Saturday, January 15, 2011

"இடது-வலது" கடந்து...

ன்று,இலங்கைத் தீவில் வாழும்தமிழ்பேசும்மக்களோ தம்மீது சிங்கள இனவாத அரசுகள் கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பை-சிங்கள மயப்படுத்தும் அரசியல் நகர்வையெல்லாம்மறந்து,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது, அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் நம்புகிறார்கள்.

"மீண்டுமொரு உழவர் திருநாள் வந்து பொங்கிச் செல்கிறது.யுத்த வடூ மிகவிரைவாக மனதிலிருந்து விலத்திவிடினும் அந்தப் பயங்கரமான சிங்கள அரசினது இனவழிப்பு யுத்தம் தமிழ்ர்களது பூமி மீது நிகழ்த்திய வரலாற்று அழிவை தமிழர்கள்தம்பூமியின்மடி மறந்துதாம் போகும்?அழிந்த பனைகள்-அறுந்த சுற்றம்,பிரிந்த மண்,விட்டுத் தொலைத்த கிராமம்,குடியிழந்து குட்டிச் சுவராகப்போன கிராமங்கள் தினமும் இந்த அழிவு யுத்தத்தைச் சபித்திருக்கப் பொங்கலுக்கான வெடிகள்,தமிழ்ப் பிரதேசமெங்கும்சிங்கள அரசினது குண்டொலிகளாக ஞாபகத்தைக் கூட்டிவருகிறதா?-கூட்டிவரவேண்டும்,அதுதாம் உண்மையாகவும் வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்தும். எம்மீது நடாத்தப்பட்ட அழிவை நாம் மறக்கத்தாம் முடியுமா?வயிற்றுக்குச் சோறிடுவதாக இன்று படங் காட்டுபவன் வாழ்வைப் பறித்துவிட்டு எம்மை மேய்க்கிறார்கள்!தாலியை அறுத்துவிட்டு தமிழச்சிக்குக் குங்கமிடும்படியும்-பட்டுடுக்கும்படியும் துயிலுரியும் மகிந்தா மதங்கொண்டுரைக்க மௌனமாகக் கனாக் காணும் தமிழ்த் தேசம் தன் மானத்தை இழந்துதாம் போகுமா?"

இதுவொரு நம்பிக்கை.இப்படிப் பலரிடம் கேள்விகள் உருண்டோடுகிறது!

இத்தகைய நம்பிக்கை வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கும்,மற்றும் தமிழ்த் தலைமகளது போலித்தனமான அரசியலது விருத்திக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலை பெறுகிறது.இஃது, ஒருவகையில் சிங்கள-தமிழ் ஓட்டுக்கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள்.

சோறுபோடுவதும்,சுகம் பெறுவதும் மக்களது உரிமையென வகுப்பெடுப்பவர்கள் புதிய இலக்கொன்றின் திவைவழியில் ஆளும் மகிந்த அரசினது எஜமானர்களுக்கிசைவாகக் கருத்துக்களை பல வகைகளில் முன் வைக்கின்றனர்.இன்றைய இடதுசாரிகளது முகாம்மின் இயலாமையானது இந்தக் கருத்துக்களை மேலும் மெருக்கூட்டுவதில் தமிழ்பேசும் சமுதாயத்தின் இளைய தலைமுறையிடம் "மக்களுக்கு இன்று அவசியமானது அமைதி,உணவு-உறையுள்"எனச் சொல்லி தமிழ்த் தேசிவினதின் தலைமுறையையே அடிமைப்படுத்தும் அரசியலைச் சிங்கள-அந்நிய லொபிகள் செய்து முடிக்கிறார்கள்.இதைப் பெரும்பாலும்"மனிதாபிமானம்"எனும் கருத்தின் திசையில் கட்டித் தகவமைக்கும் அதிகாரத்துவ நலன்கள் நமது மக்களை அடிமைக்குட்படுத்துவதையே குறியாகக்கொண்டியங்குகிறது.

இவையெல்லாம் புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.மகிந்தாவோ அல்லது சிங்கள அதிகாரவர்க்கமோ நமது மக்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள் அல்ல!மாறாக,இன்றைய நிதிமூலதனத்திடம் சரணாகதி அடைந்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவில், அந்நியர்களே நமது மக்களது தலைவிதியைத் தீர்மானித்துச் செயற்படுகின்றனர்.அந்த வைகையற்றாம் இன்றைய "லொபி"அரசியல் எமது மக்களுக்குச் சந்தோசமான வாழ்வு"அமைதியும்,அடிப்படைத் தேவைகள்"எனவுஞ் சொல்கின்றதுவரை,ஒருவித "வயிற்றுக்கான அரசியல்" எமக்குள் நடாத்தப்படுகிறது.இதைக் கட்டமைக்கும் டக்ளஸ் முதலான தமிழ் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தரகர்கள் மிக நெருக்காமானதும்,அண்மையிலுமான கருத்தியல்களை விதைத்து எட்டிவிட முனையும் லொபி அரசியலானது, எதிர்காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தின் எந்தவுரிமையையும் சிங்கள ஆளும் வர்க்கம் மறுப்பதில் திரட்சியடையும் சங்கதிகள் என்பதை எவர் புரிந்துகொள்ள முடியும்?

இலங்கைக்கு ஜனநாயகம்:


இலங்கையில் ஜனநாயகத்தின் அவசியங் குறித்துப் பரப்புரை செய்யுங் கயமைக்கு, ஜனநாயகங் குறித்தவுணர்வு-புரிதலெல்லாம் அதிகம்போனால் தமது அரசியல் நோக்கம் நிறைவுபெறும் தளத்தில் அது மிக நேர்த்தியானதெனச் சொல்லும் கபடம் கருப்பொருளாகவிருக்கிறது.அந்தத்திசையிற்றாம் அரசியலைச் செய்யும் பெரும்பகுதியான புலம்பெயர் "மாற்று(சுத்தல்)க் கருத்து"வட்டம்நடந்துமுடிந்த "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு"புதிய விளக்கங்கொடுத்தது.பாசிசச் சூழலிலுள்ள இலங்கையில் இத்தகைய மாநாடுகள் குடிசார் அமைப்புகளது விசும்பு நிலைக்கு ஏதுவானதாகவும்,எழுத்தாளர்களது குரல் சர்வ தேசச் சூழலில் இலங்கையினது இன்றைய சூழலைச் சொல்லும் ஒரு அரியவாய்பாகவும்,மக்களது ஒடுங்கிய-அழுத்தமான வாழ்வில் இலக்கியவாதிகளது இணைவு அவர்களது குரலை உயர்த்தும் களமாக அமையுமெனவுஞ் சொல்லப்பட்டது.இது,ஜனநாயகத்தை இலங்கைக்கு வெளியில் புரிந்ததென்னவே வளர்ச்சியடைந்த நாடுகளது நவலிபரல்தன்மையிலான சமூக நகர்வையாகவேயெனப் புரிந்துகொள்வதில் நமக்குச் சிக்கல் இல்லை!



இந்தப் புரிதலுக்கு வெளியில் நமது மக்களது அரசியலைச் சிதைக்கும் லொபி அரசியலானது அதன் வர்க்கத் தன்மைக்கேற்ற அதீத முனைப்புடைய புறக் காரணிகளை(மாநாடு,சங்கம்,சமயக்கூட்டம்-சொற் பொழிவு,இலக்கியவுரையாடல்,நிலவும் அமைப்புக்கிசைவான பரப்புரை,குறிப்பாகக் கருத்தியற்றிசையமைவு) தமது நலன்களுக்குட்பட்ட வகையில் பேச முற்படுகிறது.இது,மக்களது வாழ்வதாரத்தைக் குதறிய அரசினது இன்றைய நகர்வைக் குறித்துப் "பாசிசப் புலிகளது"அரசியலோடிணைப்பதில் அரசுக்கும்,போராடுங் குறுங் குழுவுக்குமிடையிலான வித்தயாசம் என்னவென்பதை மறைத்து ஆளும் அரச-ஆளும் வர்க்கத் திமிரை மக்களது உரிமையுடன் ஒப்பிட்டுத் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கே வேட்டு வைத்திருக்கிறது.இந்தப் புரிதல் வகைப்பட்ட அரசியலானதின் இன்றைய வகிபாகமானது தமிழ்ச் சூழலில் மகிந்தாவினது அரச எடுபிடிகளாக்குச் சிலரை மேலும் வென்றெடுப்பதில் குறிவைத்து மையங்கொள்ளும்.இது வெளிப்படுத்தம் அரசியல்பரந்துபட்ட இலங்கையின் முழுமொத்த மக்கட்டொகைக்கும் எதிராதென்பதில் காலங்கடந்துதாம் புரிந்துகொள்ளத் தக்க வினைக் கூறுகள் அடங்கியுள்ளது.

மக்களது பெயரில் அவர்களை அண்மிக்கும் இத்தகைய அரசியல் உரையாடலானது மீளமீளத் தகவமைக்கும் கருத்துவெளியானது தமிழ்பேசும் மக்களது அரசியலுரிமையைச் சோற்றுக்கு விற்பதென்பதைக் கடந்தியங்கமுடியாதென்பதை அவர்கள் தினமும் சொல்வதில் கவனமாகவிருக்கிறார்கள்.இதுவே,இலங்கைக்கு ஆதரவான லொபிக் குழுக்களான இலங்கை ஜன நாயக ஒன்றியம்,இலங்கையர் சங்கம்,தலித் சமூக மேம்பாட்டு முன்னணி போன்ற குழுக்களது பெரும்பான்மைப் பலத்துடன்கவிஞர் ஜெயபாலன் சோபாசக்திபோன்ற இலக்கியச் "செம்மல்"களையும் கையெழுத்திட்டு ஆதரிக்கத் தூண்டியது.இந்தவிடத்தில் சோசலிசம்-மார்க்சியம்பேசும் இரயாகரனது தாந்தோன்றித்தனமான விசம அரசியலை என்னவென்பது!இத்தகைய சர்வ தேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஆதரித்து அறிகைவிட்ட இரயாகரனது பினாமி அரசியல் செயற்பாடோ அப்பட்டமான ஒடுக்குமுறையாளர்களது நலனை ஒடுக்கப்பட்ட மக்களது அரசியல்வழியாகச் சொல்வதில் இதுவரை புலிக்கு வேவு பார்த்த சூழலெல்லாம் இன்னொரு தரப்புக்கு விசுவாசஞ் செய்வதில் அழிக்கப்பட்ட புலிக்கு மாற்றீடு காண்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?இவர்கள் கூறுவதன் சாரம்தாம் இன்றைய இலங்கைக்கான "ஜனநாயகம்" என்பதைப் புரிந்துகொண்டால் இந்தச் சூத்திரத்துள் மையமுறும் நலன்கள் மக்களுக்கானதுதானவென்று புரிந்துவிடாதோ?

புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதற்கேற்ற தளங்களிற்றாம் இடதுசாரியம்(இரயாமாதிரி),ஜனநாயகம்(சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு மாதிரி) எல்லாந் திசையமைக்கப்படுகிறது.இதற்கு வெளியில் இயங்க முற்படுவதை இத்தகைய குழுக்கள் "இடது"சாரியத்தின் பெயராலும்,"ஜனநாயக"த்தின் பெயராலும் எதிர்த்து, மக்களது உரிமைகளைப் பேசும்"தகுதி"தமக்குத்தாமெனச் சொந்தங்கொண்டாடுவது தமது எஜமானர்களது ஆதிக்கத்துக்கு எதிரான எந்த விசும்பையும் கிள்ளியெறிவதற்கான புள்ளியென்பதே எனது கருத்தாகும்.

புலியில்லா இலங்கை:


புலியில்லா இலங்கைக்குப் பிரிவினைவாதப் பூச்சாண்டி அரசியல் இனிச் சறுக்கலாகவே இருக்குமென்பது மகிந்தாவுக்குப் புரிந்தவொன்று.புலிகள் தம்மை மீளத் தகவமைப்பதாக இந்திய ஆளும் வர்க்கம் கடந்த மாதம் ஊதிப் பெருக்க அது எடுபடவில்லை!

ஒன்றுபட்ட இலங்கைக்கான அரச ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்துவது மற்றும் இலங்கை பூராகவும் அதை விஸ்தரிப்பதென்பதும் இன்றைய இலங்கைக்கு முதலாயக்கடமைகளில் ஒன்று.



இதன் தொடரில், வரலாற்று ஆவணங்கள் உருவாக்கப்படும் புத்த விகாரைகளது மீள்வருகையில் எட்டப்படும் மனிதப் பதிவுகளது திட்டமிடப்பட்ட ஆதிக்கமானது ஆத்மீகத்தோடு சிங்கள அரச ஆதிக்கத்தை வலுவாக்கி, பண்பாட்டு ஒடுக்குமுறையை-ஆதிக்கத்தை இறுக்கி வருவதன் வியூகத்தை முதலிலும்-இறுதியிலுமாகச் சொல்லித்தாம் ஆகவேண்டும்.இந்தப் போக்கோடு மிகந்தாவே விரும்பாவிட்டாலும்,இலங்கையின் தரகு முதலாளியமானது ஆசிய மூலதன வருகைக்குப் பின்னும்,புலிகளது இடத்தைத் தொடர்ந்து வெற்றிடமாக வைத்திருக்கவும் கீழ்வரும் இரு முக்கியமான போக்குகளுக்கு வந்தேயாகவேண்டும்-நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும். இதைச் செய்யாதிருக்கும்போது தமிழ் நிலப்பரப்பில் அதன்(சிங்கள அரசு) அரச ஆதிக்கம் மெல்லவும்-மெதுவாகமே நகரமுடியும்.ஆதலால் அரச ஆதிக்கத்தை மிக விரைவாக நிலைப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் இப்படித்தாம் நமக்குள் அறிமுகமாகும்:

1: இலங்கை பூராகவும் இனப் பாகுபாடற்ற பொருளாதார முன்னெடுப்புகள்-அபிவிருத்திகள் நடந்தே ஆகவேண்டும்.யுத்தத்தால் பாதிப்படைந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் சீராக்கப்படுவதும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்கள் அவர்களது வாழ்வுக்கானதாகப் பயனெட்டுவதும்,குடிசார் அமைப்புகள்
சமூக வாழ்வைச் செப்பனிடுவதும்,குடும்பங்களை இணைப்பதும் அவசியம்.இதற்காகக் குடிசார் அமைப்புகள் செயலிழந்த கடந்தகாலத்தைத் தொடைத்து எறியவேண்டிய நிலையில் இலங்கை ஜனநாயகம் தன்னைப் புதிப்பித்தாகவேண்டும் இல்லை உயிர்த்திருக்க வேண்டும்.

2: இராணுவவாதம் மங்கி,குடிசார் நிறுவனங்களுக்குள் அரசியல் ஆதிக்கமும்,சிவில் சமூக ஆளுமைiயும் இணைந்துகொள்வது.அரசியல் ரீதியான இனஞ்சார் அதிகாரப்பரவலாக்கம்(மாகண சபைகளுக்கு அதிகாரங்களைக் கையளித்தல்) பொதுவான ஒருகிணைந்த இலங்கை அரச சட்டயாப்பாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.இதுவே,தடையற்ற பொருளாதார முன்னெடுப்புகளை மேற்குலக மூலதனத்திடமிருந்து பாதுகாத்து ஆசிய மூலதனத்துக்குச் சாதகமான தெரிவுகளை வலுப்படுத்தும்(இது,மாகண சபைகளுக்கு சட்டரீதியான அதிகாரங்களைக் கையளித்தே ஆகவேண்டும் என்ற பொருளில் புரியப்படுகிறது).


மிகந்தா இரண்டாவது தடவை ஜனாதிபதியான கையோடு அவரது அரசியலானது திட்டமிடப்பட்ட ஆசிய மூலதன வியூகத்தை மிக ஒழுங்குற இலங்கையில் பரிசீலித்துவருகிறது.ஆசிய மூலதனமானது ஐரோப்பிய அரசுகளிடமிருந்து கற்றதைத் திருப்பிக்கொடுக்கும் பதிலீடான பாதையிலேயே சென்றுகொண்டிருக்கிறது.அது,திட்டமிடப்பட்ட பாரிய உலக யுத்தமொன்றின் முன்தயாரிப்பில் இலங்கைமீதான அனைத்து அதிகாரத்தையும் நிலைப்படுத்த இலங்கையானது ஒரு இனத்தின் ஆளுமைக்குள்கொணரப்பட்ட, ஒற்றை இலங்கைத் தேசியவுணர்வு முதன்மையாக இருக்கவேண்டுமென உணரும் அரசியல் புரிதலின்வழி செயற்படுவதை,பேராசிரியர் கிஷோர்(Kishore Mahbubani _ http://www.mahbubani.net/ ) மபுபானியின் உரைகள் மூலம் அறியக்கிடைக்கிறது.

இதைத் விரித்தியாகவும்-நேர்த்தியாகவும் செய்ய முனையும் ஆசிய மூலதனத்துக்கு, இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் ஒருகிணைந்த இலங்கைக்குள் தேசிய இனமாக்கிக்கொள்வது அவசியமாகவே இருக்கிறது.இதைத்தாம்"நாம் அனைவரும் இலங்கையர்கள்,சிறுபான்மை இனங்கள் என்பது கிடையாது"என்ற மகிந்தாவின் கோரிக்கைக்குள் இனங்கண்டாக வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தப் பொருளாதார நகர்வுகள்-முரண்பாடுகள் மக்களினங்களை வலு கட்டாயமாக ஒரு தேசத்து நிலவரையறைக்குள் ஒன்றிணிக்கவே முனைகின்றன.இதிலிருந்து இனிமேற்காலத்தில் "தமிழர்களது பூமி" என்ற ஐதீகப் பாரம்பரிய பிரதேசம் முகமிழந்து காணமாற்போவதென்பது புத்தரது கொட்டகைகளதும்,"தமிழ் நிலப்பரப்புகளில்" தங்குதடையின்றிப் பல்லாயிரும் சிங்களச் சிப்பாய்கள் காதல் செய்வதிலிருந்தும் விசும்பாகி முகிழ்த்துவருவதை எவரும் புரிவர்.

"லொபி"கள்தம்உலக அணிச்சார்பு:

இன்று மேற்குலகம் விரும்பாமல் வெறுக்கும் சீனாவும்-இந்தியாவும் அடுத்த இருபதாண்டுகளில் ஆசியாவிள் மிகப்பெரும் பிராந்திய ஆதிக்க சக்திகள் என்பதிலிருந்துவிடுபட்டு உலகச் சக்திகளென அடுத்த நூற்றாண்டுவரைத் தொடரத்தாம் போகின்றன.இதற்காக அமெரிக்கவே யுத்தத்துக்கு அழைத்தாலும் அதைத் தட்டிக்கழித்துச் செல்ல விரும்பும் இத்தகைய நாடுகளை யுத்தத்தின்மூலஞ் சிதைந்தாலே தவிர அமெரிக்கா-ஐரோப்பா உயிர்வாழ முடியாது.

எனவே,அமெரிக்கா திறக்க முனையும்"ஈரான் யுத்தம்-வடகொரிய யுத்தம்"நேரடியாகச் சீனாவைத்தாக்கி அழிக்கும் மிகப்பெரிய வியூகத்தோடு நகர்வதை சீனா முன்கூட்டி அறியும்.அதைத் தொடர்ந்த அதனது வியூகப் பங்காளிகளில்(The Shanghai Cooperation Organization _ http://www.cfr.org/publication/10883/shanghai_cooperation_organization.html ) முதன்மைக் கூட்டாளி இருஷ்சியா,இந்த வருட மூனிக் நகர்(ஜேர்மனி) பாதுகாப்புக்(Munich Security Conference ) கூட்டத்தில்(நேட்டோ அணியினது இச்சந்திப்பு_ http://www.securityconference.de/ ) நேட்டோவோடு இணையும் அவர்களது வேண்டுகோளுக்கு அளிக்கும் பதிலிலிருந்தே சீனாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்பது உண்மையானது.

தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து இந்தியா,சீனா போன்ற இரண்டு பொருளாதார ஆதிக்கச் சக்திகளைத் தனிமைப்படுத்தும் அரசியலை அமெரிக்காவும் மேற்குலகமும் முழு முயற்சியாகச் செய்து வருகிறது.இந்தியாவின் சந்தையை வெற்றிகொண்ட மேற்குலகமும் அமெரிக்காவும் அதன் அரசியல் ஆதிக்கத்தையும் பொருளாதாரச் சந்தையையும் மெல்ல உடைப்பதின் ஒரு அங்கமே ஐக்கிய தேசியக்கட்சி(இரணில் மௌன்ட் பெலாரின் சொசைட்டி போர்ட் மெனம்பர்_The Mont Pelerin Society _ https://www.montpelerin.org/montpelerin/home.html ) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகளது கூட்டு-நகர்வு,அரசியல் கோரிக்கைகள்.

இலங்கையில், இந்தியா-சீனா போன்ற நாடுகள் அதிகமாக ஆதிக்கத்தைச் செலுத்தி, இலங்கையை இந்தியாவினது-சீனாவினது செல்வாக்குக்கு உட்பட்ட நாடாக்கவே புலியழிப்பைக் கொள்கையாக வகுத்தது -Shanghai Cooperation Organization !இங்கு, இவ்வமைப்பின் செல்வாக்கு என்பதன் மறுவடிவம் இந்திய-சீன,இருஷ்சிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடு என்பதன் பொருளைக் குறித்து நிற்பதென்பதை இந்த மேற்குலகம் நன்றாகவே புரிந்து கொண்டது.

இத்தகைய நாய்ச் சண்டையில் அடியாளாக இருக்கும் ஒவ்வொரு இனம்சார் கட்சிகளும்,அமைப்புகளும்- இயக்கங்கங்களும் தத்தமக்குரிய வேலைகளைத் தமது எஜமானர்களுக்காச் செயற்படுத்தும்போது"இலங்கைத் தேசியம்,தமிழ்,ஜனநாயகம்,மக்கள் நலன்,பசிபோக்குதல்,நிவாரணம்,மீள்கட்டுமானம்,பேச்சுரிமை,சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு-வாழ்வாதாரம்"என்று பற்பல முகமூடிகளைப் போட்டுக் கொள்கின்றன.புலம் பெயர் "இடது"மாபியாக்கள் இன்னமும் தத்தம் அணி பிரித்துத் தமிழ்த் தேசியம்-விடுதலை என வகுப்பெடுப்பதையுந்தாண்டித் தாம் மட்டுமே மக்களுக்கு மயிரைப் பிடுங்குவதாகப் பூச்சுற்றுவதும் இத்தகைய"லொபி"அரசியலுக்கு அடிமையான கட்சிகளது வால்கள்தாம் இவை என்பதை நிரூபணமாக்கிறது.

ஆசிய மூலதனம் ஒரு புறமும்,மறுபுறம் மேற்குலக மூலதனமாகப் உலகத்தின் கனிவளங்கள் சில பெரு வங்கிகளது-நிறுவனங்களது சொத்தாக மாறிவிட்டென.இதைச் சுற்றித் தேசங்களது அரசியல்,மக்களது அழிவுகள் நடந்தேறுகிறது.இயற்கை அனர்த்தங்களாக சீறிச் சொல்கிறது! மனிதத் தவறுகள், புவி அதிர்வாகச் சுனாமியாக,வெள்ளப் பெருக்காக இலட்சம்-கோடி மக்களது உயிர் குடிக்கக் காத்திருக்கிறது.இலங்கைக் கிழக்கு வெள்ளம்-அவுஸ்ரேலிய வெள்ளம்,கெயிட்டி நிலவதிர்வு-பிரேசில் மண்சரிவு...

"யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக..."

இதன் மூலம் தொடரும் லொபி அரசியலானது பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வை இன்னும் அதே அழிவுக்குள் திணிப்பதாகத் தொடர்வதில் மக்கள் நலன் என்று சொல்பவர்களையே மக்கள் நம்பாமற்போகும் காலமொன்று உருவாகும்.அந்தக் காலமானது அழிவினது விளிம்பில் உலக யுத்தமெனச் செய்யப்பட்டு, இன்னொரு பாசிச வரலாற்றை இந்த நவ லிபரல் ஏகாதிபத்தியப் பிசாசுகள் எழுதிச் செல்வார்களா?

இதுள் தமிழ்த் தேசியத்தின் வரைவிலக்கணம் என்னவாக இருக்கும்?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
15.01.2011

1 comment:

Anonymous said...

வணக்கம் உறவுகளே உங்களின் வலைத்தளத்தினை இதிலும் இணையுங்கள்

http://meenakam.com/topsites

http://meenagam.org

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...