Monday, December 02, 2013

(இ)லீனா மணிமேகலைக்கு "எவர் " காட்டுவார் "ஆதாரம்"?

"சிங்கள-இந்திய ஆளும் வர்க்கங்கள் "ஈழத்தில்" நடந்த இந்திய-இலங்கை-அரசுகளினது யுத்தக் குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை மற்றும் தென்னாசியப் பிராந்திய மேலாதிக்க இந்திய ஆளும் வர்கத்தின் கொடிய மனிதவிரோதச் செயற்பாடுகளை  மெச்சவும் அரசியல் -உளவுப் படைகளை முடுக்கிவிட்ட இன்றைய நிலையுள், இந்திய ரோவானது பல உப கூலிகளைக் கிழ்வரும்படி தகமைத்து இயக்குவது பரவலாகப் புரியவேண்டும்.

ஒரு நோக்கு நிலைக்குட்பட்டு  பல்வேறுபட்ட செயற் தளத்தில் தத்தமக்கான கூலிகளை ஏற்படுத்தியிருப்பதை இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட இலங்கையின் இற்றைவரையான அரசியல் போக்கில் பலரது புதிய-பழைய வருகையும், புலிகளுக்குள்ளிருந்து புறப்பட்ட "கலைஞர்கள்-படைப்பாளிகள்-விமர்சகர்கள்" வரையும் கூடவே, இந்தியாவின் அரசியலுக்குத் தகவமைக்கப் போதாதெனப் தமிழக்கத்துப் பல "புரட்சியாளர்கள்-குறும்படக் கோணங்கிகளென" க் கூடிக்கொண்ட அரசியல் அரங்கில், இந்தச் சுண்டங்காய்ப் பெண்ணு, லீனா மணிமேகலை போடும் தனது தனிப்பட்ட"மானப் பிரச்சனை" இந்தியாவால் ஈழத்தில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களது உயிருக்கான நஷ்ட்ட ஈடு கோரிக்கொள்ளும் யுத்தக் கிரிமனல்களாகவிருக்கும் இந்திய-இலங்கைத் தலைவர்களை எந்தக் கோட்டில் நீதிக்காக அழைத்துக்கொள்ளாலாம்?

லீனா மணிமேகலை கட்டியமைக்கும் "தூய படைப்பாளி",மற்றும், வேலைக்கான ஊதியம் பெற்றுச் செயற்படும் அவரது "நாணயம்" தனிப்பட்ட தொழில் ரீதியான முனைப்பு-ஆளுமை-செயற்பாடென்பது வரைப் புடுங்கி அடுக்கும் மணிமேகலை ,ஈழத்தில் ஒரு தேசியவினத்தின்மீதான படுகொலை அரசியலைச் சுற்றிக் கட்டிப்போடும் படைப்பு இரகசியம் வெறும் மனிதாபிமானமெனும் போக்கில் வரலாற்றைப் பதிந்துவிடத் துடிக்கும்-தவிக்கும்  ஆளும் வர்க்கத்துக்கான கரச் சேவைக்கு "ஆதாரம் இருந்தால் காட்டு,இல்லையோல் மான நஷ்ட ஈட்டு வழக்குத் தொடுப்பேன்"  என்ற அரசியலுக்குள்  இந்திய ரோவினது நல்ல பிற்புலம் -ஒத்துழைப்பு இருக்கத்தாம் வேண்டும்.


உலகெல்லாம் வேவு பார்த்தும், பல நூறு உலகத் தலைவர்களை ஒட்டுக்கேட்டும் அம்பலப்பட்டுப்போன அமெரிக்க ஏகாதிபத்தியமோ"எங்கே ஆதாரம் இருந்தால் காட்டு"என்று திமிர்த்தனமாகப் பாதிக்கப்பட்ட தேசங்களைப் பார்த்துக் கேட்பது போன்றுதாம் இந்திய ரோவுக்குப் பின்னால் ஒழிந்து "கலைப் படைப்பு-எதிர்ப்பு அரசியல் படம்"பண்ணும் லீனாவினதும் குரலும் ஓங்கியொலிக்கிறது.

இந்த, இந்திய ஆளும் வர்க்கத் திமிருக்கு முட்டுக் கொடுக்க-ஒத்தூதவொரு கைப் பாவைகளை ஏலவே ஈழத்தில் தயாரித்த இந்தியா வரதராஜப் பெருமாளையும் ,ஆயுதக் குழுக்களையும் மட்டுமல்ல புலிகளுக்குள்ளும் பற்பல இந்தியக் கூலிகளை அது உருவாக்கியதுள் முள்ளி வாய்க்கால் படுகொலை நிகழ்வுக்குப் பின் ஓங்கியொலிக்கும் புலிக் "கலைஞர்கள்-படைப்பாளிகள்-விமர்சகர்கள்" என்போரெல்லாம் இந்த இந்தியக் கைக்கூலிகள் என்பதுமட்டுமல்ல புலத்திலும் இவர்களுக்கொப்பானவொரு குழுவை இந்திய-இலங்கை உருவாக்கி அவர்களைப் "புரட்சிக்காரர்கள்-மாற்றுக் கருத்தாளர்கள்-ஜனநாயக வாதிகள்"எனும் முகமூடி போட்டு அழகு பார்த்து இயக்கிக்கொண்டிருக்கிறது.

இந்திய ரோவுக்காக "எதிர்ப்பரசியல் படம்"காட்டும் லீனா மணிமேகலையின் உடலில் சிறு துரும்பு  உட்கார்ந்தாலும் அதை தட்டித்  தூய்மைப்படுத்தப் புலத்திலொரு கூஜாத் தூக்கிக் கூட்டத்தையும் தயாரித்த பின் இந்தியப் பிராந்திய நலனின் அரசியலானது "ஈழத்தில்"அருமையானவொரு தீர்வாகவும்,ஜனநாயகத்தேவையாகவும் படம் காட்டும் பல வரதாராஜப் பெருமாள்கள் ஈழத் தேசத்துள் இப்போது மலிந்துவிட்டபோது, லீனா மணிமேகலைக்கேது தயக்கம்-அச்சம்- இலங்கை சென்று "எதிர்ப்பரசியல்"படம் பிடிக்க?

இந்தத் தளத்தைப் புரியாதவரை நாம் லீனாவின் சேட்டைக்கு அஞ்சி அழுது புலம்ப வேண்டியதுதாம்!

இவை குறித்தெல்லாம் எப்போதாவது நாம் புரிந்துகொண்டோமா?
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள் மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு  வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.
இந்திய - இலங்கை அரசுகளினது கடந்த வன்னியுத்தம், தமிழின அழிப்பைச் செய்த கையோடு மீளக் கட்டியமைக்கும் படுமோசமான கட்சி, அரசியலில் மிகக் கேவலமாகத் திசைவழிகளை அமைக்கும் தமிழ்க் கட்சிகள்-முன்னாள் ஆயுதக் குழுக்கள், இந்த வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களையும் மறந்து, அரசியல் செய்யும் இந்தத் தருணத்தில்தாம் நாம் இப்போக்குகள் குறித்துக் கவனத்தைக் குவிக்கவேண்டும்.

ஒடுக்குமுறை வர்க்கத்துக்கெதிரான,அவைகளின் அரசுகளுக்கெதிரான எதிர்ப்பு அரசியல் நிலையோ இன்று, ஆளும் வர்க்ககங்களுக்கிசைவாகப் பிற்போக்குச் சக்திகளால் முன்னெடுக்கப்படுகிறது.மக்களை மிக இலகுவாகத் தமது வலுக்கரங்கள் மூலம் ஆளும் வர்கத்தினது அதிகாரத்துக்குள் கட்டிப்போட வைக்கும் "ஜனநாயக" உரையாடல் மற்றும்,  காட்சிப் படிமத்தின் வழியிலான நியாயப்படுத்தல்கள்-பொதுமைப் படுத்தல்கள்" கலை-படைப்பு-தொழில் தர்மம்-மனிதாபிமானம்" எனும் கவசத்தோடு நமது வாழ்வைச் செல்லரித்துச் செல்கிறது! இதுள், லீனா மணிமேகலை என்பது  பல இந்திய ரோவின் எடுபிடிகளில் ஒன்றென்பதைத்தவிர வேறெதுவைத் தெரிவாக்கி வைத்துரையாட முடியும்?

இந்தப் பிழைப்பு வாதக் கூலிகள் கேட்கும்"ஆதாரம் இருந்தால் காட்டு" என்பது அமெரிக்க அரசு கேட்கும் " அமெரிக்கா உளவு-வேவு பார்த்ததற்கு என்ன ஆதாரம்? " என்பதற்கும் இருவேறான தெரிவுகள் இருக்குமா?-இரண்டும் ஒரே நோக்கு-நலத்தின் வழியிலான செயற்பாடுகள்தாம்.

இதுள், லீனா மணிமேகலை காட்டும் பூச்சாண்டிதாம் பெரும் வேடிக்கையானது-வேஷமானது-விவகாரமானதுங்கூடவே! இஃது, இந்திய ஆளும் வர்க்கத்தின் திமிரினது பரந்துபட்ட தொடர்ச்சிதாம்!

இவற்றைப் பல தளங்களில் புரிந்தாகவேண்டும்: புரிந்தால், இந்தப் பாவமன்னிப்புக் கோருதல்களினது அர்த்தமும் புரிந்து போகும்!



Leena Manimekalai hat ihr Profilbild  geändert.
 [இந்தப் படம் இலீனா மணி மேகலையினது உருவப்படம்.அவரது முக நூலிலிருந்து எடுக்கப்பட்டது.நன்றி]
இற்றுவரை ஈழத்தில் மூன்று இலட்சத்து நாற்பதினாயிரம் உயிர்கள் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டுள்ளார்கள்.சுமார் 4.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,கிட்டத்தட்ட அதே தொகை சிறுவர்கள் முடமாக்கப்பட்டும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குப் பிரபாகரனும் அவரது தப்பான பதவி ஆசையுமே காரணமானதல்ல.மாறாக,இத்தகைய பிரபாகரன்களை உருவாக்கிய அந்நியச் சக்திகளும்,இலங்கையின் இனவாத அழிப்புமே காரணமாகிறது!முள்ளிவாய்க்கால்வரை ஒரு பிரபாகரனின் முடிவில், இலட்சக்கணக்கான மக்களின் புதைகுழிகள் தோண்டப்பட்டன.இனிவரப்போகும் பிரபாகரன்கள் இன்னும் எத்தனை புதைகுழிகளைத் தோண்டுவார்களோ அது  எவருக்குமே இப்போது புரியாது,அந்த ஆண்டவரைத் தவிர!

இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமனலாக இருக்கும் அந்நியத் தேசத் தலைமைகளை அண்டிப் பிழைக்கும் இந்த லீனா மணி மேகலை போன்ற "கலைஞர்கள்" தங்கள் கூஜாத் தூக்கும் தொழிலில்"தூய்மை" வேடங்கட்ட "ஆதாரம் இருந்தால் காட்டு இல்லையேல் அஃது,அவதூறென்பது "  கூட ஒரு விதமான அரசியல்தாம்.

இவர்களுக்கு முன்னோடி சாணாக்கியன்-பின்னாற்றான் அமெரிக்க ஏகாதிபத்யம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
02.12.2013


P/S:

Leena Manimekalai :

ஊடறு டொட் கொம் நீங்கள் "வெள்ளை வேன் கதைகள்" குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதிய சந்தியா இஸ்மாயிலின் தொடர்பு இலக்கம், இமெயில் விபரங்கள் வேண்டும். அப்படி ஒருவரே இல்லையெனில், நீங்கள் அந்த பொய் அறிக்கையை உடனே நீக்கி, படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

@கீற்று, நீங்கள் இந்த மொட்டை அறிக்கையோடு என்னைப்பற்றி பல அவதூறு கட்டுரைகளை உங்கள் தளம் முழுவதும் நிரப்பி வைத்திருக்கிறீர்கள். ஆபாச கமெண்டுகள் வேறு , என் அனுமதியில்லாமல் லே அவுட் செய்த என் படங்கள் வேறு. உங்களை வழக்கறிஞரோடு சந்திக்கிறேன்.

Shoba Sakthi : ஊடறு டொட் கொம் அவதூறையும் பிரசுரித்துவிட்டு அது குறித்து அவதூறால் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பும்போது ஊடறு ஆசிரியர்கள் ரஞ்சி (சுவிஸ்) தேவா (ஜெர்மனி) ஆழியாள் ஆகியோர் நெடிய கள்ள மவுனத்தைச் சாதிப்பதன் பொருளென்ன? அவதூறு பரப்புவது மட்டும்தான் அவர்களது வேலையா? அதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டாமா? என்ன இழவு இதழியல் இது!

M R Stalin Gnanam :  தே வா (ஜெர்மனி) ஆழியாள் ஊடறு ஆசிரியர்கள் ?

Shoba Sakthi  : M R Stalin Gnanam ஆம். ஊடறு இணையத்தளத்தினுள் போய் INFO பகுதியை சொடுக்கினால் இப்படித்தான் இருக்கிறது.

info
editors: ranji (swiss) , theva (germany)
co-editor : aazhiyal (australia)
contact : udaru@bluewin.ch

Sunday, April 21, 2013

சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம்

சுகனார் படிகம்.

கருவரத்தேவர் எண்ட நம்மட சுகனார் ரொம்பத்தான் காவடியொண்டை அன்று தூக்கினார்-1990 வாக்கில்!

//Shoba Sakthi :'தன்னைச் சாதிவெறியன் அல்ல என மறுபடியும் மறுபடியும் நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனே' - சுகன் //


தில்லப் பாருங்கோ, அவர் சும்மாவொரு வெறும் காவடியைத் தூக்கியிருந்தால் பறுவாயில்லை.இது,முழுமொத்தக் குறைபாட்டையும் இரண்டாயிரம் வருடங்களாக வந்த அனைத்து வினைகளையும் மறுத்து "வேளாளன் சாதி வெறியன்" என்றாக்கி வைத்து, அதன் தேற்றங்களுக்குப் பிரியாவிடைகொடுத்த சுகனது வரண்ட பார்வைக்கு அல்லது சமூகத்தைப் புரியும் திரணியற்ற கிறுக்குத் தனத்துக்கு இன்று, மகுடம் வைத்து அதையும் சோபாசக்தி ,தனக்கேற்ப வளைத்துப்போடுவது சுத்த சாக்கடைத் தனம்.

இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடாத்துவது இவர்களுக்கு அவசியமானால் அதை நடாத்துவதை விட்டுச் சாதிய அரசியலாக இதையொரு முரண்பாடாக்குவதன் தெரிவில் மீளவும், அனைவரையும் பிளந்து குருதி குடிக்கும் அந்நிய வியூகத்துள் இயங்கும் அரசியலுக்குச் சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம் என்று சொல்லேன்.ஏனெனில், அதன் பிதாமகனாக அங்கீகரிக் கப்பட்டவர்கள் நிறையவே நமக்குள் அணிதிரண்டுவிட்டனர். இதன் சூத்திரதாரிகள் பல முகங்களோடு நமக்குள் இலக்கியம் படைக்கின்றனர்.




"புத்தஞ் சரணஞ் கச்சாமே" என்றபடி கருவரத்தேவர் போடும் அரசியல் வடக்கில் டக்ளசின் அராஜகத்தை ஜனநாயகமாகக் கண்டதன் தொடரல்ல.சாதிப் பிளவுகளது தெரிவில் அவை சார்ந்தியங்கும் இன்றைய தமிழகப் பாணி அரசியலைக் கயமைமிகு டக்ளஸ் தனது சுய இலாபத்துக்காக நகர்த்துகிறார். அவரது இருப்புக்காகக் கூர்மைப்படுத்தப்படும் சாதியஞ் சார்ந்த அரசியலானது தொடர்ந்து வேளாள ஒடுக்குமுறை குறித்து வகுப்பெடுக்கும்போது இலங்கைப் பாசிச அரசால் நிர்மூலமாக்கப்படும் பரந்தபட்ட மக்களது பிரதான முரண்பாட்டை மறைத்தொதுக்கும் இந்தக் கயவர்கள், இலங்கையின் அனைத்துச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராகவே நிலவும் ஒடுக்கு முறையாளர்களுக்குப் பின் நிற்கிறார்கள்.இதன் உச்சம் இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை நகர்த்துவதென்பதில் இவர்கள் கட்டும் கருத்துக்கள் அதுசார்ந்து முன்வைக்கும் நியாயங்கள் யாவும் சாதிய முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அதைக் கருத்தியற் தளத்தில் மீளமீளத் தகவமைத்துக்கொண்டு அதன் வேகத்துள் பிளவுவாத அரசியலை முன்னுக்குக்கொணர்வது.

இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களது பாரம் பரிய ஐதீகச் சுயாதீனப் பூமியானது சமீபத்தில் பிரதேச ரீதியாகக் கிழக்குத் தனி மாணமாகப்பட்டுத்  தமிழ்பேசும் மக்களைப் பிளந்த இலங்கை-இந்திய ஆளும் வர்க்கமானது வடமாகாணத்துள்இத்தகைய பிளவு வாத அரசியலைப் பயன்படுத்தச்சந்தர்ப்பமற்றதன் தொடரில் சாதிய முரண்பாட்டைக் கையிலெடுத்துள்ளது. அதன் வழியில் தலித்துவக் குழுக்கள் மற்றும் கிறிஸ்த்துவ மேட்டுக்குடிகளையும்(நிர்மலா இராஜசிங்கம்,நோயல் நடேசன்,அகிலன் கதிர்காமர்,இரத்தின ஜீவன்கூல்,இராஜன் கூல்...) இணைத்து ப் புலிகளது பணக்காரப் பினாமிகளையும்கூடவே,கே.பி. கருணா-பிள்ளையான்,டக்ளசு போன்ற இத்தகைய குறுக்குவழி நபர்கள்மூலம் பெரும் பான்மையான மக்களைப்பிளந்து தமிழ்பேசும் மக்களது நியாயமான அரசியல்வாழ்வையும்,அவர்களது உரிமையையும் இலாத்தாக்குவது அவசியமாகிறது.





இதன் தெளிபொருள் விளக்கவுரை:

வடமாகாணத்துள் வேளாளரைத் தனிமைப்படுத்தும்போது தாழ்த்தப்பட்டவர்கள்-ஒடுக்கப்பட்டவர்கள் என்றான தெரிவில் வடமாகாண மக்கள் தொகையில் சரி அரைவாசி மக்களைப் பிளந்து அவர்களைச் சிங்கள அரசுக்குப் பின்னே கைகோர்க்க வைப்பது இலங்கை-இந்திய அரசியலுக்கு மட்டும் அவசியமில்லை. மாறாக,இன்றைய அராஜகக் கட்சிகள்-இயக்கங்கள் அவர்களது புதிய குட்டி முதலாளிய முன்னெடுப்புக்கும்-இருப்புக்கும் அவசியமாகவிருக்கிறது.தமிழ் தேசியத்தால் தமது இருப்பு அழிந்துபோய்விடுமென அஞ்சும் இத்தகைய புதிய குட்டி முதலாளிய வர்க்கம் இதுசார்ந்து, நிதியீடுகளையும்-கலை இலக்கிய முன்னெடுப்பையும் சார்ந்து புதிய கருத்தியற்றகவமைப்பத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.இதற்குக் கடந்த கால வேளாளரது சாதியத் திமிர் உடந்தையாகியும் விடுகிறது.அந்த வடூ இனவாத ஒடுக்குமுறையாளரோடிணைந்து பரந்தபட்ட தமிழ்த் தேசியவினத்துக்குத் தூக்குக் கயிறாச்சு!

இந்தத் தெரிவில், புலம் பெயர் தலித்துவ அமைப்புகளும்,தனிநபர்களும்இலங்கையில் இந்திய அரசியல் நோக்கங்களது தெரிவுக்கான திசையில் பயணிப்பதும், அது சார்ந்த தமக்கான சாதியச் சங்கங்களை நிறுவிக்கொண்டு அதன்வழியிலான அரசியல் பலத்தைப் பெறுவதும் ஒரு கட்ட இலக்காகவே இருக்கிறது.இதுதாம் இன்றைய தமிழகத்தின் திருமாவளவன் பாணி அரசியலாகும்.

புலியழிந்துகொண்டிருந்த தருணத்தில் தமிழ்நாட்டில் சுகனார் இலங்கைத் தேசிய கீதமிசைக்கத் துவங்கினார்.இங்குதாம் புலம்பெயர் தலித்துவக் குழுக்களுக்கும்,தனிநபர்களுக்கும் பல வடிவிலான நோக்கங்கள் இந்திய உளவுப்படை ரோவால் இயக்கப்படும்தமிழகத் தலித்துவப் பிழைப்புவாதிகளால் பயற்றுவிக்கப்படுகிறது.

இப்போது மனிதத்துக்காகச் சுகன் கண்ணீர் வடிக்கிறார்.அகிம்சை பேசுகிறார்.ஆயுதம்-யுத்தம் அவருக்கு அலேர்ச்சி!ஆனால்,அவரது மானுட விரோத வார்த்தைகள்வழி, கண்ணி வைத்துப் பேசும் கருத்துக்கள் மிகப் பெரும் அராஜகத்தைத் தூண்டிச் சாதியக் கலவரங்களுக்குத் தூண்டுபவை.

இந்தச் சுகன் என்ற கருவரத்தேவர் கோமாளிக்கும் அவரது அரசியல்-இலக்கிய நடிப்பும் கண்டு  கலாமோகன் பலமுறை கொதித்தார்-அவரும் ஒரு தலித்தாய் இருந்தும்!

இந்தமாதிரியெல்லாம் சுகனார் ரொம்ப சென்டிமென்ரா நடிப்பார்."சிரிக்கிற மாதிரி அழுவார்-அழுகிறமாதிரிச் சிரிப்பார்"எண்டு எக்ஸிலில ஒருக்காய் கலாமோகன் பெரியண்ணா எழுதினவர்.அப்படிப்பட்ட சுகன் பெரும் கவிஞனாரபின் அவரைப் பார்க்க முடியாதெண்டும்-"பாடச்சொன்னால் புலவரும் பாடார்"எண்ட மாதிரி அவர் பாட மாட்டாரெண்டும் கலாமோகன் சொன்னார்.பாடுறத்துக்கு "சட்டியில இருந்தால்தானே அகப்பையில ஒட்டி கொண்டுவரும்"எண்டதை நல்லாவே புலவர் கருவரத்தேவனார் சுகன் அறிஞ்சு வைச்சிருக்கிறார்.இப்படிப்பட்ட புலம் பெயர் இலக்கியத்தில் சீனியரான சுகனார் இப்போது, இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை முன்னெடுத்துச் சென்று அங்கேயொரு லொபி அரசியலுக்கும்-தெரிவுக்கும் முன்நிறுத்தப்படும்போது சுகனாரது அன்றைய கருத்துக்கள் சோபாசக்திக்கு இன்று,  அவசியமாகிறது!தன்னையும், தான்கொண்ட கருத்துக்களையும் நிலை நிறுத்த எந்தச் சதிக்கும் சோபாசக்தி தயாராகிறார்.

ஆனால்,இதே சுகன் குறித்து மேலும் கலாமோகனிடம் போவோம்:

கலமோகன்ர வார்த்தையில சொன்னால்"பெட்டையளைக் கண்டால்(இப்பை எந்தப் பெட்டையைக் கண்டாலும் கன்னங்கள் ரெண்டிலும் ஒரு உறிஞ்சல் உறிஞ்சிக் கொஞ்சுவார்.;)பெண்நிலைவாதி என்பார்,தாழ்த்தப்பட்டவரைக் கண்டால் தலித்தியவாதியென்பார்,விஸ்க்கிப் போத்திலோடு வருபவரைக் கண்டால் உடனே தன்னை விளிம்பு நிலை வாதியென்பார்"கூட்டுக் கலவிக்குப் பேர்போன வட்டுக்கோட்டைக் கருவரத்தேவருக்கு சுகனார் வேடமும் சரியான அச்சாவாகவில்லை.இப்ப பெரிய பீ நவீனத்துவ சொறீ...பின் நவீனத்துவக் கொம்பு ஒண்டும் அவருக்கு முளைச்சிருக்காம்."





இப்படியாகச் சுகனுக்கு "வேளாளனான ஒவ்வொருவரும்", தான்சாதி வெறியன் இல்லலையென்று மறுபடியும்,மறுபடியும் வேளளன் மட்டும் பிரகடனப்படுத்தியாகவேண்டும்.வேளாடிச்சி தேவையில்லை!ஏனெனில்,அவளுக்கான "பெண் விடுதலை" இதை இல்லாதாக்கிறது.அதாவது,வேளளன் கையில் அவள் தலித்தாகக் கிடப்பதே காரணமென்றுஞ் சொல்லக் கூடும்!

இப்படிப் பிரகடனப்படுத்தின பிறகுதான் "வேளாளன்" தலித்தியம் பேசலாம்.இல்லாட்டி இந்தச் சுகனார் நம்மை "இருள் வெளிக்குள்"தள்ளி மதிப்பு மறுப்பறிக்கையை விடுவார்;.

இப்படியாக எல்லா மனிதர்களையும் வேட்டையாடிய மச்சானுக்குப் பக்குவம் வந்திட்டுதாம்!அதால இப்ப டக்ளசுக்குக் காவடியெடுத்து"புத்தஞ் சரணங் கச்சாமே"வழி இலங்கைத் தேசிய கீதமுரைப்பில் மகிந்தா காந்திய வடிவம்-அகிம்சா மூர்த்தி.இலங்கை இராணுவத்தின் கரங்களில் ஒவ்வொரு ராட்டினமுண்டாம்!

இப்படியாகச் சுகன் "அகிம்சா மூர்த்தியாக" மாறியதற்குக் கடந்கால பின்-நவீனத்துவப் பார்வைக்கும்(பின் நவீனத்தைத் தமிழில் அங்கொன்றுமிங்கொன்றுமாய்த்தாம் சுகன் வாசித்துவிட்டு...),தலித்தியப் பிரகடனங்களுக்கும் ஒரு பரிகாரம் தேடுறாரெண்டு எடுத்துப் போடாதேங்கோ!இப்ப பலருக்குத் தங்கட "இருப்பில" சந்தேகம் வந்திட்டுது.அதுக்காக, இப்பிடி மீள் பார்வைகள் வருகிறதெண்டும் பார்த்துப்போடலாம்.

பாத்திபன்ர கதையொண்டை(பலமா,யாருக்கு?) ஒப்பிரேசன் செய்து" செட்டியிலிருந்து ஜொனிவோக்கர் அடித்தபடி சோவியத் ய+னியன் சரிவை ஆராய்ந்தார்கள்"எண்ட பார்த்திபனின் எள்ளலை நக்கி,

1: சோவியத் யூனியன் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா?

2: ஜொனிவோக்கர் அடிக்கக் கூடாதென்கிறானா?"

3: ஜொனிவோக்கர் அடித்தபடி சோவியத் யூனியன் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா?"

4: செற்றியில் இருக்கக் கூடாதென்கிறான?"-எனக்கு உறுத்துகிறது,நான் சாராயம் காய்ச்சி விற்கின்ற விளிம்பு மனிதன்." எண்டு தன்னைப் பற்றிப் பிரகடனப்படுத்தி ஜொனிவோக்கர் கம்பனியை விளிம்பு மனிதர்களின் கம்பெனியெண்டவருக்கு இலங்கை ஆளும் வர்க்கங்களும் விளிம்பு மனிதர்களானார்கள்-வடக்கில் அவர் காணும் ஒவ்வொரு இராணுவமும் விளிம்பு மனிதர்களே-வேளாளனைத் தவிர!

"தன்னைச் சாதிவெறியன் இல்லை என்று
தொடர்ந்து(கவனியுங்கள் தொடர்ந்து...)நிருபிக்காதவரை ஒவ்வொரு
வெள்ளாடனும் சாதி வெறியனேதான்
என்று தலித் கருதுவதில் தவறில்லை."-சுகன் 


இப்படியெல்லாம் பொன் மொழி பொழிந்த எங்கட கருவரத்தேவரது பொன் மொழிகளை முன்வைத்துச் சோபாசக்தி தொடர்ந்து  வேளாளர்களைப் பார்த்து தன்னையொரு சாதிவெறியன் இல்லையெண்டு நிரூபிக்கச் சொல்லும்போது இலங்கையில் இலக்கியச் சந்திப்புக்கான தொகுப்பையும் வெளியிடுவதற்கு ஆக்கங்கள் தேடுகிறார்.ஆனால்,தமிழ்ப் பிரதேசமெங்கும் தமிழர்கள் அடிமையாய் சிங்கள இராணுவத்தின் முன் மண்டியிடும்போது குவானிக்காவின் தெரிவு "புலிப்பாசிசம்-வேளாளச் சாதி வெறியாகவும் இருந்திட்டால் ஆச்சரியமில்லை!


ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

21.04.2013

Sunday, April 07, 2013

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

40 வது, இலக்கியச்சந்திப்பின் வரலாற்றைச் சொல்லும் சுசீந்திரன்,சந்துஷ்-சில கருத்துக்கள்!

இதுவரையான இலக்கியச் சந்திப்புக்குறித்தும்,அதன் வரலாற்றுக் கட்டங்கள் குறித்தும் சந்துஷ்,சுசீந்திரன் இருவரும் தங்கள் அநுபவங்களைச் சொல்கின்றனர்.இலக்கியச் சந்திப்புக் குறித்துக் கருத்தாடுவதில் சந்துஷ்கும்,சுசீந்திரனுக்கும் காத்திரமான பாத்திரமுண்டு.இந்த 40 வது, இலக்கியச் சந்திப்பை நாமும் நேரடியாகப் பார்க்க வழி செய்த தலித்தியத்துக்கு நன்றி.இல்லையேல் இவர்களது கருத்தை நாம் கேட்கும் எந்தச் சந்தர்ப்பமும் கிட்டியிருக்காது!

பொதுவாகக் கருத்தாடியவர்கள்-விவாதித்தவர்களென்போரைக் கடந்து, இவர்களை 1988 ஆம் ஆண்டு செம்படம்பரிலிருந்து தொடரும் இலக்கியச் சந்திப்பின் தொடரில் வைத்துக் காணமுற்பட்டபோது இந்தச் சந்திப்பு பெரிதாக எந்த உள்ளடக்க மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக இவர்களே உரைக்கின்றனர்.

எனினும்,வரலாற்றின் நிகழ்வு சார்ந்த இலக்கியச்சந்திப்பின் பாத்திரத்துள் சந்துஷ் வகுத்துக்கொள்ளும் பிரிப்புகளும்,அதுசார்ந்து மாவோயிசம்,ரொக்சிசம்,மார்க்சிசம் என்ற வகைப்படுத்தலில் சிலரை முன்வைத்துக் கருத்தாடுவது தமிழ்ச் சமுதாயத்தின் ஆரம்பகால அரசியலை வகைப்படுத்துவதென்பதைவிட இந்த இலக்கியச் சந்திப்பானது அதன்வழியில் சிலரது இன்றைய அரசியல் தற்கொலையை எனக்கு உறுதிப்படுத்துகிறது.அந்த வகையில் சந்துஷ்சுக்கு நன்றி.



மாவோயிசம் பேசிய அறுவைச் சீனி லோகன் இலங்கை அரசியலில், அரசின் போக்குகளுக்குச் சார்பாக இயங்குவதும்,மார்க்சியம் பேசியவர்களில்பலர் குறிப்பாய்ந் சிந்தனை,பரா மாஸ்டரது இழப்போடு தலியத்தோடு சங்கமித்து இலங்கையின் பொது அரசியலோடு ஒன்றித்துப்போனதும்,ரொக்சியம் பேசிய புதுமை,வாணீ,ஜெயபாலன்,பாரதி தமிழ்த் தேசிய அரசியலில் தடுமாறுவதும்,தூண்டில் இது எதுவுமேயின்றித் தனது பாத்திரத்துள் சமூகக் கொடுமைகள்,சமத்துவத்துக்காகப் போராடியதில் அது தமிழ்த் தேசிய-மற்றும் தமிழீழ மக்கள் கட்சியால் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பாத்திரத்தின் கூறு சிலரை இன்னும் துடிப்போடு இந்தப் பெரு வெள்ளத்தை விட்டு மக்கள் பக்கம் நின்றியங்கவும்,விமர்சிக்கவும் தூண்டிக்கொண்டுதாம் இருக்கிறது.

அண்மை வரை, இலக்கியச் சந்திப்பானது புலிகளது அரசியல் மற்றும் பாசிசம் குறித்துக் கருத்தாடியதிலிருந்து சில நிசப்த காலத்துள்(அதுள் பங்கு பற்றிய பலரை இன்று வரலாறுரைக்கும்) அனைவரையும் கட்டிப்போட்ட அரசியல் தெரிவு முள்ளி வாய்க்காலுக்குப்பின் அடுத்த எல்லைக்கு(பாசிசத்துக்கு எதிரான போராட்டப் பாத்திரம்)த் தாவுவது வரலாற்றின் உண்மைகளைக் குறித்து நோக்குபவர்களுக்கு அச்சத்தைத் தருகிறது.



தலித்தியம் முதல் மாவோயிசம் பேசியவர்கள்,மார்க்சியம் முதல் ஈ.பீ.ஆர்.எல்.ஏப் வரை அரசியல் செய்தவர்கள் இலங்கையின் பொது அரசியல் நீரோட்டத்துள் கலந்துபோனதும் ,வாசு தேவ நாணயக்காராக்களையும் இலங்கியச் சந்திப்புள் இனங்கண்டபோதும் இவர்கள் முள்ளி வாய்க்காலுக்குள் சிக்குப்பட்ட மக்கள் குறித்து என்ன பதிவை 2005 களுக்குப் பின் முன்வைத்திருக்கிறார்கள்?

பாசிச இராணு ஜந்திரங்களுக்குள் சிக்குப்பட்ட அப்பாவிகள் குறித்து, அவர்களது நலனின் அக்கறை கொள்ளாது, முள்ளி வாய்க்காலில் அவர்களைப் பாசிசச் சிங்கள இராணுவம் அழித்துக்கொண்டபின் -அந்த மக்களது குருதி உலர்வதற்குள் தலித்துவ வாதிகளும்,இராகவன் போன்றவர்களும் இலங்கையில் மகிந்தா ஜனநாயகத்தை மீளக் கொணர்ந்ததாகப் பேட்டிகள் செய்தும்,நன்றி தெரிவித்ததுமாக இந்த இலக்கியச் சந்திப்பின் உள்ளடக்கம் மாறிப் போனது உண்மை!

இன்று,சாத்திரியை கேள்வி கேட்டுத் துளைப்பவர்கள்,தேவதாசன்,அசுரா,ஞானம்,இராகவன் போன்றோரைப்பார்த்து அரசியல் ரீதியான காட்டிக்கொடுப்புக்குகான எதிர்வினையை ஆற்றுகிறார்களா?அல்லது, பாசிச மகிந்தாவின் அரசியலை ஜனநாயகமென வகுப்பெடுத்து முழுத் தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல இலங்கையின் சிறுபான்மை இனங்களையும் மகிந்தாவின் அரசியல் நிகழ்வுக்குள் தற்கொலை செய்ய வைக்கும் கயமைக்குப் பதில் தேடுகிறார்களா?

இங்கு,தனிப்பட்ட நட்பு,உறவாடலென்பது பரந்துபட்ட மக்களது அரசியல் வெளிக்குள் இல்லையென்பதைச் சந்துஷ் நிரம்பவே புரிந்தவர்.ஆனாலும்,யாரை விட்டது முகம் பார்த்து அரசியல் பேசுவது?




அடுத்து,அண்ணன் சுசீந்திரனிடம் வருவோம்.

எப்பவும்போல நகைச் சுவையாக மனிதவுணர்வுகளை தனக்குள் ஒன்றிக்க வைக்கும்"அன்பு" நிறைந்த உரையாடல் அவருக்கானதே!அதனாற்றான்,நான் அவரை "நேசம் நிறைந்த சுசீ அண்ணா" என்று எப்போதும் அழைப்பவன்.அவரது உரையாடலில் முரண்படும் கருத்துக்களை அவர் மிக விவேகமாகத் தவிர்த்துவிட்டு வரலாற்றையுரைக்கிறார்.அதுள், தனக்குள் வசப்பட்ட நியாயங்கட்குவுட்பட்டு வரலாறு கட்டும்போது பீட்டர் ஜெயரெட்னத்தை மட்டும் சொல்லிச் செல்பவர் ஏனோ பார்த்திபனை,செல்வராஜாவை,சிவத்தை,ஜோசெப்பை மறந்தாரோ தெரியவில்லை!

இந்த இலக்கியச் சந்திப்புக்காக ஆரம்பம் முதல் அதன் பல சந்திப்புகளுக்கு அவித்துப் போட்டவர்களும் அதற்காகத் தமது வீடுகளைத் திறந்து விட்டவர்களும் இந்த மேற்சொன்ன பேர்வளிகளுக்குள் இருக்கின்றனர்.இதற்காகப் பாரிய பொருள் இழப்பையும் அவர்களே தாங்கினர்.

போகட்டும்.

கன்னை கட்டி அரசியல்,வரலாறுரைக்க முடியாது.

திரு.சுசீந்தரன் ஆரம்பகால இலக்கியச் சந்திப்புள் ஒருவருமாக,இப்போது ஒருவருமாகக் கருத்தாடுவதுள் அவரோடு முரண்படும் ஒரு விடையத்தை "மனம் புண்படும்" என்ற அகவிருப்போடு அவர் மறுத்துரைத்ததற்கு நாம் சில வற்றைச் சொல்லியாகவேண்டும்.

நா.கண்ணன் என்பவர் பார்ப்பனர் என்பதும்,அவரது படைப்புகள் நவீனப் பெண்ணியச் சம வாழ்வுக்கு,எதிரானதென்பதும்,அவர் அடிப்படையில் பார்ப்பனர்களைத் தாண்டி இலக்கியமோ, அரசியலோ செய்ய விரும்பாதவரென்பதும் நாம் அவரோடு விவாதித்துத் தெரிந்துகொண்டவை.

அவரது இலக்கியச் சந்திப்புப் பங்களிப்பில் அவர் பார்ப்பனியச் சனாதன தர்மத்தைக்கூடப் புதிய மொந்தையில் வார்த்தவர்.

அப்படியாகிய, அவருக்கெதிரான "ஆண்டாள் மார்க் அளவு நாடா" என்ற குறியீட்டு அரசியல் எதிர்ப்புப்பிரசுரம் மிகவும் தார்மீகத் தன்மையுடையது.

அது,பார்ப்பனியத்தாலும்,சனாதன தர்மத்தாலும் பாதிக்கப்பட்டவர்களது நியாயத்தின்-உணர்வின் வெளிப்பாடு!


இதுவொரு தனிப்பட்ட மனிதரைப் புண்படுத்துவதென்பது பார்ப்பனியத்தின் அதிகாரத் தன்மையை,தனிப்பட்டவர்களது தெரிவுக்குள் குறுக்குவதாகும்.பார்ப்பனியர்கள் ஒவ்வொருவரும் அதன் சேவர்களாக இருப்பது மட்டமல்ல அதற்கு வெளிநிலைப் படிச் சாதிகளும் அதையே வெளிப்படுத்துபவர்கள்.இந்த ஆண்டாள் மார்க் அளவு நாடா பொதுவாகப் பார்ப்பனியத்தின் மனித விரோதத்தை எதிர்ப்பதாகும்.இதைத் தனிப்பட்ட தாக்குதலாகக் குறுக்கி"மனித மனம் புண்படும்"என்பது மிகவும் பொறுப்பற்று வரலாற்றை மறுப்பதில் முடிச்சிடுகிறது.

இன்றைய 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில்,239 மில்லியன் மக்களைச் சனாதன தர்மம் தீண்டத் தகாதவர்களாக்கிச் சிதைக்கிறது.அந்தச் சீரழிவுப் பண்பாட்டின் கூறுகளைத்தாங்கி நமக்குள் கருத்துக்கட்டிய கண்ணனின் மனம் புண்படும் என்ற சீசீந்தரனுக்கு இவர்களால்  சிதைக்கப்பட்ட , 239 மில்லியன்கள்  மக்களது மனத்தின் காயங்கள் ஒரு பொருட்டாக இல்லை!இதை எதனோடு ஒப்படி முடியும்?

இலக்கியச் சந்திப்பில் இப்படியும் வரலாறு திரும்புகிறது.

பிற்குறிப்பு : "ஆண்டாள் மார்க் அளவு நாடா" விளிம்புக்குரல் துண்டுப் பிரசுரம் 1998 ஆம் ஆண்டு பிராங்பேர்ட் இலக்கியச் சந்திப்பில் சோபாசக்தி-ரஃபேல் போன்றோரால் வினியோகித்து எதிர்ப்புக் காட்டப்பது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.04.2013

Monday, March 25, 2013

புலத்துத் தமிழர்களும் ஆதிக்கப் பரீட்சார்த்தமும்

வானேவித் தாக்குதல்களின் [Drone attack ]சனநாயகக் கோரிக்கை என்ன?அரசியல் அறமெனக் கொள்ளும் மேற்குலகத்துக்கு யுத்த அளவு கோலாக  ஜப்பான் மீது போடப்பட்ட  Fat Man and Little Boy  சட்ட -நீதிசார்ந்த அறமாக இருக்கும்போது , நாகசாகி-கீரோசீமாக்கள்[ Nagasaki and Hiroshima  ] வெறும் தார்மீகத்துள்கூட ஒட்டவில்லையே!

சமீபகாலமாக ,இந்த வானேவிகள்[Drone ]  இந்தியத் துணைக்கட்டத்துள்[Drone attack in Pakistan  ] போட்டுத் தொலைக்கும் மழலைகளது இருப்பை மறுப்பதென்பது பயங்கரவாதத்துக்கெதிரான யுத்த அளவுகோலக இருக்குமெனில் இலங்கையில் செத்த பிஞ்சுகளுக்கு இவர்களது அகராதியில் என்ன அர்த்தமுண்டு?

அதிகாரம் மற்றும் ஆதிக்கம்  குறித்துண்மையில் அடிக்கடி மிக தெளிவாக நான்  உணருவதென்றாலும், சமூக உறவுகளில் இந்த அடிப்படை கூற்றுப்  பார்வையில் பல புள்ளிகள் அரசியல்-சமூகப் பிரதிநிதித்துவம் கொண்ட  சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலான பிரச்சினை போன்றதே  அறிவியல் விவாதத்திலும் சமாந்தரமானதும்-விரிவானதுமான  விதிமுறைகளை வழங்க வேண்டுமென நினைக்கிறேன்.இன்றைய தமிழகத்து மாணவர்களது போராட்டத்தைப் பரவலான புரிதற்கேற்ப நகர்த்துவதில் பலவிதமான சிக்கலெழுவதும்,எமது புரிதற்குள் கட்டுப்படாததுமான கோரிக்கைகள் உண்மையில் விரித்து வைத்திருக்கும் சொல்லாடல்களாகச் சுருங்கிவிடும் அபத்தத்தைக் குறித்து நாம் எத்தகைய புரிதலில் முன்னகரும் அரசியலைச் செழுமைப் படுத்துகிறோம்?



இங்கிருந்துதாம்  ஐ.நா.மனிதவுரிமைக்கான தெரிவுகளில் அமெரிக்காவின் இலக்கைக் [  UN Resolution on Sri Lanka ]குறித்துவைத்து ,இலங்கையின் இனங்களுக்கிடையிலான நட்பார்ந்த போக்குகளைக் குறித்துப் பேசமுடியும்.

இதே கருத்தில் துல்லியமாகவும்  எவ்வளவு, சக்தி யூக்கத் தோழமை உறவுகளை தீர்மானிக்க  முனைவதிலும்,இடம் பெயர்ந்தும்-இருப்பிழந்தும் அலைவதன் தொடரில் தமிழ்பேசும் மக்களது தலைவிதியைக் குறித்துச் சிந்திக்கும்போது எமது சிந்தனைக்கு மேலாகவெழும் "சனநாயகம் மற்றும் அதுசார்ந்த மனிதவிடுதலைக்கான தெரிவுகள், பழைய கிரேக்கம்  மற்றும் அன்றைய நீதி பரிபாலனத்துக்கான அரசியல் அறநெறியாண்மையும் அதைத்தாண்டியதும் மற்றும்  கி.மு. 7 ஆம் நூற்றண்டுடிலிருந்த  டராக்கோனிய முறைசார் அறவியலானது [Draco  was the first legislator of Athens in Ancient Greece.  ] கி.பி. 4 ஆம் நூற்றாண்டு க்கான சீன எண்ணப் பாடுகள் வரை ஒரு கெட்டிப் படுத்தப்பட்ட மேலாண்மை வர்க்கத்தின் மனவாசைகள்-கற்பனைகள் "புரட்சிக்கார ஏசுவையும் " நானூறாண்டுகளில் மறந்ததுபோய்விட்டதென்பதில் உலக தர்மத்தைத் தாண்டிச் சீனத்துடன் புதிய மாற்றுக்களைக் கொணரப்போகுதென்பதை  இன்றைய இலங்கைச்  சமுதாயம் கணிக்கிலெடுத்திருக்குமோ தெரியாது!

பொதுவாக நிலம்-புலம் , அதுசார்ந்த மக்களது  சக்தி மற்றும் ஆதிக்கம்  குறித்த பலப்பரீட்சையுள் சமன் செய்வது சாதாரணமானது அல்ல. சக்திவாய்ந்த மேற்குலக  அரசாட்சி நிலவும் சர்வதே ஒழுங்காண்மைக்குத் தோதான நேட்டா அணிச் சேர்கையானது வலிந்து சீனாவையும்-இருசியாவையும் ஒரு இலக்கு நோக்கிய அணிக்குள் வன்முறைசார்ந்து கூட்டொத்துழைப்புக்கெனவும் கனி வளங்களைத் திருடிக் கொள்வதின் தொடரில், இராணுவத் தந்திரத்துள் இருசிய-சீன நிலைப்பாடுகள்   வல்லமைக்கு நிகரானதே!




தமிழகத்து மாணவர்களை இந்தவிடத்தில் பொருத்தும்போது 1960 களில் யேர்மனியில் எழுந்த மாணவர்களது போராட்டத்தில் ஒரு ரூடி டுச்கே[Alfred Willi Rudi Dutschke was the most prominent spokesperson of the German student movement of the 1960s  ]  இன்றுவரை  மூன்றாம் உலகத்துள் வெற்றிடமாகவே இருக்கிறது.

இந்த நிலைமைக்கேற்ப  ஐ.நா.வில் அமெரிக்கத் தீர்மானமென்பதை இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மையின் விளைவாக வகுப்பெடுப்பதென்பது கயமைத்தனமாகவே பார்ப்பதாகவேண்டும்.அமெரிக்க- ஐரோப்பிய மண்டல நலன்கள் கூட்டிணைவுகளுக்குள் பேசப்படும் சன நாயகமானது கங்கேரியில் பல மில்லியன்  சிந்தி-ரோமா மக்களைத் துவசம் செய்யும்போது விக்டர் ஓர்பானை [Viktor Orbán, Prime Minister of Hungary  ]ரோம் போப்பிலிருந்து யேர்மனியப் பிரதமர்வரை முத்தமிட்டு வரவேற்பதில் எந்தச் சமத்துவத்தைக் காணமுடிகிறது?

ஆக,மொழிவுகளைத் தாண்டிச் சமத்துவம் ,சகோதரத்துவம், ஒருமைப்பாடுகளைப் பிரஞ்சியப் புரட்சியின் அறுவடைக்குள் வைத்து, நம்மைத் தரிசிக்க அறை கூவலிட்டாலும் நமது மண்ணுக்கெனச்  சில சிறப்பியல்புகள் உண்டு.அதைக் கண்டடைந்தால் இந்த ஐ.நா.வொரு செல்லாக் காசு!.

-ப.வி.ஶ்ரீரங்கன்
25.03.2013

Monday, March 18, 2013

என்ன செய்யப் போகின்றோம்?

இலங்கையின் தலைவிதி! :என்ன செய்யப் போகின்றோம்?


ன்றைய இலங்கையின் இனப்பகை அரசியல்-தமிழ்பேசும் மற்றும் சிறுபான்மையினங்களது அனைத்து முரண்பாடுகள்,அரசியல் அபிலாசைகள்அதன் வழியான ஒத்துழையாமை-மறுப்பு அரசியல்,இனவொடுக்குமுறை-பகையெல்லாம் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்படுகிறது.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தும் அரசியலாகப் புத்தபிக்குகள்,மற்றுஞ் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களைத் தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடாத்தும் அரசியல், நிச்சியம் நமது மக்களது நலனின்பாற்பட்டதல்ல!



இது,மீளவும் அந்நிய நலனுக்கானதென்றே கருத வேண்டியிருக்கிறது.

சீன-இலங்கை அரச வியூகத்துள் இனங்களுக்கிடையிலான ஒரு மொன்னைத்தனமான  ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் முன்னிலைச் சோசலிசக்கட்சி,மற்றும் அதன் சமவுரிமை இயக்கம் முன்னெடுக்கும் அரசியல் மாறிவரும் பொருளாதாரச் சாய்வில் இலங்கைச் சீன வியூகத்துக்கு அவசியமானது.இதை உடைத்து மேற்குலக நலன்களை அறைவடை செய்யும் ஒரு காட்டுமிராண்டித்தனமான அரசியலை-அமெரிக்கச் சீ.ஐ.ஏ.க்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்கும் தமிழ்நாட்டுச் சீமான் வகைப்பட்ட அரசியலது நோக்கம் மீளச் சுவிட்ச்சர்லாந்தில் மையங்கொள்கிறது.

இது,ஆபத்தான காலம்.

இலங்கையின் அனைத்து மக்களுக்கும்,இறைமைக்கும் சாவால்விடும் அந்நிய லொபிக் கட்சிகளால் இலங்கை மீள இரத்தக்களத்தைக் காணப்போகிறது.

இதுதாம் மேற்குலகத்துக்குத் தோன அரசியல்.



அதைத் தமிழ்நாட்டு சீமான் வகைப்பட்ட அரசியல் மிக நுணுக்கமாக நம்மைச் சொல்லி,நமது பெயரால் அமெரிக்காவுக்கான அரசியலைச் செய்கிறது.

சலிப்புத்தான் வருகிறது.

மிகக் கயமையான காலம்.தவறான அரசியலை நம்மைச் சொல்லி முன்னெடுக்கும் ஒடுக்குமுறையாளரது கை ஓங்கிவிட்டது!இதை அம்பலப்படுத்தி அரசியலைச் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சியின் இல்லாமையானது ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.

இது,சதி நிரம்பிய காலம்.

இந்த நிலையில் இலங்கையின் அரசியலை எப்படி மதிப்பிடுவது?

தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.



மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது, சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு "சட்டம்-ஒழுங்கு" ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.

இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.

இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.

 இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.

ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது.

 இலங்கைக்கானவொரு மேட்டிமை அரசானது காலத்துக்கு முந்தியதானதாகவே இருக்கிறது.



இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ்நிலைக்குள்ளிருக்கும்போதே அதைத் துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர். அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.

இதன் தொடர்ச்சியே தமிழகத்தில் தமிழினவாதப் பிழைப்புவாதக் கட்சிகளது வழியில் தொடர்கிறது.இத்தகைய இனவாதக் கட்சிகளை மெல்ல ஊட்டி வளர்க்கும் அமெரிக்கச் சி.ஐ.ஏ.வும் இந்திய அரசும் போடும் நாடகமெல்லாம் எந்த வழியிலும் நமக்கு விமோசனம் தரப்போவதில்லை!இலங்கையின் குடிகள் தமக்குள் மீள, மோதும் காலத்தைத் தீர்மானிக்கும் சதியைத் தயாரிக்கும் அந்நியச் சக்திகளை வெல்லும் புரட்சிகரமான அரசியலை இலங்கை ஏலவே இழந்துவிட்டது.

ப.வி.ஸ்ரீரங்கன்
18.03.2013

Sunday, March 10, 2013

அஞ்சு வயதில் ஆனாவுக்கு விடுப்பு

ஈரச் சாணத்துள்ளும் 
ஈழவர் வாழ்வு...

ப்பொழுதினும்
எந்தக் கனவைக் காண நேரிடினும்
அவை குருதிகொட்டும்
சிதறிய சதைப் பிண்டத்தோடு
சொல்லும் சேதிகள் தூக்கத்தைக் கெடுத்த
அதே பொழுதுகளாய்

தமிழர்களின் முற்றத்தில்
வந்து  உறுமும் தீர்வுப் பருவக்காற்று
பாடை கட்டியே
வெறுத்துப்போன கரங்களோடு நமது பெரிசுகள் ;
பல்லைக் கடிப்பது தினமும் தொடர்ந்தபடி

எத்தனை நாளைக்குத்தாம்
இது வாழ்வாய்?...

வட்டமேசையிலிருந்து
திம்புபோய் பின்பு
நோர்வே தாய்லாந்து
சுவிட்ஸ்சர்லாந்து என்று தீர்வுதாம்
கட்டாக்காலி எருமையாக அலைகிறது
இந்தத் தேசங்களில்


செம்பு நீரில் வயிறு நிறைத்தவர்களும்
அன்று செத்துக் கிடப்பதற்கே
செல்லடி பட்டுக் கொண்டதும்
சொல்லாத அந்தத்"தர்மங்களால்"தாம்!

இவற்றையெல்லாம் சகசமாக்கிய
சொத்துக் கூட்டம் சொல்லும் கதைகளும்
போடும்"தர்மங்களும்"இந்தத் தேசத்தில் நிரந்தரமாய்
குடிசைகளின் கூரை ஒழுக்காய்
அதிகாரத்தைக் கொட்டித் தீர்க்க





ஆத்தைக்கும்
அவள் மடியுள் கிடக்கும்
"சாணைச் சேலைக்கும் "அடுப் பெரிக்க
அஞ்சு வயதில் ஆனாவுக்கு விடுப்பு வைத்து
அள்ளிய கல்லுகள்  கஞ்சியக் கான காலமாச்சு -ஈழ மண்ணுள்!

கொஞ்சிய ஆத்தையின்
எச்சில் ஈரலிப்பு உலர்வதற்குள்
கொள்ளி வைத்த பிஞ்சுகளது கனவுகளுக்கு
தேச விடுதலைக் கோவணங் கட்டிக் கொண்டோம்
தெருக் கோடிகளில்
அவர்களைப் பேப்பர் பொறுக்க வைத்து!;
வயல் வனாந்தரத்துள் சல்லிக் கற்கள் பொறுக்க வைத்தும்

ஈன்ற சாணம் காய்வதற்குள்
எடுத்துச் செல்லும் சில்லறையாய்
ஈரச் சாணத்துள்ளும் ஈழவர் வாழ்வு...

எல்லாந் தொலையினும்
எவருக்கும் உணர்வு மரத்தறியாதவொரு
 உலகம்  இன்னும் வசப்படவில்லையடி பாப்பா!

உருவங்களுக்குள் செதுக்கப்பட்ட
எல்லாத் தர்மமும்
இருந்த தடயம் விலத்திக் கொண்டிருப்பினும்
யுத்தத்தின் கொடும் முகங்களைத்
தரித்திருக்கும் தேசத்தின் உயிர்ப் பொதிகளை
எவரும்
திருடிவிட முடியாத வன்னிமண்!

மனிதக் கலையுண்ட
அந்நியத் தேசங்களது யுத்த அரசியலோ
அள்ளிய உயிர்களையும்
அரிவரிக் கணக்கு வைத்து
ஐ.நா.வுக்கு  ஐந்தொகை தயாரிக்கும் காலமடா
இஃது தம்பி!

ஶ்ரீரங்கன்
10.03.2013

Tuesday, February 26, 2013

கணையாழி:கேடயம்,பொன்னாடை-எதற்காக?

Theepachelvan Pratheepan: "புலிக்காய்ச்சலில் பொய்களால் 'புனைவு' செய்து வாழும் அண்ணன் ஒருவருக்கு சமீப நாட்களாக 'தீபச்செல்வன் காய்ச்சல்' பிடித்திருக்கிறது.நீங்கள் முதலில் புலிகளை பார்த்து குரைப்பதை நிறுத்திவிட்டு மற்றப் பங்கங்களுக்கும் உங்கள் தலையை திருப்புங்கள்!"


=================================================================
தீபச் செல்வனென்ற பிழைப்பு வாதியைத் தனிப்பட்ட முறையில் நாம் விமர்சிப்பதில்லை.
================================================================

ரு சமுதாயத்தை ஆணிவேரோடு பிய்த்தெறிந்து, ஓட்ட மொட்டையடித்த புலிகள்,பல இலட்சக் கணக்கான உயிர்களை நாசஞ் செய்து சில குடும்பங்களைக் கோடிஸ்வரர்களாக்கிவிட்டு வன்னியில் சரணடைந்துகொண்ட அரசியலுளெஞ்சிய புலிக்கூட்டமோ மீளவும், மக்களை மொட்டையடிக்கும் தெரிவுகளோடுதாம் அரசியல் செய்கிறது.இலக்கிய வியாபாரி தீபச் செல்வன் அதற்கான சிறு உதாரணமாகும்.இவருக்கு முன் சேரன் என்பது உலகறிந்தது!

இஃது மக்கள் விரோதமானது.ஏன்-எதற்காக?

இது,குறித்துப் பலருக்குப் புரியும்படி நாம் ஏலவே பல மாதிரிகளாக எழுதிவிட்டோம்!

அப்படி, இவர்கள் பார்ப்பன இலக்கிய வியாபாரப்பிழைப்புக்கும்,அவர்களது சதி அரசியலுக்கும் உடந்தையாவதைத் தட்டிக்கேட்பது "புலிக்காய்ச்சாலாம்" தீபச் செல்வனுக்கு!ஏனென்றால், அவரும் மக்களது குருதியை வைத்துத்தாம் தமிழ்நாட்டுப் பார்ப்பன முகாமுக்குப் பிழைப்புக்காட்டுகிறார் என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது.அதைத் திசை திருப்புவதில் புலிகளது பாணியும் கைகொடுக்கலாந்தாம்.

தமிழ்பேசும் மனிதர்களை அழித்துச் சிங்கள-இந்திய ஆளும் வர்க்கம் வன்னியில் யுத்தஞ்செய்தபோது அதை மௌனித்து ஆதரித்தவர்கள் தரும் கேடயமெல்லாம் எதற்கானது-எவருக்கானது?நமது உரிமைகளைப் பூண்டோடழித்தவர்களது அரசியலும்-இலக்கிய நகர்வும் பார்ப்பனியத்தின் மிகப்பெரும் செல்வாக்கோடு வன்னியின் குருதிதோய்ந்த யுத்தக் களமாக விரிந்தது.

இஃது, இந்தத் தீபச் செல்வனுக்கான பொன்னாடை போர்த்தும் இலக்கியக் கருவானால் அதைத் தார்மீக அறத்தின்முன் நிறுத்திக் கேள்விகளைக் கேட்டாக வேண்டுமா-இல்லையா?

இந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் திராவிட-பார்ப்பன அரசியலின் பங்கு என்ன?

இதுவரையான நமது மக்களது அழிவுக்கான அரசியலை மெல்ல நகர்த்தியவர்கள் யார்?

கனிமொழிக்குப் பரிசு கொடுக்குமளவுக்கு மகிந்தாவின் அரசியலது தெரிவெங்ஙனம் உருவாகியது?அதே, கனிமொழியே மக்கள் சொத்தைக் கொள்ளையடித்துக் கைதான மாபெரும் மக்கள் விரோத அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரென்பதை உலகமே அறிந்தது.

இந்த மாபியாக்களது முகாமில் உனக்கென்ன வேலை?

இவர்களது சதித்தனமான அரசியலுக்காக நீ, எமது மக்களது அவலத்தை விற்கும்போது நாம் மௌனித்திருக்கவேண்டுமா?புலிகளாக நீங்கள் செய்த மக்கள்விரோத அரசியலுள் மக்களது வாழ்வு,இருப்பு,சுக-துக்கம்,உயிர்-உடல்,வளமென அனைத்தையுமே திருடினீர்கள்-தமிழீழத்தின் பெயரால்!

இப்போது,அந்த மக்கள்மீது நீங்கள் கட்டவிழ்த்த அந்தத் துன்பகரமான போராட்டத்தின் குருதிக் கறைகளையெல்லாம் இலக்கிய-வரலாறாகச் சொல்லிப் பிழைக்கும் கயமைக்கு என்ன பெயர்?





இது,மக்களுக்கான விடுதலைக்கான அரசியல்-இலக்கிய நகர்வா?

வன்னியின் சாக் குரலையே செவிமடுக்காத இந்தியத் தேசியத் திமிருக்கு-பார்ப்பனத் திமிருக்குக் கரிசனை எதை நோக்கி வந்து, உங்களையெல்லாம் பொன்னாடைக்குள் மறைக்கிறது?

இதிலிருந்து,நீங்கள் கக்கும் பாரதமாதாவுக்கான அரசியலது தெரிவென்ன தீபச் செல்வன்?

"இந்திரா காந்தி இருந்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது" என்ற முடிச்சென்ன? இந்திராகாந்தி சாகும்போது தவழ்ந்த உங்களுக்கு, அவரது அரசியல் பொதுப்புத்தியாகப் புகுந்ததா அன்றிப் பார்ப்பனத் தாஜாவா?

இன்று, எமது மக்களது கண்ணீர் உனக்குப் பொன்னாடையாவதை நீ உணரமாட்டாய்!ஏனெனில், நீங்கள் மனிதப் பிணங்கள்மீது "அரசியல்-இலக்கியம்"புனைந்தவர்கள்.அதனாலேயேதாம் உங்களுக்கானவொரு "இருப்பும்-நிலைப்பும்" தமிழ்நாட்டில் எப்போதும் இருக்கிறது.

இதை,நீங்கள் இழக்கமாட்டீர்கௌன்பதை நாம் அறிவோம்.

என்றபோதும்,மக்களைத் தொடர்ந்து கருவறுக்க நீங்கள் புனையும் "இந்திரகாந்தி இருந்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது"எனும்,அரசியல்தாம் மிகவும் பாதகமானது.இதைத்தாம் கீறிக் கிளறிக்காட்டுகிறோம்.இது புலிக்காய்ச்சலாகுமா?

நமது "தமிழீழக்" கவிஞர் புலிகளது ஆதிக்கத்தின் கீழ் வேரிட்டு வளர்ந்தவராச்சே!அதன்,எச்சமும்-மிச்சமும் சமூக சீவியத்தைப் பெயர்த்தெறியப்பட்டவர்களது முற்றத்திலிருந்து "பொன்னாடைக்கும்-கேடயத்துக்குமாக" இன்று இலக்கிய முகிழ்ப்பாகுமானால் அதை வைத்துக் கேள்வி கேட்பது நமது கடமையில்லையா?

எமது மக்களது கண்ணீரைப் பார்த்தும் வாளாதிருந்த தமிழ்நாட்டு "இலக்கிச் சூழல்-அரசியல் சூழல்" அதை வைத்துக் கட்சி நலன்சார் அரசியலைச் செய்தது.இந்த மோசடியான பேர்வழிகள் மீளவும், தமது நலனுக்காக நமது மக்களது அவலத்தையும் ஒரு கச்சாப் பொருள் நிலைக்குக் குறுக்கியதைக் கொள்ளையிடும்போது நாம் கேடயத்துள்-பொன்னாடைக்குள் இதை மறைக்கலாமா தீபச் செல்வன்?


இதைத் தொட்டுப் "பிழைப்புவாதிகளென" இந்திய லொபிகளைச் சொல்லும்போது அதே புலிமனதானது மக்கள்விரோதத் தமது அரசியல்-இலக்கியப் பிழைப்பில் கவனத்தைக் குறிவைத்து மற்றவர்களுக்குப் "புலிக்காய்ச்சல்" என்கிறது.

புலிகுறித்து நாம் பேசுவதெல்லாம் பொய்யானதா?

இதுவரை புலிகளது போராட்டத்தின் பயனென்ன?

புலித் தலைவனுக்கே காடாத்துச் செய்துவிட்டு, இவன்கள் என்ன சொல்கிறாங்கள்?

மானங்கெட்டவங்களே!

பார்ப்பன-திராவிட அரசியல் வியூகம் வன்னியில் மக்களைக் கூண்டோடு பொசுக்கிவிட்டு,இப்போது அதை வைத்துப் பிழைக்கிறாங்கள்.அந்தப் பிழைப்புக்காகப் பல  "தீபச்செல்வன்கள்"  இன்று அவசியமாகவிருக்கிறது.இந்தப் பிழைப்பினது நோக்கே தமக்கான லொபிகளை நேரடியாகவுருவாக்குவது, தம்மில் தங்க வைத்துச் சிதைப்பது,அதன்வழி தமக்கான அரசியல் நிகழ்ச்சியை நமது மக்களது ஆன்மாவில் கீறுவது.இதைத்தானே ஏகாதிபத்தியங்கள் பல வடிவத்துள் செய்து முடிக்கின்றன-இதைத்தானே கோடம்பாக்கம் மாற்றுச் சினிமா வட்டத்துக்குள் செய்து சிதைக்கிறது.இதுள், சுண்டங்காய் நீயோ இந்திரா காந்தி குறித்து எமது மக்களுக்கு வகுப்பெடுக்கிறாய்? 

தமிழ் நாட்டரசியலின்சதி, கட்சிசார் நலன்களது மிகப் பெரும் கயமையைக்கூடக் கேள்வி கேட்க நாதியற்ற நீங்கள்,அவர்கள் போர்த்தும் பொன்னாடைக்குள் குறுகுவதற்கு எமது மக்களது அவலம் தேவையாகவிருக்கும்வரை உங்களது பிழைப்பு வாத இலக்கிய வியாபாரத்தைக் கேள்விக்குட்படுத்தியாகவேண்டும்.மீளவும்,அதே இந்திய ஆளும்வர்க்க வல்லூறுகளது தெரிவுக்குள் நமது மக்கள் வீழ்ந்துவிடாதிருக்க இஃது, அவசியமாகும்.இங்கு, தீபச் செல்வனென்ற பிழைப்பு வாதியைத் தனிப்பட்ட முறையில் நாம் விமர்சிப்பதில்லை. தீபச் செல்வனென்ற நபர், மக்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் அந்நியச் சதிக்குடந்தையாகும்தருணத்தை- அரசியலையே நாம் விமர்சிக்கிறோம்.இந்தவிடத்தில் தீபச் செல்வனுக்குப் பதிலாக இன்னொரு தவச் செல்வன் இருந்தாலும் அதே கதைதாம்.

2009 ஆம் வருடம் வன்னியில் மக்கள்கொத்துக்கொத்தாகச் செத்தார்கள். அதன்மீது இந்தப் பார்ப்பன ஏடுகள்-நிறுவனங்கள் கரிசனை காட்டாத நயவஞ்சகத்தைக்கூட அறியமுடியாது அவர்களது பொன்னாடைக்குள் குறுகும் சின்னப் பயலே!உனக்கு"எது பொய்-புனைவு" என்று வகுப்பெடுக்கத் திரணியுண்டா?அந்த அறமுண்டா?

தமிழ்நாட்டுப் பார்ப்பன- திராவிடக் கட்சிகள்-நிறுவனங்கள்,ஊடகங்களது கள்ள மௌனமானது இலங்கைக்கான ஆதாரவாகவியங்கிய அரசியலது புள்ளி!இது, மத்திய அரசின் யுத்த ஒத்துழைப்புக்கான அங்கீகாரமாவியங்கியபோது அதைத் தட்டிக் கேட்க வக்கற்ற நீயோ,இந்திராகாந்தி இருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காதென்ற பால் குடித்தனமான அரசியல் பேசித் தமிழ்நாட்டில் பொன்னாடைப் பிச்சை எடுத்தபடி யாரையாடா தம்பி புலிக்காய்ச்சல்-பொய்-புனைவு என்கிறாய்?

பொன்னாடைக்கும்-பரிசுக்குமாக மக்களைக் காட்டிக் கொடுப்பவர்கள் நாமில்லைக் காணும்!

அப்படிப் பழைப்பவர்கள் புலிகள்தாம் என்பதை நீங்கள் அனைவருமே நிரூபிக்கின்றீர்கள்.அதைத் தட்டிக் கேட்ட நியாயத்தின்மீது "புலிக்காய்சல்" சொல்கிறீர்களோ?

புலியின் போராட்ட அறுவடைதாம் உங்களில் விடிகிறதே!

அஃது,பார்ப்பன அரசியல் நலுனுக்காக-பிழைப்புக்காக எமது மக்களது பிணத்திலிருந்தல்லவா நியாயத்தன்மை கற்பிக்கிறது?

இப்படியாக, நமது மக்களைக் கருவறுத்த இந்தியப் பார்ப்பன-திராவிடக் கட்சிசார் விசக் கிருமிகளுக்கே விலைபோன நீங்கள் பொன்னாடைக்குள் மறைவதொன்றும் நமக்கு ஆச்சரியமில்லை.ஆனால்,இதன்வழியுருவாகும் அரசியல்தாம் ஆபத்தானது!

"எங்கள் மக்களது அழிவைப் பார்த்து, மௌனித்தவர்கள்-இலங்கைப்பாசிச அரசுக்குத் துணைபோனவர்கள் போர்த்தும் பொன்னாடைகளெல்லாம் எம் காலடித் தூசு"என்று நிராகரிக்க வக்கிருந்தால் நீ, கலைஞன்.அதைவிட்டு,அவர்களுக்காக எமது மக்களது பிணங்களைப் புரட்டியெடுத்துப் புனையும் நீயோ உனது மேன்மையென எதையெண்ணுகிறாய்?

உனக்கெல்லாம் "சாதகமான அரசியலாகவா" அவர்களது சதிக் கேடயம்-பொன்னாடை எல்லாம் புரிகிறது?

தூ... பிழைப்புவாதிகளே!

இதுவெல்லாம் ஒரு பிழைப்பு?


ப.வி.ஸ்ரீரங்கன்
26.02.2013

Wednesday, February 06, 2013

பந்திகொள்ளும் டோண்டூ இராகவன் அவர்கள்!


யோசித்துப் பார்க்கிறேன்.எட்டு ஆண்டுகளுக்கு முன் வலைப் பதிவை அண்மித்து அதற்குள் இயங்கியங்கியபோது தமிழ்மணத்தால் அறிமுகமானவர் இந்த டோண்டு இராகவன் அவர்கள்.பெரும்பாலும் தமிழ்ச் சமுதயாமானது படு பிற்போக்கான சமுதாயமாகவிருப்பதும்,அதன் சிந்தனை யோட்டமானது ஆளும் அதிகாரத்துக்கிசைவானதாகவும்,  இருக்கின்றது.இந்தச் சமுதாயமானது தனது முரண்பாடுகளுக்கொப்ப வளர்வுறுதால் அதுள் நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கொப்பவேதாம் மனிதர்களின் உள-அறிவு வளர்ச்சியும் சமூகவுணர்வாகவும்-பண்பாடாகவும் பிரதிபலிக்கும்.எமது சமூக வாழ்நிலையின் குறை நிலைகள் நமக்குள் பிரதிபலிப்பவை.

எனவே,ஒரு சக மனிதரைப் புரிந்துகொள்வதற்கு மேலே கூறியவொரு சமூக-உளவிற் பார்வை அவசியமானது.டோண்டு இராகவன் பெரும் பாலும் இந்தச் சமுதயாத்தின் அனைத்துக் குழப்பகரமான முரண்பாடுகளோடும் ஒட்டியுறவாடுபவர்.இதே சமுதாயத்தின் சாக்கடையிற்றாம் நாம் அனைவரும் உருவாகிறோம்.இதுள், பெரிதாகச் சொல்லி , நீட்டி முடக்கத் தேவையில்லை.நாம் அனைவருமே குறைபாடுடையவர்கள்.

டோண்டு அவர்களை,நான் கண்ட இந்த எட்டு ஆண்டுகளில் அவர் சளைக்காது பல பக்கங்களை நிறைத்து எழுதிக்கொண்டிருந்தார்.என்னோடு அதிகமாக டொச்சு மொழியிலுரையாடுவார்.அவருக்கு மொழியொரு தடை அல்ல.இது, குறித்து நான் சில வேளைகளில் ஆச்சரியப்படுவதுண்டு!

2005-2006 கள் ஒரு பொற்காலமாக எழுத்துக்கும்-உணர்வுக்கும் இடைவெளியே புரியமுடியாதளவுக்கு ஒருவரதெழுத்தை மற்றவர், வாசித்து விமர்சிக்கும் உறவு நிலையாய் மாறியிருந்தது.அதற்குத் தமிழ்மணம் பாரிய பங்களிப்பையுஞ் செய்தது.





எது குறித்தும் டோண்டு அவர்கள் எழுதுவார்.நாம், எப்படியும் விமர்சிப்போம்,ஏசுவோம்-சண்டை பிடிப்போம்.எனினும்,இறுதியில் "டோண்டு ஐயா"  என்று, புன்னகைத்து விலத்திச் செல்வோம்.

மிகவும்,தப்புத் தப்பாகவெல்லாம் சமூக வளர்ச்சியைப் புரிந்து வைத்திருப்பார்.பிற்போக்குச் சிந்தனைகளைத் தனது அனுபவத்தின் தொடர்ச்சியாகவும் சந்தர்ப்பத்தில் நியாயப்படுத்தியும் விடுவார்.

சோவையும்-மோடியையும் பெருமிதத்தோடு போற்றுவார்.அப்படிப் போற்றும்போது,குஜராத்தில் நடாத்தப்பட்ட முஸ்லீம்களுக் கெதிரான படு கொலைகளையும் நியாயப்படுத்துவதை அவர் புரிய மறுத்தார்.என்றுபோதும்,அவரோடு உரையாடத்தக்கதாகவே இருந்தது.எதிராளியை வசைச் சொல்லால் அடித்து நொருக்கியதை நான் அறியேன்.மிகவும்,குதர்க்கமாகச் சமூகச் சிந்தனையை அவர் புரிய முனைந்திருப்பினும் அவரது தொழில்முறை-திறன்சார் அனுபவங்களும் எழுத்தும்,அறிவுறத்தல்களும் மிகவும் நேர்த்தியானது-பிரயோசனமிக்கது.சம்பவங்களைக் கோர்வையாக்கித் தனது தொழில் அனுபவங்களையும்,தான் கண்ட மனிதர்களையும் மிக அழகாக-நேர்த்தியாக எழுத்துக்குள் கொணர்வார்.இஃது, பாலு மகேந்திராவின் கமராக் கண்ணுக்கொத்த காட்சிப்படுத்திலாக எமது மனத்திலும்-விழிகளுக்கு முன்னும் விரிந்துகொள்ளும்.

தனது,ஒவ்வொரு நகர்வையும்-தான் அநுபவிக்கும் தருணத்தையெல்லாம் பகிர்ந்துகொள்ளும் திரு.இராகவன் அவர்கள், வலைப்பதிவில் நம்மைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்துக்களையெல்லாம் முன்வைப்பார்.அதை மூடி மறைத்து-நசிந்தபடி அவர் வைப்பதில்லை.தனக்குப்பட்டதை"எடுத்தேன்-கவிழ்த்தேன்"என்று போட்டுடைத்து எழுதுவார்.இதன் தாக்கத்தில் நாம் அவரோடு பல்வேறு பார்வையின் தெரிவில் சண்டை போடுவோம்.ஆனால்,இறுதியில் நம்மை அரவணைத்து,மனம் நோகமால் திரும்பிச் செல்ல வைப்பார்!இதனால்,அவரோடு முட்டிய வலி தெரியாது விலத்திப்போகும் பதில்களையே முன் தள்ளுவார்.

நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த மனிதரைக் கடந்த மாதம்வரை முக நூலில் தேடியலைந்திருக்கிறேன்.வலைப் பதிவில் சக்கை போடு போட்ட மனிதரை முகநூலில் காணாமலிருப்பதையெட்டு ஆச்சரியப்பட்டேன்.ஆனால்,இன்று வாசித்த செய்தி அவர் இந்த உயிர்வாழ்வில் இன்னொரு கட்டத்தை அடைந்து விட்டாரென.

இந்தப் பௌதிக வாழ்வில், பெருந்துயர் நாம் பிறக்கும்போதே நம்மோடு தோழமைகொண்டு நிழலாகத் தொடர்கிறது.அதைத் துரத்த முடியாது.இது, "இயற்கையின் நியதி" என்று முன்னோர்கள் சொல்வதைப் புரிந்திருந்தாலும், நம்மோடு மல்லுக்கட்டி-உறவாடி,எழுதி,அநுபவத்தைப் பகிர்ந்து தன்னையும்,இந்த உலகத்தையும் விட்டுப் பிரிக்க முடியாது தொடர்ந்தியங்கிய மனிதர் நம்மோடு, இப்போதில்லையென்றுணரும்போது மனதுக்குக் கஷ்டமாகவே இருக்கிறது.

நீண்டகால எழுத்தியகத்தின் மூலம் அறிந்த மனிதர் டோண்டு.இஸ்ரேலையெல்லாம் தான் ஆதரிப்பதாகச் சொல்லி உண்மை பேசும் மனிதர்.தனது நேர்மைக்குப் பாதகமில்லாமல் எழுதுபவர்.அஃது,பெரும் பகுதி மனிதர்களுக்கெதிரானதாவிருந்தாலும் தனது கருத்தை நேரடியாவும்-உண்மையாகவும் முன் வைப்பார்.

நாம்,எல்லோருமே குறைபாடுடையவர்களென மேலே சொன்னேன்.

"நல்லதும்-கெட்டதும்"  இந்தச் சமூக வாழ்நிலையின் வழியே நம்மை ஆட்டுவிப்பது.

டோண்டு அவர்களுக்கோ அன்றி எனக்கோ இருவேறுபட்ட உலகமில்லை!

நமது வாழ்நிலையில், அதுசார்ந்த சமுதாயக் கட்டமைப்பில் வர்க்கமாகப் பிளவுண்டுபோன பொருளாதார-மனித விருப்புகளும், வர்க்க அரசியலும் அதுசார்ந்த செயற்பாடுகளுமேதாம் நமக்குள் பிரதிபலிப்பது.

அந்த வகையில் டோண்டு அவாகள், தன் வாழ்நிலைக்கொப்பத் தன் சமூகவுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது,இழப்பு வலிக்கிறது.

கடந்த காலத்தை வெறுமையோடு திரும்பிப்பார்க்க வைக்கும் அவரது இன்மை, என்னையும் அவரது இழப்பையிட்டு எதையாவது உணர்வதைக் குறித்து எழுதெனத் தூண்ட, இதைப் பதிந்தேன்.

அன்னாரின் இழப்பையிட்டு வருந்தும் அவர்தம் குடும்பத்தவர்களுக்கும், மற்றும், அனைவருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபத்தைப் பகிர்ந்து,உங்களோடு நானும் அவரது இழப்பின் வலியில் பந்திகொள்கிறேன்.

Goodbye Dondu!
Der Tod ist wie ein Horizont,dieser ist nichts anderes als die Grenze unserer Wahrnehmung.Wenn wir um einen Menschen trauern, freuen sich andere,
ihn hinter der Grenze wieder zu sehen.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.02.2013

Tuesday, January 29, 2013

இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் ...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலகம்: சாத்திரியும்,பங்கு பிரிப்பும் படுகொலையும்!

"ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான் பதில் சொல்லும். "-சாத்திரி   http://sathirir.blogspot.fr/2013/01/blog-post_26.html

ந்த 2013 ஆம் ஆண்டானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய அரசியற் சதி-குழிப் பறிப்புகளின்வழி இலங்கையின் கொடிய இராணுவ ஒடுக்குமுறையை இன்னும் வலுவாக்கும் ஆண்டாகவே இருக்கப் போகிறது.அதற்கான பல வியூகங்கள்நிலத்திலும்-புலத்திலும்தொடர்ந்து நடாத்தப்படுகிறது.ஒரு புறம் மேற்குலக அரசுகளும்,நவலிபரல் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறம் இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையிலான  ஆளும் கட்சியும் அதன் ஆசியப் பொருளாதாரக் கூட்டணிகளுமாக இலங்கையின் இனங்களுக்கிடையில் நகர்த்தும் அரசியலானது மீளவும், அந்நியருக்காக நமது மக்களைக் கொல்லப் போகிறது.

இது, குறித்துப் பேசுவதற்கான முறைமைகள் பல நிலத்திலும்-புலத்திலும் நிகழ்கிறது.புலத்தில் அணித்திரட்சிகொள்ளும் தனிநபர்களும்,அவர்களை உள்ளிழுத்து அரசியல் அமுக்கத்தை உருவாக்கும் அந்நியத் தேசங்களது ஏஜென்டுகளும் எங்கு திரும்பினாலும் பொறியமைத்துக் காத்திருக்கிறார்கள்,புரட்சிகரக்கட்சி,சம உரிமை இயக்கம்- கூட்டணியென.இந்தச் " சமவுரிமையின் பின்னே தமிழர்களும்-சிங்களவர்களும் சமமானவுரித்துக்களை இலங்கையில் பெறும்போது உனக்கென்ன சுயநிர்ணயவுரிமை?"அப்படித்தான் கேட்டபடி சமவுரிமைக்கான இயக்கம்- முன்னணி என்ற கோசம் உட்கருத்தைப் புதைக்கிறது!

கடந்த 2012 ஆம் ஆண்டு மாவீரர் தினக் கொண்டாட்டத்துள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துள் உருவாக்கப்பட்ட "புரட்சிப் பொறி " மாவீரருக்கு விளக்கேற்றும் "தார்மீக" உரிமைக்கானதென ஆரம்பித்து, இறுதியில் பலரைச் சிதைத்துக் கைதுகளோடு சிங்கள இராணுவம்தமிழ்ப் பிரதேசமெங்கும் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான நியாயம் கொடுக்கப்பட்டது.இதுவும்,மேலே சொன்ன சதி வியூகத்தோடிணையும் சக்திகளோடு சந்திக்கும் புள்ளி இந்தியச் சாணாக்கியம்-புலத்துப் புரட்சிப் புரட்டென்று நாம் தொடர்ந்து எழுதினோம்.





இதைக் குறித்து, நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தோம். இது சதிவலையென்றும் மக்களை மீளக் காட்டிக்கொடுக்குஞ் சதியென்றுஞ் சொல்லியிதையெதிர்க்க வேண்டுமெனக் குறித்துரைத்தோம்.ஆனால், புலத்தில் "மாற்றுக் கருத்தாளர்கள்", இடதுசாரிகள்,புரட்சிக்காராகளென ஓட்டுமொத்தமானவர்களும் கூடவே,புலிகளும் இதை ஆதரித்துச் சங்கூதினர் மக்களுக்கு!. வழமைபோலவே தட்டந்தனியாக உண்மைக்காகப் போராடினோம். இதன் சதிகளை அம்பலப்படுத்தி "இது முற்றிலும் தவறான சக்திகளது தெரிவு " என்று மக்களை எச்சரித்தோம்.

இந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களது கலகத்தைத் தூண்டிய சக்திகள் அறுவடைக்குத் தயாரானபோது அதை சாத்தியமாக்குவதற்கான முறையில் நிலத்திலுள்ள பல போராட்ட அநுபவமுள்ள"அறிஞர்கள்" வேலி ஓணானாக மௌனமாகவிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சீண்டிய நாம் புலத்திலுள்ளவர்களது மௌனத்தைக் கலைத்தோம். அதுள்,கலகத்தின் பின்னே நிலவும் உண்மைகளை உறுதிப்படுத்தத் தக்க வகையிலேயேதாம் அவர்கள் தமது மனசாட்சியை வெளிப்படுத்தினர்.அஃது, உண்மையின் சாயல் வரவேற்கப்பட வேண்டியது.அவர்கள், இந்திய அரசின் நிகழ்ச்சிக் குட்பட்டிருப்பினும் இந்தவிடத்தில் மனசாட்சியோடு கருத்து வைக்கும் தார்மீகத்துக்குக் கட்டுப்பட்டு மக்களோடு நின்றனர்.

ஆனால்,புலத்தில் விழுந்தடித்துக்கொண்டு போட்டிபோட்டு "யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புரட்சிப் பொறியை" யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களெனும்பந்தத்துள் அந்தப் பல்கலைக் கழகக் கலகத்தை  முழுக் குத்தகைக்கு எடுத்து, இரயாகரன் குழு அதை ஆதாரித்து "மாணவர் எழுச்சி,மக்கள் எழுச்சியென"ப் பல பத்துக்கட்டுரை போட்டு அந்நியச் சக்திகளது சதிக்கு உடைந்தையாகவிருந்தது.இதேபோலவே, புலத்தில் பலர் அந்நியச் சதியை மக்களது தார்மீகப் போராட்டவுணர்வின் பேரால் ஆதரித்து அறிக்கைகள் விட்டனர்.அதுள், முக்கியமாகச் சுட்டிக்காட்டத்தக்க "அமைப்புகள்" புதிய திசை-புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற  இரயாகரனது பெயர்ப்பலகை!

என்னவொரு அந்நிய விசுவாசம்!,அடிமைச் சேவகம், இந்த அமைப்புகளுக்கு!!

இலட்சக் கணக்கான மக்களை"தமிழீழப்போராட்டம்"செய்து கொன்று குவித்த அந்நியச் சக்திகளும் அவர்களது அடியாட்படைகளான இயக்கங்களும், அந்த இயக்களது மாயையுள் தமிழீழக் கனவுகாணும் புலத்துப் புலன்பெயர்ந்ததுகளும் தொடர்ந்து இந்தச் சதிவலைக்கு உடந்தையாகவே இருந்தனர்.

நாம்,இந்த அவலத்தின் நடுவே, ஓங்கியொலித்து மாணவர்களது கலகமானது அந்நியச் சக்திகளது தெரிவு,அது அவர்களாற் தூண்டப்பட்டு மக்களது உரிமைகள்-போராட்டவுணர்வுக்கு விலங்கிட்டு அடிமைப்படுத்தும் சதியெனச் சொன்னபோதெல்லாம் அதை இந்தப் புலத்து புரட்சிகாரர்கள் ஏதேதோ சொல்லிக் கருத்தடி தந்தனர்!.

கூடவே, எமக்குச் சமூகவியக்கம்,அதன் அசைவாகத்துள் உருவாகிய புதிய தலைமுறையின் சமூகவுணர்வு குறித்தெல்லாம் வகுப்பெடுக்க வெளிக்கிட்டனர். ஆனால்,அவர்கள் சமூகவியலில் எந்தக் கடைக்கோடி நிலையில் நிற்கிறாகளெனத் தம்மை நிரூபித்தபடி தமது அந்நியச் சேவையைத் திறம்படச் செய்தனர்.அதனால், இத்தகைய கலகங்களையும் அதுசார்ந்து இலங்கையின் தென் மாகாணப் பல்கலைக்கழகத்துக்குள் செயற்கையாகத் தூண்டப்பட்ட கலகத்தையெல்லாம் "இனங்கடந்த போராட்டவுணர்வு தோழமை " யென வகுப்பெடுத்துத் தமது எஜமானர்களுக்கிசைவாகக் கருத்தாடினர்.

இதிலும், வழமைபோல இரயாகரன் குழுவே முன்னணியில் நின்று தமது அந்நியச் சேவையை முக மூடிமனிதர்களுடாகவும்,முகந்திறந்த இரயாகரன் என்ற குறியீட்டுக்கூடாகவுஞ் செய்து முடித்தனர். இதிலிருந்து, இப்போது முன்னிலைச் சோசலிசக்கட்சி,அதன்சம உரிமை இயக்கம்- முன்னணி என்பதன் அரசியலைப் புரிந்துகொண்டோமானால் நிலமை கட்டுக்கடங்காது கைதவறிப்போனதை உணரலாம்.

இதுள்,மீள அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.

இந்தச் சதிகளது தெரிவில் சிலவுண்மைகளது முடிச்சவிழ்க்கும் "பங்கு பிரிப்பும்,படுகொலையும்" எழுதும் சாத்திரியைக் குறித்து நாம் சில கருத்துக்களை முன்வைத்தாகவே வேண்டும்.





சாத்திரி,ஒருவகையில் முழுமையான புலி விசுவாசி.பிரபாகரனுக்காக எதையும் செய்யும் மனநிலையுடையவரென்பதும்,வியாபாரப் புலிகளால் ஏமாற்றிப் படுகொலைசெய்யப் பட்ட பிரபாகரனுக்குப் புலத்தில் தமது வட்டத்துக்குள் முதன்முதலாகப் பொதுவெளியில் மாவீரர் அஞ்சலி செய்தவரும் சாத்திரிதாம்.சாத்திரி இத்தகைய மனிதரென்பதால் புலிகளையும்,அவர்கள் வழியிலான விதேசியப் போராட்டத்தையும் நாம் விமர்சித்த கடந்த காலத்தில் இந்தச் சாத்திரியார் எமது கட்டில்வரை வந்து எம்மைத் தூசித்தவர். எனினும்,அதையெல்லாம் நாம் எமது சமூக நடாத்தையினதும்,அதன் வளர்ச்சிக்கட்டத்திலும் புதைந்து பார்த்ததன் காரணத்தால் அது ஆச்சரியமோ அன்றி வேதனையையோ தரவில்லை.மாறாகச் சமூகக் கோபத்தையே தந்தது.என்றபோதும்,இந்தச் சாத்திரியின்இந்தப் "பங்கு பிரிப்பும்,படுகொலையும்" என்ற தொடரை மிக முக்கியமானவொரு சமூகப்பணியாகவே நாம் பார்க்கிறோம்.

புலிகள் தம்மைக் குறித்த ஆவணங்கள் யாவையும் நாசிகளைப்போலவே தாமும்  கைக்கெட்டியவரை அழித்துத் தமது அந்நியத் தொடர்புகளை,சதியை அதையொட்டி அந்நியருக்காக மக்களைக் கொலைகளத்துக்கனுப்பிய அனைத்து அரசியல் ஆவணங்களையும் இல்லாதாக்கிவிட்டனர்.புலத்தில் புலிப்பினாமிகள்,வியாபாரப் புலிகள்-மாணவப் புலிகளெல்லோரும் நேரடியாக அந்நிய ஏஜென்டுகளோடு உறவாடித் தம்மிடமிருக்கும் அனைத்தையும் மறைத்துவிட்டனர்.

இந்த நிலையில்,தமிழீழப் போராட்டத்தால் நாம் இடம் பெயர்ந்ததுக்கும்-அழிந்ததுக்கும்,திக்குத்திக்காய் புலம் பெயர்ந்ததற்கும்காரண காரியம் தேடும்வருங்காலச் சந்ததிக்கு,அதன் அறிவுக்கும்-தேடுதலுக்கும் அவசியமான"தமிழீழப் போராட்டத்தின்" உண்மையான வரலாறு இன்னும் உருவாகப்படவில்லை.அத்தகைய வரலாறு தரவுகளையும்,உண்மைகளையும் சார்ந்தே எழ முடியும்.அஃது,அநேகமாகக் கை கூடாதும் போகலாம்.ஆனால், சாத்திரியின் தொடர் அதுள் சிறு பொறியையாவது வருங்காலச் சந்ததிக்கான உண்மையாகவிட்டுச் செல்லும்.

நாமும், இந்தச் சாத்திரியின் மூலமாக இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் தொடர் முடிச்சுக்களை போடும் நிலைக்கு அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் கலகத்தின் பின் புலத்தையும், அதற்குக் கயிறு கொடுத்தவர்களையும் குறித்துப் பேசுகிறார்.அந்தக் கயிறு இந்தியாவால் திரிக்கப்பட்ட தெய்வீகன் மற்றும் புலத்துப் புலி வியாபாரிகள்!எப்படியிருக்கிறது இந்தச் சதி? மக்களைக் கொல்லுஞ் சதி-அந்நியர்களால் நடாத்தப்படுகிறது, இந்தக்கலகமெனத் தொடர்து இடைவிடாது கூறிக்கொண்டோம்.கபோதி, இரயாகரன் குழு இதை "மக்கள் எழிச்சி-மாணவர் எழுச்சி" என்றிட்டுக்கட்டி அந்நிய எஜமானர்களுக்காக நமது இளைஞர்களைச் சிங்களத்துச் சிறைக்கனுப்பினார்கள்-பாவிகள்-கொடும் மாபியாக்கள்!!இவர்கள்தாம் இப்போது அந்நிய சேவைக்கேற்ப முன்னிலைச் சோசலிசக்கட்சிக்கு வால்பிடித்துத் தம்மைத் தக்கவைக்க முனைகிறார்கள். அன்று, தம்மால் கொள்ளையிடப்பட்ட கட்டன் நசனல் வங்கிக்குள்ளிருந்த மக்களது பல கோடி பணம்-நகைள் மூலம் அமைப்புகளுக்கு நிதியிட்டும்,பொருளிட்டும் தமது ஏஜமானர்களிடம் இதற்காக இரட்டிப்பாக அறுவடை செய்கின்றனர்.;இது,எதன் பெயரால்? மக்களது விடுதலை-புரட்சியின் பெயரால்!

எதிர்ப் புரட்சியாளர்கள் வரலாற்றில் சறுக்கியவர்களல்ல. மாறாகப் புரட்சிக்குரிய நிலவரத்தைத் திட்டமிட்டுச் செயற்கையாகப் படைத்து அதன்வழியாகத் தம்மைப் புரட்சிகரச் சக்தியாகக் காட்டிப் புரட்சியைச் சிதைத்தபடியே தம்மைப் புரட்சியாளர்களெனத் தொடர்ந்து நிரூபித்துப் பற்பல புரட்சிகரக் கட்சி நாமத்துடன்  உலகெல்லாம் விரிந்து வாழ்பவர்கள். இது, புட்சிகரத் தோழமைக்குள் நியாயப்படுத்தப்பட்ட தோழமையாக விரித்து வைக்கும் சதி முதலாளித்துவத்து இருப்புக்கான வியூகத்தின் தெரிவிலொரு வழியாகும்.எனவேதாம், மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில்:" எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம்  [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ]". என்பது. இதன்வழி நமது சிந்தனையாளர்கள் பலர் 2009 வரை ஆழ்ந்த மௌனத்தைப் புலிப்பாசிசத்தின் முன் கடைப்பிடித்தபோது அதன் கிளைகள்-வேர்கள்-விழுதுகள் தற்போது புரட்சிகரச் சக்தியாகப் படங்காட்டிப் பின்னும் சதிவலையைக்கூடப் புரட்சியென நம்பும் நம் மக்களை விட்டில் பூச்சியாகவே நாம் இனம் காணவேண்டும்.

ஆகவே, யாழ்மாணவர்கள்கலகத்துக்குப் பின் நின்று தூண்டிய சக்திகளை நாம் ஏலவே சொன்னோம்.சாத்திரியின் குறிப்பின்வழி அது பலமான தொடர் புள்ளிகளை நமக்குத் தருகிறது.

இதிலிருந்து,இன்னொரு புள்ளிக்குத் தாவினால் அதுள் சந்திப்பவர் பரணி கிருஷ்ணரஜனி.

இவர் 2009 க்குப் பின் பொதுவெளிக்கு வருகிறார்.முள்ளி வாய்க்காலில் புலிகள் மண்கவ்வி மக்களைப் பலிகொடுத்து அழிந்துபோன பின்புலிகளது தவறுகள்,தப்புகள்,போராட்டச் செல்நெறிகள்,அவர்களது காட்டிக்கொடுப்பு,அந்நிய அடியாட்படைப் பாத்திரத்தோடு புலிகளது வரலாற்றுத் துரோகம் குறித்து நிறையக் கேள்விகளோடு மக்களும்,அவர்களது குழந்தைகளும் புலத்திலும்-நிலத்திலும் முனையுங் தருணமிது.

இதைத் தடுத்து, மக்களைத் தொடர்ந்து விவேகமாகச் சிந்திக்கவிடாதிருக்க அதே புலிவழிபாடு,தலைவர் துதியைத் தொடர்ந்து அச்சுப் பிசாகமால் பரணி செய்து வருகிறார்.இது இந்திய அரசின் மிகப்பெரும் கருத்தியல் தாக்குதலாகும்.

புலத்தில் மீள,அதே புலிவழிச் சிந்தனையையும்-ஏமாற்றையும் மனோவியற் புரிதெலெனுந்தொலியின்வழி  சொல்லிப் புனைந்து, புலத்தில் புலி குறித்த சரியான மதிப்பீட்டுக்கு மக்கள்வராதிருக்கப் பாடுபடுகிறார்.இது, ஒருவகையில் பார்ப்பனர்கள்இன்று தமிழர் பிரச்சனை குறித்துப் பேசுவதுபோன்றது.அதாவது, ஜெயலலிதாவையும் கவனித்துக்கொள்ள முடியுமென்கிறேன்.


வீன் பல்கலைக்கழகப் பின் கற்கையியல் மாணவன்பரணியின் வயதையொட்டிய ஆறாவடுச் சயந்தன் கதிர் பரணியின் இத்தகைய நடவடிக்கைக்குச் சமீபத்துள் எங்கோவொரு குறிப்பில்சொன்ன கருத்து:" பரணி, சின்ன விடலைகளுக்கு உசுப்பேத்திக் கதைவிடுகிறார்"என்பதாக இருந்தது.


ஆனால்,நாம் தொடர்ந்து கூறினோம் பரணி இத்தகையவழியில் இளைஞரைச் சிந்திக்கவிடாது புலிகளுக்கு ஒளிவட்டம் கட்டி மாயயை ஏற்படுத்துவது அந்நியச்சதி. இளையர்களைத் தொடர்ந்து போலித்"தமிழீழ" க் கனவின் வழி மழுங்கடிப்பதற்கான வியூகம் இதுவென்றோம்.அதுதாம் உண்மையென்பதைப் பல்கலைகழக மாணவர்களது கலகம் குறித்த பரணியின் உரையாடலின் மூலமும் ,புலி மாணவன்-இளய போராளி தெய்வீகனது இந்திய மண்ணில் இருத்தலுக்குட்ட பாதுகாப்பும் இன்னும் அதிகமாகப் பரணியின் பாத்திரத்தை உறுதிப்படுத்தும்

பரணி கடந்த 2012 கார்த்திகை மாதம் ஆரம்பத்திலேயே யாழ்ப் பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் உறுமுகிறார்கள்-ஒரு புரட்சி வெடிக்கும்,அது துனேசியாவைப்போல வெடிக்கும் என்றெல்லாம் கதைவிடத் தொடங்கினார்.இது திட்டமிடப்பட்ட சதிகளது முன்கூட்டிய தொடர்பு,அதன்வழியான பின்புலச்சக்திகளது உரையாடல் மூலமாக அவர் பெற்றுக்கொண்டபின் அதை அவிட்டுவிட்டார்.

இப்படிப் புலிகளால் வளர்க்கப்பட்ட பல மாணவர்களே இந்திய உளவுப்படைகளால் இப்போது உள்வாங்கப்பட்டு முழுக்க முழுக்க இந்திய நலனுக்கான தெரிவில் புலியைப் போற்றியும்,தேசம்-தேசியம்-தமிழீழம்"என்று கருத்துக்கட்டி மக்களைப் புதிய தெரிவுகளிலிருந்து அப்புறப்படுத்த்தித் தொடர்ந்து புலிக்கனவில் வைத்து ஒடுக்குவதற்கான கூட்டுக்கள்-சதிகள் தொடருகிறது.

இதை எங்ஙனம் முறியடிப்பது?

மக்களைத் தவறான பாதைக்குள் தள்ளிப் பலியெடுக்கும் இந்திய-மேற்குலக-இலங்கைச் சதிக்கார லொபிகளுக்கும் அவர்களது "இயக்க-கட்சி-புரட்சிக்குள்ளிருந்து" அடுத்த தலைமுறையை எங்ஙனம் காக்கப்போகிறோம்?

அரபுத் தேசத்துள்அமெரிக்க மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியத்துக்காகச் சாகும் அரேபியர்கள்போன்றோ அல்லது தமிழீழப் போராட்டத்தின் மூலம் அந்நியர்களுக்காக நமது மண்ணில் வீழ்ந்த பல இலட்சம் மக்களைப் போன்றோ இனியும் மக்களைச் சாகடிக்கும் அரசியலைப் புரட்சி-விடுதலை என்று வகுப்பெடுப்பவர்களைக் குறித்து எப்படிப் பார்ப்பது?

அந்நிய ஏஜென்டுகளை-கூலிகளை,லொபிகளை புரட்சிக்காரர்கள், விடுதலைப் போராளிகளென்றுரைக்கும் முட்டாள்தனத்தை எப்போது விடப்போகிறோம்?

குறைந்தபட்சமாவது சாத்திரியின் இத்தகைய உண்மை கூறிலின்வழியாவது சில சதிகளை கருத்து ரீதியாவுணர்ந்தாலும் செயற்பாட்டில் இத்தகைய குழுக்களை,புலத்தில் புரட்சிப்படங்காட்டும் புலிப்பினாமிகளையெல்லாம் வெற்றிகொள்ளும் ஆற்றலை முழுமையான உண்மை கூறற் கருத்துக்காளாலும் அது சார்ந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதாலும் பெறமுடியும்.

ஒரு சிறு பொறியை எழுப்ப முடியும்.

அந்த வகையில் சாத்திரியும் தமிழீழப் போராட்டத்தின் மூலமான சதி வரலாற்றை ஒரளவு மக்கள் அறிவதற்கு முக்கியமானவொரு பங்கைச் செய்திருக்கிறார்.


ப.வி.ஸ்ரீரங்கன்
29.01.2013

Friday, January 11, 2013

என் எதிர்பார்ப்புக்குள் முகிழ்க்கும் உதவிகள்...

என் எதிர்பார்ப்புக்குள் முகிழ்க்கும் உதவிகள்-ஓடியாருங்கோ,ஓடியாருங்கோ!


நான், பிறருக்கு "உதவும்-உதவிக்கு"ப் பின் எனது எதிர்பார்ப்புகளை ஒரு  corporate ethics முறையில் தரச் சொல்லி பார்த்திபன் கேட்டிருக்கிறார். அங்ஙனம்,வழங்கும்போது என்னால் நடுச் சந்தியில் ஆசீர்வதிக்கப்படுபவர்களுக்கு(குறிப்பாக: என்னிடம்"உதவி" பெறுகிறவர்களுக்கு) வசதியா இருக்குமென்பது மேன்மை மிக்க பார்த்திபனது வேண்டுகோள்.

அவ்வண்ணமே,நான் எனது முகநூல் நிலைத் தகவலில் எழுதிய குறிப்பைப் பார்த்திபன் தனக்கேற்ற வகையில் இதை ஒரு பாரிய சுற்றுக்குவிட்டும்[corporate social responsibility ]கூடவே, யசீகரனது சகோதர-சகோதரிகளுக்கும் அனுப்பிவைத்து இப்படியொரு நல்ல வேலையைச் செய்திருக்கின்றதால் யசீகரனது சோதரி ஜெயகலாவும் எனக்குத் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து, "எனது எதிர்பார்ப்பு" [ corporate ethics ]அறிதற் பெருவிருப்பையும் தெரிவித்திருக்கிறார்.

எனவே,நான் கண்டிப்பாக எழுத்து மூலம் "corporate ethics-சை"  தெரிவித்தே ஆகவேண்டியவொரு சூழலுக்கு "என் முன்னைய பாமர விருப்பான "என்வீட்டிற்கும் வந்திருக்கலாம்" என்றவணர்வினது[Aspects of Intellectual Property Rights  ] வெறுப்பில் கொண்டித்தீர்த்த இந்த நாய்-பேய் வார்த்தகளால் பாதிக்கப்பட்ட பெரு மனிதர்களது கேள்விகள்-எதிர்பார்ப்புகள் கொணர்ந்திருக்கின்றது!

எனவே, அவர்களது கருத்துக்களும்"எனது "எதிர்ப்பார்பு  "code of business ethics " பரவலாக வெளிப்படும்போது,எனது எதிர்பார்பினது  corporate ethics  நிறைவடையும்.அதனால் இது பொதுவெளில் வைக்கப்படுகிறது.

ஜெயகலா,உங்கள் மின்மடலுக்குப்


[ வணக்கம்,

உங்களைப் போன்ற நண்பர்களின் உதவியினால் இன்று சுவிசில் வாழும் ஜசி, வளர்மதியின் சகோதரி. உங்கள் குருதியின் பங்களிப்பினை பார்த்திபன் மூலமாக பெற்றுக்கொண்டவள். எங்கள் சுமைகளை நீங்களும் உங்களைப் போன்ற நண்பர்களும் உங்கள் தோள்களில் சுமந்த அவ்வேளை முகம் தெரியா உங்களை நினைத்து பெருமைகொண்டு நின்றோம். மனிதம் மரணிக்கவில்லை என மகிழ்வு கொண்டு நின்றோம். தாமாக முன்வந்துசெய்த உதவியினால் நெஞ்சம் நெகிழ்ந்து நின்றோம். நிச்சயம் உங்களைப் போன்ற
நண்பர்களின் உதவியே எனது சகோதரனையும் மனைவியையும் மீட்டது. இன்றும் அவ் உதவிக்கு நாம் தலைவணங்குகின்றோம்.

face book இல் நீங்கள் பறையறைந்த செய்தி கண்டேன். இந்தக் கணமும் உங்கள் உதவியை நாம் மதிக்கின்றோம். உங்கள் உண்மைக்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் பறையறைந்திருந்த செய்திகளை
முன்பே ( உதவி செய்யும் போதே) தெரியப்படுத்தியிருந்தால் எங்களுக்கும்
உதவியாயிருந்திருக்கும். உங்கள் குறிக்கோளை உணர்ந்து கொண்டிருப்போம். யாவற்றுக்கும் நன்றி.



பெறுமதியற்ற பிண்டமாகிய நாய்கள்.
ஜெயா,
இலங்கை.                                                                                             ]

 பதிலெழுதவேண்டுந்தாமாவென மனதுள்பட்டாலும் ஏதோவொருணர்வு, எழுதவேண்டுமென மனதில் தைக்கிறது. "உதவி-உதவுதல்" எனும் வார்த்தையே சகிக்கமுடியாதளவுக்குத் துஷ்ப்பிரயோகஞ் செய்யப்பட்ட சமுதாயத்தின் உறுபினர்களாகிய நாம் பெரும்பாலும் மனதவுறகளில் மகத்துவமுடையவர்களெனக் கொள்ள முடியாதுதாம். நான் அப்படியானவொரு "எதற்கும்" ஒரு எதிர் பார்ப்புடைய-நலன் நோக்கும் Code of Ethics காரியவாதி.







பலரை இப்படி "இறால் போட்டுச் சுறாவாகப் பிடிப்பதில்"நான் ஒரு வியாபாரி.

இத்தகைய எனது,"உதவி"க்குக் குறிக்கோள் அறியவேண்டுமென்பது உங்களது நோக்கென்பது நான் எழுதிய குறிப்பொன்றின் மூலமாக எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

எனது,நிலையோ "எல்லோருக்கும் விலாசங்காட்டி உதவுது",அதை வைத்து நல்ல மனிதர் வேடம் பூணுவது, இந்த இலக்கிலிருந்தபடியே அரசியலொன்றை நகர்த்தவது.அதன் செழுமைக்கு இத்தகைய உதவிகளை விளம்பரப்படுத்தி, சமூகத்துள் காலூன்றுவதன் பயனாக மக்கள் மத்தியிலொரு அரசியல் அறுவடையைச் செய்வதே இலக்கு.

எனவேதாம் "எவருக்கும்  மனமுவந்து உதவுவதுபோல் உதவி"அதை விளம்பரப்படுத்துவது.

பின், அதைவைத்தே கண்ணீர் வடித்துச்  சுயதம்பட்டம் அடிக்கும்போது "தியாகி-கொடை வள்ளல்" என்ற பெயரோடு"அழியாப் புகழ்" வந்தடையும் வரலாற்றைக் குறித்தெனதிலக்குகள் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இதைப் பரவலாகப் பகிரங்கப்படுத்துவதால் என்னிடம்"உதவி" கேட்பவர்களும்-நானாக உதவுவதாக நாடகமிட்டு உதவும்போதும்" சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.01.2013

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...