Sunday, January 25, 2009

போதும், உங்கள் தமிழீழப் போராட்டம்.

கல்மடுக்குளம்:புலிகள் மக்கள் விரோதப் பயங்கரவாதிகளே!

நாம், எமது மக்களையே சிதைக்கும் அளவுக்குச் சிந்திக்க முடியுமா?சொந்த இனத்தின் துயருக்காகக் காத்திருப்பதுபோலவும்,அதையெட்டுவதற்கேற்ற முறையில் காரியஞ் செய்வதுமாகக் கருமமாகவிருக்க முடியுமா?கடந்த காலத்துள் தமிழீழப் போராட்டஞ் செய்தவர்கள் எல்லோருமே மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்ட கதைகளை நாம் அறிவோம்.

பொதுச் சொத்தைக் கொள்ளையடித்த இந்த இயக்கங்கள், இறுதியில் அதே மக்களின் வாழ்வாதாரங்களான வாழ்விடங்களை,பயிற்செய்கை நிலங்களை மற்றும் விவசாயத்தைச் சிதைத்தும், சந்தைப்படுத்தப்படும் கூட்டுறுவுச் சங்கங்களை செயலற்றதாக்கியபடி கொள்ளையடித்தும், மக்கள் விரோத அமைப்புகளாகச் சீரழிந்தன "விடுதலை" அமைப்புகள்.இன்று, நமது மக்கள் பலநூறு ஏக்கரில் விவசாயஞ் செய்துவந்த வலயத்திலுள்ளதும் அந்த விவசாயத்துக்கு நீராதாரத்தை வழங்கியதுமான கல்மடுக் குளம் தமிழ்த் தேசிய விடுதலையை முதன்மைப்படுத்துபவர்களென்றுத் தம்மைத்தாமே ஏகபிரதிநிதிகளாக்கியப் புலிப் பாசிச இயக்கத்தால் பாரிய குண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டு(குளத்தின் அணைக்கட்டுக்கள்),மக்களின் கிராமங்கள்,விவசாய நிலங்கள் குடிமனைகள் யாவும் நீரில் மூழ்கி நாசமாகும் அளவுக்குப் போரியல் வியூகம் அமைத்துள்ளது பாசிசப் புலிகள்!

இது,நியாயமா?

நாசிகள் இத்தகைய செயலைச் செய்வார்கள்!

ஒரு விடுதலை அமைப்பு?

சிங்கள வன்கொடுமை அரசே
இதுவரை செய்ய முனையாத செயலைப்
புலிகள் செய்து தத்மைத்தாமே
பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள்!


கடந்த 24.01.2009 அன்று கிடைக்கப்பெற்ற செய்தியை மையப்படுத்தித் தமிழ் நாளிதழ்கள் "கல்மடுக்குளம் புலிகளால்
உடைக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயலாகப் பாதுகாப்பு அமைச்சுக் கூறுகிறது"எனும்படி செய்தி எழுதுகின்றன.இதில் இவர்களின் கருத்தென்ன?மௌனிக்கிறார்கள்!-;இதுதாம் தமிழ்த்தரப்புப் பத்திரிகைத் தர்மம்! தூ...

தமிழ்பேசும் மக்களினத்தின் அரசியல் இவ்வளவுதூரம் தமக்குத்தாமே நெருப்பைத் தலையில் கொட்டுவதாக இருக்குமென எவரும் நினைக்கவில்லை!எனினும்,அதுவே நடந்துவரும் இவ்வளவு நாள் அரசியலிலிருந்தும் நாமெதை உலகத்தின்முன் விட்டுவைத்துள்ளோம்? "நாம் பயங்கரவாதிகள்,தனியரசைக் கொண்டியக்கும் தகமை அற்றவர்கள்,மாற்றினத்தோடு சகஜமாக வாழ இலாயக்கற்றவர்கள்,போர் நெறிமுறையைக் கைகொள்ளும் திறன் அற்றவர்கள்."என்பதைத்தாம்!

இலங்கைச் சிங்கள அரசு இத்தகைய கயமைத்தனமான செயலைத் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்ததாற்றாமே நாம் போராட வெளிக்கிட்டோம்?இதற்கு மனசுத்தியோடு பதிலளிக்கமுடியுமா?

கல்மடுக் குளத்தால் 1200 இராணுவத்தைக் கொன்றதையெண்ணி
ஆனந்தக்கூத்தாடும் புலம்பெயர்ந்த காட்டுமிராண்டித் தமிழர்கள்,தமது சொந்த மக்களின்
வாழ்வாதாரம் இதனால் மீளமுடியாதாளவுக்குப் பாதிப்படைந்ததை
எண்ணுகிறார்களா?


உலகத்தில் நடந்த கொடுமையான போர்களில் பல, இத்தகைய நடாத்தைகளைச் செய்வித்த அரசுகளை மக்கள் விரோதிகளாகவும்,நாசிசப் பயங்கரவாதிகளாகவுமே உலகுக்கு அறிமுகப்படுத்தியது.சமீபத்தில் நாசிகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு தமது வீரத்தைக்காட்டி மக்கள் விரோதிகளாகவும்,பாசிசிஸ்டுக்களாகவும் அம்பலப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்.

மக்களின் அதீத தேவையான நீராதாரத்தோடு விளையாடுபவர்கள் உலகத்தில் என்றுமே மன்னிக்கப்பட முடியாதவர்கள்.

நதிகளையும்,குடிநீர் ஆதாரத்தையும் நஞ்சாக்குவதற்கு முனைந்தவர்கள் உலகத்தில் நாசிகள் என்பது உலகறிந்தது.அவர்கள், அத்தகைய இழி நடாத்தைகளை மட்டுஞ் செய்வில்லை!மனித குல வரலாற்றில் மிகக்கெடுத்தியான அனைத்தையுஞ் செய்தவர்கள் நாசிகள்.இவர்களின் பாத்திரத்தை இப்போது அமெரிக்க அழிவு அரசியலும் அதன் இராணுவமும் செய்து வரும்போது, இதைவிஞ்சும் அளவுக்குத் தமிழ்த்தேசியச் சிறுமைமனங்களும் செய்து வரும் இத்தகைய குளக்கட்டுகள் தகர்ப்பு யுத்தம்-வியூகம் நாசியத்துக்கு ஒப்பானது!

நாம் அன்றே சொன்னதுபோன்று:

"இலங்கை அரசின் ஆதிக்கத்தைத் தமிழ் நிலப்பிரதேசங்களிலிருந்து
உடைக்காது,அதன் அரச வன்முறை ஜந்திரத்தை உடைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு சில
நிலப்பரப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலோ அன்றிச் சில ஆயிரம் சிங்கள
இராணுவத்தைக் கொல்வதாலோ தமிழீழம் விடுதலையடையாது".

என்பதை மீளவுஞ் சொல்லுகிறோம்.


இதனால் பாதிப்படைந்து பரதேசிகளாக மாறியவர்கள் தமிழ்பேசும் மக்கள்மட்டுமல்ல.இலங்கையின் முழு மக்கள் சமுதாயமுமே.இதனாற்றாம் புலிகள் என்பவர்கள் பயங்கரவாதிகள் என்று இலங்கையரசால் உலகத்துள் பிரச்சாரஞ் செய்யப்படுகிறது.இப்பிரச்சாரம் சரியானதென நான் ஏற்கிறேன்.

1:புலிகள் மக்கள் விரோதிகள்.

2:சொந்த மக்களின் அழிவில் அரசியல் செய்யும் இயக்க வாதிகள்.

3:தமது தலைவர்களின் சுகபோகத்துக்காக மக்களை அழிவுக்கிடுவதில் முதன்மையானவர்கள்

4:சொந்தச் சுகபோகத்துக்காக மக்களின் குழந்தைகளைக் கொன்று குவிக்கும் அடாத யுத்தத்தில் தமது இருப்பைக் காக்க முனைபவர்கள்.

5:மனித சமூகத்தின்மீது எந்தக் கொடுமையையும் கட்டவிழ்த்துவிட்டுத் தமது நலனைக் காக்க விரும்புபவர்கள்.

இதுவனைத்தும் பாசிசத்தின் குணாம்சமாகும்.

புலிகள் தொடர்ந்து இதையே செய்பவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும்.மாவிலாறு நீர்த்தேக்கம் முதல் இன்றைய கல்மடுக்குள அணைக்கட்டுவரைப் புலிகள் செய்யும் மனிதவிரோத அரசியல் தமது சொந்த மக்களின் அழிவையே துரிதப்படுத்துவது.எனவே,புலிகள் அமைப்பு வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படவேண்டியவர்களே!



இத்தகைய நடாத்தையை எவர் மகிழ்ந்து கொண்டாடுகிறாரோ அவர்களும் மக்கள் விரோதிகளே!


நாம் மீளவுஞ் சொல்கிறோம்:

"புலிகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு யுத்த வியூகங்களைச்
செய்வதைத் தவிர்க்கவேண்டும்.மக்களின் வாழ்வோடு விளையாடும் பொய்மைத் தமிழீழக்
கோசத்தைத் தொலைத்துவிட்டு, இருக்கின்ற போராளிகளையாவது காக்க முன்வரவேண்டும்.இதை
விட்டுவிட்டு மக்களைக் கேடயமாக்கி வைத்தபடி ஒரு போரைச் செய்து தமிழீழம்
காணமுடியுமெனில் உலகத்தில் உங்களைவிட மனிதவிரோதிகள்-முட்டாள்கள்
எவருமில்லை."


சிங்கள வன்கொடுமை அரசே இன்று குறிப்பிட்டளவு மக்கள் நலனுடைய அரசாகத் தன்னைக்காட்டும்போது, புலிகள் தம்மைப் பயங்கரவாதிகள்தாமெனப் பறைசாற்றும் மக்கள் விரோத நடவடிக்கை செய்வது எதனால்?
இக் கேள்விக்கு,"அவர்கள் பாசிஸ்டுக்கள்,எனவே அதைச் செய்கிறார்கள்."என்ற பதிலைத் தவிர வேறென்னத்தை நம்மால் சொல்ல முடியும்?

கடந்தகாலத்தில் தமிழ்ச் சமுதாயத்துள் வாழ்ந்த முஸ்லீம் இனத்தை கிட்லரின் அதே அரசியல் நடாத்தைகள்மூலமாகப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து அடித்து விரட்டியோடவைத்துத் தம்மைப் பாசிஸ்டுக்களாக உலகுக்குக்காட்டினார்களே,அதே செயல்கள் மீளவும் புலிகளால் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடப்பட்டு, இலங்கை அரசையும்,அதன் சிங்களச் சியோனிசக் கருத்தமைவுகளையும் இத்தகைய நடாத்தைகள்மூலம் நியாயப்படுத்திவிட முடிகிறது.

புலிகளால் மக்கள் பட்டது போதும்.

போய்த் தொலையுங்கோடா தம்பிமாரே!
போதும், உங்கள் தமிழீழப் போராட்டம்.


மக்களுக்கு, "கல்மடுக் குளக் கட்டை மீளக்கட்டி குடியிருப்பதற்கும்,விவசாயஞ் செய்வதற்கும் இலங்கை அரசைவிட்டால் வேறுயாரும் இல்லை"என்பதை மீளச் சொன்னதற்கு-செய்ததற்கு நன்றி!


ப.வி.ஸ்ரீரங்கன்
25.01.2009

13 comments:

vannisingam said...

இராணுவத்தின் 59 ஆவது படையணி சற்று முன் முல்லைத்தீவை கைப்பற்றி நகரினுள் முன்னேறிச்செல்வதாக இராணுவம் உறுதிசெய்துள்ளது.குளத்தை உடைத்தோம் கோட்டையை உடைத்தோம் என்று சொல்லி சொந்த வீட்டை கைவிட்டுட்டாங்கள் அண்ணமார்.தல முந்தியெண்ணடா குரங்;குகளோட தொத்திக்கொண்டு இருக்கலாம்.உடம்பு பெருத்துப்போனதால பண்டியோட பண்டியாத்தான் இருக்கலாம் இப்ப..

Anonymous said...

கல்மடுக்குளத்தை புலி உடைத்த செய்தி வெளிநாடுகளில் உள்ள புலிவால்களால் மிக பெரு வெற்றியா கொண்டாடபடுகிறது.இவர்களா தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ளவர்கள்!!! உங்கள் பெறுப்புபான பதிவை பாராட்டுகிறேன்.

Anonymous said...

வாலிக்கும் இராவணனுக்கும் செய்த அதே வஞ்சகம் மறுபடியும் அரங்கேறுகிறது.. !
மானத்துடன் மடியும் வன்னியின் புதல்வர்கள் வரலாற்று நாயகர்கள் !
இந்த அவலத்தை தடுத்து நிறுத்தாத உலகத்தை மதிக்க வேண்டிய கடமை எமக்கு இல்லை !

வன்னியில் நடைபெறும் வர்ணிக்க முடியாத மோசமான மரணங்களை தடுத்து நிறுத்த சர்வதேச சமுதாயத்தால் இயலவில்லை. பர்மாவில் நடைபெற்ற அவலங்களை நிறுத்த முடியாத சர்வதேச சமுதாயம் அதுபோலவே வன்னி மரணங்களையும் தடுத்த நிறுத்த இயலாத நிலைக்கு வந்துள்ளது. இறுதியாக இந்திய நடுவண் அரசு மட்டுமே இன்று இதை நிறுத்தக் கூடிய இறுதிப் பலம் உள்ள ஒரே அரசாக இருந்தும் அது மௌனம் காக்கிறது.

உணவின்றி, ஓடும் குருதியை கட்டுப்படுத்த மருந்தின்றி, விழுந்து குற்றுயிராகக் கிடக்கும் அப்பாவியை தூக்கிச் செல்ல ஆளின்றி மானிடம் தவியாய் தவிக்கிறது. அன்று ருவாண்டாவிலே ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டபோது ஏன் உலக சமுதாயம் மௌனமாக இருந்தது என்ற இரகசியம் தமிழைத்தவிர உலகின் அத்தனை மொழிகளிலும் வெளியாகிவிட்டது. அன்று மௌனமாக இருந்த ஐ.நாவும் மற்றய உலக தாபனங்களும் இன்றும் அதுபோன்ற ஒரு காரணத்திற்காகவே மௌனம் காக்கின்றன.

இப்படியான அவலத்தை கம்பர் இரண்டு இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார். இலங்கேஸ்வரனாம் இராவணனின் மகன் இந்திரசித்து வஞ்சகமாக கொல்லப்பட்டபோது இராவணன் அழுத காட்சி..

விழும் எழும் அழும் அரட்டும் நிலத்தை தன்மேனியால் உழும்
விக்கும் விதர்க்கும்…

என்று விழுந்து.. எழுந்து.. நிலத்தை உழுது… தாங்கொணா சோகத்தை அடைந்தான். இறுதியில் நயவஞ்சகர்கள் அவனுக்கு அரக்கன் என்று பட்டம் கட்டினார்கள்.

வாலி மரணத்தின்போது…

வீரமன்று விதியன்று உன் மண்ணினுக்கு
என் உடல் பாரமன்று பழியன்று
பண்பொழிந்து இது என் செய்தவாறு நீ..

என்று இராமனைப் பார்த்துக் கேட்டான். இந்த அழுகிய செயல் வீரமான செயல் அல்ல, விதியும் அல்ல, உனது மண்ணுக்கு என்னுடல் பாரமும் அல்ல.. என்று ஒழிந்திருந்து அம்புவிட்ட இராமனைப் பார்த்துக் கேட்டான் !

இந்த இரண்டு சம்பவங்களும்தான் இப்போது வன்னியில் மறுபடியும் நடந்திருக்கிறது. யாருடைய மண்ணுக்கும் வன்னி மக்கள் பாரமாக இருக்கவில்லை. இப்போதும் நாமும் அதையே கேட்கிறோம்.. இது வீரமன்று, விதியன்று, பண்பொழிந்து இது என்ன செய்கிறீர்கள்…

நிறுத்துங்கள்…

இதுபோன்ற அநீதிகளை செய்வோர் வரலாற்றில் அடைந்த தண்டனைகளை காவியங்களின் முடிவில் காணவில்லையா பாவிகளே…

மறுபடியம் மறுபடியும் சொல்கிறோம், உறுதிபடச் சொல்கிறோம்.. உங்கள் நன்மைக்காவே சொல்கிறோம்.. இது இறைவனின் திருச்சபையில் மன்னிக்க முடியாத குற்றம்.

இந்த அநீதியை தடுக்க முன்வராத சகல உலக அரசுகளும் இன்று வன்னி மக்கள் படும் அவலத்தைவிட பாரிய அவலத்தை இயற்கையால், இறைவனின் கோபத்தால் சந்திக்க நேரும்…

அரசியல் ! அதிகாரம் ! மமதை ! பணம் ! பகட்டு ! படாடோபம் ! நாமே பெரியோர் என்ன எகத்தாளம் ! இவைகளை வைத்துக் கொண்டு இக் கொடுமைகளுக்கு துணை போகிறீர்கள் !

வன்னியில் உள்ள மக்களுக்கு நீங்கள் செய்யும் அநீதி மாபெரும் தவறு !

உலகத்திலேயே நாகரிகமான மக்கள் வன்னியிலேயே இருக்கிறார்கள் !

உலகத்திலேயே மானமுள்ள மக்கள் வன்னியில்தான் இருக்கிறார்கள் !

உலகத்திலேயே நல்ல மனமுள்ள, குழந்தை உள்ளம் கொண்ட, தன்மானமுள்ள மக்கள் அங்குதான் உள்ளார்கள் !

பாவிகளே ! கொடிய அரக்கர்களே ! நிறுத்துங்கள் உங்கள் தாக்குதல்களை !

வன்னியில் மடியும் ஒவ்வொரு தமிழனும் உலக யுத்தத்தில் லெனின்கிராட்டை காக்க உயிர் கொடுத்த மக்கள் போல உலக வரலாற்றின் நாயகர்கள் ! சிங்கள இனவெறியரிடம் அடி பணியாது மடியும் எம் உறவுகளுக்கு வீரவணக்கம் !

Anonymous said...

நீ மனநோய்காக 3வருடம் ஜேர்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பேற்றும் அந்தநோய் மாறாமல் முற்றிவிட்டது என்பது நன்றாகத் தெரிகிறது.தோழர் என்று சொல்லிக் கொண்டு தோழிகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய உன்னுடைய கடந்த காலத்தை திரும்பிப்பார் காமவெறியனே!

Anonymous said...

ada thayoli ange enna nadakuthunnu therinjittu pesada ngommava oothavane.

kandavanukku poranthavane thayoli.

anga ellorum saagum pothu rajapakse sunniya oombinaayada?
thayoli ngomala nai okka

பொற்கோ said...

மனித வாழ்வில் மதிப்பிடமுடியாதது மட்டுமல்ல,மறுபடியும் வராதது `உயிர்` அதைப்பற்றியே யாம் கவலைப்படவில்லை.உடமைகள் இழந்தால் உருவாக்கிக் கொள்ளலாம்.ஆனால் யாம் உயிரைக்கொடுத்தேனும் எம் தாயகத்தை பெறுவதில் எவரோடும் நாங்கள் சமரசம் இல்லை.முடிந்தால் புரி்ந்து கொள்ளவும்.

vannisingam said...

எவன் நான் தமிழன் நான் தமிழன் என்டு அடிவயித்திலிருந்து கத்துகிறானோ அவனுக்கு தமிழ் அபிமானம் துளியும் கிடையாது.இன்னுமொரு இனத்தை அவமதிப்பதால் உனது இனததை எல்லோரும் தூக்கித்தலையில் வைக்கப்போவது இல்லை.எப்பொழுது நீ இன்னுமொரு இனத்தை மதிக்கிறாயோ அவர்களின் சிறப்புக்களை மெச்சுகிறாயோ அப்பொழுதுதான் உன் இனத்தின் சிறப்பு மற்றவர்களால் பேசப்படும்.இனக்கலவரம் நடந்தது நூலகம் எரிந்தது இந்திய அமைதிப்படை தமிழ்ப்பெண்களை மானபங்கப்படுத்தியது. பதிலுக்கு நீங்கள் செய்தது என்ன முஸ்லிம்களை கொள்ளை அடித்தது நாட்டைவிட்டுத்துரத்தியது பஸ்களுக்கு குண்டுவைத்து அப்பாவிச்சிங்களமக்களளை கொத்துக்கொத்தாக கொன்றது கரையோர சிங்கள விவசாய கிராமங்களை கொள்ளையடித்தது பள்ளிவாசல் பூந்து பொங்கல் வைத்தது இவைதான்.இவ்வாறு செய்தவர்களைத்தான் நீங்கள் தலைவர்கள் எனவும் உங்கள் விடிவுக்கான பாதைக்கு வழிகாட்டுபவர்களாகவும் பார்க்கிறீர்;கள்.அவர்கள் உங்களை அழைத்துச்சென்ற பாதைகளை திரும்பிப்பாரத்தால் பிணங்களையையும் பதுங்கு குழிகளையும் தான் பார்கிறீர்களே தவிர விடிவுக்கான அவர்களது பயணம் முடிந்த மாதிரித்தெரியவில்லை.உங்களுக்கு அடிமனத்தில் இருக்கிறது இன வெறி.சிங்களவரை அடிக்கும் எவரும் உங்களுக்கு அவதாரம் தான். நாளை புலிகள் இல்லாத நாளில் டக்ளஸ்
வேவானந்தாவோ பிள்ளையானோ இதைசெய்தால் நீங்கள் அவர்களின் குசுவையும் குடிக்கத்தான் போகிறீர்கள். உங்களுக்கு தேவை சிங்களவனை அடிக்க ஒரு கூட்டம்.விறுவிறுப்பான சினிமாப்படம் போல அடிக்கடி வரும் போதைதரும் சண்டைக்காட்சிகளும் மலிவான வீரவசனங்களும் தான். சிங்கள அரசாங்கங்கள் இனவெறியுடையவர்கள்.காலம்காலமாக நீரூபிக்க பட்ட உண்மை இது.இவர்களைவிட நூறுமடங்கு அருவருப்பான முகம் உடையவர்கள் விடுதலைப்புலிகள்.தங்களுடைய கட்டுப்பாட்டை இழக்கவிரும்பாமல் ராணுவத்தை எதிர்பதால் மட்டுமே இவர்கள் புனிதமடைந்துவிட முடியாது.இதைச்சொல்வதால் என்னை தமிழின விரோதி என்பாயானால் சோல்லி விட்டுப்போ.. சிங்கள ரானுவத்தால் குடும்பத்தையும் விடுதலை புலிகளால் சுயத்தையும் சொத்துக்களையும் இழந்தவன் நான்.எஞ்சியிருக்கிற சில தமிழர்களுக்காக இதை கேட்டுவிட்டுப்போகிறேன்.

vannisingam said...

//ada thayoli ange enna nadakuthunnu therinjittu pesada ngommava oothavane.//

அடுத்தவீட்டில களவெடெண்டு இன்னொருத்தனை சொல்லுறவன் முதல்ல தன்ட வீட்ட களவெடுத்தவனாத்தான் இருப்பான்.இப்பிடித் தாயை மதிப்பவர்கள்தான் புலிகளின் வாலைப்பிடிப்பவர்கள்.இவர்கள்தான் எங்களுக்குச் சுதந்திரத்தையும் தமிழ் ஈழத்தையும் பெற்றுத்தருவதாக நம்பிக்கை தருபவர்கள்.உன்னிடம் சொல்வதற்கு எதுவும் இருந்தால் எடுத்துவை. ஒழுங்காக இருந்தால் ஏற்றுக்கொள்கிறோம் தவறாக இருந்தால் திருத்திக்கொள்கிறோம். அப்படி இல்லை உனது சுயசரிதையை சொல்லித்தான் தீர்வேன் என்றால் உன்னை விட இவற்றில் சாதனைசெய்தவர்கள் இன்று முல்லைத்தீவில் சாவின் முனையில் இருக்கிறார்கள்.போய்ச்சோல் உச்சுக்கொட்டிக்கேட்பார்கள்.

Anonymous said...

get lost man,same old thing.
you also get lost, vannisingham.
you cry about sinhalese and others ,but you avoid talking about the atrocities by sinhala army and paramilitaries.
you talk about LTTE killing other cadres from other movements,why don't you talk other members killing LTTE cadres.
you talk about the dam,why don't you talk about sinhala army's cluster bombs and killing of civillians.
you man vannisingham.
you seem to be celebrating army getting into Mullaitivu.
this is like celebrating your sister being raped by your next door neighbour.
we don't even consider people like you as normal human being,let alone a tamil.
how much money did you get from sinhala govt?

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//மக்களின் அதீத தேவையான நீராதாரத்தோடு விளையாடுபவர்கள் உலகத்தில் என்றுமே மன்னிக்கப்பட முடியாதவர்கள்///

இறந்த பெண் போராளிகளின் உடலில் விளையாடுபவர்களை மன்னிக்கலாமா?

உங்கள் சாத்திரங்கள் என்ன சொல்கின்றன இதை பற்றி?

Unknown said...

pakka Anti Tamils and Pro Srilankan post. TOday only I read all your post.. I get a feel that you are really a srilankan bought tamil speaking person.. !
you are here just to take srilankan propoganda across bloggers. you are doing it either for money or for some specific reason..!

also, i believe vannisingam is ur counterpart, both of u share the money i believe..

why dont u write a post saying "Srilankan Army - Stop your Genocide?"

Anonymous said...

Throhikalin vaasahangal emakku vendaam...
Singalavaindam adimai paduvathai vida entha ilappum shanthosamaanathu...
Neeyum oru thurohi... Naalaiya thamileela thesaththil unnaiyum varalaaru sollum innumoru eddappanendu

Anonymous said...

அறிவு கொட்டவன் ஒருவனின் வழமையான காமடி இது. புலிகள் உடைப்பதாக இருந்தால் எதுக்கு கல்மடு குளத்துகட்டை உடைக்க வேண்டும்.? இரணைமடு குளக்கட்டை உடைத்து இருந்தால் இலங்கை படைகளுக்கு இன்னும் அழிவுகளை ஏற்படுத்தி இருக்க முடியும்.

இரணை மடு கட்டு மட்டும் உடைந்து இருந்தால் கிளிநொச்சி முதல் ஆனையிறவு வரை அள்ளி கொண்டு போய் இருக்கும்.

அறிவற்றவரே எழுதும் போது பேனா மூடியையும் மூளையையும் களட்டி வைத்து விட்டு எழுதாதீர்.

துணிவிருந்தால் இதை பிரசுரியும். பேடியே.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...