Friday, September 10, 2010

நாவலன் மீதான எனது அணுகுமுறை....

சிறீ ரங்கன்,
பூச்சி என்ற முன்னை நாள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் ஒரு சிறிய தொலைபேசி நிறுவனம் ஆரம்பித்த போது அதில் வேலையற்றிருந்த நானும் இணைந்திருந்தேன். அது நட்டமடைந்த போது அதற்குரிய நட்டத்தை நாம் இருவருமே ஏற்றுக்கொண்டோம். ஈ.பிஆர்.எல்.எப் அரச ஆதரவு நிலையை நான் விமர்சித்த போது அவர்கள் நான் பூச்சியை ஏமாற்றியதாக எழுதினார்கள். பின்னர் நமது “கொமிசார் நண்பர்” ரயாகரன் அதே வகையான அவதூறை எழுதினார். இது குறித்து ரமணன் பூச்சியுடன் தொடர்புகொண்டு கேட்ட போது அப்படியானஎந்த ஏமாற்றுச் சம்பவமும் நடைபெறவில்லை என்றும் எனக்கும் அவருக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
நான் சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் போது இந்த அவதூறையும் இணைப்பதற்கு எனது சட்ட ஆலோசகரிடம் பேசியுள்ளேன். சிறீரங்கன், நாங்கள் எமக்கிடையில் எதிரிகளல்ல. முதலில் அவதூறுகள் முன்வைக்கப்படும் போது நேரிடையாகத் தெளிவுபடுத்திவிட்டு பொதுத் தளத்தில் முன்வைக்கலாமே?
ஒரு கட்சியின் உள்ளமைப்பில் முன்வைக்க வேண்டிய தனிநபர் சார்ந்த விமர்சனங்களை பொது மேடையில் முன்வைக்கப்படும் போது குறைந்த பட்ச நாகரீகமாவது அவதூறுக் காரரர்களிடம் இருப்பதில்லை. ஒரு விடயத்திற்குப் பதில் சொன்னால் இன்னொன்றைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காகவே அவர்கள் வாழ்கிறார்கள்.

ஒரு மூன்றாம்தர தமிழ் சினிமாவை வீடியோ ஒன்றில் 15 நிமிடத்தில் பார்த்து முடித்ததில் என்னைப் பொறுமையற்ற குட்டிபூர்சுவா என்று விமர்சித்தவர்கள் இவர்கள்.

-நாவலன்
Posted on 09/10/2010 at 5:18 pm
http://inioru.com/?p=16707&cpage=1#comment-13504



நாவலன், இந்த விஷயங்களிலிருந்து நான் கடந்துபோக விரும்புகிறேன்.நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.கம்யூனிஸ்டு என்பவர்கள் வானத்திலிருந்து பிறப்பதில்லை என்பதில் தெளிவாகவே இருக்கிறேன்.நமக்குள் தனிப்பட்ட வாழ்வில்தப்புகள்-தவறுகள் நிகழ்வதென்பது சாத்தியம்.இதை நீங்கள் குறிப்பிடுவதுபோன்று உட்சுற்றில் விவாதிக்க வேண்டியதே. அவ்வண்ணம்,பொது அரசியல் வாழ்வில் நடந்த சதிகள்-அரசியல்பிறழ்வுகள் பொதுத் தளத்தில் விமர்சிக்கப்படவேண்டியதே. உங்களது விடையம் ஒரு பொது அரசியலாக்கப்பட்ட சூழலிற்றாம் நான் அதுள் விவாதத்தை முன்வைத்தேன்.

ஈழவிடுதலைப் போராட்ட அரசியல்வாழ்வில் நிறையக் கோபத்தோடு வாழ்கிறேன்.அக் கோபமானது நியாயமானதா இல்லைத் தப்பானதாவென காலம் பதிலளிக்கும்.

உங்கள்மீதான இன்றைய எனது அணுகுமுறையில் தவறுகள்உள்ளது. அதை,நீங்களே குறிப்பிட்டபடி தனிப்பட்டரீதியாகக் கேட்டுவிட்டுத் தொடர்ந்திருக்கலாம்.எனினும்,பொதுத் தளத்தில் விமர்சனத்தை வைத்த இரயாவின் விமர்சனத்துள் கடத்தலெனவும்,காசு-கப்பமெனவும் நீண்டவொரு குறிப்புச் சொல்லப்பட்டபோது அதை மறுத்தலெனும் போக்கிலேயே எனது கட்டுரை எழுதப்பட்டு உங்கள் கருத்துக்காக-உங்களைப் பேச வைப்பதற்காகப் பொதுத் தளத்தில் விடப்பட்டது.இரயாவினது கருத்துக்களில் உடன்பாடும் மறுப்பும் இயல்பாகவே எவருக்கும் இருக்கமுடியும்.எனக்கும் அப்படியே.சமகாலத்தில் தோழமையாக நாம் பயணித்தவர்கள்.அதன் தொடர்பில் இன்னும் பிரமிப்பும்,தோழமையும் உண்டு.அதுதற்காக அனைத்தையும் ஏற்றுத் தலையாட்டும் நிலையிலும் நான் இல் லை!அது,ஈழவிடுதலைப் போராட்டத்துள் ஒரு பிரபாகரனை-உமா மகேஸ்வரனைத் தந்தது.அதேயொரு முனையில் இன்னொரு வணங்கா முடியை தகவமைப்பதற்கு நான் தயாரில்லை.இதையே எனக்கும்,அனைவருக்குமாக பொருத்துகிறேன்.

இத்தகைய சூழலில் தனிப்பட்ட வசை பாடலைக்கடந்து செல்லவே இப்போது விரும்புகிறேன்.எனது அணுகு முறையில் நானே உடன்பாடின்றி இப்போது தனித்தே இயங்குகிறேன்.பலதரப்பட்ட உள் நோக்கங்கொண்ட செயற்பாடுகள் தோழமையென்பதைச் சிதைக்கின்ற சூழலில் வெளியேறுவது இயல்பாகிறது.எனக்கு,எவர்மீதும் பழி சுமத்தி என்னைப் புனிதனாக்கும் எண்ணம்-நோக்கம் இல்லை! நான் கடையனுக்கும் கடையனாகவே இருக்கிறேன்-துரோகிக்கும் துரோகியாகவே இருக்கிறேன்,நாணயமற்றவனுக்கும் நாணயமற்றவனாகவே இருக்கிறேன்.

நீங்கள்,குறிப்பிடும் கருத்துக்கள்-உங்கள்மீது கூறப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட பழிகளை நீங்கள் இப்போது மறுப்பதை நான் பெரிதாக மதிக்கிறேன்.அது நாணயமான அரசியல் வழியில் நம்மைச் சந்திக்க வைக்கும்.இதேதாம் இரயாவின் அரசியல் அணுகுமுறைக்கும் எனது பதில்.இதில்,நானோ இரயாகரனோ அல்லது நீங்களோ தனித்து நின்று எதையுமே செய்வதற்கில்லை.எல்லோருமே ஒரு தளத்தில் மக்கள் சார்ந்து இயங்குபவர்கள்.எமது அரசியல் நாணயமாக மக்களது பக்கம்சார்ந்திருக்கும்போது இத்தகைய சேறடிப்புகள்-பழி சுமத்தலையுந்தாண்டி நாம் ஒரு அமைப்பாண்மை சார்ந்த தோழமையைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே என் கருத்து.இதுதாம் இன்றைக்கு நான்கொண்ட முடிவு.ஏனெனில், நாம் ஒடுக்கப்படும் வர்க்கத்தைச் சேர்ந்தோர்.இதைவிட வேறொரு தெரிவு நான் கோடிக்கணக்கான சொத்தைப் புரட்டி வைத்திருந்தால் ஏற்படலாம்.எனினும்,உண்மையான கம்யூனிஸ்டு அதைக் கட்சி நிதியாக்கி வர்க்க விடுதலைக்காகத் தன்னை அர்பணிப்பார்கள்.இதை வரலாற்றில் நாம் பார்த்தோம்.உங்கள் கருத்துக்கு நன்றி.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.09.2010

No comments:

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...