Sunday, October 12, 2008

ஆனந்தப்பா காதலிக்கும் இந்தியா அழகானதா?

டானியலின் உலகம்:அது இதயத்தின் மொழியாக...

"பூமி அதிர்ந்தது
இந்து சமுத்திரம் பொங்கி எழுந்தது
இதயம் சிதையச் சுனாமி நிகழ்ந்து
எங்கள் கரைகள் அமிழ்ந்து போயிற்று
எஞ்சியதெல்லாம் மயானம் ஆகின"
.-டானியல்(ஆனந்தப்பா)



ஈர விழியோடு எம்மையெல்லாம் கூவி அழைத்து,சுனாமியின் வலியைத் தன் உணர்வோடும்-வலியோடும் சொன்ன டானியல்-எமது மண்ணின் துயருக்காக எந்தப் பொழுதிலும் சிலுவை சுமப்பதில் தன்னைப் பிணைத்துக்கொண்டவன்-போராளிக் கவிஞன்-கலைஞயன்!.மனிதத் துடிப்புடைய சிந்தனைமிகு இசைஞன்.இலக்கியச் சந்திப்பினது அரங்குகளில் மக்களின் வலிகளைப் பாட்டாகப் படித்துக் காட்டியவன்,தனக்குள் கவிந்திருக்கும் இசைக்கோலங்களை எமது மண்ணின் வலியோடு குழைத்துத் தந்து, எமது விழிகளை அன்றே ஈரவிழிகளாக்கியவன்.சுனாமி அனர்த்தம் கண்டு, உலகின் எந்தக் கவிஞனக்கும் அநுபவமாகாத மொழியைச் சாகா வலியின்மீது கட்டி ஈரவிழிகளாக எமது விழிகளை என்றும் வைத்திருப்பவன்.இன்றோ,அவன் மேலே சொன்னமாதிரி,எம்மிடம் எஞ்சியதெல்லாவற்றையும் நாம் மயானம் ஆக்கிவரும் இன்றைய சூழலில்,ஆனந்தப்பாவின் சிந்தனையின் இசைக்கோலஞ் சொல்லும் இந்தப் புதிய இசைக்கோர்வை பன்னிரெண்டு பாடல்களோடு இணையத்தில் நமக்காகக் காத்திருக்கிறது.



இந்தப் பாடல்களை நாம் எல்லோருமே மிகவும் உள்வாங்கி,அதற்குள் நமது மனக் கோலத்தைத் தரிசிக்க முடியும்!இது புதுமையல்ல.தமிழ்ச் சினிமாவின் பாடல்களைத் தாண்டி நாம் எமது இரசனையை வரிவுப்படத்த அந்தச் சினிமாவிட்டுவைக்கவில்லை.இன்று, இந்தப் பாணியைத் தாண்டித் தரும் எந்தத் தமிழ் இசைக்கோலமும் நம்மிடம் எடுபடுவதில்லை.இதை மிக நேர்த்தியாக உணர்ந்த டானியல் தனது புதிய பாடற்றொகுப்புக்குள் இதைத் தாண்டிக் கடக்கவிரும்பவில்லை!



ஆனந்தப்பா தனது கவியாற்றலை மிகத் துள்ளல் இசையோடிணைத்து உருவாக்கிய பன்னிரு பாடல்களும் நம்மோடு,நமது காதல் மனதைப் புதுப்பித்துக் கொள்கிறது.


இப்போதெனக்கு 46 வயது கடந்துவருகிறது.எனினும்,எனது காமத்தினது காதல் விருப்புக்குக் கன்னிக்கோலம் 16 உம்,17உம் படுத்தும்பாடு பெரும்பாடு.இறக்கைகட்டிப் பறக்கும் எனது ஆசைக்கு என்றும் பதினாறு. இந்தவொரு விஷயத்தில் எல்லையென்பதை என்னால் இட்டுக்கொள்ள முடியாதுள்ளது.நான் பார்க்காத உலகத்திலெல்லாம் என் மனம் பாய்ந்து,என்னை அந்தப் பதினாறு வயதுப் பருவத்துப் பொலிவுகளுக்குள் மீளவும்,மீளவும் தள்ளும் இந்த உலகம் மிகவும் உண்மையானது.இதுதாம் உயிரின் இருத்தல்.நித்தியத்தோடு பிணைவதில் எனது உள்ளொளி உருவங்கொள்கிறது!



இன்றையப் பௌதிகப் புரிதலில், ஜேர்மனிய இளம் பௌதிக விஞ்ஞானி மார்க்கோவ் நீம்;(Physiker und Bestsellerautor Prof. Dr. Markolf NIEMZ)கைடில்பேர்க் யூனிவெர்சிட்டியில் பௌதிகம் மற்றும் மருத்துவத் தொழில் நுட்பப் பேராசிரியராக இருக்கிறார்.ஒரு பௌதிகவாதி அனைத்தையுமே தரவுகளோடு எடுத்து வைக்கும்போது,இந்த இளம் பேராசிரியர் ஜேர்மனியப் பௌதிக ஆய்வுவட்டத்துக்குள் தனது ஆய்வுகளால் ஒரு பெரும் தாக்கஞ் செய்பவர்.இவர் சொல்கிறார்"ஆன்மாவானது மரணத்தின்பின் ஒளியின் வேகத்தை எடுத்து நித்தியத்தோடு கலந்து விடுகிறது"(Lucy mit c-Mit Lichtgeschwindigkeit ins Jenseits.ISBN 978-3-8334-3739-7).



"ஆன்மா-மரணம்..."


மரணம் குறித்து ஆய்வுகளைச் செய்பவர் மார்க்கோவ் நீம்.ஆன்மா என்பது உயிர்தாங்கிய உடலினது கருப்புப் பெட்டி-Black Box என்கிறார்.அதாவது, விமானத்திலுள்ள பிளக் பொக்ஸ்!


இது குறித்து நான்:


"................."

மரணம்.


இதற்கும் ஆனந்தப்பா பட்டுகளுக்கும் என்ன சம்பந்தம்?


சம்பந்தம் உண்டு!


"ஏய் ஏய் பெண்மணி, வாழ்வு ரொம்பப் பொய்யடி"பாடலில் இந்தக் கோலத்தை நாம் மிக உயர்ந்த கவிதை நயத்தோடு தரிசிக்கலாம்.இங்கே உயிர்வாழ்வின் அற்ப ஆயுளை நாம் அழகுற்ற "அவளிடம்"எடுத்துச் சொல்லி அவளை ஏமாற்றி அநுபவித்தலின் உண்மையில் உலகத்தின் தொடர் படைப்பு நிகழ்ந்து இந்தவுலகத்தை இயக்குவதில் நமது அர்த்தங்கள் மேலும் அழகுடையதாகிறது-ஆன்மா கொலுவுறுகிறது.பொழிவுகள் இங்கே புதுமையுறும் உயிரின் நீட்சியே தவிரக் குறைபடலல்ல-ஊனமும் அல்ல.


மார்கோ நீம் சொல்வதுபோல்"ஆன்மாவின் தவிப்பு"என்னிடம் உதிர்வு நிலையுள் ஓடுகிறது.அது எப்பவுமே மகிழ்ச்சியைக் கோலமிடும் விழிகளுக்குள் போட்டுடைக்கிறது.குமிழிபோன்ற அந்தப் பேரிரைச்சல் என்னைத் தொலைக்கின்றபொழுதுகளில் எங்கோவொரு மூலையிற்கிடந்து நெஞ்சில் என்னைதொடுகிறது.இத்தகைய தொடுபொழுதுகளில் நான் புறவுலகத்தோடு தொடர்பாடுகிறேன்.அது என்னையும் மற்றைய மனிதர்களையும் ஒன்றோடொன்று பிணைக்கிறது.இது எனக்குள் நித்தியமானவொரு நிகழ்வோட்டமாகவே தொடர்கிறது.இது பெரும்பாலும் எதிர்பால்வினையோடு தனது நித்தியத்தின் எல்லைதேடிச் செல்ல முனைதலில் புதியதைத் தோற்றுவிக்கிறது.இது எனது நித்தியத்தின் நெருங்கிய உலகு.


இந்த ஆனந்தப்பாவோ உண்மையின் தளத்தில் நின்று, மரணம் என்பது நிச்சியமானது,இத்தகைய குறுகிய காலத்துள் காழ்ப்புணர்வினது இருண்ட பக்கங்களுக்குள் மனித ஆசைகளைத் தொலைத்து, உயிரின் பெருவிருப்புக்கு எல்லையிடுவதைத் தனது பாடலில் சொல்லாமல் விடவில்லை.மிக இனிமையாகவும்,அழகாவும் பாடல்களைக் கட்டிவைத்து எனது மனதின் இரகசியங்களைச் சுகத்தோடு பாடுகிறார்.இசையின் மிக இயல்பான ஏற்ற இறக்க நிலைகள் மனிதவுணர்வின் மூலைமுடுக்கெல்லாம் இதயத்தின் அழகைப்பாடவைக்கிறது."மனமதானோ மாயவனோ மாலைத் தேச மன்மதனோ"பாடல் வரிகள் இந்த அர்த்தத்தில் பாடப்படுகிறது.


"மெரினா பீச்சிலே குயிலாப் போகுது,மைனா யாரது,லைலா பெயரெது?"எனும் பாடலின் சுகம் தாலாட்டும் எனது விருப்பை-எனக்குள் இழையோடும் பெரு விருப்பை.சின்ன இடை சொல்லும் அர்த்தம் கோடி.சுகத்தின் அழகு அங்கே அடுக்கிவைக்கப்பட்ட கற்பனைகளை உதிர்க்கும்போது இதயத்தின் உன்னதமான இருப்பு மேலெழும் இரத்த ஓட்டத்தின் கட்டுக்கடங்காத பாய்தலில் புரிந்துபோகிறதா? அதுதாம் உண்மை நெஞ்சே!


இதுவொரு தியான நிலை.


என்னையும் எனதும் இருப்பையும் சதா உணர்த்துவது எனது எதிர்பால்வினையே!இதைக்கடந்தவொரு பெரும் அழகு உலகத்தின் எந்த மூலையிலும் இல்லை என்பதை நான் அறிவேன்!இதை மறுத்துவிட்டு பிரமத்தோடு கதைவிடுவதில் பெரும் தவத்தடிகள் நம்மை முடக்கியுள்ளார்கள்.இங்கே, ஊசியில் நூலாய் என்னைக் கோர்த்துவிடும் டானியலின் இந்தப்பாடல்கள் எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இளநங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது!நான் தவிப்போடு இருக்கிறேன்.எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.எனது காதலின் மொத்தவடிவவுமே காமத்தால் கட்டிப்போடப்பட்டது.இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.



"ஊர்வசியின் பெண்ணா,மேனகியின் கண்ணா,பூர்வீகம் என்ன?" டானியல் இப்படிக் கேட்டுவைக்கிறான்!


கவிஞர்கள் பெண்களை ஊர்வசிக்கு மேனகைக்கு ஒப்பிட்ட தலைமுறைபோய்,இப்போது இந்தக் கவிஞனோ தலைமுறை இடைவெளியைத் தனக்குள் உணர்ந்து ஊர்வசியின் பெண்ணா என்று அடுத்தகட்டத்துக்கே போய்விட்டான்!என்னவொரு கற்பனை?இவன் காலத்தில் வாழும் கவிஞனல்லோ!இது புகழ்தல் அல்ல-வியப்பு.எனக்குள் வசமாகும் அவன் மொழியினது அனுபவப் பிரதி, என்னில் உலகத்தின் பொதுத் தன்மையைக் காணத் தவறவில்லை.


"சோனா,சோனா சொல்லாமற் போனா"எனும் பாடலில் பிரிவின் துயரைப் "புதுப்பொலிவோடு"சிதறடித்து, வலியைக்கூட வாழ்வின் அடுத்த தரிசனமென அறிந்து அந்த வாழ்வின் அழகோடு இனம் காண்கிறது கற்பனையாற்றல்.பின்பு,வாழ்வின் குறை ஆயுளோடு தனது வலியைச் சரிவு நிலைக்கிட்டுச் செல்வதில் மனித இருப்பை மேலும் உறுதிப்படுத்த அடுத்த கட்டத்தைச் தரிசிக்கச் செய்வதில் ஆனந்தப்பாவின் பாடல் வெற்றிகொள்கிறது.இந்தத் தெரிவு மனிதத் தொடுநிலையை உண்மையாக உருவமாக்கிவிடுகிறது!

இஃது, அர்தங்கள் சொல்லிப் புரிவதில்லை.ஒரு அனுபவமாக நமக்குள் விரியும் இசைத் தொகுப்பு.


என்றும் வலிகளைச் சொல்லி மனித விருத்தியைத் துண்டித்துப் படைப்பாற்றலைச் சிதைக்கும் குறைகளோடு வலம்வராது,தான் காணும் குறைப்பாடுடைய உலக நிதர்சனத்தில் "அழகு அவலட்சணம்" எனும் எதிர்மறை அர்த்தத்தில் எடுத்துப்போடும் நிலைதாண்டிப் பாடல்களைக் கட்டுகிறார்.நெஞ்சின் வலிகளை நிசவுலகத்தில் வைத்து உடைத்துப்பாக்கிற டானியல் "விருத்தியாகச் செல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் தன்னைத் தொலைத்தல்" எனும் கோட்பாட்டில் அமிழ்கிறது.இதுகூட ஒருவகையில் தேவைதாம்.நெடுக,நெடுக நாம் விட்ட ரீல்களைத் தாண்டி வாழ்வினது விருப்பம் எழிச்சி கொள்வதில் நாம் அமைதியை மனித வாழ்வின் நித்தியத்தில் காண்பது சாத்தியமே.


தமிழ்க் கதையுலகத்தின் முடிசூடா மன்னன் ஜெயகாந்தனது எந்தக் கதைகளை எடுத்தாலும் அது மனித அழகைச் சொல்வது.அங்கே,எதிர்மறையான பல தன்னிலைகளின் வாழ்வும்,இருத்தலும் அங்கீகரிக்கப்பட்டு அங்கேயும் ஒரு உன்னத மனம் இருப்பதைப் புரிய வைப்பது.


இத்தகையவொரு நிலையை ஆனந்தப்பாவின் ஒரு பாடலில் இனம் காணமுடியம்.அந்தப் பாடல்தாம்"ஐ ஆம் இந்தியன்,ஐ லவ் இந்தியா"எனும் பாடல்.



இங்கே,இந்தியாவின் இன்றைய கோலத்தை நாம் தரிசித்து வருபவர்கள்.அந்த இந்தியா கொடுமைமிகு இந்தியா.சாதி சொல்லி மனிதரை அடக்கும்,உழைப்பவர்களை நடு ரோட்டில் சுட்டுத் தள்ளும்.உரிமை கேட்டுப் போரிடுபவரை குண்டாந்தடிப் பொலிசைக்கொண்டு மண்டையைப் பிளக்கும்.மிகக் கொடுமையான இந்த இந்தியாவை அவன் தனது விருப்பத்தின்படி அழகாக்க விரும்புகிறான்.தான் காணும் இந்தியா இப்படி வருவதில் அவன் ஆசைப்படுகிறான்.இந்த அவனது பெருவிருப்பு இந்தியாவின் அழகாக,உச்சமாக விரிகிறது.


இத்தகைய விருப்பு எமது மனத்தின் தவிப்புதம்தாம்.



இந்தியா உலகுக்கே எடுத்துக்காட்டானவொரு உலகாகத் திகழ்வது எமது விருப்பு.ஆனால்,இந்திய ஆளும் வர்க்கம் இதற்கு மாறானது.எனினும்,இந்தியா ஒரு நாள் இதை உடைத்து முன்னேறும்.அந்தளவுக்கு அதன் உழைக்கும் மக்கள் அழகுடையவர்கள்.அந்த மனித அழகு நிச்சியம் இந்தியாவை விடுவிக்கும்.இதை ஆனந்தப்பா மிக நேரத்துக்கே இனம் காண்கிறார்.போற்றிப் பாடுகிறார் தான் காணும் தரிசனத்தோடு.இவனல்லோ உன்னதமான கவிஞன்!


இதயத்தின் தரிசனம் இது!


கேட்கத்தக்க இசையோடு பிணைக்கப்பட்ட ஆனந்தப்பாவின் கவிதைகள் மிகச் சாதாரணமான மனிதத் தொடு கணங்கள் என ஒதுக்கப்பட முடியாதவை.அவை,மனித உந்து சக்தி.இத்தகைய தரிசனங்களேதாம் இதுவரை இந்த உலகத்தை மாற்றித் தகவமைக்கிறது.அது அடக்கு முறைகளை உடைக்கக் களத்திலும் நிற்கும் அதுபோல காதலிலும் நிற்கும்.இந்த இரு நிலைகளும் அந்தப் பெரும் ஊற்றான எதிர்ப்பால் வினையின் இரண்டு பக்கமே.வாழ்க, சிக்மன் பொரைட்!


இப்போது,பாடல்களை அமைதியாக இங்கே சென்று கேளுங்கள்.


http://www.a4anandappa.com/


கேட்கும்போதே காலத்துக்கேற்ற இதயத்தின் மொழியை உணர்வீர்கள்!



அந்த மொழி நம் எல்லோரதும் மொழியே!.அதைப் பாடலாக்கிய என் அருமை டானியலை-கவிஞனை-அழகுடைய அந்த இசை மனதை நான் மதிக்கிறேன்.வியந்து பெருமிதம் கொள்வதில் என் இதயத்தோடு நெருங்குகிறேன்.


(பிற்குறிப்பு: இப்பாடல்களை நிச்சியம் டி.ஜே.தமிழன் கேட்டுக் குறிப்பு எழுதணும்.இது எனது பெரும் அவா!)


நட்போடு,


ப.வி.ஸ்ரீரங்கன்.
12.10.2008

Tuesday, October 07, 2008

கடனுக்கு வட்டிகட்டியே திவாலாகிப் போயின...

சந்தைப் பொருளாதாரத்தை மரணப் படுக்கைக்கு
அனுப்பும் பங்குச் சந்தை.


பாதாளத்தை நோக்கிப் பங்குச் சந்தை வீழ்ந்து போகிறது.அரசுகள்
மக்களின் வரிப்பணத்தால் முதலாளிகளை-நிதிமுதலீட்டாளர்களைக் காப்பதற்கெடுக்கும்
முயற்சி சமூகவிரோதமானது!பங்குச் சந்தைகுறித்துக் கட்டுரை புனைந்தவர்கள் கள்ள
மௌனத்துள்.


வர்களின் கடவுளான அமெரிக்காவோ அடுத்த அடியெடுக்க அச்சப்படும் காலம் இது.யாருடைய கழுத்தை நெரித்தாவது தமது முகங்களைத் தியாக தீபங்களாகக் காட்டவெடுத்துவரும் முயற்சிக்கு உழைப்பவர்கள் பலியாக முடியுமா?


ஆமா,முடியும் என்கிறார்கள் அரசியல் வாதிகள்!அவர்களுக்கென்ன?இந்த ஊக வணிகத்துறையின் துணிகரமான கொன்சேர்ன்கள் கொட்டிய பெருந்தொகைப் பணத்துக்கு அவர்கள் கத்துகிறார்கள்;நாம் கொதிப்படைகிறோம்!

உலகைக் காட்டமாகக் காவுகொள்ளப்போகும் பங்குச் சந்தைச் சூதாட்டமானது பொறிந்துவரும் இன்றைய சூழலை, கடந்த ஆண்டுமட்டில் நொருங்கி விழும் என்றே சொன்னேன்.எத்தனையோ நண்பர்கள்-குறிப்பாகப் பத்திரி- எள்ளி நகையாடினார்கள்.இன்று, அமெரிக்கதாசர்கள் எவ்வளவு முயன்றும் பொறிந்துவரும் ஊக வணிகம், உலக அரசுகளையே பொறியவைக்கப் போகிறது!

முதற்கட்டமாகப் பொறிந்துபோகும் வங்கிகளைத் தூக்கி நிறுத்த முனையும் அரசுகள், பொதுசனத்தின் வரிப்பணத்தைக்கொட்டித் திவாலாகும் வங்கிகளைக் காவுகிறார்கள்.இதுவும், புஷ்வாணமாகும்.அடுத்தடுத்துச் சரியும் பங்குச் சந்தையை எண்ணிக்கொள்ளமுடியாதளவுக்குக் கதைவிடும் பொருளாதார மேதைகள் தொலைந்துபோக.

இருப்பவர்களின் கைகளுக்கு மேலும் கீழ்மட்டமக்களின் சில்லறைகளையே தட்டிப்பறித்துக் கொடுக்கும் இந்த அரசுகள், கீழிருந்து மேலே சமூகப்பங்கீடைச் செய்கிறார்கள்.இது, நவீன உலகம்.இங்கே,முதலாளித்துவம் என்பது "தோன்றும் போது சவக்குழியைத் தோண்டியபடியேதான் பிறந்ததாக"க் கார்ல் மார்க்ஸ் அன்றே குறிப்பட்டார்.சமூகத்துக்குத் தீங்கு செய்யும் சந்தைப் பொருளாதாரமானது ஐரோப்பிய நவலிபிரல்களால் நவீன அடிமைத்தனமாக மாற்றப்பட்டபின் உலகை யுத்தங்களால் பங்கீடு செய்ய எத்தனித்தார்கள்.இத்தகைய யுத்தங்களால் கோடி மனிதர் அழிந்தும் செல்வம் குவிந்தது இத்தகைய வல்லாதிக்க அரசுகளுக்கு.எனினும்,உலகை வேட்டையாடும் அதிபகாசூர மனேச்சர்கள் இந்தச் செல்வத்தையெல்லாம் தமது கரங்களுக்கு மாற்றியபடி, ஊக வணிகத்தில் கட்டப்பட்ட கணக்குப் புள்ளிகள் காலத்தால் நிலைக்க முடியவில்லை.

இது, தொடர்கதையாக மாறம்போது ஐரோப்பியப் பொது நாணயமான யூரோ நொருங்கிச் சின்னாபின்னமாகும்.கூடவே,ஐரோப்பியக்கூட்டமைப்பு ஏழை நாடுகளை அம்போவென நடாற்றில்தள்ளியபடி மேலும் இராணுவவாதத்தைத் தொடரும்.இத்தகைய தருணத்தில் பழைய ஐரோப்பா மீளவுருவாகிக் குருதியாற்றைத் திறக்கும்.

இன்றைய மதிப்பீட்டின்படி ஐரோப்பிய உற்பத்தி தன்னைக் கட்டுப்படுத்த முனைகிறது.ஜேர்மனிய முன்னணிக் கார்க் கம்பனிகள் எடுத்து வைக்கும் உற்பத்திக் குறைப்பு, அடுத்து நொருங்கும் நடுத்தர வர்க்க உற்பத்திச் சாலைகளைத் தெருவுக்குக் கொணர்ந்துவிடப் போகிறது.இத்தகைய நிலையில், இன்று உலகத்தின் முன் எந்தத் தீர்வும் கிடையாது.

மனிதர்களின் பொதுவான செல்வமெல்லாம் சிலமணி நேரத்தில் சாம்பலாகும் சந்தைப்பொருளாதார வர்த்தக முறைமையானது எப்போது பங்குச் சந்தைச் சூதாட்டமாக ஊக வணிகத்துக்கு மாற்றமாச்சோ, அன்றே வட்டிக்கு வட்டி என்ற மனிதமுகமற்ற மலட்டுப் பொருளாதாரப் பணச் சுற்றோட்டம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டது!

நடுத்தர உற்பத்திச் சக்திகளோடு உறவாடிய உற்பத்தியுறவுகள் தெருவுக்குத் துரத்தப்பட்டது எதனால்?

எத்தனையோ நடுத்தரத் தொழிற்ச்சாலைகள் வங்கிகளிடம் வேண்டிய கடனுக்கு வட்டிகட்டியே திவாலாகிப் போயின.இதனால்,தொழிலாளர்களைத் தெருவுக்குத் துரத்திவிட்டுள்ளது.உழைப்பாளர்கள் உதிரிகளாகவும்,நாடோடிகளாகவும் மாற்றப்பட்டுவரும் இந்தச் சோதனையான காலம் திடீரெனத்தொடங்கியதல்ல.இது, சந்தைப்பொருளாதாரத்தின் படுதோல்வி.

இனிவரும் காலத்தில் இதை மாற்றியச் சமூகத்தன்மை மிக்கப் பொருளாதார உற்பத்தி பொறிமுறையைக் கைக்கொள்ளும் புதிய அணுகுமுறைகள் உலகத்துக்கும் உழைப்பவர்களுக்கும் அவசியமாகிறது.இது, தவிர்க்கமுடியாது மக்களைத் தெருவுக்கு இறங்கிப் போராடும் நிலைக்கு மாற்றும் என்பதை உணர்ந்த ஜேர்மனிய அரசு, இதுவரை தனது இராணுவத்தை உள்ளநாட்டுப் பிரச்சனைகளுக்கு உட்புகுத்தாத மறைமுக அரசியலைச் செய்து வந்ததைமாற்றி, இராணுவத்தைச் சட்டபூர்வமாகக் களமிறக்கக் காத்திருக்கிறது.இது, உழைப்பவர்களை வேட்டையாட எத்தனிக்கும் அரசியல்.

இனிவரும் காலங்கள் கலகத்துக்குரிய காலங்களாகவே இருக்கும்.கற்பனாவாதக் கதைக்காலங்கள் காற்றோடு பறக்கும்.தேசங்கள்பல திவாலாகிப்போகும்.அங்கே, உணவுக்கலகம் ஆரம்பமாகும்.இது, தற்காலிகமாக உயிர்ப்பலிகளோடு அடக்கியொடுக்கப்படும்.எனினும், மக்களிடமிருந்து தட்டிப்பறிக்கப்படும் அவர்களது உழைப்பு மக்களையின்னும் தெருவுக்குக் கூட்டிவரும்.இழப்பதற்கரிய வேலையைப் பறிக்கும் வங்குறோத்துப் பொருளாதாரச் சூழல், மக்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லாத சூழலை உருவாக்கும்.அங்கே,வெடிக்கும் உயிர்த்திருப்பதற்கான போராட்டம் வெறும் தொழிற்சங்க வாதத்துக்குள் உள்வாங்கப்பட முடியாது திண்டாடும்.இத்தகைய தருணத்தில் மீண்டும் மார்க்ஸ் மிக எளிதாக உலகை வலம் வருவார்.இது, தொடரப்போகும் அடுத்த நூற்றாண்டின் கட்டியம்.

இன்றிருக்கும் இத்தகையவொரு சூழலை முன்வைத்துத் தமது மூளைகளைக் கசக்கும் பெரும் பொருளாதாரப் புலிகள், ஊக வணிகத்தைப் பற்றிக் கட்டியமைக்கப்பட்ட மேடையில் நிற்கவே அஞ்சுகிறார்கள்.அவர்கள் தனியார் வங்கிகளை அரசமயமாக்கும் மாய்மாலம் காட்டுகிறார்கள்.இன்று, மீள முடியாத கடனிலுள்ள வங்கிகளைத் தேசிய-அரசமயமாக்கல் என்பதன் உண்மை முகம் மக்களின் வரிப்பணத்தைத் தட்டிப்பறித்துத் தமது கையாலாக-மனித விரோத முகத்தை மறைப்பதே.

"உலகத்தின் மூலவளங்களை பொதுச் சொத்தாக்கு,
நிலத்துக்கான தனியுடமையை இல்லாதாக்கு,
அனைவருக்கும் அடிப்படை வருமானத்தைச் சட்டமாக்கு,
உழைப்பவர்களின் ஊதியத்தை வரியாக்கி வங்கிகளுக்குப் பங்கீடு செய்வதை நிறுத்து" எனும்,பொருளாதார வாதங்கள், மேலும் மக்களை முடமாக்கும்.

உண்மையில் புரட்சிக்குரிய காலத்தில் அதை நீற்றுப்போக வைக்கும் இந்த மாய்மாலங்களை உழைப்பவர்கள் நம்ப முடியாது.


இனிவரும் காலத்தில் சந்தைப் பொருளாதாரம் தவிடுபொடியாகும் என்பதே பொருளாதாரச் சூழல் சொல்லுகிறது.

உபரிச் செல்வத்தைப் பெருக்க முனையும் இந்தச் சூதாட்டம் இதுவரை மக்களைப் பலியெடுத்து யுத்தங்களை ஊக்குவித்தது.இது, வளர்ந்துவரும் உலகத்தின் விஞ்ஞானப் பொறிமுறைகளால் இதுவரை உயிர்வாழ்ந்துவந்தது.இனி,இத்தகைய விஞ்ஞான வேடிக்கையெல்லாம் இவர்களைக் காக்க முடியாது.

உலகம் மிக விரைவாக இன்னொரு தளத்துக்கு மாறித்தான் போகும்:அது,புரட்சி அல்லது சர்வதிகாரச் சரணாகதியாவென்பதை தீர்மானிப்பது அரசுகள் அல்ல.உழைப்பவரே.

இதற்கான தளம் ஒன்று புரட்சிகரமாக உருவாகிவருவதை இத்தகைய அரசுகள் அனுமதிப்பது திவிர்க்க முடியாது நிகழும்.மக்களின் எழிச்சிகள் எப்பவும் வெடிக்கலாம்.அதுவரை மக்களை வேட்டையாடுதல் பல முறைமைகளில் தொடரும்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
07.10.2008

Sunday, October 05, 2008

முற்றுமுழுதான பிரச்சாரத்தின்கீழ்...

அன்பு வாசகர்களே,வணக்கம்!


"...Und eines dürfen wir auch nicht vergessen: Etwa 1,8 Millionen Georgier leben zur Zeit in Rußland. Sie arbeiten dort und überweisen viel Geld zur Unterstützung ihrer Familien. Das ist ein wichtiger wirtschaftlicher Faktor für uns. "-
Lasha Shavdia




இன்று, தமிழீழக் கோசத்தின் போலித்தனமான அரசியல் சூதாட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சிங்களத் தரப்பாலும்,தமிழ்த்தரப்பாலும் வேட்டையாடி வரும்வேளையில்,நாம் மொழியிழந்துகிடக்கிறோம்.


ஒரு புறம் புலிகளின் அழிவு தமிழர்களின் அழிவெனும் வாதம்,மறுபுறம் சிங்கள அரசின் வெற்றி சிங்கள மேலாதிகத்தின் வெற்றியுமாகப் பார்க்கப்படுகிறது.


இவையிரண்டையும் இன்றைய சூழலில் மறுப்பதற்கில்லை.


ஏனெனில், சிங்கள அரசு இன்று தேசியப் போராளிகளாக இராணுவத்தை மாற்றிச் சிங்களத் தேசத்தின் இறைமைக்காகப் போராடுவதாகக் காட்டி வருகிறது.உலகப் பொருளாதாரப் போக்குகள் ஆளும் சிங்கள வர்க்கத்தை ஆட்டங்காண வைக்கும்போதெல்லாம் இந்த யுத்தமே அவர்களைத் காத்துவருகிறது.இதுவே, புலிகளின் இருப்போடும் சம்பந்தப்படுகிறது.இன்றைய நிலையில் இவற்றை மறுத்தொதிக்கிவிட்டு நமது மக்களிடம் அரசியல் செய்யப்பலர் ஆயுத்தமாகும் நிலை.சிங்கள அரசின்பின்னே சிதைக்கப்பட்ட தமிழரின் நலன்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது.இதுவரை இதைச் செய்த புலிகள் தமது வரலாற்றுத் தவறைப் பதிப்பித்து வருகிறார்கள்.இது வன்னியில் அச்சாகிறது.



நமது மக்களின் சுயநிர்ணய உரிமை அழிக்கப்பட்டாச்சு.புலிகளும்,ஏனையவர்களும் இதை எப்போதோ செய்துவிட்டார்கள்.இனிச் சிங்கள ஆளும் வர்க்கம் இதை நிறுவனப்படுத்தி நமது மக்களை அடிமைகளாக்கும் பணியைச் செய்து முடிக்கப் புலிகளே உடந்தையானார்கள்.


இது, தவிர்ந்தவொரு அரசியல் இனியும் உண்டு.



அது சிங்கள முற்போக்கு சக்திகளோடு இணைந்து சிங்கள மக்களோடு மீளவும் தமிழர்கள் நட்புறவை வளர்த்தாகவேண்டும்.அதன் அடிப்படையில் எழும் ஒருமைப்பாட்டோடு ஆளும் சிங்கள அரசை வீழ்த்துவதே தலையாகக் கடமை.இது சிரமமான பணி.இதன்வழி இலங்கையில் ஒரு சமஷ்ட்டி முறையிலான தீர்வாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தற்காலிகமாகத் தீர்க்கப்படலாம்.




டொச் மொழியில் வந்த கீழ்வரும் பேட்டியை ஜேர்ச்சியாவில் சமாதானத்துக்காகச் செயற்படும் அமைப்பின் முன்னணிச் செயற்பாட்டாளர் வழங்கியுள்ளார்.இப்பேட்டியில் இனங்களுக்கிடையிலான நட்பார்ந்த உறவே இன முரண்பாட்டையும்,தீர்வையும் சாத்தியப்படுத்துமென அடித்துக் கூறுகிறார்.இதுதாம் உண்மை.இலங்கையைவிடப் பல மடங்கு வளங்கள் நிறைந்த ஜோர்ச்சியாவே இருஷ்சியாவோடு நட்புறவை வளர்த்தால்தாம் அதன் பொருளாதார வாழ்வு நிலைக்குமெனச் சொல்லும்போது,ஒரு சைக்கிள் கட்டையையே செய்யமுடியாத ஈழத்தின் நிலை புரியத் தக்கது.இதன் அடிப்படையில் சிந்தித்துச் செயற்படுவது நன்று.



இப்பேட்டியானது ஜேர்மனிய முன்னணி இடதுசாரியச் சஞ்சிகையான யுங்க வெல்ற்றில் http://www.jungewelt.de/2008/09-27/002.php

வெளியாகியது.அதை நான் தமிழுக்குக் கொணர்கிறேன்.அவ்வளவுதாம்.



நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.






"முற்றுமுழுதான பிரச்சாரத்தின்கீழ் ஜோர்ச்சியாவில் நாம் வாழ்கிறோம்."



லாச்ஷா சௌடியாவோடான உரையாடல்.மொஸ்கோவினது மிகப் பதுமையான சதுரங்க
விளையாட்டுக்கும்,அரச(ஜோர்ஜ்சிய)உளவுத்துறையின்
வேவுக்குள்ளானதுமான
சாகசங்கள்.அத்தோடு,இரஷ்சியாவோடான நட்புறவை மீண்டும்
ஏற்படுத்தவேண்டியது மிக அவசியம்.



லாஷா சௌடியா ஜோர்ச்சியாவின் சமாதானத்துக்கான முன்னணியின் ஒரு முன்னணி உறுப்பினர்.அவர் ஒரு புனைபெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.ஜோர்ச்சியப் புலனாய்வுத்துறையினரால் தான் இனங்காணப்பட்டு உயிராபத்தைப் பேட்டியின் பின்பான சூழல் உருவாக்குமென்பதால் அவர் தனது பெயரைப் புனைபெயராகவே தேர்ந்தெடுத்துள்ளார்.எனவே,அவரது புகைப்படம் இங்கு பிரசுரிக்கப்படாது.



கௌகசுஸ் யுத்தத்திற்குப் பின்பான காலத்தில் மேற்குலக ஊடகங்கங்கள் அநேகமாக ஜோர்ச்சியாவின் பக்கமே உணர்வுகளைத் தகவமைத்துக் கொடுத்தன.இத்தகைய ஊடகங்கங்கள் ஜோர்ச்சியத் தேசம் இருஷ்சிய வல்லாத்திக்க அரசியலுக்குப் பலியானதாகப் படங்காட்டினார்கள்.நீங்களோ அந்தத் தேசத்தின் சமாதானத்துக்கான முன்னணிச் செயற்பாட்டாளரென்றவகையில் இந்த அரசியல் சதுரங்கத்தைப் பற்றி என்ன நிலைப்பாட்டிலுள்ளீர்கள்?



முற்றுமுழுதும் அது சரியானது!இருஷ்சிய விஸ்த்தரிப்பு யுத்தத்துக்கு ஜோர்ஜ்சியா பலியானதென்பது சரியானது.எனினும்,நாமிதை சம்பிரதாயபூர்வமாக இங்ஙனமும் புரிந்துகொள்ளலாம்:ஜோர்ஜ்சியாவானது உலக ஏகாதிபத்தியக்கூட்டணிகளின் வல்லாதிக்க அரசியலுக்குப் பலியாகிவிட்டது.ஒரு புறத்தில் அமெரிக்காவும்,நேட்டோவும் நின்றபடி,அவர்களுக்குத்தெரியும் மறுபுறத்தில் இருஷ்சிய வல்லாதிக்கம் நிற்கிறதென்று.



ஜோர்ச்சிய மக்கள் எல்லோருமே ஜோச்சிய அதிபர் மிக்கேல் சாகாஸ்வில்லியின் பின்னே நிற்பதாக ஜேர்மனிய அரசு அழுத்தமான உணர்வை வெளிப்படுத்திக்கொண்டது.உண்மையில் எதிர் தரப்ப்புப்பற்றி(மாற்றுக் கருத்து) மிக அபூர்வமாகவே நாம் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது.உங்களது தேசத்தில் உண்மையில் மாற்றுக்கருத்து நிலைகள் ஏதாவது பலமாக இருக்கின்றனவா?


ஜோச்சிய மக்கள் ஒருபோதும் சாகஸவில்லிக்குப் பெரும்பான்மை அதாரவாக இருந்ததில்லை.எனினும்,நானிதை இப்படி உரைக்கிறேன்,அதாவது,சாகஸ்வில்லியின் ஆட்சியின் ஆரம்பத்தால் மக்கள் ஆறுதலடைந்தார்கள்.அரசமட்டத்தில் நிலவிய பெரும் ஊழலை எதிர்த்து நல்லாட்சி தருவதாகச் சாகஸ்வில்லி பொறுப்பேற்றார்.ஆனால்,இந்த நிலை எப்பவோ கடந்துவிட்டது.இப்போது நாம் காணும் கொடிய நிலை என்னவெனில் ஊழலென்பது அவரது ஆட்சியின்கீழ் மிகவும் நிரம்பி வழிகின்றது என்பதும்,ஜோர்ச்சியப் பெரும் நிறுவனங்கள் இவரது அமைச்சரவையால் கண்காணித்து அரசில் செல்வாக்குச் செலுத்துவது என்பதும் இன்றைய ஜோர்ச்சியத் தேசத்தின் நிலை.



ஆக, அமைச்சர்கள் தமது இலாகாவைத் தம் வருமானத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்கிறீர்கள்?


அதுதான்.அனால்,இஃதொன்றும் புதிதில்லை எனது தேசத்தில்.எட்வார்ட் சேவார்ட்நாட்ஷே ஆட்சியின்கீழும் இந்த நிறுவனங்களை அவரது அமைச்சர்களே கண்காணித்தார்கள்.சாகஸ்வில்லியின் காலத்தில் இது அவரது மந்திரிகள் கண்காணித்துப் பலனடைய ஆள் மாற்றம் நிகழ்ந்தது.



இவைகுறித்துப் பொதுமட்டத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டதா?



ஒவ்வொருவரும் இது குறித்து அறிவார்கள்.ஜோர்ச்சிய ஊடகங்கள் நிகழ்கால ஊழல்கள் குறித்து மௌனித்துக்கிடந்தன.என்றபோதும்,அது குறித்து எங்கும் விவாதிக்கப்பட்டது.



சுயாதீனமான ஊடகங்கள் ஏதாவது ஜோர்ஜ்சியாவில் இருக்கின்றதா?



மொத்தமாக ஓரிரு நாளிதழ்-சஞ்சிகை இருக்கிறது,இவை அடிக்கடி சாகஸ்வில்லியை விமர்சித்துவந்தன.ஆனால்,வானொலிகள் தொலைக்காட்சிகள் அனைத்துமே அரசினது பாதையின்வழியே தொடர்ந்தன,கவ்காயா எனும் தொலைக்காட்சிச் சேவைவரை இதுவே கதை.இந்தக் கவ்காயாத் தொலைக்காட்சியானது குறுகியதூர ஒளிப்பரப்பையே செய்யக்கூடியது.தலைநகரமான Tbilissi நகரத்துக்குட்பட்ட வலயத்துக்குள் இது ஒளிபரப்பாகியது.யுத்தம் தொடங்குவதற்கு முன்பு இது இருஷ்சியாவரைக்குமான நீண்ட தூரத்துக்கான சேவையை வழங்கியது.இது இருஷ்சிய மொழியில் தனது சேவையை வழங்கிக்கொண்டது.இதுவொன்றே மாற்று ஊடகமாக வழங்கியது.இதுவும் நிறுத்தப்பட்டது.யுத்தம் ஆரம்பித்தபின் இருஷ்சிய மொழிகளில் வெளிவந்த அனைத்து இணையச் சஞ்சிகைகளும் ஜோர்ச்சிய அரசால் நிறுத்தப்பட்டது.


இருஷ்சியத் தரப்பின் பார்வையின்படி யுத்தமானது ஜோர்ச்சியத் துருப்புக்கள் தென் ஒசாத்தியாமீதான தாக்குதலின் விளைவாக எழுந்ததாகக்கூறப்பட்டாலும்,சாகஸ்வில்லி இதை மறுத்துச் சொல்கிறார், இருஷ்சியாவினது ஆத்தரமூட்டும் இராணுவத் தந்திரத்தின் எதிர்வினையாகவே இது நிகழ்ந்ததாக.யாரது பார்வைகள் இங்கே யுத்தத்தை முதலில் ஆரம்பித்து வைத்தன?


இரண்டு பக்கமுமே உணர்ந்துகொண்டாதான ஏதேவொரு கூட்டுக்குள் நிலைமை உருவாகி வருகிறதென்பதான சூழலில் இரு பக்கமுமே யுத்தத்துக்கான ஆயுத்தங்களைச் செய்தன.எனவே,இருஷ்சியாவும் இந்தத் துன்பகரமான யுத்தத்தின் பாத்தியத்தைப் பொறுப்பேற்கவேண்டும்.என்றபோதும், பெரும்பகுதி பொறுப்பு சாகஸ்வில்லியும் அவரது அரசையுமே போய்ச் சேரும்-தென் ஒசாத்தியாமீதான ஜோர்ச்சிய இராணுவத்தின் படையெடுப்பே யுத்தத்தை ஆரம்பிக்கும் சூழலை ஏற்படுத்தியது.



ஜோர்ஜ்சியவானது யுத்தில் தோல்வியைத் தழுவியது-இருஷ்சியாமீதான ஜோர்ச்சிய மக்களின் குரல்கள் இப்போது எப்படியிருக்கிறது.புவிகோள அரசியல் வியூகங்குறித்த மொஸ்கோ தலைமைத்துவத்தின் கவலைகுறித்தும்,அதைத்(புவிகோள வியூகம்) தடுப்பதற்கான கடப்பாடின்மீதான புரிதற்பாடு ஜோர்ச்சிய மக்களிடம் உண்டா,அதாவது,நோட்டோவானது நேரடியாக அவர்களின்(ஜோர்ச்சிய-இருஷ்சிய)வீட்டின் வாசலில் தனது இராணுவத் தளத்தை அமைக்கும்போது?


மக்கள் எண்ணங்களில் வேறுபாடுண்டு.ஜோர்ச்சிய மக்களுக்கு ஒன்றுமட்டும் நன்றாகவே புரியும்,அதாவது, இருஷ்சியா இல்லாமல்-இருஷ்சியாவின் தொழிற்சாலைகளின் பொருளாதார ஒத்துழைப்பு இன்றி ஜோர்ச்சியத் தேசத்தில் பொருளாதாரச் சுபீட்சம் ஏற்படமுடியாதென்று.90 களிலேயே இனமுரண்பாடானது கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்ததென்பதை மக்களும் அறிந்தே இருக்கிறார்கள்.கூடவே,இப்பிரச்சனையானது இருஷ்சியாவுடனான நட்பை மீண்டும் ஏற்படுத்தும்போது மட்டுமேதான் தீர்கப்படும் என்பதும் அவர்கள் அறிந்ததே.ஜோர்ச்சிய மக்களை உறுதியாக நம்பிக்கைகொள்ளவைத்தலென்பது விளங்கிக்கொண்டவரை மிகக்கடினமான பணி, தென் ஒசாத்தியாவிலும் மற்றும்அப்சாசியனிலிமிருந்து துரத்தப்பட்ட நிலையில்.இருஷ்சியா நீண்டகாலமாகவே இந்த இரு பிராந்தியங்களையும் ஜோர்சியாவிலிருந்து பிரிப்பதற்கான முயற்சியில் இத்தகைய முரண்பாடுக்கு ஊக்கமளித்ததென்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள்.இதன் இறுதி விளைவானது இந்தப் பிராந்தியங்களிலிருந்து 160.000.மக்கள் இடம்பெயரும் அவல நிலை உருவாகியது.இதுள் ஒருசிலர் மீளவும் இப்பிராந்தியங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர் இன்று.


இனங்களுக்கிடையிலான நட்புறவென்பது அரசியல் தீர்வைவிட மிகப் பெரியது,ஒவ்வொருவரும் இணக்கமுறுவதைக் கடைப்பிடிக்கவேண்டும்.இது, இருண்டுபக்கத்துக்குமே பொருந்தும்.இந்த நட்பார்ந்த இணக்கம் முற்றுமுழுதாகக் கோரிக்கொள்ளமுடியாது,ஜோர்ச்சியாவானது நேட்டோவில் உறுப்பிராவதையும்,தனது பிராந்தியத்தில் இந்தக் கூட்டணியின் இராணுவத்தளத்தை அமைத்துக்கொள்வதற்குமான விருப்பத்தை.ஆனால்,இருஷ்சியா கூறுவதுபோல அதனிடம் இந்த இராணுவத் தாக்குதலைத்தவிர்த்து வேறொரு தீர்வு இதற்குச் சாத்தியமில்லையென்பதை நமது மக்களால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.



இதற்கு எந்தவகையான மாற்றுத் திட்டம் செயற்படுத்தியிருக்கமுடியும்?


இதற்கேற்ற சரியான காலம் தவறவிடப்பட்டுப் போய்விட்டது.சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்பான காலத்தில், அதவாது,90 களின் ஆரம்பத்தில் ஜோர்ச்சியாவுக்கென்றொரு தேசிய அரசு வந்தது.இவ்வரசு உடனடியாக நேட்டோவின் நோக்கு நிலைக்கேற்றபடி நடக்க விரும்பியது.கௌகசுஸ் பிரச்சனைக்கான எந்த அரசியல் அணுகுமுறையைக் கையாள்வதுதென்பதில் ஜெல்சின் ஆட்சியின்கீழ் இருஷ்சியாவிடம் எந்தத் திட்டமும் இருக்கவில்லை,உதாரணத்துக்கு:1999 இல் "ஐரோப்பாவில் ஆயுதக்களைவுக் கூட்டு" எனும் ஒப்பந்தம் ஒன்றை ஜெல்சின் ஈஸ்ரன்பூலில் செய்து கையெழுத்திட்டார்.இதன் விளைவாக,ஜோர்சியாவில் நிலைகொண்டிருந்த பெரும்பகுதி இருஷ்சியத் துருப்புக்கள் தமது நிலைகளிலிருந்து விலகிக்கொண்டார்கள்.இறுதிப் பகுதி இருஷ்சிய இராணுவம் கடந்த ஆண்டு எமது நாட்டைவிட்டு வெளியேறின.இவ்வாண்டோ மீண்டும் இருஷ்சியப் படை நமது நாட்டை நோக்கிப்படையெடுத்தன.


அப்சாசியனுக்கும்,தென் ஒசத்தியாவுக்குமாக ஒரு சமாதான ஒப்பந்தம் இருக்கிறதே,அதை ஜோர்ச்சியாவும் உடன்பட்டுக்கொண்டது.இதன் பின்புதானே இருஷ்சியச் சமாதானப்படை அங்கே நிலைகொண்டன.



அதுசரிதான்,எனினும்,அங்கே இருஷ்சியாவினது வழமையான ஒழுங்கமைந்த இராணுவ அணி நிலைகொண்டே இருக்கிறது.இவை சமாதான ஒப்பந்தத்தின்கீழ் அடங்கவில்லை.இங்கே,அதாவது அப்சாசியனிலும்,தென் ஒசாத்தியாவிலும் இத்தகைய பிரதேசங்களின் இராணுவத்திற்கு இருஷ்சிய இராணுவக்கட்டமைப்புப் பயிற்சியளித்து வந்தது.இவ் வண்ணமே ஜோர்ச்சியாவிலும் அதனது இராணுவத்துக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் பயிற்சியளித்து வந்தார்கள்,கூடவே இது நேட்டோ அமைப்பினது அடிப்படைத் திட்டத்துக்கு அமைய"சமாதானத்துக்கான கூட்டு ஒத்துழைப்பு."



இது வெளிப்படையான நேட்டோவின் வியூகம்,நெடுக,நெடுக மிக அண்மையாக இருஷ்சிய எல்லையை நெருங்கிக்கொள்வது.இவைகளை நாம் பால்டிக்கில் மற்றும் போலந்தில்,பல்கேரியாவில் இப்போது ஜோர்ச்சியாவில் பார்க்கிறோம்.இவைகளின்வழி ஜோர்ச்சிய மக்கள் எங்ஙனம் தமது பதில்வினையை ஆற்றுகிறார்கள்,அங்கே மக்களிடம் நேட்டோவுக்கான அநுதாபம் மிகுந்திருக்கிறதா?


மக்கள் அநேகமாக நேரத்துக்கே இதற்கு எதிராகவே தமது பதில்வினைகளைக்கொண்டார்கள்.அதாவது,நமது பிரதேசத்தில் நேட்டோவானதன் வரவு மிக அபாயகரமான நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பதை அவர்கள் மிகத் தெளிவாகவே புரிந்துகொண்டார்கள்.அநேகமாக அச்சப்படுவது,நடந்துமுடிந்த யுத்தமும் அவலமும் இறுதியானது அல்ல என்பதே.ஜோர்ச்சியவானது தொடர்ந்து இராணுவ முரண்பாட்டுக்கான திடலாக உருவாகிறது.இதனூடாகப் பலரும் உணருவது என்னவெனில்,இருஷ்சியாவோடான மீள் நட்பார்ந்த நிலைமைகளை உருவாக்கி உறவாடுதலுக்கு மிக நீண்டகாலமெடுக்கும் என்பது.மிக விரைவாக நேட்டோ எங்களை அடைகாத்துக்கொள்ளும்(நம்மைப் பலிகொடுக்க).ஆனால்,ஒன்றைமட்டும் நாம் எப்போதுமே மறக்கப்படாது:இன்றைய நிலையில் 18 இலட்சம் ஜோர்ச்சிய மக்கள் இருஷ்சியாவில் வாழ்கிறார்கள் என்பதும்,அங்கே அவர்கள் வேலைசெய்துவரும் வருமானத்தில் பெரும்பகுதி பணத்தை ஜோர்ச்சியாவுக்கு அனுப்பி வைத்ததுத் தமது உறவினரைக் காத்து வருகிறார்கள் என்பதையும் எப்போதும் மறந்துவிட முடியாது.இதுவொரு முக்கியமான பொருளாதார நெறிமுறைக் காரணி எமக்கு.


நேட்டோவானது தனது கரத்தை உக்கிரையின்மீதும் பதித்துவருவதை அறிவோம்.அங்கே,கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன 60 வீதமான மக்கள் நேட்டோக் கூட்டணி அமைவதை எதிர்த்துவருவதாக,இத்தகையவொரு நிலைமை ஜோர்ச்சியாவிலும் நிலவுகிறதா?


வருகிற ஜனவரி 5 ஜனாதிபதிக்கான தேர்தல் எங்கள் தேசத்தில் வருவதால்,பரவலாகச் சமாந்திரமான கேள்விகளை மக்களிடம் கொண்டு சென்று கேட்கப்பட்டது.அப்படிக் கேட்கப்பட்டபோது,நோட்டோ கூட்டணியில் இணைவது குறித்தும் கருத்துக்கேட்கப்பட்டது.79 வீதமான மக்கள் இதற்கு இசைவாகக் கருத்துக்கூறியள்ளனர் என்று தேர்தல் கமிஷன் தெரிவிக்கிறது.எமக்கும் தெரியும் இந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இந்தக் கருத்துக்கணிப்பினது முடிவுகள் யாவும் மிகப் பிழையானதென்பது.உண்மையிலேயே இந்த வீதம் என்பது மிகவும் கூட்டப்பட்டுள்ளது.எனது கணிப்பின்படி ஒவ்வொரு இரண்டாவது ஜோர்ச்சியக் குடிகளும் நேட்டோவில் இணைவதை எதிர்த்து வருகிறார்கள்.அரசினது முற்றுமுழுதான பொய்ப்பிரச்சாரமானது எங்கள் தேசத்தினது ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் தொட்டுச் செல்கிறது.


இது கவலையளிப்பது.ஆனால், இதுதான் நிலைமை.ஜோர்ச்சியாமீதான இருஷ்சியாவினது படையெடுப்போடு நோட்டோவின் பரப்புரைகள் ஜோர்ச்சியாவை ஒரு கை பார்த்தன.அமெரிக்காவே தன்னை எங்களது தேசத்தின் பாதுகாவலனாகவும்,எமது பிராந்தியங்களின் ஐக்கியத்துக்கு உத்தரவாதமளிப்பவனுமாகக் காட்டிக்கொள்கிறது.பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதையே வாந்தியெடுப்பதும்,அரசை விமர்சிப்பதைவிட நேட்டோவுக்குத் தலையாட்டுவது பெறுமதிமிக்கதாக இருக்கிறது.


நோட்டோவனது மிகவும் அடிப்படையானவொரு பிரச்சாரக் கட்டமைப்பை ஜோர்ச்சியாவில் கட்டிக்கொண்டுள்ளது,அது சுயமான பரப்புரைகளைத் தனக்குச் சார்பாகக் கட்டியமைக்கத்தக்கபடி இதைச் செய்துள்ளது.தலைநகர் Tbilissi யில் மத்திய தகவல் திணைக்கழகமொன்றை அது உருவாக்கி நடாத்துகிறது.அதுபோலவே தெற்கு மற்றும் மேற்கு ஜோர்ச்சியாவில் நேட்டோவினது இரு கிளைகளை அது அமைத்துள்ளது.இத்தகைய விளம்பர நிறுவனங்களிடம் பணம் மிகவும் கொட்டிக்கிடக்கிறது,இவர்கள் பள்ளி மாணவர்களுக்கும்,சிறார்களுக்குமாக ஏராளமான சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகள்,நகைச்சுவைத் துணுக்குள் எனப் பெரு எண்ணிக்கையில் பதிப்பித்துத்தள்ளிப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதுமல்லாது பெரும் கூட்டங்களையும் கூட்டி அவர்களே கலந்துரையாடல்களைச் செய்கிறார்கள்.இவை அனைத்தினதும் சுலோகம்:"நேட்டோவானது ஜோர்ச்சிய மக்களுக்குச் சமதானத்தையும்,மகிழச்சியையும் கூட்டிவரும்"என்பதே!



நேட்டாவானது மீளவும் ஜோர்ச்சியாவை ஆயுதமயப்படுத்துகிறது.இதன்பொருட்டு அரசினால் நல்வாழ்வுக்காகப் பணங்களைச் சேமிக்கமுடியாது.மேலும் இத்தகைய நடாத்தையின்படி மீளவும் இருஷ்சியாவுக்குத் தொந்தரவு கொடுப்பதைப்பற்றி மக்கள் உணர்ந்துள்ளார்களா?மொஸ்கோ இத்தகைய சூழ்ச்சியில் வீழ்ந்துவிடுமென எண்ணுவது மிகக் கடினமானது.


இருஷ்சியப்படையெடுப்பால் சிதறடிக்கப்பட்டுளுள்ள ஜோர்ச்சியப்படையணியை அமெரிக்காவானது முதற்கட்டமாகப் புனரமைத்துவருகிறது,இது நெருப்போடு விளையாடும் ஒரு நடவடிக்கை.சாகஸ்வில்லியும் அவரது நண்பர்களும் அமெரிக்காவோடிணைந்து விளையாடுகிறார்கள்.இருஷ்சியாவோ குறிகிய யுத்தக்காலத்திலிருந்து மிகத் தெளிவாகச் சொல்லிவருகிறது,ஜோர்ச்சியாவுக்கான இராணுவ உதவிகளையும்,யுத்த ஊக்குவிப்பையும் அமெரிக்காவே செய்துவருவதாக.எனவே, ஜோர்ச்சிய மக்கள் முற்றுமுழுதாக எந்த அபாயத்துள் நாம் இருப்பதென்பதை உணர்வார்கள்.



நீங்கள் ஜோர்ச்சியாவின் சமாதானத்துகான இயகத்தின் அங்கத்தவர்.இதன் பொருத்தப்பாடு உண்மையில் என்னவானது?மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய உங்களால் முடியுமா?


சமாதானத்துக்கான எமதிந்த அமைப்பானது இன்னும் பழமையானது அல்ல.இரண்டோ அல்லது மூன்றோ ஆண்டுகளே நாம் மிகவும் துடிப்போடு செயற்பட்டோம்.நாங்கள் அனைத்துக்கும் முன்பாக ஒரு செயற்பாட்டை முன்னிலைப்படுத்தினோம்.அதாவது,இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தென் ஒசாத்தியா மற்றும் அப்சாசியன் மக்களோடு மீளவும் நட்பினைக்கட்டி வளர்ப்பது அவசியமெனச் சுட்டிச் செயற்பட்டோம்.ஜோர்ச்சியாவின் பிராந்தியங்களின் ஐக்கியத்தை இராணுவத் தீர்வின்மூலம் ஏற்படுத்துவதை நாம் தொடர்ந்து பிழையானதெனச் சொல்லியே வருகிறோம்.எங்கள் விவாதத்துத்தகான பிரதிவினைகள் இன்றுவரை முற்று முழுதாகத் தைரியமூட்டுபவை.


இதனூடாகத் தென் ஒசாத்தியா மற்றும் அப்சாசியவோடு நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி மேலும் விருத்திக்கிட்டுச் செல்வதை மிகவும் முயற்சிசெய்கிறோம்.நாங்கள் புலம் பெயர்ந்த அகதிகளுக்கும் அவர்களது முன்னைய தெரிந்தவர்கள்,அயலவர்களுக்குமிடையிலான நட்பார்ந்த தொடர்பை-புரிந்துணர்வை மேலும் வளர்ப்பதற்காக அவர்கள் மத்தியில் உதவிகளைச் செய்து, இவைகளை மேலும் விருத்திக்கிட்டு வருகிறோம்.இத்தோடு,எமக்கு இன்னுமொரு முக்கியமான வேலைப்பணி மிக அவசியமானது.அதாவது,கௌகசுஸ்சின் அரசியல் சூழலை ஆராய்தல்.இங்கே,கவலையளிக்கத்தக்க விடயம் என்னவெனில்,நமக்கக் கிடைக்கக்கூடிய தகவல் அனைத்தும் ஒருபக்கச்சார்பானவை.ஒன்று அமெரிக்காவினது பக்கச்சார்பானது அல்லது இருஷ்சியாவினது பக்கஞ்சார்ந்தது.எமக்குத் தேவை இந்தச் சூழலின் புறநிலையானவொரு உண்மைப் படமே.



ஜோர்ச்சியாவின் அரசு உங்கள் நடவடிக்கைகள் குறித்து எங்ஙனம் பதில்வினையாற்றுகிறது?


இது அளவுக்கதிமாகவே நடந்தேறுகிறது.நான் இவை குறித்துச் சொல்வதென்றால்,எங்களது இந்த அரசியல் சூழலானது ஜனநாயத்தோடு சம்பந்தப்பட்டது.இருஷ்சியாவோடான மற்றும் அப்சாசியன்,தென் ஒசாத்தியாவுடனான மீள் நட்புறுவு வளர்பதன்ற குரல்கள் யாவும் உடனடியாகவே நசுக்கப்படுக்கின்றன.இவ்வண்ணமே நேட்டோவோடான கூட்டணி அமைப்பதற்கு எதிரான மக்களின் குரல்களுக்கும் அடக்குமுறைகள் நடந்தேறுகின்றன.



அங்கு எப்படியான உறுதிப்பாடுள்ளது? ஏதாவது பழிக்குப்பழி நடவடிக்கையுண்டா?



முதலாவதாகச் சொன்னால் நோட்டோவின் மிகக் காட்டாமான பிரச்சாரத்தைச் சொல்வேன்.இரண்டாவதாச் சமாதானத்துக்கான அமைப்பின் செயற்பாட்டாளர்களின் வெளிப்படையான கஷ்டம்.கைதுகள்,ஜோர்ச்சிய அரசின் புலாய்வுத்துறையினதும் அவர்களது முகவர்களதும் அச்சுறுத்தும் தொலைபேசியழைப்புகள்,வீதியோரத்தில் நின்று தரும் அபாயகரமான சூழல்களால் செயற்பாட்டை முடக்க முனைதல்.உள்நாட்டமைச்சகத்தின்கீழ் இயங்கும் உளவுப்படையினால் நமது உறுப்பினர் கைது செய்யப்பட்டு ஆறு மணி நேரம் தடுத்துவைத்து அவமானப்படுத்தப்பட்டும்,ஏசியும் பின்பு,நான்கு உளவுப்படை உறுப்பினர்களினால் நகைப்புடைக்கப்பட்டுள்ளார். இன்றுவரை இதுவொரு ஈனத்தனமான செயல்.இத்தகையதோடு மேலும் சொன்னால், அனைத்துச் செய்திகளையும் தடுத்துவிடுவது,இவை அரசின் உத்தியோபூர்வமான பரப்புரைகளைக் கேள்விக்குட்படுத்தினால் அல்லது நேட்டோவோடு இணைவது பற்றிய விவாதங்களை வெளிப்படுத்தினால்.அத்தோடு நேட்டோவை எதிர்த்துக் கருத்தாடுபவர்களின் எத்தக்கருத்தும் வார்த்தையில் வரவாய்ப்பேயில்லை.பத்திரிகை ஆசிரியர்களின் முடிவின்பின்னேதாம் இவை வரமுடியும்.அப்படி வந்தாலும் பத்திரிகைக் கடைகளிலோ அல்லது பெட்டிக்கடைகளிலோ இவற்றை வைத்து விற்பதற்குத் தயங்குவார்கள்.இவைகள் அரச காரியாலங்களைக் குறித்துக் கருத்து வெளிப்படுத்துவதால் அவர்களால் விற்க முடிவதில்லை.



குறைந்தபட்சமாவது இணையத்தின்வாயிலாகவாவது இச் செய்திகளை உங்களால் வெளிப்படுத்த முடியாதா?


அடைப்படை ரீதியாக ஆம் எனலாம்.எனினும்,அது மிகக் குழப்பகரமாகிக்கிடக்கிறது.நாங்கள் அந்த நோக்கில் முனைகிறோம்,ஒரு சில இணையத் தளங்களை உருவாக்கிக்கொள்ள.ஆனாலும்,இத்தகையதைக் கடைப்பிடிப்பதென்றால் அரசியல் சூழலில் மாற்றங்கண்டாகவேண்டும்.சாகஸ்வில்லியின் அரசு மக்களைத் தொடர்ந்து அடக்கியாள்வதென்பது தொடர்ந்து நடக்கக்கூடிய காரியமில்லையென்றே நாம் கருதுகிறோம்.



சாகஸ்வில்லியை எத்தகைய குணவியில்புக்குள் அடக்குகிறீர்கள்?,தீர்க்கதரிசனமிக்க அரச தலைவர்?அல்லது சூதாட்டக்காரன்?


பொறுப்புணர்வற்ற ஒரு சாகசக்காரன்.அவர் ஒரு வெற்று வேட்டு.மற்றவர் முன் தன்னைச்சுற்றிய அழுத்தத்தைச் செய்யத் தாவித்திரியும் மனிதர்.நான் நினைக்கிறேன் இவரது செயற்பாடுகள் குறித்து இவர் அடிப்படையில் சிந்தித்துக்கொள்வதில்லை என்று.நிச்சியமாக அவர் செய்யவேண்டிய கடமைகள்குறித்து அவருக்குத் தெரியும்.முற்றுமுழுதாக நியாயமான முடிவெடுக்கும் தளம்-சூழல் அவருக்கு நிறையவே உண்டு.ஆனால்,அவரிடமிருந்து வருவதோ அநீதியான முடிவுகளே, இது கவலைக்குரியது.இத்தோடு அமெரிக்க வெளிநாட்டமைச்சர் கொண்டிலீசா றைஸ் கூட இந்த மனிதரை எச்சரிகை செய்துள்ளார்-தென் ஒசாத்தியாமீதான இராணுவப்படையெடுப்புக்குறித்து-ஆனால், இவை எல்லாம் அவரைப் பாதிக்காது.



சாகஸ்வில்லி தனது தொலைக்காட்சி உரையை ஆங்கிலத்திலேயே செய்வதாகக் கதை உலாவுகிறது...


அது உண்மையில் ஒரு சிரிப்புக்கதை,அவரிடம் இதுகுறித்தொரு அடிப்படைக் கருத்திருக்கிறது.எனவே,அப்படிப் பேசுவதில்லை.அவர் இத்தகைய உரைகளை ஜோர்ச்சிய மொழிமூலமே ஆற்றுவதுண்டு.


அதுசரி.அவரும் நீண்டகாலமாக அமெரிக்காவில் வாழ்ந்தவர்.அத்தோடு அமெரிக்கக் குடியுரிமைபெற்று,அமெரிகக்கடவுச்சீட்டோடு அமெரிக்கக் குடிமகனாகவுள்ளார்.அவரது அமைச்சரவையிலுள்ள மொத்தம் ஏழு மந்திரிகளும் வெளிநாட்டுக்கடவுச் சீட்டுவைத்திருக்கிறார்கள்.


இது குறித்து எனக்குத் தெரியாது.ஆனால் எங்கள் மந்திரிகள் எல்லோரும் பெருந்தொகையான செல்வத்தை வெளி நாடுகளில் குவித்து வைத்திருக்கிறார்கள்.இதுகூட உண்மை, எங்கள் மந்திரிகள் எல்லோரும் இந்த ஜோர்ச்சிய-இருஷ்சிய யுத்தம் நடைபெற்றபொழுதுகளில் வெளிநாடுகள் நோக்சிச் சென்றார்கள் அல்லது ஜோர்ச்சிய எல்லைப் புறங்களில் நேரடியாகத் தங்கி இருந்தார்கள்.இது நிச்சியமாகத் தற் செயல்தான்!




விளாடிமேர் பூட்டினையும்,இட்மிற்றி மெட்வேடையையும் எந்தக் குணவியல்புக்குள் அடக்குகிறீர்கள்,இருஷ்சியாவின் பிரதமராகவும்,ஜனாதிபதியாகவும்?



இருவருமே பொறுமையான(ஐஸ்ப் போன்ற குளிர்மையுடைய) சதுரங்க ஆட்டக்காரர்கள்.இவர்கள் ஜெல்சின் படையணியின் வாரீசுகள்.இருஷ்சியாவில் ஒல்காரிய பூர்ச்சுவாக்களின் பிரதிநிதிகள்.இவர்களின் சர்வதேச உறவுகள்,தொடர்புகள் யாவும் கோடிஸ்வரர்களின் கண்கொண்டு பார்ப்பதே.ஒல்காரியக் கோடிஸ்வரர்களின் நலன்களைப் பாதுகாப்பதே இவர்களது முதற்கடமை.இரண்டாவதுதான் சாதரண இருஷ்சிய மக்களது நலன்கள் பற்றிய கவனமெல்லாம்.இந்த வகைப்பார்வை இவர்களால் செய்யப்பட்ட ஜோர்ச்சிய-இருஷ்சிய யுத்த முரண்பாட்டுக்கும் பொருந்தும்.



ஜேர்மனிய ஊடகமொன்றிற்கு ஜோர்ச்சிய அரசை விமர்சித்துப் பேட்டியளித்ததற்காக, நீங்கள் உங்களது தேசத்துக்கு மீளச் செல்லும்போது அந்த அரசின் புலனாய்வுத்துறையினால் உங்குளுக்குப் பிரச்சனைகள்-எதிர்வினைகள் வருவதைக் குறித்துக் கணிப்பிடவில்லையா?




இது முற்றுமுழுதாக நடக்கலாம்.இதன் காரணத்திலேயேதான் நான் அநாமதேயமாக இந்தப் பேட்டியைத் தர விரும்பினேன்.


Peter Wolter :http://www.jungewelt.de/2008/09-27/002.php



தமிழில்:
ப.வி.ஸ்ரீரங்கன்
05.10.2008




P/S: டொச் மூலம்:





»Wir leben in Georgien unter einer totalen Propaganda«


Gespräch mit Lasha Shavdia. Über einen Abenteurer an der Spitze des Staates und über eiskalte Schachspieler in Moskau. Und über die Notwendigkeit, zu Rußland wieder freundschaftliche Beziehungen herzustellen
Peter Wolter



Lasha Shavdia ist ein führender Aktivist der georgischen Friedensbewegung. Er hat ein Pseudonym gewählt, da er nach seiner Rückkehr Repressalien fürchtet, falls der georgische Geheimdienst seine Identität herausfindet. Aus diesem Grunde veröffentlichen wir von unserem Gesprächspartner kein Foto.



Nach dem Kaukasus-Krieg haben die Medien im Westen meist für Georgien Partei ergriffen, sie präsentieren das Land als Opfer russischer Großmachtspolitik. Wie stellt sich die Sachlage für Sie als führender Aktivist der georgischen Friedensbewegung dar?


Es ist durchaus richtig, daß Georgien Opfer russischer Expansionspolitik ist. Es ist aber noch richtiger, wenn wir es so formulieren: Georgien ist zum Opfer der Konfrontation der großen imperialistischen Mächte geworden. Auf der einen Seite stehen die USA, die die NATO an ihrer Seite weiß, auf der anderen steht Rußland.


In Deutschland wird der Eindruck erweckt, fast alle Georgier scharten sich jetzt hinter Präsident Michail Saakaschwili, von einer Opposition liest man nur selten etwas. Gibt es in Ihrem Land eine ernst zu nehmende Gegenkraft?


Saakaschwili hat keineswegs die Mehrheit der Bevölkerung hinter sich. Ich gebe zu, daß er zu Beginn seiner Amtszeit durchaus breiten Zuspruch hatte, weil er den Kampf gegen die Korruption aufnahm. Das ist aber längst Vergangenheit – die schlimmste Häufung von Korruption findet sich heute ausgerechnet in seiner eigenen Regierung. Seine Minister kontrollieren über Strohmänner so gut wie alle großen Unternehmen, die Einfluß in Georgien haben.



Die Minister nutzen also ihr Amt, um in die eigene Tasche zu wirtschaften?


So ist es. Das ist aber auch nicht neu in meinem Land. Unter der Regierung von Eduard Schewardnadse wurden diese Firmen auch schon von dessen Ministern kontrolliert – seitdem Saakaschwili an der Macht ist, sind zur Abwechslung mal seine Leute am Zuge.


Wird darüber in der Öffentlichkeit diskutiert?


Jeder weiß davon. Auch wenn die georgischen Medien über die allgegenwärtige Korruption schweigen – es wird überall darüber diskutiert.


Gibt es in Georgien eigentlich unabhängige Medien?


Es gibt durchaus einige Zeitungen und Zeitschriften, die Saakaschwili recht offen kritisieren. Aber alle Radio- und TV-Stationen sind auf Regierungslinie, bis auf den Fernsehsender Kafkasya. Der hat allerdings nur eine sehr geringe Reichweite, man kann ihn eigentlich nur in der Hauptstadt Tbilissi empfangen. Vor dem Krieg gab es noch Fernsender, die in russischer Sprache ausstrahlten – bis auf einen, der in Rußland als Oppositionssender gilt, wurden alle abgeschaltet. Seit dem Krieg werden auch alle russischsprachigen Internetseiten blockiert.


Aus russischer Sicht wurde der Krieg durch einen Angriff Georgiens auf Südossetien ausgelöst. Saakaschwili hingegen sagt, seine Truppen hätten lediglich auf russische Provokationen reagiert. Wer hat denn aus Ihrer Sicht den Anfang gemacht?


Beide Seiten wußten, daß es irgendwann zu einer Konfrontation kommen wurde, beide waren auch darauf vorbereitet. Deshalb hat auch Rußland zu dieser Tragödie beigetragen. Den größten Teil der Verantwortung tragen aber Saakaschwili und seine Regierung – der Einmarsch der georgischen Truppen war schließlich der Auslöser des Krieges.


Georgien hat den Krieg verloren – wie ist jetzt die Stimmung in der Bevölkerung gegenüber Rußland? Gibt es Verständnis für die strategischen Sorgen der Führung in Moskau, die offenbar verhindern will, daß die NATO unmittelbar vor ihrer Haustür neue Stützpunkte einrichtet?


Die Stimmung ist differenziert. Zum einen wissen die meisten Georgier sehr genau, daß es bei uns ohne Rußland und ohne die wirtschaftlichen Beziehungen zur russischen Industrie keinen wirtschaftlichen Aufschwung geben wird. Die Bevölkerung weiß auch, daß die ethnischen Konflikte, die seit den 90er Jahren so heftig aufgeflammt sind, nur dadurch gelöst werden können, daß die Freundschaft zu Rußland wiederhergestellt wird. Es ist verständlicherweise jedoch sehr schwer, diejenigen Georgier davon zu überzeugen, die aus Südossetien und Abchasien vertrieben wurden. Jeder weiß auch, daß Rußland schon seit langem in diesen beiden Territorien diejenigen unterstützt, die eine Abtrennung von Georgien wollen. Das Ergebnis ist, daß aus diesen Territorien 160000 Menschen geflüchtet sind, von denen allerdings einige schon wieder zurückgekehrt sind.
Freundschaft ist eben mehr als nur eine politische Losung, man muß sich auch entsprechend verhalten. Das gilt natürlich für beide Seiten. Und die Freundschaft wird nicht gerade dadurch gefördert, daß Georgien Mitglied der NATO werden und Stützpunkte des Bündnisses auf seinem Territorium einrichten will. Aber unsere Bevölkerung versteht es nicht, daß Rußland offensichtlich keine andere Möglichkeit gesehen hat, als diese Konflikte militärisch zu lösen.


Welche Alternativen hätte es denn gegeben?


Der richtige Zeitpunkt dafür wurde leider verpaßt. Nach dem Zerfall der UdSSR, Anfang der 90er Jahre also, bekam Georgien eine nationalistische Regierung, die das Land sofort in Richtung NATO lenken wollte. Und die russische Regierung unter Präsident Boris Jelzin hatte überhaupt kein Konzept, welche Politik sie im Kaukasus betreiben sollte. 1999 hat Jelzin z. B. in Istanbul ein Abkommen zur konventionellen Abrüstung in Europa unterzeichnet. Eine Folge war, daß anschließend der größte Teil der noch in Georgien stationierten russischen Streitkräfte abgezogen wurde. Die letzten Einheiten verließen unser Land erst im vergangenen Jahr. Und dieses Jahr sind die Russen wieder einmarschiert.



Für Abchasien und Südossetien gab es ein Friedensabkommen, dem auch Georgien zugestimmt hat. Demnach durfte Rußland dort Friedenstruppen stationieren.


Das ist richtig, es gab dort aber auch reguläre Einheiten der russischen Armee, die nicht unter das Friedensabkommen fielen. Dort wurden auch abchasische und südossetische Truppen durch russische Instrukteure ausgebildet. Ähnlich wie in Georgien selbst, wo viele Militärausbilder aus den USA eingesetzt wurden, und zwar auf Basis des NATO-Programms »Partnership for Peace«.


Es ist offenkundig Strategie der NATO, immer dichter an die Grenzen Rußlands heranzurücken – das hat man im Baltikum gesehen, in Polen, in Bulgarien und jetzt auch in Georgien. Wie reagiert die Bevölkerung darauf? Gibt es Sympathie für die NATO?


Die Bevölkerung reagiert eher negativ darauf, sie weiß genau, daß die Präsenz der NATO auf unserem Territorium brandgefährlich wäre. Die meisten fürchten, daß der soeben verlorene Krieg möglicherweise nicht die letzte Tragödie war. Georgien könnte zu einer Arena für weitere militärische Konflikte werden. Den meisten ist es auch durchaus bewußt, daß die Wiederherstellung der freundschaftlichen Beziehungen zu Rußland in weite Ferne rückt, sobald die NATO sich bei uns eingenistet hat. Und eines dürfen wir auch nicht vergessen: Etwa 1,8 Millionen Georgier leben zur Zeit in Rußland. Sie arbeiten dort und überweisen viel Geld zur Unterstützung ihrer Familien. Das ist ein wichtiger wirtschaftlicher Faktor für uns.


Die NATO hat auch ihre Hand nach der Ukraine ausgestreckt – dort sprechen sich jedoch laut Umfragen über 60 Prozent der Bevölkerung gegen einen Beitritt zum Bündnis aus. Gibt es solche Erhebungen auch für Georgien?


Am 5. Januar hatten wir Präsidentschaftswahlen, parallel dazu wurde den Wählern auch die Frage gestellt, ob sie für einen Beitritt zur NATO sind. Die zentrale Wahlkommission gab anschließend bekannt, 79 Prozent hätten diese Frage mit Ja beantwortet. Wir wissen aber genau, daß sowohl das Ergebnis der Präsidentschaftswahl als auch das dieses Referendums gefälscht war. Die Zahl ist mit Sicherheit zu hoch. Ich schätze mal, daß jeder zweite gegen einen Beitritt ist – und das unter den Bedingungen einer totalen Propaganda, die jeden Winkel unseres Landes erfaßt.
Leider ist es jetzt so, daß der Einmarsch russischer Truppen genau dieser NATO-Propaganda in die Hände spielt. Die USA stellen sich nun als Beschützer und großen Freund Georgiens dar, als Garant für die territoriale Integrität meines Landes. Das führt dazu, daß sogar die Zeitungen und Zeitschriften, die als regierungskritisch gelten, den NATO-Beitritt befürworten.

Hinzu kommt eine massive Propaganda der NATO selbst, die hierfür sogar eigene Strukturen geschaffen hat. Da gibt es zum einen das Informationszentrum der NATO in der Hauptstadt Tiblissi. Dann gibt es zwei NATO-Niederlassungen im Osten und im Westen Georgiens. Diese Propagandabüros verfügen über Geld ohne Ende, sie produzieren Zeitschriften, Informationsbroschüren, Comic-Hefte für Kinder, Material für Schulen, sie organisieren Veranstaltungen. Alles nach dem Motto: »Die NATO bringt Frieden und Glück für das gesamte georgische Volk«.


Die NATO will Georgien wieder aufrüsten – an Geld soll wohl nicht gespart werden. Ist der Bevölkerung bewußt, daß damit Rußland erneut gereizt wird? Es ist schwer vorstellbar, daß sich Moskau das gefallen lassen wird.


Die USA haben schon erste Schritte unternommen, um die militärische Infrastruktur zu ersetzen, die die Russen zerstört haben. Es ist in der Tat ein Spiel mit dem Feuer, das Saakaschwili und seine Freunde in den USA betreiben. Rußland hat seit dem kürzlichen Krieg immer wieder deutlich gemacht, daß die militärische Unterstützung Georgiens durch die USA unterbunden werden muß. Den meisten Georgiern ist durchaus bewußt, in welcher Gefahr wir sind.


Sie gehören zur Friedensbewegung Ihres Landes. Wie relevant ist die eigentlich? Können Sie sich in der Bevölkerung Gehör verschaffen?


Unsere Friedensbewegung ist noch nicht sehr alt, wir sind eigentlich erst seit zwei, drei Jahren richtig aktiv. Wir haben vor allen Dingen versucht, unter den Flüchtlingen dafür zu werben, daß sie wieder Freundschaft mit der südossetischen und abchasischen Bevölkerung schließen. Wir betonen auch immer wieder, daß der Versuch, die territoriale Integrität Georgiens auf militärischem Wege herzustellen, ein großer Fehler war. Die Reaktionen auf unsere Argumente waren bisher durchaus ermutigend.
Darüber hinaus bemühen wir uns, gute Kontakte zu den Südosseten und Abchasiern zu entwickeln. Wir helfen auch dabei, wieder friedliche und auch freundschaftliche Beziehungen zwischen den Flüchtlingen und ihren früheren Nachbarn und Bekannten zu entwickeln. Ein weiteres wichtiges Arbeitsfeld ist für uns, die politische Situation im Kaukasus zu analysieren. Bedauerlicherweise sind die meisten Informationen, die uns zur Verfügung stehen, sehr einseitig: Entweder proamerikanisch oder prorussisch. Wir wollen aber ein objektives Bild der Lage.


Wie reagiert die georgische Regierung auf Sie?


Es wäre maßlos übertrieben, wenn ich sagen würde, daß die politische Atmosphäre bei uns etwas mit Demokratie zu tun hätte. Jede Stimme wird sofort unterdrückt, die für die Wiederherstellung freundschaftlicher Beziehungen zu Rußland, zu Abchasien oder Südossetien wirbt. Das gleiche gilt für alle Äußerungen gegen den Beitritt Georgiens zur NATO.

Wie sieht das konkret aus? Gibt es Repressalien?


An erster Stelle würde ich die massive NATO-Propaganda nennen. Zweitens werden Aktivisten der Friedensbewegung offen drangsaliert. Es gibt Festnahmen, unsere Leute bekommen Drohanrufe vom georgischen Geheimdienst oder werden von dessen Agenten auf der Straße angemacht, eingeschüchtert und bedroht. Einer unserer Mitarbeiter wurde vor wenigen Tagen verhaftet, und zwar von der Spionageabwehr, die dem Innenministerium untersteht. Er wurde sechs Stunden lang festgehalten, beschimpft und angepöbelt. Und schließlich wurde er von vier Geheimdienstleuten verprügelt. Das war bisher der krasseste Fall.
Darüber hinaus wird versucht, alle Informationen zu blockieren, die der offiziellen Propaganda widersprechen oder dazu aufrufen, wieder freundschaftliche Beziehungen zu Rußland aufzunehmen, oder Argumente gegen den NATO-Beitritt bringen. NATO-Gegner kommen weder in Zeitungen und Zeitschriften noch in den elektronischen Medien zu Wort, offenbar gibt es unter den Redaktionen feste Absprachen. Hin und wieder drucken wir auch Informationsmaterial. Damit kommen wir aber auch nicht sehr weit, denn Zeitungskioske weigern sich meistens, sie auszulegen. Wenn sie es doch tun, wird das Material von den Behörden konfisziert.


Können Sie sich wenigstens über Internet artikulieren?


Im Prinzip ja, es ist aber viel komplizierter geworden. Wir sind zwar dabei, eine eigene Homepage einzurichten, die wird sich aber wohl nur halten lassen, wenn sich die politische Situation geändert hat. Wir hoffen, daß das nicht mehr lange dauert, denn die Regierung von Saakaschwili kann die Bevölkerung nicht ewig diesem Druck aussetzen.


Wie würden Sie Saakaschwili charakterisieren? Charismatischer Staatsmann? Vabanquespieler?


Ein verantwortungsloser Abenteurer. Er ist eitel, will Eindruck schinden, er ist sprunghaft. Ich glaube nicht, daß er seine Entscheidungen gründlich bedenkt. Natürlich gibt es auch für ihn gewisse Sachzwänge – er hätte aber durchaus genügend Spielraum für vernünftige Entscheidungen. Leider kommt aber meist Unvernünftiges dabei heraus. Sogar US-Außenministerin Condoleezza Rice soll ihn gewarnt haben, militärisch gegen Südossetien vorzugehen – aber nicht einmal das hat ihn beeindruckt.


Es wird erzählt, er halte seine Fernsehansprachen auf englisch ...


Das ist natürlich ein Witz, der sicher eine gewisse Grundlage hat. Nein, er spricht bei solchen Gelegenheiten georgisch.


Er hat ja lange in den USA gelebt. Es wird berichtet, er sei auch amerikanischer Staatsbürger. Insgesamt sieben Minister seiner Regierung sollen ausländische Pässe haben.


Davon weiß ich nichts. Allerdings haben unsere Minister ein nicht unbeträchtliches Vermögen im Ausland. Tatsache ist auch, daß während des georgisch-russischen Krieges eben diese Minister entweder auf dem Weg ins Ausland waren oder sich in unmittelbarer Nähe von Grenzübergängen aufhielten. Rein zufällig natürlich!



Wie würden Sie Wladimir Putin und Dmitri Medwedjew charakterisieren, den Regierungschef und den Präsidenten Rußlands?


Beide sind eiskalte Schachspieler. Sie sind die Erben des Jelzin-Regimes, Repräsentanten der oligarchischen Bourgeoisie Rußlands. Sie sehen ihr Land und die internationalen Beziehungen mit den Augen von Milliardären, verteidigen also in erster Linie die Interessen der Oligarchie. Erst an zweiter Stelle kommt für sie das Interesse des einfachen Volkes – diese Einschätzung gilt auch für ihre Kriegsführung im georgisch-russischen Konflikt.



Müssen Sie nicht mit Repressalien rechnen, wenn Sie zurückkommen und der georgische Geheimdienst findet heraus, daß Sie in der deutschen Presse die Politik Ihrer Regierung kritisiert haben?



Das ist durchaus möglich, deswegen möchte ich auch lieber anonym bleiben.

http://www.jungewelt.de/2008/09-27/002.php

Sunday, September 21, 2008

அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் ஈழத்து இயக்க அரசியல்

ஷோபா சக்தியும் கல்வெட்டும் சேனனும்:


-சில கருத்துக்கள்.


இரயாகரனுக்குக் கல்வெட்டுப் பாடிய சோபா சக்திக்கு என்ன நியாயமிருக்கிறதோ இல்லையோ அதை வரவேற்று நியாயப்படுத்தும் சேனனுக்கு என்ன அருகதையிருக்கு பெண்ணின் உள்ளாடை-அதிகாரம்-ஆண்மொழி குறித்துப் பேசுவதற்கென்று நாம் கேட்டு வைப்போம்!எஸ்.போ.வின் எழுத்துக்களைப் படித்த அன்றைய இளைஞர்கள்,ஒரு பெருமைக்காக அவரை அப்படியே கொப்பி பண்ணிய வரலாறு எனக்குள்ளும் ஓடுகிறது.எனது சிறுகதைகளில் பல எஸ்.போ.வை அப்படியே கொப்பி எடுத்ததென்பது உண்மை.ஆனால்,சோபாசக்தி இரயாவுக்குப் பாடிய கல்வெட்டும் அதே எஸ்.போ.வைக் கொப்பியடித்த எழுத்துவடிவமென்பதை நான் அறிவேன்!.இந்தக் கல்வெட்டை இன்று நியாயப்படுத்தும் சேனனின் அரசியல் குறித்து நாம் மௌனித்துக் கிடக்கமுடியாது!


உயிரோடிருப்பவனைக் குண்டுகள்கொண்டு கொன்றழிக்கும் இந்தத் தலைமுறையிலிருந்து சோபா சக்தி வருகிறார்.அவரது நியாயத்தின்வழி அவர் இரயாகரனை என்றோ கொன்றொழித்துவிட்டார்.இந்தக் கொலையை இன்றுவரை நியாயப்படுத்தும் சேனன் இன்னொரு கொலைக்கு அத்திவாரம் போடுகிறார்.அந்தத் தெரிவினூடாக மீளவும் இரயாகரனைப் புலம்பெயர் தமிழர்களின் "இன்றைய பெண்ணியத்தின்"வழி கொல்வதில் துணைக்கு இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தையும் கூட்டிவருபவர் மெல்ல அக்காவின் அரசியலையும் நியாயப்படுத்தப் பல்வகைக் கருத்துக்களை அதிகாரத்தின்வழி அலுசுகிறார்.எனினும்,அவரை இது எதுவுமே காத்துவிடவில்லை.அவரது மொழியைப்போலவே.


இவர்கள் செய்யும் இன்றைய "பிரா-ஜட்டி இல்லாத பெண்ணுடல்"அரசியல் இவர்களின் எஜமானர்களைக் காவுகொள்வதாக இருக்கும்போது,அவர்களால் மெல்லிய நாடாக்களில் தொங்கவிடப்பட்ட இந்த மார்புக்கச்சை இன்றைய இளைஞிகளைக் கட்டியாளும்போது இத்தகையவொரு போராட்டத்தைச் சுடலை நோக்கி நகர்பவர்கள் செய்கிறார்கள்.அவர்களது "தெரிவுகளை"அம்போவெனத் தாண்டிவிடும் அவர்களின் புதல்விகள் மெல்லப் போட்டுக் கழற்றும் இந்த வர்ணச் சங்கதிகள் நாளைய போராட்டரங்கில் மிகப்பெரும் பேசு பொருளாக உருமாறும் அரசியல் இவர்களுக்குள் இன்று தேம்பி வழிகிறது, இன்னொரு வடிவில்.அந்த வடிவத்தை அவிழ்ப்பதில் முன்னணியில் நிற்பவர்களில் சேனனும் ஒருவர்.


நமது தேசத்தில்,ஏன் எனது ஊரான சரவணையில் தோழர்களோடு கூட்டுக்கலவியை1982 ஆம் ஆண்டு நானும் பாசறையில் செய்தவர்களில் ஒருவன் என்ற அடிப்படை அறிவில் இத்தகையவொரு போராட்டம் எனக்கு அவசியமானது.ஏனெனில், எனது தெரிவுக்கிசைவாக நான் பெண்ணுடலை அநுபவிப்பதில் இன்றைய பெண்ணுடலும் அதுகொண்டிருக்கும் மரபும் எனக்குடந்தையாகச் செயலாற்றவில்லை.எனவே,நான் விரும்பும் உடலை இது மிக விகாரமாக்கிவிடுவதால் நானே,இதன் முதல் எதிரி.இது, கடந்து மீள்வதில் இன்றைய உடுதுணி உற்பத்தியாளர்களின் எளிமையான வியூகமே பதில் சொல்லியாக வேண்டும்.இல்லையேல்,"புலம் பெயர் பெண்ணியம்"நகர்த்தப்போகும் அடுத்தகட்ட அரசியல் போராட்டம் நல்லதொரு "தெளிவை"எமக்குத் தந்துவிடப்போகிறது.எனவே,இதைவிட்டு நாம் கொஞ்சம் சேனனிடம் போவோம்.


அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் ஈழத்து இயக்க அரசியல் பற்பல மனிதர்களை ஈழத்தில் போட்டுத் தள்ளிய அன்றைய-இன்றைய நிலைமையிலும்... இந்த ஈனத் தனத்தின் எதிர் விளைவுகள் நம்மைக் காடாத்தும் போரை நாம் அனுபவிக்கும்போது,இந்தச் சேனன் அவிழ்க்கும் பெண்சார் எழுத்து அல்லது குப்பை என்பது தோழர் இரயாகரனை நோக்கிய காழ்ப்புணர்வாக விரிவதின் அரசியல் என்னவென்பது சந்தேகித்துக்கொள்வதற்கிசைவானது.இன்றைய "பெண் உள்ளாடை"அரசியலுக்கு ஒத்திசைவாகப் பகலும் சேனன்வழி அரசியல் எந்தத் தர்க்க நியாயமும் இல்லாது இரயாகரனை முடிச்சுப் போடுவதும்,அதற்கேற்றபடி அம்மணி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தைக் கயிற்றில் கட்டித் தேர் இழுக்கும் அரும்பெரும் பெண்ணியத்தில் அவரது(சேனன்) அரசியலைத் தோலுரித்துக்கொள்வதற்கு அவசியமான தடயங்கள்பல.


எமது,வாழ்வுக்காகப் பயணித்த அரசியல்வாழ்வு என்றோ நாறிப்போன இன்றைய இந்திய உக்கிர நலன்களின்வழி,உழுதுபோடும் அரசியலுக்கு எப்பவும் முகவர்கள் இருந்தபடியே.அதுள் பற்பல வடிவங்கள் நமக்குள் விரைந்து குருதிச் சுற்றோட்டதை மேன்மேலும் உயர்த்த பற்பல சேனன்கள் உண்டு.இதுள் முக்கியமாக அக்கா இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் சேனனுக்கு அவசியமானவொரு கட்டத்தில் உட்புகும் நோக்கம் கூர்ந்து கவனிகத்தக்கது!


திருவாளர் சேனன் எப்போது அவசியத்துக்கு மாறான திசைவழிகளைத் தேர்வதில் தனது அரசியலின் விருத்தி எத்தகையதென்பதை அவரே உரைக்காதிருப்பினும் அதன் உள்நோக்கம் எடுத்துரைக்கும் "பொழுதும்-கணமும்" மிக கடினமான திசை வழியை அவருக்கேயிட்டுச் செல்வதை உணர்வதில் நாம் தவறிழைக்க முடியாது.இதன்தொடர்ச்சியில் இராஜேஸ்வரி பால(ண)சுபபிரமணியம் பிள்ளையானின் அந்தரக அரசியலுக்கு முக்காடுவிரித்ததென்பது(இரயாவின் கட்டுரைப்படி) அதன் பண்பினை மதிப்பிட்ட அரசியல் நலன் மற்றும் போக்குகளிலிருந்து எழுவதிலும்பார்க்க நிலவும் அரசியலுக்கேற்ற கருத்தியற்றளத்தை உருவாக்குவதாக முடிந்துபோகிறது!

இராஜேஸ்வரிக்குப் பெண்ணியத்தின்வழி பட்டங்களைக் கழுத்தில்கட்டி ஊர்வலமாக இழுப்பதிலுள்ள அரசியலானது அவரது இலங்கை அரசியலின்மீதான பார்வைகள்-ஒத்துழைப்புகள் குறித்துக் கருத்துக்களை-விமர்சனங்களை எழுப்புவதாக இருக்கவில்லை.சேனனுக்கு அதுவல்ல நோக்கு.ஜென்னியின் கட்டுரையைச் செழுமைப்படுத்துபவர் இராஜேஸ்வரியை இக்கட்டுரைக்குள் இழுத்துவருவதற்கு இரயாகரனையும்,சோபா சக்தியின் கல்வெட்டையும் மட்டுமல்ல சுகனினது மதிப்பு மறுப்பறிக்கைவரை இழுத்துவந்து, தனது "உள்ளாடை அரசியலை" மிகக் கவனமாக நகர்த்தி அக்காவின் இன்றைய அரசியற் தற்கொலையை நியாயப்படுத்த முனையும் இன்றைய நெருக்கடியில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை வெறும் அப்பாவியாகவும்,அவர் ஒருவரே பெண்ணியத்தில் ஊன்றி,நிலைத்த போராளியாகவும்- புகலிடத்தில் "முற்றும் புரிந்துகொண்ட" பெண்விடுதலைப் போராளியாக ஏற்றம் பெறுகிறார்."அவருக்கு வயது அறுபது,அதிலும் அவர் செக்ஸ்சியாக இருப்பதாக" தனக்குச் சுயதம்பட்ட நியாயத்தைக் கட்டமைக்க அக்கா முனைவதின் ஒரு துளி நியாயமாவது தனது இன்றைய அரசியல் குறித்துக் கருத்துரைக்கமுடியாத இவர்,மகிந்தாவின் பின்தொடரும் பிள்ளையானின் அரசியலில் எந்தமக்களின் விடுதலையை வென்று குவித்துள்ளார்.பிள்ளையானின் காட்டாட்சியில் கிழக்குமாகாணப் பெண்கள் படும் உடல்-உள ரீதியான பாலியற்பலாத்தகாரத் தாக்குதல் முதல் பொருளாதார ஒடுக்குமுறைவரை இவரது அரசியல் என்ன நிலையெடுத்திருக்கிறது?


பிள்ளையானை நியாயப்படுத்துவதென்பது மறைமுகமாக மகிந்தாவை நியாயப்படுத்திச் சிங்களப் பாசிச அரசை நிலைப்படுத்திக்காப்பதென்பதன் உண்மை இங்கே மறைக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாகச் சேனன் அக்காவுக்கு அருமையான பட்டுக் குடையொன்றைத் தைத்து வழங்குகிறார்.


இன்றைக்குப் புலிகளைச் சாட்டுவைத்து இலங்கைவாழ் முழுமொத்தச் சிறுபான்மை இனங்களின் அரசியல் கோரிக்கைகளையும் பயங்கரவாதமாகச் சித்தரிக்க முனையும் சிங்கள ஆளும் வர்க்கமானது தொடர்ந்து இராணுவரீதியான பலாத்தகாரத்துக்கூடாகச் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்க முனைவதன் அரசியலை பிள்ளையான்-கருணா போன்ற விடுபேயர்களுடாகச் செய்து முடிக்கும்போது, அதற்குக் காவடி தூக்கும் இராஜேஸ்வரிக்கு புகலிடத்திலுள்ள மாற்றுக் கருத்தாளர்கள் எதிர்வினையாற்றுவதென்பது அவரைத் தூசிப்பதாக முடிகிறது-அன்பர் சேனனுக்கு!


இன்றைய இலங்கை அரசபயங்கரவாதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கு எந்த வகையில் நியாயமான அரசியல் நடாத்தையூடாகக் காரியமாற்றியிருக்கிறது?அரச பயங்கரவாதம் என்பது எப்பவும் நிலவும் அரச அமைப்பைக் காப்பதற்கெடுக்கும் பலாத்தகார இராணுவ நடவடிக்கையில் தனது அரசியல் ஆதிக்கத்தை மறுசீரமைப்புச் செய்கிறது.இதுவரையிலான எல்லாவகைக் கண்துடைப்பு ஜனநாயக விழுமியங்களையும் கடைந்தெடுத்துத் தூரவெறிந்துவிட்டுக் குடும்ப ஆதிக்க-கட்சி ஆத்திக்க-இராணுவ ஆதிக்கச் சகதியினூடாக ஒற்றைக் கட்சி-சர்வதிகாரத் தலைமையை நிறுவ முனையும் மகிந்தா குடும்பத்துக்குக் காக்கா பிடிப்பது, கிழக்குக்கு ஜனநாயகமோ அல்லது யாழ்பாண ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் முன்னெடுப்போ அல்ல.மாறாக,இதுவொரு மோசடி அரசியல்.


மக்களைக் காட்டிக் கொடுத்து, அவர்களின் உரிமைகளை ஏலம்போடும் இவ்வரசியல் போக்கிரித்தனமானதாகும்,இதன் வாயிலாக இலங்கையில் பாசிச ஆட்சியை நிலைப்படுத்தி,நியாயப்படுத்தும் பக்காப் பரப்புரையாகவே இவர்களது"இணைவு-பக்கச்சார்பு-ஒத்துழைப்பு"காட்டி நிற்கிறது.இதற்காக இவர்களுக்கு வந்துவிழும் எலும்புகள் அந்நிய தேசங்களின் அரசியல் மற்றும் ஊடக மட்டத்தில் மகிந்தா அரசை மக்களின் ஜனநாயகத்துக்கான ஒரு மக்கள் முன்னணி அரசாக நிலைநிறுத்த முயற்சிக்கிறது.(உதாரணமாக: வூப்பெற்றால் இராமச்சந்திரனும்,ரீ.பீ.சீ. வானொலியும் முன்னெடுக்கவிரும்பும் ஜேர்மனிய ஊடகங்களுக்குத் தகவல் வழங்கும் வானொலிச் செயற்பாடு-இது, இன்னும் செயற்பாடுகளில் இருக்கிறது.இதுவும் மிகவிரைவாக நம்மைக் கொல்லும் இலங்கையை நியாயப்படுத்தும்)இதுவே,இலங்கைச் சிறுபான்மை இனங்களின் தோல்வியுமாகவிரிகிறது.குறிப்பாக தமிழ்பேசும் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளைப் புலிகளின் அரசியல் நீர்த்துப்போக வைத்தது ஒருபகுதி உண்மையென்றால், மறுபகுதி இத்தகைய பிள்ளையான்-கருணா அணிகளுக்கு வக்காலத்து-ஆலோசனை வழங்கும் இந்த ஞானம்-இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்போன்ற இழி மனிதர்களின் செயற்பாடுமென்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.



இத்தகைய நிலையில் புலிகளின் அராஜகம் குறித்துப் இவர்களுக்கு வரும் தும்மல் மக்கள் நலன்பிணைந்த ஆத்ம தாகமில்லை!மாறாக, இலங்கை அரசியலில் இவர்களது பாத்திரம் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் விடுதலையைக் காட்டிக்கொடுக்கும் இன்னொரு வகையான பாத்திரமாகும்.இப்பாத்திரம்,புலிகளின் அரசியலிலிருந்து விருத்தியான எதிர்ப்பாத்திரமாகும்.இந்த நிலையுள், எந்தப் பெண்ணிய முகமூடி தரித்தாவது அக்காவைக் காக்க முனையும் தம்பிக்கு இரயாவின் அரசியல் விமர்சனத்தைக் கேள்விக்குட்படுத்தும் அரசியல் விவேகம் கைகூடவில்லை!இதற்கு மாறாக, இரயாவைப் பெண்ணொடுக்கு முறையாளனாக வர்ணிப்பதில் சுயதிருப்தியடைகிறார் சேனன்.இதுவும், ஒருவகையில் இரயாவினது அரசியலின் காத்திரமான-நேர்மையான பாத்திரத்தை மேலும் வலுப்படுத்தவே செய்துவிடுகிறது.


புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்களுள் பரவலாக அறியப்பட்ட அராஜகமானது இன்று, பற்பல வடிவங்களில் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் மீளவும் நிலையெடுக்கிறது.அதன்வழி கல்வெட்டுப் பாடுதலும்,காடாத்துச் செய்வதும் இந்தச் சேனன்வழி அரசியலுக்குக் கைவந்த கலையெனினும் இவர்களே அம்பலப்பட்டுப்போகும் அரசியல் தற்கொலை இவர்களுக்கு நேர்கிறதென்பதை இவர்களது அக்காமாரும்,தோழிகளும்"உள்ளாடை கழற்றும்"அரசியலில் மிக இலகுவாகவே இவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுகிறார்கள்.



ப.வி.ஸ்ரீரங்கன்.
21.09.2008

Thursday, September 18, 2008

அடிப்படை நேர்மை?

சின்னக்குட்டி:"அடிப்படை நேர்மை"!

"................."

அடிப்படை நேர்மை?

அப்படி ஏதாவதொன்று இந்தப் பொருளுலகத்துக்கு உண்டா?


உண்டென்று நான் நினைக்கவில்லை!

கேரளாவில் பிறந்தவள் ஐரோப்பியச் சந்தையில் தனது பக்தர்களுக்குப் பாதணிப் பூஜையைக் கற்றுக் கொடுக்கிறாள்.அவளது பாதணிக்குப் பால்வார்க்கும் விளம்பரத்தைக் கள்ளன் கருணாநிதியின்"கலைஞர்"தொலைக்காட்சி விளபரஞ் செய்கிறது.இலண்டனுக்கு வந்த அந்தச் சாமிக்காரி தன் படத்தை 200 பவுண்களுக்கு விற்கிறாள் புலன்(ம்)பெயர்ந்த தமிழர்களுக்கு.இங்கே,எந்த"அடிப்படை நேர்மை" இருக்கிறது.இது கருணாநிதியின்"கலைஞர்"தொலைக்காட்சியிடம் இருக்கா?கள்ளர்களின் உலகத்தில் கதைகள் ஆயிரம்.அவை காரணங்களை அடுக்கியே நம்மைக் கடாசுவதை நாம் பார்க்கிறோம்.

"அடிப்படை நேர்மை" பொதுப் புத்திக்கு இது தூய்மையான தியானம்!புள்ளி ராஜாவுக்குத் தெரியும் கொள்ளி எங்கே வைப்பதென்று!வைக்கக் கூடிய இடங்களை அவர்கள் தெரிவு செய்ய விட்டுவிடும் நமது பொதுபுத்திக்குச் சாவுமணியை அடியுங்கோடா எந்தக் கள்ளிப்பால் பசங்களாவது!

பாருங்கோடா அதி மேதாவிகளே, வந்ததே உங்களுக்கு "அடிப்படை உரிமை","படைப்புரிமை"!

அட போடா புண்ணாக்கு.உன்ர தேசத்திலே நீ படுத்துறங்கும் அடிப்படை உரிமையே இல்லாதபோது,இந்த"உரிமைகள்"பற்றி எவன்டா கத்துறான்.எப்பவோ தனக்குச் சங்கு ஊதினமாதிரி"கம்மண்டு"இருப்பவன் "அடிப்படை நேர்மை"பேசுறான்டா!இதுதான் சகிக்க முடியேல்ல!

மிக அடவாடித்தனமான இந்தக் குவிப்புறுதிச் சமுதாயத்தில் அப்பாவி மக்களையே ஏதேதோ காரணஞ் சொல்லிக் கொன்று குவிக்கும் வர்த்தகச் சதிகாரர்கள் ஈராக்கிலும்,அவ்கானிஸ்தானிலுமாகப் பயங்கரவாதத்தைக் கண்டுபிடித்து, இன்றுவரை என்ன செய்கிறார்கள்?

இந்தியாவில் வர்த்தகச் சினிமாவின்வழி எத்தனையுள்ளங்களை இந்த"அடிப்படை நேர்மை"இன்றி அழித்துப் பெண்ணுடலைப் பண்டமாக்கி-பணமாக்கி நம்மைத் தலையைப்பிச்சுக் காமப் பேய்களாக்கியுள்ளார்கள்!

பெண்தொடையையும்,தொப்பிளையும் விட்டால் இன்றைய தமிழ்ச் சினிமாவில் என்ன "படைப்பு"இருக்கிறது?

அப்பாவி மக்களை முட்டாளாக்கி அவர்களைப் பட்டுணிபோட்டுக் காசு பண்ணுபவன் எந்த "அடிப்படை நேர்மை"கொண்டு இங்ஙனம் "சமூகத் தொண்டு"செய்கிறான்?

தமிழ்மணம் துவக்கிவைத்திருக்கும்"உரிமை"பெறுதல் என்பது இணையத்தில் கட்டுரையாளரின் பெயரோடு மீள்பதிவிடும் ஆக்கங்களை கருத்துக்களுக்காப் பரவலாக்கும் நோக்குக்கு லாடம் கட்டுவதாக இருக்கும்.என்னய்யா பெரிய உரிமை?உங்களது உடலில் உயிரை தேக்கி வைக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?நாளைக்கு நாம் உயிரோடு இருப்பதைத் தீர்மானிப்பவர்கள் எவர்?

உயிர்வாழ்வதற்கே போராட்டமாகப்போன இந்த உலகில் மகாப்பெரிய"படைப்புரிமை"-"அடிப்படை நேர்மை"எல்லாம் கொடிகட்டிப் பறக்குதாடா நம்ம முற்றத்திலே,பாழும் மானுட உயிரோ படுக்கையிலே குண்டடிக்குப் பறிக்கப்படுகிறது.கேட்டாச் சொல்லுறான் பாகிஸ்தான் போடருக்குள் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்குகிறார்கள்,நாங்கள் அவர்களுக்குப் போடும் குண்டில் பொதுமக்களும் சாகிறார்கள்!

யாரடா இவன்கள்?

இன்னுஞ் சொல்லுங்கோடா தம்பிமாரே"அடிப்படை நேர்மை"யை காஞ்சிக் காமக்கோடி பாணியில்.அல்லது நம்ம ஜேர்ச் புஷ் பாணியில்.
"........................."

அப்பாவி மக்களின் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு பேயாய் அலையும் மேற்குலகமும்,அமெரிக்காவும் உலகத்தில் சொல்லும் ஜனநாயகம் போன்றதே இந்த"அடிப்படை நேர்மை"யும்-இல்லை?

"நேர்மை" மண்ணாங்கட்டி!

எவன் இதற்கு இசைவாக நடக்கிறான்?

இந்த உலகத்தில் இத்தகைய சொல்லாடலைப் புரியாதபடி இதோ "விட்டுத் தொலைக்கிறேன்" பாணியில் "அடிப்படை நேர்மை"சின்னக் குட்டியைக் கொன்று போடுகிறது!

ஐயோ பாவம்!

சின்னக் குட்டியார்,கொஞ்சம் நம்ம தேசத்தைப் பாருங்கள்.எந்த "அடிப்படை நேர்மை"யோடு நம்மைக் கொன்று குவிக்க உலகம் சிங்கள அரசின் பின் நிற்கிறது?

இந்த இலட்சணத்தில்:"உரிமை","அடிப்படை நேர்மை",வர்த்தக உரிமம்" குறித்துக் குரல் விடுகினம்...

போங்க,போய் ஈரச்சாக்கில படுங்க.

இந்த உலகத்தில்"அடிப்படை நேர்மை"குறித்துப் புலம்பும் கள்ளர்களை நம்பத்தான் வேண்டுமா?அப்படியாயின் உலகத்தை வேட்டையாடும் வர்த்தகச் சூதாடிகளிடம் மனுப்போடுவதற்கும் தயாரா?

ரை கட்டிய கள்ளர்களும்,காவி கட்டிய கள்ளர்களும் இன்னும் அங்கிகள் தரித்த கொலைக்காரர்களும் இந்த"அடிப்படை நேர்மையை"க் குறித்து எழுதுவார்கள்.இதையும் சின்னக் குட்டிபோன்றார் கர்தருக்கு விசுவாசமாக நடக்கும் பாணியில் மனம்கொள்வார்கள்!

நல்லகாலம் பிறக்கிறது "அடிப்படை நேர்மை"கொண்டு,அவசரப்படாதீர்கள் எல்லோரும் பரதீசில் பக்குவமாக வாழப்போகுறோம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
18.09.2008
வூப்பெற்றால்

Monday, September 15, 2008

காலுடைந்துபோன லேமான் பிரதர்ஸ் Lehman Brothers

அமெரிக்கப் பொருளாதார அதிர்வு
யுத்தமாக வெடிக்கும்.


பொருளாதாரதிர்வைக் குறித்து புவியதிர்வோடு ஒப்பிடும் நேரம் நெருங்குகிறது.

கருப்புத் திங்கள் தொடரும்.1920 இல் ஏற்பட்ட பங்குச் சந்தை அதிர்வுக்கு ஒப்பாக இன்றைய நிலைமை மேலும் வளரலாம்.

வோல் ஸ்றீற்றுக்கு(Wall Street) மங்கு காலம்(Die Investmentbank Lehman Brothers hatte unter der Last von 60 Milliarden Dollar Schulden) கருத்தரித்த இன்றைய நிலைமையில் இன்னொரு யுத்தம் வருவதற்கும், அது உலக மகாயுத்தமாக மாறுவதற்கும் பல சாத்தியம் உண்டு.ஊக வணிகத்தில் பொருளீட்டிய பங்குச் சந்தைச் சூதாட்ட மேதாவிகள் பொதுச் சொத்தால் தமது நஷ்டத்தை ஈடு செய்த இதுவரையான காலமும் மக்களின்மீது நீண்ட நெடிய வரிகளை விதித்த அவர்களின் அரசுகள் இப்போது மண்டையைப் பிய்த்துவருகிறார்கள்!வோல் ஸ்றீற்றில்(Wall Street) கொட்டிய தேள் பிரங்பேர்ட்வரையும் வீங்காது(Der Deutsche Aktienindex DAX rutschte um fast drei Prozent ab und lag zeitweise unter 6000 Punkten. Das war der tiefste Stand seit Ende 2006.) .மாறாக, உலகம் பூராகவும் வீங்கி வலிக்கும்!இன்னொரு அதிர்வைச் சந்திக்க முனைவதற்குள் ஈரானை வேட்டையாடுவதைத் தவிர வேறொரு தெரிவு நிச்சியம் அமெரிக்காவுக்கு இல்லை.


இன்றைக்கு நிகழும் இந்தப் பங்குச் சந்தைச் சூதாட்ட அதிர்வைப் பல பதிவுகளில் "பொறியும்"எனக் கூறிக்கொண்டேன்.இப்போது,158 ஆண்டுகள் பழமைவாய்ந்த அமெரிக்க கட்டுமான நிதியீட்டு வங்கி லேமான் பிரதர்ஸ்(Lehman Brothers) எட்டாங்கட்டைக்கு எழுதி விடுகிறது.6000 கோடி அமெரிக்க டொலர்களை இழந்து நடுச் சந்தியில் நிர்க்கதியாய்...லேமான் வங்கியின் அதிர்வு ஜேர்மனியப் பொருளாதாரத்தில்மட்டுமல்ல உலகம் பூராகவும் பெரும் பாதிப்பைச் செய்யும்.ஜேர்மனிய வருடாந்த பட்ஜட்டைப் பாதிக்கும் அளவுக்கு இந்த நெருக்கடி விரியும்.ஜேர்மனியப் பெரு வங்கியான டொச்ச வங்கி முதல் கொமஸ் மற்றும் போஸ்ட் பாங் வரை இந்த நெருக்கடி எதிரலையைத் தோற்றுவிக்கிறது.இதன் பிரதிபலிப்பு மேலும் தொழிலாளர்கiளின் கிழமை வேலை நேரத்தை மிகைப்படுத்தி மேலும் கடும் உழைப்பைக் கோரும்.ஆட்குறைப்பை மேலும் விரிவாக்கும்.பெரும் தொழிற்கழக அதிகாரிகள்-மனேச்சர்கள் செய்யும் கேவலமான பொருளாதாரக் குழறுபடிகளுக்காகப் பலியாவது தொழிலாள வர்க்கமாகவே இருக்கிறது.உலகத்தின் முன் இன்றைய நிலையில் எந்தத் தெரிவும் இல்லை.யுத்தம் ஒன்றேதான் இவர்களை வாழ வைக்கும்.எரிபொருள் நெருக்கடி,உணவுப் பற்றாக் குறை எல்லாம் செயற்கையாகத் திட்டமிட்ட சதி.இதன்மூலம் சரியும் தமது பொருளாதாரச் சூதாட்டத்தைக் காக்க முனைந்து தோல்விகண்ட உடமை வர்க்கம் நிச்சியம் வேற்று இன மக்களைச் சூறையாடும்.ஊக வணிகத்தின் அதிர்வுகளுக்காக மருந்து குடிக்க வைக்கப்படும் பொதுமக்களின் வாழ்வு, சிதைந்து சின்னாபின்ப்பட்டுபோகினும் அவர்களை மேலும் வரிச் சுமைக்குள் வீழ்த்தப் பொருளாதாரப் புலிகளின் திட்டமிட்ட இலக்குகள் நாளை நம்மை வருத்தும்.

கடந்த காலத்தில்-ஓராண்டு எல்லைக்குள்,ஐரோப்பிய மத்திய வங்கியும், அமெரிக்க வங்கியும் பல் முறை வட்டியைக் குறைத்துத் தமது சகாக்களைக் காக்க முனைந்த வரலாறு வட்டிக்கு வட்டி மூலதன-நிதியீட்டைக் குறித்த அபாயத்தை நமக்கு நன்கு உணர்த்துபவை.உலக வங்கியிடம் கையேந்திய தேசங்கள் எங்ஙனம் திவாலாகிப் போயின என்பதற்கு இதை உதாரணமாகக் கொள்ளலாம்.

திருடர்களின் பொருளாதாரப் பொறிமுறைக்கு முண்டு கொடுக்கும் பொருளாதாரப் புலிகள் இன்னொரு யுத்தம் எங்கே வெடிக்குமெனத் தவங்கிடக்கிறார்கள்.ஓராண்டாக இத்தகைய திருடர்கள் இந்தப் பொருளாதாரச் சூதாட்டத்தை இட்டுக்கட்டி ஊதிப் பெருக்கினார்கள்.மக்களை முட்டாளாக்கும் தரவுகளைத் தந்துகொண்டேயிருந்தார்கள்.இன்று, அனைத்தும் சரிந்து தமது அறிவையே கேவலப்படுத்தும் பெரும் பொருளாதாரதிர்வால் தமது தலையைக் காக்கும் தந்திரத்துள் மண்டையைப் பிய்க்கும் இவர்கள் மக்களின் வரிப்பணத்தைத் தமது அடுத்த ஆயுதமாக்க முனையும் இந்தப் போக்கிரித்தனம் உலக உழைப்பாளர்களை இன்னும் நசுக்கும்.இதையும் தேசத்தின் பெயரால் மெக்கைன் பாணியில் மக்களிடம் எடுத்துவரும் அரசுகள்.உலகம் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்திருக்கும் இந்த ஊக வணிகச் சூதாட்டம் இன்னொரு மகா யுத்தத்தைச் செய்யும் அறிகுறிக்கு இருஷ்சிய-ஜோர்ச்சிய அரசியல் வியூகம் கட்டியம் கூறுகிறது.

ஈரானைத் தாக்கும் அமெரிக்காவின் ஒவ்வொரு ஏவுகணையும் இருஷ்சிய புவிகோள அரசியலையும் அதன் வலுவையும் பரிசீலிக்க முனையும்.இந்தப் பாத்திரம் இன்னொரு பொருளாதார மீட்சியை அமெரிக்க நிதிமுதலீட்டாளர்களுக்கு வழங்குமென அமெரிக்க அரசு கற்பனை செய்வதிலும் மேற்குலகம் இதை விரும்பி வரவேற்க்கக் காத்திருக்கிறது!

காலுடைந்துபோன லேமான் பிரதர்ஸ் அமெரிக்க அரசிடமிருந்து மூலதன ஊசியை எதிர்பார்த்துக் காத்திருக்கப் பூகம்பம் அமெரிக்க அரசியலில் உருவாகிறது.பொருளாதாரச் சிக்கலென்பது எப்பவும் யுத்தத்தால் சமன் செய்யப்படுவது வரலாறுகண்ட உண்மை.இவ் வன்முறைமிக்கப் பொருளாதாரப் பொறிமுறை பொறிந்து மக்களின் உயிரோடு விளையாடும் யுத்தத்தைத் திணிக்க முனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் வாழ்கிறோம்.


அமெரிக்காவில் கிட்டத்தட்ட 85000.பேர்கள் நிச்சியம் வேலையிழக்கவேண்டி வரும்.இது உலகம் பூராகவும் பல மடங்காக உயரும்.இன்றைய பங்குச் சந்தைச் சூதாட்ட நிலைமைகள் தாறுமாறாக வீழ்ந்து நொருங்குகிறது.எனினும்,உலகப் பொருளாதாரப் புலிகள் இது பொருளாதாரத்தில் சிறு அதிர்வைத் தருலாமே தவிர பொருளாதார ஸ்த்திரத்தைக் குலைக்க முடியாதென வாதிடுகிறார்கள்.நமது கணிப்பின்படி இவர்களின் பொருளாதார ஸ்த்திரமென்பது இன்னொரு நாட்டைச் சூறையாடும்போது மட்டுமே சாத்தியமாகும்.அந்த நாடு பெரும்பாலும் ஈரான் என்பது நாளைய உண்மையாகலாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
15.09.2008

Sunday, August 31, 2008

உவற்புடை ஊனீழம் சிந்தையுள் எரிய

குருதி மழை
கோலமிழந்த ஈழ முற்றம்
நெடும்போர்ப் புயற் பொழுது
நெற்கதிர் தலை வீழ்த்திய குருதி வெள்ளம்






கடும் பசி கண்டகம் சுடலைக் கோலம்
வீடுடை குருதியுறை பிணம்
காடுடையான பிஞ்சுகள்
கேடுடையானார் ஈழத்தவர்



புண் உற்ற போர் நெறியுள்
மண் தின்ன மனங்கள் அழிய
உடலமும் எலும்பும் ஊழியுள் மருவ
உவற்புடை ஊனீழம் சிந்தையுள் எரிய

தீயடைந்த விதியெனத் தேறிய போர்வாய்
மாயும் வகை இதவென்றாகப் போயின உயிரும்
பிணமென வீழ்ந்தன பிஞ்சுகள் இதயம்
பேயடைந்த ஸ்ரீலங்கா போரிடும் புலி என

உடலால் நிலம் தடவிக்
குருதியால் மெழுகினாயா தமிழமுதே?
பின்னயர் அனைவரும் அழிய
அறுந்தது கனவுடன் காலமும் நீயாய்!

Sunday, August 17, 2008

ஜோர்ச்சிய,இருஷ்சிய யுத்தம்

உலகத்தைக் கவ்வும் மூலவளத்துக்கான யுத்தம்.

(3)


உலகத்தில் சமாதானம்,அமைதி,ஜனநாயகம் மற்றும் ஸ்திரமான அரசியல் நிலவும்போது அமெரிக்கப் பூகோள வியூகமும் அதன் வாயிலான அதன் கேந்தர அரசியல் ஆதிக்கமும் இல்லாது போகும் என்பது உலகறிந்த அரசியல் அறிவாகும்.இன்று, இடம் பெறும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் அடாவடித்தனமான ஆட்சி மாற்றங்கள், நாடு பிடித்தல்கள் யாவும் உலகத்தில் அதீதமாகத் தேவைப்படும் மூலப்பொருள்களுக்கான அரசியலாக விரிகிறது.இதன் தொடர்ச்சியாக நாம் பல் வகையான யுத்தங்களைப் பார்த்துவிட்டோம்.


இருஷ்சியாவுக்கும் ஜோர்ச்சியாவுக்குமான தற்போதைய யுத்தத்தில் அந்நியச் சக்திகள் யாவும் அறம் பற்றியும்,மக்களால் தோர்ந்தெடுத்த ஜனநாயகம் குறித்தும் தர்மம் பேசியபடி, உடனடி சமாதானம்-ஒப்பந்தமென அரசியல் அரங்கைக்கூட்டிப் பேசுவதன் தொடர் நிகழ்வில் அரங்கேறும் பூகோள வியூகம் என்பது தத்தமது தேசங்களுக்கான மூலவளங்களைக் கொண்டிருக்கும் தேசங்களையும், அதன் ஆட்சியையும் தமக்குச் சார்பானதாக மாற்றவும் அதன் வாயிலாக மூலவளத்தைத் தங்குதடையின்றி பெறுவதற்குமான அரசியல் நாடகத்தில், அப்பாவி மக்களை அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் யுத்தத்தைத் தொடக்கிக் குருதியாறைத் திறந்தபின்பு உணவுப் பொட்டலத்துடன் தமது நோக்கங்களைப் பெறுவதற்காக இயங்கும் தேசங்களையும் நாம் இலகுவாகப் பார்க்கின்றோம்.என்றபோதும், அமெரிக்க அரசியலானது மிகவும் இக்கட்டானவொரு சூழலுக்குள் வந்துவிட்டது.இதன் ஆதிக்கம் தொடர்ந்து நிலவுவதற்கானவொரு உலக அரசியல் பதட்டம் மிக அவசியமானது.இதன் தொடர் நிகழ்வார்ந்த வியூகத்தில் அமெரிக்க அரசானது புதிய பனிப்போரை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுப்பதற்கேதுவானவொரு வெளியை போலந்தில் நிறுவும் ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டத்துள் வகுத்துள்ளது.போலந்தில் வரும் 2011 க்குள் பத்து ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கிகளை அது நிறுவவுள்ளது(Ground−Based Midcourse Defense System" (GMD) இதைக்கடந்து செக் குடியரசுள் நிறுவப்படும் ராடர் கருவியூடாகப் புதிய பனிப்போரை மிக இலகுவாக இருஷ்சிய ஆதிக்கத்தின்மீது திணிக்கும்போது, இருஷ்சியாவின் மக்கள் நலக்கட்டுமானங்கள் பலவீனம் அடையும்.தொடர்ச்சியான இரணுவவாதப் பொருளாதாரமானது மக்களை-மக்கள நலக் காப்புறுதிகளைக் கேள்விக்குட்படுத்தும் இதன் வருகையோடு மிக இலகுவான கொந்தளிப்பு-குழறுபடி அரசியல் போக்கை இருஷ்சியாவுக்குள் தொடர்ந்து நிலவச் செய்யும்போது,இத்தகைய தேசத்தால் அமெரிக்க ஆதிக்த்தை எதிர்க்கும் வலுவில்லாதுபோகிறது.


இன்றைய பொருட்குவிப்பின் தொடர்ச்சியில் உலகத்துள் நிலவும் எரிபொருள் இருப்பைத் தமதாக்கும் முழுமுயற்சியில் அமெரிக்க வல்லாதிக்கும் முனையும் ஒவ்வொரு நகர்விலும் ஐரோப்பாவினதும், குறிப்பாக ஜேர்மனியினதும் ஒத்துழைப்பு அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கிசைவாகவே இருந்துவருகிறது. இதன் தொடர்ச்சியான உலகப் பங்கீட்டு அரசியல்-போர் வியூகங்களுக்கு மேற்கு ஐரோப்பிய எரிபொருள் தேவையும் மிக அவசியமான அமெரிக்க சார்பு அரசியலை மிகக் கண்ணியமானவொரு மக்கள் நல அரசியலாக ஐரோப்பாவுக்குள்ளும் அதன் மக்கள் கூட்டத்துள்ளும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் திணித்து வருகின்றன.இவை, மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் குழிதோண்டிப்புதைக்கின்றது.இதுன் மறு விளைவானது ஐரோப்பியக் கண்டத்துள் புலம் பெயர்ந்த மக்கள்மீதான இனவாத அரசியலாகவும் விரிந்து தொடர் இனவாதத்தை உற்பத்தி செய்கிறது.


இருஷ்சியாவுக்கும்,ஜோர்ச்சியாவுக்கும் இடையிலான முரண்பாடுகளின் விருத்தியானது ஐரோப்பிய எரிபொருட்கட்டுப்பாட்டை இருஷ்சியாவின் அரசியல் ஆதிகத்துள் கொணர்ந்திருப்பினும் போலந்துடனான நட்புறுவு ஒப்பந்தத்தின் வாயிலாக அமெரிக்காவானது இருஷ்சியாவின் அரசியல் வியூகத்தை உடைப்பதற்கானவொரு மிக நுட்பமான போர்த்தந்திரோபாயத்தை உலகத்தின்மீது திணித்திருக்கிறது.இங்கே,எண்ணைவள நாடுகளுக்கிடையிலான எல்லாவகைத் தார்மீக உறவுகளும் சிதலமடைய அமெரிக்க பூகோள அரசியல் வியூகம் தூபமிடுகிறது.இதன்வாயிலாக இருஷ்சிய அரசியல் வியூகமானது தனது தன்னிறைவுப் பொருளாதாரக் கட்டுமானங்களைத் தொடர்ந்து நகர்த்தமுடியாது அந்நிய நிதிநிறுவனங்களை அல்லது உலக நாணயச் சபையை,உலக வங்கியை நாடவேண்டியதும்,தங்கியிருக்கவேண்டியதுமானவொரு சூழல் ஏலவே இருஷ்சியாவுக்கு வந்துவிட்டது.இது இறுதியில் போர்முனைப்படையவும் அதன் தொடர்பான அரசியலால் இருஷ்சிய மேலாதிக்கம் தன்னளவில் தகர்வதற்குமானவொரு யுத்தமாக முனைப்பெறும் உள்நாட்டு யுத்தம் ஒன்று இருஷ்சிய மக்களால் முன்னெடுக்கப்படும்.அப்போது பூட்டின்-மெட்வேடெவ் கூட்டு அரசியல் ஆளுமையை இழக்கும் ஒரு கனவை அமெரிக்க-நேட்டோக் கூட்டுக்கள் திட்டமிட்டபடி தரிசித்துவருகின்றன.


ஜோர்ச்சியாவென்பது கௌவ்கசுஸ் பிரதேசத்தின் எண்ணைவள அரசியலில் மிகப்பிரதானமானவொரு பாத்திரத்தை வகிக்கின்றது.இது இருஷ்சியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலானவொரு பாரிய கேந்திர முக்கியத்துவத்துக்கான சதுரங்க அரசியலை விரித்துள்ளது.இந்தக் கேந்திர முக்கியத்துவமே அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளின் இருஷ்சியாமீதான ஆட்சேபமாகவும்,யுத்த எதிர்ப்பாகவும் இன்னொரு கட்டத்தில் ஜோர்ச்சியாவின் இறைமையாகவும் இவர்களின் வாயிலிருந்து வருகிறது.இது எப்பவும் தமது வளத்தையும்,அதன் வாயிலாகத் தமது நிதி முதலீட்டையும் முன்வைத்த அரசியலாக இருக்கும் என்பதை இவர்கள் மறைத்தபடி உலகுக்கு ஜனநாயகம் பேசுகிறார்கள்-ஜோர்ச்சிய அப்பாவி மக்களை காப்பதாகவும் நாடகம் போடுகின்றனர்.இங்கே,நமது கண்முன்னால் நடந்தேறும் ஈராக் யுத்த அழிப்பு-அராஜக யுத்தம் நமக்குக் கற்பிப்பது ஈராக்கு ஜனநாயகம் என்பதையே.ஆனால்,அமெரிக் அட்டூழியம் ஈராக்கை தாக்கும் எந்த இறையாண்மைத் தனக்குள் கொண்டிருந்ததென்பதை இதுவரை இவர்கள் கேள்விக் குட்படுத்தவில்லை.


ஜோர்ச்சியாவுக்கூடாக கட்டப்படும் நபுக்கோ புரஜெட்(Nabucco Projekt und das Projekt Kaspisches Erdoel Pipeline Odessa-Brody und auch der BTC Pipeline)(எரிவாயு மற்றும் எண்ணைக் குழாய்கள்)இந்த இருஷ்சிய யுத்தத்தால் மிகவும் பலவீனப்பட்டுப்போயுள்ளது.கஸ்பிஸ் எண்ணையூற்றைத் தொடர்ந்து ஐரோப்பாவுக்குக் காவிவரும் மேற்காணும் குழாய்கள் யாவும் ஜோர்ச்சியாவினூடாகவே அதன் நிலத்தைப் பிளந்தபடி துருக்கியின் செய்கான்;(Ceyhan) துறைமுகத்தை வந்தடைகின்றன.இதைக்கடந்து நபுக்கோ குழாய்கள் துருக்கியை ஊடறுத்து பல்கேரியா மற்றும் போலந்துவரை நீண்டுவரும் ஒரு திட்டம் இந்த இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தத்தால் கேள்விக்குறியாக மாறியது மேற்குலக ஆளும் வர்க்கங்களின் மனதில் யுத்த வெறியாகவும் அதை இருஷ்சியாவோடு செய்வதிலுள்ள அழிவுச் சிக்கலாலும் ஆறு அம்ச ஒப்பந்தமாக இன்று வருகிறது.இதன்படி இருஷ்சியா தனது படைகளை ஜோர்ச்சியாவிலிருந்து விலக்குவாதாக வாக்களித்தாலும் இந்தப் பிரதேசம் இருஷ்சிய மற்றும் அமெரிக்க வல்லூறுகளின் வேட்டைக்காடாகவே இருக்கும்! இதுவே, அமெரிக்க அரசின் உலக ஆதிகத்துக்கானவொரு அரசியல் சூழலை மிகவும் அர்த்தபுஷ்டியாக ஆக்கித் தருகிறது.அமெரிக்க இராணுவவாதம் மேலும் விரிவடைய-விரிவடைய அதன் ஆதிக்கம் தொடர்ந்து அந்தத் தேசத்தை கடன் நிலைக்குள் தள்ளும். இது, உலகத்தை இன்னும் வேட்டைக்குட்படுத்தும் அரசியலையே அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு வழங்கும்.எண்ணைவளத் தேசங்களைக் கொள்ளையடிப்பதால் வரும் உபரியைக்கொண்டு தனது இராணுவத்துக்குத் தீனீபோடும் அமெரிக்க அரசானது உலகத்தைத் தனது ஆதிகத்துக்குள் இருத்தும் குறைந்த காலவகாசத்தையாவது இந்த அமெரிக்காவுக்கும் அதன் ஆளும் வர்க்கத்துக்கும் வழங்கிவிடுகிறது.இது தற்காலிகமானதுதாம்.எனினும்,இன்றைய எண்ணைவளத் தேசங்களின் கையாலாகாத அரசியற்றலைமைகளால் யுத்தமென்பது தவிர்க்கமுடியாதபடி உலகத்தில் பலகோடி மக்களை அழித்துவருகிறது.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
17.08.2008

Monday, August 11, 2008

ஜோர்ச்சியாவில் குண்டுகள் ஆதிக்கத்துக்காக வெடிக்கின்றன

உலகத்தைக் கவ்வும்
மூலவளத்துக்கான யுத்தம்:(2)



இன்று ஒரு பக்கச் சார்வான யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜோர்ச்சிய அதிபர் சாகஸ்வில்லி மேற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எஜமானர்களை அறைகூவி அழைக்கிறார்.தனது தேசத்தின் தலை நகரான Tiflis நோக்கி நகரும் இருஷ்சியப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு அரசியல் நாடகத்தில் அமிழ்ந்துபோகிறார்.இவர் ஒரு "அப்பாவி-தனது அரசியல் கணிப்பின் தவறினால்" தனித்துப்போன அரசியல் வாதியாகவும்,அந்தக் காரணத்தால் தவறான மதிப்பீடுகளால் பிரிந்துபோன தென் ஒசாத்தியாவை மற்றும் அப்சாசியன் மாகாணங்களை ஜோர்ச்சியவோடு இணைக்கும் இராணுவ நடவடிக்கையில் இறங்கியதாகவும் மேற்குலக ஊடகங்கள் காதினில் பூ வைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளன.நாமும் போதாதற்கு இவ் நிகழ்வுகளின் பின்னே அலைகிறோம்.இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தைத் துவக்கி வைத்தவர்கள் சீனாவில் ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டு களிப்பதாக நாடகம் போடுகின்றனர்.தமக்கும் ஜோர்ச்சிய இராணுவ நடவடிக்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்பதாகவும்,தாம் இருஷ்சியாவைக் கண்டிப்பதாகவும் ஓலமிடுகிறார்கள்.இதுவொரு பரீட்சார்த்த யுத்தம்.இங்கே,இருஷ்சியா தனது இறையாண்மையைக் காப்பதற்கானவொரு போராட்டத்தில் தன் இருப்பை நிலைநாட்டுகிறது.

நாம் இது குறித்துக் கருத்துச் சொல்வதைவிட இந்த யுத்தத்துள் நிலவும் கேந்திர-புவிகோள நலன்கள் குறித்துக் கருத்துகள் முன்வைப்பதில் கவனத்தைக் குவிக்கிறோம்.எங்கள் வாழ்வும்,சாவும் ஏன்-எதற்கு என்றே அறியாதவொரு நிலையில் நமது தேசம் உருக்குலைகிறது.இந்தச் சூழலில் அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இருஷ்சியப் பொருளாதார நலன்களின்வழி நகரும் அரசியல்-பூகோள வியூகங்கள் உலகை யுத்த நெருக்கடிக்குள் தள்ளித் தத்தமது நலன்களை அடைய முற்படும் தருணங்களில் அப்பாவிச் சிறுபான்மை இனங்கள் அழிந்துபோகிறார்கள்.இதன் தொடர்ச்சியில் ஒடுக்கப்படும் இனங்களின் தேசிய எழிச்சிகள் யாவும் வல்லரசுகளின் அரசியல் இலாபங்களுக்காகப் பலிகொள்ளப்படும் இந்த நூற்றாண்டில்,நாம் வந்தடையும் அரசியல் என்னவென்பதும்,எம்மிடம் எஞ்சம் விடுதலை எதுவென்பதும் கேள்வி.


இதைக்கடந்து,கடந்த சில தினங்களாக நடைபெறும் யுத்தத்தின் மூலம் என்ன?இவ் யுத்தத்தைக் கொண்டு நடாத்த முனைந்த சக்தி எது? சாகஸ்வல்லி என்பவர் உண்மையில் தனது அப்பாவித்தனமான கணிப்பினால் இவ் யுத்தத்தை ஆரம்பித்தாரா? என்பதற்கு ஓரளவு விடை தேடுவதில் கவனத்தைக் குவிப்போம்!

"நாங்கள் அலார்ம் செய்கிறாம்,இறையாண்மை உடைய ஜோர்ச்சியாவை இருஷ்சியா தாக்குவது ஜனநாயக விரோதம்"-அமெரிக்காவும் அதன் அதிபர் புஷ்சும் ஓங்கி ஒலிக்கையில்"தனியாட்சியுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின்மீது தாக்குவதை நாம் அங்கீகரிக்க முடியாது!"என்று ஓலமிடுவதிலும் மத்திய ஆசியாவிலும்,ஐரோசியவிலும் நிகழும் அமெரிக்க நலன்கள் நமக்குப் புலப்படுகிறது.

"ஜோர்ச்சியாவின் சுயாதிபத்தியத்தை மதிக்க வேண்டும்"என்றும் "உடனடியாக யுத்தத்தை நிறுத்தி பேச்சு வார்த்தை மேசைக்கு வரவும்"என்று ஜேர்மனிய அதிபரான அம்மணி மேர்க்கல் அங்கேலா அழுது வடிகிறார்.

ஐயா சார்க்கோசி ஆடிப்போய் உடனடியாக ஜோர்ச்சிய விரைகிறார்.

உலகத்துக் கிறித்தவர்களின் தேவ தூதன் போப்(பு)பாண்டையர் இந்த நூற்றாண்டின் ஈராக் அவலத்தைத் தன் அங்கிக்குள் மறைத்தபடி இருஷ்சியாவுக்குக் கட்டளையிடுகிறார்:"கிறிஸ்தவத்தின் பெயரால் யுத்தத்தை நிறுத்தி முடிவுகாணவேண்டுவது உலகக் கிறித்துக்களின் பெரு விருப்பம்"என்று கிறித்துவம் அகிம்சையைப் பேணுகிறது.

ஜேர்மனிய வெளிநாடடமைச்சர் ஸ்ரையின் மாயர் தனது உலகக் கூட்டாளிகளான அனைத்து நாடுகளினதும் வெளித்துறைமந்திரிகளுக்கும் ஓய்வின்றித் தொலைபேசுகிறார்.ஜோர்ச்சிய யுத்தத்தால் அழியும் மக்களைக் காப்பதற்காகக் கடும் பிரயத்தனஞ் செய்கிறார்களாம்.நல்லது!

இந்தக் கௌகசுஸ் யுத்தம் (KaukasusKrieg) அண்மித்துவரும் அணுவாயுதத் தாக்குதலுக்குக் கட்டியம் கூறுகிறது.இது,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து பூகோள அரசியல் வியூகத்தினது மிகப் பெரியவொரு வெளியைத் தாங்கியுள்ளது.ஈரானைச் சாட்டுவைத்து,போலந்து மற்றும் செக் குடியரசுள் நிறுத்தப்படப்போகும் அமெரிக்க ஏவுகணைத் தடுப்புப் பாதுகாப்புத் திட்டத்துக்கும் இவ் வலயத்துக்கும் அதிகம் தொடர்புகளுண்டு.இதன் தொடராக இருஷ்சியாவின் முதுகெலும்பை உடைக்க முனையும் அnமிரிக்கக் கூட்டணிக்கு-நேட்டோக்கூட்டணிக்கு மிக அவசியமானவொரு அரசியல் சதுரங்கக்காயாக ஜோர்ச்சிய இருக்கிறது.கௌகசுஸ் வலயமானது புவியற்படி 1100 கிலோமீட்டர் நீளமான மடிப்பு மலைத்தொடர்களைக்கொண்டு கருங்கடலிலிருந்து கஸ்பிஸ்சன் கடல்வரை விரிந்து கிடக்கிறது.இவ் மலைத்தொடரின் உச்சியானது 5642 மீட்டர் உயரத்தில் கம்பீரமாகக் கொலுவற்றுள்ளது.இந்த மலைத்தொடர்களினது பிராந்தியம்(Territorium)இருஷ்சியா,ஜோர்ச்சியா,ஆர்மேனியன்,அசர்பைட்சான் வரை விரிந்து மேவிச் சிறியவொரு பகுதி துருக்கிவரை நீண்டுகிடக்கிறது.இங்கே,(ஐம்பதுக்கு மேற்பட்ட இனக்குழுக்கள் வாழ்வதால் அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் பல்மொழி-பண்பாடுகளுடையவர்களாகவும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்களுமாக இருக்கிறார்கள்.இங்கே,புவிப்பரப்புள் நிலைபெற்றுக்கிடக்கும் கனிவளங்களே இவ்பிரதேசத்தின் கேந்திர அரசியலைத் தீர்மானிக்கிறது.அமெரிக்காவுக்கோ அன்றி மேற்கு ஐரோப்பாவுக்கோ இப்பிரதேசம் ஒரு முக்கியமானவொரு அரிய உயிர்வாழ்விக்கும் வலயமாக இருக்கிறது.400.000.ஆயிரம்(நான்கு இலட்சம்)சதுரக்கிலோமீட்டர் உடைய இந்தப்பிரதேசத்தில் நடந்தேறும் அரசியல் முழு உலகத்தையும் வேட்டையாடும் அரசியலாக விரியும் பொருளாதார இலக்குகளைக்கொண்டியங்குகிறது.

இந்த இலக்குகளை அறியாதவர்கள் ஜோர்ச்சியவென்பது அமெரிக்காவுக்கும் இருஷ்சியாவுக்குமிடையிலான பனிப்போரை ஆரம்பித்து வைத்ததாகச் சொல்வதில் இப்பிரதேசத்தில் ஜோர்ச்சியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார-நிதியீடுகளையும் அதன் கேந்திர ஸ்த்தானத்தில் தொடர்ந்து புதைத்துத் துருக்கிவரை வரும் எண்ணைக் குழாய்க்குமான இருப்புக்குறித்து மௌனித்தல் புரிந்துகொள்ளத் தக்கதல்ல.

தொடர் யுத்தம் நிச்சியமாகக் கடைப்பிடிக்கப்படும் தருணத்தில் இருஷ்சியா தான் விரும்பியவொரு இலக்கை அடைவதென்ற வியூகத்தின்வழி போராடுவதென்பதில் எனது கணிப்புத் தவறாகாது.இவ்யுத்தத்தின்மூலமாகத் தொடர்ந்து பற்றியெரியும் காடுகள்,நிலங்கள்-கட்டிடங்கள் இன்னொரு இலக்கைக் குறிவைக்கும்.அதுவேதாம் அமெரிக்க-ஐரோப்பிய உயிர்வாழ்வோடு அரசியல் செய்வதாக இருக்கும்.

உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரும் எண்ணைக் குழாய்"Baku-Tabilisi-Ceyhan-Pipeline(BTC)"என்பது அசைர்பைட்சான்,ஜோர்ச்சியா ஊடாகக் கருங்கடல் ஆழ்ந்து துருக்கிவரை மத்தியகடலூடாக ஐரோப்பாவை அண்மிக்கக் காத்திருக்கிறது.இதை நெருப்பிலிடும் அவலத்தை எதிர்கொள்ளும் தகமை யாருக்குண்டு?
இக் குழாயின்வழியாக அரேபிய மற்றும் இருஷ்சிய எரிபொருள் ஆதிகத்தில் ஐரோப்பா தங்கியிருப்பதைத் தவிர்க்க முடியும்.இதன் மிகப்பெரும் நன்மையாகவும் இருஷ்சியாவின் பொருளாதார ஆதிகத்தை முறியடிப்பதுமாக இருக்கும் இவ்வலயத்தின் மதிப்பு உலகத்தின் முன் மிக அதிகம்.


"நாங்கள் அலார்ம் செய்கிறாம்,இறையாண்மை உடைய ஜோர்ச்சியாவை இருஷ்சியா தாக்குவது ஜனநாயக விரோதம்"-அமெரிக்காவும் அதன் அதிபர் புஷ்சும் ஓங்கி ஒலிக்கையில்"தனியாட்சியுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின்மீது தாக்குவதை நாம் அங்கீகரிக்க முடியாது!"என்று அமெரிக்கா கத்துவதில் அதன் அரசியல் புரியத் தக்கது.1998 ஆம் ஆண்டு ஜேர்மனியச் சைற் பத்திரிகை ஈராக் யுத்த முன்னெடுப்பின் அடவாடித்தனமானது ஐ.நா.எல்லைகளை-சட்டத்தை மீறுவதாகவும்,ஐ.நா.ஒப்புதல் தரவில்லையென்றும் வாதாடியபோது -அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர் திருவாளர் Brzezinski யிடம் கேட்கப்பட்ட நேர்முகத்தில் அவர் உதித்த முத்துக்கள் மிக அலாதியானது:

//zeit: Es gab dennoch keine offizielle Zustimmung der Vereinten Nationen zu Luftangriffen ...


Brzezinski: Es gab keine offizielle Ablehnung. Und es herrschte viel schweigende Zustimmung.//-
http://www.zeit.de/1998/48/ein_ende_finden




>>>சைற் பத்திரிகை: ஈராக்மீதான அமெரிக்காவின் விமானக் குண்டு வீச்சுக்கான அனுமதியை ஐ.நா.சட்டபூர்வமாக-உத்தியோக பூர்வமாக அனுமதிக்கவில்லை...

ப்பிறசின்ஸ்கீ: ஐ.நா.உத்தியோக பூர்வமாக விமானத்தாக்குதலை நிராகரிக்கவில்லை.அதாவது,மௌனமாக நமது திட்டத்தை-தாக்குதலை அனுமதித்துவிடுகிறது... <<<


இத்தகைய சூதாட்டத்தில் பூட்டின் கூறும் சதாம் இன்றைய ஜோர்ச்சிய அதிபர் சாகஸ்வில்லி.அடிப்படையில் வல்லாதிக்கம் வைத்த சட்டத்தை கையிலெடுக்கும் பூட்டின் தரப்புக்கு அரசியல் பாடம் நன்றாகவே புரிகிறது.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
11.08.2008.

Sunday, August 10, 2008

ஜோர்சியாவில் குண்டுகள்...

உலகத்தைக் கவ்வும் மூலவளத்துக்கான யுத்தம்.



இரண்டாவது வாய்ப்பைக் குறிவைக்கும் அமெரிக்காவும்,பழைய
பனிப்போரை சாத்தியமாக்கத்துடிக்கும் இருஷ்சியாவும்
போடத்துடிக்கும் கோல்கள்
நிச்சியம் உலகத்தினது குடிகளுக்கு விரோதமானது-உயிர்ப்பலிகளை இலட்சங்களிலிருந்து
மீளவும் மில்லியன்களாக்கும்.



நாம் தமிழீழத்தைக் கனவினில் தாங்கியபடி புலிகளுக்குள் முகத்தைப் புதைக்கிறோமா?இது அபத்தமான கேள்வியாக இருக்கிறதா?இருக்கணும்-இருந்தால் நிச்சியம் நமது அரசியற்பார்வையின் தரிசிப்பு நம்மை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்போகிறது.நமது விடுதலைக்காக நாம் செலுத்திய விலை அதிகமானது.இன்று உலகைப் பங்கீட்டுக்கொள்ளும் அரசியலுக்கு நமது வாழ்வும்-உயிர்ப்பும் பலிகடாவாக்கப்பட்டுவருகிறது.இந்த "நமது"க்குள் உலகத்தின் பல பாகத்திலுமுள்ள தேசங்களின் கனவுகளும் அடங்க நாம் என்று பட்டியலிடும் நமது அரசியல் புரியத் தக்கதே!இது,மிகத் தெளிவானது.



கடந்த சில தினங்களாக இருஷ்சிய மேலாதிக்கம் ஜோர்சியாவில் குண்டுகள் போடுகிறது.படையை நகர்த்திச் சில ஆயிரம் மக்களைப் பலிகொண்டு வருகிறது.கிட்டத்தட்ட 2000 மக்கள் ஜோர்ச்சியாவில பலியாகியுள்ளார்கள் என்று ஜேர்மனிய ஸ்பீகல் பத்திரிகை எடுத்துரைக்கிறது.ஒரு பக்க யுத்த நிறுத்தத்தைச் செய்து இருஷ்சியாவின் தாக்குதலிலிருந்து அமெரிக்க நிறுவனங்களின் சொத்துக்களைப்பாதுகாக்கும் அரசியலை ஜோர்ச்சியா முன்னெடுக்க அமெரிக்காவால் வற்புறுத்தப்பட்டு, அதன் விருப்புக்காக யுத்த நிறுத்தம் அமுலாக்கஞ் செய்யப்படுகிறது.கருங்கடலில் மையங்கொண்ட பூகோள அரசியல் யுத்தம் இன்னொரு தெரிவை உலகுக்கு வழங்கும் அமெரிக்காவின் இரண்டாவது வாய்ப்பை அடியோடு அழிக்குமா?அல்லது அமெரிக்காவின் தந்திரத்தை நிலைப்படுத்தும் சூழலை மத்திய ஆசியாவில் ஏற்படுத்துமா?இதற்கான தெரிவாக ஐரோஆசியாவின் முனைகளில் தவங்கிடக்கும் அரசியலை விளங்கும் ஒரு அவசியம் நமக்குண்டு.


கடந்த ஈராக் யுத்தம் பற்றிய கேள்வியை அமெரிக்க வெளியுறவுக்கொள்கை ஆலோசகர் திருவாளர் ஸ்பீக்கினீவ் ப்பெர்சின்கீ (Zbigniew Brzezinski) அவர்களிடம் கேட்கப்பட்ட அன்றைய ஸைற் பத்திரைகயானது 1998 ஆம் ஆண்டு ஒரு சந்திப்பை அவரோடு செய்துகொண்டது.அங்கே கேட்கப்பட்ட கேள்வியானது அமெரிக்க அரசியலில் பூகோள அரசியலின் வியூகத்தைப்பற்றிய தெளிவை நமக்கு மிக இலகுவாக ஏற்படுத்தக்கூடியளவு போதுமான தகவல்களைக்கொண்டிருக்கிறது.இன்று ஜோர்ச்சியாவில் இருஷ்சிய இராணுவத் தாக்குதல்களைப்பற்றி மேற்குலகமும்,திருவாளர் போப்பாண்டவரும் அமெரிக்க ஆதிக்க வெறியர்களும் சொல்லும் புதிய தத்துவத்தை இருஷ்சிய மேலாதிக்கம் கிஞ்சித்தும் செவிமடுப்பதற்கில்லை.நாம் இந்த அரசியல் குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்பது அவசியம்.


ஈழம் என்ற கோதாவில் இழந்துவரும் மானுட அழிவில் நமது பூகோள அரசியல் அறிவு கேள்விக்குரியது.இதை மேலும் விரிவாக்கிச் செல்வதற்கு நாம் இன்று நடைபெறும் ஜோர்சிய மற்றும் ஈராக் யுத்தங்கள் பற்றிய சரியான புரிதலை உட்கொள்வது அவசியம்.

//die zeit: Die Welt stand am vergangenen Wochenende nahe vor einem Krieg. Die Vereinigten Staaten drohten den Irak anzugreifen, weil Saddam Hussein den Waffeninspektoren der Vereinten Nationen den Zutritt zu seinen Militäranlagen verweigert hatte. War diese militärische Eskalation nötig?


Zbigniew Brzezinski: Saddam hat uns keine andere Wahl gelassen. Seine einsame Entscheidung verlangte nach einer entschiedenen Antwort. Der Verzicht auf eine Reaktion hätte die Glaubwürdigkeit gekostet - und zwar nicht nur die der USA, sondern auch die der Vereinten Nationen. Aus diesem Grunde waren übrigens auch die Staaten, die zuvor militärische Angriffe immer abgelehnt haben, in der vergangenen Woche eher schweigsam - oder sie stimmten ihnen sogar zu.//
http://www.zeit.de/1998/48/ein_ende_finden





"ஸைற் பத்திரிகை:கடந்தவார இறுதியில் உலகம் ஒரு யுத்தத்தைத் தரிசிப்பதற்கு அண்மித்து வருகிறது.ஐக்கிய அமெரிக்கா யுத்தம் ஒன்றைச் செய்வதற்கான அச்சத்தை ஈராக்மீது திணிக்கிறது.ஏனெனிலில், சதாம் ஐ.நா.வினது ஆயுதப் பரிசோதகர்களைத் தனது தேசத்தினது இராணுவ நிலைகளுக்குள் விடுவதற்கு மறுத்து வருவதால்.இதற்கு இராணுவ விஸ்தரிப்பு அவசியமா?


ஸ்பீக்கினீவ் ப்பிறஸ்சின்கீ:சதாம் எங்களுக்கு வேறொரு தெரிவை விட்டுவைக்கவில்லை.அவருடைய தனித்த முடிவானது முடிந்த முடிவான பதிலைத் தருகிறது.தவிர்த்துக்கொள்வதூடான மறுவிளைவு நம்பிக்கைக்கு உலை வைக்கிறது.அது,ஐக்கிய அமெரிக்காவுக்கு மட்டுமல்ல,ஐ.நா.வுக்கும்தாம்.இக்கராணத்தால்,உலக நாடுகள் இதற்குமுன் இராணுவத்தாக்குதலை மறுத்தவர்கள்கூட கடந்த கிழமைக்குபின் மௌனித்துகிடக்கிறார்கள்.அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவை வழங்கிக் கிடக்கிறார்கள்."


மேற்காணும் நேர்முகத்தை 1998 ஆம் ஆண்டு எடுத்த ஸைற் பத்திரிகையானது இன்று இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தத்தை மிகவும் மலினப்படுத்தப்பட்ட வார்த்தைகளோடு வர்ணிக்கிறது."அழிவு.அவலம்,இடப்பெயர்வு" என்று கூறும் இந்த ஊடகங்கள் அன்றைய அடாவடித்தனமான அமெரிக்காவின் ஈராக்மீதான யுத்தத்தை அடக்கி வாசித்தவர்கள்.இவர்களின் அரசியலோடு மத்திய ஆசியாவின் எண்ணை மற்றும் எரிவாயு அரசியல் இருக்கிறது.உலகத்தைப் பங்குபோடும் யுத்தங்கள் அப்பாவி மக்கள்மீது திணிக்கும் வன்யுத்தங்களை இன்றைய வல்லரசுகள் தத்தமது அரசியல் பூகோள நலன்களின் வழிக்கேற்றவாறு நடாத்தி முடிக்கின்றன.இங்கே, ஐனநாயகம்,மானுட நேயம் என்பதெல்லாம் வெற்று வார்த்தைகள்தாமென்பதை அன்றைய அமெரிக்க ஜனாதிபதி காட்டாரின் அரசியல்-பாதுகாப்பு ஆலோசகரும் இன்றைய அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளருமான திரு.ப்பிறன்சிஸ்கீ Zbigniew Brzezinski ஊடாக நாம் இனம்காணமுடியும்.


அமெரிக்காவினது உலக மேலாதிக்க வெறியானது இருஷ்சியாவை நான்கு துண்டுகளாக்கும் திட்டத்தை வகுக்கக் காரணமான இந்தப் பேராசிரியர் Zbigniew Brzezinski இன்றைய ஒபாமாவின் அரசியல் ஆலோசகரும் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளருமாக இருந்தபடி சமீபத்தில் ஒபாமாவை நேட்டோ அணியின் பங்குதார நாடுகளுக்கு அனுப்பிய பின்னணியோடு இந்த இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம் நடைபெறுவதன் உட் பூசலை நாம் விளங்கிக்கொள்வதன் தொடராக இந்தக்கட்டுரை விரிந்து செல்லும்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
10.08.2008.


Saturday, July 26, 2008

நெடுங்குருதிக்குள் சமாதானத்தைப் பேண்

நெடுங்குருதி சொல்லும்
நீயும்-நானும்.

செத்தவர்கள் செத்தவர்களாகச்
சேறடிப்பதும் துரோகி சொல்வதற்கும்
இடப்பட்டவொரு வெளியில்
ஈழம் இருண்டுகிடக்க

பேருரைகள்
ஆய்வுகள் அவசரத்தில்
நீதி பகிர்ந்து...

தொடருகிற யுத்தக் காண்டம்
உடலங்களில் எண்ணிக்கை வைத்து
ஸ்ரீலங்காவின் ஒருமைப்பாட்டை
சிங்கக் கொடியால் பிணைத்தபடி
புலிக்கொடிக்கு நெருப்பிட்டு மகிழ்வதும் தொடர்ந்தபடி

கொடிகள் எரிக்கப்படலாம்
ஏற்றப்படலாம்
கம்பத்தில் மனிதம் தூக்கப்படுவதை
இனவொற்றுமை சொல்லியும்
ஜனநாயகஞ் சொல்லியும்
ஈழ விடுதலை சொல்லியும் நீ நியாயப்படுத்துவதை
இத்துடன் நிறுத்து!

ஒரு போரை
இன்னொரு போரால் நியாயப்படுத்தி
ஓரத்தில் நிற்கும் நீயோ
இலங்கையின் கருப்பு ஜுலை நெடுங்குருதிபற்றி
எல்லோருக்கும் வகுப்பெடுக்கிறாய்

அன்று
அடியாட்களை ஏவிய சிங்கள இனவாதம்
இன்று
உலகமகா ஜனநாயகக் காவலரின் ஆயுதங்களைக் காவி
தேசியக் கொடியைத் தமிழர்களின் பிணங்களின்மீது ஏற்றியபடி


இனப் பிரச்சனைக்குத் தீர்வு
நன்றாகவே புகட்டுகின்றனர்!

எனதுடலின் உயிரைக் குடிக்கும்
மிருகக் கொடிகளுக்குள் மறைந்துகிடக்கும் சாத்தான்கள்
புவிப் பரப்பில் வேதம் ஓதுகின்றன இலங்கைக்குச் சமாதானம் சொல்லி

கிழக்குக்கு ஜனநாயகம் கொணர்ந்த வக்கணையுள்
மகிந்தாவின் மண்டைக்குத் தொப்பி தைப்பதற்கு
நீ
ஸ்டாலினைக் கூட்டிவந்து ஒருமைப்பாட்டைச் சொல்லலாம்
அல்லது
மார்க்சைக் கூட்டி வந்து"இதுதாம் மாங்காய்"என்று
மந்திரஞ் சொல்லலாம்
ஆனால்
தொடரும் நரவேட்டையின் மந்திரக் கோலை
தேர்ந்தெடுத்த அரசுகளுக்காய் விட்டபடி

இதற்குள்
பிட்டுக்கு மண் சுமந்த
சிவன்களாகப் பலர் நமக்குள்ளும்
நித்தியாய்
நிர்மலாவாய்
ராஜேசாய்
ராகவனாய்
ரஞ்சித்தாய் வஞ்சித்து நெடுங்குருதி காணலாம்

வஞ்சித்தே வழக்கப்பட்டவர்களோ
அன்றுகொண்ட வேஷங்களின் கலைப்புக்கு
இன்றுவரை மருத்துவஞ்(சுய(...)விமர்சனம்) சொல்லாதவர்கள்
இன்று
வழிகள் அனைத்திலும்
பெரும் பொறிகள் அமைத்து
தெருவெங்கும் முகமூடியணிந்த முனிவர்களாக
நெடுங் குருதியாற்றில் அமிழ்ந்து தியானித்துக் கொல்(ள்)கிறார்கள்!

புலிக்குப் புசிப்பதற்கு மாவீரர்களும்
சிங்கத்துக்குப் புசிப்பதற்குத் தமிழர்களும் சிங்களவர்களும் மரித்துக்கிடக்க
ஸ்ரீராமச்சக்கரம் விரைவாகச் சுற்றிக்கொள்ளும்
இவ்விரண்டு மிருகங்களுக்கும் சேர்க்கஸ் வகுப்பெடுக்க

இனியென்ன?

செத்தவர்களைச் சொல்லிக்கொள்
ஞாபகப்படுத்திச் சில வினாடி மௌனித்துக்கொள்
இலங்கைக்குள் சமஷ்டி
மாகாணம்
மாநிலம் என்றும் மந்திரம் ஓதிக்கொள்
ஆனால்
ஸ்ரீலங்கா அரசை மட்டும் பகைத்துவிடாதே!

இன்னொரு பொழுதில் நீ அறுவடைக்குப் போவாய்
இருப்பவர்களின் உயிருக்கு உலையும் வைத்து
உனக்கான எலும்பை எறிந்துவிடும் ஸ்ரீலங்கா
சிரித்த முகத்துடன்
தமிழருக்கானவொரு புதைகுழியை
நீ
மாகாணங்களின் பெயர் சொல்லித் தோண்டிக்கொள்வாய்!

இதுதாம்
இன முரண்பாட்டுக்கான "தீர்வுப்பொதி"-இதுவரை நீ செய்ததும் இதுவே.


நாளை நன்றாகவே
நெடுங்குருதிக்குள் சமாதானத்தைப் பேண்
நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும்
தமிழரெனும் நாமத்துடன்
நன்றாகப் பேருரையை எஜமானரின் ஒப்புதலோடு இன்றே எழுதிக்கொள்
அப்போது
நீயே நமது மேய்ப்பன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
27.07.2008
இரவு மணி:00:34


P/S:படங்கள் பெயரிலிவழி ஈழப் படப்பிடிப்பாளர்களுக்குச் சொந்தம்.நன்றி என்பது உங்களுக்கான வெகுமதி.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...