Saturday, January 15, 2011

"இடது-வலது" கடந்து...

ன்று,இலங்கைத் தீவில் வாழும்தமிழ்பேசும்மக்களோ தம்மீது சிங்கள இனவாத அரசுகள் கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பை-சிங்கள மயப்படுத்தும் அரசியல் நகர்வையெல்லாம்மறந்து,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது, அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் நம்புகிறார்கள்.

"மீண்டுமொரு உழவர் திருநாள் வந்து பொங்கிச் செல்கிறது.யுத்த வடூ மிகவிரைவாக மனதிலிருந்து விலத்திவிடினும் அந்தப் பயங்கரமான சிங்கள அரசினது இனவழிப்பு யுத்தம் தமிழ்ர்களது பூமி மீது நிகழ்த்திய வரலாற்று அழிவை தமிழர்கள்தம்பூமியின்மடி மறந்துதாம் போகும்?அழிந்த பனைகள்-அறுந்த சுற்றம்,பிரிந்த மண்,விட்டுத் தொலைத்த கிராமம்,குடியிழந்து குட்டிச் சுவராகப்போன கிராமங்கள் தினமும் இந்த அழிவு யுத்தத்தைச் சபித்திருக்கப் பொங்கலுக்கான வெடிகள்,தமிழ்ப் பிரதேசமெங்கும்சிங்கள அரசினது குண்டொலிகளாக ஞாபகத்தைக் கூட்டிவருகிறதா?-கூட்டிவரவேண்டும்,அதுதாம் உண்மையாகவும் வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்தும். எம்மீது நடாத்தப்பட்ட அழிவை நாம் மறக்கத்தாம் முடியுமா?வயிற்றுக்குச் சோறிடுவதாக இன்று படங் காட்டுபவன் வாழ்வைப் பறித்துவிட்டு எம்மை மேய்க்கிறார்கள்!தாலியை அறுத்துவிட்டு தமிழச்சிக்குக் குங்கமிடும்படியும்-பட்டுடுக்கும்படியும் துயிலுரியும் மகிந்தா மதங்கொண்டுரைக்க மௌனமாகக் கனாக் காணும் தமிழ்த் தேசம் தன் மானத்தை இழந்துதாம் போகுமா?"

இதுவொரு நம்பிக்கை.இப்படிப் பலரிடம் கேள்விகள் உருண்டோடுகிறது!

இத்தகைய நம்பிக்கை வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கும்,மற்றும் தமிழ்த் தலைமகளது போலித்தனமான அரசியலது விருத்திக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலை பெறுகிறது.இஃது, ஒருவகையில் சிங்கள-தமிழ் ஓட்டுக்கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள்.

சோறுபோடுவதும்,சுகம் பெறுவதும் மக்களது உரிமையென வகுப்பெடுப்பவர்கள் புதிய இலக்கொன்றின் திவைவழியில் ஆளும் மகிந்த அரசினது எஜமானர்களுக்கிசைவாகக் கருத்துக்களை பல வகைகளில் முன் வைக்கின்றனர்.இன்றைய இடதுசாரிகளது முகாம்மின் இயலாமையானது இந்தக் கருத்துக்களை மேலும் மெருக்கூட்டுவதில் தமிழ்பேசும் சமுதாயத்தின் இளைய தலைமுறையிடம் "மக்களுக்கு இன்று அவசியமானது அமைதி,உணவு-உறையுள்"எனச் சொல்லி தமிழ்த் தேசிவினதின் தலைமுறையையே அடிமைப்படுத்தும் அரசியலைச் சிங்கள-அந்நிய லொபிகள் செய்து முடிக்கிறார்கள்.இதைப் பெரும்பாலும்"மனிதாபிமானம்"எனும் கருத்தின் திசையில் கட்டித் தகவமைக்கும் அதிகாரத்துவ நலன்கள் நமது மக்களை அடிமைக்குட்படுத்துவதையே குறியாகக்கொண்டியங்குகிறது.

இவையெல்லாம் புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.மகிந்தாவோ அல்லது சிங்கள அதிகாரவர்க்கமோ நமது மக்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள் அல்ல!மாறாக,இன்றைய நிதிமூலதனத்திடம் சரணாகதி அடைந்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவில், அந்நியர்களே நமது மக்களது தலைவிதியைத் தீர்மானித்துச் செயற்படுகின்றனர்.அந்த வைகையற்றாம் இன்றைய "லொபி"அரசியல் எமது மக்களுக்குச் சந்தோசமான வாழ்வு"அமைதியும்,அடிப்படைத் தேவைகள்"எனவுஞ் சொல்கின்றதுவரை,ஒருவித "வயிற்றுக்கான அரசியல்" எமக்குள் நடாத்தப்படுகிறது.இதைக் கட்டமைக்கும் டக்ளஸ் முதலான தமிழ் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் தேசங்களில் இருக்கும் தரகர்கள் மிக நெருக்காமானதும்,அண்மையிலுமான கருத்தியல்களை விதைத்து எட்டிவிட முனையும் லொபி அரசியலானது, எதிர்காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தின் எந்தவுரிமையையும் சிங்கள ஆளும் வர்க்கம் மறுப்பதில் திரட்சியடையும் சங்கதிகள் என்பதை எவர் புரிந்துகொள்ள முடியும்?

இலங்கைக்கு ஜனநாயகம்:


இலங்கையில் ஜனநாயகத்தின் அவசியங் குறித்துப் பரப்புரை செய்யுங் கயமைக்கு, ஜனநாயகங் குறித்தவுணர்வு-புரிதலெல்லாம் அதிகம்போனால் தமது அரசியல் நோக்கம் நிறைவுபெறும் தளத்தில் அது மிக நேர்த்தியானதெனச் சொல்லும் கபடம் கருப்பொருளாகவிருக்கிறது.அந்தத்திசையிற்றாம் அரசியலைச் செய்யும் பெரும்பகுதியான புலம்பெயர் "மாற்று(சுத்தல்)க் கருத்து"வட்டம்நடந்துமுடிந்த "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு"புதிய விளக்கங்கொடுத்தது.பாசிசச் சூழலிலுள்ள இலங்கையில் இத்தகைய மாநாடுகள் குடிசார் அமைப்புகளது விசும்பு நிலைக்கு ஏதுவானதாகவும்,எழுத்தாளர்களது குரல் சர்வ தேசச் சூழலில் இலங்கையினது இன்றைய சூழலைச் சொல்லும் ஒரு அரியவாய்பாகவும்,மக்களது ஒடுங்கிய-அழுத்தமான வாழ்வில் இலக்கியவாதிகளது இணைவு அவர்களது குரலை உயர்த்தும் களமாக அமையுமெனவுஞ் சொல்லப்பட்டது.இது,ஜனநாயகத்தை இலங்கைக்கு வெளியில் புரிந்ததென்னவே வளர்ச்சியடைந்த நாடுகளது நவலிபரல்தன்மையிலான சமூக நகர்வையாகவேயெனப் புரிந்துகொள்வதில் நமக்குச் சிக்கல் இல்லை!



இந்தப் புரிதலுக்கு வெளியில் நமது மக்களது அரசியலைச் சிதைக்கும் லொபி அரசியலானது அதன் வர்க்கத் தன்மைக்கேற்ற அதீத முனைப்புடைய புறக் காரணிகளை(மாநாடு,சங்கம்,சமயக்கூட்டம்-சொற் பொழிவு,இலக்கியவுரையாடல்,நிலவும் அமைப்புக்கிசைவான பரப்புரை,குறிப்பாகக் கருத்தியற்றிசையமைவு) தமது நலன்களுக்குட்பட்ட வகையில் பேச முற்படுகிறது.இது,மக்களது வாழ்வதாரத்தைக் குதறிய அரசினது இன்றைய நகர்வைக் குறித்துப் "பாசிசப் புலிகளது"அரசியலோடிணைப்பதில் அரசுக்கும்,போராடுங் குறுங் குழுவுக்குமிடையிலான வித்தயாசம் என்னவென்பதை மறைத்து ஆளும் அரச-ஆளும் வர்க்கத் திமிரை மக்களது உரிமையுடன் ஒப்பிட்டுத் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கே வேட்டு வைத்திருக்கிறது.இந்தப் புரிதல் வகைப்பட்ட அரசியலானதின் இன்றைய வகிபாகமானது தமிழ்ச் சூழலில் மகிந்தாவினது அரச எடுபிடிகளாக்குச் சிலரை மேலும் வென்றெடுப்பதில் குறிவைத்து மையங்கொள்ளும்.இது வெளிப்படுத்தம் அரசியல்பரந்துபட்ட இலங்கையின் முழுமொத்த மக்கட்டொகைக்கும் எதிராதென்பதில் காலங்கடந்துதாம் புரிந்துகொள்ளத் தக்க வினைக் கூறுகள் அடங்கியுள்ளது.

மக்களது பெயரில் அவர்களை அண்மிக்கும் இத்தகைய அரசியல் உரையாடலானது மீளமீளத் தகவமைக்கும் கருத்துவெளியானது தமிழ்பேசும் மக்களது அரசியலுரிமையைச் சோற்றுக்கு விற்பதென்பதைக் கடந்தியங்கமுடியாதென்பதை அவர்கள் தினமும் சொல்வதில் கவனமாகவிருக்கிறார்கள்.இதுவே,இலங்கைக்கு ஆதரவான லொபிக் குழுக்களான இலங்கை ஜன நாயக ஒன்றியம்,இலங்கையர் சங்கம்,தலித் சமூக மேம்பாட்டு முன்னணி போன்ற குழுக்களது பெரும்பான்மைப் பலத்துடன்கவிஞர் ஜெயபாலன் சோபாசக்திபோன்ற இலக்கியச் "செம்மல்"களையும் கையெழுத்திட்டு ஆதரிக்கத் தூண்டியது.இந்தவிடத்தில் சோசலிசம்-மார்க்சியம்பேசும் இரயாகரனது தாந்தோன்றித்தனமான விசம அரசியலை என்னவென்பது!இத்தகைய சர்வ தேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஆதரித்து அறிகைவிட்ட இரயாகரனது பினாமி அரசியல் செயற்பாடோ அப்பட்டமான ஒடுக்குமுறையாளர்களது நலனை ஒடுக்கப்பட்ட மக்களது அரசியல்வழியாகச் சொல்வதில் இதுவரை புலிக்கு வேவு பார்த்த சூழலெல்லாம் இன்னொரு தரப்புக்கு விசுவாசஞ் செய்வதில் அழிக்கப்பட்ட புலிக்கு மாற்றீடு காண்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?இவர்கள் கூறுவதன் சாரம்தாம் இன்றைய இலங்கைக்கான "ஜனநாயகம்" என்பதைப் புரிந்துகொண்டால் இந்தச் சூத்திரத்துள் மையமுறும் நலன்கள் மக்களுக்கானதுதானவென்று புரிந்துவிடாதோ?

புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதற்கேற்ற தளங்களிற்றாம் இடதுசாரியம்(இரயாமாதிரி),ஜனநாயகம்(சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு மாதிரி) எல்லாந் திசையமைக்கப்படுகிறது.இதற்கு வெளியில் இயங்க முற்படுவதை இத்தகைய குழுக்கள் "இடது"சாரியத்தின் பெயராலும்,"ஜனநாயக"த்தின் பெயராலும் எதிர்த்து, மக்களது உரிமைகளைப் பேசும்"தகுதி"தமக்குத்தாமெனச் சொந்தங்கொண்டாடுவது தமது எஜமானர்களது ஆதிக்கத்துக்கு எதிரான எந்த விசும்பையும் கிள்ளியெறிவதற்கான புள்ளியென்பதே எனது கருத்தாகும்.

புலியில்லா இலங்கை:


புலியில்லா இலங்கைக்குப் பிரிவினைவாதப் பூச்சாண்டி அரசியல் இனிச் சறுக்கலாகவே இருக்குமென்பது மகிந்தாவுக்குப் புரிந்தவொன்று.புலிகள் தம்மை மீளத் தகவமைப்பதாக இந்திய ஆளும் வர்க்கம் கடந்த மாதம் ஊதிப் பெருக்க அது எடுபடவில்லை!

ஒன்றுபட்ட இலங்கைக்கான அரச ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்துவது மற்றும் இலங்கை பூராகவும் அதை விஸ்தரிப்பதென்பதும் இன்றைய இலங்கைக்கு முதலாயக்கடமைகளில் ஒன்று.



இதன் தொடரில், வரலாற்று ஆவணங்கள் உருவாக்கப்படும் புத்த விகாரைகளது மீள்வருகையில் எட்டப்படும் மனிதப் பதிவுகளது திட்டமிடப்பட்ட ஆதிக்கமானது ஆத்மீகத்தோடு சிங்கள அரச ஆதிக்கத்தை வலுவாக்கி, பண்பாட்டு ஒடுக்குமுறையை-ஆதிக்கத்தை இறுக்கி வருவதன் வியூகத்தை முதலிலும்-இறுதியிலுமாகச் சொல்லித்தாம் ஆகவேண்டும்.இந்தப் போக்கோடு மிகந்தாவே விரும்பாவிட்டாலும்,இலங்கையின் தரகு முதலாளியமானது ஆசிய மூலதன வருகைக்குப் பின்னும்,புலிகளது இடத்தைத் தொடர்ந்து வெற்றிடமாக வைத்திருக்கவும் கீழ்வரும் இரு முக்கியமான போக்குகளுக்கு வந்தேயாகவேண்டும்-நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும். இதைச் செய்யாதிருக்கும்போது தமிழ் நிலப்பரப்பில் அதன்(சிங்கள அரசு) அரச ஆதிக்கம் மெல்லவும்-மெதுவாகமே நகரமுடியும்.ஆதலால் அரச ஆதிக்கத்தை மிக விரைவாக நிலைப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் இப்படித்தாம் நமக்குள் அறிமுகமாகும்:

1: இலங்கை பூராகவும் இனப் பாகுபாடற்ற பொருளாதார முன்னெடுப்புகள்-அபிவிருத்திகள் நடந்தே ஆகவேண்டும்.யுத்தத்தால் பாதிப்படைந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் சீராக்கப்படுவதும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்கள் அவர்களது வாழ்வுக்கானதாகப் பயனெட்டுவதும்,குடிசார் அமைப்புகள்
சமூக வாழ்வைச் செப்பனிடுவதும்,குடும்பங்களை இணைப்பதும் அவசியம்.இதற்காகக் குடிசார் அமைப்புகள் செயலிழந்த கடந்தகாலத்தைத் தொடைத்து எறியவேண்டிய நிலையில் இலங்கை ஜனநாயகம் தன்னைப் புதிப்பித்தாகவேண்டும் இல்லை உயிர்த்திருக்க வேண்டும்.

2: இராணுவவாதம் மங்கி,குடிசார் நிறுவனங்களுக்குள் அரசியல் ஆதிக்கமும்,சிவில் சமூக ஆளுமைiயும் இணைந்துகொள்வது.அரசியல் ரீதியான இனஞ்சார் அதிகாரப்பரவலாக்கம்(மாகண சபைகளுக்கு அதிகாரங்களைக் கையளித்தல்) பொதுவான ஒருகிணைந்த இலங்கை அரச சட்டயாப்பாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.இதுவே,தடையற்ற பொருளாதார முன்னெடுப்புகளை மேற்குலக மூலதனத்திடமிருந்து பாதுகாத்து ஆசிய மூலதனத்துக்குச் சாதகமான தெரிவுகளை வலுப்படுத்தும்(இது,மாகண சபைகளுக்கு சட்டரீதியான அதிகாரங்களைக் கையளித்தே ஆகவேண்டும் என்ற பொருளில் புரியப்படுகிறது).


மிகந்தா இரண்டாவது தடவை ஜனாதிபதியான கையோடு அவரது அரசியலானது திட்டமிடப்பட்ட ஆசிய மூலதன வியூகத்தை மிக ஒழுங்குற இலங்கையில் பரிசீலித்துவருகிறது.ஆசிய மூலதனமானது ஐரோப்பிய அரசுகளிடமிருந்து கற்றதைத் திருப்பிக்கொடுக்கும் பதிலீடான பாதையிலேயே சென்றுகொண்டிருக்கிறது.அது,திட்டமிடப்பட்ட பாரிய உலக யுத்தமொன்றின் முன்தயாரிப்பில் இலங்கைமீதான அனைத்து அதிகாரத்தையும் நிலைப்படுத்த இலங்கையானது ஒரு இனத்தின் ஆளுமைக்குள்கொணரப்பட்ட, ஒற்றை இலங்கைத் தேசியவுணர்வு முதன்மையாக இருக்கவேண்டுமென உணரும் அரசியல் புரிதலின்வழி செயற்படுவதை,பேராசிரியர் கிஷோர்(Kishore Mahbubani _ http://www.mahbubani.net/ ) மபுபானியின் உரைகள் மூலம் அறியக்கிடைக்கிறது.

இதைத் விரித்தியாகவும்-நேர்த்தியாகவும் செய்ய முனையும் ஆசிய மூலதனத்துக்கு, இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் ஒருகிணைந்த இலங்கைக்குள் தேசிய இனமாக்கிக்கொள்வது அவசியமாகவே இருக்கிறது.இதைத்தாம்"நாம் அனைவரும் இலங்கையர்கள்,சிறுபான்மை இனங்கள் என்பது கிடையாது"என்ற மகிந்தாவின் கோரிக்கைக்குள் இனங்கண்டாக வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தப் பொருளாதார நகர்வுகள்-முரண்பாடுகள் மக்களினங்களை வலு கட்டாயமாக ஒரு தேசத்து நிலவரையறைக்குள் ஒன்றிணிக்கவே முனைகின்றன.இதிலிருந்து இனிமேற்காலத்தில் "தமிழர்களது பூமி" என்ற ஐதீகப் பாரம்பரிய பிரதேசம் முகமிழந்து காணமாற்போவதென்பது புத்தரது கொட்டகைகளதும்,"தமிழ் நிலப்பரப்புகளில்" தங்குதடையின்றிப் பல்லாயிரும் சிங்களச் சிப்பாய்கள் காதல் செய்வதிலிருந்தும் விசும்பாகி முகிழ்த்துவருவதை எவரும் புரிவர்.

"லொபி"கள்தம்உலக அணிச்சார்பு:

இன்று மேற்குலகம் விரும்பாமல் வெறுக்கும் சீனாவும்-இந்தியாவும் அடுத்த இருபதாண்டுகளில் ஆசியாவிள் மிகப்பெரும் பிராந்திய ஆதிக்க சக்திகள் என்பதிலிருந்துவிடுபட்டு உலகச் சக்திகளென அடுத்த நூற்றாண்டுவரைத் தொடரத்தாம் போகின்றன.இதற்காக அமெரிக்கவே யுத்தத்துக்கு அழைத்தாலும் அதைத் தட்டிக்கழித்துச் செல்ல விரும்பும் இத்தகைய நாடுகளை யுத்தத்தின்மூலஞ் சிதைந்தாலே தவிர அமெரிக்கா-ஐரோப்பா உயிர்வாழ முடியாது.

எனவே,அமெரிக்கா திறக்க முனையும்"ஈரான் யுத்தம்-வடகொரிய யுத்தம்"நேரடியாகச் சீனாவைத்தாக்கி அழிக்கும் மிகப்பெரிய வியூகத்தோடு நகர்வதை சீனா முன்கூட்டி அறியும்.அதைத் தொடர்ந்த அதனது வியூகப் பங்காளிகளில்(The Shanghai Cooperation Organization _ http://www.cfr.org/publication/10883/shanghai_cooperation_organization.html ) முதன்மைக் கூட்டாளி இருஷ்சியா,இந்த வருட மூனிக் நகர்(ஜேர்மனி) பாதுகாப்புக்(Munich Security Conference ) கூட்டத்தில்(நேட்டோ அணியினது இச்சந்திப்பு_ http://www.securityconference.de/ ) நேட்டோவோடு இணையும் அவர்களது வேண்டுகோளுக்கு அளிக்கும் பதிலிலிருந்தே சீனாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்பது உண்மையானது.

தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து இந்தியா,சீனா போன்ற இரண்டு பொருளாதார ஆதிக்கச் சக்திகளைத் தனிமைப்படுத்தும் அரசியலை அமெரிக்காவும் மேற்குலகமும் முழு முயற்சியாகச் செய்து வருகிறது.இந்தியாவின் சந்தையை வெற்றிகொண்ட மேற்குலகமும் அமெரிக்காவும் அதன் அரசியல் ஆதிக்கத்தையும் பொருளாதாரச் சந்தையையும் மெல்ல உடைப்பதின் ஒரு அங்கமே ஐக்கிய தேசியக்கட்சி(இரணில் மௌன்ட் பெலாரின் சொசைட்டி போர்ட் மெனம்பர்_The Mont Pelerin Society _ https://www.montpelerin.org/montpelerin/home.html ) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகளது கூட்டு-நகர்வு,அரசியல் கோரிக்கைகள்.

இலங்கையில், இந்தியா-சீனா போன்ற நாடுகள் அதிகமாக ஆதிக்கத்தைச் செலுத்தி, இலங்கையை இந்தியாவினது-சீனாவினது செல்வாக்குக்கு உட்பட்ட நாடாக்கவே புலியழிப்பைக் கொள்கையாக வகுத்தது -Shanghai Cooperation Organization !இங்கு, இவ்வமைப்பின் செல்வாக்கு என்பதன் மறுவடிவம் இந்திய-சீன,இருஷ்சிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடு என்பதன் பொருளைக் குறித்து நிற்பதென்பதை இந்த மேற்குலகம் நன்றாகவே புரிந்து கொண்டது.

இத்தகைய நாய்ச் சண்டையில் அடியாளாக இருக்கும் ஒவ்வொரு இனம்சார் கட்சிகளும்,அமைப்புகளும்- இயக்கங்கங்களும் தத்தமக்குரிய வேலைகளைத் தமது எஜமானர்களுக்காச் செயற்படுத்தும்போது"இலங்கைத் தேசியம்,தமிழ்,ஜனநாயகம்,மக்கள் நலன்,பசிபோக்குதல்,நிவாரணம்,மீள்கட்டுமானம்,பேச்சுரிமை,சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு-வாழ்வாதாரம்"என்று பற்பல முகமூடிகளைப் போட்டுக் கொள்கின்றன.புலம் பெயர் "இடது"மாபியாக்கள் இன்னமும் தத்தம் அணி பிரித்துத் தமிழ்த் தேசியம்-விடுதலை என வகுப்பெடுப்பதையுந்தாண்டித் தாம் மட்டுமே மக்களுக்கு மயிரைப் பிடுங்குவதாகப் பூச்சுற்றுவதும் இத்தகைய"லொபி"அரசியலுக்கு அடிமையான கட்சிகளது வால்கள்தாம் இவை என்பதை நிரூபணமாக்கிறது.

ஆசிய மூலதனம் ஒரு புறமும்,மறுபுறம் மேற்குலக மூலதனமாகப் உலகத்தின் கனிவளங்கள் சில பெரு வங்கிகளது-நிறுவனங்களது சொத்தாக மாறிவிட்டென.இதைச் சுற்றித் தேசங்களது அரசியல்,மக்களது அழிவுகள் நடந்தேறுகிறது.இயற்கை அனர்த்தங்களாக சீறிச் சொல்கிறது! மனிதத் தவறுகள், புவி அதிர்வாகச் சுனாமியாக,வெள்ளப் பெருக்காக இலட்சம்-கோடி மக்களது உயிர் குடிக்கக் காத்திருக்கிறது.இலங்கைக் கிழக்கு வெள்ளம்-அவுஸ்ரேலிய வெள்ளம்,கெயிட்டி நிலவதிர்வு-பிரேசில் மண்சரிவு...

"யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக..."

இதன் மூலம் தொடரும் லொபி அரசியலானது பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வை இன்னும் அதே அழிவுக்குள் திணிப்பதாகத் தொடர்வதில் மக்கள் நலன் என்று சொல்பவர்களையே மக்கள் நம்பாமற்போகும் காலமொன்று உருவாகும்.அந்தக் காலமானது அழிவினது விளிம்பில் உலக யுத்தமெனச் செய்யப்பட்டு, இன்னொரு பாசிச வரலாற்றை இந்த நவ லிபரல் ஏகாதிபத்தியப் பிசாசுகள் எழுதிச் செல்வார்களா?

இதுள் தமிழ்த் தேசியத்தின் வரைவிலக்கணம் என்னவாக இருக்கும்?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
15.01.2011

Sunday, January 09, 2011

இனியொருவில், புலம்பெயர் நிலைவரம்

எம்மை, அகதி என்றே பிரகடனப்படுத்துவது
மானுட விடுதலைக்கு ஆனது!


னியொருவில், புலம்பெயர் நிலைவரம் குறித்த உரையாடலது பகுதி உரை.தொடராக, இது குறித்த கருத்தாடலும்-ஆய்வுகளும் அவசியமிருக்கு.அதைச் சாத்தியப்படுத்தும் புரிதல், அவசியமானதும் அடுத்த கட்டத் தேவையுமென்பது எனது எண்ணம்.அதன்வழி உரையாடலை இங்கு பகிர்கிறேன்.

புலம் பெயரும் மக்கள் கூட்டம்: துண்டிக்கப்பட்ட மக்கள் குழாமே-அவர்களுக்கு நிறம்,மொழி,இனம் இல்லை-அவர்கள் தம்மை அகதி என்றே பிரகடனப்படுத்துவது மானுட விடுதலைக்கு ஆனது!

சரி,விரிவாக விவாதிக்க வேண்டியவொரு தேவைக்கு சிரஞ்சீவி உந்தித் தள்ளுகிறார்.இந்தக் கட்டுரையின்வழி நாவலன் பேச முற்பட்டதை அவர் (நாவலன்)பின்னூட்டில் விளக்கியுள்ளார்(.) .

சரிஞ்சீவி,தமிழ்"சிவப்பு" பெண்கள்-ஆண்கள்,"கருப்பு"ஆண்-பெண்களை கேலி பேசுவதை என் விமர்சனம் எப்படிப் பேசியுள்ளதென்பதை இன்னொரு முறை வாசித்துப் புரியவும்.அடுத்து,தமிழ்பேசும் புலம் பெயர் மக்களை மட்டுமான வட்டத்துள் பேசப்படாததும்-பேசப்பட்டதுமான எனது உரையாடாலானது ஒரு சமூகத்தின் இருப்பை நோக்கி-உருவாக்கத்தின் ஆரம்ப நிலைமைகளைப் பேசுவது.அதுள் ,புலம்பெயர் மக்களுக்கு எங்கிருந்து-எப்படி ஒடுக்குமுறைகள் வருகின்றனவென்பது அவசியமான தேடுதலாக எனக்குப்படுகிறது.அதன்வழி ,மேலோட்டமாக எவர் எழுதும்போதும் அதைக் குறித்து எதிர்வினையாற்றுவதென்பது பதினெட்டாம் நேற்றாண்டினது மொழியாகவிருந்தாலென்ன, 21 ஆம் நூற்றாண்டினதாகவிருந்தாலென்ன?

இமானுவல் காண்டையும்,மார்க்சையும் எத்தனையாம் நூற்றாண்டு மொழிகொண்டு வாசிக்கிறோம் ?

பெரிய விடுகதையெல்லாம்"பின்நவீனத்துவம்"என்ற வார்த்தையை வைத்து விளையாடாதீர்கள்!

இது குறித்து வாங்கோ விரிவாக விவாதிப்போம்.நான் இத்தகையவுரையாடல்களை மிகவும் மனத்தோடு பேச முற்படுபவன்.இந்தவுரையாடலையே பேஷ் புக்கில் அதிகம் இணைக்கிறேன்.இப்போதைக்கு மிக்கேல் பூப்காவின் ஒரு பதிலை உங்களுக்குச் சுட்டுவேன்.

"Ich bin kein theoretiker.Als Throretiker bezeichne ich Jemanden,der ein allgemeines System errichtet,sei es ein deduktives oder ein analytisches,und es immer in der gleichen Weise auf unterschiedliche Bereiche anwendet.Das ist nicht mein Fall.Ich bin ein Experimentator in dem sinne,daß ich schreibe,um mich selbst zu verändern und nicht mehr dasselbe zu denken wie zuvor.-Gespräche mit Ducio Trombadori-Die Hauptwerke von Michel Foucault,Seite:1585-86.

"நான் ஒரு சிந்தாந்தவாதி அல்ல.சிந்தாந்தவாதியாக என்னை நான் காட்டிக்கொள்வேனானால் எங்கேயாவது,அது வித்தியாசமான நிலைகளுக்குள்-பகுதிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒருமாதிரியான விளக்கங்களும்-கழித்தல்களையுமே பயன்படுத்திக்கொள்வதில் முடியும்.அது எனக்குரிய செயலல்ல! உங்களுக்கு என்னைக் குறித்துச் சொன்னால்,நான் ஒரு பரிசோதகன்.நான் சித்தாந்தவாதியல்ல.எனது நோக்கத்துள் நான் எழுதுவது என்னைத் தொடர்ந்து மாற்றுவதற்கும்,மற்றும் முன்னையே சிந்தித்ததை நெடுகவும்,மீளவுஞ் சிந்திதித்து வருவதை மறுப்பதே."

இப்படிச் சொல்லும் பூப்காக மனிதன் ஒரு அநுபவ மிருகமென(Der Mensch ist ein Erfahrungstier) இடூசியோ டொறோம்பாடோறியோடு(Ducio Trombadori) நீண்ட உரையாடலையும் செய்திருக்கிறார்.இப்படிப் பின் நவீனத்துவம் பரிசோதித்து வரும் பகுதிகளை மனித அநுபவத்தை-நடாத்தையை,அதன் அடையாள நெருக்கடியைத் தட்டிக்கழிக்க நாம் பயன்படுத்தும் தற்குறித்தனத்துக்குத் தெரிந்த வார்த்தை ஒன்று மட்டுமே.அது,"பின் நவீனத்துவம்"இந்த வார்த்தைக்கு வெளியில் விரிவாக உரைக்க முடியாத "புத்திசாலிகள் "நம்மில் பலர் இருக்கிறார்கள்.அதுள் நீங்களும் ஒன்றா சிரஞ்சீவீ?

அப்படியில்லையென்றால் வாருங்கள் பூப்கா,தெரிதா,லெக்கான்,சசூர்,ரொலாந் பார்த்,சார்த்தார்,அந்திரே ஜீத் குறித்தும் காம்யுவின் கொள்ளை நோய் (Die Pest)குறித்த அல்ஜீரிய மானுடரது முகமிழந்த வாழ்நிலை பற்றி, சமூக அசைவாக்கவும் குறித்துப் பகிர்வோம்.அதுள் நமது மக்களது புலம் பெயர் வாழ்வது வலி என்னவெனப் புரிந்தும் போகும்!

பின் நவீனத்துவம் ஏதோவொரு பெரிய தத்துவமெனப் பீலாக்காட்டும் கயமைக்கு முன் அவரது[Michel Foucault ] கூற்றுப் புட்டுவைப்பதும்-எனது புரிதல் இந்தத் தமிழ் பின்நவீனத்துவப் பீலாவைக் கண்டு புன்னகைத்தலும் சதா நிகழ்வது சிரஞ்சீவீ!

உங்களுக்கு மனிதசமூகத்தின் இடப்பெயர்வு அவ்வளவு கேலித்தனமாக இருக்கு?புலம் பெயர்ந்து உலகம் பூராகவும் வாழ்பவர்கள் எத்தகைய ஒடுக்கு முறைகளை நேர்முகமாகவும்-மறைமுகமாகவுஞ் சந்திக்கின்றார்கள் என்பதைக் குறித்து மேட்டுக் குடித் தனமாக எள்ளி நகையாடுவதாகவிருக்கிறது?

புலம் பெயர்ந்து"அகதி"யாக வாழ்ந்து மடிவதன்வலி உங்களுக்குப் புரியமுடியாதபோது எனது எழுத்தின்மீதான கேலியாக வாக்கியங்கள் வருகிறது.அதைவிட மோசமான கேள்வி"யாரர் ஐயா உங்களை இங்கு வரச் சொன்னது-தமிழ்நாட்டுக்குப் போயிருக்கலாமே?" சிரஞ்சீவி இந்தக் கேள்வி எமக்குப் புதிதில்லை.

இக் கேள்வியை 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணி மேயர் கைம் [Mayer Heim_Nürnberg]எனது அகதி விண்ணப்பக் [ Asylverfahren]கோட்டு விசாரணையின் முடிவில் ,மொழிப் பெயர்ப்பாளரான வேந்தனார் இளங்கோவைப் பார்த்துக் கேட்டார்.அதற்கு அந்தப் பொறியிலாள மேதை அளித்த பதில் சிரிஞ்சீவீயிகளது அதே "மோட்டு"தனமானது.



"ஒரு நாயின் முன் சோற்றையும்,இறைச்சியையும் வையுங்கள் அவற்றில் எதை நாய் நாடும்-இறைச்சியைத்தானே?"என்றான் அந்த இளங்கோ.பின்பு அவருக்கு அவுஸ்ரேலியா இறைச்சியாகத் தெரிய அங்குபோய் "டாக்டர்"பட்டம் பெற்றுத் தமிழ்ச் சங்கம் அமைத்து அரை வயதில் இறந்தே போனார்.இது,ஒரு எடுத்துக்காட்டு.

புலம் பெயர் மனிதர்களை நாயின் முன் ஒப்பிட்டு. ஐரோப்போ இறைச்சி,தமிழ்நாடு சோறு.

தமிழ் மக்கள் ஐரோப்பா வரக் கூடாதென்பதற்கு நீங்கள் கூறும் காரணமென்ன?தமிழ்மக்கள் யுத்தாத்தால் பாதிப்படையாத பொருளாதார அகதிகள் என்பதா?இதன்வழி அவர்களுக்கு-தமிழ்பேசும் மக்களுக்கு பிரச்சனையே இலங்கையில் இல்லையென்பதா?

ஐரோப்பியனும்-அமெரிக்கனும் எங்களது மண்ணில் நேரடியாகவும்-மறைமுகமாகவும் வந்து யுத்தப் பிரபுகளை ஊக்குவித்து யுத்தஞ் செய்வான்,ஆனால் ,நாம் அவர்களது மண்ணுக்கு இடம் பெயரக்கூடாது.அவ்வகான் அகதி பாகிஸ்த்தானுக்குள்தாம் நுழையவேண்டும் மேற்கு ஐரோப்பாவுக்குள் இல்லை-,ஈராக்கியர்கள் சிரியாவுக்குள் அல்லது ஈரானுக்குள் நுழையவேண்டும்.அப்படியா சிரஞ்சீவி?

நாயோடு நம்மை ஒப்பிட்ட இளங்கோ,உங்களது திமிருக்கு நிகரானவர்தாம்.தமிழ்நாட்டில் எத்தனை இயக்கம்,எத்தனை அட்டகாசம் செய்ததென்பதும்,ஈழ அகதிகளை ரோவினது குரங்குகள் எப்படிக் கண்காணித்துத் திறந்தவெளிச் சிறையில் அடைத்தார்கள் என்பதும் எவருக்கும் புரியாததல்ல.மாற்று இயக்கத்தவன்,அவனது-அவளது குடும்பத்தவர்கள் கணிசமாகத் தமிழ்நாடு செல்ல முடியாது.அங்கே, இருமுனைத் தாக்குதல் தயாராகவிருந்தது.அடுத்துத் தனது சொந்த மக்களையே அகதியாக வைத்திருக்கும் தமிழகத்துக்குப் புதிதாக இன்னொரு அகதி குழுமம் செல்லுமென எதிர்பார்ப்பது அகங்காரம்.

மக்கள் சமூகத்தில் யுத்தம் என்பதைவிடக் கொடிய யுத்தமானது திட்டமிட்டு ஒரு இனத்தின்மீது வறுமையை ஏவிவிடுவது.இதை எவர்கள் செய்கின்றார்களோ 'அங்கே, சென்று அவர்களது முற்றத்தில் பறிக்கப்பட்ட எமது வாழ்வைக் கேட்பதே நியாயமானது.அந்த வகையிற்றாம் இன்றைக்கு ஆபிரிக்காவிலிருந்து கடல்வழிப் பாதைமூலம் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க மக்கள் ஐரோப்பாவுக்கு வரும் வழியில் கடலில் மூழ்கிச் சாகிறார்கள்.

ஆபிரிக்க மக்களிடம் என்ன இல்லை?அவர்களை ஒட்டச் சுரண்டுபவன் எவன்?

ஏன் நாமெல்லாம் பட்டுணி கிடந்தா காலந் தள்ளினோம்.நமது மக்களிடம் என்ன இல்லாமல் இருந்தது.எம்மை மொட்டையடித்தவனுக்கு வக்கலாத்து வாங்கும் கேள்விகளை இலண்டனிலிருந்து கொடிபிடிப்பவன்கூடக் கேட்பான்.அவனுக்கு ஐரோப்பியக் கொலனித்துவத்தின் கொடுமை இன்றுவரை நம்மைச் சிதைப்பது புரியாது!அதிலொரு மேதைதாம் இந்தச் சிரஞ்சீவியெனச் சொல்லேன்.ஏனெனில் ,நாம் எல்லோருமே வீணர்கள்-வினைமறுப்பாளர்கள்!எமக்கு ஆழமாகச் சிந்திக்கும் திறன் அறவே கிடையாது.

ஐரோப்பாவில் அகதியாக வாழ்பவன் தன்மீது நடாத்தப்படும்,உயிரியில்ரீதியான ஒடுக்குமுறையையும், சட்டரீதியான ஒடுக்குமுறையையும் சேர்த்து தனது அடையாளத்தின்மீதான ஒடுக்குமுறையைப் பரம்பரைவரை சந்திக்கிறது சிலருக்குப் புரிவதே இல்லை. அகவொடுக்குமுறையானது அள்ளிப்போடும் சில்லறைகளால் மறைக்க முடியாது. அதுவரையும் ,இந்த ஏகாதிபத்தியப் பேய்களால் பாதிப்படைய உலகக் குடிமக்கள் எங்கும் இடம் பெயர்வார்கள்-எப்படியும் வாழ்வார்கள்!அதை தட்டிக் கேட்கும் உரிமை எந்தப் பேய்க்கும் கிடையாது!கொங்கோவைப் பிளந்து பத்தாண்டுக்குள் கோடி மக்களை இரகசியமாய்க் கொல்பவனுக்குச் சொல்-அவ்வகானை வேட்டையாடும் அமெரிக்கனுக்குச் சொல்-அல்லது ஆசியாவை வேட்டையாடும் இந்தியனுக்கும்-சீனனுக்கும்போய் வகுப்பெடு உனது பித்தலாட்டத்தை!

அன்பு நாவலன்,தூர தேசிய உரையாடலானது மிக மோசமான இனவாதம் நிறைந்த அல்லது,அதை மறைக்க முனைந்த உரையாடலாகும்.அதை நினா(நைனா ஆங்கில உச்சரிப்பு) கிலிக் சில்லர் [ Nina Glick Schiller ]மூலம் தத்துவ நிலைக்குட்படுத்தியவர்களில் ஜேர்மனிய அரசுக்குப்(Visiting Research Associate, Max Planck Institute, Social Anthropology, Germany ) பெரிய இடமுண்டு.மக்ஸ் பிலாங் பல்கலைக் கழகமானது[ Max Planck Institute ]பேர்ளினில் அவருக்கு ,மானுடவியற்றுறையை வழங்கியது அவரது புலமைசார் புரிதலில் இல்லை.அவர் மேற்கொண்ட குடியேற்ற வாசிகளது வாழ்வு-சாவு,விருப்புகள் குறித்து(Global Migration Project, Center for International and Area Studies, ) அச்சொட்டான இரகசியங்கள் பற்றியது.ஆபிரிக்காவில் அவர் செய்த ஆய்வுகள் ஆபிரிக்க மக்களைத் துரத்தி அவர்களது கனிவளங்களைத் தொடர்ந்து கையகப்படுத்தும் வியூகத்தோடு சம்பந்தப்பட்டது.

அதற்காகவே 21 நூற்றாண்டின் காட்சிச்சலையென(African Culture and the Zoo in the 21st Century ) அவுஸ்பேர்க்கில் [ Augsburg ]நிறுவி ஆபிரிக்கர்களை ஒட்ட மொட்டையடிக்கும் செயல்களில் (The “African Village” in the Augsburg Zoo and Its Wider Implications )அவர் மும்மரமாக இருக்கிறார்.அவ்கானில் அமெரிக்கா படையெடுப்பதற்கு முன் அமெரிக்க மானுடவியலாளர்கள் மூலம் அவ்கான் மக்களது வாழ்வையும்-சாவையும் ஆய்ந்து (http://www.linksnet.de/de/artikel/25589 )பார்த்தது.

எனவே,நினா சொல்வதும்-நிறுவுவதும் அடிப்படையில் கயமைத்தனமானதும்,ஐரோப்பிய இனவாதத்தை குடியேற்ற வாதிகளது வாழ்வுப்போராட்டத்தில் ,மேலெழும் அடையாள அலகுகளை முன் நிறுத்தித் தமது சுரண்டலை-கொள்ளையை-இனவாத அரசியல் நகர்வை மறைத்தல்-நியாயப்படுத்தலாகும்.

இப்போதைக்கு இவ்வளவுந்தாம் நான் சொல்வேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.01.2011

Sunday, January 02, 2011

"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை" ஆதரிப்போம்!

ஷோசலிசத் தமிழீழத்துக்காகக் கூடியவர்கள் இப்போது இலங்கையில் நடைபெறப்போகும்"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்காக"க் கூடுகின்றனர்-கையெழுத்துப் போட்டு இலங்கை ஜனநாயகத்தைத் தழைத்தோங்க வைக்கின்றனர்.இந்தப் புதிய ஆண்டில் இப்படியும் ஒரு போலிக் கூட்டம் மடியிற் கனத்துடன் விடிய மறுக்கும் மக்கள் முற்றத்தில் புரட்சிக் கோலமிட, மகிந்தாவோ தேசியக் கூத்தில்இலங்கையைத் தாண்டி சீனாவில் நிமிர்கிறார்!

இந்தச் சூழலில் எமது அரசியல் வாழ்வு குறித்து யோசித்தோமானால்,"நாம் எப்படித் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம்?இந்த ஏமாற்று வேலையை எமக்குள் இருந்து மிகக் கச்சிதமாக நடாத்தி முடிப்பவர்கள் எவர்கள்?" என்று கேள்விகள் தொடர்கின்றன!

நாம் எங்ஙனம் ஏமாற்றப்பட்டோம்? "தமிழீழ" விடுதலை,சுதந்திரம்-சுயநிர்ணயமென்றதெல்லாம் எப்படிப் போயுள்ளது?புலம் பெயர் புலிகளதும்-மாற்றுக் குழுக்களதும் நாணயம் எந்த வகையானது?இவர்களது அரசியலது தெரிவில் மலிந்துலாவும் நலங்கள் என்ன-தமிழ் "இடதுசாரி"யர்களாகத் தம்மை வலிந்து நிறுவும் குழுவாத மனிதர்கள் எமது மக்களுக்கு எதை வழங்க முடியும்?இவர்கள் ஒருதரையொருவர் கழுத்துவெட்டக் கங்கணம் கட்டிச் செய்யும் சதி வலைகள் எத்தகையவை?இவைகள் குறித்தான குறைந்த பார்வையாவது இப் புதிய ஆண்டில் அவசியமானது.


இராயாகரன் பாணியிலான சூழ்ச்சி அரசியலைப் பின்ன பல குள்ள நரி"இடது போலிகள்"ஒவ்வொரு திசையிலும் நமது மக்களது நலன்கள் குறித்து வகுப்பெடுக்கின்றன.இத்தகைய மனித விரோதிகளது தெரிவுக்கு எது-எப்படி பலியாகிறதென்றவுண்மை"மக்கள்"நலன் எனும் முகமூடியோடு சதா நம்மை எட்டுகின்றன.


உதாரணத்துக்கு இம்மாதம்மட்டில் இலங்கையின் தலைநகரில் நடைபெறவுள்ள"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு"பற்றிக் கவனத்தைக் குவிப்பவர்களுக்கு இந்தப் புலம்பெயர்"இடதுகள்-வலதுகள்"குறித்தவொரு முடிவுக்கு வரமுடியும்.இம்மா நாட்டை இலங்கையின் பாசிச அரசுக்குத் துணைபோகும் கருணா-பிள்ளையான் குழுவின் தலைமைச் சிந்தாந்தக் குரு ஸ்டாலின் முதல் இரயாகரன்வரை ஆதரிப்பதாக இருக்கின்றதென்றால் இதுள் மக்களது நலன் என்னவென்று மிக இலகுவாகப் புரிந்துணர முடியும்.இம்மாநாட்டை இந்திய-இலங்கை உளவமைகள் நெறிபடுத்தக்கூட முடியும்.இதுள்இரஜாகரன் போன்ற"போலிப் புரட்சிக்காரர்கள்"ஆதரிப்பதும் எதிர்ப்பதும் சகஜமாகவே நடந்தேறுகிறது.இது ஏமாற்று அரசியல்!


இத்தகைய ஏமாற்று அரசியலுக்குத் தமிழ் இளைஞர்கள் எங்ஙனம் பலியாகினார்கள்?இன்றைய நமது போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புலிகள்தான் காரணம் என்ற ஒற்றைப் பதில் நியாயமாகத் தெரியவில்லை.எனவே,புலிகளை முன்னே தள்ளியபடி அவர்களின் பின்னே மறைந்திருக்கும் சக்தி எது-ஏன் எம்மைப் புலிகளினூடாகத் தோற்கடித்தார்கள்-கொன்றொழித்தார்கள்?இந்த அழிப்புக்கும் மேற்காணும் புலம்பெயர் போலி "இடது-வலதுகளுக்கும்" எத்தகைய தொடர்புகள் இருந்தன-இருக்கின்றன?


இக் கேள்விகளுக்கு நான் பல்வேறு கட்டுரைகளுடாகப் பதில் கூறியிருக்கிறேன்.


ஆனால்,அதைவிட,இன்றைக்கு அனைவரும் சுயமாகப் பதில்களைத் தேடி நமது போராட்டம்குறித்து மீள் மதிப்பீடுகள் செய்வது அவசியம்.நம்மைப் புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் ஏமாற்றிவிட்டார்கள்.இவர்களை வைத்து நம்மை வேரோடு மொட்டையடித்த அந்நியச் சக்திகள் இன்று தமது நலன்களை இலங்கையில் எட்ட முனைகின்றன.அந்த முயற்சிக்குப் பங்கம் ஏற்படாத முறையில் அவர்களது சேவகர்கள்"இடது-புலம்பெயர் படைப்பாளிகள்"எனும் போர்வையில் தமக்குள் முட்டிமோதுகின்றன.இந்தப் போலிகளில் எவரும் மக்களது நலனை முதன்மைப் படுத்தும் எந்தவொரு அமையையும் நிறுவ முடியும்.அதன் வழியாக நமது மக்களது சுயவெழிச்சியை வேட்டையாட முடியும்.இது,மிக ஆபத்தான காலம்.எல்லாமே மக்களது நலன்வழியானதென இத்தகைய எச்சில் பேய்கள் கூக்கிரலிடுகின்றன.இதுள் முன்னணியில் எவருள்ளார்கள் என்பதிற்கூடப் பல போட்டிகள்.தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல முழுமொத்த மனித சமுதாயத்துகே எதிரான போக்கில் இந்தக் குழுக்கள் இயங்குகின்றவென்ற சிறியவுண்மைகூடப் பகிரங்கமாகப் பேசப்படுவதில் பல சிக்கல்கள்!


காலம் பூராகவும் நம்மை ஒடுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கங்கள் ஏதோவொரு முறையில் ஒடுக்குதலையே தத்தம் தலைமைக்குள் ஆதிக்கமாக-அதிகாரமாக நிகழ்த்திய வரலாற்றுப் போக்கில் அதை மேலும் தமது எஜமானச் சேவைக்கேற்ற வகைகளில் இப்போது தகவமைக்கின்றன.ஒருபுறம் இடது வேடம்-மறுபுறம் ஜனநாய ஒன்றிய வேடம்.இந்தப் போலித்தன அரசியலுக்கு இனியெவர் பலியாவர்கள் என்பதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன.


எங்கு நோக்கினும்,பணம் பண்ணும் ஒரே நோக்கு மலிந்து கிடக்கிறது!



அழிந்த "ஈழத்தை"ச் சொல்லி,போராட்டத்தைச் சொல்லி,அகதிகளைச் சொல்லிப் பிழைப்பு நடந்தேறுகிறது.அடிமை வாழ்வு,உணவுக்காக,உடைக்காகக் கையேந்தும் சிறுமை வாழ்வைத் தந்ததைவிட எதையுமே இந்தப்"ஈழவிடுதலைப் போராட்டம்" நமக்குத் தரவில்லை!இதையே மீளத் தொடரத் துடிக்கும் புலம் பெயர்ந்து வாழும் முன்னாள் போராட்டக் குழுக்கள், அவர்களது எஜமானர்களெல்லாம் இன்னும் அதிகமாக மக்களை மொட்டையடிக்கும் அரசியலைச் செய்வதில் தத்தமது இருப்பை உறுதிப்படுத்தும் கபட அரசியலில்மிகமோசமான "துரோகத்தை" நான் இனங்காண்கிறேன்.


காடையர்கள்-மாபியாக்கள்,பல்லாயிரம் இளைஞர்களையும், இலட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்துவிட்டு,அதை மண்ணால் மூடிய கையோடு மீளவும் ஏமாற்ற விளையும்போது,உண்மை செத்துப் போகிறது.பற்பல முகமூடிகளது முகாங்களுக்குள் நடக்கும் சதி வியூகங்கள் ஐரோப்பிய மண்ணில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் மக்களில் பலரை மிக மோசமான நடாத்தைக்கு உந்தித் தள்ளுகிறது.


எந்தத் திசையிலும் நம்பிக்கை கருகிச் சாகிறது.


பார்க்கும் இடமெங்கும் போலி"இடது சாரிகளது"கை மேலோங்கியிருக்கிறது.அவர்கள் புலிகளது பினாமிகளாக இருந்த அன்றைய அதே அரசியலோடு இன்றும் பொதுத் தளத்தில் மயிர் பிடுங்கும் விவாதமெனத் தள்ளும் எழுத்துக் குப்பைகள் அற்பத் தனமாக மக்களை ஏமாற்றுவதென்பதை எவரும் இலகுவில் அறிய முடியாதபடி தகவமைக்கப்படுகிறது!


இதுவரை,தமிழையும்-,ஈழத்தையும் சொல்லிக் கொல்லப்பட்ட மக்களதும்,போராளிகளதும் உடல்களின் மீதேறித் தமது செல்வத்தைத் தக்கவைக்க முனையும் சமூக விரோதிகளை இனங்கண்டாக வேண்டும்.புலம் பெயர் மண்ணிலிருந்தபடி"புரட்சி"பேசும் இந்தப் போலிகள் தாம் வாழும் நாட்டு இடதுசாரியப் பாரம்பரியத்தோடு துளியளவும் தொடர்பற்ற போலிகள்-பொய்யர்கள்!


தாம் வாழும் நாட்டின் எந்தப் போராட்டத்திலும் தம்மை இணைக்காத இந்தக் கூட்டம் தமக்கும் புரட்சிக்கும் வரலாறிருப்பதாக ஏப்பம் விடுகிறது.இதை நம்பும்படி மக்களை வற்புறுத்துகிறது-மற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்க முனைகிறது.


இந்தக் கூட்டத்தைத் தமிழக ம.க.இ.க. நல்லதொரு சந்தர்ப்பத்தில் அம்பலப்படுத்தி,நிராகரித்தது வரலாற்றுத் தேவையே!அதுபோன்று புலம் பெயர் மக்களாகிய நாம் பரவலாக இவர்கள் குறித்துக் கவனத்தைக் குவித்து இவர்களது அரசியல் மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும்.இவர்தம் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்காமல் இவர்களைத் தொடர்ந்து இயக்கங்கட்டவும், அதைத் தமிழ் மக்கள் பெயரால் வளர்த்தெடுக்கவும் அநுமதிக்கும் ஒவ்வொரு கணமும் மக்களது நலனை அந்நியர்களுக்கு அடகுவைப்பதாகவே இருக்கும்.


இதை, நாம்"சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை"ஆதரிக்கும் எத்தனையோ சிதைந்துபோன போலிக் கயவர்களது செயலில் உரைத்துப் பார்க்க முடியும்! இப்போது,இக் கயவர்கள் இலங்கை அரச பரிபாலனத்துக்கு ஆட்காட்டும் வேலையில் கையெழுத்துப்போட்டுத் தம்மை நியாயவான்களாகவும், இலங்கை அரசினது புதிய தெரிவுகளுக்கு உடந்தையானவர்களாகவும் நிறுவுவதில் தம்மை மாநாட்டை ஆதரிக்கும்"எழுத்தாளர்களாக-சமூகவியலாளராக"காட்டும் வித்தைதாம் இந்ந ஆண்டின் அதிக தந்திரமுடையது.இதன் வழி இலங்கை அரசைத் தமிழ் மக்களது "புத்திஜீவிகள் மட்டம்" தொடர்ந்து ஆதரிப்பதாகவும் இனம் காட்டி, இலங்கையைப் பாசிசத்துக்குத் தொடர்ந்து ஜனநாயக முகமூடியணிகின்றனர்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.01.2011

Saturday, January 01, 2011

தேசிய கீதம் சிங்களத்தில் பாடினாலென்ன,பாடாதுபோனால் என்ன?

ஏன், சிங்களத்தில்"மட்டும்" தேசிய கீதம் பாடப்படாது-பாடினால் என்ன ஓய்?


ன்று,நமது மக்கள் படும் மிகக்கொடுமையான அடக்குமுறை உலகுக்குத் தெரிவதற்குப் பதிலாக மகிந்தா செய்யும் மொழிவழித்தாக்குதல்களே ப+தாகரமாகத் தெரிகிறது.உலகத்தின் பார்வையில் நமது போராட்டம் தேவையற்ற ஒன்றாகவும்,ஒரு பயங்கரவாதக் குழுவால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதப் போராட்டமாக மாறியதற்கு யார் காரணம்?

பதில் மிக இலகுவானது.ஆனால், அதன் உண்மையை ஏற்பது கடினமானது.


தமிழ் ஓட்டுக் கட்சி அரசியலிலிருந்து முன் தள்ளப்பட்ட அரசியலும் அதன் வாயிலாகத் திட்டமிட்டு இந்தியாவால்-உலக ஏகாதிபத்திய அமெரிக்காவால் கட்டி வளர்க்கப்பட்ட ஆயுதக் குழுக்களே இத்தகைய நிலைக்குக் காரணமாகும். கடந்த ஆண்டு 2009 இல்புலிகளின் பரிதாபகரமான அழிவு இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

தம் மக்களையே வேட்டையாடிக்கொண்டு,அந்த மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகச் சொன்னவொரு பாசிச இயக்கத்தின் அழிவு இன்று நம்முன் அநாதைகளாக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களை வறுமையுடன் சுட்டி நிற்கிறது!அவர்கள்,ஆதிக்க சக்திகளால் அடக்கப்படுவதென்பது தொடர்கதை.அவர்களை,அவர்களது இன அடையாள அரசியலே நிர்க்கதியாக்கி அடக்கி ஆதிக்க சக்திகளது காலில் விழ வைத்திருக்கிறது.

நம்மால் இதை உண்மையாக உள்வாங்க முடியுமா?

இந்த 2010ஆம்ஆண்டு நேற்றுடன் முடிந்து இன்று புதிய வருடமாம்!எல்லோரும் மகிழ்ந்து குலாவி ஓய்ந்து...

எனினும்,நாம்,எம்மைப் பார்த்துக் கேள்விகளைக் குவிக்க மறுக்கிறோம்.நமது கடந்த கால அழிவு அரசியலை மிக இலகுவாக மறந்துவிட்டு மகிந்தாவின்"சிங்களத தேசிய கீதம்"பற்றிப் பண்டுதொட்ட புரிதலில் கருத்தாடுகிறோம்!எம்மிடம் பாராளுமன்றப் பாசிஸ்ட்டுகள் குறித்த பார்வை மிக அருகிய நிலையில் மகிந்தாவைச் சாடுவதில் இலங்கை அரச ஆதிக்கத்தைப் புரிய மறுக்கிறோம்.இதுவே புலிகளது அரசியலது தொடர்ச்சி.

இலங்கையின் இனவாதச் சிங்கள அரசு, தமிழ் பேசும் மக்களுக்கிழைத்த அரசியற் துரோகங்கள் பெரும் சமூகக் குற்றமானது.அது யுத்தகாலத்தில் செய்த மனிதவிரோதக் கொலைகளானது பெரும் இனவழிப்பானது.அது,பாலஸ்த்தீன-கொங்கோ மற்றும்,ஈராக்- கொசோவோ மக்களுக்கு,குர்தீஸ் மக்களுக்கு நேர்ந்ததைவிடப் பன்மடங்கு பெரிதானதாகும்.என்றபோதும், நமது அரசியல் தோல்வியில் முடிந்து,இந்தியக் கயமைவாத அரசிடம் தஞ்சம் கோரும் நிலைக்கு எமது போராட்டச் சக்தியைப் பலவீனமாக்கியது வரலாறு.

நாம் எதற்காக நமது மக்களின் சுயவெழிச்சியை முடக்கினோம்- இப்போதும் எதற்காக முடக்குகிறோம்?

நமது மக்களின் தயவில் நிற்காது இந்தியாவை-ஏகாதிபத்திய மேற்குலகை எங்ஙனம் நம்பினோம்?இன்றுவரை டக்ளஸ் முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் யுத்தக் கிரிமனல் இராஜபக்ஸாவின் காலில் விழுவதென்பது என்ன? அது,உலக ஆதிக்கச் சக்திகளுடன் ஒட்டியுறவாடுதலென்பதையுந்தாண்டி,இலங்கை ஆதிக்கத்திடம் மண்டியிடுவதையெவர் புரிந்திருக்கின்றனர்?இங்கேதாம் வர்க்க நலனும்,அதன் இருப்பும் நம் அரசியல் அபிலாசையைச் சிதைத்து வந்திருப்பதைப் புரிக என்கிறோம்.மக்களது அரசியல் எழிச்சியை மொட்டையடிக்கும் தரகு இடதுசாரியப் பார்வையானது மகிந்தாவுக்கு விளக்கங் கொடுப்பதென்று கங்கணங் கட்டுவது திட்டமிடப்பட்ட அவர்களது எஜமானச் சேவையின் தொடர்ச்சியே.இன்றைய நிலையில் தமிழ் மக்களது பாரம்பரிய நில ஐதீகவுணர்வையே சிதைக்கும் இலங்கை ஆதிக்கமானது தமிழ் மக்களது முற்றத்தில் இலங்கைப் பாசிச இராணுவத்iதாக் குவித்து வைத்து நடாத்தும் ஜனநாயக விரோத வியூகமானது இனவழிப்பினது தொடர் சுற்றில் மிகவும் ஆழ்ந்து யோசிக்கத் தக்கது.

இது புதிய தரகு முதலாளிய நலன்களுக்கிசைவாக பரந்துபட்ட மக்களது நலனையும்-உரிமையையுங் குறுக்கும்போது அந்தக் கவனத்தை மகிந்தாவின் தேசிய கீத நாடகத்துள் திணிக்கும் இடதுசாரியப் போலிகள் மக்களது நலன்சார் அரசியலைத் தமது இருப்புக்குப் பயன் படுத்தி வருவதின் அப்பட்டமான கயமை அரசியலுக்குள் இன்று வீழ்ந்துள்ளனர்.

இன்றைய தமிழ் இடதுசாரிகள் போன்று,எத்தனை தாக்குதல்களை இலங்கைப் பாசிச அரசு நம்மீது நடாத்தியது?

இடப்பெயர்வு!-சாவு,பசி...

இதைவிடக் கொடிய பெரும்அழிவையெல்லாம் ஈழமக்கள் கண்டார்களா?

முள்ளி வாய்க்கால் யுத்தத்துள் பெருந்தொகையான மக்கள் சில தினங்களுக்குள் கொல்லப்பட்டார்கள்.நாளாந்தச் சிங்கள அராஜகமாகத் தமிழ்பேசும் பெண்களின் பெண்ணுறுப்பில் குண்டு புதைத்துக் கொல்லப்பட்டார்கள்.எனினும்,உலகம் திரும்பிப் பார்க்காத நிலைமையில் நமது"தடுப்பு யுத்தம்"நடந்தேறியது.அது,சிங்கள அரச ஆதிக்கத்துக்குச் சமாதிகட்டுவதாகச் சொல்லித் தமது சவக் குழியைத் தினமும்தோண்டிய நிலையில், எல்லாம் சரியாக நடந்தேறிப் புலிகள் பூண்டோடு அழித்துப் புதைக்கப்பட்டனர்!


இன்றுவரை சிங்கள மேலாதிக்க அரசின் கொடிய இராணுவமானது தமிழ்பேசும் மக்களைப் பயங்கரவாதத்துக்கெதிரான தேசநலப் பாதுகாப்புவென்ற போர்வையில் பல்லாயிரக்கணக்காக வருத்தி அவர்களின் வாழ்விடங்களை அபகரித்தும்,கொன்றும் மக்களை அடிமைப்படுத்தி வருகிறது.என்றபோதும்,தமிழ்த்"தேசியவாதிகளது"தவறான அரசியற் செல் நெறியால்நம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.இந்திய-சீன வல்லாதிக்கம் நம் மக்களை இலங்கை நரவேட்டையாட ஒப்புதல் அளித்தபடி நம்மைப் படுகுழியில் தள்ளுவதற்காகப் செத்த புலிகளைப் பயன்படுத்துகிறது.


"நாடுகடந்த அரசு-கே.பியின் புனர்வாழ்வுப் பெரும் தேட்டம்" எல்லாம் இந்த ஆதிக்கங்களது ஏதோவொரு வியூகத்தின் தெரிவுகளாக நமது மக்களை அண்மிக்கிறது!-இதுவொரு உதாரணம்தாம்.


சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதென்பது இலங்கையின் சிங்கள அரச வரலாற்றைத் திரும்பிப்பார்ப்பவருக்கு ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.பண்டார நாயக்கா சிங்களத் தேசிய முதலாளியத்தைத் தலைமைதாங்க வெளிக்கிட்டபோது தனிச் சிங்கமொழிச்சட்டவாக்கம் மேலெழுகிறது.இது சிங்கள வோட்டாளர்களை நோக்கி மாறுபட்ட நலனது தெரிவாகிறது.ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உலக மூன்றாவது அணியின் தலைவர்களில் ஒருவர் பண்டாரநாயக்கவென்பதும் குறிபிடத் தக்கது.இன்றைய அரசியலும் அதே கதையின் இன்னொரு பாகமாக மாறுகிறது.ஏகாதிபத்திய முகாங்கள் பிளவுபட்டுக் கண்ட நலன்களோடு சந்தைகளை உருவாக்குகின்றன.இங்கே மகிந்தாவும் இலங்கைத் தரகு முதலாளியப் பிளவுபட்ட முகாமொன்றின் ஆசியக் கூட்டுக்குத் தலைமைதாங்குவது நிதர்சனமாகத் தெரிகிறது.அன்று,தமிழ்த்தலைமை "பண்டா-செல்வா ஒப்பந்தம்" போட்டபோது அவர்களது மேற்க்கு விசுவாசம் அதைத் தோல்வியடைய வைத்துப் பண்டாவையே கொன்று போடுமளவுக்குச் சி.ஐ.ஏ யின் அரசியலிருந்தது.இன்றும் தமிழ்த் தலைமைகள் இருவேறு முகாங்களாகப் பிளவுபட்டு மகிந்தாவையும்,மேற்குலக எஜமானர்களையும் ஜெபிக்கும் கூட்டமாக மாறியிருக்கிறது.


இதுள் தேசிய கீதம் சிங்களத்தில் பாடினாலென்ன,பாடாதுபோனால் என்ன?தமிழ் மக்களது மண்ணை அபகரித்து வைத்துள்ள சிங்கள அரச ஆதிக்கமும்,அவர்களது அடக்குமுறை வன்ஜந்திரமும்தமிழ் மண்ணைவிட்டு மாயமாக மறைந்திடுமா?ஆகவேண்டியது என்னவென்பதையே தட்டிக்கழிக்கும் அரசியலானது இப்படி முட்டுச் சந்தியில் தட்டிகட்டும் அரசிலது வெளிப்பாடுததாம் மகிந்தாவின் தனிச்சிங்களத் தேசியக் கூத்தைத் தூக்கிப்பிடிப்பதாகும்.


மொழிவாரியாகவும்,பிராந்திய ரீதியாகவும்வாழும் அநேகமான ஆசிய நாடுகளின் சிறுபான்மையினர் ஐரோப்பியக் காலனிய ஆட்சியின் கீழ் அநுபவித்த அடக்கு முறைகளைப்போலவே-அடிக்கடி அதிகமாகவும் அநீதிகளுக்கும்,அராஜகங்களுக்கும் உள்ளாகின்றனர்.இந்த அநீதிகளும்,அராஜகங்களும் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதல்ல!மாறாக,சிறுபான்மையினர் மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலுக்கேற்பத்தட்டிக் கேட்பார் யாருமற்றுச் சந்திக்கும் அரசியல் ஆதிக்கமும் அதன் வன்முறை ஜந்திரத்தால் ஒடுக்கப்படுதலுமே இன்றைய அவசியமான முரண்பாடாக இருக்கிறது.இதுவே பிரதான முரண்பாடாக இருப்பதைப் புரிய மறுக்கும் "தமிழ் இடதுகள்" மொழிக் குச்சியை வைத்துப் பற்குத்துகிறது!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.01.2011

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...