Sunday, February 07, 2021

P2P : பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரை

 முள்ளிவாய்கால்—2009’ க்கும் ; “பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரைக்குமான எந்த அரசியற் போராட்டமானாலும் அவை, மக்களை அழித்தன; அழிக்கும்! ~சிறுகுறிப்பும், நினைவூட்டலும்~ (ப.வி.ஶ்ரீரங்கன் -)

 

இனங்களுக்கிடையிலான பகை முரண்பாடாகப் பொருளாதாரவளர்ச்சிகளின் வாயிலான பங்குச் சண்டைகள் வருகின்றனபங்குகள் பொருளாதாரப் போட்டிகளோடும்அத்தகையபொருளாதாரத்தால் நிலைபெறும் அரசியல் அதிகாரத்துக்கானபோட்டிகள் இனங்களுக்கிடையில் முட்டிமோதும்போதுஇலங்கையில் இனமுரண்பாடாக இவை எட்டின.

 

இதன் ,அகரீதியான தாக்கமானது இலங்கை மக்களதுமனங்களின் இனப்பகையாகக் காலாகாலம் வளர்ந்திருக்கும்படியாக இலங்கையின் பொருளாதார முரண்பாடுகள் இருத்திவைக்கப்பட்டன.

 

இதன் அறுவடையாகக் கடந்த 30 ஆண்டுகால ஆயுதப்போராட்டத்தைச் சந்தித்த இலங்கை மக்கள் தம்மைஅடையாளப்படுத்திய இனஞ்சார் இருப்புணர்வானதுஅவர்களது பௌதிக அடையாளமா ஆயின.

 

இது,மனித வரலாற்றில் அனைத்துச் சமுதாயங்களதும்வரலாற்றுப் பக்க விளைவாகவே உணரத்தக்க புரிதல்.

 

வரலாற்று மனித மாதிரிகள் காலத்துக்குக் காலம்மாறிக்கொண்டனஅவ்வண்ணமே வாழ்வுக் கண்ணோட்டமும்மாறிக்கொண்டனபுதிய வர்த்தக வியூகங்கங்கள் புதியஉறவுகளை,புதிய மாதிரியான உற்பத்திமுறைமைகளையும்,உற்பத்தியுறவுகளையும்உருவாக்கியுள்ளன.இங்கேஎந்த வர்க்கம் எதைநகர்த்துகின்றத ன்ற புரிதலும்,ஆளும் வர்க்கம் எது ன்றபார்வைக்குள் உணரப்படமுடியாத ளவுக்கு ஊகவணிக்கத்தின் நிதித் திரட்சியும், அதன்அனைத்துப்பரிணாமங்களும் உதிர்ந்துவிடக் கூடிய முதலாளியஅமைப்பைத் தொடர்ந்து பலமான வகையிற் காத்துக்கொண்டிருக்கிறது.

 

இங்கே,முன்னைய அடிக்கட்டுமான மேற் கட்டுமானப் புரிதலில்பாரிய வெடிப்பையும் இது ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத்தெளிவாகப் புரியம் சந்தர்ப்பத்தை மரபு மார்க்சியவாய்ப்பாட்டாளர்கள் இழந்து வருகின்றனர் 

 

அவர்களால் ,இன்றைய அதிகாரம்-ஆதிக்கம்-ஆளும் வர்க்கநகர்வுகளை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.தமிழ்த் தேசியம் காலத்துக்குக் காலம் அந்நியச் சக்திகளால்அவர்களது நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதமாகஇயக்கமும்ஊக்கமும் பெறுகிறதுஇது கடந்துமுள்ளிவாய்க்கால் வரைஇலங்கைத் தமிழ் மக்கள்மீதுசெலுத்திய ஆதிக்கம் நான்கு இலட்சம் மக்களைஅழித்துவிட்டுத் தன்னை மீள நிலைப்டுத்த, அதே அந்தியச்சக்திகளது தூண்டுதலால் மீளவும் தமிழ் மக்கள் விரோதஅரசியலை மட்டுமல்ல முழு இலங்கைக்கும் விரோதமானஅரசியலை முன்னெடுக்கின்றது!

 

தற்போது நடைபெறும் , “P2P“ அரசியல்

(பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரைஆர்ப்பாட்டப் பாதயாத்திரையின் வழி நகரும் அரசியல் இலாபங்கள்யாருக்கானவைஉலகு தழுவிய கொரோன வைரசுக் கொடியகொள்ளை நோய்க் காலதிற்கூட மக்களின் சுகாதாரத்தில்ஆரோக்கியத்தில் எந்த அக்கறையுமற்ற தமிழ்த் தேசியக்கட்சிகளது பொறுப்பற்ற கட்சிவாத இந்த அரசியலின்நலன்கள் என்ன?  இதற்குப்பின்னால் யார் , யார் ; எந்தெந்தஅந்நிய தேசங்கள் இருக்கின்றன?

 

அன்றுபண்டா-செல்வா  ஒப்பந்தத்தை(Bandaranaike–Chelvanayakam Pact) எதிர்த்து , களனியிலிருந்து கண்டிக்குப் பாதயாத்திரை ஆர்ப்பாட்டஊர்வலத்தை (The march began on October 4, 1957, with Jayawardene and Dudley Senanayake and the head of the procession.—Wikipedia) ஜே.ஆர்.ஜெயவர்தனே செய்தார்

 

அதற்குப் பின்னால் மேற்குலகம் இருந்தது

 

இன்றைய இந்தப் “பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரைப்பாதயாத்திரை ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னாலும் அதேசக்திகள் இல்லாமல் இருக்க முடியுமா?

 

இன்றைய இலங்கையின் புதிய திசைப் போக்குகளைஅறிவதில் 19 ஆம் நூற்றாண்டு மார்க்சியப் புரிதலோடு கட்சிகட்டுதல்குலைத்தல்,உருவாக்குதல்,அணித் திரட்சி-சதிகளென ஆயிரஞ் சங்கதிகள் நிகழ்கின்றனபுதியபுதியநபர்கள் சாணக்கியன் என்றும் , சுமந்திரன் என்றும் நமக்குள்தலைவர்களாக எழுகின்றர்கள்! இவர்களின்கோரிக்கைகளுக்குப் பின்னாலுள் இருப்பு அரசியல் எவரதுமுகத்தைப் பின்னாற் புதைத்து வைத்திருக்கிறது?

 

இதற்குள்உலகு தழுவிய அரசுகளது தயவுதாட்சண்யமற்றஆதிக்கக் கனவுகள் நமது தேசத்துள் பலவித அறுவடைக்கானஅரசியல் நகர்வுகளைக் கட்டிவைத்த யக்குவதும் அதன்வாயிலான அனைத்து மக்கள் விரோதக் கூறுபோடுதல்களும்தொடர்ந்துஅறுவடையாகின்றன

 

இந்தச் சந்தர்ப்பத்தில் இப்போது புதிதாக எழுந்த கோசம்ஒன்றைக் குறித்து (பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரைP2P ) விவாதத்துக்கு எடுப்பதும் அதன் திசையூக்கத்தில்கட்சின் தெரிவு என்னவென்பதையும் உணரவேண்டியகட்டாயமாகும். 

 

80’களில் "தமிழீழ"ப் போராட்டத்தின் நோக்கமும் அதன்போராட்டத் திசையமைவும் தமிழ்மக்களது சுயாதீனச்செயற்பாட்டையும்-வாழ்வு முன்னெடுப்பையும் பலமாகமாற்றியமைத்ததுஅதன் பலனாகஇனவொடுக்குமுறையென்பது பாரிய யுத்தவாத இராணுவஇயந்திரத்தின் துணையோடு புதிய நிலைக்கெட்டியபோதுஅங்கே , புலிகளது இராணுவ இயந்திரத்தின் துணையோடுபோட்டித் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தின் முரண்பாட்டைஇலங்கை சந்திக்கும் நிலைக்குள் இந்த "இனவாதஒடுக்குமுறையும்இராணுவவாத ஒடுக்குமுறையும்சந்தித்துக்கொண்டன

 

இதுசார்ந்துஇலங்கை அரசானது பாரிய யுத்தமுன்னெடுப்புக்குள் தள்ளப்பட்டதும்,கூலிஇராணுவமாகவிருந்த இலங்கை இராணுவம் இலங்கைஅரசியல் அமைப்பு முறைகளையே மாற்றியமைக்கும் ஆதிக்கச்சக்தியாக வளர்ந்துஅரசியல் கட்சிகளைக் கண்காணித்துஇயக்கும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து அதிகாரங்களையும்தனக்குள் உள்வாங்கியது

 

அதுபெயரளவில் இராணுவமாகவும் , உள்ளடக்கத்திலொருபுதிய ஆளும் வர்க்கமாகவும் இசைவாக்கம் பெற்றது

 

இலங்கையின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இராணுவத்தைண்டித் தமது இலக்குகளை ட்டிய போது அவை பல்லாயிரம்கோடிச் சொத்துக்களுக்கு உரிமையுடைய கட்சிகளாகருவாகினஅரசினது வன்முறைசார் இயந்திரமானஅனைத்துப் பகுதிகளும் அரசின் போக்குகளைத் தீர்மானிக்,கட்சிகள் தமது நிதித் திரட்சியை முதலீடு செய்யும்சட்டவுரிமைகளுக்காக இவர்களோடு முரண்பட்டனவே ழிய,மக்கள்-குடிசார் அமைப்பாண்மைக்கும்-சுயாதீனச்சமூகத்துக்குமாக இவர்கள் ஜனநாயகத் தன்மையைப்பிரயோகிக்கவேயில்லை. இதுஅன்றைய புலி வழியுருவாகியபுதிய தமிழ் ஆளும் வர்க்கத்துக்கும் பொருந்தும்.

 

இந்த வர்க்கமானது உலகு தழுவிய அமுக்கக் குழுவாகஇலங்கை அரசியலுள் தமது முதலீடுகளுக்கேற்பக் காய்களைநகர்த்துவதும்அதன் பாதுகாப்புக்கான அரசியற்கோரிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்வழிபிரதிநிதித்துவப்படுத்த முனைகின்றனஅதற்காகவேமக்களை உசுப்பிவிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகீழ்வரும் நோக்கை அடைய முனைகின்றன :

 

1 ) : இலங்கைப் பாராளுமன்றத்துக்கு வரும் நெருக்கடியைத்தீர்க்கும் நோக்கில் நடப்பில் இருக்கும் எரியும்பிரச்சினைகளைத் திசை திருப்புவது;

 

2 ): தொழிலாளர் போராட்டங்களை ஓரங்கட்டசிங்கள - தமிழ்;முஸ்லீம்மலையகத் தொழிலாளர்களது இலங்கைதழுவிய இணைவைக் காய் வெட்டவும் ;

 

3 ): இந்தத் தமிழ் அரசியல்வாதிகள்கட்சிகளின் துணையோடுதமது அந்நிய எசமான்களது நலன்களை இலங்கையில்உறுதிப்படுத்துவது.

 

4 ) : சர்வதேசத்திலுள்ள பணப் புலிகளது நிதி மூலதனமானதுசர்வதேசத்தில் நிலைகொண்டதன் பின் அதன்பாதுகாப்புக்கான அரசியலானது இலங்கை மீதானமேற்குலகத்தின் நலன்களைப் பாதுகாப்பிலிருந்தேசாத்தியமாகியுள்ள சிக்கலைத் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின்வழிசுமந்திரனின் வழி சாத்தியமாக்குவதில் > தமிழர்கள்இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமை < சார்ந்தநிகழ்ச்சிய ஒழுங்கு தமிழ்த் தேசியக் கோரிக்கையாகநகர்த்தப்படவும் ; 

 

5 ) : இது சார்ந்து , இனஞ்சார்ந்த ஓட்டுக் கட்சிகளதுஇருப்புக்கும்ஆளும் வர்க்கத்தின் நலனுக்குமானஉறவாடலுள் இந்த நிகழ்ச்சி நிரலை வைத்து ; நிலவும் தமிழர்சிக்கலை வைத்து , ஆட்சியை நிலைப்படுத்த ,அந்தியஒப்பந்தங்களை நிறைவேற்றசட்டரீதியான முடிவுகளை எட்ட ; மக்கள் கவனத்தைத் திசை திருப்பவும் ,

 

இந்த நாடகம் அரங்கேறுகிறது!

 

ஆகவே , தமிழ்த் தரகுக் கட்சிகள் வரலாறு பூராகவுஞ் செய்தலொபி அரசியலை இந்தப் > பொத்துவில் தொடங்கிப்பொலிகண்டிவரை ஆர்ப்பாட்டப் பாத யாத்திரை என்னும் உரைகல்லில் வைத்து உரைத்துப் பாருங்கள்!

 

இலங்கை அரசாங்கமோதரகுத் தமிழ்க் கட்சிகளின் , தலைவர்களின் மீளவுமான இத்தகைய  அந்நிய நலன்களின்ஆர்ப்பாட்டங்களை முழுமொத்த சிங்கள மக்களையும்பார்க்கவைத்துஅவர்களின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு,இலங்கை ஆளும் வர்க்கம் நலனின் பொருட்டு , நாட்டின்வளங்களை ஏலம் விடப் போகிறது!

 

இதைகடந்த காலத்தில் இணைத்துப் பார்த்தலும் அவசியம் :

 

இலங்கையின் இனங்களுக்கிடையிலான பொருளாதாரவளர்ச்சி ; முரண்பாடுகள் இறுதியில்"தமிழீழ"ப்போராட்டத்தின்வழி 90 களின் பிற்பகுதியில் புதியஆளும்வர்க்கத் திசை மைவைத் தமக்குள்உருவாக்கிக்கொண்டன . இப்போது, இந்தப் போக்கிலிருந்துஇரண்டு வகையான குட்டிமுதலாளிய நலன்களைக்கொண்டமுரண்பாடுகளைப் பார்க்கலாம்.

 

புலிகளது தரப்பிலிருந்து செய்யப்பட்ட போரானது பலஇலட்சம் தமிழர்களது உயிரைப்பறித்தும்,அவர்களதுஉடமைகளைத் தமிழீழத்தின் பெயரால் திருடியும் உலகுதழுவிய வகையில் சர்வதேச ரீதிய ஒரு மிக நுணுக்கமானசந்தர்ப்பவாதத் தரகு முதலாளிய வர்க்கத்தைப் புலிகள்அமைப்புதமிழீழப் போருக்கூடாக உயிர்ப்பலி கொடுத்து,உருவாக்கியது. புலிகளது மேல்மட்டத் தலைவர்கள்அவர்களது குடும்பத்தவர்களென இந்தப் புதிய தரகு முதலாளியவர்க்கம் நிலம்-புலமென உருவாகிக் கொழுத்திருந்துதனக்கான நலன்களை அறுவடைசெய்ய யுத்தத்துக்குஅப்பாவிச் சிறார்களைப் பிடித்து அன்றுஅனுப்பிக்கொண்டிருந்துஇல்லையா?

 

இந்தப் புலி ஆளும் வர்க்கத்தால் தமிழ் இனத்துக்குள்ளிருந்தமரபுரீதியான சுயாதீனக் குட்டிமுதலாளிய வர்க்க நலன்சார்முன்னெடுப்புகள்,அவர்களது வர்த்தக அபிலாசைகள்"தமிழீழத்தின் பெயரால்இல்லாதொழிக்கப்பட்டபோதுஅத்தகைய வர்த்தகக் குடும்பங்கள் தம்மை இலங்கையின்பின்னும், இராணுவத்தின் பின்னும் தகவமைப்பதில் தொடர்ந்துதோல்வியடைந்திருந்தனகொழும்புத் தமிழ் வர்த்தகக்குடும்பங்களுக்கும் இதுவே கதி

 

புலியினால் உருவான  சர்வதேசந் தழுவிய புதிய தமிழ் மூலதனவர்க்கமானது இலங்கை இராணுவத்துடன் சமரசஞ்செய்துஇவர்களை ஏமாற்றியது. தமிழ் நிலப் பரப்பின் வளங்களைக்குறிப்பாகக் கடல் வளத்தைக்கூடக் கடற் கடற் கண்காணிப்புவலயம்-கட்டுப்பாடு-பாதுகாப்புவென மட்டுப்படுத்தித் தாமேஅவ்வளத்தைச் சுவீகாரித்து இராணுவத்தோடுபங்குபோட்டுக்கொண்டது, 2008’ ஆம் ஆண்டு வரை.

 

இத்தகைய வரலாற்றில் முள்ளிவாய்க்காலுக்குப்பின்உடைவுகண்ட புதிய தமிழ் ஆளும் வர்க்கங்களது கூட்டுக்கள்தம்மைத் தொடர்ந்தும் புலிவழியில் திசையமைப்பதிலும்"தமிழீழத்தின்பெயரால் வளங்களைக் கொள்ளையடிப்பதிலும்பின்னடைவைக் கண்டபோது அந்த வர்க்கமானதுகட்சியாதிக்கத்துள் புதிய தரகு முதலாளியக் குடும்பமானமகிந்தா குடும்பத்தோடு சமரசஞ்செய்ய கே.பி.யின் பின்அணிவகுத்துத் தேசியத் தலைவர் வாழ்வதாகவும்கதைபின்னிக் காரியத்தில் இறங்கிகே.பி.அதனைத்திறம்பட வழி நடத்தியும் காட்டினார்அன்று!

 

புலியின் புதிய தரகு முதலாளிகள் கே.பி.யின் பின்னேஅணிவகுத்து இலங்கை அரசைத் தமக்கான நலனுக்குரியகூட்டாளியாக்கும் முயற்சியில் கே.பிசார் கட்சியின் பின்னேஅணிதிரண்டு தோல்வி கண்டதன் எதிர் விளைவால்பாதிப்படைந்தவர்கள் , அந்நிய லொபித் தமிழ் இனஞ்சார்இனவாதக் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்தற்போது நம்பகமான கூட்டாளிகளாக சமந்திரனைக் களத்தில்இறக்கியுள்ளனர்!

 

இவர்களைத் தூக்கி நிறுத்தவும், நிதியிட்டுத்தமது நலன்களைப்பெறவும் புதிய புலிப்பணக்கார வர்க்கத்துக்குஅவசியமிருப்பதை மேலே சொன்னேன் !

 

தமிழ்தேசியக் கூட்டமைப்பானது இன்றைய நிலையில்அந்நியச் சக்திகளது லொபிக் குழுவாக இருப்பதுதாம்உண்மை. அந்தக்கட்சி சர்வதேசப் புலிப் பணக்காரநிதிமுதலீட்டுத் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தின்நலன்களை  இலங்கையிற் பிரதிநிதித்துவம் செய்யமுனையும்இன்றைய சூழலில் ,இக்கட்சி  தமிழ் மக்களை நட்டாற்றில்தள்ளுகிறதுஇத்தகைய “பொத்துவில் தொடக்கம்பொலிகண்டி “ வரையான பாதயாத்திரை வழி!

 

இதற்குள் —  மறுபுறம் , பிளவுபட்ட தமிழ் உடமை வர்க்கம் : 

 

தமிழ்ப் பிரதேசப் பொருளாதாரத்துள் ஏலவேபுலிகளால்பழிவாங்கப்பட்ட தமிழ் மரபுவழிப்பட்ட தரகு முதலாளிகளுக்குயாழ்ப்பாண இடப்பெயர்வு,மற்றும்வன்னிக்குள் புலிகளதுமுடக்கமும் அவர்களது மேல் நிலைத் தலைவர்களது புதிய தரகுமுதலாளியவுருவாக்கம் புதிய திசையைச் சுட்டிக்கொண்டது.இதன்வழி புலிகளால் பாதிப்படைந்த இந்த மரபுரீதியானதமிழ்த் தரகு முதலாளிய வர்க்கமானது இராணுவத்தோடும்,டக்ளஸ் கட்சியோடும் சமரசஞ் செய்வதில் வெற்றி கண்டனர்.டக்ளஸ் தேவாநந்தா தலைமையில் புலிகளால்பழிவாங்கப்பட்ட சிறுவுற்பத்தியாளர்கள் அவர்களதுகூட்டுருவான தரகு முதலாளிய வர்க்கமானது புத்துணர்வுபெற்றுதன்னைத் தகவமைத்தது. இவர்களது தலைவர் டக்ளஸ்என்பதும் இந்த அணியானது தமிழ்ப் பிரதேசமெங்கும் விரிந்துநிலைபெற்ற இராணுவ ஆதிக்கத்தின் நிர்வாக மற்றும்கட்டுப்பாடுகளோடு சமரசஞ்செய்யும் போக்குக்கு இராணுவமேல்நிலை அதிகாரிகளது பெருஞ்சொத்தும் ஈடுகொடுத்தது.

 

இலங்கை இராணுவத்தின் ஆதிக்கமானது தமிழ்ப்பிரதேசமெங்கும் இராணுவ மேல்நிலை அதிகாரிகளது தங்குதடையற்ற வர்த்தக முன்னெடுப்புக்கும் அதுசார்ந்து புலிகளாற்பழிவாங்கப்பட்ட பாரம்பரிய தமிழ்த் தரகு முதலாளிகளதுகூட்டொத்துழைப்புக்குமான சமரசமானது தமிழ்ப்பிரதேசத்தின் அனைத்து வளங்களையும் ஒரு சில தமிழ்-சிங்களக் குடும்பகளது கட்டுப்பாட்டுக்குள்கொணர்ந்திருக்கிறது.

 

இதைத் தகர்த்து, சுயாதீனமான மூலதனநகர்வு,வர்த்தகம்,சந்தை என்பதெல்லாம் இனிமேற்சாத்தியப்படக்கூடிய சூழலை எதிர்ப்பார்த்திருந்ததமிழ்தேசியக் கூட்டமைப்பானது இந்தச் சர்வதேசப் புலிப்பணக்கார நிதி மூலதனத்தின் இலங்கையை நோக்கியநகர்வை ; ஆதிக்கத்துக்கான சூழலது தெரிவைப்புரிந்திருக்கிறது.

 

இராணுவத்துடன் சமரசஞ் செய்துகொண்டு புதிய தரகுமுதலாளிகள் அனைத்துப் பொருளாதார முன்னெடுப்பையும்இராணுவத்தின் ஒத்துழைப்போடு கட்டுப்படுத்தும் இந்தச்சூழலில் அவர்களைத் தாஜாப்படுத்தித் தம் பக்கம்இழுப்பதில்தாம்"இராணுவம் தமிழ்ப் பிரதேசத்திலிருந்துவெளியேறத் தேவை இல்லை!" அன்று 2013’ ஆண்டு கோரிக்கை வைத்ததையும் நினைவூட்டுகிறேன்!

 

நல்லாட்சிக்கால இலங்கைச் சுதந்திர தினத்தில்இரணிலுடன் இணைந்து இலங்கைத் தேசியக்கொடியைத்தூக்கிச் சுதந்திர தினத்தைக் கொண்டாடியசம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇன்று , சுமந்திரன் -சாணாக்கியின் தலைமையில்ஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்திக்குக் கருப்புக் கொடிகாட்டுகிறது!

 

இதைவிடத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வேறுதெரிவில்லைவழியில்லை.

 

இந்நிலைக்குள்,

 

1 : சர்வதேசம் தழுவிய பணப் புலித் தமிழ்த் தரகு முதலாளியவர்க்கம்  சமந்திரன் —சாணக்கியன் தலமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாயிலாக மகிந்த குழுமத்தோடும்அவரது கட்சியாதிகத்தோடும் சமரசஞ் செய்து கொள்ள,P2P‘ யைச் சொல்லி மக்களை தடாற்றில் தள்ள,

 

2 : புலிகளால் பழிவாங்கப்பட்ட பாரம்பரிய தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் ஆதிக்கஞ்செலுத்தும் இராணுவத் தலைமையோடு சமரசஞ்செய்து,இராணுவ இருப்போடு தமிழ் நிலப்பரப்பிலுள்ளவளங்களைக் கையகப் படுத்திய காலம் இந்தத் தசாப்தத்துள்டக்ளஸ்வடக்கிலும் ; பிள்ளையான் கிழக்கிலும் இரணுவப்பொருளாதாரத்தைத் தகவமைத்து இயக்க , 

 

இந்தப் புதியவகைப் போக்குகளால் தமிழ்த் தரப்பில் கட்சிவைத்து அரசியல் நடாத்தும் கட்சிகள் தமது இருப்புக்காகஅரசியற் கோசங்களைத் தகவமைத்து அவற்றை மக்களின்நலமாகவும்,அரசின் நலமாகவும் வெளிப்படுத்துகின்றன.

 

ஒரு கட்சியை ஆராய்வதற்கு அவர்களது கடிதங்களின்நிகழ்ச்சி நிரலின் வழி முயற்சிப்பது கடைந்தெடுத்தமுட்டாள்த்தனமாகும்.இக் கட்சிகள் பல்வேறுபட்ட வர்க்கமக்கள் கூட்டத்துள் நிலவும்-ஏற்படும் முரண்பாடுகளைஎங்ஙனம் தீர்க்க முனைகின்றன-அத்தகைய சந்தர்ப்பத்துள்எப்படி நடந்துகொள்கின்றனவென்று பார்த்து ஆய்வதேசரியானது என்று

 

உங்களுக்கு உரைப்பேன் நண்பர்களே!

 

எனவே,இன்றைய புதிய தரகு முதலாளியக் குழுக்களுக்குள்நிலவும் முரண்பாட்டைத் தமிழ் தேசியக் கூட்டமைப்புஎங்ஙனம் எதிர்கொள்கிறது,அதன் இருப்புக்கான பின்புலம்என்னவென்று நோக்குவதே சரியானது.

 

இன்றைய தமிழ் ஓட்டுக் கட்சிகளது போராட்டங்களால்இலாபமடையும் அந்நியத் தேசங்கள் ; சர்வேதேசத் தமிழ்த்தரகு முதலாளிகள் இத்தகைய P2P —போராட்டங்களைஊக்குவித்து இதற்கு நிதியிட்டுச் செய்தேமுடிப்பர்.அந்தளவுக்கு அவர்களிடம்ஊடகப்பலமும்,பணப்பலமும் உண்டு

 

யுத்தத்தின் மூலம் வருமானத்தைக்கொண்ட இராணுவக்குடும்பங்கள்,தமிழ்த் தரகு முதலாளிகள் பெருந்தொகையானகருப்புப் பணத்தில் நீந்துகிறார்கள். இராணுவக்குடும்பங்களிடமிருக்கும் பெருந்தொகையான கருப்புப்பணமானது யாழ்மாவட்டத்தின் காணிகளையும்-கட்டிடங்களையும் ரொக்கற் வேகத்தில் உயர்த்திக்கொண்டன.யாழ்ப்பாண மாவட்டதின் நிலங்களது இன்றையவிலைகளும்,கட்டிடங்களின் விலைகளும் அமெரிக்கக்கட்டுமானத் துறைக்கேற்பட்ட சரிவுக்கு நிகராகச் சரியாதுஏனெனில்இவை கருப்புப் பணத்தால் கொள்முதல்செய்யப்பட்ட சில குடும்பங்களது தனிப்பட்ட சொத்தச்சு!

 

இங்கு,இராணுவத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்த விரும்பும்தமிழ்ப் பிரதேசப் புதிய ஆளும் வர்க்கமானது சர்வதேசப்பணப்புலிகளின்  இலங்கை மீதான அரசியல் அமுக்கநலன்களோடு முட்டி மோதுகின்றன . சர்வதேசப் பணப்புலிகளது கையில் “தமிழ்த் தேசம்உரிமை “ என்ற செப்படிவித்தை கையிலிருக்க , மரபார்ந்த தமிழ் ஆளும் வர்க்கம்இராணுவத்தோடு பின் நிற்கும் டக்ளஸ் , பிள்ளையானைநம்பியபோதும் அவர்களை இந்த அலையில் அடிபடாதிருந்துகாக்க , இந்த P2P  அரசியல் சூதாட்டத்தை அணைப்பதுபோல்வித்தை காட்ட வைக்கின்றனர்இதுள் , முஸ்லிம் ; மலையகக்கட்சிகளின் ; தலைவர்களின் கதையும் , இஃதே!

 

.வி.ஸ்ரீரங்கன்

07.02.2021

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...