Friday, April 10, 2009

ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவனை முட்டாளாக்கலாம்...

"புலிகள் இன்று துரோகஞ் செய்தால்,என்ன நடக்கும்?"


ந்தக் கேள்வியை,அரசியல் கேள்வி என்பதைவிட-இஃது,குறித்துச் சமுதாயமட்டத்தில் அதன் உளவியலோடு பொருத்தினால்-அஃது, தர்க்கத்துக்கு இடமளிக்கிறது!காகம் கருப்புத்தாம்,ஆனால்,கருப்பெல்லாம் காகமாகுமா?அப்படித்தாம் இக் கேள்வியும் பொத்தென்று மண்ணில் வீழ்ந்து நொருங்குகிறது!


"புலிகள் இன்று துரோகஞ் செய்தால்..."எனும்போது, அவர்கள் ஏலவே துரோகமிழைக்காத,மக்கள் விடுதலைப்படையெனக் கணிப்பிடப்படுகிறது.அங்ஙனம் இன்றி அவர்கள் ஏலவே துரோகத்தனமான எதிர்ப் புரட்சிப்பாத்திரத்தோடு போராட்டத்தைக் கைப்பற்றி, மக்களுக்கு எதிரிகளாக மாறினால்-மாறியிருந்தால் புதிதாகவொரு துரோகஞ் செய்ய வேண்டுமென்பதில்லை!


அடுத்து-துரோகம் என்று காது குத்தும்போது, புலிகளிடம் ஒரு இலட்சியம் இருப்பதாக உணரப்படுகிறது.அஃது,தமிழீழம் என்றாகவும் மாறுகிறது.எனவே,இலங்கையில் தமிழீழம் சாத்தியமெனப் புரட்சிகரச் சக்திகள் குறிப்பதாக நாம் கொண்டோமேயானால்,உலக அரசியல்போக்குகளிலும் அதன் உள்ளார்ந்த பொருளாதார நலன்களிலும் இலங்கையில் தனிநாடு சாத்தியமாவெனுங்கேள்வி அடுத்தாக எழுகிறது.புரட்சிகரச் சக்திகள் இலங்கையில் சிங்களத் தொழிலாளர்களை பகைத்தபடி, இலங்கையில் ஈழஞ்சாத்தியமாக்குவதாக எண்ணுமிடத்துப் புரட்சிக்கு எதிரான குறுந்தேசியவாத எல்லைக்குள் வீழ்ந்து, புலிகளுக்கு இலட்சியம் கற்பிப்பதாக முடிகிறது.


இங்கு,எனது நிலை,தமிழீழம் என்பது போலிக்கோசமாகும்.அது,சாரம்சத்திலேயே பிழையான அரசியல் தெரிவு.


அது,எப்போதுமே புதியஜனநாயகப் புரட்சிக்கு எதிரான யாழ்மேட்டுக் குடியினது அரசியல் கோசம்.இஃது,இலங்கையில் இனங்களுக்களுகிடையிலான முரண்பாட்டைத் திசைதிருப்பி, மக்களை அழிவுகிட்டுச் சென்று தத்தமது வர்க்க நலனைத் தக்கவைக்கும் முயற்சியாக, இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படுத்தியது.எனவே,இது,போலியான கோசம்-பேரத்துக்கான அரசியல் ஆட்டம்.


இந்த அழிவு அரசியலும்,யுத்தமும் இவைகளின் மறுவிளைவும் இலட்சம் உயிர்களைப் பறகொடுப்பதில் முடிவடைகிறதா?


இருந்தும்,புலிகள் சுயவிமர்சனஞ்செய்து தம்மைப் புரட்சிப்பாதைக்கு தகவமைப்பது சாத்தியமில்லையென்பது அவர்களது வர்க்க நலன்சார்ந்ததென்பதால் அவர்கள் போராடிச் சாவது மக்களுக்குச் சார்பானதா?


இக்கேள்விக்குப் பதிலெளிப்பதைவிட,முதலில் எவர் சாகிறார்கள் என்பதற்கு முதலில் விடைகண்டாகவேண்டும்.


புலித்தலைமையோடு கூடக்கிடந்த குற்றத்துக்காகச் சாகின்றவர்கள்போக,புலிகளால் கட்டாயமாகக் கடத்திப் போராடத்துக்கு அனுப்பப்படும் இளைஞர்கள்,யுவதிகளின்சாவு எங்ஙனம் மக்களுக்குச் சார்பானதாகிறது?


புலிகள் தமது அழிவோடு மக்களையும் நாளாந்தும் சிங்கள இராணுவத்துக்குப் பலிகொடுக்கும்போது,இஃது, எங்ஙனம் போராடிச் சாவதாக மாற்றமுறுகிறது?சாரம்சத்தில் கட்டாயத்தின் பேரில் கொலைக் களத்துக்கு மக்களைத் தள்ளியும்,அவர்களது குழந்தைகளை "தமிழீழத்தின்"பெயரில் காயடித்துத் தமது அரசியல் பேரத்தைச் செய்வதில், சாவை முன்னெடுப்பவர்களைக் குறித்து இலட்சியம் என்ற கோசம் எங்கே தோற்றம் பெறுகிறது?


புலிகள் கடந்தகாலத்தில் செய்த துரோகத்தால்,அதாவது பாசிச மக்கள்விரோதப் போராட்டத்தால் அவர்கள் மேலும் சரணடைந்து அல்லது ஏகாதிபத்தியங்களின் அரை குறைத் தீர்வை ஏற்றால் அது, அடுத்த முப்பது வருடத்துக்கு(இவ் வருட அளவுகோல் எந்த அடிப்படைசார்ந்து கணிப்பாகிறது?) துரோகத்தைத் தியாகமாக்கிவிடும் என்பதற்காக,அவர்கள் பின்னால் கட்டாயமாகக் கடத்திப் போராட்டத்தோடு இணைக்கப்பட்ட சிறார்களும் செத்தேயாகவேண்டுமா?


புலிகளது இன்றைய போராட்டத்தின் விளைவாக இவ்வளவு மக்கள் சாகவேண்டுமென்பதன் இயங்கியல் என்ன?


புலிகள் ஆயுதங்களைப்போட்டுச் சரணடையும்போது மக்களது இழப்புகள் குறைந்தும்,மற்றும், புலிகளின் பின்னே போராடும் போரளிகளது உயிர்கள் காக்கப்படுவதில் எந்தத் துரோகம் மக்களைக் கருவறுக்கும்?நாம், புலிகளது அழிவுக்குப் பின்பு துரோகங்களுக்கு மக்களைத் தள்ளாது இலங்கை,இந்திய அரசியல் ஆதிக்கச் சக்திகளிடமிருந்து மக்களைக்காத்துப் புரட்சிகரப்பணிக்கான தெரிவில் அவர்களுக்குப் புதிய அரசியலை அளித்து வாழ்வாதாரத்தைச் செப்பனிட்டு,மக்களை வர்க்கவுணர்வுள்ள சூழலுக்குள் அழைக்க முடியுமா?


புலிகளது துரோகத்துக்குப் பதில் அத்தலைமை போராடி மடிகின்றது என்றால், அது ஏன் இந்த நிலைக்கு வந்தது என்றும் கேட்டுப்பார்த்தோமா?


அதனது அடியாட்பாத்திரமானது தேசங்கடந்து அரசியல் சேட்டையாகவும்,அராஜகமுமாக மாறும்போது புலிகளெனும் அமைப்பு அழிக்கப்படவேண்டிய சக்தியாக மாறுகிறது.இதில் தலைமை தனது கடந்தகாலப் பயங்கர நடவடிக்கைகளால் சர்வதேசக் குற்றத்துக்குள் வலுகட்டாயமாகப் போய்ச் சேர்ந்தபின் அது போராடித் தானும் அழியவே விரும்பும்.எதிரியின் கையில் சிக்கி அழிவதைவிடத் தாமே போராடி அழிவது அவர்களுக்கு அவசியமாகிறது.சாவைத் தாம் விரும்பியபடித் தேர்வதே இதன் உள்ளடக்கம்.அங்கே,மதிப்பதற்கு என்ன இருக்கிறது?போலியான கோசத்துக்குக்காக அழிவு அரசியலைச் செய்தவர்கள் அதே அரசியலுக்குப் பலியாகும்போது,இது மக்களுக்குச் சார்பானதென்றுரைக்கும்போது,அங்கே-தமிழீழத்துக்கான போராட்டம் நியாயமென்று உரைக்கப்படுகிறது.இது,சுத்தாமான அரசியல் மோசடி!

புலிகள் செய்யும் போராட்டத்தை,அவர்கள்,இலங்கை அரச இராணுவத்தால் தேடியழிக்கப்படும்போது,அவர்களது மரணத்தை பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் எங்ஙனம் அணுகுவதென்று சொல்வதற்குப் புலிகளது போராட்டத்தில் எந்த வர்க்க நலன் இருப்பதென்பதிலிருந்தே அக்கண்ணோட்டம் ஆரம்பமாகிறது!


புலிகளது வர்க்க நலன் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு-அரசோடு முட்டிமோதவில்லை.மாறாகச் சிங்கள அரசுடன் பங்கு கேட்கிறது.அதாவது,"நீ தமிழ்பேசும் மக்களை அடக்குவதற்குப்பதில், நானே அதைச் செய்வதற்கு தா" என்கிறது.அங்கே,அதிகாரத்துக்கான பங்குப் போட்டியானது சிங்கள அரசுக்கு நிகாராக அங்கீகரிக்ககோருவதாகவிருந்தால் புலிகள் நோர்வேயோடான பேச்சுக்குப் போய் இடைக்கால நிர்வாக சபை,உள்ளகச் சுயநிர்ணயவுரிமை பற்றிக் கதைத்திருக்க முடியாது.இது,அதிகாரத்தில் பங்கு கேட்கும் போராட்டம்.அங்கே,பாட்டாளிவர்க்கம் எதற்காகத் தனது அணுகுமுறையைப் புலிகள்மீது செலுத்தவேண்டும்?

பாட்டாளிவர்க்கமானது இலங்கையில் நிலவும் இரண்டு இராணுவ ஜந்திரத்தையும், அதன் ஆதிக்கத்தையும் தமது எதிரிகளாக்கருதும்போது,அத்தகைய நிலையில் இருவரும் அடிபட்டுச்சாவதிலுள்ள யுத்த சூழலில் மக்களின் அழிவு குறித்தே சிந்திக்கவேண்டும்.இங்கே,புலிகள் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு எதிரிகளில்லை.மாறகத் தமிழ்பேசும் உழைக்கும் வர்க்கத்துக்கும் சிங்கள உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரானவர்கள்.சிங்கள ஆளும் வர்க்கத்தோடு பங்காளிச் சண்டையிடும் புலிகளது அழிவில் தலைவணங்க எதுவுண்டு?


ஏகாதிபத்தியத்தால் ஏமாற்றப்பட்ட புலிகள்,என்றாவது ஒருநாள் உலக ஏகாதிபத்தியங்களை அல்லது இந்தியாவை நமது மக்களின் எதிரிகளாக வரையறுத்தார்களா?சிங்கள அரசு குறித்து இனவாதத்தைச் சொன்னவர்கள், சிங்கள ஆளும் வர்க்கத்தால் பாதிப்படைந்த சிங்கள உழைக்கும் வர்க்கத்தோடானவுறவைத் தமிழ்பேசும் மக்களது உரிமைகளைவென்றெடுக்கத்தக்க முறையில் அணுகினார்களா?


புலிகள் இலங்கை அரசுக்கு நிகராகத்தாமே தமிழர்களை அடக்கியாளவேண்டுமெனப் போராடி, மடிவது எங்ஙனம் பாட்டாளிய வர்க்கத்துக்குச் சாதகமாக இருக்கமுடியும்?


புலிகள் இங்கே, இலங்கை அரசை எதிர்த்தும்,உலக ஏகாதிபத்தியங்களை எதிர்த்தும் போராடவில்லை!


அவர்கள் இன்றும் யுத்த நிறுத்தத்துக்குத் தூதுபோய்க்கொண்டும்,"இந்தியா நமது நண்பர்கள்,அமெரிக்கா-இங்கிலாந்து,நோர்வே நமது தோழமை நாடுகளென்றே" கூறிக்கொண்டு சாகிறார்கள்.அதாவது,இலங்கை அரசால் தேடியழிக்கப்படுகிறார்கள்.அங்கே,தமது கடைசி உயிர்வாழ்வுக்காக எதிர்த்துவரும் இலங்கை-இந்தியக் கூட்டு இராணுவத்தைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.அங்கே,எப்படி ஏகாதிபத்தியத்துக் எதிரான போராட்டமும்,சுரண்டும் வர்க்கத்தின் பொது நலனுக்குமான எதிர்ப்புக் கூறுண்டு?

அதாவது, புலிகள் அவர்களை எதிர்த்துப் போரிடவில்லை.புலிகளை வளர்த்த ஏகாதிபத்தியம்,வளர்ப்புப் பிராணியைத் தேவையில்லையென அழிக்கும்போது-அங்கே,"ஏகாதிபத்தியத்தினதும்,இலங்கைச் சுரண்டும் வர்க்கத்தினதும் பொது நலனுக்கு எதிராகப் புலிகள் மாற்றுமுறுகிறார்கள்"-அப்பாடா கேட்க நன்றாகத்தாம் இருக்கு!இது,சந்தனக்கடத்தல் வீரப்பன் தான் அழிக்கப்படும்போது, தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்குமான சில கோரிக்கைகள் வைத்ததுபோன்று இல்லையா?


நம்மால் எப்படியும் புரட்சிகரப் பாத்திரத்தைப் பேசமுடியும் என்பதற்காக இப்படியும் பேசுவதால் புலிகளது மாபியத்தனத்துக்கு ஒரு மக்கள் சார்பு நலனையும் பூட்டிவிடலாம்.இதற்குச் சர்வதேசப்பாட்டாளிய வர்க்கத்தை ஏன் துணைக்கழைப்பான்?

புலிகளைப் போராடிச் செத்துப் போய்விடுங்கள் என்றதன் பின்னால்,போராடி மரிக்கும் புலிகளது அடிமட்டப் போராளிகளுக்குக் கௌரமும் கொடுத்தாகவேண்டுமா?


உயிர் வாழ்வைக் கொச்சைப்படுத்தித்தாமே செத்துப்போகச் சொல்லப்படுகிறது?


பின்பு,"புலிகளின் அடிமட்டப் போராளிகளை வழிநடத்திய தலைமையின் ஒருபகுதி,சரணடைவுக்கும்,துரோகத்துக்கும் பதிலாகப் போராடி மரிக்கின்றது.இதைக் கொச்சைப்படுத்த முடியாது"-இது,நீங்கள் கற்பிப்பது.


புலிகளது தலைமை தன்னைக் காப்பதற்காகப் போராளிகளையும், மக்களையும் பலியிட்டு,இறுதிக்கட்டத்தில் வேறுவழியின்றித்தானுஞ் செத்துப்போகும்போது,மக்களுக்கு அவர்கள் செய்து கெடுதிகளை(தமது இருப்புக்காக மக்களைக் கேடயமாக்கியும்-பலியிட்டும்,அப்பாவிக் குழந்தைகளைக் கட்டாயமாகத் தம்மோடு இணைத்துப் போராட்டக்களத்தில் தமக்குமுன் நிறுத்திக்கொல்வது...)மறைத்துப் புலித் தலைமையின் அழிவு அரசியலுக்கும், அவர்களது சாவுக்கும் கொச்சைப்படுத்தாத பாட்டாளியவர்க்க மொழியை நீங்கள் தொடர்ந்து தேடுங்கள்.


போராடி மடியும் புலித்தலைவர்களைத் திரும்பத் திரும்ப அணுகுவதில்தாம் உங்கள் பாட்டாளியவர்க்க அரசியலே சூழல்கிறது.


நல்லது.


"சொகுசு வாழ்வு,அதிகாரம் நிறைந்த தலைவர்கள்தாம் சாவதால் அது துரோகம் எனும் ஏகாதிபத்தியத்தின் எலும்புத் துண்டை நக்காது போகிறதாம்"-அதை "நிராகரித்துப் போராடியும் சாகிறது."வரலாறு புலிகளுக்கேற்றபடியில் தவழ்வதில்லை.அந்நியச் சக்திகளிடம் மில்லியன்கணக்காய்க் காசு வேண்டியவர்கள்,உலக ஏகாதிபத்தியத்துக்கும்,ரோவுக்கும் தோதாகக் கொலைகளை அந்நியத் தேசங்களிலேயே செய்த இந்த வளர்ப்புப் பிராணியை, இப்போதய ஆசியப் பொருளாதாரப்போக்குக் கொல்வதால் அது,தான் நம்பிய,தான்கட்டமைத் தேசியத்தின்பெயரில் தமது மரணத்தைவிட்டுச் செல்வதாக நீங்கள் சொல்ல நாங்க கேட்கணும்.நல்லது. :-)


"இவர்களது மரணம் வெறுமனவே துரோகிகளின் மரணமெனக் கொச்சைப்படுத்தமுடியாது.வர்க்கஞ்சார்ந்தும் ஏன்-எதற்கென மறுத்து நிராகரிக்கவும் முடியாது!"ஏனென்றால்,"இந்த வர்க்கம் இன்னொரு துரோகஞ் செய்து வாழ்ந்திருக்க முடியும்.அந்தச் சந்தர்ப்பம் இருந்தும் அவர்கள் அதை நிராகரித்துப் போராடி மரிக்கிறார்கள்..." இது,உண்மையிலேயே கதை சொல்வதற்கு ஏற்ற புனைவாகிறது.


ஆனால்,உலக அரசியலென்ற ஒன்றில் சட்டவரம்புகளெனப் பூர்ச்சுவா வர்க்கத்திடம் நிறைய ஆயுதங்கள் இருக்கு.சர்வதேசக் குற்றவாளியான பிரபாகரன் ஏகாதிபத்தியத்துக்கு வால் ஆட்டினாலும் இந்தியா அவரை வேட்டையாடாதிருக்காது.எனவே, அவர்,எங்கே ஓடினாலும் மரணந்தாம்.ஆக,இப்படித்தான் சாக வேண்டுமென அவர் விரும்புகிறார்.சுகபோக வாழ்வு வாழ்ந்தாச்சு.இனியும் ஒரு சுகபோக வாழ்வை நாடி,இந்தியாவிடம் மாட்டித் தூக்கில் தொங்குவதைவிட மக்களைப்பலிகொடுத்து,இளையோரைப் பலிகொடுத்து,தமது அடிமட்டப்போராளிகளைப் பலிகொடுத்து, முடிந்தவரை புலம்பெயர் சமூகத்தை ஐரோப்பியத் தெருக்களில் கொன்றுதான் உயிரைவிடப்போகிறார்.இதை,கொச்சைப் படுத்துவது பாட்டாளிய வர்க்கப்பண்பில்லை.



ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவனை முட்டாளாக்கலாம்,
இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொருவனையும் முட்டாளாக்கலாம்.
ஆனால்,எல்லாச் சந்தர்ப்பத்திலும் எல்லோரையும் முட்டாளாக்க முனைவது கடினம்.நான்,இதை அறிந்தும் அதைச் செய்வதற்கில்லை!



சுபம்.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5605:2009-04-10-10-55-12&catid=277:2009


ப.வி.ஸ்ரீரங்கன்
11.04.09

3 comments:

benza said...

அய்யா முதன் முதலாக இன்று தான் இந்த தளத்தை கண்டேன் ---

சர்வ தேச ரீதியில் தூர நோக்கும் யதார்த்தமான அரசியல்
பார்வையும் கொண்ட உங்களது எழுத்துகளை மனதார
பாராட்டுகின்றேன் ---

ஒரு குறை உள்ளதே அய்யா ---

இந்த கடுமையான தமிழை சற்று இளக்கி தந்தால் பலர் ஆர்வமாக
படிப்பார்கள் ---

நிச்சயம் பலனடைவார்கள் --- நன்றி !

senthil said...

Dear P V Srirangan,
I admire your writings, you are one of the best writer out there now. Your poems and articles not expose the truths, its also makes people to think.
Your recent poem about Theepan is mesmarizing. "Uppilaa Ooor Ithu"

benza said...

Kindly have a look at Senthil.
The man has no profile.
He has no grasp neither on common sense nor on English.
Am sure he is attempting to praise you, falling flat on his face with his breached language though.
What good are these ignoramus, except waste of their lines and our time.
Kindly advise and request him to post his ideas, once again, in Tamil so as to understand and experience his surely poetic expressions for he appreciated yours.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...