Friday, September 03, 2010

நாவலன்,இரயாகரன்,முன் மாதிரிகளும் புரட்சியும்.

நாவலன்,இரயாகரன்,முன் மாதிரிகளும் புரட்சியும்.

-சிறு குறிப்பு.

னிப்பட்ட நபர்கள்சார் அரசியல்-குழுக்கட்டல்கள் யாவும் இன்று ஏதோவொரு வகையில் அவரவர் தனிப்பட்ட "விருப்பு-வெறுப்பு"களுக்குட்பட்ட அரசியற் சதிகளையும்,சகுனி வேலைகளையுஞ் செய்து எமக்குக் கருத்துத் தரும் இவ்வேனையில், தமிழ்ச் சமுதாயம் இவர்களது அரசியல் நடாத்தைகளால் பழிவாங்கப்பட்டு நடாற்றுள் விடப்பட்டுள்ளது.அந்த மக்களது வாழ்வைப் புரட்சி-உரிமையெனச் சொல்லி வேட்டையாடிய கூட்டமானது ஒவ்வொரு திசையிலும் மறைமுகமான ஆதிக்கச் சக்திகளோடு கைகோர்த்தபடி மர்ம அரசியலைச் செய்கிறது.இந்த மர்ம அரசியலை ஓரளவு புரிய வைக்கும் இவர்களது தெருச் சண்டையானது முற்றிலும் அதிகாரச் சக்திகளதும்,ஆதிக்கக் குழுவாதத்தினதும் அப்பட்டமான வெளிப்பாடுடைய அராஜகமாக வெளிப்படுகிறது.இலட்சக் கணக்கான-கோடிக் கணக்கான பணச் சுற்றோடத்துக்கும் அதுசார்ந்த நலன்கள்,பிணைவுகள்-உறவுகளெனப் பாதாளவுலக அரசியலை எடுத்துவரும் இக் குழுக்களை நம்பிப் பின் தெடர முடியுமா?

எமது நிலத்து மக்களுக்கும், புலம்பெயர் தமிழ்பேசும் மக்களுக்கும் காலங்கடந்து ஞானம் வந்தது, புலிகளது தமிழீழப் போராட்டுத்துள்-இல்லையா? அங்ஙனமே,காலங்கடந்து வரும் எந்த ஞானமும் புரியப்படும்போது எமது கோவணமும் உருவப்பட்டுவிடுமென்பதற்கு மகிந்தா குடும்பத்துக் கட்சியாதிக்க அராஜகம் நல்ல எடுத்துக்காட்டு.



புலிகள் அழிந்துபோனாலும்,அவர்களது அரசியல்-அராஜக இயக்க வாதம் தொடர்ந்தபடியே இருக்கிறது.இந்தத் தொடர்சியைத் துண்டிக்க முடியாதவளவுக்குத் தமிழ்ச் சமுதாயமெங்கும் புரையோடிப் போயுள்ள அரசியல்சார் அராஜகமானது மிக ஒழுக்கமற்ற நெறியாண்மைகளால் மக்களுக்கான அரசியலென-புரட்சியென மக்களை வேட்டையாடுகிறது.இந்த நெருக்கடியான உளவியலானது குவிப்புமனவுறுதியால் சமூகத்துக்குப் புறம்பானவொரு தனிநபர் நடாத்தையை ஆதிக்கக் குழுவாதத்தின் அதீத அராஜக வெளிப்பாட்டுக்குள் வெளிப்படுத்தும் அதேவேளை, ஆளும் அதிகாரத்துக் கட்டமைவுகளுடன் இணைந்து மக்களைத் தெருவுக்கு அழைக்கிறது.அது,தனது நலனுக்காக மக்களை மீளப் பயன்படுத்திப் பணத்தை பெருக்குவதில்"புரட்சி-உரிமை,எதிர்ப்புப் போராட்டமென" ஓராயிரம் காரணந் தேடுகிறது.இது குறித்து அவசியமாக உரையாடுவதும்,இத்தகைய பாதாளவுலகத்தைப் புரிந்து புறந்தள்ளுவதும் அதீதமானதெனினும்-அவசியமானது.

இது குறித்து யோசிக்கும்போது,பழைய இயக்கவாதத் தொடர்ச்சியின் இருப்பு, எமது மக்களது எதிர்காலத்தை வேட்டையாடுவதை நாவலன்-இரயாகரன்போன்றோரது அரசியல் தொடர்ச்சியில் இனங்காணக் கூடியதாக இருக்கிறது.இது,சாதரணமாக மக்களைச் சுற்றித் தகவமைக்க முனையுங் கண்ணிகளானது முற்றுமுழுதான தமது இருப்புக்கும்-பாதாளவுலகத் தொடர்புக்குமான இரண்டு தளத்தில் மையைமுற்றுத் தமிழ்பேசும் மக்களது அரசியலைக் கையிலெடுக்கிறது.இதன் வழியான அவரவரது அரசியல் தொடர்புகள், அதுசார்ந்த இணக்கப் பாடுகள் யாவும் "குறித்த நபர்களது" பின்னணியில் இயங்கும் ஆதிக்கச் சக்திகளது தயவின் தெரிவை வெளிப்படையான தமது நடாத்தையுள் வெளிப்படுத்துமளவுக்கு இவர்கள் அரசியல் நாறிக்கிடக்கிறது.

நாவலனால் பேசப்பட்ட முப்பது இலட்ச இந்திய ரூபாய்ப் பேரத்துக்கும்,தமிழ் நாட்டுப் பொலிசுக்குமான இணைவு-பிணைவு என்ன?இவர்களது தனிப்பட்ட தொடர்புகள் யாவும் ஏதோவொரு வகையில் இவர்கள் சொல்லும்"ஆதிக்க-அதிகார"வர்க்கத்தோடுதாம் பிணைவுற்றுக் கிடக்கும்போது புரட்சிக்கும்,இவர்களுக்குமான இயங்கியற்றொடர்புகுறித்து விளங்குவது கடினமில்லை.



இந்த வகையில் குகநாதன் கடத்தல்-கப்பம் குறித்துச் சிலவற்றை யோசிக்கலாம்.தனிப்பட்ட கொடுக்கல்,வேண்டலுக்கெல்லாம் "எப்.ஐ.ஆர்"சட்டப்படி தண்டிக்க முடியுமென்றால் இந்தியன் பொலிசானது எவரது முகாமுக்குள் இருக்கிறது? இதுள்,பொலிசில் குகநாதனை அடைக்கும் அளவுக்கு டி.அருள் எழிலின் பலமாக இருக்கிறாரென்றால் அவரது அதிகாரம் என்னவென்பதும் புரிந்துகொள்ள வேண்டியது.இந்தச் சூழலில் ஆதிக்கக் கும்பல் அடிபடுபவதை அரசியலாக்குவதில்"தேர்ந்து வியூகம்"இருக்க முடியும்.

சராசரிச் சதாரண மனிதர்களை எத்தனையோ வகைகளில் எவரெவரோ ஏமாற்றுகிறார்கள்.அவர்களுக்கு இந்தப் பொலிசு எப்போதும் பக்கப்பலமாகவிருந்து , எதையும் பெற்றுக் கொடுத்ததாகத் தமிழ்நாட்டிலோ, அன்றி இலங்கையிலோ சரித்திரம் இல்லை!

இந்த அருள் எழிலன் கொடுத்து வைத்தவர்.

இந்தக் கோணத்துள், பழைய ஆயுதக் குழுக்கள் தமிழ்நாட்டில் நடமாடவுஞ் செய்கிறார்கள்.ரெலோ,புளட்,புலி ,ஈ:பீ.ஆர்,எல்.எப்,ஈ.என்.டி.எல்.எவ் என எத்தனையோ மாப்பியாக்களும் ஆயுதங்களோடு தமிழ் நாட்டில் வேட்டையில் இருப்பவர்கள்.குகநாதனை அவர்களது முகாமும் கடத்திப் பின் பொலிசென...

எல்லாம் நாவலன்,இரயாகரன் போன்ற பெரும்"போராளி"களுக்குத்தாம் வெளிச்சம்!

மக்களைச் சொல்லி , இயக்கங்கட்டி வேட்டையாடியது ஒரு பொழுது.இப்போது, அதே பாணியில் கொடுக்கல்-வாங்கல்!

நல்ல முன்னேற்றம்!

வங்கிக் கொள்ளை,நகைக்கடைக் கொள்ளை,வீடுகளில் கொள்ளையெனக்கொண்ட முன்னாள் இயக்கப் போராளிகளோ அதே வழியில் சமரசமின்றிப் போராடுகின்றனர்.

"பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்"எனச் சும்மாவா முன்னோர் சொன்னார்கள்?

இப்படிக் கொள்ளையால் வரும் பணங்களை வைத்துப் புதுப் பணக்காரர்களாவதற்குப் பெயர் "புரட்சி-கட்சி"கட்டுதல்...இதெல்லாம் ஒரு பிழைப்பு.
தூ...

இந்த நாவலன்தான் எத்தனையோ முறைமைகளில் பண மோசடியில் இருப்பதாகத் தமிழ் அரங்கம் எழுதுகிறது.புரட்சியெனப் புரட்டி எழுதும் நாவலன் முதலில் இவை குறித்துத் தகுந்த பதிலளித்துவிட்டுப் புரட்சி பேசினால் அனைவரும் காது கொடுத்துக் கேட்பினம்.இரயாகரன் வங்கிக் கொள்ளைப் பணத்துக்கெல்லாம் கணக்கு வைத்திருப்பதுபோல நாவலனும் இவை குறித்துக் கணக்கு வைத்திருக்கிறீர்களோ?

சமகாலமாக உங்கள் இருவருக்கும்(இரயா-சபா நாவலன்)இடையில் நிகழும் தெருச் சண்டை எல்லாவகை நியாயங்களையும் படு குழியில் தள்ளிவிட்டு,எதையிட்டும் சந்தேகங்கொள் எனப் பகருகிறது.என்ன செய்ய?உங்களது தெருச் சண்டையானது தமிழ்ச் சமூதாயத்தில் உண்மையான போராளிகளையோ,சிறு குழுக்களையோ நியாயமான மக்கள் நலன் சார் குழுக்களாகக் கணிக்க விடுவதாகவில்லை! எவரையும் குறித்து நம்பவே முடியவில்லை. இதுள்,இரயாகரனையும்சேர்த்தே நான் பார்க்கிறேன்.



முழுமொத்தச் சமுதாயத்தையும் மொட்டையடிக்கும் எதேச்சதிகாரமான இவர்களது உறவுகள்-தொடர்புகள் ஆளும் அதிகார வர்க்கங்களோடான இவர்களது நடாத்தையின் வழி புரட்சி குறித்துரைப்பதில் முன்னெடுக்கப்படும் எதிர்ப் புரட்சிகர நகர்வானது மறு முனையில் அனைத்துவகையான நம்பிக்கை அளிக்கும் முற்போக்குச் சக்திகளையும் நம்பும்படி விட்டுவிடவில்லை!

சதித்தனமாக முன்னகர்த்தப்படும் ஏதோவொரு சதி வியூகத்தைத் தொடரும் இந்த நபர்கள் , தமது கடந்தகால இயக்கவுறகளது தயவில் இன்னும் நகர்த்த முனையும் இயக்கவாத அதிகாரமானது புரட்சிகரத் தோழமையைக் குழிதோண்டிப் புதைவிட்டு நியாயவாதஞ் செய்கிறது.

அப்பட்டமான மாபியாக்களாக வலம்வரும் இவர்கள் ,மக்களது புரட்சி குறித்து வகுப்பெடுப்பதில் ஒருவரையொருவர் போட்டுத் தாக்குவதில் தமது கடந்தகாலச் சீரழிவுத் தொடர்புகளை மறைக்கிறார்கள்.எல்லாவற்றையும் புலிக்குள் புதைத்துவிட்டுப் புரட்சி-தோழமையான நட்புச் சக்திகளாக நாடகமிடும் இக் கூட்டத்தின் முன் நியாயம் கேட்பது எமக்கு அவசியமானது. ஏனெனில்,இவர்கள் தமது தனிநபர் நடாத்தையையுந்தாண்டிப் பொதுப் பிரச்சனை குறித்தும்-புரட்சி குறித்தும் மக்களிடம் அரசியலை ஆரம்பிக்கும்போது இவர்களிடம் நாம்"நியாயம்"கேட்பது மக்களது நலன்சார்ந்த அரசியலுக்கு அவசியமானது.

கடந்தகால இயக்க அராஜகமானது"கொள்ளையடித்தல்"மூலமே ஆரம்பமானது.பொதுச் சொத்தை,மக்களது வாழ்வாதாரத்தைத் தனிப்பட்ட மக்களது செல்வத்தைத் திருடியவர்களும்-தாலி அறுத்தவர்களும் இவற்றுக்கெல்லாம் கணக்கு வைத்திருக்கும்போது,இதன் வழி வந்த புதல்வர்களுக்குப் பழைய நடாத்தையின் வழி சிந்திப்பதைத் தவிர்ப்பது கஷ்டம்தாம். புரிந்துகொள்ளத் தக்க உளவியற் பிரச்சனைதாம் இது.எனினும்,இந்த வகை அராஜகத்தால் அழியும் சிவில் உரிமைகள் அதிகாரத்திடமும்,அராஜவாதிகளிடமும் மக்களை அடிமைப்படுத்திவிடுமானால் இவர்கள் சொல்லும் அரசியலும்-புரட்சியும் பணம் உழைப்பதற்கானவொரு சூழலை நோக்கிய நகர்வுதாமே?

இந்தச் சூழலில் நாவலன் வேறு"ஐரோப்பாவில் ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்கள் இனங்கள்,அவர்களது அமுக்கக் குழுக்களிடம் ஒற்றுமையை,தோழமை உறவைப் பேணி நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தைத் தகவமைக்க வேண்டும்"என்கிறார்.

சமீபத்திலும்,இப்போதும் பிராஞ்சிய அரசு ரோமா-சிந்தி மக்ளை வேட்டையாடித் துரத்துகிறது, பல் கேரியாவுக்கு. பல பத்தாண்டுகளாகப் பிரான்சில் வாழும் அவர்களை, நகருக்குள் விடாது ,ஊருக்குப் பொறத்தே தள்ளிவைத்து இப்போது அடித்துவெருட்டும் சார்கோசி அரசைக் கண்டித்து ரோமா மக்கள் செய்துவரும் போராட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்து வந்தவர்களும்-அவர்களோடு தோழமையாக இணைந்தவர்களும் இவர்கள் என்பது உண்மையாக இருக்காதாவென நாம் கனவு கண்டதும் உண்மை!இதுவெல்லாம் புரட்சியின் படிகள்.

அவர்களது வலியைப் போராட்டவுணர்வை இவர்களெல்லாம் புரிந்து தோளோடு தோள் இணைந்து போராடிய அழகு பாரிஸ் மாநகரத்தில் நாம் பார்த்ததுதாம்!

என்றபோதும்,ஏதோ நம்பிக்கை வைத்துத் தொடரும் இந்த அரசியல் உரையாடல்களில் "இந்த வகை அரசியலை" இவர்கள் முன் தள்ளும்போதும் , இவர்களது ஏதோவொரு தேவையும், தனிப்பட்ட அரசியலாக முன்னெடுக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக இந்தக் குகநாதன் என்ற மனிதரின் கடத்தலுடன் நெருங்கி இணைகிறது.

குகநாதன் சந்தர்ப்பவாதியும்,சதிகாரனும்,பணத்துக்காக மானத்தையே விற்றுப் பிழைப்பவனும் என்பது அவரது கரொம்பன் வதிவிட்டத்தில் புலிக்கு மொட்டாக்குப் போட்டுப் புலம்பெயர்ந்த அன்று நான் இனங்கண்டதுதாம். காவலூர் ஜெகநாதனும் இந்த வைகப் புரட்சியைத்தாம் தனது தம்பிக்குச் சொல்லிக் கொடுத்ததென்பது அவரது சீதனத்தோடு புரட்சி பறந்த கதையுள் நாம் கண்டு வந்திருப்பினும், இந்தக் குகநாதனைது பிரச்சனையும் பொதுப் பிரச்சனையாக-அரசியலாக முடியுமென நாவலன்-இரயாகரன் போன்றோரது கட்டமைப்புகளது கதைகளிலிருந்து புரிந்துகொள்ளதக்கது.

இதுவெல்லாம்"புரட்சியோ-புரட்சி"என மக்களது பிரச்சனைகள்-உரிமைகள் குறித்து நன்றாகவே எதிர்ப்பு அரசியற்போராட்டத்தைத் தகவமைக்கிறது இந்தத் தளங்கள்!

இந்த இலட்சணத்தோடு,மேற்கு நாடுகளில் இருக்கும் ஓடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் மக்களது அமுக்கக் குழுக்களோடு வேறு தோழமை வைத்துப்"புரட்சி"செய்தாகவேணும் என்று ஒரு போடுபோடுகிறார் நாவலன்!

வாழ்க,புரட்சி,வளர்க இவர்கள் தோழமை!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.09.2010

No comments:

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...