Sunday, September 17, 2006

மீண்டும் நாசிகளாகிவரும்...

ஜேர்மனியர்கள்:மீண்டும் நாசிகளாகிவரும்...


இந்தவுலகத்தில் மீண்டும்,மீண்டும் இனவாதிகளே மக்களின் அதீத பிரச்சனைகளுக்குத் தீர்வை வழங்கும் பிதாமக்களாகி வருகிறார்கள்.இதுவரை பலகோடி மக்களை இரத்த வெள்ளத்தில் அள்ளிச் செல்ல வழி வகுத்தவர்கள்,பல கோடி அப்பாவிகளை வருத்தித் தமது தொழிற்சாலைகளில் புதைத்தவர்கள்.இதனால் மாபெரும் நிதி மூலதனத்தைப் பெருக்கியவர்கள்.இவர்கள் எல்லோரும் முதலாளித்துவ உற்பத்திப் பொறி முறையின் பிதா மக்கள்!இவர்களின் தயவு மீளவும் ஒவ்வொரு இனங்களுக்கும் தேவையாக இருக்கிறது.இந்த இனவாதிகளை உற்பத்தி பண்ணும் இந்தப் பொருளாதார அமைப்பில், சிக்குப்பட்டுத் தவிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் படும் சிக்கல்களை, அவர்களே முழுமையாக அறிவதற்கில்லை.

தேசியத் தலைவன்:ஊடோ வைக்ற்
நம்மிடம் வந்து சேர்ந்த வானொலிகளும்,தொலைக்காட்சிகளும் சினிமாவையும்,நாடகத்தையும் உலகின் எல்லைகளாக்கியபின் நம் மக்களிடம் பரந்த உலக நடப்புகள்"என்ன செல்வி பார்தீரோ?"என்ற கதையாய் போகிறது!

இந்தப் புலம் பெயர்ந்த நாடுகளில் மெல்ல மாற்றமுறும் புறச் சூழலை நம்மில் எத்தனைபேர்கள் புரிந்து கொள்கிறோம்?

நமது வாழ்வும் சாவும் இங்குதாம் என்றாகிய பின்பும்
இது குறித்து என்னத்தைப் பார்க்கவேணும்?-நீங்கள் நகைப்பது புரிகிறது!

எமது அடுத்த தலைமுறை இங்கே வாழ்வது சாத்தியாமா?

அவர்களது கல்வி நேர்த்தியகச் செல்லும் சூழல் தொடர்ந்து நிலவ முடியுமா?

எங்கள் குழந்தைகள் எந்தக் கவலையுமின்றித் தனியே உலாவிக்கொள்ளும் இந்தச் புறச் சூழல் எதுவரை நீடிக்கும்?-இது கேள்விகள் மட்டுமல்ல.வாழ்வின்,எதிர்காலத்தின் நோக்கு நிலைகளும்தாம்!

இன்றைய ஐரோப்பிய அரசியல் சூழலில் இனவாதக் கட்சிகள்-நாசிகள் பதவிக்கு வருகிறார்கள்.

உப தலைவன்:கொல்கா அப்பில்


கொலண்டில்,
அவுஸ்திரியாவில்,
சுவிசில்,பிரான்சில்,டென்மார்க்கில்,
இப்போது ஜேர்மனியில்
பற்பல மாநிலத்தில் பலம்பொருந்திய கட்சியாகத்
தங்கள் உறுப்பினர்களை
பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.


இணைந்த ஜேர்மனியில் கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள இடைவெளி இருவேறு வகுப்பாக மக்களைக் கூறுபோட கிழக்கு ஜேர்மனியர்கள் பொருமுவதும் கூடவே மேற்கில் தம்மைவிட வேலை வாய்ப்புக்களோடு வாழும் அந்நிய தேசத்தவர்களை-கருப்பு நிறத்தவர்களைக் கண்டு பெரும் மன வதைக்குள் வீழ்ந்து அவர்கள்மீது தீராத பகையோடு வாழ்கிறார்கள்.இவர்கள் மிக இலகுவாக இனவாதக் கட்சிகளிடம்-நாசிகளிடம் தம்மை இழக்க, இந்த நாசிகளும் தொடர் தேர்தல் வெற்றிகளைச் சாதிக்கிறார்கள்.இது ஒரு சுருக்கமான விளக்கம்.

இதற்குப் பலபத்துக் காரணங்கள் உந்துதலாக இருக்கிறது அவற்றை விளக்கியெழுத நேரமில்லை.

இந்த ஜேர்மனியின் சமூகக் கட்டுக்குக் கீழே நாசியக் கருத்தியல் தொடர்ந்து நிலவுகிறது.இத்தகைய நிலையில் கருத்தியலை உருவாக்கும் வெகுஜன ஊடகமாகத் தொடர்ந்து இயங்கிவரும் கல்வி ,நாசியக் கனவுகளோடு நிலைபெற்று வருகிறது.இது அந்நிய எதிர்ப்பைத் தனது பிரச்சார யுத்திக்காகத் தொடர்வதும்,அத்தோடு அதை பொருளாதார மட்டத்தில் பிரச்சனைக்கான மூலகாரணமாகவும் காணுகிறது.இதுதாம் இன்றைய நாசிகளை வெற்றிக்கிட்டுச் செல்லும் திறவு கோலாகிறது.

நிதி மூலதனத்தின் தீராத பாய்ச்சலால் பற்பல தொழிற்சாலைகள் மலிவுக் கூலிக்காக மூன்றாம் உலகுக்கு உற்பத்தியை மாற்றிவிட, ஐரோப்பிய நாடுகளில் வேலையற்ற பட்டாளம் பெருகிக் கொள்கிறது.இதனால் இளைஞர்களின் வேலைவாய்பு இல்லாமல் போகிறது.

இளைஞர்கள் கொதித்துப்போய் வீதிகளில் அலைகிறார்கள்.நாசிகள் வலையைப் போடும்போது இவர்கள் வசமாய் மாட்டுவதும் சுலபமாகிறது.வீதியின் ஓரத்தே ஒரு கருப்பு மனிதனைக் காணும்போது அவனைத் தாக்கித் தமது வெறியைத் தீர்ப்பதும் நிகழ்கிறது.இது என்ன வகை எதிர்காலத்தை நமக்குத் தரும்?

நாளொன்றுக்குப் பத்துப் பேராவது நாசிகளால் ஜேர்மனியில் தாக்கப்படுகிறார்கள்.மாதத்தில் ஒருவராவது உயிர் பிரிய நேரிடுகிறது.இந்த இலட்சணத்தில் நாசிகள் ஆட்சிக்கட்டுக்கு வருகிறார்கள்.

ஆசிரியர்கள்,கல்வியாளர்கள்,ஊடகத்துறையினர்,

அரசவ+ழியர்கள்,நகரசபையினர்கள் என்று பற்பலரும் நாசியக் கருத்துகளுக்குள் தொடர்ந்து மூழ்கி வருகிறார்கள்.
அந்நியர்களைக் கொல்லும் அழிவுப்படை


வேலையற்ற பாட்டாளிகளும்,உதிரிப்பாட்டாளிகளும்,வேலையோடு ஏனோதானேவென்று வாழும் மனிதர்களும் நாசியத்தையும்,கிட்லரையும் விரும்புகிறார்கள்.

இதோ,இன்று நடந்த மாநிலத் தேர்தலில் நாசிக்கட்சியான என்.பீ.டி. வெற்றியீட்டியுள்ளது.

இதுவரை தொடர் வெற்றிகளோடு வளரும் இக் கட்சி கடந்த சக்ஷன் மாநிலத் தேர்தலில்(die NPD im September 2004 in Sachsen mit 9,4 Prozent für Aufsehen gesorgt) 9.4வீத வாக்குகளைப் பெற்று டசின் கணக்கான உறுப்பினர்களைப் பாராளுமன்றம் அனுப்பியது.இப்போது இன்றைய மெக்கலன்பேர்க் போர்பொம்மன் மாநிலத் தேர்தலிலும்(Die NPD hat bei der Landtagswahl in Mecklenburg-Vorpommern offenbar den Einzug in den Schweriner Landtag geschafft. Nach den Hochrechungen von Infratest dimap am Wahlabend kommen die Rechtsextremen auf rund sieben Prozent der Stimmen.) 7 வீத வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களை மாநில அவைக்கு அனுப்பி வைக்கிறது.

இது வரப்போகும் சோகம் நிறைந்த இனவாதத் தாக்குதல்களுக்கு
வழிவகுக்கும் அரசியல் வெற்றிகள்.

நாம் எதை அறிவோம்?

நமது நாடும் இனவாதிகளிடம் சிக்கித் தவிக்க,நாமும் வெள்ளை இனவாதிகளிடம் நமது வருங்காலச் சந்தததிகளைச் சிறைப்படுத்த நமக்கென்றொரு போராட்டம்,ஈழம்,தனிநாடு...

ப.வி.ஸ்ரீரங்கன்
17.09.2006

3 comments:

Porkodi (பொற்கொடி) said...

சத்தியமா இத புரிஞ்சுக்கற அளவு எனக்கு மூளை இல்லங்க :(

Anonymous said...

Germany for Germans. they have rights to protect from Outsiders.
you protect your Jaffna. why should not protect germany by Germans?

Sri Rangan said...

//Germany for Germans. they have rights to protect from Outsiders.
you protect your Jaffna. why should not protect germany by Germans? //

அப்படியா அநாமதேயம்?

இதை என் முன்னோர்களுக்குத் தெரியாமல் போச்சே!

இல்லையென்றால் கைபர் கணவாய் வழிக்கூடாக எவரும் என்தேசத்துக்குள் நுழைந்திருக்க முடியாது.

போத்துக்கல் முதல் ஆங்கிலேயன்வரை திராவிடனின் தேசத்தைச் சுரண்டியிருக்க முடியாது.


வந்து உட்கார்ந்த கபோதிகள் நம்மை அடிமையாக்கியபடி,மகாபாரதம் காட்டுறான்கள்.நாங்கள் அரக்கர் என்றபடி!


இதனாலோ என்னவோ யாழப்;பாணத்தையாவது காப்போமென்று போரிடுகிறார்களோ?


இப்படித்தாம் உங்களைப்போல் நானும் பதில்தர நினைக்கிறன்.


ஆனால் எனக்கு அதுவல்ல நோக்கு.

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...