Showing posts with label பிதற்றல். Show all posts
Showing posts with label பிதற்றல். Show all posts

Saturday, December 23, 2006

சதிகாரக் கூகிள் கணக்கு...

தேவையின்றித் தளத்தைக் கூகிள் கணக்கிற்கு மாற்றியதன் பின்பு, தமிழ் மணத்தின் கருவிப்பட்டையை நிறுவினாலும் அது தெரிவதும் இல்லை.இயங்குவதாகவுமில்லை!புதிய பதிவையும் தமிழ் மணத்தில் சேர்க்க முடியாதுள்ளது.கூகிள் சதி செய்து குழப்பி விட்டது.பேட்டா விஷனோ அல்ல என்ன மண்ணாங்கட்டியோ.இப்போதைக்கு எதுவும் தோணுதில்லை.கூகிளிடம் அனைத்தையும் பறிகொடுத்தாச்சு.
"..........................................."


பிளக்கர் பேட்டாவுக்கு மாறிய பின் பரவலாகப் பதிவுகள் தமிழ் மணத்தில் தெரிவது இல்லை.மீளவும் பதிவைப் புதிதாகப் பதிந்த பின்பே பதிவு தெரிகிறது.

இந்த நிலையில் பேடித்தனமாகக் கொழுவியும்,பெடியன்களும் பதிவிட்டு,நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.இதற்கு மேலால் இத்தகைய தலைமுறையால் என்னத்தைப் புதிதாகச் சிந்தித்திருக்க முடிந்தது?பெடியன்களின் பெயரால் சுவிஸ்,சிங்கப்ப+ர்,அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேடிகள் எழுதுவதற்கு வக்கற்று மற்றவர்களைக் கேலி பேசுவது ஒரு வகை மாபியத்தனத்தின் திமிர்தான்.இத்தகைய திமிரில் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது ஊரறிந்த விடையம்.




23.12.2006

Thursday, December 21, 2006

அரசியல் அண்ணாச்சியும்...

அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும்,
ஆசியன் கடையும்.


டேய் சின்ராசா வாடா வா!என்னமாதிரிப்போச்சு?

அண்ணோய் மெல்ல.இது அவங்கட காசில நடக்கிற ஆசியன் கடை.உங்கட கதையள அடக்கி அவிழ்க்கிறதுதான் நல்லது.

சரி விடடா,எல்லாம் சிறப்புற நடந்தேறிவிட்டது,அப்பாடா!

என்னண்ணோய் சொல்லுறியள்?

அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் நல்லது,கெட்டதுகளின் நமக்குப்பட்டதைச் செய்தும் போட்டோம்-இல்லையா?

இனியென்ன?

பத்தரைமாதத்துத் தங்கம்,தோழமையின் தூண்,துரும்பு...என்ன அரிகண்டமோ,இப்படிக் கழுத்தில் கிடந்து நம்மைச் சீரழிக்கிறது!

எங்கு திரும்பினாலும் ஒன்று தாங்கள் கும்பிடுற தெய்வ வணக்கம்-இல்லையென்றால் மீனுக்கும்,பாம்புக்கும் தலை வால் காட்டும் புத்திசீவிகளின் புதுத் தத்துவங்கள் புருவங்களை உடைத்துப் புதுப் புனலாய் புண்ணிய நம் கண்களுக்குள்...

சீச்சீ, இப்படியெல்லாம் நாம கதைச்சால் நடுச் சாமத்தில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து நித்திரையைக் குழப்பிப்போடும்.பையப்பைய ஆராவது இப்படி வந்து, தன் பங்குக்குப் பாட்டோ அல்லது ஓரிரு பல்லவியோ பாடித் துலைக்கிறபோது,அப்பப்பப் பொடிவைக்கிறது வழமைதான் குஞ்சு.பகிடிக்குப் பொடிவைக்கிறமாதிரித்தான் இதுவும் குஞ்சு.நான் மனிதன்,எனக்கும் கவனிப்பும்,கண்ணீரும் உண்டெல்லோ,இல்லையாடி அப்பன்?

இருக்காதா அண்ணே!
எடுத்துவிடுங்கோ,எப்பவும் நீங்கள்தான் என்ர உதாரணப் புருஷர்.என்ர தேகத்தின் குரலும்,உணர்வும் நீங்கதான்.

ஏன்ரா தம்பி சின்ராசா,எங்கேயடா ஆளக்காணோம் இவ்வளவு நாளா?

அண்ணே,கோவியாதேங்கோ.நேற்றுத்தான் வந்தனான்.போன இடத்தில மாட்டுப்பட்டுப் போயிட்டன்.புண்ணாக்கன்கள் புடிச்சு உள்ள போட்டுட்டான்கள்.

எடா மசிராண்டி உன்னை ஆருடா ஊருக்குப் போகச் சொன்னது?கண்கடை தெரியாதா அவளுக்கு ?உன்ர பொண்டாட்டியும் உன்னோட வந்தவளா?(எனக்கு என்ர உறவுக்காரப் பெண்மீது எப்பவும் ஒரு கண்.அவளை இந்தப் பரதேசி கட்டிப்போட்டுக் காடாத்திறான் நெடுக).


எடச் சீ!இந்தக் கோதாரி புடிச்ச அண்ணைக்கு என்னத்துக்கும் ஊர் நினைவுதான். நான் சொல்லுற புண்ணாக்கன்கள் இந்த ஆசுப்பத்திரிக்காரன்கள் அண்ணை.

எட இழவு,என்னடா நடந்தது?

அண்ணோய்,அதுக்க கான்சர்,இதுக்க கான்சர் எண்டுறான்கள்.

உம்!இது பெரியாக்களுக்கு வாற வருத்தம்.இப்ப உனக்கும் வேறு அது வந்திட்டுது.நானென்டாலும் உனக்கு ஒரு பாட்டாவது பாடுவன் யோசிக்காத.

அண்ணோய் ஆட்டைக் கடிச்சு,மாட்டைக்கடிச்சு...இப்ப என்னையும் கடிச்சுக் குதறுகிற எண்ணமோ?மனுசன் படுகிற பாட்டுக்கு ஊர் வம்புகளெல்லாம் வேண்டாம்.பிறகு உங்களுக்கும்,எனக்கும் நித்திரையில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து துலையும் எல்லே!

எட அப்பன்,அவருக்குப் பின்னாலா அந்த ஆடு மேய்ஞ்சுகொண்டெல்லே இருந்தது,அந்த ஆட்டுக்கு இனியென்ன பென்சனோ?

ஆருக்கண்ண தெரியும்?அதெல்லாம் பெரும் தொகையளோட விளையாடுற விஷயங்கள் அண்ண,இந்தப் பயலுக்கு ஒண்டுமாய் விளங்குதில்லை.நீங்கள் ஏதாவது நினைச்சுக் கொட்டாவி விடுகிறியளோ?,போங்கண்ணை.உங்களுக்கு நோச் சான்சு!

சரி,சரி விட்டுத் துலையடா.ஏதாவொரு நப்பாசை இப்படிக் கிடந்து பழைய கள்ளுக் கொட்டில் கனவைக் காண வைக்கிறது, இந்தப் பாழாய்ப்போன மனசு.அவங்களுக்குப் பின்னால நிண்டாலாவது அப்பப்ப மூக்கு முட்ட விடலாமெல்லோ!

எதுக்கும் ஒருக்கால் நல்ல டொக்டரைப் பாருங்கோ அண்ணை.என்ர டொக்டர் ஒரு மனோதத்துவ டொக்டரும்கூட உங்களுக்கு அவரின்ர விலாசத்தைத் தரட்டோ?நாளைக்கு வீட்டுப் பக்கம் வாங்கோவன்,கூழ் காச்சிக் குடிச்சுக்கொண்டு உங்கட பிரச்சனைகளையும் விலாவாரியாக் கதைப்பம்.

ஓம்போலத்தான் இருக்கடாப்பா.கூழுக்கு என்ன போடப்போறாய்?என்ர மனுசியும் இண்டைக்கு ஆட்டிறிச்சியோடக் குத்தரசிச் சோறு காச்சிறாபோலக் கிடக்கு...

கூப்பிடமாட்டீங்களே... நிச்சியமா மனுசரின்ர தலைகளில்லை அண்ணோய்!பயப்படதேங்கோ.
தலையெண்டிறபோதுதான் ஞாபகம் வருகுது அந்த நாளைய யாழ்பாணத்தில எரிஞ்ச தலைகளும் ரயர்களுமாக் கண்ட கோலமெல்லாம் ஒரு காரணமான குரலுக்குச் சொந்தமெண்டு.

நல்லதடா பையா.உனக்காவது நானொரு கூழ்தாசனாக இருக்கிறேன் தானே?அதுக்காவது நாலு சிரட்டையைச் செதுக்கி வை.அப்பிடியே இன்னொரு தலையையும் கூட்டிக்கொண்டு வாறன்.

அண்ணோய்.இது சரி வராது.என்ர வீட்டில் உங்களுக்கு மட்டுதான் எலவ்ட்.தெரியுந்தானே?பிறகு மனுசி கலையெடுத்திடுவா.கூழ்ச்சிரட்டைக்குப் பதிலாக என்ர மண்டையோடுதான் உங்களுக்கு வரும்.அண்ணோய்,அடுப்படியில கிடக்கிறதுகளை உசுப்பக் கூடாதண்ணை.பிறகு கரடிக்கு வாற பலத்தைப்போல அங்கேயும் ஒரு பலம் வந்திடும்.பேந்து, எங்கட திண்ணைப் பேச்சுக்குப் பதிலாக கோழியை வெட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?

ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?

அதுதான் நீயாய்ச் சேர்த்து அடுப்படியில அலையவிட்டபிறகு இன்னொருக்கால் சேர்த்தால் உன்ர மடிதாங்காது.

மடிதாங்காட்டியும் மனசு தாங்கும் அண்ணோய்.பேசாமால் அதையும் சேர்த்துவிடுங்கோ.

சேர்க்கிறத விடு,இப்ப உன்ர வீட்டுக்க ஆரோவொரு வெளி நாட்டுக்காரனையும் போட்டிருக்கிறான்களாம்.ஏன்ரா உலகத்தில இவ்வளவு பேர்கள் இருக்க, இவனை ஏன்ரா கூப்பிட்டாய்?

நானா கூப்பிட்டானான்?அவையல்லோ அனுப்பினவை!

ச்சீ.அப்பிடிச் சொல்லாதை.உலகத்தில இவன் கெட்டிக்காரன்.குடும்பப் பிரச்சனையள நல்லாத் தீர்த்துப்போட்டு,முற்போக்காத் திரியிறான்.அதனாலதான் அவன் உன்னட்டையும் வந்தது எண்டு சொல்லு.

மண்ணாங்கட்டி.என்ன சொல்லுறியள்?உங்களையும் என்ர குரலெண்டு நான் சொன்னது தப்பாப் போச்சு!போங்கண்ணை.அவன் சோசல்காரன் தங்கட கட்டிடத்தில எவனையும் கொண்டுவந்து தள்ளுவான்.அதை அகதியாகி ஒண்டின நாங்கள் தடுக்கேலாது.நீங்கள் வேறு...

சரி,சரி.என்ர குரலும் வீட்டின்ர குரலாகக் கிடக்குது ஆரும்...

அண்ண அப்ப நாளைக்குக் கூழோடு சந்திப்பம்.நீங்க மட்டும் இல்லைக் கையிலவொரு போத்திலை...


போத்திலை?டேய் அப்பன் அது கஷ்டமடா கண்டியோ?


பேசாம எல்லாத்தையும் ஒரு பம்பலாச் சொல்லுங்கோ.பகிடியெண்டு நான் எடுக்கமாட்டன் கண்டியளோ.


ப.வி.ஸ்ரீரங்கன்
21.12.2006

Monday, August 28, 2006

இந்த வாரம் நான் ...

வணக்கம்!

சொல்லத் தக்க விஷயங்கள் பல, வெவ்வேறு தரணங்களில் பேச முடியாது போய்விடுகிறது.அதைப் பேசித்தாம் ஆகவேண்டுமென்றும் எந்தக் கட்டாயமும் இல்லை!


எனினும் சொல்லிவிடத் தூண்டும் நிகழ்வுகள் சதா நம்மைச் சுற்றி நிகழ்ந்தபடியே...

உலகம் என்றுமில்லாதுவாறு சுருங்கிவிட்டது.இந்தப் புவிப்பரப்புமீது ஆதிக்கஞ் செய்யும் பெரும் தொழிற்கழகங்களும்,அவைகளின் விய+கங்களும் மனித வாழ்வை-வாழும் சூழலை,உயிர் வாழும் புற வலையத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ளது.ஒரு இனத்தின் இருப்பை-அவைகளின் நியாயப்பாடுகளை,உரிமைகளை,குறிப்பிட்டவொருவினத்தின் உயிர்வாழும் உரிமையை,சமூகத் தகுதியை இவை காலில் போட்டு நசித்தழிக்கின்றன!

மூன்றாமுலகத்திலுள்ள பற்பல நாடுகளில் தேசியவினப் போர்கள் நிறைவுக்கு வரமுடியாது சிக்கலுக்குள் தள்ளிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.உதாரணமா பாலஸ்தீனம்,காஷ்மீர்,நாகலாந்து,ஈழம்... என்று தொடர்ந்து செல்கிறது.வாழத் துடிக்கும் பல தேசிய இனங்கள் எந்தவுரிமையுமின்றிப் போர்களால் மடிந்து போகின்றன.யுத்தங்களால் சூழல் வலுவாகப் பாதிப்படைகிறது.இதனால் பாரிய விஷக் கிரிமிகளின் கொடிய தாக்குதல்வேறு அடிப்படை வசதிகளற்ற மக்களைத் தினமும் அழித்தபடி...


இவையெல்லையற்ற தொடர் நிகழ்வாய் உலகம் சுழன்றபடி.சுழலும் ஒவ்வொரு நொடியும் இப் புவியில் உயிர்வாழப் போராட்டம் நிகழ்ந்தபடி.புவிப்பரப்பு அமைதிப் ப+ங்காவல்ல!-அது போராட்டக்களம்.

இந்தப் போராட்டக் களம்(ஆளும் வர்க்க அடக்கு முறை) விருப்புடையதல்ல!இது மனிதவிரோதமானது.

இந்த மனித விரோதப்போக்கை மனிதர்களின் குவிப்புறுதி மனதைக் கடந்த உற்பத்திப் பொறிமுறையும்,நிதி மூலதனமுமே நடாத்திச் செயற்படுத்தி வருகிறது!

நாம் எமது தலைமுறைகளோடு இந்த உயிர்வாழும் தகுதியை இழந்துவிடும் நிலைமை நெருங்கி வருகிறது.

எங்கும் யுத்தம்!

எதற்காகவென்றே தெரியாதபடி,அமைதிக்குச் சமாதானத்துக்கு,ஜனநாயகத்துக்கு-மனிதவுரிமைக்கு என்றபடி சதா போர் நடாத்தப்படுகிறது.

பல தேசத்து இராணுவங்கள் ஒன்றுகூடிக் கொண்டு ஜ.நா.ப் படைகளென்று பம்மாத்துப்பண்ணி மேற்கத்தைய நாடுகளின் தலைமையில் மூன்றாம் உலகமெனக் கூறப்படும் கனிவளமிக்க நாடுகளை வேட்டையாடி வருகின்றன!

இந்த மையமான மனித வதைச் சூழலில் எந்த மனிதரும் உலகத்தின்-இயற்கையின்,இலக்கியத்தின்-கலையின் அழகைப் பேசமுடியாது!அப்படிப் பேசிக் கொண்டால் அது அவரவர் அறிவீனத்தையல்ல இந்தச் சமுதாயத்தின் அக்கறையற்ற சமூகவெண்ணவோட்டத்தையேதாம் வெளிச்சப்படுத்துகிறது.
மனிதர்களின் வாழ்வை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல,வாழ்நிலையே உணர்வைத் தீர்மானிக்கின்றது.இந்த வாழ் நிலையில் நமது உணர்வு மேற்காணும் நோக்கு நிலைக்குள் சுற்றியே பின்னப்பட்டுள்ளது!

புயலடிக்கும்,கடல் நீர் கொந்தளித்து படகுகள் நீரில் அமிழ்ந்து போகின்றன!பல பத்து மக்கள் இந்தக் கோரத்தில் நாளும் பொழுதும் இறந்துபோகிறார்கள்!இது எங்கே?

சொற்கத்துக்கும் நரகத்துக்கும் எல்லையிடப்பட்டதாக உணரப்படும் இஸ்பெயினுக்கும் மேற்கு ஆபிரிக்காவுக்குமான எல்லைப் புகுமுகத்தில்.இத்தாலிய,இஸ்பெயின் கடற் தீவுகளில் வந்திறங்கும் ஆபிரிக்க மக்களை நாயிலும் கேவலமாக அடித்து விரட்டும் மனித அவலம் இன்னும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.அப்பாவி ஆபிரிக்க மக்களின் வாழ்விடங்களைச் சூறையாடும் மேற்குலகத் தொழிற்கழகங்கள் அவர்களது உயிர்வாழும் சூழலை அழித்துவிட்டு,இங்ஙனம் இந்த மக்களை அகதிகளாக இடம் பெயர்ந்து சாகும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

இந்த வாரம் நான் இத்தகையவை பற்றியே எழுதவிருக்கிறேன்.

தமிழ் மணத்தில் இந்தவாரம் எனக்கானதென முன்கூட்டித் தெரிந்திருப்பினும்,எதையும் முன்கூட்டி எழுதிவைத்துவிட்டு மணிக்கொரு தடவை பதிவேற்றம் செய்யும் நிலையில் நான் செயற்படவில்லை.பதிவேற்றம்படும் தரணம்வரை எழுதிவிட்டு,அடுத்தவினாடி பதிவேற்றுவதுதாம் எனது நிலை!இதைவிட்டுத் தயார்ப்படுத்தி எதையும் எழுதுவது கிடையாது.(தினமும் எனது உணர்வு வெளிக்குள் சிறைப்படும் சூழலே என்னை எழுதத் தூண்டுபவை.இந்தப் புற நிலைகளின் தன்மையே எனது சிந்தனைகளைத் தூண்டுவதால்,நான் இந்தச் சமூகத்தில் கால் பதித்து இருக்கிறேன்.இதைக் கடந்து வானத்தில் எம்பிக் குதித்து-எனக்கு முன் நிகழ்பவற்றைத் தாண்டி அழிகியல் பேச முடியாது,தத்துவம் பேசிக் கொள்ளவும்,தவப் பயன்களை அறிவிக்கவும் முடியாது.
வாங்க!நமது கால்களில் மிதிபடும் நமது முகங்களைத் திரும்பப் பார்ப்போம்.நம்மீது சுமத்தப்படும் சுமைகளின் பாரத்தை இறக்க முனைவோம்.)

எனவே,தினமும் ஒரு பதிவு என்னிடமிருந்து வருவதற்கில்லை.அப்படி வருவேண்டுமென எவரும் ஒத்தக்காலில் தவமும் செய்யப் போவதுமில்லை.-தெரியும்!என்றபோதும்,இந்தவொரு வாரத்தில் மூன்று பதிவுகளையாவது எழுதிவிடுவேனென எனது மனது உணருகிறது.அப்படி எழுதப்படும் பதிவுகள் எமது வாழ்வின்(மனித வாழ்வின் அகதியக் கோலம்!) சீர்கேட்டுக்கான காரணங்களை அறிவிப்பதில் முனைப்புறும்.

இதை முன்மொழிவதால்,விருப்புடையவர்கள் இவற்றை வாசிப்பதற்கும்,அதற்றவர்கள் ஓடியொதுங்குவதற்குமான சாத்தியப்பாட்டின் கதவைத் திறந்துவிடுகிறேன்.

மழை மேகத்தின் நிலைத்திருப்பில் அப்பப்பத் தலைகாட்டும் கதிரவனின் நிலைதாம் எனது.


அதுவரை...

நட்போடு

ப.வி.ஸ்ரீரங்கன்
28.08.2006

Thursday, October 13, 2005

காலாற நடத்தலென்பது ...

காலாற நடத்தலென்பது ...


கனவுகளோடு காலாற நடத்தலென்பது எனக்கென்றும் விருப்புடையது,அல்லது இன்பமயமானது.

இயற்கை அள்ளித் தந்த சுகங்களைச் சுவைப்பதில் எனக்கு அலாதிபிரியம்.அவசரமாக எதையும் செய்வதும்-செய்தபின் கோணலானால் அது குறித்துக் கவலையுறுவது எனக்குக் கிடையாது.

எப்படியும் இந்தக் கானல் நீராகவிருக்கும் இந்தத் தேசத்தோடு(ஜேர்மனியோடு) ஒன்றித்தல் கைகூடுவதில்லை.எனினும், என்வரைக்கும்- இந்த அற்புதமான வளர்ச்சியால் நிறைந்த வளங்களைப் பெற்றுவிட்ட தேசத்தை வெறுமனவே வெறுத்தொதுக்குவது மிகவும் கோணல்த்தனமானது.எனவே அப்பப்ப ஆசைகொள்வதும்-வேலைசெய்யும்போது வரும் பிணக்கினால் வெறுப்பதும்,இத்தேசத்தின் பூர்வீகக் குடிகளின் குறிதவறிய கூற்றுக்களால் அடியோடு இவ்மண்ணை மறக்க முனைவதுமாக ,நான் என் தேசத்தில் ஒரு காலும்,இம்மண்ணில் இன்னொரு காலுமாகக் கனவுகளோடு வாழ்கிறேன்.

இன்று அற்புதமாக நிலா வானத்தில் ஊஞ்சலாடுகிறது.

ஒளித்தெறிப்பு அற்புதமாய் மனதில் மிளிர்ச்சியை மிகுதியாக்கியபடி.

வூப்பெற்றால் மலைகளின் ஒரு பகுதி எனது இருப்பிடத்தில் கரையொதுங்கி கவனிப்பாரற்று விரிகிறது.நிலவினது ஒளித்தரிசனம் அற்புதமாக உரசப்படும் மலைகளின் சரிவுகள் மங்கையின் உச்சிப் பொட்டின் அற்புதத் தரிசனத்தை மனமெங்கும் விரிக்க, எனது உணர்வின் உச்சமோ எம்.3'இன் தடையை அழுத்தி இசையை உறிஞ்சத் தயாராகிறது.
இசை.அற்புதமான மருந்து!
அழககென்பது ஒரு வகைக்காட்சி,இசையோ ஒரு வகை அழகை உணர்வாக்கிறதே!

என்னதாம் சொல்கிறது?

நிறைந்த கனவுகளைத் தரிசிப்பதற்கு அச்சொட்டாக இசை அழைத்துச் செல்கிறதே!கரடுமுரடான ஜேர்மன் மொழிக்கு வார்த்தைசேர்த்த இசையென்பது அவ்வளவாக வெற்றி தரவில்லை-சிம்பொனியின் சிகரங்கள் மலர்ந்த நாட்டினது மொழியின் இயலாமையை நினைத்தபோது,இந் நாட்டின் அனைத்து ஊடகங்களையும் கைப்பற்றிய ஆங்கிலப் பாடகர்கள் ஞாபகம் வந்தார்கள்.

நிலவு இப்போது கவிஞர் அறிவுமதியூடாக எனது மொழியில் இன்னும் அழகாய்த் தெறித்தது.

சிறைச்சாலையென்ற படப்பாடலானது கவித்துவமானது.

அறிவுமதிக்குள் கிடக்கும் தமிழ் இலக்கண-இலக்கிய அறிவு உச்சமானது.

'தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டுமிட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு...'

மனது கர்வமடைகிறது.

என்னவென்பேன்!

தமிழன் பாட்டுக்கட்டுவதில் மிக உச்சத்திலிருக்கிறான்.அதைத் திருடிய இசை மெட்டுகளில்கூட அற்புதமாகப் பாடுகிறான்(ள்).

எனக்குள் ஒருவிதத் திருப்தியும் அதைத்தொட்டுப் பாரிய உற்சாகமும் நிலவின் பொட்டில் பார்வையைக் குவித்தது.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்'

பூங்குன்றன் என் பாட்டன்.

பெருமிதம் இன்னுமதிகமாகியது.

நிலவோடு நினைந்துருகிய உணர்வை நிலாவருகோடு பறந்தவொரு பாரிய விமானம் உடைத்தெறிய முற்பட்டது.கம்பரே கம்பரே புஷ்ப விமானமா?அது எங்கே?இப்போ நிஷ விமானத்துக்கு மேற்கெல்லோ சொந்தம்.நான் தரையில் விழுந்து நொருங்கினேன்.

வீடுமீளும் எண்ணமரும்பிப் பிள்ளைகள் மனதில் விரிந்தார்கள்.இருக்கையின் சுகத்திலொரு உன்னதம் மீளவும் பெருக்கெடுத்தது.எண்ணச் சுகம் கண்வருத்திக் கனவைத் தந்தது.காலத்தில் வாழு பின் கதைகளென்ன ,கற்பனைகளென்ன இதைத் தாண்டி தரணியெங்கும் தமிழ்,விஞ்ஞானப் பறவையாகச் சிறகடிக்குமென்றது.

என்னமாதிரியொரு மென்னுணர்வு!

இது மேனியெங்கும் பரவ எனது பிள்ளைப் பருவம் எனது மகன்களின் உருவங்களில் பட்டுத் தெறித்தது.

சித்திரை நிலவு,கொட்டும் பனி,கொஞ்சம் பயம் கலந்த இரவு.தோட்டத்துப் பயிர்கள்,நீர் இறைக்கும் ஜந்திரம்,தம்பி மார்கள்...

சொல்லிக் கொள்ளவொரு வாழ்வு அன்றிருந்தது.

சுகம் என்றும் அநாதியாகவே இருப்புக் கொண்டதாகக் கனவு சொல்கிறது.இராணுவங்களின் வெடிச் சத்தங்கள்கூட இரண்டாம் பட்சமான அதிர்வையே விதைத்தது.அற்புதமென்பது,அன்னையும்-அன்னை மண்ணுமென்பதாய் எனது அறிவு சொன்னது.

இப்போது அறிவு மதியைக் கடந்து கண்ணதாசனின் இறுதி மூச்சு:'கண்ணே கலைமானே'என்று தமிழை எம்3 ஊடாகத் தாலாட்டியது.நான் வீடுமீண்டேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.10.2005

Wednesday, May 04, 2005

வேண்டுகோள்!,வேண்டுகோள்!!

வேண்டுகோள்!,வேண்டுகோள்!!




மொழிவழி வாழ்வையும்-மக்களின் சமூக சீவியத்தையும் துண்டு துண்டாகப் பிரிக்க முடியாது! ஒருவர் தனது வர்க்கஞ்சார்ந்து-சுயநலன் சார்ந்து எதைவேண்டுமானாலும் கூறுவார்,அது அவரது மட்டரமான சுயநலன்.இப்போது எனது பதில்களையும்-குறிப்புகளையும் தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிறுத்த டோண்டு ஐயா முனைந்தால்-அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!



நான் மொழிவழி வாழ்வில் தமிழ் மீதும்,தமிழ்பேசும் மக்களின் உயிர்வாழ்வுமீதும் அளவற்ற பற்றுடையவன்.தழிழால் சிந்திப்பவன்.தமிழினத்துக்கெதிராக எது நிற்பினும் அதை எதிர்ப்பவன்.எனது பதிவுகள் சமவுடமைக் கண்ணேட்டமே தவிர தமிழுக்கோ அன்றி எனது இனத்துக்கோ எதிரானதல்ல!தமிழரின் வாழ்வைக் கருவறுக்கும் எந்த அரசியலுக்கும் சார்பாக எனது எழுத்துப்போவதாக இருப்பின்-எனது பதிவையே அழித்துவிடுவேன்.



தங்கமணியின் பின்னூட்டத்தில் யாராவது வந்து'ஸ்ரீரங்கன்'உமது கருத்துக்கள் நம்மைப் பலவீனப்படுத்தும் அரசியலுக்கு உதவுகிறது'என்றுகூறும் பட்சத்தில்-இன்றிலிருந்து03.05.2005 வரும்08.05.2005 க்குள் எனது பதிவுகள் அழிக்கப்படும்.எவரும் கூறாதபோது தொடரப்படும்!என் எழுத்துக்களை எதிரி பயன் படுத்தும் நிலையானால்,அதை அழிப்பதில் மகிழ்வுடன் இருக்கிறேன்.



ப.வி.ஸ்ரீரங்கன்
03.05.2005

Saturday, April 16, 2005

ஒரு மின்னஞ்சலும் நான் பட்டபாடும்...

ஒரு மின்னஞ்சலும் நான் பட்டபாடும்...


நேற்றிரவு ஒரு மின்னஞ்சல் என்னைத் தூங்க விடவில்லை,ஒவ்வொரு பொழுதும் ஏதோவொரு மாதிரித் தப்பிக்கொண்டிருந்தேன், அதற்காக மாதா மாதம் ஐந்து யூரோ போய்விடுகிறது(Anti Virenschutz).எனினும் நேற்றுத்திட்டமிட்ட ஒருவரின்-பலரின் முயற்சி அவர்களுக்கு வெற்றியளித்திருக்க நான் தூக்கம் தொலைத்தேன்.இரவு நடுவிரவாகிப் பின்பு அதிகாலையாகியும் நான் போராடியும் வெற்றிபெற முடியவில்லை.
நானோ கணினி குறித்த துறையில் மந்திகையிலும்-அங்கொடையிலும் இருப்பவர்களின் நிலையிலிருப்பதால்- இலகுவாக இருப்பதெல்லாம் கடினமானதாகத் தெரிகிறது.


ஏவிய வைரசுப் பொட்டலம் என்னைத்தாக்கிவிட்டு'sorry'என்பது என்ன நியாயம்? அனுப்பியவர்-பெறுபவர் இருவரும் ஸ்ரீரங்கன் என்றபடி வந்த அந்த இயமன் எனது கணினியின் சகல செயற்றிறனையும் முடக்கியபின் என்னத்தைச் செய்ய முடியும்?விடியலில் கணினியைக் காவிச் சென்று அங்கே-இங்கேயென்றலைந்து பூனையும் குட்டியும் போன்று நான் வியர்த்தேன்.


'எனக்குக் கண்தெரியுதில்லை,கண்ணாடி வேண்டித்தரச் சொல்லி எவ்வளவு காலமாச்சு! உன்ர கொம்யூட்டருக்குக்கோதாரியெண்டால் உடனே பறக்கிறாய்.'-துணைவி.
தேவையா?


கிழமைக்கு மூன்று நாள் வைரஸ் கடிதம் மின்னஞ்சலில் வருகிறது.


ஏன்?


எல்லாவற்றையும் தாவிப் பிடிக்கும் 'வைரசெதிர்ப்பி' இதைக் கோட்டைவிட இன்று பூராகலைந்து ஒரு கொம்பனியின் தொழிலர்களிருவர் ஒன்றுக்கு பல தடவைகள் முயன்று அந்த அயோக்கிய வைரஸ் நிகழ்வியங்கியைக் கொன்றழித்தனர்.இதற்காக நான் 85 யூரோக்களைக்(100 டொலர்) கொடுத்தபோது நெஞ்சு வலித்தது.என்ன நம்முலகம்!


இணையமென்பது மென்பொருள்மாற்றி மாபியாக்களின் ஆதிக்கமாக...


போன சிலமாதங்களுட்கு முன்தாம் 18 வயது மாணவன் இங்கு ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகத்துக்குள்ளிருந்தபடியே பல கணினிகளைச் செயலிழக்க வைத்தான்.

என்னமோ கணினி நிறுவனங்கள்தாம் காசு பண்ண நடகு;குது விளையாட்டு.இந்த மாபியாக்களுக்குப்பின் பெரும் கணினிமென்பொருளுற்பத்தி நிறுவனங்களுண்டோ?
எதுவெப்படியோ, என் நேரமும்-பணமும் செலவாகியதுதாம் மிச்சமல்ல.மாறாகக் கணினி பற்றிய வலுவான புரிதலைக் கோட்டைவிட்ட சூழல் அவலத்தையும் தந்தது.

16.04.2005

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...