Friday, February 13, 2009

இது,புலியினது இருப்புக்காகச் செய்யப்படும் கொலையே!

முருகதாசன்: சுவிஸ்சர்லாந்து-ஜெனிவாவில் கரும்புலித் தீக்குளிப்பு!



"ஒரு தமிழன்-ஒரு சிங்களவன் இருக்கும்வரை எஜமான விசுவாசம்
இருக்கும்-யுத்தம் நடக்கும்?தீக் குளிப்பு ஜெனிவாவரை ஓங்கும்,ஊரர் பிள்ளைகள்
உயிரோடு பிரபாகரன் அரசியல் ஈழத்தை விடுவிக்கப்போகிறது-நம்புங்கள் நலமடித்த
தமிழர்களே!"

இன்றைய யுத்த முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,யுத்தத்துள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது.நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள், தம் முன் விரிந்து கிடக்கும் இந்த யுத்த முனைப்பைக் கண்டு, தம்மைத்தாமே நொந்து சாகிறார்கள்!புலிகள் தம்மைக்காப்பதற்கான இறுதி முயற்சியாக மக்களைப் பலிகொடுப்பதில் தமது இருப்புக்கான அனைத்து வகைப் பிரச்சாரங்களையும் செய்து மக்களது குருதியில் நீந்துகிறார்கள்-ஊரார் குழந்தைகளைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள்!இதையும் புலம் பெயர் ஊடகங்கள் ஊக்கப்படுத்திப் புலியின் நாசகார அரசியலை தமிழீழ விடுதலையின் பெயரால் அங்கீகரிக்கிறார்கள். இவர்களை வரலாறு தண்டிக்கும்!

வன்னியெங்கும் மக்களின் உடல்கள் சதைத் துண்டுகளாகச் சிதறுகிறது.அதைத் தத்தமது அரசியலுக்கேற்றபடி புலிகளும்,இலங்கை அரசும் பயன்படுத்துகிறது.இதையும் முழுவுலகமும் பார்த்து வருகிறது-நாமும் கண்ணுற்று நொந்துகொள்வதற்காக G-TV வன்னி மக்களின் மரணவோலத்தை புலம் பெயர் மண்ணுக்கு எடுத்துவருகிறது.அது, தமது எஜமானர்களின் அரசியலை முன்னெடுப்பதில் மிகக் கவனமாகக் காரியமாற்றுகிறது.அழிந்துபோகும் மனிதர்களின் அந்தச் சிலநிமிட உயிர்வாழும் ஆசையின் ஓலம் இங்கே அரசியலாகிறது!அற்ப மனிதர்களின் அழுகுரல் ஒருசில மனிதர்களின் பெருவிருப்புக்குத் தோதாக அரசியலாகிறது.


நேற்று, ஜெனிவாவில் தீயிட்டு மாண்டுபோன முருகதாசனின் மரணமென்பது எங்ஙனஞ் சாத்தியப்படுத்தப்பட்டது?


அவரது மரணத்துள் கண்டுகொள்ளதக்க அரசியல் புலியினது இருப்போடு, புலிகளினது கரும்புலித் தீக்குளிப்பாகப் பார்க்கப்படமுடியாதா?


(முருகதாசனின் இப்படம் தமிழ்நெற்றிலிருந்து எடுக்கப்பட்டது.எனினும்,இப்படத்தை தமிழ்நெற் இப்போது கழட்டிவிட்டது.இது ஏனெனப் புரியவில்லை!)


இன்றைய புலம்பெயர் தமிழர்கள், ஈழத்து உறவுகளுக்காக இங்கே உயிர் துறந்துவிடக்கூடியவொரு சூழல் நிலவுகிறதா?

அதுவும்,இலண்டனிலிருந்து ஜெனிவாவுக்குப் பிரயாணித்து, ஐ.நா.முற்றில் தீயிட்டுத் தற்கொலை செய்த பட்டதாரி முருகதாசன் புலிகளின் வளர்ப்பில் உருவாகியவர் என்றால் தப்பாகுமா?இவர், கரும்புலிக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதில் கணிசமான சாத்தியம் உண்டு!

முருகதாசனைப்போன்று, புலிகளினது கரும்புலி உறுப்புகள் பலர் ஐரோப்பாவில் கல்விகற்றபடி தமது அமைப்பினது கட்டளையைச் செவ்வனவே முடிக்கும் நிலையில் இருப்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே அறியக்கூடியதாக இருந்தது.இத்தகைய இளைஞர்கள் ஐரோப்பிய தேசங்கள்தோறும் ஏதோவொரு வடிவில் உலாவருகிறார்கள்.இவர்கள் செய்யும் இவ்வகை அரசியலைப் பலரூபங்களில் இனிக் காணமுடியும்.இது,இன்னும் எத்தனை தமிழர்கள்தம் தலைகளை உருட்டுமோ எவரறிவார்-அந்த யுத்தப் பிரபா பிரபுவைத் தவிர?

இத்தகைய பலியெடுப்புகள் ஓருபோதும் நமக்கு விடுதலையைப் பெற்றுத்தரமுடியாது!-இது,சத்தியம்!!

கரும்புலித்தாக்குதலுக்குத் தமது உயிரைக்கொடுக்கும் போராளிகளாக நமது குழந்தைகளைத் தயார்ப்படுத்திய புலித் தேசியம், அதே கரும்புலிகளைப் பயன்படுத்தித் தீயிலும் வெந்து சாவென்பது இன்றைய யதார்த்தமாக விரிகிறது!இத்தகைய நடாத்தைகளுக்கூடாகத் தமது இருப்புக்கேற்றவொரு அரசியலை முன்தள்ளும் புலிகளது வங்குரோத்துப் போராட்டம் இன்னும் எத்தனை வகையில் நமது மக்களை அழிக்கும்?இதையும் எத்தனைபேர்கள் தியாகத்தினதும்,தமிழீழத்தினதும் பெயர்களால் மௌனித்து வரவேற்க முடியும்?

இத்தகைய நடாத்தைகளின்பின்னே நாம் இனங்காணத்தக்க நாசகார அரசியலின் விளைவு,நமது மக்களைப் பலியெடுப்பதற்கானவொரு புலித்தேசியமாக உருவாகிய இந்த மக்கள்விரோதப்போராட்டம்-புலித் தலைமையின் இருப்போடு சம்பந்தப்பட்டவொரு கொலைக் களத்தைத் திறந்து, மக்களை வேட்டையாடுவதிலும்,சிங்கள அரசுக்குக் குண்டுபோட்டுக் கொல்லுமொரு வாய்ப்பைத் திட்டமிட்டுத் திறுந்து வைத்திருப்பதுமாக உணரமுடியும்.புலிகளது மிக மோசமான இலக்கை எந்தத் தேசியவினவொடுக்குமுறையோடும் சம்பந்தப்படுத்தி நியாயப்படுத்த முடியாது.இது, திட்டமிட்ட கொலை அரசியல்.கடந்தகாலத்தில் எத்தனையோ உயிர்களைப் பலியெடுத்த புலிகளது போராட்டம்,இப்போது இறுதிக்கட்டமாகவும் இளைஞர்களைக் கொல்லுவதில் அவர்களுக்குத் தியாகிகள் பட்டத்தைத் தயாரித்துக் கொடுக்கிறது.

போராட்டச் சூழலில் இளைஞர்களைத் திட்டமிட்டுக் கரும்புலிகளாகத் தயாரித்த புலித்தலைமை, தமது பிள்ளைகளைத் தவிர்த்து அனைத்துத் தமிழரின் குழந்தைகளையும் கரும்புலியாகக் கருதிக் களத்துக்குப் பிடித்துச் சென்று கொன்றது.இதிலொரு பகுதியைத் திட்டமிட்டு அறுப்புக்கு வளர்த்த கிடாவாக வளர்த்து இப்போது பல வடிவினில் பயன்படுத்தி வருகிறது.

முட்டாள்த் தலைவன் போடும் கட்டளைகளை செவ்வனவே செய்வதற்கென ஒரு கூட்டத்தைத் தயாரித்து, அதையே இப்போது கணிசமான வகைகளில் வெவ்வேறு இலக்கு நோக்கிப் போராடத் தூண்டிக் கொல்வதில் பிரபாகரனின் புத்தி நகருகிறது!இதுவெல்லாந் தியாகமென ஓலமிடும் காண்டுமிராண்டிகளாகப் புலிப் பினாமிகள்போடும் ஒப்பாரியை மனிதப் படுகொலையைத் திட்டமிட்டுச்செய்யும் மிக கொடியவொரு சூழலின் பிரதிபலிப்பாகவே நாம் இனம் காணவேண்டும்.

இது,புலியினது இருப்புக்காகச் செய்யப்படும் கொலையே!

வன்னியில் மக்களின் சாவைத் திட்டமிட்டு நிகழ்த்திய புலிகள், இப்போது புலம்பெயர்ந்த மண்ணில் தமது கரும் புலிகளை வைத்தே தீக் குளிக்கவைத்துத் தியாக அரசியலென உணர்ச்சிகளைத் தூண்டி, உலகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.வன்னியில் சாகும் மக்களைக் காப்பதற்கான அரசியலை முன்வைக்க முடியாத புலிகளோ அவர்களைக் கொன்றுகுவிக்கும் சிங்கள அரசை ஊக்கப்படுத்திய செல் நெறியில் மக்களை இருத்திவைத்தபடி, இங்கே தம்மால் உருவாக்கப்பட்ட கரும்புலிகளை வைத்துப் புதிய "வெகுஜனப் போராட்டத்தை"ச் செய்து காட்டுகிறார்கள்.உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு வந்த பல தமிழ் மாணவர்களில் சிலர் புலிகளது நோக்குக்கேற்றபடி கல்விக்காக மட்டும் அனுப்பப்பட்டவர்களல்ல.மாறாக, அவர்களது திட்டமிட்ட நோக்கை நிறைவேற்றத்தக்க முறைமைகளில் அவர்கள் எப்போதும் தமது உயிரைக்கொடுக்கத்தக்கபடி வளர்க்கப்பட்டு கல்வியோடு இணைந்தனர்.இப்போது,புலிகளது நோக்கம் நிறைவேற்றத் தக்க தருணங்கள் நெருங்கி வருவதால் தமது பலிக் கடாக்களை வைத்துத் தீயிலும் கருக்கிக் காட்டுகிறார்கள், தமிழீழ விடுதலையென்றால் என்னவென!.இத்தகைய காயடிக்கப்பட்ட இளைஞர்கள் இங்கே இன்னும் பல கொலைகளைச் செய்து முடிப்பர்.அவர்கள் மாற்றுக் கருத்துடையவர்களை, மற்றும், புலிகளால் புலம்பெயர் மக்களிடம் அறவிடப்பட்ட பெருந்தொகை பணத்தை நிர்வாகிக்கும் அவர்களது பினாமிகளையும் இவர்களை வைத்தே கண்காணிக்கின்றனர்.இதன் உச்சக்கட்டம் புலிகளின் பினாமிகளுக்கும் மரணத் தண்டனையை நிறைவேற்றும்.

மக்களைப் பலியெடுப்பதற்கானவொரு அரசியலைத் தேசியத்தின் பெயரால் முன் தள்ளிய புலிகளது தெரிவு,இன்றுவரை மனிதவுயிர்களைத் துஷ்பிரயோகித்து வருகிறது.தமது அரசியல் எதிரிகளிலிருந்து மற்றும் தமது இருப்புக்கான அரசியல்வரை ஊரார் குழந்தைகளைப் பலியெடுக்கும் புலிப்பாசிசத்தின் அழிவிலாவது நமது மக்கள் வேறொரு வகையானவொரு அரசியலைத் தமதாக்க வேண்டும்.இதைக் குறித்தான வகைகளில் மக்களது இன்றைய இழி நிலைமைகளில் புலியினது பங்கு என்ன-சிங்கள அரசினது பங்கு என்னவென்பது பேசப்பட்டாகவேண்டும்!

இப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது.சிங்களப்பாசிச இனவாத அரசோ புலிகளைக் கொல்லுவதாகச் சொல்லித் தமிழ்பேசும் மக்கள் அனைவரையுமே கொல்லுகிறது.வன்னியில் புலிகளின் கோட்டைகளையெல்லாம் மிகவிரைவாகப் பிடித்த அரசுக்குப் புலிகளைத் தொடர்ந்து கொல்வதில் சிக்கலொன்று ஏற்படுகிறது.அது,மக்களுக்குள் மக்களாகப் புலிகள் பதுங்கிய நிலையில், தனது நடவடிக்கைகளில் புலிகளோடு மக்களும் பெருந்தொகையாக அழிவதை எதிர்கொள்ள அச்சப்படுகிறது இலங்கை அரசு.புலிகளின் மிகக் கேவலமான செயல்களில் மிக முக்கியமானது மக்களைக் கேடயமாகப் பாவிப்பதே.இதுவரை ஆயுதங்களையே நம்பிக்கிடந்த புலிகள்,இப்போது மக்களையே நம்பி உயிரைக்கையில்பிடித்து ஊசலாடுகிறார்கள்.தம்மை எந்தவொரு வெளிநாடாவது காத்துவிடாதாவென ஏங்கிக் கிடக்கிறார்கள்.இதற்காக, ஜெனிவாவில் தமது வளர்ப்புப் பிராணியைவைத்துத் தீயில் கொன்று உலகத்துக்கான கவனயீர்ப்பு அரசியலைச் செய்து பார்க்கிறார்கள்.இது,கரும்புலியினது புதிய வடிவம்.அங்கே,இலங்கையில் கரும்புலிக்கான இராணுவ அங்கி,இங்கே பொதுமகனுக்குரிய-அப்பாவித் தமிழனுக்குரிய வேஷம்!
(A 26-year-old diaspora Eezham Tamil from UK has self-immolated himself to death in front of the United Nations Office at Geneva (UNOG) in Switzerland Thursday night around 8:20 p.m., according to police spokesman Eric Grandgean. The man has identified himself as Murukathasan in a letter left behind by him 10 meters away from the scene, the Police officer said when contacted by a Tamil journalist in Switzerland on Friday. The copy of the letter in English and Tamil, received by Tamil journalists, with the identical name, said: "I believe the flames over my body, heart and soul will help the world community to have a deep human look over the great sufferings of the Sri Lankan Tamils. -Tamilnet)ஆனால்,இரண்டினது தெரிவும் ஒன்றுதாம்!தம்மைத் தாம் கொன்றாவது பிரபாகரனுக்குப் படைப்பதென்பதைத்தவிர இவர்களால் வேறெதுவுஞ் செய்துவிட முடியாது!

இத்தகைய புலிகளது தமிழீழத்தேசிய அரசியல் உலகத்தைத் தரிசிப்பதைப் பார்க்கும்போது உண்மையில் பிரபாகரனுக்கென்ற ஒரு இலக்கு-முட்டாள்தனத்தைத் தரிசிப்பதென்றே-தோன்றுகிறது.இந்த முட்டாள்த்தனத்தின் கடைக்கோடி நிலையென்னவென்றால்-அமெரிக்கப் புதிய ஜனாதிபதி திரு.பாராக் ஒபாமா தம்மைக்காப்பதற்கான சூழல் நிலவுவாதாகப் புலிகள் நம்பியமாதிரித்தாம்!இவ்வண்ணமே, புலிகளின் விசுவாசிகளும் நம்பிக்கிடந்தார்கள்.இத்தகைய நம்பிக்கைக்கு வெளியில் தமிழர்களின் வெளியுலக வாழ்க்கையில்லை!எனினும்,அமெரிக்கா இப்போது புலிகளது இறுதியிடமான "மக்கள் அமைப்புகள்"எனும் நாமங்கொண்ட முகமூடிகளையும் உருவிவிட்டுப் புலிகளைத் தடைசெய்கிறது.அவர்களது ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா புதிய அரசுக்கூடாக நிறைவேற்றும்போது,பாராக் ஒபாமா"கருப்பு வெள்ளையராக"ப் புலிவிசுவாசிகளுக்குத் தென்படுகிறார்.இந்த நிலையற்றாம் "தமிழ்ப் பொதுமகன்"முருகதாசன் தீக்குளிக்க இலண்டனிலிருந்து ஜெனிவா நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.பாவம் அவர்!அப்பாவிகளைக் காயடித்துக் கொல்வதில் புலிகளுக்கு நிகர் புலிகளே!

முருகதாசன் கூறுவதாகச் சொன்ன இறுதி மந்திரமான"தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்"என்பது புலிகள் தம்மைத் தடைசெய்த உலக நாடுகளுக்குள் வேலை செய்வதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாற்றிய வாசகம் என்பது கவனிக்கத்தக்கது.தம்மோடு உலக நாடுகள் தேன்நிலவு செய்தபோது"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்",அது முறிந்தபோது"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என்று தாகங்கள் முகமூடியணிகின்றன.கூடவே,இளைஞர்களைக் கொல்வதிலும் வெவ்வேறு முகமூடிகளைப் புலிகள் தேசியம் சூழலுக்கேற்றபடி தயாரிக்கிறது!முருகதாசனுக்குரிய முகமூடி:"பொதுமகன்".

வன்னியில் சாகும் மக்களைக் காப்பதற்கு நாம் அனைவரும் குரல் கொடுப்பதற்கு முனையும்போதுகூட இத்தகைய கொலைகளையுங் கண்டிக்கவே வேண்டும்.அங்கே,அரசும் புலிகளும் மக்களைக் கொன்று குவிக்கும்போது, புலம் பெயர் மண்ணில் புலிகள் தமது இரத்தக் கறை படிந்த கரத்தால் நமது இளைஞர்களைக் கொல்வதில் முனைப்போடு அரசியல் செய்கிறார்கள்!

தூ...

இப்படியெல்லாம் ஒரு போராட்டம்!

இதையெல்லாம் போற்றிப் பூசிக்கும் ஒவ்வொரு நபரும் கொலைக்காரரே!

இந்தக் கொலைக்காரரிடமிருந்து நமது மக்களைப் பாதுகாப்பதற்கான அரசியல் புலம்பெயர் மண்ணில் அநாதையாகக் கிடக்கிறது.இந்த நிலைமை தொடரும்போது இன்னும் பல முருகதாசன்களைப் புலிகள் ஏலவே தயாரித்து வைத்தபடி, வெவ்வேறு களத்தில் இறக்குவார்கள்.எனினும்,அழிவது பிரபாகரன் குழந்தைகள் இல்லைதானே?ஊரார் குழந்தைகள்தான் சாகிறது,நாம் இப்போதைக்கு மூச்(மௌனிக்கிறோம்-வாளாது இருக்கிறோம் என்கிறோம்) தமிழீழத்தின் பெயரால்!



ப.வி.ஸ்ரீரங்கன்
13.02.2009




9 comments:

Anonymous said...

pooda panni....

Anonymous said...

நீ.... மனிதன் தானா..?? கொலை காற சிங்களவனை கொஞ்சமும் குறைய விடாத உன்னை பெற்ற தாய் வெட்க்கி தலை குனிய வேண்டும்....

நாளை நீ எல்லாம் அனாதையாய இறந்து போவாய் தூக்கி போட ஒரு வீட்டுக்கு ஒரு நாய் கூட வராது...

கொழுவி said...

தீக்குளிப்பின் பெயரால் விளைவது யாதொன்றும் இல்லை. வன்னியில் இறக்கும் மக்கள் தொகையோடு ஒன்று அதிகரிக்கும்.

தனது சாவு எதையாவது சாதிக்கும் என அவர்கள் நம்புவதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவ்வாறேதும் நடக்காது என்பதை தெரிந்து கொள்ளாதவராய் இருப்பார்கள் என்பதை நம்பமுடியவில்லை.

பெரும்பாலும் தற்போதைய அவலத்தில் தனது கையறு நிலையின் மனக்குமைவு தான் இத்தகைய முடிவுகளை எடுக்கத் தோன்றுகிதோ..? (சுவிஸ் போன்ற ஐரோப்பிய தேசங்களில் இச் சம்பவம் மன அழுத்தத்த்தில் ஏதோவொரு போமியா என்றவாறாக திசை திருப்பப்பட்டு முடிக்கப்படும்)

ஆனா என் பின்னூட்டலின் நோக்கம் அதுவல்ல.

போகிற போக்கில் இந்நபரை கரும்புலி என்று சொல்லிப் போகும் உங்களது வக்கிரம் மிக்க வார்த்தைகள் மீதானது.

மக்களுக்கு..... சரி புலிக்கு ஆதரவான இச்செய்கையை செய்பவர் புலி என்ற உங்களது கணிப்பு புலிக்கு எதிரான வேலையை செய்பவர் அரச கைக் கூலி என்ற - புலிவால்களின் வாதத்திற்கு சற்றும் குறைவில்லாதது.

சிறிரங்களை அரச கைக்கூலியாக சித்தரித்து - சிறிரங்கனுக்கும் குடும்பத்தாருக்கும் பொட்டு இட முயற்சிக்கிறார்கள் என்ற உங்களது ஓலத்தின் நேர் எதிர் விடயத்தையே நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

உங்களை அரச கைக்கூலியாக சித்தரிப்பது உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எத்தகைய சிக்கலைக் கொண்டுவருமோ அதற்கு சற்றேனும் குறைவில்லாத சிக்கலை அவரை புலியென முத்திரை குத்துவதால் அவரது குடும்பத்தாருக்கு ( அவர்கள் வெளிநாட்டிலேயே வசித்தாலும் கூட..) ஏற்படுத்தும் என்பது உங்களது மரமண்டைக்குத் தோன்றவில்லையா..?

அப்படி இருக்கலாமோ இப்படி இருக்கலாமோ என்ற கணிப்புகளின் அடிப்படை ஒருபோதும் உண்மையாகாது. ஒருவேளை சிறிரங்கன் சிறிலங்கன் எம்பசியிடமிருந்து காசு வாங்குகிறாரோ என்ற கணிப்பு உண்மையாகாததை போலவே..

----------

புலம்பெயர்ந்த சூழலில் யாரேனும் ஈழத்தமிழர்கள் தீக்குளிக்கும் நிலையில் இருக்கிறார்களா என்று கேட்டிருந்தீர்கள். நல்ல கேள்வி.

நான் கூட வேலையால் வந்தோமா..? வீட்டில் தண்ணியடிப்பதற்கென்றே அமைக்கப்பட்ட பிரத்தியேக bar இல் உட்கார்ந்து தண்ணியடித்தோமோ.. பின்னர் புத்தகங்கள் அடுக்கப் பட்டிருக்கும் கணணியறைக்கு வந்தோமா.. learnen learnen immer learnen என கொம்பியூட்டரில் நாலு கட்டுரை படித்தோமா..? அன்றை brand க்கு brain என்னத்த சொல்லுதோ அதை கை போன போக்கில் எழுதி தள்ளினோமா..

பிறகு.... நித்திரை வர போய் படுத்தோமா என்ற நிலையில்தான் புலத்தில் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள் என நினைத்திருந்தேன்.

அவ்வாறு இல்லைப் போலிருக்கிறது.

Anonymous said...

புலிகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவர்களுக்கு எதிராக நீங்கள் வைக்கும் இந்த விமர்சனம், அவர்களைக் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் உங்களுக்கும் முற்று முழுதாகப் பொருந்தும்...

உங்கள் பாணியில் சொன்னால்...

தூ... நீங்களெல்லாம் தமிழர்தானா... இதைவிட சிங்களன் பூட்ஸ் காலை நக்கிவிட்டுக் கொண்டு, எங்காவது ஒரு ராணுவ கேம்பில் சிறைப்பட்டுக் கிடக்கலாம் உங்களைப் போன்ற வலைப்புலிகள்!!

ரவி said...

அந்த மரணத்தை கொச்சைப்படுத்தி உங்கள் கற்பனைகளை கலந்து நீண்ட கட்டுரை வரைந்துவிட்டீர்கள்...

சரி உங்களுக்கும் பொழுது போகவேண்டாமா ?

குறைந்தபட்சம் அவர் எழுதியதையாவது வாசித்தீர்களா ?

Anonymous said...

here in canada somany black tiger
ltte. specialy sendid leader from pirabakaran
fundcollector i can prove. they are
anythink can do for ltte.

naangal evangaludan erunthu vanthavar engallukku therium
evankada moongy parunkal engku meka
veraivel ethu nadakkum

Anonymous said...

ஈழத் தமிழ்மக்களின் இறுதி இருப்பு கேள்விக்குறியாகும் போது அதற்கு பிறகு ஒரு புலியிருப்பு என்ன உள்ளது? நீங்கள் புலியின் இருப்பை விரும்பாத காரணத்தால் மக்கள் இருப்பையும் நிராகரித்து வந்துள்ளீர்கள்.

சிங்கள அரசின் இன அழிப்பில் வராத கோபம் உங்களுக்கு புலியில் ஏன் வருகின்றது? உங்கள் பதிவுகளை பார்க்கும் வாசகர்கள் அறிவார்கள் நீங்கள் விமர்சித்தது 98 வீதமும் புலிகளையே. அது உடையார்கட்டு குளமானாலும் சரி இன்றய தீக்குளிப்பானாலும் சரி.

ஏன் இந்த நிலை? உங்களை நீங்களே கேள்வி கேட்டுள்ளீர்களா? உங்கள் இந்த பதிவு ஒரு ஊக அடிப்படையே அன்றி உண்மைக்கு எந்த தரவும் கிடையாது. இந்த ஊகத்தின் அடிப்படை எது?

இந்த இனம் தன்னை தின்று வளர்ந்த இனம். ஆம் அது சாதியாக மதமாக வர்க்கமாக புத்தஜீவிதமாக தனது இனத்தை தானே தின்று வளர்ந்த இனம். இரையை தேடி புத்திஜீவிதம் அல்லது சாதியம் கலந்த புத்திஜீவிதம் தனது இனத்துக்குள்ளேயே செல்லும். சிங்கள கொடுமைகளை விமர்சிக்க முடியாத பல நூறு புத்திஜீவிகள் இறுதி வரை புலியை விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். அது தனது இனத்துள் தேடும் இரை. இந்த இனத்துக்கு உரிய பழக்கம் இது.

சாதி வர்க்கம் புத்திஜீவிதம் எதுவில் இருந்தும் வெளியேறியதாக சொல்பவனின் வார்த்தைகளில் எழுத்துக்களில் ஊகங்களில் தன்னினத்தை தானே வசைபாடுவதில் தன்னினத்துக்குள்ளே இரைதேடும் குணம் இருந்து கொண்டே இருக்கின்றது.

இந்த இனத்தில் இருந்து வந்தவர்களே புலிகள், ஏனைய இயக்கங்கள், கருணா, மாற்றுக்குழுக்கள், என்னும் எவரோ, நீங்களோ நானோ, அனைவரும் இந்த இனத்துக்குள் இருந்த வந்தவரே. நாம் எமது பங்கிற்கும் பழக்கவழக்கத்துக்கும் ஏற்ப எங்களை தின்கின்றோம். மிச்சத்தை சிங்களவன் தின்கின்றான். இறுதியில் புளிச்சல் ஏவறையாக தமிழனின் கதை முடிகின்றது? நிச்சயமாக இல்லை. எஞ்சியவர்கள் எமது வரலாற்றை வியாக்கியானம் செய்து தொடர்வாரக்கள். யாரும் கவலைப்படத் தேவையில்லை.

Sri Rangan said...

//ஈழத் தமிழ்மக்களின் இறுதி இருப்பு கேள்விக்குறியாகும் போது அதற்கு பிறகு ஒரு புலியிருப்பு என்ன உள்ளது? நீங்கள் புலியின் இருப்பை விரும்பாத காரணத்தால் மக்கள் இருப்பையும் நிராகரித்து வந்துள்ளீர்கள்.

சிங்கள அரசின் இன அழிப்பில் வராத கோபம் உங்களுக்கு புலியில் ஏன் வருகின்றது? உங்கள் பதிவுகளை பார்க்கும் வாசகர்கள் அறிவார்கள் நீங்கள் விமர்சித்தது 98 வீதமும் புலிகளையே. அது உடையார்கட்டு குளமானாலும் சரி இன்றய தீக்குளிப்பானாலும் சரி.

ஏன் இந்த நிலை? உங்களை நீங்களே கேள்வி கேட்டுள்ளீர்களா? உங்கள் இந்த பதிவு ஒரு ஊக அடிப்படையே அன்றி உண்மைக்கு எந்த தரவும் கிடையாது. இந்த ஊகத்தின் அடிப்படை எது?

இந்த இனம் தன்னை தின்று வளர்ந்த இனம். ஆம் அது சாதியாக மதமாக வர்க்கமாக புத்தஜீவிதமாக தனது இனத்தை தானே தின்று வளர்ந்த இனம். இரையை தேடி புத்திஜீவிதம் அல்லது சாதியம் கலந்த புத்திஜீவிதம் தனது இனத்துக்குள்ளேயே செல்லும். சிங்கள கொடுமைகளை விமர்சிக்க முடியாத பல நூறு புத்திஜீவிகள் இறுதி வரை புலியை விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். அது தனது இனத்துள் தேடும் இரை. இந்த இனத்துக்கு உரிய பழக்கம் இது.

சாதி வர்க்கம் புத்திஜீவிதம் எதுவில் இருந்தும் வெளியேறியதாக சொல்பவனின் வார்த்தைகளில் எழுத்துக்களில் ஊகங்களில் தன்னினத்தை தானே வசைபாடுவதில் தன்னினத்துக்குள்ளே இரைதேடும் குணம் இருந்து கொண்டே இருக்கின்றது.

இந்த இனத்தில் இருந்து வந்தவர்களே புலிகள், ஏனைய இயக்கங்கள், கருணா, மாற்றுக்குழுக்கள், என்னும் எவரோ, நீங்களோ நானோ, அனைவரும் இந்த இனத்துக்குள் இருந்த வந்தவரே. நாம் எமது பங்கிற்கும் பழக்கவழக்கத்துக்கும் ஏற்ப எங்களை தின்கின்றோம். மிச்சத்தை சிங்களவன் தின்கின்றான். இறுதியில் புளிச்சல் ஏவறையாக தமிழனின் கதை முடிகின்றது? நிச்சயமாக இல்லை. எஞ்சியவர்கள் எமது வரலாற்றை வியாக்கியானம் செய்து தொடர்வாரக்கள். யாரும் கவலைப்படத் தேவையில்லை. //




இன்றிடம்பெறும் மக்களது அவலத்துக்கு யார் காரணம்?சிங்கள அரசு குண்டுகள் போட்டுக் கொல்வதற்கான அரசியலை மக்கள்மீது திணித்தவர்கள் புலிகளா அல்லது நாமா?மக்களது நலனில் கிஞ்சித்தும் அக்கறையற்ற புலிகளது பேரங்கள் உலகறிந்தது!இத்தகைய அரசியலை வைத்துப் பிழைப்பு நடாத்திய புலித் தலைமை வன்னியில் மக்களது குழந்தைகளைத் துடைத்து அள்ளிப் போருக்குள் திணித்துக் கொன்றதில் எவர் குற்றவுணர்வோடு இருக்கிறார்?புலிகள் செய்த மக்கள் விரோத அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகள் தம்மைத் தொடர்ந்தும் நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் மக்களின் பிணங்களோடு புலிகள் அரசியலை ஓட்டுகிறார்கள்.

இதுள் சிங்கள அரசு குறித்து ஓலமிடும் நீங்கள் எல்லோரும் முதலில் புலியினது மக்கள் விரோதப் பக்கத்தையும் அதே கண்கொண்டு(நாம் சிங்கள அரசை விமர்சிக்காததென்ற வரைவிலக்கணத்தைச் சொல்கிறேன்) பார்க்கவும்.நாம் இதைத்தாம்(இருதரப்பு மக்கள் விரோதப் போக்கை) செய்துவருகிறோம்.அழிப்போரைவிட்டு ஒதுங்குங்கள்.மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.அதற்காகச் சரணடைந்து சர்வதேசச் சட்ட எல்லைக்குட்பட்ட மன்னிப்புக்கு உடந்தையாக இருங்கள்.புலிப்பாணிப் போரினது ஐந்தொகையை மக்கள் அனுபவித்தது போதும்.

தமிழ்பேசும் இனத்தைக் வெறும் தமிழைவைத்து மதிப்பிடுவதற்கு முன் இந்தச் சமுதாயத்தில் நிலவும் அரசிலை மதிப்பிடவும்.இலங்கைச் சமுதாயம் வர்க்கமாகப் பிளவுண்டு கிடக்கிறது.எனவே,வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியல் அடிப்படையாகிறது.புலிகள் தமிழர்களைத் தின்றதென்பது உண்மைதான்.ஏனெனில் அவர்களது வர்க்கத் தளத்துக்கு அது அவசியமாகவே இருந்தது.இலங்கை அரசை உங்கள் கருத்துப்படி நாம் விமர்சிக்கவில்லையெனும் கருத்து உண்மையாகவே இருக்கட்டும்.நீங்கள் புலிகளை எவ்வளவு வீதம் விமர்சித்துள்ளீர்கள்?

கண்டவர்கள்-நின்றவர்கள் எல்லோரும் துரோகிகளாகிய வரலாற்றில், புலிகள் செய்த படுகொலைகளைக் கேள்விக்குட்படுத்தி அந்த அமைப்பை மக்கள் விடுதலையைச் செய்யும் புரட்சிகரமான அமைப்பாக்குவதற்கான ஏதாவதொரு முயற்சியில்-அத்தகைய நிலையையொட்டி, விமர்சிக்க முடிந்ததா?அல்லது இதுவரை புலிகள் தமது தவறுகளைச் சுயவிமர்சனஞ் செய்தார்களா?

இன்றுவரைப் புலிகளது மிகக்கெடுதியான பக்கம் மக்களைக் கேடயமாக்கும் யுத்த வியூகம்வரை போயிருக்கிறது.

சும்மா சிங்களவன்,சிங்களவன் எனப் பிதற்றி மேலும் இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் வாழ்வைச் சிதைக்காமல் ,இலங்கையில் இனங்களுக்கிடையிலான பரஸ்பரப் புரிந்துணர்வு மலரப் பாடுபடவும்.

அப்போது,ஆளும் சிங்கள உடமை வர்க்கத்தைத் தோற்கடிக்குமொரு மக்கள் சக்தி உருவாகும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு,அந்நியர்களின் தயவில் "தமிழீழம்"காணப் புறப்பட்ட புலிகளின் இன்றைய நிலையில் இருப்பதையும் இழந்த கதைதாம் இனியும் தொடரும்.தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடித்தது புலிகளா அல்லது இலங்கை அரசா?

பம்மாத்து இனவாத அரசியலைச் சொல்லியே கால் நூற்றாண்டாகப் புலிகள் செய்த போராட்டம் எத்தனை ஆயிரம் தமிழர்களைப் பலிகொடுத்துள்ளது-எத்தனை ஆயிரம் தமிழர்களைத் துரோகி சொல்லிக் கொன்றிருக்கிறது?

தமிழர்கள் வன்னியில் மட்டுமல்ல,இலங்கை பூராகவும் வாழ்கிறார்கள்.அங்கே மக்களது உயிர்வாழ்வுக்கான ஆதாரங்களைப் புலிகள் வழங்கவில்லை.மாறாக,இலங்கை அரசே அதைச் செய்கிறது.அவ்வண்ணமே வன்னிக்கும் அரசுதான் இவற்றை இதுவரை செய்தது.அந்த வாழ்வாதாரத்துக்குக் கொடும்வரி விதித்து, மக்களைப் பொருளாதார ரீதியாகவும்-பௌதிகரீதியாகவும் சுரண்டியதைத்தவிரப் புலிகளது வரலாற்றில் என்ன மக்கள் நலன் உள்ளது?மக்களுக்குப் புலிகள் செய்த சமுதாய வளர்சிப்பணிகளில் ஒன்றாவது உதாரணமாகச் சொல்லத்தக்கதா?


புலிகளது மக்கள் நலத் திட்டத்தால் எத்தனை இலட்சம் மக்கள் பயன் அடைந்தார்கள்?


சுனாமி நிதிக்கு அரோகரா,

புலம்பெயர் மண்ணில் அறவிட்ட நிதிகளுக்கு அரோகரா,

அந்நிய நாடுகளின் நிதிகளுடாகப் புதுப்புது நிதியீடுகளோடு செட்டிலான பேர்வழிகள் ஆயிரம்.

இப்படி மக்களின் குரல்வளையை நெரித்தபடி,அதே மக்களைக் கேவலமாகப் பார்க்கும்"தன்னைத்தானே தின்னும் இனம்"என்பது புலிகளது அரசியல் பார்வையினது தொடர்ச்சியே!

மக்களை எந்தவுரிமையுமின்றி அடக்கியபடி போராட்டஞ் செய்து,இன்று தாங்களே அழிந்துபோகும்போது அதே மக்களைக் கேடயமாக்கி அவர்களுக்குள் இன்னும் அழிவைச் செய்ததுவரை புலிகளது மக்கள் நலச் செயற்பாடு விரியும்.

எனவே,நாமும் உங்களைப்போல் புலிகளைத் தேசியச் சக்தியாகவும்,அனைத்தும் உணர்ந்த பிரபாகரனைத் தேசியத் தலைவருமாக ஏற்றுக் காவடி தூக்கினால் உடனே தமிழீழம் மலர்ந்து மணம் வீசும் என்ன?

புலிகள் செய்தெல்லாம் பேரங்கள்-பேரங்கள்!மக்களது அவலத்தை வைத்துப் பேரம்,அரசியலை வைத்துப்பேரம்,போராளிகளை வைத்துப் பேரம்.இதன் பலாபலன் இன்று அடிமட்டப் போராளிகளைக் கொல்வதற்கு யுத்தத்துக்குள் திணித்துவிட்டுத் தலைமை எங்கோ தப்பிக்கொண்டுள்ளது.

வரலாற்றில் புலிகளது "மக்கள் நல அரசியல"; பதியப்படும்.


அப்போது, தமிழ்பேசும் மக்களின் இழி நிலைக்கு எவர் காரணமென்பதை வருங்காலச் சந்ததி உலகத்தில் ஒவ்வொரு மூலையிலிருந்தும் புரிந்துகொள்ள முனையும்.""சிங்கள அரசை விமர்சிக்க முடியாத பல நூறு புத்திஜீவிகள் புலிகளை விமர்சித்துக்கொண்ட இருக்கிறார்கள்..."என்கிறீர்கள்.

புலிகளை விமர்சித்த புத்திஜீவிகளுக்கு என்ன நடந்ததென்பதை வரலாறு நன்றாக அறியும்.இந்த இலட்சணத்தில் எவர் இலங்கையில் புலிகளுக்கெதிராக வாய் திறந்தார்?

வன்னியில் புலிகளது துப்பாக்கிக்கு முன் மக்களது இருப்புப் பூச்சிகளைவிட மேலானதாக இருந்ததாகச் சரித்திரமில்லை.ஆனால்,அதே பூச்சிகளது பிள்ளைகளை கட்டாயமாகப்பிடித்துக் களத்துக்கு அனுப்பிக்கொல்வதற்குப் பெயர் "ஈழப்போராட்டம்"-சிங்களவனோடு வாழமுயொது,தமிழீழம்தான்" எமக்குப் பாதுகாப்பு!கடந்த ஒரு தசாப்பதமாகக் குட்டித் தமிழீழமாகவிருந்த வன்னியில் மக்கள் ஒரு நேரக்கஞ்சிக்கு இலங்கை அரசை நம்பியிருந்ததைத் தவிரப் புலிகளால் என்ன செய்ய முடிந்தது?

இன்று, புலிகள் செய்வதும்,இலங்கை அரசு செய்வதும் ஒன்றே!இலங்கை ஆளும் வர்க்கம் தனது சொந்த இனத்தையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது.அது தமிழரையும் கொல்லும் என்பதை நாம் அறிவோம்.ஆனால்,நமக்குள் தோன்றிய புலிகள் நம்மையே கொல்வார்களென நீங்கள் நம்ப மாட்டாத சூழல் இருக்கே அதுதாம் இதுவரைப் புலிகளைத் தங்கு தடையின்றிக் கொலைகள் செய்யத்தூண்டியது.

இனியும்,மக்களுக்காச் சிந்திக்க முனையுங்கள்.இயக்கத்துக்காகவும்,அதன் ஏகத் தலைவர் வணங்காமுடிப் பிரபாகரனுக்காவுஞ் சிந்தித்து நம்மைப் புலிகள் கொல்வதைத் தமிழ்த் தேசியத்தால் நியாயப்படுத்த,மக்களைத் துணைக்கழைக்காதீர்கள்.

ஸ்ரீரங்கன்.

Anonymous said...

சிறந்த பதிவு. பல உண்மைகளை தைரியமாக சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...