Saturday, October 29, 2011

அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம்

மக்களைக் காத்தல்: ஜனநாயகம்.

இதுவரைகாலமாக...


உலகம், "சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்;" (dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!

கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன."உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen werden,das Friedliche Zusammenleben der Voelker zu stoeren,insbesondere die Fuehrung eine Angriffskrieges vorzubereiten,sind verfassungswidrig.Sie sind unter Strafe zu stellen.-Artikel 26 vom grundgesetz der B.R.D.)ஆனால் இத்தகைய முதலாளித்துவ நாடுகள் மக்களை மடையர்களாக்கும் சட்டங்களை இன்னும் மக்களுக்கான நலனோடு சம்பத்தப்பட்டதாகக் காட்டிக்கொள்ளும்போதே தமது வர்க்க நலனைக் காக்கப் போருக்கு மக்களை அணிதிரட்டும் சட்டத்தையும் அதற்கு நேரெதிராகக் கொண்டிருக்கும்போது ,இது மிகக் கேவலமான பித்தலாட்டமாகிறது.

"Arikel 87a feststellt,dass der Bund Streitkraefte ausschliesslich zur VERTEIDIGUNG aufstellt.Und dass dies auch eine Wehrpflichtarmee sein kann,dafuer gibt der Artikel 12 a gruenes Licht:>>Maenner koennen vom vollendeten achtzehnten Lebensjahr an zum Dienst in den Steitkraeften...verpflichtet werden." என்னவொரு இழிமையான சட்டம்!இத்தகைய சட்டங்கள் சொல்வதென்ன?"ஜேர்மனிய அரச அடிப்படைச் சட்டம் 87அ பிரிவு கூறுகிறது:யுத்தப்படைகளானவை தேசப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.இது சட்டப் பிரிவு 12அ வினது கூற்றுக்கு பச்சைக் கொடியைக் காட்டி,பதினெட்டு வயதடைந்த இளைஞர்களை கட்டாய இராணுவத்துக்கு ஆட் திரட்டுவதைக் கடமையாக்கிறது. இங்ஙனம் மேலும் கீழும் முரண்பாட்டோடு சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் நாடுகள் தமது நலன்களை மக்களின் நலன்களாக்கிப் படம் காட்டும் இன்றைய தருணத்தில் ஒடுக்கப்படும் இனம் தனது தலைவிதியைத் தாமே நிர்ணியிப்பதைப் பயங்கரவாதமென்கின்றன.தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வன்மம் நிறைந்த பரப்புரைகளால் தமது மனிதவிரோத முகங்களை மறைக்க முனையும் இத்தகைய முதலாளித்துவ நாடுகள்தாம் எமது மக்களைத் தமது கால்களில் கட்டிப் போடுவதற்காகச் சமாதான நாடகம் ஆடுவதும்,முடியாதுபோனால் தமது படைகளை அனுப்பி எம்மைக் கொன்று குவித்து வருகிறார்கள்.

இன்றைய இலிபியா யுத்தம் வரையான மக்களைக் காத்தல்-சர்வதிகாரத்தை ஒழித்தல் என்பதிலிருந்து பண்டுதொட்டுப் புரியும் அரசியல் அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் எதுவுமில்லையென்றாகிறது.இதைக் கார்ல் போப்பரது உரையாடல்கள் பலதில்,அவரது தாய் மொழியில் நான் புரிந்துகொண்டவை.




சில விதிமுனைப் பயன்களில் மிக நெருக்கமானது பிரிடிறிக் காய்க்கினது[Friedrich A.Hayaek : Der Weg zur Knechtschaft ] எழுத்துவழியான நவலிபிரலது தாரளமயக் கோட்பாடு.(Sir Karl Raimund Popper) துணைக்கழைத்து மார்க்சியம் என்பது "பெரும்பாலும் நேர்கோட்டுத்தன்மையும் ஒருவித கருத்துமுதல்வாதமும் நிறைந்திருபதாகச் சொல்கிறார்".

கார்ல் போப்பர்,திறந்த சமுதாயத்தின்(After the Open Society) பிரதிநிதி,அது கத்தோலிக்க அறக்கட்டளைகளால் கௌரவ"டாக்டர்"பட்டங்கள் பல பெற்றவராச்சே!ஆக,கார்ல் போப்பர் சொன்னால் அது நிச்சியம் கடவுள்(Das offene Universum) சொன்னதாகவே இருக்கும்.
மார்க்சியம் குறித்த மதிப்பீடுகளுக்குச் சுவர் எழுப்பியெவரும் வைக்காதவரை அது கல்லடிபட்டுக்கொண்டுதாம் இருக்கும்.அதுதான் சிறப்பென்பதால் - கார்ல் போப்பரின் தாய்மொழி வாயால் -நம்மவரும் கேட்பதற்கானவொரு ,போப்பரது ஏகாதிபத்தியச் சார்பு மொழியாடலைத் தரமுடியும்:"Popper bezeichnet Marx als bedeutenden Ökonomen und Soziologen" (-Die offene Gesellschaft und ihre Feinde :211)இப்படிச் சொன்னவர்கள் ஆயிரம் கோடிப்பேர்கள்.

இப்போது கார்ல் போப்பர் சொன்னதால கார்ல் மார்க்ஸ் அதி முக்கியமான சமூகப் பொருளியலாளனாக நாங்க எடுக்கத்தாம் வேணுமென்றில்லை.அவர் சொன்னதற்கு அப்பால் சேறடிப்பதற்கான தோற்று வாய் நம்ம கார்ல் போப்பருக்கு எப்படி உருவாகுதென்பதற்குச் சுவாரிசியமான நிகழ்வொன்று வந்து தொலைகிறது.வீனில் காவல் துறைகஇகும் கம்யுனீஸ்டுக்களுக்குமான கெடுபிடியில் ஒன்பது காவல் துறை நாய்கள் செத்தவுடன்(;(wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker)புட்டுக்கொண்டு வந்த அவரது திறந்த சமுதாயத்தின் தெள்ளிய மனது கேகலின் கருத்தியல் மனதைப் பின்பற்றிய கார்ல்மார்க்சிடமும் இத்தகைய போக்கு நிலவுவதாகச் சொன்ன கையோடு நம்ம எமக்கும் அரிக்கத் தொடங்கிவிடுகிறது.


இவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு அருமையான வாக்கியத்தை கார்ல் இறாய்முண்ட் போப்பரே சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்:"Wers nicht einfach und klar sagen kann, soll schweigen und weiterarbeiten bis erst klar sagen kann“
"எவருக்கு, இலகுவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லும் தெளிவில்லையோ அவர் மௌனித்தபடி தொடர்ந்து கற்றுத் தெளிவாக உரைக்கும் வரை மௌனித்திருப்பது உத்தமம்" என்பது நாம் ஏற்பதுதாம்.

இஃதின்று, முக நூல் வரைவாளர்களுக்குச் சாலப் பொருந்தும். குறிப்பாகத் தேசியவிடுதலைப் பொழிப்பாளர்களுக்கு.-பெரிதும் பொருந்தும்-ஏனெனில், கார்ல் போப்பரே அவிட்டுவிட்ட தத்தவங்களுக்குக் கருத்துமுதல் வாதம்தாம் காரணமாகிக் கிடக்கிறது.அவரது முன்று உலகத்திலும் முழுமுதலாய் விரிவது :

Welt 1, das ist die physikalische Welt
Welt 2, die Welt der individuellen Wahrnehmung und des Bewusstseins
Welt 3, die Welt der geistigen und kulturellen Gehalte, die vom Einzelbewusstsein unabhängig existieren können (z. B. die Inhalte von Büchern, Theorien oder Ideen)

இந்த மூன்று உலகத்திலும் முடிவாக விரிவது கருத்தியலால் உந்தப்பட்ட முடிவுகள்தாம்.

இந்தப் பொருளுலகத்துள் பௌதிக அடையாளங்கள் முட்டிக்கொள்ளும் எல்லாக் காரணத்தினதும் முடிவுகளும் கார்ல் போப்பர் குறிப்பிடுவதுபோன்று, உண்மைக்கு அருகினில் என்ற சங்கதியுள்தாம் கண்ணிகளைப் புதைத்து வைத்திருக்கிறது.

இந்தக் கதையில் மார்க்சியத்தைக் கருத்துமுதல்வாதம் என்பதின் தொடர் பரிணாமங்கள் நாம் அறிவதில் அவசியமொன்றுண்டு.

அது எப்பவும்போலவல்ல.

இப்போதைய தேவையின் தொடர் நிகழ்வுகள் ;


உணர்வினது தனித்துவமான உண்மை எதுவென்று நாமும் புரிந்துகொள்வதற்கு நீண்டவொரு சமாந்திரப் பாதையொன்று விஞ்ஞானத்தில் கொட்டிக்கிடப்பதால் குறுக்குப் பாதை எதற்கு?

உலக உயிரினதும் பண்பாட்டினதும் நிகரத்தாண்டவம் தனித்துவமான உணர்வை உற்பத்தியாக்குவதன் பருமம் இன்றைய இந்த உலகத்தின்-குறிப்பாக மேற்குலக இன்னுங் கொஞ்சம் தாண்டி நம்ம அமெரிக்க மாமாக்கள் சொல்வதுபோல்(Hier möchte ich noch eine weitere Aussage Poppers hinzufügen, die lautet: `Es kann keine vollkommene Gesellschaft geben.´உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயம் கிடையவே கிடையாது.

(Vgl. das `Nachwort´ zu Popper/Lorenz: Zukunft (Anm. 29), S. 138. ... Und er fügt hinzu, S. 140: `Wenn du eine vollkommene Gesellschaft anstrebst, so wirst du sicher gegen die Demokratie sein.உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயத்தை நோக்கி நீ பாடுபட்டால்-போராடினால் நிச்சியமாக ஜனநாயத்துக்கு எதிராகக் காரியமாற்றுகிறாய்´)"

"நாங்கள் திறந்த தனித்துவமான சமுதாயம்"அதைத் துலைப்பதற்கே காரியமாற்றும் இஸ்லாமியப் பயங்கரவாதம்...கயிறுவிடும் தளம் கார்ல் போப்பரின் தேட்டம்தாம் .இதுவே,இன்றைய இலிபியா யுத்தம் வரையான "மக்களைக் காத்தல்-சர்வதிகாரத்தை " ஒழித்தல் என்பதிலிருந்து பண்டுதொட்டுப் புரியும் அரசியல் அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் எதுவுமில்லையென்றாகிறது.

By ப.வி.ஸ்ரீரங்கன்

Sunday, October 23, 2011

"தமிழீழ விடுதலை"ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு.

"தமிழீழ விடுதலை"ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு.

ரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கி,வியாபித்து வருகிறது.

இந்த வியாபித்த விருட்ஷத்தின் முகிழ்ப்பானது புலிகளது விதேசியவாதப் போராட்டத்திலிருந்தே தோன்றிக்கொண்டதல்ல. மாறாக,காலனித்துவக்க காலக்கட்டதிலே கட்டியெழுப்பப்பட்ட பிரித்தாளும் தந்திரமும்,அதன்பின்பு,தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு, அரசியற் போக்குமே காரணமாகிறது.பண்டா செல்வா ஒப்பந்தத் தோல்வியிலிருந்து தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு,ஏகாதிபத்திய நிகழ்சி நிரல் அரசியலை இளைஞர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான, ஜே.ஆர்.ஜெயவர்த்தினா வின் ஆர்ப்பாட்டம்- கண்டி நோக்கிய பாத ஜாத்திரையும்,தமிழ்ப் பகுதியில் அமிர்த லிங்கத்தின்தலைமையில் சிங்களச் ஸ்ரீ எழுத்து அழிப்பு,சிங்கள எழுத்துப்பலகைகள் அகற்றும் போராட்டத்துக்கும் அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ.யின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது.

இந்த வரலாற்றில், புலிகள் வந்தடைந்த ஆயுதப்போராட்டமானது இறுதியில் இந்த நலன்களை வரலாற்றிலிருந்து புரிந்துகொண்ட ஒரு அரசால் பிளவடைந்த ஏகாதிபத்திய முகாங்களது பக்கச் சார்பிலிருந்து முடித்து வைக்கப்பட்டது.இந்த முகாங்களது பூடகமான முகாங்கள் மகிந்தாவை ஆதரித்தபோது அங்கே,இலங்கை முழுமொத்த மக்களது நலன்களைத்தாம் அவை தமக்குள் உட்கொண்டனவேயொழிய , தமிழ்பேசும் மக்களை மட்டும் மொட்டையடிக்கவில்லையென்பதை எவருணருவார்?


இங்ஙனம் புரிய மறுக்கும் புரிதலேதாம்,கியூப நாட்டுக் காஸ்ரோவையும், கடாபியையும் தமிழர்களது எதிரியாக இனம் காணுகிறது. இந்தப் பிளவடைந்த ஏகாதிபத்திய முகாங்களது பிரிவின் ஒரு தரப்புக்குத் தலைமைதாங்கும்சீனாவும்,ருஷ்யாவும் இலங்கை இராணுவத்தளபதிக்குக் கேடயம் வழங்கியதும்,புலிகளை அழிக்க உதவியதும்,புலிகள் இன்றைய அரேபிய அமெரிக்க அடியாட்படையாகச் செயற்படும் தருணங்களை ஏலவே இனங்கண்டதன் விளைவே!

அதாவது,புலிகள்,விடுதலை அமைப்பு அல்ல.அதுவொரு அந்நிய ஏகாதிபத்தியங்களது கைக்கூலி அடியாட்படையாகவே தென்னாசியப்பிராந்தியத்தில் வளர்ந்தது.அது,இந்தியப் பிராந்திய ஏகாதிபத்தியத்தின் தயவிலிருந்து விடுபட்ட தருணமானது மேற்குலகச் சார்புகொண்ட யாழ்பாணியத்தின் கருத்தோட்டத் திசையூக்கத்தின் வெற்றியாகவே புரிந்துகொள்ளத் தக்கது.இந்த வெற்றியைத் தோற்கடித்தபோது,புலிகள் வரலாற்றிலிருந்து தொடைத்தெறியப்பட்டனர் என்பதையும் வரலாற்று வெளிச்சத்தில் வைத்து ஆய்ந்துணரவேண்டும்.

இன்றைய இலங்கையில்,புலிகளது இராணுவ வாதம் தோல்வியில் முடித்துவைக்கப்பட்டபின்,மகிந்தாவால் பரப்பப்படும் ஒரே இனமக்கள்- ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து ஜனநாயகக் குறுக்கல் நிகழ்த்தப் படுகின்றன.எனினும்,இலங்கையில் வெளிப்படையான அரசியலைக் கோருவதற்கும்,அதை நிலைப்படுத்தவும் எதிர்க்கட்சிகள்,சுயாதீனச் சமூகக் கட்டமைப்புகள் இப்போதும் வலுவாக இருக்கின்றன.இது,புலிகளது அரச கட்டமைப்பிலோ அல்லது அவர்களது அமைப்பு மட்டத்திலேயோ இருந்திருக்கவில்லை!தம்மைத் தவிர வேறு அமைப்புகளோ,மக்கள் மன்றங்களோ இருக்க அவர்கள் அனுமதித்ததே கிடையாது.இதனூடாகத் தம்மைத்தாமே"ஏகத் தலைமை"என்றும் அழைத்து இதை உறுதிப்படுத்தினார்கள். சகோதரப்படுகொலையூடாக,மாற்று இயக்ககங்களை அவர்கள் அழித்தபோது,இந்தியாவின் நலன்களுக்கிசைவான பக்கத்தில்நின்று, தமிழ்பேசும் மக்களது விடுதலையைக் காட்டிக்கொடுத்தனர். அநுராதபுரத்தில் சிங்களக்கிராமத்தை; தாக்கி,பலவுயிர்களைக் கொன்று குவித்ததும்,முஸ்லீம் மக்களைக் கருவறுத்ததும்,இதன் தொடர்ச்சிகளாகும்.புலிகள் இந்தமட்டத்தில் ஒரு அடியாட்படைக் குரிய அனைத்துக் குணாம்சங்களையும் கொண்டிருந்தார்கள்.


வெளிப்படையான அரசியலைப் புலிகள் மறுத்ததன்விளைவே புலித் தலைவன் பிரபாகரனது சரணடைவும்,சாவும் இதுவரை மறைக்கப்படுகிறது.அது மட்டுமின்றி, எவரிடம்,எத்தனை கோடி மக்கள் சொத்துக்கள் முடங்கின,இறுதி வன்னி யுத்தக்கட்டத்தில் என்ன-எப்படி நிகழ்ந்தனவென்பதெல்லாம் இதுவரை எவருக்குமே தெரியாது.புலிப்பினாமிகள் அனைத்துத் தடயங்களையும் அழித்துவிட்டு,மக்கள் சொத்தைத் தமதாக்கித் தலைமறைவாகி விட்டனர்.இத்தோடு ஒப்பீட்டுரீதியாகப் பார்க்கும்போது இலங்கையின் அரச வடிவத்தின்மீதான விசாரணைகள் வெளிப்படையாக மேலெழும் தருணங்கள் அதிகமானவை.ஆனால்,புலிகளது வரலாறு,அவர்களது உறவுகள்,தவறுகள்,விடுதலையைக் கருவறுத்த சர்வதேசத் தொடர்புகள்,செல்வம் குறித்தெல்லாம் எப்போதும் எந்தத் தடயமும் கிடைக்காது.இது,பாசிசத் தகவமைப்பின்றி வேறென்ன?-மாபியாக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் இதிலிருந்து வேறுபாடுண்டா?

ஜனநாயகக் குறுக்கலது பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும்.புலிகள் ஏலவே ஜனநாயக விழுமியங்களை நசுக்கியபடித் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கிக் காயடித்த வரலாற்றிலிருந்து அவற்றைக் கற்றுணர்ந்த இலங்கை அரசானது புலிப் பாணியிலேயே இலங்கை மக்களை ஒடுக்கும்சட்டவாக்கத்தை, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அதிகாரத்தின்வழி கண்டடைகிறது.

சமூக வளர்ச்சியானது எப்பவும் முரண்பாடுகளாலேயேதான் தீர்மானிக்கப்படுகிறது.இத்தகைய முரண்பாடுகள் மனிதர்களின் உழைப்பினாலும் அதன் பங்கீட்டினாலுமே ஆரம்பமாகிறது.இந்தியத் துணைக்கண்ட மக்களினங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலனித்துவத்தின் அதீத பாச்சலே காரணமாகிறது.இதனால் சமுதாயம் படிமுறையான வளர்ச்சியை இழந்து,திடீர்ப்பாச்சலுக்குள் வீழ்ந்தபோது பழைய எச்சங்கள்"அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ-உள்ளகக்காலனிதுவ(சாதிய ஒடுக்குமுறை) அமைப்பாகத் தோன்றி புதிய இரகப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கிறது.

இனங்களுக்கிடையில் இனவாதக் குரோதத்தை வளர்த்தெடுத்து அதன்மூலம் தொழிலாள வர்க்கத்தைக்கூறுபோடும் திசையில், தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே தப்பானது.எனினும்,இன்றைய மகிந்தா குடும்பத்து ஆட்சியின் பரிணாமமானது இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவைவிட அதிகாரத்தில் இருத்திவைக்கப்பட்ட அந்த வர்க்கத்தின் ஆட்சி-கட்சி,கட்சித் தலைமையின் அதீத சுயநலப் போக்குகளுக்கும் இசைந்தபோவதான நலன்களை வெளிப்படுத்துகிறது.இதனால்,இலங்கையின் ஆளும்வர்க்கத்துக்கு நிகராக அதிகாரத்திலுள்ள தலைவனின் நலன்களும் மேலெளும்போது இரட்டிப்பான ஒடுக்குமுறைச் சூழலொன்று வன்முறை ஜந்திரத்துக்குள் எந்த விழுமியத்தையும் கோரிக்கொள்ள முடியாது.

தேசங்கடந்த நிதிமூலதனமானது, இன்னும் ஒருபடி மேலே போய் இலங்கை-இந்தியா போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளைத் தரகு முதலாளியமாகச் சீரழித்தபின் இந்த நாடுகளின் முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு-எச்சங்களாகக் காக்கப்படுகிறது.இத்தகைய எச்சமே இன்னும் இனங்களுக்கிடையிலான போட்டிகளையும்,தப்பெண்ணங்களையும் உருவாக்கி அதை வலுவான முறையில் ஆயுதமாகக் கைலெடுக்க முனைகிறது.என்றபோதும்,இலங்கை அரச வடிவத்துள் நிலைமைகளுக்கொப்ப மாற்றங்கள் நிகழ்ந்து வெளிப்படையான அரசியலைக் கோரக்கூடிய சூழல்கள் நெருங்கி வரமுடியும்.

ஆனால்,அந்த வெளிப்படையான ஜனநாயகக் கோரிக்கையை இன்றைய புலம் பெயர் மக்கள் மத்தியில் செயல்படும் புலிப் பினாமிகளிடம் கோர முடியாது.அவர்கள் வெளிப்படையான பிரபாகரனது மரணத்தையே மறைக்கும்போது,திரை மறைவில் நிகழ்த அரசியல் சதுரங்கத்தை-உறவை,அடியாட் தனத்தையெல்லாம் விபரிப்பார்களா?ஒரு பயங்கரவாத இயக்கத்திடம் இத்தகைய பண்புகளை இனம் காணமுடியாதென்பதற்குப் புலிகள் அமைப்பே உதாரணமாக இருக்கிறது.புலிகள்ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதனாற்றாம், இலங்கை அரச வடிவம்,அதன் ஜனநாயகப் பண்புகளிலிருந்து எதையுமே செரிக்காத சர்வதிகாரத்தன்மையை இலங்கைக்கே பாடமாகக் கற்பித்தவர்கள்.இதன் தாக்கத்திலிருந்து இலங்கைக் கட்சியாதிக்கம் விடுதலை பெறுவதற்கு நீண்ட காலமெடுக் குமாயினும்,அஃது, எப்படியும் மாறிய தீரவேண்டிய பொருளாதார நகர்வுகள் இலங்கையில் முகிழ்ப்பதானது இலங்கை மக்களது குடிசார் அமைப்புகளது மீள் வரவுக்கு ஏதுவாகவே இருக்கிறது.

இந்தவகையில்,புலிகள் அமைப்பு என்பது தமிழ்பேசும் மக்களது தொங்குசதை பிண்டங்களே.அதை அறுத்து எறியும் சத்திரச் சிகிச்சை செய்யவேண்டியது புலம் பெயர்ந்து வாழும் நமது மக்களது கடமைதாம். அதுபோன்றே,தமிழ் பேசும் மக்களது அரசியல் வாழ்வு,உரிமைகள் குறித்து இனியாவது வெளிப்படையான அரசியலோடு தமிழ்க் கட்சிகள் இலங்கை அரச ஆதிக்கத்துக்கு முகங்கொடுத்தாக வேண்டும்.இதிலிருந்துதாம் புலிகளது பயங்கரவாதச் சேட்டைகளையும்,பண மோசடிகளையும்,கொலையையும்,கொள்ளைகளையும் தடுக்க முடியும்.அவர்கள் பேசும் போலித் "தமிழர் தாயகம்" எனும் வியாபார விளம்பரத்தையும் அம்பலப்படுத்த முடியும்.

தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயவுரிமையின் உண்மையான இலக்கை எட்டுவதற்குப் புலிகளது திரைமறைவு அரசியலே இதுவரை தடையாக இருக்கிறது.இதை உணரும்போது,புலிகளை அழித்த வரலாறானது புலிகளோடு அழிக்கப்பட்ட மக்களுக்காகவேதாம் இலங்கைமீது பழி சுமத்த முடியுமே தவிர,புலித் தலைமைக்காக அல்ல.ஏனெனில்,புலிகள் பயங்கரவாத அமைப்பென்பது இன்றைய வரலாறக நிற்பதே நிசமான அரசியலது வெளிப்படை.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.10.2011

Thursday, October 20, 2011

கடாபி : சர்வதிகாரி !

கடாபி : சர்வதிகாரி

லிபியாவின் நீண்டகால ஜனாதிபதி மௌமார் அல் கடாபியின் [Muammar Al-Ghaddafi]உயிர் பறிக்கப்பட்டுள்ளது.இதை நோட்டோ இலிபியாவின் இடைக்காலத் தேசியக்"கவுன்சில்"தலைவர் முகமட் இட்சிபிரில் [Mahmud Dschibril]வியாழன், 19.10.2011 இல் தெரிவித்திருக்கிறார்.

மேற்குலக ஊடகங்கள் ஆர்ப்பரிக்கின்றன.அவை,தமது இலக்கும்-பொய்மையும் நன்றாகக் கடைவிரித்து வியாபாரமாவதை (உலகந்தோறும்) பார்த்து மகிழ்கின்றன.

நேட்டோவின் ஒட்டுக் குழுவின் [Rebellen]கையில் உயிருடன் பிடிபட்டுப்போன இலிபியாவின் தலைவர் நேட்டோத் தலைமையின் கட்டளைக்கிணங்கப் படுகொலை செய்பட்டிருக்கிறார்.

இலிபிய வரலாற்றைக் கற்பவர்களுக்கு அத்தேசத்தின் வரலாறு எங்ஙனம் அந்நியப் படையெடுப்புகள் மூலம் சிதறடிக்கப்பட்டதென்பது புரிந்திருக்கும்.கி.மு.700 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இலிபியத் தேசம்-தேசமெனும் கருத்துவடிவம் உருவாகுவதற்கு முன்பே,மூன்று நகரங்களை இணைத்துத் தேசமெனும் வடிவத்துக்கு வளர்ந்துகொண்டது. சபரத்தா,ஓயா,லிபிட்டிஸ் மக்னா [ Sabratha, Oea, Leptis Magna ] போன்ற பெரு நகரங்கள் தமக்குள் இணைந்து ரிப்போலிற் [Tripolitanien (Drei-Städte-Land) ]அரச பரபாலனத்துக்கு இசைந்தவை.இத்தகைய காலத்திருந்து இன்றைய இலிபியாவரையும் இந்த மண் அந்நியப் படையெடுப்பு-காலனித்துவத்துக்கு உட்பட்டிருக்கிறது.கார்த்தாக்கோ[Karthagos](இன்றைய இருனிசியா)அரச ஆதிக்கத்துக்கு (கி.மு.6 ஆம் நூற்றாண்டு) உட்பட்டபோது, அதன் தலைவிதியை ரோம இராச்சியம் விழுங்குவது நிர்ணயமானது.கி.பி.395 வரையில் ரோமிய இராச்சியத்துக்குள் வீழ்ந்துவிட்ட வட ஆபிரிக்க வலையமானது தனது முழு ஆளுமையையும் இன்றுவரை மீளப் பெறமுடியாமலே போய்விட்டது.


நவ காலத்தில் தேசங்கள் உருவாகி,சுயாதீனமுடையவைகளெனப் பீத்திக்கொண்ட"தேசிய அரசு"வடிவமானது மாற்று இனங்களை ஒட்ட மொட்டையடித்தபோது அவை காலனித்துவம் என அழைக்கப்பட்டது.1934 ஆம் ஆண்டில் இந்த இலிபியா இத்தாலிய இலிபியாவென இத்தாலிய ஏகாதிபத்தியத்தால் அழைக்கப்பட்டது. இப்போது இஃது "நேட்டோ இலிபியாவாக" மாறிவிட்டதை நான் உணர்கிறேன்.

மன்னன் செனுசி ஐடிறிஸ்[ Senussi, Idris I.] கீழ்-1951 வாக்கில், பேருக்குச் சுதந்திர இலிபியாவாக பிரகடனப்படுத்தப்பட்ட இந்த இலிபியா 1959 இல் எண்ணை வளக் கண்டுபிடிப்புகளால் மேற்குலகத்தின் பிடிக்குள் முழுமையாகவே கொணரப் பல கெடுபிடிக்குள் வீழ்ந்தது. என்றபோதும், 1.செப்டெம்பர் 1969 ஆம் ஆண்டு இலிபியா, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவேண்டிய "புரட்சியின்" விளைவு, மன்னன் ஐடிறிஸ்,அவன் மனைவி பாத்திமாவையும் [Fatima ]கூட்டிக்கொண்டு கைரோவோக்கு[ Kairo] புகலிடம் புகவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.அதை செய்த "புரட்சிகர தளபதி" மௌமார் அல் கடாபி என்பது இன்று என் சிந்தையில் நிழலாக விரிகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு,இராணுவ-எண்ணை விற்பனை உறவுகளென [ vom 1975 schloss Libyen ein Abkommen über wirtschaftlich-technische und militärische Zusammenarbeit mit der UdSSR]இருஸ்சியாவோடு கூட்டுறவு வளர்ந்த 1975 ஆம் வருடக் காலப்பகுதியில் இருஸ்சியா இலிபியாவின் சுயாதீனத்துக்கு ஓரளவு உடந்தையாகவே இருந்திருக்கிறது.

இன்றைய இருஸ்சியாவானது சோசலிசத்தகர்வுக்குப் பின்பான முதலாளியத் தேசிமாகியபின் பலவகைகளில் இலிபியாவைக் கைவிட்டது.அதன் காரணங்கள் பல.குறிப்பாக,இருஸ்சியாவானது மேற்குலகத் தேசங்களுக்குத் தனது சொந்த எண்ணை-எரிவாயு வியாபாரத்தில் அதிக இலாபமும்,முழுக்கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதால் கடாபியைக் கைவிடவேண்டுமென்று ஜேர்மனியும் வற்புறுத்தியது.இதற்காக ஜேர்மனிய அரசு, இருஸ்சியாவுக்குக் கொடுத்த வெகுமதி "நோர்த் ஸ்றீம்"எரிவாயுக் குழாய்[ Nord-Stream-Pipeline] ஒப்பந்தம்.

இந்தக் குழாய்த் திட்டமானது, எரிவாயுவுக்காக ஜேர்மனிய மக்கள் இருஸ்சியாவில் தங்கி இருப்பதைச் சாத்தியமாக்கி விட்டது.

கஸ்பியின்வலய எண்ணை வளமானது இருஸ்யாவிடமே இருக்கிறது.இதைக் கைப்பற்றும் மகா சதுரங்க ஆட்டத்தை அமெரிக்கா ஜோர்சியா மூலம் ஒக்டோபர் 2008 இல்செய்து பார்த்து(ஜோர்ச்சிய-இருஸ்சிய யுத்தம்) மூக்கு உடைந்துபோனதைத் தற்காலிகமாகத் தேற்றிக்கொள்ளவே இலியாவைப் பலியெடுக்க, ஜேர்மனிய அரசுமூலம் இருஸ்சியாவைக் கட்டிப் போட்டிருக்கிறது.

இலிபியாவின் கூட்டணி-நட்பு நாடுகளாகவும்,எண்ணை வள உற்பதி-ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்த சீன,இருஸ்சிய அரசுகள் தமது சங்காய் ஒப்பந்தக் கூட்டணியையே [Shanghai Cooperation Organisation] ஒரு வியாபாரக் கூட்டணியாக மாற்றிக்கொண்டுள்ளது.

கடாபியை நோட்டோ அணி படுகொலை செய்துவிட்டதானது,கடந்த நாற்பது ஆண்டுகால மேற்குலகத்தின் வட ஆபிரிக்கா மீதான ஆதிக்க ஊசாலாட்டத்துக்குக் கிடைத்த பலமான வெற்றிதாம்.



கடாபியை நரபலி செய்ததன்மூலம், இனி ஸ்த்திரமான ஆதிக்கத்தை வட ஆபிரிக்காவில் மேற்குலகஞ் செலுத்த முடியும்.கடாபி இல்லாத இலிபியாவானது கி.மு.700 ஆண்டளவில் ஏகிப்திய சாம்பிராஜ்யத்தினது வல்லாதிகத்துக்கு உட்பட்ட மண்ணைப்போன்றே இருக்கும்.

1977 மட்டில் கடாபியால் உருவாக்கப்பட்ட சோசலிச அரேபிய மக்கள் குடியரசு இன்று சர்வதிகாரத்துக்குள் கிடந்த இலிபியாவாக மேற்குலகங்களால் சொல்லப்படினும்,இலிபியாவானது கடாபியால் சிறந்தே இருந்தது.

தேசத்தின் சொத்தாக எண்ணை வளம்,6 இல் இருந்து 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி ,தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சம்பளத்துக்குக் குறைவாகச் சம்பளம் கொடுப்பது தடுக்கும் சட்டம் கொணரப்பட்டதும்,இலிபியாவிலிருந்து வட-தென் சூடான்வரை சென்ற நீர் பாசனத் திட்டத்துக்கெல்லாம் [ Great-Man-Made-River-Projekt ]படுகொலை செய்யப்பட்ட கடாபியே ஸ்த்தாபகர்.

மேற்குலகஞ் சொல்லும் "சர்வதிகாரி" என்பது, மேற்குலகத்துக்கும்,தமிழ்ச் சூழலில் புலிப் பயங்கரவாதிகளுக்குமே பொருந்தும்.

மக்களது உரிமை,சுதந்திரம்,ஆதிக்கச் சக்திகளிடமிருந்து எங்ஙனஞ் சிதைக்கப்பட முடியுமென்பதற்கு இன்னும் எத்தனை தேசங்கள் சூறையாடபபட்டு வராலாற்றில் உதாரணமானாலும் புலிவால்களுக்கு இந்த சூத்திரம் புரியவே புரியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.10.2011

Tuesday, October 18, 2011

நடுகல்: பிரபாகரன்!

தலைவர் வே.பிரபாகரன் கார்த்திகை இருபத்தியேழு 2011, பிரசன்னமாவதிலிருந்து புதிய திருப்பம் !


புலிகளது தலைவர் வே.பிரபாகரனை இந்த [27.11.2011] மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் தரிசிக்கமுடியும்!


" சுழன்றடிக்கும் சூறாவளியாக,
குமுறும் எரிமலையாக,
ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக
ஓயாது வீசும் இந்த மாவீரர் தினக் கொண்டாட்டம் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் கைகளில் விடுதலைப் புயல் வீசியபடி மையம்கொண்டு நிற்கிறது. "


இங்கே, தலைவர் வே.பிரபாகரன் கார்த்திகை இருபத்தியேழு 2011, பிரசன்னமாவதிலிருந்து புதிய திருப்பமும் உருப்பெறுகிறது...

னித சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.


தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்வதே சிறப்பானதென்பது ஹாபர்மாசினது முடிவு.துளியளவும் எனக்கு முரணில்லாத வெளியைத் திறந்து வைத்து நானே பரிபாலிக்கும் அந்த வெளியின் தெரிவில் நான் தொலைந்துபோகும் கணத்தில் அழிக்கப்படும் புள்ளி எங்கே என்பதே எனது பிரச்சனை!

இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாக உணர்வதில் இந்தப் புள்ளிக்கு என்ன வேலை?

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

இந்த வெளிகளை மரணப்பொறிவைத்து உறிஞ்சும் கருந்துளைகள் உறவுகளெனும் உருவங்கொண்டிருப்பதால் பதில்வினைமறுக்கும் எதிரீற்புவகைப்பட்ட புறப்பொருள் தொடர்பாடற்பாடுடைய நிறங்களது ஈற்பின் நடுவே நான் சஞ்சலம் அடைகிறேன்.எனக்குள் வெளிப்படும் "இன்மை"என்னைக் கொல்வதற்கு முன் பிறந்ததென்பதில் எனக்கான இருப்பு நீண்ட தூரம் துரத்தியடிக்கப்படும்போது எனது அடையாளம் மறுப்புக்குள்ளாக்கப்படுமென நம்பும் எனது பித்தாலாட்டுத்துள் இது முரண்நகை ஆகிறது.

இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகிரப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் பார்க்கின்றேன்.

என்னைப் புறந்தள்ளிச் செல்லும் காலத்தில் நான் வாழ்ந்தேன் இல்லை!காலத்தைத் தொலைத்துவிட்டு வாழும் ஏதோவொரு தடத்திலிருந்து எனது ஈனக் குரல் உறவுகளை நோக்கி பாசக்குரலெறிவதென்பது முடியாதிருப்பினும் முடிந்தவொரு புள்ளியை மீள அழித்துக் கீறமுனைவதில் எனது இருப்புக்கு நானே கட்டியம் கூறுகிறேன்.

துரத்தியடிக்கப்படும் எனது சுயம் எங்கோவொரு தொலைவில் மூச்சிறைக்கத் தனக்கான அடையாளத்தை அழித்துக்கொண்டிருக்க...

அபத்தப் பரிசோதனையுள் எவரது மூலத்தை எவர் தேடுவதென்பதில் அரிய புள்ளி என்பது புனைவுகளது எச்சமாக இருப்பதையும்,கற்பனையுள் நிலைத்திருக்கும் வடிவ மனித முனைப்புத் தனக்கான அடையாளமாக மற்றவர்களது அல்லது தனது எதிரீற்புப் புறவிருப்பின்பால் தற்கொலையை-பலியை ஊக்குவிக்கிறது.

இது என்ன புள்ளி?; மாவீரர் பட்டியலுள் இருந்து இருந்து வெளிவருவதாக...

வெளிகளை விரியவிடலாம்.வெளிகள் வெளிகளாக இருப்பதால்.இருப்பை அழித்துவிடு.அவை புனைவை வலியுறுத்துவதால்.எந்தத் தன்னிலைகளையும் அவை மறுக்கும் என்பது எனது இருப்பின் நடுவே நான் அனுபவமாக்கிய அடையாளம்.

என்னைக் கொல்,உன்னைக்கொல்.எதற்கும் நடுகல் வைப்பதில் உன்னை முன் தெரிவாக்கும்போது நீ உனக்கான சவக்குழியை நீயாகவே தோண்டுவதில் உனது சுயத்தை எனக்குச் சொல்கிறாய்.

நீயே ஒரு கட்டத்தில் எனது உடன் பிறந்தவன் என்பதும் எவ்வளவு கொடுமை!

நான் அழித்த புள்ளியுள் மறுதலையாகத் தோன்றும் இன்னொரு புள்ளியை அழிப்பதில் எனக்கு எந்தவிருப்பும் இல்லை.ஏனெனில், அதுவே இன்னொருதரம் தன்னை அழித்து மீளக் காத்திருக்கு.

புள்ளி : பிரபாகரன் மாவீரர் பட்டியலுள் இருந்து வெளிவருவதாக.

ப.வி.ஸ்ரீரங்கன்

Tuesday, August 16, 2011

"கம்யூனிசப் பொறுக்கிகள்"

புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியினது அஜந்தாவை இனியொரு தளம் மீளப் பிரசுரித்தது.அதுள், எனது கருத்துக்களைக் கூறியதிலிருந்து பிடுங்கி எனும் வாசகரது கருத்துக்கள் மேலும் மனித சமூகத்தைக் குறித்த பால்யப் பாடத்தைப் புகட்டுவதான தோரணையில் எழும்போது,அதையிட்டுச் சிலவற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் கூறியாக வேண்டும்.நாம்,மனிதர்கள் கடந்த பாதைகளை நிலவுகின்ற வாழ் நிலைகளிலிருந்து புரியாது வேடிக்கைத் தனமாகப் புரிவது ஒருவகை அபத்தம்.

தமிழுக்கு மேலும் வலிமை சேர்க்கும் இராகுல சாங்கிருத்தியானின்"வால்காவிலிருந்து கங்கைவரை"கூட இன்றைய வாசகர்களுக்குத் துணையில்லாது போய்விட்டபோது,நமது வாசிப்பு-கற்கையின் நிலைமை புரிகிறது. இது குறித்துச் சில குறிப்புகளை எழுவதென்பது கருத்து முதல்வாத்தின்மீதான பொருள்முதல்வாதப் பாச்சிலென்பதில்லை! " சமூக வாழ்வே சமூகவுணர்வைத் தீர்மானிப்பதென்ற உண்மையை" உரைத்துப் பாருங்களேன் என்ற அறை கூவலாக...


"பிரச்சனையின் உண்மையான தீர்விலிருந்து தானும் விலகி,மற்றவர்களையும் வேறு திசையில் இட்டுச் செல்வதன் மூலமாகக் கருத்துமுதல்வாதம்,இச் சுரண்டல் அமைப்புத் தொடர்ந்து நிலைபெற உதவுகிறது"


பிடுங்கி,கருத்தாடவதுதெனும் தோரணையில் நீங்கள் கட்டும் அனைத்துக் கருத்தும் "விடுதலைபெற வேண்டிய வர்க்கத்துக்குத் தேவ தூதனை அழைக்கும் மதத் தூய்மை வாதிகளைத் தேடுவது " போலத்தாம் இதுவும்.

ஏதோ கம்யூனிஸ்டென்பவர்கள் வானத்திலிருந்து பிறந்தவர்கள் போலவும்,அவர்கள் இந்த முதலாளிச் சமூகத்தின் கெடுதியான பகுதிகளை உள்வாங்காதவர்களெனும் போக்கில் உரையாட முடியாது.

நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.

சூதும் வாதும்,தவறும்-தப்பும்,எமக்குள்ளே முகிழ்த்திருப்பினும் அவையே இந்தச் சமூகத்தின் வாழ்நிலையாக இருக்கும்போது இதற்கு வெளியில் எந்த உணர்வும் நிலைக்க-முகிழ்க்க முடியாது.


சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றுவதென்பது 5000 ஆண்டுகால இதுவரையான சமூகத்தைப் புரட்டிப் போடுவதென்ற முறையில் அதுள் பலவிதப் போக்குகள் நிலவும்.எதிரி வர்க்கமானது சும்மா கையைக் கட்டி வேடிக்கை பார்க்கும் வர்க்கமெனக் கருதிக்கொண்டும்,அதுள் இடதுசாரிகள் தமது சூதுவாதுகளால் சமூகத்துக்கு நன்மை செய்வதென்ற தோரணையில் தமது நலன்களைப் பார்ப்பதாகவும் அழுவதில் வரலாற்றுப் பொருள்முதல்வாத அறிவைக் காணவில்லை!

தினமும் பொழுதும் எதிரி வர்க்கமானது உழைக்கும் மனிதர்களைப் பல கோணத்தில் வேட்டையாடும்போது,இதுள் எத்தனையோ இடதுசாரிக் கொம்பர்கள் காணாமற்போயுள்ளனர்.எனினும் ஒடுக்கு முறைக்குள்ளாகும் வர்கத்தின் விடுதலையை அந்த வர்க்கஞ் சாதிப்பதற்கான அனைத்து முகிழ்ப்பையும் ஆளும் வர்க்கஞ் சிதைத்தே வருகிறது.

இராகுல சாங்கிருத்தியாயனின் "வால்காவிலிருந்து கங்கை வரை"படித்துப் புரிந்துகொண்ட நீங்கள் இப்படி உரையாடுவது வியப்பாக இருக்கிறது.

ஆரம்பக் கதையான நிஷாவிலிருந்து திவாச் சமூகம் உருவாகுவதற்குள்ளேயே தாய் நிஷா தனது மகள் லேக்காவை வால்க்கா நதியில் கொல்லும் வரலாற்றைப் புரியாதுபோனதாற்றாம் நீங்கள் எல்லோரும் பெரிய"தூய்மை"வாதிகளாக்கப் புரட்டு விடுகிறீர்கள்.முதலாவதாக மனித சமூகத்தை அதன் வில்லங்கமான அனைத்துப் பக்கங்களுடனும் கற்றுவிட்டுக் கருத்தாடலாம். இதைவிட்டு முட்டுச் சந்தி விமர்சனத்தைக் குறித்து அதற்குப் பதிலெழுதுவதை நான் விரும்பவே இல்லை.

இந்த அறிக்கைமீது சரியான விவாதங்களை வரலாற்றுப் பொருள்முதல்வாதப் புரிவுடன் வைக்க முடியாத வாசகர்களையிட்டு நான் மனம் வருந்தவே இல்லை.

இவர்களிடமிருந்து கற்பதும்,கற்றதை மீள மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதெனும் சிறிய புரிதலுடன்தாம் இங்கே எழுதுகிறோம்.

இன்றைய சமூதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தின் மேற் கட்டுமானுத்துக்கு அன்றைய பிரவாஹானின் பிர்மவாதம்(இன்றைய மரூவு: பிரமம்-உபநிஷதத்தின் மூலம்) அதிக மாகக் கேள்வி கேட்டால் தலை வெடிக்குமென கார்க்கிப் பெண்ணுக்கு மட்டும் சொல்லவில்லை.அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலப் புலிகள்வரை(நம்ம புலியைக் கருது வேண்டாம்) இதே கதைத்தாம்.

இங்கே,போகத்துக்கும்-சூதுக்கும்,சதிக்கும் அனைத்துமே உட்பட்டுக் கிடக்கிறது.இதைவிட்டு-அகற்றிப் புரட்சிகரமாக அணி திரள்வதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

என்றபோதும், சரியானதைத் தேடவும்-கதைக்கவும்,அதன்வழியில் தொழிலாள வர்க்கம் தன்னைப் புனரமைக்கவும் காலம்தாம் தீர்மானிக்கும்.அதுவரையும் புரட்சிகரக் கட்சியை நோக்கி முகிழ்ப்புகள் எல்லோர் வடிவிலும் எழும்.அதைச் சேறடிப்பதில் பிடுங்கி,இடுக்கி-மடக்கி வடிவிலும் உருவாகும்.இதையெல்லாம் சொல்வதென்பது கம்யூனிஸ்டுக்கள் "புனையப்பட்ட பூடகம்"இல்லை என்பதற்கே!
மீளவும் ஒருக்கால்,"வால்க்காவிலிருந்து கங்கைவரை"யையும் படியுங்கோ.இதைவிட வேறு மருந்து உங்கட்குத் தேவையில்லை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
16.08.2011

Sunday, July 31, 2011

நாம் மார்க்சியத்துள் கலந்து போகின்றோம்

முன் _சிறு குறிப்பு:

ன்றைய சூழலில் தமிழ்பேசும் மக்களாகிய நாம்,நமது அரசியற் தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.நமது ஓட்டுக்கட்சி அரசியலை நாம் அடியோடு விட்டுத்தொலைத்தலும் முடியாதுபோன அவலச் சூழலில்,புரட்சிகரமான கட்சியின் அவசியம் இன்னும் வலிமையான வெற்றிடமாகவே இருக்கிறது.

எங்களுக்குள் நீடிக்கும் வெளிப்படையற்ற அரசியல்-தோழமையற்ற போட்டி வெற்றுக் கூச்சலும்,வேடிக்கை மார்க்சியச்சவடால்களும் தோழமைகளை நொருக்கி வர்க்க உணர்வற்ற ஜடங்களாக நம்மை மாற்றியுள்ளது.இந்த நாமே இன்றைய இலங்கைப் பாசிச அரசுக்கும்,அந்நியச் சக்திகளுக்கும் ஏதோவொரு வகையில் கூஜாத் தூக்குவதில் போட்டியிடுகிறோம்.

எங்கள் தலைமையில் மக்களைக் குறித்தும் கனவுகாணும் நாம்,முதலில் புரிந்துகொள்ளவும் பாடங்கற்கவும் வரலாற்றுப் புரிதல்களும்,மக்களுமே மிச்சமாக இருக்கிறது-இருக்கிறார்கள்.இதுள் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு தளமும் நமது தலைவிதியை நாமே திறம்பட நிர்ணயிக்க முடியுமாயின் இந்த மொழிபெயர்ப்பில் எனது உழைப்பும் ஏதோவொரு அர்த்தங்குறித்து...
கீழ்வரும் பேட்டியின் டொச்சு மூலத்தை வாசிக்கத் தெரிந்தவர்கள் இங்கே சென்று வாசிக்கலாம்: http://www.jungewelt.de/2011/07-16/001.php

தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்.
01.08.2011


வார விவாதம்

16.07.2011 Junge Welt -வார மஞ்சரி.

"நாம் மார்க்சியத்துள் கலந்து போகின்றோம்."

Li Junru வோடான பேட்டி இஃது.


சீனக் கம்யூனிசக் கட்சினது செயலூக்கம் மற்றும் ஆளுங்கட்சியாக இருக்கும் தறுவாயில் எழுங் கஷ்டங்கள் குறித்தும்.இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இப்போது 90வது அகவையில்காலடி எடுத்து வைக்கும் தறுவாயில் இது உலகிலேயே அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியுமாகும்.மார்க்சியத் தத்துவார்த்தக் கோட்பாட்டு நூலிற்கு முன் மார்சியர்களது செய்வினைப் பயன்.

பேட்டி காண்பவர்: செபஸ்டியன் கார்ல்லென்ஸ்[Sebastian Carlens]

தமிழில்:ப.வி.ஸ்ரீரங்கன்.

[இலீ யூன்று (Li Junru பி. 1947) சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (PKKCV) என்ற நிலை குழு நீண்டகால உறுப்பினராக உள்ளார். அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி,கட்சி வரலாற்றியல் ஆராய்ச்சி மையத் துணை இயக்குனராகவும்,சீனக் கட்யூனிசக் கட்சியின் உயர் நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் அவர் இருக்கிறார். ]


[Li Junru]

90 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 1921 ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி அரசாங்கத்தைக் கொண்டியக்குகிறது.அனைத்து ஆட்சி அதிகாரத்துக்கும் அதுவே பொறுப்பானது.ஒரு விவசாய நாடாகவிருந்த சீனத் தேசம்,தொழிற்றுறை வளர்ச்சியூடாக இன்று உலகின் மிக பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக, அடிப்படையில் மாறிவிட்டது. இந்த வளர்ச்சிக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்களிப்பு என்ன?

சீன கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு மூன்று குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளது.

1: சீனாவின் ஒரு பகுதி காலனித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக இருந்தது.கூடவே,சீனத் தேசமானது ஏகாதிபத்திய வாதிகளது அடக்குமுறைக்கும்,அவமானப்படுத்துலுக்கும் உட்பட்டு நலிந்தது.சீனக் கம்யூனிசக்கட்சியானது சீனத்தை விடுவித்து அதை விடுதலையுடைய நாட்டாக்கி மக்கள் சீனத்தை உருவாகியது அல்லது நிறுவியதென்று சொல்ல முடியும்.

2: சீனக் கம்யூனிசக் கட்சியின் வாயிலாகச் சீன மக்கள் தாமும் உலகத்து மக்கள்கூட்டத்துக்கு நிகரானவர்களென நிரூபித்து உயர்ந்துள்ளனர்.மேலும், சீனா ஒரு வகையில் ஒரு பொருளாதார மற்றும் கலாச்சாரத்துள் பின்தங்கிய நாடக இருந்தது. ஒரு அமைதியான சோசலிச மறுசீரமைப்பு மூலம், சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் ஒரு சோசலிச அமைப்பு நிறுவப்பட்டது.

3: கம்யூனிஸ்ட் கட்சி அதன் சீர்திருத்தம் மற்றும் திறந்த அரசியல் செய்ல்பாட்டை- கொள்கையூடாக ஒரு வலிமையான, ஜனநாயக, நாகரீக மற்றும் இசைவிணக்கமான சோசலிச நாட்டை அமைப்பதற்கு முனைகிறது,சீனாவென்பது ஒரு ஏழை நாடாகவும்,பலவீனமான தேசியவினத்தையும் கொண்டிருக்கும் சூழலில் இதை நோக்கிக் கொம்யூனிசக் கட்சி அதற்கு மாற்றானவொரு வலிமையானதும்,ஜனநாயக பூர்வமானதுமான குடிசார் சமுதாயத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறதென்பதை உலகம் புரிந்தாகவேண்டும்.இந்தச் செயற்பாடானது முழுச் சீன மக்களுக்குமானதும் கூடவே ஒவ்வொரு சீனனுக்குமானதும் என்பதை விளங்கியாகட்டும்.சீனக்கொம்யூனிசக்கட்சியானது ஆளுங் கட்சியாக இருந்தபடி தனது நீண்ட வரலாற்றில் மேம்பட்ட பண்பாடு, மேம்பட்ட உற்பத்தி சக்திகள் மற்றும் பெரும்பான்மையான மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரே ஒரு கட்சி, இந்த நோக்கையெல்லாம் நாம் நீண்ட காலத்தில் நிறுவ முடியுமென நம்புகிறோம்-உறுதியாக இருக்கிறோம். சீனக் கொம்யூனிசக் காட்சியாகிய அது "பிரதிநிதிகள்" என்ற உண்மையில் சரியாக மூன்று முறை கோட்பாடு உள்ளது. இந்த கட்சி எப்போதும் முற்போக்கானதாக இருக்கவேண்டும். இருக்கவேண்டுமென்பது கட்சியை பலமடங்கு வேகத்தோடு முற்போக்கான சிந்தனையோடு வைத்திருக்க வேண்டும். மற்றும் கட்சி எப்போதும் மக்களின் வளர்ந்து வரும் தேவைகளை சந்திக்க வேண்டும்.அதை நிவர்த்தி செய்தாவேண்டும்.



சீன மக்கள் குடியரசானது, 1989 இல் சரிந்து விழுந்த சோவியவிற் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய வீழ்ச்சி குறித்து விவாதிக்கும்போது,இது வரையான ஸ்த்திரமான அரசியல் கட்டமைப்பைக் எங்கிருந்து மக்கள் சீனம் பெற்றது?

ஐரோப்பியச் சோசலிச முகாங்களது வீழ்ச்சியின் பின்னணிக்கு முன்பே சீனக் கொழ்யூனிசக் கட்சியானது மிகச் சரியான சோசலிச வளர்ச்சிக் கட்டுத்துடன் சீனாவில்உயர்ந்து உருப்பெற்றிருந்தது.ஏனெனில்,நாம் மட்டுமேதாம் ஒரு சரியான பாதையைக் கொண்டிருந்தோம்:சோசலிசமானது சீனாவினது சிறப்புக் கூறுகளையும் அதன் வலயத்துக்கேற்ற தேவைகளையும் கவனித்துக் கருத்திற்கொண்டிருக்காது செயற்பாட்டில் சாத்தியமாக்கிப் பயணித்தது.

1989 இல் ஐரோப்பிய முகாங்களது வீழ்ச்சியின் பலாபலன்களிலிருந்து எமக்குமுன் இரண்டு தெரிவுகள் மேலெழுந்தது:

ஒன்று:எமது மறுசீரமைப்புத் திட்டங்களும் சோவியற் வீழ்ச்சியைப் போலவே வீழ்ந்து நொருங்கிவிடப்போகிறதென்று பலர் அச்சப்படுத்தினார்கள்-எச்சரித்தார்கள்.அந்தோ அஃது பூர்ச்சுவா நிலையைக் குறித்துரைத்தது.எனவே,சீனாவானது மரபுசார்ந்த சீனவினது சோசலிசப் பாதைக்கு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.இந்த இரண்டாவது தெரிவினூடாக-யோசனையூடாக கிழக்கு ஐரோப்பிய-சோவியற் சோசலிச முகாங்களது உடைவை வரலாற்றுத் திருப்பு முனைவழியாக ஆழ்ந்து ஆய்வு செய்வதாக இருக்க வேண்டுமென்பது காலக் கட்டளை.அதன்வழி சீனாவானது முதலாளித்துவ லிபரல் முறையை உட்புகுத்த வேண்டிய தேவை உணரப்பட்டது.சீனக் கொம்யூனிசக் கட்சியானது இந்தத் கேள்விகளை மிகத் தீவராமாக ஆய்வுக்குட்படுத்தியது.அதன் வழி இத்தகைய இறுதி முடிவு எட்டப்பட்டது:

மீளப் பழைய பாதைக்குத் திரும்புவது முட்டுச்சந்தி.

முதலாளித்தவத் தாரளவாதம்-லிபரல்,மற்றும் முதலாளித்துவம்கூடவொரு முட்டுச் சந்தியே.எனவே,சீனாவானது கண்டிப்பாகத் தனக்கானவொரு சொந்தப் பாதையை வகுத்தாகவேண்டும்.இந்த வகைச் சோசலிசப் பாதையானது சீனாவினது சிறப்பியல்வுகளை மூன்று முக்கிய வகைகளில் கண்டடைந்து:

1)முக்கியமான மத்திய வேலைத் திட்டமானது பொருளாதார வளர்ச்சியை-அபிவிருத்தியை ஊக்குவித்தல்.

2)சீனாவானது சோசலிச வளர்சிப்படிகளை சீனக் கொம்யூனிசக்கட்சியின்கீழ் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.

3)மறுசீரப்மைப்புப் பொருளாதாரத்தைக்கொண்டு சீனாவைத் திறந்த தேசமாக்குவது.இந்தப் பரிசோதனை-செயற்றிறன் இன்றெமக்கு ஊட்டும் பாடாமானது: இந்தப்பாதையே சரியானதென்பதையும்,இதனூடாக மீளச் சீனமக்கள் எழுந்து பயணிப்பதையும் சாத்தியாமாக்கியுள்ளதென்பதையும் பாடமாகச் சொல்கிறது.

XVIII. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம்( காங்கிரஸ் )2012 இல்திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு ,ஒரு புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. கட்சியின் பொது செயலாளர், ஜனாதிபதி ஹு ஜின்டாவோ மற்றும் பிரதமர் வென் ஜியாபாவோ, பிரதம மந்திரி மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர், வேட்பாளர்களாகப் போட்டியிட முடியாது. ஒரு புதிய தலைமுறை மக்கள் சீனத்தைப் பொறுபேற்க இருக்கிறது.இந்தத் தலைமுறை மாற்றம் சீனாவில் அரசியல்-பொருளாதார கொள்கை மாற்றத்தைச் சாத்தியமாக்கிவிடுவதில் போய்முடியுமா?

பதினெட்டாவது கட்சிக் காங்கிரஸ் மகாநாடானது சீனக் கொம்யுனிசக் கட்சியின் வழி புதிய தலைமுறையை சீன அரசியல் மேடைக்கு அரங்கேற்றப்போகிறது.திறந்த சீனாவைச் சிருஸ்டித்தவர்களது என்ணங்களுக்கேற்றவொரு புதிய தலைமுறையினர் அவர்களர் வார்ப்பிலேயே கட்சியின்வழி தலைமையைத் தோந்தெடுப்பார்கள் என நினைக்கிறேன்.இவர்கள் தடால்புடாலாகவொரு கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்களென நான் சிந்தகவில்லை.இவர்கள் தத்துவார்த்த அடிப்படைகளையும்,கட்சியின் சட்டவொழுங்குகளையும் கடைப்பிடிக் வேண்டும்.இதன்னூடாகவேதாம் இன்றைக்கு, எதிர்காலத்துக்கான நடைமுறைகளும்,யதார்த்த பூர்வமான வேலைத்திட்டப் பொருத்தங்களும்கூடிய சோசலிசத்துக்கான பாதையைத் சீனவுக்கான சிறப்பியல்வுகளுடன் எடுத்தாள முடியும்.சீனக் கொம்யூனிசக் கட்சியானது பொருளாதாரச் சீரமைப்பையும் திறந்த சீனக் கொள்கையையும் கடைப்பிடித்து வைத்திருக்க வேண்டும்.அதன்வழியின் முலமே கட்சியினது உறுப்பினர்களதும்,சீன மக்களதும் பங்களிப்பு-ஒத்துழைப்புக் கிடைக்கும்.எவரொருவர் இதைக் கடைப்பிடிக்கத் தவறுகிறாரோ அவருக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைப்பதிற்கில்லை!இத்தகையவர்களைக் கட்சியின் தலைமையாகவும் தேர்ந்தெடுப்பதில்லை.

21 வது நூற்றாண்டின் இரண்டாவது தசாப்பத்துள் எந்தப் பணிகளைப் புதிதாகத் தேர்வு செய்து, தலைமை முன்னெடுக்க வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?

அவர்களது பணியுங்கூடக் கட்சியினது முழுமொத்த முக்கிய பணிகளே.நாங்கள் 2020 க்குள்ளான சில நோக்கு நிலைகளை சம்பிரதாய முறையிற்றெரிருந்து முன்கணித்துள்ளோம்: இந்தக் காலத்துக்குள்சீன மக்கள் சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களது நல்வாழ்வைச் சிறப்புற வைக்கும் ஆயத்தத்தைத் தொடக்குவது.இதுவே,புதிய தலைமைக்கான மிகப்பாரிய கடமை.இந்த வேலைத் திட்டத்தை முன்னகர்த்தி முடிக்கும்போது நமது நீண்ட தூர இலக்கை 2050 க்குள் அடைந்துவிடுவதுதென்பது சீனாவினது நவீனப்படுத்தல்கள் முற்றுப் பெறுவதென்பது அர்த்தமாகும்(2050 க்குள்).இத்தோடு,புதிய தலைமையானது நமது கட்சிகள் இருக்கும் முரண்பாடுகளை-பிரிதிவாதங்களைத் தீர்ப்பதும் இன்றைய காலத்தின்...

சீனக் கம்யூனீசக் கட்சிக்குக்முன் என்ன முரண்பாடுகள் அண்மித்து நிலவுகறது?

உதாரணமாக, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி இடையேயுள்ள ஏற்றதாழ்வுகள், பல்வேறு பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் , நகரம் ஆகியவற்றுக்குள் நிலவும் சமச் சீரற்ற பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மற்றும் நாட்டில் உள்ள வேறுபாடுகள், நாம் சமூக அமைதியை உருவாக்க வேண்டும்.



சீன அரசாங்கம் 62 ஆண்டுகளில், சீன கம்யூனிஸ்ட் கட்சி வழியாக பஞ்சத்தை மக்களிடமிருந்து கூடியளவு அகற்றியிருக்கிறது.அனைத்துச் சீனமக்களுக்குமான சுபிட்சம் அதிகரித்தது. அதே நேரத்தில் ஒரு இடைவெளி, நகரம் மற்றும் நாட்டின் கிழக்கு கடற்கரை ,மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்குள் நிலவுகிறது.மக்களது வாழ்க்கை தரம் இடையே, ஏழை மற்றும் பணக்காரர் இடையே நீறுபூர்த்த நெருப்பாக முரண்பாடுகளை உருவாக்கி சமூகப்பதட்டத்துள் சீனம்நிலவுகறிது.சீனக் கொம்யூனிசக் கட்சி இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளும்-என்ன நடவடிக்கைகள் அவற்றை போக்கிக்கொள்ள எடுக்கப்படும்?

முதலாவதாகப் புரிந்துகொள்ள வேண்டும்:இந்தப் பாரிய முரண்பாடுகளைச் சீனக் கொம்யூனிசக்கட்சி ஏற்பதியதோ-கொணர்ந்ததோ இல்லை என்பதே.அத்தோடு இவைகளெல்லாம் சீனாவினது வரலாற்றோடு இணைந்தே வந்தவை.கிழக்குக்கும்,மேற்குக்குமான பாரிய இடைவெளி,மற்றும்செல்வந்தர்களுக்கும்,ஏழைகளுக்குமான வித்தியாசங்கள்,நகரத்துக்கும் கிராமத்துக்குமான வித்தியாசங்கள் அனைத்தும் சீன வரலாற்றின் விளைவே.இரண்டாவதாக: சீனக் கொம்யூனிசக் கட்சியினது கடந்த 30 ஆண்டுகால மறுசீரமைப்பு மற்றும் திறந்த அரசியல் வேலைத் திட்டமானது இந்த முரண்பாட்டை ஓரளவு தீர்ப்பதில்ஒரு திட அடிப்படைய உருவாக்கி வெற்றியடைந்துள்ளது.மூன்றாவதாக: கட்சியானது இந்த முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வகைகளில் அனைத்து அளவு முறைகளையும் பிரயோகிக்கிறது.கூடியவரை இம்முரண்பாடுகளை ஓரங்கட்டிவிடவேண்டும்.நாங்கள் யதார்த்தவாதிகள்.இந்த முரண்பாடுகளை.ஏற்றத் தாழ்வுகளைக் குறுகிய காலத்துள் அகற்றிவிடமுடியாது,இஃது,நீண்டகாலப் பொறிமுறையைக்கொண்டது.இதை நாமும் அறிந்தே உள்ளோம்.இப்போது நாம் சாதகமான காலக் கட்டத்துள் இருக்கிறோம்.இதைச் சீனமக்களும் பார்த்தே வருகிறார்கள்,அதாவது, சீனக் கொம்யூனிசக் கட்சியானது இந்த ஏற்ற தாழ்வுகளை-வித்தியாசங்களைக் குறைத்து,நிவர்த்தி செய்வதில் முனைப்புடன் இருப்பதாக.அத்தோடு மக்கள் நம்புகிறார்கள் சீனக்கொம்யூனிசக் கட்சியால் இதைச் சாதிக்க முடியுமென.

பல மேற்கத்திய ஊடகங்களில் பல ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி இறுதியில் "வெடிக்கும்" என்று ஊகிக்கப்பட்டு எழுதப்படுகிறது.குறிப்பாகக் கட்டுமானத்துறையில் இந்த வகை வளர்ச்சியானது ஒரு அபரிதமான "சவுக்கார நுரைக் குமிழி" உற்பத்தையைப் போன்றதே என்பது அவர்களது கணிப்பு.இஃது,எப்போதாவது வெடித்தே தீருமென்று கூறுகிறார்களே. குறிப்பாக சொத்து துறையில் "குமிழி" உற்பத்தி, என சந்தேகிக்கப்படுகிறது ...

சீனாவினது பொருளாதாரம் குறித்து மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து பல கெட்ட கனவுகளைக் காணுகிறார்கள். அத்தகையவொரு வீழ்ச்சியைச் சிதைவை எண்ணி எழுதுகிறார்கள்.சீனப் பொருளாதாரம் பொறிந்து சிதைவதில் அவர்கள் விருப்பங்கள் எழுத்துகளாக மாறுகிறது.ஆனால்,அவர்களது இதுநாள் வரையான கணிப்புகள்-திட்ட முலாங்கள் யாவும் தோல்வி கண்டுவருகிறது.காரணம்,சீனப் பொருதார வடிவங்குறித்த அவர்களது ஆய்வுகள் யாவும் சரியான முறையில் ஆய்வைச் செய்யவில்லை.அத்தோடு சீனக் கொம்யூனிசக் கட்சிக்கு ஒரு பலமான காரணி உண்டு:அதாவது கட்சியானது மனிதவரலாற்றிலிருந்து அனைத்து நன்மையான அநுபவங்களை தனக்குள் செரிக்கிறது.அத்துடன்,உலக நிலவரங்களையும் உள்வாங்கி ஆராய்கிறது.இன்னொரு பக்கம் எந்தப் பிரச்சனையையும் மிகத் தீவிரமான வெறியோடு சவாலாக ஏற்று ஆய்ந்து அறிவதில் விழிப்பாகச் செயற்படுகிறது.இவைகளே எங்களது அரசாங்கத்தின் இலாயக்கு.இவைகளை மேற்குலக ஊடகங்கள் புரிந்துகொள்ளவேயில்லை.உலகப் பொருளாதார நெருக்கடியை ஓரங்கட்ட நம்மிடம் பாரிய பொருளாதாரப் ஊக்கப் பொதி உண்டு.

... மொத்தவிட்டமாக இருக்கும் € 1.2 டிரில்லியன் யூரோக்கள் தானே? .

ஏற்றுக்கொள்கிறேன்.நாம் இந்த நெருக்கடியை நன்றாக் தீர்ப்பதில் வெற்றிகண்டோம்.முதன் முதலாகச் சீனாவே உலகத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் உள்ளது.

எதனால்,எப்படி முடிந்தது?

இந்த நெருக்கடியை ஓரங்கட்டித் தீர்ப்பதில் மட்டும் நாம் கவனத்தைக்கொண்டிருக்கவில்லை.இதன் நெருக்கடி குறித்த சரியான புரிதலை"ஏன்-எதற்கு"என்பதையொட்டிப் புரிந்து சீனாவினது பொருளாதார நகர்வில் மாற்றங்களைச் செய்வதும் நமது விருப்பாக இருந்தது.எங்களது பொருளாதாரக்கட்டமைபின்வழி நாம் அதிக உயர் சேவையைப் பெற விரும்புகிறோம்.இதன் வழியாக எதிர்காலத்தில் வரும் பொருளாதார நெருக்கடியை மிகச் சுலபமாக எதிர்கொண்டு நிவர்த்தி செய்ய முடியுமெனப் புரிகிறோம்.உதாரணமாக:பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம்,உற்பத்திச்சாலை பொறிமுறைமாற்றம் மற்றும்வர்தகப் பொறி முறை மாற்றங்களைக் கவனப்படுத்துகிறோம். இவைகளின் மேம்பாட்டை நாம் இன்னும் எட்டிவிடவில்லை.இதுவே எமுக்குமுன் பாரிய கடமையாக இன்று உள்ளது.


பொருளாதாரத்தின் வெடிப்புக்கேற்ற சுடு நிலையினது தீவிரமான அபாயம், அதீத பணவீக்கத்தை ஏற்படுத்தும் ,உண்மை எந்தளவில் உள்ளது?

இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. உற்பத்தி முறையில் மாற்றம் ஒப்பிடுகையில் பணவீக்கம் பிரச்சனை. ஆனால் அது ஒரு துணை வினைதாம்,நமது விருப்பமெல்லாம் பொருளாதாரப் பொறிமுறையில் மாற்றத்தை செய்வது,கூடவே,நிச்சயமாக, நாம் மேலும் பணவீக்க பிரச்சினைக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.பணவீக்க அபாயம் குறித்த அடிப்படை ஆய்வுகள் நம்மிடம் இருக்கிறது.நாங்கள் அதன் காரணங்கள்,வகை நிகழ்வுகள் குறித்த ஆய்வுக்குள் கண்டடைந்தது,இந்தப் பணவீக்கமானது பழைமையான பிரச்சனையிலிருந்து வேறப்பட்டதே அல்லது வேறானதே என்பதே.முன்னைய பிரச்சனையானது எமது ஊக்கமின்மை,அறிவிலித்தனம் அல்லது அறுவடை வீழ்ச்சியிலிருந்து எழுந்தன,அல்லது வேறு பொருளாதாரக் காரணிகளால் ஏற்பட்டது.அத்தோடு இதுவே பணவீக்கமாகப் புரியப்பட்டது.இம்முறையோ பணவீக்கத்தின் காரணமானதுக்குள் அதிகமான பணப்புழக்கமே காரணமாக இருக்கிறது.அத்தோடு இன்னுஞ்சில காரணங்களில், எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பணவியல் கொள்கை. ஆனால், நமது சொந்த அரசியற் கொள்கைகளும் பணவீக்கத்தின் மிகபெரும் காரணமாக இருக்கிறது.எங்களது கணிப்பின்படி இந்தப் அதிதீவரப் பணவீக்கத்தை க் கட்டுப்படுத்த முடியும்.அத்தோடு நாம் அதைக் கட்டுப்படுத்திப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.அது, பாதிப்பை ஏற்படுத்துவதற்குள்ளும் தனிமனிதர்களைப் பாதிப்பதற்குள்ளும் இப்பிரச்சனைக் குறைத்துக்கொள்ள முடியும்.நாங்கள் பல அளவுகோலை இந்தப் பணவீக்கத்துக்கு எதிராக முன் தள்ளியுள்ளோம். எடுத்துக்காட்டாக:ஊதியத்தைக் கூட்டுவது,அதன் பலாபலனை மக்களுக்குள் இனம் கணாத்தக்கதாக இருந்தது.


மீளவும்,இன்னொரு முறை பொருளாதார நெருக்கடி குறித்த கேள்விக்கே செல்வோம்:ஐரோப்பியக்கூட்டமைப்பானது அதன் உறுப்பு நாடுகளது கடன் பளுவையிட்டு அதீத அச்சத்துக்குள் இருக்கிறது.திவாலுகும் அரசுகள் வரிசையில்ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள்பல திவாலகுமென கூறப்படுகிறது.மக்கள் சீனமோ இத்தகைய தேசங்களுக்கு உதவுவதாகவும்,அரச கடன் பத்திரங்களை வேண்டுவதுமாகக் கூறிக்கொண்டிருக்கிறது.கடன் செலுத்த முடியாதளவுக்கான தீவிரக் கடன் பளுவைச் சுமக்க முடியாத தேசங்களது வரிசையில் கிரேக்கம்,சிலவேளை போர்த்துக்கல்சாத்தியமானவரை அயர்லாந்து எனத் தொடர்கிறது.இதுகுறித்து மக்கள் சீனம் எத்தகைய சிந்தனையோடு-சிபாரிசோடு உள்ளது?இந்த நாடுகள் குறுகிய காலவெளிக்குள் மீளவும் தமது சொந்தக் காலில் நிற்கும் பொருளாதாரப் பலத்தை பெறுவார்களென எப்போதாவது கணித்திருக்கிறதா, இல்லையா...

சீனா மிக பெரிய அந்நிய செலாவணியைக் கொண்டிருக்கிறது, நாம் இன்னும் இதுகுறித்து எப்படிச் சமாளிப்து என்பதே பாரிய கேள்வி.முன்னர், நாம் முக்கியமாக அமெரிக்க கடன் பத்திரங்களை வாங்கிக்கொண்டோம்.அதுவே பாரிய இடர் சிக்கலுக்குரியதாக இருக்கிறது. ஆனால் , இப்போது நாம் ஆபத்தை குறைக்க விரும்பினோம் எனவே மற்ற நாடுகளின் அரசாங்க பத்திரங்களை வாங்க வேண்டும் என விரும்புகிறோம். சீனா பொருளாதார உலகமயமாக்கல் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலை ஆதரிக்கிறது.இதன் மூலமாக அனைத்து நாடுகளும் இதைப் பயன்படுத்தி நன்மை அடையுமென நம்புகிறோம் நாம்.இதைவிட்ட அதீத பாதுகாப்பு வாதமானது அனைத்தையும் பாதிப்புக்குள் தள்ளிவிடுகிறது.ஐரோப்பியக் கூ ட்டமைப்பு நாடுகளது அரச கடன் பத்திரங்களை வேண்டுவதனூடாக நாம் சுதந்திர வர்தகத்துள் எமது பாத்திரத்தை ஆற்ற முனைகிறோம்.அத்தோடு நாம் விரும்புவதெல்லாம் நியாமான போட்டியை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கிடையிலும் சாத்தியமாக்க விரும்புகிறோம். அதே போல் ஒரு "வெற்றி, வெற்றி" சூழ்நிலையை உருவாக்க நாம் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்குள் ஒரு சாத்தியமான சூழலை உருவாக்க முனைகிறோம்.

ஆபிரிக்க மீதான சீனாவினது அதீத ஈடுபாடு மேற்குலகோடு முட்டிமோதுகிறது.இது ஜேர்மனியோடும் என்றாகிறது.இது குறித்து மேற்கில் அதிகமாக விசனத்துக்குள்ளாகிய நாடுகள் கடுமையாக விமர்சிக்கின்றன.ஆபிரிக்க நாடுகளில் சில சீனாவோடான தமது பொருளாதாரவுறவை மிக நெருக்கமாகப் பேணிவருகின்றன. இவைகள்மீது மேற்குலக அரசுகள் சில அழுத்தங்களை பிரயோக்கிறது:சூடான் பிளவுபடப்போகும் நிலை,லிபியாவோ தினமும் குண்டுத்தாக்குதலுக்குள் உட்பட்டுள்ளது.இந்நிலையில் அங்கு சர்வதேசப் பலப் பரீட்சையில்-உறவுகளில் ஒரு மாற்றம் புலப்படுகிறதே.இது சீனாவினது வெளியுறவுக்கொள்கையில் ஏதாவது அர்த்தங்கொள்ளத்தக்கதா?

சீனாவானது ஆபிரிக்கத் தேசங்களது வளர்ச்சியில் அதிக ஆர்வமுள்ளவொரு நாடு.ஆபிரிகத் தேசமானது காலனித்துவ வாதிகளாலும்,ஏகாதிபத்தியவாதிகளாலும் பாதிப்படைந்து இருப்பது வரலாறு.சீனமக்களுக்கும் இந்த அநுபவ வரலாறு உண்டு.இந்த அடக்குமுறையின் தாக்கமானது ஏகாதிபத்தியத்தின் வினையே.

ஆப்பிரிக்கா மக்கள், எங்கள் ஆப்பிரிக்க நண்பர்கள் .அவர்களுக்கு எங்கள் உதவி வேண்டும், நாமும் அவர்களுக்கான உதவிகளைச் செய்கிறோம்.எங்கெங்கு உதவிகள் அவசியமாகத் தேவைப்படுகிறதோ அங்கே எங்கள் உதவிகள் உண்டு.இதுவே,சமவுரிமை உதவி.இஃது இருபக்கத்துக்கும் உட்டபட்ட நட்புரீதியான உறவு.அத்தோடு இந்த வகையிலான உதவிகள் இரண்டு தரப்புக்குமே சாதகமான விளைபயனைத் தரும்.நாங்கள் விரைவில் ஆப்பிரிக்க மக்களதுவறுமை மற்றும் பின்தங்கிய நிலையை அகற்ற விரும்புகிறோம்.இந்தக் கேள்விகளது திசையில் நமக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை.நாம் எந்தவிதக் காலனித்துவத் தூண்டுதல்களையும் கொண்டிருக்கவில்லை.இதுகுறித்து ஆபிரிக்க மக்களே சீனாவைக் குறித்து நன்றாக அறிந்துள்ளார்கள்.மேற்குலக அரசியல்வாதிகளே நெடுகப் புலம்புகின்றனர்,சீனாவானது உள்நோக்கத்தோடு ஆபிரிக்காமீது ஈடுபாடுகாட்டுவதாக.இதுவொரு அவதூறத்தை தவிர வேறென்ன.அத்தொடு இத்தகைய கேள்விகளைத் தொடரும் நாம் அவர்களது உள்விவகாரங்களோடு பிணைவதில்லை.ஆபிரிக்த் தேசத்தவர்களது உள்நாட்டு அரசியலில் நமது உறவுகள் எந்தத் தாக்கத்தையும் செய்வதில்லை,அவர்களுக்கு எமது உதவிகள் கிடைப்பினுங்கூட.இத்தகைய தேசங்களில் பிரச்சனைகள் இருந்தால் அவர்களே அதைத் தீர்த்துவிடுவார்கள் என்றே நாம் கருதுகிறோம்.கூடவே,அந்தந்தத் தேசத்து மக்கள் இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றலுடையவர்களென்றே நாம் கருதுகிறோம்.அவர்களுக்கு அந்த ஆற்றலுண்டு,மாற்றார் அவசியமில்லை.இதுவே,எங்களுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்குமிடையிலான பாரிய வித்தியாசம்.

சீனக் கம்யுனிசக் கட்சியின் அதியுயர் கல்வி நிறுவனமான மத்திய குழு உயர் கல்லூரியின் துணைவேந்தராக இருந்தீர்கள்.அதவாது,இது சீனக் கொம்யூனிசக் கட்சியின்அதியுயர் கல்வி-அறிவுத்துறையானது. எனவே,சீனாவில்இன்று, மார்க்சிசம் எந்தப் பாத்திரத்தில் வினையாற்றுகிறது என்பதை விளக்க முடியுமா?

சீனக் கொம்யூனிசக் கட்சியினது உலகக் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் அடிப்படைத் தத்துவார்த்தக் கருவியாக மார்சிசம் இருக்கிறது.எங்களது சிந்தனைப்போக்கில் இந்த மார்க்சிசமானது சீனச் சூழலுக்கேற்ற, அந்த மண்ணினது விசேசத் தன்மைகளுக்கேற்ப,அதைப் புரிந்துகொண்ட மார்க்சிசமே:மார்க்சிசம்,லெனியம்,மாவோயிசம் மற்றும் டெங்கினது சிந்தனைகள் இணைந்த "மூவகைப் பிரதிநித்துவம்"என்பதோடு, அறிவியல் ரீதியான அபிவிருத்தித்திட்டமாக மார்சிசம் பங்காற்றுகிறது.மார்க்சியத்தை நாம் மறுக்க முடியாத-மாற்ற முடியாத தத்துவமாகக் கற்கவில்லை.மாறாக,மார்க்சியத்தைச் சீனாவினது யதார்த்த நிலைமைக்கொப்ப இணைக்க விரும்புகிறோம்.அதையே செயற்படுத்துகிறோம்.

ஒரு மார்க்சிச வாதியாக,சீனாவினது குணாதிசயங்கள் கொண்ட சோசலிசப் பண்ணபக்கொண்டு, உலக சோசலிச அபிவிருத்தியில் ஏற்படும் முரண்பாடுகளைத்தீர்க்க எந்தப் பதிலைத் தரமுடியும்?

நாங்கள் மார்க்சிசத்தை எங்களுக்குள் கலப்புற வைக்கின்றோம். கட்சிச் செயற்பாட்டாளர்களும்,உறுப்பினர்களும் மார்க்சியத்திலிருந்து இரண்டு அளவுகோல்களைக் கற்கின்றனர்.முதலாவதாக, நாங்கள் மார்க்சினது முக்கியமான கட்டுரைகளைத் தேர்கிறோம்,இவற்றின்வழியாக சீனாவினது வளர்ச்சியைக் கற்கிறோம்.மார்க்சினது ஆய்வுகள்-கட்டுரைகள் யாவும் கட்சி உறப்பினருக்குக் கட்டாயமான பாடமாகும்.இவற்றை அவர்கள் தொடர்ந்து வாசிக்க- கற்றுக்கொள்ளவேண்டும். இரண்டாவது, நாம் மதிப்பிடுவது,மார்க்சியத்தினது முக்கியமான வரலாற்று அநுபவங்களிலிருந்து பிரச்சனைகளைத் தீர்ப்பது அணுகுவது.மார்க்சிய முறை வழியில் சீன யதார்த்த நிலைக்கொப்ப பிரச்சனைகளைத் தீர்ப்பது நமது விருப்பமாகும்:

மக்கள் சீனாமானது,மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் மொத்தத் தொகுப்பையும்[MEGA]மொழி பெயர்த்து முடித்த கையோடு பாரிய நூற் தொகுதிகளாகச் சீன மொழியில் வெளியிட்டது.இப்போதும் அவ்வண்ணம் மேலும் மார்க்சியப் பகுப்பாய்வு நூல்களைத் தெரிந்தெடுத்து,மதிப்பீடுசெய்து, பதிப்பிலிட்டு வெளியிடுவீர்களா?

கடந்த ஆண்டு நாம் இரண்டு முக்கியமான திட்டங்களை நிறைவு செய்து வெளியிட்டோம்.முலாவதாக,மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்சினது 10 தொகுதிகளான மேகா பதிப்பு.மற்றும்,5 தொகுதிகளடங்கிய லெனினது தேர்வு நூல்கள்.நாம் இந்த 15 தொகுதிகளது உள்ளடக்கங்களை மதிப்பீடுசெய்து அவற்றைத் தொகை நூலாக்கி இணைக்கிறோம். இந்தத் தொகை நூற்றொகுதியே எங்களது கட்சிச் செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினகளுக்கான கட்டாயப் பாட நூற்கள்.

http://www.jungewelt.de/2011/07-16/001.php

டொச் மொழியிலிருந்து தமிழில்:

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.08.2011

Thursday, June 30, 2011

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்

நிலையெடுக்கும் அரச ஆதிக்கமும் அதன்வழி அரங்கேறும் இனவொதுக்கற் குடிப் பரம்பலும்.

-சில கருத்துக்கள்


வரலாற்றில் புலிப்போராட்டம்:

புரட்சி,விடுதலை,சோசலிசம்-சுயநிர்ணயப்போராட்டம் குறித்துப் புலிகள் போட்ட முடிச்சுகள் யாவும் படுபிழையானதென்பதை எப்பவோ விமர்சித்து முடித்தாகிவிட்டது.மீண்டும், இந்தப் புலிகளின் கடைக்கோடிப் போராட்டச் செல்நெறி குறித்துப் புலம்பத் தேவையில்லை!ஆனால்,மக்களின் அழிவைக்கொண்டு தமது இருப்பின்வழி மீளவும் புரட்சிகரமான அணித் திரட்சிகளைப் ப(பி)ணப்புலிகள் இல்லாதாக்கும் அரசியலுக்குப் பலர் முண்டுகொடுப்பது சுத்தக் கபடத்தனமானது.

இதற்காகவேனும் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் குறித்துப் பக்கச் சார்பு(புலி-இலங்கை)இன்றி மக்களின் நலனிலிருந்து கருத்துக்களை முன்வைத்தாகவேண்டும்(இனியொருவில் அத்தகைய கருத்தாடலுக்கான வெளியைக் கோருவதிலிருந்து புதியதிசைகள் நோக்கிய பாதையை மெல்ல உருவாக்கிக்கொள்ள முடியும்).

புலிகள், இதுவரை செய்த போராட்டம் தமிழ் மக்களை அந்நியச் சக்திகளிடம் அடைவு வைக்கும் சூழ்ச்சிமிக்க போராட்டமாகும்.இது, தமது அரசியல்-போராட்ட நெறிமுறைகள்தாம் "மக்களின் விடுதலைக்குச் சரியான தெரிவு" என்று "மாற்றுக் கருத்துக்கு" மரணத்தண்டனையோடு மக்கள் விரோத அரசியலைச் செய்து, இலங்கையில் தமிழ்பேசும் மக்களைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு-சோற்றுக்குப் பலியாக்கியது புலி அமைப்பு!

இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்த முள்ளிவாய்க்கால்வரையிலான புலிப்போராட்ட இரகசியப் பேரங்கள்-சரணடைவுகள்,வரலாற்றில் புலிகள் குறித்த மர்மத்தை மட்டும் விட்டுச் சென்றுள்ளது.இந்த மர்மத்தின் மறு விளைவு தமிழ்பேசும் மக்களை இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்துகு அடிமையாக்கியது மட்டுமல்ல சிங்கள மக்களின் சாதாரணக் குணாம்சத்திலும் தமிழ்பேசும் மக்கள் குறித்து ,ஏளனமான பார்வையைத் தோற்றுவித்திருக்கிறது.



தமிழ்பேசும் அடிமைகள்?:

அடிமைகளைக் கைக்கொள்ளும் நிலைகளில், சிங்கள இராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விவகாரங்களும் நமது மக்களைக் காலவோட்டத்தில் மனத் தாழ்ச்சிக்கும் அடிமைத்தனத்துக்குமான சூழலுக்குள் தள்ளிவிடப்போகிறது.இதிலிருந்து மனவூக்கத்தைச் செய்யும் திறவுகோல் புலம்பெயர் தமிழ்பேசும் மக்களது கைகளிலேயே தங்கியிருந்தும் அப்படியானவொரு செயற்பாட்டை-முன்னெடுப்புகளை இந்த மக்கள் செய்வதற்கேற்ற ஒழுங்கமைந்த தலைமைக்குள் ஒருமைப்பட முடியவில்லை.புலிக்கு மாற்றானவொரு புரட்சிகரக் கட்சி எந்தவகையிலும் உருவாகிவிட இயலாதளவுக்குச் சிக்கலானவொரு சூழல் தளத்திலும்,புலத்திலும் நிலவுகிறது.

புலியினது (வி)தேசிய விடுதலைப் போராட்டம்இன்றோ இருந்த இடம் தெரியாது பூண்டோடு அழிக்கப்பட்டு வருடம் இரண்டாகிறது!எனினும்,தமிழ்பேசும் மக்களது விடுதலைகுறித்த இயக்கப்பாடு,ஒருகிணைவு,மக்களை ஸ்தாபனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் ஒரு ஒழுங்கமைந்த புரட்சிகரக் கட்சியால் இலங்கையில் மேற்கொள்ள முடியாதிருக்கிறது. பேருக்கு மார்க்சிய-லெனியக் கட்சிகள்-புதியஜனநாகக் கட்சிகளென"அப்பன் கொல்லைக்குள் இல்லை"என்றபாட்டில் தளத்திலும்-புலத்திலும் முன்னணிகள் முளைக்கின்றன. இந்தச் சூழலிற்றாம் புதியதிசைகளை நோக்கிய கருத்தாடல்களும்-செயற்பாடுகளும் அவசியமாகி நம்முன் சூழல் எழுகிறது.இதை,எங்ஙனம் எதிர்கொண்டு காரியமாற்றுவது?

மேலுஞ்சரிந்து வீழ்ந்துள்ள தமிழ்பேசும் மக்களது ஆண்மை,அவர்களது எதிர்கால வாழ்வுக்கு நெருப்பை அள்ளித் தலையிற்போட்டபாடாய் புலிகளது மர்ம அரசியலது தொடர் நடவடிக்கைகள்"நாடுகடந்து அரசாங்கம்"அந்தக் குழு இந்தக் குழுவென மீளத் தகவமைக்கும் அதே மர்ம அரசியலை என்னவென்பது? இந்த அரசியலை வரலாற்றில் தொடைத்தெறிந்து புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பது நம்மால் முடியாததா?



அதே புலிவழியான அராஜக அரசியல்:

சகிக்க முடியாது வஞ்சனை அரசியல் இது.கண்மண் தெரியாத கற்றுக்குட்டிகளால் கடுகளவுகூட நாணயமற்ற கொலைகள் நடந்தேறியது.இதையும் விடுதலை எனும்பெயரால் நடாத்தியவொரு பாசிச இயக்கம் இன்று தமிழ்பேசும் முழு மக்களையும் அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள நிலையில் முளையரும்பும் அனைத்துப் புரட்சிகர முன்னெடுப்பையும்"புலி-புலி"எனக் கை காட்டும் அரசியலை முன்னெடுக்கும் போலிப் புரட்சிகர சக்திகள்மீது நாம் கோபங்கொள்வதோடு நமது முயற்சியும் சரியாகி விடுமா?

புலிகளின்போராட்டத்தைப் பெரிதாக்கி ஊத வைத்த சக்திகள் அதைப் பூண்டோடு அழிக்கும் அரசலையும் கொண்டியங்கியதையும் நாம் இன்று புரிந்துணரும்போதுகூட,இன்றைய மர்மப் பணப்புலிகளது (நாடு கடந்த அரசாங்கம்,நெடியவன்-கே.பீ.குழு வென இன்னபிற...)தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளின் அரசியல் சூதாட்டத்தை ஜெயலலிதாவடிவில் அரவணைக்கின்றன.

அழிவது மக்கள் என்பதையும்பாராது,இந்திய மத்திய அரசும் அதன் எஜமான இந்திய ஆளும் வர்க்கமும் இலங்கை இராணுவத்தை ஏவித் தனது அறுவடைச் செய்ய முனையும் இந்தச் சூழலிற்கூட புலிகள் குறித்த சீரிய பகிரங்க விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை!

"தலைவர் வருவார்,வரலாறு விடுதலை செய்யுமென"ப் போலி வாதங்களுக்குள் மக்களை கட்டிப்போடும் இந்தப் போக்குகள் ஜெயலலிதாமீது நம்பிக்கையைக்கொள்ளும்படியும் நமது மக்களை முட்டாளாக்குகிறது.

மிகவும் கண்டிக்கத்தக்கது இது.இதை அம்பலப்படுத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்தைத் தனிமைபடுத்தி, நமது மக்களின் விடுதலைக்கு வழிசமைக்கத் தெரியாதவொரு தமிழ்க் கட்சிகளது மூடத்தலைமைகளை நம்பிக் காவடி தூக்கும் தமிழ்பேசும் மக்களின் தலைவிதி அழிவில் முடியப்போகிறது.

தேசியத் தலைவரை இதுவரை நம்பச் சொன்ன பணப்புலிப் பினாமிகள் இப்போது தமிழ் நாட்டுச் சினமாக்கூட்டத்தையும் அந்த மாநிலத்தின் ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது தயவைiயும் நம்பும்படி மக்களைப் பேயர்களாக்குகிறார்கள்.





அழிவு அரசியலை நியாயப்படுத்தும் போக்கு:

சொந்த மக்களின் பலத்தை நம்பாத புலிகள்,தமது எஜமானர்களின் அரசியல் சதுரங்கத்துக்குத் தம்மைப் பலியாக்கியதை எத்தனை பக்கங்களில் நியாயப்படுத்தினார்கள் -படுத்துகிறார்கள்?அதை நியாயப்படுத்த எத்தனை சேரன்கள்-உருத்திருகுமார்கள் இன்னும் நமுக்குள் முளைத்துக்கொள்வார்கள்?

கேடுகெட்ட இந்த இயக்கவாதத் தனிநபர்வாத மாயை நமது வாழ்வைக் குட்டிச் சுவாராக்கியதை மறுத்து இனியும் தம்மால் நமக்கு விடுதலை சாத்தியமெனக் கதைவிடுவது உலகத்தின் முன் பெரும் சமூக விரோதமாகும்.

போராட்டத்தை முட்டுச் சந்தியில் நிறுத்திவிட்டுச் சரணடைந்த புலிகளால் எழிச்சியடைந்த சிங்களக்கூலிப்படையோ இப்போது சிங்களத் தேசியப்படையாக மாறிவிட்டது.இதையெல்லாம் செய்வதில் புலிகளின் இயக்கம் காரணமாகப் போகிறதென்ற அன்றைய விவாதங்களை எள்ளி நகையாடிய மேட்டுக்குடி ஈழஅரசியல் "துரோகி" சொல்லி பலரைப் போட்டது.தெருவில்-லைட்கம்பத்தில் பொட்டு வைத்துத் தமது அரசியலை நியாயப்படுத்தியது.

இன்றோ பெருங் கூச்சலிட்டுத் தமிழ் பேசும் மக்களைக் காக்கத் தமிழகத்தை உருகி அழைக்கிறது-அல்லது அவர்களிடம் ஏதோவொரு எதிர்பார்பைச் செய்யும்படி மக்களைத் தூண்டுகிறது.இங்கே, ஜெயலலிதா அம்மையார் தமிழ் பேசும் மக்களது விடுதலைத் தேவதையாக ஒளிவட்டம் கட்டப்படுகிறது.இன்னும் சிறிது காலத்தில் ஜெயலலிதா தேசியத் தலைவியாகவும் போற்றப்படலாம்.இந்த விவஸ்த்தையற்ற கருத்து வெளிக்குள் நாம் மீளவுஞ் சரிந்துவிடுவோமா அல்லது உண்மையான விடுதலைக்கு பங்களிக்கப் போகிறோமா?பெரும் படையணிகளோடு ஈழ மண்ணைக் காப்பதாகக் கயிறு திரித்த ப(பி)ணப்புலிகள் மக்களைக் கொல்வதற்குத் தளபதிகளைத் தயார்படுத்தியளவுக்குச் சிங்கள மேலாதிக்தை-அரச ஆதிக்கத்தை உடைத்துப் போராட்டத்தை முன்னெடுக்கத் தக்கபடி மக்களை அணிதிரட்டிப் பெரும் படையணியாகக் கட்சியை- இயக்கத்தைக் கட்டமுடியாது, தேசியத் தலைவரைச் சுற்றி ஒளிவட்டம் அமைத்தார்கள்.இப்போது, அதே பாணியில் ஜெய லலிதாவையும் நோக்கி மக்களைத் தள்ளித் தமது பிழைப்பை மேலும் மெருக்கேற்றுவதற்கும்,இருப்பை வலுப்படுத்தவும் ஒரு ஆயுதமாகப் பார்க்கும் பணப் புலிகளுக்கு விடுதலை-தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமை குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது.இதை நிர்மலன்போன்ற புலிப் பினாமிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.


புலிகளது தவறுகள்,சிங்களமயப்படும் எதிர்காலம்:

புலிகள் இயக்கம் தனது வர்க்கத் தளத்துக்கு-குணாம்சத்துக்கேற்ப எப்போதும் தவறிழைத்தவர்களல்ல!தமது வர்க்கத்து இசைவாகவும்-நியாயமாகவே தமிழ்பேசும் மக்களது விடுதலையைக் காய் அடித்தார்கள்-காட்டிக் கொடுத்தார்கள்.அவர்கள் தவறிழைத்தது பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது நலனின்மீதே.அத்தகைய இலக்கில் புலிகள் செய்தது பாரிய வரலாற்றுப் பழி!

இந்தப் புரிதலோடு முரண்பட்டவர்கள்,புலிகளது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று கூறுமிடத்து, அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது, உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது.இது, வன்னியில் (இப்போது) நிசமாகி வருகிறது.வன்னி நிலப் பரப்பெங்கும் புதிய குடியேற்றத் திட்டங்கள் மெல்லச் சிங்கள அரசால் ஏற்படுத்தப்படுகிறது.இதையெல்லாம் நியாயப்படுத்த கே.பி.போன்ற பணப் புலிகள் புலத்திலும் உண்டு-தளத்திலும் உண்டு!

தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த "தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென"ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.



தமிழ்பேசும் மக்கள்பண்டுதொட்டு வாழ்ந்த நிலப்பிரதேசங்களை இழப்பதற்குரிய முன்னெடுப்போடு செய்யப்படும் இந்த இராணுவவாத முன்னெடுப்பு, முதலில்தமிழ் பேசும் மக்களுக்கான பாரம்பரிய நிலப்பரப்பின் அடையாளங்களை மெல்லத் தடயமின்றி அழித்து(புத்த விகாரை ஒரு சிறிய உதாரணம்), அவர்களைப் புதிய புதிய இடங்களுக்கு இடம்மாற்றிச் சாவின் விளிம்பில் தள்ளுவதற்கான மிகப் பெரிய அரசியல் வியூகத்தைச் செய்வதற்குப் பணப் புலிகளது மர்மமும்,நமது கட்சி அரசியல்வாதிகளது சுய இலாபங்களும் முக்கிய வகிபாகத்தை இந்த முள்ளி வாய்க்காற் தோல்வியின் பின் சாத்தியமாக்கிறது.மக்களை எதை நோக்கியும் சிந்திக்க விடாது,தனியே உணவுக்காகக் கையேந்தும் பிரதேசிகளாக்கியபடி ஓட்டுக் கட்சிகள் மெல்ல முன்னெடுக்கும் இந்த நரித்தனமான அரசியலை அம்பலப்படுத்தி, மக்களை விளிப்புணர்வுகொள்ள வைக்கும் எந்த முயற்சிக்கும் தடையாக,சிங்கள இராணுவத்தின் கண்காணிப்பும்,ஓட்டுக் கட்சிகளது ஏமாற்று அரசியலும் ஒரே தளத்தில் இருவேறு வியூகமாக விரிகிறது!இதுவே,இன்றைய நவலிபரல் கொள்கையின் இன்னொரு முகமாகும்!இதைப் புரிவதற்கு நோமிக் கிளைன் எழுதிய[The Shock Doctrine-By Naomi Klein ] எனும் நூலில்சில பக்கங்களைப் புரட்டினாலே போதும்!

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்:

புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு "மாற்றுக் கருத்து மந்தைகள்"(தேசம் ஜெயபாலன்,தேனி ஜெமினி-கங்காதரன்,கீரன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்,சுகன்,தேவதாசன்,சோபாசக்தி,நிர்மலா-இராகவன்,சுசீந்திரன் இன்னபிற...) கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.


யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதியைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரச சார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு"ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்"எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன மந்தைகள்வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் சில கீரன்களை-கொன்ஸ்சன்ஸ்ரையன்களை, நம்முன் உலாவிடுகிறது.இது ஆபத்தானது-அனைத்தைக்காட்டிலும்!


புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.


பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக்காயாக்கியபடி புரட்சி முன்நகர்வதல்ல.


சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் "போராட்டம் புரட்சியை நிபந்தனையாக்கியபடி" இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிப்படையைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.


நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும் சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் கீரன்போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க முடியுமா?


முள்ளி வாய்க்காலில் அழிந்துபோன புலிகளோடு புலிச் சித்தாந்தமென்பது தமிழ் மேட்டுக்குடியினது சித்தாந்தமேயென்பதும் மிக இலகுவாகப் புரிந்து போச்சுதா? இதிலிருந்து மீள்வதற்குத் தயக்கமென்ன?புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஆற்றலை இளைய தலைமுறையினருக்குக்கற்றுக்கொடுப்பதென்பது காலத்தின் கடமையாக இருக்கும்போது அதை இத்தகைய லொபிக் குழுக்களோடிணைந்து உரையாடுவதால் சாதிக்க முடியுமா? சஞ்சீவ் ராஜ் போன்றோர் இது குறித்து பதில் கூறவேண்டும்.


இலங்கைப் பாசிச இனவொடுக்குமுறை அரசியலால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்!இதை மறுத்து மகிந்தாவுக்குக் கூஜாத் தூக்குவது மக்களுக்கு எதிரானது.


இன்றுவரை,நமது சமூக சீவியம் உடைந்து,நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.இந்தக் கொடிய இலங்கை-இந்திய அரசுகளால் எமது வாழ்வாதாரங்களை இழந்த நாமே,அதைப் பெற்றுத் தருவது-காப்பது இத்தகைய அரசுகள்தாமென வாதாடும்போது நாம் யார்? கீரன்-கொன்சன்ஸ்ரையன்,தலித்துவ மேம்பாட்டு முன்னணி,இராகவன்-நிர்மலா,எனத் தொடரும் இந்த நீண்ட லொபிக் குழுக்களால் நிகழப்போகும் அபாயம் புலிப்பாசிசத்தைவிடப் பன்மடங்கானதென்பதே எனது கணிப்பு!புலிகள் நேரடியாகவே மக்களது எதிரிகளென மக்களுக்குத் தெரிந்தளவுக்கு இந்த மர்ம மனிதர்களை இலகுவாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை!இனவாத ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்பேசும் மக்கள் அன்று போராடியபோது-புரட்சிகரமாக அணிதிரண்டபோது,பாசிசப் புலிகள் மூலமாக அனைத்தையுஞ் சிதறடித்த அந்நிய-இந்திய நலனானது இப்போது அதே பாணியில் இத்தகைய லொபிக் குழுக்களை வைத்து மீளவுருவாகும் புரட்சிகரமான அணித்திரட்சியை-உணர்வை உடைப்பதில் கவனமாக இருக்கிறது.இவர்களே அனைத்து வழி முறைகளையும் கைப்பற்றி அதைச் சிதைப்பதில் திறம்பட இயங்குகிறார்கள்.


தேசிய விடுதலையை நேசிக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள் இனிமேல் கவனப்பட வேண்டிய முக்கிய போக்கானது இது :


" முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.அது,நமது அடிமை விலங்குங்கூட என்பதே!"


எனவே,நாம் புரட்சிகரமான அணுகுமுறையைத் தொடர்ந்து உள்வாங்குவதும் அதன் வழி அணித் திரட்சியடைவதும், இலங்கையில் சிறுபான்மை இனங்களின் விடுதலையை-செல் நெறியை திறம்படச் சாத்தியமாக்குவதற்கும், இத்தகைய லொபிக் குழுக்களை ஓட விரட்டவும், புரட்சிகரமாக இயங்குவதே அவசியமான காலக் கடமை.இனவாத ஒடுக்குமுறைக்குள் தமது அடையாளங்களைத் தொலைக்கும் ஒரு தேசிய இனத்துக்கு இதைவிட வேறு வழியிருக்கா?



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.06.2011

Sunday, June 26, 2011

புலிக்கொடி : தமிழர்களது தேசியக்கொடி?

புலிக்கொடி : தமிழர்களது தேசியக்கொடி?


" எனக்குத் தேசிய அடையாளங்களது புனித விம்பம் என்பது,நிலவுகின்ற ஆளும்வர்க்க அரசியில் ஆதிக்கத்தினது கருவி என்பதும்,ஒடுக்கு முறைக்குள்ளாகும் ஒரு தேசிய இனத்தின் கோரிக்கைக்குள் கனவாகிக் கிடக்கும் தேசிய விம்பங்கள் அவர்களது இருப்பைக் காக்கும் அலகுகள் என்ற புரிதலும் இருவேற சூழலில் உண்டு! "


தீபம் தொலைக்காட்சியின் புலிக்கொடி பற்றிய உரையாடலின் பின்பு,புலிக்கொடிக்கு எதிராகக் கருத்தாடிய ராஜ் தாக்கப்படுகிறார்.


இலங்கை அரசுக்குச் சார்பான கொன்ஸ்சன்ஸ்ரையின் அருகினில் இருந்து, அவரது கருத்துக்குத்தோதாக உரையாடிய ராஜ், தன்னை இலங்கை அரசினது போக்குக்கு இசைவானவராகக் காட்டப்பட்ட சூழ்நிலையைக்கடந்து, இந்த விவாத்தின் பின் எழுந்த தேசிய அடையாளங்களது புனித விம்பம்,மற்றும் பாசிசக் குறியீடுகளது இருப்பும் அதன் பின்னான சித்தாந்த வலுவும் குறித்து, கவனத்தைக்கொள்வதும் எனது நோக்கு அல்ல!

இது, குறித்து நிறைய விவாதித்தாகிவிட்டது!தேசங்கடந்த ஆய்வாளர்களது புரிதல் நமக்குப் பல புரிதலைத் தந்துவிட முடியும்.எனவே, நாம்,தமிழர்களது அவல நிலையுள் இந்த விடையங் குறித்துச் சில கவனத்தைச் சுட்ட முடியும்-அவ்வளவுதாம் இக் கட்டுரையின் நோக்கம்.



ஓட்டுக்கட்சிகளது கைங்காரியம்:

இலங்கையின் இனப் பிரச்சனை வெறும் இருவேறு இனங்களுக்கிடையிலான சிக்கலல்ல.அது, முழு மொத்த தென்னாசியப் பிராந்தியத்தினதும் பிரச்சனையாகும்.இங்கேதாம் தமிழ் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றித் தத்தமது எஜமானர்களைத் திருப்பத்திபடுத்தும் காரியத்தில் இறங்கி, நமது மக்களை அடியோடு கொன்றடிமையாக்கும் வன்னி யுத்த அரசியலை ஜனநாயகத்தின் பெயராலும்,புலிப் பாசிசத்தின் பெயராலும் ஒப்பேற்றினார்கள்!இனவொடுக்குமுறை நிகழும் ஒரு தேசத்துள் மக்கள் எங்ஙனம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை ஓட்டுக் கட்சிகள் நிலைமைக்கொப்பத் திசை திருப்பி இதைச் சாதித்தனர்.
இது,நமது யுத்தம்-அரசியல் முன்னெடுப்பது வரலாறாக இருக்கிறதா?சரி!

முள்ளிவாய்க்காற் படுகொலை யுத்தத்துக்குப் பின்பான அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொரு ஓட்டுக் கட்சியும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப் படுத்துகிறார்கள். இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை.காரணம்: "நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை" என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.


ஓட்டுக் கட்சிகளுக்கு நிதியாதாரம் வழங்கும் வர்க்கத்துக்குத் தமிழர்கள் பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக இருப்பதிலுள்ள தேவை அவசியமாக இருக்கிறது. இந்தத் தேவை அவு; வர்க்கத்தின் அந்நிய வர்க்க நலன்களது தேவையோடு மிக நெருக்கமாக உறுவு பூண்டு,இன்றைய பொருளாதாரப் போக்கில் இவை மிக அவசியமாகி வருகிறது.

இந்த ஓட்டுக் கட்சிகளது தேவையை-நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வலுப்படுத்தும் புலம் பெயர் ஊடகங்கள் தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவருகிறது. இந்த லொபி ஊடகங்கள்,தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை நமக்காகக் காவி வருகிறார்கள்.

அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும் நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் புரட்சிகரக் குரல்,போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து வானொலிகளில் கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!தமது எஜமானர்களுக்கு உகந்த முறையில் அவர்களது நலனை மக்களது நலனாக்க முனையும் இந்த நரித்தனமான அரசியல் எடுத்த எடுப்பில் தமிழ் மக்கள் நலன் மறுத்த அரசியல் பேசமுடியாது,தமிழ் பேசும் மக்களது மனதுக்கேற்றவொரு அரசியலை நமது மக்களது நலனை முதன்மைப்படுத்துவதாகவே உரிமைபாராட்டி விஷ அரசியலை நமக்குள் திணிக்கின்றன.இந்த அரசியலுக்கு உடந்தையாகப் புலம் பெயர்"மாற்று"குழுக்கள் பல அடிமையாகிக்கிக் கிடப்பதையும் இதுள் சுட்டிக்காட்டுவோம்!



புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில், "மாறறுக் கருத்தாளர்கள்,ஜனநாயகவாதிகள்,புரட்சிகரச் சிந்தனையாளர்கள்"எனும் அட்டவணையுள் இலங்கை-இந்திய அரசுகளதும் ஏவற்படைகள்-குழுக்கள் ஓட்டுக் கட்சிகளது பின்னே அணி வகுத்திருப்பதையும் புரிந்துகொண்டோமானால் தேசம் ஜெயபாலன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்,தேனி ஜெமனி, கீரன்,நிர்மலா,இராகவன்,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,ரி.பி.சி வானொலி,ஜீ ரிவி,தீபம் ரீவி, ஆகிய அனைவரையும்,அனைத்தையும் புரிவதில் சிக்கல் இருக்க முடியாது!

தமிழ் மக்களது இன்றைய நிலை:

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அந்நியச் சகத்திகளும் இலங்கையும் அரங்கேற்றி வருகின்றன.பேராசை,பதவி வெறி பிடித்த வலதுசாரித் தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள். இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.

நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது. ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.தமிழ்ப் பிரதேசமெங்கும் இராணுவக் காட்டாட்சியே நடந்தேறிவருவது புலியழிப்புக்குப் பின்பான வரலாறு.எந்தக் குடிசார் அமைப்புகளும் இன்னும் முழுமையாக இயங்கவும்-சுயாதீனமாகச் செயற்படவும் அநுமதிக்கப்படவில்லை என்பது இன்னொரு வகை உண்மையாகும்.


மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக யாரும் எடைபோடுவது இயற்கை. ஆனால்,அதன் பின்னால் அந்நிய எஜமானர்களின் அரசியல் மிக நுணக்கமாக விரிகிறது.புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் புலியின் மறுதொடர்ச்சியான "நாடுகடந்து அரசாங்கம்" முன்வைக்கும் ஓட்டுரக அரசியலின் சூழ்ச்சியோ மிகவும் கொடியது. இது சிங்கள இராணுவத்தைவிடப் பன்மடங்கு ஆபத்தானது.உள்ளேயிருந்து கருவறுப்பதுதான் மிக மோசமானது.எதிரி மிகவுந்தெளிவாக இனம்காணப்படுகிறான்.ஆனால், இத்தகைய "நாடுகடந்த அரசாங்கம்"புலிகளது எச்சங்கள்,தமிழ் ஓட்டுக்கட்சிகளோ நம்மை உள்ளேயிருந்து அழிப்பதற்கு உலக ஏகாதிபத்தியங்களது தயவில் அரசியல் செய்கின்றன.

தேசிய அலகுகள்,குறியீடுகள்,தமிழ் மக்களது ஐதீகச் சொத்தாகவும்,அது மக்களது உரிமையினது ஆகக் குறைத்த குறியீடு என்றும் கூறிக்கொண்டு,எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப் படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது (விடுதலையென்பது வெறும் கோசமே!).


இந்த நெருக்கடிக்குள்ளும்புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் மிக இயல்பான வாழ்வுக்குள் தமது பழையபாணி வாழ்வைத் தகவமைத்து வருகிறார்கள்.அவர்களின் பின்னே பாசிச இலங்கையின் அரச ஆதிக்கம் தமிழ்ப் பிரதேசமெங்கும் மிகச் சாதாரணமாக நிலைபெற்று வருகிறது.இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் தமிழ்பேசும் மக்களது அனைத்து முன்னெடுப்பையும் உள்வாங்கிக் கொண்டிருக்கும் இவ் வேளையுள்,தமிழ்க் கட்சிகள் மிகவும் மோசமான-விலாங்குத் தனமான அரசியலைச் செய்து மக்களைத் தமது பங்குக்குச் சீரழிப்பதோடு தமது பதவிகளுக்காக அரசியல் செய்வதாகத் தெரிகிறது.
இலங்கையில் கட்சி அரசியலானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே நகர்கிறது எனக்கொள்ளவேண்டும்.

"இந்தியா,ஜெயலலிதா,சீமான் வகையறாக்கள் இன்னும் ஈழமக்களுக்காகப் புடுங்குமென்று இந்த வகைச் சோணகிரிகள் இந்தியாவை நோக்கிப் புறப்படுவதில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் விவேகத்தைச் சிங்கள அரசுக்குப் பறைசாற்றுகிறார்கள். இதுதாம் இன்றைய தமிழ்பேசும் மக்களது அரசியற் சூழல்! "


பாராளுமன்றப் பண்டிகள்:

ஓட்டுக் கட்சி வரலாறு நமக்கு எப்பவும்எதிரானதாகவே இருக்கிறது-இருந்து வருகிறது.தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும்,டக்ளஸ்சினதும் அரசியல் இதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது.


ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள, இல்லையா?;


அன்றிலிருந்து இன்றுவரை,இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது என்பதை இலகுவாக நாம் புரிந்துகொள்வோமானால்,இன்றைய நமது மக்களுக்கு எந்த அரசியலை எவர் முன்னெடுக்கிறாரென்று சொல்ல முடியும்.


புலம் பெயர் தளத்துக்கான நயவஞ்சக அரசியல்:

முள்ளி வாய்க்காலுக்குப் பின்இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்ட இலங்கை-இந்தியக்கூட்டு, தமிழ் பேசும் மக்களை இலங்கைக்குள்ளேயே அகதிகளாக்கி அலையவிட்டுள்ளது.




இலங்கையின் பாசிச இராணுவக் கட்டமைப்புக்குள் தமிழ்பேசும் மக்களைக் கட்டாயமாக அடிமைப்படுத்திய மகிந்தாவின் சாணாக்கியம்,புலம் பெயர் தளத்தில் சில திரிவுவாதப் புரட்சியாளர்கiயும்,கைக்கூலி ஊடகங்களையும் தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிறுத்தித் தமிழ்பேசும் மக்களது தேசிய அலகுகளையே கேள்விக்குட்படுத்துகிறது!தமிழ்பேசும் மக்களை வெறும் கையாலாகாத ஒரு இனக் குழுவாக் குறுக்கி வைத்திருக்கும் தந்திரம் இத்துடன் வலுவாக அரங்கேறுகிறது.

தேசியக் கொடியென்பதை,ஓர் அரசாக-இனமாக எழுந்து நிறுவனப்பட்ட ஆனும் வர்க்கத்துத் தமிராக இனம்காணும் அதேவேளை,ஓடுக்கு முறைக்குள் உட்படுத்தப்படும் ஒரு இனம் தன்னை விடுவிப்பதற்கான-பாதுகாப்பதற்கான போராட்டத்தில்,எழிச்சியில் இந்தத் தேசியக் கொடி-அடையாளங்களைக் காவ வேண்டியதாகவே இருக்கிறது.அது,வர்க்கப் போரைச் செய்யும்போதுஞ்சரி,தேசிய விடுதலைப்போரைச் செய்யும்போதுஞ்சரி வர்க்கங்கங்கள் மொழிவாரியகச் சேர்வதில் சில பிரத்தேயகப் பண்புகளை நாம் இனம் கண்டாகவேண்டும்.அந்தப் பண்புகளில் ஒன்றாகப் புலிக்கொடியும் இணைவதில் சிக்கலடையும் சந்தர்ப்பங்கள்கண்டு, "புரட்சியாளர்கள்" ஒடுக்குமுறையாளர்களது திமிரை இரசிக்கின்றனரா?
ராஜ் புலிக்கொடிக்குள் தேங்க,கொன்ஸ்சன்ஸ்ரையன்முழுமையாகத் தமிழ் பேசும் மக்களுக்குப் பண்பாடு,தேசிய அலகுகள்,வரலாறே இல்லை என்கிறார்.இவை, எவருடைய குரல்கள்?இலங்கையின் ஆளும் வர்க்கதின் குரலாக மட்டும் இதைப் பார்க்க முடியுமா?

இத்தொடர் நிகழ்வில்அரசியல் செய்யும் பிராந்தியங்கடந்த-கண்டங் கடந்த ஆளும் வர்க்கங்களது நலனை-அரசியலை யார் என்ன செய்துவிட முடியும்?

இலங்கையின் இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதனாற்றாம் தமிழ்ப் பிரதேசமெங்கும் திடீர் சிங்கக்கொடி பிடித்தலும்,தேசியக் கீதம் சிங்களத்தில் இசைப்பதும் இராணுவக் கண்காணிப்பின்கீழ் நிபந்தனையாக முன்னெடுக்கப்படுகிறது.


சிங்கக்கொடியென்பதன் குறியீடென்ன?


சிங்கள ஆளும் வர்க்கத்துத் திமிராக இல்லையா?


தமிழ் மக்களை வெற்றிகொண்ட அடையாளமாக முன்னிறுத்தப்படவில்லையா?


இத்தகைய உளவொடுக்குமுறைக்குள் திணிக்கப்படும் அராஜகமானது வரலாற்று ரீதியாகத் தமிழ் பேசும் மக்களைக் குரோதத்துடன் தொடர்புப்படுத்தித் சிதைக்கிறது.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இந்தவகைப் புலம்பெயர் இலங்கை-இந்திய லொபிகளுக்கு தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி, அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.இந்தப் போக்கு நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக் கீரன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்-இராகவன், நிர்மலா கூட்டம்.


தமிழ் பேசும் மக்களது தேசிய அலகுகள்:


மொழிவாரியாகவும்,இனவாரியாகவும்,சாதிரீதியாகவும் பிளவடைந்த தமிழ் பேசும்மக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.


இந்தத் தோரணையில் தமிழ் பேசும் மக்களது அடையாளங்கள்,தேசிய அலகுகள்மீதும்,வரலாற்று ஐதீக நிலப்பரப்பின்மீதும் தொடர்ந்து தாக்குதல்களைச் செய்யும்போதும் புலிப் பாசிசத் சித்தாந்தமென வாந்தியெடுத்தே இவற்றை நொருக்கி வருகிறார்கள்.பேரினவாத ஒடுக்குமுறையானது என்றைக்குமே இல்லாத வடிவங்களில்தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து ஒடுக்கிவருகிறது. அவர்களது வாழ்விடங்களைத் திருடுவதற்கேற்ற சித்தாந்தங்களை மிக முற்போக்காகச் செய்வதில் புலியினது தவறுகள் ஒத்துழைக்கிறது.


இந்தப் புலித் தவறுகளைத் தூக்கி வைத்து உரையாடும் நபர்கள்,பேரின வாதத்தின் அரசியல் ஆதிக்கத் திமிரையும்,அதன் குறியீடுகளையும் தமிழ் மக்களுக்கான அடையாளமாக்கும்போது மறைமுகமாக இனவழிப்போடு,ஒரு இனத்தைப் பூண்டோடு அழிப்பதற்குத் துணை போகின்றனர்.


இனவொடுக்கு முறையைச் செய்யும் இலங்கை ஆளும் வர்க்க நலனானது, தமிழ்பேசும் மக்களை அனைத்து வடிவங்களிலும் ஒடுக்கி அவர்களது வரலாற்றை இல்லாதாக்கும் மகாவம்சத் தொடர் யுத்தத்தைச் செய்யும் இன்றைய சூழலில், தவிர்க்க முடியாது அந்தத் திமிரை எதிர்கொள்ளத் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை முன்நிறுத்தி எதிர்ப்பைக்காட்டுவது அவசியமானது!


அது,நியாயமானதும்கூட.அந்த அடையாளங்கள் எந்த வர்க்கத்தினது என்ற கேள்வி விடுதலையடையும் தறுவாயில் மட்டுமே தமிழ்பேசும் மக்கள் மத்தியில் எழுப்பப்படும்.அதுவரை அது,எந்த அரசியலையுஞ் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டபின்,புரட்சிகரக் கட்சி நிர்மூலமானபின்ஒரு இனம் தனது இயலாமையில் இந்த அடையாளங்களைக் காவுதைத்தவிர வேறென்ன தீர்வு உண்டு?


மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டும் தளத்து நிலை இராணுவக் காட்டாட்சிக்குள்உட்பட்ட நிலையில், புலத்த மக்கள் புலிக்கொடியைப்பிடிப்பதென்பது தமிழ்பேசும் மக்களது வரலாற்று இருத்தலைக் குறித்து அடையாளப்படுத்தபடுவதுதில்தாம் முடிவடைகிறது.புலிகளது பாசிசமும்,அந்தக் கொடியினது வரலாற்று ஐதீகமும் ஒரு தொடர்ச்சியின் இருவேறு நிகழ்வூக்கமோகவே தொடர்கிறது.


புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் மக்களது அரசியல் வாழ்வில்-பிரக்ஜையில் சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் இனவொதுக்கலுக்கு-அழிப்புக்கு எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது எந்தத் தயக்கமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க இன அழிப்பு அரசியலுக்கு எதிராகவே இருக்கும்.


இதைத் தடுப்பதாக இருந்தால்,இலங்கைப் பாசிச அரசு தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் சுய நிர்ணயவுரிமை வழங்க வேண்டும்.அந்தத் தீர்வைச் செய்யாதவரையும் தமிழ்பேசும் மக்கள் தமது தேசிய அலகுகள் எவைகளெனத் தீர்மானிப்பதும், திசையமைத்துக் காப்பதும் எவரையும் கேட்டல்ல-தமது வரலாற்று ஐதீகத்திலிருந்து அது நடைபெறும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
26.06.11

Sunday, June 12, 2011

மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?

முப்பது இலட்ச முழு நிதியும் மார்க்சிய கட்சிக்கே போய் சேரட்டுமென முதலாளி...

Der Mythos des Michael May_Sisyphos


ரலாறு பூராகவும் இந்த மனிதவாழ்வுக்கு அர்த்தங்கள் பல கற்பிக்கப்படுகிறது.எந்தக் கற்பித்தல்களும் மனித வாழ்வைப் பூரணமான-சுதந்திரமான புரிதல்களோடு நியாயப்படுத்தவில்லை!

ஏன் வாழவேண்டும் என்பதும்,எதற்குச் சொத்துச் சேர்க்க வேண்டுமென்பதும் நியாயப்படுத்தும்படியாக எப்போதும்இருக்க முடிவதில்லை!

"Absurd" முற்றிலுமாக விரிகிறது,வாழ்வை எண்ணி!

குடும்பம்-பிள்ளை,குட்டி எனக்கொண்ட உறவொடு விரிந்து போகும் விருப்புக்கு குவிப்புறுதிகொள்வதில்மனித வாழ்வு அதிகம் சலித்துப் போகிறது.எதிலும் நம்பகத் தன்மை இல்லை-எங்கும் போலித் தனமும்,நம்ப வைத்துக் "கழுத்து அறுப்பும்" நிலவுகிறது.

நான், எந்த நோக்கமுமற்ற வினைகளுக்குள்த் தினமும் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.

"unsinnig" அர்த்தமற்ற உலகமாகப்பட்ட மனித வாழ்வு அழிவிற்குள்...அது,"தவறான-தப்பான,நியாயமற்ற"சட்டங்களால்- ஒழுங்குகளாற் தினமும்இந்த வாழ்வை அழிப்பதில் முடிகிறது.மீள,மீளத் துரத்திவரும்"அபத்தம்(Absurditaet)பயனற்ற,அர்த்தமற்ற செயலை ஊக்குவிக்கிறது.இவற்றை எதிர்க்கும்"மனநிலை" அபத்தவாதத்தின் தெருக்கோடியில் தஞ்சம் கொள்ளும்வரை எனது பௌதிக இருத்தலின் தஞ்சம் "Diskrepanz" இணைவின்மையாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றாய் விரியும்போது, அபத்தமாகவே உலகும் தோன்றுகிறது.இந்த உலகு எதுவரை?



ஒரு இனத்தை வியாபாரத்தனமாகக் கொன்று குவித்துவிட்டுத் தாமும் மண்டியிட்டுத் தலையைப் பிளக்கக் கொடுத்த புலிகளைக் குறித்து விளங்க முடிதல்சிசிப்போவுக்கு முன் கட்டளைப் போட்ட கடவுளது வேலைக்கொப்பவே இருக்கிறது.

நான் தரையிலிருந்து மலை உச்சிக்குத் தாவும்போது எனது இன்றைய அனைத்து ஊக்கமும் இமையசைக்கும் முன்னமே தரைக்கு வந்து விழுந்து நொருங்கும்போது இதை எதிர்த்தல்-வீராப்புப் பேசலாக சமூகத்துக்குள் கொட்டிவிடுகிறேன்.சிசிப்போ கடவுளைவிடப் பன்மடங்கு பலமானவன்.அவன் உணர்வு நிலை அர்த்தமற்றதை"ஒழுங்கை!க் கடைப்பிடித்தல்-ஒப்புக்கொள்ளலென அர்த்தமுள்ளதாக்குவதாகப் புரியும்போது இந்த மாபெரும் மனிதர் Michael May ஆக மேலெழுகிறது.

கடந்த கால் நூற்றாண்டாகப் பொறியியலாளனாகப் பணிபுரிந்த இந்த மனிதர் பெரும் கட்டுமானத்துறையில் செல்வம் குவித்து வைத்திருக்கிறார்.பல மில்லியன்களுக்குச் சொந்தக் காரனான இந்த மிகேல் மாய்க்கு என்ன நிகழ்ந்தது?

உலகத்தின் அதியுச்சத்தில் கோடிக் கணக்கான சொத்துக்களோடு வாழ்ந்து கீழ் நோக்கிய பார்வை எப்படி வந்தது?

இதுவொரு Absurd !

அனைத்தையும் தலை கீழாக்கிப் பார்க்கும் மன நிலை.அவர் தன்னைப் பிரபலப்படுத்த விரும்பாது இருக்கிறார்.ஆனால்,அவர் பேசப்பட வேண்டியவர்.

நம்மில் எத்தனை மனிதர்கள் இந்த மிகேல் மாய் போன்றிருக்கிறோம்?;ஏன் அப்படி இருக்க வேண்டும்??

மக்களிடம் போருக்குச் சேர்த்த,அபிவிருத்திக்குச் சேர்த்த பணத்தைப் புலிப் பினாமிகள் தமது சொத்தாக்கிவிட்டுச் செல்வந்தாகளாக இருக்கும்போது,இப்படியெல்லாம் அபத்தம் நம் முன் நிழலாட நாமும் அதே அபத்த்தின் இன்னொரு முனையில் நிற்க திருவாளர் மிகேல் மாய்வழி செய்கிறார்.

சிசிப்போவுக்குக் கடவுளது இரகசியமான பரிசு கிடைத்திருக்கலாம்.

அவன் மரணத்தை அரிவாள் சங்கிலித் தொடருக்குமேல் வைத்துவிட்டு மரக்கட்டையை உருட்டினான் என்றால் அவனது உணர்வு எத்தகைய ஒழுங்கைக் கொண்டிருக்கும்?

தனது மனைவியினது அன்பைப் பரிசோதிக்கச் சிசிப்போ கடவுளது அர்த்தமற்ற கட்டளையை ஏற்று, உச்சிக்கும் மடுவுக்குமாகக் குற்றியோடு போராடுவதிலிருந்து இந்த அபத்தவுலகை விளக்க வேறொரு பாணி இருக்குமோ?

அதைத்தான் திரு மிகேல் மாயும் செய்திருக்கிறார்.

மலை உச்சியை நோக்கிய வெற்றிகொள் போர் ஒரு மனிதனது இதயத்தை நிறைத்திருக்குமாயின், சிசிப்போவை இந்தவுலகத்தின் மிக மகிழ்வுக்குரியவனாகவும்,மதிப்புக்குரியவனாகவும் அபத்தத்தின் முகத்தில் ஓங்கி உதைத்தவனுமாகவே நான் பார்ப்பேன்! அதையேதாம்,இந்த மிகேல் மாயும் செய்திருக்கிறார்.

தான் இதுவரை சேர்த்த செல்வத்தை மட்டுமல்ல தனது பெற்றோர் வழி முதிசத்தையும் இந்த மனிதர்கொண்டிருந்தார்.

மிகேல் தனது செல்வத்தையும்விடப்பலமானவர்.சிசிப்போ தான் உருட்டும் பாரிய குற்றியையும்விடப் பலமானவனாகவே பார்க்கத் தக்கவன்.அதனாற்றாம் இரண்டு செயலும் மிக வீரியமானவை!

மிகேல்(பெரும்முதலாளி) கூறுகிறார்: "முதலாளியம்மக்களுக்கு உலகச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதற்குத் தகுதியற்றது ("Der Kapitalismus ist unfähig, die Menschen am Reichtum teilhaben zu lassen." ) .


பிற்குறிப்பு : திரு மிகேல் மாய்(Michael May)இதனக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களையும்( 3.059.167.00 € ),கிட்டத்தட்ட முப்பது இலட்சம் யூரோவையும் ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சிக்கு நிதியாக-அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு (மார்க்சியக் கல்வியாளர்களைப் பயிற்றுவிக்கவும்,பெண்களைத் தொடர்ந்து போராட்டக் களத்துக்குத் தயார் படுத்தவும் தனது நிதியைப் பயன்படுத்த வேண்டுமெனப் பரந்த மனதுடன்...), வாடகை வீட்டில் மாதம்1365.யூரோ பென்சன்-ஓய்வூதியத்தைக்கொண்டு மிக எளிமையாக வாழ்கிறார்.தன்னைக் குறித்த பிரபல்யப்படுத்தலை விரும்பாமல் இருக்கும் ஒரு சாதரண மனிதரானார்.


மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.06.2011

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...