Saturday, August 12, 2023

கனடா தாயகம் இதழின் அபத்தம் , சிறுபிள்ளை வேளாண்மை : கற்சுறா கடவுளும் அல்ல , கருப்பு ஜூலை கண்ணீருமல்லக் கண்டியளோ ?

 “கற்சுறா கடவுளுமில்லை, கருப்பு ஜூலை கண்ணீரும் அல்ல”  : எந்தக் கடவுளாரும் வர்க்கத்துக்கு அப்~பார்-அல்ல ! 

இலங்கையில் சிங்கள பெளத்த செளனிச அரசபாசிச இன ஒடுக்குமுறையையும் / ஈழப் போராட்ட இயக்கவாத அராஜகம் குறித்தும் கடந்த 40 ஆண்டுகளாகப் பேசி வருகிறோம் . இந்த”தமிழீழம்” எனுங் கருத்தியற் புனைவுக்கும் , அதன் அரசியற் செல் நெறிக்கும் இணைவாக ஒத்துழைத்த அந்நிய தேசங்களது நலன்சார் ஊக்கத்துக்குப் பலியான தமிழ்-இஸ்லாம் , சிங்கள மக்கள் அண்ணளவாக நான்கு இலட்சம் என்பது , மறைக்கப்பட்ட உண்மை !


உட்கட்சிப் படுகொலைகள் ; சகோதர இயக்கப்படுகொலைகள் , >துரோகி—காக்கை வன்னியன்-எட்டப்பன்< புனைவுக் கருத்தியலுக்குப் பலி கொள்ளப்பட்ட தமிழர்கள் ஏராளம்-ஏராளம் . இவைகள் , குறித்து மெளனித்தபடி >கருப்பு ஜூலை—Black July < நினைவு கூர்தலின் அரசியலைப் பேசுதல் என்பது அபத்தம் !


கற்சுறா , அபத்தம் இதழில் உரையாடும் அரசியல் “தமிழீழ அபிமானிகள்” தம் குருதி நாளங்களைப் புடைக்க வைக்கும் ; சிங்கள் அரச வன்முறையை 1977/ 1983 நேரடியாக அநுபவித்தவர்களை (Der gefährliche Aufstieg des buddhistischen Chauvinismus) ; எதிர் கொண்டவர்களைக் கூடக் கலகமடைய வைத்துக் கூச்சப்பட வைக்கும் ! 


1986’ஆம் ஆண்டு ஏப்பிரல்-மே மாதம் ரெலோ இயக்கத்தின்( Tamil Eelam Liberation Organisation ) மீதான புலிப் பாய்ச்சல்  அதிக அராஜமுடைய சகோதர இயக்கப் படுகொலையாகும் . இந்த நடவடிக்கையுள் இராணுவமாகப் பயிற்றப்பட்ட 600  ரெலோப் போராளி இளைஞர்கள் வரை 1986’ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள் என்று , அரச/உலக ஆவணங்கள் உரைக்கின்றன !  


83-ஜூலை , சிங்கள அரசால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் ; கொதிக்கும் சூடான தார்ப்பீப்பாக்களுக்குள் மூழ்க வைத்துத் தமிழர்களை இலங்கை அரசு கொன்றது . கூடவே , வெலிக்கடைச் சிறையில் அரசியற் கைதிகளாக இருந்த தமிழ் இளைஞர்களில் 53 தமிழ் அரசியல் கைதிகளை கொழும்பின் அதி—உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில்  வைத்துச் சக சிங்களக் கைதிகளைக் கொண்டு சிங்கள அரசு  குத்தியும் , வெட்டியும் , கண்களைத் தோண்டியும் தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்தது.


1986’ஆம் ஆண்டு புலிகள் , ரெலோமீதான சகோதர இயக்கப்படு கொலை இன்னும் திகில் நிறைந்தது . 


நரவேட்டை செய்த புலிகள் , படுகொலை செய்யப்பட்ட ரெலோப் போராளிகளின் உடல்களை மக்களைக் கொண்டே இரயர் போட்டு எரித்தார்கள் . மக்களும் தம் குழந்தைகளை இரயர் போட்டு எரித்துக் களைத்துப்போன கையோடு கொக்கோ கோலா குடித்தும் , வழங்கியும் மகிழ்ந்தது வரலாறு .இது, கூறும் அரசியல் வெறும் தமிழ்த்  தேசிய -தேச நலன் ; வேளாள ஆதிக்கத் தமிழ்ச் சுயம் அல்ல ! 


இந்த நிகழ்வூக்கத்தின் பின்னான உளவியல் ஊக்கம் என்ன ?


இதன் வரலாற்று நியாயம்/அநியாயம் என்ன புரிதலை நமக்குத் தருகிறது ?


“சிங்களம் -தமிழ் “ இரு மொழிகளுக்குள்ளும் 

சகோதரப்படு கொலைகள் நிகழ்கிறது ; நிகழ்ந்தது .


1971’ஆம் ஆண்டு JVP‘ யின் மீதான இலங்கை-இந்திய அரசுகளின் கூட்டுத் தாக்குதலால் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்கள் உத்தியோக பூர்வமாக 5.000 என்பதை உத்தியோகப் பற்றற்று 50.000 என்று கூற முடியும் —சிங்கள அழகி புஸ்பவதி மனம்பாரியை உரிந்து , “கற்பழித்து” தெருத்தெருவாக அம்மணமாக இழுத்துச் சென்று , சிங்கள இராணுவம் தெருவில் வைத்து எரித்துச் சாம்பலாக்கியது . இதே, இலங்கை அரசின் சிங்கள இராணுவம் தமிழ் மகள் கோணேஸ்வரியைக் “கற்பழித்து” அவள் யோனிக்குள் குண்டு புதைத்து வெடிக்கவைத்தது அவள் யோனியையும் ; உடலையும்  , சிங்கள அரசு . 


1987-1989 வரையான இலங்கை அரசியலுள் பிரேமாதாசவின் தலைமையில் மீள JVP(மக்கள் விடுதலை முன்னணி) மீதான சிங்கள அரசின் வன்முன்றை ஜந்திரத்தின் பாய்ச்சல் , இரு ஆண்டுக்குள் 80.000 சிங்கள இளைஞர்களைக் கொன்று தள்ளிக் களனி கங்கையில் மிதக்க விட்டது ;  பேராதனைப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களைக் கூட்டாகச் சுட்டு JVP அபிமான மாணவர்களெனக் களை எடுத்தது சிங்கள அரசு . இதே அரசு வன்மத்தோடு மக்கள் விடுதலை முன்னணியின் சிங்களத் தலைவரை (சிங்கள ரோகண விஜயவீர) காலுக்குக் கீழே சுட்டு ,அம்மணமாக்கி அடித்துச் சித்திரவதை செய்து (A rumour circulated that he was taken to a cemetery, shot in the leg and then summarily executed by being burnt alive in the crematorium .) உயிரோடு எரித்துச் சாம்பலாக்கியது , இந்தப் பாசிச சிங்கள அரசின் சிங்கள இராணுவம் . 


இதேபோன்று “அதுராதபுரத்தில் சிங்களத்தின் உச்சி பிளந்து (Operation Ellaalan : The attack happened on 22 October 2007) எல்லாளனைக் காட்டிய பிர~பா~வேலு~கரனுக்கு முள்ளிவாய்க்காலில் உச்சி பிளந்து , கோவணங்கட்டி ; அவன் துணைவி -மகள் முன் கோவணத்தைக் கழற்றிய துட்டக்வைமுனுவைச் சிங்கள அரசு காட்டியது , சிங்கள ஆண்மையை !  


இப்போது , புலி வன்முறை ஜந்திரம் -சிங்கள அரச வன்முறை ஜந்திரங்கள் இரண்டும் ஒரு நிகழ்வுகளைச் செய்துள்ளன . இரண்டுமே , தத்தம் இனங்களின் புதல்வர்களை ஆயிரக்கணக்கில் அழித்துள்ளன. இரண்டும் பிற இனங்களை தாக்கியும் அழித்தன; துரத்தின-நாடு கடத்தின , குடியுரிமை பறித்தன (ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க) !


இப்போது சொல்லுங்க என்னங்கடா உங்கள் பிரச்சனை ?


சாதியா , 

மதமா, 

இனமா, 

பிரதேசமா —

“வர்க்கமா ?” 


இங்கு , யார் -யாருக்காக வெட்கப்பட வேண்டும் ? 


கருப்பு ஜூலை நினவு ஏந்தலுடைய வர்க்க அரசியல் என்ன ? 


சாதியை, மதத்தை, இனத்தை, பிரதேசத்தை, பால் வேறுபாட்டைச் சொல்லி சும்மா கடந்து போக முடியாது !


சிங்கள -தமிழ் ஆளும் வர்க்கத்துக்குச் சாதி/மதம்/பிரதேசம் -இனம் ; மொழி உண்டா ? 


ஒடுக்குமுறை வர்க்கத்தை “யாழ் மேலாதிக்கம் , சைவ வேளாளிய ஆதிக்கம் தமிழ்த்தேசிய ஆதிக்கம் “  என்று பார்த்தல் சிங்கள ஆளும் வர்கத்தின் ஆதிக்கத்தையும் , அதன் வன்முறைசார் செல்நெறியையும் , இலங்கை உழைக்கும் வர்க்கத்தின்மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் வர்க்க ஒடுக்குமுறையையும் ஊக்கப்படுத்திக் காத்தல் இல்லையா ? 


சிறார் இராணுவம்  ; குழந்தைப் போராளி என்பதை புலிகள் அமைப்பின் குறியீடாக முறித்த பனை மரத்தில் தொங்கவிட்ட இந்தச் சுட்டிகள் ; சொற்பான்கள் கற்சுறா ஆக்கத்திலும் சொல்லும் அரசியல் என்ன ? 


ஐரோப்பிய -அமெரிக்க , ஆசிய , ஆபிரிக்கக் கண்டங்களதும் போராட்ட வரலாறும் ; காலனித்துவ கொடுங் கோன்மையும் சொல்லாத சிறார் இராணுவச் செய்திகளையா தமிழ்ச்சிறார் இராணுவத்தின் குறியீடுகள் பேசுகின்றன ?


கத்தோலிக்கத் திருச்சபைகள் கொல்லாத பழங்குடிச் சிறார்களின் வாழ்வு நாசத்தை விடவா புலிச் சிறார் இராணுவ வாதம் அபாயகரமானது ? இன்றும் , கனடாவிற் பழங்குடிச் சிறார் புதை குழிகள் தோண்டப்பட்டு (Canadian Indian residential school ) வெளியிற் கசியும் இனச் சுத்திகரிப்பைக் கனேடிய அரசு மறைப்புக்கட்ட முனைகிறதே ?


தினமும் கத்தோலிக்கத் திருச்சபைகளும் , தேவாலயங்களுள் , வற்றிக்கானுள் எத்தனை ஆயிரம் சிறார்கள் பாலியல் அடிமைகளாகப் கத்தோலிக்கப் பாதிரிகள் , ஆயர்மார்களால் சிறார் துஷ்ப்பிரயோகம் பல் நூறு ஆண்டுகளாக நிகழும் கொடுமை புரிந்ததா உனக்கு ? . 


இலங்கை-தாய்லாந்துக் கடற்கரைகளுள் எத்தனை இலட்சம் குழந்தைகளை அந்நியச் சுற்றுலாப் பயணிகள் பாலியல் ரீதியாகச் சுரண்டுகிறார்கள் . இவையெல்லாம் கூறும் குழந்தைப்போராளிகள் அரசியல் என்ன ? 


இன்று , உக்கிரைனில் சாகும் ஆயிரக்கணக்கான குழந்தைப்போராளிகள் முதல் அங்கோலாவில் ஏலவே செத்த இலட்சக்கணக்கான சிறார் இராணுவக் குழந்தைகளும் வரை இன்னும் ஞாபகத்துள் வந்தபடி . ஒவ்வொரு மூன்றாவது அங்கோலாக் குழந்தைகளும் அங்கவீனர்களாக்கப்பட்ட அந்நிய யுத்தத்தின் பெயரென்ன ? 


இன்று , உலகத்துள் 164 நாடுகளிற் தடை செய்யப்பட் கொத்துக் குண்டு ( Cluster munition : CBU-87 Combined Effects Munition ; CBU-97 Sensor Fuzed Weapon) பாவிக்க முடியாதென்று உலகமே சொல்லும்போது அதை உக்கிரைனுக்கு அனுப்பிவைத்து, இருஷ்சியக் குழந்தைகளைக் காலம் பூராகவும் வேட்டையாடும் அமெரிக்கனின் அறத்துக்கும் தமிழர்களின் -புலிகளின் குழுந்தைப் போராளிகள் அசியலுக்கும் வித்தியாசம் உண்டா ? 


ஈராக்கின்மீதான அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியப் பொருளாதாரத் தடையால் Antibiotic இன்றி  ஈராக்கியச் சிறார்கள் மரித்தார்களே  ; ஐந்து இலட்சம் குழந்தைகள் !! அதையும் , அமெரிக்க அரசு விலைமதிக்க முடியாத பெறுமதி மிக்க தம் அரசியல் வியூகம் என்றதே ! 


ஈராக் பாலுட்ஜா நகரத்தின்(Falludscha) மீதான நேட்டோ இராணுவப்படைகளின் தாழ் அணுக் குண்டுத்தாக்குதலால் (Depleted uranium : The DU penetrator of a 30 mm round) இன்றும் பாலகர்கள் குறைப் பிரவசமாக (Fallujah on cancer, birth defects !!!) இந்தப் பூமிக்கு வருகிறார்களே ?  


அமெரிக்க வானேவித் தாக்குதலைத் துரிதப்படுத்தினான் முன்னாள் அதிபர் ஓபமா . இந்த U.S. Drone Strikes —வானேவித் தாக்குதல்களால் உருக்குலைந்து  செத்த மழலைகள் -சிறார்கள் உலகம் பூராகவும் 4.000 என்பது சர்வதேச மன்னிப்பு சபையின்—Amnesty International அறிக்கையின் தொகுப்பினது சாட்சி . 


ஆக, இப்படி நிறைய எழுதிச் செல்லலாம் . 


இங்கு , சிங்கள இனவாத , பெளத்த பேரினவாத செளனிசத்துக்கு முன் தடுப்பு யுத்தத்தைச் செய்த புலிகள் தம் இருப்புக்காக மக்களை , சிறார்களைப் பலி கொடுத்தது தமிழ் ஆளும் வர்க்க பங்குச் சண்டைக்கே . என்றபோதும் , சிங்கள அரச பாசிசத்தினது தமிழர்கள்மீதான இன ஒடுக்குமுறை இதன் மூலமும் அல்லது, எதன் மூலமும் (சாதி-மத-பிரதேச/தீண்டாமை) நியாயப்பட முடியாது . 


அப்படி , இந்த அரசியலை நியாப்படுத்துபவ(ள்)ன் கெட்ட கிரிமினல் மட்டுமல்ல , மக்கள் விரோதி —ஒடுக்குமுறை அரச பயங்கரவாதத்தின் லொபி —அவ்வளவுதாம் !


—ப.வி.ஶ்ரீரங்கன்      12.08.2023

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...