Thursday, January 03, 2008

ஒருவர் ஈழத்தவனை நம்புவதோ அல்லது இந்தியனை நம்புவதோ...

தனிநபர் சார்ந்த மிகையான மதிப்பீடுகள் வலுவிழக்கின்றன!



ஒருவர் ஈழத்தவனை நம்புவதோ அல்லது இந்தியனை நம்புவதோ சாரம்சத்தில் மானுட நடத்தையை நம்புவதே!அங்கே,நிலவும் சமுதாய ஒழுங்குகளே மறைமுகமாக நடத்தையாகின்றன.முதலாளியச் சமுதயத்தில் இன்றைய வாழ்வு முறைகள்-அநுபவங்கள் யாவும் மிக வேகமாகப் பொதுமையாகிறது.


தனிமனித நடத்தைகளின் மீதான ஆழ்ந்த புரிதல்கள் அவசியமானவை!


எந்தத் தனிநபரும் முற்றுமுழுதான ஞானப் பழமோ அன்றி சமூகத்துக்கு விரோதமான மனிதராகவோ இருப்பதற்கில்லை.

மனிதர்களை அவர்களது வர்க்கச் சார்பிலிருந்து புரிந்து கொள்வதற்கும் அப்பால் நிலவுகின்ற அதிகார-ஆதிக்கச் சிந்தனைகளின் அடிக்கட்டுமானமான பொருளாதார உறவுகளுக்குள் பொருத்தி அறிவது-தீர்ப்பிடுவதே சரியானது.ஏனெனில், புறநிலைகளின் தன்மையே நமது சிந்தனையைத் தூண்டிவிடுகிறது.இந்தச் சிந்தனையின் புறநிலை ப+ர்வமான பொருள்சார் அறிவானது சாரம்சத்தில் மாற்றித்திலிருக்கிறது.மாறும் பொருளின்றி மாற்றம் மட்டுமே நிரந்தரமாகிறது.எனினும்,பொருளுக்கும் மனிதவுணர்க்குள் நிலவும் உடலுக்கும் நேரிடையான பகைமுரண்பாடுண்டு.

இங்கே,மனம்-சிந்தனை-ஆத்மீகத் தேடல்-நிலை என்பது இருப்பதால் ஒவ்வொரு மனிதரும் இன்னொரு மனிதரிடத்திலிருந்து வேறுபாடான அநுபங்களைக் கொண்டிருப்பதால்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்"என்பது மனிதரிடத்தே அகவயக் குறைபாடாகவே பொருந்துகிறதெனினும், இந்த மாற்றத்தை இன்றைய சமுதாயமானது தொடர்ந்து தமது இருப்புக்கும்-நிலைத்த வியாபகத்துமாகப் பயன்படுத்திவரும் ஒவ்வொரு கணத்திலும் தனிமனித நடத்தைகள் மிகவும் தொங்கு நிலையான தளத்தில் தன்னை இனம் காட்டுகிறது.இங்கே,ஈழம் என்றோ அன்றி இந்தியாவென்றோ எந்தவொரு சிறப்பும் எந்தத் தனிமனித நடத்தைக்கும் கிடையாது.நிலவுகின்ற அமைப்பின் அனைத்துச் சீரழிவும் அந்தச் சமுதாயத்துள் வாழும் ஒவ்வொருவரிடமும் பிரதிபலிக்கும்.

இத்தகைய சமூக உறவுகளில் எதேச்சையாக எதுவும் நடப்பதற்கில்லை.எல்லாமே ஒழுங்கமைந்த முறைமைகளால் திட்டமிடப்பட்டு உறிதிப்படுத்திய இந்தவுலகத்தில்,தனி நபர்களின் உதிரித்தனமான புரட்சிகரத் தன்னார்வக் கருத்தாடல்கள்-செயற்பாடுகளின் செயலூக்கமானது எதுவரை?





இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் தனிநபர் சார்ந்த மிகையான மதிப்பீடுகள் வலுவிழக்கின்றன!

மனித இருப்பின்மீதான எதிர் தாக்குதலாகவிரியும் மனிதர்களின் மூளை,அந்த மூளையைத் தாங்கும் உடலை விவேகமற்ற வெறும் மாமிசப் பண்டமாகக் காண்கிறது.இது தன்னிருப்பின்மீதான உச்சமான எந்தக் கனவுகளையும் சிதைத்து,ஆத்மீக உறவுகளனைத்தையும் வெறும் சடங்குத்தனமான நகர்வுகளாக்கி விடுவதில் முனைப்பாக இருக்கிறது.அர்த்தமற்ற தனிநபர் வாதங்களால் சக மனிதரை அழித்துவிட முனையும் கருத்தாடல்கள் எதிர் புரட்சிகரமாக மாற்றமுற்று,எதிரியிடம் கைகாட்டும் செயலூக்கமாக விரிவடைகிறது.


நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.ஒவ்வொரு தனிநபர்களும் அதீதமான உணர்வெழுச்சிக்குள் சிக்குண்டு மிகையான கனவுகளை விதைப்பதில் காலத்தைக் கடத்துவது வெற்றிக்கான பாதையாகாது.



நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது.இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது.ஆனால் இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து,அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் இந்த அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை.

கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும்,அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும்,வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது,எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டுவைத்திருக்கிறது.ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு,அதன் நகலாகத்தாம் இருக்கிறது.


சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர்ர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!


சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது, நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.இது பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம்.இத்தகைய தவறுகள் பலரைப் போடுவதற்கும் உடந்தையாக இருக்கிறது.தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.



இப்படி உலக வளர்ச்சி நகரும்போது, ஆதிக்க சக்திகளோ இன்றைய சூழலைப் பயன்படுத்தி, புரட்சிகரமான அமைப்பைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுண்ணிகளைப் புரட்சிகர வாதிகளாக்கி ஒடுக்கப்படும் மக்களைக் காவு கொள்கிறது.


இங்கே யாரு உண்மையாகப் பேசுகிறார்கள் என்பதே புரியாதிருக்கும்போது-எவரோடிணைந்து காரியமாற்றுவது,தோழமையைப் பெறுவது?


உண்மையான புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டலற்ற தனித்தவொரு எந்த மனிதரும் தனது செயலுக்குத் தன்னையறியாமலே ஒரு எல்லையை வைத்திருப்பார்.அந்த எல்லை உணரப்படும்போது இதுகால வரையான அனைத்துப் பரிமாணங்களும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது.இத்தகைய சூழலில் அவநம்பிக்கையும்,இயலாமையும் சமூகத்தின் பொது எண்ணவோட்டமாக நிலைகொண்டு மக்களைக் காவுகொள்கிறது.



சதா போராட்டத்துக்குள் வாழும் மனிதர்கள் எதிரியைப் புரிந்திருப்பினும்-அவர்களது போராட்டம் எதிரியிடம் சலுகைகளைப் பெற்றுத் தமது வாழ்வைச் செப்பனிடுவதாகப் போராட்டம் முடங்கிக் கிடக்கிறது.இங்கே>ஒருவர் ஈழத்தவனை நம்புவதோ அல்லது இந்தியனை நம்புவதோ சாரம்சத்தில் மானுட நடத்தையை நம்புவதே!நிலவும் சமுதாய ஒழுங்குகளே மறைமுகமாக நடத்தையாகின்றன.


"அரசியல்நோக்கத்திற்காக பொது வாழ்க்கையிலும்,இலக்கியத்துறையில் இருக்கும் தேசத்துரோகிகளைப்பற்றி குறிப்பிடுகின்றேன்.":-(((((


ப.வி.ஸ்ரீரங்கன்

3 comments:

Anonymous said...

தமிழச்சி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார், தொட்டால்தானே தெரிகிறது சுடுவது நெருப்பென்று, பட்டால்தானே புரிகிறது. இணையத்தில் எத்தனை பேர் சொன்னார்கள் கேட்டாரா? பட்டறிதல் என்பது இதுதானே.

Anonymous said...

அண்ணாச்சி இவ்வளவு வார்த்தை சித்துவிளையாடலில் சொல்லிய விடயம் என்னவோ பூச்சியம் தான்.

Anonymous said...

தமிழிச்சி ஏன் ஒழித்து விளையாடுகிறா? பெரியாரின் பேத்தி வெளிப்படையாக சொல்லலாமே? எவ்வளவு கெஞ்சிக்கேட்டோம்? பட்டுத்தெளிந்துள்ளா போலும்!!!

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...