"அடடா புரட்சி அடை மழைடா,
அது அரபுப் புரட்சி
அடை மழைடா!"
எகிப்த்திய,துனேசியப் போராட்டங்களும் தொடரப் போகும் அரபு உலக"எழிச்சிகளும்"புதிய வகைமாதிரியான ஆயுதம்.இது,அணுக்குண்டைவிட அதிக சக்தியானது.இந்த ஆயுதம் இப்போதும்,மேற்குலக ஆதிக்கத்தாலேயேதாம் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன் பாட்டுக்கு வந்திருக்கிறது.
இந்தப் பயன்பாடும் அவர்களது நலன்களைக் காப்பதற்காகவே பயன்படுகிறது.எகிப்த்திய அதிபர்,எங்கேயும் ஓடித் "தப்பி"விடவும் இல்லை.எகிப்த்திலேயே சிறிய குட்டித் தேசமாக-அரசாக நிலவும் எகிப்திய உல்லாச-டிப்பிளோமற்றிக் நகரமான [ Diplomatic City _ Trade] சாமல் சைக்கில் [ Scharm El-Scheich ]மிகப் பாதுகாப்பாக முபராக் இருக்கிறார்.எகித்தியர்களோ,அல்லது எந்த அரபியர்களோ அங்கு செல்வதற்கு தகுந்த விசாவிருந்தாலும் முடியாத காரியம்.ஆனால்,நாம் விடுமுறைக்குப் போய்வரலாம்.இத்தகைய எகிப்த்தில் மக்கள் ஆரவாரம் முபராக்கைச் சுற்றிய எதிர்ப்பில் அவரது இராஜினாமா "மக்கள்"புரட்சியென வடிவமைக்கப்படுகிறது. இதன் மூலம் அதிபர்கள்,தலைவர்கள் தாம் பிழையானவர்கள்.நிலவும் அமைப்பு அல்ல என்பதையும் சொல்லியபடி, ஒரே கல்லில் பல மாங்காய்கள் வீழ்த்தப்படுகின்றன.
மக்களையும்,அவர்களது நலனையும் முடக்கியவர்கள்,வறுமையை-வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஆளும் அதிபர்கள்-கட்சிகளே செய்வதாகக் கருத்தியற் பரப்பைச் செய்தபடி,அதே அமைப்பைக் காப்பதென்பது எவ்வளவு புத்திசாலித்தனமானது.
மேற்குலகத்திடம் இருக்கும் இதுவரைகாலக் கொடும்-வன்மையான ஆயுதம் என்பதெது ? "கருதியலே" என்பதுதாம் எனது பதில்!
முபாராக் போனால் இன்னொரு எல்பாரடேய் வரலாம்.ஆனால்,அமைப்புச் சிதைந்தால் அதில் மக்கள் அதிகாரம் வந்துவிடும். இதை முன்கூட்டியே தீர்மானித்த அமெரிக்க-மேற்குலக ஏகாதிபத்தியங்கள் அரேபியச் சர்வதிகாரிகளை ஊட்டி வளர்த்தபடி நிலவும்அமைப்புக்கெதிரான மக்களது எதிர்ப்பை ஆளும் தலைமைக்கெதிராக வளர்த்தெடுத்தது.அதையே, இப்போது அறுவடைசெய்து, புதிய தரகர்களை நிலவும் அமைக்குள் புகுத்தி மக்களை மீளக் கட்டிப்போடும் புதிய வியூகங்களை நாம் சந்திக்கிறோம்.
அரபுலகப் போராட்டங்கள்,அவர்களது வளர்ச்சியடையாத சமூக நிலையை ஒட்டியே மேற்குலகத்தாற் தகவமைக்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டமானது மக்களை ஏய்த்துப் பலியாக்கிப் புரட்சியெனப் பேசுவதில் முதன்மையானவர்கள் இன்றைய வெள்ளையினப் பிசாசு(வெள்ளையின ஏகாதிபத்திய அரசுகள்,அதன் ஆளும் வர்க்கம்)க் கூட்டமே.
பெரும்பாலும் இச் செய்தியே பரவலாகச் சரியானதாகவிருக்கும்.ஆனால்,அரபுலகத்துப் போராட்டங்கள் மக்களது தன்னெழிச்சியானதென ஒருபோதும் நான் ஏற்கமாட்டேன்.
ஏலவே,"இப்போராட்டமானது ஐரோப்பிய-அமெரிக்கப் புதிய வியூகமெனவும்,கடந்த நூற்றாண்டுள் கணிசமாகக் கிடைக்கப் பெற்ற எண்ணை வருமானங்கள் அனைத்தும் அந்தத்தேசத்து மாபியாத் தலைமைகள்மூலம் வெளிநாட்டு(மேற்கு-அமெரிக்க)வங்கிகளில் பல ரில்லியன்கள் குவிந்திருப்பதும்,அதுவே பெற்றோ டொலரெனப் பரவலாகப் பேசப்படுவதும் ஒரு கொள்ளைக்கானது" எனக் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்!
இதுவரையான எண்ணையை முழுமையாகக் கொள்ளையடிப்பதாக இந்த ஆட்சி மாற்றங்கள் காட்டி நிற்கிறது.
புதிய தலைமைகள் யாவும், நிலவும் அமைப்பை அங்ஙனமே இயங்க அநுமதித்துப் புதிய மேற்குலக எடுபிடிகள் இத்தேசங்களது ஆட்சிகளுக்கு வருகிறார்கள். இதுவொரு பழையபாணியுள் புதிய பரிசோதனை.
இவ்வளவு பெரிய தொகையாக மக்களைப் பயன்படுத்தி(இதற்கு முதல் நிலவும் ஆட்சியின் மூலம் மக்களுக்குத் தீராத ஒடுக்குமுறை வழங்கி-சமூகப் பதட்டைத்தையும்,கொந்தளிப்பையும் உருவாக்கியபடி புதிய பினாமிகளை உருவாக்குதல்) சதிப் புரட்சிகளை நடாத்தும் புதிய வியூகம் இது!
அரபுத் தேச மக்களது வாழ்வுப் போராட்டம் இப்படி உபயோகமாவது மேற்குலகத்தின் அடுத்த வடிவிலான ஆயுதம்.இந்த ஆயுதம் மிக வலிமையானதெனக் கடந்த 80 களின் மத்தியில் கிழக்கு ஐரோப்பாவில் உணர்ந்த ஏகாதிபத்தியம் அதே, பாணியில் அரபு உலகத்துள் இதை மிகவும் தந்திரமாகச்(மண்ணுக்கேற்ற தந்திரம்) செய்து முடிகிறது.
இப்போராட்டம் ஈரன்வரை பாயும்.
அரேபிய மக்களது வளங்களைக் கொள்ளையடித்துச் சேர்க்கப்பட்ட அரேபிய மாப்பியாக்களது வெளிநாட்டு வைப்புகள்,சொத்துகள் பகற்கொள்ளையாக மேற்குலக அரசுகள்-நிறுவனங்கள் எடுத்துவிடும்.ஒரு கல்லில் பல மாங்காய்கள் பறிக்கப்படும்போது, இதைப் புரட்சியெனவும்,மக்கள்போராட்டமெனவும் மேற்குலக ஏகாதிபத்திய ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதில் எவருடைய நலன்கள் அறுவடையாகிறதென்பதை அனைவரும் உணரவில்லையா?
எல்லாவற்றையும் சிவப்புக்கு எதிராகவே செய்து முடிக்கும் ஏகாதிபத்தியம்,முதலாளியம் இருக்கும்வரை,நாமும் எல்லாவற்றையுமே அதிலிருந்து பிரித்தெடுத்து விளங்குவது கேனைத்தனமானது.எனவே,ஏகாதிபத்தியம் எப்படிப் புகுந்து விழையாடுகிறதென்பதைப்புரிந்தால்" புரட்சிகர முகமூடியும் ஏலவே இருக்கும் ஜனநாயக முகமூடியுடன் சிறந்த ஆயுதமாச்சு!" என்பதைத்தவிர அரபு உலகப் போராட்டங்களுக்கு வேறென்ன சிறப்பு இருக்க முடியும்?
ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல்: "இன்றைய தினமானது மகிழ்சியின் தினமாகும்,எகிப்த்திய மக்கள் தம்மை விடுவித்த தினமானது எமக்கு மகிழ்சியான தினம்" என்கிறார்.இப்படி அவர் கூறிக்கொண்டிருக்கும்போது அவரது இராணுவம் அவ்கானில்,கொங்கோவில் குண்டுகள் போட்டு மக்களை வேட்டையாடுவதை எந்தவூடகமும் சொல்லவுமில்லை-மக்களும் அதை எண்ணவும் இல்லை!
பிறகென்ன ,எல்லாம்"இன்ஷா அல்லா" என்பதைத் தவிர எதுதாம் சொல் முடியும் எம்மால்?
எல்லாவற்றையுமே இழந்தவிட்ட தொழிலாள வர்க்கம் இனி இழப்பதற்கு என்னதாம் இருக்கு?
புரட்சி,
புரட்சிகரக் கட்சி,
மக்கள் எழிச்சி,
தொழிற்சங்கம்,
மக்கள் குரல்
எல்லாமே அவர்களுக்கானதாக மாற்றப்பட்டு, அவர்களே நமக்குள் போராட்டங்களை முன்னெடுக்கும்போது எவனோவொருவன் தெருவில் குந்தியிருந்து-முகப் புத்தகத்தில் எழுதி,உறவாடிப் புரட்சியை அவிட்டு விட்டானாம். ஆதலால், " எந்தப் புடுங்கியும் இனிப் புரட்சிக்கு தேவையில்லை-ஒருவன்,நினைத்தால் புரட்சி வெடிக்கும்!" என்ற அறிவுப்பரப்பு தமிழர்களிடம் வந்துவிட்டதாலும் இனித் தமிழருக்கு அழிவேயில்லை!-வாழ்க, தமிழர்கள்தம் பெரும் "அறிவு"ப் பரப்பு!
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.02.2011
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின்...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
No comments:
Post a Comment