Thursday, June 01, 2006

புலிகளின் இழி இணையம்:எட்டப்பர்.கொம்

புலிகளின் இழி இணையம்:எட்டப்பர்.கொம்

எங்களுக்குப் பப்பிளீஸ்சிட்டி அவசியமில்லை அன்பர்களே!
எம்மை ஒடுக்குபவர்கள் புலிகளென்று அம்பலப்படுத்திய பின்பும்,புலிகளால் சட்டப+ர்வமாக மறுக்க முடியுமா?

இதுவரை மறுக்கத் தெம்பில்லாது மௌனமாகக் கிடக்கும் ஜேர்மனியப் பொறுப்பாளர்களை பொலிசில் பிடித்துக் கொடுப்பதல்ல எமது நோக்கம்.
மக்களுக்காகப் போராடும் ஒரு அமைப்பென்றால்-தம்மால்-தமது பிராந்தியப் பொறுப்பாளர்களால் தமிழர் ஒருவருக்கு விடப்படும் மரண அச்சுறுத்தல் குறித்து இதுவரை பதிலளிப்பது அல்லது அதுகுறித்துக் கருத்தளிப்பது அவர்களின் பொறுப்பில்லையா?
ஆதாரத்தோடுதானே நாம் பதிவிட்டுள்ளோம்.

இதோ இந்த எட்டப்பர்.கொம்முக்குப் போகவும் http://www.eddappar.com/content/view/57/26/ இங்கே
அவர்களின் வால்கள்விடும் அடுத்த அச்சுறுத்தல்.

இது குறித்து நான் சட்ட நடவடிக்கை எடுத்தபடியே உள்ளேன்.
முதலாவது குற்றத்தை என்னபெற்றால் புலிப் பொறுப்பாளர்மீது போட்டாகவேண்டும்.

அதற்குப் புலிகளின் மேலிடம் என்ன பதிலைத் தரும் எனக்கு?

முதல் நபரை இன்னும் சுட்டப்படவில்லை.

ஜேர்மனுக்கான புலிப் பொறுப்பாளர்கள்
இது குறித்துப் பதில் தராத வேளை
மேற்காணும் நபரையும் சுட்டிக் கொள்வது என் நோக்கு.

இதுவரை எனது கைக்கெட்டிய தகவல்கள்வரை,எனது இருப்புக்குச் சவால்விடும் நடவடிக்கைகளைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் செய்து வருகிறார்கள்.இது குறித்துப் பொதுவாகப் பொலிசில் ஆவணப் படுத்திய குறிப்பை நான் வழங்குவேன்.எனினும் புலிகளின் பதிலிலிருந்தே காரியமாற்றியாக வேண்டும்.அவர்களுக்கு அந்தக்கடப்பாடுண்டு.இது இடம்பெறாதபோது நான் எனது முடிவில் செயலாற்றுவேன்.


இரண்டாவது:

"எட்டப்பர்.கொம்"http://www.eddappar.com/content/view/57/26/
அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

என்னைப்பற்றிய சில தகவல்களை சுவெலம்-என்பெற்றாலில் வசிக்கும் புலிகளின் எடுபிடிகளே திரட்டிக் கொடுப்தாகச் சொல்லிப் பிழையான தகவல்களையும்-பொய்யையும் புலிகளுக்கு வழங்கியுள்ளர்hகள்.அல்லது எட்டப்பார்.கொம்க்கு அனுப்பப்பட்டுள்ளது.அந்த இருவரின் பெயர்களும்

எனக்குத் தெரியும்.
இருவரின் பெயரும் இதுள் அடக்கம்:"விரவதரன்".


ஆக இத்தகைய பிழையான தகவல்களைச் சேகரித்த பொறுப்பாளர்கள் "டுசுல்டோர்ப் மேதின ஊர்வலத்தில்" என்னோடு வாக்குவாதப்பட்ட பொறுப்பாளர்களே.மேதினத்தில் அவர்கள் என்னைப்படம் எடுத்து, போட்டோவை எட்டப்பர்.கொம் உபயோகத்துக்குக் கொடுத்துள்ளார்கள்.அல்லது எட்டப்பர்.கொம் புலிகளின் தளமாக இருக்கலாம்..இவையெல்லாமும் எட்டப்பர்.கொம்முக்கு எதிராக நான் முன்வைக்கும் குற்றச் சாட்டு.அதைப் பொலிசும் ஏற்கிறது.

இவர்கள் வெறும்
ஒழுங்கீனமான பேர்வழிகள்தாம்.
மனிதவிரோதிகளே மற்றவர்களை இனவிரோதிகளாம்!

9 comments:

Anonymous said...

விடுங்களேன்...ஏன் பயந்து சாகுறீங்க..சாவு என்பது ஒருமுறைதான் வரும்...நீங்க தினம் தினம் செத்து மடியுறீகளே !!!!

Anonymous said...

Well Wisher says...

வாறீர் போறீர் என்னாலே வந்து கிடக்கிறார் மேலூரார் சாகப்போகிறேன் என்னாலே... செத்துக் கிடக்கிறேன் உன்னாலே... ????

Hunde die bellen, beissen nicht.

Wer einmal lügt, dem glaubt man nicht, und wenn er auch die Wahrheit spricht.

Zeige mir Deine Freunde und ich sage Dir wer Du bist.

Alter schützt vor Torheit nicht.


So... Keep in mind
Life is very short


Take Care.

சரவணையான்...

Anonymous said...

உங்கள் பாதுகாப்பு பற்றி கவனம் எடுங்கள். அசந்தும் போகாமல் அதே நேரத்தில் அசைந்தும் கொடுக்காமல் இருத்தலுக்காக போராடவேண்டிய உறுதி உங்களோடு இருக்கட்டும்.

எந்த உறுதிமொழிகளையும் புலிகள் பொறுப்பாளர் தந்தாலும் அது உதவாது என்பது கடந்த கால அநுபவங்களாகும்.

நண்பர்களின் எச்சரிக்கைகளையும் மீறி புலிகளால் தனக்கு தரப்பட்ட வாய்வழி உத்தரவாதத்தை நம்பி வன்னியில் இருந்து மீண்டும் பல்கலைக்கழக பரீட்சைக்கென யாழ் திரும்பிய விமலேஸ்வரன் ஆடியபாதம் வீதியில் சையிக்கிளில் சென்ற வேளை பின்தொடர்ந்து வந்த புலி உறுப்பினரால் பிடரியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இது ஆரம்பமும் அல்ல இன்னும் முடிந்ததுமல்ல.

பல்கலைக்கழக மாணவர்களால் அனைத்து அன்றைய இயக்கங்கள் யாவற்றையும் நோக்கி நடாத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு முனைப்பான போராளியாக இருந்தது மட்டுமே இதற்கான காரணம்.

வைக்கப்பட்ட கோரிக்கைகள் தங்களை “மட்டும”; அரசியல் அனாதையாக்கிவிடும் என ஆக்ரோசம் கொண்ட புலிகளின் பழி தீர்ப்புத்தான் இந்த நடவடிக்கை. மரணமே பரிசு என்ற எச்சரிக்கை.

இங்கெல்லாம் எட்டப்பன் துரோகி என்ற சட்டகம் எவ்வாறு பொருந்தியதோ தெரியாது.

என்றோ ஆரம்பமான இந்த பாசிசப் போக்கு இன்னமும் உதறப்படாமல் தான் இருக்கின்றது.

தடயங்கள் ஆதாரங்களை வரலாற்றில் நடப்பிலிருந்து தேடவேண்டியவர்கள் பாதிக்கப்பட்டவரை கூண்டில் வைத்து தடயம் கேட்டு மேலும் வதைப்பது வதையின்பத்தை ரசிக்கும் மனக்கோளாறுடையவர்களின் பாற்பட்டது.

சிறி

Anonymous said...

வணக்கம்
நடந்து முடிந்த சம்பவத்தில் சில விடயங்களை இங்கு குறிப்பாக காணக்கூடியதாக இருந்தது.
குரகொடுத்தவர்களின் பிரிவுகள்
பெயர் தேவை என்பதற்காக செயற்பட்டீர்கள் என.

இதில் குறிப்பாக தேனீ கூட நம்பாது என எழுதியிருந்தார். இதில் தேனீ பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் இந்த விடயத்தில் மெளனமாக இருந்துள்ளார்கள். எதிரியை எதிரி தாக்குகின்றான் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார்களா அல்லது வேலைப்ழு ? காரணமாக எது கருத்தும் கூறாமல் விட்டுவிட்டார்களா எனத் தெரியவில்லை.

பெயர் பற்றி
உலகத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் பற்றி ஒரு மனிதன் சிந்திக்கின்ற போது அவன் தன்னைப் பற்றி முதலில் சிந்திப்பதில்லை '' ''மார்க்ஸ்'' பின்வருமாறு கூறுகின்றார். கொம்யூனிஸவாதிகள் உலகத்தில் உள்ள எல்லாநாடுகளிலுமுள்ள பிரச்சினைக்காகப் போராடுபவர்கள். மற்றய தொழிலாளர் கட்சிகள் தமது சொந்த நாட்டுப் பிரச்சினைக்காக மட்டும் போராடுபவர்கள்." இதுவே கொம்யூனிசவாதிகளை மற்றய தேசியவாதிகளிலிருந்து வித்தியாசப் படுத்துகிறது.''
தேசியவாதியாகிய சுயநலவாதிகளுக்கும் சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்தறிவின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஓரு பொதுவுடமைச் சித்தாந்த்தில் சிந்திப்பவன் மற்றவர்களைப் போல தான் தன்னுடையது எனச் சிந்திப்பதில்லை. அவர்கள் மற்றவர்களின் பிரச்சனையை தன்றுடைய பிரச்சனையாகக்கருதியே சிந்திக்கின்றார்.
அப்படி பெயர் வேண்டும் என்றால் சிறி புலிக்காக கோசம் போட்டால் இதனை விட பிரபல்யமாக வருவார். இவர் உங்களுடன் வந்து விட்டால் உங்களுக்கு ஒரு போட்டியாளர் வந்து விடுவார். அவரை விட்டு விடுங்கள். உங்களுக்கு ஒரு போட்டியாளர் வேண்டாம்)
சுயநலத்திற்கும் பொதுநலத்துக்கும் வித்தியாசம் இருக்கின்றது இங்கு தேசியம் பேசுவர்கள் சுயநலவாதிகளாக இருக்கின்றனர்> இவர்கள் இலகுவான பாதையை தெரிவு செய்து நடப்பவர்கள்;
அவ்வாறில்லாமல் சிந்திப்பவர்களளை புலிகள் தமது தளத்திலேயே இல்லாமல் ஆக்கியிருக்கின்றார்கள் புலிகளின் விசுவாசிகள் கொலைகளை ரசித்தே பழக்கப்பட்ட தினால் ஒரு மனிதனுக்கு இடப்பட் எச்சரிக்கை கேலிக்குரியதாக்கியிருக்கின்றது.
அத்துடன் இது வே தத்தம் இரத்தத்தில் நடந்திருந்தால் வேறுவிதமாக சிந்தித்திருப்பார்கள். சிறிலங்காக இனவாதப் படையால் கொல்லப்பட்ட சிறுவர்கள் பெற்ற அனுதாப அலை என்பது கனகம்புளியடிப் படுகொலை அனுதாபத்தைப் பெறவில்லை. இரண்டும் துன்பமான நிகழ்வுதான் இரண்டு குழந்தைகளும் எந்த தீங்கும் இழைக்கவில்லை. பொதுவுடமைவாதிகள் இரண்டும் கொலை என்கின்றனர்.
ஆனால் புலிகள் அப்படிக் கருதவில்லை என்பதற்கு அப்பால் வெளிநாட்டில் இருக்கின்ற அவர்களின் ரசிகர்கள் அவ்வாறு கருதவில்லை.
ரயாகரன் குறிப்பிடுவது போல வக்கிரம் உணர்வுதான் கொலைகள் பற்றிய கருத்துக்களாக இருக்கின்றது.

இடதுசாரியம் பேசிவிட்டு புலிப்பாசீசத்தை ஆதரிப்பவர்களும் புலியெதிப்பனியிர் பின்கதவால் ஏகாதிபத்திய தயவுடன் பதவிக்கு வருவதற்கும் காத்துக் கிடக்கின்றார்கள் இவர்கள் மக்களின் பிணங்களின் மேல் அரசியல் நடத்துபவர்கள். மாறாக எல்லோரும் போகத்தயங்கும் பாதையில் கால்வைத்து நடக்க முற்படுபவர்கள் தான் பொதுவுடமைவாதிகள்.

Anonymous said...

Gypfs; Njitahd NghJ rpwpuq;fs; Rdhkpf;Fg; gpd;dH vOjpa Mf;fj;ij epjHrdk;, NjdP. gHNfhsk; Mfpa jsq;fs; gjpj;jpUe;jd. ,itfspy; rpy ehl;fspd; gpddH gHNfhsj;ij jtpu .
Njit vd;gjhy; rpwpapd; fUj;ij Gypfs;d; jsk; ghtpj;jpUe;jJ.

Anonymous said...

ANNA AREEVARUDEE SRIRANGAN

WHO TOLD YOU EDDPAR.COM IS PULIKALIN WEBSITE ENDUU? CAN YOU PROVE IT? SAME LIEK YOU ASKED EVERYBODY " CAN THEY PROVE IT I AM WORKING FOR SRILANKAN GOVERNMENT" SUMMA AHENDA EDUTHAUKUUMMM PULLE PULLE ENDU ALAMBURA UNNAK VETTAI MANUSEE PILLAyal ILLAYOO

Anonymous said...

Anonymous said...

புலிகள் தேவையான போது, சிறிரங்கன் சுனாமிக்குப் பின்னர் எழுதிய ஆக்கத்தை நிதர்சனம்; தேனீ; ப+கோளம் ஆகிய தளங்கள் பதித்திருந்தன. இவைகளில் சில நாட்களின் பினனர் ப+கோளத்தை தவிர (மற்றவை அழித்துவிட்டென?).
தேவை என்பதால் சிறியின் கருத்தை புலிகளின் தளம் பாவித்திருந்தது.

Sri Rangan said...

கதிரவன் சரியாகச் சொன்னீர்கள்.
தங்கள் வரவுக்கு நன்றி!


Well Wisher ,

//Wer einmal lügt, dem glaubt man nicht, und wenn er auch die Wahrheit spricht. //

ஆனால் பல கோடித் தரம் பொய்களையே உதிர்க்கும் கொடிய அரசுகள்-இயக்கங்கள் சொல்வதை உண்மையாகச் சனங்கள் எங்ஙனம் நம்புகிறார்கள்?
ஓ...அவர்கள் இன்னும் உண்மையே பேசவில்லை!


mein ungeborner shon
wenn du einmal atmen wirst
so wisse
dein vater war der treue shon
einer ungetreuen revolution

mein liebes fernes kind
wenn du einmal hoeren kannst
so hoere
deines vaters liebstes kind
war der rauhe morgenwind

mein guter junge(Well Wisher)
wenn du einmal sprechen kannst
so spricht:
mein vater starb an zerschossener lunge
und abgebissner zunge

mein kind
wenn du einmal weinen kannst
wie Tamilische mutterherz weinen
wein eine traene jener wand
wo man mich ermordet fand

mein shon
wenn du einmal lieben kannst
so lieb
und such indessen
deinen Eltern zu vergessen

"The point is not to understand the world
but to change it."-Marx K.


//தடயங்கள் ஆதாரங்களை வரலாற்றில் நடப்பிலிருந்து தேடவேண்டியவர்கள் பாதிக்கப்பட்டவரை கூண்டில் வைத்து தடயம் கேட்டு மேலும் வதைப்பது வதையின்பத்தை ரசிக்கும் மனக்கோளாறுடையவர்களின் பாற்பட்டது.//

சரியாகச் சொன்னீர்கள் சிறீ! தங்களுக்கு நன்றி.


//சுயநலத்திற்கும் பொதுநலத்துக்கும் வித்தியாசம் இருக்கின்றது இங்கு தேசியம் பேசுவர்கள் சுயநலவாதிகளாக இருக்கின்றனர்> இவர்கள் இலகுவான பாதையை தெரிவு செய்து நடப்பவர்கள்;
அவ்வாறில்லாமல் சிந்திப்பவர்களளை புலிகள் தமது தளத்திலேயே இல்லாமல் ஆக்கியிருக்கின்றார்கள் புலிகளின் விசுவாசிகள் கொலைகளை ரசித்தே பழக்கப்பட்ட தினால் ஒரு மனிதனுக்கு இடப்பட் எச்சரிக்கை கேலிக்குரியதாக்கியிருக்கின்றது.//


உண்மையை, பெயர் கூறாத நண்பரே!இதுதாம் இன்றைய அவலம்!


இன்று,எனது வேலையிடத்தில் பலரின் கையில் புலிகளின் "எட்டப்பர்"இழி இணையத்தின் என்னைப்பற்றிய அவதூறுப் பிரசுரம்."அண்ணே உங்களைப்போய் இவங்கள்..."எண்டபடி.

நான் கேட்டேன்:"இதெப்படிக் கிடைத்தது?"

"இன்ரர் நெட் கபேயில் நோட்டீசு கட்டாகக் கிடக்கிறது."-அவர்களின் பதில்.

அப்படியிருக்கிறது நிலைமை!

Anonymous said...

இஞ்சிக்கு ஏலம் கொண்டாட்டம் எலுமிச்சம் பழத்துக் மரணம் கொண்டாட்டம்
காடைக்கு கலகம் கொண்டாட்டம். கடைகெட்ட நாய்களுக்க மரணம் கொண்டாட்டம்.
எப்போவோ கேட்ட பாடல் வரிகள் போன்று தோண்றுகின்றனவா????
இவைதான் 1985களிலும் சரி 20006 களில் சரி இவைதாம் நிலமை
''
துறை போல் மக்கள் இருக்க தோணி போல வரலாற்றில் எல்லோரும் போய்விடுவர். ஆனால் துறைமுகம் என்னும் மக்கள் அப்படியே இருப்பர். தலைவர்கள்? ஏகங்கள் வந்து போதும் மக்கள் அப்படியே இருப்பர்.
வருபவர்கள் தம்மை விட்டால் யார் என்று கருதிடுவர். ஆனால் கருதுகின்ற போது அவர்களின் வாழ்வே முடிந்து விடுகின்றது.
ஆனால் துறைமுகம் அப்படியே இருக்கும்.
துறைமுகம் என்பது பேரலை கொண்டு தாக்கப்பட்டாலும் சில தழும்புகளை கொண்டாவது தொடர்ந்தும் இருக்கும்.
ஏனெனில் கல்தோன்றாக்காலத்து மூத்த குடிகளில் இருந்து வந்த குடிகளாயிற்றே நிச்சயம் தொற்று நோய் எதிர்ப்புச் சக்தியதிகமிருக்கும்.
பயம் கொள்ள வேண்டாம்.
அச்சம் கொள்ள வேண்டாம்.

அன்றொரு ஏகதலைவன் ஏக பிரிதிநிதியிருக்க வில்லை.
ஏக அதிகாரம் இருக்கவில்லை
ஆனாலும் சங்கம் படைத்திட்டான்
ஆனாலும் சருகுகள் கண்டு அழியப் போவதில்லை.
ஆக
அச்சவுணர்வு தேவையில்லை.

சுதன்

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...