Thursday, February 19, 2009

துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்களின் வாழ்வு...

எம்மை விடுதலை செய்வீர்!


"இன்றைய தமிழ்த் தேசிய அரசியலில் மற்றும் மக்கள்சார்
அரசியலில், எல்லோராலும் வெறுத்தொதுக்கப்படும் தேனீ இணையத்தளம் சிங்கள அரசோடு
கைகோர்த்திருப்பதாகவும் அது மக்கள் விரோத அரசியலை முன் தள்ளுவதாகவும் நாம் குற்றஞ்
சாட்டியுள்ளோம்.அது, உண்மையானதாக இருக்கிறதா இல்லையா என்பதைவிடத் தேனியின் மக்கள்
விரோத அரசியலை நாம் தெளிவாக வரையறுத்தபின்-அது, இன்று பிரசுரித்தவொரு கட்டுரையின்
நியாயமான கேள்விகளோடு உடன்படுகிறோம்."



நாம் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் வாழ்கிறோம்?நமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டென,நமது மண்ணிலிருந்து நாம் துரத்தியடிக்கப்பட்டுவிட்டோம்?நமது உறவுகள் மரங்களுக்கீழும் வெட்டவெளித் தரைகளிலும் குண்டடிபட்டுக் குற்றுயிரில் கிடக்கிறார்கள்?அப்படியானால் இவையெல்லாம் எவரால் நிகழ்த்தப்படுகிறது?இதைச் செய்பவர்கள் முற்றிலும் மனித விரோதிகளே!


வன்னியில் மக்கள்தம் தலைகளில் வீழும் குண்டுகளுக்கு ஆளும் மகிந்த இராஜபக்ஷ அரசுமட்டும் காரணமில்லை!மாறாகத் "தமிழீழவிடுதலை"ப் போராட்டஞ் செய்வதாகக் கதைவிட்டு நம்மை இனவாதிகளாகவும்-இழிச்சவாயர்களாகவும் உலகில் ஆக்கிய, புலித்தலைமையும் காரணம் என்பதைப் புரிவது கடினந்தாம்.பிராணர்ப் முகர்ச்சி ஏதோ தவறாகப் பேசுவதாகவும்,பிதற்றுவதாகவும் கூறி இந்திய அரசினது இலங்கைமீதான பிராந்திய மற்றும் இராணுவ வியூகங்களை-பொருளாதார இலக்குகளை மறைக்கின்ற வேலையில் கோபால்சாமிகள் தொண்டை கிழியக்கத்தித் தமது எஜமானர்களின் நோக்குகளை நிறைவேற்றுவதற்கேற்ப தமிழ் தேசியம் கடலலையாகத் தமிழகத்தில் கரைபுரண்டோகிறது.சீமான்வேறு குழம்பிய குட்டையில் தன்னை அமுக்கி அப்பாவி மக்களை தீக்கு இரையாக்கிறார்.

நாம்,தேசியப் பித்துப்பிடித்துத் தமிழுக்குத் தீயில் கருகத் தயாராக இருக்கிறோம்!


நம்மை எவர் விடுதலை செய்வார்?


தமிழ்க் குறுந்தேசியத்தின் குரல்வளைவரை இப்போது சிங்களக் குறுந்தேசியத்தின் பாசிச நீர் வந்துவிட்டது.மூச்சுமுட்டுவதற்குள் தமிழ் தனது வேலையைப்பார்த்துவருகிறது.இதற்காகப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தீபந்தொலைக்காட்சி, மிக நுணுக்கமாகத் தேசிய வெறியைத் தூண்ட அது எத்தகைய நடாத்தையிலும் இறங்கத் தயங்காதென்பதற்கு கடந்த திங்களன்றோ அல்லது ஞாயிறன்றோ வாசிக்கப்பட்ட செய்தியில்:"வன்னியில் காயப்படும் சிங்கள இராணுவத்துக்கு இலங்கை பூராகவும் இரத்தானம் செய்யக் கோரி, இரத்தஞ் சேகரிக்கும் இலங்கை அரசினது இவ் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சருட்பட பெருந்தொகையான "முஸ்லீம் இளைஞர்கள்" இரத்ததானஞ் செய்தார்கள்"என்று கூறுகிறது!இங்கே,எதற்கு முஸ்லீம் அடையாளம்?இது, என்ன செய்யும் புலம் பெயர் தமிழர்களை?எதற்காக இந்தப் புலிப்பாணி அரசியல் அத் தொலைக்காட்சிக்கு?


வன்னிப் போருக்குள் கேடயமாகத் தடுத்துக் கொல்லப்படும் மக்களுக்கு எந்த மிருகங்களது அரசியல் காரணமெனச் சொல்லத் துப்பற்ற ஊடகங்கள் மீளவும் தமிழ்பேசும் மக்களை இனவாதத் தீயில் வீழ்த்திக் குளிர்காயமுனைவதில் என்றும் புலிகளாகவே இயங்கும்போது,புலிகளது கடந்தகாலக் காட்டுமிராண்டித்தனத்தைக் குறித்து இலங்கையின் சிறுபான்மை இனங்களிலொன்றான முஸ்லீம் சமுதாயத்தின் குரல் இப்போது நம்மைக் கழுமரத்தில் ஏற்றாக்குறையாக-நாக்கை பிடுங்கும் கேள்விகளோடு தமது கண்ணீர்க்கதைகளைச் சொல்கிறது!


இதைப் புரிந்துகொள்ளும் வலி எமக்குள் நடந்தபோதும் நாம் நமது மனங்களில் மற்றையவர்களின் வலியைப் புரியும் வகைக் குணங்களைக் கொண்டிருக்கவில்லை!நாம் சிங்களச் சமுதாயத்தின்மீது கொண்டிருக்கும் குரோதத்துக்கு எவர் காரணமெனப் புரிந்திருந்தால் அன்று யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை ஓடவோடத் துரத்தியிருக்கமாட்டோம்-நாம் இனவாதத்தையும் அதன் தோற்றுவாய்களையும் புரட்சிகரமாக விளங்கிப் போராட்டத்தைத் தொடர்ந்திருந்தால் அப்பாவிச் சிங்கள-முஸ்லீம்களை-பள்ளிவாசல்களை அழித்து மூர்க்கத்தனமாக நமது மக்களையே-சகோதரங்களையே கொன்றிருக்கமாட்டோம்.

இவற்றையெல்லாம் புரியவிடாது நம்மையே மொட்டையடித்து நடுத்தெருவில்விட்டவர் எங்ஙனம் தேசியத் தலைவர் ஆனார்?இது பெரிய விந்தைமிக வரலாற்று நிகழ்வு?


செய்தது எல்லாம் தனது இனத்துக்கே துரோகம்.எனினும்,பிரபாகரன் தமிழ்த் தேசியத்தின் குறியீடாகத் தேசியத் தலைவராகிறார்?இது, தனிப்பட்ட பிரபாகரனால் முடிந்திருக்கிறதென்றால் அத்தகைய மனிதருக்குப் பின்னால் எந்தவொரு சக்தி இருந்திருக்கிறது!


நமது மனங்கள் தமிழர்களைச் சுற்றியும்,தமிழைச் சுற்றியும் மதில்களைக் கட்டிவைத்திருக்கிறதா?


இதைக் கடந்து நம்மை விடுதலை செய்வது அவசியம்தானே?


நாம் நடாத்தி முடிப்பவைகளை-கெட்டவைகளை-நமது மக்களுக்கே எதிரானதை மௌனித்துப் பேசாதிருப்பதற்கான மனச்சிறையிலிருந்து நம்மை விடுதலை செய்வதில்-இலங்கைச் சிறுபான்மை இனங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட இனங்களில், தமிழ்பேசுபவர்களும்,இஸ்லாமியர்களும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களென நாம் வரையறுப்போமா?


நமது கைகளாலே நமது சகோதரர்களான முஸ்லீம்களை வேட்டையாடினோமே,இதுகுறித்து எத்தனைபேர்கள் விசாரித்து இருக்கிறோம்?குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்களின் வாழ்வு பற்றியும், அவர்களது உரிமைகள் குறித்தும் நாம் எமக்குள் விசாரணைகளைச் செய்தோமா?


புலிகளை முஸ்லீம் மக்கள்மீதும், சிங்கள மக்கள்மீதும் ஏவி விட்டவர்கள் குறித்து நாம் எப்போதாவது மீளாய்வு செய்திருக்கிறோமா?


இத்தகைய செயலற்ற பழிக்கு ஆளாகிய வரலாற்றில், அவர்களது அரசியலில் நமது நிலைகள் எங்ஙனம் பேசப்படுகிறது?முஸ்லீம்கள் தமக்கு ஏற்பட்ட அனைத்துக்கொடுமைகளுக்கும் முழுத் தமிழ்பேசும் மக்கள்மீதும் பழி சுமத்தினால் சரியாகுமா?


பிரபாகரனின் படுமுட்டாள்தனமான அரசியல் நடாத்தையுள் கண்டெடுக்கப்பட்ட மனிதவிரோதப்படுகொலை அரசியலை, அவருக்குக் கற்பித்த எஜமானர்கள் யார்?யாழ்ப்பாண முஸ்லீங்களது பாரம்பரிய பூமியைத் தட்டிப்பறித்து, அவர்களை நாதியற்றவர்களாக்கிய தமிழ்க் கொடிய மனதுக்கு என்ன தீர்ப்பை வரலாற்றில் வழங்கமுடியும்?இன்று, சிங்கள அரசுக்குத் தீர்ப்பெழுதும் இளைய தலைமுறைத் தமிழ் மனத்துக்குத் தமது பெற்றோர்கள் இன்னொரு சமுதாயத்துக்குச் செய்த தீவினை தெரிந்திருக்க வாய்ப்புண்டா?


தமிழர்களது நிலங்களைச் சிங்களம் அபகரித்ததென்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் தாயகத்தைத் திருடிய தமிழர்களும் அவர்களது பாரம்பரிய நிலத்தைக் கொள்ளையடிததென்பது.கூடவே,யாழ்ப்பாணிய மேட்டுக்குடி இதற்குமுன்-யாழ்ப்பாணத்திலிருந்து நிலம் பறிக்கப்பட்டு முஸ்லீம்களைத் துரத்தியடிப்பதற்குமுன்-தமது இனத்துக்குள் சாதி சொல்லி, அப்பாவித் தாழ்த்தப்பட்ட மக்களை எந்த அதிகாரமுமற்ற கொத்தடிமைகளாக வைத்திருந்து, அவர்களது முதுகில் குற்றியபடியேதாம் அவர்களது தலைமுறைகளையும்,அவர்களது சொந்த மண்ணையும் திருடியது.இதன் விபரீதமான விளைவின் விருத்தியானதன் பலாபலனாக யாழ்ப்பாணித்திலிருந்து இஸ்லாமியர்களைத் துரத்தியடிப்பதற்கான சமூக உளவியலை நாம் பெற்றோம்-இல்லையா?


நமது,அசியலுக்கு மாற்றார்கள் குறித்து மாற்றான்தாய் மனமே இருந்திருக்கிறது.தமிழர்கள் பூண்டோடு அழிவதென்பதைச் சொல்லியழும் நாம், யாழ்ப்பாண முஸ்லீம்களின் இடப்பெயர்வைக்குறித்து எத்தகைய மனதோடு வரவேற்றோம்?அவர்களைத் துரோகிகளாகச் சொன்ன தமிழ் மனதுக்கு இன்று தம்மையே துரோகிகளாக்கிக்கொன்ற தமிழ் அரசியல் நடாத்தை புரிந்துள்ளதா?


இன்றைய தமிழ்த் தேசிய அரசியலில் மற்றும் மக்கள்சார் அரசியலில், எல்லோராலும் வெறுத்தொதுக்கப்படும் தேனீ இணையத்தளம் சிங்கள அரசோடு கைகோர்த்திருப்பதாகவும் அது மக்கள் விரோத அரசியலை முன் தள்ளுவதாகவும் நாம் குற்றஞ் சாட்டியுள்ளோம்.அது, உண்மையானதாக இருக்கிறதா இல்லையா என்பதைவிடத் தேனியின் மக்கள் விரோத அரசியலை நாம் தெளிவாக வரையறுத்தபின்-அது, இன்று பிரசுரித்தவொரு கட்டுரையின் நியாயமான கேள்விகளோடு உடன்படுகிறோம்.



அக்கட்டுரை நமது மனங்களைப் பிழிந்தெடுக்கிறது!நமது போலித்தனமான மனிதாபிமான வேடங்களைக் கலைக்கிறது.நம்மிடமுள்ள குறுந்தேசிய இனவாதத்தையம் ,நாம் மாற்றினங்கள்மீது கொண்டிருக்கும் சமுதாயப்பார்வையையும் அக் கட்டுரை மிகக் காட்டமாகக் கேள்வியெழுப்புகிறது.அக்கட்டுரையில் முன்வைக்கப்பட்ட வரலாற்றுப்பழி நம்மால் திட்டமிடப்பட்டு நடாத்தி முடிக்கப்பட்ட மானுடவிரோத அரசியலின் அறுவடை.இதைக்குறித்து இக்கட்டுரை மிக நியாயத்தோடு சில கேள்விகளை வைத்துத் தமிழ் குறுந்தேசிய வாதத்தினது மனிதவிரோத அரசியலைக் கேள்விகேட்கிறது.யார் இதற்குப் பதிலளிக்க முடியும்?


தலைகுனிந்து, நம்மை நாம் நொந்துகொள்ளும் இவ்விழிநிலையை நமக்குள் விதைத்த புலிப்பாசிசத்தைக் குறித்து நொந்துகொள்வதா இல்லை அதன் மக்கள் விரோத அரசியல்-படுகொலைக்கலாச்சாரத்துக்காகப் புலிகளின் தலைமையைத் தண்டிக்கக் குரல் கொடுப்பதா-எது, இங்கே நியாயமான செயல்?


நம்மை நாம் ஏமாற்றியுள்ளோம்!தமிழீழத்தின் பெயரால்-தேசத்தின் பெயரால் நாம் நமக்குள்ளேயே "துரோகிகள்"எனப் படுகொலைகளைச் செய்ய புலியைத் தயார்ப்படுத்தியுள்ளோம்.புலிகளது இந்தக் கெடுதியான அரசியல் எல்லைதாண்டியபோது யாழ்ப்பாணமாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த நமது சகோதர முஸ்லீம் சமுதாயத்தையே "துரோகிகளாக"வர்ணித்து, அவர்களது உயிரோடு கொலைக்காரப்பாசிசக் கரங்களைப் பதியவைத்து, அவர்களது வாழ்வையும்,வளத்தையும் அழித்தெறிந்துள்ளோம்.பாழும் இப்பாசிசப் புலிகளது எல்லையற்ற கொலைக்கார அரசியல் நடாத்தை இன்று முழுமொத்த தமிழ்பேசும் இனத்தையே தனது கொலைவெறிப் பாதையூடாக அடிமையாக்கியுள்ளது.


இஃது, சொந்த மக்ளையே கொத்தடிமையாகவும்,கொடுங்கொலைக்குள்ளும் தள்ளிய வரலாற்றுத் தெரிவில் முஸ்லீம் மக்களுக்கு வழங்கிய வரலாற்றுப் பழிச் சொல்"துரோகிகள்-காட்டிக்கொடுப்போர்"என்பதாகும்.இதைத் துடைத்தெறிந்து, நமது சமுதாயம் மாற்றினங்களோடு நேர்மையான தோழமையுறவை வளர்ப்பதாக இருப்பதானால் முதலில் புலிகளது பாசிச அரசியலையும் ,அப்புலி இயக்கத் தலைவனையும் தண்டிப்பதற்கான அரசியல்லைக் குறித்துப் பகிரங்கமாக உரையாடவேண்டும்.இலங்கையில் முழுமொத்த மக்களையும் ஒடுக்கும் பாசிச யுத்தக் கிரிமினல் மகிந்தா குடும்பத்தை எங்ஙனம் உலக நீதிமன்றத்தில்-டென்கார்க்கில் கொணர்ந்து விசாரிக்கவேண்டுமோ அதே அடிப்படையில் பிரபாகரனையும் இழுத்துவந்து தண்டித்தாகவேண்டும்!


புலிகளைத் தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்திலிருந்து அரசியல் நீக்கஞ் செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிரபாகரனையும் அவரது கொலைவெறிக்கூட்டத்தையும் சர்வதேச நீதி அரங்கில் ஏற்றி,அவர்களுக்கான தண்டகைளை வழங்கக் குரல் கொடுப்பதும்.இன்றைய சூழலில் புலிகளைக் குறித்து எவருமே மௌனித்திருக்கமுடியாது.மகிந்தா குடும்பத்து அரசியல் இருப்புக்குப் புலிகளே காரணமானர்வர்கள்-மகிந்தாவின் பாசிசக் குண்டுகள் வன்னித் தமிழர்கள் தலைகளில் வீழ்ந்து கொல்வதற்குப் பிரபாகரனது முட்டாள்தனமான கொலைக்கார அரசியல் தெரிவே காரணம்.இதைப் புரிவதற்கு நமது மனங்கள் முன் பல நூறு அடிகளுக்கு எழுப்பப்பட்டுள்ள தமிழ்த் தேசிய வெறி மதில் உடைத்தெறியப்பட்டாகவேண்டும்!


தமிழர்களின் அழிவைத் துரிதப்படுத்திய புலிகளது அரசியல்-போராட்டப்பாதை மக்களது அனைத்து உரிமைக்கும் எதிராகவே இயங்கியது.இதைத் திட்டமிட்டுப் புலிகள் அமைப்புக்கூடாகச் செய்து முடித்த புலிகளது எஜமானர்கள் புலிகளைச் சுத்திகரித்துத் தொலைத்துக்கட்டும் இத்தருணத்தில் பாரிய மனித அவலத்தை வன்னியில் திறந்துவிட்ட பின்பும், தமது அரசியலை மக்களுக்காகத் துறக்க முடியாத புலித் தலைமை முற்றிலும் மனிதவிரோத அமைப்பு என்பதையே நாம் பார்க்கிறோம்.எனவே,இன்று புலிகளது அன்றைய-இன்றைய மனிதவிரோதப் பக்கங்களை கேள்விக்குப்படுத்தும் பாதிக்கப்பட்ட இனங்கள்-மக்கள் கூட்டங்கள் தத்தமது குரலுக்கு நியாயம் கேட்பது மிக அவசியமானதே.இதை முதலில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு இஸ்லாமியக் குரல்(அப்படி இல்லாதுபோகினும்,அதன் நியாயமான கேள்விகள் மறுத்தொதுக்க முடியாதது) நமக்குமுன்-வரலாற்றுக்குமுன் வைக்கிறது.


அதை, இங்கே இக்கட்டுரையின் கீழே இணைப்பதென்பது எமக்கு அவசியம்.


ஒடுக்கப்படும் மக்களுக்கான குரலை நாம் இனம்,மொழி,மதங்கடந்து முன்வைக்கின்றோம்.இங்கே,உழைக்கும் மக்கள் தம்மை உழைப்பால் இணைப்பதைத்தவிர அவர்களுக்கான எந்தவொரு பிற அடையாளத்தையும்சார்ந்து அடையாளப்படுத்தித் தம்மை குறுகிய நலன்களுக்கு இரையாக்கமுடியாது.இத்தகைய குறுகிய நலன்களுக்கு நாம் தமிழீழத்தின் பெயராலும்,தமிழ்த்தேசியத்தின்பெயராலும் நம்மை இரையாக்கியது வரலாற்றில் என்றும் படிப்பினையாக இருக்கும்.ஆதலால்,இஸ்லாமியச் சமுதாயத்தின் குரலை இன்றைய அடையாள அரசியலுக்கும் அப்பால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இலங்கையர்கள் எனும் பார்வையில் தோழமையோடு அணுகுகிறோம்.இக் குரலை எதன் பெயராலும் அடக்கிவிடத் துடிக்கும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக நாம் பாடுபடுவோம்.


தோழமையோடு,


ப.வி.ஸ்ரீரங்கன்
19.02.2009
*****************************************************
அல்லாஹ் அக்பர், அஸத்தோ மஹ், ஸற்கவயாஹ், ஸமஸோமாஹ்ஜோஸிற்கமயாஹ்


-யஹியா வாஸித்-


"குல்லு நப்சின் தாயிக்கதுன் மவுத்" (அல் குர்ஆன்) மூச்சுவிடும் அனைத்து உயிரினங்களும் மரணம் என்னும் பானத்தை அருந்தியே ஆகவேண்டும். இந்த வகையில் மூச்சை நிறுத்திக்கொண்ட முத்துக்கிருஷ்ணனினதும் முருகதாசினதும் மரணத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களைப் பெற்று வளர்த்து, பாலூட்டி, தேனூட்டி வளர்த்து இப்போது மத்தளமாகிக் கொண்டிருக்கும் அந்த தாய், தந்தை, உடன் பிறப்புக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துத்தான் ஆகவேண்டும். இதே பாணியில் அன்று நம்மவர்கள் "நல்லதோர் வீணை செய்வார்கள்"என நினைத்து உரும்பராயில் உடைந்து சிலையாக இருக்கும் சிவகுமாரனும், நல்லுர் சந்தியில் பட்டினி கிடந்து உரிமைக்காக உயிரைவிட்ட திலீபனும் இறைவனடி சேர்ந்தார்கள். அந்த தியாகமும், தீட்சண்யமும் மழுங்கடிக்கப்பட்டு மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் படியான ஒரு இக்கட்டில் தமிழ்பேசுவோரை, தமிழனை தள்ளிவிட்டு இன்னும் பிடித்த முயலுக்கு மூணுகால் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்னும், இன்னும் நிறையக்காலங்களும், நேரங்களும், தமிழ் எங்கள் மூச்சு என தமது சக்தியெல்லாம் திரட்டி போராட உலகத்தமிழனும் உணர்ச்சியோடுதான் இருக்கின்றான். உரிமைக்காக ஏங்கிக் கொண்டும்தான் இருக்கின்றான். ஆனால் யார் மணிகட்டுவது?
ஏதும் தெரியாமல் எனை(ம) மறைத்த வன்னிருளை நீக்கநாதா என(ம)க்கொரு ஞான விளக்கில்லையோ !அல்லும் பகலும் அகன்ற வடிவே !!
உன்னை நான்(ம்); அண்டும் படி என(ம)க்கு ஒரு
ஞான போதம் தான் இல்லையோ!?


என்று ஒப்பாரி வைத்து அழுத தாயுமான சுவாமியின் நிலையில்தான் இன்று ஒவ்வொரு தமிழ் மகனும் இருக்கின்றான். நமது முகத்துக்கு முன்னால் அவன் சிரித்தாலும் முதுகுக்குப் பின்னால் கனன்று, வெம்பி, வெடித்துக் கொண்டிருக்கின்றான். இப்போது போய் எண்ணையோ, நெய்யோ ஊற்றி வேல் பாய்சிசிவிடக் கூடாது. அப்புறம் அது மீண்டும் ஒரு தமிழ் இளைஞர் பேரவைக்கோ, புதிய புலிகள் இயக்கத்துக்கோ வழி சமைத்துவிடும்.
இன்றைய பல மாத வன்னிநகர்வையும், அன்றைய அந்த யாழ் வாழ் முஸ்லீம்களான எங்களது ஒரு நாள் நகர்வையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். வாப்பாவின் சைக்கிளில் மார்ட்டின் றோட்டிலுள்ள எனது தமிழ் நண்பர்களுடன் சுற்றித் திரிந்து விட்டு வீட்டுக்கு வருகின்றேன். மொத்தமுஸ்லீம்களும் றஹ்மானியா கொலோஜ், ஐந்து சந்தி, பள்ளிவாசலடி போன்ற இடங்களில் குழுமியிருந்தனர் (இதை உணர்ச்சி வசப்பட்டு வை.கோபால்சாமியின் பாணியில் சொல்வதானால் அங்கே மொத்த சோனியும் குய்யோ முறையோ என அலறிக் கொண்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்கள்) .வாப்பா சொல்கின்றார் "மகன் நம்மள போகச் சொல்லி விட்டார்கள்". யார் வாப்பா போகச் சொன்னது? ஏன் போகச் சொன்னார்கள்? எதற்காகப் போகச் சொன்னார்கள்? யாரும் யாரிடமும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை! கேட்க நேரமுமில்லை!! கேட்க நாதியுமில்லை!!
"எஸ் வீ ஓள் ஆர் பாஸ்ட்ரட்". "திஸ் ஓடர் புறம் ஒன் மேன் ஆமி"
"அல் ஹம்துலில்லாஹ்" (அல் குர்ஆன்) எல்லாப்புகழும் அந்த இறைவன் ஒருவனுக்கே.என்று மனதிற்குள் ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டு உடலையும் உயிரையும் காவிக்கொண்டு வேட்டை நாய்களால் குறி பார்க்கப்பட்ட முயலாக நடந்தோம், ஓடினோம், பதறினோம். வழியில் உளவுப்பிரிவினரால் பரிசோதிக்கப்பட்டோம். எனது சகோதரி, எட்டுமாத கர்ப்பிணி வாயில் நுரை தள்ள நடந்து வந்து கொண்டிருந்தார்.அவரது காதில் ஒரு 4கிராம் பெறுமதியான காதுப்பூ இருந்தது. ஒரு வாட்ட சாட்டமான இளைஞர் தனது இரு கைகளாலும் காதைப் பிய்த்து அதை புடுங்கினார். "எஸ் யு காண்ட் கெரி எனிதிங் புறம் அவர் மதர் லேன்ட்". "திஸ் ஓடர் புறம் அவர் பிக் பிறதர்"

வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகிமானிலத்தை ஒரு நொடியில் வகித்த மண்ணில்குணமாத மனிதரையும் படைத்து இந்த குவலயத்தில்தானுதித்து குருவாய் வந்து.சகமான சம்சாரம் ஒன்றில்லாமல்சன்னியாசிபோலிருந்து.

சித்தத்தை காட்டிச் சென்றவனே அண்டுவாயே.அண்டுவாயே,அண்டுவாயே என அலறிக் கொண்டு..! இற் இஸ் ஒன் றெக்கார்ட். இற் இஸ் ஒன் றெக்காட். இற் இஸ் ஒன் றெக்கார்ட்.

மறுமை என்ற ஒன்றிருக்கின்றது. உலகமே மரணித்த பின் அனைத்து ஜீவ ராசிகளையும் எழுப்பி, தன்முன்னால் நிறுத்தி கேள்விகள் கேட்டு செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப சொர்க்கம் ,நரகம் என இறைவன் (அல்லாஹ்) அனுப்பிவைப்பான். இது இந்த கேள்வி கணக்கு பெரியதொரு மைதானத்தில் நடக்கும். உலகின் மொத்த ஜன சமுத்திரமும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பர். பரந்த வெளி, உச்சி வெயில் தலையைத்தொடும். தாய் தகப்பன், உற்றார், உறவினர், அத்தான், அக்கா.ஆண்டான்,அடிமை, எதுவும் கிடையாது. இந்த நாளை "மஹ்சருடைய நாள்"; என்போம்.இந்த நாளுக்காகத்தான் உலகில் வாழும் ஒவ்வொரு நாளும் பயந்து புண்ணியம் தேடிக் கொண்டிருப்போம். "மை கோர்ட்னெஸ்". இந்த யாழிலிருந்து துரத்தப்பட்ட நாளே இப்படி என்றால் !?அந்த நாள் !!!
அந்த மறுமை நாள்.

இப்போது இந்த வன்னி மக்களை நினைக்கும் போது அந்தநாள் ஞாபகம் மூச்சை முட்டுகின்றது.தொண்டை அடைக்கிறன்றது, பிடறி மயிர் விறைக்கின்றது. அன்று எங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. இன்று உங்களுக்காக உலகமே குரல் கொடுக்கின்றது. உரிமைக்குரல்கள் ஆர்ப்பரிப்புகள், உயிர்த்தியாகங்கள் என என்னென்னவோ !? ஆனால் எதுவுமே ,எங்குமே நச்சென உறைக்கவில்லை. மீண்டும், மீண்டும், மீண்டும் அதே பாணி, அதே தோற்றம், அதே கும்பல், அதே பாட்டு. உங்களுக்காக ஒப்புக்கு சப்பாணியாக அழுபவர்கள் "தண்ணிக்குள்ளால் லாம்பு கொண்டு போற" அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றனர். ஆனால் சிங்கள அரசு "பெற்றோலுக்குள்ளால் லாம்பு"களை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது.

அண்மையில் "காஸா"வுக்காக இங்கிலாந்தில் ஒரு ஊர்வலம் நடந்தது. ஒரு இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர் "காஸாவுக்காக ஒரு கவனயீர்ப்பு நடாத்த உள்ளோம் விருப்பம் இருந்தால் நாளை வாருங்கள்" என பல நண்பர்களுக்கும்,பல அமைப்புகளுக்கும் போன் பண்ணி சொல்லுகின்றார். அடுத்த நாள் பலர் வருகின்றனர். கவனயீர்ப்பு செய்வதென முடிவாகின்றது. வந்தவர்கள் எல்லாம் 9000பவுண் சேர்த்து பைனான்சியல்ஸ் டைம்ஸ் இல் பிரிட்டிஷ் பிரதமருக்கு
ஒரு முழுப்பக்க வேண்டுகோள் விடுகின்றனர். "பிளீஸ் ஹெல்ப் த காஸா இனஸன் பீப்பிள்". அத்துடன் அதே வெள்ளிக் கிழமை ஒரு ஊர்வலம் இஸ்ரேலிய எம்பஸிவரை. ரொம்ப அமைதி, 50 வீதம் பிரிட்டிஷ் வெள்ளையர்கள்,ஒரு தடியடி கிடையாது. யாரும் இதுவரையும் பீற்றிக் கொள்ளவில்லை இத்தனை லட்சம் மக்கள் வந்தார்கள் என்று. நிச்சயம் நீர் குடும்;பத்துடன் வரவேண்டும் என யாரும் யாரையும் மிரட்டவுமில்லை. அலைகடலென மக்கள், ஆர்ப்பரித்தது தமிழ் உறவுகள், மலைத்தது பிரிட்டிஷ் அரசு என எங்குமே எந்த துண்டுப்பிரசுரமுமில்லை. ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் என்பதெல்லாம் கறிக்குதவாது. சைலன்ட் கொஞ்சம் சமயோசிதம்.

புலிகள், புலிகள் என சொல்லிக்கொள்பவர்கள் கோசங்களை மாற்றி,ஆட்களை மாற்றி,புதியதொரு தோற்றத்துடன் வெளிவந்து, முதலில் உங்களால் பணயம் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் அந்த மனிதப்புனிதர்களை மூச்சு விட வைத்துவிட்டு பின்னர் மற்றவர்களுடன் கைகோர்த்து (கொஞ்ஞம் கஸ்டமான விடயம்தான். இப்போது எல்லோருமே தண்டல்காறர்கள்) ஐயா செல்வநாயகம் அவர்கள் தனது கடைசிக்காலத்தில் வாயில் உமிழ் நீர் வழிய, வழிய சொல்லி வழி மொழிந்து விட்டுப் போன உரிமையின் ஒரு பங்கை முதலில் பெறபார்ப்போம். இல்லை "வீ ஆர் டிபறன்ட் புறம் அதர் பீப்பிள்"என்று வழி மொழிவீர்களானால் !?

எல்லோருடைய கடவுள்களும் எங்கே இருக்கின்றார்கள் என எனக்குத் தெரியாது ஆனால் என்னுடைய கடவுள் ரஷ்யாவில் லெனின் கிராட்மைதானத்தில் செத்துக்கிடக்கிறார் என்று ஈழத்து சித்துக்கவிஞன் ஒருவன் எழுதியது போல் இன்னொரு பித்துக் குளிகவிஞன் எழுதிவிடுவான். பனங்கள்ளு அடித்து விட்டே இப்படி எழுதியவர்கள் இப்போது வொட்காவை வெறும் வயிற்றுடன் அடித்துவிட்டு என்னென்னவோ எழுதுவார்கள். உலக நாகரிகம் சொல்லித்தந்த லெனினையே மொத்தமாக விலை பேசி விற்ற உலகமிது. (கோர்ப்பச்சேவ் மன்னிப்பாராக )

ஒன்றுமே கெட்டு குடிமுழுகிப்போய் விடவில்லை. சிறிலங்காவில் பாரிய பிரச்சனை இருப்பது உலகிற்கே தெரியும். அது இப்போதுதான் தோன்றியுள்ளது போல் புதியதம்பிகள் இப்போது சேவல் கணக்காக கொக்கொரக்கோ போடுகின்றனர். உங்களால் ஆக்ரோசமாக விரட்டப்பட்ட நாங்களும் அன்று அமைதியாகத்தான் வெளியேறினோம். அந்த எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கும் ஐ.நா.வுக்கு அருகிலும், ஐ.எம்.எப்.க்கு அருகிலும், பாராளுமன்றங்கழுக்கருகிலும், ஐ.சி.ஆர்.சி, யு.என்.எச்.சி.ஆர். போன்ற பாரிய நிறுவனங்களுக்கருகிலுமுள்ள குட்டிக் குட்டி காபி சொப்பிலும், உணவகங்களிலும் வேலை பெற்றுத் தந்துள்ளார். இவ்அலுவலகங்களிலிருந்து நிறைய அதிகாரிகள் காபி,டீ குடிக்க இங்கு வருவர். இப்போது நீங்கள் ஒண்ணரை லட்சம் பேரை வைத்து ஊர்வலம் செய்ததை நாங்கள் தனித்தனி ஆட்களாக 1991இலிருந்து செய்து கொண்டிருக்கின்றோம். செய்வோம். மிக மெதுவாக நிதானமாக ஒவ்வொரு வெள்ளையனின் காதுக்குள்ளும் வேத மந்திரமாக உண்மைகளை, உண்மையாக கூறியுள்ளோம். அப்போது உங்கள் துதிபாடும் தம்பிகள் கட்டுநாயகாவில் இவ்வளவு, வவுனியாவில் அவ்வளவு, என என்னன்னவோ சொல்லிப்பிதற்றிக் கொண்டிருந்தனர். பணமறவிட்டுக் கொண்டிருந்தனர், இப்படி ஒரு "கல்குலேற்றிவ் றிஸ்க்"ஐ சிங்கள அரசு எடுத்தால் !? விலை மதிக்க முடியா அந்த உயிர்களுக்கு யார் பதில் சொல்வது. என கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை.இந்த உங்களின் பாரிய தோல்விக்காக நாங்கள் சந்தோஷப் படப்போவதில்லை.மெலியாரை வலியார் கொன்றால் வலியாரை தெய்வம் கொல்லும் என்பர்.இதில் யார் மெலியார் ? யார் வலியார் என்று இப்போது கணக்குப் பார்க்க முடியாது. புதுக்குடியிருப்பு புதர்களுக்குள் இருந்து பூதங்கள் கிளம்பும் வரை…..

இஸ்லாமிய ஆட்சியாளர் (அலி றலி என நினைக்கின்றேன்) ஒரு முறை யுத்தத்திற்குச் செல்கின்றார். வாழ் சண்டை. ஒரு எதிரியுடன் போரிடுகின்றார். எதிரி கீழே விழுந்து விட்டார்.அவரை வெட்டுவதற்கு இவர் வாளை உருவுகின்றார். அப்போது கீழே விழுந்த அவர் ஆட்சியாளரின் முகத்தில் காறி உமிழ்கின்றார். அவர் காறி உமிழ்ந்ததும் இவர் அவரை வெட்டுவதை நிறுத்திவிட்டார். இதைப் பார்த்த இவரது படையினர் ஏன் அவரை வெட்டவில்லை, கொல்லவில்லை என கேட்கின்றனர். அவருக்கு என் மேல் ஏதோ தனிப்பட்ட கோபம் இருக்கும் போல் இருக்கிறது. அதனால்தான் காறி உமிழ்ந்துள்ளார். அதனால் நான் வெட்டவில்லை என்றாராம்.

இப்படியானஒரு யுத்த தர்மத்தைத்தான் வன்னி மக்களும் "தலைவர் செய்வார்" என அடம்பிடிப்பவர்களும் இப்போது எதிர்பார்க்கிறார்கள். அண்மையில் ஜேர்மனியில் ஒரு கருத்தரங்கு நடந்தது. ஒரு பார்வையாளராக தற்செயலாக அங்கு சென்றிருந்தேன். நிறைய விடுதலைப்புலி ஆதரவாளர்கள் வந்திருந்தனர். மற்றவர்கள் எவரையும் பேசவிடவில்லை. பேசினாலும் ஆயிரம் குற்றம், குறை கூறிக்கொண்டிருந்தனர். இதில் ஒரு தம்பி திருக்கோணமலை சொந்த ஊர். அப்பா யாழ்ப்பாணம், அம்மா திருகோணமலை. சுத்தமாக தமிழ் தெரியாது. ஜேர்மன் மொழிதான் பேசுகிறார். நாங்கள் செய்வதொன்றுதான் சரி. மற்றைய மொத்த தமிழனும் செய்வது தேசத்துரோகம். எவரையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். தலைவர் கட்டளை இட்டுவிட்டார். இன்னும் என்னன்னவோ.

நீங்கள் யார் எனக்கேட்டார். நான் ஒரு முஸ்லீம் ஒரு பிரண்டுடைய திருமணத்துக்காக பிரான்சிலிருந்து வந்த நான் என்றேன். என்னை பரிதாபமாகப் பார்த்துவிட்டு எங்கட போராட்டத்தை பற்றி உமக்கு ஒன்றும் புரியமாட்டாது என கூறி விட்டு நகர்ந்துவிட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது தகப்பனை எனக்கு நன்கு தெரியும.; 1982ஆம் ஆண்டு திருகோணமலை 10ம் நம்பரில் உள்ள சிங்களமீன் வியாபாரிகளுக்கும் தமிழர்களுக்கும் ஒரு பிரச்சனை வந்து அவர்கள் துப்பாக்கிகளைக்காட்டி மிரட்டிக் கொண்டிருக்க எங்களிடம் ஒன்றுமே இல்லையே என தமிழர்கள் விழித்த போது 100 மைல்களுக்கப்பால் இருந்து பென்சில்,அழிறப்பர்,கொப்பி, புத்தகம், கொம்பாஸ் பெட்டி எல்லாம் கொண்டு போய் கொடுத்த சங்கதி அந்த குட்டித்தம்பிக்கு தெரிய வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் இப்போது யுரோப்பில் இருந்து கொண்டு இப்போராட்டத்தை குழப்புவதே இவர்களைப் போன்றவர்கள்தான். முதலில்உள்ளுக்குள் களை எடுங்கள்.கதைக்கக் கற்றுக் கொடுங்கள்.

கரியவளம் என்றால் என்ன? துத்த நாதத்திற்கு கெமெஸ்ட்றியில் என்ன குறியீடு, குங்குலியத்தின் பயன்கள் என்ன? அமிழ்தண்டூர்தி எத்தனைகால் மிருகம்? எனக் கேட்டு எழுத்தறிவித்து களத்துக்கோ பிரச்சாரத்துக்கோ தயார்படுத்துங்கள். ரம்போவும், ஜேம்ஸ் போண்ட்டும் பெரிய சம்பளம் வாங்குபவர்கள். அவர்களை வெள்ளித்திரைகளில் ரசிப்பதுடன் விட்டுவிடச் சொல்லுங்கள். உலகின் முகடு என்று சொல்லுகின்ற அமெரிக்காவே சைனாவுக்கு ரியுஷனுக்கு ஆள் அனுப்புகின்றார்கள. யாருக்கும் எதற்குமே நேரமில்லை. யுரோப்பில் வாழும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி எடுப்பதே பெரிய பாடாகியுள்ளது. இப்போது புதிதாக வன்னி நிலவரம் என்ற மரணக்குண்டு. முருகதாஸின் முத்துக்குழிப்பின் பின் அகதிகள் மேல் உள்ள பரிதாபப் பார்வை வேறு உருவம் எடுக்கும் போல் தெரிகின்றது. எங்களை விடுங்கள் நாங்கள் வாழ வந்தவர்கள் யாரையும் ஆள வரவில்லை. ஆளவும் ஆட்டவும் இன்னும் நினைக்கும் உங்கள் அபிமானிகள்தான் பாதிக்கப்படுவார்கள். இதை இங்கு ஏன் சொல்ல வருகின்றேன் என்றால் முஸ்லீம்களும் (அக்பர்), பௌத்தர்களும் (அசோகன்) நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இந்தியாவை ஆளவிட்ட ஹிந்துக்கள் பிராமணர், பிராமணரல்லாதவர் என மனு நீதி சாஸ்திரங்களைக் கூறி இந்துக்களை தொடர்ந்து ஆளவே விடவில்லை என்பதையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் .ஓன்று பட்டால்தான் உண்டு வாழ்வு என்பதை உணருங்கள். உணர்த்துங்கள்.

உங்களால் அனைத்தையும்,அனைத்தையும் இழந்து இறுதியில் மகனையோ,மகளையோ இழந்த வன்னித்தாயொன்று பிணத்தை மடியில் இருத்திக்கொண்டு அல்லது கல்லறையில் தலைவிரிகோல மாக விழுந்து இறைவனுக்கு பிடித்த மொழியில்
"அஸத்தோ மஹ்ஸற்கவயாஹ்ஸமஸோமாஹ்ஜோஸிற்கமயாஹ்"


என அறம் பாடியிருப்பாளோ எனவும் எண்ணத்தோன்றுகிறது. இல்லாவிட்டால் ரூபவாஹினி றிப்போர்ட்டர் சமன் குமார ராம விக்கிரமவிக்;கும், ஐ.ரி.என்.றிப்போர்ட்டர் சமில் ஆனந்தவுக்கும் புதுக்குடியிருப்பு பங்கருக்குள் என்ன வேலை வேண்டிக்கிடக்கிறது. பத்தினிகள் தொடர்ந்து பதுங்கியிருக்கமாட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவராக சாண் என்ன முழம் என்ன எனப் புறப்பட்டால் அகிலம் தாங்காது. அல்லாஹ் அக்பர்.

1 comment:

Anonymous said...

கொலைக்களம்..

சிறிலங்கா அரசு தாக்குதல் தொடுத்த பின்னரான காலங்களில் ஏன் இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை மாறாக புலிகள் பெரும் நிலப்பரப்புகளாக விட்டு விட்டு எவ்வித எதிர்ப்பையும் காட்டாது பின்வாங்கிச் சென்றனர். இன்று சில மைல்பரப்பளவில் பெரும் மக்களுக்கிடையே புலிகள் இருப்பதாகவும் இறுதித்தாக்குதலுக்கு தயாரா இருப்பதாகவும் புலிகளின் ஆய்வாளர்கள் எழுதிக் கொள்கின்றார்கள். "விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இராணுவத்தை புதுக்குடியிருப்பு நோக்கி வரவைத்துள்ளனர். புதுக்குடியிருப்பு சமருக்காக அவர்கள் பெருமளவான கனரக ஆயுதங்களையும் நகர்த்தியுள்ளனர். விடுதலைப்புலிகள் வசம் 10 பிரதான போர் டாங்கிகள்இ பல டசின் கவச வாகனங்கள்இ இரண்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள்இ 200 மோட்டார்கள்இ 60 பீரங்கிககள் உட்பட பெருமளவான கனரக ஆயுதங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. சிறீலங்கா வான்படையினரின் வான் தாக்குதல்களில் இருந்து அவற்றை பாதுகாத்து இறுதிச்சமருக்காக தயார்படுத்தி வைத்துள்ளனர்.

முன்னைய அனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டது ஒன்று தான் அதாவது விடுதலைப்புலிகள் தமது கனரக ஆயுதங்களை நிலையான இடத்தில் வைத்து தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. உதாரணமாக டாங்கி ஒரு இடத்தில் இருந்து சூடுகளை வழங்கினால் அது சில நிமிடங்களில் வேறு இடத்திற்கு நகர்ந்து விடும். விடுதலைப்புலிகள் கவசத்தாக்குதல் படை பிரிவை ஆரம்பித்துள்ளதாக படைத்தரப்பு ஒத்துக்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. விமானங்களின் வரவை கண்டறியும் நவீன ராடார் வசதிகளும் விடுதலைப்புலிகள் வசம் உண்டு. எனவே தான் வான்படை திடீர் தாக்குதல்களுக்கு தாழ்வாக பறக்கும் எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக உலங்குவானூர்திகளை பயன்படுத்தி வருகின்றது. ஆனால் அவற்றின் தாக்குதல் எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.

முல்லைத்தீவும்இ சாலைப்பகுதியும் நீரேரிகளை உடைய குடா பகுதிகளை கொண்டவை அந்த நீரேரிகளை தற்காலிக அமைக்கப்பட்ட பாலங்கள் மூலம் கடந்து 55 ஆவது படையணியும்இ 59 ஆவது படையணியும் கனரக வாகனங்களை புதுக்குடியிருப்பு நோக்கி நகர்த்தி வருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தும் போது அவர்கள் இந்த கனரக வாகனங்களை கைவிட்டே ஓடவேண்டியிருக்கும். எடுத்து செல்வது கடினம். புதுக்குடியிருப்பின் கரையோர பகுதிகளை இரு படையணிகள் கைப்பற்ற முனைந்து வருகையில் ஏனைய 5 டிவிசன்களும் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் நகர்ந்து வருகின்றன. "(hவவி://றறற.கைெழவயஅடை.உh/வய/நெறள.pரி?2டிகுளுழ4ந0னஎh5ந0நஉடீபு5N3டி4ழுஉது74ன2ன0h3உஉ2புஎளு2ன434ருளு3டி023ஙே3ந

ஈழப்போர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் சமர் ஜ திங்கட்கிழமைஇ 16 பெப்ரவரி 2009இ 15:29 புஆவூ01:00 ஸ ஜநிலவரம்ஸ



புலிகளின் அடுத்த நகர்வு?

புலிகளின் ஆயுத பலம் இவ்வளவு பலத்தை வைத்துக் கொண்டு புலிகள் ஏன் மக்களை பாதுகாக்கவில்லை? இன்றுவரை கூட புலிகள் பலமாக திருப்பித் தாக்குவார்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அழிவு தொடர்கின்றது. மக்களின் நலனை அக்கறையிருந்திருந்தால் கனரக ஆயுதங்களை பாவித்திருப்பார்கள். இது சிறுபிள்ளைத் தனமான கருத்தாகக் கூட எள்ளிநகையாடலாம். இதில்

தொடர்ச்சியான ஆயுதவழிபாடு

தலைமையைக் காப்பாற்றுவது

மக்களின் இழப்பைக் காட்டி அனுதாபத்தை பெறுவது

மக்களின் இழப்புக்கள் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெறுவது அதாவது கொசவோ அல்லது கிழக்குதிமோர் போன்று தமிழீழத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என புலிகளின் தலைமை எண்ணியிருக்கலாம். ஏன் இன்று இழப்பின் பின்னராக கொடுக்கப்படுகின்ற சர்வதேச கவனம் கூட தம்மை நோக்கிய பார்வையை திருப்பியுள்ளதாகவே புலிகள் கருதுகின்றனர்.

மேலும் புலிகளில் உள்ள உறுப்பினர் வலுவைப் பற்றி "விடுதலைப்புலிகளின் பகுதியில் ஏறத்தாள 300இ000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 10 விகிதமானவர்கள் போரிடும் தகமை உடையவாகள் என வைத்து கொண்டால் கூட அவர்களின் பலம் 30இ000 இனால் அதிகரித்துவிடும். விடுதலைப்புலிகளின் வசம் ஏற்கனவே 15இ000 பயிற்றப்பட்ட போரளிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர்களின் பலம் 45இ000 ஆக அதிகரிக்கலாம். விடுதலைப்புலிகளின் செயற்திறன் மிகவும் அதிகம்.

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த 6 ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் வீதிகளையும்இ கட்டடங்களையும் கட்டிக்கொண்டு இருந்திருப்பார்களா அல்லது மக்கள் பாதுகாப்பு படையையும்இ தமது தாக்குதல் படையணிகளையும் கட்டி எழுப்பியிருப்பார்களா என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். " ஆக இவர்கள் இங்கு கூறவருவது என்னவெனில் நம்புங்கள் நம்புங்கள் தமிழீழ நாளை கிடைக்கும் என்பதையே.

இழப்பை காட்டி மக்களின் ஆதரவைப் பெறுவதே புலிகளின் கடந்த 25 வருடகால யுத்த தந்திரமாகும். சிறுசிறுதாக்குதல்கள் மூலமாக படைகளைக் கொல்வதும் தமது சகாக்களை இழந்த இராணுவம் வெறித்தாக்குதலை மேற்கொள்வதும் பின்னர் இதனால் ஏற்படும் கெடுபிடிகளினால் விரக்தியுற்ற இளைஞர்கள் இயக்கங்களில் சேர வழிவகுத்ததது. மக்களும் இராணுவத்தை வெறுக்கத் தொடங்கினர். அரசியல் ரீதியாக மக்களை திரட்டுவது பற்றிய எவ்வித முனைப்பும் புலிகளுக்கு இருந்ததில்லை. ஆனால் ஏதோ தாம் அரசியல் நடத்துதவாக காட்டிக் கொண்டாலும் எல்லாம் தலைவருக்கு தெரியும்> தலைவர் பார்த்துக் கொள்வார்> எல்லாம் தலைவரின் வழிகாட்டலில் தான் நடைபெறுகின்றது. இவ்வாறு ஒரு வெற்று மாயையை புலிகளின் தலைவரைச் சுற்றியே புலிகளின் அரசியல் அறிவு கட்டமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்கான தேவை என்பது இருந்த போதும் ஈழப்போராட்டம் என்பது தன்னியல்பாக வளர்ச்சியடைந்தது அல்ல. 1983 பின்னரான நிகழ்வில் இந்தியா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடாது. இயக்கங்களை வீங்கி வெடிக்கச் செய்தது. 1987 பின்பகுதியில் இந்தியராணுவத்துடனான மோதல்கள் கூட புலிகளை வளர்த்தே விட்டது. அரசியல் கருத்து ரீதியாக புலிகள் இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கான வெகுஜன போராட்ட கட்டமைப்பை உருவாக்கவில்லை. இழப்புக்களை ஏற்படுத்தியே புலிகள் மக்கள் தம்பக்கம் திருப்பினர். இந்திய இராணுவம் செய்த கொலைகளுக்கு ஈடாக புலிகளும் கொலைகளைச் செய்தனர். பழிகளை மற்றவர்கள் மீது போட்டனர். இதன் பொருள் இந்தக் காலத்தில் இருந்த நிலவரத்தில் அப்பழுக்கற்ற சக்திகள் இருந்ததாக கூற முடியாது. அன்றைய காலத்தில் இருந்த சக்திகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் அனைத்துச் சக்திகளின் கைகளிலும் இரத்தம் தோய்ந்தே இருந்தது.

வழமையாக இவ்வாறு ஒரு பகுதியை இராணுவம் நெருக்குதல் கொடுத்தால் வேறுபகுதியில் அரசபடைகளின் கவனத்தை திசை திருப்புவதற்குகாக தாக்குதல்களை நடத்துவர். ஆனால் கிளிநொச்சி படைகள் வசம் வரும் வரையில் பாரிய திசைதிருப்பும் தாக்குதல்களை நடத்தவேயில்லை. இனிவருங்காலத்தில் வரவு செலவை கணக்கை காட்டுகின்ற போது எவ்வளவு தமிழ் மக்கள் படைகளால் கொல்லப்பட்டார்கள் என்பது மறைக்கப்படும் அல்லது மறக்கப்படும். ஆனால் எவ்வளவு இராணுவச் சடலங்கள் தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டது. எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்பது பற்றிய வரவுதான் பிரச்சாரத்தின் போது காட்டப்படும். இவை ஒன்றும் கற்பனை அல்ல உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் சீலன் ஆனந்தன் ஆகிய இருவர் சுடப்பட்டு இறக்கின்றார்கள். அந்தவேளை இறந்தபோராளிகளின் துப்பாக்கியை பக்குவமாக தலைமையிடம் ஒப்படைக்கும் படி சீலன் கட்டளை இட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. விக்ரர் கொலை செய்யப்பட்ட வேளையில் இராணுவத்தின் பிணங்களும்> தளபாடங்களும் முன்வைக்கப்பட்டு கொலை மறைக்கப்பட்டது. இவ்வாறு பலநூறு சம்பவங்களை குறிப்பிடலாம்.

இன்று புலிகளின் தலைமையும்> முழு உறுப்பினர்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருப்பதாக கொள்ள முடியாது. இவ்வளவு நெருக்கமான இடத்தினுள் பிரபாகரன் இருப்பாராயின் அவர் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரிய வந்திருக்கும். இவ்வாறு நெருக்கமான இடத்தினுள் பிரபா இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. இவ்வாறு இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் பிரபா இருக்கும் இடம் நோக்கியே விண்வெளிப் படங்களின் உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும்.

ஆனால் அரசைப் பொறுத்தவரையில் தற்கொலைத் தாக்குதலில் இருந்து தப்பிய சரத்பொன்சேகா> ராஜபட்சே ஆகியோரின் பழிவாங்கும் படலம் இந்திய ஆழும் வர்க்கத்தின் ஆசியுடன் நடத்தப்படுகின்றது. அரசிற்கு தெரியும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் தலைவர் இல்லை என்பதும் எவ்வாறெனினும் இலங்கை முழுவதுமான நகரங்களை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதே அரச பயங்கரவாதிகளின் எண்ணமாக இருக்கின்றது. இதற்கு விலையாக தமிழ் மக்களின் உயிர்கள் இருப்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை.

ஆனால் தமிழ் மக்களின் இழப்புக்கள் ஏற்படுத்துவதன் மூலமே புலிகள் தமது இருப்பை ஸ்திரப்படுத்துகின்றனர். புலிகள் மக்களை சுதந்திரமாக இராணுவக் கட்டுப்பாட்டினுள் செல்ல விரும்பியவர்களை செல்ல விட்டிருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை ஆயுதங்களையும் தமது தலைவர்களையும் காப்பாற்ற வேண்டி இன்றைய கொலைகளத்தை புலிகள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

புலகளின் ஊடகங்கள்மக்களை மூளைச்சலவை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. "எமது மக்களின் அரசியல் அறிவு மறைக்கப்பட்டு இழப்புக்களை வைத்தே தமது இருப்பை பேணப்படுகின்றது.

இன்றைய நிலையில் பிராந்திய வல்லரசின்; மேற்கு நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது பொருளாதார நலன்கருதி வரையப்பட்டதாகும். இவற்றை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டவல் இன்றைய அரசியல் நிகழ்வை புரியத்தக்க வகையில் அரசியல் ரீதியாக பலம் கொண்ட ஒரு அமைப்பும் எம்மத்தியில் வேர் ஊன்ற முடியவில்லை.

இவ்வாறு மூளைச் சலவை செய்யப்படுகின்ற மக்களிடம் இருப்பது கோபம்; உலக நடப்பை புரிந்து கொள்ளக் கூடிய அறிவில்லாத நிலை. இந்த நிலையானது விரக்தியை உருவாக்கின்றது. இதனால் மேலும் மேலும் பாசீசம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் இழக்கப்படுவது எமது சகோதரர் அம்மா அப்பா; மாமா மாமி; சின்னம்மா பெரியம்மா; சித்தப்பா பெரியப்பா.

ஆக இழப்புக்குள் உள்ளாவது எமது இரத்தம் இவ்வாறு நித்தம் இரத்தம் சிந்துகின்ற போது மற்றைய விளக்கங்கள் எவையும் நியாயம் அற்றதாக போகின்றது.

வரலாற்றை தவிர்த்த போக்கு இதனால் தான் இன்று இளையோரை போராட்டத்திற்கு தலைமை தாங்கப்படுகின்றார்கள் இதனால் ஏதோ முதிர்ந்தவர்கள் தாமாக வழியை விடவில்லை மாறாக முன்னையவர்களின் உழைப்பை குறிப்பிட்ட ஒரு அதிகாரவர்க்கம் புலம்பெயர்ந்த நாட்டில் உருவாக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் கீழ் இன்றைய இளையவர்கள் அதிகார வர்க்கத்திற்கு ஊழியம் செய்ய மறுவுற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவைகள் தேசத்தில் இருந்து சிந்தப்படும் உதிரத்தை மூலதனமாகக் கொண்டு உரம் போடப்படுகின்றது.

இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே."



புலியெதிர்ப்பாளர்கள்

புலிகள் மற்றையது புலியெதிர்ப்பணி என இருதுருவங்கள் இருக்கின்றன. இவர்களைத் தவிர்த்தி தனியே ஒரு நிலைப்பாடு எடுக்க முடியாதா? அல்லது அவ்வாறு எடுப்பது தறவா? ஏனெனில் இன்றைக்கு மக்களை கொல்பவர்கள் அல்லது கொல்ல துணையோகின்றவர்கள் எல்லோரும் தத்தம் பக்கம் நிற்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர்;. இவற்றை தவர்த்தி இருப்பவர்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதே யதார்த்தம்.

புலிகள் சகோதரப்படுகொலையை மேற்கொண்டு தமது தலைமைதான் தமிழ் மக்களின் ஏகதலைமை என வலிந்துதினிக்கப்பட்டது. கருத்துத் திணிப்பானது சமூகத்தில் சுதந்திரமாக கருத்துருவாக்கத்திற்கு சாவுமணி அடித்ததது. இதன் விழைவு இன்று புலிகள் முடக்கப்பட்ட நிலையில் மக்கள் சுதந்திரமாக ஒரு போராட்டத்தை நடத்த முடியாத நிலையில் தான் இருக்கின்றனர். இந்த அவலத்திற்கு புலிகளே பெரும்பொறுப்பாகும். அவ்வாறு யாரென்றாலும் மக்கள் நலனில் இருந்து கருத்துக் கூறுமிடத்தில் ஏதோவொரு துருவத்தினுள் முத்திரை குத்தப்பட்டு சேறடிக்கப்படுகின்றது. புலிகள் எவ்வாறு ஏகம் என்ற ஒன்றை நிலையில் மாற்றுக்கருத்துக் கொண்டோரை அரசியல் அரங்கில் இருந்து அன்னியப்படுத்தினார்களோ இன்று புலியெதிர்ப்பாளர்கள் மக்கள் நலன் கொண்ட எந்தச் செயற்பாடும் புலிகளுக்கு சார்பானது எனக்கூறுகின்றது.

"பாசிசப்புலிகளும் தவறுஇ பேரினவாதமும் தவறு என்று சீமையில் இருந்து கொண்டு சித்தாந்தம் பேசும் இவர்கள் தாயகம் சென்று தனித்துவமான ஒரு அமைப்பை கட்டியெழுப்ப வேண்டியதுதானே. பாசிசப்புலிகளையும்இ பேரினவாதத்தையும் எதிர்த்து வடக்கு கிழக்கில் செயற்பட எண்ணியிருந்த சோசலிச சமத்துவக்கட்சி உறுப்பினர்கள் எதிர் கொண்ட மரண அச்சுறுத்தலை இவர்கள் மறந்துதான் போவார்களா?... அவர்களது முயற்சிகளை பாசிசப்புலிகள் ஒட்ட நறுக்கிஇ அந்த அமைப்பின் உறுப்பினர்களை கொன்றொழித்த வரலாறுகளை இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். "hவவி://றறற.pயயசஎயi.நெவ/pயநப.002002.hவஅ" இனவாத அரசை ஏற்றுக் கொள்ளும்படி புலியெதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஓரு விடுதலை அமைப்பு என்பது சமூகத்தில் இருந்து தனது தேவையை நிவர்த்திசெய்யும் பொருட்டு உருவாகப்படுவது. அதனை புலம்பெயர்மண்ணில் இருந்து ஒன்றை உருவாக்க முடியாது. வரலாற்றின் தேவையின் நிமிர்த்தம் உருவாக்கப்படுவதற்கு அல்லது தலைமை தாங்குவதற்கு வானத்தில் இருந்து இறங்க வேண்டிய தேவையில்லை.

தமிழ் மக்களுக்கான எதிர்கால தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் இதனை புலியெதிர்ப்பாளர்கள் முன்வைப்பார்களா? அரசு என்ன தீர்வுத் திட்டத்தை வைத்திருக்கின்றது என்பதை பார்க்கும் முன். புலியெதிர்ப்பாளர்கள் எவ்வகையாக தீர்வை வைத்திருக்கின்றனர் என்பது மக்களுக்கு தேவையானதாகும். "அரைகுறைத்தீர்வுகளை ஏற்பதா என்று நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு மாறாக யுத்தத்தை நீங்களே ஊக்குவித்தும் வந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகின்றது. " சரி கிழக்கு மாகாண அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிள்ளையான் வரி> மாகாணசபையின் பொலீஸ்படை வேண்டும் எனக் கோரிக்கை இட்டார். இதனை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டதா? இதையேதான் வரதராஸ பெருமாள் 1990களில் கூறிவிட்டு கப்பலில் சென்றார். (வட>கிழக்கு சபை கலைப்பிற்கு புலிகள் காரணம் ) ஆக எதிரியானவன் தான் ஒடுக்கும் மக்களுக்கு எவ்வாறு நியாயமான தீர்வை முன்வைக்கும் என நம்பமுடிகின்றது.

கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என கிழக்கின் விடிவெள்ளிகளினால் போராட முடிந்ததா? இதற்கு பதிலாக என்ன செய்கின்றனர். கிழக்கின் மானமிகுதலைவர் இனவாதிகளுடன் சங்கமமாகின்றார். ஒரே தலைவன் ஒரே கட்சி கூறிவிட்டு "ஃலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் இந்த வாரத்திற்குள் அறிவிக்கவிருப்பதாக ரி.எம்.வி.பி தலைவர் வி.முரளிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். பிராந்திய அடிப்படையில் அரசியல் கட்சிகளை வைத்திருப்பதை நான் விரும்பவில்லை. தேசிய அடிப்படையில் ஓர் அரசியலுக்குள் எமது மக்களை நுழைத்து அதற்கான அங்கீகாரத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். எனவே இந்நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் உரையாடி மேற்படி தீhமானத்தை எடுத்துள்ளோம். இது எமது மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பாக அமையுமெனவும் கருதுகின்றேன். அதேநேரத்தில் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு இதுவொரு சிறந்த முன்னுதாரண நடவடிக்கையாக விளங்க வேண்டுமென்பதையும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முரளிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். இதேவேளை தமது அமைப்பிலுள்ள சுமார் 1300பேர் படைகளில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்> 200பேர் வரையில் படைகளில் இணைக்கப்பட்டு தமது முதல்மாத வேதனத்தைப் பெற்றிருப்பதாகவும் முரளிதரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்." கிழக்கின் விடிவெள்ளிகள் தமது கதிரைகளை பாதுகாப்பதில் அண்ணன் பிரபாவிற்கு ஈடாக செயற்படுகின்றனர்.

புலிகளினால் மாத்திரம் அல்ல மற்றைய கட்சிகளும் ஒருவருக்கொருவர் குழிதோண்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். "தலையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இப்படுகொலை அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் அவருடன் இணைந்து அரசியல் நடாத்தும் உறுப்பினர்களுக்கும் எதிராக செயற்படும் கருணா அம்மானின் ஆதரவாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டுநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. " வன்னியில் தமிழ் மக்கள் தமது சந்ததிகளை இழந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வேளையில் களையெடுப்புக்களை தமிழ்கட்சிகளே தமக்கிடையே செய்து கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்பணியும் மக்களை சுயமாக சிந்திக்கவிடாது மரணபயத்தை ஏற்படுத்துகின்றனர். கடத்தல்> கப்பம்> காணாமல்போதல் என்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வன்னி மக்களைபுலிகள் விடுவிக்க வேண்டும் என்று ஊர்வலம் யாழில் நடைபெற்றது. அந்த ஊர்வலம் சுதந்திரமாக அணிதிரட்டப்பட்டது எனக் கொள்ள முடியுமா? அங்கு உள்ளவர்கள் இ.பி.டி.பி அல்லது இராணுத்தின் தயவுடனேயே அங்கே நின்மதியாக இருக்க முடியும். இதன் நிர்ப்பந்தத்தால் மக்கள் ஊர்வலத்திற்கு வந்திருப்பர். இவ்வாறே புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருப்பவர்களும் புலிகளுக்கு இசைந்தே நடக்க வேண்டிய நிலை இருக்கின்றது. எவ்வித அழுத்தங்கள் இல்லாது தாமாக தேர்வு செய்யக் கூடிய உரிமையை மக்களுக்கு அனைவரும் கொடுக்க வேண்டும்.



புலியெதிர்ப்பு இணையங்கள்.....

புலியெதிர்ப்பு இணையங்கள் அரசிற்கு விசுவாசமாக நடப்பதில் அவர்களை விட்டால் யாரும் இல்லாத வகையில் சிறிலங்கா அரசிற்கு பிரச்சார பீரங்கிகளாகச் செயற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் புலியை யார் எதிர்க்கின்றார்களோ அவர்கள் எல்லோரும் நண்பர்கள். இவர்களுக்கு சோ> ஜெயலலிதா> இந்துராம்> தமிழககாங்கிரஸ் எடுபிடிகள்> வணக்கத்துக்குரிய சுப்பிரமணிசாமி ஈடாக பலரும் இவர்களின் நட்புவட்டமாக இருக்கின்றது. சில தலையங்கங்களையும்> செய்திகளையும் பார்ப்போம்..

நீதிக்குத் தலைகுனிவு!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போதுஇ இங்கே நடப்பது மக்களாட்சிதானாஇ இது நல்லாட்சியா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

தற்கொலைஇ தமிழ்ச் சமூகம்இ தமிழீழப்போராட்டம்!

சீமான் கைது எப்போது? தமிழக அரசு பதில்

மக்கள் ரிவிக்கு தடை என்று மக்கள் ரிவி கிளப்பிவிட்ட புரளி

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் : ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் குற்றச்சாட்டு

இந்தியாவையும்இ பிரித்தானியாவையும் சாதகமாகக் கையாண்ட இலங்கை

இலங்கையில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் அவல நிலை குறித்து ஐ.நா. கவலை: விடுதலைப்புலிகள் மீது கடும் கண்டனம்

hவவி://றறற.அயபயஎயடல.உழஅ/தமிழகப் பயங்கரவாதிகளான விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் தீக்குளித்து மரணம்; கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு சம்பவம்

இவ்வாறு இவர்களுக்கான கருத்து புலியை எதிர்ப்பதும்> புலியை எதிர்க்கின்ற அனைவரையும் தமது ஒத்த கருத்துக்குரியவர்களாக இணைத்துக் கொள்வதாகும். இவ்வாறே தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்ததாவது.

கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றார்கள் என கிறிஸ்தவ அமைப்புக்களிடமும்> இந்துக்கள்தாக்கப்படுகின்றார்கள் என பா.ஜ.க தலைவர் அத்வானியிடமும் முறையிட்டதாக கூறினார் என்றும் இதன் மூலம் ஈழமக்களுக்கு ஆதரவான சக்திகளை திரட்ட முடியும் எனவும் கூறினார். பா.ஜ.க மதவாதக் கட்சியாகும். இவர்களின் எந்தச் செயற்பாடும் தேர்தலை சார்ந்ததாகவே இருக்கும். இவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் கூட இன்றைக்கு என்ன நிலை இருக்கின்றதோ அவ்வாறான நிலைதான் இருந்திருக்கும். இவர்கள் எதிரியார்? நண்பர் யார் என்று திடமாக இருக்காது சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கின்றனர்.

பா.ஜ.க ஒரு ஆழும் வர்க்கத்தை சேர்ந்த ஒரு கட்சியாகும் இவர்கள் எவ்வாறு ஒரு தேசிய இனத்திற்கு ஆதரவாக செயற்பட முடியும். இந்தியாவில் இருக்கின்ற தேசிய இனங்களின் உரிமையை இந்த மதவாதிகள் தயாராக இருக்கின்றார்களா? தமது நாட்டிலே உரிமைக்காக போராடும் மக்கள் மீது கரிசனை கொள்ளாத அமைப்புக்கள் எமது விடுதலைகக்காக குரல் கொடுப்பதானது அவர்களுடைய அரசியல்நாடகத்திற்கு நாம் அமைத்துக் கொடுக்கும் களமாகும். அரசியல் நடிகர்கள் களங்கள் கிடைக்கும் போது வீரவசனம் பேசிவிட்டுப் போய்விடுவர். நடைமுறையில் இவர்கள் எல்லோரும் ஒடுக்குமுறையாளர்கள் தான்.

இவ்வாறாக தமிழகபாசீஸ்டுகள் எல்லோரும் புலிகளை எதிர்க்கின்றார்கள் என்பதற்காக புலியெதிர்ப்பாளர்களின் நண்பர்களாக இருக்கின்றனர். இந்த அரசியல் கோமாளிகளின் கருத்துக்களை புலியெதிர்ப்பை நிலைநிறுத்துவதற்காக துணைக்கு அழைக்கப்படுகின்றனர். சோ> ஜெயலலிதா> இந்துராம்> தமிழககாங்கிரஸ் எடுபிடிகள்> வணக்கத்துக்குரிய சுப்பிரமணிசாமி மனித குல விரோதிகளாக இருக்கின்றார்கள் இவர்களிடம் இருப்பது சாதியத்திமிருடன் கூடிய ஆணவக் கருத்துக்கள்.



புதிய பாதை ஒன்று இல்லையா?

இன்றைய நிலையில் எந்தச் சக்திகளின் பின்னால் செல்லமுடியதா நிலைதான் இருக்கின்றது. தமிழர்களே தமிழர்களே இறுதிப் போராட்டத்திற்கு வாருங்கள் என்ற அழைப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இவர்கள் போடும் யுத்தவெறியில் இருந்து மக்களை காப்பாற்றுவது தான் முதன்மையான கடமையாகும். இனவெறி அரசின் பேச்சாளர் கூறிவிட்டார் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் எல்லாம் நியாயப்படுத்தப்பட்ட தாக்குதல் தளங்கள் என. இவ்வாறு இருக்கையில் புலிகள் தமது தலைமையை முதலில் காப்பாற்றியிருப்பார்கள். ஆனால் இங்கு அகப்பட்டிருக்கும் மக்கள் அங்கு இருப்பதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன. புலிகளின் நெருங்கிய உறவினர்கள்> காயப்பட்ட போராளிகள்> தடுத்துவைக்கப்பட்ட மக்கள்> இராணுவத்திடம் சென்று சாவதை விட புலியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்துவிட்டு போவோம் என மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். புலிகளின் அடிமட்டப் போராளிகளைக் காப்பதும் முக்கியமான கடமையாகும்.

இன்றைய ஊடகங்கள் எல்லாம் எதிர்நிலைக்குச் செல்கின்ற வழிமுறைகளில் தான் பிரச்சாரங்களை செய்கின்றன. மக்களில் பலவிதமான நிலையில் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.

"தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால் பல்வேறுபட்ட அனுபவங்களையும்; சோகம்; பலதுன்ப துயங்களினால் ஏற்பட்ட வடுவென்பது மக்களிடையே ஆழ வேர் ஊண்றியுள்ளது. இவ்வகையான கசப்பான உணர்வு என்பது அனைத்து மக்கள் பிரிவினரிடையேயும் இருக்கின்றது. இந்த சகப்புணர்வை தீர்ப்பது என்பது நீண்ட செயற்பாடுகள் மூலமாகவே சாத்தியமாகும்.

பிரதானமாக தமிழ் மக்களிடையே இருக்கின்ற புலியெதிர்ப்பாளர்களை எடுத்துக் கொள்வோம் அல்லது
அரசின் மீதுள்ள நம்பிக்கையீனத்தால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் இருக்கின்ற மக்களை எடுத்துக் கொள்வோம் அல்லது
முஸ்லீம் மக்களை எடுத்துக் கொள்வோம்
சிங்கள மக்களை எடுத்துக் கொள்வோம்
அல்லது சில தனிநபர்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வோம்.
இவைகள் அனைத்தும் ஏதோ ஒரு சிந்தனை அல்லது ஒரு கருத்துச் சார்ந்தே இருக்கின்றது.

எல்லோரும் உலகத்தை ஒவ்வொரு விதத்தில் உலகத்தைப் பார்க்கின்றனர். இந்தப் பார்வையான அவர் அவர் சிந்தனைக்கு ஏற்றால் போல் ஒவ்வொருவரும் திடமாக தமது கருத்துக்களில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் இந்தக் கருத்துக்களில் உள்ள மனிதவிரோதத்தன்மைகளை களைந்தெடுப்பது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாகும். மனிதவிரோதத் கருத்துக்கள் என்ன என்பது பற்றிய திறந்த விவாதம் என்பது தேவையானதாகும். இவற்றில் இருந்துதான் சமூகத்திற்குகான கருத்துக்களை சென்றடைய முடியும். "

இங்கு மக்களிடம் தோன்றியுள்ள ஐயப்பாட்டை தீர்க்கவல்ல ஒரு வேலைமுறையை மேற்கொள்வதற்கா நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வகையாக வேலைகளில் ஈடுபடுவது என்பது தேவையானதும் அவசியமானதாகும். இவற்றை தவிர்த்து விட்டு யுத்தத்தின் முனைப்புக்கு கொம்புசீவும் நிலையானது அபாயகரமானதாகும். நாம் புலிகளின் பக்கமோ ஒடுக்குபவன் பக்கமோ நிற்க முடியாது. நாம் ஒடுக்குமுறையாளர்களுடன் துணைபோக முடியாது. ஆழவேர் ஊன்றியுள்ள கசப்புணர்வை அகற்றப் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். எம்முன்னே இருக்கும் கடமைகள் அனைத்து இனங்களுக்குமான ஜனநாயக உரிமையை அங்கீகரிக்க வேண்டிப் போராட வேண்டியிருக்கையில் யுத்தமானது. இன்னும் இன்றும் பாசீசத்தை ஆழவேர் ஊன்றி வளர்ப்பதாகவே இருக்கின்றது. இன்றைய மக்களிடத்தில் தோன்றியிருப்பது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இழப்புக்களினால் ஏற்பட்ட தன்னெழுச்சியான இரக்க உணர்வு இதில் இருந்து பெறப்படும் ஒவ்வொரு சிறிய சக்தியும் பாசீசத்தினை உயிரூட்டவல்ல விழைபொருட்களே.

" புலிகளின் தளங்களை அழிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்த முடியாது. புலியை முடியடிப்பது என்பது பரந்துபட்ட மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியினால் மாத்திரம் தான் சாத்தியமாகும். சில தளபாடங்களையும்> தளங்களையும் கைப்பற்றுவதன் மூலம் புலிகளை அழிக்க முடியாது. புலிகள் பழைய மாதிரி கெரில்லா போராட்டத்திற்கு தயாராக இருக்கின்றனர்.
இதில் யுத்தத்தை ஆதரிப்பது கூட புலியை வளர்த்தெடுக்கும் முறையோயாகும். இன்று நடைபெறும் யுத்தம் கூட புலியை முழுமையாக அழிக்கும் நோக்கம் கொண்டில்லை. மக்கள் எவ்வளவு அழிகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு புலம்பெயர்நாடுகளில் புலியைப் பலப்படுத்தும்.

புலியெதிர்ப்பாளர்களினால் அரசின் இனவழிப்பிற்கு உதவுவதன் மூலம் மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது.
இவற்றை எல்லாம் அம்பலப்படுத்தும் ஒரு போராட்டவடிவமே அவசியமாகும். இவற்றிற்கும் பாசீச சக்திகளை ஆதரிப்பதற்கும் நடுவே நிறையவே மாறபாடு இருக்கின்றது. இன்றிருக்கும் தனிமனிதனின் பழியுணர்ச்சி உட்பட இனங்களுக்கிடையே இருக்கின்ற ஐயப்பாட்டை தவிர்ப்பதான செயற்பாடுகளே மாற்றத்தை கொண்டு வரும்.

இதனால் யார்ரெல்லாம் மக்களின் எதிரிகளாக இருக்கின்றார்களோ அவர்களை நோக்கிய கோரிக்கைகள் முக்கியமானதாகும். இந்த இடத்தில் அனைத்து பிரிவினரையும் மக்களின் எதிரிகளாக வரையறுக்கப்படுகின்றது.

-புலிகள்
-புலியெதிர்ப்பாளர்கள்
-சிறிலங்கா அரசும் அதன் கூட்டாளிகளான இந்திய மேற்கு அரசுகளுமாகும

அல்லல்படும் மக்களுக்கு தேவயயானது¨
யுத்த நிறுத்தம்
நிவாரணம்
படைகளை முடக்குவது
தமது உறவுகளுடன் மீள்இணைவது
அரசியல் பேச்சுவார்த்தையை தொடங்குவது
புலிகள் ஏகக் கொள்கையை விடு
புலிகள் மக்களை கேடயமாக வைத்துக் கொள்ளாது அவர்களை விடுத்து மாற்றுவழிகளில் போராடு

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...