு! "


தீபம் தொலைக்காட்சியின் புலிக்கொடி பற்றிய உரையாடலின் பின்பு,புலிக்கொடிக்கு எதிராகக் கருத்தாடிய ராஜ் தாக்கப்படுகிறார்.


இலங்கை அரசுக்குச் சார்பான கொன்ஸ்சன்ஸ்ரையின் அருகினில் இருந்து, அவரது கருத்துக்குத்தோதாக உரையாடிய ராஜ், தன்னை இலங்கை அரசினது போக்குக்கு இசைவானவராகக் காட்டப்பட்ட சூழ்நிலையைக்கடந்து, இந்த விவாத்தின் பின் எழுந்த தேசிய அடையாளங்களது புனித விம்பம்,மற்றும் பாசிசக் குறியீடுகளது இருப்பும் அதன் பின்னான சித்தாந்த வலுவும் குறித்து, கவனத்தைக்கொள்வதும் எனது நோக்கு அல்ல!

இது, குறித்து நிறைய விவாதித்தாகிவிட்டது!தேசங்கடந்த ஆய்வாளர்களது புரிதல் நமக்குப் பல புரிதலைத் தந்துவிட முடியும்.எனவே, நாம்,தமிழர்களது அவல நிலையுள் இந்த விடையங் குறித்துச் சில கவனத்தைச் சுட்ட முடியும்-அவ்வளவுதாம் இக் கட்டுரையின் நோக்கம்.



ஓட்டுக்கட்சிகளது கைங்காரியம்:

இலங்கையின் இனப் பிரச்சனை வெறும் இருவேறு இனங்களுக்கிடையிலான சிக்கலல்ல.அது, முழு மொத்த தென்னாசியப் பிராந்தியத்தினதும் பிரச்சனையாகும்.இங்கேதாம் தமிழ் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றித் தத்தமது எஜமானர்களைத் திருப்பத்திபடுத்தும் காரியத்தில் இறங்கி, நமது மக்களை அடியோடு கொன்றடிமையாக்கும் வன்னி யுத்த அரசியலை ஜனநாயகத்தின் பெயராலும்,புலிப் பாசிசத்தின் பெயராலும் ஒப்பேற்றினார்கள்!இனவொடுக்குமுறை நிகழும் ஒரு தேசத்துள் மக்கள் எங்ஙனம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை ஓட்டுக் கட்சிகள் நிலைமைக்கொப்பத் திசை திருப்பி இதைச் சாதித்தனர்.
இது,நமது யுத்தம்-அரசியல் முன்னெடுப்பது வரலாறாக இருக்கிறதா?சரி!

முள்ளிவாய்க்காற் படுகொலை யுத்தத்துக்குப் பின்பான அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொரு ஓட்டுக் கட்சியும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப் படுத்துகிறார்கள். இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை.காரணம்: "நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை" என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.


ஓட்டுக் கட்சிகளுக்கு நிதியாதாரம் வழங்கும் வர்க்கத்துக்குத் தமிழர்கள் பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக இருப்பதிலுள்ள தேவை அவசியமாக இருக்கிறது. இந்தத் தேவை அவு; வர்க்கத்தின் அந்நிய வர்க்க நலன்களது தேவையோடு மிக நெருக்கமாக உறுவு பூண்டு,இன்றைய பொருளாதாரப் போக்கில் இவை மிக அவசியமாகி வருகிறது.

இந்த ஓட்டுக் கட்சிகளது தேவையை-நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வலுப்படுத்தும் புலம் பெயர் ஊடகங்கள் தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவருகிறது. இந்த லொபி ஊடகங்கள்,தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை நமக்காகக் காவி வருகிறார்கள்.

அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும் நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் புரட்சிகரக் குரல்,போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து வானொலிகளில் கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!தமது எஜமானர்களுக்கு உகந்த முறையில் அவர்களது நலனை மக்களது நலனாக்க முனையும் இந்த நரித்தனமான அரசியல் எடுத்த எடுப்பில் தமிழ் மக்கள் நலன் மறுத்த அரசியல் பேசமுடியாது,தமிழ் பேசும் மக்களது மனதுக்கேற்றவொரு அரசியலை நமது மக்களது நலனை முதன்மைப்படுத்துவதாகவே உரிமைபாராட்டி விஷ அரசியலை நமக்குள் திணிக்கின்றன.இந்த அரசியலுக்கு உடந்தையாகப் புலம் பெயர்"மாற்று"குழுக்கள் பல அடிமையாகிக்கிக் கிடப்பதையும் இதுள் சுட்டிக்காட்டுவோம்!



புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில், "மாறறுக் கருத்தாளர்கள்,ஜனநாயகவாதிகள்,புரட்சிகரச் சிந்தனையாளர்கள்"எனும் அட்டவணையுள் இலங்கை-இந்திய அரசுகளதும் ஏவற்படைகள்-குழுக்கள் ஓட்டுக் கட்சிகளது பின்னே அணி வகுத்திருப்பதையும் புரிந்துகொண்டோமானால் தேசம் ஜெயபாலன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்,தேனி ஜெமனி, கீரன்,நிர்மலா,இராகவன்,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,ரி.பி.சி வானொலி,ஜீ ரிவி,தீபம் ரீவி, ஆகிய அனைவரையும்,அனைத்தையும் புரிவதில் சிக்கல் இருக்க முடியாது!

தமிழ் மக்களது இன்றைய நிலை:

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அந்நியச் சகத்திகளும் இலங்கையும் அரங்கேற்றி வருகின்றன.பேராசை,பதவி வெறி பிடித்த வலதுசாரித் தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள். இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.

நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது. ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.தமிழ்ப் பிரதேசமெங்கும் இராணுவக் காட்டாட்சியே நடந்தேறிவருவது புலியழிப்புக்குப் பின்பான வரலாறு.எந்தக் குடிசார் அமைப்புகளும் இன்னும் முழுமையாக இயங்கவும்-சுயாதீனமாகச் செயற்படவும் அநுமதிக்கப்படவில்லை என்பது இன்னொரு வகை உண்மையாகும்.


மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக யாரும் எடைபோடுவது இயற்கை. ஆனால்,அதன் பின்னால் அந்நிய எஜமானர்களின் அரசியல் மிக நுணக்கமாக விரிகிறது.புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் புலியின் மறுதொடர்ச்சியான "நாடுகடந்து அரசாங்கம்" முன்வைக்கும் ஓட்டுரக அரசியலின் சூழ்ச்சியோ மிகவும் கொடியது. இது சிங்கள இராணுவத்தைவிடப் பன்மடங்கு ஆபத்தானது.உள்ளேயிருந்து கருவறுப்பதுதான் மிக மோசமானது.எதிரி மிகவுந்தெளிவாக இனம்காணப்படுகிறான்.ஆனால், இத்தகைய "நாடுகடந்த அரசாங்கம்"புலிகளது எச்சங்கள்,தமிழ் ஓட்டுக்கட்சிகளோ நம்மை உள்ளேயிருந்து அழிப்பதற்கு உலக ஏகாதிபத்தியங்களது தயவில் அரசியல் செய்கின்றன.

தேசிய அலகுகள்,குறியீடுகள்,தமிழ் மக்களது ஐதீகச் சொத்தாகவும்,அது மக்களது உரிமையினது ஆகக் குறைத்த குறியீடு என்றும் கூறிக்கொண்டு,எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப் படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது (விடுதலையென்பது வெறும் கோசமே!).


இந்த நெருக்கடிக்குள்ளும்புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் மிக இயல்பான வாழ்வுக்குள் தமது பழையபாணி வாழ்வைத் தகவமைத்து வருகிறார்கள்.அவர்களின் பின்னே பாசிச இலங்கையின் அரச ஆதிக்கம் தமிழ்ப் பிரதேசமெங்கும் மிகச் சாதாரணமாக நிலைபெற்று வருகிறது.இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் தமிழ்பேசும் மக்களது அனைத்து முன்னெடுப்பையும் உள்வாங்கிக் கொண்டிருக்கும் இவ் வேளையுள்,தமிழ்க் கட்சிகள் மிகவும் மோசமான-விலாங்குத் தனமான அரசியலைச் செய்து மக்களைத் தமது பங்குக்குச் சீரழிப்பதோடு தமது பதவிகளுக்காக அரசியல் செய்வதாகத் தெரிகிறது.
இலங்கையில் கட்சி அரசியலானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே நகர்கிறது எனக்கொள்ளவேண்டும்.

"இந்தியா,ஜெயலலிதா,சீமான் வகையறாக்கள் இன்னும் ஈழமக்களுக்காகப் புடுங்குமென்று இந்த வகைச் சோணகிரிகள் இந்தியாவை நோக்கிப் புறப்படுவதில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் விவேகத்தைச் சிங்கள அரசுக்குப் பறைசாற்றுகிறார்கள். இதுதாம் இன்றைய தமிழ்பேசும் மக்களது அரசியற் சூழல்! "


பாராளுமன்றப் பண்டிகள்:

ஓட்டுக் கட்சி வரலாறு நமக்கு எப்பவும்எதிரானதாகவே இருக்கிறது-இருந்து வருகிறது.தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும்,டக்ளஸ்சினதும் அரசியல் இதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது.


ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள, இல்லையா?;


அன்றிலிருந்து இன்றுவரை,இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது என்பதை இலகுவாக நாம் புரிந்துகொள்வோமானால்,இன்றைய நமது மக்களுக்கு எந்த அரசியலை எவர் முன்னெடுக்கிறாரென்று சொல்ல முடியும்.


புலம் பெயர் தளத்துக்கான நயவஞ்சக அரசியல்:

முள்ளி வாய்க்காலுக்குப் பின்இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்ட இலங்கை-இந்தியக்கூட்டு, தமிழ் பேசும் மக்களை இலங்கைக்குள்ளேயே அகதிகளாக்கி அலையவிட்டுள்ளது.




இலங்கையின் பாசிச இராணுவக் கட்டமைப்புக்குள் தமிழ்பேசும் மக்களைக் கட்டாயமாக அடிமைப்படுத்திய மகிந்தாவின் சாணாக்கியம்,புலம் பெயர் தளத்தில் சில திரிவுவாதப் புரட்சியாளர்கiயும்,கைக்கூலி ஊடகங்களையும் தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிறுத்தித் தமிழ்பேசும் மக்களது தேசிய அலகுகளையே கேள்விக்குட்படுத்துகிறது!தமிழ்பேசும் மக்களை வெறும் கையாலாகாத ஒரு இனக் குழுவாக் குறுக்கி வைத்திருக்கும் தந்திரம் இத்துடன் வலுவாக அரங்கேறுகிறது.

தேசியக் கொடியென்பதை,ஓர் அரசாக-இனமாக எழுந்து நிறுவனப்பட்ட ஆனும் வர்க்கத்துத் தமிராக இனம்காணும் அதேவேளை,ஓடுக்கு முறைக்குள் உட்படுத்தப்படும் ஒரு இனம் தன்னை விடுவிப்பதற்கான-பாதுகாப்பதற்கான போராட்டத்தில்,எழிச்சியில் இந்தத் தேசியக் கொடி-அடையாளங்களைக் காவ வேண்டியதாகவே இருக்கிறது.அது,வர்க்கப் போரைச் செய்யும்போதுஞ்சரி,தேசிய விடுதலைப்போரைச் செய்யும்போதுஞ்சரி வர்க்கங்கங்கள் மொழிவாரியகச் சேர்வதில் சில பிரத்தேயகப் பண்புகளை நாம் இனம் கண்டாகவேண்டும்.அந்தப் பண்புகளில் ஒன்றாகப் புலிக்கொடியும் இணைவதில் சிக்கலடையும் சந்தர்ப்பங்கள்கண்டு, "புரட்சியாளர்கள்" ஒடுக்குமுறையாளர்களது திமிரை இரசிக்கின்றனரா?
ராஜ் புலிக்கொடிக்குள் தேங்க,கொன்ஸ்சன்ஸ்ரையன்முழுமையாகத் தமிழ் பேசும் மக்களுக்குப் பண்பாடு,தேசிய அலகுகள்,வரலாறே இல்லை என்கிறார்.இவை, எவருடைய குரல்கள்?இலங்கையின் ஆளும் வர்க்கதின் குரலாக மட்டும் இதைப் பார்க்க முடியுமா?

இத்தொடர் நிகழ்வில்அரசியல் செய்யும் பிராந்தியங்கடந்த-கண்டங் கடந்த ஆளும் வர்க்கங்களது நலனை-அரசியலை யார் என்ன செய்துவிட முடியும்?

இலங்கையின் இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதனாற்றாம் தமிழ்ப் பிரதேசமெங்கும் திடீர் சிங்கக்கொடி பிடித்தலும்,தேசியக் கீதம் சிங்களத்தில் இசைப்பதும் இராணுவக் கண்காணிப்பின்கீழ் நிபந்தனையாக முன்னெடுக்கப்படுகிறது.


சிங்கக்கொடியென்பதன் குறியீடென்ன?


சிங்கள ஆளும் வர்க்கத்துத் திமிராக இல்லையா?


தமிழ் மக்களை வெற்றிகொண்ட அடையாளமாக முன்னிறுத்தப்படவில்லையா?


இத்தகைய உளவொடுக்குமுறைக்குள் திணிக்கப்படும் அராஜகமானது வரலாற்று ரீதியாகத் தமிழ் பேசும் மக்களைக் குரோதத்துடன் தொடர்புப்படுத்தித் சிதைக்கிறது.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இந்தவகைப் புலம்பெயர் இலங்கை-இந்திய லொபிகளுக்கு தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி, அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.இந்தப் போக்கு நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக் கீரன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்-இராகவன், நிர்மலா கூட்டம்.


தமிழ் பேசும் மக்களது தேசிய அலகுகள்:


மொழிவாரியாகவும்,இனவாரியாகவும்,சாதிரீதியாகவும் பிளவடைந்த தமிழ் பேசும்மக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.


இந்தத் தோரணையில் தமிழ் பேசும் மக்களது அடையாளங்கள்,தேசிய அலகுகள்மீதும்,வரலாற்று ஐதீக நிலப்பரப்பின்மீதும் தொடர்ந்து தாக்குதல்களைச் செய்யும்போதும் புலிப் பாசிசத் சித்தாந்தமென வாந்தியெடுத்தே இவற்றை நொருக்கி வருகிறார்கள்.பேரினவாத ஒடுக்குமுறையானது என்றைக்குமே இல்லாத வடிவங்களில்தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து ஒடுக்கிவருகிறது. அவர்களது வாழ்விடங்களைத் திருடுவதற்கேற்ற சித்தாந்தங்களை மிக முற்போக்காகச் செய்வதில் புலியினது தவறுகள் ஒத்துழைக்கிறது.


இந்தப் புலித் தவறுகளைத் தூக்கி வைத்து உரையாடும் நபர்கள்,பேரின வாதத்தின் அரசியல் ஆதிக்கத் திமிரையும்,அதன் குறியீடுகளையும் தமிழ் மக்களுக்கான அடையாளமாக்கும்போது மறைமுகமாக இனவழிப்போடு,ஒரு இனத்தைப் பூண்டோடு அழிப்பதற்குத் துணை போகின்றனர்.


இனவொடுக்கு முறையைச் செய்யும் இலங்கை ஆளும் வர்க்க நலனானது, தமிழ்பேசும் மக்களை அனைத்து வடிவங்களிலும் ஒடுக்கி அவர்களது வரலாற்றை இல்லாதாக்கும் மகாவம்சத் தொடர் யுத்தத்தைச் செய்யும் இன்றைய சூழலில், தவிர்க்க முடியாது அந்தத் திமிரை எதிர்கொள்ளத் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை முன்நிறுத்தி எதிர்ப்பைக்காட்டுவது அவசியமானது!


அது,நியாயமானதும்கூட.அந்த அடையாளங்கள் எந்த வர்க்கத்தினது என்ற கேள்வி விடுதலையடையும் தறுவாயில் மட்டுமே தமிழ்பேசும் மக்கள் மத்தியில் எழுப்பப்படும்.அதுவரை அது,எந்த அரசியலையுஞ் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டபின்,புரட்சிகரக் கட்சி நிர்மூலமானபின்ஒரு இனம் தனது இயலாமையில் இந்த அடையாளங்களைக் காவுதைத்தவிர வேறென்ன தீர்வு உண்டு?


மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டும் தளத்து நிலை இராணுவக் காட்டாட்சிக்குள்உட்பட்ட நிலையில், புலத்த மக்கள் புலிக்கொடியைப்பிடிப்பதென்பது தமிழ்பேசும் மக்களது வரலாற்று இருத்தலைக் குறித்து அடையாளப்படுத்தபடுவதுதில்தாம் முடிவடைகிறது.புலிகளது பாசிசமும்,அந்தக் கொடியினது வரலாற்று ஐதீகமும் ஒரு தொடர்ச்சியின் இருவேறு நிகழ்வூக்கமோகவே தொடர்கிறது.


புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் மக்களது அரசியல் வாழ்வில்-பிரக்ஜையில் சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் இனவொதுக்கலுக்கு-அழிப்புக்கு எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது எந்தத் தயக்கமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க இன அழிப்பு அரசியலுக்கு எதிராகவே இருக்கும்.


இதைத் தடுப்பதாக இருந்தால்,இலங்கைப் பாசிச அரசு தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் சுய நிர்ணயவுரிமை வழங்க வேண்டும்.அந்தத் தீர்வைச் செய்யாதவரையும் தமிழ்பேசும் மக்கள் தமது தேசிய அலகுகள் எவைகளெனத் தீர்மானிப்பதும், திசையமைத்துக் காப்பதும் எவரையும் கேட்டல்ல-தமது வரலாற்று ஐதீகத்திலிருந்து அது நடைபெறும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
26.06.11

Sunday, June 12, 2011

மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?

முப்பது இலட்ச முழு நிதியும் மார்க்சிய கட்சிக்கே போய் சேரட்டுமென முதலாளி...

Der Mythos des Michael May_Sisyphos


ரலாறு பூராகவும் இந்த மனிதவாழ்வுக்கு அர்த்தங்கள் பல கற்பிக்கப்படுகிறது.எந்தக் கற்பித்தல்களும் மனித வாழ்வைப் பூரணமான-சுதந்திரமான புரிதல்களோடு நியாயப்படுத்தவில்லை!

ஏன் வாழவேண்டும் என்பதும்,எதற்குச் சொத்துச் சேர்க்க வேண்டுமென்பதும் நியாயப்படுத்தும்படியாக எப்போதும்இருக்க முடிவதில்லை!

"Absurd" முற்றிலுமாக விரிகிறது,வாழ்வை எண்ணி!

குடும்பம்-பிள்ளை,குட்டி எனக்கொண்ட உறவொடு விரிந்து போகும் விருப்புக்கு குவிப்புறுதிகொள்வதில்மனித வாழ்வு அதிகம் சலித்துப் போகிறது.எதிலும் நம்பகத் தன்மை இல்லை-எங்கும் போலித் தனமும்,நம்ப வைத்துக் "கழுத்து அறுப்பும்" நிலவுகிறது.

நான், எந்த நோக்கமுமற்ற வினைகளுக்குள்த் தினமும் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.

"unsinnig" அர்த்தமற்ற உலகமாகப்பட்ட மனித வாழ்வு அழிவிற்குள்...அது,"தவறான-தப்பான,நியாயமற்ற"சட்டங்களால்- ஒழுங்குகளாற் தினமும்இந்த வாழ்வை அழிப்பதில் முடிகிறது.மீள,மீளத் துரத்திவரும்"அபத்தம்(Absurditaet)பயனற்ற,அர்த்தமற்ற செயலை ஊக்குவிக்கிறது.இவற்றை எதிர்க்கும்"மனநிலை" அபத்தவாதத்தின் தெருக்கோடியில் தஞ்சம் கொள்ளும்வரை எனது பௌதிக இருத்தலின் தஞ்சம் "Diskrepanz" இணைவின்மையாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றாய் விரியும்போது, அபத்தமாகவே உலகும் தோன்றுகிறது.இந்த உலகு எதுவரை?



ஒரு இனத்தை வியாபாரத்தனமாகக் கொன்று குவித்துவிட்டுத் தாமும் மண்டியிட்டுத் தலையைப் பிளக்கக் கொடுத்த புலிகளைக் குறித்து விளங்க முடிதல்சிசிப்போவுக்கு முன் கட்டளைப் போட்ட கடவுளது வேலைக்கொப்பவே இருக்கிறது.

நான் தரையிலிருந்து மலை உச்சிக்குத் தாவும்போது எனது இன்றைய அனைத்து ஊக்கமும் இமையசைக்கும் முன்னமே தரைக்கு வந்து விழுந்து நொருங்கும்போது இதை எதிர்த்தல்-வீராப்புப் பேசலாக சமூகத்துக்குள் கொட்டிவிடுகிறேன்.சிசிப்போ கடவுளைவிடப் பன்மடங்கு பலமானவன்.அவன் உணர்வு நிலை அர்த்தமற்றதை"ஒழுங்கை!க் கடைப்பிடித்தல்-ஒப்புக்கொள்ளலென அர்த்தமுள்ளதாக்குவதாகப் புரியும்போது இந்த மாபெரும் மனிதர் Michael May ஆக மேலெழுகிறது.

கடந்த கால் நூற்றாண்டாகப் பொறியியலாளனாகப் பணிபுரிந்த இந்த மனிதர் பெரும் கட்டுமானத்துறையில் செல்வம் குவித்து வைத்திருக்கிறார்.பல மில்லியன்களுக்குச் சொந்தக் காரனான இந்த மிகேல் மாய்க்கு என்ன நிகழ்ந்தது?

உலகத்தின் அதியுச்சத்தில் கோடிக் கணக்கான சொத்துக்களோடு வாழ்ந்து கீழ் நோக்கிய பார்வை எப்படி வந்தது?

இதுவொரு Absurd !

அனைத்தையும் தலை கீழாக்கிப் பார்க்கும் மன நிலை.அவர் தன்னைப் பிரபலப்படுத்த விரும்பாது இருக்கிறார்.ஆனால்,அவர் பேசப்பட வேண்டியவர்.

நம்மில் எத்தனை மனிதர்கள் இந்த மிகேல் மாய் போன்றிருக்கிறோம்?;ஏன் அப்படி இருக்க வேண்டும்??

மக்களிடம் போருக்குச் சேர்த்த,அபிவிருத்திக்குச் சேர்த்த பணத்தைப் புலிப் பினாமிகள் தமது சொத்தாக்கிவிட்டுச் செல்வந்தாகளாக இருக்கும்போது,இப்படியெல்லாம் அபத்தம் நம் முன் நிழலாட நாமும் அதே அபத்த்தின் இன்னொரு முனையில் நிற்க திருவாளர் மிகேல் மாய்வழி செய்கிறார்.

சிசிப்போவுக்குக் கடவுளது இரகசியமான பரிசு கிடைத்திருக்கலாம்.

அவன் மரணத்தை அரிவாள் சங்கிலித் தொடருக்குமேல் வைத்துவிட்டு மரக்கட்டையை உருட்டினான் என்றால் அவனது உணர்வு எத்தகைய ஒழுங்கைக் கொண்டிருக்கும்?

தனது மனைவியினது அன்பைப் பரிசோதிக்கச் சிசிப்போ கடவுளது அர்த்தமற்ற கட்டளையை ஏற்று, உச்சிக்கும் மடுவுக்குமாகக் குற்றியோடு போராடுவதிலிருந்து இந்த அபத்தவுலகை விளக்க வேறொரு பாணி இருக்குமோ?

அதைத்தான் திரு மிகேல் மாயும் செய்திருக்கிறார்.

மலை உச்சியை நோக்கிய வெற்றிகொள் போர் ஒரு மனிதனது இதயத்தை நிறைத்திருக்குமாயின், சிசிப்போவை இந்தவுலகத்தின் மிக மகிழ்வுக்குரியவனாகவும்,மதிப்புக்குரியவனாகவும் அபத்தத்தின் முகத்தில் ஓங்கி உதைத்தவனுமாகவே நான் பார்ப்பேன்! அதையேதாம்,இந்த மிகேல் மாயும் செய்திருக்கிறார்.

தான் இதுவரை சேர்த்த செல்வத்தை மட்டுமல்ல தனது பெற்றோர் வழி முதிசத்தையும் இந்த மனிதர்கொண்டிருந்தார்.

மிகேல் தனது செல்வத்தையும்விடப்பலமானவர்.சிசிப்போ தான் உருட்டும் பாரிய குற்றியையும்விடப் பலமானவனாகவே பார்க்கத் தக்கவன்.அதனாற்றாம் இரண்டு செயலும் மிக வீரியமானவை!

மிகேல்(பெரும்முதலாளி) கூறுகிறார்: "முதலாளியம்மக்களுக்கு உலகச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதற்குத் தகுதியற்றது ("Der Kapitalismus ist unfähig, die Menschen am Reichtum teilhaben zu lassen." ) .


பிற்குறிப்பு : திரு மிகேல் மாய்(Michael May)இதனக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களையும்( 3.059.167.00 € ),கிட்டத்தட்ட முப்பது இலட்சம் யூரோவையும் ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சிக்கு நிதியாக-அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு (மார்க்சியக் கல்வியாளர்களைப் பயிற்றுவிக்கவும்,பெண்களைத் தொடர்ந்து போராட்டக் களத்துக்குத் தயார் படுத்தவும் தனது நிதியைப் பயன்படுத்த வேண்டுமெனப் பரந்த மனதுடன்...), வாடகை வீட்டில் மாதம்1365.யூரோ பென்சன்-ஓய்வூதியத்தைக்கொண்டு மிக எளிமையாக வாழ்கிறார்.தன்னைக் குறித்த பிரபல்யப்படுத்தலை விரும்பாமல் இருக்கும் ஒரு சாதரண மனிதரானார்.


மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.06.2011

Sunday, May 22, 2011

புலிகளுக்குப் பின்னான தமிழீழ அரசும்,நாமும்!

தமிழீழத் தற்காலிக உள்ளக அரசின்அரசியற்றுறைத் தலைவர் விடுக்கும் அவசர வேண்டுகோள்:

பாசிசப் புலிகளுக்குப் பின்னான தமிழீழ அரசும்,நாமும்!



ன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!,
முள்ளி வாய்க்காலில் பாசிசப் புலிகளோடு எமது மக்கள் வகை தொகையின்றி அழிந்துபோனார்கள்.இந்த அழிவு இன்று, இரண்டாவது நினைவுத் தட ஆண்டாக வந்து போயுள்ள நிலையில் நாம் தமிழீழ அரசுக்கான கட்டுமானத்தைப் பொறுப்பேற்கிறோம்.

எமது தேசம் அன்னிய இனங்களிடம் அடிமையாகக்கிடக்கிறது.

இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.புலிகளது அழிப்பு அரசியலானது நம்மை இத்தகைய நெருக்கடிக்குள் தள்ளியபோதும் புலிகளது புலம்பெயர் நிறுவனங்கள் மக்கள் சொத்தோடு தம்மைத் தலைமறைவாக்கி வரும் இன்றைய சூழலில், நாம் நாடுகடந்த தமிழீழ அரசோடு ஒரு இணைப்புப் பாலத்தை ஏற்படுத்தி எமது உரிமைகளைக் காக்கும் தற்காலிக உள்ளக அரசை நிறுவியுள்ளோம்.

நாம் நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் வர்க்க முரண்பாடுகளே காரணமாகிறது.இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில் தமிழீழத்தின் தற்காலிக உள்ளக அரசானது சமீப காலமாகச் செயற்கரிய திட்டங்களோடு நகர்கிறது.புலிகள் விட்டுச்சென்ற பாரிய வெற்றிடத்தை நிரப்பும் செயற்றிறனோடு மேற்குலக வியூகங்களுக்கு முகங்கொடுக்கும் அரசியற் தத்துவக் கட்டுமானத்தையும் நாம் தொட்டியக்கும் இந்தத் தற்காலிக உள்ளக அரசானது இன்றைய சூழலில் அகரீதியான முரண்பாடுகளைச் செவ்வனவே பயன்படுத்தி மக்களை ஓரணிக்குள் கொணர்கிறது.

இந்த நகர்வானது நமது மக்களை வலுவானவொரு வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ளி வருகிறது.எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போரை எண்பதுகளின் ஆரம்பத்தில் பற்பல குழுக்களாக இருந்த அமைப்புகள் முன்னெடுத்ததும் அதை சீரான முறைமைகளில் ஒருங்கமைத்து, வலுவாக்கி எதிரியை வென்றுவிட முடியவில்லை.எதிரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணித்தார்கள்.அவர்களுள் மிக முக்கியமான, தமிழ்பேசும் மக்களது எதிரிகள் பாசிசப் புலிகளே என்பது இன்று காலத்தால் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இது கடந்த இருபதாண்டுகளுக்கு முன் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.

இத்தகைய எதிரிகள்-அன்னிய நெருக்கடிகளால் எமது தேசத்தின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.இன்று, இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்படுத்தியபோது,அங்கே உதிரி இயக்கமாகவிருந்த தமிழர் தேசிய படையான நாம் வரலாற்றுப் போக்கில் தமிழ்பேசும் மக்களின் நிலப்பரப்புகளைக் கட்டுப்படுத்தித் தேசிய அரசுக்கானவொரு அரச கட்டமைப்பையும்,அதைக்காப்பதற்கான தேசிய இராணுவத்தையும் நிறுவிக் கொள்ள முயல்கிறது. இந்த வரலாற்று இயக்கப்பாட்டில் நமது தேசமானது தனக்கானவொரு அரசவடிவத்தையும்,பொருளாதாரப் பொறிமுறையையும் மெல்ல உருவாக்கிக் கொள்ள முயலும்!

இது காலத்தால் கருக்கொண்ட முரண்பாடுகளிலிருந்து தோற்றமுறுகிறது.

இந்த அரச வடிவத்தை-அரசுக்குரிய அனைத்து கட்டமைப்புகளையும் நமது தேசத்தில் நாம் இப்போது உருவாக்கிவருகிறோம்.

உலகுக்கு ஒரு இயக்கமாக இருக்கும் தமிழர் தேசிய இராணுவமானது உள்ளக மட்டத்தில் அரசவடிவமாகவும் இருக்கும் இன்றைய நிலையில், எங்கள் தேசத்துக்கான அரசினது தோற்றம் சாத்தியமாகியுள்ளது.இது உலக அங்கீகாரமற்ற நிலையால் வடிவத்தில் தேசிய விடுதலை இயக்கமாகவும்,உள்ளடக்கத்தில் அரசாகவும் செயற்பபடும்.அந்த முதன்மையான செயற்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் அவர்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது அரசியல் ஒத்துழைப்புடன் ஈழங்கடந்த வெளித் தொடர்புகளோடு இயக்கிவருகிறார்.இதை,ஏலவே நீங்கள் அறிவீர்கள்.நாம் பாசிசப் புலிகளது எச்சமாக உருவாக முடியாதென்பதைச் செல்வி ஜெயலலிதா அவர்களது வலுவான செயற்றிறனை நாடு கடந்த தமிழீழ அரசு உள்வாங்குவதிலிருந்தே நீங்கள் ஊகித்திருக்க முடியும்.



இதைப் புரிந்திடாத தமிழ் தேசிய அரசின் எதிரிகள் அந்த அரசை ஒரு சிறு குழுவாகவும்,குழு நலனாகவும் நமது உரிமைகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.இவர்களிடம் இருபதாண்டுகளுக்குமுன்னிருந்த கண்ணோட்டமே இன்றும் காணக்கிடக்கிறது.எமது போராட்டமானது பற்பல தடைகளைத்தாண்டித் தமிழ் தேசியத்தின் இருத்தலைச் சாத்தியப்படுத்தும் கட்டமைப்பை மெல்லக் கட்டியுள்ளது.

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழீழமானது தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது தேசிய தற்காலிக உள்ளக அரசு பயன்படுத்துவதும்,அதை அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஒருமித்தபடி முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.

நாம் கடந்த கால எமது அரசியற் செயற்பாட்டிலிருந்து எமது தேசத்தையும்,அதைக்காக்கும் எங்கள் தேசிய இராணுவத்தையும் ,அரச-நிர்வாகக் கட்டமைப்பையும் சிதறவிடாது காத்தாகவேண்டும்.அன்னியச் சக்திகளின் கவனமெல்லாம் எமது அரச கட்டமைப்பையும்,அதைச் சாத்தியமாக்கிய இராணுவ வலுவையும் உடைப்பதே நோக்கமாக இருக்கிறது.

எமது தேசம் விடுவிக்கப்பட்டு வருகிறது.

அஃது,இலங்கைப் பாசிசச் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் இன்று தவிர்க்க முடியாதிருக்கும்.உலக நாடுகளாலும்,நாடுகடந்த தமிழீழ அரசாலும் அரசியல் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பாசிச அரசு தக்க சூழலில் நொருக்கப்படும். அதற்கானவொரு வாய்ப்பை அந்த கட்டமைப்புத் தனக்குள் வலுவாக வைத்திருப்பதால் இதை நாம் காப்பதற்கான நமது கடமைகளைச் செய்வோம்.

எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு,அது நிர்மாணிக்கப்படவேண்டும்.இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும்.எமது வரலாற்றுத் தாயகத்தை நாம் நிர்மாணித்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக்கப்படவேண்டும்.


"தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையே நமது மூச்சு"



வணக்கம்.

ப.வி.ஸ்ரீரங்கன்


(தமிழீழத் தற்காலிக உள்ளக அரசின்அரசியற்றுறைத் தலைவர்)

தமிழீழம்-ஜேர்மனி
22.05.2011

Wednesday, May 18, 2011

இன்று,இன்னுமொரு மே,மேய்-மே : 18 ...

முள்ளி வாய்க்காலில் முரசெறிந்த" எங்கள் தலைமையும் "வீழ்ந்ததுவோ?

சேர்பவர்:

செல்வி.தமிழீழா,
மே/பா: முள்ளி வாய்க்கால்,
யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு,மற்றும்
வன்னிப் பெருங்காடு,
தமிழீழம்.


18.05.2011

ன்புக்குரிய ,தமிழ் ஈழா,
நலந்தானே எனக் கேட்கேன்-நான் " எல்லாம்" பெற்று, உன்னை வைத்து உண்டியல் குலுக்கியபடி சௌக்கியமாக...

இன்று,இன்னுமொரு மே,மேய்-மே : 18 ...

கொலைஞருக்குப் பின் தமிழ்நாட்டைச் சுற்றி,"தமிழ் உலகே ஜெய,ஜெய,ஜெயவெனப் பஜனையிட" உன் மேனி சிலிர்த்திருக்குமே?

இருக்காதா பின்னே! நா(கா)டு கடந்த தமிழீழ அரசு அம்மையாருக்கு வாழ்த்தனுப்ப,முள்ளி வாய்க்காலில் மண்டை பிளந்த(படி) துட்டக் கைமுனுவைப் பார்த்த பொரிகாலனுக்குக் கட்டையடித்த கையோடு,உன்னை வைத்துப் பெரு வர்த்தகஞ் சூடாய்ப் பிறக்கிறதாம்! இதுள், பெரு மகிழ்வை நீ அடைந்தாலும், பேரானந்தம் நிலைத்தாலும் எல்லாம் எங்கள் மேதகு(வி)தேசிய மாமனிதருக்கே சொந்தம்!இன்று,அவருக்கும்,அவர் பஜனைக் குழுவுக்கும் இரண்டாவது திவசம் செய்கிறார்கள் நம்ம தோழர்கள்- அம்மையாரிடம் "அரிசி" கொடுப்பதில் உருத்திரகுமார் முந்திக்கொண்டார்!



உனக்கும்,உனது குடிகளுக்கும் "விதவை-முடம்-சடமெனப் பல" பெறுமதிமிக்க அன்பளிப்புகளைத் தந்த மேதகுக்கு எந்த வார்த்தையால் பா(போ)ட்டிசைக்க?

இன்று,முள்ளி வாய்க்காலில் உன்னைக் கா(கூ)ட்டிக்கொடுத்த தினமெனச் சொல்லப்படுகிறது "புரட்சி" வட்டத்தில்!

எல்லாம் அறிந்த,முற்றுமு(பு)ணர்ந்த தேசியத் தலைவருக்குக் கோவணங்கட்டிய தினமும் இன்றுதானாம்!

அவரது கோ(கொ)ட்டைக்குள் உன்னைச் சொல்லித் தமிழ்ச் சனத்தைத் துரத்தித் துரத்திக்கொன்று குவித்ததும், தலைவருக்கு வெள்ளைக் கொடியுடன் சமாதானம் பிறப்பதென்ற பாட்டோடு உன்னை விலைப்படுத்தியதும் இந்த "மே 16-17-18" எனப் பகரப்படுகிறதே தமிழீழா!

நேசம் நிறைந்த என் தமிழீழாவுக்கு,உன் ஈழவன் எழுதும் வஞ்சகக் காண்டம் இது!வஞ்சியே-வனப்பே,உன்னை வைத்துப் பிழைப்பதிலிருக்கும் சுகம் அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கும்மிபோடும்புலித் தேசியம் புரட்டிய புரவர்கள், இப்பவெல்லாம் நிறைய-நிறைய...மகிந்தா மாமாவுக்குக் கூஜாத் தூக்குவதுதானாம் உனக்கான விடுதலை!உம்... என்ன மகிழ்ச்சிதானே?சுரேஸ்பிரேமச் சந்திராச்சாரியார் தானாம் இப்போதைய தேசியத் தலைவரெனவும் ஒரு மட்டத்தில் கே.பி.கூப்பாடு போடுகிறார் ஜீ.ரீவி துணைகொண்டு!


எதற்கெடுத்தாலும் உன் பொய்மையைப் புனைவதன் தொடர்கதைகளில் காலம் கிழிபடுகிறது கண்ணே!

கனவினில் உன்னுடன் நான் சல்லாபித்த காலவெளியுள் கண்டெடுத்த உன்னை எருமைக்கடாவில் வந்திருந்து வாட்டியெடுத்தான் தேசபிதா உருவத்தோடு.முள்ளி வாய்க்காலில் அவனுக்குச் சங்கு ஊதியிருப்பாய் நீ!போடி கள்ளி,பொல்லாதவள் நீ!நிச்சியம் நீ செய்திருப்பாய்!அநுபவித்தவள் நீதானே?உன்னைச் சபிக்க எனக்கேது தெம்பு பெண்ணே?

இதென்ன புதுக்கதை,புகழ்மிக்க உனது உடலொடு உரசப்பட்ட எத்தனையோ"ஆண்மைகள்"கடுப்படக்கக் காரியக் குட்டிகளாகக் கைகளில் எதையோ காவித்திருந்து இன்னுஞ்சில ஒட்டிய வயிறுகளை உன்னுடன் சல்லாபிக்கத் தேதி குறிப்பதாகக் கூட்டிச் சென்றதும் நீயோ நினைவிழந்து கிடந்தாயாமே அன்று?

புதுமை.

எத்தனையோ தெருக்களில் உன்னை விலைப்படுத்தும் இன்றைய கணம் வரை நான் உனது விழிக்கோலத்தின் நீண்ட கனவில் என்னை உனக்குள் தேடுகிற தருணத்தில் உனது மார்பில் கொடும்பற்கள் பதிய நீ மல்லாந்து கிடக்கிறாய் தமிழீழா!
வருபவர், இன்னும் போபவர் என்ற தொகை வகைகளில் உன்னைத் தொலைப்பதற்கு ஏனம்மா நீ மௌனித்தாய்?

காலமெல்லாம் கடுந்தொலைவினில் நீ,உன்னிடம், வருவதற்காய் என்னை மடலிட்டுக் கூப்பிட்ட அந்தப் பொழுதில், உன்னைத் தரிசிப்பதற்காய் நான் புனைந்த கனவுக்குள் நீ வாழ்வதற்குச் சம்மதியாத இந்தக் கணம்வரை உன்னை நான் வெறுத்தே வருகிறேன்.

ஈழாச்சி,என் கண்ணே!

விதவைகளுக்கு நீ அல்லவா உதாரணமானாய்? உன்னை வைத்து இன்னும் வருடுபவர்கள் குறித்து எதையுரைக்க? ஏகத் தலைக்கு எருக்கலையும்,போகத் தலைக்குக் நாடு கடந்த அரசும் கொடுத்தவளே! கோதையே, கொள்ளிக் கட்டையான உனது விடுதலைக்கு "ஜெயலலிதா அமையாரென" வாழ்த்தனுப்பும் வீரப் புலிகளையுங் கண்டாயோ? தலைவருக்குக் கோவணம்,மக்களுக்கு வேட்டென விலை வைத்தவர்கள்,இப்போது,வாழ்த்துப்பா மடல் வரைந்து மடிப் பிச்சை ஏந்தி... முள்ளிவாய்க்காற்றேவராம் இசைத்து அம்பிகை பக்கதரானார் அகதி வெளியுள்!

நினைவிருக்கிறதா?

என்றோ ஓர் நிலாப்பொழுதில் உன்னை வேட்டையாடிய ஒரு தொகைக்குள் நானும் உன்னைத்தடவிய வலிய பொழுதின் நிலைமறுப்பில் நானும் அழிந்ததை?

கட்டுக்கடங்காத ஆசைகள் அரவணைக்க, அடுப்படியில் பூனை படுத்த பொழுதுகளில் நானும் நீயுமாகச் சண்டையிட்ட தெருமுனையில்தான் தம்பிகள் உருவாகினார்கள்.நல்லது கண்ணே!

இப்போது ,நலமாக இருக்கிறாயா என்றுகூடக் கேட்க முடியவில்லை!

அவ்வளவுக்கு, உனது நிலைமைகளை என்னைவிட எவரறிவார் என் ஈழா!

இருப்பதற்கே இடமின்றி நீ அலையும்போதெல்லாம் உன்னைப் புணர்ந்தபடி உப்பிடுவதாகச் சொல்லும் தமிழ்நாட்டு அம்பிகையோ பட்டை நாமத்தோடு உன்னை அடிமைகொள்வதற்கும் உன்னையே ஏலமிட்டுக் காசு பண்ணுவதற்கும் எத்தனையோ தலைகளை உருட்டுவதற்கும் உன்னை அண்மித்தாளோ?அவள் வஞ்சகங்கொண்ட சூர்ப்பனகை-நம்பி விடாதே என் ஈழாத்தா.

அதன்பின் நரகத்தின் கோட்டையில் நீயே பீடாதிபதியென நானே விட்டு விடப்போகிறேன்.

நரம்பில்லா நாவு
நக்கியே பிழைக்கும் இன்னுஞ் சில பிணங்கண்டு.


முள்ளிவாய்க்காலில்,ஊருபேர் தெரியாத உன்னைக் கனவொடு தாக்கி மெல்லத் தின்ற பொழுதொன்றில் புலியின் தொண்டையில் உனது முள்ளெலும்பு சிக்கியது.அதையும் தோண்டிப் பறித்தெடுக்கச் சில உதிரிப் புலிகளும் நரிகளும் முனைகையில் எங்கிருந்தோ வரும் ஓநாய்கள் இவைகளை மெல்ல ஊளையிட்டே வெருட்டின.கொடுமையான இரைதேடலில் "உனது மார்பைப் பிய்த்துப் புசித்த கரங்களை நானே கொண்டிருப்பேன்" என்ற அவனது உரிமைபாராட்டலில் அவன் பலியெடுக்கும் இன்னும் எத்தனை உயிர்களையும் உன்னைச் சுற்றியே கதைபுனைந்து"காதல்மலரக்காய்த்து"அவர்களை வேட்டைக்கு அனுப்பிய பின்னிரவில் அவனே தலை பிளந்தபடி வான் பார்த்து மாயக் (கெடு)காலம் விரைந்தது!இந்த நிலைமையிலும் மண்டியிட்டா உனது பெண்மை நான் அடைய?மகத்தான எனது காதலுக்கு உனது மடி ஆஸ்த்தியாக இருப்பது அவசியமே என் ஈழாயி.

கச்சையில் கனமின்றி காயடித்த பொல்லாத பொழுதுகளில் என் தலை உதிர்ந்துவிடும் சூனியத்தை எவர் வைத்தாரோ தெரியாது.நான் உன்னைச் சுற்றிக் கண்ட கனவுகளைப் பறிப்பதற்கே காலத்துக்குச் சரியாகிப்போச்சு.இதுதான் என்னையொத்தவர்களின் இல்லாத"ஆண்மை"ஆண்ட பரம்பரைக் கனவொடு மந்திரித்து மாங்காய் பறிப்பதென்ற ( வி )தேசியத் தலைப் புரிதலுக்கு நீயே இப்படி ஆப்பு அடிப்பாய் என்று கனவிலும் காணேன் குஞ்சு ஈழா.

இது,முள்ளி வாய்க்காலில் எப்படியடி நடந்தது? எள்ளுக் காய்ந்தது எண்ணைக்கு,ஏனடி எலிப் புழுக்கைகளையும் கொன்று போட்டாய்?

கொஞ்சக்காலத்துக்கு முன் உன்னைப் புணரப்போகும் எல்லாவகைகளையும் அவனோ கூட்டி வைத்துக் கதை பேசிய சர்வதேசிய உண்டியல் ஊடகங்களுக்கு இன்று உனது மொழி புரியமுடியவில்லை.

உனதுவலி-உதிரம்-கண்ணீர் எனக்குக் கடுப்பைத் தந்திடினும்,நானும் அதுள் மயக்கமுற உனது உடலின் அநாயசமான அங்கக் கனிவுகள் என்னைப் புரட்டிப்போடுகிறது.

ஓர் கிழமைக்குள் உன்னைக் கொடுக்குக்குள் வைப்பதற்கெடுத்தவர்களை முள்ளி வாய்க்காலில்சரமாரியாகத் தாக்கிய வரலாறு அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.செருப்படிக்குள் நீ இப்போது முடங்கிக் கிடந்தாலும், முள்ளி வாய்க் காலில் மேதகு மேய்ப்பருக்குச் சங்கு ஊதிய உனது பெருமையே பெரும் பெருமை! எனது பழைய கனவைத் தாங்கிக்கொள்.

உன்னைமீட்டெடுத்து நான்மட்டுமே மிதித்துக் குஞ்சு பொருத்தலில் இருக்கும் பெருமையே எனக்கு விடுதலை.ஆதலால், நானே நாடு-காடு கடந்துவிட்டாலும், உன்னைச் சொல்லி அரசமைத்துப் புரவலரானேன் புரிந்து கொள்!இது, மே 18 முள்ளி வாய்க்கால் பேரிகை என.

இப்படிக்கு,

உன் ஈழவன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
18.05.11

Sunday, May 15, 2011

மந்தைத் தெருவினில்...

மந்தைத் தெருவினில்...

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" இரண்டாயிரம் வருடத்துக்குமுன் தமிழன், " Edel,sei der Mensch,hilfreich und Gut"-Goethe "மனிதன் மேன்மையானவன்,கருணையும் சிறப்பும் நிறைந்தவன்!"பதினோழாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த கோத்தே முதல் இன்றுஞ் சொல்லப்படும் மனிதமாண்பு மகா கேவலமாச்சு. இந்த மொழிவுகளுக்கும் பின்னால் நிகழ்ந்தவைகளுக்கும் என்ன சம்பந்தம் உண்டு?

கலைகள்-எண்ணங்கள்... முட்கம்பிகளுக்குப் பின்னே ஊசலாடும்!

இந்தத் தருணங்களைப் பற்றி எந்த மொழிவுகளோடு வருகிறோம்?

ஏதோவொரு தேவைக்காகப் பலவுயிர்களைப் பலியெடுத்துவிட்டு,மீளத் தகவமைக்கும்"துரோகி"ப் பட்டங்களுக்காக நபர்களைக் குறிவைக்கும் திசை தமிழுக்கான உயர்வைக் குறித்துக் கனவு காண்கிறதாம்.

மனித மொழிகள்அவனது எண்ணங்களைத் தெளிவாகச் சொல்வதற்குச் சேவிக்கிறது.எண்ணங்களைத்தானேதவிர எந்த உணர்வுகளையும் அது வெளிப்படுத்தும் ஊடகமில்லை!என்றபோதும்,அதன்வழியே தொடர்பாடலுஞ் செயலுக்குமான விளக்கும் பிறக்க வேண்டியுமிருக்கிறது.சமுதாயத்தின்-குழுமத்தின் நோக்கம் உலகைத் தொடர்புபடுத்திச் சொல்வதில் வார்த்தைகளே உடுத்திப் போர்க்கிறது.இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் தன்மைகளில் முழுமொத்த மொழியும் எதேச்சதிகாரத்துக்கிசைவாக மாற்றப்படுஞ் சந்தர்ப்பமே எனது விழிகள்முன் காண் செயலூக்கமாக விரிகிறது.



இயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைச் செயலில் மனிதப் படைப்பைச் சுமக்கவேண்டிய இந்த மொழியை அன்றைய சிலுவையுத்தம் முதல் சமீப நாசிகள் வரை உதாசீனப்படுத்தியது ஓரளவு வரலாறாக நாம் காணும்போதும், நமது வரலாறு சொல்லப்படும் மொழி எத்தகைய முறைமைகளில் துஷ் பிரயோகப்பட்டுள்ளதென்பதைக் குறித்துப் பார்ப்பனியத்தை வைத்து வியாபாரப்படுத்திய நாம், நமது "தேசிய விடுதலை"ப் போரில் புலிப் பாசிசம் எங்ஙனம் மொழியைத் துஷ்பிரயோகித்து மனிதத்தைக் குதறியதென்பதையொட்டி மௌனிக்கிறோம்.

"விடுதலைப் புலிகள்"மொழியையும்,வார்த்தைகளையும் மட்டுமல்ல அதன்வழியான அனைத்துக் கலைவடிவங்களையும் இசையையும்-ஒலியையும் தமக்கான இருப்புக்கும்,தம்மை எதிர்த்த-எதிர்க்கும் மக்களுக்குமான கொலைக் கருவிகளாக்கியிருக்கின்றார்கள்.அதன் தொடர்ச்சியே இப்போது ஆங்காங்கே காணும் புலி-தமிழ்மக்கள் ஆதரவுக் கருத்தாகப் பொதுவரங்கில் கொட்டப்பட்டுவருகிறது.இந்த மொழிவுகளுக்குள் இருக்கும் வரலாற்று மோசடியானது ஏலவே கட்டயமைக்கப்பட்ட மொழித் துஷ்பிரயோகத்திலிருந்து நியாயமுறுகிறது.

கிட்லர் தனது எஜமானர்களுக்காக 32 இனக் குழுமங்களை இதன்வழி கொன்று நியாயப்படுத்தினான்.பதினொரு மில்லியன்கள் மக்களது உயிரைப்பறித்தபோது உலகத்துக்கு மொழியப்பட்ட உரைகளுக்குள் ஒதுக்கப்பட்ட நியாயம் இன்றும் பேசுபொருளாகப் புரட்டி எடுக்கப்படும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நாமும் வாழ்ந்து சாகிறோம்.எனினும்,எமது மக்களுக்கு "ஈழஞ்" சொல்லி உயிர்க் கொள்ளையிட்டவர்களோ தம்மீதான அனைத்துக் கிரிமினல் எத்தனங்களையும் அப்பாவிகள்மீது ஏவிவிட்டு வர்த்தகஞ் செய்யும் இந்தக் கொடுமையை எதிர்கொள்வதும்-புரிந்துகொள்ள முனைவதும் அவசியமில்லையா?

விடுதலைப் போராளிகள் சீருடையில் தம்மை எதிர்த்தவர்களையும்,தமக்கு ஆதரவு தரமறுத்தவர்களையும் வேட்டையாடிய ஒரு பயங்கரவாத அமைப்பின் அழிவில் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லை!மீளவும்,அவர்களது மொழியைத் தூக்கியபடி அலையும் அவதூறாளர்கள் அதை மக்களுக்கான புரட்சி உரையாடலாக மாற்றுகிறார்கள்.இது ஆபத்தானது-அழிவுக்குள் நிரந்தரமாக நம்மைக் கட்டிப்போடவல்லதில்லையா?

மக்களது சுதந்திரத்தையும்,ஆன்ம இருப்பையும் மறுதலித்து அவர்களது அனைத்து வளங்களையும் கொள்ளையடித்த காட்டுமிராண்டி யுத்தம்-கொலைகள் முள்ளிவாய்க்காலில் கைமாறுவதில் அதே மொழி, மீளத் தகவமைக்கப்பட்டு மக்களை மீள அடிமைமைச் சேவகத்துக்குத் தயார்ப்படுத்துகிறதே!இது,எந்த நியாயத்தை மக்கள்மீது பொழிகிறதோ அதே நியாயம் தமது தலைக்கே திரும்புமென்பதை இலங்கைப் பாசிச அரசு புரிந்துகொண்டிருப்பினும் அதன் இருப்புக்கு இந்த அழிவுவாத அடக்குமுறை மொழிவுகள் அவசியமாக மேலெழுகிறது.அவ்வண்ணமே நமது "புரட்சி"க்காரர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறது!

இங்குதாம் கலையும்-எண்ணங்களும் இதற்கெதிரான கூரிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றப்பட்டு, அந்த மொழியை முதலில் விடுவித்தாகவேண்டும். தமிழ்ச் சூழலுக்குள் இத்தகைய எந்த உரையாடலும் இதுவரை மக்களது நலனிலிருந்து எழவே இல்லை!கலையும்-எண்ணமும் ஏதொவொரு அதிகாரத்துக்கிசைவாகக் கட்டியமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாம் கூறுகிற அனைத்து எதிர்க் கருத்தாடலும்-கதையாடலும் அதே பாணியில் மொழியைத் துஷ்பிரோயாகஞ் செய்கிறது. இது சமீப காலமாகத் தமிழுக்குள் எழுந்த அனைத்து ஆக்க இலக்கியத்துக்கும் பொருந்திப் போகிறது.ஒன்று புலிச்சார்பு அல்லது உலக-இலங்கை அரச ஆதிக்கத்துக்குச் சேவையாற்றும் பிரயத்தனத்தில் ஈடுபாடுகொள்கிறது.

இனிவரும் பொழுதேனும்,இத்தகைய குறுகிய நோக்ககங்களைக்கடந்து,புலிப்பாசசத்தின் இருண்ட பக்கங்களையும்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தினது உலகளாவிய கூட்டோடிணைந்த மக்கள் விரோத அனைத்து முகங்களையும் பெறுமதிமிக்க மொழியைக் கூரிய ஆயுதமாக்கி எதிர்த்தெழுவேண்டியுள்ளது.

இதுவரை எந்தவொரு தமிழ் நூலும் மக்கள் பக்கத்தின் சாட்சியமாக இருக்கும் அருகதையையும் பெறவே இல்லை!மக்களது வலியைப் பேசுவதாகச் சொல்லப்படும் உரையாடல்கள்,கதைகளெல்லாம் தமது எஜமான விருப்புக்கிசைவாகவே மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்துகொண்டிருக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி
15.05.11

Sunday, May 01, 2011

1 May 2011:சிந்தி-ரோமா மக்களுக்காக...

சிந்தி-ரோமா மக்களுக்காக...

யிரம் பேர்கள் ஊர்வலத்திலும்,இறுதி நிகழ்வில் 5000 பேர்கள் வரை திரண்ட இந்த(01.05.2011) மேதின ஊர்வல நிகழ்வில் வழமைபோலவே நான் எம்.எல்.பி.டி.( MLPD )கட்சி ஒலிவாங்கியில் உரையாற்றினேன்.இவ்வாண்டினது கோசங்கள்,பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக் குறித்தானதாக இருந்தபோது,பொருளாதாரப் பேராசிரியர் றுடேல்ப் கிக்கல் ( Rudolf Hickel von der Universität Bremen_பிறீமன் பல்கலைக் கழகம் ) மிகச் சிறந்த உரையொன்றைச் செய்தார் (அவருக்கு கரங்கொடுத்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு 50 யூரோ பணத்தை அவரது கையுக்குள் திணித்தனர்,அவரோ வேண்டாமெனும்போது, உங்கள் பிரயாணச் செலவுக்கென்றனர்).எப்பவும்போலவே இம்முறை இலங்கைப் பிரச்சனை குறித்து என்னால் எதுவுமே பேசமுடியவில்லை!


எனது மனத்திரையெங்கும், உலகெங்கும் நசிபடும்-பாதிக்கப்படும் அந்த மக்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டுமென அவா ஏற்ப்பட்டது!

எந்தத் தலைமையுமின்றி-கேட்பாருக்கு நாதியின்றித்தவிக்கும் ஒரு மகட்டொகுதி குறித்துக் கவனயீர்ப்பு செய்யவேண்டுமென்றே கடந்தசில நாட்களாக உறுதிபூண்டேன்!எங்கள் மக்களுக்காவது ஒரு டக்ளஸ்-சோ அல்லது சம்பந்தனோ,நாடுகடந்த தமிழீழ அரசோ இருக்கும்போது, இந்த மக்களை பிரான்ஸ் சாவதிகாரி சார்கோசி படாதபாடு படுத்தினான்-நாடுகடத்தினான்.போதாக் குறைக்குக் கங்கேரி தேசத்து நவ நாசிய அரசோ அவர்களை வீடுவீடாகச் சென்று நரவேட்டையாடியபோதும் கங்கேரியை ஐரோப்பிய கூட்டமைப்புக்குள் வைத்திருக்கும் ஐரோப்பியப் பாராளுமன்றமோ வாயே திறப்பதில் பின் நிற்கும்போது,அவ்வப்போது ஸ்பீகல் ஒன் லையின் சஞ்சிகை கட்டுரை போட்டதைத் தவிர வேறெதும் நடக்கவில்லை!

இரண்டாம் உலகயுத்தத்துக்கு முதலே நர வேட்டையாடப்பட்ட சிந்தி-ரோமா மக்கள் அவர்கள்!அன்று,ஜேர்மன் கைசர்,துருக்கிய ஒஸ்மானியப் பேரரசு முதல் கிட்லர்வரை அவர்களை வேட்டையாடியபோது,இப்போது, பிரான்ஸ்,கங்கேரி அரசுகளென அவர்களை நரவேட்டையாடும்இந்த இனத்துவச் சுத்திகரிப்புக் குறித்து எவருக்குப் புரியும் அவர்களது வலி?

[மேதின ஊர்வலத்துள்...]

சிந்தி-ரோமா மக்கள் இந்தியாவின் தலையில் உதித்தவர்கள்.நாமோ பாதத்தில்.இருந்தும் எமது மக்களெனக்கொண்டு நாலுவார்த்தை சொல்ல எவருமே இன்றிக்கிடந்த இந்த மேதினத்தில் நான் கவனயீர்ப்பாகக் கருத்துக்களை வைத்தேன்!

லிபியாவில் இருபது மக்கள் கொல்லப்பட்டபோது, அந்த அரசையே கலைப்பதற்கும்,ஆட்சி மாற்றஞ் செய்யவும்,ஐ.நா.1973 சாசனமிட்டுப் படையனுப்பிக் குண்டெறிந்து, "மனிதாபிமான"ப் போர் செய்வதும்,கங்கேரியில்-பிரான்சில் பலாத்தகாரப்படுத்தப்பட்டுக் கொன்றும், தேசம்விட்டு நாடு கடத்தியும் நாளும் அவலப்படும் இந்த மக்கட் கூட்டத்தை எவருமே கவனங்கொள்ளவில்லையென்றும்,ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட நவ பாசிச அரசான கங்கேரியின் ஆட்சி அதிகாரத்தைப் பார்வையாளராகக் கண்டிக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்பின் அயோக்கியத் தனத்தை அம்பலப்படுத்தியும், நான் கவனயீர்ப்பு உரையைச் செய்தேன்.வீதியெங்கும் எனது உரைக்குப் பின்பாகப் பலர் அந்த மக்களுக்காவும் குரல் கொடுத்தபோது எனது நோக்கத்தின் நிலை வெற்றியடைந்தது.

ஊர்வலமாகச் சென்ற எனது தேசத்தவர்கள் வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.மூன்று புலிக்கொடியும்,முப்பது பேர்களுமாகச் சுருங்கிய எனது தேசத்தவர்களது ஊர்வலம் இறுதியில்,புரியாணி,அப்பம் சுட்டு விற்கும் கடையில் மையங்கொண்டது.

ஈ.ஜீ மெற்றால் [IG Metall]தொழிற் சங்கத் தலைவரது (Klaus Reuter
Vorsitzender DGB-Region)வாயிலிருந்து வழமைபோலவே "தமிழர்களுக்கு நன்றி" என்ற வார்த்தை மட்டும் வந்தது.இந்த நன்றி எதற்கானதென நான் அறியேன்.

சிந்தி-ரோமா மக்களது நிலைக்கொப்பவே நாம் சென்றாலும் நம்மை வழி நடாத்துபவர்கள் வர்த்தகஞ் செய்வதிலேயே கவனப்பட்டுக் கிடப்பதை நான் பலமுறை கண்ணாற் பார்க்கிறேன்.இந்த மேதினத்திலும் இதுவே கதை!

[Sahra Wagenknecht]

இந்த ஊர்வலத்திலும்,இறுதித் தட்டி-தள[Die Linke-Stand] விளம்பரத்திலும் நான் மிக முக்கிய இடதுசாரித் தோழர் சாரா வாகன்கினெக்ற்றைச் [ Sahra Wagenknecht ]சந்தித்தேன்.அம்மணியைப் பார்த்துக் கண்கலங்கியும்,"நீ ரோசா லுக்சம்பேர்க்காக மாறவேண்டும்,ஏனெனில், நாம்(உலகத் தொழிலாள வர்க்கம்)தாயை இழந்த குழந்தைகளாக இருக்கிறோம்,எமது போராட்டத்தை ஒரு ஒழுங்கமைந்த கட்சி வழி நடாத்தத் தவறிவிடுகிறது சாரா,நீ,ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அதிர்வுகளைச் செய்வதில் வல்லவள்.உனது காலத்தில் நீ,எனக்கு ரோசா லுக்சம்பேர்க்" என்றேன்.தன்னை நிதானப்படுத்திய சாராவோ, "தோழனே,நான் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.என்மீது வைத்திருக்கும் மதிப்புக்கு நன்றி" என்றாள்!இன்றைய ஜேர்மனியில் சாரா வாகன்கினேக்ற் மிக நிதானமான அறிவாளி.அவர் தி.லிங்க [ Die Linke]கட்சியின் உப தலைவர்.ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர்.தலைசிறந்த பொருளாதார நூல்களை எழுதியவள்,மிகச் சிறந்த மார்க்சியரைச் சந்தித்துக் கரங் குலக்கும்போது எமது அரசியல் நிலவரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது.

இப்படியாக,இன்றைய மேதின ஊர்வலம் சில நோக்கத்தை மீள வலுப்படுத்தியது.இது,எனது செயற்பாட்டின் இன்னொரு முனை வெற்றியாகவே நான் பார்ப்பதில்,ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சிக்கே[ MLPD] அனைத்து மாண்பும் சேரும்.அவர்களே,வருடா வருடம் தெருமுனை உரையாடலுக்கு எனக்கு ஒலிவாங்கி தருவதும்,என்னை ஜேர்மனிய மக்கட் குழாத்தோடு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அனுமதிப்பவர்கள். சர்வதேசியத்தை உயர்த்திப்பிடிப்பதில் அந்தத் தோழர்களது மனவுறுதிக்கு முன் நான் கூனிக் குறுகுகிறேன்! ஏனெனில்,நாம் தமிழர்கள்,எந்த மக்களுக்காவும் இதுவரை குரல் கொடுக்கவும் இல்லை! எவருடனும் தோழமையையும் கொண்டு உரையாடுவதும் இல்லை! இதுவே,இன்றைய டுசில்டோர்ப் [Düsseldorf ] மேதின ஊர்வலத்திலும் தொடர்கதையானது.

என்னே நம் போராட்டப் பாசறை அனுபவம்!புலிகளுக்குக் காவடி எடுத்தவர்கள் இறுதியில் மூன்றே மூன்று புலிக்கொடியுடன் சங்கமமானார்கள். முன்னூறிலிருந்து முப்பதாகவதைக்கூடக் காணத் தவறும் நம்மவர்கள்,அப்பம் சுட்டு விற்பதில் தமிழீழத்தைக் கண்டடைந்தனர் இன்று.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
01.05.2011

Friday, April 29, 2011

ஐ.நா. அறிக்கையைவிட...

ஐ.நா. அறிக்கையைவிட
இக் கேள்களுக்கு விடையே முக்கியமானது.



முள்ளி வாய்க்காலது பாடத்துக்கு முன்பிருந்தே (இதுவரையான) நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன?


சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??


இனவொடுக்கு முறைக்கு எதிரான கோரிக்கைகள்(...)கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது???


இவை கேள்கள் மட்டுமல்ல.வரலாற்று முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கான தேடுதலுமாகிறது! ஐ.நா.அறிக்கைக்குப் பின்பான தமிழ்ச் சிந்தனை முறையானது மீளத் திட்டித்தீர்ப்பதிலும்,ஒருவரையொருவர் தாக்குவதிலும் காலத்தைக் கடத்திட முடியாது.புலிகளது இயக்கவாதக் கருத்தியலை மீளத் தகவமைக்கும் "புரட்சி"க்காரர்களிடையே நிலவுகின்ற இனஞ்சார் குறுகிய அரசியற் பார்வைகளை இனிமேலும் விருத்தியாக்கி மக்களைக் குறித்து அரசியல் செய்வது இயலாது காரியமெனும் ஆரம்பப் புரிதல்கூட விசும்பு நிலையிலேகூட புலம் பெயர் தளத்தில உருவாக முடியாது கருகிவிடுகிறது-இஃது,ஆபத்தானது!


நமது "தேசிய"விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும், இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இன்றும் இருந்தே வருகிறது.இஃது, நம்மை அந்நிய சக்திகளின் வலையில் வீழ்த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தியும், நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டியும், நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டிருந்தது.இந்தச் சூழலுக்கு அடிநாதமான போராட்டத் தளத்தையும் கருத்தியற்றளத்தையும் போட்டுக் கொடுத்தவர்கள் எந்தெந்து இரூபத்தில் இப்போதும் நமது மக்களுக்குள் இருக்கின்றார்கள்-இறந்தார்கள் என்பதைத் துல்லியமாகப் புரிந்தாலேயொழிய மறுவாழ்வு, தமிழ் மக்களது உரிமைசார் கோரிக்கைகளுக்கு இனிமெற்கொண்டிருக்க முடியாது.


இன்றைய புலம்பெயர் தமிழ் குழுமத்திடம் நிலவும் பாரிய பலவீனமானது இவர்களது பார்வையின் மையப் புரிதலைக்கொண்டே அளவிடக்கூடியதாகவும் இருக்கிறது. ஐ.நா. அறிக்கையிலிருந்து மீளத் தொடரும் "பட்டாசு கொளுத்தும் மனோபாவம்" ஆசிய மூலதனத்துக்கு இசைவாக நகரும் இலங்கையினது அரசியலைப் புரிவதிலும்,காலந் தாழ்த்திய வியூகச் சிக்கலைக்கொணருகிறது.


நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்கவாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான இந்தத் தமிழ் உளவியலை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாதிருக்கிறது!புலிகள் குறித்த சரியான புரிதலும்,அவர்களது போராட்டத்தின் திசைவழியில் தமிழ் மக்கள் இன்று படும் வரலாறறியா வேதனைக்கும் சரியான ஆய்வுகள் எதையும் எவரும் இதுவரை முன்வைக்கவில்லை!


முன் வைக்கத் தக்க தகமையோடு முன்னெழும் எழுத்துக்களும் இலங்கை அரசினது எல்லைக்குட்பட்ட வியூகங்களுக்கிசைவாகச் சரிகின்றன.அது,நாடுகடந்த அரசினது பொறிமுறைமைகளானலுஞ்சரி அல்லது மிதவாதத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினது "கோரிக்கைகள்"ஆனாலுஞ்சரி, இவைகளுக்கான பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்தடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்த சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப் பூர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு ஐ.நா. அறிக்கைமீது நம்பிக்கிடக்கும் கனவோ மேற்குலக அரசுகளது பித்தலாட்டத்துக்கு நேரடியாக மொழியாக்கஞ்செய்யும்"தமிழ் மக்களுக்கு நியாயம்" கேட்பது,என்பதை எப்படித்தாம் புரிய வைப்பது?


ஈராக்,அவ்கான்,லிபியா கண்முன்ன தொடரும் மேற்குலகப் பயங்கரவாத யுத்தங்கள் கொட்டிச் சிந்தும் குருதியும்,உடலங்களும் நமக்கு "நியாயம்"கேட்கும் நிலைமைகளுக்கு ஏதுவாக இருக்கின்றதா?


தமிழ் மக்களது உரிமைகள்-நியாயங்கள் ஐ.நா.வுக்குள்ளோ அல்லது பாராளுமன்றங்களுக்குள்ளோ இல்லை என்பதை மேற்குத் தேசங்களால் உதைபடும் குர்தீஸ் மக்கள்-பாலஸ்த்தீன மக்களது பாடத்திலிருந்து பெற முடியாதோ? பலம்பெற்று,நிலைபெறும்எதிர்ப்புப் போராட்டங்களது திசைவழியில் அந்த மக்களோடும்-போராட்டங்களோடும் தோழமை பேணிச் சென்று "நியாயம்"கோரவேண்டிய நாமோ, நடுத்தெருவில் ஐ.நா. அறிக்கை வாசித்து வருவதில் திருப்பதி அடைகிறோம்.


குறைந்த பட்சமாவது நாம் மேற்கேட்ட மூன்று கேள்விகளுக்கும் பதில் கண்டாக வேண்டும்.


அதாவது,


1: நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணிகள் என்ன?


2: சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??


3: இனவொடுக்கு முறைக்கு எதிரான கோரிக்கைகள்(...)கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது???


இந்தக் கேள்விகளுக்குச் சரியான முறைகளில் விடை தேடாதவரை நாம் இழந்த இரண்டு இலட்சம் மக்களதும் உயிருக்கும் எந்த மரியாதையுஞ் செய்யத் தகமையற்றவர்கள்நாம்.அவர்களது அழிவுக்கு இலங்கை அரசே காரணமென்பதைக்கூடச் சொல்ல முடியாதளவுக்கு நமது நியாயங்கள் வலுவிழந்தே கிடக்க முடியும்.இந்தப் புள்ளிற்றாம் கீரன்களோ அல்லது எந்த வீரன்களோ இலங்கை அரசுக்கு புதிய ஜனநாயக வரைவிலக்கணஞ் சொல்ல முடிகிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.11

Saturday, April 09, 2011

நான் தந்தையாகவே இருக்கமுனைகிறேன்,போதகனாக இல்லை!

நான் தந்தையாகவே இருக்கமுனைகிறேன்,போதகனாக இல்லை!

[Ich will dein Vater sein und kein Prophet.]


"எவரொருவர் புரிவதற்கு முனைகிறாரோ
அப்போது, அதைப்பற்றிப் புரிந்துகொள்வது முடியாதுபோகிறது!"


"Wer zu verstehen beginnt, versteht nichts mehr."-Erich Kaestner.

எரிக் ஹெஸ்னர்! ஜேர்மனியக் கவிஞன்-போர் எதிர்ப்பாளன்.நாசிகளால் தனிமைப்படுத்தப்பட்டு,அவனது நூல்களையும் பாசிசம்கொளுத்தும்போது உலக மனிதனாக உருப்பெற்றவன்.அவன் குறித்தும்,அவனது கவிதாவுலகு குறித்தும் தொடராக எழுதுவதைத் தவமெனக்கொண்டு தொடராக எழுதுகிறேன்.எனக்கிருக்கும் அருகிய நேரத்துள் தமிழக்கு எரிக் ஹெஸ்னரைக் கொணர்வதென அவாக்கொண்டேன்!

தூங்க முடியவில்லை!தூக்கந் தொலைந்த பொழுதுகளாக எனக்கு முன் காலம் பொழுதுகளாக மலரும் தினமொரு விடியலில் நான் தவிக்கிறேன்-தொலைகிறேன்.எல்லாம் எத்தனை விடிவுகளில் கருக் குலையும் செயல்வினைமிக்க ஊக்கத்தோடு என்னைவிட்டபாடில்லாது வந்து குந்திக்கொள்ளும் குந்துக்கட்டாய் எனது அகம். எனக்கிருப்பது காலம் ஒன்றுதாம்.தனிமைப்படுத்தப்பட்ட மனிதன்!

ஒருவிடியலில் தனது முழு எழுத்தையும் நெருப்பிட்டுக்கொளுத்திய கிட்லரது அடாவடித்தனத்துள் தன் தேசத்தைவிட்டும் பிரியமுடியாத ஏக்கத்தின் வினையில் சுவிற்ஸெர்லாந்திலிருந்த தனது சக எழுத்தாள-புத்திஜீகளையெல்லாம் விட்டுத் தேசம் திரும்பும்போது,

„Ich bin ein Deutscher aus Dresden in Sachsen.
Mich läßt die Heimat nicht fort.
Ich bin wie ein Baum, der – in Deutschland gewachsen –
wenn’s sein muss, in Deutschland verdorrt.“

"நான்டொச்சு மொழியானவன்,
சக்ஸ்சன் மாநிலத்து டெறஸ்டன் நகரத்தவன்
என் தேசம் என்னைக் கைவிடுவதாகவில்லை.
நான் ஒரு விருட்ஷத்தைப் போன்றவன்.அது, ஜேர்மனியில் வளர்ந்தது.
அஃது உண்மையானால்,ஜேர்மனியல் பட்டுவிடப் போகிறது."



முதலாவதும்,இரண்டாவதும் மகா யுத்தத்தைப் பார்த்திருக்கிறான்.முதலாவது உலகப்போருள் இராணுவவீரானகப் பயிறுவிக்கப்பட்டும்,இரண்டாவது உலக யுத்தத்துள் மனிதங்கொண்ட உலகப் படைப்பாளியுமாக...

தேசம் தொலைத்து நீண்ட தூரம் போனவர்கள் நாம்!யுத்தம்,ஆட்கடத்தல்-கொலை,இனவாதத் தூண்டுதல்கள் எங்கேயும் நிலவுகிறதா?கருத்துக்களை எதிர்கொள்ளுதலென்பதைவிட உண்மைகளைப் பேசுவதால் உயிர் பறிப்பானது தொடர் நிகழ்வாகியது எங்கேயும்தாம்.எந்தத் திசையிலும் பாசிசம் முனைப்புறமுடியும்.பாசிசமானது படைப்பு நிலையை முறியடித்துவிடமுடிவதில்லை என்பதற்கு நாம் ஜேர்மனியப் படைப்பாளிகள் பலரிடமிருந்து கற்க முடியும்.

"Ich möchte endlich einen Jungen haben,
so klug und stark wie Kinder heute sind.
Nur etwas fehlt mir noch zu diesem Knaben.
Mir fehlt nur noch die Mutter zu dem Kind."

"எனக்கென ஒரு பையன் வேண்டும்,
இன்றைய குழந்தைகளைப்போல்
புத்திமானாகவும்,பலவானாகவும்!
இந்தப் பையனுக்காக என்னிடம் ஒரு குறைமட்டுமே இருக்க முடியும்.
இந்தப் பையனுக்கான தாய் என்னிடமில்லை."


பெண்ணின்றி மறுவுற்பத்தி இல்லை!பேசும் சங்கதிகள்,ஆசைப்படும் கருப் பொருளாக வெளிப்படினும் அததற்கான இருப்பு மறுக்கப்படும் உலகில் எதற்காவும் ஆசைப்படுதல்-கனவு காண்தலே சாத்தியமாகிறது.


எரிக் ஹெஸ்னர் மிகுந்த நெறிகளுக்குள் சீவித்தவர்.அவரது வாழ்நிலையில் இந்த நெறி பிறழ்தலை அவர் எப்போதுமே மீறிட முடியாது சிக்கல்பட்டார்.உலகம் அப்படியில்லாதபோது தனிமைப்பட்டார்-தனிமைப்படுத்தப்பட்டார்.ஒரு பொழுதேனும் தயக்கமின்றி மனிதப் பொதுத் தன்மைக்கு அப்பால் வாழ்ந்திருந்தார்.அவர் உலக மனிதராகவும்,தேசப் புதல்வனாகவும்,குழந்தைப் பிரியனாகவும்,யுத்த எதிர்ப்பாளனாகவும் அவர் மலர்ந்தே மறைந்திருப்பதை அவரது அழியாக் கவிதைகள் இன்றும் பறைசாற்றுகிறது.


"Schlaf ein, mein Kind! Sei still! Schlaf ein!
Man kann nichts Klügres machen.
Ich bin so groß. Du bist so klein.
Wer schlafen kann, darf glücklich sein.
Wer schlafen darf, kann lachen."




"தூங்கு மகனே,தூங்கு.அமைதியாய்,ஆழ்ந்து தூங்கு!
எவரையும்,எவரும் புத்தியாளர்களாக்க வேண்டியதில்லை.
நானோ பெரியவன்,நீயோ சிறியவன்.
எவரால் ஆழ்ந்து தூங்க முடிகிறதோ,அவரே மகிழ்வாய் இருக்கமுடியும்.
எவரால் ஆழ்ந்து உறக்கங் கொள்ள இயலுமோ,அவர் சிரித்திருக்க இயலுமாகும்!"


தொடரும்....

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.04.11

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...