Sunday, July 09, 2006

தமிழ்வழி வாழ்வு...

தமிழ்வழி வாழ்வு
மெல்லப் போகும்
பொருட்காட்சியகத்துக்கு!

"தேசியம்,தேச இறைமையோடு தொடர்புடையது.இது திடமான முடிந்த முடிவுகளோடு
இயங்காது காலவர்தமானத்திற்கேற்றவாறு மாறுபடும்.இத்தகைய நிலைமைகளில் அதன் பாத்திரம்
முற்போக்காகவும்,பிற்போக்காகவும் இருக்கிறது.தேசிய இறைமையின்றிப் பரந்துபட்ட மக்கள்
வாழ்வையும்,அவர்களது பண்பாட்டுக் கருவ+லங்களையும் காப்பாற்ற முடியாது.இது ஒவ்வொரு
தேசிய இனத்துக்கும் அதன் பொருண்மிய வாழ்வுக்கும் ஒரு சவாலாகும்.இதைப் புரட்சிகர
அரசியலால் மட்டுமே எட்ட முடியும்.இது மட்டுமே தேசியத்தை முற்போக்காகக்
கட்டமைக்கும்.மற்றெல்லாச் சூத்திரங்களும் மக்களைக் காவு கொள்ளும் குறுந் தேசிய
வெறியாக மாறியே தீரும்!"

திரு.இராம.கி அவர்கள்தம் கட்டுரை ஒருபக்க உண்மையைப் பேசுகிறது.தாய் மொழிக் கல்வியின் அவசியமும்.அதுசார்ந்து கற்றலும் மிக மிக அவசியமானதுதாம்.ஒரு குழந்தையின் நினைவிலி மனதானது தாய்மொழியின் கற்கை நெறிகளுக்கமைய தீரத்துடன் கிரகிக்கும் ஆற்றலைப் பெறுவதை நாம் அறிவதற்கு எந்த வெளியுலகப் பண்டிதர்களையும் தேடி அலையத் தேவையில்லை.இதையறிவதற்கு நமது முன்னோர்களின் செழுமைமிக்கப் படைப்புகளையும்,இன்றைய நமது படைப்புகளையும் சீர்தூக்கி அணுகும்போதே இன்றெமது ஆற்றல்களை நாம் எங்ஙனம் இழந்துள்ளோமெனப் பார்க்க முடியும்.

கல்வி என்றைக்கும் அதிகாரத்தின் பாதுகாப்பு அங்கமாக இருந்து வருகிறது.அது இந்தப் புவிப்பரப்பின் எந்தப் பகுதியிலும் இதே நோக்கோடுதாம் இயங்கி வருகிறது.பண்டையக் காலமானாலுஞ் சரி அல்லது இன்றைய நவீனக் காலமானாலுஞ் சரி அதன் உள்ளடக்க நோக்கத்தில் எந்த மாற்றமும் கிடையாது.

இன்றையக் கல்வியானது சமூகத்தில் மனிதர்களின் நோக்கு நிலையிலிருந்து தீர்மானிப்பதாக எவரும் கற்பனையே செய்ய முடியாது.கல்வியென்பது இந்தவுலகத்தின் பொருளாதாரத்தின் தேவைகளுக்கேற்ப தகவமைத்து வழங்கப்படுகிற அன்றைய- இன்றைய நிலையானது மிகவும் கயமைத்தனமானது.இது மானுட வளர்ச்சிப் போக்குக்கமையத் தீர்மனிப்பதற்கேற்றவாறு தீர்மானிக்காது பொருளாதார உறவுகளுக்கேற்றபடி தீர்மானிக்கப்பட்டு,அதன் இருப்புக்கேற்ற கல்வியாகப் பரிமாறப்படுகிறது.இது மனித சமுதாயத்தின் அனைத்துப் பரப்புக்கும் வழங்கப்பட்டு மக்கள் சமுதாயத்தை அறிவுடைய நிலைக்கு உயர்த்துவதில்லை.இந்தக் கல்வியைத் தகவமைத்துக் கட்டிக்காப்பது எந்த நலன் என்பதைப் பார்க்காது நாம் அதன் சமூகவிரோதப் பரப்பை அறியமுடியாது.இன்றைய இந்த வர்த்தகச் சமுதாயமானது மிகவும் பின்தங்கிய சமூகப் பாத்திரத்தை வகிக்கிறது.இது இயற்கை விஞ்ஞானத்துக்குக் கொடுக்கும் பாரிய முன்னுரிமையைச் சமூகஞ் சார்ந்த-மக்கள் நலன் சார்ந்த சமூக விஞ்ஞானத்துக்கு வழங்குவதில்லை.மாறாக மன்னர்களின்,போர் குற்றவாளிகளின் வீர தீரக் கடந்தகாலக் கண்றாவிகளைச் சமூக விஞ்ஞானமாகக் காட்டிக் கதைவிடும் தரணத்தில் மக்கள் நலன் சார்ந்து புகட்டும் கல்வி இல்லாது போகிறது.

இந்தச் சந்தர்ப்பமானது மிகவும் திட்டமிட்ட அரசியல் பொருளியல் நலன்களின் தீர்மானகரமான திட்டமிடல்களோடு பின்னிப் பிணைந்து தோற்றுவிக்கப்படுகிறது.இத்தகைய தரணத்தில் நாம் எமது கல்விக் கொள்கை,அதன்மீது ஆதிக்கஞ் செய்யும் நலன்கள் என்பது பற்றிய சரியான மதிப்பீட்டை முன்வைத்தே கல்வி குறித்த மாயைகளை உடைத்தெறிந்து புதியவற்றை மக்கள் சமுதாயத்தின் நலன் நோக்கில் பேச முடியும்.

உலகத்தின் எந்தப் பாகத்திலும் கல்வியானது தனித்துவமான ஒரு செயற்பாடாக எதன்பொருட்டும் கட்டுப்படுத்தப்படாது, முற்றிலும் மக்கள் நலன்சார்ந்து இயங்கவில்லை.வருங்காலத்தில் "தாம் வந்தடையும்" நிலைமைகளைக் குறிவைத்தே கல்வி வழங்கப்படுகிறது.இன்றைய வர்த்தகத்தின் அதீதத் தேவைகளை நிறைவு செய்வதற்கான கல்வியை மட்டும் வழங்க முற்படும் சமூக வளர்ப்பு முறைகள் அந்தச் சமுதாயத்தின் ஆணிவேரான பொருளாதாரத்தின்மீது எந்தப் பங்கமும் வராத திட்டமிடல்களோடு இந்த உலகை எதிர்கொள்ள முனைகிறது.

இது எவரால்-ஏன் ,எதன்பொருட்டு இங்ஙனம் ஊக்குவிக்கப் படுகிறது?

இந்தக் கேள்விக்குச் சுருங்கக் கூறின்:இது முதலாளியக் கல்வி.அந்த வகையில் முதலாளியத்தின் நலன்களைப் பேணும் வர்க்க நலனே அதைத் தீர்மானிக்கிறது,தகவமைக்கிறது,கட்டிக்காக்கிறது.ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான கல்விக் கொள்கைகள் இருப்பினும்,அதன் உள்ளடக்கத்திலும்,எதிர்பார்ப்பிலும் மாற்றமில்லை.எனவே இதைத் தீர்மானிப்பவர்கள் முதலாளிகள்!-ஆளும் வர்க்கம்.

இங்கே ஒழுங்கமைந்தவொரு வர்த்தகம் தேசம் கடந்து நடைபெறுகிறது.அது கடந்த காலத்தைப் போன்று தேசிய எல்லைகளுக்குள் தமது நலன்களை,இலாபங்களைக் கனவு காணுவதில்லை.இன்றைய வர்த்தகத்தில் கல்வியின் பாங்கு மிகவும் முக்கியமானது.இது தேசம் கடந்த வர்த்தகத்தின் மிகையான தேவைகளைப் ப+ர்த்தி செய்வதற்கேற்றவாறு தீர்மானிகப்பட்டு- மக்கள் சமுதாயத்தின் ஒரு பகுதி மக்களுக்காவே திட்டமிடப்பட்டு, அவர்களை முதன்மைப்படுத்தி படைக்கப்படுகிறது.இந்தக் கல்வி எல்லோருக்குமான தனிச் சிறப்பான சட்ட திட்டங்களை வெறும் சட்டவாதத்துக்குள் மட்டுமே நிலைநிறுத்தி வைத்திருக்கிறது.நடைமுறையில் அது மிகவும் ஒடுக்குமுறையானது.அது உழைப்பவர்களுக்கு எட்டாக் கனியாகப்பட்டு மேட்டுக் குடிகளின் தனிச் சொத்துடமையாகக் காப்பாற்றப்படுகிறது.வளர்ச்சியடைந்த மக்கள் சமுதாயத்தின் இன்றைய நவீனத்துக்குப் பின்பான காலக்கட்டமானது புவிப்பரப்பில் பின்தங்கிய மக்கள் சமுதாயத்தை வெறும் பொருள்சார்ந்த உறவுகளோடு மட்டுமே இனம் காணுகிறது.இந்த இனம் காணலில் நம்மை அவர்களது ஜந்திரத்தின் ஒரு உறுப்பாகவும,; எந்த நேரத்திலும் இந்த உறுப்பைக் கழட்டி வீசமுடியுமெனும் மனப் பாங்கோடுதாம் சகல கல்விக் கொள்கைகளும் நமது சமுதாயத்தை வந்தடைகிறது.நமக்காக முன் மொழியப்படும் இன்றைய கல்விக் கற்கை நெறிகளைத் தீர்மானிப்பவர்களே சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும்தாம்.

இவர்களிடமிருந்து உள்வாங்கப்படும் நமது தேசத்தின் கல்விக் கொள்கைகள் மக்கள் சமுதாயத்தின் நலன் நோக்கில் எந்தச் சந்தர்ப்பத்திலும் திட்டமிடப்படமாட்டாது.இது அராஜகமானவொரு சமூக விரோதப் போக்காகும்.இந்தச் சமூக விரோதிகளின் மடியில் கிடந்துகொண்டு அதை(கல்விக் கொள்கை-மக்களுக்கும் கல்விக்குமுள்ள எதிர்பார்ப்பை) மாற்றிவிடத் துடிக்கும் நமது கல்வியாளர்களால் எப்போதும் ஆரோக்கியமான கல்வியை மக்கள் நலனின்பொருட்டுத் திடமாக வலியுறுத்த முடியாது.

பாடசாலைகள்,பேராடும் பல்கலைக்கழகங்கள் யாவும் இந்தவுலகத்தின் அதிகார வர்க்கத்தின்-ஆளும் வர்க்த்தின் கருத்தியல் தளமாகும்.அது தான் சார்ந்து இயங்கும் சமூகப் பாத்திரத்தை முதன்மைப்படுத்தியே அனைத்து வழங்களையும் குவிக்கிறது.இங்கே நடைபெறும் பேரதிர்ச்சியான சமூக அழிப்பு வெறும் போராக நடைபெறுவதில்லை.அது மாறாக மக்கள் மனங்களைக் காயடிப்பதாக வீரியத்தோடு கருத்தியல் யுத்தமாக நடை பெறுகிறது.

உலகத்தின் இன்றைய அதீத வர்த்தகத் தொடர் விருப்புறுதியானது ஒழுங்கமைந்தவொரு கலாச்சாரத் திணிப்பை வற்புறுத்துகிறது.இது நுகர்வுச் சந்தையின் அதீத விருப்புக்கும், வாங்கும் திறனுக்கும் ஏற்றவாறு கல்வியைத் தீர்மானிக்கிறது.இந்த நோக்கோடு மாறிவரும் வர்த்தகச் சூழலானது ஒரு மக்கள் கூட்டத்தை எந்த முரண்பாடுகளுமற்றவொரு பாரிய பண்பாட்டொருமை(நுகர்வுக் கலாச்சாரம்)யோடுகூடிய திசைவழி நோக்கி உந்தித் தள்ளுகிறது.அதற்கேற்றவாறு ஒரு மொழி வழிப்பட்ட கல்வியையும்,அதுசார்ந்த அகப் புறப் பண்பாட்டுருவாக்கத்தையும் குறிப்பட்ட முறைமைகளுக்கமைய உருவாக்கிவிட்டுள்ளது.

எல்லோருக்கும் கல்வியை-வளர்ச்சியை பகிர்ந்துகொள்ள முடியாதவொரு மனித ஆற்றலானது வெறும் பொருள் சார்ந்தவுலகோடு தன்னைக் காட்டிப்போடும் இன்றைய நிலையில், எந்த இனமும் தமது பாரம்பரிய மொழியையோ அல்லது பண்பாட்டு விழுமியங்களையோ அல்லது ஒரு நாடு தனது தேசிய அலகுகளையோ காப்பாற்றிவிட முடியாது, திணறுகிற இன்றைய அவமானமிக்க உலக அரசியலில் நாம் இதை இனம் கண்டு போராடுவதற்கேற்ற மாற்றீடாக எதை முன்னிறுத்துகிறோம்?

வெறும் மேம்போக்கான மனவிருப்பு கல்விக் கொள்கைகளை மாற்றிட முடியாது.இங்கே திடமான தேச,பொருளாதார,மக்கள் நோக்கு நிலைகள் புரட்சிகரமான முறையில் உருவாக வேண்டும்.அது முற்றிலும் மனித சமுதாயத்தின்-குறிப்பிட்ட இனங்களின் பாரம்பரிய மொழி,பண்பாட்டு வாழ்வோடு பின்னிப்பிணைந்ததாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு மக்கள் இனங்களும் தமது நலன்களை வெறும் பொருளாதார நலன்களுக்கமையத் திட்டமிடாது முழுமொத்த மக்களுக்குமான நலன்களைத் திடமாக மதித்துச் செயற்படுவதற்கேற்ற போராட்டமும் அதிகார மாற்றமும் அவசியமானது.அநுகூலமானவொரு சூழல் இல்லாதபோது அதைத்தேடிச் சூழ்நிலைகளை உருவாக்கும் போராட்ட யுத்திகள் இன்றிக் கல்வியையோ அல்லது மற்றெந்த உரிமைகளையோ மக்கள் நலன் சார்ந்த நோக்கில் நம்மால் படைக்க முடியாது.

தாய்மொழிக் கல்வியின் இன்றைய குழப்பகரமான பாத்திரம் தடீரெனத் தோற்றம் பெற்றதில்லை.இது திட்டமிட்ட அரசியலின் விளைவு.இதை நாம் பற்பல சந்தர்பங்களின் இனம்கண்டபோதும் "மேட்டுக்குடி மனதான நமது கல்விப் பெருந்தகைக் காரூண்யம்" இதை எதிர்பதற்கு வக்கற்று,வசதியுள்ளவனுக்குக் கல்வியென வாய் கிழியக் கத்துகிறது.இங்கே எந்தத் தனிநபர் முன்னெடுப்பும் இதைத் தோற்கடிக்க முடியாது.நாம் மக்கள் நலனின் அடிப்படையில் திரட்சியுற்றுத் திடமானவொரு போராட்ட இலக்கை முன்வைத்துப் போராடாமல் வெறும் திராவிடப் பாரம்பரியத்தின் போராட்ட அணுகுமுறையால் தமிழையோ அல்லது அது சார்ந்த வாழ்வையோ காத்துவிட முடியாது.அல்லது "இப்படிப் போய்விட்டார்களே மக்கள்!"என்று ஆதங்கப்பட்டு மக்கள் மீது குறை காண்பதால் ஆவது ஒரு மண்ணுமில்லை.

மக்கள் எப்போதும் தமது வயிற்றுப்பாட்டுக்கே முன்னுரிமை வழங்குவார்கள்.இதை எந்தப் பேய் சாத்தியப்படுத்தினாலும் அந்தப் பக்கம் மக்கள் போவார்கள்.இதை எம்.ஜீ.ஆர். அரசியல் வெற்றியில் நாம் மிகுதியாக இனம் காணலாம்.ஏன் இன்றைய கருணாநிதி அவர்களின் வெற்றியிலும் "அரிசி அரசியலே"வெற்றி பெற்றது என்பதை அவரது பழுத்த சாணக்கியத்திலும்,அவர் ஆற்றும் திடீர்ச் செயற்பாடுகளிலும் நாம் மாசறுவின்றியுணரமுடியும்.

தொடர்ந்து எல்லையில்லாது இயங்கும் நிதி மூலதனத்தில், தேசங்களின் இறைமையே இல்லாது போனபின் அந்தந்தத் தேசங்களின் தேசிய அலகுகள்(தேசயிறமை,பண்பாடு,வாழ்வியல் மதிப்பீடுகள்,மொழி,ஆத்மீகக் கட்டுமானங்கள்,கல்வியெனும் இன்னபிற...) மட்டும் எங்ஙனம் உயிர் வாழ முடியும்?

தமிழ் இனி மெல்லச் சாகும்!-அது சார்ந்த எந்த வாழ்வியல் மதிப்பீடும் நீண்ட ஆயுளோடு நிலைத்திருக்க முடியாது.

"மம்மி,டாடி"க் குஞ்சுகளும்"தாயே-ஐயா"பிச்சைக் குஞ்சுகளும் ஒத்த கயிற்றால் கட்டுண்டு கிடப்பது இந்த சர்வதேசிய வர்த்தக மொழியான ஆங்கிலத்தில்தாம்.இதுதாம் வர்த்தகச் சமுதாயத்தின் இன்றைய விய+கத்துக்குக் கிடைத்த பாரிய வெற்றி.இது திடீர் வெற்றியல்ல.அமெரிக்காவின் திட்டமிட்ட வர்த்தகக் கலாச்சாரப் போராட்டத்தின் நெடுநாளைய முன்னெடுப்பின் வெற்றியாகும்.கொலிவ+ட்டின் திடமான காய் நகர்த்தல் இந்த வெற்றியைக் கனிய வைத்தது,இது முதலாளியத்தில் மிக முன்னேறிய கருத்தியல் தளங்களில் ஒன்றாகும்.

நாம் வாழும் சமுதாய நிலைமைகளை விளங்குவது மட்டுமல்ல அதை மாற்றியமைக்கும் திட்டத்தை வலியுறுத்திக் கொண்டேதாம் இத்தகைய நிலைமைகளை நாம் பேசமுடியும்.எமது எதிர்கால இருப்பே இந்த வகைப் போராட்டவுணர்வோடுதாம் சாத்தியமாகும்.இங்கே மொழியையும் அது சார்ந்த பண்பாட்டையும் புரட்சிகரமான அணுகுமுறைகளோடு பொருத்தும்போது மட்டும்தாம் நாம் காத்துவிட முடியும்.இதற்காக நாம் பற்பல நடைமுறைகளைத் திட்டமிட வேண்டும்.இதை ஈழத்தில் நாம் மெலிதாக இனம் காணமுடியும்(புலிகளின் வரலாற்றுத் திரிப்புகளை நாம் பேசவில்லை).எனினும் அந்த மண்ணில்கூட ஆளும் வர்க்கம் புரட்சிகரத் தன்மையற்று, வர்த்தகச் சமுதாயத்தை முறியடிப்பதில் நோக்கற்று, அதனோடு சமரசஞ் செய்து அதனோடு ஐக்கியமாகும் நிலையில்... இத்தகைய சிறிய முற்போக்கான நடைமுறைகள்கூட இறுதியில் தோல்வியைத் தழுவும்.தமிழ் வழி வாழ்வு மெல்லப் பொருட்காட்சிச் சாலைக்குப் போய்க் கொண்டு இருக்கும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.07.2006

Wednesday, July 05, 2006

இசைக்கும் பகிரதிக்கு...

இசைக்கும்
பகிரதிக்கு
அரங்கேற்றம்!


இசை,
வாழ்வின் அதீத அற்புதத் தாகம்!

உழைத்தோய்ந்த மானுடம் தனது களைப்பைப் போக்குவதற்காகப் பாடிப் பாடித் தன் மனதின் சுமைகளைக் களைந்து, வாழ்வை இரசித்தது-இலயித்தது. பின் ஆன்ம வலுவைத் தக்கவைத்தது.இந்த இலயிப்பின் இயல்பான பரிணாமம் மனித ஆற்றலை மேம்படுத்தும் ஆன்ம வலுவை-மனோ வலுவை மானுட வளர்ச்சிப் போக்கில் தோற்றுவித்தது.இசையும்,கலையும் உழைப்பின் விருத்தியென்பதும்,அது உழைப்பாளர்களின் தேட்டம் என்பதும் வரலாற்றுண்மையாகும்.மானுட வளர்ச்சிப்போக்கில் இசையும,; கலையும் அற்புதமான காரியத்தை மனித அக வளர்ச்சியில்-அறிவு வளர்ச்சியில் ஆற்றியுள்ளது.


"சிறார்களைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு முன்,
இசை படிப்பதற்கு அனுப்பி வையுங்கள்." என்று ஜேர்மானிய இசைப் பேராசான் மொசாட் குறிப்பிட்டான்.


இது முற்றிலும் உண்மையானது!


இசையும் நடனமும் பாரத வழித் தோன்றில்களான நமக்கு "இரண்டு கண்களுக்கும் சமமாகக்" கண்டுணரப்படுகிறது.இசைத்திலின் அதீத இலயிப்பு,அறிவியில் மனதின் எழிச்சியோடு மனித உள வளர்ச்சியைத் தூண்டுவதை அன்றைய நமது ஞானிகள் உய்துணர்ந்தார்கள்.இந்த உணர்தலின் வெளிப்பாடே ஆத்மீக வளர்ச்சிப்பாதையில் அற்புதமான தேவார-திருவாசகப் பாடல்களாக நமது வரலாற்றோடும் வாழ்வோடும் இறை வணக்கமாகத் தொடர்கிறது.இந்த விந்தை மிகு நிகழ்ச்சி தற்செயலானது அல்ல.மக்களின் மனோ வளர்ச்சியின் உச்சபச்ச விருப்புறுதியே இதைத் தீர்மானிக்கிறது.இத்தகையவொரு சூழலில் நாம் கேட்டும்,இலயித்தும்-இரசித்தும் உய்துணரும் இசை நம்மை உருவாக்கி சமூகத்தில் வலுவான மனிதர்களாக்குவதை இன்றைய நவீனக் கணிதத்தின் வாயிலாக நிரூபிக்க முடியும்.


இசையினதும்,நாட்டியத்தினதும் வாழ்வியில் முக்கியத்தை நம் முன்னோர்கள் இறை வழிபாட்டின் அதீத உச்சமாகக் கண்டபோது,தாம் வழிபடும் இறைவனையே இந்தக் கலை வடிவங்களாகக் கண்டார்கள்.நடராஜர் இசையோடு நடனமிடும் அதீத வெளிப்படுத்தல்களாகவும்,சமூகத்தின் உளவியல் குறிப்பானாகவும் இந்தச் சிலைகள் காலவோட்டத்தில் மிக அவசியமானவொரு குறிப்பீடாக விரிகிறது.


எனவோதாம்"இசை கேட்டால் புவி அசைந்தாடும் இறைவன் கொடுத்த வரம்"என்றார்கள் நமது கவிஞர்கள்.


மனித வாழ்வின்-அதுவும் தமிழ் வாழ்வின் பாரிய பகுதி இசையோடேதாம் பின்னிப் பிணைந்துள்ளது.நாம் பிறந்ததிலிருந்து உலகத்தோடு கலப்பது வரை இசையும் தாலாட்டும் தொடர்கதையாகத் தொடர்ந்து, நம்மைத் தாலாட்டுகிறது.இத்தகைய அரிய கலை வடிவைப் பேணிப் பாதுகாத்து, அதன்வாயிலாகத் தானும் மகிழ்ந்து தான் உருவாக்கும் அடுத்த சந்ததியையும் மிக ஆரோக்கியமான மன-அறிவியல் வளர்ச்சியுடைய சமுதாயமாக்கும் பாங்குக்கு இந்த இசையையும்,நாட்டியத்தையும் கற்பதும் ,அதை நடைமுறையில் -வாழ்வுக்குள் இணைத்து ஒருங்கே வாழ்வதும் நமது இளம் தலைமுறைக்கு அவசியமானதுதாம்.


இசையும்,பாடலும் மனித மனத்தின் உச்சமான சிந்தனைக் குவிப்புக்கும்,கவனக் குறைவின்றிக் கற்பதற்கும்கூட மிக அவசியமானது.இசையால் பிணி தீர்க்கமுடியும்,இசையால் உடலுக்குத் தெம்ப+ட்ட முடியும்,அதனால்தாம் இசை இறையாகிறது நமது சமுதாயத்தில்.


இந்த அரும் கலையை,அதுவும் வயிலினைத் தெரிந்தெடுத்துச் செல்வி.பகிரதி செல்வராஜா கற்றுணர்ந்து அதை அரங்கேற்றும் நிகழ்வுப் படிக்கட்டுவரை இழுத்து வந்துள்ளாரெனும்போது மனதுக்கு மகிழ்வுதாம்.


இசைக் கருவிகளுக்குள்ளேயே கற்பதற்கு மிகவும் கடினமான கருவி இந்த வயிலின்.

அதைத் துணிவோடு தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல சிறப்பாகவும் வாசிக்கும் தகுதி, இந்தப் பகிரதியிடம் இருப்பதை நான் எனது வீட்டில் அவர் வாசித்தபோது இலயித்து உணர்ந்தேன்.


இத்தகையவொரு மாணவி,அதுவும் கற்பதில் ஆர்வமுடைய,சதா கல்வியையும்,கலையையும் சிந்தனைக்குள் திணித்து தனது ஆளுமையைத் தொடர்ந்து விருத்திக்கிட்டு வந்துள்ள நல்லதொரு மாணவி இந்தப் பகிரதி.ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது செயற்படும் மனமும் இருந்தாகவேண்டும் கற்பதற்கு.இத்தகைய மனது என்றும் இந்தப் பகிரதிக்கு இருப்பதும் நாம் காணும் ஆச்சரியமான ஒழுக்கம். இந்தச் சந்தர்ப்பத்தில் இவருக்கு மிக நேர்த்தியாக இந்த இசைக் கருவியான வயிலினைக் கற்றுக்கொடுத்த ஆசிரியப் பெருந்தகைக்கும் நாம் நன்றி சொல்லக்கடமைப்பட்டவர்கள்.


ஒரு மாணவரின் வளர்ச்சி,உயர்வு-திறமை அனைத்தும் ஆசிரியர்களின் ஒப்பற்ற உருவாக்கத்தோடு தொடர்புடையது.இந்த நோக்கோடு பார்த்தால் இப்போது அரங்கேற்றும்வரை தனது இசையார்வத்தைச் செயலாக்கும் பகிரதிக்கு இவரது குருவின் மகத்தான உழைப்பு மிகுதியாகவே கிடைத்திருக்கிறது.


இந்தத் தரணத்தில் எல்லோரையும் நினைத்து மனதில் அனைத்தையும் உள்வாங்கி செல்வி.பகிரதி செல்வராஜா மேன் மேலும் கல்வியிலும்,கலையிலும் சிறந்து நமது சமுதாயத்தில் ஆரோக்கியமான சமூகப் பொறுப்புடைய மனித ஆளுமையாகப் பரிணமித்து,வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற்றுச் சிறப்புற வாழ வாழ்த்துகிறேன்.


"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால் ப+ன்றிய தூண்."


எனும் வள்ளுவன் வாக்குக்கு நிகராக தம்மையுருவாக்குவதில் ஒவ்வொரு சிறார்களுக்கும் ஒழுங்கமைந்த கல்வியும்,பெற்றோரின் அன்பும்,அரவணைப்பும் கிட்டவேண்டும்.இது பகிரதிக்கு மிகுதியாகவே வாய்க்கப் பெற்றிருக்கிறது.


என்றும் சிறப்போடு,
"வாழ்க்கைச் செல்வமெல்லாம் வாய்க்கப் பெற்று வாழ்க"- நீ
தமிழாய்,தாயாய் -நல்
தலைவியாய்.


என்றும்
பாசத்தோடு:

ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி.
04.07.2006

Sunday, July 02, 2006

இராஜீவ் கொலை-புலிகள்,தொடரும் கதைகள்...

இராஜீவ் கொலை-புலிகள்,தொடரும் கதைகள்...


கொழுவி,சும்மா"நாங்கதான் செய்தம்"என்று வீம்பு பேசாமல்,இக்கொலையை யாரினது ஒத்துழைப்புடன்-யாருக்கு அவசியமாகச் செய்யப்பட்டதெனப் பார்ப்பதும் அவசியம்.

நாம் புலிகளின் போராட்ட-யுத்த தந்திரோபாயத்தை-பொருளாதாரக் கொள்கைகளை,வர்க்கப் பிரதிநிதித்துவத்தை,பாசிசப்படுகொலைகளைக் எதிர்ப்பதும்,அதற்கெதிராகப் கருத்து வைப்பதும் எல்லோரும் அறிந்தது.எனினும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்தையும்,எமது மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளையும் எதற்காகவும்-எவருக்காகவும் விட்டுக் கொடுப்பதற்குத் தயாரில்லை.ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டியென்பதைக்கூட ஒரு ஷோசலிசச் சமுதாயத்தில்தாம் "எந்த நேரமும் பிரிந்து போகக்கூடிய" சுயநிர்ணயச் சமஷ்ட்டியென்கிறோம்.

இதுதாம் எமது மக்களின் அரசியல் அபிலாசையின் நியாயமான கோரிக்கைக்குத் தீர்வாக இருக்கமுடியும்.

முதலாளிய அரசான இலங்கையில் மற்றெல்லாத் தீர்வுகளும் தமிழர்களுக்கு விலங்கே.
இங்கே புலிகள் அரசியலால் எமது மக்களின் சுயநிர்ணயப் போரை எவரும் கொச்சைத் தனமாக மறுக்கமுடியாது.

அங்ஙனம் மறுப்பவரோடு கருத்தாட எமது இந்தப் பதிவினூடாக தமிழகத்து அன்பர்களை அழைப்பு விடுகிறேன்.

இராஜீவ் கொலையை இந்திய மனதோடு பார்ப்பதைவிட பஞ்சாப் மனதோடு- இந்திரா அம்மையார் படுகொலை செய்யப்பட்ட மனதோடு-சஞ்சீவைக் கொன்ற-காந்தியைக் கொன்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல் விய+கத்தின் மனதோடு ஆழ்ந்து ஆராயவேண்டும். இந்திய ஆளும் வர்க்கப் பிளவுகளும்,அவர்களின் நலன்களுமே இத்தகைய கொலைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

எமது மக்களைக் படுகேவலாமாகக் கொன்ற இந்திய இராணுவத்தின் முதல் பொறுப்பாளர் இராஜீவ்தான்.

எந்தவுலகத்திலும் இராணுவம் அரசியல்-நாட்டின் தலைவரின்,பாதுகாப்பு அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள்ளேதாம் காவடி எடுக்கிறது-கொலை,பாலியல் பயங்கர வதைகளைச் செய்கிறது.எனவே நாட்டின் தலைவன்தாம் முதலில் பொறுப்பாளியாகிறார்.

"அண்ணா,அண்ணா-மகனே என்னைக் காப்பாத்தடா"தம்பி ஓடியா,இவன்களிடமிருந்து என்னைக் காப்பாத்தடா"எண்ட எங்கள் தங்கை,தாய்மார்கள்,அக்காமார்களை காப்பாத்த முடியாது, தவித்த தேச பக்தச் சிறார்கள்-தம்மால் இந்தியப் பாசிச இராணுவத்தை எதிர்கொள்ள முடியாதென்று தெரிந்தும் எதிர்த்துச் செத்தார்கள்.
இது வரலாறு.

இட்லிவடைபோன்ற எருமைகளுக்கு இது ஒருபோதும் உறைக்க முடியாது.

இராஜீவ் கொலைக்கு முதலில் வி.பீ.சிங்கிடம் ஒத்திகையைச் செய்விக்க ராவ் உடந்தையாக இருந்தது.பின்பு இராஜீவைக் கொல்வதற்கு உலகத்துக்கே தண்ணிகாட்டும் இந்திய உளவுப்படை ஒத்தாசை புரிந்தது.

இங்கே தமிழ்நாடே தேர்ந்தெடுக்கப்பட்டது.இதை ஒழுங்காகக் கவனிக்கவும்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் இப்படியொரு சதியை ராவ் உளவுப்படை இங்ஙனம் செய்கிறது.

இந்தியாவின் ஆளும் வர்கத்தின் நலனும்-இந்தி இந்தியாவின் தேசிய ஒருமைப்(!!!???)பாடும் ஈழத்தின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கிறது.எங்கே ஈழம் மலர்ந்தால்,அது தமது அடக்கு முறைத் தேசிய ஒருமைப்பாட்டுக் ஆப்பு வைத்து-இந்தியத் தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் பிரிந்து போய்விடுமென்ற இந்தியத் தரகு முதலாளியம் பெரும் சதியை "பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மனதினூடாகச்" செய்து முடித்தது.

இங்கே புலிகளின் அரசியல் புரட்சிகரமற்றதால் இதற்குச் சோடைபோனது.

ராவ் உளவுப்படையின் திட்டம் இப்படி அமைந்தது:

1:அதாவது தமிழ் நாட்டில் இராஜீவ் கொல்லப்படும் போது தமிழகத்து மக்களின் தொப்புள்கொடி உறவை அறுத்தெறிதல்,எப்போதும் ஒரு வரலாற்று வடுவை-குற்றுவுணர்வைத் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தித் தமிழகத்தை,அதன் விடுதலையைப் பின் தள்ளுவது.திரவிடக் கருத்தியலை வலுவிழக்க வைத்தல்-இந்திய தேசியத்தை மிக வலுவாக்கிக் கொள்ளும் வகையில் கருத்தியல் வலுவைத் தக்கவைத்தல்.

2:இந்திய ஆளும் வர்க்கங்களுக்குள் ஒரு சாரரைக் காக்கும் காந்தி குடும்ப பரம்பரை அரசை உடைக்க முனையும் மற்றப் பிரிவு ஆளும் வர்க்க நலனை முன்னிறுத்துதல்-பி.ஜே.பி.அதிகாரத்துக்குவர வழிகளைத் திறத்தல்

3:ஈழமக்களின் சுய நிர்ணயப்போரை உலகுக்குப் பயங்கர வாதப் போராகக் காட்டல்.

4:தமிழகத்தில் பெருகிவரும் ஈழத் தமிழ் மக்கள் ஆதரவைப் ப+ண்டோடு அழித்தல்.

5:தமிழகத்து அரசியல் கட்சிகளின் ஈழ ஆதரவுத் தீர்மானங்களை-எதிர்ப்புப் போராட்டங்களைச் சட்டப+ர்வமாகத் தடை செய்து பயங்கரவாத முன்னெடுப்பாகக் காட்டுதல்.

6:புலிகளை இந்தியாவால் தடை செய்வதற்கும்,தமிழகத்து மக்களை எதிர்ப்பின்றி கிடப்பதற்கான அரசியில் நெருக்கடிக்குள் தள்ளுவதும் கூடவே மாறிவரும் இந்தியப் பிராந்திய அரசியல் விய+கத்தில் இலங்கையின் பிளவில் ஈழத்து அரசு இந்தியாவைச் சாரும்போது இலங்கை எதிர் நிலைக்குப் போகும்.அங்ஙனம் போவதும் ஒரு கோடி சிங்களச் சனங்களின் சந்தை இழப்பதும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரானது-அதைத் தடுப்பதற்கும்.

இப்படிப்பல நலன்கள் இருக்கிறது.இராஜீவ் கொலையின் அவசியமென்பது இந்திய உளவுப்படையின்-ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்கு அவசியமாக இருந்தது.இதை கோட்சேயின் மொழியில் சொன்னால்:


" இராஜீவ் காந்தி இல்லாத அரசியல் ஆர் .எஸ்.எஸ்-பாரதிய ஜனதாவுக்கும் அவர்கள் பிரிநிதப்படுத்தும் ஆளும் வர்க்கத்துக்கும் நிச்சியமாகக் காரிய சித்தியுடையதாகவும்,எதிரடி கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்,பிரியப் போகும் இந்தியத் தேசிய இனங்களை மீளவும் கட்டிப்போட்டுப் புதிய தலைமையின் கீழ் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சிறைக் கூடமாக்க முடியும்."

இது கோதாரி புடிச்சது நீண்டுபோகிறது.

இத்துடன் முடித்து விவாதம் தொடரும்போது தொடர்வோம்.
இராஜீவ் கொலையைச் செய்வித்தது இந்திய ஆளும் வர்க்க ஒரு பிரிவே!இதற்குப் பலியானது இராஜீவ் மட்டுமல்ல புலிகளும்தாம்-ஈழத்தமிழ் மக்களும்தாம்.

இங்கே இட்லி வடை எழுதுவது சூழ்ச்சி மிக்கது.

இவரினது அரசியல் காலா காலமாகத் தொடரும் "இந்து-இந்தி.இந்தியா"எனும் பார்ப்பனியக் கருத்தியல் மற்றும் இராணுவ மேலாண்மையின் வெளிப்பாடே.
இங்கே பார்ப்பனியமென்பது இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் மேல்மட்டக் கருத்தியல் பண்பாட்டு மேலாண்மையாகும்.இது சாதியை இழுப்பதல்ல.இந்தப் பார்ப்பனிய மேலாண்மை இந்தியத் தொங்கு சதை நாடுகளான இலங்கை,நேபாளம் முதல் தொடர்கதையே.

மீளவும் சொல்வோம்:இராஜீவைக் கொன்றது இந்திய ஆளும் வர்கத்தின் ஒரு பிரிவின் செல்வாக்குக்குட்பட்ட ராவ் உளவுப் படையே.இதற்கு அடியாளான நிலையே புலிகள்.

பாலசிங்கம் பகிரங்கமாக ஒத்துக்கொள்வது காரணத்தோடுதாம்.இதைப் புரிந்துகொண்ட இந்திய ஆளும் வர்க்கம்,உளவுப்படை தம்மைப் புலிகள் அம்பலப்படுத்தி விடுவார்களோவென அஞ்சுகிறார்கள்.

இங்கே புலிகளை இந்தியா அணைத்துக்கொள்வது காலப் போக்கில் நிகழ்வதற்குப் பாலசிங்கம் விளையாடும் அரசியல் சதுரங்கம் இது.

இதுதாம் புலிகளின் இறுதி ஆஸ்த்திரம்.நாகாஸ்திரத்தை ஒரே ஒருமுறைதாம் எய்யும்படி வேண்டுமென தாய்ப்பாசத்தை வைத்துச் சூதாடினான் கண்ணன்.இங்கே இந்திய ஆளும் வர்க்கம் இதையே உதாரணமாகப் பின் பற்றுமா அல்லது தூங்கிற மாதிரி நடிக்குமாவென்பது புலிகளின் கைகளில்தாம் இருக்கிறது.


இட்லி வடை,பேசாமல் இட்லி வடை விற்பது நன்று.

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...