Monday, March 30, 2020

மதமாற்றம் - பைபிள் : பண்பாட்டு -அடையாளச் சிதைப்பும், தமிழ்த் தேசிய அலகுகளது தொன்மை நீக்கம்



மதமாற்றம் - பைபிள் : பண்பாட்டு -அடையாளச் சிதைப்பும், தமிழ்த் தேசிய அலகுகளது தொன்மை நீக்கம் மதமாற்றம் எனும் பெயரிலான வியூகம் -சில குறிப்புகள்! - ப.வி.ஶ்ரீரங்கன்
 
 
ஈழத்துக்குச் சமீபகாலமாக வந்த பிரத்தியேகக் கிறித்துவ மதப்பிரிவுகள் -பைபிள் பயங்கரவாதம் ( "Religiösen Sondergemeinschaften" ) எம் பண்பாட்டு - சமூகவுணர்வு ;தேசியவுணர்வு;சனநாயகவுணர்வு மற்றும் ஆன்மீக உணர்வு உள்ளிட்ட புலன்களில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகமிகப் பெரியது. இந்த அபாயகரமான பண்பாடுச் சிதைப்பு - உளவியல் தாக்கம் மிக மோசமான விளைவுகளை மக்கள் சமுதாயத்துள் ஏற்படுத்தப் போகிறது,எனலாம்!இந்த மோசமான பைபிள்சார்ந்த வன்முறை நமது வரலாறு நிலைப்பட்ட மரபுப் பண்பாட்டை கொன்றுபோட்ட விளைவுகளையும் ; தாக்கங்களையும் மிகக் கவனமாகவும் ;நுட்பமாகவும் விளங்க முற்படுதலே இக் கட்டுரையின் நோக்கம். இதை மனதிலிருத்தி தொடருங்கள்.
ஈழமக்களது வாழ்வியல் மரபுகள் தகர்க்கப்பட்டுவரும் சூழல் இருபத்தியோராம் நுற்றாண்டாகும்,ஒன்றின் இழப்புக்குப் பின் அந்தவிடத்திற்கு மிகவும் காட்டமான பழைய மரபுசார்ந்தெழுகின்ற ஒரு பிற்போக்கு வடிவத்தை தமிழ் மக்களுக்குப் புதியவொழுங்கு போன்று ஒப்பவிக்கிறது இந் நூற்றாண்டு.
ஈழ மக்கள் மீதான கட்டாய மத மாற்றம் ,உலகு தழுவி வியாபித்துள்ளது ; இனம் ,மொழி கடந்து உலகம் பூராகவும் இதுவொரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கொப்ப ( "religiösen Sondergemeinschaften" )நிலத்திலும் /புலத்திலும் நகர்கிறது -இது குறித்துக் கவனமின்றி நாம் நகர்கிறோம்.புரட்சியாளர்கள் -தோழர்கள் தமது முற்போக்கு முகமூடி கழன்று தொலைந்துவிடுமென்ற அச்சத்துள் சனநாயக நிகழ்வாக இதை வகுப்பெடுக்கின்றனர். 2009 வரைப் புலிகளைப் பாசிசச் சக்தியாக இனங்கண்டு எதிர்த்த நாம், பைபிள்சார்ந்த கட்டாயப் பண்பாட்டழிப்பு ;இனவழிப்பை நாம் சனநாயக பூர்வமான மதமாற்றமென்று கள்ள மௌனஞ் சாதிக்கின்றோம்.
முள்ளிவாய்க்காலுக்குப்பின்பான பின் போராட்டச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்குச் சாதகமற்ற பெரும் நெருக்கடி நிறைந்த இருண்ட காலமாகும்.இந் நெருக்கடி சிங்கள அரசினாலோ அன்றிப் பொருளாதார நெருக்கடியாலோ ஏற்பட்டதல்ல.இன முரண்பாடுகள் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் சூழலை இல்லாதாக்கித் தமிழர்களை, அவர்களது முகவரியை அழித்துத் துவசம் செய்யும் நிலைக்கு ஈழ நிலப்பரப்பெங்கும் ஆக்கிரமிக்கும் பைபிள் மூளைச் சலவை(Christliche Sekten ) நமது மக்களின் பூர்வீக அடையாளத்தை அழித்து நகர்கிறது.
2009'க்குப் பின்பான ஈழச் சூழலானது கத்தோலிக்கர்கள் ,ஈழத் தமிழ் அடையாளங்கள்மீது மிகக் காட்டமான அரசியல் -பண்பாட்டு அழிப்பை மிக ஆக்ரோசமாக நகர்த்தும் காலமாகும்.இது சிங்கள அரசின் பாத்திரத்தை மெல்லத் தமக்குள் செரித்து அந்நியவுதவியோடு நமது மக்களை வேட்டையாடுகிறது.இதை "யாழ் இந்து மையவாதத்திற்கு" எதிரான போராட்டமாக அது பிரபடனப்படுத்தியும் உள்ளது.
அன்று சிங்களச் சிறீ எழுத்துக்கே ஆர்ப்பாட்டஞ் செய்து( 1958 ஏப்ரல், மார்ச் மாதங்களில் இலங்கை போக்குவரத்து சபை, தமக்கு சொந்தமான பஸ் வண்டிகளில் சிங்கள ஸ்ரீ எழுத்தை பொதித்து, வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்து எழுந்ததுடன், அச்சிங்கள எழுத்துக்கு பதிலாக தமிழ் ஸ்ரீ எழுத்தை பொதித்தனர். இதற்கு பதிலடியாக கொழும்பிலுள்ள தமிழ் வீடுகளில், கடைகளில் சிங்களவர்களால் ஸ்ரீ எழுத்து எழுதப்பட்டன. இதனால் 1958இல் மீண்டும்; கலவரம் ஏற்பட்டது. ) 1958 இல் கலவரத்தைத் தூண்டிய தமிழ் அரசியல் இன்று, தமிழ்க் கிராமந்தோறும் மக்களை பைபிள் கொண்டு மனநோயாளிகளாக்கி ஆன்மீகத் துசுப்பிரயோகம் செய்தும் (Seelisch missbraucht ),அவர்களது அடையாயத்தை ; பெயரை ; மதத்தை ; பண்பாட்டை அழித்து ,அந்நியப் பண்பாட்டை ஈழமண்ணில் விதைக்கும் காரியத்தை அந்நிய ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளான NGO'க்கள் ( Psychogruppen, Politgruppen, Scientology )செய்து முடிக்கும்போது நாம் வாளாமை பூண்டுள்ளோம் ; இதற்குப் பெயர் முற்போக்காளர்கள்!
பைபிளை வைத்துப் புதியபுதிய பெயர்களில் - Sekte (International Churches of Christ; World Mission Society Church of God ; Scientology ; Zeugen Jehovas ; Holic-Gruppe ; Mormonen usw. )ஏகாதிபத்தியம் பிற்போக்கு மதக் குழுக்களைத் (Ganze Reihe von verschiedenen Sekten)தோற்றுவித்து கத்தோலிக்கம் மீதான அவநம்பிக்கைக்கு-செல்வாக்கு இழப்புக்கு மாற்றீட்டைக் காண்கிறது.இதன்வழி,போர்க் குணமிக்க பாட்டாளிய மக்களை பைபிளை அடிப்படையாகக் கொண்டு, மூளைச் சலவை செய்து ,அவர்களைக் கையாலாகாத வர்க்கமாக மாற்றுகிறது.பைபிளுக்கு வெளியில் வேறொரு உலகமில்லையென்பதே அவர்களது முடிவாகிறது.இதற்குப் புதிதாய் மலிந்துவிட்ட விஞ்ஞானச் சாகசங்கள் நன்றாய்த் துணைபுரிகின்றன,இதன்பொருட்டு இன்றைய மதங்கள்சார்ந்த செய்மதிச் செய்திப்பரிவர்த்தனை வானளாவிய தொலைத் தொடர்பு;சமூகவூடகங்கள் மற்றும் தொலைக்காட்சி-வானொலி,இணைய வலைப் பின்னல்களை தனிநபர்-தனிப்பட்ட வலயத்திற்குள் திணித்து விட்டுள்ளது. இது பற்பல சாத்தியங்களை மக்கள் சமூகத்துள் தோற்ற இதன் பயன் பாரிய சமுதாயப் பின்னடைவை-பிளவை வற்புறுத்துகிறது,என்றுமில்லாதவாறு சமூக முரண்கள் மழுங்கடிக்கப்பட்டு சமுதாய மாற்றம் நிகழாத சூழலை ஏகாதிபத்திய நிறுவனங்கள் நிறுவனமயப் படுத்துகின்றன, தற்செயலாகவேனும் உலகமயத்திற் கெதிரான கல்வியியல் சார்ந்த கட்டுமானம் நிகழாதபடி இந்த உலகமய மதவாத - Sekten அரசியற்தந்திர வியூகம் இப்போது பலமாகக்கட்டப்படுகிறது.இதுவே, நம்மைக் கருவறுக்க நம்மவரை வைத்து, நமது வரலாற்று அலகுகளை அடியோடு சிதைக்கின்றது ; எமது தொன்மையான அனைத்து அறிவார்ந்த பண்பாட்டுத் தளத்தையும் நீக்கஞ் செய்து, மேற்குலகத்தின் அடிமைகளாக நமது மக்களை ஆன்மீக அடிமைகளாக்கிறது.
இதையொட்டிய நிகழ்வுசார்ந்தெழுகின்ற அனைத்து நிலமைகளும் நன்றாகத் திட்டமிடப்பட்டுள்ளது,இதன் ஒவ்வொரு அசைவும் நுணுக்கமாக ஆய்வுக்குட்படுத்தி சட்டநிலைமைகளால் தடுக்கப்பட்டு வரும் நிலையில் நமது தமிழ்ச்சூழலை மையப்படுத்தி எதையும் குறித்துரைக்காதிருக்கமுடியாது!
இன்றைய இந்த மதமாற்றும் பிரத்தியே பைபிள்த்(விவிலியம்) தாக்குதற் சூழல் நம்மைக் கணிசமான அளவு உதிரி வர்க்கமாகவும்,மறுவுற்பத்தியை நீக்கி(Reproduktive Isolation) நாடோடிகளாகவும்-ஒட்டுண்ணிகளாகவும் அறிவுத்திறனற்ற அடிமைகளாகவும் மாற்றியுள்ளது,நாம் நமது பாரம்பரிய நினைவிலி மனதை இழந்து , அந்நியர்களது பண்பாட்டுக்குள் தஞ்சம் புகுகின்றோம்,தப்பித்தல் எந்த வகைப்பட்டதாயினும் அது நமது பொருள் வயப்பட்ட வாழ்வைப் பாதிக்காதிருக்க கவனமாகப் பழக்கப்பட்டுள்ளோம்.மூன்றாம் உலகத்துக்கேயுரிய அடங்கிப்போகும் மனோபாவம் நம்மை இன்னும் வக்கொழிந்தவர்களாகப் பார்க்கும்படி நாமேயேர்ப்படுத்தி அவற்றை நமது அடுத்த தலைமுறைக்குக் கடத்திக்கொள்ள பற்பல ஊடகங்களுடாய் பைபிளை வைத்து பிரசங்கம் ; பேயோட்டல் என்று செயற்படுதல் தற்போது சகஜமாகப்பார்க்க முடியும், எனினும் எமது வாழ்வும் துய்ப்பும் நம்மில் பலரை இதற்கு மாற்றீடாய்ச் சிந்திக்க வைத்தாலும் நமது கருத்தியற் தளம் மிகவும் பலயீனப்பட்ட நிலைகளால் மிகச்சாதரண காரியத்தைக்கூட மக்கள் சமூக வட்டத்துள் சாதிக்க முடியாதபடி ஆக்கப்பட்டள்ளது. இதை,இந்த பைபிள்ப் பயங்கரவாதிகள் நன்கு அறிவர்.
புலம் பெயர் தமிழ் குழுமம்:
புலம்பெயர்வாழ்வு மிகவும் முரண்படுதன்மைகளை -பொருந்தாத்தன்மைகளை தன்னகத்தே கொண்டுடியங்குகிறது,இணக்கமற்ற இருவேறு அணுகுமுறைகளின் ஒருமாதிரி சேர்க்கையிலேதாம் புலம் பெயர் தமிழ்மக்களினது இருப்பே தங்கியுள்ளது. இங்கெல்லாம் நாம் நமது வாழ்வை சமூகக்கூட்டாகமைக்க முடியவில்லை .இதனால் சமுதாயரீதியான அணுகுமுறையற்றுப்போவதால் குழுவாரீயான அணுகுமுறையே நிலவுவதால் அஃது ஒன்று,மற்றது: தனிநபர்வாத அணுகுமுறை! குழுவாரியான அணுகுமுறைக்குள் சிறு சுய அமைப்பாண்மையும், ஆற்றலையும் காணும்போது மறுபுறத்திலோ தனிநபர்வாத அணுகுமுறை எல்லாச் சீரழிவுக்கும் பசளையிடும் காரியத்தில் இயங்கிக்கொள்கிறது. இதுவே,இன்றைய மதமாற்ற வலையமைப்பை மிகத் திட்டமிட்டு நகர்த்திப் புலம்பெயர் தமிழர்களில் 60 % மானவர்களை பைபிள் அடிமைகளாக்கியுள்ளது. இத்தகைய அடிமைகளை வைத்துப் பிழைக்குமொரு நாசகாரக் கூட்டம் நமக்குள் தெளிவோடு இயங்குகிறது.இதற்கு அந்நிய தேசங்களதும் - ஏகாதிபத்தியத்தின் ஒத்துழைப்புகளுண்டு.
இத்தகைய NGO சார்ந்த தனிநபர்வாத அணுகுமுறை பழைய குட்டிப்பூர்ச்சுவா குணாம்சம் காரணமாக மிகவும் இறுக்கமான மரபுசார்ந்து காசு பார்க்கும் -சுரண்டும் ; செல்வஞ் சேர்க்கும் செயற்படும் தந்திரத்தில் மையங்கொண்டுள்ளது, இது பைபிளை வைத்துக் காசாக்கும் நோக்கோடு சகல 'மக்கள் தொடர்பாடலையும்' பார்க்கிறது. இந்தப்போக்கின் விருத்தியே தமிழ்ப் பைபிள் பிரசங்க வானொலி-தொ(ல்)லைக்காட்சி வியூகமும்,அதுசார்ந்த மதமாற்றும் வியூகமும்.
.இது சுயநலன் கொண்ட தற்பெருமையும்,இறுமாப்பும் கொண்ட தனி நபர்களை உருவாக்கிவிட்டுள்ளது, இவர்களது சமூகவாரியான புரிதல் மிகவும் தாழ்நிலையில் இருக்கிறது,இவர்களே கிறித்துவத்தின் -ஏசுவின் சீடர்களாக மேதாவிகளாய் உலகத்தின் எந்த பிரச்சனைக்கும் எழுந்தமானத்திற்குப் பதிலளிக்கிறார்கள்; நோய் தீர்ப்பதுபோன்று நாடகமாடி மக்களது தலையில் தண்ணீர் தெளித்து மந்தைகளாக்குகின்றனர்.
இந்த நிலையே கேள்விகளை-சாரத்தை-இயங்குதளத்தை புரிந்துகொள்வதில் சிக்கலிட்டுள்ளது, முரண்நிலையிலிருந்து கேள்வி கேட்பது சமூக விஞ்ஞானத்தின் ஆரம்பப்படி,இதன்படியே நம்மை-நாம் புரிந்துகொள்வது இன்று மிக மிக அவசியம். புலம்பெயர் தமிழ்பேசும் மக்களினது வாழ்வானது இரண்டும் கெட்டான் சமூகசீவியமாகவிருக்கின்ற இன்றைய சூழலில் இதுகுறித்து பொறுப்புணர்வோடு ஆய்வுகள்,கருத்துக்கள் முன்வைப்பது இன்றைய தமிழ் இளைஞர்களது பொறுப்பாகும்!
வாழ்வியல் முரண்கள் புதியவற்றை படைக்கத் தூண்டும் நிலைமகளில் - நம்மை வற்புறுத்தும் இன்றைய புலம்பெயர் வாழ்வில், நாம் அவற்றைத் தெரிந்து-புரிந்து காரியமாற்றமுடியாதபடி மிகக் கவனமாக தமிழ்பேசும் மக்களின் விரோதிகளான இந்த பைபிள்ப் பயங்கரவாதிகள் (Gefährlichsten Sekten )காரியமாற்றுகிறார்கள், இந்த விரோதிகள் தமிழ்பேசும் மக்களை தமது நலனுக்கேற்றவாறு பயன்படுத்தும் நோக்கோடு நமக்குள் பைபிள்சார்ந்த புனைவுகளை, கிறித்துவ மதக் கருத்தக்களைக் கொட்டுகிறார்கள்.
இவை புலம்பெயர் வாழ் தமிழ் மக்களை வெறும் மத -அந்நியக் கலாச்சாரடிமைகளாக மாற்றிவிடும் வியூகத்தை அடிப்படையாகக் கொண்டியங்குகிறது. இந்தக் கபட வலைக்குடந்தையாக கிறித்துவ மதவாதக் குழுக்களது இன்றைய வளர்ச்சி இருக்கிறது.
புலம்பெயர் தமிழராகிய நாம் உளவியல் இரீதியாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளோம், மதவாதக் குழுக்களிடம் - NGO'களிடம் கையேந்தித் தஞ்சமடையுமளவுக்கு நமது அகவளர்ச்சி பைபிளால் தடுக்கப்பட்டுவிட்டது. இதிலிருந்து மீள இங்கிருக்கும் குழுவாரியான சுய அமைப்பாண்மையுடைய தமிழப் புத்திஜீவிகள் தமது ஆற்றலை இவைநோக்கித்திருப்பிவிட அவர்களுக்கிருக்கும் ஒரே தடை முற்போக்கு முகமூடிதாம்!
ஈழமண்ணின் சூழல் :
பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பகுதிகள் இப்போது தமிழர்களின் சுதந்திரமான உயிர்வாழும் ஜனநாயக உரிமையை உறிதிப்படுத்துவதாக யாரும் கனவுகூடக் காணமுடியாதவொரு சூழலை அவைகொண்டுள்ளன, ஒரு திமிர்த்தனமான பைபிள் பயங்கரவாத(Gefährlichsten Sekten ) நெருக்குவாரத்தோடுகூடிய தனிநபர் -NGO'களது பயங்கரவாதம் தலைவிரித்தாடும் தமிழ்ப் பிரதேசங்களில் அறவாதப் பண்புகள் துளியளவேனும் நிலவுவதாக யாரும் குறித்துரைத்தால் அவர் விசமம் பண்ணுபவராகவே கருத இடமுண்டு,அவ்வளவு மோசமானவொரு சூழலை இவ்விடங்களில் வாழும் மக்கள் அனுபவிக்கின்றனர்.
எங்கள் தாய்மாரை பேய்களாக்கி மனவுளைச்சலுக்குட்படுத்தி மான பங்கப்படுத்தும் இந்தப் பைபிள் வாதிகள் அந்நியருக்கு நம்மைக் காட்டிக் கொடுக்கின்றனர்.மட்டக்களப்பை மையமாக வைத்து இயங்கும் Vincent Balanathan என்ற மக்கள் விரோதி - பைபிள்ப் பயங்கரவாதி கிறித்துவ மதவாத அடிப்படைவாதி மட்டுமல்ல நமது தாய்மாரைப் பேய்களாக்கி ,அவமானப்படுத்துபவன்.இவன் தண்டிக்கப்பட வேண்டிய தீய சக்தி.எம் பெண்களது குங்குமப் பொட்டுக்களை ,வீபூதியை -சந்தணத்தை ; பிறையை அழித்து நம்மை அவமானப்படுத்தியபடி நமது பண்பாட்டையும் ; தேசிய அலகையும் ;இன அடையாளத்தையும் அழிக்கும் இவன் , இலங்கைச் சிங்கள அரசைவிட ஆபத்தானவன்.இவனுக்குப் பின் யூத தேசமும் ; அமெரிக்காவும் துணை நிற்கின்றன. இதை ,அவனே குறியீடாக வைத்து நமது பெண்களைத் துவசஞ் செய்கிறான்."வேசை என்கிறான் ; ...டை என்கிறான் ; பாம்பு என்கிறான் ;திருடி என்கிறான்.நாம் இவற்றையெல்லாம் பாரா முகமாகவிருந்து அரசியல் செய்து வியாபாரம் பண்ணுகிறோம்.
மானத்தோடும் ,மரியததையோடும் நம் தாய்மார்கள் வாழ்ந்து சாக இந்தக் கேடிகளும் , இவர்களது எசமானர்களான ஏகாதிபத்தியமும் விட்டு வைக்கவில்லை, மேற்குலக ஏகாதிபத்தியத் தேசங்கள் தமது தேவைக்கேற்றபடி மதவாதிகளை -பைபிள் பயங்கரவாதிகளை உருவாக்கிவிட்டு அதற்கேற்ற திட்டவாக்கத்தை நமக்கு கற்பித்து வருகின்றன, இதிலிருந்து இந்தநுற்றாண்டில் மீளக்கூடிய ஆரோக்கியமான நகர்வு தென்படவில்லை.நமது மக்கள் தம்மைத் தமிழர்கள் அல்ல என்று பிரகடனஞ் செய்ய வைக்கப்படுகின்றனர்.
பாராளுமன்ற ஓட்டுக் கட்சிகள் யாவும் நம்மையும் நமது ஈழத் திரு நாட்டையும் தமது வருமானத்தின் மூலப்பொருளாக பாவித்தல் அறுபதாண்டுகளாக நடைபெற்றுவரும் சங்கதி.இதனால் நாம் நாடு எனும் அமைப்பை விட்டு,நாடுகள் என்ற அமைப்புகளுக்குள் நிர்பந்திக்கப்பட்ட வாழ்வை மேற்கொள்ளும் அவலமேற்பட்டுள்ளது.நமக்கான திட்டவரைவை உலகவங்கியும் ,ஏகாதிபத்தியமும் எழுதுகிறது, அதன்படி காரியமாற்றும் நமது பாரம்பரிய மதவாதிகள் முதல் ஓட்டுக்கட்சிகள்வரை இப்போது, தமிழ்பேசும் மக்களது வாழும் உரிமையில் ; பண்பாட்டு வாழ்வில் ; ஆன்மீக வாழ்வில் கைவைக்கும் பைபிள் பயங்கரவாதிகளை நோக்கி ,எதுவும் கூறமுடியாத வக்கற்வர்களாகிச் சீரழிந்துள்ளனர்.
இந்தநிலையில் நமது தேசியக் கனவுகள்,தேசிய அலகுகள்,தேசியத்தன்மைகளெல்லாம் மாற்றம் பெறுகின்றன.
எமக்கான நீதி,நியாயம்,உரிமைகள் யாவுமே ஏகாதிபத்யத்தின் நலனுக்கேற்வாறு மட்டுமே இயங்கும்.அடிப்படை வாழ்வுரிமை புதிய வகைமாதிரியானவொரு மொன்னைப் பேச்சாகவே இப்போது பேசப்படுகிறது,இதன் விருத்தி வேறொரு வகையில் மனிதாயத்தின் பெரும் தோல்வியாக -அதுவே ஒரு பெரும் கதையாடலாக இட்டுக்கட்டி அதன் கழுத்தில் பைபிள் நுகம் வைக்கப்பட்டுள்ளது! இந்த நுகத்தடி பற்பல வர்ணங்கொண்ட கனவுகளை விதைப்பினும் மானிட நேயம்சார்ந்த சமூக உளவியல் இப்போது காலமாகிவிட்டது.பைபிளால் நாசமாக்கப்பட்டோம்!
-ப.வி.ஸ்ரீரங்கன்,
வூப்பெற்றால்.
30.03.2020

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...