Thursday, February 17, 2011

அன்பன் சோபாசக்தி

ஷோபா சக்தி: பாலியில் நிந்தனைச் சொல்லைலையே அநுமதியான்-செயலை அல்ல!



"உஙகளுடைய பின்னூட்டத்தை மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ பெயரின் பின்னூட்டுகளை நான் மட்டுறுத்தியுள்ளேன். வெறும் வசைகளை நான் பின்னூட்டமாகக் கருதுவதில்லை. சற்று முன்கூட எனது 15 வருடகால நண்...பர் சிறீரங்கன் அண்ணன் பாலியல் நிந்தனைச் சொல் ஒன்றுடன் எனது முகப் புத்தகத்தில் ஒரு பின்னூட்டமிட்டார். பின்னூட்டத்தை மட்டுமல்ல அவரையும் முகப்புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டேன். அவர் தனது ஆணாதிக்க வசைகளை எழுதுவதற்கு எனது முகப்புத்தகம் இடம் கொடுக்காது. அதுவே உங்களுக்கும்"
-சோபாசக்தி


மேலேயுள்ள பின்னூட்டை அன்பன் சோபாசக்தி எழுதியுள்ளான்.ரொம்பவும்"நேர்மையான"ஜனநாயகவாதி அவர்,"பாலியல் நிந்தனைச் சொல்லை-ஆணாதிக்க வசைவுகளை" அவர் ஒருபோதும் தனது முகப் புத்தகத்தில் அனுமதிக்கமாட்டாராம்!



ஏனெனில்,



அவை பெண்ணொடுக்குமுறையின் வடிவங்கள்,பண்டுதொட்டுப் பெண்ணைப் பாலியற் சுரண்டலுக்கும்,அவமதிப்பும்,அடக்குதலுக்கும் உட்படுத்தும் இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தின் சொற்கள்-கருத்தியற் பலாத்தகாரம் அவை!வார்த்தைகளுக்குள் கண்டுண்டிருக்கும் இத்தகைய சமூகவொடுக்குமுறை உளவியலானது ஆ(ணி)ணாதி(தா)க்கத்தின் அதிகாரபூர்வமான ஒடுக்குமுறையின் எதேச்சதிகாரமானதும்,அரூபமானதுமான விலங்கு, இந்தப் பாலியல் நிந்தனைச் சொல்.



நிச்சியமாக?



உண்மையாகச் சோபாசக்தி?



அடடா,இந்த ஸ்ரீரங்கனுக்குப் பழையதொடர் இன்னும் விட்டுத்தொலைக்கவில்லைதாம்.சுட்டிக் காட்டிய என் தோழனே,துரும்பைவிட்டு நாசியிற் தும்முவதைப் பார்த்திருப்பாய்தானே? அந்தத் தும்மலுக்குள் எத்தனை மில்லியன்கள் கிருமிகள் வெளிறேம் தெரியுமோ?அப்படித்தான் உங்கள் கிருமித்தனமான செயற்களும் வெளியேறுகிறது.



பாலியல் நிந்தனைச்சொல்லுக்கும்-செயலுக்கும் என்ன வித்தியாசம்?



கூறுங்கள் கண்ணா!



முகப்புத்தகத்திலேயே பாலியல் நிந்தனைச் சொல்லை அநுமதிக்காத நீங்கள்பாலியல் நிந்தனையை-செயலை மற்ற மனிதர்கள்மீது ஏவும்போது, அதை அவர்கள் அனுமதித்தும்-அவதிப்பட்டும் இருக்கும்போது,அதைப் பொதுவெளியில் புகட்டிய செம்மலே சோர்ந்தா போகும் உன் நட்பு(ஆண்குறியெனக் கற்பனை பண்ணப்படாது)?



உடல்சார் உறவென்பது எதுவரை உறவாகவும்-உபத்திரமாகவும்,பாலியற்பலாத்தகாரமாகவும் இருக்கும் என்பதை தத்துவங்கள் ஏதும் எனக்குத் தெரியவில்லை-உரைக்கவில்லையோ?அப்படியான தத்துவங்களை அருமைத்"தோழர்"உமா சானிகாவிடமாவது கேட்டுப் புரியலாந்தாம்...


மூன்றாவது சந்திப்பில் படுகைக்குத் தயாராகும்,பெண்விடுதலைப் புரிதலானது மிக நேர்த்தியானதெனக்கொள்வதில் அவரவர் சுதந்திரமென்பதும்,பாலியற்றேவைக்காகப் படம்போடும் பிழைப்பில் மனம்சார் உறவும்,உடல்சார்வுறவும்(கவனிக்க: இங்கே, ஓழுக்கு என பாலியல் நிந்தனையைப் பயன்படுத்தவில்லை-உடல்சார் உறவு-அதுவே சரியானது!) இணைக்கப்படும் புள்ளிதாம் பாலியற் சுரண்டல் என்று சொல்லேன்!அப்படிச் சொன்னால், அது பெண்ணியத்தையும்,ஆணியத்தையும் எதிரெதிர் நிலையில் நிறுத்துவதைவிட்டு நட்பாக்கி மீளவும் ஒடுக்குமுறைக்குள் பெண்களைத் தள்ளிவிடும்.எனவே,பார்க்கும்-பழகும் பெண்களோடும்-ஆண்களோடும் நான் படுக்க(ச்சீ உடல்சார்வுறவுக்கு)த் தந்திரமாக-உள்நோக்கும் அகவிருப்பை அது கொச்சைப்படுத்திவிடும்.



ஓழ்த்தல் பாலியல் நிந்தனைச் சொல்!-சரி,ஏனெனில்,நான் ஊரிலேயே கூட்டுக் கலவியின் நாயகன்(இந்த நான்-நான் மட்டுமே!)ஆதலால், மிகவிரைவாகப் புரிந்துபோச்சு-"சொல் நிந்தனை-செயல் தோழமை"-அடஅட...)



குடும்பம்-கல்யாணம் ஒடுக்குமுறை நிறுவனம்!-இதுவுஞ்சரி.



ஆனால்,காணும்-பழகும் அனைவரையும் எனது கலவிவிருப்பு மனதுக்குக் கட்டிலுக்குக் கூப்பிடுவது-போவது மனிதநிலைக் கடன்.காலைக்கடன்கள்போல் இதுவும் ஒன்றுதாம்.இது குறித்துப் பேசுவது தப்பு-செயல் முடிந்து,நான்"உடல்சார்"உறவுகொண்டேன் என்பது நிந்தனையல்ல-நேர்மையான நிகழ்வூக்கப் பெறுமானம்.ஏனெனில்,இது சம்பந்தப்பட்ட இருவரதும் "தனிப்பட்ட" சுதந்திரமல்லவா?



இங்கே,புனைவுக்கும்,அ-புனைவுக்கும் என்ன வித்தியாசமோ,அதுவே,பாலியல் நிந்தனைச் சொல்லுக்கும்-பாலியலுறவுச் செயலுக்கும்"உள்ள வித்தியாசம்.எனது பாலியல் பலாத்தகாரமெல்லாம் பாவாடை(பயில்)போட்டு மூடியபோது,சொல் மட்டுமே நிந்தனையாகவும்,செயல் வெறும் துய்ப்பாகவும்-அன்புப் பரிமாற்றமாகவம்,உடல்சார் அதியுன்னத தேவையாகவும், மாறிவிடுகிறது!



எனது பாலியற்றேவைக்காக நான் அணுகும் போக்கில்-தூண்டிலில் மாட்டியவர்களுக்கு மேற் சொன்னவையை விரிவாகப் பகுக்கத் தெரியும்-நிலவும் சமூகக் கட்டுள் ஏற்பது"ஒழுக்க"ப் பிறழ்வு-" பாலியற் சேட்டையை-சுரண்டலை"இருவரது சுதந்திரமெனக் கொண்டு மென்மைச் சுட்டலுடன் ஒழுகுவது(ஓழ்ப்பதல்ல) சமூகத்தில் அடையாள நெருக்கடியிலிருந்து விடுதலைபெறும் தற்காலிக நிவாரணி எனச் சொல்லேன்.அப்படிச் சொல்லும் உரிமை எனக்கில்லை-பெண்ணியம்சார்ந்து இயங்குபவர்கள்(முப்பாலரும்)தாம் அதைப் புலத்தில் வைத்துப் புரிய வைக்க வேண்டும்.



ப.வி.ஸ்ரீரங்கன்

17.02.2011

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...