Thursday, August 24, 2023

பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது !

 சந்திரயான்-3 ‘ம் நம் மக்களும் : பலி ஆடுகள் ! , “பல்வேறுபுரிதலைக் கோரி”—சிறு சுட்டிக் காட்டல்கள் ! 


.விஶ்ரீரங்கன் 


பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது ! , இது , சீனாவுக்கான சங்கதி . 


உருசிய நிலவாய்வுச் செய்மதி இலூனா-25(Luna-25)விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகுஇந்தியநிலவு தரையிறங்கும் பணி தீர்க்கமான கட்டத்தில் நுழைந்து , நேற்றுப் புதன் கிழமை 23.08.23  அன்றுபாதுகாப்பாக நிலவுத் தரையில் சந்திரயான்- 3 (Chandrayaan-3 ) இறக்கி விடப்பட்டுள்ளது . இதன் , உயிர்வாழும் காலம் இரு கிழமைகளே ! 


இந்தியாவின் விண்வெளி நிறுவனம் நிலவின் தென் துருவத்தில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முயற்சி செய்துவெற்றியீட்டியுள்ளது !  இதன்மூலம் , இந்தியாவானது ஒரு விண்வெளி பயண நாடாகத் தன்னைமாற்றியமைத்து விட்டதென்பது உண்மை .


சந்திரயான்-3 நிலாவுக்கு தரை இறங்குவதற்குமுன் உருசிய இலூனா-25 நிலாவில் தரையிறங்கப்பட்டஅவசரமும் பின்பு அதன் தகர்வும் நிச்சியக்கப்பட்ட பின்பே இந்த நிகழ்வுகள் இடம் பெறுகின்றன . 


இதன் , உள்ளர்த்தம் நமக்குப் பல சந்தேகங்களை விட்டு வைத்துள்ளது . இங்கு நிகழும் விஞ்ஞானவிளையாட்டுக்கு என்னபெயர் ? உலக முதற்றர வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவுக்கான போட்டிக்குஇந்தியாவைத் தயார்ப்படுத்திக் களத்துக்கு அனுப்பும் CIA‘ யின் வான விளையாட்டா இது ? கடந்த காலத்துள்  சீனாவையும் , இந்தியாவையும் அடிபட வைத்தவர்கள் அமெரிக்கப் புலனாய்வுத்துறை என்பதை நாம்ஆதாரபூர்வமாக (Covert operation —National Security Act ) நிரூபிக்க முடியும் . அவ்வண்ணம் , இந்தியஅனைத்து தேசிய-மாநிலக் கட்சிகளையும் , திராவிடக் கட்சிகளை ; இயக்கங்களையும் CIA தன்கட்டுப்பாட்டுக்குள் 1965’ ஆம் ஆண்டே கொணர்ந்தது . அதன் பின் இந்தியாவுக்கான புலானாய்வு துறையை(Research and Analysis Wing) 1968’ஆம் ஆண்டு அமெரிக்கப் புலனாய்வுத்துறையே நிர்மாணிக்கஆலோசனை வழங்கியது . 


அன்றைய இந்திய-சீன யுத்தம் 1962’இல்( Sino-Indian War ) ஆரம்பிக்கத் தூபமிட்டவர்கள் அமெரிக்கர்கள் . அப்போது , இருகசியமாகச் சீனாவைக்குள் போதைப் பொருள் நுழைத்து யுத்தஞ் (Air America: größte Fluggesellschaft Südostasiens während des Vietnamkriegs, von der CIA kontrolliert und seit 1962 intensiv für Geheimoperationen und zum Schmuggel von Heroin eingesetzt)  செய்தது . இக்காலக்கட்டத்துள் 1959 ‘ ஆண்டிலேயே திபேத் வசந்தம்(1959 Tibetan uprising) மூலம்அமெரிக்காவோடிணைந்து இந்தியா மூக்கை நுழைத்தது . CIA முற்று முழுதாக இந்தியாவைச் சீனாவுக்குஎதிராக வளர்த்தெடுத்தது . அதேபோல் திபத்தைச் சீனாவுக்கு எதிராகத் தகவமைத்துப் பயிற்சி வழங்கிது (The CIA trained Tibetans from 1957 to 1972, in the United States, and parachuted them back into Tibet to organise rebellions against the PLA. ) . இது வரலாற்று நிகழ்வுகள் மட்டுமல்ல . இன்றைய இந்திய வானவியற்திட்டத்தின் பின்னால் அமெரிக்கா உண்டு . எங்ஙனம் நாசா SpaceX என்று மாற்று வடிவத்துள் நுழைகிறதோ , அதே வியூகத்தோடு அஃது , இந்திய ISRO வடிவமாகவும் மாற்றுமுறுகிறது இந்திய முகத்தோடுஇதுசீனாவைஎதிர்கொள்ளும் அமெரிக்க யுக்தி !


சந்திரயான்-3 திட்டம்தெற்கு மாநிலமான ஆந்திராவில் உள்ள இந்தியாவின் முக்கிய விண்வெளித் தளத்தில்இருந்து ஜூலை 14 அன்று ஏவப்பட்டது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) சந்திரயான்-3 பணி பற்றிய மிக முக்கியமான உண்மைகளைஇங்கே , மேல உங்களுக்குச் சொன்னேன் . இது , முற்றிலும் அமெரிக்க வல்லாதிகத்தின் அடுத்தகட்டசீனாமீதான யுத்தத்தின் முன் தயாரிப்பு என்பதே உண்மையாகும் . 


சந்திரயான்-3ன் இலக்கு என்ன?


சந்திரயான்-3 பணியின் குறிக்கோள் நிலவின் தென் துருவமாகும்இது உறைந்த நீரின் ஒரு பகுதிஇதுஇறுதியில் நிரந்தர சந்திர காலனிக்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கலாம்.


வெற்றிகரமாகத்  தரையிறங்கிய இந்த விண்கலம் -செய்மதி சந்திரயான்-3 , இரண்டு வாரங்களுக்குசெயல்பாட்டில் இருக்கும் அத்தோடு நிலாவினது மேற்பரப்பின் கனிம கலவையின் ஸ்பெக்ட்ரோமீட்டர்பகுப்பாய்வு உட்பட தொடர்ச்சியான சோதனைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக நியூயோக்கர்ரைம்ஸ் பல்லிளிக்கிறது . 


நாசா நிர்வாகி பில் நெல்சனின் கூற்றுப்படிஅமெரிக்க விண்வெளி நிறுவனம் இந்தியப் பணி என்ன கொண்டுவரும் என்பதைப் பார்க்க "உற்சாகமாகஉள்ளதாம்எனக்குச் சிரிப்பு வருகிறது நண்பர்களே . செய்பவனும் , செய்து முடிப்பவனும் கிருஷ்ணாவான நாசாதாம் ; அமெரிக்காதாம் ! பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில்தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது ! , இது , சீனாவுக்கான சங்கதி . 


இங்கே , உருசிய இலூனா-25 ‘இன் அவசரமாகப் பயணித்துச் சென்றதன் மர்மம் துலக்கப்பட்டதா ? அல்லதுதுலங்குகிறதா? ; துலங்க வேண்டும் ! பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் கூட்டுத் தொடர் நிகழ்வில் இந்தச்சந்திரயான்-3 ‘ இன் வெற்றி பேசப்பட வேண்டுமென்பது திட்டமிடப்பட்ட வித்தை . அபெரிக்காவானது பிரிக்ஸ்(BRICS) கூட்டமைப்பை இந்தியவெனும் ஆப்பை உருவாக்கிப் பிளப்பதன் அரசியல் இது . 


அரசியல் ரீதியாகவும்பொருளாதார ரீதியாகவும் நிறைய ஆபத்து உள்ள இந்தத் அமெரிக்க-இந்தியக் கூட்டுச்சதி , வளர்ந்துவரும் சீனாவை இந்தியாவுடன் மீளக் கொழுவ வைத்து இந்தியாவின் மூலம் சீனாவைப்பலவீனப்படுத்தி சீனாவை அமெரிக்கா அடித்து வீழ்த்தும் தந்திரத்துக்குட்பட்ட வியூகமாகும் .


வெற்றிகரமாக்க் காட்டப்பட்ட சந்திரயான்-3’இன் இயக்கத்தின் மூலம்அப்போதைய  சோவியத் ஒன்றியம்உட்பட , அமெரிக்கா மற்றும் , சீனாவுக்குப் பிறகுசந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாகஇந்தியா மாற்றப்பட்டுள்ளது , அமெரிக்காவால் . இதற்கான சஞ்சோற்றுக் கடன் , சீனாமீது சகலவழிப் பின்கதவு-பனியுத்தம் ஒன்றை இந்தியாவின் மூலம் செய்தலாகும் . 


மேலும் , அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தன்னை விண்வெளி சக்தியாக நிலைநிறுத்தியபடிபாரதிய ஜனதா அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிலைத்து ஆட்சியில் அமரவும் இத் திட்டத்தின் வழி காய்நகர்த்தப்பட்டுள்ளது ! 


கூடவே , அமெரிக்க சார் தனியார் விண்வெளி நிறுவனங்கள் மற்றும் , செயற்கைக்கோள் சார்ந்தநிறுவனங்களில் முதலீடுகளை ஆதரிக்க பிரதமர் நரேந்திர மோடியையும் கட்டாயப்படுத்துகிறது அமெரிக்கா ! 


இந்தத் திட்டத்தின் பிரகாரம் அடுத்த தசாப்தத்திற்குள் அமெரிக்க-இந்தியத் தனியார் விண்வெளி நிறுவனங்கள்உலக சந்தையில் தங்கள் பங்கை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று  அமெரிக்கா தொடர்ந்து சதிசெய்து இந்தியாவைக் கட்டிப் போடுகிறது .


இஸ்ரோ—ISRO  "இந்தியாவின் விண்வெளி ஆராட்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைஎழுதி வருவதாகவும், "ஒவ்வொரு இந்தியரின் கனவுகள்இலட்சியங்களைஊக்குவித்து வருவதாகவும் நிலாப்  பயணத்தின் துவக்கநிகழ்வில் மோடிஜீ கூறியதை இங்குஞாபகப்படுத்துபடி உங்களைக் கோரி அமர்கிறேன் தோழர்களே ! ; புரிந்தவன் பிஷ்தா !!


விஶ்ரீரங்கன்          24.08.23 

Saturday, August 12, 2023

கனடா தாயகம் இதழின் அபத்தம் , சிறுபிள்ளை வேளாண்மை : கற்சுறா கடவுளும் அல்ல , கருப்பு ஜூலை கண்ணீருமல்லக் கண்டியளோ ?

 “கற்சுறா கடவுளுமில்லை, கருப்பு ஜூலை கண்ணீரும் அல்ல”  : எந்தக் கடவுளாரும் வர்க்கத்துக்கு அப்~பார்-அல்ல ! 

இலங்கையில் சிங்கள பெளத்த செளனிச அரசபாசிச இன ஒடுக்குமுறையையும் / ஈழப் போராட்ட இயக்கவாத அராஜகம் குறித்தும் கடந்த 40 ஆண்டுகளாகப் பேசி வருகிறோம் . இந்த”தமிழீழம்” எனுங் கருத்தியற் புனைவுக்கும் , அதன் அரசியற் செல் நெறிக்கும் இணைவாக ஒத்துழைத்த அந்நிய தேசங்களது நலன்சார் ஊக்கத்துக்குப் பலியான தமிழ்-இஸ்லாம் , சிங்கள மக்கள் அண்ணளவாக நான்கு இலட்சம் என்பது , மறைக்கப்பட்ட உண்மை !


உட்கட்சிப் படுகொலைகள் ; சகோதர இயக்கப்படுகொலைகள் , >துரோகி—காக்கை வன்னியன்-எட்டப்பன்< புனைவுக் கருத்தியலுக்குப் பலி கொள்ளப்பட்ட தமிழர்கள் ஏராளம்-ஏராளம் . இவைகள் , குறித்து மெளனித்தபடி >கருப்பு ஜூலை—Black July < நினைவு கூர்தலின் அரசியலைப் பேசுதல் என்பது அபத்தம் !


கற்சுறா , அபத்தம் இதழில் உரையாடும் அரசியல் “தமிழீழ அபிமானிகள்” தம் குருதி நாளங்களைப் புடைக்க வைக்கும் ; சிங்கள் அரச வன்முறையை 1977/ 1983 நேரடியாக அநுபவித்தவர்களை (Der gefährliche Aufstieg des buddhistischen Chauvinismus) ; எதிர் கொண்டவர்களைக் கூடக் கலகமடைய வைத்துக் கூச்சப்பட வைக்கும் ! 


1986’ஆம் ஆண்டு ஏப்பிரல்-மே மாதம் ரெலோ இயக்கத்தின்( Tamil Eelam Liberation Organisation ) மீதான புலிப் பாய்ச்சல்  அதிக அராஜமுடைய சகோதர இயக்கப் படுகொலையாகும் . இந்த நடவடிக்கையுள் இராணுவமாகப் பயிற்றப்பட்ட 600  ரெலோப் போராளி இளைஞர்கள் வரை 1986’ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள் என்று , அரச/உலக ஆவணங்கள் உரைக்கின்றன !  


83-ஜூலை , சிங்கள அரசால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் ; கொதிக்கும் சூடான தார்ப்பீப்பாக்களுக்குள் மூழ்க வைத்துத் தமிழர்களை இலங்கை அரசு கொன்றது . கூடவே , வெலிக்கடைச் சிறையில் அரசியற் கைதிகளாக இருந்த தமிழ் இளைஞர்களில் 53 தமிழ் அரசியல் கைதிகளை கொழும்பின் அதி—உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில்  வைத்துச் சக சிங்களக் கைதிகளைக் கொண்டு சிங்கள அரசு  குத்தியும் , வெட்டியும் , கண்களைத் தோண்டியும் தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்தது.


1986’ஆம் ஆண்டு புலிகள் , ரெலோமீதான சகோதர இயக்கப்படு கொலை இன்னும் திகில் நிறைந்தது . 


நரவேட்டை செய்த புலிகள் , படுகொலை செய்யப்பட்ட ரெலோப் போராளிகளின் உடல்களை மக்களைக் கொண்டே இரயர் போட்டு எரித்தார்கள் . மக்களும் தம் குழந்தைகளை இரயர் போட்டு எரித்துக் களைத்துப்போன கையோடு கொக்கோ கோலா குடித்தும் , வழங்கியும் மகிழ்ந்தது வரலாறு .இது, கூறும் அரசியல் வெறும் தமிழ்த்  தேசிய -தேச நலன் ; வேளாள ஆதிக்கத் தமிழ்ச் சுயம் அல்ல ! 


இந்த நிகழ்வூக்கத்தின் பின்னான உளவியல் ஊக்கம் என்ன ?


இதன் வரலாற்று நியாயம்/அநியாயம் என்ன புரிதலை நமக்குத் தருகிறது ?


“சிங்களம் -தமிழ் “ இரு மொழிகளுக்குள்ளும் 

சகோதரப்படு கொலைகள் நிகழ்கிறது ; நிகழ்ந்தது .


1971’ஆம் ஆண்டு JVP‘ யின் மீதான இலங்கை-இந்திய அரசுகளின் கூட்டுத் தாக்குதலால் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்கள் உத்தியோக பூர்வமாக 5.000 என்பதை உத்தியோகப் பற்றற்று 50.000 என்று கூற முடியும் —சிங்கள அழகி புஸ்பவதி மனம்பாரியை உரிந்து , “கற்பழித்து” தெருத்தெருவாக அம்மணமாக இழுத்துச் சென்று , சிங்கள இராணுவம் தெருவில் வைத்து எரித்துச் சாம்பலாக்கியது . இதே, இலங்கை அரசின் சிங்கள இராணுவம் தமிழ் மகள் கோணேஸ்வரியைக் “கற்பழித்து” அவள் யோனிக்குள் குண்டு புதைத்து வெடிக்கவைத்தது அவள் யோனியையும் ; உடலையும்  , சிங்கள அரசு . 


1987-1989 வரையான இலங்கை அரசியலுள் பிரேமாதாசவின் தலைமையில் மீள JVP(மக்கள் விடுதலை முன்னணி) மீதான சிங்கள அரசின் வன்முன்றை ஜந்திரத்தின் பாய்ச்சல் , இரு ஆண்டுக்குள் 80.000 சிங்கள இளைஞர்களைக் கொன்று தள்ளிக் களனி கங்கையில் மிதக்க விட்டது ;  பேராதனைப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களைக் கூட்டாகச் சுட்டு JVP அபிமான மாணவர்களெனக் களை எடுத்தது சிங்கள அரசு . இதே அரசு வன்மத்தோடு மக்கள் விடுதலை முன்னணியின் சிங்களத் தலைவரை (சிங்கள ரோகண விஜயவீர) காலுக்குக் கீழே சுட்டு ,அம்மணமாக்கி அடித்துச் சித்திரவதை செய்து (A rumour circulated that he was taken to a cemetery, shot in the leg and then summarily executed by being burnt alive in the crematorium .) உயிரோடு எரித்துச் சாம்பலாக்கியது , இந்தப் பாசிச சிங்கள அரசின் சிங்கள இராணுவம் . 


இதேபோன்று “அதுராதபுரத்தில் சிங்களத்தின் உச்சி பிளந்து (Operation Ellaalan : The attack happened on 22 October 2007) எல்லாளனைக் காட்டிய பிர~பா~வேலு~கரனுக்கு முள்ளிவாய்க்காலில் உச்சி பிளந்து , கோவணங்கட்டி ; அவன் துணைவி -மகள் முன் கோவணத்தைக் கழற்றிய துட்டக்வைமுனுவைச் சிங்கள அரசு காட்டியது , சிங்கள ஆண்மையை !  


இப்போது , புலி வன்முறை ஜந்திரம் -சிங்கள அரச வன்முறை ஜந்திரங்கள் இரண்டும் ஒரு நிகழ்வுகளைச் செய்துள்ளன . இரண்டுமே , தத்தம் இனங்களின் புதல்வர்களை ஆயிரக்கணக்கில் அழித்துள்ளன. இரண்டும் பிற இனங்களை தாக்கியும் அழித்தன; துரத்தின-நாடு கடத்தின , குடியுரிமை பறித்தன (ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க) !


இப்போது சொல்லுங்க என்னங்கடா உங்கள் பிரச்சனை ?


சாதியா , 

மதமா, 

இனமா, 

பிரதேசமா —

“வர்க்கமா ?” 


இங்கு , யார் -யாருக்காக வெட்கப்பட வேண்டும் ? 


கருப்பு ஜூலை நினவு ஏந்தலுடைய வர்க்க அரசியல் என்ன ? 


சாதியை, மதத்தை, இனத்தை, பிரதேசத்தை, பால் வேறுபாட்டைச் சொல்லி சும்மா கடந்து போக முடியாது !


சிங்கள -தமிழ் ஆளும் வர்க்கத்துக்குச் சாதி/மதம்/பிரதேசம் -இனம் ; மொழி உண்டா ? 


ஒடுக்குமுறை வர்க்கத்தை “யாழ் மேலாதிக்கம் , சைவ வேளாளிய ஆதிக்கம் தமிழ்த்தேசிய ஆதிக்கம் “  என்று பார்த்தல் சிங்கள ஆளும் வர்கத்தின் ஆதிக்கத்தையும் , அதன் வன்முறைசார் செல்நெறியையும் , இலங்கை உழைக்கும் வர்க்கத்தின்மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் வர்க்க ஒடுக்குமுறையையும் ஊக்கப்படுத்திக் காத்தல் இல்லையா ? 


சிறார் இராணுவம்  ; குழந்தைப் போராளி என்பதை புலிகள் அமைப்பின் குறியீடாக முறித்த பனை மரத்தில் தொங்கவிட்ட இந்தச் சுட்டிகள் ; சொற்பான்கள் கற்சுறா ஆக்கத்திலும் சொல்லும் அரசியல் என்ன ? 


ஐரோப்பிய -அமெரிக்க , ஆசிய , ஆபிரிக்கக் கண்டங்களதும் போராட்ட வரலாறும் ; காலனித்துவ கொடுங் கோன்மையும் சொல்லாத சிறார் இராணுவச் செய்திகளையா தமிழ்ச்சிறார் இராணுவத்தின் குறியீடுகள் பேசுகின்றன ?


கத்தோலிக்கத் திருச்சபைகள் கொல்லாத பழங்குடிச் சிறார்களின் வாழ்வு நாசத்தை விடவா புலிச் சிறார் இராணுவ வாதம் அபாயகரமானது ? இன்றும் , கனடாவிற் பழங்குடிச் சிறார் புதை குழிகள் தோண்டப்பட்டு (Canadian Indian residential school ) வெளியிற் கசியும் இனச் சுத்திகரிப்பைக் கனேடிய அரசு மறைப்புக்கட்ட முனைகிறதே ?


தினமும் கத்தோலிக்கத் திருச்சபைகளும் , தேவாலயங்களுள் , வற்றிக்கானுள் எத்தனை ஆயிரம் சிறார்கள் பாலியல் அடிமைகளாகப் கத்தோலிக்கப் பாதிரிகள் , ஆயர்மார்களால் சிறார் துஷ்ப்பிரயோகம் பல் நூறு ஆண்டுகளாக நிகழும் கொடுமை புரிந்ததா உனக்கு ? . 


இலங்கை-தாய்லாந்துக் கடற்கரைகளுள் எத்தனை இலட்சம் குழந்தைகளை அந்நியச் சுற்றுலாப் பயணிகள் பாலியல் ரீதியாகச் சுரண்டுகிறார்கள் . இவையெல்லாம் கூறும் குழந்தைப்போராளிகள் அரசியல் என்ன ? 


இன்று , உக்கிரைனில் சாகும் ஆயிரக்கணக்கான குழந்தைப்போராளிகள் முதல் அங்கோலாவில் ஏலவே செத்த இலட்சக்கணக்கான சிறார் இராணுவக் குழந்தைகளும் வரை இன்னும் ஞாபகத்துள் வந்தபடி . ஒவ்வொரு மூன்றாவது அங்கோலாக் குழந்தைகளும் அங்கவீனர்களாக்கப்பட்ட அந்நிய யுத்தத்தின் பெயரென்ன ? 


இன்று , உலகத்துள் 164 நாடுகளிற் தடை செய்யப்பட் கொத்துக் குண்டு ( Cluster munition : CBU-87 Combined Effects Munition ; CBU-97 Sensor Fuzed Weapon) பாவிக்க முடியாதென்று உலகமே சொல்லும்போது அதை உக்கிரைனுக்கு அனுப்பிவைத்து, இருஷ்சியக் குழந்தைகளைக் காலம் பூராகவும் வேட்டையாடும் அமெரிக்கனின் அறத்துக்கும் தமிழர்களின் -புலிகளின் குழுந்தைப் போராளிகள் அசியலுக்கும் வித்தியாசம் உண்டா ? 


ஈராக்கின்மீதான அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியப் பொருளாதாரத் தடையால் Antibiotic இன்றி  ஈராக்கியச் சிறார்கள் மரித்தார்களே  ; ஐந்து இலட்சம் குழந்தைகள் !! அதையும் , அமெரிக்க அரசு விலைமதிக்க முடியாத பெறுமதி மிக்க தம் அரசியல் வியூகம் என்றதே ! 


ஈராக் பாலுட்ஜா நகரத்தின்(Falludscha) மீதான நேட்டோ இராணுவப்படைகளின் தாழ் அணுக் குண்டுத்தாக்குதலால் (Depleted uranium : The DU penetrator of a 30 mm round) இன்றும் பாலகர்கள் குறைப் பிரவசமாக (Fallujah on cancer, birth defects !!!) இந்தப் பூமிக்கு வருகிறார்களே ?  


அமெரிக்க வானேவித் தாக்குதலைத் துரிதப்படுத்தினான் முன்னாள் அதிபர் ஓபமா . இந்த U.S. Drone Strikes —வானேவித் தாக்குதல்களால் உருக்குலைந்து  செத்த மழலைகள் -சிறார்கள் உலகம் பூராகவும் 4.000 என்பது சர்வதேச மன்னிப்பு சபையின்—Amnesty International அறிக்கையின் தொகுப்பினது சாட்சி . 


ஆக, இப்படி நிறைய எழுதிச் செல்லலாம் . 


இங்கு , சிங்கள இனவாத , பெளத்த பேரினவாத செளனிசத்துக்கு முன் தடுப்பு யுத்தத்தைச் செய்த புலிகள் தம் இருப்புக்காக மக்களை , சிறார்களைப் பலி கொடுத்தது தமிழ் ஆளும் வர்க்க பங்குச் சண்டைக்கே . என்றபோதும் , சிங்கள அரச பாசிசத்தினது தமிழர்கள்மீதான இன ஒடுக்குமுறை இதன் மூலமும் அல்லது, எதன் மூலமும் (சாதி-மத-பிரதேச/தீண்டாமை) நியாயப்பட முடியாது . 


அப்படி , இந்த அரசியலை நியாப்படுத்துபவ(ள்)ன் கெட்ட கிரிமினல் மட்டுமல்ல , மக்கள் விரோதி —ஒடுக்குமுறை அரச பயங்கரவாதத்தின் லொபி —அவ்வளவுதாம் !


—ப.வி.ஶ்ரீரங்கன்      12.08.2023

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...