Sunday, September 12, 2010

இரயாகரன்-நாவலன்,இடையில் நாம்...

நாவலன் , தங்கள் மீதான இந்த விஷயங்களை மறுத்துரைக்கும் உங்களை நம்புகிறோம்.நாம் இதைச் சொல்லித்தாம் உங்களுக்கு "நன் நடத்தை"முத்திரை தரவேண்டுமென்பதில்லை!ஜெயபாலன்,இராஜாகரன்,ஸ்ரீரங்கன் சுமத்தும் "பழி-அல்லது அவதூறு"நீங்கள் உண்மையாக இருக்கும்போது பலமற்ற பொய்களே!

உங்கள்மீது தவறாக நாம் அவதூறு செய்யுமிடத்து, அதற்கு மான நஷ்டவீடு செய்து வழக்குத் தொடங்க முடியுதானே?-அதைச் செய்யுங்கள்.

எனக்கு,இராஜகரனும்,ஜெயபாலனும், நீங்களும் என்னைப் போன்ற சக தோழர்களே-மக்களது பக்கஞ் சார்ந்திருக்கும்போது.இது,என்னைக் குறித்தும் உங்களுக்கும் அப்படியே!

உங்களது நேர்மையின்மீது அவசியமற்று இரஜாகரன்-ஸ்ரீரங்கன் அல்லது வேறொருவர் பழி சுமத்துவதாக நீங்கள் உணர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.அது உங்கள் மானப் பிரச்சனை-மனிதவுரிமைக்குட்பட்ட உரிமை!

நான்,உங்களது கருத்துக்களை,நீங்கள் உங்கள்மீது சுமத்தப்பட்ட பழிகளை மறுக்கும்போது, அதை வரவேற்கிறேன்-நம்புகிறேன்.

இரஜாகரன்மீது மீள மீளக்கருத்துகள்கூறாது, அவர் கூறியதன் "உண்மை-பொய்மை"த் தனத்தை நிரூபியுங்கள்.அல்லது, அவரே அதை நிரூபிக்கட்டும்.தவறாக மற்றவர்கள்மீது இரயா கருத்துக்கட்டினால் அதை நானே எதிர்ப்பவன்.

இன்று, இரயாவைப் புலிப்பினாமி-இன்போமர் எனச் சொன்னவனும் நான்தான்.அதே இடத்தில் தோழனெக் கொண்டாடுபவனும் நானே!

கடந்த கால் நூற்றாண்டில் இரயாகரன் முன் வைத்த அரசியல்சார் கருத்துக்கள் அசைக்க முடியாதவை.அவை குறித்து நீண்ட ஆய்வுகளுக்கூடாக என்னால் "சரியானதென" நிறுவ முடியும்.இது நிற்க.

தற்போது, இராயாவினது "பழி"சுமத்தலிலிருந்து நீங்கள் கருத்துக்களை முன்வைப்பது நாணயமானது.அதைச் செய்யும்போது இடையில் சகுனி வேலை செய்யும்"கொட்டைகள்-மசாலா"வென்றவர்களையெண்ணிக் கவலையாக இருக்கிறது.

நாம்,இராயாவைச் சந்தேகிக்கலாம்.ஆனால்,அவர் கூறிய அல்லது ஆய்வுக்குட்பட்ட அவரது கருத்துக்களை நீர்த்துப்போக வைப்பதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.அதுபோல நியாயமின்றி இரயாகரன் மற்றவர்கள்மீது "பழி"சுமத்தினால் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.அது,இரயாவாக இருந்தாலென்ன அல்லது ஸ்ரீரங்கன்,நாவலன் இதையுங்கடந்து கடவுளாகவிருந்தாலென்ன!

அடுத்து, குகநாதன் எனது ஊரவன்.எனக்குத் தெரியும் அவரது நாணயம்.இன்று, புலம் பெயர் வர்த்தகர்களில் நாணயமற்றவர் எவரென உதராணம் தேடினால்,அது முதலில் குகநாதனையே குறித்துரைக்கும்.எனவே,குகநாதன் தரும் சாட்சியம் எப்பவும்போலவே சதி நிரம்பியது.இரயாகரன் குகநாதனை நம்பிக் கருத்துக் கூறியிருக்க முடியாது!

குகநாதனது திருகுதாளங்களை இரயா அறிந்தவரே.எனினும்,எதிரிகளென எவரையும் கொள்வதற்கில்லை.குகநாதனது உளவியல்சார்ந்தவொழுக்கம் இந்த முதலாளியச் சமூகத்தின் அறுவடை.அதுபேலவே "நமது"அணுகு முறையும் இந்த ஈழப்போராட்ட இயக்கவாத அணுகுமுறையின் தொடர்ச்சியே!

உண்மையும்,நேர்மையான அணுகுமுறையுமுள்ள எந்த மனிதரையும் எந்தக் கொம்பரும் அசைக்க முடியாது.அந்த நம்பிக்கையோடுதாம் நான் இதுவரை சமகாலப் போராட்டங்குறித்து விமர்சித்து வருகிறேன்.

உண்மையோடு இருக்கும் நீங்கள், இதையிட்டு அலட்டத் தேவையில்லை!

அதேபோல்,இரயாகரன் தானே "பழி"சுமத்தும் கட்டுரையை உங்களை நோக்கி எழுதியதால், அதன், நியாயத் தன்மையை நிலை நாட்டவேண்டும்.அவர் அதைச் செய்யாதுபோனால் நாம் அவரது கருத்துக்களையும்"பழி"சுமத்தல்களையும் இன்னும் வலுவாக அம்பலப்படுத்துவோம்.

இரயாகரன் தமிழ்ச் சூழலில் அரசியலைத் துறக்கும்படியான முறைமையில் செயல்முனையை விரிவாக்குவோம்.அவ்வண்ணமே,இது எனக்கும்-உங்களுக்கும் பொருந்தும்!

நன்றி

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.09.2010

No comments:

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...