Tuesday, December 18, 2007

சிந்தனைப் பரா அவர்களுக்காக நெஞ்சோடு நெருங்கி...


சிந்தனைப் பரா அவர்களுக்காக நெஞ்சோடு நெருங்கி...



தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை, எவரெவரோ தீர்மானிக்கும் அரசியலாக முன்னெடுக்கப்படுவதில் அந்தக் குறிப்பிட்ட மக்களே இப்போது பலியாகி வருகிறார்கள்.மக்களின் அதீத வாழ்வாதாரத் தேவைகளுக்காக-இலங்கையில் யுத்தத்தை நிறுத்து என்று ஓங்கியொலித்த ஒரு குரல் ஓய்ந்து-பந்திகொள்கிறது!,தோழர் புஷ்பராஜாவுக்குப் பின் புலம் பெயர் சூழலில் இன்னொரு ஆளுமையை நாம் இழக்கிறோம்! மிக அமைதியான மனிதரும்,கருத்தாளுமை மிக்க சிந்தனையாளருமான தோழர், சிந்தனைப் பரராஜசிங்கம் அவர்கள் 16.12.2007 காலமாகியதைத் தோழர் இரயாவின் மூலமாகவே நான் முதலில் தெரிந்து,அறியக்கூடியதாக இருந்தது.


எனக்கும் சிந்தனை ஆசிரியருக்குமான தொடர்பு 1989ஆம் வருடமே ஆரம்பமாகிறது.தெரியாதவரைக்கூடத் தெரிந்தவராகக் கருதிப் பழகும் அவரது முதற் சந்திப்பே எனக்குச் சுகமான அநுபவமாக இருந்தது.அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் காரணமாக நான் அவரை"ஐயா"என்றே அழைப்பதுண்டு!எனது தந்தையாரைப் பார்ப்பதுபோன்றவொரு உணர்வு அவ்வப்போது எழுவதுண்டு.மல்லிகா அம்மாவையும்,பரா மாஸ்டரையும் 89 ஆம் ஆண்டு அவர்களது (முன்னர் வதிந்த) ஸ்ரூட்கார்ட் வீட்டினில் சந்தித்த காலம் கண் முன் விரிகிறது!


எந்த வயது வித்தியாசமுமின்றி அந்த அறிஞர் என்னோடு உலக சோசலிசப் போக்குகள்-விஞ்ஞானத்தின் இருப்போடு நிலைபெறும் முதலாளிய வியூகம் குறித்தெல்லாம் நீண்ட நேரம் விவாதித்தார்.மிக எளிமையான மனிதர்.இறுதியாக அந்த மனிதனை கலைச் செல்வனின் மரண இறுதி நிகழ்வில் பாசத்தோடு முத்தமிட்டேன்.அதன் பிறகு அவரைக் காணேன்!


இப்போது, நம்மிடமிருந்து பரிபூரணமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார்!


நான், அவரோடு இலக்கியச் சந்திப்பு நிகழ்வைக் குறித்த அவரது பார்வைகளோடு முரண்பட்டிருக்கிறேன்.எனினும்,அவர்மீதும்,அவரது நாணயத்தின்மீதும் மிகவும் மதிப்பை என்றும் வைத்திருந்தே வந்திருக்கிறேன்.தான் கொண்ட அரசியல் வாழ்வுக்கு மிக உண்மையாகவும்-மக்களின் உரிமைகளைத் தனது வாழ்வுக்காக வளம் சேர்க்கும் மூலதனமாக்காது என்றும் மக்கள் நலப் போராளியாகவே பரா அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.


மகத்தான பணிகள் நம் முன் கிடக்கிறது.இதை மிக நேர்த்தியாக அறிந்தவர் பரா அவர்கள்!

எனவே,அதுள் தன்னால் முடிந்தவரை-தனது எல்லைக்குட்பட்டவரை பரா அவர்கள் பணியைத் தொடர்ந்திருக்கிறார்கள்.இந்தப் பணியின் தொடராக அவர் புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் "பெருந்தாக்கஞ் செய்த எண்ணங்கள் சஞ்சிகை" நின்ற பின் சிந்தனை எனும் சஞ்சிகையைத் தொடராக வெளிக்கொணர்ந்து, நம் எழுத்துகளுக்கெல்லாம் களம் அமைத்தார்.நான் அறியப் படைப்பாளிகளை முழுமையாக வெளிப்படுத்தியவர் சிந்தனைப் பரா அவர்கள் மட்டுமே.தனக்கு முரண்பாடாக அல்லது உடன்படாதவற்றைக்கூடத் தனது பத்திரிகையில் கத்திரிவைக்காது பிரசுரித்தவர் அவர்மட்டுமே.

பெரும் ஜனநாயகப் பண்புமிக்க நாணயமான மனிதர் என்பதற்கு அவரது அணுகு முறையே சாட்சிபகர்பவை.


ஆனால்,இலக்கியச் சந்திப்பில் அவரது போக்குகள்,ஆளுமைகள் குறித்து விமர்சனங்கள் எனக்குள் உண்டு.அது கடந்த அவரது அரசியல் நிலைப்பாட்டிலும் இருக்கிறது.என்றபோதும், ஒரு அற்புதமான நட்புள்ளங்கொண்ட நல்ல பெரியவரை இழந்தது மனதுக்குக் கஷ்டமாகவே இருக்கிறது.அவரோடான உளப்பூர்வமான உறவுற்ற தரணங்கள் நெஞ்சில் விரிகிறது.அந்த நெஞ்சோடு நல்ல மனிதரைக் குறித்த நிறைந்த ஞாபகங்கள் உணர்வைப் பிழிந்து,விழிகளைக் கசக்கவைக்கின்ற இந்த அவரது மரணம் மிகவும் வலிக்கிறது.


இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் தமது சமூக சீவியத்தைப் பெரிதும் அழியவிட்டுத் தகர்ந்த சமூக வாழ்வை அரைகுறையாக மீட்டு வாழ்ந்து,உயிரைப் பிடித்திருக்கும் இந்தச் சூழலில், அவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்கும்,அதை மீளக்கட்டியொழுப்பி அவர்களின் உயிர் வாழ்வை உறுதிப்படுத்தும் ஜனநாயகப் பண்புகளைக் கோரிக் கொள்ளவும்- குடிசார் மதிப்பீடுகளை நிறுவிக் கொள்ளும் குடியியல் முறைமைகளை நோக்கிய- இராணுவ,பொலிஸ் முகாம்கள் அகற்றப்பட்டு, வாழ்விடங்கள் மறுபடி மக்கள் வாழும் ஆதாரங்களாக நிறுவிக் கொள்ளும் முன் நிபந்தனைகளை வைத்துத் தினமும் கருத்தாடியவர் சிந்தனை ஆசிரியர் பரா அவர்கள்.யுத்தைத் நிறுத்தக் கோரித் தன் வலுவுக்கு உட்பட்டவரைத் தன் துணைவி மல்லிகா அம்மாவோடு இணைந்து படைப்புகள் கருத்துக்கள் எனத் தொடர்ந்து எழுதியும் உரையாடியும் வந்தவர்.இவரது பிரிவில் நானும் துயருறுகிறேன்,அவர்களது குடும்பத்தவர்களைப் போலவே!


மல்லிகா அம்மாவுக்கும்
அவர்களின் குழந்தைகளான உமா சானிகா
சந்துஷ் ஆயோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம் உண்டு!


மக்களின் அதீத மானுடத் தேவையான உணவு,உடை,உறையுள் யாவும் இலங்கையின் யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கைக்கெட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.இதனால் யுத்தத்துக்குள் வாழும் தமிழ் பேசும் மக்களின் அதீத மனிதாயத் தேவையாக இருப்பது அவர்களது உயிர்வாழும் வாழ்வாதாரங்களே என்று அடிக்கடி கூறிக் கொண்டவரும்,தனது அரசியல் வாழ்வை உலகத் தொழிலாளவர்க்கத்துக்குள் இறுகப் புதைத்தவரும் தோழர் பரா அவர்கள்.எமது சமுதாயத்தில் நிலவும் மிகக் கொடூரமான கருத்தியல் ஒடுக்குமுறைக்கு-ஜனநாயக மறுப்புக்கெதிராகத் தொடர்ந்து போராடிய,மறுத்தோடிப் போராளியின் வாழ்வு நிறைவு-உலகத்தின் மூலத்தோடான இணைவு எம்மை மிகவும் பிரமிக்க வைப்பது.அந்த வகையில் சிந்தனைப் பரா வெற்றியாளனே!


அவரோடு கருத்தாடி,முரண்பட்டு,"ஐயா"என்று உறவுற்று வந்திருக்கிறேனென எண்ணும்போது பெருமிதமாக இருக்கிறது.


"வாருங்கள்"

"இருங்கள்"

"சுகமாக இருக்கிறீர்களா?" -

என்று மிகப் பெரிய மனிதருக்குக் கொடுக்கும் மரியாதையை எனக்கு-எமக்குத் தந்தவர் பரா அவர்கள்.எந்தப் பொழுதிலும் புன்னகை குவிந்த முகத்தோடு தந்தையாக எனக்கு முன் விரிந்த அவரது உடல் இன்று இயங்காது பேழையுள் உறங்குகிறது!

அவருக்கு எனது செவ்வஞ்சலி!


ஆழ்ந்த கவலையோடு,

ப.வி.ஸ்ரீரங்கன்
18.12.2007

2 comments:

Anonymous said...

:-(

Sri Rangan said...

Funeral

We have informed you with deep sorrow that Mr. Para Kumarasamy, a trade unionist, human rights activist, a writer in exile, and a founder member of "Literary meeting"-(Ilakkiya chanthippu) passed away on the late night of 16th December 2007 at 11:30 p.m., on his 72nd birthday at in Berlin. He lived in Berlin-Neukölln with his wife Mallika. His writing and his activities in exile were against the tyranny of the caste system within the Tamil community, social injustice and all forms of violence. He has edited and published a socio-politic and literary magazine “Sinthanai” from Stuttgart, where he once lived from 1985 to 1994. He has actively participated diaspora organizations on srilankan issues such as INSD (International Network of Sri Lankan Diaspora) and SLDF (Sri Lanka democracy forum). We express our sincere sympathies to his family and friends. The departure of Mr. Pararajasingam is a great loss to us but the outstanding contribution he made will remain, be remembered and appreciated.



The funeral will take place on Thursday, 27th December 2007, from 12:30 to 14:00.
Krematorium Ruhleben
Am Hain
13597 Berlin, Germany


Home address:

J.Sinnathamby & U. Pararajasingam
Lipschitzallee 32
12351 Berlin

Home: 0049-30-61627808
Handphone: 0049-174-6825583

E-mail: santhushkumar@yahoo.co.uk, jsinnatham@aol.com, uma109@aol.com


http://ciththan.blogspot.com


Nadarajah Straube
Brunsbuetteler Damm 21, 13581 Berlin, Germany
Tel:++49-30-3318136, Fax:++49-30-35105512
Funk:01789381811

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...