Thursday, January 03, 2008

ஞானி நிலவினைச் சுட்ட மூடதை சுட்டுவிரல் நோக்கினால்?...

ஞானி நிலவினைச் சுட்ட
மூடதை சுட்டுவிரல் நோக்கினால்?...


கிராமத்தில் அடிக்கடி பாட்டியின் வாயிலிருந்து வரும் இந்த மொழிக்கு ஒத்ததாக "தலித்தியம்-பெரியாரியம்,இலக்கியஞ் செய்யும் எந்த ஈழத்து மனிதரையும் நம்ப வேண்டாமென"ச் சொன்னார் வலைப்பதிவர் தமிழச்சி அவர்கள். இப்போது, இன்னொரு அவசரமான குறிப்பில் தனது ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்!மிக அற்புதமான புரிதல் அது.சிந்தனை என்பது எங்ஙனம் தோன்றுகிறதென்பதை அவர் புரிந்த தளத்திலிருந்தே இவை உருவாகிறது.அதாவது அவரது மதிப்பீடுகள்!


நாம் சார்ந்திருக்கும் கருத்தானது சிந்தனை என்பது"புறநிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுகிறது"என்ற பொருள் முதல்வாதத்தோடு ஒத்தி வருவது.இதைக்கடந்து சிந்தனையானது தனித்துவமானது-சுதந்திரமானது,அது எப்போதும் சுதந்திரமாக எதிலும் கட்டுப்படாமல் இருப்பதான கருத்தியல் கட்டுமானத்துள் இறங்க முனையும் கருத்துக்களுக்கிசைவாக தமிழச்சி குறிப்பிடுவதைப் பார்க்கும் போது, அவரது அறிவினது வியாபித்த புரிதலின் கருதுகோள் மிகை வாதத்துக்கு ஏற்றதல்ல!


என்றபோதும்,மனிதரின் வாழ் நிலையே மனிதவுணர்வைத் தீர்மானகரமாகத் தகவமைக்கும் போது, நாம் எமது நிலையைச் சுட்டுவது தகும்.


தனிநபர்சார்ந்த மிகையான மதிப்பீடுகள் என்பது என்ன?


ஒரு நபரை,அவரது பலம் பலவீனங்களை அறியாது தலையில் தூக்கிவைத்து,அந்த நபரால் எல்லாம் முடியும்.அவர் சமூகப் புரட்சிக்கு வித்திடுவார்.அவரால் ஒரு தேசம் விடிவுறும்.அவரால் வறுமை ஒழியும்.அவர் மிக அற்புதமான "நல்ல"மனிதர்,அவர் பார்போற்றும் ஆற்றலுடையவர்...இத்யாதி மேட்டர்களைப் பற்றிய மதிப்பீடுகள் தகர்கின்றன என்று சொல்லும்போது,தமிழச்சி அவர்கள் கலிலியோ கலிலாய் பற்றியும், பொருள்சார்ந்த அவரது குறிப்பிட்ட புலனாகும் அறிதல் பற்றியும் கூறுகிறார்.



இதுக்கும் தனிநபர்சார்ந்த மிகையான மதிப்பீட்டுக்கும், பொதுமைப்படுத்தும் தளம் எதுவாக இருக்கிறது?


சமுதாயப் புரட்சி,விடுதலை என்பதெல்லாம் தனிநபர்களின் விருப்புகளால்-ஆர்வக் கோளாறுகளால் நிகழ்வதல்ல.அவை சாரம்சத்தில் நிலவுகின்ற அமைப்பை மாற்றும் பொருளாதார மாற்றம் மற்றும் சமுதாயத்தில் பெரும் பகுதி மக்கள் இணைந்தாற்றும் வேலைத் திட்டத்தோடு நடை பெறுவது.இங்கே,சிந்தனையின் தோற்றம்,புறநிலையின் தன்மை அது தரும் அகநிலையின் மாற்றம்,சிந்தனையூடாக உணரப்படும் கற்பித மொழி,அந்த மொழியைச் சிந்திப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உடைந்த ஊடக நிலை.இதன் வாயிலாக மனிதர்களின் இயலாமை என்றெல்லாம் சிந்தனை பற்றிய புரிதலில் பற்பல கூறுகள் இருக்கிறது.எது எவ்வகையாகினும் புற நிலையின் தன்மையே சிந்தயைத் தூண்டுகிறது!


அறிவியல் தரவுகள் புறப்பொருள்களின்சார்தலிலிருந்து மீள் உருவாக்கங் காண்பவை.


இல்லாதவொன்றிலிருந்து எந்தவொரு உலகமும் இல்லை.இங்கே, பருப்பொருளாக இருக்கும் மூலத்திலிருக்கும் எத்தனையோ நிலைகள் அறிவியற்றரவுகளாக நம் முன் விரிகிறது.அவைகூடக் கால அவகாசத்தில் உண்மையாகவும் இன்னொரு காலத்தில் தவறான புரிதலாகவும் இருக்கச் சாத்தியமாகிறது.


பொருள்சாரா அகநிலையிலிருந்து எந்தக் கண்டறிதலும் நிகழ்வதல்ல.


பாம்பைக் கண்டவுடன் தடியெடுத்து அடிக்க முனையும் அறிவானது எங்ஙனம் செயற்படுகிறது?


ஒன்று பொருள்சார்ந்து.மற்றதும் பொருள்சார் அநுபவத்தைக் கற்பிதமாக அறிந்த உணர்வு நிலை.இவை இரண்டும் புறநிலையின் தன்மையிலிருந்தே அகநிலைப் பண்புகளை ஒழுங்கிட்டவை.


மற்றவரின் கருத்துக்குச் செவிசாய்த்தல்- சுதந்திரம் அளிப்பதென்ற கருத்துச் சுதந்திரத்துக்கும் நான் சொன்ன சிந்தனையில் நிலவுகின்ற அமைப்பின் மேற்கட்டுமான கருத்தியல் செயற்பாட்டுத் தொங்கு நிலை-உணர்வு-கற்பிதம் போன்றவற்றுக்கும் சம்பந்தம் என்ன?


இன்றைய கல்வியானதே இந்த அமைப்பின் மிகப் பெரும் கருத்தியல் நிறுவனமாகும்.இங்கே,மானுட நடத்தைகள் யாவும் அந்த வாழ் நிலையிலிருந்தே எழுகிறது.இதை மறுப்பவர்கள் மதவாதிகள்!



அவர்களேதாம் கூறுவார்கள் அனைத்தும் பிறவிக் குணம்,பாரம்பரியத் தொடர்ச்சி.தேவ குணம்,அசுர குணம் என்றபடி.இதன் தொடர்ச்சியாக "ஆத்துமா"எனும் கருத்தியல் மனது தெவிட்டாது பல கதைகளைச் சொல்லி அது இறையின் இன்னொரு பகுதி என்பர்.அங்கே,மூப்புப் பிணி,பாவ புண்ணியம் நீங்கிய,கண்களால் காணமுடியாத,எதுவுமே தீண்டமுடியாத-எவ்வுணர்வுமற்ற பெருவாழ்நிலை அதற்குக் கற்பிக்கப்பட்டுள்ளது.அதாவது ஐம் புலன்கள் உடலைச் சேர்ந்தவை,புலன்களின் உணர்வாக "ஆத்மா"இருக்கிறதென்கிறது உபநிஷதம்!


நீங்கள் எந்தவகை தமிழச்சி?


தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...