Thursday, February 10, 2011

சுய மாட்சிப் போ(க்)கி(ரி)த் தனம்:

சிலவுதிர்வுகளும்-துளிர்த்தல்களும் எப்போதும் போலவே நடந்தவைகள்தாமெனும் புரிதலுக்கு அவை சார்பு நிலைக்கப்பால் உண்மையென்பதை, உறுதிப்படுத்த"நான்"இருத்தல் அவசியமென்பதில் "மாயமானும்-வனவாழ்வும்"வாய்க்கப் பெற்றவர்கள் நாம்.வெறுப்பேற்றும் பொழுதொன்றின் பின்னையவுணர்வில் வானம் நோக்கிய "கேள்விகளை"கொட்டி வைக்க இன்றைய மனிதர்களுக்கு அவகாசம் இருக்குமென எனக்குத் தோன்றவில்லை!

அழுகின்ற பிள்ளையைச் சகிக்க முடியாத மனவூழ் தொடர்ந்து தன் அழுகைமீதான நியாயவாதத்தை அடுக்கி வைக்கவே போராடிக்கொள்கிறது.நெருக்கடிமிக்க சந்தர்ப்பங்களை உருவாக்கி வைத்த தடங்களைத் தொடர்வதில்எவருக்கு வேணும் இன்னொரு "இழவு-இழப்பு"க் கோலம்?


அதீத தொழில் வளர்ச்சிக்குப் பின்னான காலத்துள் உருவகப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் மறுவினையான பின் காலனிய-மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க, அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து, அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்னுமின்னும் அதிகமாகிறது.தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும், கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருக்கிறது!இந்த முகநூற் பொருங் குடிகளது பொன்னான பொருதற்"பெருங் கதை வெளியில்"போக்கிடங் காண்பதற்குமுன் சஞ்சலம்கொள்வதென்பதற்கான எந்தப் பீடிகையும் இல்லை.

"சுயமாட்சி"


இதன் ஆரம்பம் "தூய்மை-உண்மை"என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாகவுமே சுழல்கின்றனர்.கடந்தவினைத் தவறா அன்றிச் சரியாவென்பதையுந்தாண்டி,நாம் "மனிதர்கள்"என்ற தளத்தை உதிர்த்துவிட்டு இந்த இயற்கையைப் பொருத்திப் பார்க்க முடியாதிருக்கும் வினையே பல தளங்களில் முனைப்பிடும் மனிதவுருவை நமக்கு முன் கொணர்கிறது.அகங்காரமும்-அதி விரக்திப் புத்தியும் துருவ நிலைக்குப் புரிதலையும்-உணர்வையும் நகர்த்திவிடுகிறது.அத்தகைய நகர்தலைப் புரியாதிருப்பவர்களே இன்றைய புரிதலுக்குப் பொழிப்பையும் உரைப்பதில் தம்மை முன் நிறுத்திப் பார்க்கின்றனர்."அங்கீகரீப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் தினமும் இந்த முக நூலில் பார்த்துவருகிறேன்.எத்தனை முறைதானும் ஒருவர் தனது மனவுளைச்சலைக் கொட்டலாம்.அது சபிக்கப்பட்ட காலத்தை உணர்த்திவருவதென்று அகவிருப்பில் ஒருவர்மீதான மிகையான நம்பிக்கை பிறழ்ந்துபோகும்போது, அதுவரையான தளத்துக்கு நேரெதிராகச் செல்ல முனையும் ஊக்கமோ ஏலவே கொண்டிருந்த போலி "நட்பு-உறவுக்கு"விசுவாமான ஊக்கத்தை வெகு சீக்கரமே வெளியிற் தள்ளிச் செல்கிறது.இதை எந்த வெங்காயத் தத்துவமும் விளக்குவதாக நான் சொல்லேன்!


இத்தகைய மனிதர்கள் எவ்வளவுதாம் சிந்தித்தாலும் கூட்டுழைப்புக்கு எதிரானர்வர்கள்.அங்கே,ஒவ்வொரு தனிமனிதர்களும் தமது தனித்துவத்தை மனித நடாத்தையால் பிரதியெடுக்கும்போது, இவர்களால் அதிகமாகத் தனது குடும்பத்தோடுகூடவோ அன்றி அயலட்டத்தோடுதானேனும்"சகிப்பு"த் தன்மையைக் கட்டி உருவாக்க முடியாது.

இது,ஒரு புறநிலை யதார்த்தமாக இன்று இருக்கிறது.

இதுவே,அகத்தில் தனிநபர் முனைப்போடு அறிதலில் உச்சம் பற்றிய மிதப்பில் ஒற்றை மனிதர்களாகி வருகிறது.இது, எவரோடும் பொருத்தமான எண்ணத்தை எப்போதும் அணுகமுடியாது அரசியல் தற்கொலையை தனக்குள் வற்புறுத்துகிறது.இதனிடம் வேதனையும்-விகாரமும்,அவ நம்பிக்கையைத் தூண்டி சமுதாயத்தின் முற்று முழுதான ஆளுமையையும் மிகச் துச்சமாக மதிப்பிடும் மனதைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது.

இன்றைய மனிதப் புனித நடாத்தையிலும்-பொருள் வாழ்விலும் "நட்பு-இரத்தவுறவு" என்பது கடந்துவிட்ட ஒரு கட்டம்.அதற்கான தேவையும் இனி அவசியமே இல்லை!இந்தத் புள்ளிமீதான சகல எதிர்பார்ப்பும் கொச்சைத்தனமான புரிதலுக்கு வெளியில் மிக அபத்தமானவை என்பதே எனது நிலை!ஊக்கமான நிகழ்வாக்கம் எப்போதுமே இருப்பதில்லை.தனக்கும்,தன்மீதான இருப்பின் உடைவுக்குமான புரிதற் தடுமாறாட்டமே ஊசாலாட்டமான தனது நிலைக்கு ஏதுவான சொற்களைச் சதா தேடுகிறது.அதையே,தனது பெரும் பகுதியான பொழுதைத் தற்கொலைக்கு நேரான நிலைக்கு மாற்றிவைத்தபடி அதன் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கிப் பார்க்கிறது.

ஈடேற்றம் என்பதிலேயேதாம் நமக்குள் பெரும் பகுதியான நேரம் விரையமாகிறது.ஒன்றில்லாத வினையென்பது சாரம்சத்தில் தப்பானதெனுங் கோரிக்கைள், உருவகத்துக்கும் வடிவத்துக்குமான புரிதலில் இதையே உட்புறமாக நகர்த்துவதில் ஆர்வமாகிறது.நிமிடத்துக்கு நிமிடம் தும்மிக்கொள்வது அலர்ச்சிக்குட்பட்ட ஏதோவொரு எதிர்வினைப் பயனென முடிவு கூறுவதுபோல, எதையுங் குறித்து எதிர்வு சொல்வதில் நம்பகமாக எமது அநுபவங்களையே மீளச் சொல்கிறோம்.அந்த அநுபவங்களது முன்னைய இயலாமைகள் இன்றைய இயலுமானவையோடு நேரடியாகப் புரிதலுக்குள்ளும்-வாழ்நிலைக்குள்ளும் எட்டித் தலைகாட்டும்போது அதை அங்கீகரிக்க மறுப்பதிலேயேதாம் நாம் "எழ" முனைகிறோம். இந்தத் தன்னிலைப்படுத்தல்-சுயமாட்சிப் படுத்தல்களின் உயிர்த்திருப்பை அங்கீகரித்து விடுவோமானால் சொல்வதற்கும்-செய்வதற்கும் எதுவுமே இல்லை!

இங்கே, ஊசலாட்த்துக்கும்"நான்"தொடர் நெருக்கடிக்குள்ளாவதும் இல்லை!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.02.2011

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...