Saturday, April 30, 2005

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை
வெகுஜனப் போராட்டமாக்குக...

இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது???


நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படியாக இழந்து வருகிறது.இதை உலகச் சதி இலங்கை ஆளும் தரகு முதலாளிய ஆட்சியூடாய் கச்சிதமாகச் செய்து முடிக்கிறது.இந்தத் தொடர்ச்சியாகச் சமீபகால கருணா பிளவைச் செய்வித்த பிராந்திய நலன் பின்பு ஆளுமையான புலிகளின் நிர்வாகத் திறன்மிக்க கௌசல்யனை அழித்துப் பாரிய பின்னடைவை தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்தியது. இன்று சிவாரம் படுகொலையானது அடுத்தபோர் வெடிக்கும் நிலையில் புலிகளின் இராணுவ நகர்வை-இலங்கைப் படைகளின் இராணுவ வியூகத்தின் செயற்திறனுக்கு நிகராக நகர்த்தத் திட்ட ஆலோசனையற்ற ஒரு சூழலையேற்படுத்தும் கபடம் நிறைந்தது.


எந்தக் காரணமாயினும் நமது சமுதாய வாழ்வு சின்னாபின்னப்படுத்தப்படும் கொடுமைகளை யாரும் பழிவாங்கும் அரசியலாகக் குறுக்க முடியாது.இது நம்மை அன்நிய மூலதனத்திடம் கூலிபெற்று வாழும் இழிநிலைக்குத் தள்ளிவிடும்.இங்கு புலி,புளட்,ஈ.பி....,ஈ.என்... மற்றச் சனியன்கள் எல்லாம் கொலை செய்த தொடர்ச்சிதாம் இதுவென்றுவிட்டுத் தமிழ்பேசும் மக்கள் செயலற்றிருக்க முடியாது! நாம் இயல்பாகச் செயலாற்றுவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் தள்ளப் பட்டுள்ளோம்.இந்தக் கொலை வெகுஜனமட்டத்தில் பாரிய எதிர்போராட்டமாகியே தீரணும்.சர்வதேசரீதியாக நகர்த்திடவேண்டும்.இதனூடே நமது ஜனநாய விழுமியங்களுக்கான குறைந்தபட்சக் கோரிக்கைகள் தமிழரின் அரசியல் உரிமையின் பெறுமானத்துடன் சம்பத்தப்பட்டதும், அது தவிர்க்கமுடியாதது என்பதும் உலக மக்களின் விழிகள் முன்-செவிகளுக்கு வைக்கப்பட வேண்டும்.


அவர்கள் 'நமது நாட்டில் தத்தமது நாடுகளின் சூழ்ச்சியைப்' புரிந்து தமது நாடுகளுக்கு அழுத்தமிட இது வாய்ப்பாகவேண்டும்.குறிப்பாக நமது தமிழகச் சகோதரர்கள் இத்தகைய அழுத்தத்தைத் தமது நாட்டிற்குக் கொடுக்கும் நிலைதோன்றியாகவேண்டும்.இலங்கை அரசியலில் இதுவரை நடைபெறும் கொலைகளுக்கும்-பிளவுகளுக்கும்-அரசியல் வியூகத்திற்கும் முழுக்க முழுக்க இந்தியப் பிராந்திய வல்லரசின் நலனே காரணமாகவும் இருக்கிறது. எனவே நமது நியாயமான அரசியல் அபிலாசை எமது வாழ்வின் அதிமுக்கியமான மனிதவுரிமையென்பதை இந்திய-உலக முதலாளியச் சமூகங்கள் புரிந்திட இந்தப்படுகொலையை வெகுஜனப்போராட்டமாக்குக,இது நமது இன்றைய கோரிக்கையாக வலுப்பெற வைப்பீர்கள் அறிஞர்களே!


இதுதாம் அடுத்து வரப்போகும் பயங்கரமான சமூகச்சிக்கலைத் திறம்பட தீர்த்துவைக்கக் கூடிய அரசியல் முன்னெடுப்பையெமக்கு வழங்கும் புறநிலையைத் தோற்றுவிக்கும்.இதை விட்டு ஒப்பாரிகள் வைப்பதால் இறுதியில் சோகம்தாம் மிஞ்சும்,இது எமது சமூகத்தின் அடித்தளத்தையே நாசமாக்கி நாம் குர்த்தீஸ் மக்களின் நிலைக்குத் தள்ளப்டுவதில் போய்விடும்.


எழுக,மென்மேலும் எழுக!தமிழ்-சிங்கள மக்களோடு உலக மக்களின் மனங்களை வெல்லக் காரியமாற்றுவீர்!!


இனியும் அறிவுஜீவிகளை இழக்முடியாது!இன்றே செய்க,இப்போதே தொடங்குக.


எடுத்திடு பேனையை உயிரே போகினும் உன் இதயத்தைத் திரியாக்கிக் குருதியை எண்ணையாக்கிப் பற்றவை.அதுதாமே மனிதவிழுமிய ஒளியாக உலகமெங்கும் இருள் விலக்கி நமது நியாயமான அரசியல் அபிலாசையை வென்று தரும்!


நாளை ஞாயிறு தொழிலாளார்கள் தினம் 01.05.2005! உலகமெங்கும் பரந்து வாழும் என் உறவுகளே வீதிகளில் கூடுங்கள் உங்கள் பாதகைகளுடன்,கொலைக்கெதிரான அட்டைகளை உங்கள் கரங்கள் தாங்கட்டும்.உலகப் பாட்டாளியக் கட்சிகளோடு சேர்ந்து இதை முன்னெடுப்பீர் என் உறவுகளே!இதில் நானே முதல் போராளியாக நாளை நிற்பேன்!


ப.வி.ஸ்ரீரங்கன்
30.04.2005

48 comments:

சுந்தரவடிவேல் said...

உலகளாவிய வகையில் இதனைப் பரப்பிடல் அவசியமே.
//இன்றெங்களோடு பாடிட எவரால் முடியவில்லையோ,அவரெமை எதிர்க்கிறார்!//

Sri Rangan said...

நன்றி சுந்தரவடிவேல் கருத்துக்கு.
கவிஞர் மாயாகோவ்ஸ்கியின் அந்த வரிகளை அமெரிக்கா அப்படியே பெயர்த்தெடுத்துப் பயன் படுத்தும்போது'யாரெங்களோடு நிற்கிறார்களோ அவர்கள் நண்பர்கள்,மற்றவாகள் பகைவர்களெனும் அமெரிக்க அதிபரின் குரலை இவ் வாக்கியத்துக்கள் காணும்போது-ஒடுக்கப்படும் உலகம் ஏனிதைப் பயன்படுத்தப்படாது?... இதுவொருவகையில் கருத்தியற் பாசிசம்போல் தெரியும்.ஆனால் ஒடுக்கப்படுபவர்களிடும் அறைகூவலாய் எடுத்தால் சரி.

இளங்கோ-டிசே said...

//இந்தத் தொடர்ச்சியாகச் சமீபகால கருணா பிளவைச் செய்வித்த பிராந்திய நலன் பின்பு ஆளுமையான புலிகளின் நிர்வாகத் திறன்மிக்க கௌசல்யனை அழித்துப் பாரிய பின்னடைவை தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்தியது. இன்று சிவாரம் படுகொலையானது அடுத்தபோர் வெடிக்கும் நிலையில் புலிகளின் இராணுவ நகர்வை-இலங்கைப் படைகளின் இராணுவ வியூகத்தின் செயற்திறனுக்கு நிகராக நகர்த்தத் திட்ட ஆலோசனையற்ற ஒரு சூழலையேற்படுத்தும் கபடம் நிறைந்தது.//
மிகச் சரியான அவதானம், ஸ்ரீரங்கன்.
//இது எமது சமூகத்தின் அடித்தளத்தையே நாசமாக்கி நாம் குர்த்தீஸ் மக்களின் நிலைக்குத் தள்ளப்டுவதில் போய்விடும்.//
இப்படியான் ஒரு அவதானத்தைத்தான், யாசீர் அரபா·த்துடன், நெருங்கிப்பழகி, பிறகு (92 பாலஸ்தீனிய சமாதான உடன்படிக்கையின்பின்) விலகிவந்த ஒரு பாலஸ்தீனிய நண்பர், ஈழத்தில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்ட சமயத்தில், தங்களைப் போல ஒரு நிலை வராது, உங்களது மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வருகின்றது.

வன்னியன் said...

நல்ல பதிவு சிறிரங்கன்!
இந்த இடத்தில் கடந்த கசப்புணர்வுகளைக் களைந்து விடுவோம்.

Sri Rangan said...

டி.ஜே,வணக்கம்!
இன்றைய நமது இருள்சூழ் காலவர்த்தமானத்தை நாம் வென்றாகியாகணும்.இதை கருத்தியற்றளத்திலும்-அரசியல் காய் நகர்த்துவதிலும்.எங்கள் அமைபாண்மையை உலகம் சிதறடிக்குமென்பதை நாம் முன்கூட்டித் தெரிந்துகொண்டும்,அதுகுறித்துக் கவனமின்றிச் செயற்பட்டுள்ளோம்.இதுதாம் கவலைக்குரிய செயல்.எதையும் சந்தேகம்கொள்!என மார்க்ஸ் அடிக்கடி கூறிக்கொள்வாராம்.அதாவது:ஏன்-எப்படி-எதற்கு? என்றமாதிரி... எமது இருப்புப் பலவீனமாவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.தத்தம் நலனுக்காக-அரசியல்,பதவி-பணத்துக்காக பழிவாங்கும் தமிழ் அமைப்புகளை நம்பி ஏமாறாது,மக்கள் சுயமாகத் தங்கள் இறையாண்மைக்குக் குரலிடவேண்டும்! புலிகள் மக்களின் பின்னே அவர்களது நலனுக்காக இனிச் செயற்படும் காலமுள்ளதைத் தட்டிக்கழிக்காமல் மக்களை அரவணைத்துக் காரியமாற்றினால் இத்தகைய அழிவுகளை வலுவாகக் குறைக்கலாமென நினைக்கிறேன்

Sri Rangan said...

நன்றி வன்னியன்.நாம் மக்களின் நலனினால் எப்பவும் ஒன்றாகவேயுள்ளோம்.

ஜெயச்சந்திரன் said...

நல்ல பதிவு பல யதர்ததை சொல்லியுளீர்கள்

thamillvaanan said...

உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. உங்களுடைய பதிவில் டிசே தொட்டுக்காட்டிய கருத்து மிகவும் பொருத்தமானது என்றே நான் நினைக்கிறேன். தெய்வீகன் தன்னுடைய பதிவிவொன்றில் செய்தியாளன் செய்தியானான் என தலைப்பிட்டிருந்தார். இது எவ்வளவு கொடுமையானது என்பது தலைப்பே உரைக்கிறதல்லவா?

பத்திரிகையாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல் மிகவும் பாரதூரமானது. காட்டுமிராண்டித்தனமானது. நீங்கள் சொல்வது போல ஒரு வெகுஜன போராட்டம் அத்தியாவசியமானது என்றே கருதுகிறேன்.

Sri Rangan said...

நன்றி,தமிழ்வாணன்.

Anonymous said...

nfhiyfs; midj;Jk; fz;bf;fg;gl Ntz;baNj. ,jpy; cld;ghL nfhslshJ ,Uf;f KbahJ. ,J ve;j mikrg;gigr; NrHe;jtHfshf ,Ue;jhYk; nfhiyfs; epw;ghl;lg;gl Ntz;Lk;.

Aj;jk; njhlq;f epjp%yjdk; mDkjpf;FKh?
FHjp]; epiyf;F tu ahH fhuzk;?
Aj;j epUzj;j epUzj;Jtj;ij gyaPdk; nra;Ak; nfhiy vd $Wfpd;wPHfs; ,J vt;tsT Jhuk; Gypfs; Vw;Wf; nfhs;thHfs;. mjhtJ SR xU Aj;j epUzH v;gij.

midtUf;Fk; Nk jpd tho;j;Jf;fs;.
Njth

Anonymous said...

ehk; nfhiyfis JNuhfpfs; jhNd nfhy;yg;gLfpd;wdH. nfhy;yg;gll;Lk; vd;W fUj;Jf;fs; $Wfpd;Nwhk;. ,jpy; ciof;Fk; kf;fs;> Njrpak; vd;w epiyapy; fUj;Jf; $Wk; epiy ,Uf;fpd;wJ. Mdhy; jkpoPotpLjiyg; Nghuhl;lj;jpy; ciof;Fk; kf;fs; eyd; nfhz;ljhf xU nfhiy eilngwtpy;iy. mjpfhug; Nghl;b> rjp> Fopgwpg;G> [dehafkpd;ik Nghd;wtw;wpdhy; eilngw;w nfhiyfNs kpjkpQ;rpapUf;fpd;wJ. vjpHfhyj;jpy; ciof;Fk; kf;fspd; Nghuhspfshf cUthFtij gpd;diltpw;Fs;shf;Fk; nfhiyfs;.

Anonymous said...

nfhiyf; fyhr;rhuk; vd;gJ ahH epfo;j;jpdhYk; mJ jtwhdNj. Kd;dH gj;jpupifahsH eNlrd; nfhiy nra;ag;gl;l NghJ Vw;gl;l epiy gpd;duhf eilngw;w ve;jf; nfhiyf;Fk; Kf;fpaj;Jtk; nfhLj;J tpltpy;iy. Vnddpy; JNuhfpfs; vd;w gl;lk; Kf;fpa fhuzkhFk;. Mdhy; ve;jf; nfhiyf; fyhr;rhuj;ij Mjupj;jhNuh me;jf; fyhr;rhuj;jpw;Nf gypahfptpl;lhH.

Anonymous said...

,e;jf; nfhiyf;F fhuzk; ahH vd;gjpy; Cfq;fis ntspg;gLj;jpf; nfhz;bUf;fpd;w Ntisapy; nfhiyf; fyhr;rhuj;jpd; gpjh kf;fNs ,f;nfhiyf; fhuz nghWg;ig Vw;Wf; nfhs;s Ntz;Lk;. ,tHfisg; nghWj;jtiuapy; jsk;> nghUshjhu eyd;> mtHfspd; Kf;fpa gpuKfHfs; ,tHfs; jtpHe;j ve;j gpuirAk; Kf;fpak; mw;w epiyapNyNa ,Uf;fpd;wJ. ,J Fwpg;gp;l;l egHfspd; topelj;jypy; eilngWfpd;w xU mikg;gpdhy; Nkw;nfhs;sg;gLk; jpl;lkply;fshFk;. ,jd; NghJ ahH nfhy;yg;gLfpd;whHfs; vd;gJ gw;wp vtUk; ftiyg;glg; Nghtjpy;iy. rptuhk; khjpupahd egHfs; me;j epWtdj;jpd; cgupahd xU egHfNs. ,tHNghyNt gy cgupg; Nghuhspfs; cs;sdH. Njit Vw;gbd; ,e;jg; Nghuhspfspd; kuzj;ijf; nfhz;Nl xU Nghuhl;lk; vd;gJ njhlUk;. ,Jjhd; vkJ jkpoPo Nghuhl;l tuyhW.

Anonymous said...

,d;W mur gilfSf;Fk; GypfSf;Fk; ,ilapyhd fz;zhk;g+r;rp tpisahl;by; rptuhk; khj;jpuk; my;y. gy gj;J ,isQHfs; ,dp njUf;fspy;> MWfspy; tPrg;glyhk;. ,it njhlHrpahf eilngw re;jHg;gk; ,Uf;fpd;wJ. ,tw;wpw;F gjpy; $wf;flikg;gl;ltHfs; nfhiyf;fyhr;rhuj;jpd; gpjhkf;fNs.
fle;j gy khjq;fshf murpd; Gydha;Tg; gputpdupd; gy cWg;gpdHfs; nfhy;yg;gl;lhHfs;. ,jw;F ve;j eltbf;ifiaAk; vtUk; vLf;ftpy;iy. ,jw;F rpfuk; itj;jhw;Nghy; n[aul;zk; flj;jy; MFk;. ,e;j epiyapy; epWtdkag;gl;l mur ghrPrk; Rk;kh ,Uf;Fk; vd;gJ gfy;fdNtahFk;. ,q;F mur ghrPrk;> jkpo;ghrPrk; vd;gdtw;wpd; njhopw;ghL xNu khjpupahditFk;. ,jpy; rptuhk; Ntz;lhd (nfsry;ad; Nghy) xU eguhf ,Ue;jpUf;fyhk;. ,jpy; rptuhk; xU gypf;flhthf NghapUf;fyhk;.
mNjNghy ,ul;il Ntlk; nfhz;l egH vd;gjhy; GypnajpHg;G Clfq;fs; $WtJ Nghy Gypfspdhy; ek;gpf;if JNuhfpfs; vd;W nfhy;yg;gl;bUf;fyhk;. ,e;j ehl;fspy; jhd; jkpo;ghrPrk; rNfhju gLnfhiy epfo;j;jp gyiu uaH Nghl;Lf; nfhOj;jpa ehl;fs; mDrupf;fg;gLfpd;wJ. ve;jg; ghrPrj;ij md;iwf;F vjpHj;NjhNkh me;jg; ghrPrj;jpw;F Jiz nrd;W Njrpak; vd;gijf; fhg;ghw;wg; Ngha; ,d;W rptuhik me;jg; ghrPrj;jpw;Nf ,iuahfptpl;lhH.

Anonymous said...

'vq;fs; Njrj;jpw;fhf
,we;jtHnfy;yhk;
tpsk;guk; nfhLj;jhapw;W
Vnddpy;
eilKiwg; gpur;rid
$HikilAk; fhy;
jpahfpfisf; fhl;bNa
jpirjpUg;Gk;-
,e;j tHf;fj;jpw;Fj; Njit
jpahfpfs;.... "
,t;thWjhd; Gypfspd; mQ;ryp ,Uf;fg; Nghfpd;wJ. vkf;Fj; NjitahdJ Xl;Lnkhj;jkhd gLnfhiyia jLj;J epWj;JtjhFk;. ,J ahH nra;jhYk; nfhiy nfhiyjhd;.
,e;jg; gLnfhiy xU ghlj;ij je;J tpl;Lg; NghapUf;fpd;wJ. Njrpaj;ijg; ghJfhg;gjw;fhf Kd;tUfpd;w gbj;j Gj;jpaPtpfspd; ciog;G vd;gJ nfhiyf;fyhr;rhuj;ijg; ghJfhg;gjpy; gad;gLj;jg;gLfpd;wd. ,tHfspd; ciog;G vd;gJ Fiwe;j gl;rk; kdpjH tho;tjw;fhd Rje;jpuj;ij Nehf;fpa Njitia typAWj;jpahtJ ,tHfs; kf;fspd; gf;fk; epw;gNj Kf;fpakhdjhFk;. Njrpaj;jpd; NghHitapy; r%fj;jpd; ,lJ gpuptpdH (,tHfs; nghJTlikthjpfs; my;y) vdg;gLk; Kw;Nghf;Fg; gpuptpdH ghrPrj;Jf;F Kz;L nfhLj;Jf; nfhz;L mtHfis khw;w KbAk; vd ek;gpf; nfhz;bUg;gjpy; tPz;tpuNahfk; vd;gNj ,e;jf; nfhiy fhl;b epw;fpd;wJ. xU nfsry;ad; nfhiy vt;thW fz;bf;fl Ntz;baNj mNj Nghy n[wpapd; nfhiy kaf;f kUe;J Nghl;L nfhy;yg;gl;l vz;kH nfhiyfSkhFk;> xU eNlrdpd; nfhiy vd;thNw rpd;dghyhtpd; nfhiyAk; rptuhkd;> uNk]; nfhiyAk;. ,itfs; ve;jj; jug;gpy; ,Ue;J eilngw;whYk; ,it epWj;jg;gl Ntz;Lk;.

Anonymous said...

--
Posted by Anonymous to The point:social steady is the sociality. at 5/1/2005 11:06:10 AM




கொலைகள் அனைத்தும் கண்டிக்கப்பட வேண்டியதே. இதில் உடன்பாடு கொளடளாது இருக்க முடியாது. இது எந்த அமைசப்பபைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கொலைகள் நிற்பாட்டப்பட வேண்டும்.

யுத்தம் தொடங்க நிதிமூலதனம் அனுமதிக்குமுh?
குர்திஸ் நிலைக்கு வர யார் காரணம்?
யுத்த நிருணத்த நிருணத்துவத்தை பலயீனம் செய்யும் கொலை என கூறுகின்றீர்கள் இது எவ்வளவு தூரம் புலிகள் ஏற்றுக் கொள்வார்கள். அதாவது ளுசு ஒரு யுத்த நிருணர் எ;பதை.

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
தேவா


நாம் கொலைகளை துரோகிகள் தானே கொல்லப்படுகின்றனர். கொல்லப்படட்டும் என்று கருத்துக்கள் கூறுகின்றோம். இதில் உழைக்கும் மக்கள், தேசியம் என்ற நிலையில் கருத்துக் கூறும் நிலை இருக்கின்றது. ஆனால் தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் நலன் கொண்டதாக ஒரு கொலை நடைபெறவில்லை. அதிகாரப் போட்டி, சதி, குழிபறிப்பு, ஜனநாயகமின்மை போன்றவற்றினால் நடைபெற்ற கொலைகளே மிதமிஞ்சியிருக்கின்றது. எதிர்காலத்தில் உழைக்கும் மக்களின் போராளிகளாக உருவாகுவதை பின்னடைவிற்குள்ளாக்கும் கொலைகள்.


கொலைக் கலாச்சாரம் என்பது யார் நிகழ்த்தினாலும் அது தவறானதே. முன்னர் பத்திரிகையாளர் நடேசன் கொலை செய்யப்பட்ட போது ஏற்பட்ட நிலை பின்னராக நடைபெற்ற எந்தக் கொலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து விடவில்லை. ஏனெனில் துரோகிகள் என்ற பட்டம் முக்கிய காரணமாகும். ஆனால் எந்தக் கொலைக் கலாச்சாரத்தை ஆதரித்தாரோ அந்தக் கலாச்சாரத்திற்கே பலியாகிவிட்டார்.


இந்தக் கொலைக்கு காரணம் யார் என்பதில் ஊகங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் கொலைக் கலாச்சாரத்தின் பிதா மக்களே இக்கொலைக் காரண பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களைப் பொறுத்தவரையில் தளம், பொருளாதார நலன், அவர்களின் முக்கிய பிரமுகர்கள் இவர்கள் தவிர்ந்த எந்த பிரசையும் முக்கியம் அற்ற நிலையிலேயே இருக்கின்றது. இது குறிப்பி;ட்ட நபர்களின் வழிநடத்தலில் நடைபெறுகின்ற ஒரு அமைப்பினால் மேற்கொள்ளப்படும் திட்டமிடல்களாகும். இதன் போது யார் கொல்லப்படுகின்றார்கள் என்பது பற்றி எவரும் கவலைப்படப் போவதில்லை. சிவராம் மாதிரியான நபர்கள் அந்த நிறுவனத்தின் உபரியான ஒரு நபர்களே. இவர்போலவே பல உபரிப் போராளிகள் உள்ளனர். தேவை ஏற்படின் இந்தப் போராளிகளின் மரணத்தைக் கொண்டே ஒரு போராட்டம் என்பது தொடரும். இதுதான் எமது தமிழீழ போராட்ட வரலாறு.


இன்று அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான கண்ணாம்பூச்சி விளையாட்டில் சிவராம் மாத்திரம் அல்ல. பல பத்து இளைஞர்கள் இனி தெருக்களில், ஆறுகளில் வீசப்படலாம். இவை தொடர்சியாக நடைபெற சந்தர்ப்பம் இருக்கின்றது. இவற்றிற்கு பதில் கூறக்கடமைப்பட்டவர்கள் கொலைக்கலாச்சாரத்தின் பிதாமக்களே.
கடந்த பல மாதங்களாக அரசின் புலனாய்வுப் பிரவினரின் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு எந்த நடவடிக்கையையும் எவரும் எடுக்கவில்லை. இதற்கு சிகரம் வைத்தாற்போல் ஜெயரட்ணம் கடத்தல் ஆகும். இந்த நிலையில் நிறுவனமயப்பட்ட அரச பாசீசம் சும்மா இருக்கும் என்பது பகல்கனவேயாகும். இங்கு அரச பாசீசம், தமிழ்பாசீசம் என்பனவற்றின் தொழிற்பாடு ஒரே மாதிரியானவைகும். இதில் சிவராம் வேண்டான (கௌசல்யன் போல) ஒரு நபராக இருந்திருக்கலாம். இதில் சிவராம் ஒரு பலிக்கடாவாக போயிருக்கலாம்.
அதேபோல இரட்டை வேடம் கொண்ட நபர் என்பதால் புலியெதிர்ப்பு ஊடகங்கள் கூறுவது போல புலிகளினால் நம்பிக்கை துரோகிகள் என்று கொல்லப்பட்டிருக்கலாம். இந்த நாட்களில் தான் தமிழ்பாசீசம் சகோதர படுகொலை நிகழ்த்தி பலரை ரயர் போட்டுக் கொழுத்திய நாட்கள் அனுசரிக்கப்படுகின்றது. எந்தப் பாசீசத்தை அன்றைக்கு எதிர்த்தோமோ அந்தப் பாசீசத்திற்கு துணை சென்று தேசியம் என்பதைக் காப்பாற்றப் போய் இன்று சிவராமை அந்தப் பாசீசத்திற்கே இரையாகிவிட்டார்.


'எங்கள் தேசத்திற்காக
இறந்தவர்கெல்லாம்
விளம்பரம் கொடுத்தாயிற்று
ஏனெனில்
நடைமுறைப் பிரச்சனை
கூர்மைடையும் கால்
தியாகிகளைக் காட்டியே
திசைதிருப்பும்-
இந்த வர்க்கத்திற்குத் தேவை
தியாகிகள்.... '
இவ்வாறுதான் புலிகளின் அஞ்சலி இருக்கப் போகின்றது. எமக்குத் தேவையானது ஓட்டுமொத்தமான படுகொலையை தடுத்து நிறுத்துவதாகும். இது யார் செய்தாலும் கொலை கொலைதான்.
இந்தப் படுகொலை ஒரு பாடத்தை தந்து விட்டுப் போயிருக்கின்றது. தேசியத்தைப் பாதுகாப்பதற்காக முன்வருகின்ற படித்த புத்தியீவிகளின் உழைப்பு என்பது கொலைக்கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. இவர்களின் உழைப்பு என்பது குறைந்த பட்சம் மனிதர் வாழ்வதற்கான சுதந்திரத்தை நோக்கிய தேவையை வலியுறுத்தியாவது இவர்கள் மக்களின் பக்கம் நிற்பதே முக்கியமானதாகும். தேசியத்தின் போர்வையில் சமூகத்தின் இடது பிரிவினர் (இவர்கள் பொதுவுடமைவாதிகள் அல்ல) எனப்படும் முற்போக்குப் பிரிவினர் பாசீசத்துக்கு முண்டு கொடுத்துக் கொண்டு அவர்களை மாற்ற முடியும் என நம்பிக் கொண்டிருப்பதில் வீண்விரயோகம் என்பதே இந்தக் கொலை காட்டி நிற்கின்றது. ஒரு கௌசல்யன் கொலை எவ்வாறு கண்டிக்கட வேண்டியதே அதே போல ஜெறியின் கொலை மயக்க மருந்து போட்டு கொல்லப்பட்ட எண்மர் கொலைகளுமாகும், ஒரு நடேசனின் கொலை என்வாறே சின்னபாலாவின் கொலையும் சிவராமன், ரமேஸ் கொலையும். இவைகள் எந்தத் தரப்பில் இருந்து நடைபெற்றாலும் இவை நிறுத்தப்பட வேண்டும்.

Sri Rangan said...

அன்பு நண்பரே! தோழமையான செவ் வணக்கம்.இப்போதுதாம் மேதின ஊர்வலத்திற்குப் போய் வந்தேன்.நிறைய எழுதியுள்ளீர்கள்.உங்கள் கருத்துக்கள் யாவும் ஜனநாயபூர்வமான மனித விழுமியங்கள்.ஏற்றுக்கொள்கிறேன்! பல பின்னூட்டமிட்டுள்ளீர்கள்,அனைத்துக்கும் நன்றி!
சிறிரங்கன்

tamilcircle.net said...

ghpr;rj;jk;

tamilcircle.net said...

xU gr;Nrhe;jpf;F> re;jHg;gthjpf;F> xU gpiog;Gthjpf;F> xU gpdhkpf;F> xU nfhiyfhuDf;F> ,ul;il Ntljhhpf;F ~khkdpjH| vd;w nfsTutk; rpwg;ghfNt tpjptpyf;fpd;wp nghUe;Jfpd;wJ.

Anonymous said...

jopo; muq;fs; #WtJ Kw;wpYk; cz;ikNa> ,

Anonymous said...

பரிச்சார்த்தம்

Anonymous said...

ஒரு பச்சோந்திக்கு, சந்தர்ப்பவாதிக்கு, ஒரு பிழைப்புவாதிக்கு, ஒரு பினாமிக்கு, ஒரு கொலைகாரனுக்கு, இரட்டை வேடதாரிக்கு ஷமாமனிதர்| என்ற கௌவுரவம் சிறப்பாகவே விதிவிலக்கின்றி பொருந்துகின்றது.

Anonymous said...

தழிழ் அரங்கம் கூறுவது முற்றிலும் உண்மையே, .

Sri Rangan said...

இந்த முதலாளிய அமைப்பில் மானுடர்கள் >>'தமிழ் அரங்கம்'<< கூறுவதுபோன்றே பெரும்பாலவர்கள் உருப்பெறுகிறார்கள்(என்னையும் சேர்த்து).இது அந்தந்த மனிதர்களின் அகத்திலுருவாவதில்லை.>>புறநிலைகளின் தன்மையே சிந்தனையை தூண்டுகிறது<<,அவ்வண்ணமே>>'மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்'<< எனவே இந்தச் சமுதாயச் சாக்கடையிற்றாம் அனைவரும் உருவாகிறோம்.அந்தப் புறநிலையில்(முதலாளிய வாழ்சூழலில்)ஒருவர் நிலை, அவரது தேர்வில் உருப்பெறுவதாக இருப்பினும் சூழலின் அதிகூடிய செல்வாக்கை மறுக்க முடியாது.அந்த வகையிற் தொடருமிந்த மானுட அழிவை(நாம் உருவகப்படுத்தும் மனிதர்களாக இருத்தல்) சமூக எண்ணவோட்டமே தீர்மானிக்கிறதனால் எய்தகாரணியை விட்டு அம்பை நொந்து ஆவதென்ன?

Anonymous said...

tHfd;f r%fk; jPHkhdpg;gJ cz;ikNa Mdhy; njhlHe;Jk; g+HRth tHf;j;jpd; fUj;jpaYf;F cuk; NghLk; epiy gw;wpa vjpHg;gp-aiy vz;lhf;FtJ flikad;Nwh. ePq;fs; $WttJ Nghy; vtUk; tpjptpyf;fy;y. njhlHe;Jk; Njrpa Kjyhspfspd; gad;gLj;jYf;F ciof;Fk; kf;fs; njhlHe;Jkl;; gypf;flhthf Nghf NTz;Lkh? m;thnwdpy; ciof;Fk; tHf;fk; njhlHr;rpahf mtHfspd; Nfhupf;iff;fhf Nghuhb kbaNtz;Lkh?

Anonymous said...

rptuhk; kPjhd jhf;Fj y; vt;thW gj;jpupifahsd; kPjhd jhf;Fjyhf KbAk; jkpo;thzdNd?
fle;j 5 khjq;fspy; vj;jid gj;jpupifahsHfs; nfhy; nfhy;yg;gl;Ls;sdH?
mg;Ngh opof;fpy; ahH khf;fsh ,wf;fpd;wdH?

Anonymous said...

jpdf;Fuypy; ,Ue;J சமகாலத்தில் தொழிலாளர் வர்க்கம் எதிர்நோக்குகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதற்கான உத்வேகத்துடன் தொழிற்சங்க இயக்கங்கள் இனவாத அரசிய லின் செல்வாக்கில் இருந்துவிடுபட்ட தாக வளர்த்தெடுக்கப்படுவதற்கான மார்க்கங்கள் கண்டறியப்படாவிட்டால் மே தினங்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் ஒரு கிரமமான வருடாந்தத் திருவிழாவே.

Anonymous said...

from
http://www.thinakural.com/New%20web%20site/web/2005/May/02/editorial.htm

Anonymous said...

வர்க்க சமூகம் தீர்மானிப்பது உண்மையே ஆனால் தொடர்ந்தும் பூர்சுவா வர்க்த்தின் கருத்தியலுக்கு உரம் போடும் நிலை பற்றிய எதிர்ப்பியலை எண்டாக்குவது கடமையன்றோ. நீங்கள் கூறுவவது போல் எவரும் விதிவிலக்கல்ல. தொடர்ந்தும் தேசிய முதலாளிகளின் பயன்படுத்தலுக்கு உழைக்கும் மக்கள் தொடர்ந்தும் பலிக்கடாவாக போக வேண்டுமா? அவ்வாறெனில் உழைக்கும் வர்க்கம் தொடர்ச்சியாக அவர்களின் கோரிக்கைக்காக போராடி மடியவேண்டுமா?

Anonymous said...

சிவராம் மீதான தாக்குதல் எவ்வாறு பத்திரிகையாளன் மீதான தாக்குதலாக முடியும் தமிழ்வாணனே?
கடந்த 5 மாதங்களில் எத்தனை பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்?
அப்போ கிழக்கில் யார் மக்களா இறக்கின்றனர்?

Sri Rangan said...

>>வர்க்க சமூகம் தீர்மானிப்பது உண்மையே ஆனால் தொடர்ந்தும் பூர்சுவா வர்க்த்தின் கருத்தியலுக்கு உரம் போடும் நிலை பற்றிய எதிர்ப்பியலை எண்டாக்குவது கடமையன்றோ. நீங்கள் கூறுவவது போல் எவரும் விதிவிலக்கல்ல. தொடர்ந்தும் தேசிய முதலாளிகளின் பயன்படுத்தலுக்கு உழைக்கும் மக்கள் தொடர்ந்தும் பலிக்கடாவாக போக வேண்டுமா? அவ்வாறெனில் உழைக்கும் வர்க்கம் தொடர்ச்சியாக அவர்களின் கோரிக்கைக்காக போராடி மடியவேண்டுமா?<<



பூர்ச்சுவா வர்க்கக் கருத்தியலுக்கெதிரான-உரம்போடலுக்கெதிரான எதிர்ப்புக் கருத்தியற் போராட்டம் தேவையே! அதை யாரும் மறுக்கவில்லை.முதலாளியம் தனது இருப்புக்காக பன்நெடுங்காலமாகப் பாரிய கருத்தியல் யுத்தஞ் செய்தவண்ணமேயுள்ளது. அதனது சகல கருத்தியல் நிறுவனங்களுமிதைச் சரிவரைச் செய்கின்றபோது,இதற்கெதிரான மக்கள்சார் விழுமியங்களை வென்றெடுக்கப் பாரிய மாற்றுக் கருத்தியல் வடிவம் அவசியமானது.ஆனால் தேசியப் போராட்டங்கள் முடிவுக்குவராத அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் பல்லின முதலாளிய வர்க்கத்தின் முரண்பாடானது ஒரு இனத்தை இன்னொருவினம் தலைவெட்டும்போது தனியே பூர்ச்சுவாக்கள் மட்டுமே அழிவதில்லை.மாறாகக் குறிப்பிட்ட இன மக்களும் அழிவதினால்-அது இனவொடுக்குமுறையாக வடிவுறுந் தறுவாயில்,இதற்கெதிரான தேசியவிடுதலைப்போராட்டம் முற்போக்குப் பாத்திரம் வகிக்கும்.இங்கே இனவொடுக்குமுறையைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் மரபுவழிப் பார்வைகள் காலம் கடந்தவை!பெரும்பான்மை இன தரகு முதலாளிகள் சிறுபான்மைத் தரகு முதலாளிகளை மட்டுமா ஒடுக்குகிறார்கள்? சிங்களவரசு ஓட்டுமொத்தத் தமிழ்பேசும் மக்களையடக்கி-ஒடுக்கும்போது இதை புரட்சிகர முன்னெடுப்பால் மட்டுமே ஒழிக்கமுடியும்.பொதுவான இனவொடுக்குமுறையானது எங்ஙனம் சிறுபான்மைத் தரகு முதலாளியத்துக்கு மட்டுமான முரண்பாடாகிறது?இது மொத்தச் சிறுபான்மை மக்களுக்குமான ஒடுக்குமுறையாக விருத்தியுறும்போது மார்க்சியவாதிகள் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.அவர்கள் மக்களின் இன்னல்களில் பங்கெடுத்து இனவொடுக்குமுறைக்கெதிரான போரை புரட்சிகர கட்சியினூடாய் முன்னெடுத்தே தீரவேண்டும்!

இதுதாம் மூன்றாமுலகினது இன்றைய நிலை.ஏகாதிபத்திய தேசங்கடந்த கம்பனிகளுக்கெதிராக-தரகு முதலாளிகளுக்கெதிராக ,இந்தியாவில்-குறிப்பாகத் தமிழ் நாட்டில் புதியஜனநாயக|புதியகலாச்சார அமைப்புகள் 'தேசிய முதலாளிகளை அறைகூவி-ஏகாதிபத்திய எதிர்ப்புப்போரில் இணையும்படி கோரினார்களே-இந்தப் போராட்டத் தந்திரம் எதை முன் வைக்கிறது?

Anonymous said...

Nghuhl;lj;jpd; jiyikg; ghj;jpuk; Jjyhspfspd; iffspy; ,Uf;fpd;wpd;J ,tHfs; ghrPrkh cUthfp midj;J gpupdiuAk; xLf;FK; epiyjhd; ,Uef;dpw;dJ. tpRthde;j NttH> n[ahde;jd;> kzpaz;zd;> Nghd;wtHfis Vd; jw;nghOJ Gjpa [dehafff; fl;rpapd; Nk jpd CHty epfo;r;rpia jilnra;jhhf; nra;jpfs; te;jpUF;fpd;wd> VD. NjHjypy; Cl Nghl;b Nghl KbahJ gdp;thq;f Ntz;ba epiyf;y j hd; ,Uf;fpd;wHJ. ePq;fs; $WtJ cz;ikNa ciof;Fk; kf;fspd; thupRfs; jhd; nfhy;yg;gLtJJk; > tijgLtJk; %d;whtJ rf;jp xd;W tsuhJ fLg;gjpnyNA Gypfs; ftdkhf ,Uf;fpd;whHfs;> %d;whtyJ rf;jp jdJ jdpj;Jtkhd Gul;rpfu khd nraw;ghLfis nra;tjd; Clhf jd;id milahsg;gLj;Jk; NghNj. ciof;Fk; kf;fspd; cl;gpTFsis cs;thq;f KbAk;k; mjid tpLj;J cs;spUe;J jd;dpay;ghf rf;jp cUbnLFf;FK; vd;dJ ghrPr f; fl;likg;G my;tsT ,yFthf tpl;LtLkh????????

Anonymous said...

போராட்டத்தின் தலைமைப் பாத்திரம் முதலாளிகளின் கைகளில் இருக்கின்றது, இவர்கள் பாசிசமாக உருவாகி அனைத்து பிரிவினரையும் ஒடுக்கும் நிலைதான் இருககி;ன்றது. விசுவானந்த தேவன், ஜெயானந்தன், மணியண்ணன், போன்றவர்களை ஏன் தற்பொழுது புதிய ஜனநாயககக் கட்சியின் மே தின ஊர்வல நிகழ்ச்சியை தடைசெய்ததாகக் செய்திகள் வந்திருக்கின்றன, ஏன் தேர்தலில் ஊடே போட்டி போட முடியாது பின்வாங்க வேண்டிய நிலைகளாதான் இருக்கின்றது. நீங்கள் கூறுவது உண்மையே உழைக்கும் மக்களின் வாரிசுகள் தான் கொல்லப்படுவதுதும் , வதைபடுவதும் மூன்றாவது சக்தி ஒன்று வளராது தடுப்பதிலெயே புலிகள் கவனமாக இருக்கின்றார்கள், மூன்றாவலது சக்தி தனது தனித்துவமான புரட்சிகர மான செயற்பாடுகளை செய்வதன் ஊடாக தன்னை அடையாளப்படுத்தும் போதே, உழைக்கும் மக்களின் உட்பிளவுகளை உள்வாங்க முடியும். அதனை விடுத்து உள்ளிருந்து தன்னியல்பாக சக்தி உருடிவெடுககும்; என்னது பாசிசக் கட்டமைப்பு அவ்வளவு இலகுவாக விட்டுவிடுமா????????

Sri Rangan said...

இல்லை.ஆனால் நமது பாலகர்கள முற்றுமுளுதான பாசிச்சக்திகளின் அடியாட்களாக இன்னும் மாறிவிடவில்லை.அவர்கள் தேசமொன்றுக்கான தியாகவேள்வியில் தம்மை இணைத்துள்ளார்கள்.நாம் அவர்களை மிக இலகுவாகப் பாசிசப் பட்டங்கொடுத்து அன்னியப்படுத்திவிடமுடியாது.எனது அக்காளின் பிள்ளையையும்,தம்பியையும் இப்படிப் பாசிஷ்டுக்களென என்னால் வரையறுத்துக் கொள்ளமுடியாது.அதாவது நமது உறவுகள்தாம் தரகு முதலாளிகளின் நலனுக்காகவும்-இனவொடுக்குமுறைக்கெதிராகவும் ஆயுதமேந்தியுள்ளனர்.இவர்களை எப்படிப் புரட்சிகரமாக்குவது?நீங்கள் காட்டிய தோழர்களெல்லாம் தரகு முதலாளியவர்க்கத்தின் இருப்பையே அசைத்வர்கள்,எனவே கொல்வதும்-தடைசெய்வதும் பன்நெடுங்காலமாக முதலாளியத்தின் செயல்தாம்.நாம்தாம் புரட்சிகரப் பணியில் கவனமாகக் காரியஞ்செய்யணும். இதில் பாசிசமென்பது உச்சக்கட்டம்தானே? பின்பு இதுவெல்லாம்தாம் அதன் குணயியல்பு.

Sri Rangan said...

பிழை திருத்தம்:
பாலகர்கள்,
முற்றுமுழுதான,
பாசிசச் சக்திகள்,
அசைத்தவர்கள்... என்பதே சரியானது.
ஒரு சிறு பந்தியில் இவ்வளவு எழுத்துப் பிழைகள்!வெட்கப்படுகிறேன்,என்னையெண்ணி.

Anonymous said...

ve;j tHf;fk; jiyik jhq;f Ntz;Lk; ? gd;Kf jiyikfs; ,Uf;fpd;w epiyapy; ghl;lhspfs; jkpofj;jpy; jiyikg; ghj;jpuj;ij Nehf;fpa miw$ty;.

Anonymous said...

jop; rpwhHfis nfhy;y Ntz;Lk; vdf; fUjtpy;iy. Mdhy; mtHfs; $ypg;gilahjhfNt ,Uf;pd;whHfs; ghrPRk; mtHfspd; Rarpe;ejidia tsu tplhJ jLfpf;dwJ. ,t;whdhy; epiyapyp; vjpupAld: NruhkYk;> GypfSf;Fk; ,izahkhYk; ,Ue;J nfhz;L jdpj;Jtkhd jiyikia cUThf;Ftjd; %yk; jdpj;Jtkjhd %d;whT J rff;jp vd;gJ jpd; cUthf;fNt xU Gjpa eppiyf;F nfhhz;L nry;Yk;

Anonymous said...

ghl;lhsp tHf;fj;jpd; Kd;dzpg;giln vd;gJ Kjyhspfspd; fPo; ,Uf;FK; tiu mtHfspd; NrtHfshf ,Ufe;J tpl Ntz;baJjhd; ehd; ajHj;j epiygw;wp fUj;Jf; $Wfpd;w NghJ ePqw;fs; rptHfis mopg;gjpjpy; JizNghtjhf fUj;ij rUf;fp tpLfpd;wPHFs;.

Anonymous said...

,d;W ghtPrk; vd;gJ ,dj;jpd; gw;iwf; fhhl;bNa jd;id capHtho itj;Jf; nfhz;L ,Uf;fpd;wJ. mj;Jdl; K];yPk; ,dj;jpd; RAepHzj;ij mq;fPfupf;f; kWf;fpd;wJ. ,J gpw;NGhf;Fj; Njrpak; ,y;iyah?

Anonymous said...

இது மொத்தச் சிறுபான்மை மக்களுக்குமான ஒடுக்குமுறையாக விருத்தியுறும்போது மார்க்சியவாதிகள் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது
,tw;wpw;fhd gpur;riday;y ,d;iwa gpur;rid Gjpa [dehafg; Gul;rp vd;why; cs;thq;fg;gl Ntz;b el;G rf;jpfs; vit? GypnajpHg;G> Gypfs; ,itfs; ,uz;Lk; mw;w epiyapyNyNA jhd; xU epiy vLf;f NTz;Lkj;.

Anonymous said...

எந்த வர்க்கம் தலைமை தாங்க வேண்டும் ? பன்முக தலைமைகள் இருக்கின்ற நிலையில் பாட்டாளிகள் தமிழகத்தில் தலைமைப் பாத்திரத்தை நோக்கிய அறைகூவல்.

--

தழி; சிறார்களை கொல்ல வேண்டும் எனக் கருதவில்லை. ஆனால் அவர்கள் கூலிப்படையாதாகவே இருக்pன்றார்கள் பாசீசும் அவர்களின் சுயசிந்நதனையை வளர விடாது தடுகிக்னறது. இவ்றானால் நிலையிலி; எதிரியுடன: சேராமலும், புலிகளுக்கும் இணையாமாலும் இருந்து கொண்டு தனித்துவமான தலைமையை உருவுhக்குவதன் மூலம் தனித்துவமதான மூன்றாவு து சகக்தி என்பது தின் உருவாக்கவே ஒரு புதிய நிpலைக்கு கொhண்டு செல்லும்


பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படைn என்பது முதலாளிகளின் கீழ் இருக்குமு; வரை அவர்களின் சேவர்களாக இருகந்து விட வேண்டியதுதான் நான் யதர்த்த நிலைபற்றி கருத்துக் கூறுகின்ற போது நீஙற்கள் சிவர்களை அழிப்பதிதில் துணைபோவதாக கருத்தை சருக்கி விடுகின்றீர்குள்.

--

ன்று பாவீசம் என்பது இனத்தின் பற்றைக் காhட்டியே தன்னை உயிர்வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றது. அத்துனட் முஸ்லீம் இனத்தின் சுயுநிர்ணத்தை அங்கீகரிக்க் மறுக்கின்றது. இது பிற்Nபுhக்குத் தேசியம் இல்லையா?

--


வற்றிற்கான பிரச்சனையல்ல இன்றைய பிரச்சனை புதிய ஜனநாயகப் புரட்சி என்றால் உள்வாங்கப்பட வேண்டி நட்பு சக்திகள் எவை? புலியெதிர்ப்பு, புலிகள் இவைகள் இரண்டும் அற்ற நிலையிலலேNயு தான் ஒரு நிலை எடுக்க Nவுண்டுமத்.



jpy; vd;d GJikk ,Uf;fpd;wJ kuzj;ijf; fhl;bNa murpay; elj;j Ntzlba murpay; ntWikf;Fs; mfg;ggl;bUf;Fk; NghJ SR kuzk; xU ey;y re;jHg;gk; Rdhkp epjpf;F SR CHtyq;fSf;F. ,jpy vd;d ngupa tpj;jpahr;rj;ijf; fz;BH ?


தில் என்ன புதுமைம இருக்கின்றது மரணத்தைக் காட்டியே அரசியல் நடத்த வேணடடிய அரசியல் வெறுமைக்குள் அகப்பபட்டிருக்கும் போது ளுசு மரணம் ஒரு நல்ல சந்தர்ப்பம் சுனாமி நிதிக்கு ளுசு ஊர்வலங்களுக்கு. இதில என்ன பெரிய வித்தியாச்சத்தைக் கண்டீர் ?

Sri Rangan said...

நண்பரே ஒவ்வொரு கேள்வியாகப் பற்பல பின்னூட்டமிடாது ஒரே பின்னூட்டத்தில் கருத்துக்களை வையுங்கள்!

நீங்கள் முன்வைக்கும் கேள்விகளைப் பார்க்குமிடத்து நான் எழுதியவற்றுக்கான விமர்சனமாகவன்றி நான் உணர்பவற்றை நீங்களும்தாம் உங்கள் புரிதலின்படி கேட்கிறீர்கள்.இஸ்லாமிய மக்கள்,அந்தச்சக்த்தி... இந்தச் சக்தியெல்லாவற்றையும் கடந்த கால் நூற்றாண்டாய்க் கதைத்துக் களைத்துப்போனேன் தோழா! உன்னைப்போலவே 25 ஆண்டுகளாக மார்க்சிசத்தோடு என்க்கும் பரிச்சியமுண்டு.எனவே இப்போது இவற்றையெல்லாம் கடந்து இனிச் செய்வது பற்றிக்கூறுவாய்!அதுபற்றிப் பரிசீலிப்போம்.புலிகளின் வர்க்கநலன் அவர்தம் செயற்பாட்டிலும்-போராட்டச்செல்நெறியிலும்-பொருளாதாரக் கொள்கையிலும் புரிந்து கொண்டோம்.இனி இந்த விடயம் தாண்டிப் போவோம் வாருங்கள்.

Anonymous said...

ePq;fs; fUJtJ cz;ikahf ,Ug;gpDk; ngUk;ghd;ikr; rf;jpfs; ,t;thW cUthf;fg;gltpy;iy. ,Jgw;wpa epiyapy; ,Ue;Jjhd; nra;wghLfs; njhlu Ntz;Lk;. NkYk; ,tHfshtJ NGhuhLfpd;whHs;> vjpupAld; JizNghFk; epiyia jtpHj;J ,d;DnkhU ghij ,Uf;l;fpd;wJ vd;w nrw;ghL upjpahd eltbf;ifs; mMa;Tfs; Njtit.
edpw

Anonymous said...

நீங்கள் கருதுவது உண்மையாக இருப்பினும் பெரும்பான்மைச் சக்திகள் இவ்வாறு உருவாக்கப்படவில்லை. இதுபற்றிய நிலையில் இருந்துதான் செய்றபாடுகள் தொடர வேண்டும். மேலும் இவர்களாவது போராடுகின்றார்கள், எதிரியுடன் துணைபோகும் நிலையை தவிர்த்து இன்னுமொரு பாதை இருக்கின்றது என்ற செற்பாட்டு ரிதியான நடவடிக்கைள் ஆய்வுகள் தேவவை.

நன்றி

Sri Rangan said...

தங்கள் கருத்து மிகவும் சரியானது, ஏற்றுக்கொள்கிறேன் தோழரே!

Anonymous said...

http://www.athirady.com/Katturaikal/Katturaikal.htm

,jpy; fs;stw;iw cq;fSf;F mjwpaj;jUfpd;wd;
ed;wp

Anonymous said...

http://www.athirady.com/Athiradyinkural/Athiradyinkural%

Anonymous said...

http://www.athirady.com/Katturaikal/Katturaikal.htm
இதில் உள்ளவற்றை உங்களுக்கு அதறியத்தருகின்றன்
நன்றி

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...