Sunday, January 09, 2011

இனியொருவில், புலம்பெயர் நிலைவரம்

எம்மை, அகதி என்றே பிரகடனப்படுத்துவது
மானுட விடுதலைக்கு ஆனது!


னியொருவில், புலம்பெயர் நிலைவரம் குறித்த உரையாடலது பகுதி உரை.தொடராக, இது குறித்த கருத்தாடலும்-ஆய்வுகளும் அவசியமிருக்கு.அதைச் சாத்தியப்படுத்தும் புரிதல், அவசியமானதும் அடுத்த கட்டத் தேவையுமென்பது எனது எண்ணம்.அதன்வழி உரையாடலை இங்கு பகிர்கிறேன்.

புலம் பெயரும் மக்கள் கூட்டம்: துண்டிக்கப்பட்ட மக்கள் குழாமே-அவர்களுக்கு நிறம்,மொழி,இனம் இல்லை-அவர்கள் தம்மை அகதி என்றே பிரகடனப்படுத்துவது மானுட விடுதலைக்கு ஆனது!

சரி,விரிவாக விவாதிக்க வேண்டியவொரு தேவைக்கு சிரஞ்சீவி உந்தித் தள்ளுகிறார்.இந்தக் கட்டுரையின்வழி நாவலன் பேச முற்பட்டதை அவர் (நாவலன்)பின்னூட்டில் விளக்கியுள்ளார்(.) .

சரிஞ்சீவி,தமிழ்"சிவப்பு" பெண்கள்-ஆண்கள்,"கருப்பு"ஆண்-பெண்களை கேலி பேசுவதை என் விமர்சனம் எப்படிப் பேசியுள்ளதென்பதை இன்னொரு முறை வாசித்துப் புரியவும்.அடுத்து,தமிழ்பேசும் புலம் பெயர் மக்களை மட்டுமான வட்டத்துள் பேசப்படாததும்-பேசப்பட்டதுமான எனது உரையாடாலானது ஒரு சமூகத்தின் இருப்பை நோக்கி-உருவாக்கத்தின் ஆரம்ப நிலைமைகளைப் பேசுவது.அதுள் ,புலம்பெயர் மக்களுக்கு எங்கிருந்து-எப்படி ஒடுக்குமுறைகள் வருகின்றனவென்பது அவசியமான தேடுதலாக எனக்குப்படுகிறது.அதன்வழி ,மேலோட்டமாக எவர் எழுதும்போதும் அதைக் குறித்து எதிர்வினையாற்றுவதென்பது பதினெட்டாம் நேற்றாண்டினது மொழியாகவிருந்தாலென்ன, 21 ஆம் நூற்றாண்டினதாகவிருந்தாலென்ன?

இமானுவல் காண்டையும்,மார்க்சையும் எத்தனையாம் நூற்றாண்டு மொழிகொண்டு வாசிக்கிறோம் ?

பெரிய விடுகதையெல்லாம்"பின்நவீனத்துவம்"என்ற வார்த்தையை வைத்து விளையாடாதீர்கள்!

இது குறித்து வாங்கோ விரிவாக விவாதிப்போம்.நான் இத்தகையவுரையாடல்களை மிகவும் மனத்தோடு பேச முற்படுபவன்.இந்தவுரையாடலையே பேஷ் புக்கில் அதிகம் இணைக்கிறேன்.இப்போதைக்கு மிக்கேல் பூப்காவின் ஒரு பதிலை உங்களுக்குச் சுட்டுவேன்.

"Ich bin kein theoretiker.Als Throretiker bezeichne ich Jemanden,der ein allgemeines System errichtet,sei es ein deduktives oder ein analytisches,und es immer in der gleichen Weise auf unterschiedliche Bereiche anwendet.Das ist nicht mein Fall.Ich bin ein Experimentator in dem sinne,daß ich schreibe,um mich selbst zu verändern und nicht mehr dasselbe zu denken wie zuvor.-Gespräche mit Ducio Trombadori-Die Hauptwerke von Michel Foucault,Seite:1585-86.

"நான் ஒரு சிந்தாந்தவாதி அல்ல.சிந்தாந்தவாதியாக என்னை நான் காட்டிக்கொள்வேனானால் எங்கேயாவது,அது வித்தியாசமான நிலைகளுக்குள்-பகுதிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒருமாதிரியான விளக்கங்களும்-கழித்தல்களையுமே பயன்படுத்திக்கொள்வதில் முடியும்.அது எனக்குரிய செயலல்ல! உங்களுக்கு என்னைக் குறித்துச் சொன்னால்,நான் ஒரு பரிசோதகன்.நான் சித்தாந்தவாதியல்ல.எனது நோக்கத்துள் நான் எழுதுவது என்னைத் தொடர்ந்து மாற்றுவதற்கும்,மற்றும் முன்னையே சிந்தித்ததை நெடுகவும்,மீளவுஞ் சிந்திதித்து வருவதை மறுப்பதே."

இப்படிச் சொல்லும் பூப்காக மனிதன் ஒரு அநுபவ மிருகமென(Der Mensch ist ein Erfahrungstier) இடூசியோ டொறோம்பாடோறியோடு(Ducio Trombadori) நீண்ட உரையாடலையும் செய்திருக்கிறார்.இப்படிப் பின் நவீனத்துவம் பரிசோதித்து வரும் பகுதிகளை மனித அநுபவத்தை-நடாத்தையை,அதன் அடையாள நெருக்கடியைத் தட்டிக்கழிக்க நாம் பயன்படுத்தும் தற்குறித்தனத்துக்குத் தெரிந்த வார்த்தை ஒன்று மட்டுமே.அது,"பின் நவீனத்துவம்"இந்த வார்த்தைக்கு வெளியில் விரிவாக உரைக்க முடியாத "புத்திசாலிகள் "நம்மில் பலர் இருக்கிறார்கள்.அதுள் நீங்களும் ஒன்றா சிரஞ்சீவீ?

அப்படியில்லையென்றால் வாருங்கள் பூப்கா,தெரிதா,லெக்கான்,சசூர்,ரொலாந் பார்த்,சார்த்தார்,அந்திரே ஜீத் குறித்தும் காம்யுவின் கொள்ளை நோய் (Die Pest)குறித்த அல்ஜீரிய மானுடரது முகமிழந்த வாழ்நிலை பற்றி, சமூக அசைவாக்கவும் குறித்துப் பகிர்வோம்.அதுள் நமது மக்களது புலம் பெயர் வாழ்வது வலி என்னவெனப் புரிந்தும் போகும்!

பின் நவீனத்துவம் ஏதோவொரு பெரிய தத்துவமெனப் பீலாக்காட்டும் கயமைக்கு முன் அவரது[Michel Foucault ] கூற்றுப் புட்டுவைப்பதும்-எனது புரிதல் இந்தத் தமிழ் பின்நவீனத்துவப் பீலாவைக் கண்டு புன்னகைத்தலும் சதா நிகழ்வது சிரஞ்சீவீ!

உங்களுக்கு மனிதசமூகத்தின் இடப்பெயர்வு அவ்வளவு கேலித்தனமாக இருக்கு?புலம் பெயர்ந்து உலகம் பூராகவும் வாழ்பவர்கள் எத்தகைய ஒடுக்கு முறைகளை நேர்முகமாகவும்-மறைமுகமாகவுஞ் சந்திக்கின்றார்கள் என்பதைக் குறித்து மேட்டுக் குடித் தனமாக எள்ளி நகையாடுவதாகவிருக்கிறது?

புலம் பெயர்ந்து"அகதி"யாக வாழ்ந்து மடிவதன்வலி உங்களுக்குப் புரியமுடியாதபோது எனது எழுத்தின்மீதான கேலியாக வாக்கியங்கள் வருகிறது.அதைவிட மோசமான கேள்வி"யாரர் ஐயா உங்களை இங்கு வரச் சொன்னது-தமிழ்நாட்டுக்குப் போயிருக்கலாமே?" சிரஞ்சீவி இந்தக் கேள்வி எமக்குப் புதிதில்லை.

இக் கேள்வியை 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணி மேயர் கைம் [Mayer Heim_Nürnberg]எனது அகதி விண்ணப்பக் [ Asylverfahren]கோட்டு விசாரணையின் முடிவில் ,மொழிப் பெயர்ப்பாளரான வேந்தனார் இளங்கோவைப் பார்த்துக் கேட்டார்.அதற்கு அந்தப் பொறியிலாள மேதை அளித்த பதில் சிரிஞ்சீவீயிகளது அதே "மோட்டு"தனமானது.



"ஒரு நாயின் முன் சோற்றையும்,இறைச்சியையும் வையுங்கள் அவற்றில் எதை நாய் நாடும்-இறைச்சியைத்தானே?"என்றான் அந்த இளங்கோ.பின்பு அவருக்கு அவுஸ்ரேலியா இறைச்சியாகத் தெரிய அங்குபோய் "டாக்டர்"பட்டம் பெற்றுத் தமிழ்ச் சங்கம் அமைத்து அரை வயதில் இறந்தே போனார்.இது,ஒரு எடுத்துக்காட்டு.

புலம் பெயர் மனிதர்களை நாயின் முன் ஒப்பிட்டு. ஐரோப்போ இறைச்சி,தமிழ்நாடு சோறு.

தமிழ் மக்கள் ஐரோப்பா வரக் கூடாதென்பதற்கு நீங்கள் கூறும் காரணமென்ன?தமிழ்மக்கள் யுத்தாத்தால் பாதிப்படையாத பொருளாதார அகதிகள் என்பதா?இதன்வழி அவர்களுக்கு-தமிழ்பேசும் மக்களுக்கு பிரச்சனையே இலங்கையில் இல்லையென்பதா?

ஐரோப்பியனும்-அமெரிக்கனும் எங்களது மண்ணில் நேரடியாகவும்-மறைமுகமாகவும் வந்து யுத்தப் பிரபுகளை ஊக்குவித்து யுத்தஞ் செய்வான்,ஆனால் ,நாம் அவர்களது மண்ணுக்கு இடம் பெயரக்கூடாது.அவ்வகான் அகதி பாகிஸ்த்தானுக்குள்தாம் நுழையவேண்டும் மேற்கு ஐரோப்பாவுக்குள் இல்லை-,ஈராக்கியர்கள் சிரியாவுக்குள் அல்லது ஈரானுக்குள் நுழையவேண்டும்.அப்படியா சிரஞ்சீவி?

நாயோடு நம்மை ஒப்பிட்ட இளங்கோ,உங்களது திமிருக்கு நிகரானவர்தாம்.தமிழ்நாட்டில் எத்தனை இயக்கம்,எத்தனை அட்டகாசம் செய்ததென்பதும்,ஈழ அகதிகளை ரோவினது குரங்குகள் எப்படிக் கண்காணித்துத் திறந்தவெளிச் சிறையில் அடைத்தார்கள் என்பதும் எவருக்கும் புரியாததல்ல.மாற்று இயக்கத்தவன்,அவனது-அவளது குடும்பத்தவர்கள் கணிசமாகத் தமிழ்நாடு செல்ல முடியாது.அங்கே, இருமுனைத் தாக்குதல் தயாராகவிருந்தது.அடுத்துத் தனது சொந்த மக்களையே அகதியாக வைத்திருக்கும் தமிழகத்துக்குப் புதிதாக இன்னொரு அகதி குழுமம் செல்லுமென எதிர்பார்ப்பது அகங்காரம்.

மக்கள் சமூகத்தில் யுத்தம் என்பதைவிடக் கொடிய யுத்தமானது திட்டமிட்டு ஒரு இனத்தின்மீது வறுமையை ஏவிவிடுவது.இதை எவர்கள் செய்கின்றார்களோ 'அங்கே, சென்று அவர்களது முற்றத்தில் பறிக்கப்பட்ட எமது வாழ்வைக் கேட்பதே நியாயமானது.அந்த வகையிற்றாம் இன்றைக்கு ஆபிரிக்காவிலிருந்து கடல்வழிப் பாதைமூலம் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க மக்கள் ஐரோப்பாவுக்கு வரும் வழியில் கடலில் மூழ்கிச் சாகிறார்கள்.

ஆபிரிக்க மக்களிடம் என்ன இல்லை?அவர்களை ஒட்டச் சுரண்டுபவன் எவன்?

ஏன் நாமெல்லாம் பட்டுணி கிடந்தா காலந் தள்ளினோம்.நமது மக்களிடம் என்ன இல்லாமல் இருந்தது.எம்மை மொட்டையடித்தவனுக்கு வக்கலாத்து வாங்கும் கேள்விகளை இலண்டனிலிருந்து கொடிபிடிப்பவன்கூடக் கேட்பான்.அவனுக்கு ஐரோப்பியக் கொலனித்துவத்தின் கொடுமை இன்றுவரை நம்மைச் சிதைப்பது புரியாது!அதிலொரு மேதைதாம் இந்தச் சிரஞ்சீவியெனச் சொல்லேன்.ஏனெனில் ,நாம் எல்லோருமே வீணர்கள்-வினைமறுப்பாளர்கள்!எமக்கு ஆழமாகச் சிந்திக்கும் திறன் அறவே கிடையாது.

ஐரோப்பாவில் அகதியாக வாழ்பவன் தன்மீது நடாத்தப்படும்,உயிரியில்ரீதியான ஒடுக்குமுறையையும், சட்டரீதியான ஒடுக்குமுறையையும் சேர்த்து தனது அடையாளத்தின்மீதான ஒடுக்குமுறையைப் பரம்பரைவரை சந்திக்கிறது சிலருக்குப் புரிவதே இல்லை. அகவொடுக்குமுறையானது அள்ளிப்போடும் சில்லறைகளால் மறைக்க முடியாது. அதுவரையும் ,இந்த ஏகாதிபத்தியப் பேய்களால் பாதிப்படைய உலகக் குடிமக்கள் எங்கும் இடம் பெயர்வார்கள்-எப்படியும் வாழ்வார்கள்!அதை தட்டிக் கேட்கும் உரிமை எந்தப் பேய்க்கும் கிடையாது!கொங்கோவைப் பிளந்து பத்தாண்டுக்குள் கோடி மக்களை இரகசியமாய்க் கொல்பவனுக்குச் சொல்-அவ்வகானை வேட்டையாடும் அமெரிக்கனுக்குச் சொல்-அல்லது ஆசியாவை வேட்டையாடும் இந்தியனுக்கும்-சீனனுக்கும்போய் வகுப்பெடு உனது பித்தலாட்டத்தை!

அன்பு நாவலன்,தூர தேசிய உரையாடலானது மிக மோசமான இனவாதம் நிறைந்த அல்லது,அதை மறைக்க முனைந்த உரையாடலாகும்.அதை நினா(நைனா ஆங்கில உச்சரிப்பு) கிலிக் சில்லர் [ Nina Glick Schiller ]மூலம் தத்துவ நிலைக்குட்படுத்தியவர்களில் ஜேர்மனிய அரசுக்குப்(Visiting Research Associate, Max Planck Institute, Social Anthropology, Germany ) பெரிய இடமுண்டு.மக்ஸ் பிலாங் பல்கலைக் கழகமானது[ Max Planck Institute ]பேர்ளினில் அவருக்கு ,மானுடவியற்றுறையை வழங்கியது அவரது புலமைசார் புரிதலில் இல்லை.அவர் மேற்கொண்ட குடியேற்ற வாசிகளது வாழ்வு-சாவு,விருப்புகள் குறித்து(Global Migration Project, Center for International and Area Studies, ) அச்சொட்டான இரகசியங்கள் பற்றியது.ஆபிரிக்காவில் அவர் செய்த ஆய்வுகள் ஆபிரிக்க மக்களைத் துரத்தி அவர்களது கனிவளங்களைத் தொடர்ந்து கையகப்படுத்தும் வியூகத்தோடு சம்பந்தப்பட்டது.

அதற்காகவே 21 நூற்றாண்டின் காட்சிச்சலையென(African Culture and the Zoo in the 21st Century ) அவுஸ்பேர்க்கில் [ Augsburg ]நிறுவி ஆபிரிக்கர்களை ஒட்ட மொட்டையடிக்கும் செயல்களில் (The “African Village” in the Augsburg Zoo and Its Wider Implications )அவர் மும்மரமாக இருக்கிறார்.அவ்கானில் அமெரிக்கா படையெடுப்பதற்கு முன் அமெரிக்க மானுடவியலாளர்கள் மூலம் அவ்கான் மக்களது வாழ்வையும்-சாவையும் ஆய்ந்து (http://www.linksnet.de/de/artikel/25589 )பார்த்தது.

எனவே,நினா சொல்வதும்-நிறுவுவதும் அடிப்படையில் கயமைத்தனமானதும்,ஐரோப்பிய இனவாதத்தை குடியேற்ற வாதிகளது வாழ்வுப்போராட்டத்தில் ,மேலெழும் அடையாள அலகுகளை முன் நிறுத்தித் தமது சுரண்டலை-கொள்ளையை-இனவாத அரசியல் நகர்வை மறைத்தல்-நியாயப்படுத்தலாகும்.

இப்போதைக்கு இவ்வளவுந்தாம் நான் சொல்வேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.01.2011

No comments:

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...