Monday, September 24, 2007

தமிழகத்தில் காவிச் சாயம் காயப்படுமா?

தமிழகத்தில் காவிச் சாயம் காயப்படுமா?,குஜராத்து முஸ்லீமின் கண்ணீரும்,
குருதியும் கண்ட தமிழகத்தில் பார்ப்பனப் பாசிசத்துக்குப் பாடம் புகட்டலாம்.

"தமிழகத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன
இந்துவெறியர்களுக்கெதிரான தாக்குதலானது பார்ப்பனியத்துக்கும்,இந்துமதப்
பாசிசத்துக்கும் எதிரானதாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.அன்றேல்,சமுதாயத்தில்
நிலவுகின்ற பார்ப்பனியப் பண்பாட்டுச் சீரழிவை மாற்றியமைப்பதற்கானதாகவும் அதன்
அனைத்து வகைப்பட்ட நிறுவனங்களையும் தவிடுபொடியாக்கும் போரைச் சிதைப்பதில் இத்தகைய
தாக்குதல்கள் வழிசமைக்கும்."



மு.கருணாநிதி அவர்களின் தலைக்கு விலைபேசும் சனாதனவாதியான இராம்விலாஸ் பாசிஸ்டின் கருத்துக்கு எதிரானதாகத் தமிழகமெங்கும் பரவலாக நடைபெறும் எதிர்ப்புணர்ச்சிச் சம்பவங்கங்கள் யாவும் ஏதோவொரு மனிதரின் தனிப்பட்ட கூற்றுக்காகவும்,அது முழுக்க முழுக்க இன்னொரு தலைவரின்மீதான வன்முறையாகவும் கட்டப்பட்ட கருத்தின் வாயிலாக இடம்பெறுவதாக நிகழும் சம்பவங்கள், ஒருவகையில் அதன் உட்பரிணாமத்தை மறுக்கும் இன்னொரு பக்க விளைவுக்குக் காரணியாக இருக்கலாம்-இருக்கப் போகிறது.

இந்தச் சம்பவத்தை வெறும் தனி நபர்களுக்கிடையிலான பிணக்காக உணரும் நிலையைக் கடந்து,இந்தியாவை மறைத்துவரும் காவிப் புழுதியின் பாசிச அபாயமாக உணர்வது மிக முக்கியமாகும்.வட இந்தியாவில் இரத்த ஆற்றை ஓடவிட்ட பார்ப்பனிய-பனியா சாதிகளின் திமிர்த்தனமானது இங்கே தமிழ்நாட்டைச் சீண்டுவதன் மூலமாக இந்த மண்ணைப் பார்பனியத்துக்கேற்றவாறு பண்படுத்தும் பாரிய சமூக உளவியலை மெல்லவுருவாக்கும் காரியத்தில் ஆர்.எஸ்.எஸ்-பாரதிய ஜனதா மற்றும் இந்துத்துவப் பரிவாரங்களும் அரசியல் ரீதியாக முனைப்படைவதற்கான முன் முயற்சியில் இறங்கியபோது, தமிழ்நாட்டை அவமானப்படுத்துவதற்கான குறியீடாகக் கருணாநிதி அவர்கள்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது.இது, ஒரு வகையில் மாறிவரும் சூழலுக்கேற்றவாறு இந்து-இந்தி-இந்தியத் தயாரிப்புக்காவும் அதனூடாகக் கட்டியெழுப்ப முனையும் அடிமைச் சமுதாயத்துக்கான எல்லையை மேலும் விஸ்தரிப்பதற்காவும்,அந்தத் தரணத்தோடு தரகு முதலாளியத்துக்கு எதிராக வளர்ந்துவரும் கம்ய+னிசத்துக்கெதிராகவும் தம்மை நிலைப்படுத்த அகலக் கால்விரிக்கும் இந்துமதப் பாசிசமானது காலாகாலமாகப் பண்பாட்டுத்தளத்தில் பதியம்போட்ட கருத்தியற்றளத்தோடு தன்னை மீள் உருவாக்கஞ் செய்வதற்கான பரிட்சாத்தத்தைத் தமிழகத்தில் செய்வதின் எதிர்வினை(எதிர் நடவடிக்கை) நம்மிடம்(தமிழகத்தில்) நிகழ்ந்து வருகிறது.

"பண்பாட்டுத்தளத்தில் பதியம்போட்ட பார்ப்பனியம் பாடையிற் போவது புரட்சிக்குள் மட்டுமே நிகழும் தோழர்களே!"


பார்ப்பனியத்தை தமிழர் பண்பாட்டுத்தளத்தில் மெல்லப் பதியம் போட்டது எவர்?,இதுநாள்வரைத் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இதைக் கடைவிரித்து மக்களைப் பார்ப்பனியப் பண்பாட்டிற்கு அடிமையாக்கிய கயவர்கள் தமிழகத்தை ஆளும் கட்சிகளும் அவர்களது வெகுஜனக் கல்வியும் அதன் வழி சமுதாய அரங்குக்குப் படையெடுத்த ஊடகங்களுமே.இத்தகைய ஊடகங்களை வைத்து நாளும் பொழுதும் மக்கள் அரங்கில் காவிப் புழுதி தோய்ந்த கதைகளாலும்-காட்சிகளாலும் பாப்பனிய மயப்படுத்தி உழைப்பவர்களை அடிமைப்படுத்திய ஓட்டுக்கட்சிகள் இந்த இழிசெயலுக்கு வழிவகுத்தவர்களாகிறார்கள்.

இங்கே, கருணாநிதி அவர்களின் குடும்ப ஊடகமான சன் தொ(ல்)லைக் காட்சியினதும் மற்றைய ஊடகங்களினதும் மிகக் கெடுதியான தீங்கின் விளைவாக இன்றைய தமிழகத்துக்குத் தீங்கு காவி நிறத்தில் வருகிறது.பார்ப்பனியத்தை வேரோடு சாய்க்க வேண்டிய தமிழகத்தின் ஆட்சியமைப்புகள் பார்ப்பனியத்துக்குக் கரசேவகர்களாக இருந்த இந்தக் கணம்வரை நாம் இவர்களின்(தி.மு.க-அ.தி.முக. மற்றும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும்,போலிக் கம்யுனிஸ்டுக்கும் )கொடிய இழி செயலை வர்ணிக்க முடியும்.

கருணாநிதி அவர்களின் தலைக்கு உலை வைக்க முனையும் பார்ப்பனப் பாசிசத்தின் அதீத அடிப்படை வாதமானது ஏலவே அப்பாவித் தொழிலாளர்களைச் சாதிரீதியாகப் பிரித்துக் கொடிய வன்முறையை ஏவிக் கொலை செய்தது.இத்தகைய கொடிய பார்ப்பனப் பாசிசத்தைத் தமது ஏவல் நாயான தமிழகத்துப் பொலிசை வைத்துக் காத்து வந்த கருணாநிதி-ஜெயலலிதா கும்பலுக்கு என்ன அருகதையுண்டு இந்தப் பார்ப்பனப் பாசிசத்தைப் பற்றிக் கதையளக்க?

இதன் உண்மையை அறிந்த கருணாநிதியோ மெல்ல அடக்கி வாசிக்கிறார்.

பிழைப்புக்குத் தமிழ்வாதம் புரியும் கூலிக் கவிஞர்கள் வைக்கும் ஓப்பாரியோ மீளவும் இந்தப் பிரச்சனையைத் தனிப்பட்டவொரு இந்துமத வெறியனின் கருத்தாகக் குறுக்கிவிட முனைகிறது.இங்கே, இந்தப் புல்லுருவிகளிடம் மக்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

இன்றைக்கு நிகழும் இந்தப் பார்ப்பனியப் பாசிசத்துக்கெதிரான இந்தவுணர்வைத் தொடர்ந்து சமுதாயமட்டத்தில் ஆவேசமாக விருத்திக்கிட்டுச் சென்று, அந்தப் பார்ப்பனியத்தின் முதுகெலும்பை உடைப்பதற்கான எதிர்த் தாக்குதல்களை நடாத்திப் பார்ப்பனியப் பயங்கரவாதத்தை இந்திய எல்லையைத் தாண்டி அழித்துவிட வேண்டும்.இதற்கான போரைத் தொடர்ந்து நடாத்தி வந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தோடு தோள் சேர்ந்தும் தொழிலாள வர்க்கத்தோடு இணைந்தும் இந்தப் பாசிசத்தைத் தொலைத்துவிட முயற்சி எடுத்தாகவேண்டும்.

ஆனால்,உண்மையில் இந்தப் போராட்டம் தமக்கு எதிராக வளரும் என்பதைக் கருணாநிதி அவர்கள் நன்றாக அறிவார்.எனவே, இப்போராட்டம் பிசுபிசித்துப்போவதென்பது உண்மையான யதார்த்தமாக இருக்கிறது.தமிழ்நாட்டை ஒட்டச் சுரண்டும் இந்த ஓட்டுக்கட்சி அரசியலும் அதனால் பாதுகாக்கப்படும் ஆளும் வர்க்கமும் (கருணாநிதிகூட ஆளும் வர்க்கத்துள் ஒரு பிரிவுதாம்.அவரிடம் குவிந்துள்ள தமிழ் நாட்டின் செல்வத்தின் மதிப்பு இலட்சம் கோடியைத் தாண்டும்.)பார்ப்பனியப் பாசிசத்தால் தன்னைக் காத்து வருகிறது.இந்தப் பார்ப்பனியத்தின் இருப்புக்கு மிக அவசியமான அரசியல் பொருள்ளியல் அடித்தளமானது இதை ஒருகட்டத்துக்குமேல் நகர்த்தாது.இதை மிக ஒழுங்காகப் புரிந்துகொண்ட பார்ப்பனர்கள் கொடுப்புக்குள் சிரித்தபடி கமுக்கமாக இருக்கிறார்கள்.ஆனால், நமது தோழர்களோ அந்தா இந்தா"ராவண லீலை"என்றெல்லாம் குதிப்பது சிறுபிள்ளைத் தனமானது.


போராட்டமென்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல.


அது, தொடர்ந்து பல்முனைத் தளங்களில் நடப்பது.அங்கே, ஒழுங்கமைந்த புரட்சிகரக்கட்சியின் பின்னே அணிதிரளாத தன்முனைப்புப் போராட்டம் ஒரு சில நொடிப்பொழுதில் காணாது போய்விடும்.இன்றைய தமிழகத்தின் இந்த உந்துதலுக்குப் பின்னாலுள்ள சக்திகள் இந்தப் போராட்டவுணர்வைத் தமது எல்லைக்குட்பட்டவரை அநுமதித்துவிட்டு அடக்கிவிடும்.

இதை அறியாதவர்கள் அவதிப்பட்டு,அந்தா-இந்தாவென்பது ஆரியக் கூத்தின் அடுத்த கட்டமாகப் போகிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
24.09.2007

Friday, September 21, 2007

மாலன்களும்,ஊடகச் சுதந்திரமும் சுண்ணாம்புத் தடவல்களும்!

மந்தை இராமின் நிந்தை மாலன்களும்,ஊடகச் சுதந்திரமும் சுண்ணாம்புத் தடவல்களும்!


எந்தவொரு தனிமனிதராலும் சமூகச் சீர்கேடுகளைத் துடைத்தெறிய முடியாது.சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய தேவையானது வர்க்க விழிப்புணர்வைத் தூண்டுதலும் அதன் தேவையை வலியுறுத்துவதுமே. இங்கே, மல்லுக்கட்ட வருபவர்கள் தாம் சார்ந்திருக்கும் வர்க்கஞ்சார்ந்த எண்ணங்களுக்கப்பால் சிந்தனையில்லை என்ற மனோபாவத்தோடு,மற்றவர்களுக்கு முத்திரை குத்தும் சூரத்தனத்தை நல்லது-கெட்டதென்ற கற்பிதங்களால் நெம்பி அளந்து தீர்ப்பிடுதல் மிகத் தீங்கென்றால் மறுத்திட முடியுமோ?

தேசங்கள்-இனங்களுக்கிடையிலான போராட்டங்கள்,விடுதலைகள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்குள்ளே மறைந்திருக்கும் வர்க்க நலன்களின் மோதலே இன்றைய மாலன்கள்-பார்பனர்களின் கூட்டோடு,ஈழ ஆதரவு-எதிர்ப்புக் கருத்தாடல்கள் பரப்புரையாக நம்மை நோக்கித் தள்ளப்படுகிறது.இது, வர்க்க அரசியல்.இங்கே, மனிதர்கள் வர்க்கவுணர்வைக்கடந்து சிந்திப்பது கிடையாது.


ஆனால்,அதைக் குறுக்கித் தனிநபர் விருப்பாகக் காட்டுவதற்கு இந்திய ஆளும் வர்க்கம் முயற்சிக்கிறது.உடனே:"நீ பெரிதா,நான் பெரிதா?"என்ற தாள இலயம் வலைப் பதிவுகளினூடே..."வசவு,வம்பு,தும்பு" என்பதற்கு அப்பால் வரலாறு தொட்டு ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் மீதான அரசியற்பார்வை என்னவென்பதும்,அந்த மனிதர்களின் அழிவுக்குக் காரணிகளான கண்ணிகள் என்னவென்பதும் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது முக்கியமாகும்.இத்தகைய பார்வையை இந்திய நலனுக்குட்பட்டோ அன்றி உலக நலன்களுக்கிசைவாகவோ-இயக்க,கட்சி நலன்களுக்கிசைவாகவோ எவரும் பார்க்க முடியாது.முற்றுமுழுதும் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கான உந்துதலோடு, அவர்களின் நோக்கு நிலையிலிருந்தே இத்தகைய விமர்சனங்கள் எழுந்தாகவேண்டும்.ஆனால்,இங்கு கருத்தாடும்-கருத்துக்கட்டும் பத்திரிகையாளர்கள் தத்தமது எஜமான விசுவாசத்திற்கான பங்களிப்புக்காக எடுத்தாளப்படும் கருத்துக்கள்,அவை கொண்டிருக்கும் அரசியல் சார்பு நிலை மற்றும் பொருளியல் நலன்களுக்கான காரணிகளைப் பின் தள்ளிவிட்டு,"ஐயோ இவர் வாயிலிருந்து இப்படி வரலாமா?இவர் செய்வது நியாயமா?"என்பதெல்லாம் வெறும் சிறுபிள்ளை விளையாட்டுத்தனமானதாகும்.ஒவ்வொருவருக்கும் மிகத் தெளிவான வர்க்கக் காரணிகள்,உடன்பாடுகள்-உணர்வுகள் உண்டு.இவற்றைக் கடந்து முற்றுமுழுதாக மனிதாபாபிமான வேடம் பூணுவது முடியாத காரியம்.இங்கே, மாலனோ அல்லது புலிகளோ மக்களின் உண்மையான நலன்களோடு உறவுடையவர்கள் அல்ல.புலிகள்மீதான எதிர்ப்புக் கருத்தாடல்கள் எந்தெந்த வர்க்கத்துக்குச் சேவை செய்வதற்கான முன்முயற்சி என்பதைப் பார்த்தோமானால் புலிகள் எவரது நலன்களோடு இதுவரை போராடுகிறார்கள் என்பதை மிக இலகுவாகப் புரிய முடியும்.அங்ஙனம் புரிகிறதரணத்தில் இந்தியப் பார்ப்பனிய-பனியா ஊடகங்கள் எதற்காகப் புலிகளை ஆதரித்தும்-எதிர்த்தும் எழுதுவதென்பதும்,இதுள் மாலன்கள்-சோ இராமசாமிக்கள்,இராம்கள் மற்றும் சுப்பிரமணிய சாமிக்கள் பேசும்,விவாதிக்கும் கருத்துகளின் வேர்கள் எதுவரை ஓடுகின்றதென்பதும் அந்த வேர்கள் எந்த மரத்தைக் காப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் புரிந்து போகும்.

நம்(ஈழத் தமிழர்களின்)பாழாய்ப்போன அரசியலில் புலிகளின் பாத்திரம் மிகச் சிக்கலான இலக்குள் அமைந்ததாகும்.மிகத்திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட இந்த இயக்கம் அதன் உள்ளார்ந்த நலனுக்கும் அப்பால் வெளிப்புறச் சக்திகளின் நலன்களுக்கான தேவைகளோடு இலங்கையில் தோன்றுகிறது.இது, ஒடுக்கப்படும் மக்களின் உரிமையைத் தனது போராட்டத்துக்குள் உள்வாங்குவதற்காகச் செய்த படுகொலைகளும்,செய்யும் கொலைகளும் மிகப்பெரிய பாசிசத் தன்மையிலான ஒடுக்குமுறையோடு சம்பந்தப்பட்டது.எனினும், இந்த இயக்கத்துள் உள்வாங்கப்பட்ட ஒடுக்கப்படும் மக்களின் மிக நேர்த்தியான போராட்டப் பங்களிப்பானது இதுவரை அந்த இயக்கத்தின் தலைமையால் உதாசீனப்படுத்தப்பட்டே வருகிறது.இத்தகைய உதாசீனப்படுத்தல்களைத் தத்தமது வர்க்க நலனுக்காக-சாதியத் தேவைகளுக்காக இந்தியத் துணைக்கண்டத்துள் நிலவும் அரசியல் முன்னெடுப்புகள் பாவித்து வருவதில் பற்பல விமர்சனங்கள்-விவாதங்கள் தொடர்கிறது.இதன் தொடர்ச்சியாகத் தொடரும் இந்து மற்றும் இந்தியா ருடே போன்ற பெரும் பார்ப்பனிய ஊடகங்களும் இராம்,சோ,மாலன் போன்றவர்களின் இந்தியத் தேசத்து எதிர்பார்ப்புகளோடு அந்த அரசியலில் இவர்களுக்கிடப்பட்ட பாத்திரத்தைச் சிரத்தையோடு செய்துவரும் இந்தத் தரத்தில் இவர்களை வெறும் மனிதாபிமானிகளாகவும், இவர்களுக்கும் ஒடுக்குமுறைசார்ந்த அரசியலுக்கும் சம்பந்தமில்லாதமாதிரித் தொடரும் இவர்களுக்கெதிரான விவாதங்கள் தொக்கி வைத்திருக்கும்-நிலைநாட்ட முனையும் கருத்துக்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழமக்களுக்கு எதிரானது.புலிகளின் இயக்க நலனையும் தாண்டித் தமிழ்பேசும் மக்களின் நலனை தூக்கிப்பிடிக்க முனையும் ஒருவருக்கு புலிகள் குறித்தான மாலன்கள் கம்பனியின் பிரச்சாரயுக்தி மிகத் தெளிவாகப் புலப்படும்.இதைவிடுத்து மாலனைத் தனிநபராகவுணர்ந்து அவரைக் கருத்தியல் ரீதியாக வென்றெடுக்க முனையலாமென எவராவது கருதினால் அதைப்போன்ற வேறொரு முட்டாள்த்தனம் உலகில் இருப்பதற்கில்லை.

"ஆண்டைகளின் முற்றத்தில் நின்று எங்களுக்கு உயிர்ப் பிச்சைகொடு" என்று அடிமைகள் மன்றாடுவதுபோன்று நாமும் காரியமாற்றமுனைதல் வெறும் பம்மாத்துத்தனமானது.இந்தப் பம்மாத்து அரசியலுக்குக் குஞ்சம் கட்டுவதுபோன்று "வாரீசு அரசியல்- பிரபாகரன்,மகன் சார்ல்ஸ் பயிற்சி எடுத்துப் போராட்டத்தில் இணைவதென்ற "கருத்துகளுக்கும், மக்களுடைய நிர்க்கதியான சமூகச் சூழலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது!புலிகளின் போராட்டத்தோடு தமிழ்பேசுபவரின் நலன்கள் மிகவும் நரித்தனமாகப் பிணைக்கப்பட்டு பின்பு அதையே புலிகளின் பாசிச நடவடிக்கைகளை முன்தள்ளி இந்த நியாயமான சுயநிர்ணயப் போராட்டத்தை ஒடுக்கும் இந்திய சாணாக்கியத்தின் எடுபிடிகளான மாலன் கம்பனிகளைக் கண்ணை மூடிப் பால் குடிப்பது போன்று விமர்சிப்பது படு கேவலமானது.இவர்கள் குறித்த சரியான மதிப்பீட்டைச் சொல்வதற்குப் புலிகள் குறித்த இவர்களின் மதிப்பீடுகளோ அன்றி எதிர்கருத்துக்களோ அவசியமில்லை.இவர்கள் ஈழமக்களின் உரிமைகள் குறித்து எத்தகைய அரசியலோடு இருக்கிறார்களோ அதையும் தாண்டி இவர்களது வர்க்க நிலையிலிருந்தே இவர்களை அணுகியாக வேண்டும்.இதைத் தவிர்த்தபடி மாலன் பெரும் பத்திரிகையாளர்-புளோரிடாவிலோ எலிபிடித்தவர்,இவருக்குத் தெரியாதாவென்பதெல்லாம் மீளவும் இந்தப் பாத்திரத்தின் வர்க்க நிலையையும் இது இயங்கும் அரசியலையும் ஓரங்கட்டிவிட்டுத் தனிநபர் கருத்தாக்கிவிடும் பாரிய அபாயம் நிலவுகிறது.இதை செய்வதற்கு எந்தப் பெரிய படிப்பும் தேவையாக இருக்காது.இங்கே, நாம் செய்ய முனைவதும் இந்தியாவென்பதன் அரசியல் என்ன தொடர்ச்சியை நமக்குள் வற்புறுத்துகிறது என்பதையும்,இதற்கும் புலிகளுக்குமிடையிலான முரண்பாடுகள் எங்ஙனம் கையாளப்படுகிறது என்பதும், அது இந்தியாவுக்குள்ளேயே மக்களை ஒடுக்கும் நிலையில் இத்தகைய பத்திரிகைகளின் எலும்புத் துண்டு அரசியல் என்னவென்பதும் முக்கியம் பெறுகிறது.இதைவிட்டுப் புலிகளின் வாரீசு அரசியலோ அல்லது தலைவரின் தன்மானமோ முக்கியமல்ல.புலிகள் என்பவர்களின் கைகளில் இருக்கும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான சுயநிர்ணயப் போராட்டத்தைப் புலிக்களால் முன்னெடுக்க வைத்து அதையே புலிகளின் இருப்போடு சம்பந்தப்படுத்தி அந்த இயக்கத்தைப் பாசிச இயக்கமாக வளர்த்துத் தமிழரின் உரிமையைப் பயங்கரவாதமாக்கிய இலங்கை-இந்தியச் சதியின் தொடர்ச்சிகளை நாம் விபராமாகப் புரிவதே மிகச் சரியான அரசியல்.இதைப் புரியும்போது மாலனின்,இந்து இராமின் பாத்திரங்கள் மிக நேர்த்தியாகப் புரியத்தக்கதாக இருக்கும்.


இதற்கான நல்ல உதாரணம்:கடந்த இருபதாண்டாகப் போராடிய கருணாவின் பாத்திரம் பதிலளிக்கும்.இந்த மனிதரின் பாத்திரமானது தேசிய அலையுள் மூடியிருந்தபோது"கருணா அம்மான்"என்ற செல்ல மொழியோடு பெரும் போராட்டத் தளபதியாகவும்,மக்களின் வீரத் தலைவனாகவும் இருந்தது.இதையே புலிகள் பல தடவைகள் புகழ்ந்து எழுதித் தள்ளியவர்கள்.ஆனால்,அவனது பாத்திரம் அந்நிய நலன்களால் உருவாக்கப்பட்டதென்பதை வெளிச்சமிட்டுக்காட்டிய யதார்த்தத்துள் அவன் கொடியவனாகவும்,மக்கள் விரோதியாகவும்,கைக் கூலியாகவும் இன்று நம்மாலேயே ஏசப்படும்போது,இந்த மாற்றம் எங்ஙனம் நிகழ்ந்ததோ அதே மாற்றம் மற்றைய புலித் தலைமைக்குள் உருவாகும்போது இதே வாய்கள் புலம்பும் நாள் வெகு தூரத்திலிருக்க முடியாது!ஏனெனில், புலிகளின் பாத்திரமானது எப்பவுமே மக்களின் நியாயமான கோரிக்கைகளோடு உரித்துடையதல்ல.அது, அந்நியச் சக்திகளின் காலடியில் நமது உரிமைகளைத் தேடுகிற போராட்டத்தைச் செய்தபடி இருப்புக்கான அனைத்து காரியத்திலும(கொலை-அடக்குமுறை,உட்கட்சி ஜனநாயகமின்மை,ஏகத் தலைமை,வாரீசுக்கவலை-தலைமை இத்யாதி) ஈடுபடும்போது கருணா மட்டுமல்ல இன்னும் எத்தனையோ போராளிகள்-தளபதிகள் கழன்று போகும் சந்தர்ப்பம் வரும்-வருகிறது.இதையேதாம் மாலன் வகையாறாக்கள் மலினப்பட்ட வார்த்தைகளால்,பார்வைகளால் சொல்லும்போது நமக்குள் நிகழும் இரசயானமாற்றமோ நம்மைக் குதிக்க வைக்கிறது.ஆனால்,இது புலிகளுக்கு மிக வருத்தத்தையோ அல்லது காழ்ப்புணர்வையோ கொடுப்பதற்கில்லை.ஏனெனில், புலிகளின் உறவுகள் இவற்றைமீறி வேறுவகைப் புரிதலோடு அரசியல் செய்வது.புலிகள் இந்திய அரசியலில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஏலம் விடும் தகுதிக்காகச் செயற்படுபவர்கள்.அவர்களின் போராட்டச் செல் நெறியில் வாரீசு அரசியல் என்பதல்ல நமக்கு முக்கியம்.மாறாக, இவர்கள் நமது மக்களின் அளப்பெரிய உயிர்களை எங்ஙனம் நமது மக்களின் உரிமைக்காகப் பலி கொடுக்கிறர்கள் என்பதே முக்கியமாகும்.இதிலிருந்து மாலனையும்,இந்து இராமையும் விமர்ச்சிக்கும் தகுதியை நாம் பெறுவதற்கேற்ற சமூகப் பார்வையை உருவாக்கிட முடியும்.இந்த இலக்கில் இன்றைய இந்தியாவின் சமீபத்துச் செயற்பாடுகளைப் பார்க்குமிடத்தில் மாலன்கள்-இராம்களின் பாத்திரம் நேரடியாக நமது விழிகளுக்குமுன் விரிந்து பாரிய தெளிவைத் தரும்.அப்போது, மாலனையோ அல்லது எந்த மண்ணாங்கட்டியையோ நாம் பொருட்படுத்தி"ஐயா நீங்கள் இப்படிச் செய்யலாமா?"எனும் சகோதரப் பாசம் சிதறி,வர்க்க அரசியலில் அந்த மனிதரின் வர்க்க நிலையும்,அவரது நலனும்-அரசியலும் புரியும்.


ஈழத்தின் அரசியல் நகர்விலும்,அம் மக்களின் அரசியல் எதிர்காலத்திலும் மிகவும் பிற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருக்கும் தமிழக-இந்தி இந்தியத் தவப் புதல்வர்கள்-புதல்விகள் எடுத்து வைப்பது புலிப்பயங்கரவாதம் என்பதையே!புலிகள் குறித்து நாம் பற்பல பதிவுகளிட்டாலும் இப்போதைய சூழ்நிலையானது புலிகளின் கைகளில் மிக நேர்த்தியாகக் கையளிக்கப்பட்ட தமிழ் மக்களின் சுய நிர்ணயத்துக்கு-விடுதலைக்கான போராட்டத்துள் உள்ள நியாயத்தைப் புலிகளின் மலினப்பட்ட அரசியல் வியூகத்தால்-வர்க்க நலத்தால் எவருஞ் சிதைத்தெறிந்து நம்மை நடாற்றில் தள்ளுவது மிகக் கொடியதாகும்.இத்தகையவொரு போருக்குத் தயாராகும் இந்திய இலக்குக்கு உடந்தையாக தமிழகத்துப் பார்ப்பனர்கள் தம்மைப் பெரும் பான்மையாக்க முனையும் வியூகத்தோடு காய் நகர்த்துவதற்குத் தயாராகிறார்கள்.இங்கே, இந்தியப் பிராந்திய நலனோடு தமிழகத்து"ஆதரவுத் தளம்" உடைபடுவதற்கான நோக்கம் வெகுவாகியிருப்பதையும் நாம் காணலாம்.இந்த வியூகத்துக்குத் தலைமை தாங்கும் இந்து இராம் முதல் சோ இராமசாமி வரை நம்மைக் கருவறுத்த வரலாறைத் தொடர்ந்து நகர்த்தி வரும் செயலில் இப்போது மாலன் தலைமையில் மடக்கப் போடுகிறாகள் பதிவுகள்-மொழி பெயர்ப்புகள்.

தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பெளத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு(மாலன் கம்பனிக்கு) இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கட்சிகளும்,ஊடகங்களும்-மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டுவதற்குப் பெயர் ஊடகச் சுதந்திரமாம்.மாலன் தடுமாறும் பற்பல இடங்களில் புலிகளின் பாசிச அரசியற் கொலைகள் முன் தள்ளப்படுகிறது.இங்கே, புலிகள் என்பதன் அரசியலில் ஈழத் தமிழ் மக்களின் உரிமையும் சேர்ந்து ஒதுக்கப்படுகிறது.இதை விளங்கிக் கொள்வதற்கு இந்திய அரசியலில் பிற தேசிய இனங்கள் எங்ஙனம் ஒடுக்கி ஒதுக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும்போது இவர்களின் குரல்களில் ஒடுக்குமுறைக் காவியங்கள் உலா வருவது கண்டுகொள்ளத் தக்கதாகவிருக்கும்.


1): குஜராத்தில் 3000 இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

2):காஷ்மீரில் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிராக அவர்களைத்தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,


3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்

4):விவசாயிகளின் மீளமுடியாத சமூகப் பிரச்சனைகளுக்காகப் போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகளை சுட்டுத்தள்ளும்போது "நக்லைஸ்ட்டுக்கள்-பயங்கரவாதிகள்"என்றும்,


செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும் ஒருவர்(மாலன் கம்பனி) அதைச் சார்ந்து எது உண்மை எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப்படுதல் அவரது உலகத்தில் மட்டுமே சாத்தியம்! அதை அவர் நம்பும் தளமும் முற்றுமுழுதாக அவரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இங்குதாம் அவரது வர்க்கதளம் மிக இலகுவாக அவரை ஒடுக்குபவர்களின் பக்கம் தள்ளிவிடுகிறது.அப்போ அவரது புலிப் புலம்பல் ஏன் வருகிறதென்றால் அங்கேதாம் தமிழ் மக்களின் உரிமையைப் பூண்டோடு அழிக்கும் பாரததேசத்துச் சாணாக்கியம் தலைகாட்டுகிறது.இதை மேலே பார்த்தோம்.

இத்தகைய பத்திரிகையாளர்களின் படிமத்துள் கூத்தாடும்"உண்மையான தமிழன்"-"உண்மையான இந்தியன்" "இந்தியா எனது தேசம்,அது குறித்தெவர் அவதூறு வைக்கும்போது சும்மா இருக்க முடியுமா?" கருத்தாக்கங்கள்? ஒடுக்குமுறைசார்ந்த இந்தியத் தேசிய வெறியின் குறுகியவடிவிலான ஆதிக்க வெறியே.


"..................." வெட்கித் தலைகுனிவதில் உணர்வு முந்திக்கொண்டாலும் இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப் படத்தாம் முடியுமா அல்லது மாற்றுச் செயற்பாடுகளுண்டா? ஆம,; உண்டு! ஆனால், அது மானுடநேசிப்பால் மட்டுமேதாம் முடியும்.அதன்வழி ஏன்-எதற்கு- எப்படி என்ற கல்வியினாற்றாம் முடியும்.24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக்,த இந்து மற்றும் இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரால் இது சாத்தியப் படாது! ஈழத்தில் இயக்கவாத மாயைக்குள்ளிருக்கும் ஒருவர் தாம் சார்ந்த இயகத்துக்கு வக்காலத்து வேண்டுவதுபோற்றாம் இதுவும் ஒரு உளவியல் மயக்கம்-வெறி.இந்தக் கேடுகெட்ட மயக்கத்தையேற்படுத்தும் பாரிய பரப்புரைக் கட்டுமானமும் அதிகார வர்க்கத்திடம் மட்டுமேயுண்டு. இதிலிருந்து விடுபடுதல் அவ்வளவு இலகுவாக இருக்காது! எனவே, இந்த உண்மையான இந்தியர்களும்,தமிழர்களும் நம் மத்தியில் மலினமாகக் காணப்படுவர்.இவர்கள் எப்போது மானுடராவாரென்றால் தத்தமது வீடுகளில் குண்டுகள் வந்து கொலைகளைச் செயயும்போதா?இல்லை.மாறாக மாற்றுக் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதாலும்,விவாதிப்பதாலும் மட்டுமே முடியும்.எனவே, இன்னும் மேலே செல்வோம்.

இன்றைய சந்தைப் பொருளாதாரம் மக்களை இனங்களுக்கூடாக-மதங்களுக்கூடாக-மொழிக்கூடாகக் கோடு கிழிப்பதைத் திவிர்க்க முனைகிறது,கூடவே ஒரே மொழி,மத,பண்பாட்டை வலியுறுத்தித் தனது இருப்பை உறுதிசெய்யமுனையும் பல் தேசியச் சந்தைப் பொருளாதார மூலதனச் சுற்றோட்டம் பற்பல வர்ணக் கனவுகளை இளைஞ(ஞி)ர்களிடம் கொட்டி வரும் சூழலில இந்தியத் துணைக்கண்டம் போன்ற குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக் கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிகளும்,கிட்லர் பாணியிலான இனவாத அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.இது, மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இங்குதாம் நிலம் சா¡ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது, மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காக்கிறது.இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உளதேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.

எனறுமில்லாதவாறு இனவாதிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டில் ஏறுவது மேற்குலகில்கூட தொடர்கதையாக இருக்கிறுது.இந்தியாவில் ஆர்.ஏஸ்.எஸ்'க்குப் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த கிடைக்கும் வெற்றி தோல்விகள் இத்தகைய ஊசாலாட்ட ஊஞ்சற் உளவியலே தீர்மானிக்கிறது. இதன் அப்பட்டமான நோயே "உண்மையான இந்தியன்", தமிழன் போக்குகள்.என்றபோதும,; பெரந்தேசிய-ஆளுமையுள்ள இனமாகவிருக்கும் மக்களுக்குள் நிலவும் குட்டி-தரகு முதலாளிய முரண்பாடுகள் தத்தம் நாடுகளுக்குள் நிலவுகின்ற பொருளியற்போக்குக்கேற்றவாறு யுத்தங்கள் மூலம் சில தீர்வுகளுக்கு வருவதை தேசத்தின் நலனின் பெயர் மூலம் சிறிதாக்கின்றனர்.

இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிந்துருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.இங்குதாம் தமிழ்நாட்டு மக்களைச் இந்தியத் தேசியத்தால் சிறையிட்டு வைத்திருக்குஞ் சூழல் ஈழத்தையும் அங்ஙனம் ஆக்குவதில் நீட்சியாகிப் பார்பன-பனியா அரசியலாக விரிகிறது.இதற்கு ஒத்தூதும் இராமும்,மாலனும் இன்னும் எத்தனையோ நாய்களும் நடிக்கின்ற மனிநேயம் பொய்யானது-புரட்டானது.இவர்கள் புலிகளிடம் எதிர்பார்ப்பதைக் கறக்கும் அரசியலில் கைதேர்ந்த கபோதிகள்,சாரி பத்திரிகையாளர்கள்-ஊடகவியலாளர்கள்!

இந்த நிலையில் இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" ஆகிறது!இத்தகைய தேசத்தின் மதிப்பீடுகள் அதையண்டிய தேசங்களையும் காவுகொள்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.இதனாற்றான் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளைக் காலில்போட்டு மிதிக்கும் ஒரு கும்பல் அரசியலாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியலில் விரோதத்தை வளர்க்கும் வன் போக்கைப் பார்ப்பனர்களில் பலர்கள் மனமுவந்து செய்கிறார்கள்.இதற்க்கான காரணம்"தமிழ்"எனும் மொழியின் இன்றைய எழிச்சிகளும்-வீழ்சிகளும் காரணமாகிறது. இத்தகைய மொழியின்மீது காலாகாலமாகக் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அதை"உயிரற்ற மொழி"என்றும் கேலியிடத் தயங்குவதில்லை.


தமிழரின் போராட்டமானது அடிப்படையில் இனவொடுக்குமுறைக்கெதிரானது.இது பொருளாதார,சமூகப்பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாகும்.இப்போராட்டமானது பற்பல வழிகளிலும்,தந்திரத்தாலும் ஏற்றங்களையும்,இறக்கங்களையும் சந்தித்துள்ளது.ஒரு ஒழுங்கமைந்த -நேரிய போராட்டச் செல்நெறியை வகுத்துக் கொள்ளமுடியாத நமது பலவீனமானது, திட்டமிட்ட வெளிப்புறச் சக்திகளால் உள்தள்ளப்பட்ட சீரழிவாகும்.நமது அடிப்படை அரசியல் நிபுணத்துவம் இந்திய அறிவார்ந்த வியூகத்துக்கு முன்னால் பலவீனமானது.இது சமூகமட்டத்தின் வளர்ச்சியோடு பாரியவுறவுடையதென்பதால் அதில் எந்த வெட்கமுமில்லை.எனினும், நாம் நமது நண்பர்கள் வெளியுலகக் கனவான்களாக இருப்பதாக நம்புவதுதாம் நமது பின்னடைவாக வரமுடியும்.நமது மக்களைத் தாண்டிய எந்தவொரு உலக நட்பும் நமக்கு உதவாது.நமது மக்களே நமது பலம்.உலக முற்போக்குச் சக்திகளே நமது தோழமை.

கடந்த காலச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்து அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள்,ஈழத்து அரசியலில் பெரும் புயல்களையே ஏற்படுத்தி வருகிறார்கள்.காலாகாலத்தில் தமிழ் இயக்கங்களைப் பிளந்தபடி நம்மைப் பலவீனமாக்கும்போது,நமது அரசியலானது வெறுஞ் சில்லறைக்குச் சோரம்போவதாக இருக்கிறது.வரதாரஜப் பெருமாள் முதல் இன்றைய ஆனந்தசங்கரி-புலிகளின் தளபதி கருணா போன்ற சுயநலப் பெரிச்சாளிகளே இன்றைய நல்ல உதாரணமாகும்.


மக்களைக் கூறுபோட்டுக் கொன்று குவிக்கும் கபடம் நிறைந்த உலக நலன்கள் நம்மையின்னும் பயங்கரவாதிகளாக்கி நமது சுயநிர்ணய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் ஒவ்வொரு நகர்வும் புலிப் பாசிசத்தின் கொடுமையைச் சொல்லி ஒப்பேற்றப்படுகிறது.புலிகளின் நிலையோ அவர்களுக்கே புரியாதவொரு இருண்ட நிலையில் தம்மைச் சொல்லியே எதிரி அரசியலில் வெற்றியடையுந் தரணங்களில் இவ்வளவு மெளனிகளாகக் கிடப்பதற்கிருக்கும் எல்லை-அரசியல் என்ன?அது புரியத் தக்க அரசியலாக இருக்கும்போது இந்த வாரீசு-தலைமைப் போட்டிக் கதைகளும் முற்று முழுதாக முடிந்து போகும்.மாலனின் பத்திரிகாத் தர்மமும் நமக்கு புரிந்துவிடும்.அதுவரையும்... போட்டுத் தாக்குவதும் பிடரியில் தட்டுவதும் சும்மா,சும்மாத்தாம் கண்ணுகளா!சொறியுங்கோ அரித்தால்!!

ப.வி.ஸ்ரீரங்கன்.

21.09.2007

Friday, September 14, 2007

ராஜ்விந்தர் சிங்கை(Rajvinder Singh) முன்வைதுச் சில கருத்துக்கள்.

ராஜ்விந்தர் சிங்கை(Rajvinder Singh) முன்வைதுச் சில கருத்துக்கள்.


என் பையன்கள் கல்வி கற்கும் உயர்பாடசாலைக்கு நூற்றாண்டு விழா.இந்த விழாவுக்காகத் தொடர்ந்து ஒரு கிழமைக்குப் பல்வகை நிகழ்வுகள் நடந்து வருகின்றது.இந்தப் பாடசாலையின் கடந்த 12.09.2007 க்கான நிகழ்வுகளிலொன்றிற்கு பஞ்சாப்காரர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.அவர் தொடர்ந்து பல கல்விக்கூடங்களுக்குச் சென்று இலக்கியப்பட்டறை நடாத்தி வருபவர்.கடந்த கால் நூற்றாண்டாக ஜேர்மனியில் தஞ்சம் கோரி வாழ்ந்துவருகிறார்.இவருடைய நிகழ்வு குறித்த அறிவிப்பில் ஒரு புத்துணர்ச்சியோடு நான் அவ் விழாவுக்குச் சென்றிருந்தேன்.

ஒரு படைப்பாளி.அதுவும் ஜேர்மனிய மொழியில் பெரும் புலமைபெற்று-ஜேர்மனியப் பல்கலைக்கழகத்தில் இலக்கிய விஞ்ஞானம் பயின்றவொரு இந்தியர் என்ன சொல்கிறார் என்பதில் ஆர்வம் அதிகமாகி இருந்தபோது அங்கு செல்வதென்றே முடிவெடுத்திருந்தேன்.இந்த ராஜ்விந்தர் சிங் மிகவும் பிரபல்யமானவர்.ஜேர்மனிய அரசியல் வாதிகள்-அமைச்சர்கள்வரை பிரபலமானவர்.இவர் ஜேர்மனிய மொழியில் எழுதுவதால் அவரை ஜேர்மனிய வெளிநாட்டமைச்சரே உதாரணம் காட்டி, நடந்து முடிந்த உலகப் புத்தகக் கண்காட்சியைத் பிராங்பேர்ட்டில் திறந்து வைத்திருந்தார்.

உலகத்தில் ஒரு சிலருக்குக் கிடைக்கும் இந்தப் பிரபல்யத்துள் இவரும் அடங்கியுள்ளார். ஜேர்மனியப் பல்கலைக்கழகங்கள்-உயர்பாடசாலைகளென அறியப்பட்ட படைப்பாளியாகவும்-கல்வியாளராகவும் அவர் இருக்கிறாரென நான் அறிந்தபோது, அவரது உரையையும்-அவரது நூல்களின் முன்வாசிப்பையும் காண்பது அவசியமாகவே இருந்தது.


எத்தனையோ படைப்பாளிகளை அவர்களது மனித நோக்குக்காக நாம் மதிக்கிறோம்.அவர்கள் தாம் வாழும் உலகத்தில் கால்பதித்துச் சிறந்தபடைப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு அதிகமாகப் பிடித்தவர்கள் டோல்ஸ்ராய்;(Tolstoi: Anna Karenina)அனா கறினினா,டோஸ்ரோஜேவிஸ்க்கி(Dostojewskij: Der Idiot) (முட்டாள்,மற்றும்அலெக்ஸ்சாண்டர் புஷ்கின்¦;(Alexander S.Puschkin:Erzaelungen)கதைகள்.இத்தகைய படைப்பாளிகளுக்கு நிகராக எழுதிவந்தவர் அல்பேர்ட் காம்யு(Albert Camus:Die Pest,Der Mythos des Sisyphos,Der Fremde...)அவரது அன்னியன் படைப்பைத்தவிர மற்றெல்லவற்றையும் குப்பைகள் என்று ஒதுக்கியவன் நான்.இதன் காரணத்தை மிக இலகுவாக அறியத்தரமுடியும்.காம்யுவின் எந்தப்பாத்திரமும் பூமியிற் கால்பதிப்பது கிடையாது.தனது வேரை மறந்து தன்னையொரு பிரஞ்சியக்காரனாகச் சிந்தித்து இருந்த காம்யு அல்ஜீரியாவைச் சுரண்டும் பிரான்ஸ்சுக்குக் குடைபிடித்தவர்.இப்போது இந்த ராஜ்விந்தர் சிங் என்ன சொல்கிறார்,யாருடைய வாழ்வைப் படைப்பாக்கிறர்ர் என்பதில் மிகவும் கவனமிருக்கிறது.அந்த நிகழ்வில் தனக்கேயுரிய மென்மையான பேச்சோடு உரையாடியவர் தனது படைப்புகளிலிருந்து சில கவிதைகளை வாசித்துக் கரகோசத்தைப் பெற்றார்.

பெரும்பாலும் மக்களின் உற்சாகப்படுத்தும் செய்கைகள் படைப்பாளிகளை உசுப்பி விடுவதுண்டு.அவர் தனது ஜேர்மனிய வாழ்வைச் சொல்லி தனக்கு நாசிகளால் அச்சுறுத்தல் நிகழ்வதாகவும்,பற்பல சந்தர்ப்பங்களில் தொலைபேசியழைப்பூடாகத் தன்னை இனவாதரீதியாகத் திட்டித் தீர்த்துக்கட்டுவதாக நாசிகள் அச்சுறுத்துவதாகவும் சொல்லிக்கொண்டார் .தான் இரவு பன்னிரண்டு மணிக்கே எழுதுவதால் இது தனக்கு கரைச்சலாக இருப்பதாகவும்,மற்றும்படி அச்சம் இல்லையென்றும் சொன்னார்.நாசிகள் குறித்த கவிதையை வாசித்துவிட்டு"நாசிகள் வெளிநாட்டவரைப் பார்த்து வெளிநாட்டவரே வெளியேறுங்கள் என்கிறார்கள்,இடதுசாரிகளோ நாசிகளே வெளியேறுங்கள் என்கிறார்கள்.எங்கு நோக்கிச் செல்வது? இரண்டுதரப்பின் வாக்கியமும் ஒன்றே"என்று தனது இடதுசாரிய வெறுப்பை நாசிகளோடு முடிச்சிட்டார்.

தனது தனிமனித அவாக்களையும்,தான் சார்ந்த மனிதர்களின் தனிமையையும்-தவிப்பையும் படைப்பாக்கிய ராஜ்விந்தர் சிங் உலகப் பயங்கரவாதம்,நாசிகள் குறித்தும் கருத்துச் சொன்னார்.அமெரிக்காவுக்கு ஜரோப்பாவில் குடைபிடிக்கும் ஜேர்மனிய எண்ணத்தோடு அவரது எண்ணம் கூடிக் குலாவியது.

ஆராடா இவன்?இந்தியாவிலிருந்து அரசியல் தஞ்சங்கோரியிருக்கும் ஒரு அகதிக்கா இவ்வளவு ஒடுக்குமுறையுணர்வு?நீ பஞ்சாப்பில் அரசியல் செய்து இந்திய அரசால் கைதாகி அவஸ்த்தைப்பட்டவன்போல் கதைக்கவில்லையே ராஜ்விந்தர் சிங்?உன்னைப் பாடசாலைகளுக்குள் அழைப்பதும் பின்பு இந்தியப் பண்பாட்டுக்கு விளக்கமளிக்கக் கோருவதும் சும்மாவா?இந்தியத் தேசத்தின் வளங்களைக் குறித்த மதிப்பீடுகளை உன்னைவைத்து இவர்கள் மதிப்பிடுவது தெரிந்தே இருக்கிறது உங்களுக்கும்.

ஆக,இடதுசாரிகளுக்கு எதிராகத் திரிப்பதும்,நாசியத்தை மனிதருக்கு இடைஞ்சலாக இருப்பதென்று கூறுவதோடு உங்கள் பணி முடிவதில்லை.எனது சிந்தனைகளை இங்ஙனம் நான் தோற்றுவித்தபோது அந்தப் பாடசாலையுள் குழுமியிருந்த பெரும் படிப்பாளிகள் அவர்களது குழந்தைகள்,பன்னாட்டு நிறுவனங்களின் இயக்குநகர்களுக்கு மத்தியில் அவரது கல்வியையும்,பிரமிப்பையும் எனக்கு உடைப்பதில் கவனமிருந்தது.

இத்தகைய உணர்வுக்கு அடிகோலியதே அவர்தாம்.நாசியின் கூற்றும் இடதுசாரியக் கூற்றும் ஒன்றாக இருப்பது எதனால்?

இந்தியாவில் சகமனிதர்களைச் சாதி சாதியாகப் பிரித்து அடக்கும் மனோபாவமானது மிக வக்கிரமாகச் செயற்படும்.அது தடிப்பெடுத்த பார்ப்பன நாய்கள்போல எப்போதும் சாதியத்தை-தீண்டாமையை நியாயப்படுத்தும்.இத்தகையவொரு மனோபாவத்தோடு இந்தியாவின் உயர்சாதிய மனிதனாக ராஜ்விந்தர் சிங் உலகத்தைப் பார்பதும், அத்தோடு இடதுசாரியத்தை ஊனப்படுத்துவதற்கு இன்னொரு உந்துதலாக உருவப்படுத்தும் கூற்றுக்கும் இந்த மதிப்பீடுகளே வழி செய்கிறது.

அந்த நிகழ்வில் வருகை தந்த விருந்தினரோடு அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கே அனுமதி.எனினும், ராஜ்விந்தரின் அறிவுப் புலத்தைச் சீண்டுவதற்கு நான் முயற்சித்தேன்.பாடசாலை அதிபரிடம் ராஜ்விந்தர் சிங்கை நோக்கிச் சில கேள்விகளுண்டு, அதை வெளிப்படுத்துவதற்கான அனுமதி தரமுடியுமாவெனக் கேட்டபோது- அந்த அதிபர் யோசித்தபோதே அது கிடைப்பதற்கு வழியில்லையென நான் உணர்ந்தேன்.அதைப் பொருட்படுத்திய ராஜ்விந்தர் சிங்கே சுயமாகச் சொன்னார்"உங்கள் கேள்விகளைச் சொல்லுங்கள்"என.நான் அவருக்கு நன்றி கூறி எனது கேள்வியைக் கருத்தைச் சொன்னேன்.

மனிதருக்கு மலர்ந்திருந்த முகம் வாடியது.

தன்னைச் சமாளித்தே பதில் கூறுவதற்கு முனைந்தார்."நான் அது குறித்து முன்பு எழுதியருக்கிறேன்.எனக்கு மனிதர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பதும்,இறுதியில் எங்கு போவார்கள் என்பதும் தெரியும்."என்று சொன்னார்.அவர் பற்பல கல்விக் கூடங்களில் இலக்கியப்பட்டறை நடாத்தியவர்.எல்லோரிடமும் இந்தியா குறித்துப் பொய்யளந்துள்ளார் என்பதை அந்தப்பாடசாலை அதிபரோடு நான் அன்று உரையாடியபோது அறிந்தேன்.இந்தியாவில் சாதியமைப்பென்பது தற்போது நிலவவில்லையென்றும்,அது சட்டப்படி குற்றுமென்றும் தங்களுக்குச் சொன்னாரென்றும் கூறிய அவர் தொடர்ந்து, ராஜ்விந்தர் சிங் கூறியதை நீங்கள் உடைத்தெறிந்தீர்கள் என்றார்.மற்றும்படி, நீங்கள் கூறிய "நாசியே வெளியேறு"என்பதற்கான உங்கள் கருத்து அவருக்கும் தெரியுமென்றார்.நான் அந்த அதிபரோடு சில நிமிடங்கள் உரையாடியபோது தான் இந்தியாவில் பல இடங்களுக்குப் போனதாகவும்,அந்த ஏற்ற தாழ்வுகளை உணர்ந்ததாகவும்,மாளிகைகள் போனற கோட்டல்களின் அடிவாரத்துள் மனிதர்கள் குடிசைகளோடு வாழ்வதாகவும் இது இந்தியாவின் சாபக்கேடு என்றும் சொன்னார்.

ராஜ்விந்தர் சிங்கிடம் நான் கேட்ட கேள்வி:

"ஐயா உங்கள் கவிதைகளில் உலகின் பெரும் அவலங்கள்,நாசிகளின் மனிதவிரோதம்,உலகப் பயங்கரவாதமெல்லாம் பேசப் படுகிறது.தனிமனித அவலம்-தனிமை,ஈய்வு-இரக்கம் என்று பல பேசப்படுகிறது.ஆனால், இந்தியாவில் 239 மில்லியன்கள் மக்கள் தீண்டத்தகாதவர்களாக்கப்பட்டு பாரிய மனித ஒடுக்குமுறை நிகழ்கிறதே,அது உங்கள் கவிதை மனதுக்குள் வரவில்லையே?மற்றும் இடதுசாரிகள் நாசிகளை வெளியேறுங்கள் என்பது,ஜேர்மனியைவிட்டு வெளியேறென்பது அல்ல.அதற்கும் ஜேர்மனியை விட்டுத் துரத்தியடிக்கும் நாசிய வாதமான வெளி நாட்டாரே வெளியேறுங்கள் என்பதும் ஒன்றுபடுத்தக் தக்கதல்ல.இடதுசாரிகளின் கூற்றோ நாசிய எண்ணத்தைவிட்டுக் குழந்தைகளே தூர நில்லுங்கள்,உங்கள் மனத்தை நாசிய எண்ணங்களிலிருந்து வெளியே எடுங்கள் என்பதாகவே சொல்லப்படுவதாகச் சொன்னேன்.

எனது கருத்துக்களால் அந்த மனிதரின் மனது வாடியபோதும்,எனக்குள் தீண்டாமையின் வலியே அவருக்குப் புரியவில்லை என்று உணரப்பட்டது.தன் வீட்டுக்குள் மனிதர்களை வேட்டையாடும் ராஜ்விந்தர் சிங்கோ இடதுசாரிகளையும்,நாசிகளை ஒருமைப் படுத்தும்போது"உலகம் இப்படித்தாம்"என்று புரியக் கூடியதாக இருந்தது.
அவரது பற்பல மாயைகளை நான் அன்று உடைத்தேன்.பற்பல அறிஞர்களோடு உரையாடியபோது அவர்களால் உணரப்பட்ட இந்தியா மனிதவிரோதப் பாசிச இந்தியாவாகவும்,"உலகத்திலேயே ஜனநாயகத்தில் உயர்ந்த இந்தியா" என்ற பொய்மை அம்பலப்பட்டதும் தெரிய வந்தது.

ப.வி.ஸ்ரீரங்கன்
14.09.2007
+++++ +++++ ++++++ +++++

Rajvinder Singh – geboren 1956 in Kapurthala (Punjab, Indien) – war 2006/07 der erste Stadtschreiber Triers. Eingeladen hatte ihn die neu gegründete Initiative „Stadtschreiber e.V.". Nachdem Singh seit Anfang Juli als Döblin-Stipendiat in Wewelsfleth (Günter-Grass-Haus) residiert, fragte 16vor nach, was Trier für Spuren und Eindrücke hinterlassen hat. Singh hat in zahlreichen Streifzügen Stadt, Kultur und Leute unter die Lupe genommen und gibt nun eine wohlwollende wie auch kritische Wachstumsprognose ab.



16vor: Worin besteht die Idee des Stadtschreiber-Projekts?

Singh: Das Stadtschreiber-Projekt bietet zum einen der literarisch interessierten Öffentlichkeit einer Stadt die Möglichkeit, einen Autor etwas näher kennen zu lernen. Zum anderen bietet es einem Schriftsteller die Möglichkeit, für ein halbes Jahr von finanziellen Sorgen einigermaßen befreit arbeiten zu können. Zu meinen Tätigkeiten als Stadtschreiber gehörte es, nicht nur den Alltag in Trier zu beobachten und literarisch zu thematisieren, sondern auch zu bemerken, wie sich die Stadt und ihre Bewohner entwickeln.


16vor: Sie stehen mit Ihrer Arbeit für den „Dialog der Kulturen". Können Sie auf einen bereichernden Austausch mit einer Trierer Kulturszene zurückblicken?


Singh: Ich hatte einige schöne Begegnungen hier. Die Veranstaltung „Sonntagsgespräch" im Stadttheater gab mir die Gelegenheit, mit den Herren Weber und Oppermann vom Theater und Herrn Doetsch von der Katholischen Akademie sowie mit Prof. Eckert ins Gespräch zu kommen. Ich hätte auch gern mit anderen Künstlern Dialog gehabt, was etwas zu kurz kam. Meine „Sprechstunde" im Haus Franziskus gab mir die Möglichkeit, mich mit verschiedenen Menschen zu unterhalten. Ich war auch vom "Igeler Literaturklub" eingeladen worden. Auch Schulen und andere öffentliche Kontakte, Veranstaltungen waren hilfreich, die Seele Triers etwas näher zu betrachten. Aber mit einer organisierten Trierer Kulturszene, sofern es eine gibt, kam ich leider nicht ins Gespräch…


16vor: Ja, man kennt sich, aber „organisiert"-verzweigt ist die Szene tatsächlich wenig. Hat Trier trotzdem auch als moderne Stadt kulturelles Entwicklungspotenzial?


Singh: Trier war schon immer einer der wenigen Städte Deutschlands, welche eine so faszinierende Symbiose von Vergangenheit und Gegenwart vorweisen konnten. Hier nahmen die Geschichte und der Alltag so mühelos „fremde" Einflüsse, zum Beispiel aus dem Luxemburgischen und Französischen, in sich auf und hielten sie bis dato wach wie Figuren in einem Mosaik. Dadurch genießen die Menschen hier die Möglichkeit, sich Europa-orientiert zu gestalten. In der Stadtgestaltung zeigt der Petrisberg eine schöne moderne Seite Triers; aber Trier hat alles, auch seine Ghettos. Leider ist Trier West sehr vernachlässigt. Auch das ist Trier.


16vor: Wie progressiv schätzen Sie die Trierer ein?


Singh: Ich habe viele Bewegungen in Trier entdeckt. So wurde ich zum Beispiel von einer Gruppe Frauenrechtlerinnen eingeladen, den Trierer Soroptimistinnen. Ich habe in meiner Stadtschreiberzeit den Bürgermeisterwechsel mitverfolgt und war positiv erstaunt, mit welcher Energie die Stadtbewohner jenseits der Parteipolitik den Bedarf nach Frische äußerten – mit Hoffnung auf die Lösung heftiger, anstehender Probleme. Das macht Trier zu einer modernen, wachen Stadt. Wie ich auf dem „Weltbürgerfrühstück" gesehen habe, sind auch in Trier Menschen in der „antikapitalistischen" Bewegung „attac" aktiv, und das nicht nur, weil hier irgendwann mal Karl Marx geboren wurde. Ich hätte mir dort allerdings mehr Studenten gewünscht. Ich habe zum Teil doch auch sehr konservative Studenten in Trier wahrgenommen.


16vor: Wie sieht so eine konservative Haltung aus?


Singh: Ich habe in Uni-Cafés oder in den Bussen gelauscht und gehört, was ihnen im Alltag wichtig ist, wie sie durch das Leben gehen. Ich meine, nur weil eine Stadt eine Universitätsstadt ist, ist sie eben nicht direkt progressiv.


16vor: Hatten Sie den Eindruck, man begegnet Ihnen auch mit einer Scheu als einem „Exoten in Trier"?


Singh: Ja, die Menschen sollen mich ruhig auch als Ausländer wahrnehmen. Die Trierer sind Touristen gewohnt. Sie sehen mich zunächst als Ausländer, dann erfahren sie, dass ich Autor bin, dass ich mich der deutschen Sprache bemächtige, dass ich (Anm. d. Red.: neben indischen Sprachen und Englisch) auf Deutsch schreibe.


16vor: Wie kamen Sie mit dem Trierer Dialekt zurecht?


Singh: Ich konnte bereits holländisch und etwas plattdütsch, das half tatsächlich, auch das Moselfränkische zu verstehen. Wenn die Leute aber richtig schnell redeten, entdeckte ich meine Grenzen. Mir gefallen Dialekte, sie drücken Individualität aus. Sie sind geprägt von der Umgebung und den Menschen. Man kann sie interpretieren: Welche Wörter benutzen Menschen an bestimmten Orten? Ich habe mal geschrieben: „Synonyme gibt es nicht." So wie keine zwei Menschen sich genau gleichen, so ist es auch mit den Wörtern. Es gibt immer Nuancen, die sich in den Wörtern und Dialekten ausdrücken.



16vor: Zum Schulbeginn werden Sie uns noch einmal für das Schulprojekt „Baumpatenschaft" in Trier besuchen. Neben dem Wort scheint Ihnen die Natur ‚heilig’ zu sein…


Singh: Heilig ist, woran wir glauben. Heilig soll in erster Linie aber sein, was unentbehrlich ist für den Lebenserhalt der Menschheit. Der Baum ist unentbehrlich für unser Überleben. Ich habe daher einige Gedichte als ermahnendes Plädoyer für den Erhalt des Baumes geschrieben. Sie sollen in Stein gemeißelt zusammen mit der Baumpflanzung in Schulen und öffentlichen Parks aufgestellt werden.


16vor:Was bedarf in Trier außer der Natur noch der Pflege? Sehen Sie eine blühende Zukunft für eine Trierer Stadtschreibertradition? So gar keine Mängel?


Singh: Die Projekt-Initiatoren haben einen guten Grundstein gelegt. Herr Dr. Steinmetz, Frau Zey-Wortmann (Katholische Akademie), Herr Thalau und Frau Geisler vom Stadtschreiber-Verein haben sich sehr engagiert. Doch die Partnerschaft mit der Stadt muss jetzt einfach wachsen. Enttäuscht war ich aber vor allem über das Desinteresse von Seiten der Stadt. Kulturamt und Kulturdezernent haben mich nicht einmal eingeladen, was in Rheinsberg und Remscheid ganz anders gelaufen ist. Die Stadt müsste überhaupt erstmal eine arbeitsgerechte Wohnung zur Verfügung stellen, die für mich noch der Verein gemietet hatte. Hier muss ein besserer Austausch wachsen.

Letztendlich hat etwas statt-gefunden, aber es hat nicht wirklich Stadt-gefunden.


Singh ist freiberuflicher Autor. Er war (1986-1991) 2. Vorsitzender der Neuen Gesellschaft für Literatur (NGL) e.V. Berlin, ist seit 1993 Mitglied der „Initiative: Courage gegen Fremdenhass", seit Januar 1996 des Deutschen P.E.N. und engagiert sich im Writers-in-Prison-Committee. Trier ist nach Rheinsberg und Remscheid die dritte Stadt, die Rajvinder Singh als Stadtschreiber zu Gast hatte. Spätestens jetzt liest er neben den zahlreichen indischen, pakistanischen, amerikanischen und deutschen Internetzeitungen morgens nun auch 16vor.


Saturday, September 01, 2007

நான்:"தத்வமஸி அஹம் பிரஹ்மாஸ்மி!!!"

நான்:
"தத்வமஸி
அஹம் பிரஹ்மாஸ்மி!!!"

என் தேடலுக்கான நேரம்
நீண்ட பொழுதின் மறைவுக்குள்ளேனும்
அந்தத் துளியைக் கண்டாக வேண்டும்
நடுச்சாமப் பொழுதொன்றில்
கிழித்தெறியப்பட்ட துவாரத்துள் குருதி கசியக்
கடுப்படையும் ஒரு சுவாசக் கணம்

எத்தனை அலறல்கள்
எப்படி நிகழ்ந்தோய்ந்திருந்தும்
ஒரு பூச்சிக் கனவுள் போட்டெடுத்த
நரம்புத் தடம் புதிதாய்...

நாவுத் துவாரத்து இடுக்குகளில்
மெல்லச் சிக்கிய உயிரின் முனைப்புகள்
கொன்றுவிட்ட முழுமுதற்கணங்களும்
மௌனித்த திருப்தியில் மடிந்தோய்ந்த சுருதி

முதற்கட்டம்
இடைக்கட்டம்
கடைக்கட்டம்

சந்தர்ப்பவாதக் கிருமிகளின்
பல் முனைத் தாக்குதலுக்கு
இலக்காகிய பந்துக்குள்
உயிர்த்திருக்கும் காற்று
இன்னொரு பொழுதில் இறைக்கை விரிக்கும்

அந்தப் பொழுதுக்கு முன்னான இந்தக் கோலத்துள்
வலிந்தெதிர்க்கும் துணிக்கைகளுக்காகத் தானும் வீங்கி
தான் கொண்ட தடங்களையும் நோகடிக்கும்
நிண நீர் முடிச்சவிழ்க்கும் செயற்றிறனோ
கருங்காலிச் செயல்

மூட்டு வலிகளாய் பெருக்கெடுக்கும்
வைரசு மகாராசாவுக்கு
வற்றாத வெறி
போட்டுத் தாக்குவதற்கு
இந்தப் பொழுதில் ஒரு துரும்பும் இல்லை
இனியாவது பிறந்து காண்
என் பின் தடமே!

மெல்லப் பெருத்த தொந்தியும்
பத்திலொரு பாகத்தை இழக்க
பரதவிக்கும் சாக்குப் பையோ
சல்மோனால
கோலிற்றிசுக்களால் நிரம்பி வழியும்

அதையும் தாங்கி அற்பக் காரியத்துள்
அகதியாய் அலையும் மனமும்
அடுத்த காண்டம் குறித்த பேரச்சத்துள்
அசையாத வடுக்களைச் சுமக்க மறுக்கும்

ஆங்காங்கே உப்பி விரியும்
தோற் கட்டிகள்
தோல்வியின் கயிற்றில்
ஊஞ்சிலிட மறுக்கும் ஆன்மாவைச் சிதைக்கும்

தெரிவுகளற்ற ஒரு கனாக்காலம்
தெருவெங்கும் தோரணை கட்டும் இளமிடுக்கை
எப்பவோ இழந்த உணர்வும்
இருப்பதற்கான வெளியைத் தேடியலையும்

மெல்லத் திசையிழக்கும் அந்த விழிகளும்
ஆரத்தழுவும் ஆத்தையின் அந்தத் திசையை
உணர்வதற்குள் மூர்ச்சையாகும்
ஒரு நாட்பொழுதில்

பெரு விருப்பில் இனித்தவை
இதயப் பரப்பெங்கும் எழுதிவைத்த
"அழகு-இடுப்பளவு-மார்பழகு"
நீரிழந்த கண்மாய்த் தரையாய்
குறுக்கும் நெடுக்குமாகச் சிதறி வெடிக்க

சில்லறையைக் காவுகொண்ட தாய்லாந்தும்
இருஷ்சியாவும்
இருமேனியாவும் இன்னுஞ் சில தேசத்துச் சிற்பங்களும்
மெல்ல உயிர் தின்ற வேற்று வாசிகளாய்

"........................"
"??????????????????"

வேறுபடும் கலர்களையெல்லாம் புகுந்து பார்க்கும்
பேரவாப் பொழுதுகளின் "பரம் பொருளே"
நின் தரிசனம்
இன்னும் விளங்க மறுக்கும்
உன் மடிப்புச் சொண்டில்
நுனி நாவுத் தாளலயம்
இன்னும் வலுத்துக் கொள்ளும்!

நான்
நான்
நான்
தத்வமஸி
அஹம் பிரஹ்மாஸ்மி!!!

ப.வி.ஸ்ரீரங்கன்
02.09.2007
0.40 மணி.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...