Saturday, February 05, 2011

விருப்ப எந்திரங்கள் – விருப்ப உற்பத்தி

விருப்ப எந்திரங்கள் – விருப்ப உற்பத்தி :

ஒரு நோயாளியது குறிப்பை "இங்ஙனம் " புரட்டிப் புரிதலுக்கு நகர்த்துவது , திருட்டுத் தனமானது.


மிழ்ச் சூழலில்வேற்று மொழியிலிருந்து எதை எடுத்து,எவர் போட்டாலும்,அது மனிதவாழ்வில் கருத்தியல்சார் நிலைக்குமேற்றாண்டி,மனித அகவயங்களை ஜந்திரமாக்குவதாகினும்,அதன் தெரிவில் அனைத்தையுமே பொருள் நிலைக்குக் கீழ்க் குறுக்குவதில் சிந்தனைத்"தெளிவு"பெற்றதெனப் படியெடுக்க, நமக்குள் பலர் இருக்கின்றனர்.அவர்களின் , ஏதோவொரு புரிதல்"விருப்பு ஜந்திரங்கள் விருப்ப உற்பத்தி"என டெலோய்ஸ்-பேலேக்ஸ் குவற்ராறி [Gilles Deleuze and Félix Guattari ]எழுதியதன் தமிழ் மொழிப் பெயர்ப்பை நிஜந்தன் தனது தளத்தில் இட்டதும், ஒரு பெருவாரியான புரிதலின் வினை அதைக்கொண்ட பயனென...

சரி.நாம் பார்ப்போம்,[ கட்டுரையது ]இலக்கும்,உள்ளடக்கமும் எந்தத் தளத்திலிருந்து முழுமொத்த மக்கட் பிரிவுக்கும் எட்டுவதென.

ஜேர்மனிய செனற் அதிகாரியும்,நீதிபதியுமான டானில் பவுல்ஸ்றேபர் [Dr. jur. Daniel Paul Schreber, Senatspräsident beim Kgl. Oberlandesgericht Dresden a. D.]உடைய கருத்திலிருந்தும் அவர்கொண்ட புரிதலிலிருந்தும் கருத்தியல் கட்டுமானம் இன்னொரு திசையின் விருத்தியாக(மனித இருத்தல் X பொருள் நிலை X ஜந்திரம்) மேலெழுந்தபோது, அதன் கடந்தகாலப் பரிணாமங்கள் இன்றைய பொழுதில் பொருத்தப்பாடான புரிதலெனுங் குவியத்துள்.



நல்லது.

இந்தப் புரிதலுள் அதிதீத செல்வாக்குச் செலுத்தும் டானிளல் பவுல் ஸ்றேபரது [Daniel Paul Schreber ]சிந்தனைக்கு ( DENKWÜRDIGKEITEN EINES NERVENKRANKEN) வருவோம்.அவரது, கருத்தைக் குறித்தான புரிதலுக்கு -2 -தளங்கள் இருக்கிறது.

1: பிரஞ்சியச் சிந்தனையாளர்களது ஐரோப்பிய நவீனத்துக்குப் பின்பான புரிதல்கள்,

2: நவீனத்துக்கூடாக நகர்த்தப்பட்டு அந்த நவீனத்துவச் சமுதாயத்தின் அழுத்தமான காற்தடத்தின் கீழே நசுக்கப்பட்ட குரல்கள்-உணர்வுகளது குறிப்புகள்.

இதைப் புரிவதற்கு டானியல் பவுல் ஸ்றேபருக்குத் தொடர்ந்த வாழ்நிலைப் புரிதல்கள்,அநுபவங்கள்,அவர்மீது செலுத்தப்பட்ட அதிகாரச் செயலுகை[ Schwarzen Pädagogik] இவை குறித்தான தேடுதலை தொடர்ந்த வில்லியம் நீடர்லான்ட் (William G. Niederland (1904–1993) ஐம்பதுகளின் ஆரம்பத்தில் டானியல் பவுல் ஸ் றேபரது வாழ்வின் "கருப்பு வளர்பு"(இது பின்னாளில் சோடிசமாக_Sadismus/வழக்கங் கொள்வது)நிலைக்களன் [gesunder Haltung]அவரது தந்தை--சகோதரர்களெனக் கண்டடைந்தபோதும் அதன் தாக்கத்துள் உந்தப்பட்டு அதிக வருடங்கள் வைத்தியசாலையிலிருந்து கொண்டதும்; மனோரீதியான பாதிப்புள்[ Paranoia_Bezeichnung für eine psychische Störung ] அவர் எழுதிய நூலானது "ஒரு நரப்ம்புத் தளற்ச்சி நோயாளின் ஞாபகங்கள்"(DENKWÜRDIGKEITEN EINES NERVENKRANKEN).கவனமாகக் கொள்ளுங்கள், டொச்சில்[Auf Deutsch ]அதை ஆய்வென்றோ-அறிதல் முறையென்றோ சொல்லாது "ஞாபகங்கள்"என்றே கூறப்படுவதை.

அதாவாது> DENKWÜRDIGKEITEN <என்பது ஞாபகத்துள் வைக்கவேண்டிய,சிந்தனைக்குள் வைக்கத்தக்தென்பதாக... நீடர்லேன்டர் தனது அதீதமான தேடலில், "ஸ்றேபர் அசம்பாவிதம்"[ Fall Schreber]எனும்பொருட்டே ஆய்வினத்தொடர்ந்தார்.குடும்பத்துள் பாலியற் துஷ்ப்பிரயோகத்துக்குட்பட்ட அவரது(ஸ்றேபர்)மனப் பிறழ்வு ,தொடர்ந்த உறவு நிலைப் புரிதலுள் எந்திரமான நிலைகளை மனித நடாத்தைக்கும்,மனித உறுப்புகளுக்குமான அனைத்து பரிவர்த்தனைக்கும் "தன் _வதையின் " தொடர்ச்சியில் , உறுதியானவொரு புரிதலுக்கு அவரையிட்டுச் செல்வதாகவிருக்கிறது ; இந்தப் புரிதலில் அவர், தான் குறித்தவை மனோவியற் புகுப்புக்கு உதவுமென "அன்று" அறியவே இல்லை!மனப் பிறழ்வது போக்குக்கேற்ப தன்னை உருவாக்கியவருக்கு இறுதியில் , மனித இருத்தலென்பது குற்றமாகவும்,எந்திரத் தனவியக்கவுமாகவே புரிந்துபோகும் வாழ்நிலை. தந்தை-தாய்,உறவு,அனைத்தையும் வதைத்தெடுக்கும் பாலியல்வதையின் வடூ,மிகக் கீழான நிலைக்குள் உந்தும் மனித இருப்பாக மனிதப் பெறுமானஞ் செயலிழக்க ,அதன் தொடரில் வெறும்"விருப்பு-இயக்கம்"ஜந்திரமெனத்தொடரும் புள்ளியை வந்தடைகிறார். இத்தகைய நிலைக்கு, இட்ட சூழற்றொடர்ச்சிக்கு நீடர்லான்டர் வராதபோதும் ,அவரது இந்த நூல்(Three Notes on the Schreber Case) பரவலாகச் சில விளக்கத்தைத் தரும். பெரும்பாலும் டானியல் பவுல் மீதான புரிதலது எல்லையில், அவரைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தியர் பல்கேரிய எழுத்தாளர் எலியாஸ் கானற்றி[Elias Canetti]. பரந்துபட்ட மக்கள்-அதிகாரம் எனும் நூலோடு(Masse und Macht) அவர் ஒரு விவாதத்தை நகர்த்துவதை அறிய முடியும். இவர்களை, உள்வாங்காது அல்லது மறைத்துத் தமது கருத்தியலுலகுக்கு வலுவாகச் சோடித்த செயல் ,பின் முதலாளியச் சூழலது தெரிவு.

ஒரு நோயாளியது குறிப்பை இங்ஙனம் புரட்டிப் புரிதலுக்கு நகர்த்துவது திருட்டுத் தனமானது.டானியல் பவுல் இரு தாசப்பதமாக நோய்கு உட்பட்ட மனிதர்.அவர் எழுதியது, "நோய்க்கும்/தனக்குமான" புரிதல்சார்ந்த எண்ணங்கள்-மனப்போராட்டங்களையே[klassische Fallstudie aus Sicht eines Psychosekranken].அது, அவரது சொந்த வாழ்வின் வடூ.

அவர் ,தனது நோய்குச் சிகிச்சை பெற்றபோது, அதன் தளத்திலிருந்து புரிந்துகொண்டவையும்,தனக்கும் /தந்தைக்குமிடையிலான எதேச்சை-அதிகாரமிக்க பாலியற் துஷ்ப்பிரயோகங்கள் [Der das geistige Klima des gehobenen Bürgertums bestimmende positivistische wissenschaftliche Mainstream und die vorherrschenden protestantischen und leibfeindlichen Diskurse] குறித்த வடூவின் உந்துதலால், பிறழ்வுற்ற பல புரிதல்களைத் தொடர்ந்து குறிப்பெடுத்து வைத்தார்.அதைப் பின் தொடர்ந்த சிக்மன் பொறைட் [Sigmund Freud], அவரது குறிப்புகளைத் தனது தேவைக்கேற்றபடி[ Basierend auf dieser Fallstudie schrieb Sigmund Freud 1910/11 den Aufsatz Psychoanalytische Bemerkungen zu einem autobiographisch beschriebenen Fall von Paranoia (Dementia Paranoides), der 1911 erschien.] வெட்டியும் ,நிமித்துயும் பார்த்த போது , அதைப் பிரஞ்சிய விண்ணர்களும் [Gilles Deleuze and Félix Guattari] தமக்கேற்ற புரிதலுள் முடுக்கினர்.

நமக்கோ,மனிதவுறுப்புகள் X ஜந்திரம்.விருப்ப எந்திரம் Xவிருப்ப உறுப்பென்றதும் ,புதுமையான புரிதல்.அடடா,மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம் என்றதை மனித இருத்தலுக்குப் பொருத்தும் அகவயக் குறையின் தொடர்ச்சியோ இது?[ Schreber war, so Lothane, einem dreifachen »Mord« unterworfen: dem »Seelenmord«, begangen von seinem Psychiater Paul Flechsig, der seinen Patienten einfach in die Irrenanstalt verbannte anstatt ihn angemessen zu behandeln; dem »Justizmord«, begangen vom Anstaltsdirektor Weber, welcher die definitive Entmündigung Schreber veranlasste und dem »Rufmord« Elias Canettis, der in Schrebers vermeintlicher Paranoia ein Modell für Hitlers psychische Disposition sah.« ]– Lothane: Seelenmord und Psychiatrie.டானியல் பவுல் ஸ்றேபர் , மூன்று விதமான கொலைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறித்த புரிதல்களை நாம் கொள்ளத்தக்கதாக அவரது வைத்தியர்கள்-Paul Flechsig-அவர்குறித்த ஆய்வாளர்கள் [William G. Niederland- Lothane-Elias Canetti]சொல்லக் கேட்கிறோம்:"ஆன்மக்கொலை,நீதிக்கொலை,புகழ்க்கொலை"[Schreber war, so Lothane, einem dreifachen »Mord« unterworfen: dem »Seelenmord«, begangen von seinem Psychiater Paul Flechsig, der seinen Patienten einfach in die Irrenanstalt verbannte anstatt ihn angemessen zu behandeln; dem »Justizmord«, begangen vom Anstaltsdirektor Weber, welcher die definitive Entmündigung Schreber veranlasste und dem »Rufmord« Elias Canettis, der in Schrebers vermeintlicher Paranoia ein Modell für Hitlers psychische Disposition sah.« Lothane: Seelenmord und Psychiatrie. ] என ,அவரது மனதில்-நியாத்தின் தரப்பானது எங்கோ பறிகொடுக்கப்பட்டாதான திசையிலேயேதாம் அவர் தனது குறிப்பை வடித்தெடுத்தார்.

அது,உலகத்தில் தன்னையும்,தன்னைச் சுற்றிய மனிதர்களையும் வெறும் பண்டாமாக பார்த்தது-குறுக்கியது.இதன் வழி தனக்குள்ளானவொரு "நியாயத்தை" [Offenen Brief ] " த் தக்க வைத்துக்கொள்ளும் பொருளோடு அனைத்தையும் அனத்து உடலுக்குள் திணித்து, புறவுலகை மறுத்தொதுக்க முனைதல்கூட ஒரு வகையில் அவரது சுதந்திரத்தின்மீதான அத்துமீறிய கொலைதாம்.

புறநிலைக்கும்,சிந்தனைக்குமான சார்பு நிலையுள் இந்த ஜந்திரத்துக்கான எடுகோள் எப்படியுருவாகியது? விருப்பு ஜந்திரத்துக்கு விருப்பைத் திணிப்பதற்கான தொடர் நரப்பு மண்டலத்திலிருந்து உருவாகுவதாக[ "Unter welchen Voraussetzungen darf eine für geisteskrank erachtete Person gegen ihren erklärten Willen in einer Heilanstalt festgehalten werden?] " ச் சொல்கிறார் டானியல் பவுல் ஸ்றேபர். அப்போது, இமானுவேல் கான்டும்,பிறிடிறிக் பொய்யர்பக்கும் செத்துப்போயிருந்தனர்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
5.02.11

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...