Thursday, February 15, 2024

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

 // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!)


அரங்கனார் சொன்ன மேற்கோள்

Die Welt ist viel zu gefährlich, um darin zu leben – nicht wegen der Menschen, die Böses tun, sondern wegen der Menschen, die daneben stehen und sie gewähren lassen


The world is far too dangerous to live in - not because of the people who do evil, but because of the people who stand by and let them 


அரங்கனாரின் மொழிபெயர்ப்பு:

 “ இவ்வுலகானது வாழவே முடியாத அதிபயங்கரமானது . இந்நிலை தீயவர்களாலோ அன்றி, ஆத்திரக்கார முரடர்களாலோ ஏற்பட்டது அல்ல . மாறாக , இத்தகைய கொடியவர்களுக்கு உடந்தையாக இருந்தபடி அவர்களின் அட்டகாசத்தை அநுமதித்து , அங்கீகரித்துவிடுபவர்களாலேயே இவ்வுலகம் ஆபத்தானதாகின்றது “. -


இவ்வுலகானது வாழவே முடியாத அளவுக்கு பேரளவும் தீயது (ஆபத்தானது, viel zu gefährlich). இந்நிலை தீயது செய்பவர்களால்  (ஏற்படுவது) அல்ல ( nicht wegen der Menschen, die Böses tun), மாறாக தீயவை செய்பவர்களுக்கு துணையாக உடன் நிற்பவர்களாலும் (sondern wegen der Menschen, die daneben stehen ) அவர்கள் (தீயவர்கள்) தீமைகள் செய்ய விடுவதாலுமே.


(அரங்கனார் Sri Rangan Vijayaratnam மிகச்சிறந்த இடாய்ச்சு மொழியறிஞர். நானோ வெறும் கற்றுக்குட்டி. ஆனால் அவருடைய மொழிபெயர்ப்பில்  " ஆத்திரக்கார முரடர்களாலோ ஏற்பட்டது அல்ல" என்னும் கூற்று எங்கு வருகின்றது என்று தெரியவில்லை. மேலும் 

 sie gewähren lassen என்பது தீயதைச் செய்ய விடுதல்  (தடுக்காமல், வாளவிருந்து செய்ய விடுதல்) என்றுதானே பொருள் தரும் அல்லவா? அரங்கனாரை விலக்கம் தர வேண்டுகின்றேன்)//  — பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் 


=============


செல்வா , தங்கள் கருத்துக் நன்றி . தமிழ் இலக்கிய உலகினுள் “இலக்கியம் சார்ந்து சிறந்த மொழிபெயர்ப்பை முன்வைத்த “  பேராசானின் தளத்தில் (முகநூல் முற்றத்துள் ) நான்  , மொழி பெயர்ப்புச் சார்ந்து உரையாடுவதில் பெரு மகிழ்வுடன் பங்கெடுக்கிறேன் . 


செல்வா , நான் இடொச்சு மொழியில் பாண்டீத்தியம் பெற்றவன் அல்ல . அப்படி , உருவாக முடியாது . டொச்சு மொழியில் சிறப்பாக எழுந்த கோத்தே கூடத் தன்னை ஒருபோதும் டொச்சு மொழி பாண்டிதர் என்று கூறார் . 


என்வரை , இம் மொழியை ஓரளவு புரியவும் , எழுதவும் , வாசிக்கவும் தெரியும் . என்றபோதும் , என் புரிதல் டொச்சு மொழியில் பயன்படும் காலம் ; இடம் , பொருள், நிலவிய சமூகச் சூழல் , பண்பாடு , அரசியல் , சமூக நிலவரங்களை அறிந்தே ஒரு சொல்லை மொழியாக்கஞ் செய்வேன் . 


ஐயனே , தங்கள் கேள்விகள் , மொழியர்பு வாக்கியங்கள் அனைத்தும் சரியானது . ஆனால், நேரடி மொழி பெயர்பு எனக்கு உகந்தது அல்ல . நான் , மொழியாக்கஞ் செய்பவன் . இது , டொச்சுச் சூழலைத் தமிழிற் சொல்லும் கரிசனையுடையது. 


மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை . அதிலும் , டொச்சு மொழியை -வாக்கியத்தை நேரடியாக மொழிபெயர்த்தால் இது, முழுக் கொலையாகிவிடும் . 


உதாரணம் : “Regenschirm “ இதை நேரடியாக மொழி பெயர்த்தால் “மழைக் குடை “ தமிழில் அங்ஙனம் உரைக்க முடியாது . எனவே , தமிழுக்குக் குடை , வெய்யிலிலும் , மழையிலும் பிடிக்கும் ஒரு பொருள் . எனவே , மழையை விட்டுக் குடை என்பதே சரி . மேற்குலகில் அது மழைக்கு மட்டும் பிடிக்கும் Regenschirm ! 


கூடவே , டொச்சு மொழியை பல்வேறு காலக் கட்டங்களில் அதிகாரம் துஷ்பிரயோகஞ் செய்துள்ளது . இது , நேரடியான வார்த்தைகளுக்குள் உள் அர்த்தம் மறைமுகமான எதிர்மறை (Schwarze Rhetorik ) கொண்ட தாக்கத்தைக் குறித்து நிற்பவை . நாசிய காலத்துள் 1920-1945  மூன்றாம் பொற்காலம்(Drittes Reich) என்று வரையறுப்பார்கள் . இக்காலத்துள் டொச்சு மொழியில் அடைப்படை அர்த்த வேறு பாடுகள் திணிக்கப்பட்டன . இது குறித்து „Sprachwandel im Dritten Reich „(Von Seidel, Eugen und Seidel-Slotty, Ingeborg) என்று ஆய்வு நூலே 1961’ஆம் ஆண்டு வெளி வந்தது . 


இங்கு , பாசிசவாதிகள் மொழியை எங்ஙனம் தூஷ்பிரயோகஞ் செய்தார்கள் என்று புரிய சில சொற்களைத் தருகிறேன் :


Schwarze Rhetorik  im Dritten Reich: 


„ Jedem das Seine“ —„Arbeit macht frei“

இதை நேரடியாக மொழி பெயர்ப்பவருக்கு வராலாறு புரியாது போனால் பூர்வீகக் கீரேக்க தத்துவார்த்தக் கருத்தாக அதை “ ஒவ்வொன்றும் அவரவருக்குரியது , வேலை ஒருவரைச்  சுதந்திரமாக்கும் “ என்று மொழி பெயர்ப்போம் . ஆனால் , இவ் வார்த்தைகள் டொச்சு மொழிக்குள் , அவர்களது வரலாற்றில் “ யூதர்களிடம் உள்ள சொத்தைப் பறித்து , அவர்களுக்குக் கடூழியம் கொடுத்துக் கொல் ( Vernichtung durch Arbeit) “ என்பதாகும் . Arbeit macht frei என்பது நாசிகளின் மொழியில் “ கூலியின்றி ,?உணவின்றி உன்னால் உடல் உழைப்பை எங்களுக்குத் தரும் வரை நீ, உயிரோடிருப்பாய்” என்பதே பொருள் . 


இது , மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்யும் கருப்பு சொல்லாட்சி ! 


அடுத்து , டொச்சு மொழியிலுள்ள “ஐன்ஸ்ரைன் கருத்து” எப்போது , யாருக்காக சொல்லப்பட்டது ?; எந்தச் சூழ்நிலையில் இக் கருத்தை ஐன்ஸ்ரைன் உபயோகப்படுத்தினார் ? இக் கேள்விக்கு விடை தேடாமல் நேரடி மொழிமாற்று சரியாகாது . 


1953’ஆம் ஆண்டு இஸ்பானிய இசைமேதை பவ் காசல் (Pau Casals) அவர்களைக் கொளரவிக்கும் விளா பிரான்சில் நடந்தபோது ஜன்ஸ்ரைன் எழுதிய குறிப்பில் இந்த வாசகத்தை எழுதுகிறார் . காரணம் : Pau Casals  அவர்கள் இசுப்பானியச் இராணுவச் சர்வதிகாரி பிரங்கோ(Franco) எதிர்த்தும் , 1933’ஆம் ஆண்டு கிட்லரின் அழைப்பை ஏற்க மறுத்தும் பாசிசத்துக்கு எதிராகப் போராடினார் Pau Casals  அவர்கள் . 


அதற்காக , கொளரவப்படுத்த ஐன்ஸ்ரைன் கீழ்வரும்படி எழுதுகிறார் : “Pablo Casals hat klar erkannt, dass die Welt mehr bedroht ist durch die, welche das Übel dulden oder ihm Vorschub leisten, als durch die Übeltäter selbst."
Albert Einstein


இதன் பொருள் : “ பாப்லோ காசல் அவர்கள்,  “இவ்வுலகினுள் தீமை செய்பவர்களை விட தீமையை பொறுத்துக்கொள்ளும் அல்லது ஊக்குவிப்பவர்களால் உலகம் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பதை தெளிவாக உணர்ந்தார்” . இதுதாம் , ஐன்ஸ்ரைன் குறித்த சரியான இடஞ் சூழலுட் சொன்ன கருத்து . இது குறித்துப் பல நூறு விளக்கங்கள் வெளியாகிவிட்டென! செருமானியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான பொழிப்புகள் வெளியிடப்பட்டன . 


அடுத்து > gewähren< என்ற சொல்லுக்குப் பல்வேறு அர்த்தம் . இடம் , சூழல் , காலம் இவற்றைக் கணக்கெடுத்தால் எதையாவது தேரடியாகப் போட்டு நிரப்ப முடியாது . ஆக, 

[1] ஒருவருக்கு விரும்பிய ஒன்றைச் செய்ய அநுமதி வழங்குதல். [2] யாரோ ஒருவருக்கு ஏதாவது தயார் செய்ய ஒப்புதல் வழங்கல் (கண்டும் காணாமலும்-வாளதிருத்தல்) இத்தோடு ஒத்த சொற்கள்: அனுமதி, கொடு, வழங்கு, ஒப்புக்கொள், ஏற்றுக்கொள்.நான் , என் மொழியாக்கத்துள் அநுமதி என்கிறேன் . 


இங்கு , ஆத்திரக்காரர் ; முரடர்கள் என்று நான் சுட்டியது >பொதுப்புத்தி தீயவர்கள்< என்பதை அமைப்பின் அதிகார வர்க்கத்தைத் தமிழில் சுட்டவே . நாம் , மரபு ரீதியாகத் தீயவர்கள் /சண்டாளர்கள் என்பது தனிநபர் நடாத்தையாகப் பார்ப்பதால் அங்ஙனஞ் சுட்டுவது தமிழ்ச் சூழலுக்காக ! 


கடந்த 40!ஆண்டுகளான ஈழப்போராட்டத்துள் பு~லி~ கள் எங்ஙனம் தமிழ் மொழியைத் துஷ்ப்பிரயோகஞ் செய்தார்கள் என்றும் நோக்கினால் இந்தப் பாசிச மொழியைப் புரியலாம் .


ஈழத்தில் “கரும்புலி ; தற்கொடையாளி “ என்பதை பிறமொழியுள் சொல்லும் போது “குண்டுதாரி, மனித வெடிகுண்டு “ என்றுதாம் மொழியாக்கஞ் செய்ய வேண்டும் . 


ஈழத்தில் அடிக்கடி தாயிடம் பிள்ளைகள் சொல்லும் செய்தி ஒன்று கீழ் வரும்படி : 


“ அந்த மாமா , கடையில் நின்றபடி எனக்குத் தன் சாமானைத் துக்கிக் காட்டினார் “ என்று சிறுமிகள் சொல்வார்கள் . இங்கு , சாமான் என்பது கடையிலுள்ள பொருள் /பண்டம் அல்ல ! இதை நேரடியாக மொழி பெயர்த்தால் முழு அர்த்தமும் பாழ் ! 


—ப.வி.ஶ்ரீரங்கன்    11.02.24

Wednesday, February 14, 2024

வாழ்க,வாழ்க காதலர்-கள்!

 ஏன், வலைன்டன் மட்டும் ?


வாழ்க,வாழ்க காதலர்-கள்!

வெறி கொண்ட எதிர்-பால் வினை

"காதலர் தினம்" சொல்லி

சந்தையில் நுகரும் ரேபோக்களைத்

தானியங்கி தந்தது அசிமோ.


அசிமோக்கள் காதல்

செய்வதை நீ,அறிவாயோ?-நான் அறியேன்,

என் பராபரமே!


ஏன், வலைன்டன் மட்டும் ?


என்னிடம் கம்பன் மகன்,

"அம்பிகாவதி-அமராவதி"

விழி எதிரே

மையல் நூறு இசைத்துச்

செவியுள் ஒலியாய்... 

அமராவதி நீ,

அவசரக்காரி !,

இதன் பெயர் அறிவாயா அமாராவதி

இதுதாம் "காதல்" !! 


ஆம், காதலர் தினம் , கத்தரிக்காய் !

எக்காலத்திலும்,

காமம் எனுங் கச்சாப் பொருள்

"எதிர்ப்பால்"

காதலெனுஞ் சந்தையில் பொய்யுரைத்து

புணர்வு கேட்கும் .


"காதல்" தந்த மறு படைப்பு அன்று :

உற்பத்தி உறவு,

இன்று : அசிமோ உற்பத்திச் சக்தி

உறவறுத்த

தானியங்கித் தந்தது ஏய்ய்ய்...ஐஐஐஐ !

ரோபோக்கள் தந்த காதல்

பள்ளிக்குப் பொதி சுமக்கும் மந்தைகள்.


மூலதனப் பந்தையத்துள் 

போட்டிக்குத் தயாராகும் 

எந்தக் குதிரை ஓடும் ,

எந்தக் கழுதை பொதி சுமக்கும் ?


தெருக்களில் கரையுங் காக்காய்,

வேம்பு மரத்துக் கிளி,

பனை மரத்து மூன்று குறி அணில் அறியா

ரோபோக்கள் எக் காலத்திலும் பண்டமே .


குயிலின் கூவொலி இரசித்து,

அப்பு சாமி சொல்லிக் கை கூப்பி, வான் பார்த்துக்

காதல் என்று நீயும், நானும்

"கேள்வி-கோரல்" செய்து

கேட்பதும் நாம், சீ...தனந்தானே பண்டாரம் ?


போ,போ !, ஆளைவிடு!


காதலும் ,கத்தரிக்காயும்...


-ப.வி.ஸ்ரீரங்கன்

14.02.2024


Saturday, February 10, 2024

கரிஹரன் யாழ்ப்பாணத்தில்

 யாழ்ப்பாணத்தில் தமிழ்நாட்டுச் 

சினிமா கலைஞர்கள் ! 

“எம் காலத்தின் எல்லைகளை நாம் தாண்டிச் செல்ல கலை இலக்கியம் உந்து சக்தியாக இருக்க வேண்டும் “ 

யாழ்ப்பாணம் : கரிஹரன் இசை நிகழ்ச்சியும் , இளைஞர்கள் திரட்சியும் திறந்த சமுதாயத்துக்கான (Die offene Gesellschaft— Karl Poppers  ) „விசும்பு நிலை அரும்புகள்“இவை ? 

யாழ்ப்பாணம் /வடமாகாண மக்கள் கிழக்கிலங்கை ; தென்னிலங்கை மக்கள் போன்று திறந்த சமூகத்தவர்கள் அல்ல , என்பது கடந்த 200 ஆண்டுகால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் நிச்சியம் புலப்படும் .

இறுகிய பழமைவாதக் கண்ணோட்டம் , பிடிவாதமான சாதிய/மத அடிப்படை வாதங்கள் , சிதறிய சமூகக் குழுக்கள் , பொருளாதார ஏற்ற இறக்கம் , மொழிவாரியான / பிரதேசவாதியான பண்பாட்டுக் கட்டுப்பெட்டி எண்ணங்கள் என்று யாழ்ப்பாணத்துக்கேயான சைவ வேளாள மதவாத நம்பிக்கைகள் (Fideismus)  என்று , இறுகிய மூடிய சமுதாயமே யாழ்ப்பாணச் சமுதாயமாகும் . 

ஆகவே , ஒரு சமூக அமைப்பு என்பது ஒத்த கருத்துடைய மனிதர்களின் கூட்டாக இருப்பினும் நிலவும் , அதிகாரத்துவத்தின் வழி சட்டவாதமாக எழுந்த அரச பலவந்தத்தின் மூலமே அது சமுதாயமாக நிலைநாட்டப்படுகிறது .

எம் , சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் நாம் கடந்த 50 ஆண்டுகளாக -அதாவது , அரை நூற்றாண்டாக இரண்டு அரச ஜந்திரங்களுக்குள் மாட்டுப்பட்டு இருவேறு நலன்களின் வழி ஒடுக்கப்பட்டவர்கள் . 2009’ஆம் ஆண்டு  முள்ளிவாய்க்கால் வரை பல்வேறு இயக்கவாத ஆயுத அழுத்தம் , பு.லி அரசு/இராணுவ ஜந்திரத்தின் கருத்தியல் -ஆயுத ஒடுக்குமுறைக்குள் கட்டாயமாக உந்தித் தள்ளப்பட்டு யுத்தகால அரசியற் பொருளாதாரத் திசைவழியில் இறுக மூடிய திறந்த வெளிச் சிறைக்குள் வாழ்ந்தவர்கள் ஈழமக்கள் . 

அவ்வண்ணமே , சிங்கள அரசும் அதன் , வன்முறை ஜந்திரமும் நம்மை வலு கட்டாயமாக குறிப்பிட்ட எல்லைக்குள் , நிலப்பரப்புக்குள் தள்ளிக் குண்டுகள் போட்டு , இன ஒடுக்குமுறையை நம் மக்கள்மீது திணித்தது . 

ஒருவகையில் , இஃது, ஆக்கிரமிப்பு இராணுவ ஒடுக்குமுறைக்குட்பட்ட ஈழத்துள் “ஈழமக்களும் , அவர்களது தாயகமும்” சிங்கள அரசின் இராணுவக் கொலனியாக (Sri Lankan Military Colonies) மாற்றப்பட்டு இருவேறு அரசுகளின் வன்முறை ஜந்திரங்களுக்கு முகங் கொடுக்கும் நிர்ப்பந்தத்தை தமிழ்மக்களுக்குக் காலம் வழங்கியது . இது சமூக ஒடுக்குமுறை  விலங்காக எழுந்தது . 

ஈழமக்களின் சகல வாழ்வுசார்ந்த சமூக அசைவியக்கமும் அரை நூற்றாண்டாக மட்டுப்படுத்தப்பட்டது . இன்று , இது மாற்றுவடிவில் பண்பாட்டு ஒடுக்குமுறையாக மெல்லமெல்ல நகருகிறது . 

இதனால் , நம் மக்கள் சமுதாயம் பொருளாதார வளர்ச்சியின்மையால் கல்வி , பண்பாடு , உள வளர்ச்சி குன்றிய மூடிய சமுதாயமாக உருமாறியது . 

சனநாயகம் குறுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்திடம் ஒருபோதும் அக வளர்ச்சி உச்ச நிலையடையாது . ஒவ்வொரு தனி நபரும் அடுத்த நாள் உயிர் வாழ்வதைத் தீர்மானிக்கும் சகத்திகளாகச் சிங்கள அரசும் ; பு~லி அரசும் கை கோர்த்தன . இதை , நம்மிற் பலர் யோசிக்க மறுக்கும் தருணத்தில் நம்மை நாம் கடந்த ஈழப்போராட்ட வரலாற்றிலிருந்து துண்டித்துக்கொள்கிறொம் . அல்லது , நம் சமூக வாழ்விலிருந்து அந்நியமாகிறோம் . 

இதைப் புரிந்து கொள்ளுங்கள் . 

ஆக , நம் மக்கள் , கடந்த 2009 ‘ஆம் ஆண்டு வரை யுத்த அழுத்தத்துக்குள் மரணப் பயத்துடன்(Angst und Panik )உயிர்  வாழ்ந்தவர்கள்! 

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் யுத்தமே விடியலுள் நகர்ந்தது ; சிங்கள இராணுவ ஒடுக்குமுறை / இயக்கங்களது அராஜக ஒடுக்குமுறை என்று பல்வேறு அழுத்துங்களுக்கு (Im Schatten des Kriegstrauma ) முகங் கொடுத்துத் தினமும் கொலைகளையும் , குண்டுத் தாக்குதலையும் ; யுத்தத்தையும் அநுபவித்து முடங்கிக் கிடந்தவர்கள் , ஈழமக்கள் .

இந்த ஈழமக்கள் தோல்வி , இழப்பு , குடும்பங்கள் குலைவு , மரணம் , வலி, காயம் உடல் -உள , பொருளிழப்பு , பொன்னிழப்பு , குடியிழப்பு -ஊரிழப்பு ; உயிரழப்பு என்று வாழ மறுக்கப்பட்ட / மறக்கப்பட்ட எண்ணங்களோடு (Seelische Last) அழிவுகளைச் சந்தித்தவர்கள் .

யுத்தத் தோல்விக்குப் பின்பான காலம் என்பது , பல்வேறு சிதைவுகளுக்கு (die Traumata )ஒத்தடம் போடும் காலம் ! 

இது , உலகம் பூராகவும் நாம் கண்ட வரலாறு . இன்று , நம் மக்களும் இதற்கு விதி விலக்கல்ல . 

இந்த யுத்தத்தின் நிழலுக்குப் பின்பான ஆன்ம/உளக் காயங்களது விலி (Im Schatten des Kriegstrauma) குறித்து நாம் எந்த யோசனையுமின்றி இலங்கையில் / தமிழ் நிலப்பரப்பில் “அது, நடக்குது ; இது நடக்குது “என்று விவாதிக்கின்றோம் ! 

இங்குதாம் யாழ்ப்பாணத்தில் இன்று பெருவாரியகத் திரண்ட மக்களின் உள அவாவை ; விருப்பை , கேளிக்கை மனதைப் புரிந்தாக வேண்டும் . மக்கள் , கூடிக் களித்துக் கொண்டாடி வலிகலைத்தல் /தணித்தில்  என்று இந்த சூழலைப் புரிவதுள் கஷ்ட்டம் என்ன ? 

இது , பின்போராட்டக் காலம் .கடந்த 15 ஆண்டுகளாக ஒரு தலைமுறை கனவுகளுடன் வளர்ந்து வருகிறது . அதற்கு , 20 வயது நிறைந்து உலகை மற்றவர்கள் போன்று எதிர் கொள்ள முனைகிறது . இது தமன்னாவிடம் ஈர்ப்புக் கொள்வது எதிர்ப்பால் வினைமட்டுமல்ல . இதுவரை திரையில் பார்த்த பெண்ணுடலைக் கண்ணெதிரே அது காண விரும்புகிறது . தான் கேட்டு இரசித்த பாடல்களது பாடகன் நேரே வருகிறான் என்றால் ஆவல் மேலிட அனைத்தையும் மீறி அவன் முன்னே உந்திச் சென்று விழியெறியும் சுயவிருப்பு எப்படி காட்டுமிராண்டித்தனமாகும் ? 

அடக்கி வைக்கப்பட்ட மக்கள் , பல்வேறு பக்கம் அலைவார்கள் , கோயில்கள் ; குளங்கள் பக்கமும் , சிலைகள் கட்டுவதும் கும்பிடுவதும் , புத்த தரிசனத்தை நாடுவதும் , காதல் செய்வதும் , களிப்பதும் , உடைகள் , அலங்காரங்கள் ; ஆடல்கள் , பாடல்கள்  என்று , மக்கள் கொண்டாட்ட நிலைக்கு- திசைக்கு நகர்வார்கள் ! 

 இது , அவர்களின் ஆன்மீகத் (இறை நம்பிக்கை அல்ல . மாறாக , இது, மனித வரலாற்று அடிச் சுவட்டில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது  இந்த உலகுக்கும் , மானுடனுக்கும் உள்ள உறவு ; உழைப்பு /படைப்பு . படைப்பு என்பதே உலகத்தைப் பற்றிய மனிதர்கள் கொண்டுள்ள சிக்கலான ஆன்மீக உறவுகளின் அதியுச்சப் பிரகடனமாகும் ) தேடல் . எனவே , ஈழமக்கள் தமது மனிதத் தன்மையை  இழக்கமால் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டுவர அவர்கள் உழைப்பில் ; படைப்பில் , இரசனையில் , துய்ப்பில் ; கலா தரிசனத்தில் இருந்தே ஆகவேண்டும் . ஏனெனில் , நாம் சமூக மனிதர்கள் என்றுணர இந்தக் கலை உழைப்பு அவசியம் . ஆத்மீகம் , பண்பாடு , கலை வளர்ச்சி , இரசனை , நடனம் , பொழுதுபோக்கு இல்லாத சமுதாயம் தேங்கிய குட்டை . இந்தக் குட்டையில் ஊறிய ஈழமக்கள் இந்தக் குட்டையை விட்டுக் கடலை நோக்கி அருவியாகப் பாய்வதற்கு கலை வாழ்வு அவசியமே ; துய்ப்பு அவசியமே . 

ஆக , இந்தக் கலைப் படைப்புகளை கொடுப்பவர்கள் (கலைஞன் /படைப்பாளி) புரட்சிகரமான உத்வேகங் கொண்டவர்களாகவும் , சமூகத்தைப் புரட்சிகரமாக அணுகுபவர்களாவும் இருக்க வேண்டும் . இங்குதாம் , நாம் தமிழ்நாடு /இந்திய சினிமாக் காரர்களை எண்ணி அச்சப்படுகிறோம் ! வர்க்க உணர்வு -போராட்ட உணர்வு சிதைக்கப்பட்டு நம்மை மந்தைகளாக்கி விடுமோ இந்திய அரசு என்று அச்சப்படுகிறோம் . இந்த அச்சம் நியாயமானது . ஏனெனில் , நாம் போராடப் புறப்பட்டபோது நம்மைத் தகவமைத்த இந்திய வியூகம் நம் மக்களில் நான்கு இலட்சம் மக்களை நாம் கொன்றுதள்ள வழி வகுத்தது . 

யுத்தம் , இராணுவ ஒடுக்குமுறை , மட்டுப்படுத்துல் ; கட்டுப்பாடு , ஒடுக்குமுறை , சனநாயக மறுப்பு  தளரும்போது மக்கள் தம் வரலாற்று மரபார்ந்த உளவியலூக்கம் மீளப்பெறுவார்கள் . இந்த அடிப்படையில் ,ஆண்-பெண் இனம் மாறி , மதம் மாறி , சாதி மாறிக் காதல் வயப்பட்டு , மணங் கொண்டு வாழ்வார்கள் . இராணுவ இளைஞன் தமிழ்ப் பெண்ணைக் காதலிப்பான் , அவனைத் தமிழ்ப் பெண் - முசிலீம் பெண் காதலிப்பாள் ; கல்யாணஞ் செய்வாள் . கூட்டுப் பண்பாட்டை நுகர்வார்கள் ; கலைகளை ; கேளிக்கைகளைத் தேடி ஓடுவார்கள் . இது, மானுட நடாத்தை . 

ஆக , “சிங்களப் பெண்ணே வா ; தமிழ்ப் பெண்ணே போ “ என்றெல்லாம் பாடி மாறிக் கல்யாணஞ் செய்து , சமூகம் பன்முகத் தன்மை பெறும் . 

ஓர் கலப்பு மக்களினம் என்பது அழகியது . பல்லினப் பண்பாடு (multiculturalism) என்பது யுத்தத்தின் பின்பான காலத்தோடு(Postwar period) அதிகம் ஊக்கமுற்றுச் செயலாக்கம் பெறுவது . 

இதுதாம் , சமுதாயத்தின் பிணியகற்றியாக என்றும் மக்களால் உள் வாங்கப்படுவது .

இதைப் புரிந்தால் , “எந்தச் சிலைகள் ; மதங்கள் , இனங்கள் -சாதிகள் ; பிரதேசங்கள் எங்கு கலந்தால் உனக்கு என்ன-எனக்கு என்ன ?” என்ற உலகப் புரிதல் , உழைப்பால் ஒன்றுபடுதல் புரியும் .

தனித்த குட்டைகள் , இனிமேல் எங்கும் கிடையாது . கிணற்றுத் தவளைகள் அனைத்தும் மேல் நோக்கி நகர்ந்து வெளியேறும் . இதுவே , சமூக அசைவியக்கம் .எல்லாம் , மாறும் ; மாற்றப்படும் . இது, காலத்தின் விதி ! எனவே , கலை இலக்கியம் ; சினிமா , ஆடால் பாடல் எல்லாம் , எங்கும் பரவட்டும் ,மக்கள் மகிழ்ந்திருக்கட்டும் . அதுவே , ஆற்றலுள்ள சமூதாயத்தைப் படைக்கும் . ஏனெனில் , இலக்கியம் என்பது „ Second Nature of life „  ஆக , இரண்டாவது இயற்கையைக் காப்போம் ; வாழ்வோம் . 


—ப.வி.ஶ்ரீரங்கன்                10.02.2024

Sunday, September 17, 2023

திரிகோணமலை : ஆத்திரமூட்டும் அரசியல்

 திரிகோணமலை : கட்சிவாத அடையாள அரசியலும் , ஆத்திரமூட்டலும் (Provokation) ; அடிபாடுகளும் —சிறு, குறிப்பு ! 

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி பார்த்திபன் இராசையா செய்த சாகும்வரை உண்ணாவிரதம் அவரது மரணத்தில் முடிந்தது . அவரை , மரணிக்குவரை நடாத்தப்பட்ட அரசியற் சூதாட்டம் மிகவுந் தந்திரமானது ; ஆதிக்க சக்திகளது பலப்பரீட்சை ஆயுதத்தால் மட்டும் நிலை நாட்டப்படுவதில்லை . ஆதிக்கம் என்பது , எங்கும் , எப்போதும் பெரும் பகுதி மக்களது நம்பிக்கையினால் மட்டுமே நிலைப்பெறும் ; சாத்தியமாகும் . 

20’ஆம் நூற்றாண்டில் அகிம்சை மீதான இந்திய மக்களது நம்பிக்கையே காந்தியை மகாத்மா ஆக்கியது . அந்த நம்பிக்கையே ஆதிக்கமாகவும் எழுகிறது . 

1987’ஆம் ஆண்டு பார்த்திபனின் அகிம்சைமீதான நம்பிக்கை அவனை பட்டுணி கிடக்க வைத்தது . ஆனால் , ஈழமக்களிடம் ஆயுதத்தின் மீதான காதலே இருந்த காலத்துள் அகிம்சை என்பது பாரிய நம்பிக்கையாக நிலவவில்லை .இதனால் , அவன் தோல்வியொடு “தியாகி தி~லீ~பன்” என்றானான் ! 

சாகசம் நிறைந்த கொரில்லா தாக்குதற் குழுவொன்று , ஆயுதத்தை அணைத்தபடி பார்த்திபனை தி~லி~பனாக்கி அகிம்சை நாடகத்தை அரசியலாக்கியது . இந்த அமைப்போடு ஐக்கியமாகிய மக்களும் அகிம்சையை மிகவும் மலினப்படுத்தி இந்தியாவோடு சொறிந்தார்களேயொழிய அகிம்சை மீதான பற்றுதியோ , நம்பிக்கையோ கொண்டு இயங்கியவர்கள் அல்ல, ஈழத் தமிழர்கள். எல்லாம் , வெறும் நடிப்பு /நாடகம் !

எனவே , 1987’ஆம் ஆண்டு பார்த்திபனை ஈழ மக்கள் கொல்லும் நிலைக்குச் சென்று  , அகிம்சையை மலினப்படுத்தினார்கள் . 

இந்தக் கேலித்தனமான அடையாள அரசியலை  இன்று , மீளவும்.  ஞாபகப்படுத்தி திருகோணமலையில் பார்த்திபனின் படத்தை வைத்து ஊர்த்திகள் அணிவகுப்புச் செய்து , சிங்கள மக்களின் உணர்வுகளைத்தூண்டி , மக்களை சமூகத்தளத்திலும் , தன்னிலையிலும் ஆவேசப்படுத்தியபடி; ஆத்திரமூட்டுதல் சார்ந்து இயங்கிய கஜேந்திரகுமார் யாருடைய முகவர்(Agent provocateur)? இனப்பகையைத் தொடர்ந்து ஊதிப்பெருக்கி சமுதாயத்தை அச்சப்படுத்தி , நடுங்க (Angst und Panik) , ஒடுங்க வைத்து அரசியல் இலாபம் அடைதல் சமூகவிரோதமாகும் . 

இத்தகைய அடையாள அரசியலைத் திட்டமிட்டு நகர்த்தி ,தொடர்ந்து ஆத்திரமூட்டல்களின்வழி ( Provokation) சிங்களமக்களிடமிருந்துமிருந்து தமிழினத்தை தூர விலக்கிக் கொள்ளவும் அல்லது, இனப்பதட்டச் சூழ்நிலைகளை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுத்தும் இந்த அபாயகரமான அரசியலின் பின்னே உள்ள சக்திகள் யார் -யார் ? 

தமிழ் விதேசியக் கட்சிவாத அரசியலின் தொடர்ச்சி , இங்ஙனம் ஆதிக்கத்துக்காக , அதிகாரத்துக்காக முன்னெடுக்கும் இந்த அபாயகரமான அரசியற் சதி , தமிழ்பேசும் மக்களின் நலத்தின்பாற்பட்டதல்ல.அதிகாரம்-ஆதிக்கம் என்பது ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு "தனிமனிதரை குழுவை-தேசத்தை"யென பணிவுக்குட்படுத்திச் செல்வதில் அதன் கொள்கையளவிலான பண்புகள்"அதிகாரத்தைச் செலுத்துபவரும்,அதிகாரத்துக்குட்படுபவரும் இருவேறு தளத்திலான நம்பிக்கைக்குட்படுகின்றனர்.

வர்க்கச் சமுதாயத்துள் ஒருவர் உடமை வர்க்கத்தவராகவும் மற்றவர், உழைப்பாளராகவும் தேர்ந்து போயினர். இதுள்,ஒருவர் ஆதிக்கத்தைச் சட்ட பூர்வமாக்கவும்,நிறுவனப்படுத்தவும் , அதிகாரத்தை நம்ப வைக்கவும்,அது அதிகாரத்துக்குட்படுபவரின் விமோசனத்துக்கானதெனச் சொல்லியே ஆதிக்கத்தை வியாபிக்க முனைகிறார்.இதுவே , இன்று , மீளவும் , இராசையா பார்த்திபனின் ( இ.தி~லீபன்) படத்தை வைத்து ஊர்வலஞ் சென்று ஆதிக்கத்தைப் பெற மக்களிடம் வருகிறது . மக்கள் இதை நம்ப வேண்டுமென வியூகம் அமைத்து இந்தக் கயமைவாதக் கட்சிகள் இயங்குகின்றன . 

ஆதிக்கமானது இத்தகைய தருணத்தில் நம்பகாமாக ஏற்கப்படும்போது மட்டுமே சட்டரீதியான வெளித் தோற்றத்தைச் சமூகத்துள் நிறுவனப்படுத்துகிறது. இதற்காக , கலகங்களும் ; சண்டைகளும் உருவாக்க முனைதல் கூட சட்டரீதியான அங்கீகாரத்தை இலக்கு வைத்தே நகருகிறது .

இங்கு , நாம் புரிய மறுப்பது ; நம் கட்சிகள் புரிய மறுப்பது , அதிகாரமும்-ஆதிக்கமும் வெவ்வேறாகிறது என்பதையே . 

மக்ஸ் வேப்பரது[ Maxs Weber ]நீண்டவுரையாடலைச் [ Wirtschaft und Gesellschaft-Tübingen 1972 ]செழுமைப்படுத்திய  கைன்றிக் போபிற்சு[ Heinrich Popitz] இதைத் தெளிவாகவே நமக்கு[ Das Konzept Macht] உரைத்திருக்கிறார்.உயர் குடிகளுக்கான வாய்ப்பு மிக இலகுவாகவுள்ளதை அவர் புட்டுவைத்தார்.

முள்ளிவாய்க்கால்வரை தமிழ்த் தேசியமானது தனது சக்திகுட்பட்ட அதிகாரத்தைச் செலுத்துவதற்கான நம்பிக்கைகளை மிக இலாவகமக தமிழ்பேசும் மக்களுக்குள் உருவாக்கியது.அஃது, தொடர்ந்து இன்னொரு மக்கட்டொகுதியை ஆத்திரப்படுத்தலுக்கான வழிமுறைகளைக்கொண்டே[Differentiation of Society-Luhmann,M. In Canadian Journal of Sociology 2.] ஒரு இனத்தின்மீதான இன்னொரு இனத்தின் அத்துமீறிய ஆதிக்கத்தை நிலைப்படுத்த விரும்பியது.

இதன்சாரத்துள் மறைக்கப்பட்ட நலனானது தமிழ் மேட்டுக்குடியின் நலன்களைச்சார்ந்தே இயங்கிக்கொண்டது.இதன் உச்சபட்சம் மரபார்ந்த அனைத்து அறங்களையும் நாசமாக்கியது.

இனங்களுக்கிடையிலான மூலதனவிருத்தி,போட்டிகளை மலினப்படுத்தியபோது அவை முரண்பாடுகளாகவும்-இனம், மொழி,மதம்,பண்பாட்டுக்கெதிரான தாக்குதற் கருவூலமாகப் புரிய வைக்கப்பட்ட நம்பிக்கைகளே [Symbolic Power.Critique of Anthropology-Bourdiee,Pierre.1979 ]இறுதியில் சட்டபூர்வமான ஆதிக்கத்துக்கான அரசின் உறுப்பாக மாற்றப்படுகிறது.

சில கட்சிகள் , ஆளும் வர்க்க மனிதர்களின் நலன்களது தெரிவு எங்ஙனம் ஒரு இனத்தையே மொட்டையடிக்கும் விதேசிய வாதமாக மாறுகிறதென்பதைக் கடந்த முள்ளிவாய்க்கால்வரையான சாவுவாதப் போராட்டம்  குறித்துரைக்கிறது.

இது,அதிகாரம்-ஆதிக்கம் குறித்த கைன்றிக் போபிற்சினது(Heinrich Popitz]"சட்டபூர்வமான-தன்மையிலான அங்கீகாரமின்றி ஆதிக்கம் இல்லை"[Ohne Legitimität keine Herrschaft] என்பதோடு நெருக்கமானது .

இந் நிலையில் இலங்கையின் சமூக-அரசியலை மக்கள்-மண்-இயற்கை-சூழலென அனைத்தையும் பிணைத்து உள்வாங்கியவொரு உரையாடலாக நகர்த்தும்போது மட்டுமேதாம் இலங்கை மக்கள் அனைவருக்குமானவொரு இலங்கையை நாம் யோசிக்க முடியும் . அதுவரை , இனங்களை ஆத்திரமூட்டி , ஒருவரையொருவர் வேட்டையாட வைக்கும் அரசியல் தொடர் கதையாகும் ! 

உலகம் பூராக நாம் , உழைப்பின் உறவால் ஒன்றுபட்ட மனிதர்கள்.

நமக்கு"இனம்-மதம்-மொழிவழித் தேசம் "என்பவைகள் இரண்டாம் பட்சமானவை. 

இவைக்கும்,உழைப்பவர்களது,ஒடுக்கப்படுபவர்களது,தாழ்த்தப்படுபவர்களது,இந்த அமைப்பால் விளிம்புக்குத் தள்ளப்பட்ட வலுவற்றவர்களது "சுகவாழ்வுக்கும்-விடுதலைக்கும்" எந்தத் தொடர்புமில்லை!

தமிழ்பேசியவர்கள், தமிழர்களை ஒடுக்கவில்லையா?

தாழ்த்தவில்லையா?

கொன்று இரயர் போட்டெரிக்கவில்லையா?

துரோகி சொல்லிப் பொட்டு வைக்கவில்லையா?

இவைக்காகத்"தமிழீழம்"என்ற ஒரு புனைவை முன்தள்ளித்தாமே நியாயம் கூறினர்?

அந்தத் "தமிழீழம்" இன்றெவரது கைக்குச் செல்வத்தைக் குவித்து வழங்கியிருக்கிறது-எந்தெந்தக் குடும்பங்களது தலைமையில் அதிகாரத்துக்கான திசையமைவுகளை இன்றுவரை பார்த்திபன் படத்தைக் காவிக்கொண்டியக்கி வருகிறது? 

எவரெவரோடு கூட்டுவைத்து இலங்கையிலும்,மேலைத் தேசங்களிலும் இயங்கிக்கொள்கிறது?

இத்தகைய ஏமாற்றை-வரலாறு விட்டுச் சென்ற பக்கங்களை நாம் இயல்பான அறிவாய்வுப்பண்பாடு தமிழ்த் தேசிய மாயையை விலத்திச்சொல்லும்போது உண்மைகளை நாம் தரிசிக்கவிடாத தேசிய வாதத்தைக் குறித்து மீள் மதிப்பீட்டுக்கு வரமுடியும்.

இதுள்,"இனம்-மொழி-மதம்-தேசம்"கடந்து வர்க்க ஒன்றிப்பில் நிகழும் இயக்கப்பாட்டை நோக்குங்கள் இளையோரே!

எனவே , நமக்கான உண்மையைக் கண்டடையக் கல்-முள் கொட்டப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுவுண்மைசார்ந்த ஆய்வுப் பாதைக்குள் நடந்தே தீரவேண்டும்.


நமக்கு இதைவிட வேறு குறுக்குப் பாதையில்லை!


—ப.வி. ஶ்ரீரங்கன்           17.09.2023

Thursday, August 24, 2023

பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது !

 சந்திரயான்-3 ‘ம் நம் மக்களும் : பலி ஆடுகள் ! , “பல்வேறுபுரிதலைக் கோரி”—சிறு சுட்டிக் காட்டல்கள் ! 


.விஶ்ரீரங்கன் 


பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது ! , இது , சீனாவுக்கான சங்கதி . 


உருசிய நிலவாய்வுச் செய்மதி இலூனா-25(Luna-25)விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகுஇந்தியநிலவு தரையிறங்கும் பணி தீர்க்கமான கட்டத்தில் நுழைந்து , நேற்றுப் புதன் கிழமை 23.08.23  அன்றுபாதுகாப்பாக நிலவுத் தரையில் சந்திரயான்- 3 (Chandrayaan-3 ) இறக்கி விடப்பட்டுள்ளது . இதன் , உயிர்வாழும் காலம் இரு கிழமைகளே ! 


இந்தியாவின் விண்வெளி நிறுவனம் நிலவின் தென் துருவத்தில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முயற்சி செய்துவெற்றியீட்டியுள்ளது !  இதன்மூலம் , இந்தியாவானது ஒரு விண்வெளி பயண நாடாகத் தன்னைமாற்றியமைத்து விட்டதென்பது உண்மை .


சந்திரயான்-3 நிலாவுக்கு தரை இறங்குவதற்குமுன் உருசிய இலூனா-25 நிலாவில் தரையிறங்கப்பட்டஅவசரமும் பின்பு அதன் தகர்வும் நிச்சியக்கப்பட்ட பின்பே இந்த நிகழ்வுகள் இடம் பெறுகின்றன . 


இதன் , உள்ளர்த்தம் நமக்குப் பல சந்தேகங்களை விட்டு வைத்துள்ளது . இங்கு நிகழும் விஞ்ஞானவிளையாட்டுக்கு என்னபெயர் ? உலக முதற்றர வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவுக்கான போட்டிக்குஇந்தியாவைத் தயார்ப்படுத்திக் களத்துக்கு அனுப்பும் CIA‘ யின் வான விளையாட்டா இது ? கடந்த காலத்துள்  சீனாவையும் , இந்தியாவையும் அடிபட வைத்தவர்கள் அமெரிக்கப் புலனாய்வுத்துறை என்பதை நாம்ஆதாரபூர்வமாக (Covert operation —National Security Act ) நிரூபிக்க முடியும் . அவ்வண்ணம் , இந்தியஅனைத்து தேசிய-மாநிலக் கட்சிகளையும் , திராவிடக் கட்சிகளை ; இயக்கங்களையும் CIA தன்கட்டுப்பாட்டுக்குள் 1965’ ஆம் ஆண்டே கொணர்ந்தது . அதன் பின் இந்தியாவுக்கான புலானாய்வு துறையை(Research and Analysis Wing) 1968’ஆம் ஆண்டு அமெரிக்கப் புலனாய்வுத்துறையே நிர்மாணிக்கஆலோசனை வழங்கியது . 


அன்றைய இந்திய-சீன யுத்தம் 1962’இல்( Sino-Indian War ) ஆரம்பிக்கத் தூபமிட்டவர்கள் அமெரிக்கர்கள் . அப்போது , இருகசியமாகச் சீனாவைக்குள் போதைப் பொருள் நுழைத்து யுத்தஞ் (Air America: größte Fluggesellschaft Südostasiens während des Vietnamkriegs, von der CIA kontrolliert und seit 1962 intensiv für Geheimoperationen und zum Schmuggel von Heroin eingesetzt)  செய்தது . இக்காலக்கட்டத்துள் 1959 ‘ ஆண்டிலேயே திபேத் வசந்தம்(1959 Tibetan uprising) மூலம்அமெரிக்காவோடிணைந்து இந்தியா மூக்கை நுழைத்தது . CIA முற்று முழுதாக இந்தியாவைச் சீனாவுக்குஎதிராக வளர்த்தெடுத்தது . அதேபோல் திபத்தைச் சீனாவுக்கு எதிராகத் தகவமைத்துப் பயிற்சி வழங்கிது (The CIA trained Tibetans from 1957 to 1972, in the United States, and parachuted them back into Tibet to organise rebellions against the PLA. ) . இது வரலாற்று நிகழ்வுகள் மட்டுமல்ல . இன்றைய இந்திய வானவியற்திட்டத்தின் பின்னால் அமெரிக்கா உண்டு . எங்ஙனம் நாசா SpaceX என்று மாற்று வடிவத்துள் நுழைகிறதோ , அதே வியூகத்தோடு அஃது , இந்திய ISRO வடிவமாகவும் மாற்றுமுறுகிறது இந்திய முகத்தோடுஇதுசீனாவைஎதிர்கொள்ளும் அமெரிக்க யுக்தி !


சந்திரயான்-3 திட்டம்தெற்கு மாநிலமான ஆந்திராவில் உள்ள இந்தியாவின் முக்கிய விண்வெளித் தளத்தில்இருந்து ஜூலை 14 அன்று ஏவப்பட்டது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) சந்திரயான்-3 பணி பற்றிய மிக முக்கியமான உண்மைகளைஇங்கே , மேல உங்களுக்குச் சொன்னேன் . இது , முற்றிலும் அமெரிக்க வல்லாதிகத்தின் அடுத்தகட்டசீனாமீதான யுத்தத்தின் முன் தயாரிப்பு என்பதே உண்மையாகும் . 


சந்திரயான்-3ன் இலக்கு என்ன?


சந்திரயான்-3 பணியின் குறிக்கோள் நிலவின் தென் துருவமாகும்இது உறைந்த நீரின் ஒரு பகுதிஇதுஇறுதியில் நிரந்தர சந்திர காலனிக்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கலாம்.


வெற்றிகரமாகத்  தரையிறங்கிய இந்த விண்கலம் -செய்மதி சந்திரயான்-3 , இரண்டு வாரங்களுக்குசெயல்பாட்டில் இருக்கும் அத்தோடு நிலாவினது மேற்பரப்பின் கனிம கலவையின் ஸ்பெக்ட்ரோமீட்டர்பகுப்பாய்வு உட்பட தொடர்ச்சியான சோதனைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக நியூயோக்கர்ரைம்ஸ் பல்லிளிக்கிறது . 


நாசா நிர்வாகி பில் நெல்சனின் கூற்றுப்படிஅமெரிக்க விண்வெளி நிறுவனம் இந்தியப் பணி என்ன கொண்டுவரும் என்பதைப் பார்க்க "உற்சாகமாகஉள்ளதாம்எனக்குச் சிரிப்பு வருகிறது நண்பர்களே . செய்பவனும் , செய்து முடிப்பவனும் கிருஷ்ணாவான நாசாதாம் ; அமெரிக்காதாம் ! பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில்தேரோட்டிய கண்ணனைப் போல் அமெரிக்கா இந்தியாவுக்கு —ISRO‘வுக்குத் தேரோட்டுகிறது ! , இது , சீனாவுக்கான சங்கதி . 


இங்கே , உருசிய இலூனா-25 ‘இன் அவசரமாகப் பயணித்துச் சென்றதன் மர்மம் துலக்கப்பட்டதா ? அல்லதுதுலங்குகிறதா? ; துலங்க வேண்டும் ! பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் கூட்டுத் தொடர் நிகழ்வில் இந்தச்சந்திரயான்-3 ‘ இன் வெற்றி பேசப்பட வேண்டுமென்பது திட்டமிடப்பட்ட வித்தை . அபெரிக்காவானது பிரிக்ஸ்(BRICS) கூட்டமைப்பை இந்தியவெனும் ஆப்பை உருவாக்கிப் பிளப்பதன் அரசியல் இது . 


அரசியல் ரீதியாகவும்பொருளாதார ரீதியாகவும் நிறைய ஆபத்து உள்ள இந்தத் அமெரிக்க-இந்தியக் கூட்டுச்சதி , வளர்ந்துவரும் சீனாவை இந்தியாவுடன் மீளக் கொழுவ வைத்து இந்தியாவின் மூலம் சீனாவைப்பலவீனப்படுத்தி சீனாவை அமெரிக்கா அடித்து வீழ்த்தும் தந்திரத்துக்குட்பட்ட வியூகமாகும் .


வெற்றிகரமாக்க் காட்டப்பட்ட சந்திரயான்-3’இன் இயக்கத்தின் மூலம்அப்போதைய  சோவியத் ஒன்றியம்உட்பட , அமெரிக்கா மற்றும் , சீனாவுக்குப் பிறகுசந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாகஇந்தியா மாற்றப்பட்டுள்ளது , அமெரிக்காவால் . இதற்கான சஞ்சோற்றுக் கடன் , சீனாமீது சகலவழிப் பின்கதவு-பனியுத்தம் ஒன்றை இந்தியாவின் மூலம் செய்தலாகும் . 


மேலும் , அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தன்னை விண்வெளி சக்தியாக நிலைநிறுத்தியபடிபாரதிய ஜனதா அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிலைத்து ஆட்சியில் அமரவும் இத் திட்டத்தின் வழி காய்நகர்த்தப்பட்டுள்ளது ! 


கூடவே , அமெரிக்க சார் தனியார் விண்வெளி நிறுவனங்கள் மற்றும் , செயற்கைக்கோள் சார்ந்தநிறுவனங்களில் முதலீடுகளை ஆதரிக்க பிரதமர் நரேந்திர மோடியையும் கட்டாயப்படுத்துகிறது அமெரிக்கா ! 


இந்தத் திட்டத்தின் பிரகாரம் அடுத்த தசாப்தத்திற்குள் அமெரிக்க-இந்தியத் தனியார் விண்வெளி நிறுவனங்கள்உலக சந்தையில் தங்கள் பங்கை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று  அமெரிக்கா தொடர்ந்து சதிசெய்து இந்தியாவைக் கட்டிப் போடுகிறது .


இஸ்ரோ—ISRO  "இந்தியாவின் விண்வெளி ஆராட்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைஎழுதி வருவதாகவும், "ஒவ்வொரு இந்தியரின் கனவுகள்இலட்சியங்களைஊக்குவித்து வருவதாகவும் நிலாப்  பயணத்தின் துவக்கநிகழ்வில் மோடிஜீ கூறியதை இங்குஞாபகப்படுத்துபடி உங்களைக் கோரி அமர்கிறேன் தோழர்களே ! ; புரிந்தவன் பிஷ்தா !!


விஶ்ரீரங்கன்          24.08.23 

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...