Monday, April 13, 2009

புலிகளது இறுதிவரையான சாவு அரசியலூடாக...


நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும்.

பகுதி:(1)


மிழ் மக்களைச் சுற்றிய புலித் (வி)தேசியவாதம் அரசியலற்றரசியல்(இது,அந்நியச் சக்திகளுக்கு அடியாளாக இருந்து விடுதலையைக் காட்டிக்கொடுப்பது) மாபியாத்தனமான கெடுபிடிகளுக்கு மத்தியில், தனது ஈவிரக்கமற்ற கொலை அரசியலூடே படுபாதகமான துரோகத்தைத் தியாகமாக்க முனையும் இன்றைய நிலையில், நாம் மிகக் கெடுதியான புலிப்பினாமிகளின் பரப்புரைக்கு இரையாகுவதா இல்லை அதை மீறித் தமிழ்பேசும் மக்களது அரசியல் விழிப்புணர்வைத் தொடர்ந்து விருத்தியாக்கிப் புலிவழித் தேசியத்தை மறுத்துப் புதிஜனநாயகப் புரட்சியை இலங்கையில் தொடர்ந்து நடாத்துவதா, என்பதைப் புலிகளது தவறுகளிலிருந்து கற்பதா என்று பாரிய நெருக்கடிக்குள் தமிழ்ச் சமுதாயம் மட்டுமல்ல முழு இலங்கைவாழ் இனங்களும் எதிர் கொள்கின்றன.


இங்கே, மக்களைக் காயடித்த புலி அரிசியல் மாபியாத் தனத்தை மேலும் தேசியவாதச் சாயம் பூசித் தமிழ் பேசும் மக்களை மேலும் ஓட்டச் சுரண்டுவதற்குப் புலிக்கு முண்டுகொடுக்கும் அவர்களது பினாமிகள் தொடர்ந்து மக்களை ஏமாற்ற எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துப் புலிகளது மக்கள் விரோதப் பக்கங்களை இனம் கண்டு, அதை மறுத்தொதுக்கி இலங்கையில் இனங்களுகிடையிலான ஒற்றுமையுடன்கூடிய ஒத்துழைப்புடன், ஆளும் மகிந்தாவின் அரசையும்,பாசிசப் புலிவழி அரசியலையும் ஓட்ட வேரறுக்கவேண்டிய வரலாற்றுத் தேவை முற்போக்குச் சக்திகளிடம் உண்டு.எனினும்,நிறுவனமயப்பட்ட புலிப் பினாமிகள், புரட்சிகர வேலைத் திட்டத்துக்கு எதிராக மீளவும் புலிவழி அழிவு அரசியலை நியாயப்படுத்தி, மக்களைத் தொடர்ந்து குறுந்தேசிய எல்லைக்குள் முடக்கிப் பாசிசப் புலிகளது அழிவில் தமது நலன்களை அறுவடைசெய்யத் திடமாகக் காரியமாற்ற முனைகையில் நாம் மௌனமாக இருக்க முடியாது.

ஏனெனில்,இவ் வகைப்பட்ட அரசியலானது இன்று பல்லாயிரம் மக்களைப் பூண்டோடு அழித்து, அவர்களது உறவுகளை அகதிகளாக்கி நாடோடிகளாக்கிய பின்பும் அந்நிய நலன்களுக்கிசைவாக எமது மக்களின் குருதியை மேலுஞ் சிந்தவைக்கப் புலிகளதுவழிப் போராட்டத்தில் நியாயம் இருப்பதாகக் கற்பிக்கப் புலிகள் கையிலெடுத்த குறுந்தேசிய வாதத்தை மெருக்கூட்டி, அதையே மக்களது விடிவுக்கான மூலாதாரமாகக் காட்டுவதே சுத்த மோசடியாகும்.


இதை எங்ஙனம் முறியடிப்பது?:


1: புலிகளது அரசியல் நடாத்தையை விமர்சனத்துக்குள்ளாக்குவது,


2:புலிகள் கூறிய தமிழீழத்தை மீள் பிரிசீலிப்பது,


3:தமிழீழம் என்பதன் பொய்மைக்குள் பலியெடுக்கப்பட்ட மக்களையும்,அவர்களது இழப்புகளையும் குறித்து மிக நீண்ட அரசியல் விவாதத்தைத் தொடர்வது,

4: தமிழீழம் எனும் பொய்க் கோசத்துக்கு எதிரான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் முகமாக ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைப்பது,அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை இலங்கைப் பூர்ச்சுவா அரச சட்டவரைவுக்கொப்பக் கட்டியெழுப்புவது,அதன்வழி சிங்களப்பாட்டாளியவர்க்கத்தோடு இணைந்து பொருளாதாரவாதப் போர்களோடு சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை இணைப்பது,

5:இலங்கை தழுவிய புரட்சிக்கான முன் நிபந்தனைகளை உருவாக்கும் முகமாகச் சிங்களப் பாட்டாளிய வர்க்கத்தை அணுகுவதும்,புரட்சிகரக்கட்சிக்கான பணிகளை அவர்களோடு இசைந்து ஆற்றுவதும,அந்நியச் சக்திகளது பொருளாதார இலக்குகளுக்கு எதிரான போராடாட்டங்களைச் சிங்களப்பாட்டாளிய வர்க்கத்தோடு இணைந்து உள்ளக-மற்றும் வெளிய அரசுகளுக்கு எதிராகக் கட்டியமைப்பதும்; உடனடித் தேவைகளாகும்.


இவை உடனடித்தேவையாகத் தமிழ்ச் சமுதாயத்தில் இருப்பினும்,



அ): நாம் இலங்கையில் வாழும் மற்றைய சிறுபான்மை இனங்களான மலையத் தமிழ் மக்கள்
மற்றும் முஸ்லீம் மக்களோடான உறவை மேலும் வலுப்படுத்தும் முகமாக அவர்களது அரசியில்
கோரிக்கைகளை எமது வரலாற்று முரண்பாடுகளோடு உள்வாங்குவதும், அதன் முதல் தெரிவாக
அவர்களது அரசியல் அபிலாசைகளை எமது அரசியல் அபிலேசைகளோடு இணைத்துக் கை கோற்பதும்
அவசியமாகிறது.

இ): இதன் தொடராக முதலில் நாம் புரிந்துகொள்ள முனைவது இதுகாலவரையான
புலிகளது தமிழீழப்போராட்டதை அரசியல்ரீதிய விளங்க முற்படுவதும் அதை எங்ஙனம் புலிகள்
தவறான அரசியல் தெரிவினூடாக முன்னெடுத்துக் கொலைக்கள அரசியலை நமக்குள் திணித்தார்கள்
என்பதே அவசியமான அரசியலை முன் தள்ளுகிறது.


இன்று, புலிகளது அரசியலற்ற மாபியத்தனமான குழுவாதத்தின் தொடர்ச்சியில் உருவாக்கப்படும் பரப்புரைகள் புலிகளைத் தேசியச் சக்திகளாக வரையறுப்பதற்காகப் புலிப் போராளிகளை முற்றாகப் போராடியழியும்படி வற்புறுத்துகிறது.இது,அவர்களது அழிவில் தமிழ்பேசும் மக்களுக்குள் தம்மை மீளவும் புதிய புலிகளாகத் திணிப்பதற்கும், புலிகளற்ற வெற்றுடத்தைப் புலிவழிப்பாதைகளுடாக நிறுவுவுதற்குமான குறுகிய பாதைகளை மிகக் கொடூரமான பேர்வழிகள் நமக்குள் திணிக்கின்றார்கள்.இவர்களே,இன்றைய புலம்பெயர் மண்ணிலுள்ள தமிழ்பேசும் மக்களது சிங்கள அரசுக்கெதிரான உணர்வைத் தமக்கிசைவாக்கி, மீளவும் படுகொலை அரசியலை முன்னெடுக்கப் படாதபாடுபட்டுப் புலிகளை முற்றுமுழுதாகப் போராடிச் சாகச் சொல்கின்றனர்.இதன் அர்த்தம் எதிரியிடம் சரணடையாது போரிடும்படிகூறிப் புலம்பெயர் மக்களது வீதிக்கிறங்கிப் போராடும் உணர்வை, மேலும் கிளறி அவர்களை வைத்தத் தமது அரசியலை முன் தள்ள எடுப்பதற்குப் புலிப் போராளிகளின் இறுதிவரை சாவுக்கான போர் அவசியமாகிறது.


எனவே,இதை அம்பலப்படுத்திப் போருக்கான அனைத்துக் காரணங்களையும் அம்பலப்படுத்திப் போரை முடிவுக்குக்கொணர்ந்து புலிகளது அடிமட்டப் போராளிகளை நாம் காத்தாகவேண்டும்.அவர்களோடு அழியக் காத்திருக்கும் தமிழ் மக்களையும் நாம் காத்தாகவேண்டும்.இதுவே,புரட்சிகர முற்போக்குச் சக்திகளது இன்றைய கடமையாகிறது!


புலிளது அடிமட்டப் போராளிகள்,நமது மக்களது குழந்தைகள்.அவர்களை எக்காரணங்கொண்டும் வலிய உலக வல்லாதிக்க இராணுவத்திடம் பலி கொடுக்க முடியாது.புலிகள் இன்று சிங்களச் சேனைகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை.மாறாக, உலக-இந்திய வல்லாதிக்க இராணுவங்களால் வேட்டையாடப்படும்போது அதைத் தேசியத்தின் பெயரில் அங்கீகரித்து, இறுதிவரை போராடி மரணிக்கும்படி வற்புறுத்துவது மிக மோசமான கடைந்தெடுத்த அயோக்கியத் தனமாகும்.புலிகளது சரணடைவில்/அழிவினில் அவர்கள் கட்டியமைத்த தேசியம் அம்பலமாவதும் /வலிவுறுவதும் அறிவியலுக்கு முரணானது.அவர்கள் தாம் கற்பித்த (வி)தேசியத்துக்காக இறுதிவரை போராடி மரிக்கும்போது அது மக்கள் மத்தியில் உண்மையான அரசியல் கோரிக்கையாக வலுவுறுகிறது.இது,புலிக்கு வக்காலத்து வேண்டும் புரட்சிகரப் புரட்டு இல்லையா?


இது, அந்நியச் சக்திகளுக்கும்,புலித் தலைமைக்கும் உள்ள அதே பழையபாணி அரசியலை வரிந்துகொள்வதாகவே நாம் இனங்காண்பதால் முதிலில் இப் போருக்கான அனைத்து எதிர்ப்புக் குரல்களையும் இணைக்க விரும்புகிறோம்.

போர் உடனடியாக நிறுத்தப்பட்டுப் புலிகளது சரணடைவில் மக்களது வாழ்வும், அவர்களது குழந்தைகளும் காப்பற்றப்படவேண்டும்.இதன் அடுத்த அரசியல் நகர்வாக அவர்களது வாழ்வாதாரங்களைச் செப்பனிடும் அரசியல் மக்களது தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படவேண்டும்.இது,டக்ளஸ்-கருணாவிடமோ அல்லது புலிகளது புதிய கருணாப் பாணியிலான சக்திகளிடமோ கையளிக்கத் தக்க அரசியலல்ல.மாறாக, மக்களே தமக்காக தமது அரசியலை முன்னெடுப்பதற்கான சூழலை நாம் வகுத்தளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

தேசியத்தைச் சொல்லியோ அல்லது சுயநிர்ணயத்தைச் சொல்லியோ மீளவும் புலிப்பாணி அரசியலைப் புலிகளது அழிவில் தொடர விரும்பும் சமூகவிரோதிகளை நாம் இனங்கண்டாக வேண்டும்.இவர்கள், புரட்சிகரமான அரசியல் முலாம் பூசிப் புலிகளது மறுவடிவாமாக நமது மக்களுக்குள் ஊடுருவ முனைவது கண்டிப்பாக இனங்கண்டு முறியடிக்கப்படவேண்டும்.இல்லையேல் மீளவும் புலிப்பாணி அரசியலுக்காக மக்கள் செத்தாகவேண்டும்.


புலிகளது இருப்பு ஆட்டங்காணும் தறுவாயில் அதையே தமது வருகைக்கான தெரிவாகப் புலிப்பினாமிகள் புரட்சிகர மொட்டாக்கின்வழி காத்திருக்கின்றார்கள்.இவர்கள் மக்களை மீளவும் அதே புலிப்பாணி அரசியலுக்கிசைவான ஒரு வகைப்பண்டமாக இனங்காண்பதால் புலிகள் கூறிய-செய்த விதேசிய அரசியலின்வழி மக்களை அணுக முனைவதன் தொடர்ச்சியில்,பாட்டாளிய வர்க்க அரசியலைப் பின்தள்ளுவதற்காவும்,முற்போக்குக் குணாம்சமுடைய அரசியல் கோரிக்கைகளை-அரசியல்முன்னெடுப்புகளை "மானசீக வாதம்"எனக் குறுக்கிப் புலிகளுக்கு முண்டுகொடுப்பதில் மேலும் தமது இருப்பைப் புலிகளது அரசியலின்வழி உறுதிப்படுத்துர்கிறார்கள்.இதை முறியடிப்பதற்கான புரட்சிகர வேலைத் திட்டமானது முதலில் ஆளும் சிங்கள அரசுக்கெதிரான சிங்களப்பாட்டாளிகளது கரங்களோடு நமது மக்கள் தமது கரங்களைப் பிணைப்பதனூடாகவே சாத்தியம் என்பதை நாம் இனங்களுக்கிடையிலான பரஸ்பர உறுவுகளின் வழி தெரிவாக்குகிறோம்.


"புலி-புலி எதிர்ப்பு வெளிப்படையாக இல்லாத"என்றொரு தளம் எங்கேயும் இல்லை.புலிகளது அரசியல் கோசமானது தமிழ்பேசும் மக்களது அனைத்துத் தளத்திலும் தனது கருத்தியல் வலுவை மிகக் கணிசமாக ஊன்றிப் படுகொலைகளை நியாப்படுத்தும் இந்தத் தருணத்தில் புலி எதிர்ப்பு அரசியலானது அதன் பாதகமான பக்கத்திலிருந்து புலிக்கு எதிரான சாரம்சத்தில் மக்களுக்குச் சாதகமான அரசியல் கோரிக்கைகளின்வழித் தமது அரசியல் இலாபங்களை மீட்டெடுக்க முனைகின்றன.இது,இன்றைய புலி-புலிப்பினாமிகளது அரசியல்-போராட்ட நகர்வுக்கும்,அவர்களது(டக்ளஸ்-கருணா.பிள்ளையான்) நகர்வுக்கும் எவ்விதத்திலும் வித்தியாசமானதில்லை.


கடந்தகாலத்தில் தமிழ்பேசும் மக்களது நியாயமான கோரிக்கைகளை எங்ஙனம் புலிகள் தமது இருப்புக்காகவும் அரசியல் பேரத்துக்காவும் பயன் படுத்தினார்களோ, அதே தெரிவோடு புலி எதிர்ப்பு இலங்கை அரசுசார்பு குழுக்கள் தற்போதைய மக்களது வாழ்வாதாரத் தேவைகளைத் தமது கைகளில் எடுத்து மக்களை அண்மிக்கின்றார்கள்.இவை எதுவும் நமது மக்களுக்கு விமோசனம் அளிக்க முடியாது.மாறாக, அதே பழைய அரசியலின் தொடர்ச்சியைப் புரட்சி என்றும்,ஜனநாயகம் என்றும் முன்னெடுக்கின்றன.இது, சாரம்சத்தில் புலிகளது புதி இருப்பாகவே மாற்றமுறுகிறது.


எனவே,மக்களே தமது தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்காக, அரசியல் பாதைகளைத் தமது அநுபவத்தின் வாயிலாகத் தெரிவது அவசியமாகிறது.


தமிழ்பேசும் சமுதாயத்தில் வர்க்க அரசியலை முன்னெடுக்க முடியாத "தமிழீழப் போராட்ட"அரசியலானது முழு மொத்த மக்களுக்குமான குறுந்தேசியவாத அரசியல் நகர்வை இலங்கையில் "ஈழஞ்"சாத்தியமெனும் போராட்டச் செல் நெறியூடாக வளர்த்தபோது, அங்கே வலதுசாரிய வர்க்கக் கண்ணோட்டமே சமுதாயத்தின் மொத்த இருப்பிடமும் நிலவியது.தொழில் வளர்ச்சியற்ற ஒரு மக்கட்டொகுதியிடம் பாரிய பாட்டாளியவர்க்கப் பண்பு அறவே அற்றுக்கிடக்கும்போது இது மேலும் அச் சமுதாயத்திடம் சமுதாய ஆவேசமாகக் கருக்கொள்கிறது.இந்த அழிவு அரசியலை இப்போது அழிந்துபோகும் புலியிடமிருந்து தட்டிப்பறிப்பதற்குப் புரட்சிகரத் தேசியமெனப் புரட்டு அரசியலாக நம்மை அண்மிக்கிறது.


பரந்துபட்ட மக்களது நலன் தனியே இலங்கையில் தமிழ்பேசும் மக்களது நலனோடு அநாதவராகக் கிடக்கவில்லை.மாறாகப் பரந்துபட்ட மக்களது நலன் பொது எதிரிகளான புலி மற்றும் சிங்கள யுத்த ஜந்திரங்களை எதிர்கொள்ளத் திரணியற்று, அவர்களது பொய்யுரைப்பில் கண்டுண்டு போய்க் கிடக்கும்போது சில அதிமேதாவிகள் தமிழ்ச் சமுதாயத்துக்கள் இவ் வார்த்தையைவைத்து விளையாடிப் புலிகளது விதேசியவாத்துக்கு முண்டுகொடுக்கிறார்கள்.இவர்கள் தம்மை மார்க்சியத்துக்குத் தத்துப்பிள்ளைகளாகக் கற்பனைசெய்து, புரட்சிகரமான கருத்துக்களை அடியோடு சாய்த்துத் தமது புலிவிசுவாச அரசியலை முன்னெடுப்பதில் அதி தீவிரமாகச் செயற்படுவது புரட்சிகர அரசியல் பாத்திரமாக வரலாற்றில் நிலவ முடியாது.

தமது புலிவழி அரசியலுக்கிசைவாகக் கருத்துக்கட்டத் தேசியத்தை பாடுபொருளாக எடுத்தபடி, தமிழில் உலாவரும் மார்க்சிய ஏடுகளை நகல் எடுப்பதில் அவசரக் குடுக்கைத் தனமாகக் கருத்துக்களை முன் தள்ளுகிறார்கள்.இவர்களை அம்பலப்படுத்துவது மிக அவசியமான புரட்சிகரப்பணியாக இன்று நம் முன் இருக்கிறது.

புலிகளை முண்டுகொடுப்பதற்காக, புலிகள் சொல்லும் (வி)தேசியத்துக்கு அவர்கள் விரோதமாகித்தாம் மக்கள் தமது உண்மையான தேசியவிடுதலையை முன்னெடுக்க வேண்டுமெனக் கூறுவது அரசியல் ரீதியாக மிகவும் கேடுவிளைவிக்கும் மோசடியாகும்.புலிகளது அரசியல் பாத்திரத்தை அடியோடு வீழ்த்தமுடியாது, எதிர்புரட்சிப்பாத்திரத்துக்குக் கதவு திறந்துவிட்ட"புரட்சிகர"அணி, இப்போது புலிகளது பூண்டோடு அழிவை வைத்துச் சரியான தேசியத்தை மக்களுக்குச் சொல்வதாகப் பூச்சுற்றும் புலிப் பினாமிகள், தமது தலைமையைக் காப்பதற்கான புலம்பெயர் மக்களது ஆர்ப்பாட ஊர்வலத்தையும் அதையொத்த போராட்ட வடிவத்துக்கும் முண்டுகொடுக்க, அங்கே போராளிகள் அழிவதைப் புரட்சி-வர்க்கம் எனக் கருத்தாடி மக்கள் விரோத அரசியற்றிரையை மக்கள் முன் கட்டுகிறார்கள்.

இப்போது,புலிகளது வலதுசாரியத் தேசியத்தை மக்கள் தோலுரித்து இனங்காணுவதற்காக"தமிழ்பேசும் மக்கள் மத்தியிலேவுள்ள உற்பத்திச் சக்திகளது வளர்ச்சி அபரிதமாக இருப்பதால்-அதன்மீது உறவுகொள்ளும் அனைத்துத் தரப்பும் தனது வர்க்கத்தளத்திலிருந்துகொண்டு", புலிகளது அழிவில்-இறுதிவரை யுத்தஞ்செய்து, மரிப்பதிதாம் அல்லது சரணடைவது அவர்களைத்(புலிகளை) துரோகமாக இனங்காணப்போவதாகப் புருடாவிடப் புரட்சிகர முகமூடி புலிப்பினாமி அரசியலாக விரிகிறது.

புலிகளது இறுதிவரையான சாவு அரசியலூடாக, மக்கள் புலிவழித் தேசியத்தையே சரியானதாக நிறுவும் அரசியல்மனதைக் கணிக்காத கோமாளிப் புரட்சி பேசுவது ஆபத்தான அடித்தளத்தை மேலும் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.இன்று, மக்கள் எதைத் தேசியமெனப் புலிகளுடாக உணர்கின்றனரோ அதற்காகப் புலிகள் இறுதிவரை போராடும்போது, அத்தகைய தேசிவாதத்தை மேலும் அதே புலிவழி அரசியலாகத் தொடரும் சில மோசடிக் கும்பலுக்கு அல்லது புலிப்பினாமிகளுக்கு இப்போது முன்னெடுக்க நமது பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் புலிகளது கட்டாய இராணுவச் சேவையின்வழி போராடிச் சாவது அவசியமாகிறது.

இந்த அற்ப அரசியல் புரட்டுக்களை மேலுந் தோலுரிப்போம்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.04.09

6 comments:

மனிதம் said...

சிறுவர்களோ, குழந்தைகளோ போராடிச் சாவதை விட, அடிமையாகி அடி வாங்கிச் சாவதே மேல் என்கிறீரா? அறிவு மிஞ்சி பதவி நாற்காலியில் உட்காந்து கொண்டு ஆட்களை மிரட்டிக் , கொன்று குவித்துக் கொண்டிருக்கும் ஒட்டுக் கும்பல் கருணாக் குழு இவ்வாறுதான் தோற்றம் பெற்றது போலும். காலிழந்து, கையிழந்து, கண்ணிழந்து, உயிரிழந்து, உயிருக்குயிரான உறவுகளை இழந்து அழுது செத்துக் கொண்டிருப்பவர்கள் கையில் பட்டாசு திணித்து கொண்டாடுங்கள் எங்கள் வெற்றிகளை என்று கூறும் ஒரு இனவாத வர்க்கத்தை ஒரு வழி பார்ப்போம் என்ற துப்பு ஒருவருக்கும் வரவில்லை. முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டிருப்பதை விட்டு, ஒன்றுபடுபவர்களை அப்படியே விட்டு விடுங்கள். உங்கள் மனைவியோ, குழந்தையோ நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
நீர் புலியாக இருக்க வேண்டாம். மனிதனாக இருக்க வேண்டாம். நரியல்லாது இருக்க முயற்சி செய்யும்.

rooto said...

ஒன்றும்வேண்டாம் நீர் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலும், உங்கள் ஜனாநாயகவாதிகள் கட்டியாளும் மட்டகளப்பு, வவுனியா, மற்றும் அரசு எனும் பெயரில் உள்ள பயங்கரவாதிகளின் கொழும்பு ஆகிய பகுதிகளில் தல ஒரு மாதம் வசித்துப்பரும்(உங்கள் சாதாரண நடவடிக்கைகள் எங்கும் தொடரவேண்டும்) பின்னர் நீர் வந்து உமது இடுகையை வாசியும் அப்போது விழங்கும் உங்களைபோன்றவர்களது வாய்சடாவலும், பொய்பொரட்டுகளும். உங்கள் மக்கள் ஜனநாயகம் எந்த நாய்களின் பிச்சை. மாற்றங்கள் மார்தட்டி பெறப்படவேண்டும். மண்டியிட்டல்ல!!!

sivan said...

இவளவுகாலமும் எங்குபோய்தொலைந்தீர்கள் ஜனநாய்வாதிகளே???எந்த எலும்பை எதிர்பார்த்து இருந்தீர்கள்!! நீங்கள் ஜனநாயகம் எண்டபெயரில் மக்களை கொடுமைபடுத்தியதும், கொள்ளையடித்ததும், கற்பழித்ததும், கொன்றுகுவித்ததும், ஏன் இன்னமும் செய்துகொண்டுதானிருக்கிறீர்கள். போதும் உங்கள் கரிசனை!! உங்களை விட சிங்களவன் மேல்.கேவலம் எலும்புக்கு காட்டிகொடுத்து வாலாட்டும் நாய்களே

True Tamil said...

All true SRI LANKAN TAMILS now expect only peace, not TAMIL EELAM.
How much you all gonna kill again?
Are Vaiko and others ready to join in LTTE and fight?
Tamil Eelam is not possible...

Anonymous said...

ஸ்ரீரங்கர்,

நீங்க படிச்சது மார்க்சீயமா? இல்ல, மகாவம்சமா? சிகப்பு வெளுத்தா காவி!

Sri Rangan said...

//ஸ்ரீரங்கர்,

நீங்க படிச்சது மார்க்சீயமா? இல்ல, மகாவம்சமா? சிகப்பு வெளுத்தா காவி!//

உங்க ஆர்வத்தை ஏனங்க நான் கெடுக்கணும்?நான் படிச்சது எதுவுமில்லைங்க;உண்மையாய் வாழ்வதென்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியாது!

சிவப்பு வெளுத்தல் பின்பு காவி ஆவது குறித்து அனுபவம் இருக்குத்தான்.அம்மாவின் சேலை அப்படி மாறியதைப் பார்த்திருக்கிறேன்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...