Monday, March 25, 2013

புலத்துத் தமிழர்களும் ஆதிக்கப் பரீட்சார்த்தமும்

வானேவித் தாக்குதல்களின் [Drone attack ]சனநாயகக் கோரிக்கை என்ன?அரசியல் அறமெனக் கொள்ளும் மேற்குலகத்துக்கு யுத்த அளவு கோலாக  ஜப்பான் மீது போடப்பட்ட  Fat Man and Little Boy  சட்ட -நீதிசார்ந்த அறமாக இருக்கும்போது , நாகசாகி-கீரோசீமாக்கள்[ Nagasaki and Hiroshima  ] வெறும் தார்மீகத்துள்கூட ஒட்டவில்லையே!

சமீபகாலமாக ,இந்த வானேவிகள்[Drone ]  இந்தியத் துணைக்கட்டத்துள்[Drone attack in Pakistan  ] போட்டுத் தொலைக்கும் மழலைகளது இருப்பை மறுப்பதென்பது பயங்கரவாதத்துக்கெதிரான யுத்த அளவுகோலக இருக்குமெனில் இலங்கையில் செத்த பிஞ்சுகளுக்கு இவர்களது அகராதியில் என்ன அர்த்தமுண்டு?

அதிகாரம் மற்றும் ஆதிக்கம்  குறித்துண்மையில் அடிக்கடி மிக தெளிவாக நான்  உணருவதென்றாலும், சமூக உறவுகளில் இந்த அடிப்படை கூற்றுப்  பார்வையில் பல புள்ளிகள் அரசியல்-சமூகப் பிரதிநிதித்துவம் கொண்ட  சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலான பிரச்சினை போன்றதே  அறிவியல் விவாதத்திலும் சமாந்தரமானதும்-விரிவானதுமான  விதிமுறைகளை வழங்க வேண்டுமென நினைக்கிறேன்.இன்றைய தமிழகத்து மாணவர்களது போராட்டத்தைப் பரவலான புரிதற்கேற்ப நகர்த்துவதில் பலவிதமான சிக்கலெழுவதும்,எமது புரிதற்குள் கட்டுப்படாததுமான கோரிக்கைகள் உண்மையில் விரித்து வைத்திருக்கும் சொல்லாடல்களாகச் சுருங்கிவிடும் அபத்தத்தைக் குறித்து நாம் எத்தகைய புரிதலில் முன்னகரும் அரசியலைச் செழுமைப் படுத்துகிறோம்?



இங்கிருந்துதாம்  ஐ.நா.மனிதவுரிமைக்கான தெரிவுகளில் அமெரிக்காவின் இலக்கைக் [  UN Resolution on Sri Lanka ]குறித்துவைத்து ,இலங்கையின் இனங்களுக்கிடையிலான நட்பார்ந்த போக்குகளைக் குறித்துப் பேசமுடியும்.

இதே கருத்தில் துல்லியமாகவும்  எவ்வளவு, சக்தி யூக்கத் தோழமை உறவுகளை தீர்மானிக்க  முனைவதிலும்,இடம் பெயர்ந்தும்-இருப்பிழந்தும் அலைவதன் தொடரில் தமிழ்பேசும் மக்களது தலைவிதியைக் குறித்துச் சிந்திக்கும்போது எமது சிந்தனைக்கு மேலாகவெழும் "சனநாயகம் மற்றும் அதுசார்ந்த மனிதவிடுதலைக்கான தெரிவுகள், பழைய கிரேக்கம்  மற்றும் அன்றைய நீதி பரிபாலனத்துக்கான அரசியல் அறநெறியாண்மையும் அதைத்தாண்டியதும் மற்றும்  கி.மு. 7 ஆம் நூற்றண்டுடிலிருந்த  டராக்கோனிய முறைசார் அறவியலானது [Draco  was the first legislator of Athens in Ancient Greece.  ] கி.பி. 4 ஆம் நூற்றாண்டு க்கான சீன எண்ணப் பாடுகள் வரை ஒரு கெட்டிப் படுத்தப்பட்ட மேலாண்மை வர்க்கத்தின் மனவாசைகள்-கற்பனைகள் "புரட்சிக்கார ஏசுவையும் " நானூறாண்டுகளில் மறந்ததுபோய்விட்டதென்பதில் உலக தர்மத்தைத் தாண்டிச் சீனத்துடன் புதிய மாற்றுக்களைக் கொணரப்போகுதென்பதை  இன்றைய இலங்கைச்  சமுதாயம் கணிக்கிலெடுத்திருக்குமோ தெரியாது!

பொதுவாக நிலம்-புலம் , அதுசார்ந்த மக்களது  சக்தி மற்றும் ஆதிக்கம்  குறித்த பலப்பரீட்சையுள் சமன் செய்வது சாதாரணமானது அல்ல. சக்திவாய்ந்த மேற்குலக  அரசாட்சி நிலவும் சர்வதே ஒழுங்காண்மைக்குத் தோதான நேட்டா அணிச் சேர்கையானது வலிந்து சீனாவையும்-இருசியாவையும் ஒரு இலக்கு நோக்கிய அணிக்குள் வன்முறைசார்ந்து கூட்டொத்துழைப்புக்கெனவும் கனி வளங்களைத் திருடிக் கொள்வதின் தொடரில், இராணுவத் தந்திரத்துள் இருசிய-சீன நிலைப்பாடுகள்   வல்லமைக்கு நிகரானதே!




தமிழகத்து மாணவர்களை இந்தவிடத்தில் பொருத்தும்போது 1960 களில் யேர்மனியில் எழுந்த மாணவர்களது போராட்டத்தில் ஒரு ரூடி டுச்கே[Alfred Willi Rudi Dutschke was the most prominent spokesperson of the German student movement of the 1960s  ]  இன்றுவரை  மூன்றாம் உலகத்துள் வெற்றிடமாகவே இருக்கிறது.

இந்த நிலைமைக்கேற்ப  ஐ.நா.வில் அமெரிக்கத் தீர்மானமென்பதை இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மையின் விளைவாக வகுப்பெடுப்பதென்பது கயமைத்தனமாகவே பார்ப்பதாகவேண்டும்.அமெரிக்க- ஐரோப்பிய மண்டல நலன்கள் கூட்டிணைவுகளுக்குள் பேசப்படும் சன நாயகமானது கங்கேரியில் பல மில்லியன்  சிந்தி-ரோமா மக்களைத் துவசம் செய்யும்போது விக்டர் ஓர்பானை [Viktor Orbán, Prime Minister of Hungary  ]ரோம் போப்பிலிருந்து யேர்மனியப் பிரதமர்வரை முத்தமிட்டு வரவேற்பதில் எந்தச் சமத்துவத்தைக் காணமுடிகிறது?

ஆக,மொழிவுகளைத் தாண்டிச் சமத்துவம் ,சகோதரத்துவம், ஒருமைப்பாடுகளைப் பிரஞ்சியப் புரட்சியின் அறுவடைக்குள் வைத்து, நம்மைத் தரிசிக்க அறை கூவலிட்டாலும் நமது மண்ணுக்கெனச்  சில சிறப்பியல்புகள் உண்டு.அதைக் கண்டடைந்தால் இந்த ஐ.நா.வொரு செல்லாக் காசு!.

-ப.வி.ஶ்ரீரங்கன்
25.03.2013

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...